Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. முதல் அநுர என்ன எல்லாம் செய்யோணூம் எண்டு டக்ளஸ் சொன்னார் இப்போ இவர் சொல்லுறார் மக்கள் உங்களை நிராகரித்து உங்க பதவி காலியானால் அடுத்த வேலையை பார்க்க போகவேண்டும் அதுதான் உலக வழக்கம். இப்போதைய ஆட்சிக்கு தகப்பன் அநுர , அவர் தன்னோட பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டுமென்று நீங்க சொல்லகூடாது. நீங்கள் சொல்வதாயிருந்தால் பிறகு எதுக்கு காசு செலவளிச்சு தேர்தல் தெரிவு எல்லாம்?
  2. ஒரு வினாடி பயந்துட்டேன் நான் நேசிக்கும் ஹரிகரனா இதுவென்று. பிறகு சரியாகிட்டுது.
  3. இனவாதத்துக்கும் மத வாதத்துக்கும் இடமில்லையென்று அநுர சொல்லி வருவதால், இதுநாள்வரை இனவாதம் மதவாதத்தை வைத்து அரசியல் செய்த சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர்களுக்கு அநுர ஏதாவது கொடுத்துவிடுவானோ எனும் பயம் வருகிறது. இலங்கை முழுவதும் வெற்றிபெற்றவனுக்கு ஏதோ ஒன்று இரண்டு தொகுதிகளில் வென்றவனும், எந்த தொகுதிகளிலும் வெல்லாதவனும் ஆலோசனை சொல்ல ஓடி வருகிறார்களென்றால் அடிமனதில் அங்கே தலைவிரித்தாடுகிறது இனவெறி. அத்தனை எதிர்கட்சிகளும் கூட்டணி சேர்ந்தாலும் அடுத்த ஐந்துவருடம் வெறும் அறிக்கைகளை தவிர அநுர ஆட்சியை எந்த வகையிலும் அசைத்து பார்க்க முடியாது என்ற விரக்தியில் அனைத்து இனவெறி கட்சிகளும் எதை வைத்து இனி அரசியல் செய்வதென்று இடிந்துபோயிருக்கின்றன. . மஹிந்த மகன் என்னடான்னா ராணுவ முகாம்களை நீக்கபோகிறார்கள் தேசிய பாதுகாப்பு கெட போகுது எண்டு அலறுகிறான், இவர் என்னடாண்டால் கனடா தமிழர் பேச்சை கேட்டு நாட்டை பிரிக்க போறாங்கள் எண்டு புலம்புறார். புலிகளே இல்லாத யாழ்ப்பாணத்தில் யாரினால் தேசிய பாதுகாப்பு கெடபோகிறதென்று கேட்டால் சொல்லமாட்டார்கள். சிங்கள அதிரடிபடை பாதுகாப்பிலேயே வலம் வந்த சிங்கள ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எப்படி சிங்கள தேசத்தை பிரிக்க முயற்சி செய்திருப்பார் என்று கேட்டால் அதுக்கும் பதில் சொல்ல மாட்டாங்கள். வடக்கின் மக்கள் அநுரவுக்கு வாக்களித்ததால் இனவாதம் இல்லையென்று சொல்லி ஏதாவது தமிழர்களுக்கு கொடுத்துவிடுவார்களோ என்று முழுசிக்கொண்டிருக்கிறார்கள் இனவெறிகூட்டம், ஆனால் பரிதாபம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இலங்கை ஆட்சியை கைப்பற்றிய அநுரவை இவர்கள் கூச்சல் செண்டிமீற்றருக்குகூட அசைத்து பார்க்காது என்பதே கள நிலவரம்.
  4. அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.
  5. கிழக்கில் முஸ்லீம்களுக்கு அருகில் வாழும் தமிழர்கள் உல்லாச பிரயாணிகளாக அங்குவரும் இஸ்ரேலியர்களுக்கு அவர்கள் வீடுகள் விடுதிகளை வாடகைக்கு கொடுங்கள் தற்காலிகமாக குடியமர்த்துங்கள். அவர்கள்மேல் முஸ்லீம்கள் கை வைத்தால் சிங்களவன் நொங்கு எடுப்பான், இவர்களை முழு கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவான். எம் நிம்மதியை கெடுத்தால் ஏதாவது ஒருவழியில் அவர்கள் நிம்மதியை கெடுக்கலாம் தப்பில்லை
  6. நீங்கள் மேலே சொன்னதில் ஒருவரிகூட மறுப்பதற்கில்லை, ஹேராம் பாதியிலே எந்திரிச்சு ஓடினவர்கள் ஏராளம் ஆனா அதற்கு கமல் போட்ட உழைப்பு பிரமாண்டம். அதேநேரம் கமலின் சில படங்கள் ஏன் படுதோல்வியை சந்திச்சது என்பது புரியாத புதிர். ராஜபார்வை ஒரு அற்புதமான படம், அன்பே சிவம் மிக சிறந்த படைப்பு இருந்தும் இரண்டும் ஊத்திக்கிட்டது சோகம். மீண்டும் வெளியிட்டால் இந்த இரண்டு படமும் ஓடினாலும் ஓடும்.
  7. லிங்காவோ கோச்சடையானோனு என்று நினைக்கிறேன் ரசோ அதுகூட கதை இப்போகேட்டால் சொல்லமாட்டேன், ஏன்னா போய் 1 மணித்தியாலத்திலேயே நித்திரையாயிட்டோம்ல. அவ்வளவு தூரம் கதையோட ஒன்றிபோயிட்டோம் இந்தியன் 2 தியேட்டர்ல பாத்தீங்களா? என்ன ஒரு நெஞ்சழுத்தம், இப்போகூட அந்த அதிர்ச்சியில இருந்து உலகம் மீளவில்லை, கமலின் மேக்கப் பாணுக்கு மா குழைச்சமாதிரி இருந்துனு சொன்னாங்க. நான் நினைக்கிறேன் ரசோ, எழுத்தாளர் சுஜாதாவின் மரணம், ரஹ்மானுடன் வேலை பார்க்காதது, ஷங்கரின் வயசு எல்லாம் சேர்ந்து அவர் திரையுலக உச்ச காலம் முடிவுக்கு வருது எண்டு நினைக்கிறேன். இந்தியன் 2 பார்த்த கடுப்பில பலர் இந்தியன் 1 மீண்டும் பார்த்தார்கள், அது ஒரு காலஎல்லையை கொண்டிராத ரசனை மிக்க படைப்பு. அதிலும் சுகன்யா கமல் மேக்கப் கொஞ்சம் செயற்கையாதானிருந்திச்சு.
  8. நாகவிகாரை பீடாதிபதி நாட்டின் பிற பிக்குகள் போன்றவரல்ல என்றே குறிப்பிட்டேன், மற்றும்படி அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்று அர்த்தமல்ல. மற்றும்படி இங்கு இருந்துகொண்டு தமிழ்நாட்டில் தமிழகத்தவர்களே தமது நடிகர்கள் அரசியல் தலைவர்களின் காலில் விழுவதை ஏற்காத ஈழதமிழினம் நமதுநாட்டில் அதை எப்படி ஏற்கும்? நானெல்லாம் காலுக்கு பக்கத்தில மணிபேர்ஸ் எதாச்சும் விழுந்திருந்தா மட்டும்தான் யார் காலிலயும் விழுவன்
  9. என்பிபி என்பதால் மேலிட உத்தரவோ தெரியவில்லை, ஆனால் நாகவிகாரை பீடாதிபதியும் நாட்டின் பிறபகுதி பிக்குகளூம் ஒன்றல்ல. எந்தகாலத்திலும் அவர் இனவாதம் கக்கியதில்லை, தெற்கின் அரசியல்வாதிகளுக்கும் இனவெறியர்களுக்கும் அவர் முட்டுகொடுத்ததில்லை, எப்போதும் தமிழருக்கு சார்பாகவே அவர் பேசியிருக்கிறார் என்பது நானறிந்தது.
  10. நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் முதலில் தாய்க்கு அவன் சராசரி பிள்ளைதான் என்பதுபோல் என்னதான் ரஹ்மான் விருதுகள் வாங்கி குவித்தாலும், உலக இசைமேதைகளில் ஒருவரா இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் நீண்டகாலம் ஆண்ட ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையாளனா இருந்தாலும் ஒரு நல்ல கணவனா அவர் மனைவிக்குஇருந்திருக்க வாய்ப்பேயில்லை. 29 வருட திருமண வாழ்வில் பாதிக்காலம் அமெரிக்கா ஐரோப்பாவிலும், வட இந்தியாவிலும், லண்டனிலும் டுபாயிலும்தான் கழிந்ததென்றால் மீதிக்காலம் இரவில் இசையமைப்பு பகலில் தூக்கம், மனைவிக்கென்று நேரம் ஒதுக்கியதில்லையென்று அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கார். கணவன் என்று இருப்பவன் எப்போபாரு ஆர்மோனியமும் கீபோர்ட்டும் என்று இருந்தால் வாழ்வு நரகம்தான், இவரது சகலை நடிகர் ரஹ்மான் இசையமைப்பாளர் ரஹ்மானின் முதலிரவு நாளன்று வீட்டுக்கு போன் பண்ணியபோது ரஹ்மானின் புது மனைவிதான் பேசினாராம் என்ன நீ பேசுறே எங்கே அவர் என்று கேட்டால் முதலிரவு அன்றே ரஹ்மான் பக்கத்து ரூமில் வீணை பிளே பண்ணி பாத்துக்கிட்டிருந்தாராம்னு இணையத்தில் தகவல் உலா வருகிறது. இதில் ஒருபெண் எவ்வளவு தூரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பாரென்பது சாதாரணமாய் உணரகூடியதொன்று. தனக்கு சொந்தமானவன் வெறுமனே தன்னை குழந்தை பெற்றுக்கொள்ளூம் இயந்திரமாக பாவிப்பதை எந்த பெண்ணும் ரசிக்கமாட்டாள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். வயசானகாலத்திலும் இந்தியாவில் பாதிநாள் டுபாயில் உள்ள ஸ்ரூடியோவில் மீதிநாள் என்று ரஹ்மான் இசையை 24 மணிநேரமும் கட்டிக்கொண்டு அழுதால் எவர்தான் எஸ்கேப் ஆகமாட்டார். மற்றும்படி ரஹ்மான் இன்னொரு பெண் தொடர்பு என்பதெல்லாம் இலகுவாக நம்பகூடிய விஷயமா தெரியவில்லை. இளமையும் அழகும் இருக்கும் காலத்தில் உலக அழகிகளிலிருந்து உள்ளூர் கிழவிகள்வரை ரஹ்மான் அலைவீசிய நேரத்தில் எந்த பெண்ணுடனும் கிசு கிசு இல்லாத மனிதன், இப்போ கண்பார்வை மங்கி சோடாபுட்டி கண்ணாடியுடன் திரியும் காலத்தில் கட்டுப்பாட்டை மீறூவாரா தெரியல. இது தனிமனிதன் பற்றிய விமர்சனங்களல்ல, அவர்களாகவே தமது தனிமனித விஷயங்களை குடும்பமாக பொதுவெளிக்கு எடுத்து வந்ததால் அனைவரும் அதுபற்றி பேசுவார்கள். எது எப்படியோ காரணங்கள் என்னவென்று மலிந்தால் ஒன் லைன் சந்தைக்கு வரும்தானே பார்க்கலாம்.
  11. கங்குவா பார்த்துவிட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள். 1:03 அதிலும் ஒரு சிறுமியை அவரோட அப்பாவோ தாத்தாவோ பாப்பா படம்பத்தி பேட்டியா கொடுக்குற, வாம்மா வீட்டுக்கு ஓடிரலாம்னு இழுத்து போவது கங்குவா கொடூரத்தின் உச்சம், நாம தியேட்டர்லாம் போய் படம் பார்த்து பல வருஷமாச்சு, கடைசியா ரஜனியின் குறை மாசத்துல பொறந்தமாதிரி கதை உள்ள படம் பார்த்தேன் அதுக்கப்புறம் தியேட்டர் பக்கமே போறதில்ல.
  12. திருமணம் ஆகாமல்கூட ஒருவர் இருக்கலாம், ஆனால் திருமணமாகி குழந்தைகள் இல்லைனா ஒரு ஆணும் பெண்ணும் இந்த சமுதாயத்தால் மனசாலும் வார்த்தைகளாலும் எதிர்கொள்ளூம் அவமானங்கள், கேவலங்கள் சொல்லி மாளாது. பத்து வருடத்தின் பின்னர் எவ்வளவு பூரிப்புடன் இருந்திருப்பார்கள், அவர்கள் கதையை ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டது வைத்தியசாலை நிர்வாகம் என்பதே மக்கள் கருத்து. தற்போது வந்த செய்தியின் படி அரசாங்கம் மன்னார் வைத்தியசாலை விடயத்தில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல். நிச்சயமாக செல்போனில் பொழுதுபோக்கி அடுத்தவர் உயிருடன் விளையாடியவர்கள் கூண்டோடு வீட்டுக்கு போகும் சாத்தியமுண்டு.
  13. ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி
  14. மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா ரினோசா ஒரு முஸ்லீமாக இருந்தாலும் பெரும்பாலும் நடுலையாக பேசும் ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் சிங்கம்போலவே கர்ச்சிப்பார், ஒருதடவை பரதநாட்டியம் பற்றி ஒரு முஸ்லீம் தலைவர் கொச்சையாக பேசியபோது தமிழர்களுக்கு ஆதரவாய் பேசி அவருக்கெதிராக கொந்தளித்து அவரை கிழித்து தொங்கவிட்டார் ரினோசா. அவர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் இனவாதம் பேசி கொந்தளித்தால் சிங்களவர்கள் தமிழர்களுடன் கைகோர்த்துவிடுவார்கள் என்பதே. ஏனெனில் யாழ்ப்பாண தமிழர்கள்பற்றி கீழே இருக்கும் சிங்கள வீடியோவில் ஆயிரம் சிங்களவர்களுக்குமேல் கருத்திட்டார்கள். தமிழர் தமிழர் அவர்கள் எம் மக்கள் என்று சொல்லி எத்தனை சிங்களவர்கள் அழுகிறார்கள், எமக்கு ஆதரவாக கருத்து போடுகிறார்கள், அதில் ஒரு முஸ்லீம்கூட கருத்திடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஒரு சிங்களவன்கூட தமிழருக்கெதிராய் கருத்திடவில்லை எவரும் கடந்தகால யுத்தங்கள் பற்றி பேசவில்லை, மாறாக கடந்தகால சிங்கள தலைவர்களையே திட்டியுள்ளார்கள். அந்த வீடியோவில் இந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் தொடர்பான சிங்களவர்கள் கருத்து என்பதை பொறுமையாக ஒவ்வொன்றாக மொழி பெயர்த்து பாருங்கள். சிங்களவர் சமூகம் எமக்கு சார்பாய் 100% மாறிவிட்டது என்றோ அல்லது அநுர வந்திட்டார் இனிமே தமிழர்வீட்டு கூரைகளின்மீது பால்மழை பொழிய போகிறது என்றோ நான் ஒருபோதும் சொல்லமாட்டேன், ஆனால் முஸ்லீம்களைவிட தமிழர்கள் எவ்வளவோ நல்லவர்கள் எனும் சூழலை முஸ்லீம்களே சிங்களவர்கள் மனதில் ஏற்படுத்த போகிறார்கள் என்பதே கருத்து. முஸ்லீம்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுத்திருக்கலாம் என்பதில் உடன்பாடு உண்டு, நாமும் தமிழர்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்காமல் விட்டால் விமர்சித்திருப்போம் ஆனால் அநுரவின் இந்த அமைச்சரவை பொது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, தமிழ் அமைச்சர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்கூட 100% சிங்கள பகுதியில் வாழ்ந்தவர்களே, அதிலும் ஒரு பெண் தமிழ் அமைச்சர் சிங்களத்திலேயே சத்திய பிரமாணம் எடுத்தார்.
  15. இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.
  16. அரசியல் என்பது ஒரு சூது , சுத்துமாத்து, அதற்கு நேர்மையாக வளர்க்கப்பட்ட போராளிகள் ஒருபோதும் சரிப்பட்டு வரமாட்டார்கள். அரசியல் ஒரு புரியாத புதிர், தமிழர் பகுதியில் 80%க்கு மேல் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும் தேர்தல் என்று வரும்போது புலிகளால் நிராகரிக்கப்பட்ட , புளொட்டையும், ஈபிஆர் எல் எவ்வையும், ஈபிடிபியையும், ரெலோவையும் சேர்ந்தவர்களையே அதே புலிகளின் ஆதரவாளர்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறார்கள், அதற்கு காரணம் குள்ளநரித்தனம், அரசியல் வியூகம் எனும் பேரில் சூழ்ச்சி, வலுவான கட்சி கட்டமைப்பு எல்லாம் அவசியம். ஏற்கனவே முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் தலைமையில் ஒரு பிரிவு தேர்தலை முயற்சித்தது நினைவிலுண்டு , ஜனநாயக போராளிகள் என்றொரு அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டதாய் ஞாபகம் அவர்கள் யாருமே தேர்தலில் சோபிக்கவில்லை இப்போ என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட்டு தோத்தவர்கள் மட்டுமே தேசியபட்டியல் உறுப்பினரில் உள்வாங்கப்படலாம் என்ற நிலமையில் தமிழரசுகட்சி நினைத்தால் இனத்தின் இருப்பு கருதி இவர்போன்றவர்களை தமது கட்சிக்குள் உள்வாங்கி எம்பி ஆக்கலாம், அது வாய்ப்பில்லையென்றால் கடந்த தேர்தலில் இவர்போன்ற போராளீகளை கட்சிக்குள் உள்வாங்கியிருக்கலாம். வன்னி மைந்தன்மேல் ஏன் பாய்கிறீர்கள், அவ்வளவு பெரிய ஆளூமையா அவர்? அல்லது எமது போராட்ட தலைமை ஆயுதங்களை மெளனித்தபோது இனிமே எல்லாமே வன்னி மைந்தன் பொறுப்பு என்றா சொல்லிவிட்டு போனது? அவர் சும்மா அடுத்த புதுவை ரத்தினதுரை நான்தான் என்ற நினைப்பில ஊருக்க சுத்திக்கிட்டிருக்கார்.
  17. ஆனால் இந்த பாட்டோட ஒரிஜினல் இதுதான் ஏராளன்.
  18. ஆமாமா அது உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு ஏனென்றால் அமெரிக்க அதிபர்கூட இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்காரே .... இது யாரோ அநுர சொம்புகள் செய்த வேலை, மாவீரர்நாளை சுதந்திரமாக நினைவுகூர மைத்திரி, ரணில் ஆட்சியிலேயே அனுமதித்துவிட்டார்கள். அநுர வந்து புதிதாக செய்ய என்ன இருக்கு? அநுர உங்களுக்கு பிடித்திருந்தால் அவர் புகழ் பாடுங்கள் தப்பில்லை, எதுக்கு விடாத அறிக்கையை விட்டதென்று சொல்லி அண்டா கணக்குல உருட்டி விடுறீங்க?.
  19. ஆம் கடஞ்சா நீங்கள் சொல்வதே சரி, ஆனாலும் ஆணோ பெண்ணோ ஒரு இனத்தை அசிங்கபடுத்தியிருக்கிறார் என்பதே பிரச்சனை.
  20. கஸ்தூரி தேவதாசி முறைபற்றி மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன், கோவில் தொண்டு செய்யவும், நடன மாதுக்களாகவும், பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்களாகவும் நித்ய சுமங்கலிகளாகவுமென பிரிவுகள் ஆந்திரா ஒடிசா கர்நாடகா உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் 1947 வரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயரில் இருந்ததாகவும் பின்னரே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதாகவும், இன்றும் கர்நாடகாவில் சில இடத்தில் நடைமுறையிலிருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்நாளில் மன்னர்கள் ,சிற்றரசர்கள், பண்ணையார்கள் அவர்களை ஜமீன்தார்கள் தமது அந்தப்புரநாயகிகளாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள் தமிழகத்தில் பிராமணர் வேளாளர், மறவர்என அனைத்து குலங்களிலிருந்தும் தேவதாசிகள் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன, அப்படியிருக்க தெலுங்கர்கள் மட்டும் தேவதாசிகள் என்று பிராமண பிரிவை சேர்ந்த ’ஆச்சாரமான’’ கஸ்தூரி எவ்வாறு கூறினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். முதலில் கஸ்தூரி எனும் பெயர் ஆச்சாராமானதா? இமயமலை பகுதிகளீல் வாழும் ஒருவகை மானின் ஆணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தின் பெயரே கஸ்தூரி என்கிறார்கள் , அதிலிருந்துதான் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது என்கிறார்கள், மனிதர்களில் ஆச்சாரமாக நிறம் பார்க்கும் கஸ்தூரி தன் பெயரிலும் ஆச்சாரம் பார்க்கவேண்டும். கஸ்தூரிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை பிறக்கும்போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் சிகிச்சைக்காகவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்கிறார்கள், தனது குழந்தையை வெளியே காண்பிக்காது கவனமாயிருப்பார் கஸ்தூரி, அதனால்தான் பிக்பாஸ் போனபோதுகூட குழந்தைகளின் குரலை மட்டும் ஒலிபரப்பியதாக நினைவிலுண்டு. கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் வெறிதனமான ஆதரவாளர், ஆனால் மனிதரில் நிறம்பார்க்காத என் தலைவனின் ஆதரவாளராயிருந்துகொண்டு மனிதரில் குலம் பார்க்கும் கஸ்தூரியின் செயல் மன்னிக்கப்பட முடியாத குற்றமே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.