Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

valavan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by valavan

  1. நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் முதலில் தாய்க்கு அவன் சராசரி பிள்ளைதான் என்பதுபோல் என்னதான் ரஹ்மான் விருதுகள் வாங்கி குவித்தாலும், உலக இசைமேதைகளில் ஒருவரா இருந்தாலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் நீண்டகாலம் ஆண்ட ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையாளனா இருந்தாலும் ஒரு நல்ல கணவனா அவர் மனைவிக்குஇருந்திருக்க வாய்ப்பேயில்லை. 29 வருட திருமண வாழ்வில் பாதிக்காலம் அமெரிக்கா ஐரோப்பாவிலும், வட இந்தியாவிலும், லண்டனிலும் டுபாயிலும்தான் கழிந்ததென்றால் மீதிக்காலம் இரவில் இசையமைப்பு பகலில் தூக்கம், மனைவிக்கென்று நேரம் ஒதுக்கியதில்லையென்று அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கார். கணவன் என்று இருப்பவன் எப்போபாரு ஆர்மோனியமும் கீபோர்ட்டும் என்று இருந்தால் வாழ்வு நரகம்தான், இவரது சகலை நடிகர் ரஹ்மான் இசையமைப்பாளர் ரஹ்மானின் முதலிரவு நாளன்று வீட்டுக்கு போன் பண்ணியபோது ரஹ்மானின் புது மனைவிதான் பேசினாராம் என்ன நீ பேசுறே எங்கே அவர் என்று கேட்டால் முதலிரவு அன்றே ரஹ்மான் பக்கத்து ரூமில் வீணை பிளே பண்ணி பாத்துக்கிட்டிருந்தாராம்னு இணையத்தில் தகவல் உலா வருகிறது. இதில் ஒருபெண் எவ்வளவு தூரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பாரென்பது சாதாரணமாய் உணரகூடியதொன்று. தனக்கு சொந்தமானவன் வெறுமனே தன்னை குழந்தை பெற்றுக்கொள்ளூம் இயந்திரமாக பாவிப்பதை எந்த பெண்ணும் ரசிக்கமாட்டாள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாள். வயசானகாலத்திலும் இந்தியாவில் பாதிநாள் டுபாயில் உள்ள ஸ்ரூடியோவில் மீதிநாள் என்று ரஹ்மான் இசையை 24 மணிநேரமும் கட்டிக்கொண்டு அழுதால் எவர்தான் எஸ்கேப் ஆகமாட்டார். மற்றும்படி ரஹ்மான் இன்னொரு பெண் தொடர்பு என்பதெல்லாம் இலகுவாக நம்பகூடிய விஷயமா தெரியவில்லை. இளமையும் அழகும் இருக்கும் காலத்தில் உலக அழகிகளிலிருந்து உள்ளூர் கிழவிகள்வரை ரஹ்மான் அலைவீசிய நேரத்தில் எந்த பெண்ணுடனும் கிசு கிசு இல்லாத மனிதன், இப்போ கண்பார்வை மங்கி சோடாபுட்டி கண்ணாடியுடன் திரியும் காலத்தில் கட்டுப்பாட்டை மீறூவாரா தெரியல. இது தனிமனிதன் பற்றிய விமர்சனங்களல்ல, அவர்களாகவே தமது தனிமனித விஷயங்களை குடும்பமாக பொதுவெளிக்கு எடுத்து வந்ததால் அனைவரும் அதுபற்றி பேசுவார்கள். எது எப்படியோ காரணங்கள் என்னவென்று மலிந்தால் ஒன் லைன் சந்தைக்கு வரும்தானே பார்க்கலாம்.
  2. கங்குவா பார்த்துவிட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள். 1:03 அதிலும் ஒரு சிறுமியை அவரோட அப்பாவோ தாத்தாவோ பாப்பா படம்பத்தி பேட்டியா கொடுக்குற, வாம்மா வீட்டுக்கு ஓடிரலாம்னு இழுத்து போவது கங்குவா கொடூரத்தின் உச்சம், நாம தியேட்டர்லாம் போய் படம் பார்த்து பல வருஷமாச்சு, கடைசியா ரஜனியின் குறை மாசத்துல பொறந்தமாதிரி கதை உள்ள படம் பார்த்தேன் அதுக்கப்புறம் தியேட்டர் பக்கமே போறதில்ல.
  3. திருமணம் ஆகாமல்கூட ஒருவர் இருக்கலாம், ஆனால் திருமணமாகி குழந்தைகள் இல்லைனா ஒரு ஆணும் பெண்ணும் இந்த சமுதாயத்தால் மனசாலும் வார்த்தைகளாலும் எதிர்கொள்ளூம் அவமானங்கள், கேவலங்கள் சொல்லி மாளாது. பத்து வருடத்தின் பின்னர் எவ்வளவு பூரிப்புடன் இருந்திருப்பார்கள், அவர்கள் கதையை ஒட்டுமொத்தமாக முடித்துவிட்டது வைத்தியசாலை நிர்வாகம் என்பதே மக்கள் கருத்து. தற்போது வந்த செய்தியின் படி அரசாங்கம் மன்னார் வைத்தியசாலை விடயத்தில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல். நிச்சயமாக செல்போனில் பொழுதுபோக்கி அடுத்தவர் உயிருடன் விளையாடியவர்கள் கூண்டோடு வீட்டுக்கு போகும் சாத்தியமுண்டு.
  4. ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி
  5. மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா ரினோசா ஒரு முஸ்லீமாக இருந்தாலும் பெரும்பாலும் நடுலையாக பேசும் ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் சிங்கம்போலவே கர்ச்சிப்பார், ஒருதடவை பரதநாட்டியம் பற்றி ஒரு முஸ்லீம் தலைவர் கொச்சையாக பேசியபோது தமிழர்களுக்கு ஆதரவாய் பேசி அவருக்கெதிராக கொந்தளித்து அவரை கிழித்து தொங்கவிட்டார் ரினோசா. அவர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் இனவாதம் பேசி கொந்தளித்தால் சிங்களவர்கள் தமிழர்களுடன் கைகோர்த்துவிடுவார்கள் என்பதே. ஏனெனில் யாழ்ப்பாண தமிழர்கள்பற்றி கீழே இருக்கும் சிங்கள வீடியோவில் ஆயிரம் சிங்களவர்களுக்குமேல் கருத்திட்டார்கள். தமிழர் தமிழர் அவர்கள் எம் மக்கள் என்று சொல்லி எத்தனை சிங்களவர்கள் அழுகிறார்கள், எமக்கு ஆதரவாக கருத்து போடுகிறார்கள், அதில் ஒரு முஸ்லீம்கூட கருத்திடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஒரு சிங்களவன்கூட தமிழருக்கெதிராய் கருத்திடவில்லை எவரும் கடந்தகால யுத்தங்கள் பற்றி பேசவில்லை, மாறாக கடந்தகால சிங்கள தலைவர்களையே திட்டியுள்ளார்கள். அந்த வீடியோவில் இந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் தொடர்பான சிங்களவர்கள் கருத்து என்பதை பொறுமையாக ஒவ்வொன்றாக மொழி பெயர்த்து பாருங்கள். சிங்களவர் சமூகம் எமக்கு சார்பாய் 100% மாறிவிட்டது என்றோ அல்லது அநுர வந்திட்டார் இனிமே தமிழர்வீட்டு கூரைகளின்மீது பால்மழை பொழிய போகிறது என்றோ நான் ஒருபோதும் சொல்லமாட்டேன், ஆனால் முஸ்லீம்களைவிட தமிழர்கள் எவ்வளவோ நல்லவர்கள் எனும் சூழலை முஸ்லீம்களே சிங்களவர்கள் மனதில் ஏற்படுத்த போகிறார்கள் என்பதே கருத்து. முஸ்லீம்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுத்திருக்கலாம் என்பதில் உடன்பாடு உண்டு, நாமும் தமிழர்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்காமல் விட்டால் விமர்சித்திருப்போம் ஆனால் அநுரவின் இந்த அமைச்சரவை பொது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, தமிழ் அமைச்சர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்கூட 100% சிங்கள பகுதியில் வாழ்ந்தவர்களே, அதிலும் ஒரு பெண் தமிழ் அமைச்சர் சிங்களத்திலேயே சத்திய பிரமாணம் எடுத்தார்.
  6. இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.
  7. அரசியல் என்பது ஒரு சூது , சுத்துமாத்து, அதற்கு நேர்மையாக வளர்க்கப்பட்ட போராளிகள் ஒருபோதும் சரிப்பட்டு வரமாட்டார்கள். அரசியல் ஒரு புரியாத புதிர், தமிழர் பகுதியில் 80%க்கு மேல் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும் தேர்தல் என்று வரும்போது புலிகளால் நிராகரிக்கப்பட்ட , புளொட்டையும், ஈபிஆர் எல் எவ்வையும், ஈபிடிபியையும், ரெலோவையும் சேர்ந்தவர்களையே அதே புலிகளின் ஆதரவாளர்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்கிறார்கள், அதற்கு காரணம் குள்ளநரித்தனம், அரசியல் வியூகம் எனும் பேரில் சூழ்ச்சி, வலுவான கட்சி கட்டமைப்பு எல்லாம் அவசியம். ஏற்கனவே முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பொறுப்பாளர் ரூபன் தலைமையில் ஒரு பிரிவு தேர்தலை முயற்சித்தது நினைவிலுண்டு , ஜனநாயக போராளிகள் என்றொரு அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டதாய் ஞாபகம் அவர்கள் யாருமே தேர்தலில் சோபிக்கவில்லை இப்போ என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. தேர்தலில் போட்டியிட்டு தோத்தவர்கள் மட்டுமே தேசியபட்டியல் உறுப்பினரில் உள்வாங்கப்படலாம் என்ற நிலமையில் தமிழரசுகட்சி நினைத்தால் இனத்தின் இருப்பு கருதி இவர்போன்றவர்களை தமது கட்சிக்குள் உள்வாங்கி எம்பி ஆக்கலாம், அது வாய்ப்பில்லையென்றால் கடந்த தேர்தலில் இவர்போன்ற போராளீகளை கட்சிக்குள் உள்வாங்கியிருக்கலாம். வன்னி மைந்தன்மேல் ஏன் பாய்கிறீர்கள், அவ்வளவு பெரிய ஆளூமையா அவர்? அல்லது எமது போராட்ட தலைமை ஆயுதங்களை மெளனித்தபோது இனிமே எல்லாமே வன்னி மைந்தன் பொறுப்பு என்றா சொல்லிவிட்டு போனது? அவர் சும்மா அடுத்த புதுவை ரத்தினதுரை நான்தான் என்ற நினைப்பில ஊருக்க சுத்திக்கிட்டிருக்கார்.
  8. ஆனால் இந்த பாட்டோட ஒரிஜினல் இதுதான் ஏராளன்.
  9. ஆமாமா அது உண்மையா இருக்க வாய்ப்பிருக்கு ஏனென்றால் அமெரிக்க அதிபர்கூட இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்காரே .... இது யாரோ அநுர சொம்புகள் செய்த வேலை, மாவீரர்நாளை சுதந்திரமாக நினைவுகூர மைத்திரி, ரணில் ஆட்சியிலேயே அனுமதித்துவிட்டார்கள். அநுர வந்து புதிதாக செய்ய என்ன இருக்கு? அநுர உங்களுக்கு பிடித்திருந்தால் அவர் புகழ் பாடுங்கள் தப்பில்லை, எதுக்கு விடாத அறிக்கையை விட்டதென்று சொல்லி அண்டா கணக்குல உருட்டி விடுறீங்க?.
  10. ஆம் கடஞ்சா நீங்கள் சொல்வதே சரி, ஆனாலும் ஆணோ பெண்ணோ ஒரு இனத்தை அசிங்கபடுத்தியிருக்கிறார் என்பதே பிரச்சனை.
  11. கஸ்தூரி தேவதாசி முறைபற்றி மறைமுகமாக பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன், கோவில் தொண்டு செய்யவும், நடன மாதுக்களாகவும், பெற்றோரால் நேர்ந்து விடப்பட்டவர்களாகவும் நித்ய சுமங்கலிகளாகவுமென பிரிவுகள் ஆந்திரா ஒடிசா கர்நாடகா உத்தர பிரதேசம் என பல மாநிலங்களிலும் 1947 வரை ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பெயரில் இருந்ததாகவும் பின்னரே அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதாகவும், இன்றும் கர்நாடகாவில் சில இடத்தில் நடைமுறையிலிருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்நாளில் மன்னர்கள் ,சிற்றரசர்கள், பண்ணையார்கள் அவர்களை ஜமீன்தார்கள் தமது அந்தப்புரநாயகிகளாக பயன்படுத்தியதாகவும் சொல்கிறார்கள் தமிழகத்தில் பிராமணர் வேளாளர், மறவர்என அனைத்து குலங்களிலிருந்தும் தேவதாசிகள் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டனர் என்று தகவல்கள் கூறுகின்றன, அப்படியிருக்க தெலுங்கர்கள் மட்டும் தேவதாசிகள் என்று பிராமண பிரிவை சேர்ந்த ’ஆச்சாரமான’’ கஸ்தூரி எவ்வாறு கூறினார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். முதலில் கஸ்தூரி எனும் பெயர் ஆச்சாராமானதா? இமயமலை பகுதிகளீல் வாழும் ஒருவகை மானின் ஆணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவத்தின் பெயரே கஸ்தூரி என்கிறார்கள் , அதிலிருந்துதான் வாசனை திரவியம் தயாரிக்கப்படுகிறது என்கிறார்கள், மனிதர்களில் ஆச்சாரமாக நிறம் பார்க்கும் கஸ்தூரி தன் பெயரிலும் ஆச்சாரம் பார்க்கவேண்டும். கஸ்தூரிக்கு இரண்டு குழந்தைகள், ஒரு குழந்தை பிறக்கும்போதே புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதன் சிகிச்சைக்காகவே அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததாகவும் சொல்கிறார்கள், தனது குழந்தையை வெளியே காண்பிக்காது கவனமாயிருப்பார் கஸ்தூரி, அதனால்தான் பிக்பாஸ் போனபோதுகூட குழந்தைகளின் குரலை மட்டும் ஒலிபரப்பியதாக நினைவிலுண்டு. கஸ்தூரி தலைவர் பிரபாகரனின் வெறிதனமான ஆதரவாளர், ஆனால் மனிதரில் நிறம்பார்க்காத என் தலைவனின் ஆதரவாளராயிருந்துகொண்டு மனிதரில் குலம் பார்க்கும் கஸ்தூரியின் செயல் மன்னிக்கப்பட முடியாத குற்றமே.
  12. அமசோனில் கிடைக்ககூடிய 110 கார் பாவனை உபகரணங்கள், நீண்ட வீடியோவாக இருந்தாலும் ஒவ்வொன்றாக பார்க்கும்போது நேரம்போவது தெரியாமல் சுவாரசியமாக உள்ளது.
  13. இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும். இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள். இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.
  14. யூமீன் பழைய போட்டோ ஷொப்பா புதிய போட்டோ ஷொப்பா?
  15. ஒரு காலம் தமிழ்தேசியமென்பதை இனத்துக்கு ஊட்டியதே இளைஞர்கள்தான் அவர்கள் உணர்வுக்கு தீமூட்டி தீமூட்டி பெரியவர்கள் அரசியல் செய்தார்கள், ,இன்று பல தலைமுறை மாற்றம் , உலக நவீனங்களோடு அவர்கள் வாழ்க்கை கழிகிறது, அதை சரியாக நாடிபிடித்து அநுர நகர்கிறான். வறுமை வேலையில்லா திண்டாட்டம் ஊழல், லஞ்சத்தை நீக்கி ஆளுக்கொரு வாகனம் வீட்டுக்கொரு கார் என்று அனைவருக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தால் இளைய சமுதாயம் தனித்துவ அரசியல் பேசுவதைவிட்டு தன் பின்னாலே வரும் என்பதை சரியாக கணித்ததன் விளைவே யாழ்ப்பாண வெற்றி. அன்று தமிழ் தேசியத்தை தவிர வேறொன்றும் தெரியாத இளைஞர் கூட்டத்தால்தான் என் இன வாழ்வுக்கான போராட்டம் ஆரம்பித்தது, இன்று தமிழ் தேசியம் என்றால் என்ன அதுபற்றி தெரியாது என்று சொல்லும் இளைஞர் கூட்டம் படிப்படியாக வளர்கிறது, அவர்களுக்கு கை நிறைய காசு வசதிகள் என்று ஏற்படுத்தி கொடுத்தால் தமிழ் தேசியம் பேசி இனிமேல் வாக்கு கேட்டு செல்பவர்களை உதைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவே சிங்களத்தின் அனுமானம், இதெல்லாம் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் தேசியம் பேசும் தமிழ் கட்சிகளால் வந்தது . தலைமுறைகள் மாறுகிறது அவர்களை தொடர்ந்து தயார் படுத்தவேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லாது கால இழுத்தடிப்பு செய்ததால் வந்தது. இப்போது பிரச்சனை என்னவென்றால் வழக்கு போட்டவர்கள் ஒற்றுமையாக போகபோகிறார்கள் போல் தெரிகிறது, {தமிழ்கட்சி }வக்கீல்கள் இனிமே வருமானத்துக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதே. இணையத்தில் தேசியம் வளர்த்தால் இனிவரும் காலங்களுக்கு அது உதவாது என்பதை சொந்த மக்களே யாழ்ப்பாணத்தில் அநுரவிற்கு அல்ல, எமக்கு விடையாய் சொல்லியிருக்கிறார்கள்.
  16. அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். சிங்கள யூடியூப் காணொலிகளில் சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம் ,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள். இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்? இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.
  17. வணக்கம் பங்காளி , பாத்து கனகாலம்., சார் யாருன்னு தெரியுதா? இவர்தான் நோர்வே சுமந்திரன்
  18. அந்த ஈரவெங்காயமெல்லாம் அநுரவுக்கு தெரியும், நீங்கள் உங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை மட்டும் பார்த்தால் போதுமானது. ரணிலின் ஆட்சியில், ரணில்கூட விடுதலைபுலிகள் இறுதியுத்தம் பற்றி பேசியது குறைவு, பதவியிலிருந்த காலம் முழுவதும் இந்தியாவுக்குபோய் புலிகளை அழித்தோம் என்று பேசுவதும் இலங்கையிலிருக்கும்போது பயங்கரவாதத்தை ஒழித்தோம் என்று அடிக்கடி பேசுவதும், ஐநா பொறுப்புக்குறல், பயங்கரவாத தடைச்சட்டம் என்று பதவி துண்டுக்காக தமிழ் மக்களின் மனங்கள் பற்றி எந்த கவலையும் கொள்ளாது சிங்கள எஜமான விசுவாசத்துக்காக வன்மம் கக்கினார் மனிதன். அதே வாயால் ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றி அதிகம் பேசியதில்லை. இன்று தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்துவிடுவார்களோ தமது இடம் பறிபோய்விடுமோ என்ற என்ற ஒரு பயத்தில் தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொள்கிறார். இலங்கையின் வரலாற்றில் அன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் முடிவுவரை தமிழ்மக்களுக்காக இஸ்லாமிய சமூகம் கவலைப்பட்டதா வரலாறே இல்லை, மாறாக சிங்களவனுடன் சேர்ந்து பாற்சோறு சாப்பிடுவார்கள். அநுர நல்லது செய்கிறாரோ கெட்டது செய்கிறாரோ, இனிமேல் உங்கள் ஆலோசனைகள் அவருக்கு தேவைப்படாத அளவிற்கு பெரும்பான்மையிலிருக்கிறார். தமிழ்மக்கள் நல்லிணக்கம் எல்லாம் அநுரவுக்கு வாக்களித்த அவர்களுக்கும், வாக்கு பெற்ற அநுரவுக்குமான பிரச்சனை உங்களுக்கானதல்ல. எவரெல்லாம் இந்த தேர்தலின் முடிவில் தூக்கியெறிய்யப்படவேண்டுமென்று ஆசைப்பட்டோமோ அவர்களெல்லாம் ஏறக்குறைய 90% தூக்கி வெளியே வீசப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
  19. தபால் மூலமான வாக்கு என்று சொல்கிறார்களே 2:12
  20. நல்லகாலம் சஜித் பதவியை ஏற்காமல் விட்டது, உலகம் முழுவதும் ஊடகங்களில் இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்று செய்தி வந்தது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இலங்கையில் அனைத்துக்கும் வரிசை யுகம், எரிபொருள் இல்லை, டொலர் கையிருப்பு இல்லை, தாறுமாறு விலைவாசி ஏறும் மக்கள் வாழ்வு இனி அதோ கதிதான் என்று உலகமே நினைத்தது, ரணில் தனது அனுபவத்தால் உலகவங்கி சர்வதேச நாணையநிதியம், இந்தியா சீனா என்று அனைவருடனும் பேசி ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கடன் மறுசீரமைப்பு, அந்நியசெலாவணி இருப்பு உயர்த்தல்,படிப்படியாக இறக்குமதிகளை அனுமதித்தது என்று இலங்கையை மீட்டெடுத்தார். என்னதான் ரணில் என்ற சிங்களவனை பிடிக்காவிட்டாலும், அரசியலோ பொருளாதாரமோ எந்த அனுபவமும் இல்லாத சஜித்தைவிட மிக பெரும் திறமைசாலி என்பதை ஒப்புக்கொண்டே ஆகணும். தொடர்ச்சியாக வங்குரோத்து நிலையில் இலங்கை ஓரிரு வருடங்கள் நீடித்திருந்தால் கண்டிப்பா பட்டினி சாவில் பல ஆயிரம் பேரையாவது இழந்திருக்க நேரிடும்.
  21. பல தசாப்தங்கள் அரசியலிலிருந்து பல பதவிகளை ஆண்டு அனுபவித்து முடித்த இவர், உண்மையாகவே நாட்டின்மீது அக்கறையிருந்தால் புதிதாக வந்தவர் நாட்டுக்கு என்ன செய்கிறார் என்று பார்க்க ஒரு வாய்ப்பை அளிக்கவேண்டும். ஆலோசனைகளை வழங்கவேண்டும். அதவிட்டு எப்போபார் இரண்டாம் வகுப்பு பிள்ளைகள்போல குற்றம் சொல்லி கொண்டிருப்பதும் கேலி பண்ணூவதும், நாட்டு பிரச்சனையைவிட பதவியை இழந்த துயர் அவரை வாட்டுது என்றே மக்கள் மனதில் தோன்றும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.