Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. கூப்பிட்டது கல்யாணவீட்டுக்கல்ல கோசான் எம்மை முதன்மை படுத்தவில்லையென்று மனம் வருந்தவும் மன்னிப்பு கேட்கவும் அவமானமாக உணரவும். தன் உடல்தசையிலிருந்து பிரித்து எம்மை உருவாக்கிய தாய்க்கு தன் பிள்ளைகள் தன்கூட இல்லையே என்ற கவலைதான் முதலில் நிற்கும் முதல்மரியாதை தரவில்லையென்ற மனவேதனை முன்னணியில் நிற்காது. இந்த தாயும் நிச்சயமாக எதையும் எதிர்பாரா தாயாகத்தான் இருப்பா. எனக்கு தற்கால எந்த தமிழ் அரசியல்வாதிகளையும் பிடிக்காது என்றாலும், இது சிறிதரனுக்கு எதிரான யாரோ அந்த தாயை தூண்டிவிட்டு பேச வைத்ததுபோலிருக்கு.
  2. நீங்கள் சொல்வது உண்மைதான் வசீ , சில செடிகள் பயன்தரு மரங்கள் எத்தனையோ முயற்சிகள் செய்தாலும் இறுதிவரை பயன் தராமலே கருகி போய்விடுகின்றன ,இவர்கள் தகவல்கள் முயற்சிகள் வேறு தரத்திலுள்ளன. முயன்றுதான் பார்ப்போமே என்று எண்ண தோன்றுகிறது. நாமெல்லாம் தண்டுகள் விதைகளை வைத்தே சில செடிகளை உருவாக்குவோம், ஆனால் இலைகளை வைத்தே மாமரம் கொக்கோகோலா உதவியுடன் மிகவும் குள்ளமாக உருவாக்கலாமென்று இவர் கூறுகின்றார் இது இன்னொருமுறை குள்ளமான செடிகளென்பதால் குளிர்காலங்களில் வெயில் படும்படியா வீட்டினுள்ளே வைத்தும் பரமரிக்கலாம் போல இருக்கிறது இது வேகமாக ஆரோக்கியமான ரோஜாக்களை உருவாக்கும்முறை, வீடியோவின் இறுதியில் அவர் தனது குழந்தைகளை அணைத்தபடி நின்றபோது எது ரோஜா எது குழந்தைகள் என்று குழப்பமா போனது
  3. அம்மா இந்த விஷயத்தை பெரிதுபடுத்தவே தேவையில்லை, தமக்கென்று பிரத்தியேகமாக எதுவும் எதிர்பார்க்காமல் போராடி மறைந்தவர்கள் உங்கள் பிள்ளைகள். அவர்களின் தாயாக உங்களை விளக்கேற்றவிடவில்லை அவமானபடுத்திவிட்டார்கள் என்று எதிர்பார்ப்பது கூறுவது சரியல்ல, இறுதிநேர ஏற்பாட்டில் ஏதாவது குளறுபடிகள் நடந்திருக்கலாம். அந்த விளக்கை உங்களை தவிர்த்து ஏற்றியவர் இன்னொரு மாவீரர் பெற்றோராகதான் இருந்திருக்கும் என நம்புகிறேன் . மாவீரர்களானாலும் சரி மாவீரர் பெற்றோரானாலும் சரி அவர்களுக்கிடையில் ஏது வேறுபாடு? நமக்கு தேவை அந்த ஆத்மாக்களுக்கான நினைவஞ்சலி, நீங்களெல்லாம் அந்த நிகழ்வில் கலந்து கொண்டதே இனத்துக்கும் இனத்துக்காக போராடியவர்களுக்கும் பெரிய கெளரவம்தானே , எதுக்கு இந்த விஷயங்களில் கோவம் கவலை எல்லாம்?
  4. தேர்தல் முடிவுகளை வைத்து அது தமிழ்மக்கள் சிங்கள தலைமைகளை ஏற்று வாழ தயாராகிவிட்டார்களென்றோ, அல்லது தமிழர்களின் தேசிய உணர்வை மறந்து விட்டார்களென்றோ பல்கலைகழக மாணவர்களும் ஊடக சந்திப்பு நடத்த தேவையில்லை, சீன தூதுவரும் அறிக்கைவிட தேவையில்லை. சிங்கள கட்சிக்கு யாழ்ப்பாணத்தில் அளிக்கப்பட்ட பெரும் வாக்குகள் சிங்கள கட்சிகளின் மேல் கொண்ட அன்பினால் அல்ல தமிழ்கட்சிகள் மேல் கொண்ட வெறுப்பினால் என்பதே யதார்த்தம். எம் மக்கள் எந்தவித ஆசை வார்த்தைகளுக்கும் சலுகைகளுக்கும் இனத்தை அடைவு வைக்க மாட்டார்களென்பதற்கு வடக்கிலிருந்து கிழக்குவரை புயல் பெருவெள்ளம் இடி மின்னல் நடுவே முழங்காலளவு தண்ணீருக்குள் நின்றபடி எம் இன மானம் காத்தவர்களை சாரை சாரையாக அணிவகுத்து வந்து நினைவு கூர்ந்ததே சாட்சி. அதேபோல சிங்கள கட்சிகளும் தமிழர்கள் இனிமே நிரந்தரமாக எம் பக்கம் என்று எக்காலமும் நினைத்திடலாகாது, வெறும் வாக்கு வங்கிகளாக நீங்கள் எம்மைபயன்படுத்தலாம் என்று கனவிலும் எண்ணக்கூடாது. அது மாவீரர் மண், அது எதற்காகவும் இனமானத்தை யாருக்கும் விற்காது என்பதற்கு பெருமெடுப்பில் நடந்த நிகழ்வேந்தலும், தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டமும், பெரும் எண்ணிக்கையில் மாவீரர், மற்றும் தலைவரை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் எண்ணிக்கையில் கைதாகும் எம் இளைஞர்களும் சாட்சி. இந்த ஐந்தாண்டு காலத்தில் இன அர்ப்பணிப்புள்ள உறுதியான தமிழ்தலைமை ஒன்று தமிழர் மத்தியில் உருவானால் அடுத்த தேர்தலில் யாழ்ப்பாணம் ஒட்டுமொத்தமா அநுர அரசை வடக்கிலிருந்து அகற்றிவிடும். அப்படி ஒரு அர்ப்பணிப்புள்ள தமிழ்தலைமையோ அல்லது இன்று எஞ்சியிருக்கும் தமிழ்கட்சிகளோ இன்னமும் கடந்தகால வரலாற்றில் பாடம் படிக்காமல் ஊர் சுத்தி திரிஞ்சால் அடுத்த தேர்தலில் அநுர ஆறு ஆசனங்களையும் பெறும் வாய்ப்பிருக்கிறது அதையும் மறுப்பதற்கில்லை. அதுகூட அநுரதான் கடவுள் என்று அவர்கள் கொள்ளபோகும் அர்த்தமல்ல, நமக்கு வாய்த்ததுகள் இயமனுகள் என்ற வெறுப்புத்தான். தமிழர் மான தேசியத்தையும், தமிழர் தேசியம் என்று பேசி திரிந்து எம் முதுகில் குதிரையோடிய தமிழர் கட்சிகளையும் எம் மக்கள் ஒன்றாக்கி பார்க்கவில்லையென்பதே மாவீரர்நாள் நிகழ்வுகளும் இந்த தேர்தலில் அநுரவின் வடபகுதியின் அமோக வெற்றியும். அவர்களை பொறுத்தவரை அவர்களுக்கும் கடல்கடந்துவிட்ட எமக்கும் தேவை இனமான தேசியம், இனத்தை விற்று தமிழ்கட்சிகள் நடத்திய யாசகம் அல்ல.
  5. இந்த ஆட்சியமைப்பில் தமிழர்களும் சிங்களவர்களும் இணக்கபாடாய் போய்விடுவார்களோ , இவர்கள் மோதலைவைத்து இதுநாள்வரை பொழைப்பு நடத்திய முஸ்லீம்கள் நிலமை இனி என்னாகுமோ என்று பேயறைந்ததுபோல் ஆகிவிட்ட முஸ்லீம்வெறி அரசியல் ஜந்துக்கள் பல உண்டு, அதில் ஒன்றுதான் இந்த அலிசப்ரி ஜந்து. இதே ஜந்துதான் வடக்கில் அநுர வெற்றி பெற்றபின்னர் இன இணக்கப்பாடு பற்றி ஒருசிலநாள் முன்னர் பேசியது, அப்போதே தெரியும் இது உள்ளூக்குள் எரிந்தபடி ஒப்புக்கு பேசுது என்று
  6. எத்தனையோ பயிரிடு முறைகள் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்திருக்கிறேன் ஆனால் கொக்கோகோலாவிற்குள் வைத்து அதிவேகமாக எலுமிச்சை மரத்தை உருவாக்கலாம் என்று இவர் சொல்கிறார் , புதுசா இருக்கு. கீழே இலகுவாக தோடை பயிரிடும் முறை, ஆனாலும் இந்த காணொலியில் சிறு சந்தேகமுண்டு, விதைக்காக வைக்கப்பட்ட பழம் எப்படி அழுகாமல் வாடாமல் அப்படியே இருக்கிறது என்பது, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்காமல் சந்தேகம் கொள்வது தப்பென்பதால் இணைக்கிறேன். இது வாழை மரம்
  7. அப்படியென்றால் முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதியில் எப்படி ரிஷாத் பதியுதீனும், மஸ்தானும் வெற்றி பெற்றனர்? எது தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறீர்களா? அப்போ முஸ்லீம்களால்தான் தற்போதைய அரசு ஆட்சியை கைப்பற்றியதா? 76 ஆண்டுகால இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள ஆளும் கட்சியொன்று வடபகுதியில் பெரும்பான்மையாக வென்றதாக சரித்திரமேயில்லை, ஆனால் எந்த யாழ்ப்பாணத்து தமிழனும் எமது பகுதியில் இருந்து ஏன் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று கொந்தளிக்கவில்லை பக்கம் பக்கமாக கட்டுரையெழுதவில்லை. முஸ்லீம் ஒருவரை அமைச்சராக்கினால் அவர் முஸ்லீம்களுக்காக மட்டும் செயல்பட முடியாது, முஸ்லீம்கள் சொல்வதை மட்டுமே நடைமுறைபடுத்த முடியாது. எந்த அமைச்சரும் அரச தலைவரின் கட்டுப்பாட்டிலிருப்பவர், அரச தலைவர் சொல்வதையே நடைமுறைப்படுத்தும் ஒரு பதவியே அமைச்சு என்று இருக்கும்போது அவர் தமிழராகவோ சிங்களவராகவோ முஸ்லீமாகவோ இருப்பதில் என்ன பெரும் பாதிப்பு வந்துவிட போகிறது? உங்கள் அடி மனதில் இருப்பதெல்லாம் முஸ்லீம்களுக்கும் அரசாங்கத்தில் அதிகாரம் இருந்தால் தமிழர் நில ஆக்கிரமிப்பு , பொருளாதார சுரண்டலில் ஈடுபடலாம் என்பதே. ஏற்கனவே அரச செல்வாக்கு பெற்ற ஹிஸ்புல்லா,நசீர், பதியுதீன் துணையுடன் அதை செய்திருக்கிறீர்கள் கொரோனா காலத்தில் முஸ்லீம் உடல்களை எரித்துவிட்டார்கள், இலங்கையில் இனவாதம் மதவாதம் என்று முழங்கிய நீங்கள் தற்போது முஸ்லீம் முஸ்லீம் என்று முழங்குவதற்கு என்ன பெயர்? முன்பும் ஒருதடவை எழுதியிருக்கிறேன், முஸ்லீம் எனும் இனம் எக்காலமும் எவருடனும் ஒற்றுமையாகவோ உளப்பூர்வமாகவோ சேர்ந்து வாழாது, அவர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தாலும் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள். ஒருவன் எதற்கெடுத்தாலும் தகராறு பண்ணிக்கொண்டிருந்தால் அவனை தங்க தாம்பாளத்தில் இந்த உலகம் தாங்காது, மாறாக அவனை தள்ளி வைக்கும். அதுதான் உள்ளூரிலும் உலக அளவிலும் முஸ்லீம்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
  8. முதலில் பொதுவாழ்வு எனப்படும் அரசியலில் ரஜனி செல்வாக்குள்ளவரா? அவரே தேர்தலில் குதிக்கபோகிறேன் என்று சொல்லி கடைசி நேரத்தில் தொடை நடுங்கியதால் உடல்நிலை சரியில்லை அதனால் அரசியலில் இறங்கும் முடிவிலிருந்து விலகுகிறேன் என்று ஓடி போனவர் அவரை சந்தித்தால் எப்படி மற்றையவர்கள் செல்வாக்கு பெற முடியும்? அதற்குபின் வருடம் இரண்டுபடம் பறந்து பறந்து நடிக்கிறார் அதற்கு மட்டும் அவருக்கு உடல்நலம் சிறப்பாக ஒத்துழைக்கிறது. ஒரேயொருதடவை அக்கால கட்டத்தில் ஜெ’வும் சசியும் சேர்ந்து தமிழ்நாட்டையே மொட்டையடித்து ஆட்சி செய்த காலத்தில், பாட்ஷா பட விழாவில் பம்பாய் பட விஷயத்தில் மணிரத்னம் வீட்டுக்கு முஸ்லீம்கள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ரஜனி பேசபோக அது ஆளும் கட்சிக்கும் ரஜனிக்கும் மோதலாகி ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜனி குரல்கொடுத்து காகம் உக்கார பனம் பழம் விழுந்த கதையாக திமுக ஆட்சியை பிடித்தது. பின்பு அதே வாயால் கோயம்புதூர் குண்டுவெடிப்புகளை முஸ்லீம்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று ரஜனி சொல்லபோக 15 ஆயிரம் அவரோட ரசிகர் மன்றங்களே ரசிகர்களே கலைத்ததாக கதையுண்டு. ஜெயலலிதாவுக்கெதிராய் குட்டிகதை வேறு சொன்னார் ரஜனி, ’’ஒரு கம்பம் இருக்கிறது அதை நட முயற்சிக்கிறோம், அது ஆடிக்கொண்டிருந்தால் மறுபடியும் கல்லு மண்ணுபோட்டு அடிச்சு இறுக்கிகிட்டே இருப்போம், அதேபோல ஓவரா ஆடினா அடி விழுந்துகொண்டே இருக்கும்’’ என்றார் ரஜனி பின்பு அதேவாயால் ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று வானளாவ புகழ்ந்தார். பின்பு நடந்த தேர்தல்களிலும் திமுக அனுதாபியாக ரஜனி இருந்தார் ஆனால் ரஜனி செல்வாக்கினால் எந்த தேர்தலிலும் திமுக வென்றதாக பதிவுகள் இல்லை. ரஜனி ஒரு சேற்றில் விழுந்த பன்றி என்று நேரடியாகவே மருத்துவர் ராமதாஸ் விமர்சித்து பாபா படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதில் முனைப்பு காட்டியபோது ரஜனிக்காக எந்த பிரமாண்ட கட்சிகளும் களமிறங்கவில்லை. அந்த கோபத்தில் அடுத்த தேர்தலில் நாம் யாரென்று காட்டுவோம் என்று முழங்கினார் ரஜனி , ஆனால் ரஜனியின் செல்வாக்கினால் அடுத்த தேர்தலில் பாமகவுக்கு எதிராக ஒரு துரும்புகூட நகரவில்லையென்பதே வரலாறு. சீமானும் அப்படித்தான் எவரையாவது திட்டிக்கொண்டே இருந்தால் அதுதான் அரசியல் என்று நினைக்கிறார், செயல்வடிவில் மக்கள் பணியாற்றி அடுத்த தேர்தலை எதிர்கொள்கிறாரா என்று பார்த்தால் செயல் என்று எதுவுமேயில்லை. எல்லோரிலும் குற்றம் கண்டுபிடிப்பார் பின்னர் அவர்களையே புகழ்ந்து தள்ளுவார், வாரிசு அரசியலை கடுமையாக கண்டிப்பார் பின்னர் என் அன்புதம்பி உதயநிதி என்பார். ஜாதி அரசியல் என்று சொல்லி அன்புமணி ராமதாசை திட்டி தீர்ப்பார் பின்பு என் அருமை அண்ணன் அன்புமணி என்பார். அதிமுகவை கண்டிப்பார், பின்பு ஐயா எடப்பாடி பழனிசாமி என்பார். ரஜனியை சத்ராஜுக்கு அடுத்ததா கிழித்து தொங்கபோட்டது சீமான் தான், இப்போ ரஜனி வீட்டில் போய் நிற்கிறார். இதுநாள்வரை விஜய்யை தன் கடைசிபிள்ளைபோல தூக்கி கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சியவர் இப்போது விஜய் கொள்கை எதிர்ப்பில் ஆவேசமாக இருக்கிறார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதே விஜய் வீட்டில் ஒரு சில மாதங்களிலோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்திலோ ஒரு பூங்கொத்து பொன்னாடையுடன் மின்னலடிக்கும் வெண்மையான பற்களை விரிசலாய் காட்டியபடி கூட்டணிக்காக போய் நிற்பார் சீமான். தமிழர் தமிழ்தேசியம் என்பதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது எந்தகாலமும் வெற்றிபெறாது, ஏனென்றால் தமிழகம் மேற்குலக நாகரிகத்துக்கும், மொழி கலப்புக்கும், சினிமா, தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு என்பதற்கும், மறுபக்கம் முழுக்க முழுக்க தொழிலாளர்கள், வியாபாரம், உயர்பதவிகள், மத்தியபாதுகாப்பு படைகள், ஆட்சிக்கூட்டணி, கல்வி திட்டங்கள் மொழி கலவை, புராணகதைகள், வழிபாட்டு முறைகள் என்று வடநாட்டவர்களின் முழுகட்டுப்பாட்டில் என்றோ கையைமீறி போய்விட்ட தமிழகம் இனிஒருபோதும் மீண்டு வராது. சும்மா கூட்டங்களில் மட்டும் தமிழ் தமிழர் என்று முழங்கும்போது கைதட்டல்கள் வரும் விசில்கள் பறக்கும் ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக ஒருபோதும் மாறாது, அது சாத்தியமாக இருந்தால் கருணாநிதி நிரந்தர முதல்வராக இருந்திருப்பார், சீமானும் எப்போதோ முதல்வராகியிருப்பார்.
  9. கடற்தொழில் அமைச்சர் என்றால் எப்படி இருக்கவேண்டுமென்று வடக்கின் மிகபெரிய கடற்தொழில் நகர்களில் ஒன்றான வல்வெட்டிதுறை மக்கள் பேசுகிறார்கள்.
  10. பையன் சொல்வது சரிதான், மனித தன்மையற்ற இவர்களின் செயலினால் உழைச்சலாகி அந்த வீடியோவை இந்த திரியில் சொருகிவிட்டேன், அதை அப்படியே வேறு தனி திரிக்கு யாரும் நகர்த்தினால் நன்றே.
  11. நிச்சயமாக அல்வாயன் நீங்கள் சொல்வதுபோலவே இந்த ஜென்மங்களை பார்த்தபோது மனசு சுருக்கென்றது. எந்த இடத்தில் என்ன செய்கிறார்கள் என்னமோ பார்ட்டியிலும் கிளப்பிலும் மீட் பண்ணீனமாதிரி பம்பல் பண்ணுறானுகளே இந்த யூடியூப் வியாபாரிகள், இதை பார்த்தபோது மனதில் ஒரேவரிதான் தோன்றியது விதியே என்ன செய்யபோகிறாய் இந்த தமிழ் சாதியை?
  12. ஒரு மாவீரர் நிகழ்வேந்தும் இடத்தில் எங்கள் யூடியூப் வியாபாரிகள் பண்ணும் அலட்டலை பாருங்கள். செல்பி என்ன ஜோக் என்ன கை குலுக்கல்கள் என்ன, மாவீரர்களுக்கு மலர் தூவும்போதும் காமெடிபண்ணுவதென்ன, நிகழ்வேந்தும் இடத்தின் நடுவே நின்றுகொண்டு யூடிடூப் காரனை கண்டதும் கல்யாணவீடுமாதிரி பரபரப்பாகி குதூகலிக்கும் அந்த பெண்ணை பிடரியில அடிபோட்டு அந்த இடத்திலிருந்து துரத்தி விட்டிருக்கலாம்.
  13. தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் காணொலிகளில், கொலைகாரன் இவருக்குமேதகு என்று பட்டமா, என்று சகட்டுமேனிக்கு முஸ்லீம்கள் பதிவிடுகிறார்கள், ஆனால் பல சிங்களவர்கள் அது அவர்கள் உரிமை அவர்கள் துன்பங்களை நினைவுகூர அவர்களுக்கு உரிமையுண்டு, அந்த வாய்ப்பை வழங்கிய அநுரவிற்கு நன்றி என்று பதிவிடுகிறார்கள். மனிதன் வாழ்ந்தால் ராவணனாக வாழணும் இல்லையென்றால் ராமனாக வாழணும், இடையில் நின்று சகுனிபோல் வாழ்ந்தவர்களை சரித்திரம் தன் தோள்மேல் வைத்து தூக்கி கொண்டாடமாட்டாது. சகுனிகளின் குணமறிந்தே அமைச்சர் பதவி கொடுக்காமல் அநுர தவிர்த்தாரோ தெரியவில்லை.
  14. கறிவேப்பிலைக்கு உரமாக கரைசல் தயாரிக்குமுறை மிகவும் பயனளிக்கும் என்று சொல்கிறார், தயிர் பிரதானமாக பயன்படுத்துகிறாராம். வெளிநாட்டில் இவர் மோர் பயன்படுத்துகிறாராம் ’ மல்லிதழை
  15. நீங்கள் தற்போது யாழ்ப்பாணத்திலா இருக்கிறீர்கள்? ஒரு தகவலுக்காக கேட்கிறேன்.
  16. ஒரு சினிமா பாணியிலான ஒரு வெப் தொடர்தான். ஒரு காதல் கதைதான் இருந்தாலும் வாழ்க்கையோடு ஒட்டி பயணிக்கும் கதை துளி விரசம் இல்லை, பொறுப்பற்ற நண்பர்கள் இல்லை, காதல் என்பதால் வேலை வெட்டி இல்லாமலும் எதிர்கால திட்டமிடல் இல்லாமலும் நகரும் கதை அல்ல. கொஞ்சம் பழைய தொடர்தான் பலர் ஏற்கனவே பாத்திருக்கவும் கூடும் , நான் அண்மையில்தான் பார்த்தேன் சும்மா ஒரு பொழுது போக்குக்கு ஒரு பகுதி மட்டும் பார்ப்போமென்று போய் ஆர்வம் தாங்காமல் ஒட்டுமொத்தமா பார்த்து முடிச்சேன். அதில் ஓரிரு பகுதிகள். காதலர்கள் என்றால் கல்யாணத்திற்கு முன் தனியே சந்தித்தால் வெறும் டேற்றிங் மட்டும்தானா? காதலனுக்கு ஆசை ஆசையா மீன் குழம்பும் வைத்து கொடுக்கலாம், காதலி ஆசைப்பட்டால் ஒரு குட்டி சண்டை போட்டுவிட்டு காலையிலேயே பிரியாணி சாப்பிட கூட்டி செல்லலாம், சாப்பிட்டபடி எதிர்காலம் பற்றியும் பேசலாம் எதிர்கால முன்னேற்றம் பற்றி தனக்கு முதலில் சொல்லவில்லையே என்று அவன் நண்பர்களை திட்டியபடி கோவிச்சுக்கொண்டே போகலாம் , மீண்டும் சிரித்தபடி ஒன்று சேரலாம். ------------ இங்கிருந்துதான் தொடர் ஆரம்பம் பிரீத்தா & என்பி, தொடர் முழுவதும் சமூகபிரச்சனை குடும்ப போராட்டம் நண்பர்கள் வட்டம் என்று உண்மை காதலர்களாய் உலவுகிறார்கள்.
  17. பாராளுமன்றம்போய் வாக்களித்த மக்களுக்கு ஒரு வேலைகூட ஒழுங்கா பார்க்கல அதுக்குள்ள வீதியில் நடமாட முடியாத நிலை வந்துட்டுதாம். விவேகத்துக்கும் விளம்பர பிரியர்களுக்கும் நூலிழை வித்யாசம்தான், விளம்பரபிரியர்கள் தம்மை சுற்றி ஊடகங்களை வைத்திருப்பார்கள், விவேகமானவர்களை ஊடகங்களே தேடிவரும் ஐயா முதலாவது ரகம். ஐயாவின் மனசில் இருப்பதெல்லாம் பரபரப்பை கிளப்பினா யாழ்பாணத்துக்கே இவர்தான் ஹீரோ என்று மக்கள் நினைப்பார்கள் என்பதே. வெகுவிரைவில் இவருக்கு வாக்களித்த மக்கள் இவருக்கு போட்ட வாக்கை அநுரவுக்கே போட்டிருக்கலாம் என்ற நிலமை வரும் சபாநாயகர் இவரின் பேஸ்புக் பதிவுகள் ,நடத்தைகள் பற்றி விசாரணகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். எதை வைச்சு அநுரவிற்கு எதிராகவும் புலிகள் என்று பூச்சாண்டி காட்டி தமிழர் தாயக ராணுவ கட்டுப்பாட்டை நியாயபடுத்தவும் முடியாமல் தவித்த இனவெறி சிங்களவர்களுக்கு ஐயா இரும்பு கம்பியை கையில் கொடுத்திருக்கிறார். சுயேட்சையா ஒரு கட்சி ஆரம்பிச்சு அதிவேகமாக பாராளுமன்றம் சென்றவர் என்ற பெருமையை பெற்ற ஐயா அதேவேகத்தில் வாக்களித்த மக்களூக்கு எதும் பண்ணாம வீட்டுக்கு போனவர் என்ற சாதனையையும் படைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. ஊடகங்கள் இன்னும் ஒரு கேள்வியை கேட்டிருக்கலாம் ஐயா நீங்க உண்மையா படிச்சு டாக்டர் ஆனவரா இல்லை குதிரை ஓடி மருத்துவரானவரா எண்டு. கோமாளி! பொறுப்பான பதவிகளில் பொறுப்பற்ற மனிதர்கள்!
  18. உண்மைதான் உங்கள் கருத்தில் நியாயமுள்ளது. யாழ்ப்பாணம் இந்த மாரிகாலத்தில் பேரழிவை சந்திக்கபோகிறது என்று செய்திகள் வருகின்றன, ஆரம்பத்திலேயே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யார் எடுத்தாலும் தவறில்லை, வந்து பார்ப்பது யாரென்பது பிரச்சனையில்லை பாதிக்கப்படபோவது எம் மக்கள் என்பதே பிரச்சனையாக பார்க்கப்பட வேண்டும். ஒருவேளை அரசு தரப்பிலிருந்து யாரும் வராமல் விட்டிருந்தால் பார் சிங்களவனுக்கு வாக்களிச்சுது எங்க சனம் அவன் தேர்தல் முடிஞ்சதும் தங்கட ஏரியாவை மட்டும் கவனிக்கிறான் என்றும் பேச்சு வந்திருக்கும், ஒருவர் அமைச்சராகிவிட்டால் ஒரு அரசின் அங்கமாகவே பார்க்கப்படுவார், அவர் ஒருபகுதி மக்களுக்கானவராக ஒருபோதும் பார்க்கப்பட கூடாது. மலையகத்தில் அம்பிகா எனும் ஒரு தமிழ் பெண்ணை சிங்களவர்களும் சேர்ந்து பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெற வைத்தார்கள், சரோஜா சாவித்திரி போல்ராஜ் என்பவரும் மலையக மக்களின் பிரதிநிதியாக அமைச்சராகியுள்ளார். அவர்கள் மலையக மக்களீன் பிரச்சனைகளை பார்த்துக்கொள்வார், இந்த அமைச்சரைவிட வேறு எந்த தமிழ் அமைச்சர் வந்திருக்கவேண்டும் ? வடகிழக்கில் உள்ள எவருக்கும் அநுர அரசில் அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லையே அதனால் இவர் அல்லது சரோஜினிதான் வரணூம் அவரும் மலையகம்தான். நானும் அகதி கோரிக்கை வைத்து பிழைக்கும் கூட்டம்தான், ஆனால் அமைச்சர்மீது வைக்கப்படும் இதுபோன்ற கருத்துக்களை ரசிக்கவில்லை, சொந்தநாட்டிலேயே சொந்த அரசினால் அகதியாக்கப்பட்ட இனம் அடுத்தநாட்டில் அகதி கோரிக்கை வைத்து பிழைப்பது அப்படி ஒன்றும் அசிங்கமில்லை. அன்று சிங்களவன் எம்மை சேர்ந்த்தும் வாழாமல் பிரிந்து போகவும் விடாமல் பூட்டிய அறையினுள் போட்டு வெட்டிக்கொன்றால் எட்டிய தூரம் மட்டும் எவனும் ஓடுவான், வசதியுள்ளவன் வெள்ளைக்காரன் நாட்டுக்கு வந்துவிட்டான் அதனால் உயிரை காப்பாற்றி வாழும் அகதி கோரிக்கை பொழைப்பு மிக பெரிய கேவலமில்லை.
  19. சீன் போடுகிறார்களோ அல்லது செயலாற்றுவார்களோ தெரியவில்லை, ஆனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்படுகிறவர்களே எட்டிப்பார்க்காத மக்கள் இடர்பாடுகளின்போது ஒரு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் வீடுவீடாக சென்று குறை விசாரிப்பது வரவேற்கதக்கது. சீன் போடாமல் செயலாற்றினார்களென்றால் அடுத்த தேர்தலிலும் யாழ்பகுதி தமிழ்கட்சிகள் பொழைப்பு சறுக்கிக்கிட்டு போவும்.
  20. ரஹ்மான் விஷயம் அவர்களாலேயே சமூக ஊடகங்களுக்கு கொண்டுவரப்பட்டு உலகம் முழுவதும் பல ஆயிரம் ஊடகங்களில் விமர்சனத்துக்குள்ளான ஒரு செய்தியென்பதால் நாமும் ஒரு கருத்து சொல்லலாம் தப்பில்லை. சிகிச்சைக்காக மும்பை போகும் அவர் மனைவி எதுக்கு ட்விட்டரில் நான் ரஹ்மானை பிரிகிறேன் என்று பதிவு போடணும்? அதுக்கு அவர் எதுக்கு 30 வருடத்தை எட்டி தொடுவோம் என்று எதிர்பார்த்தோம் முடியவில்லை என்று பதிவு போடணும்? உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கணவன் குழந்தைகள் அனைவரையும் விட்டு சென்னையில் ஆஸ்பத்திரிகள் எதுவும் இல்லையென்று தனியே மும்பை ஓடுவார்களா சமூக ஊடகங்களில் இந்த ஐஞ்சுபத்து ரூபாய்க்கு விமர்சனம் பண்ணும் ஆய்வாளர்களால் ரஹ்மான் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக விமர்சிக்கப்பட்டார். அசிங்கப்படுத்தப்பட்டார். உங்களின் பிரிவுக்கு நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த தனிமையின் மன அழுத்தமே காரணம் என்று பல ஊடகங்கள் இப்போது பேச தொடங்கிவிட்டன, நான் நினைக்கிறேன் ரஹ்மான் மிக மோசமாக அசிங்கப்படுத்தப்படுவதை பார்த்து அவர் குழந்தைகள் தமது தாயிடம் வைத்த கோரிக்கையினால் இந்த ஒலிப்பதிவை அவர் ஊடகங்களூக்கு அனுப்பியிருக்கலாம். அதனால் ரஹ்மான் மனைவிக்கு இப்போது தேவைப்படுவது உடல்நல சிகிச்சையல்ல மனநல சிகிச்சை. எனக்கு தெரிந்து இத்தனை உலக புகழ் உச்சியில் மூன்று தசாப்தகாலங்களுக்கு மேலிருந்தும், எனக்குத்தான் இசை தெரியுமென்றோ அல்லது இசைபற்றி உனக்கு என்ன தெரியுமென்று பிறரை பார்த்து கேக்கும் அநாகரிக பழக்கம் கொண்டோ துளிகூட கர்வம் தன் தலையில் ஏற்றிக்கொள்ளாத ஒரேயொரு மனிதன் ரஹ்மானாகதான் இருக்க முடியும். பணம் புகழ் செல்வாக்கு என்று அத்தனையும் உச்சத்துக்கு மேலேயே இருந்தும் எப்படி ஒரு மனிதனால் இப்படி இருக்க முடிகிறது என்று எப்போதும் அவர்மேல் ஒரு பிரமிப்பு உண்டு அதனாலேயே ரஹ்மான் எந்த தவறும் பண்ண மாட்டாதவர் என்று அர்த்தமல்ல, ஆனால் எந்தவித ஆதாரங்களுமின்றி சகட்டுமேனிக்கு வாய்க்கு வந்தபடி ஒரு மனிதன் பற்றி எதுவேணும் என்றாலும் சொல்லலாம் எனும் பாணியில் இப்போது சுமத்தப்படும் குற்றங்கள் மிகவும் கண்ணியக்குறைவானது. இவர்கள் செய்தி உலகறிஞ்ச விஷயமானாலும் இதுக்குமேல இதுபத்தி மேலதிகமாக ஒருவார்த்தை பேசுவது ரொம்ப மலினதனமானது , அதனால எஸ்கேப்.
  21. வாங்கோ நிலாந்தன் , நீங்க முள்ளிவாய்க்காள் இறுதி நாளிலும் புலிகள் பதுங்குவது எதற்கு மிக பெரிய பாய்ச்சலுக்காகதான் என்று எழுதிய அந்த நிலாந்தனா? பழைய ஆய்வாளர்கள் எல்லாம் ஒருவர் ஒருவராக மறுபடியும் கிளம்புகிறார்கள். அது நிற்க உலக வரலாற்றில் கட்சி ஆரம்பிச்சு அடுத்த மாசமே பாராளுமன்றம் சென்ற முதல் ஆள் அர்ச்சுனாவாகதான் இருக்குமெண்டு நினைக்கிறேன். சத்தியபிரமாணம் செய்யும்போது இலங்கை,அரசியலமைப்பியும் ஒருமைப்பாட்டையும் தேசியம் தேசிய கொடி எல்லாம் ஏற்றுத்தானே பதவி பிரமாணம் செய்கிறீர்கள், பின்பு எப்படி புலிகள் பிரபாகரன் தெய்வமென்றெல்லாம் பாராளுமன்றத்துக்குள் நின்று பேசி திரிகிறீர்கள், நீங்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகிறீர்களா சிங்கள மக்களை ஏமாற்றுகிறீர்களா? சாவகச்சேரி வைத்தியசாலை ஊழலை வெளிக்கொண்ணந்தமையினால் அர்ச்சுனா ஒரு நேர்மையான மனிதர் என்ற இன்ப அதிர்ச்சியிலிருந்து மீளாத சாவகச்சேரி மக்களால் அர்ச்சுனா பாராளுமன்றம் அனுப்பப்பட்டார், பாராளுமன்றத்துக்கு போன வேலைய பாக்காம , முன்பு வெளிநாட்டுக்கு புதுசா வந்தவர்கள் காருக்கு முன்னால் நின்று படம் எடுத்து அனுப்புறமாதிரி இப்படி நேரடி ஒளிபரப்பு வெட்டி வீர வசனம் என்று காமெடி பண்ணிக்கிட்டிருந்தா அர்ச்சுனாவை அகற்ற சிங்களவன் தேவையில்லை அதே சாவகச்சேரி மக்களே அடுத்த தேர்தலில் அகற்றுவார்கள். அர்ச்சுனாவின் ஓவர் அலட்டலால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயற்பட்டார், இன்னொரு அரச பதவியான மருத்துவர் பதவியில் இருந்து கொண்டு எம்பியாகவும் செயற்படுகிறார் என்று இதுவரை இரண்டுமூன்று முறைப்பாடுகள் சிஐடியில் பதிவு செய்யப்பட்டிருகின்றன, எதிர்காலத்தில் விசாரணை கோர்ட் எண்டுபோய் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அர்ச்சுனாவின் பதவி நீடிக்க அனுமதிக்கப்படுமா என்பது காலத்திற்கே வெளிச்சம். அப்படி ஒரு நிலமை வந்தா அதற்கு முழுகாரணம் ரஜனி ஸ்டைல்ல அர்ச்சுனா சும்மா பரபரப்பு அரசியல் செய்ய வெளிக்கிட்டதுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.