Everything posted by valavan
-
தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் அறிவிப்பு!
- 110 Best Amazon CAR Gadgets
அமசோனில் கிடைக்ககூடிய 110 கார் பாவனை உபகரணங்கள், நீண்ட வீடியோவாக இருந்தாலும் ஒவ்வொன்றாக பார்க்கும்போது நேரம்போவது தெரியாமல் சுவாரசியமாக உள்ளது.- தமிழரசின் அரசியல் குழுக்கூட்டம் இன்று; தேசியப் பட்டியல் ஆசனம் தனக்கு வேண்டும் என மாவை எழுத்து மூலம் கோரிக்கை !
இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும். இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள். இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.- ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
யூமீன் பழைய போட்டோ ஷொப்பா புதிய போட்டோ ஷொப்பா?- ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
ஒரு காலம் தமிழ்தேசியமென்பதை இனத்துக்கு ஊட்டியதே இளைஞர்கள்தான் அவர்கள் உணர்வுக்கு தீமூட்டி தீமூட்டி பெரியவர்கள் அரசியல் செய்தார்கள், ,இன்று பல தலைமுறை மாற்றம் , உலக நவீனங்களோடு அவர்கள் வாழ்க்கை கழிகிறது, அதை சரியாக நாடிபிடித்து அநுர நகர்கிறான். வறுமை வேலையில்லா திண்டாட்டம் ஊழல், லஞ்சத்தை நீக்கி ஆளுக்கொரு வாகனம் வீட்டுக்கொரு கார் என்று அனைவருக்கும் வசதியை ஏற்படுத்திக்கொடுத்தால் இளைய சமுதாயம் தனித்துவ அரசியல் பேசுவதைவிட்டு தன் பின்னாலே வரும் என்பதை சரியாக கணித்ததன் விளைவே யாழ்ப்பாண வெற்றி. அன்று தமிழ் தேசியத்தை தவிர வேறொன்றும் தெரியாத இளைஞர் கூட்டத்தால்தான் என் இன வாழ்வுக்கான போராட்டம் ஆரம்பித்தது, இன்று தமிழ் தேசியம் என்றால் என்ன அதுபற்றி தெரியாது என்று சொல்லும் இளைஞர் கூட்டம் படிப்படியாக வளர்கிறது, அவர்களுக்கு கை நிறைய காசு வசதிகள் என்று ஏற்படுத்தி கொடுத்தால் தமிழ் தேசியம் பேசி இனிமேல் வாக்கு கேட்டு செல்பவர்களை உதைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதுவே சிங்களத்தின் அனுமானம், இதெல்லாம் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் தேசியம் பேசும் தமிழ் கட்சிகளால் வந்தது . தலைமுறைகள் மாறுகிறது அவர்களை தொடர்ந்து தயார் படுத்தவேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லாது கால இழுத்தடிப்பு செய்ததால் வந்தது. இப்போது பிரச்சனை என்னவென்றால் வழக்கு போட்டவர்கள் ஒற்றுமையாக போகபோகிறார்கள் போல் தெரிகிறது, {தமிழ்கட்சி }வக்கீல்கள் இனிமே வருமானத்துக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதே. இணையத்தில் தேசியம் வளர்த்தால் இனிவரும் காலங்களுக்கு அது உதவாது என்பதை சொந்த மக்களே யாழ்ப்பாணத்தில் அநுரவிற்கு அல்ல, எமக்கு விடையாய் சொல்லியிருக்கிறார்கள்.- ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். சிங்கள யூடியூப் காணொலிகளில் சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம் ,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள். இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்? இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.- தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை- உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் - எரிக்சொல்ஹெய்ம்
வணக்கம் பங்காளி , பாத்து கனகாலம்., சார் யாருன்னு தெரியுதா? இவர்தான் நோர்வே சுமந்திரன்- உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்கு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
அந்த ஈரவெங்காயமெல்லாம் அநுரவுக்கு தெரியும், நீங்கள் உங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை மட்டும் பார்த்தால் போதுமானது. ரணிலின் ஆட்சியில், ரணில்கூட விடுதலைபுலிகள் இறுதியுத்தம் பற்றி பேசியது குறைவு, பதவியிலிருந்த காலம் முழுவதும் இந்தியாவுக்குபோய் புலிகளை அழித்தோம் என்று பேசுவதும் இலங்கையிலிருக்கும்போது பயங்கரவாதத்தை ஒழித்தோம் என்று அடிக்கடி பேசுவதும், ஐநா பொறுப்புக்குறல், பயங்கரவாத தடைச்சட்டம் என்று பதவி துண்டுக்காக தமிழ் மக்களின் மனங்கள் பற்றி எந்த கவலையும் கொள்ளாது சிங்கள எஜமான விசுவாசத்துக்காக வன்மம் கக்கினார் மனிதன். அதே வாயால் ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றி அதிகம் பேசியதில்லை. இன்று தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்துவிடுவார்களோ தமது இடம் பறிபோய்விடுமோ என்ற என்ற ஒரு பயத்தில் தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொள்கிறார். இலங்கையின் வரலாற்றில் அன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் முடிவுவரை தமிழ்மக்களுக்காக இஸ்லாமிய சமூகம் கவலைப்பட்டதா வரலாறே இல்லை, மாறாக சிங்களவனுடன் சேர்ந்து பாற்சோறு சாப்பிடுவார்கள். அநுர நல்லது செய்கிறாரோ கெட்டது செய்கிறாரோ, இனிமேல் உங்கள் ஆலோசனைகள் அவருக்கு தேவைப்படாத அளவிற்கு பெரும்பான்மையிலிருக்கிறார். தமிழ்மக்கள் நல்லிணக்கம் எல்லாம் அநுரவுக்கு வாக்களித்த அவர்களுக்கும், வாக்கு பெற்ற அநுரவுக்குமான பிரச்சனை உங்களுக்கானதல்ல. எவரெல்லாம் இந்த தேர்தலின் முடிவில் தூக்கியெறிய்யப்படவேண்டுமென்று ஆசைப்பட்டோமோ அவர்களெல்லாம் ஏறக்குறைய 90% தூக்கி வெளியே வீசப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தபால் மூலமான வாக்கு என்று சொல்கிறார்களே 2:12- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நல்லகாலம் சஜித் பதவியை ஏற்காமல் விட்டது, உலகம் முழுவதும் ஊடகங்களில் இலங்கை வங்குரோத்து அடைந்துவிட்டது என்று செய்தி வந்தது. குறைந்தது ஐந்து வருடங்களுக்காவது இலங்கையில் அனைத்துக்கும் வரிசை யுகம், எரிபொருள் இல்லை, டொலர் கையிருப்பு இல்லை, தாறுமாறு விலைவாசி ஏறும் மக்கள் வாழ்வு இனி அதோ கதிதான் என்று உலகமே நினைத்தது, ரணில் தனது அனுபவத்தால் உலகவங்கி சர்வதேச நாணையநிதியம், இந்தியா சீனா என்று அனைவருடனும் பேசி ஒரு சில மாதங்களுக்குள்ளேயே கடன் மறுசீரமைப்பு, அந்நியசெலாவணி இருப்பு உயர்த்தல்,படிப்படியாக இறக்குமதிகளை அனுமதித்தது என்று இலங்கையை மீட்டெடுத்தார். என்னதான் ரணில் என்ற சிங்களவனை பிடிக்காவிட்டாலும், அரசியலோ பொருளாதாரமோ எந்த அனுபவமும் இல்லாத சஜித்தைவிட மிக பெரும் திறமைசாலி என்பதை ஒப்புக்கொண்டே ஆகணும். தொடர்ச்சியாக வங்குரோத்து நிலையில் இலங்கை ஓரிரு வருடங்கள் நீடித்திருந்தால் கண்டிப்பா பட்டினி சாவில் பல ஆயிரம் பேரையாவது இழந்திருக்க நேரிடும்.- தேர்தல் குறித்த ஆர்வம் குறைவு - நிச்சயமற்ற நிலையேற்படலாம் - ரணில்
பல தசாப்தங்கள் அரசியலிலிருந்து பல பதவிகளை ஆண்டு அனுபவித்து முடித்த இவர், உண்மையாகவே நாட்டின்மீது அக்கறையிருந்தால் புதிதாக வந்தவர் நாட்டுக்கு என்ன செய்கிறார் என்று பார்க்க ஒரு வாய்ப்பை அளிக்கவேண்டும். ஆலோசனைகளை வழங்கவேண்டும். அதவிட்டு எப்போபார் இரண்டாம் வகுப்பு பிள்ளைகள்போல குற்றம் சொல்லி கொண்டிருப்பதும் கேலி பண்ணூவதும், நாட்டு பிரச்சனையைவிட பதவியை இழந்த துயர் அவரை வாட்டுது என்றே மக்கள் மனதில் தோன்றும்.- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
நீங்கள் ஆற்றும் சமூக தொண்டு பல படித்தவர்களே செய்யாத ஒன்று.- பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
அப்போ அகில இங்கையில்திருமலையும் மன்னாரும் யாழ்ப்பாணமுமென தமிழர் பகுதிகளில்தான் அதிக சதவீத வாக்களிப்பு நடந்திருக்கிறது போலும். முன்னைய காலங்களில் சிங்கள தேச தேர்தல்களீல் அதிக ஆர்வம் காட்டாத தமிழர் பகுதி இம்முறை ஏதோ முடிவோடு ஆவேசமாக வாக்களித்திருக்கிறார்கள் போலும், பார்க்கலாம் என்ன முடிவெடுத்திருக்கிறார்களென்று- வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!
ராணுவ தடைகள், காவல்நிலைகள் அப்புறப்படுத்துவதால் கடத்தல் காரர்கள், திருடர்கள், அதிவேக வாகன ஓட்டிகள்,வழிப்பறி கேசுகளின் ஆதிக்கம் அதிகரிக்கலாம் என்றும் மக்கள் பேசிக்கொள்கிறார்களாம். அப்போ சிங்களவனிடமிருந்து தப்பினா தமிழனிடம் மாட்டிக்கொள்ளணுமா?- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
நான் அறிந்து யாரையும்மட்டம் தட்டியோ எகத்தாளம் பண்ணியோ காயப்படுத்தியோ கருத்திட நினைத்ததில்லை., அடுத்தவரை மட்டம் தட்ட என்னிடம் எந்த தராதரமும் இல்லை. நீண்ட காலத்தின் பின்னர் சிறிதுகாலம் விடுமுறையில் உள்ளேன் அதனால் கொஞ்சம் அதிகமாக பேசி அதிகமாக பதிவுகளிட்டதால் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம், இயல்பில் அதிகம் பேசுவதில்லை, அதனால்தான் ஏறக்குறைய யாழில் இணைந்து 9 வருடங்களாகியும் 1500 கருத்துக்களைகூட என்னால் தொட முடியவில்லை. எனினும் உங்கள் கருத்து பெறுமதி மிக்கது, முடிந்தவரை எகத்தாளமின்றி என்னை அமைதிப்படுத்த இனி கூடுதல் முயற்சி செய்கிறேன் நன்றி 🙏- அப்பா- MY DEAR DADDY PRANK
உண்மைதான், சிலர் இறந்தும் இருக்கிறார்கள், போலீஸ் பிடிச்சு லாடம் கட்டினா பிறகு இப்போ அடுத்தவர்களை நோகடிக்காமல் பிராங் பண்ணுகிறார்கள் கீழே இருப்பது தென்னிந்திய சிறுமிகளின் பிராங், அடுத்தவரை நோகடிக்காமல் ஒரு அழகிய கவிதைபோல- அப்பா- MY DEAR DADDY PRANK
இவர்களுடைய வீடியோக்களை விரும்பி பார்ப்பேன், அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்தார்கள், ஆனால் வேறொருவரின் சனலில் செய்து கொண்டிருந்ததால் சனல் வளர்ந்ததும் இவர்களை கழட்டிவிட்டார்கள். இப்போது வேறு சனல் செய்கிறார்களா அல்லது அவர்கள் திறமை உழைப்பு வீணடிக்கப்பட்டதா தெரியவில்லை.- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அது சும்மா ஒரு வேடிக்கைக்கு சொன்னது பையன் பச்சைபுள்ளி வந்தாலும், சதோஷமில்லை சிவத்த புள்ளி வந்தாலும் கவலையில்லை, ஏற்கனவே வந்த பச்சைபுள்ளிகளை ஒட்டுமொத்தமா யாரும் நீக்கிவிட்டாலும் கவலையில்லை. நீங்க ஊரிலேயே படித்தவர் என்பது எனக்கு எப்போதோ தெரியும் ஈழபிரியன் அண்ணா. 😌- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
வட்டம் என்றுதானே சொல்லிருக்கேன் ஈழப்பிரியன் அண்ணா கண்டிப்பா அந்த வட்டத்திற்குள் நீங்களும் வருவீர்கள்.- அப்பா- MY DEAR DADDY PRANK
- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
யாழில் வந்ததுக்கு முதல் தடவையா சிவப்பு வாங்கிட்டன் , ஏன் குமாரசுவாமியண்ணா இப்படி பண்ணினீங்க? படிக்காதவர் வட்டத்திலிருப்பது நான் ஒருவன் மட்டுமே.- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
பையா கடல் கடந்த அரசியலை தூர நின்று பார்க்கலாம் பேசலாம் தொட்டு பார்க்கலாம் ஆனால் உள்ளே இறங்ககூடாது, இசை அதனை தவிர்த்திருக்கலாம் என்பதே என் அபிபிராயம். பையனும் அதுபோல்தான் நல்ல பொடியன் ஆனால் கடல் கடந்த அரசியலுக்காக யார் கூடவும் அளவுக்கதிகமாக சண்டை போடுவதை தவிர்க்கணும். அந்த அரசியல்வாதிகளுக்கு எங்களை தெரியாது அவர்களுக்காக எங்களுக்கு தெரிந்தவர்களை பகைக்க கூடாது.- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
ஓ இதுவேற நடந்திருக்கா? யாழ்களத்தில் நான் கருதும் படித்தவர்கள் வட்டத்தில் இசையும் கோஷானும் உள்ளடக்கம் எதுக்கு உங்க இரண்டுபேருக்கும் இந்த வேண்டாத வேலை? இசை ஒரு இனிமையான கருத்தாளர்.- 1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்
ஒருகாலம் எங்குபோனாலும் 150 பேர் தனிப்பட்ட பாதுகாவலர்கள், மேலதிகமாக அதிரடிப்படை, பொலிஸ்,ராணுவம் பாதுகாப்புயாழ்ப்பாண நகரத்துக்கே ராஜா,ஸ்ரீதர் தியேட்டர் இவர் கோட்டை, இவர் வைச்சது சட்டம் கேக்காவிட்டால் வாய்க்குள்ளையே பிஸ்டலை வைச்சு சுடும் கொடூரம், ஊர்காவற்துறை அவர் வட்டகை அவரை மீறி யாரும் தேர்தலில் ஜெயிக்க கூடாது என்ன ஆட்டமெல்லாம் ஆடினார், ஒரு வருடம் முன்பு என்னை யாரும் தொடோணூம் எண்டால் அதிரடிப்படையினரை தாண்டித்தான் வரவேண்டும்,முள்ளீவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிகளை நினைவு கூருகிறார்கள் எண்டு ஒரு சிங்களவனாகவே மாறி எகத்தாளமா வேறு பேட்டி கொடுத்தார். இன்று பதவியும் புடுங்கப்பட்டு பாதுகாப்பும் புடுங்கப்பட்டு, ஒரு கை துப்பாக்கிகூட வைத்திருக்க அனுமதி இலாமல், எவர் வேண்டுமென்றாலும் இவரை சீண்டலாம் வெற்றி வாய்ப்பை இல்லாமல் பண்ணலாம் என்று அவரே சொல்லி அழும் நிலைக்கு வந்துவிட்டார். உங்கள் வாழ்நாளிலும் எங்கள் வாழ்நாளிலும் உங்களைபோன்றவர்களின் கும்பலின் அஸ்தமனத்தை பார்ப்பதே ஒவ்வொரு மனிதனினதும் வேண்டுதல். அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கும்போதே இயற்கை மரணம் எய்தினால் நீங்கள் வென்றதாகவே ஆகிவிடும் ஊரில் உள்ள இவரின் எடுபிடி ஒன்றின் கருத்துப்படி இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் லண்டனுக்குபோய் இவர் செட்டில் ஆகும் வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார், லண்டனில் இவருக்கு பெரிய வியாபாரங்கள் இருக்கு என்றும் சொன்னார் உண்மை பொய் தெரியவில்லை.- இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வளைகுடாபகுதி மிக குறுகலானது என்பதால்தான் எல்லைகள் மீறுவதில் ஏகப்பட்ட புடுங்கல்கள், ஆனால் நெடுந்தீவுக்கும், பருத்துறைகடற்கரைக்கும் முல்லைதீவுக்கும் இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது எந்த வகையிலும் தவறாக எல்லையை புரிந்து கொண்டது அல்ல.அது அப்பட்டமான இன்னொருநாட்டின் கடல்வள கொள்ளை . கச்சதீவு என்ற ஒரு பிரச்சனை இலங்கை இந்தியாவிற்குள் இல்லை, இந்திராகாந்தி ஸ்ரீமா ஒப்பந்தபடி கச்ச தீவு என்பது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது, கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளவும் , மீன் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளது, ஆனால் மீன் பிடிக்க உரிமையில்லை என்பதே ஒப்பந்தம் என்கிறார்கள். அதனால்தான் இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள். 1976 ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தங்களின்படி கச்சதீவை ஒருபோதும் இலங்கையிடமிருந்து மீளபெற முடியாது என்று பல தடவை மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கச்சதீவை மீட்போம் என்று பிரச்ச்சாரம் செய்யும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அதுபற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும் அது சாத்தியமில்லையென்று , மீனவ சமுதாயத்தின் வாக்குகளுக்காக ரீல் விடுவார்கள். இதில் அதியுச்ச நகைச்சுவை எந்த காங்கிரஸ் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததோ அதே காங்கிரசும் கூட்டுகட்சியான திமுகவும் தேர்தல் நேரங்களில் கச்சதீவை மீட்போம் என்று குரல் கொடுப்பது. - 110 Best Amazon CAR Gadgets
Important Information
By using this site, you agree to our Terms of Use.