Everything posted by valavan
-
இன்று மாவீரர் தினம்!
- கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
பையன் சொல்வது சரிதான், மனித தன்மையற்ற இவர்களின் செயலினால் உழைச்சலாகி அந்த வீடியோவை இந்த திரியில் சொருகிவிட்டேன், அதை அப்படியே வேறு தனி திரிக்கு யாரும் நகர்த்தினால் நன்றே.- கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
நிச்சயமாக அல்வாயன் நீங்கள் சொல்வதுபோலவே இந்த ஜென்மங்களை பார்த்தபோது மனசு சுருக்கென்றது. எந்த இடத்தில் என்ன செய்கிறார்கள் என்னமோ பார்ட்டியிலும் கிளப்பிலும் மீட் பண்ணீனமாதிரி பம்பல் பண்ணுறானுகளே இந்த யூடியூப் வியாபாரிகள், இதை பார்த்தபோது மனதில் ஒரேவரிதான் தோன்றியது விதியே என்ன செய்யபோகிறாய் இந்த தமிழ் சாதியை?- கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
ஒரு மாவீரர் நிகழ்வேந்தும் இடத்தில் எங்கள் யூடியூப் வியாபாரிகள் பண்ணும் அலட்டலை பாருங்கள். செல்பி என்ன ஜோக் என்ன கை குலுக்கல்கள் என்ன, மாவீரர்களுக்கு மலர் தூவும்போதும் காமெடிபண்ணுவதென்ன, நிகழ்வேந்தும் இடத்தின் நடுவே நின்றுகொண்டு யூடிடூப் காரனை கண்டதும் கல்யாணவீடுமாதிரி பரபரப்பாகி குதூகலிக்கும் அந்த பெண்ணை பிடரியில அடிபோட்டு அந்த இடத்திலிருந்து துரத்தி விட்டிருக்கலாம்.- திசைகாட்டி முஸ்லிம் எம்.பிக்களை திறமையற்றவர்களாக குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி : கேள்வியெழுப்புகிறார் ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !
தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் காணொலிகளில், கொலைகாரன் இவருக்குமேதகு என்று பட்டமா, என்று சகட்டுமேனிக்கு முஸ்லீம்கள் பதிவிடுகிறார்கள், ஆனால் பல சிங்களவர்கள் அது அவர்கள் உரிமை அவர்கள் துன்பங்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமையுண்டு, அந்த வாய்ப்பை வழங்கிய அநுரவிற்கு நன்றி என்று பதிவிடுகிறார்கள். மனிதன் வாழ்ந்தால் ராவணனாக வாழணும் இல்லையென்றால் ராமனாக வாழணும், இடையில் நின்று சகுனிபோல் வாழ்ந்தவர்களை சரித்திரம் தன் தோள்மேல் வைத்து தூக்கி கொண்டாடமாட்டாது. சகுனிகளின் குணமறிந்தே அமைச்சர் பதவி கொடுக்காமல் அநுர தவிர்த்தாரோ தெரியவில்லை.- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
- வீட்டில் கறிவேப்பிலை, மல்லி தழை வளர்ப்பு
கறிவேப்பிலைக்கு உரமாக கரைசல் தயாரிக்குமுறை மிகவும் பயனளிக்கும் என்று சொல்கிறார், தயிர் பிரதானமாக பயன்படுத்துகிறாராம். வெளிநாட்டில் இவர் மோர் பயன்படுத்துகிறாராம் ’ மல்லிதழை- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- கதைப்போமா
ஒரு சினிமா பாணியிலான ஒரு வெப் தொடர்தான். ஒரு காதல் கதைதான் இருந்தாலும் வாழ்க்கையோடு ஒட்டி பயணிக்கும் கதை துளி விரசம் இல்லை, பொறுப்பற்ற நண்பர்கள் இல்லை, காதல் என்பதால் வேலை வெட்டி இல்லாமலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமலும் நகரும் கதை அல்ல. கொஞ்சம் பழைய தொடர்தான் பலர் ஏற்கனவே பாத்திருக்கவும் கூடும் , நான் அண்மையில்தான் பார்த்தேன் சும்மா ஒரு பொழுது போக்குக்கு ஒரு பகுதி மட்டும் பார்ப்போமென்று போய் ஆர்வம் தாங்காமல் ஒட்டுமொத்தமா பார்த்து முடிச்சேன். அதில் ஓரிரு பகுதிகள். காதலர்கள் என்றால் கல்யாணத்திற்கு முன் தனியே சந்தித்தால் வெறும் டேற்றிங் மட்டும்தானா? காதலனுக்கு ஆசை ஆசையா மீன் குழம்பும் வைத்து கொடுக்கலாம், காதலி ஆசைப்பட்டால் ஒரு குட்டி சண்டை போட்டுவிட்டு காலையிலேயே பிரியாணி சாப்பிட கூட்டி செல்லலாம், சாப்பிட்டபடி எதிர்காலம் பற்றியும் பேசலாம் எதிர்கால முன்னேற்றம் பற்றி தனக்கு முதலில் சொல்லவில்லையே என்று அவன் நண்பர்களை திட்டியபடி கோவிச்சுக்கொண்டே போகலாம் , மீண்டும் சிரித்தபடி ஒன்று சேரலாம். ------------ இங்கிருந்துதான் தொடர் ஆரம்பம் பிரீத்தா & என்பி, தொடர் முழுவதும் சமூகபிரச்சனை குடும்ப போராட்டம் நண்பர்கள் வட்டம் என்று உண்மை காதலர்களாய் உலவுகிறார்கள்.- தனிப்பட்ட பாதுகாப்பை கோரினார் அர்ச்சுனா- வீதியில் இறங்க முடியாத நிலை என தெரிவிப்பு
பாராளுமன்றம்போய் வாக்களித்த மக்களுக்கு ஒரு வேலைகூட ஒழுங்கா பார்க்கல அதுக்குள்ள வீதியில் நடமாட முடியாத நிலை வந்துட்டுதாம். விவேகத்துக்கும் விளம்பர பிரியர்களுக்கும் நூலிழை வித்யாசம்தான், விளம்பரபிரியர்கள் தம்மை சுற்றி ஊடகங்களை வைத்திருப்பார்கள், விவேகமானவர்களை ஊடகங்களே தேடிவரும் ஐயா முதலாவது ரகம். ஐயாவின் மனசில் இருப்பதெல்லாம் பரபரப்பை கிளப்பினா யாழ்பாணத்துக்கே இவர்தான் ஹீரோ என்று மக்கள் நினைப்பார்கள் என்பதே. வெகுவிரைவில் இவருக்கு வாக்களித்த மக்கள் இவருக்கு போட்ட வாக்கை அநுரவுக்கே போட்டிருக்கலாம் என்ற நிலமை வரும் சபாநாயகர் இவரின் பேஸ்புக் பதிவுகள் ,நடத்தைகள் பற்றி விசாரணகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். எதை வைச்சு அநுரவிற்கு எதிராகவும் புலிகள் என்று பூச்சாண்டி காட்டி தமிழர் தாயக ராணுவ கட்டுப்பாட்டை நியாயபடுத்தவும் முடியாமல் தவித்த இனவெறி சிங்களவர்களுக்கு ஐயா இரும்பு கம்பியை கையில் கொடுத்திருக்கிறார். சுயேட்சையா ஒரு கட்சி ஆரம்பிச்சு அதிவேகமாக பாராளுமன்றம் சென்றவர் என்ற பெருமையை பெற்ற ஐயா அதேவேகத்தில் வாக்களித்த மக்களூக்கு எதும் பண்ணாம வீட்டுக்கு போனவர் என்ற சாதனையையும் படைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. ஊடகங்கள் இன்னும் ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம் ஐயா நீங்க உண்மையா படிச்சு டாக்டர் ஆனவரா இல்லை குதிரை ஓடி மருத்துவரானவரா எண்டு. கோமாளி! பொறுப்பான பதவிகளில் பொறுப்பற்ற மனிதர்கள்!- யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
உண்மைதான் உங்கள் கருத்தில் நியாயமுள்ளது. யாழ்ப்பாணம் இந்த மாரிகாலத்தில் பேரழிவை சந்திக்கபோகிறது என்று செய்திகள் வருகின்றன, ஆரம்பத்திலேயே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யார் எடுத்தாலும் தவறில்லை, வந்து பார்ப்பது யாரென்பது பிரச்சனையில்லை பாதிக்கப்படபோவது எம் மக்கள் என்பதே பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். ஒருவேளை அரசு தரப்பிலிருந்து யாரும் வராமல் விட்டிருந்தால் பார் சிங்களவனுக்கு வாக்களிச்சுது எங்க சனம் அவன் தேர்தல் முடிஞ்சதும் தங்கட ஏரியாவை மட்டும் கவனிக்கிறான் என்றும் பேச்சு வந்திருக்கும், ஒருவர் அமைச்சராகிவிட்டால் ஒரு அரசின் அங்கமாகவே பார்க்கப்படுவார், அவர் ஒருபகுதி மக்களுக்கானவராக ஒருபோதும் பார்க்கப்பட கூடாது. மலையகத்தில் அம்பிகா எனும் ஒரு தமிழ் பெண்ணை சிங்களவர்களும் சேர்ந்து பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற வைத்தார்கள், சரோஜா சாவித்திரி போல்ராஜ் என்பவரும் மலையக மக்களின் பிரதிநிதியாக அமைச்சராகியுள்ளார். அவர்கள் மலையக மக்களீன் பிரச்சனைகளை பார்த்துக்கொள்வார், இந்த அமைச்சரைவிட வேறு எந்த தமிழ் அமைச்சர் வந்திருக்கவேண்டும் ? வடகிழக்கில் உள்ள எவருக்கும் அநுர அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லையே அதனால் இவர் அல்லது சரோஜினிதான் வரணூம் அவரும் மலையகம்தான். நானும் அகதி கோரிக்கை வைத்து பிழைக்கும் கூட்டம்தான், ஆனால் அமைச்சர்மீது வைக்கப்படும் இதுபோன்ற கருத்துக்களை ரசிக்கவில்லை, சொந்தநாட்டிலேயே சொந்த அரசினால் அகதியாக்கப்பட்ட இனம் அடுத்தநாட்டில் அகதி கோரிக்கை வைத்து பிழைப்பது அப்படி ஒன்றும் அசிங்கமில்லை. அன்று சிங்களவன் எம்மை சேர்ந்த்தும் வாழாமல் பிரிந்து போகவும் விடாமல் பூட்டிய அறையினுள் போட்டு வெட்டிக்கொன்றால் எட்டிய தூரம் மட்டும் எவனும் ஓடுவான், வசதியுள்ளவன் வெள்ளைக்காரன் நாட்டுக்கு வந்துவிட்டான் அதனால் உயிரை காப்பாற்றி வாழும் அகதி கோரிக்கை பொழைப்பு மிக பெரிய கேவலமில்லை.- யாழ்ப்பாணத்தில் அமைச்சர்
சீன் போடுகிறார்களோ அல்லது செயலாற்றுவார்களோ தெரியவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகிறவர்களே எட்டிப்பார்க்காத மக்கள் இடர்பாடுகளின்போது ஒரு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சென்று குறை விசாரிப்பது வரவேற்கதக்கது. சீன் போடாமல் செயலாற்றினார்களென்றால் அடுத்த தேர்தலிலும் யாழ்பகுதி தமிழ்கட்சிகள் பொழைப்பு சறுக்கிக்கிட்டு போவும்.- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
ரஹ்மான் விஷயம் அவர்களாலேயே சமூக ஊடகங்களுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் முழுவதும் பல ஆயிரம் ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளான ஒரு செய்தியென்பதால் நாமும் ஒரு கருத்து சொல்லலாம் தப்பில்லை. சிகிச்சைக்காக மும்பை போகும் அவர் மனைவி எதுக்கு ட்விட்டரில் நான் ரஹ்மானை பிரிகிறேன் என்று பதிவு போடணும்? அதுக்கு அவர் எதுக்கு 30 வருடத்தை எட்டி தொடுவோம் என்று எதிர்பார்த்தோம் முடியவில்லை என்று பதிவு போடணும்? உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கணவன் குழந்தைகள் அனைவரையும் விட்டு சென்னையில் ஆஸ்பத்திரிகள் எதுவும் இல்லையென்று தனியே மும்பை ஓடுவார்களா சமூக ஊடகங்களில் இந்த ஐஞ்சுபத்து ரூபாய்க்கு விமர்சனம் பண்ணும் ஆய்வாளர்களால் ரஹ்மான் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமர்சிக்கப்பட்டார். அசிங்கப்படுத்தப்பட்டார். உங்களின் பிரிவுக்கு நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த தனிமையின் மன அழுத்தமே காரணம் என்று பல ஊடகங்கள் இப்போது பேச தொடங்கிவிட்டன, நான் நினைக்கிறேன் ரஹ்மான் மிக மோசமாக அசிங்கப்படுத்தப்படுவதை பார்த்து அவர் குழந்தைகள் தமது தாயிடம் வைத்த கோரிக்கையினால் இந்த ஒலிப்பதிவை அவர் ஊடகங்களூக்கு அனுப்பியிருக்கலாம். அதனால் ரஹ்மான் மனைவிக்கு இப்போது தேவைப்படுவது உடல்நல சிகிச்சையல்ல மனநல சிகிச்சை. எனக்கு தெரிந்து இத்தனை உலக புகழ் உச்சியில் மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலிருந்தும், எனக்குத்தான் இசை தெரியுமென்றோ அல்லது இசைபற்றி உனக்கு என்ன தெரியுமென்று பிறரை பார்த்து கேக்கும் அநாகரிக பழக்கம் கொண்டோ துளிகூட கர்வம் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாத ஒரேயொரு மனிதன் ரஹ்மானாகதான் இருக்க முடியும். பணம் புகழ் செல்வாக்கு என்று அத்தனையும் உச்சத்துக்கு மேலேயே இருந்தும் எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்க முடிகிறது என்று எப்போதும் அவர்மேல் ஒரு பிரமிப்பு உண்டு அதனாலேயே ரஹ்மான் எந்த தவறும் பண்ண மாட்டாதவர் என்று அர்த்தமல்ல, ஆனால் எந்தவித ஆதாரங்களுமின்றி சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி ஒரு மனிதன் பற்றி எதுவேணும் என்றாலும் சொல்லலாம் எனும் பாணியில் இப்போது சுமத்தப்படும் குற்றங்கள் மிகவும் கண்ணியக்குறைவானது. இவர்கள் செய்தி உலகறிஞ்ச விஷயமானாலும் இதுக்குமேல இதுபத்தி மேலதிகமாக ஒருவார்த்தை பேசுவது ரொம்ப மலினதனமானது , அதனால எஸ்கேப்.- தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன்.
வாங்கோ நிலாந்தன் , நீங்க முள்ளிவாய்க்காள் இறுதி நாளிலும் புலிகள் பதுங்குவது எதற்கு மிக பெரிய பாய்ச்சலுக்காகதான் என்று எழுதிய அந்த நிலாந்தனா? பழைய ஆய்வாளர்கள் எல்லாம் ஒருவர் ஒருவராக மறுபடியும் கிளம்புகிறார்கள். அது நிற்க உலக வரலாற்றில் கட்சி ஆரம்பிச்சு அடுத்த மாசமே பாராளுமன்றம் சென்ற முதல் ஆள் அர்ச்சுனாவாகதான் இருக்குமெண்டு நினைக்கிறேன். சத்தியபிரமாணம் செய்யும்போது இலங்கை,அரசியலமைப்பியும் ஒருமைப்பாட்டையும் தேசியம் தேசிய கொடி எல்லாம் ஏற்றுத்தானே பதவி பிரமாணம் செய்கிறீர்கள், பின்பு எப்படி புலிகள் பிரபாகரன் தெய்வமென்றெல்லாம் பாராளுமன்றத்துக்குள் நின்று பேசி திரிகிறீர்கள், நீங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகிறீர்களா சிங்கள மக்களை ஏமாற்றுகிறீர்களா? சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலை வெளிக்கொண்ணந்தமையினால் அர்ச்சுனா ஒரு நேர்மையான மனிதர் என்ற இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளாத சாவகச்சேரி மக்களால் அர்ச்சுனா பாராளுமன்றம் அனுப்பப்பட்டார், பாராளுமன்றத்துக்கு போன வேலைய பாக்காம , முன்பு வெளிநாட்டுக்கு புதுசா வந்தவர்கள் காருக்கு முன்னால் நின்று படம் எடுத்து அனுப்புறமாதிரி இப்படி நேரடி ஒளிபரப்பு வெட்டி வீர வசனம் என்று காமெடி பண்ணிக்கிட்டிருந்தா அர்ச்சுனாவை அகற்ற சிங்களவன் தேவையில்லை அதே சாவகச்சேரி மக்களே அடுத்த தேர்தலில் அகற்றுவார்கள். அர்ச்சுனாவின் ஓவர் அலட்டலால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டார், இன்னொரு அரச பதவியான மருத்துவர் பதவியில் இருந்து கொண்டு எம்பியாகவும் செயற்படுகிறார் என்று இதுவரை இரண்டுமூன்று முறைப்பாடுகள் சிஐடியில் பதிவு செய்யப்பட்டிருகின்றன, எதிர்காலத்தில் விசாரணை கோர்ட் எண்டுபோய் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அர்ச்சுனாவின் பதவி நீடிக்க அனுமதிக்கப்படுமா என்பது காலத்திற்கே வெளிச்சம். அப்படி ஒரு நிலமை வந்தா அதற்கு முழுகாரணம் ரஜனி ஸ்டைல்ல அர்ச்சுனா சும்மா பரபரப்பு அரசியல் செய்ய வெளிக்கிட்டதுதான்.- நானும் மோடியும் கைச்சாத்திட்ட தொலைநோக்கு ஆவணத்தை அனுர குமார நடைமுறைப்படுத்தவேண்டும் - இந்தியாவில் ரணில்
முதல் அநுர என்ன எல்லாம் செய்யோணூம் எண்டு டக்ளஸ் சொன்னார் இப்போ இவர் சொல்லுறார் மக்கள் உங்களை நிராகரித்து உங்க பதவி காலியானால் அடுத்த வேலையை பார்க்க போகவேண்டும் அதுதான் உலக வழக்கம். இப்போதைய ஆட்சிக்கு தகப்பன் அநுர , அவர் தன்னோட பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டுமென்று நீங்க சொல்லகூடாது. நீங்கள் சொல்வதாயிருந்தால் பிறகு எதுக்கு காசு செலவளிச்சு தேர்தல் தெரிவு எல்லாம்?- Symphony Orchestra -இராஜகோபுரம் எங்கள் தலைவன்
- ஒரு வினாடி பயந்துட்டேன்
ஒரு வினாடி பயந்துட்டேன் நான் நேசிக்கும் ஹரிகரனா இதுவென்று. பிறகு சரியாகிட்டுது.- புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கங்களுக்கமைய ஜனாதிபதி செயற்படக்கூடாது - ஜயந்த சமரவீர
இனவாதத்துக்கும் மத வாதத்துக்கும் இடமில்லையென்று அநுர சொல்லி வருவதால், இதுநாள்வரை இனவாதம் மதவாதத்தை வைத்து அரசியல் செய்த சிங்கள இனவெறியர்களுக்கு தமிழர்களுக்கு அநுர ஏதாவது கொடுத்துவிடுவானோ எனும் பயம் வருகிறது. இலங்கை முழுவதும் வெற்றிபெற்றவனுக்கு ஏதோ ஒன்று இரண்டு தொகுதிகளில் வென்றவனும், எந்த தொகுதிகளிலும் வெல்லாதவனும் ஆலோசனை சொல்ல ஓடி வருகிறார்களென்றால் அடிமனதில் அங்கே தலைவிரித்தாடுகிறது இனவெறி. அத்தனை எதிர்கட்சிகளும் கூட்டணி சேர்ந்தாலும் அடுத்த ஐந்துவருடம் வெறும் அறிக்கைகளை தவிர அநுர ஆட்சியை எந்த வகையிலும் அசைத்து பார்க்க முடியாது என்ற விரக்தியில் அனைத்து இனவெறி கட்சிகளும் எதை வைத்து இனி அரசியல் செய்வதென்று இடிந்துபோயிருக்கின்றன. . மஹிந்த மகன் என்னடான்னா ராணுவ முகாம்களை நீக்கபோகிறார்கள் தேசிய பாதுகாப்பு கெட போகுது எண்டு அலறுகிறான், இவர் என்னடாண்டால் கனடா தமிழர் பேச்சை கேட்டு நாட்டை பிரிக்க போறாங்கள் எண்டு புலம்புறார். புலிகளே இல்லாத யாழ்ப்பாணத்தில் யாரினால் தேசிய பாதுகாப்பு கெடபோகிறதென்று கேட்டால் சொல்லமாட்டார்கள். சிங்கள அதிரடிபடை பாதுகாப்பிலேயே வலம் வந்த சிங்கள ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் எப்படி சிங்கள தேசத்தை பிரிக்க முயற்சி செய்திருப்பார் என்று கேட்டால் அதுக்கும் பதில் சொல்ல மாட்டாங்கள். வடக்கின் மக்கள் அநுரவுக்கு வாக்களித்ததால் இனவாதம் இல்லையென்று சொல்லி ஏதாவது தமிழர்களுக்கு கொடுத்துவிடுவார்களோ என்று முழுசிக்கொண்டிருக்கிறார்கள் இனவெறிகூட்டம், ஆனால் பரிதாபம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இலங்கை ஆட்சியை கைப்பற்றிய அநுரவை இவர்கள் கூச்சல் செண்டிமீற்றருக்குகூட அசைத்து பார்க்காது என்பதே கள நிலவரம்.- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.- சுவிஸ் பிரஜையான வயோதிபப் பெண் மீது தாக்குதல்: 2 கோடிக்கும் அதிக வௌிநாட்டு நாணயங்கள் கொள்ளை
கிழக்கில் முஸ்லீம்களுக்கு அருகில் வாழும் தமிழர்கள் உல்லாச பிரயாணிகளாக அங்குவரும் இஸ்ரேலியர்களுக்கு அவர்கள் வீடுகள் விடுதிகளை வாடகைக்கு கொடுங்கள் தற்காலிகமாக குடியமர்த்துங்கள். அவர்கள்மேல் முஸ்லீம்கள் கை வைத்தால் சிங்களவன் நொங்கு எடுப்பான், இவர்களை முழு கண்காணிப்பின்கீழ் கொண்டுவருவான். எம் நிம்மதியை கெடுத்தால் ஏதாவது ஒருவழியில் அவர்கள் நிம்மதியை கெடுக்கலாம் தப்பில்லை- கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
நீங்கள் மேலே சொன்னதில் ஒருவரிகூட மறுப்பதற்கில்லை, ஹேராம் பாதியிலே எந்திரிச்சு ஓடினவர்கள் ஏராளம் ஆனா அதற்கு கமல் போட்ட உழைப்பு பிரமாண்டம். அதேநேரம் கமலின் சில படங்கள் ஏன் படுதோல்வியை சந்திச்சது என்பது புரியாத புதிர். ராஜபார்வை ஒரு அற்புதமான படம், அன்பே சிவம் மிக சிறந்த படைப்பு இருந்தும் இரண்டும் ஊத்திக்கிட்டது சோகம். மீண்டும் வெளியிட்டால் இந்த இரண்டு படமும் ஓடினாலும் ஓடும்.- கங்குவா எதிர்ப்பாளர்களின் கவனத்திற்கு!
லிங்காவோ கோச்சடையானோனு என்று நினைக்கிறேன் ரசோ அதுகூட கதை இப்போகேட்டால் சொல்லமாட்டேன், ஏன்னா போய் 1 மணித்தியாலத்திலேயே நித்திரையாயிட்டோம்ல. அவ்வளவு தூரம் கதையோட ஒன்றிபோயிட்டோம் இந்தியன் 2 தியேட்டர்ல பாத்தீங்களா? என்ன ஒரு நெஞ்சழுத்தம், இப்போகூட அந்த அதிர்ச்சியில இருந்து உலகம் மீளவில்லை, கமலின் மேக்கப் பாணுக்கு மா குழைச்சமாதிரி இருந்துனு சொன்னாங்க. நான் நினைக்கிறேன் ரசோ, எழுத்தாளர் சுஜாதாவின் மரணம், ரஹ்மானுடன் வேலை பார்க்காதது, ஷங்கரின் வயசு எல்லாம் சேர்ந்து அவர் திரையுலக உச்ச காலம் முடிவுக்கு வருது எண்டு நினைக்கிறேன். இந்தியன் 2 பார்த்த கடுப்பில பலர் இந்தியன் 1 மீண்டும் பார்த்தார்கள், அது ஒரு காலஎல்லையை கொண்டிராத ரசனை மிக்க படைப்பு. அதிலும் சுகன்யா கமல் மேக்கப் கொஞ்சம் செயற்கையாதானிருந்திச்சு.- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
நாகவிகாரை பீடாதிபதி நாட்டின் பிற பிக்குகள் போன்றவரல்ல என்றே குறிப்பிட்டேன், மற்றும்படி அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்று அர்த்தமல்ல. மற்றும்படி இங்கு இருந்துகொண்டு தமிழ்நாட்டில் தமிழகத்தவர்களே தமது நடிகர்கள் அரசியல் தலைவர்களின் காலில் விழுவதை ஏற்காத ஈழதமிழினம் நமதுநாட்டில் அதை எப்படி ஏற்கும்? நானெல்லாம் காலுக்கு பக்கத்தில மணிபேர்ஸ் எதாச்சும் விழுந்திருந்தா மட்டும்தான் யார் காலிலயும் விழுவன்- நாகவிகாரை பீடாதிபதி காலில் வீழ்ந்து வணங்கிய யாழ் எம்பிகள்
என்பிபி என்பதால் மேலிட உத்தரவோ தெரியவில்லை, ஆனால் நாகவிகாரை பீடாதிபதியும் நாட்டின் பிறபகுதி பிக்குகளூம் ஒன்றல்ல. எந்தகாலத்திலும் அவர் இனவாதம் கக்கியதில்லை, தெற்கின் அரசியல்வாதிகளுக்கும் இனவெறியர்களுக்கும் அவர் முட்டுகொடுத்ததில்லை, எப்போதும் தமிழருக்கு சார்பாகவே அவர் பேசியிருக்கிறார் என்பது நானறிந்தது. - கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.