Everything posted by ஏராளன்
-
மட்டு. கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38ஆவது நிறைவு நினைவேந்தல் நிகழ்வு
அதிகாலையின் அமைதியை கிழித்துக்கொண்டு வந்து தரையிறங்கிய உலங்குவானுர்திகள்; 100க்கும் அதிகமானவர்களை பறிகொடுத்த குடும்பங்கள்; மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலை - 38 வருடங்கள் Published By: RAJEEBAN 29 JAN, 2025 | 02:22 PM மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு இறால் பண்ணை படுகொலை இடம்பெற்று ஜனவரி 28ம் திகதியுடன் 38 வருடங்களாகின்றது. இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை சம்பவங்களின் பட்டியல் மீக நீளமானது - அதில் இதுவுமொன்று. நீதிக்கான எந்த நம்பிக்கையும் இன்றி அன்றைய நாட்களின் வலிகளுடன் வாழ்பவர்கள் பலர். மகிழடித்தீவு இறால் பண்ணையில் வேலை பார்த்த 85 இளைஞர்கள் உட்பட 100 க்கும் அதிகமானவர்களை இலங்கை இராணுவத்தினர் கொன்றுகுவித்தது இன்னமும் பலரின் நெஞ்சில் நீங்காத வடுவாக நீடிக்கின்றது. அன்றைய தினம் விடியல்காலையின் அமைதியை கிழித்துக்கொண்டு ஹெலிக்கொப்டர் ஒன்று மணல்பிட்டியில் தரையிறங்கியதும் அதன் பின்னர் இடம்பெற்ற கொடுரங்களும் இன்னமும் நினைவைவிட்டகலவில்லை என தெரிவிக்கும் ஜோர்ஜ் ராஜ்மேனன் தனது தந்தையை பறிகொடுத்த நினைவுகளை பகிர்ந்துகொள்கின்றார். கணபதிப்பிள்ளை டானியல் சுவேந்திரன் (எனது அப்பாவும்(வாவா)அவருடன் வேலை செய்த உடன் ஊழியர்கள் 85 பேர் உட்பட 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இலங்கை இராணுவத்தினரால் இனப் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 38வருடங்கள் (28.01.1987) காலங்கள் கடந்தாலும் இச்சம்பவம் இன்றும் எம் நெஞ்சில் நீங்கா வடுக்களாகவே நேற்று நடந்ததுபோல் உள்ளது... அன்று எனக்கு 4 வயது அன்றைய நாள் இன்றும் எனக்கு ஞாபகம் உள்ளது.. 28/01/1987 அன்று விடியச்சாமத்தின் அமைதியை கிழித்துக்கொண்டு 2-3 உலங்குவானூர்தி (ஹெலிகாப்டர்) மணல்பிட்டியில் (கொக்கட்டிச்சோலை) வட்டமிட்டு இறங்கியது அப்போது காலை 6மணி இருக்கும். அப்பா என்னை தனது கையில் என்னை தூக்கி வீட்டுக்கு பின்னால் உள்ள குளக்கட்டில் வைத்து அந்தா பார் ஹெலி என்டார். கண்ணுக்கு எட்டிய துராத்தில் ஆலா போல் வட்டமிட்டு இறங்கியது அப்போது தெரியாது அப்பாவின் உயிர் குடிக்கும் எமன் அதில் வருகிறான் என்று. வேலைக்கு போக அப்பா ஆயத்தமாகும் போது ஊராக்கள் வந்து சொன்னார்கள் ஆமிக்காரன் ஊருக்குள்ள வாரானாம் என்று. ஊரில் ஒரே பதட்டம். ஒப்பிஸ்க்கு போனா பிரச்சினை இல்ல அமெரிக்கன்ட கம்பெனி தானே பிரச்சினை இல்ல என்ற நம்பிக்கையில் வேலைக்கு போனார் . அம்மாவும் நானும் என் சொந்தக்காரரும் அப்பா கடைசியாக சேப்பத்து கட்டால் சைக்கிளில் போனதை பார்த்தோம். நடுத்தர வயது வந்த அண்ணாச்சிமார் மாமாமார் எல்லோரும் கான்னா காட்டுக்குள் ஆமிக்கு பயந்துபோய் பாதுகாப்புக்கு ஓடி ஒளிந்தனர். ஊர் ஒரே பதட்டமாக இருந்தது. மதியம்மளவில் வெடிச்சத்தம் கேட்ட தொடங்கிது. பின்னேரம் வரை தொடர்தது. அது வரைக்கும் என்ன நடக்குது என்று எனக்கு தெரியாது. மயண்டை ஆகியதும் கண்ணா காட்டுக்குள்ளே உயிரை காக்க சென்ற ஆம்புள்ள பொடியன்கள் ஊருக்குள்ள திரும்பி வந்தார்கள். அப்பாவோ அவருடன் வேலைக்கு போன மற்றவர்களோ திரும்பிவரவில்லை. இருட்டிலே நாங்கள் எல்லோரும் அப்பாவை தேடி அப்பம்மாவின் வீட்டுக்கு மகிழடித்தீவு சந்திக்கு (வேத கோயில் மெதடிஸ்த ஆலயம் மகிழடித்தீவு) போகப் போனோம். அப்போது மகேஸ் மாமியின் கடப்படியில் அப்பா செத்த செய்தியை கேட்டோம். அம்மா உடனே மயங்கி விழுத்தது மட்டும் ஞாபகம் இருக்கு! இன்றோ 38 ஆண்டுகள் உருண்டு விட்டது.!! (1987-2025) அன்று இரவு அப்பம்மாவின் வீட்டில் தங்கினோம். இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர் அச்சா சித்தப்பா மட்டுமே(அப்பாவின் தம்பி). அவர் மூலமே அப்பாவும் சக ஊழியர்களும் மகிழடித்தீவு சந்தியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டு உழவு இயத்திரத்தில் ஏற்றிச் செல்லப்பட்டத்தை அறிந்தோம். மகிழடித்தீவுச் சந்தி எம் உடன் பிறப்புகளின் குருதியால் வெள்ளமாக ஓடியது. அன்று படுவான்கரையே மயானமானது. இது என் கதை மட்டுல்ல ஒரேயொரு நாளில் என்னை போன்று அப்பாவை இழந்த அம்மாவைப் போல் விதவையாக்கப்பட்ட அப்பப்பா அப்பம்மாவை போல் சொந்த மகனை பறி கொடுத்த பெரியப்பா சித்தப்பா மாமி போல் உடன்பிறப்பை தொலைத்த 1௦0க்கும் மேற்பட்ட குடும்பங்களின் உள்ளக்குமுறல் மட்டுமல்ல. படுவான்கரை மக்களின் குமுறல்.! 50-60 தாய்மார் விதவைகளாக்கப்பட 200-250 பிள்ளைகள் தகப்பன் அற்ற அனாதைகளாக்கப்பட்டார்கள் அன்று மரணித்தது எனது அப்பா மட்டுமோ அல்லது ஒருசிலரோ மட்டுமல்ல. படுவான்கரையில் ஒரு படித்த ஒரு துடிதுடிப்பான நடுத்தர தலைமுறை வர்க்கம். தங்கள் சொந்த கிராமங்களை (மகிழடித்தீவு முனைக்காடு முதலைக்குடா கொக்கட்டிச்சோலை) முன்னேற்ற பாடுபட்டு நேசித்து வாழ்ந்த ஒரு தலைமுறை அது. இவர்களின் இழப்பின் தாக்கம் பின் நாட்களில் தான் விளங்கியது. மாலை நேர வகுப்பு சிரமதானம் கிராமங்கள் தோறும் மர நடுகை மாலை நேர விளையாட்டு போன்றவை இவர்களின் மறைவோடு கானல் நீராகிவிட்டது. மண்முனை தொடங்கி மகிழடித்தீவு நெடுகிலும் பனைமரம் உண்டு. யார் இதை நாட்டினார்கள் என்று வினவிய போதே இம்மைந்தர்களின் இழப்பின் பெறுமதி விளங்கியது. தன் சொந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நல்நெஞ்சங்கள் இன்று மௌனித்து போய்விட்டது.! வட கிழக்கில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலைச் சம்பவம் மகிழடித்தீவு இறால் பண்ணை இனப்படுகொலை (28-01.1987). ஆயிரங்கள் தங்கள் சொந்த உறவுகளை பறி கொடுத்த நாள். படுவான்கரை மக்களின் குரல்வளை நசுக்கப்பட்ட கரி நாள் அது!! படுவான்கரையின் இன்றைய பின்தங்கிய நிலைமைக்கு அத்திவாரம் இட்டதும் இந்த சம்பவமே. !!! 1983 கருப்பு ஜூலை கொழும்பில் தொடங்கி 2009 மே முள்ளிவாய்கால் வரை நடந்தேறிய அனைத்து படுகொலைகளிலும் இது போன்ற பல சமூகங்களின் கதைகள் உறங்கி கிடக்கின்றன. விடை தெரியா கேள்வி மட்டுமே உள்ளது. இத்தனை இழப்புக்கும் நான் செய்த தவறு என்ன ? என் குடும்பம் செய்த குற்றம் என்ன ?? தமிழனாய் பிறந்ததா??? அப்பா திரும்பி வரவில்லை..அப்பா வருவார் என்ற எதிபார்போடு இன்றுடன் 38வருடங்கள் கடந்துவிட்டதுப்பா.!!! படஉதவி-ஜோர்ஜ் ராஜ்மேனன் https://www.virakesari.lk/article/205206
-
'கேணல்' கிட்டுவின் வாழ்வும் காலமும்
இந்திய கடற்படை தங்களை கொல்வதை முறியடித்த கிட்டுவும் தோழர்களும் Published By: DIGITAL DESK 7 29 JAN, 2025 | 08:57 AM டி.பி.எஸ். ஜெயராஜ் தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதி கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் காலமும் இந்த நீண்ட கட்டுரையின் கவனக்குவிப்பாக இருந்துவருகிறது. முதல் மூன்று பாகங்களும் வல்வெட்டித்துறையை சேர்ந்த பதினெட்டு வயதான இளைஞன் எவ்வாறு விடுதலை புலிகள் இயக்கத்தில் ஒரு கெரில்லாப் போராளியாக இணைந்து படிப்படியாக உயர்ந்து யாழ்ப்பாணத்தின் "முடிசூடா மன்னாக " வந்தார் என்பதை விளக்கின. கிட்டுவும் அவரது சில தோழர்களும் இந்திய கடற்படை தங்களை கைதுசெய்வதை தடுக்க தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் மரணத்துக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து நான்காவதும் இறுதியுமான இந்த பாகம் விளக்குகிறது. இந்த கட்டுரைத் தொடரில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதைப் போன்று 1987 மார்ச் 30 ஆம் திகதி அவரது வாகனத்தின் மீது குண்டு வீசப்பட்டதால் கிட்டு ஒரு காலை இழந்தார். அதையடுத்து அவர் தீவிர இராணுவ சேவையில் இருந்து " கட்டாய ஓய்வைப் " பெற நிர்ப்பந்திக்கப்பட்டார். துடிப்பான போராளியான கிட்டு தனது போராட்ட நாட்கள் முடிவுக்கு வந்துவிட்டது என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதற்கு தயாராயிருக்கவில்லை. இந்தியாவுக்கு சென்று செயற்கைக் கால் ஒன்றை பொருத்திக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து அவர் ஆராய தீர்மானித்தார். 1987 ஜூலை நடுப்பகுதியில் புங்குடுதீவில் இருந்து யாழ்ப்பாணத்தில் தனக்கு அடுத்த நிலையில் இருந்த ரஹீமுடனும் இன்னொரு மூத்த போராளியான செர்ணத்துடனும் சேர்ந்து கிட்டு இரகசியமாக படகு மூலம் இந்தியாவுக்கு சென்றார். சில வாரங்கள் கழித்து 1987 ஜூலை 29 ஆம் திகதி இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர்.ஜெயவர்தனவும் இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். அதையடுத்து போரில் ஒரு தணிவு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து பெரும் எண்ணிக்கையான விடுதலை புலிகள் இலங்கைக்கு திரும்பினர். விடுதலை புலிகள் மீது நிறைந்த அனுதாபம் கொண்டிருந்த அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனை கிட்டு சந்தித்தார். அவர் பல வழிகளிலும் விடுதலை புலிகளுக்கு உதவினார். மெட்ராஸில் ( இன்றைய சென்னை ) அசோக் நகரில் உள்ள செய்கை அவயவங்கள் பொருத்தும் மருத்துவ நிலையத்தில் கிட்டு மருத்துவ பராமரிப்பைப் பெறவதற்கு முதலமைச்சர் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். ஆனால், நிலைவரங்கள் விரைவாக மாறத் தொடங்கின.1987 அக்டோபரில் இந்திய அமைதிகாக்கும் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. நோய்வாய்ப்பட்டிருந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அப்போது மருந்தவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். விடுதலை புலிகளின் அரசியல் மதியூகி அன்ரன் பாலசிங்கமும் யோகி மற்றும் திலகர் போன்ற அரசியல் பிரிவின் மூத்த உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலையில், மெட்ராஸில் பிரதான அரசியல் பேச்சுவார்த்தையாளர் கிட்டு மீது திணிக்கப்பட்டது. அரசியல் பிரிவின் இன்னொரு மூத்த தலைவரான 'பேபி' சுப்பிரமணியமும் அப்போது மெட்ராஸில் இருந்தார். ஆனால் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடு காட்டாமல் அமைதியாக இருப்பதற்கு அவர் விரும்பினார். கலைஞர் அன்று எதிர்க்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைலர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியை சந்தித்த கிட்டு விடுதலை புலிகளின் சார்பில் வேண்டுகோள் விடுத்தார். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்களாக விடுதலை புலிகளை கலைஞர் கருதியதால் அவருக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவுகள் கசப்படைந்திருந்தன. என்றாலும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கியஸ்தரான வைகோ என்று அறியப்பட்ட வை. கோபாலசுவாமி ஊடாக கருணாநிதியுடன் உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு கிட்டுவினால் முடிந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கிட்டு சந்தித்தார். அதன் விளைவாக கருணாநிதியும் தமிழ்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களும் இந்திய அமைதிகாக்கும் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் மூண்ட போரைக் கடுமையாக கண்டனம் செய்தார்கள். உடனடியாக போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களுடனும் இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்பட்ட சர்வதேச ஊடகங்களுடனும் கிட்டு தொடர்பாடல்களைச் செய்தார். அதன் விளைவாக விடுதலை புலிகளின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டிலும் வேறு சில இந்திய மாநிலங்களிலும் பிரசித்தம் கிடைத்தது. மேற்குலக நாடுகளில் இருந்த விடுதலை புலிகள் சார்பு அமைப்புக்களுடனும் கிட்டு தொடர்பில் இருந்தார். எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த வண்ணம் எம்.ஜி.ஆர். கிட்டுவுடன் தொடர்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைலாப்பூரில் இருந்த தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றன் ஊடாக அமெரிக்காவில் இருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர்களில் ஒருவருடன் ரஹீம் தொடர்புகொள்வார். மாறிமாறி தகவல்கள் பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிர்பார்த்த எம்ஜி.ஆர். ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டு, ரஹீம், காஸ்ட்ரோ மற்றும் சில விடுதலை புலிகளை திருவான்மியூரில் ' வீட்டுக்காவலில் ' வைத்தார். ஆதனால் இந்தியாவில் விடுதலை புலிகளக்கு எதிராக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேவேளை கிடடுவின் காதலி சிந்தியா இந்திய இராணுவத்தினால் கைதுசெய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து கிட்டுவின் படம் அடங்கிய அல்பம் ஒன்று கண்டெடுக்கப்படடது. அதன் மூலமாக அவர் கிட்டுவின் காதலி என்பது இந்தியப் படையினருக்கு தெரியவந்தது. சிந்தியா பலாலியில் தடுத்து வைக்கப்பட்டார். ஒரு சில வாரங்கள் கழத்து எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்து மெட்ராஸ் திரும்பினார். அவர் கிட்டுவைச் சந்தித்தார். இந்திய இராணுவத்தினால் கிட்டுவின் காதலி தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்து எம்ஜி.ஆர். ஆத்திரமடைந்தார். அவர் புதுடில்லிக்கு நெருக்குதல் கொடுத்தார். ஒரு சில நாட்களுக்குளன சிந்தியா மெட்ராஸுக்கு கொண்டுவரப்பட்டு கிட்டுவுடன் மீண்டும் இணைந்துகொண்டார். எம்ஜி.ஆர். 1987 டிசம்பர் 24 ஆம் திகதி காலமானது பெரும் கவலையை ஏற்படுத்தியது. பேச்சுவார்த்தையாளர் பெயரளவில் வீட்டுக்காவலில் இருந்தாலும், கிட்டு பேச்சுவார்த்தையாளர் என்ற பாத்திரத்தை வகித்தார். இந்திய புலனாய்வு சேவையான 'றோ' வைச் சேர்ந்தவர்கள் உட்பட இந்திய அதிகாரிகள் அவருடன் தொடர்பு கொண்டனர். அவ்வாறே அரசியல் தலைவர்களும் ஊடகங்களின் பிரதநிதிகளும் கிட்டுவுடன் தொடர்பில் இருந்தனர். விடுதலை புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருமாறு ராஜீவ் காந்தி அரசாங்கத்தின் மீது இந்தியாவுக்குள் கடுமையான நெருக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டன. ' றோ'வின் அனுசரணையுடனான ஒரு நடவடிக்கையாக இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களான ஜொனியையும் ரஹீமையும் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக கிட்டு வன்னிக்கு அனுப்பினார்.ஆனால், ஒரு மாபெரும் தொடர்பாடல் தவறு காரணமாக ஜொனி இந்திய அமைதி காக்கும் படையினரால் கொல்லப்பட்டார். ரஹீம் மெட்ராஸுக்கு திரும்பினார். நாளடைவில், விடுதலை புலிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்டுத்திக்கொள்ளும் நம்பிக்கையை புதுடில்லி கைவிட்டது. விடுதலை புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதுடன் ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஈ.என்.டி.எல். எவ். இயக்கங்களை ஊக்குவித்து வடக்கு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் விளைவாக தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் அலுவலகங்களும் பாதுகாப்பான இடங்களும் மூடப்பட்டன. மெட்ராஸ் மத்திய சிறையில் உள்ள ஒரு பகுதியில் கிட்டு உட்பட 164 விடுதலை புலிகள் தடுத்துவைக்கப்பட்டனர். சிந்தியா அந்த சிறையில் பெண்களுக்கான பகுதியில் அடைக்கப்பட்டார். சாகும்வரை உண்ணாவிரதம் விசாரணை எதுவும் இன்றி நீண்டநாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் பொறுமை இழந்து தங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் வழக்குத் தொடரவேண்டும் அல்லது விடுதலை செய்யவேணடும் என்று கோரிக்கை விடுத்தனர். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில் திலீபனைப் போன்று கிட்டுவும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுப்பார் என்று அவர்கள் அறிவித்தனர். கிட்டு அவ்வாறு போராட்டத்தில் இறங்கினால் தாங்களும் அதில் இணைந்து கொள்ளப்போவதாகவும் அவர்கள் அச்சுறுத்தினர். உண்ணாவிரதப் போராட்ட அச்சுறுத்தல் பற்றிய செய்தி தமிழ்நாட்டு ஊடகங்களில் வெளியானது. இந்திய அரசாங்கம் பீதியடைந்தது.தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் 1988 செப்டெம்பரில் மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். முதலில் அவர்கள் காங்கேசன்துறையில் தங்கவைக்கப்பட்டு பிறகு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி முகாமுக்கு கூட்டிச்செல்லப்பட்டனர். வன்னியில் கிட்டு கிட்டுவும் சிந்தியாவும் பலாலிக்கு கொண்டு வரப்பட்டனர். பிறகு அவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு முன்பாக இறக்கி விடப்பட்டனர். சென்னையில் செயற்கைக்கால் பொருத்தும் திட்டம் சரிவரவில்லை என்பதால் கிட்டு தொடர்ந்தும் ஊன்றுகோலின் உதவியுடனேயே நடந்துகொண்டு திரிந்தார். அவரை போட்டிக்குழுக்கள் தாக்குவது சுலபம். கிட்டுவும் சிந்தியாவும் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி நச்சினார்க்கினியரின் அலுவலகத்துக்கு சென்றனர். வல்வெட்டித்துறை பிரஜைகள் குழுவின் தலைவர் வைத்தியசாலைக்கு வந்து கிட்டுவை வன்னிக்கு கூட்டிச் சென்றார். சிந்தியா தனது வீட்டுக்கு சென்று பெற்றோர்களுடன் இணைந்துகொண்டார். அதற்கு பிறகு கிட்டு விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் வன்னிக் காட்டு்குள் வாழ்ந்தார். வன்னியில் வாழ்ந்த அந்த நாட்களே தனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான காலப்பகுதி என்று கிட்டு எனக்கு பின்னர்ஒரு கட்டத்தில் சொன்னார். வைகோ என்று அழைக்கப்படுகின்ற தமிழ்நாட்டு அரசியல் தலைவர் கோபாலசுவாமி இலங்கையின் வடபகுதிக்கு இரகசியமாக படகில் வந்தபோது அவரைச் சந்தித்தவர்களில் கிட்டுவும் ஒருவர். அதிர்ச்சிதரும் ஒரு திருப்பமாக விடுதலை புலிகளுக்கும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அன்ரன் பாலசிங்கமும் அடேல் பாலசிங்கமும் பேச்சுவார்த்தைகளுக்காக கொழும்புக்கு வந்தனர். பேச்சுவார்த்தைகள் 1989 செப்டெம்பரில் போர்நிறுத்தம் ஒன்றுக்கு வழிவகுத்தது. விடுதலை புலிகளும் இலங்கை அரசாங்கமும் பகைமையைக் கைவிட்ட நிலையில், இலங்கையில் இருந்து இந்திய அமைதிகாக்கும் படையை விலக்கிக் கொள்ளவேண்டும் என்று புதடில்லி கடுமையான நெருக்குதலுக்கு உள்ளானது. திருமணமும் ஐக்கிய இராச்சியமும் நிகழ்வுப்போக்குகளின் இந்த அற்புதமான திருப்பம் கிட்டுவின் வாழ்விலும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அவர் தயக்கத்துடன் வன்னியில் இருந்து வெளியேறி ஐக்கிய இராச்சியத்துக்கு சென்றார். அதற்கு முன்னர் கிட்டுவும் சிந்தியாவும் கொழும்பில் திருமணம் செய்து கொண்டனர். அடேல் பாலசிங்கம் தனது " விடுதலைக்கான வேட்கை " (The Will to Freedom ) என்ற நூலில் அதை விரிவாக எழுதியிருக்கிறார். அதில் இருந்து பொருத்தமான பகுதிகள் வருமாறு ; " பிரபாகரனைச் சந்தித்து கலந்தாலோசனை நடத்துவதற்கு அக்டோபர் முற்பகுதியில் நாங்கள் முல்லைத்தீவுக்கு இரண்டாவது தடவையாக நாம் சென்றோம். பிரபாகரனைச் சந்தத்தபோது அவர் துண்டாக்கப்பட்ட காலுக்கு சிகிச்சை பெறுவதற்காக கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கான தனது விருப்பத்தை பாலாவிடம் அவர் தெரிவித்தார். " தன்னை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் குறித்து கேள்விப்பட்டதும் கிட்டு உண்மையில் இரண்டு மனத்தில் இருந்தார். செயற்கைக் கால் ஒன்றைப் பொருத்துவதற்கு அவர் விரும்பினார் என்பதை யறுப்பதற்கில்லை. அதைப் பொருத்தினால் அவரின் நடமாட்டத்துக்கு வசதியாக இருக்கும். ஆனால், கிட்டு தனது போராளிகளுடனும் தாயகத்துடனும் உணர்வுபூர்வமான பிணைப்பைக் கொண்டவர்.அவர்களை விட்டு பிரிந்துசெல்லும் சாத்தியம் உண்மையில் அவருக்கு பெரும் வேதனை தருவதாகும். " போராளிகளுக்கு போதனைசெய்து அவர்களை உற்சாகப்படுத்தி புதிய திட்டங்களில் ஈடுபடுத்தக்கூடிய சூழ்நிலையில் கிட்டு செழித்தவர். வெளிநாட்டுக்கு புறப்படுவதற்கான நாட்கள் நெருங்க நெருஙக அவர் அமைதியானார். அவரின் போராளிகளில் பலரும் கூட அமைதியானார்கள். அளம்பில் காட்டுக்குள் இருந்து கிட்டுவை வெளியே கூட்டிச் செல்லவிருந்த தினம் பிரபாகரனின் தோளில் சாய்ந்து அழுத காட்சி நான் கண்ட மிகவும் கவலைக்குரிய ஒரு காட்சி என்று நான் நினைக்கிறேன். " கிட்டுவின் போராளிகள் அவரைக் கதிரையில் வைத்து தங்கள் தோள்களில் சுமந்து காத்துநின்ற ஹெலிகொப்டரை நோக்கிக் கொண்டு சென்றார்கள். காட்டுக்கு ஊடாக சென்று கொண்டிருந்தபோது கிட்டு தனக்கே உரித்தான துணிச்சலை வெளிப்படுத்தி போராளிகளுடன் பகிடிவிட்டு சிரித்துப் பேசி அவர்கள் மீதான பாசத்தை வெளிப்படுத்தினார். " கொழும்பு வந்துசேர்ந்த உடனடியாக கிட்டுவை நாங்கள் பிரிட்டிஷ் தூதரகத்துக்கு கூட்டிச் சென்றோம்.பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் கதைத்த பிறகு கிட்டுவின் ஐக்கிய இராச்சியத்துக்கான விசாவுக்கு அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் அவர் மிகவும் முக்கியமான கடமையொனறைக் கவனிக்க வேண்டியிருந்தது. " இந்திய அமைதி காக்கும் படையில் காவலில் இருந்து விடுவிக்கப்ட்டு முல்லைத்தீவு காடுகளுக்குள் கிட்டு சென்றபோது மருத்துவ மாணவியான தனது காதலி சிந்தியாவைப் பிரிந்து விட்டார். இப்போது காதலியுடன் மீண்டும் இணைவதற்கு அவர் ஆர்வமாக இருந்தார். அவரது வேண்டுகோளின் பேரில் சிந்தியா அவரைச் சந்திக்க யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்தார். " அவர்கள் திருமணம் செய்வதற்கு தீர்மானித்தனர். திருமண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக கிடடுவின் தாயார் வல்வெட்டித்துறையில் இருந்து கொழும்புக்கு வந்தார். சிந்தியாவின் பெற்றோர் ஏற்கெனவே கொழும்பில் இருந்தனர். பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த விடுதலை புலிகள் குழு தங்கியிருந்த ஹோட்டல் அறைகளில் ஒன்றில் கிட்டு -- சிந்தியா திருமணப்பதிவு இடம்பெற்றது. சில நாட்களுக்கு பிறகு கிட்டு லண்டனுக்கு சென்றார். பயண ஏற்பாடுகள் செய்யப்பட்ட பிறகு சிந்தியாவும் லண்டன் சென்று கிட்டுவுடன் இணைந்துகொண்டார்." நிகழ்வுகளை பின்னோக்கிப் பார்க்கும்போது இனிமேல் இலங்கைக்கு திரும்பப்போவதில்லை என்ற ஒரு முன்னுணர்வு கிட்டுவுக்கு இருந்தது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. தனது சுபாவத்துக்கு புறம்பான முறையில் கிட்டு பிரபாகரனின் தோளில் சாய்ந்து அழுததற்கு அதுவே காரணமாக இருந்திருக்கலாம். லண்டன் வந்துசேர்ந்த பிறகு கிட்டு தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற்று செயற்கைக் காலை பொருத்திக் கொண்டார். லண்டனில் அவருடன் இணைந்த சிந்தியா சில மாதங்களுக்கு பிறகு தனது மருத்துவப் படிப்பை தொடருவதற்கு இலங்கை திரும்பினார். விடுதலை புலிகளின் சர்வதேச செயலகம் ஐக்கிய இராச்சியத்தில் கிட்டு மனவுறுதியுடனும் ஆர்வத்துடனும விடுதலை புலிகளுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் மூழ்கினார். உலகின் பல்வேறு நகரங்களில் இருந்த விடுதலை புலிகள் ஆதரவு அமைப்புக்கள்/ கிளைகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு கிட்டு அவற்றை எல்லாம் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். விடுதலை புலிகளின் சர்வதேச செயலகம் லண்டனில் அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் விடுதலை புலிகள் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்படவில்லை. அதேவேளை, இந்திய இராணுவம் 1990 மார்ச் 30 ஆம் திகதி இலங்கையை விட்டு வெளியேறியது. 1990 ஜூனில் இலங்கை ஆயுதப் படைகளுக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் போர் மூண்டது. பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்துக்கும் புதுடில்லிக்கும் இடையில் முரண்பாடுகள் கிளம்பிய நிலையில், சாத்தியமானால் இந்தியாவுடன் நல்லிணக்கத்துக்கு காலம் கனிந்துவிட்டது என்று கிட்டு உணர்ந்தார். தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி கருணாநிதியின் கீழ் விடுதலை புலிகளுக்கு சார்பான அரசாங்கம் ஆட்சியில் இருந்த அன்றைய சூழ்நிலையை இது விடயத்தில் ஒரு நல்ல அம்சமாக கிட்டு கருதினார். ராஜீவ் காந்தி கிட்டு தனது எண்ணத்தை பிரபாகரனுக்கு தெரியப்படுத்தியபோது அந்த திசையில் நடவடிக்கைகளை முன்னடுக்குமாறு அவரும் பச்சைக்கொடி காட்டினார். இந்தியாவில் நடைபெறவிருந்த பொதுத்தேர்தலில் ராஜீவ் காந்தி வெற்றிபெறுவார் என்று பரவலாக நம்பப்பட்டது. அதனால் ராஜீவ் காந்தியுடன் உறவுகளைச் சீர்செய்வதற்கு விடுதலை புலிகளின் சார்பில் கிட்டு முயற்சித்தார். முதலில் அவர் மெட்ராஸில் தங்கியிருந்த கவிஞர் காசி ஆனந்தனை ராஜீவ் காந்தியைச் சந்திக்க அனுப்பினார். அதற்கு பிறகு லண்டனில் இருந்து இரண்டாவது தூதுவர் ஒருவர் ராஜீவ் காந்தியைச் சந்திக்க அனுப்பப்பட்டார். நன்கு தெரிந்த நிதியுதியாளர் அர்ஜுனா சிற்றம்பலமே அந்த தூதுவர். இந்த விஜயங்கள் வெற்றிகரமானவையாக அமையவே கிட்டுவும் ராஜிவ் காந்தியின் கீழான எதிர்கால காங்கிரஸ் அரசாங்கம் ஒன்று விடுதலை புலிகளுடன் ஒத்துப்போகும் அணுகுமுறையொன்றை கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், 1991 மே 21 ஆம் திகதி தமிழ்நாட்டில் விடுதலை புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை அடுத்து கிட்டுவின் எதிர்பார்ப்புகள் எல்லாம் சிதறிப்போயின. ராஜீவ் காந்தியுடன் நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை வெளிப்படையாக உற்சாகப்படுத்திய அதேேளை விடுதலை புலிகளின் தலைவரும் புலனாய்வுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் மறைமுகமாக அவரைக் கொலை செய்வதற்கான கொடூரமான சதத்திட்டத்தை தீட்டிக் கொண்டிருந்தார்கள் போன்று தோன்றியது. ராஜீவ் காந்தி கொலை கிட்டுவுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் இந்திய அதிகாரிகள் கிட்டுவும் கொலைச்சதியில் சம்பந்தப்பட்டிருந்ததாக சந்தேகித்தார்கள். விடுதலை புலிகளினால் தனக்கு எந்த ஆபத்தும் வராது என்று ராஜீவ் காந்தி நினைக்கக்கூடியதான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக இரு தூதுவர்களை கிட்டு புதுடில்லிக்கு அனுப்பியதாக இந்திய மத்திய புலனாய்வுப் பணியகம் (சி.பி.ஐ.) நினைத்தது. சுவிற்சர்லாந்து கிட்டுவை விசாரிக்க வேண்டும் அல்லது அவரை விசாரிக்க இந்திய அதிகாரிகளை அனுமதிக்கவேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியா கடுமையான நெருக்குதலைக் கொடுத்தது. இதனால் பிரிட்டிஷ் அரசாங்கம் கிட்டுவுக்கு எதிராக திரும்பும் நிலை ஏற்பட்டது. பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும் அல்லது விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்று அவருக்கு காலஅவகாசம் கொடுக்கப்ட்டது. தான் கைதுசெய்யப்படக்கூடும் என்று எதிர்பார்த்த கிட்டு இங்கிலாந்து கால்வாயைக் கடந்து பிரான்ஸுக்குச் சென்றார் . ஒரு குறுகிய காலத்துக்கு பிறகு சுவிட்சர்லாந்துக்கு சென்றார். அங்கு அவர் அரசியல் தஞ்சம் கோரியதாக கூறப்பட்டது. சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த வேளையில் சமாதான முயற்சியொன்றை ஆரம்பிக்க கிட்டு முயன்றார். இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீதுவை ஜெனீவாவில் கிட்டு இரகசியமாக தனியாக ஒரு தடவை சந்தித்ததாக 'சுவிஸ்' முரளி என்று அறியப்பட்ட சுவிட்சர்லாந்தில் விடுதலை புலிகளின் ஒருங்கிணைப்பாளர் நடராஜா முரளிதரன் கூறினார். பிரேமதாச அரசாங்கத்தில் ஹமீது அப்போது நீதியமைச்சராக இருந்தார். அவருடனான பேச்சுவார்த்தையின் விளைவாக எந்தப் பயனும் ஏற்படவில்லை. மெக்சிக்கோ அதேவேளை, கிட்டு தனது சமாதான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்தார். கலிபோர்ணியாவில் வாழும் இலங்கை வம்சாவளி கல்விமான கலாநிதி கே. செல்வகுமார் ஊடாக அவர் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துடன் தொடர்புகொண்டார். மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடொன்றுக்கு கிட்டு வரவேண்டும் என்று இராஜாங்க திணைக்களத்தில் இலங்கை விவகாரங்களைக் கையாளும் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி கலாநிதி புர்னெல் டெலி கூறியதாக கலாநிதி செல்வகுமார் தெரிவித்தார். கனடாவுக்குள் பிரவேசிப்பதற்குள் பிரவேசிப்பதற்கு கிட்டு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனால் கிடடு சுவிட்சர்லாந்தில் இருந்து மெக்சிக்கோ சென்றார். மெக்சிக்கோவில் இருந்துகொண்டு புர்னெல் டெலியுடன் கிட்டு தொடர்பு கொண்டார். கிட்டு அமெரிக்காவுக்குள் பிரவேசித்து சமாதான முயற்சாக்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற யோசனைக்கு இணக்கமானவராக அந்த அமெரிக்க அதிகாரி இருந்தார் என்று செல்வகுமார் கூறினார். ஆனால் குறித்துரைக்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அதிகாரமளிக்கும் கடிதம் ஒன்றை கிட்டு சமர்ப்பிக்கவேண்டும என்று கேட்கப்பட்டது.அதன் பிரகாரம் பிரப்கரனுக்கு அறிவித்துவிட்டு கிட்டு கடிதத்துக்காக காத்திருந்தார். அந்தக் கடிதம் ஒருபோதும் வந்துசேரவில்லை. நீண்ட நாட்களாக காத்திருந்து விரக்தியடைந்த கிட்டு இலங்கைக்கு வருமாறு கேட்கப்பட்டார். விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. பிரபாகரனுக்கும் பிரதி தலைவர் மாத்தையாவுக்கும் இடையிலான உறவுகள் கசப்படைந்திருந்தன. அரசியல் பிரிவு தலைவர் யோகியுடனும் பிரபாகரன் மகிழ்ச்சியாக இல்லை. தனது நம்பிக்கைக்குரியவரான கிட்டுைஅரசியல் பிரிவுக்கு பொறுப்பான பிரதி தலைவராக நியமிக்கப்பட வேண்டும் என்று பிரபாகரன் விரும்பினார் என்ற ஊகிக்கப்பட்டது. இலங்கை திரும்புவதற்கான சாத்தியம் குறித்து கிட்டுவும் மகிழ்ச்சியடைந்தார். தாய்லாந்து மெக்சிக்கோவில் இருந்து உக்ரெயின் சென்ற கிட்டு அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். பிறகு சிங்கப்பூரில் இருந்து அவர் தாய்லாந்து சென்றார். தாய்லாந்தின் புக்கெட்டில் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வேறு கருவிகளையும் ஏற்றிய விடுதலை புலிகளின் சரக்கு கப்பலில் கிட்டு ஏறினார்.ஹொண்டூராஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலுக்கு ' அஹற் ' என்று பெயரிடப்பட்டிருந்தது. இந்திய அதிகாரிகள் அந்த கப்பலை சந்தேகத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் என்பது விடுதலை புலிகளுக்கு தெரியாது. 1993 ஜனவரி 13 ஆம் திகதி இலங்கையின் கரையோரத்தில் இருந்து தெற்கே 290 மைல்கள் தொவைிலும் இந்தியாவின் கரையோரத்தில் இருந்து தென்கிழக்கே 440 மைல்கள் தொலைவிலும் வந்துகொண்டிருந்த கப்ஓலை இந்திய கரையோரக் காவல் படை அணுகியது. இது நடந்தது நடந்தது சர்வதேச கடற்பரப்பிலாகும். அது இந்திய கடற்பரப்போ அல்லது இலங்கை கடற்பரப்போ அல்ல. 'ஒப்பரேசன் ஜபார்தாஸ்த்' 'அஹற் ' விடுதலை புலிகளின் ஒரு ஆயுதக்கப்பல் என்பதும் அதில் இயக்கத்தின் மூத்த தளபதி கிட்டு வருகிறார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டபோது இந்தியா ' ஒப்பரேசன் ஜபார்தாஸ்த் ' நடவடிக்கையை தொடங்கியது. கரையோரக்காவல் படையின் இரு கப்பல்களும் மூன்று கடற்படை கப்பலகளும் 'அஹற் ' கப்பலை இடைமறித்தன விவேக், கிர்பான், பெரோஸ் காந்தி எனபவையே கடற்படைக் கப்பல்களின் பெயர்கள். விடுதலை புலிகள் சரணடைய வேண்டும் என்று இந்திய கடற்படை கேட்டது. அதற்கு மறுத்த கிட்டு இந்திய படையினர் கப்பலில் ஏறுவதற்கு முயற்சித்தால் அதை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக அச்சுறுத்தினார். மூன்று நாட்களாக நடுக்கடலில் ஒரு இழுபறிநிலை நீடித்தது. ஜனவரி 16 ஆம் திகதி இந்திய கடற்படை 'அஹற்' கப்பலில் ஏறுவதற்கு தயாரானது. விடுதலை புலிகளினால் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட கிரமமான பணியாளர்கள் குழு ஒன்று கப்பலில் இருந்தது. " ஏழு விரல்கள்" என்று அறியப்பட்ட கப்பலின் காப்டன ஜெயச்சந்திரனையும் ஏழு பணியாளர்களையும் கிட்டு உயிர்காப்பு படகில் அனுப்பிவைத்தார். படகு கவிழ்ந்து பணியாள்கள் கடலில் மூழ்கியபோது இந்திய கடற்படை அவர்களை காப்பாற்றியது. கிட்டுவும் லெப்டினண்ட் கேணல் குட்டிசிறீ உட்பட எட்டு இயக்கப் போராளிகளும் கப்பலுக்கு தீவைத்தனர். அது விரைவாகவே தீப்பிடித்துக்கொண்டது. கிட்டுவும் தோழர்களும் குண்டுகளை வெடிக்க வைத்ததுடன் சயனைட் வில்லைகளையும் விழுங்கினர். இவ்வாறுதான் காவிய நாயகன் போன்ற கிட்டு் நடுக்கடலில் தனது வாழ்வை பயங்கரமான முறையில் முடித்துக் கொண்டார். 1993 ஜனவரி 14 தைப்பொங்கல் தினத்தன்று விடுதலை புலிகளின் சகல முகாம்களிலும் பொங்கல் நடந்தது. பல்வேறு முகாம்களில் பொங்கல் கொதிக்கும் நிலையை எட்டியபோது பானைகள் வெடித்தன. இரு நாட்களுக்கு பிறகு கிட்டுவின் மரணத்துடன் இந்த சம்பவங்களை தொடர்புபடுத்திய விடுதலை புலிகளின் பல முக்கியஸ்தர் அவற்றை முன்கூட்டிய அபசகுனமாக கருதினர். கிட்டு பூங்கா விடுதலை புலிகள் மூன்று நாள் துக்கத்தை பிரகடனம் செய்தனர். வல்வெட்டித்துறை தீருவில் மயானத்தில் நினைவுத்தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது. தங்களது பீரங்கிப் பிரிவுக்கு கிட்டுவின் பெயரையும் மோட்டார் பிரிவுக்கு குட்டிசிறியின் பெயரையும் விடுதலை புலிகள் சூட்டினர். நல்லூரில் உள்ள பூங்கா ஒன்றுக்கும் கிட்டுவின் பெயர் சூட்டப்பட்டது. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று ஒரு பத்திரிகையாளன் என்ற வகையில் நான் நெருங்கிப் பழகிய விடுதலை புலிகள் இயக்கத்தின் உயர்மட்ட தலைவர்களில் கிட்டு ஒருவர். உண்மையில் அவரை நான்தான் முதற்தடவையாக ஆங்கிலப் பிரசுரம் ஒன்றுக்காக (புரொண்ட்லைன்) பேட்டி கண்டேன். அவர் ஐக்கிய இராச்சியம், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிக்கோவில் இருந்த நாட்களில் அவருடன் பல தடவைகள் தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். அவர் மெக்சிக்கோவில் தனிமையில் இருந்ததால் என்னுடன் மணிகணக்காக பேசுவார். அவருடனான ஊடாட்டங்கள் குறித்து இனிமையான நினைவுகள் எனக்கு இருக்கின்றன. "கேணல்" கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமாரின் வாழ்வும் மரணமும் உண்மையிலேயே வடக்கு போராளி ஒருவரின் வீரகாவியம். https://www.virakesari.lk/article/205182
-
'கேணல்' கிட்டுவின் வாழ்வும் காலமும்
கிட்டு மீதான கொலை முயற்சி Published By: DIGITAL DESK 7 21 JAN, 2025 | 02:07 PM டி.பி.எஸ். ஜெயராஜ் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் தளபதியான கேணல் கட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் இருபதாம் நூற்றாண்டின 80 களில் யாழ்ப்பாணத்தின முடிசூடாமன்னனாக கருதப்பட்டார். யாழ்ப்பாண குடாநாட்டின் மிகப்பெரும் பகுதி அப்போது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கிட்டு ஓட்டிச்சென்ற வாகனத்துக்குள் இனந்தெரியாத நபர் ஒருவர் குண்டொன்றை வீசியபோது யாழ்ப்பாணம் எங்கும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது. 1987 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அந்த சம்பவத்தின் விளைவாக கிட்டு ஒரு காலை இழந்தார். அந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விவகாரங்களில் கட்டுரையின் இந்த மூன்றாம் பாகம் கவனம் செலுத்துகிறது. இரு வாரங்களுக்கு முன்னர் இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிடப்பட்டதை போன்று கிட்டு யாழ்ப்பாணத்தில் இரு தடவை கைது செய்யப்பட்டபோது பாதுகாப்பு படைகளிடம் இருந்து தப்பிச் செல்வதற்கு அவரின் கெடுதியில்லாதவர் போன்ற தோற்றம் உதவியது. தாங்கள் சந்தேகத்தில் கைதுசெய்த மென்மையான குணாதிசயத்தைக் கொண்டவரைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட பேர்வழி பயங்கரமான விடுதலை புலிகள் இயக்கத்தின் யாழ்ப்பாண தளபதி கிட்டு என்பதை இராணுவம் புரிந்து கொள்ளவில்லை. வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞரான கிட்டு, பண்டிதர் என்ற ரவீந்திரனின் தலைமைத்துவத்தின் கீழ் விடுதலை புலிகளின் யாழ்ப்பாண இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டபோது யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான மக்களுக்கு தெரியாதவராகவே அவர் இருந்தார். அதனால் அவர் யார் என்பதை தெரியாத கும்பல் ஒன்று அவரைத் தாக்குவதற்கு முயற்சித்த விசித்திரமான சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது. அன்று என்ன நடந்தது என்ன தெரியுமா? 1984 ஆம் ஆண்டில் பண்டிதரின் தலைமையின் கீழ் கிட்டு விடுதலை புலிகளின் இராணுவ தளபதியாகவும் திலீபன் அரசியல் பிரிவின் தலைவராகவும் பொறுப்பேற்றபோது இராணுவமும் பொலிஸும் சுதந்திரமாக நடமாடின. அதனால் விடுதலை புலிகள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் மக்களுடன் மக்களாக கலந்தது இயங்க வேண்டியதாயிற்று. மாவோ சேதுங்கின் வார்த்தைகளில் கூறுவதானால் கெரில்லாக்கள் மக்கள் என்ற சமுத்திரத்தில் நீந்தித்திரியும் மீன்கள். 1984 ஏப்ரிலில் யாழ்ப்பாண நகரின் மத்தியில் சனசந்தடிமிகுந்த ஆஸ்பத்திரி வீதியில் இராணுவத்தின் ரோந்துப் பிரிவொன்றை மறைந்திருந்து தாக்குவதற்கு விடுதலை புலிகள் கண்ணிவெடி ஒன்றை மறைத்து வைத்தனர். அந்த கண்ணிவெடிச் சம்பவம் அடைக்கலமாதா கத்தோலிக்க தேவாலயத்துக்கு எதிரே இடம்பெற்றது. ஒரு சில படைவீரர்கள் காயமடைந்தனரே தவிர, எவரும் கொல்லப்படவில்லை. கண்ணிவெடியை வெடிக்க வைப்பதற்காக விடுதலை புலிகள் தேவாலய வளாகத்திற்குள் பதுங்கியிருந்தனர். சில படைவீரர்கள் அந்த வளாகத்திற்குள் சென்று கண்டபாட்டில் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். தேவாலயத்தின் சுவர்களை குண்டுகள் சல்லடை போட்டன. அடைக்கலமாதா தேவாலயத்தை இராணுவத்தினர் தாக்குகிறார்கள் என்ற செய்தி யாழ்ப்பாணம் எங்கும் பரவியது. யாழ்ப்பாண மாநகரசபை பகுதியில் வாழ்ந்த மக்களில் 40 சதவீதமானவர்கள் கத்தோலிக்கர்கள். உடனடியாக யாழ்ப்பாணத்தில் ஆரியகுளம் பகுதியில் அமைந்திருக்கும் பௌத்த நாகவிகாரைக்கு அருகாக கும்பல் ஒன்று திரண்டது. தேவாலயம் மீதான தாக்குதலுக்கு பழிவாங்க விகாரை மீது தாக்குதல் நடத்த அவர்கள் முயன்றார்கள். இதை கேள்விப்பட்ட உடனடியாகவே சம்பவ இடத்துக்கு விரைந்து கும்பலை கலந்து செல்லுமாறு உத்தரவிட்டார். நீங்கள் யார் என்று கிட்டுவை அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதி என்று அவர் கூறிய பதிலை அவர்களில் பலர் நம்பவில்லை. அதற்கு காரணம் கிட்டுவின் அப்பாவித்தனமான தோற்றமேயாகும். நீ ஒரு புலி இல்லை என்று கூறிக்கொண்டு அவர்கள் அவரை நோக்கி ஆவேசத்துடன் விரைந்தனர். கிட்டு தனது பிஸ்டலை எடுத்து ஆகாயத்தை நோக்கி இரண்டு வேட்டுக்களை தீர்த்தார். அமைதியானவரைப் போன்று தோன்றிய அவர் உண்மையில் கிட்டுதான் என்பதை விளங்கிக்கொண்ட அவர்கள் கலைந்து சென்றனர். இவ்வாறுதான் கிட்டு யாழ்ப்பாண வாசிகளுக்கு முதலில் தெரியவந்தார். அதற்கு பிறகு யாழ்ப்பாணத்தில் பரிச்சயமான ஒருவராக அவர் மாறினார். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பகுதி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த பிறகு கிட்டு பெரியளவில் தனது பிரசன்ன்தை வெளிக்காட்டினார். கிட்டுவின் தலைமைத்துவத்தின் கீழேயே யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதியை விடுதலை புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள். யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதல் எவ்வாறு இந்த நிலைவரம் ஏற்பட்டது? குடாநாட்டுக்குள் விடுதலை புலிகள் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கிய நிலையில், பல பொலிஸ் நிலையங்கள் மூடப்பட்டன. இராணுவமும் அதன் காவல் நிலைகளைக் குறைத்துக்கொண்டது. இராணுவத்தினரின் ரோந்து நடவடிக்கைகளும் குறைந்துவிட்டன. மாவட்டம் முழுவதற்கும் பொலிஸ் தலைமையகமாக விளங்கிய யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் மீதான விடுதலை புலிகளின் தாக்குதலே இந்த நிலைவர மாற்றத்துக்கு காரணமாகும். வல்வெட்டித்துறையை சேர்ந்த பொலிஸ் சாராஜன்ட் ஒருவரின் வடிவில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்குள் விடுதலை புலிகள் ஒரு ' உளவாளியை ' வைத்திருந்தனர். அது வேறு யாருமல்ல பின்னரான நாட்களில் விடுதலை புலிகளின் " பொலிஸ்மா அதிபர் " என்று அறியப்பட்ட நடேசன்தான். வினீதா குணசேகர என்ற சிங்கள பெண்பொலிஸ் உத்தியோகத்தரை திருமணம் செய்த நடேசன் தாக்குதலுக்கு நேவையான திடடங்களையும் வரைபடங்களையும் தயாரிப்பதில் விடுதலை புலிகளுக்கு உதவினார். கிட்டுவே நேரடியாக தலைமைதாங்கி நடத்திய யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதல் பெரிய வெற்றிகரமானதாக அமைந்தது. பொலிசாரின் ஆயுதங்களில் பெரும்பகுதியை விடுதலை புலிகள் கைப்பற்றினர். விடுதலை புலிகளின் படையணி ஒன்று முடைநாற்றம் எடுக்கும் அகழியின் ஊடாக இரகசியமாக நகர்ந்துசென்று தாக்குதல் நடத்தி பொலிசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர் என்று கூறப்படுகிறது. யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தாக்குதலுக்கு பிறகு குடாநாட்டில் பொலிசாரின் நடவடிக்கைகள் இல்லாமல் போயின. இராணுவமும் கூட தரையில் அதன் துருப்புக்களின் நடமாட்டங்களை மட்டுப்படுத்தத் தொடங்கியது. திம்புவில் சமாதானப் பேச்சுவார்த்தை இதற்கு பிறகுதான் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் இந்தியாவின் அனுசரணையுடனான பிரபல்யமான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இலங்கை அரசாங்கத் தூதுக்குழுவுக்கு ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்தன கியூ.சி. தலைமை தாங்கினார். தமிழர்கள் தரப்பில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலை புலிகள், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ( புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் ( ஈரோஸ்) ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திம்பு பேச்சுவார்த்தைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மோதல் நிறுத்தம் ஒன்றை அவசியப்படுத்தின. போர்நிறுத்தத்தின்போது இலங்கை பாதுகாப்பு படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டன. இந்த போர் நிறுத்தத்தை கிட்டு விடுதலை புலிகளின் அனுகூலத்துக்கு பயன்படுத்திக் கொண்டார். இராணுவ முகாம்களுக்கு நெருக்கமான கேந்திர முக்கியத்துவ நிலைகளில் விடுதலை புலிகள் பதுங்கு குழிகளையும் அகழிகளையும் இரகசியமாக அமைத்துக் கொண்டனர். ஆயுதப்படைகள் தூங்கிக் கொண்டிருந்தன. இரண்டு சுற்றுக்களுக்கு பிறகு திம்பு பேச்சுவார்த்தைகளை முறிவடைந்தன. மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகின. மோதல்கள் ஆரம்பமானபோது தாங்கள் முற்றுகைக்கு உள்ளாகியிருப்பதை இராணுவத்தினர் தெரிந்துகொண்டனர். இராணுவ முகாம்கள் விடுதலை புலிகளினால் நிர்மூலம் செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கவில்லை என்றபோதிலும், தங்களது முகாம்களில் இருந்து வெளியில் வருவது படையினருக்கு பிரச்சினையாக இருந்தது. ஏனென்றால் இராணுவ முகாம்களுக்கு நெருக்கமான நிலைகொண்டிருந்த விடுதலை புலிகளின் படையணிகள் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தக்கூடிய நிலையில் இருந்தனர். இராணுவ அணியொன்று வெளியில் வருவதற்கு முயற்சித்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இராணுவ முகாம்களுக்கு அண்மையாக இருந்த விடுதலை புலிகளின் காவல் நிலைகளில் இருந்த போராளிகள் தங்களின் தலைமையை வாக்கி டோக்கி மூலமாக உஷார்ப்படுத்தினர். அப்போது சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு விடுதலை புலிகளின் மேலதிக படையணிகள் விரைந்து தாக்குதல் நடத்தி இராணுவத்தினரை முகாம்களுக்கு திருப்பி அனுப்பிவிடுவர். இவ்வாறாக தாக்குதல்களை நடத்திய விடுதலை புலிகளின் மேலதிக படையணிகளுக்கு பெரும்பாலும் கிட்டுவே தலைமை தாங்குவார். சண்டைகள் கடுமையானவையாக இருக்கும். இறுதியில் இராணுவத்தினர் தங்களது முகாம்களுக்கு திரும்பிவிடுவர். பாதி விடுதலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் பாதி விடுதலை செய்யப்பட்ட நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் முக்கியமானவராக கிட்டு விளங்கினார். இராணுவம் வீதிகளில் நடமாடமுடியாத நிலையில் இருந்ததால் இராணுவ முகாம்களுக்கான போக்குவரத்து பிரதானமாக ஆகாய மார்க்கத்திலேயே இடம்பெற்றது. விநியோகங்கள் ஹெலிகொப்டர்கள் மூலமாகவே அனுப்பி வைக்கப்பட்டன. முகாம்களில் இருந்து படையினரை வெளியில் கொண்டு செல்வதும் முகாம்களுக்கு அவர்களை கொண்டு வருவதும் ஆகாய மார்க்கமாகவே இடம்பெற்றது. ஆகாயமார்க்க போக்குவரத்தின் மையநிலையமாக பலாலி விமானத்தளம் விளங்கியது. படையினரும் பொலிசாரும் களத்தில் இயங்கமுடியாத நிலையில், பீரங்கித் தாக்குதல்களையும் ஹெலிகொப்டர்களில் இருந்து துப்பாக்கிப் பிரயோகங்களை செய்யவும் விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தவும் அரசு நிர்ப்பந்திக்கப்பட்டது. துயரமான ஒரு திருப்பமாக இலங்கை அரசு அந்நியர்கள் மீது தாக்குதல் நடத்துவதைப் போன்று அதன் சொந்த குடிமக்கள் மீது விமானக் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. விமானக் குண்டுவீச்சு தாக்குதல்கள், ஹெலிகொப்டர்கள் மூலமான துப்பாக்கிப் பிரயோகங்கள் மற்றும் ஷெல்வீச்களுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணத்தின் அந்த பகுதிகள் பாதி விடுவிக்கப்பட்ட ஒரு நிலையில் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. யாழ்ப்பாண மக்கள் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள், கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் ஆகியவை பற்றிய பீதியின்றி சுதந்திரமாக வாழ்ந்தனர். முகாம்களில் இருந்து படையினர் வெளியில் வருவதை விடுதலை புலிகள் தடுத்து வைத்திருந்ததனால் அந்த சுதந்திரம் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது என்று மக்கள் கருதினர். விடுதலை புலிகள் அவர்களது அந்த மகிழ்ச்சியான நாட்களில் மக்கள் மத்தியில் மானசீகமான ஆதரவையும் செல்வாக்கையும் அனுபவித்தனர். விடுதலை இயக்க போராளிகள் ஹீரோக்களாக நோக்கப்பட்டனர். அன்று கிட்டு யாழ்ப்பாண மக்களில் பலரினால் பிரமிப்புடனும் மதிப்புடனும் ஏன் பாசத்துடனும் நோக்கப்பட்டார். அவர் பேரளவில் செல்வாக்கு மிக்கவராக விளங்கினார். இத்தகைய ஒரு சூழ்நிலையிலேயே நம்பமுடியாதது நடந்தது. யாழ்ப்பாண நகரத்தின் மத்தியில் கிட்டுவை கொலை செய்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவரது வாகனத்தின் மீது குண்டு ஒன்று எறியப்பட்டதன் விளைவாக அவர் தனது ஒரு காலை இழந்தார். இந்த சம்பவத்தினால் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாகினர். "தமிழ்ப் பெண்புலிகள், இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போரில் ஒரு சிறுவர் போராளியாக எனது கதை " ( Tamil Tigress, My story as a Child Soldier in Sri Lanka's Bloody Civil War) என்ற நூலை எழுதிய நிரோமி டி சொய்சா, கிட்டு மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டபோது தனது பாடசாலைத் தோழிகள் மத்தியில் காணப்பட்ட சோகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். அது எவ்வாறு நடந்தது? ஆன் சிந்தியா துரைராஜா அந்த நாட்களில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் கிட்டு "பண்டைத் தமிழர் வாழ்வில் காதலும் வீரமும் பின்னிப் பிணைந்திருந்தன" என்று கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தின் முடிசூடா போர் மன்னனின் இதயத்தை காமன்கணை துளைத்ததை அறிந்த மக்களுக்கு பெரிய வியப்பாகப் போய்விட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துவ பீட மாணவியாக படிந்துக் கொண்டிருந்த ஆன் சிந்தியா துரைராஜா என்ற மாணவியை அப்போது காதலித்துக் கொண்டிருந்தார். கிட்டு ஒரு இந்து. சிந்தியா ஒரு கத்தோலிக்கர். ஆனால், காதலுக்கு கண் இருக்கவில்லை. அச்சுவேலியைச் சேர்ந்த சிந்தியாவின் குடும்பம் யாழ்நகரில் வசித்து வந்தது. படையினருடனான சண்டைகளில் ஈடுபடாவிட்டால், வாரத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் கிட்டு தான் மணஞ்செய்து கொள்ளப்போகும் சிந்தியாவின் வீட்டுக்கு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1987 மார்ச் 30 கிட்டு தனது பச்சைநிற லான்சரை தானே ஒட்டிக்கொண்டு சிந்தியாவின் வீட்டுக்குப் போனார். அவருடன் அவரது மெய்க்காவலர் சாந்தாமணியும், நிக்சன் என்ற இன்னொரு போராளியும் கூடச் சென்றிருந்தனர். சாந்தாமணி கிட்டுவுக்கு பக்கத்தில் முன் ஆசனத்திலும் நிக்சன் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். கொலை முயற்சி யாழ்நகரில் 2 ஆம் குறுக்குத்தெருவில் உள்ள சிந்தியாவின் வீட்டுக்கு நெருக்கமாக கிட்டு தனது காரை நிறுத்தியபோது மாலையாகிவிட்டது. கிட்டு வீட்டுக்கு உள்ளே செல்லும்போது அவரது மெய்க்காவலர்கள் வெளியில் வாகனத்திற்குள் இருப்பது வழமையாகும். கிட்டு வாகனத்தின் கதவை திறந்தபோது படபடவென்று யாரோ ஓடிவருகின்ற கால் சத்தம் கேட்டது. தரித்துநின்ற வாகனத்தின் பின்புறமிருந்து ஓடிவந்த நபர் ஒருவர் பக்க ஜன்னல் வழியாக குண்டொன்றை வீசினார். காரின் கதவைத் திறந்த கிட்டு அவரை நோக்கி வீசப்பட்ட குண்டு காரின் உள்ளே வெடித்தபோது தனது வலதுகாலை தரையில் வைத்திருந்தார். காருக்குள் இருந்த இடதுகால் சிதைந்து போனது. முன் ஆசனத்தில் இருந்த சாந்தாமணியும் காயமடைந்தார். பின் ஆசனத்தில் இருந்த நிக்சன் காயப்படவில்லை. காயமடைந்த கிட்டு வீதியின் வடிகாலுக்குள் வீழ்ந்தார். அடுத்து நடந்தது நம்பமுடியாத அளவுக்கு துணிச்சலானதாகவும் உண்மையில் வீரசாகசமாகவும் இருந்தது. படுமோசமாக காரமடைந்த போதிலும், கிட்டு தனது மக்னம் 357 துப்பாக்கியை எடுத்து குண்டை எறிந்துவிட்டு தப்பியோடிய நபரை நோக்கி சரயாரியாக சுட்டார். ஆனால் அந்த நபர் அந்திமாலை இருளுக்குள் ஓடிமறைந்து விட்டார். துப்பாக்கி ரவை சுற்று முழுவதையும் முடித்த பிறகு மீண்டும் துப்பாக்கியை நிரப்புவதற்கு கிட்டுவால் முடியவில்லை. இரத்தம் வடிந்தோடிய நிலையில் நிலைகுலைந்த அவர் நினைவிழந்தார். உடனடியாகவே கிட்டு யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிக்கு விரையப்பட்டார். ஒரு கட்டத்தில் அவரின் சுவாசம் நின்றுவிட்டது. உள்ளக பயிற்சி மருத்துவ மாணவர் ஒருவரின் உயிர்காக்கும் முயற்சியானால் மீண்டும் கிட்டு சுவாசிக்கத் தொடங்கினார். கிட்டு உயிர்தப்பினார் என்றபோதிலும், அவரின் இடதுகாலை முழங்காலுக்கு மேல் ஒரு இடத்தில் துண்டிக்க வேண்டியதாயிற்று. காயமடைந்த சாந்தாமணிக்கும் ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. முற்றிலும் எதிர்பாராத இந்த சம்பவத்தினால் விடுதலை புலிகள் குழப்பநிலைக்கு உள்ளாகியிருந்தனர். 2 ஆம் குறுக்குத் தெருவுக்கு நெருக்கமாக உள்ள வீதிகளையும் ஒழுங்கைகளையும் விடுதலை புலிகள் போக்குவரத்துக்கு தடைசெய்தனர். குண்டுத் தாக்குதலை நடத்திய நபர் அயலில் எங்காவது மறைந்திருக்கக்கூடும் என்று அவர்கள் சந்தேகித்தனர். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் 4 ஆம் குறுக்குத் தெருவில் இருந்த ' சற்றர்டே றிவியூ ' ஆசிரியபீட அலுவலகத்தில் பணியாற்றிய உதவி ஆசிரியர். தடுத்து வைக்கப்பட்டவர்களில் ஒரு சிலரைத் தவிர, ஏனையவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். சந்தேகமும் வதந்திகளும் கிட்டுவை கொலை செய்ய முயற்சித்தவர் இராணுவம் நிலைகொண்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருந்து வந்தவர் என்று ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது. கோட்டையைச் சுற்றி விடுதலை புலிகளின் காவல் நிலைகள் இருந்ததால் அவ்வாறு எவராவது கோட்டையில் இருந்து வெளியே வந்து நடமாடியிருந்தால் போராளிகள் அதைக் கண்காணித்திருப்பர். அதனால் அந்த ஆரம்பக்கட்ட சந்தேகம் நிராகரிக்கப்பட்டது. ஆனால், கிட்டு மீதான தாக்குதலுக்கு இராணுவ வீரர் ஒருவரே பொறுப்பு என்று கூறி தேசிய பாதுகாப்பு அமைச்சு உரிமை கோரிய செய்திகள் ஊடகங்களில் வெளிவரச் செய்யப்படதை இதனால் தடுக்க முடியவில்லை. கிட்டு மீது வீசப்பட்டது ஒரு கிரனேட் என்றும் முதலில் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து குண்டின் சிதறல்களை ஆய்வுசெய்த விடுதலை புலிகள் அது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு ' நாட்டுக்குண்டு' என்ற முடிவுக்கு வந்தனர். அதற்கு பிறகு சந்தேகம் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ, புளொட் மீது திரும்பத்தொடங்கியது. மாற்று இயக்கங்களுடனான விடுதலை புலிகளின் மோதல்களில் பெருமளவுக்கு இழப்புகளைச் சந்தித்தவை இந்த மூன்று இயக்கங்களுமே ஆகும். கிட்டு மீதான கொலை முயற்சிக்கு அரசு உதவியும் ஒத்தாசையும் செய்திருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்பட்டது. இந்த கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டு சந்தேகத்துக்கு உரியவர்கள் பலரை விடுதலை புலிகள் தடுத்துவைத்த போதிலும், உருப்படியாக எதுவும் ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை. கிட்டு மீதான கொலை முயற்சி ஒரு உள்வீட்டு வேலை என்று குழப்பத்தைத் தந்த இன்னொரு வதந்தியும் உலவியது. விடுதலை புலிகளின் அப்போதைய பிரதி தலைவர் மாத்தையா என்ற மகேந்திரராஜா இதைச் செய்வித்திருப்பார் என்பது ஒரு கருத்து. இது விடயத்தில் மாத்தையாவின் விசுவாசியும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான விசு என்ற அரவிந்தராஜாவின் பெயரும் இது விடயத்தில் அடிபட்டது. இன்னொரு வதந்தி மிகவும் பாரதூரமானது. மாத்தையா ஊடாக அல்லது புறம்பாக விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இதைச் செய்வித்திருக்கலாம் என்பதே அது. கிட்டுவின் செல்வாக்கு மீதான பொறாமையை இதற்கு காரணமாகவும் கூறப்பட்டது. எவ்வாறிருந்தாலும், இவை வெறுமனே ஊகங்களே. ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை. பின்னரான வருடங்களில் கிட்டு வெளிநாட்டில் இருந்தபோது அவருடன் நீண்ட தொலைபேசி உரையாடல்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார் போன்று தோன்றியது. என்னுடன் பல விடயங்களை வெளிப்படையாக அவர் பேசினார். குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு தடவை நான் அவரிடம் கேட்டேன். அது "இனந்தெரியாதது" என்று பதிலளித்த அவர் சீறீசபாரத்தினத்தின் விசுவாசி ஒருவர் பழிவாங்கும் வேட்கையில் "தன்னந்தனியனாக" செயற்பட்டிருக்கக்கூடும் என்று நினைப்பதாக சொன்னார். (ரெலா தலைவர் சிறீசபாரத்தினத்தை கிட்டுவே நேரடியாக சுட்டுக்கொன்றார்) விடுதலை புலிகளின் உள்வீட்டு வேலைக்கான சாத்தியம் குறித்து நான் கேட்டபோது மிகவும் ஆத்திரமடைந்த கிட்டு "இப்படி ஒருநாளும் கதையாதையுங்கோ அண்ணன்" என்று கடிந்துகொண்டார். அப்பாவிகளை படுகொலை செய்த அருணா விடுதலை புலிகளின் மூத்த தலைவரான அருணா ஈவிரக்கமின்ற அப்பாவிகள் பலரை படுகொலை செய்த சம்பவம் கிட்டு மீதான கொலை முயற்சியின் மிகவும் பாரதூரமான, எதிர்மறையான விளைவாக அமைந்தது. யாழ்ப்பாணத்தில் கல்வியங்காட்டைச் சேர்ந்த அருணா என்ற செல்லச்சாமி செல்வகுமார் விடுதலை புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக பணியாற்றிய ஒரு மூத்த போராளி. அருணா தமிழ்நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது படகை இலங்கை கடற்படை தாக்கி அவரையும் வேறு போராளிகளையும் கைதுசெய்தது. அருணா கெட்டித்தனமாக தனது அடையாளத்தை மறைத்து விடுதலை புலிகளினால் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட குஞ்சு குமார் என்ற படகோட்டியாக பாசாங்கு செய்தார். அவர் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். கிட்டு தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைதிகள் பரிமாற்ற ஏற்பாடு ஒன்றின் மூலமாக அருணாவின் விடுதலையை பெற்றுக்கொண்டார். இந்த கைதிகள் பரிமாற்றத்தின் விபரங்கள் கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் இருக்கின்றன. கிட்டுவும் அருணாவும் இயக்கத்தில் சகபாடி தோழர்களாக இருந்ததற்கு புறம்பாக மிகவும் நெருங்கிய நண்பர்களும் கூட. இது தவிர, கைதிகள் பரிமாற்றத்தின் மூலமாக தனக்கு விடுதலையை பெற்றுத் தந்ததற்காக அருணா கிட்டுவுக்கு மிகுந்த நனறியுடையவராகவும் இருந்தார். அதனால் கிட்டு மீதான தாக்குதல் பற்றி கேள்விப்பட்டதும் அவர் மிகவும் வெறித்தனமாக நடந்துகொண்டார். அவர் தன்னிலை மறந்து செயற்பட்டார். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அண்மையாக ஸ்ரீனிவாசன் வீதியில் (லவ் லேன்) ஒரு வீட்டில் சுமார் ஐம்பது பேரை விடுதலை புலிகள் சிறை வைத்திருந்தனர். அந்த கைதிகளில் ஈ.பி.ஆர்.எல்.எவ்., ரெலோ மற்றும் புளொட் இயக்கங்களின் உறுப்பினர்களும் சில வர்த்தகர்களும் அடங்கியிருந்தனர். அவர்கள் விடுதலை புலிகளின் புலனாய்வுப் பிரிவினராலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அருணா அந்த வீட்டுக்குச் சென்று அங்கு காவல் செய்துகொண்டிருந்த விடுதலை புலிகளுக்கு உத்தரவிட்டு சகல கைதிகளையும் ஒரேயிடத்தில் கூடவைத்தார். பிறகு விடுதலை புலிகள் போராளிகளிடமிருந்து இயந்திரத் துப்பாக்கிகளை வாங்கி நிராயுதபாணிகளான கைதிகளை சுட்டுத் தள்ளினார். வெறிபிடித்த அருணாவினால் நாற்பதுக்கும் அதிகமானவர்கள் ஈவிரக்கமின்றி கொலை செய்யப்பட்டனர். பலியானவர்களில் எவருமே கிட்டு மீதான தாக்குதலில் எந்தவகையிலும் சம்பந்தமில்லாதவர்கள். அது உண்மையிலேயே ஒரு அப்பாவிகள் படுகொலையேயாகும். ஆனால், தற்செயலாக இந்த சம்பவமே தவறுதலாக " கந்தன் கருணை" படுகொலை என்று குறிப்பிடப்படுகிறது. இந்த படுகொலைகள் தொடர்பாக அருணா விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனால் தடுத்துவைக்கப்பட்டார். இயக்கத்தில் அவரது உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டது வேறு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் 1987 அக்டோபரில் மோதல் மூண்டபோது அருணா விடுதலை செய்யப்பட்ட போதிலும், ஆயுதங்களை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. சில வாரங்கள் கழித்து அருணா யாழ்ப்பாணம் செம்பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக ரேராந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார். அருணா செய்த படுகொலையை நியாயப்படுத்த விடுதலை புலிகள் ஒரு கட்டுக்கதையை வெளியில் விட்டனர். மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த சில சமூகவிரோத பிரகிருதிகள் காவலுக்கு இருந்த போராளிகள் இருவரை மடக்கிப்பிடித்துக் கொலைசெய்தனர். போராளிகளின் ஆயுதங்களுடன் தப்பியோடுவதற்கு அந்த பிரகிருதிகள் முயற்சித்தனர். அங்கே துப்பாக்கிச் சண்டை மூண்டது. அப்போது சில கைதிகள் கொல்லப்பட்டு விட்டனர் என்று விடுதலை புலிகள் கூறினர். இந்தக் கதையை எவரும் பெரிதாக நம்பவில்லை. அந்த கொடூரமான படுகொலை பரவலாக கண்டனத்துக்கு உள்ளானது. கிட்டுவின் மருத்துவ சிகிச்சை அதேவேளை, அவயவம் துண்டிக்கப்பட்ட பிறகு கிட்டு ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை பெறுவதற்கு பதிலாக விடுதலை புலிகளினால் பாதுகாப்பான வீடு ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். கிட்டு தங்கியிருந்து சிகிச்சை பெறுவதன் காரணமாக யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி மீது பாதுகாப்பு படைகள் விமானக்குண்டுவீச்சு தாக்குதலை நடத்தக்கூடும் என்று விடுதலை புலிகள் அஞ்சினர். கிட்டுவை கவனிப்பதற்காக பல மருத்துவர்கள் வெவ்வேறு இரகசிய இடங்களுக்கு சென்று வந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள பிலிப்ஸ் நேர்ஸிங் ஹோமிலும் இடைக்கிடை கிட்டு மருத்துவப் பராமரிப்பைப் பெற்றார். கிட்டுவை கவனிக்கும் பொறுப்பை யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் அன்றைய பேச்சாளராக இருந்த ரஹீம் என்ற சிறீக்குமார் கனகரத்தினம் ஏற்றுக் கொண்டார். ரஹீம் கிட்டுவுடன் இரவுபகலாக தங்கியிருந்தார். கிடடுவின் மருத்துவப் பராமரிப்பை ஒருங்கிணைக்கும் பணியுடன் அவரின் பாதுகாப்புக்கும் ரஹீம் பொறுப்பாக இருந்தார். கிட்டுவின் தனிப்பட்ட உதவியாளர்கவும் அவர் செயற்பட்டார். கிட்டுவுக்கு பதிலாக பதில் தளபதியாக விடுதலை புலிகளின் மன்னார் தளபதி ராதா யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஊன்றுகோலுடன் நடந்தார் கிட்டு மனத்துணிச்சலும் தைரியமும் கொண்டவர். விரைவாக குணமடைந்த அவர் கால் ஒன்று துண்டிக்கப்பட்டதன் காரணமாக சாரம் ஒன்றை அணிந்து கொண்டு ஊன்றுகோலுடன் நடமாடித் திரியத் தொடங்கினார். இயக்கத்திற்குள் அவரது மதிப்பும் மக்கள் மத்தியிலான செல்வாக்கும் மாறாமல் அப்படியே இருந்தன. விடுதலை புலிகள் 1987 மேதினத்தை கொண்டாடியபோது அந்த அரங்கில் கிட்டு வாகனம் ஒன்றில் இருந்தவாறு கூட்டத்தினருக்கு உரையாற்றினார். குடாநாட்டின் வடமராட்சி பிரதேசத்தை மீளக் கைப்பற்றுவதற்கு 1987 மே 26/ 27 திகதிகளில் பாதுகாப்பு படைகள் " ஒப்பரேசன் லிபறேசன்" இராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது சண்டையில் ஈடுபட முடியாதவராக கிட்டு இருந்தார். ஆனால் அவர் முன்னரங்கத்தில் நின்று போராடிய தனது பையன்களுடன் வானொலி மூலமாக தொடர்புகொண்டு உற்சாகப்படுத்தி ஆலோசனைகளையும் வழங்கினார். அரசியலில் தீவிர செயற்பாடு ஒரு காலை இழந்த போதிலும் கூட, கிட்டு விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் அரசியல் ரீதியில் மிகவும் தீவிரமாக செயற்பட்டார். இந்தியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் மெக்சிக்கோ போன்ற பல நாடுகளுக்கு அவர் பயணம் செய்தார். சமாதான முயற்சிகள் பலவற்றிலும் கூட அவர் ஈடுபட்டார். இந்த விடயங்களை இந்த கட்டுரையின் நான்காவதும் இறுதியானதுமான பாகத்தில் அடுத்தவாரம் பார்ப்போம். https://www.virakesari.lk/article/204436
-
'கேணல்' கிட்டுவின் வாழ்வும் காலமும்
'கேணல்' கிட்டுவின் செயலினால் விஜய குமாரதுங்க எவ்வாறு ஏமாற்றமடைந்தார், லலித் அத்துலத்முதலி எவ்வாறு ஏமாற்றப்பட்டார் ? 15 JAN, 2025 | 12:43 PM டி.பி.எஸ். ஜெயராஜ் கடந்த வாரம் பிரசுரமான ' கேணல் ' கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் பற்றிய இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் விடுதலை புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட தளபதியாக இருந்த அவரை நான் 1986 நவம்பரில் ' இந்தியாவின் புரொண்ட்லைன் ' செய்திச் சஞ்சிகைக்காக பேட்டி கண்டதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதுவே கிட்டுவுடனான கலந்துரையாடல் ஒன்று ஆங்கில சஞ்சிகை ஒன்றில் வெளியான முதல் சந்தர்ப்பமாக அமைந்தது. அவருடனான பேட்டி குறித்து நான் குறிப்பிட்டது வாசகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த பேட்டியை மீண்டும் பிரசுரம் செய்யமுடியுமா என்பதை அறிவதில் ஆர்வம்கொண்டு பல வாசகர்கள் என்னுடன் தொடர்புகொண்டார்கள். அந்த 'புரொண்ட்லைன் ' பேட்டி நீண்ட ஒன்று அல்ல என்பதால், இந்த கட்டுரைக்குள் அவருடனான கலந்துரையாடலை சேர்க்கிறேன். 38 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் கூட, விடுதலை புலிகள் இயக்கம் மற்றும் அதன் யாழ்ப்பாணத் தளபதி பற்றி சில துல்லியமான உளநோக்குகளை அது வழங்குகிறது. இதோ அந்த பேட்டி -- புரொண்ட்லைன் பேட்டி " நாங்கள் இறப்பதற்கு தயாராயிருக்கிறோம், அவர்கள் தயாரில்லை" -- யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் கிட்டுவுடன் பேட்டி. தமிழீழ விடுதலை புலிகளின் யாழ்ப்பாணக் குடாநாட்டு பிராந்திய தளபதி அவரைப்பற்றி நிலவுகின்ற அபிப்பிராயத்துக்கு பொருத்தமில்லாத ஒரு தோற்றத்தைக் கொண்டவர். சராசரிக்கும் சற்றுக் குறைவான உயரத்தைக் கொண்ட அவர் மூக்குக் கண்ணாடி அணிந்திருப்பார். நெற்றிக்கு மேலே முன்தலையில் மயிர் இருக்காது. 26 வயதான கிட்டு என்ற சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் இப்போது இலங்கையில் பெரிதும் தேடப்படும் ஒரு தீவிரவாதி. விடுதலை புலிகள் பொதுவில் வடக்கு, கிழக்கு மாகாணங்களை குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தை தங்களது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த நாட்களில் இலங்கையில் மிகவும் பெருமளவுக்கு பேசப்படும் ஒருவராக கிட்டு விளங்குகிறார். கிட்டு மிகவும் மென்மையாகவும் மரியாதையான தொனியிலும் பேசுவார். ஒரு விடயத்தை அழுத்திக் கூறவேண்டும் என்றால் சில நேரங்களில் ஒரு புன்சிரிப்புடன் சைகைகளை காட்டுவார். அதேவேளை அவரது கண்களும் கூட சிரிக்கும். ஆனால், இயக்கத்திற்குள் ஒழுங்கு, கட்டுப்பாட்டை பேணுகின்ற விடயத்தில், அவர் மிகவும் கடுமையான பேர்வழி. யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் ஒருவரை அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கும்போது ' அர் ' என்ற விகுதியைச் சேர்த்துக்கொள்வது வழக்கம் இந்தியிலே 'ஜி' யைச் சேர்த்துக் கொள்வது போன்று. கிட்டுவை கிட்டர் என்று அழைப்பார்கள். யாழ்ப்பாணத்துச் சிறுவர்கள் அவரை கிட்டு மாமா என்று அழைப்பார்கள். கலந்துரையாடல் ஒன்றுக்காக டி.பி.எஸ். ஜெயராஜ் அவரைச் சந்தித்தார். பெயரை அவர் எவ்வாறு பெற்றார்? "நான் இயக்கத்தில் இணைந்தபோது எனக்கு வெங்கட் என்ற பெயர் கொடுக்கப்படடது. அந்தப் பெயர் வெங்கிட்டுவாக மாறி விரைவாக கிட்டுவாகியது. கிட்டு 1978 ஆம் ஆண்டில் 18 வயது பாடசாலை மாணவனாக விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தார். "நான் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவன். வல்வெட்டித்துறை மக்கள் 1950 களில் இருந்தே இராணுவ அடக்குமுறைக்கு முகங்கொடுக்க வேண்டியாருந்தது. கடத்தலையும் சட்டவிரோத குடிவரவையும் தடுப்பது என்ற போர்வையில் இராணுவம் எங்களை கொடுமைப்படுத்தியது. அது விடயத்தில் எதையாவது செய்ய வேண்டும் என்று எப்போதும் நான் விரும்பினேன். இந்த உணர்வுடனேயே நான் வளர்ந்தேன். அதற்கு பிறகு தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை இடம்பெற்றது. அடக்குமுறைக்கு எதிராக நான் போராட வேண்டியிருந்தது. அதனால் நான் விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டேன். பிரபாகரனும் கூட வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவரே.அப்போது நான் முழு அளவில் அரசியல் உணர்வு கொண்டவனாக இருக்கவில்லை. ஆனால், ஒரு விடுதலைப் போராளி என்ற வகையில் எனது செயற்பாடுகளின் ஊடாக அரசியல் அறிவையும் உணர்வுகளையும் பெற்றுக்கொண்டேன். போராட்டத்தின் ஊடாக என்னை நான் வளர்த்துக்கொண்டேன்." குறிப்பிட்ட ஒரு அரசியல் தத்துவத்தை அல்லது கோட்பாட்டை ஏற்றுக்கொள்கிறீர்களா? "நல்லது. எனக்கும் சில அரசியல் கோட்பாடுகள் இருக்கின்றன. அடிப்படையில் அது விடுதலை புலிகளின் கோட்பாடேயாகும். அதை நான் முழுமையாகப் பின்பற்றுகிறேன். நான் பெருமளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முறையில் சிந்திப்பவன். வெறுமனே பேசுவதை அல்லது ஆராய்வதை விடவும் செயல்சாத்தியமுடைய நடவடிக்கைகளை நான் விரும்புபவன். அதுவே முக்கியமானது. நான் தத்துவங்களைப் பற்றி பேசுவதில்லை. எனக்கு தத்துவம் தெரியாது. செயலில் மாத்திரமே எனக்கு நம்பிக்கை." நான் கிட்டுவிடம் அவரது நடைமுறைச் சாத்தியத்தை மையமாகக்கொண்ட அணுகுமுறைக்கு உதாரணம் ஒன்றைக் கூறுமாறு கேட்டேன். அவர் அதற்கு சாதிப் பிரச்சினையை பிரச்சினையை கூறினார். விடுதலை புலிகளின் அன்றாட வாழ்வில் சாதி என்ற விடயத்துக்கு இடமில்லை என்று அவர் கூறினார். ஆனால், இந்த பிரச்சினையில் பழமைவாத யாழ்ப்பாணச் சமூகத்தின் சிந்தனை தொடர்பில் கிட்டுவின் அணுகுமுறை வேறுபட்டது. "தாழ்த்தப்பட்டது என்று சொல்லப்படுகின்ற ஒரு சாதியைச் சேர்ந்த தகுதிவாய்ந்த உறுப்பினர் ஒருவர் எமது இயக்கத்தில் இருந்தால், சாத்தியமாகும் வேளைகளில் எல்லாம் அவரை நான் ஒரு பிரதேசத்தின் பிரதிநிதியாக அல்லது முகாம் ஒன்றின் பொறுப்பாளராக நியமிக்கிறேன். அதனால் பொதுவில் சமூகம் அதன் தவறான எண்ணங்களைக் கைவிட்டு அவருடன் விவகாரங்களைக் கையாள வேண்டியிருக்கும். சமூகங்களுக்கு இடையில் பெருமளவுக்கு புரிந்துணர்வும் உறவுமுறையும் வளரும்." "விடுதலை புலிகள் இயக்கம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்ற ஒரு உணர்வு குறிப்பிட்ட சில பிரிவினர் மத்தியில் இருக்கிறது" என்று கிட்டுவிடம் நான்கூறினேன். "ஆம், அவ்வாறு சிலர் கூறுகிறார்கள். சிலர் ஒரு படி மேலே சென்று எமது இயக்கத்தை குறிப்பிட்ட ஒரு சாதியே அதன் மேலாதிக்கத்தில் வைத்திருக்கிறது என்று கூறுகிறார்கள். சமூகத்தின் சகல பிரிவுகளும் எமககுக் கீழ் அணிதிரளுவதை தடுக்கும் நோக்குடன் இதை சிலர் தவறான பிரசாரங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால், பிரபாகரன் தனது இயக்கத்தை ஆரம்பித்தபோது என்ன நடந்தது என்பதை உங்களுக்கு கூறுகிறேன். முதலில் இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் யாராக இருந்திருப்பார்கள்? அவரது நண்பர்கள், பள்ளித் தோழர்கள், உறவினர்கள், அயலவர்கள் மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பார்கள் இல்லையா? அதனால் அவர்கள் எல்லோரும் இயல்பாகவே வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருப்பர். எமது வளர்ச்சி படிப்படியானது. நாளடைவில் மற்றையவர்களும் இணைந்து கொண்டார்கள். "தலைவர்களை நியமிப்பதில் மூப்பு முறைமை ஒன்று எம்மிடம் இருந்ததால், வல்வெடடித்துறையைச் சேர்ந்த ஆரம்பக்கட்ட அணியினர் தலைமைப் பதவிகளில் இருக்கிறார்கள். ஆனால், வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் அத்தகைய பதவி நிலைகளில் இருக்கிறார்கள். மூப்பு மற்றும் ஆற்றல் ஊடாக மற்றையவர்கள் விரைவில் முன்னுக்கு வருவார்கள். அதற்கு பிறகு இந்த வல்வெட்டித்துறை படிமம் காணாமல்போய்விடும். ஆனால், சாதி தொடர்பான குற்றச்சாட்டு முற்று முழுதாக தவறானது." விடுதலை புலிகள் இயக்கத்தில் தலைமைத்துவ போட்டி எதுவும் இல்லையா? "இல்லை. ஏன் என்று உங்களுக்கு நான் சொல்கிறேன். விடுதலை புலிகளின் போராட்ட நடவடிக்கைகளில் இறந்தவர்களை நோக்குவீர்களாக இருந்தால், அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் மேல்மட்ட அல்லது கீழ் மட்டங்களைச் சேராந்த தலைவர்களாக இருப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். இதற்கு காரணம் வெறுமனே உத்தரவுகளை பிறப்பிப்பதில் அல்ல, எமது போராளிகளுக்கு தலைமை தாங்கிச் செல்வதில் நாம் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால், எமது இயக்கத்திற்குள் போட்டி இருப்பதாக இருந்தால் கூட அது இரு வசதியான வாழ்வுக்கானதாக இருக்கமுடியாது. மரணத்தை துணிச்சலுடன் எதிர்கொள்வதற்கான போட்டியாக மாத்திரமே அது இருக்க முடியும். அதனால் போட்டி என்பது வாழ்வதற்கா அல்லது சாவதற்கா என்பதற்கேயாகும்." இந்த கட்டத்தில் நான் கிட்டுவிடம் அவர் எப்போதுமே ஆபத்துக்கு மத்தியில் நிற்பதாக யாழ்ப்பாண வாசிகள் சிலர் கூறியதைப் பற்றி கேட்டேன். ஒரு பிக் அப் வாகனத்தில் இருந்து கொண்டு ஒரு ஹெலிகொப்டரை நோக்கி கி்ட்டு சுட்டதைக் கண்டதாக ஒருவர் கூறினார். யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதல் இடம்பெறுகின்ற வேளைகளில் எல்லாம் கிட்டு களத்தில் நிற்பார். தேவையில்லாமல் உங்களை நீங்கள் ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள் இல்லையா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் அலட்சியமாகப் பதிலளித்தார். "எவ்வாறோ நான் இதுவரையில் அதிர்ஷ்டசாலியாக இருந்திருக்கிறேன். நான் இப்போது கூறப்போவதே உங்களை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கக்கூடும். ஆனால், இஸ்ரேலிய ஜெனரல் ஒருவரின் ஆலோசனையையே நான் பின்பற்றுகிறேன். அந்த ஆள் ஒருபோதுமே போர் நிலைகளுக்கு பின்னால் நின்று உத்தரவுகளை பிறப்பித்ததில்லை என்று நீண்டகாலத்துக்கு முன்னர் நான் வாசித்தேன். அவர் எப்போதுமே முன்னரங்கத்தில் நின்றவாறு" முன்னே வாருங்கள்.... எனக்கு உதவியாக நில்லுங்கள்" என்றுதான் சத்தமிடுவார். பின்னரங்கத்தில் நின்றுகொண்டு "முன்னேறிச் செல்லுங்கள்" என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை. அவர் எவ்வாறு தனது அணியினர் மத்தியில் ஒழுங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தினார்? "ஒருவரை நாங்கள் உடனடியாகவே படையணிகளில் சேர்த்துக் கொள்வதில்லை. அவரை அவதானித்து முதலில் சாதாரண பணிகளுக்கு அனுப்புவோம். அவர் தனது ஆற்றலை நிரூபித்தால் பிறகு பெரிய பொறுப்புக்கள் அவருக்கு கொடுக்கப்படும். இறுதியில் ஆயுதப் பயிற்சி வழங்கப்படும்." "எனது ஆட்கள் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லாதவர்களாக இருந்தால், அது எனது தவறே நான் கட்டுப்பாடு இல்லாதவனாக இருந்தால் எனது தலைவர் பிரபாகனில் தான் தவறு. எமது ஒழங்கு கட்டுப்பாட்டு தராதரங்கள் காரணமாகவே நாம் வேறு இயக்கங்களில் இருந்து பிரிந்து வருபவர்களை அல்லது ஏனைய குழுக்களில் இருந்துவரும் அதிருப்தியாளர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. அதேபோன்றே, எமது உறுப்பினர்களில் ஒருவர் தன்னால் எம்முடன் செயற்படமுடியாது என்று உணர்ந்தால் அவர் எம்மை விட்டு விலகிச் செல்வதற்கு சுதந்திரம் உண்டு. ஆனால், அவர் வேறு ஒரு குழுவில் இணையவோ அல்லது புதிய இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கவோ கூடாது." தலைவர் பிரபாகரனுக்கும் களத் தளபதிகளுக்கும் இடையிலான உறவு நன்றாக இருந்ததாக கிட்டு கூறினார். அவர்கள் இடையறாது தொடர்பில் இருந்தார்கள். இடைக்கிடை ஆரோசனை கலப்பதற்காக அவரைச் சந்தித்தார்கள். அவர்களது கருத்துக்களை தலைவர் பிரபாகரன் மிகுந்த அக்கறையுடன் கவனத்தில் எடுத்தார். நான் கிட்டுவிடம் சமாதான முயற்சிகள் பற்றி கேட்டேன். "திம்புவில் வெளிப்படுத்தப்பட்ட எமது கோட்பாடுகளில் நாம் உறுதியாக நிற்கிறோம். இவை எமது குறைந்தபட்சக் கோரிக்கைகள். ஜெயவர்தன அவற்றுக்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை. எனவே எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை." தனது போராளிகளினதும் அரச துருப்புக்களினதும் ஒப்பீட்டளவிலான பலம் குறித்து கிட்டு மனந்திறந்து வெளிப்படையாகப் பேசினார். "அவர்களிடம் கூடுதலான ஆட்கள் இருக்கிறார்கள். சிறந்த ஆயுதங்களும் தளபாடங்களும் இருக்கின்றன. ஆனால், எம்மிடம் தார்மீக பலமும் துணிச்சலுமே இருக்கிறது. நாம் சாவதற்கு தயாராக இருக்கிறோம். அவர்கள் அதற்கு தயாராக இல்லை. அவர்கள் முகாம்களில் இருந்து வெளியில் வருவதில்லை. ஏனென்றால், கடைசிப்போராளி இறக்கும் வரை நாம் போராடுவோம் என்பதும் தங்களுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படும் என்பதும் அவர்களுக்கு தெரியும்." புலிகளின் குரல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெருமளவு பகுதிகளை விடுதலை புலிகள் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த ஒரு நேரத்திலேயே கிட்டுவுடனான எனது இந்த கலந்துரையாடல் ஆங்கிலத்தில் பிரசுரமானது. கிட்டு அதை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்வித்தார். அது " புலிகளின் குரல் " என்று அறியப்பட்ட விடுதலை புலிகளின் ஒலிபரப்புச் சேவையில் ஒலிபரப்பானது. பேட்டி கண்டவருக்காகவும் பேட்டியை வழங்கியவருக்காகவும் இரு விடுதலை புலிகள் இயக்கப் போராளிகள் குரல் கொடுத்தார்கள். பிரபாகரனுக்கும் கிட்டுவுக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்தும் ஒரு சிறுபிள்ளைத்தனமான முயற்சியாக அந்த பேட்டியின் சில பகுதிகளை திரிபுபடுத்தி அன்று சென்னையில் இயங்கிக்கொண்டிருந்த போட்டிக் குழுக்கள் ஒரு அநாமதேய துண்டுப்பிரசுரமாக எவ்வாறு வெளியிட்டன என்பதை பல வருடங்கள் கழித்து விடுதலை புலிகளின் தத்துவவாதியும் அரசியல் மதியூகியுமான பாலா அண்ணை என்ற அன்ரன் பாலசிங்கம் என்னிடம் கூறினார். ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போனறு பண்டிதர் என்ற முன்னாள் யாழ்ப்பாணத் தளபதி ரவீந்திரன் யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் இராணுவப் பிரிவுக்கும் அரசியல் பிரிவுக்கும் பொறுப்பாக இருந்தார். கிட்டுவும் திலீபன் என்ற இராசையா பார்த்திபனும் முறையே இராணுவப் பிரிவுக்கும் அரசியல் பிரிவுக்கும் பொறுப்பாக பண்டிதரால் நியமாக்கப்பட்டனர். திலீபன் 1987 செப்டெம்பரில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். கிட்டுவும் திலீபனும் பண்டிதர் 1985 ஜனவரியில் கொல்லப்பட்டதை அடுத்து கிட்டு விடுதலை புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியானார். அரசியல் பிரிவு திலீபனின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. திலீபனை ஒப்பீடடளவில் சுதந்திரமாக இயங்குவதற்கு கிட்டு அனுமதித்தார். அன்றைய நாட்களில் இருவரும் விடுதலை புலிகளை மேம்படுத்துவதற்கு ஒன்றாக தீவிரமாக இயங்கினர். விடுதலை புலிகள் இராணுவப் பிரிவு என்றும் அரசியல் பிரிவு என்றும் பிரிக்கப்பட்ட போதிலும், இரு பிரிவுகளையும் சேர்ந்த போராளிகள் சண்டைகளில் பெரும்பாலும் ஒன்றாகவே செயற்பட்டனர். ஆயுதப் போராளிகளுக்கும் அரசியல் செயற்பாட்டளர்களுக்கும் இடையில் ஒரு கண்டிப்பான பிளவு இருக்கக்கூடாது என்பதே கிட்டுவின் நிலைப்பாடாக இருந்தது. கண்டிப்பான பிளவு ஒன்று இருந்தால் போராளிகள் மத்தியில் தேவையற்ற பொறாமை ஏற்படவும் அதன் விளைவாக ஆயுதப் போராளிகள் " அறிவிலிகள் " என்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் " கோழைகள் " என்றும் ஒரு ஆரோக்கியமற்ற ஒரு பாரம்பரியமும் வளர்ந்துவிடும். அதனால், திலீபன் உட்பட அரசியல் செயற்பாட்டாளர்கள் இராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றனர். விடுதலை புலிகளின் யாழ்ப்பாண அரசியல் பிரிவின் தலைவர் என்ற வகையில் திலீபன் கிட்டுவின் இணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் புதிய வழிமுறையைக் கடைப்பிடித்தார். யாழ்ப்பாண குடாநாடு 23 அரசியல் உப பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு அரசியல் பொறுப்பாளரின் தலைமையில் செயற்பட்டன. சகல அரசியல் பொறுப்பாளர்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெவ்வேறு இடங்களில் திலீபனின் தலைமையில் சந்திப்பார்கள். அறிக்கைகளும் மீளாய்வுகளும் சமர்ப்பிக்கப்பட்டு சகல பிரச்சினைகளும் விரிவாக ஆராயப்படும். அதற்கு பிறகு திலீபன் அரசியல் பிரிவின் நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்றம் குறித்து கிட்டுவுக்கு விரிவாக விளக்கமளிப்பார். கிட்டு -- திலீபன் இரட்டையர்களினால் இன்னொரு அம்சமும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்படும் முறைப்பாட்டு பெட்டிகளின் ஊடாக மக்கள் தங்களது முறைப்பாடுகளை விடுதலை புலிகளுக்கு தெரிவிக்கக்கூடிய நடைமுறை ஒன்று வகுக்கப்ட்டது. மக்கள் தங்களது பிரச்சினைகளை எழுதி அந்த பெட்டிகளில் போடமுடியும். அநாமதேய முறைப்பாடுகளும் கூட ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திய யாழ்ப்பாண மக்கள் விடுதலை புலிகள் இயக்கப் போராளிகளைப் பற்றிய முறைப்பாடுகளையும் கூட சமர்ப்பித்தனர். இந்த முறைப்பாடுகளின் விளைவாக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்டு போராளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. விடுதலை புலிகள் மக்களுக்கு ஓரளவுக்கேனும் பொறுப்புக்கூறுவதற்கு தாங்களாக ஏற்படுத்திக்கொண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. ஊடகங்கள் மீதான மதிப்பு விடுதலை புலிகளின் முக்கியமான தலைவர்கள் பலரைப் போலன்றி கிட்டு ஊடகங்களை மதித்து நடந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்த மூத்த பத்திரிகையாளர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் தொடர்புகளைப் பேணினார். குடாநாட்டில் இருந்த ஊடகங்களுடனும் ஊடகவியலாளர்களுடனும் தொடர்பாடலைச் செய்யும் பொறுப்பு விடுதலை புலிகளின் இரு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிட்டுவும் தனது " ஆட்சிக்காலத்தில் " யாழ்ப்பாணத்தில் பல ஊடக அமைப்புக்களை நிறுவினார். அது விடயத்தில் அவருக்கு திலீபன் சிறந்த முறையில் உதவியாகவும் ஆதரவாகவும் செயற்பட்டார். " புலிகளின் குரல் " ஒலிபரப்புச் சேவை மற்றும் " நிதர்சனம் " தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு புறம்பாக, " களத்தில் ", சுதந்திரப்பறவைகள் " என்ற இரு பிரசுரங்களும் வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளின் ஊடக விவகாரங்களில் திலீபன் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகித்தார். 1986 ஆம் ஆண்டில் பிரபலமான திரைப்பட நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய குமாரதுங்கவின் யாழ்ப்பாண விஜயத்தின் விளைவாக கிட்டுவும் யாழ்ப்பாணத்தில் அன்று விடுதலை புலிகளின் பேச்சாளராக இருந்த ரஹீமும் பெருமளவு பிரசித்தத்தை பெற்றனர். இந்த கட்டுரையின் முதல் பாகத்தில் குறிப்பிட்டதைப் போன்று ஸ்ரீலங்கா மகாஜன கட்சியின் தலைவர் விஜயவுடன் ஒஸீ அபேகுணசேகரவும் பீலிக்ஸ் பெரேராவும் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். நல்ல முறையில் வரவேற்கப்பட்ட அவர்கள் கிட்டுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விஜயவின் யாழ்ப்பாண விஜயம் மற்றும் கிட்டுவுடனான அவரின் சந்திப்புகளை காண்பிக்கும் வீடியோ தென்னிலங்கையில் பரவலாக விநியோகத்தில் இருந்தது. விஜய குமாரதுங்கவின் யாழ்ப்பாண விஜயம் விஜய குமாரதுங்க யாழ்ப்பாணம் விஜயம் எவ்வாறு நடந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. 1986 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இலங்கைப் படைவீரர்கள் இருவரைப் பிடித்து தங்களது காவலில் வைத்திருந்தனர். தமிழர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் அனுதாபத்தைக் கொண்ட ஒரு முக்கியமான சிங்கள அரசியல் தலைவரிடம் அந்த இரு படைவீரர்களையும் ஒருதலைப்பட்சமாக விடுதலை செய்வதன் மூலமாக சில அரசியல் அனுகூலங்களைப் பெறுவதற்கு விடுதலை புலிகள் தீர்மானித்தார்கள். இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாசுதேவ நாணக்காரவைப் பற்றி யோசித்தார். ஆனால், கிட்டுவும் ரஹீமும் விஜயவை சிறந்த தெரிவு என்று உணர்ந்தனர். பிறகு என்ன நடந்தது என்பதை சில வருடங்கள் கழித்து ரஹீம் என்னிடம் விபரமாகக் கூறினார். ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலை புலிகளிடம் விஜயவின் தொலைபேசி இலக்கம் கூட இருக்கவில்லை. ரஹீம் தனது அடையாளத்தை வெளிக்காட்டாமல் முன்னாள் அமைச்சர் ரி.பி. இலங்கரத்னவுடன் தொலைபேசியில் பேசி விஜயவின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டார். பிறகு அவர் விஜயவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை யார் என்று கூறினார். அதை ஒரு ஏமாற்று என்று சந்தேகித்த விஜய திருப்பி ரஹீமுடன் தொலைபேசியில் பேசினார். பல தொலைபேசி அழைப்புகளுக்கு பிறகு அது விடுதலை புலிகள் தான் என்று நம்பினார். அத்துடன் இரு படைவீரர்களையும் விடுதலை செய்வதற்கு விடுதலை புலிகள் விரும்புவது குறித்தும் அவர் மகிழ்ச்சியடைந்தார். விஜயவை மனைவி சந்திரிகா குமாரதுங்கவுடன் யாழ்ப்பாணத்துக்கு வருமாறு விடுதலை புலிகள் அழைப்பு விடுத்தனர். ஆனால், சில தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திரிகாவினால் வரக்கூடியதாக இருக்கவில்ரை. அதனால் ஒஸீ அபேகுணசேகரவுடனும் யாழ்ப்பாணம் வருவதற்கு விஜய திட்டமிட்டார். பிறகு பீலிக்ஸ் பெரேராவும் அவர்களுடன் இணைந்து கொண்டார். மூவருக்கும் விடுதலை புலிகள் அமோக வரவேற்பு அளித்தனர். காவலில் இருந்த படைவீரர்களையும் அவர்கள் சந்தித்தனர். அந்த இரு படைவீரர்களின் குடும்பத்தவர்களுடனும் சில மதத் தலைவர்களுடனும் சேர்ந்து விஜய மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வருவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. குடும்பத்தவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் முன்னிலையில் விஜரவிடம் படைவீரர்களை ஒப்படைப்பது என்பதே ஏற்பாடு என்று கூறப்பட்டது. விஜயவின் யாழ்ப்பாண விஜயமும் விடுதலை புலிகளுடனான அவரின் ஊடாட்டங்களும் விரிவான முறையில் ஔிப்பதிவு செய்யப்பட்டு வீடியோ கசட் தயாரிக்கப்பட்டது. அந்த நாட்களில் இன்டர்நெற் கிடையாது. இப்போதுள்ளதைப் போன்று 'வைறல்' என்ற சொல்லும் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. ஆனால், விடுதலை புலகளைச் சந்திப்பதற்கு விஜய யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயம் பற்றிய வீடியோ மிகவும் பிரபல்யமானது. அதன் பிரதிகள் பரவலாக விநியோகிக்கப்பட்டன. இரவோடிரவாக விஜய ஒரு பெரிய அரசியல் ஹீரோவாக மாறினார். அந்த நேரத்தில் இன உறவுகள் மேம்படுவதற்கு வீடியோ உதவியது என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. லலித் அத்துலத்முதலி கவலை ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கும் தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலிக்கும் கவலையாகப் போய்விட்டது. விஜயவை மலினப்படுத்தி படைவீரர்களின் விடுதலைக்கான ' பெருமையை 'தனதாக்கிக் கொள்ளலாம் என்று லலித் நினைத்தார். விடுதலை புலிகளுடனான தனது தொடர்பு வழிகளைப் பயன்படுத்தி படைவீரர்களின் விடுதலைக்கு பிரதியுபகாரமாக பாதுகாப்பு படைகளின் காவலில் இருந்த இரு விடுதலை புலிகள் சந்தேகநபர்களை விடுதலை செய்ய முன்வருவதாக லலித் அறிவித்தார். எந்தவிதமான பிரதியுபகாரத்தையும் எதிர்பார்க்காமல் இரு படைவீரர்களையும் விஜயவிடம் விடுவிப்பதற்கு விடுதலை புலிகள் தயாராக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, வடக்கில் இன்னொரு ' திருப்பம் ' ஏற்பட்டது. விடுதலை புலிகளின் சிரேஷ்ட தலைவரும் தனது நெருங்கிய நண்பருமான அருணா யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை காலந்தாழ்த்தியே கிட்டு தெரிந்துகொண்டார். விடுதைலை புலிகளின் படகு ஒன்று இலங்கை கடற்படையின் கப்பல் கடலில் வைத்து நடத்திய தாக்குதலில் அருணா பலியாகி விட்டார் என்றே நம்பப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த அருணா விடுதலை புலிகள் இயக்கத்தின் மிகவும் மூத்த ஒரு தலைவர். விடுதலை புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும் அவர் செயற்பட்டவர். ஆனால், விடுதலை புலிகளின் படகு ஒன்று கடலில் கவிழ்ந்ததை அடுத்து கடற்படையினரால் பிடிக்கப்பட்டபோது அருணா தனது உண்மையான அடையாளத்தை கடற்படையிடம் வெளியிடவில்லை. ' குஞ்சு குமார்' என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அருணா புலிகள் தங்களின் படகை ஓட்டுவதற்காக தன்னை பணம் கொடுத்து அமர்த்தியதாக கூறினார். அதனால் தங்களிடம் பிடிபட்டவர் விடுதலை புலிகளின் முக்கியமான ஒரு தலைவர் என்பது பாதுகாப்பு படைகளுக்கு தெரியாத நிலையில் அருணா இராணுவ காவலில் இருந்துவந்தார். திட்டத்தை மாற்றிய கிட்டு அருணா இராணுவக் காவலில் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிசெய்து கொண்டதும் கிட்டுவின் திட்டம் மாறியது. விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவரை விடுவிக்கத் தயாராயிருப்பதாக அத்துலத்முதலி செய்த அறிவிப்பை பய்படுத்தி கிட்டு இரகசியமாகப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். இரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்த அதேவேளை விஜய குமாரதுங்க இரு படை வீரர்களின் உறவினர்களுடனும் மதத்தலைவர்களுடனும் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார். அவர்களுக்கு விடுதலை புலிகள் அன்பான வரவேற்பு அளித்தனர். படைவீரர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் படைவீரர்களை விடுதலை செய்வதற்கு கிட்டு மறுத்தார். ஏமாற்றமடைந்த விஜய வெறுங்கையுடன் கொழும்பு திரும்பினார். விஜயவுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தினால் குதூகலமடைந்த தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி விடுதலை புலிகளுடனான கைதிகள் பரிமாற்றத்தை துரிதப்படுத்தினார். ஆனால், குஞ்சு குமார் என்பது உண்மையில் அருணா என்பது தெரியவந்தபோது அத்துலத்முதலிக்கு பெரிய அவமானமாகப் போய்விட்டது. அந்த நேரத்தில் அதுவரையில் பிடிபட்ட விடுதலை புலிகளின் மிகவும் மூத்த தலைவர் ஒருவரை விடயம் அறியாமல் அரசாங்கம் நழுவவிட்டது. அருணா என்பதை தெரியாமல் அவரை விடுதலை புலிகளிடம் அரசாங்கம் ஒப்படைத்த செய்தியை சகல ஊடகங்களையும் முந்திக்கொண்டு ' த இந்து ' பத்திரிகையின் அன்றைய கொழும்பு செய்தியாளர் என்ற வகையில் நானே முதலில் வெளியிட்டேன். எனக்கு இதை கூறியது கிட்டுவே. அவருக்கு அருணாவின் விடுதலை பெரியதொரு வெற்றி. பிறகு எனக்கு அத்துலத்முதலியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. என்ன நடந்தது என்பதை நான் கூறியபோது அவர் உள்ளூர சிரித்துச் சமாளித்துக்கொண்டார். யாழ்ப்பாணத்தின் முடிசூடா மன்னன் அருணா விவகாரத்துக்கு பிறகு யாழ்ப்பாண மக்கள் மத்தியில் கிட்டுவின் செல்வாக்கும் மதிப்பும் துரிதமாக உயர்ந்தது. அப்போது அவர் யாழ்ப்பாணத்தின் முடிசூடாமன்னன். ஆனால் விதி வேறுவிதமாக அமைந்து விட்டது. யாழ்ப்பாண நகர மத்தியில் கிட்டுவை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியில் தனது ஒரு காலை அவர் இழந்தார். அந்த தாக்குதலை அறிந்து சீற்றமடைந்த அருணா யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ, ஈ.பி.ஆர். எல்.எவ். இயக்க உறுப்பினர்கள் பலரை படுகொலை செய்தார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதை இந்த கட்டுரையின் மூன்றாம் பாகத்தில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/203838
-
'கேணல்' கிட்டுவின் வாழ்வும் காலமும்
06 JAN, 2025 | 10:24 PM இலங்கை ஆயுதப்படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான 33 வருடகாலப் போர் இப்போதெல்லாம் நினைவில் இருந்து மெதுவாக அருகிக் கொண்டு போகிறது. விடுதலை புலிகள் இயக்கம் 1976 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்பட்டது. மூன்று தசாப்தகால போருக்கு பிறகு விடுதலை புலிகள் முல்லைத்தீவின் நந்திக்கடல் ஏரியில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி தங்களது தோல்வியைச் சந்தித்தார்கள். வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான அந்த இயக்கத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் முக்கியமான ஒரு பாகமாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/article/203167
-
பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதனின் மறைவு வவுனியா பல்கலைக்கழகத்திற்கு பேரிழப்பு
01 FEB, 2025 | 05:02 PM பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதன் 1964 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை அல்வாய் நகரில் உள்ள வதிரிக் கிராமத்தில் பிறந்தார். யா.தேவரையாளி இந்துக்கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தார். 1989இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளங்கலைப் பட்டத்தையும், 1996 இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பாக முகாமைத்துவத்தில் டிப்ளோமாவையும், 2008இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 2006 இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் சிறந்த சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு விருது அவருக்கு வழங்கப்பட்டது. பேராசிரியர் புஸ்பநாதன் அவர்கள் 1994ஆம் ஆண்டு முதல் வடமாகாணத்தின் இணைக்கப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராக தனது சேவையினை ஆரம்பித்து, யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தொடர்ச்சியான தனது சேவையினையாற்றி இன்றைய வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் மூத்த விரிவுரையாளராக இற்றைவரை கடமையாற்றிய அர்ப்பணிப்புள்ள கல்விமானாவார். பேராசிரியர் 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை வியாபாரப் பொருளியல் துறையின் துறைத்தலைவராகவும், 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை வியாபாரக் கற்கைகள் பீடத்தின் பீடாதிபதியாகவும் தனது கல்வி நிர்வாகப் பணியினைத் திறம்பட ஆற்றினார். மேலும் தனது சேவைக்காலம் முதல் 2024ஆம் ஆண்டு வரை வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிர்வாக அலகுகளில் பணிப்பாளராகவும் சிறந்த ஆலோசகராகவும் திகழ்ந்தார். பேராசிரியர் தொழில் முயற்சியாண்மை மற்றும் சந்தைப்படுத்தல், முகாமைத்துவத் துறைகளில் குறிப்பிடத்தக்க தனது பங்களிப்பினை வழங்கியதுடன், 2021ஆம் ஆண்டு முகாமைத்துவத்தில் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்று வியாபார கற்கைகள் பீடத்திற்கும் வவுனியாப் பல்கலைக்கழகத்திற்கும் பெருமையை ஈட்டித்தந்த மகானாவார். அன்னாரினால் வழங்கப்பட்ட சேவைகள் அவரது நாமத்தை என்றும் இச் சமூகத்திலும் பல்கலைக்கழகத்திலும் நிலைத்திருக்கச் செய்யும். அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தின் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். https://www.virakesari.lk/article/205520
-
தம்பலகாமம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல்
01 FEB, 2025 | 07:33 PM (துரைநாயகம் சஞ்சீவன்) தம்பலகாமம் படுகொலையின் 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (01) காலை தம்பலகாமம் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி பகுதியில் உறவினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபிக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். தம்பலகாமம் பிரதேசத்தின் பாரதிபுரம் கிராமத்தில் 01.02.1998 அன்று இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் ஆறுமுகம் சேகர் (வயது 32), அமிர்தலிங்கம் சுரேந்திரன் (வயது 13), அமிர்தலிங்கம் கஜேந்திரன் (வயது 17), பொன்னம்பலம் கனகசபை (வயது 47), முருகேசு ஜனகன் (வயது 18), நாதன் பவளநாதன் (வயது 29), சுப்பிரமணியம் திவாகரன் (வயது 23), குணரத்தினம் சிவராஜன் (வயது 23) உள்ளிட்ட 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். குறித்த படுகொலைகள் தொடர்பாக திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கு முறையிடப்பட்டது. அந்தவகையில் 13 காவல்துறையினருக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. குற்றம் இடம்பெற்று 26 ஆண்டுகளின் பின்னர் 2024 ஏப்ரல் 26 அன்று இவ்வழக்குத் தொடர்பான தீர்ப்பு அநுராதபுரம் வடமத்திய மாகாண மேல்நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல் ஹொடபிட்டிய அவர்களினால் அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய அதிகாரி, பிரதிக் காவல்துறைப் பரிசோதகர், மேலும் 3 காவல்துறையினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது. https://www.virakesari.lk/article/205552
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வெல்கம் பக் அண்ணை!
-
வணிக பாதுகாப்புக்கு சோழன் அமைத்த நிழல்படை - 'இராசகேசரி பெருவழி' என்றால் என்ன?
பட மூலாதாரம்,YAAKKAI TRUST கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் கோவையில் காட்டுப் பகுதிக்குள் மறைந்திருக்கும் ஒரு கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் இருந்த ராசகேசரிப் பெருவழியையும், வணிகர்கள் மற்றும் மக்களுக்குப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த சீருடையற்ற நிழல் படையையும் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கிறது. அது எந்தக் கல்வெட்டு? கோவை மாவட்டத்தில் கோவைப் புதுார் என்ற மாநகர எல்லைப் பகுதிக்கு அருகிலேயே சில மலைப் பகுதிகள் இருக்கின்றன. வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த காப்புக் காட்டுப் பகுதி, பாலக்காடு கணவாய்க்கு நேர் பாதையில் உள்ளது. அங்கு பாறைகள் சூழ்ந்த புதர்களுக்கு மத்தியில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. வட்டெழுத்துகளில் பொறிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டு, சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிற்காலச் சோழ மன்னர்களின் வரிசையில் இரண்டாவது மன்னனாக இருந்த முதலாம் ஆதித்த சோழன் காலத்தைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு, இராஜகேசரிப் பெருவழி என்ற நெடுஞ்சாலையைப் பற்றிக் கூறுகிறது. "இப்போது தொழில் மற்றும் வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் மேற்கு மண்டலப்பகுதி, அக்காலத்தில் இராசகேசரிப் பெருவழியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. மேற்குக் கடற்கரைப் பகுதியையும் கிழக்குக் கடற்கரைப் பகுதியையும் இணைக்கின்ற பெருவழியாக இந்தப் பாதை இருந்துள்ளது. அந்த பெருவழியில், வணிகப் பண்டங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, சோழமன்னனால் ஒரு நிழல்படை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புப் பலகையாகத்தான் இந்த கல்வெட்டு காணப்படுகிறது" என்கிறார் யாக்கை மரபு அறக்கட்டளையின் செயலாளர் குமாரவேல் ராமசாமி. பொங்கல் பண்டிகை வரலாறு: எப்போது தொடங்கியது? பழந்தமிழர் எவ்வாறு கொண்டாடினர்? சிந்து சமவெளி: தமிழ்நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறும் புதிய ஆய்வு - எப்படி? என்ன தொடர்பு? மதுரையில் காவி கட்டி, பூணூல் அணிந்து மதமாற்ற பணி செய்த பாதிரியார் - கிறிஸ்தவ மிஷனரிகள் என்ன செய்தன? கன்னரதேவன்: போரில் சோழ இளவரசனை வீழ்த்திய ராஷ்டிரகூட மன்னர் - கல்வெட்டு தரும் சுவாரஸ்ய தகவல்கள் சோழ மன்னரால் அமைக்கப்பட்ட நிழல் படை கடந்த 1976ஆம் ஆண்டில் இந்த கல்வெட்டைப் பற்றிய தகவலறிந்து அதை நேரில் சென்று பார்த்து, அதிலுள்ள தகவல்களை பதிவு செய்தவர் தொல்லியல் ஆய்வாளர் அர.பூங்குன்றன். அப்போது கோவை மாவட்ட தொல்லியல் ஆய்வாளராக இருந்த பூங்குன்றன், பிறகு தமிழக தொல்லியல் துறையின் இணை இயக்குநராக இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். "காட்டுப் பகுதிக்குள் இருக்கும் இந்த கல்வெட்டைப் பார்த்த சிலர், புலவர் ராஜூவிடம் தெரிவித்துள்ளனர். அவர் இதைப் பற்றி என்னிடம் சொன்னார். அப்போது சுண்டக்காமுத்துாரிலிருந்து ஆறேழு கி.மீ. துாரம் நடந்து வந்து இந்த கல்வெட்டை பார்த்தேன். அதிலிருந்த எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாக இருந்தன. இராசகேசரிப் பெருவழி என்ற பெயர் மட்டும், வட்டெழுத்துடன் தமிழ் எழுத்துகளிலும் எழுதப்பட்டிருந்தது. அப்போதிருந்த தொல்லியல் துறை இயக்குநருக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தேன்" என இந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்தார் பூங்குன்றன். பட மூலாதாரம்,YAAKKAI TRUST படக்குறிப்பு, இந்த கல்வெட்டைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று யாக்கை மரபு அறக்கட்டளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது அக்காலத்தில் இவ்வழியே வரும் பல நாட்டு வணிகர்கள் அனைவருக்கும் புரியும் வகையில், இரண்டு வரி வடிவங்களிலும் இது எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார் பூங்குன்றன். "ஸ்வஸ்திஸ்ரீ கோ இராசகேசரிப் பெருவழி திருநிழலு மன்னுயிருஞ் சிறந்தமைப்ப ஒருநிழல் வெண்டிங்கள் போலோங்கி ஒருநிழல்போல் வாழியர் கோச்சோழன் வளங்காவிரி நாடன் கோழியர் கோக்கண்டன்குலவு" என இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. "சோழனின் குறியீடு சூரியன். பாண்டியர்களுக்கு சந்திரன். ஆனால் இந்த கல்வெட்டில் திங்கள் என்று குறிப்பிடுவதற்கான காரணம் இன்று வரை தெரியவில்லை. அதேபோல இதில் 3 இடங்களில் குறிப்பிடப்படும் நிழல் என்பதற்கும் அர்த்தம் புரியாமலிருந்தது. கேரளாவைச் சேர்ந்த மொழியியல் அறிஞர் ஒருவர், இதை விளக்கினார். அதாவது அக்காலத்தில் மன்னர்கள் பயணம் செய்யும்போது, அவர்களுக்கு சீருடையில்லாமல் பாதுகாப்புக்குச் செல்லும் படையைக் குறிப்பதுதான் அந்த நிழல். மன்னரே இல்லாத இப்பகுதியில் எதற்கு இந்த நிழல் படை என்ற கேள்வி எழும். அது வணிகர்களையும், மக்களையும் காப்பதற்கு மன்னரால் உருவாக்கப்பட்ட படையைக் குறிக்கிறது" என்கிறார் பூங்குன்றன். 'தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்பாடு' - மனித நாகரிக வளர்ச்சியில் இது ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 ஆலிவ் ரிட்லி: மீனவர்கள் தெய்வமாக வழிபடும் இந்த ஆமைகள் சென்னை கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்குவது ஏன்?24 ஜனவரி 2025 'கோ கண்டன்- ஆயிரம் வீரர்களைக் கொன்றவன்' பட மூலாதாரம்,XAVIER SELVAKUMAR படக்குறிப்பு, சோழர்களின் ஆட்சிப் பரப்பு பரந்து விரிந்த காலகட்டத்தில் கொங்கு நாட்டில் நிர்வாக ரீதியாகப் பதிவு செய்த முதல் கல்வெட்டு என்று இதைக் கூற முடியும் என்கிறார் குமாரவேல் ராமசாமி கொங்கு நாட்டையும் முதலாம் ஆதித்த சோழன் வென்றதற்கு இந்த கல்வெட்டும் ஒரு சான்று என்று கூறும் பூங்குன்றன், அந்த மன்னனைப் பற்றி மேற்கு மண்டலத்தில் வேறு எங்கும் கல்வெட்டு கிடைத்ததில்லை என்கிறார். இந்தக் கல்வெட்டில் கோ கண்டன் என்றொரு வார்த்தை இடம்பெற்றுள்ளது. "ஆயிரம் வீரர்களைக் கொன்றவருக்குதான் கோ கண்டன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிற்காலச் சோழர்களில், முதலாம் ஆதித்தன், இரண்டாம் இராஜராஜன் இருவருக்கும்தான் இந்த கோ கண்டன் என்ற பெயர் தரப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே தில்லை தானம் என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டின்படி, 'தொண்டை நாட்டில் பாவிய இராசகேசரி' என்பது முதலாம் ஆதித்தனை மட்டுமே குறிக்கும். அதனால் இது முதலாம் ஆதித்தனால் உருவாக்கப்பட்ட பெருவழிக் கல்வெட்டு என்பது உறுதி" என்றார் பூங்குன்றன். மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - டெல்லியில் அமைச்சரை சந்தித்த மக்கள் கூறியது என்ன?23 ஜனவரி 2025 பரந்தூர்:'முப்பாட்டன் வாழ்ந்த இடத்தை விட்டுப் போக முடியாது' - 900 நாட்களைக் கடந்து போராடும் மக்கள் - கள நிலவரம்23 ஜனவரி 2025 பட மூலாதாரம்,YAAKKAI TRUST படக்குறிப்பு, நிழல்படை என்பது வணிகர்களையும், மக்களையும் காப்பதற்கு மன்னரால் உருவாக்கப்பட்ட படை என்கிறார் பூங்குன்றன் ஆனால், இந்த இராஜகேசரிப் பெருழியை உருவாக்கியது ஆதித்த சோழன் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பெருவழி பயன்பாட்டில் இருந்தாலும், அந்தப் பாதையில் வணிகர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தன் பெயரைச் சூட்டியது முதலாம் ஆதித்த சோழன்தான் என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சி.ஆர். இளங்கோவன். "வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வாணிகம் செய்ய வந்தவர்கள், வெகுகாலமாக கேரள கடற்கரைக்கு வந்து, அங்கிருந்து கடல் வழியாகவே தஞ்சாவூர் கடற்கரைப் பகுதியை வந்தடைந்தனர். தரைவழியில் செல்வதற்கான பாதையின் நடுவே மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால், அது காடாக இருக்குமென்று கருதியுள்ளனர். பாலக்காடு கணவாய் வழியாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பழமையான ஒரு பாதை இருப்பதை பின்பே கண்டறிந்துள்ளனர். அந்த வழிதான் இராசகேசரிப் பெருவழி" என்கிறார் அவர். இந்திய பங்குச் சந்தையில் ரூ.7 லட்சம் கோடி சரிவு - டிரம்ப் காரணமா? முதலீடு செய்யலாமா, கூடாதா?22 ஜனவரி 2025 டாலருக்கு எதிராக ரூபாயின் வரலாறு காணாத வீழ்ச்சி சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்? இதற்கும் டிரம்புக்கும் என்ன தொடர்பு?21 ஜனவரி 2025 பட மூலாதாரம்,YAAKKAI TRUST படக்குறிப்பு, இந்தியாவில் பயன்பாட்டிலுள்ள ஒரே பழமையான பெருவழி இதுதான் என்று இளங்கோவன் கூறுகிறார் ரோமானிய நாணயங்கள் "தஞ்சாவூர் பகுதியிலுள்ள பூம்புகார் போன்ற ஒரு துறைமுகத்திலிருந்து, கேரளாவின் கோழிக்கோடு போன்ற துறைமுக நகரத்தை இணைக்கின்ற பாதையாக இந்த இராசகேசரிப் பெருவழி இருந்திருக்கலாம். தோராயமாக 500 கி.மீ. துாரமுள்ள இந்த வழி, வணிகத்துக்கு பெரும் பங்காற்றியுள்ளது. அதனால் கொள்ளையர்களிடமிருந்து வணிகர்களையும், பொருட்களையும் காப்பாற்ற ஒவ்வொரு 50 கி.மீ. துாரத்துக்கும் நிழல் படை அமைத்து, பொருள் பாதுகாப்பு அறை போன்ற ஓர் அமைப்பை சோழ மன்னன் ஏற்படுத்தியதையே இந்த கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது" என்கிறார் சி.ஆர். இளங்கோவன். மேற்கு பகுதியில் 20 பெருவழிகள் இருந்ததாகவும் அதில் இந்த இராசகேசரிப் பெருவழிதான் மிக முக்கியமானதாக இருந்தது என்று குறிப்பிடும் பூங்குன்றன், இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குக் கடற்கரையை இணைக்கும் இந்தப் பெருவழியைப் பயன்படுத்தி, ரோமானியர்கள் வணிகம் செய்தனர் என்கிறார். இந்தியாவில் கிடைக்கும் ரோமானிய நாணயங்களில் 80 சதவீதம் மேற்கு பகுதியில்தான் கிடைத்தது என்கிறார் அவர். மதுரை: 'புதைக்க சுடுகாடுகூட இல்லை' - விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து போராடும் மக்கள்25 ஜனவரி 2025 தந்தை இறந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இறுதிச் சடங்குகளை செய்ய முடியாத மகன் - கிறிஸ்தவர் என்பதால் புறக்கணிப்பா?24 ஜனவரி 2025 பட மூலாதாரம்,XAVIER SELVAKUMAR படக்குறிப்பு, கொங்கு நாடு வணிக வழிகளின் பிரதான சந்திப்பு என்று பெயர் பெற்றிருந்தது, அதில் முக்கியமானது இந்த இராசகேசரிப் பெருவழி என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இளங்கோவன் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பெருவழிக்கு, ஓரிரு கி.மீ. துாரத்தில்தான், தற்போதுள்ள சேலம்– கொச்சி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. புறவழிச்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பே, பல ஆண்டுகளாக அந்த சாலையே பிரதான சாலையாக பயன்பாட்டில் இருந்தது. கல்வெட்டு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் அறிவொளி நகர் என்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரியக் குடியிருப்பு உள்ளது. சற்று தொலைவில் மேற்குப் புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. அதனால் மனிதர்களாலோ, இயற்கையாலோ இந்த கல்வெட்டு அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இராசகேசரிப் பெருவழி கல்வெட்டு குறித்து, கோவை மாவட்ட தொல்லியல் அலுவலர் (பொறுப்பு) சுரேஷிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ''அந்த கல்வெட்டைப் பாதுகாப்பது குறித்து, இதுவரை எந்த கோரிக்கையும் தொல்லியல் துறைக்கு வரவில்லை. ஆனாலும் அதன் முக்கியத்துவம் கருதி, அந்த கல்வெட்டை ஆய்வு செய்து, தேவைப்படின் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c62qgd8jl30o
-
இந்திய மீனவர்களே இலங்கையின் எல்லை தாண்டி மீன்பிடிக்க வராதீர்கள்; மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க தலைவர்
01 FEB, 2025 | 04:15 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாச தலைவர் நூர் மொஹமட் ஆலம் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (31) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்கள் கடந்த வாரம் இலங்கை கடற்பரப்பில் நுழைந்த போது ஏற்பட்ட அசம்பாவிதத்தை இந்திய தரப்பு பூதாகாரமான விடையமாக மாற்றியுள்ளனர். அதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாத நிலையில் அவர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் அமைந்துள்ளது. நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். இந்திய மீனவர்களை அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைய வேண்டாம். அவர்கள் நுழைகின்ற சமயத்தில் இலங்கை கடற்படை அவர்களை கட்டுப்படுத்தாமல் அசமந்தப் போக்குடன் நடந்து கொண்டு இருக்கிறது. இவ்விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்தையும் நாங்கள் விமர்சித்து குறை கூறி வருகிறோம். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுல் நுழைகின்ற நாட்களில் இலங்கை மீனவர்கள் குறிப்பாக வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை அந்த மீனவர்களுக்கு ஏற்படுகின்ற சொத்து இழப்புக்களை கணக்கிட்டு பார்த்தால் சுமார் 700 மில்லியன் ரூபாய் சொத்துக்களை வடபகுதி கடலில் இழந்திருக்கிறோம். இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கையினால் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் இவ்வளவு நாசமாகியுள்ளது. இந்த விடையங்கள் அனைத்தும் இந்திய தரப்பிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை நாங்கள் ஆதார பூர்வமாக கூறுகின்றோம். எனவே இந்திய மீனவர்கள் உள்நுழைவதை தடுப்பதற்கு நாங்கள் அரசுக்கு விடுக்கின்ற கோரிக்கைகள் அல்லது அழுத்தங்கள் காரணமாக கடற்படையினர் இலங்கை கடல் எல்லையில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். எனினும் இலங்கை எல்லையில் இன்றி எமது கரையோர பகுதிகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த இந்திய மீனவர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய தரப்பினரால் கூறப்படுகின்ற விடையங்களை சகித்துக் கொள்ள முடியாத நிலை உள்ளது. வெறுமனே இலங்கை கடற்படை, வட பகுதி மீனவர்கள், இலங்கை அரசின் மீதும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். குறித்த துன்பியல் சம்பவமானது இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகில் கடற்படை வீரர் ஒருவர் பாய்ந்து படகை நிறுத்தக் கோரிய போது குறித்த கடற்படை வீரரை கடத்த முயன்ற போது குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. மீனவர்களின் படகில் 5 முதல் 8 மீனவர்கள் மாத்திரம் கடலில் பயணிப்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் குறித்த படகில் 13 பேர் வரை பயணித்துள்ளனர். ஒரு படகில் 13 பேர் பயணிக்க இந்திய தரப்பு எவ்வாறு அனுமதி வழங்கியது? பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிச் சிட்டை வழங்குகின்றனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் ஒரு படகில் எவ்வாறு பயணித்தார்கள்? இந்திய கடல் இல்லையை தாண்டக்கூடாது என்கின்ற நிபந்தனையும் குறித்த சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலே குறித்த நிபந்தனைகளையும் மீறி அவர்கள் வருகின்றனர். எனினும் அவ்வாறு வருகின்றவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, மீண்டும் விடுவிக்கப்படுகின்றனர். இந்த நிலையிலே அவர்கள் தொடர்ந்து இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மீனவர்கள் மீது இந்திய தரப்பு இது வரை என்ன நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று கூறிக்கொண்டு, சந்திர மண்டலத்திற்கும், செவ்வாய்க்கிரகத்திற்கும் ஆய்வுக்காக அனுப்புகின்றனர். எனினும் தங்கள் நாட்டு மீனவர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டுகின்ற போது உயிரிழப்புக்களையும் சந்திக்கின்றார்கள். கடற்படையினரால் கைதும் செய்யப்படுகின்றனர். எனினும் இலங்கை அரசாங்கத்திடம் எவ்வித தொழில்நுட்பமும் இல்லை. எனவே இந்தியாவினால் இயலாதா? தமது நாட்டின் எல்லையை பாதுகாக்க? தமது நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுகின்றார்கள் என கூறும் இந்திய அரசு தமது மீனவர்களை பாதுகாக்க அவர்களே முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமது நாட்டு எல்லையையும் பாதுகாக்க வேண்டும். ஏன் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டிற்கு இந்திய அரசு வருகின்றது இல்லை. இலங்கையில் தனது ஆதிக்கத்தை காண்பிக்கவே இந்தியா இவ்வாறு செயல்படுகின்றது. இதனை வட பகுதி மீனவர்களும் இலங்கை மக்களும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் முழுமையாக உறுதுணையாக இருப்போம். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வருவதை தடுப்பதற்கு கடற்படைக்கும் இலங்கை அரசுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்திய தரப்பிற்கு ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம். இலங்கை எல்லையை தாண்டி மீன் பிடிக்க வராதீர்கள். இவ்வாறு எல்லையை தாண்டினால் இவ்வாறான துன்பியல் சம்பவம் நடப்பதை தவிர்க்க முடியாது என்றார். https://www.virakesari.lk/article/205514
-
யாழ். மாவட்டத்தின் சுற்றுலா வழிகாட்டி நூல் ஜனாதிபதியால் வெளியீடு
01 FEB, 2025 | 02:40 PM யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிற்றல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்று வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் முன்னிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகங்க பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கலாசார ரீதியான சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய வகையில் விஞ்ஞான ரீதியான ஆய்வினூடாகவும், களத்தரிசிப்பினூடாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா மையங்களையும் சுற்றுலாப் பயனிகளையும் இணைப்பதற்கான பிரதான சரியான பெறுமதிப்படுத்தப்பட்ட தகவல் நூல் இன்மையினால் சுற்றுலா அபிவிருத்தியில் அவை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதனை உணர்ந்து, இவ் பிரதான இடை வெளியை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாவட்டச் செயலகத்தால் பல்வேறு நூல்கள் மற்றும் கையேடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு அங்கமாக மேற்படி நூல் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/205503
-
நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள், தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன ; நளிந்த ஜயதிஸ்ஸ
01 FEB, 2025 | 01:17 PM (செ.சுபதர்ஷனி) இந்நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன. ஆகையால் நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதுடன் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை போஷாக்கு சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வறிக்கை வெயிட்டு அமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், நாட்டின் போசாக்கு நிலையை உயர்த்துவதன் மூலம் சுகாதாரத்தை பாதுகாப்பதுடன், உடலியல் செயற்பாடுகளுக்கு வாய்பளிப்பதன் மூலம் தொற்றா நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்துவதும், நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுவது அவசியம். இது தனிநபர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நாட்டின் சுகாதார கட்டமைப்பு மீதான தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும் உதவும். இந்த இலக்கை அடைய, மருத்துவ வல்லுநர்கள், போசாக்கு நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனைய சமூகம் சார்ந்த பல பங்குதாரர்களின் பங்களிப்புடன் நோய் தடுப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். மேற்படி விடயத்தில் இலங்கை ஊட்டச்சத்து சங்கம் தனது முதன்மையான பங்களிப்பை வழங்கி வருவதும் பாராட்டத்தக்க விடயமாகும். இது ஊட்டச்சத்து நிபுணர்கள், வைத்தியர்கள், மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் பரந்த அமைப்பாக உள்ளது. ஆகையால் இந்நாட்டில் அதிகரித்துள்ள தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் சுகாதார கட்டமைப்பின் மீது பெரும் சுமையாக மாறியுள்ளன. ஆகையால் நோய்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதுடன் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுபாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/205493
-
டீப்சீக் செயலி: தடை விதித்த அமெரிக்க கடற்படை, சந்தேகம் கிளப்பும் ஆஸ்திரேலியா - என்ன நடக்கிறது?
அமெரிக்க சந்தையை ஆட்டம் காண வைத்துள்ள டீப்சீக் ஏஐ செயலி பற்றி ஆஸ்திரேலியா சந்தேகத்தை கிளப்புகிறது. அமெரிக்கா கடற்படை தனது வீரர்கள் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்திருப்பதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது. இந்த ஏஐ செயலி பாதுகாப்பானதா? டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஐ செயலியான டீப் சீக் குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் எட் ஹுசிக், தனியுரிமை பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீன செயலி குறித்து முதல் மேற்கத்திய அரசாங்க உறுப்பினராக பாதுகாப்பு கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார் எட் ஹுசிக். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "டீப்சீக் அமெரிக்கா விழித்தெழுவதற்கான ஒரு அழைப்பு" என்று கூறினார். ஆனால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அவர் குறிப்பிடவில்லை. இந்த செயலி குறித்த கவலைகளை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அமைச்சர் ஹுசிக், தரவு மற்றும் தனியுரிமை மேலாண்மை உட்பட பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன என, ஏபிசி செய்தியிடம் கூறினார். எனினும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இதுவரை அத்தகைய எச்சரிக்கையைக் வெளிப்படுத்தவில்லை. டீப் சீக் செயலியை இந்த இரண்டு நாடுகளிலும் 3 மில்லியன் பேர் டவுண்லோடு செய்திருப்பதாக டிஜிட்டல் சந்தை ஆய்வுத் தளமான சென்சார் டவர் கூறுகிறது. சாத்தியமான பாதுகாப்பு மற்றும் நெறிமுறை கவலைகள் காரணமாக அமெரிக்க கடற்படை அதன் உறுப்பினர்கள் டீப்சீக் செயலிகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்துள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது. விரிவாக காணொளியில்... - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvqgdvz554o
-
நாட்டை பழைய பாதையில் அழைத்துச்செல்ல முடியாது; இராமலிங்கம் சந்திரசேகர்
01 FEB, 2025 | 11:38 AM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற யாழ். வல்வெட்டித்துறை கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் மேலும்தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்துள்ளன, எனினும் எமது மக்களின் பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. இந்த மக்கள் பெரும் துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும் மக்களை கொண்ட மாகாணமாக வட மாகாணம் உள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அன்று எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்த மக்களை மீட்டெடுப்பதே தனது நோக்கம் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மக்களுக்கு வளமான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதே தனக்கும் மக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு எனக் கூறியிருந்தார். வட பகுதியில் தற்போது போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வாள்வெட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. சுதந்திரமாக வாழமுடியாத சூழ்நிலை உள்ளதாக தேர்தலுக்கு முன்னதாக என்னை சந்தித்த மக்கள் கூறினார். இதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத் தருமாறு கோரினார்கள். நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தி கொடுப்பதே எமது இலக்காகும். அதுவே எமது கனவாகும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு பிரதான தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எமக்கு வாக்களிக்காத மக்களையும் இதில் இணைத்துக் கொண்டு ஒன்றாக பயணிக்க நாம் தயாராகவே உள்ளோம். மீண்டும் இந்த நாட்டை தோல்வி அடைந்த பழைய பாதையில் அழைத்துச் செல்ல முடியாது என்றார். https://www.virakesari.lk/article/205489
-
மத்திய பட்ஜெட் 2025: நிர்மலா சீதாராமன் உரையின் முக்கிய அம்சங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES 1 பிப்ரவரி 2025, 03:33 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். "அனைத்து பெரிய பொருளாதார நாடுகளுள் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. இந்தியாவின் கடந்த 10 ஆண்டு வளர்ச்சிப் பாதை மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் திறன் மீது நம்பிக்கை உயர்ந்துள்ளது" என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்று பட்ஜெட் தாக்கல்: வேலைவாய்ப்பு, பணவீக்கம் - இந்திய அரசு முன் உள்ள சவால்களும் எதிர்பார்ப்புகளும் பாகிஸ்தானில் பல்லாயிரம் கோடி ரூபாய் தங்க இருப்பு கண்டுபிடிப்பா? என்ன நடக்கிறது? டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்? ஹிண்டன்பர்க்: அதானி குழுமத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்த்த நிறுவனம் மூடப்படுவது ஏன்? வருமான வரி மசோதா வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 12 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது. புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீடு 74 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. பட மூலாதாரம்,ANI விவசாய துறை அறிவிப்புகள் பிகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும். வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையில் இது உதவும். மக்கானா (தாவர விதைகள்) விவசாயிகளுக்கு இது பயனளிக்கும். உலகளவில் 85% மக்கானா உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. இதில், இந்தியாவில் 90% மக்கானா பிகாரில் உற்பத்தியாகிறது. பிகாரில் உணவு பதப்படுத்துதலுக்காக தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் நிர்வாக மையம் அமைக்கப்படும். இந்த பட்ஜெட்டில் 10 முக்கியப் பகுதிகள் உள்ளன. விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது இந்த பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. வேளாண் திட்டத்தில் 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும். பிரதம மந்திரி தன் தானியா எனும் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும். அதிக விளைச்சல் தரும் விதைகளுக்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். காய்கறிகள் மற்றும் பழங்களுக்கென ஒருங்கிணைந்த வகையில், மாநிலங்களுடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்படும். உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்கு கவனம் செலுத்தப்படும். எண்ணெய் மற்றும் பருப்பு வகைகளுக்கு என ஆறு ஆண்டுகளாக திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் கடன் பெறும் தொகையின் அளவு உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஏற்கெனவே உள்ள ரூ.3 லட்சம் எனும் தொகையிலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமான ஆம்புலன்ஸ், குழந்தை நோயாளியுடன் சென்றபோது நடந்த விபத்து4 மணி நேரங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் குணப்படுத்த முடியாத நோயாளிகள் கண்ணியத்துடன் இறக்க அனுமதி - முக்கிய செய்திகள்7 மணி நேரங்களுக்கு முன்னர் தொழில் துறை தொடர்பான அறிவிப்புகள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் அரசு வழங்கும் பங்காக ஏற்கெனவே உள்ள ரூ.10,000 கோடியுடன் கூடுதலாக ரூ.10,000 கோடி ஒதுக்கப்படும். முதன்முறையாக ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கும் 5 லட்சம் பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படும். காலணிகள் மற்றும் தோல் துறையில் கவனம் செலுத்தும் வகையில் திட்டம் ஒன்று தொடங்கப்படும். இதன்மூலம், 22 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பொம்மைகள் தயாரிப்பில் இந்தியா மையமாக உருவெடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தெருவோர கடை வைத்திருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ரூபாய் 30,000 வரை கடன் பெறும் வகையிலான கடன் அட்டை வழங்கப்படும். இது, யூபிஐயுடன் இணைக்கப்படும். இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் கிக் தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ளலாம் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்மூலம், அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். மேலும், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும். நிரந்தர, முழுநேர வேலைகளுக்குப் பதிலாக, குறுகிய கால அளவில், நேர நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கும் வேலைவாய்ப்புகளைக் கொண்ட சந்தையே கிக் பொருளாதாரம் என அறியப்படுகிறது. இவை பெரும்பாலும், ஓலா, உபெர், ஸ்விக்கி, ஜொமாட்டோ, அர்பன் கம்பெனி போன்ற செயலி-சார் பணிகளாகச் சமீப காலங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆவடி: தந்தை, மகள் உடலை அழுகாமல் 5 மாதம் பூட்டிய வீட்டில் பதப்படுத்திய மருத்துவர் - என்ன நடந்தது?3 மணி நேரங்களுக்கு முன்னர் விராட் கோலி: ரஞ்சி கோப்பை போட்டியில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா?31 ஜனவரி 2025 கல்வி பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். நாடு முழுதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும். ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 100% அதாவது 65,000இல் இருந்து 1.35 லட்சம் எனும் அளவில் உயர்ந்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு அமைக்கப்பட்ட 5 ஐஐடி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும். மற்ற அறிவிப்புகள் உயிர்காக்கும் மருந்துகள் சிலவற்றின் விலைகள் குறையும் எனத் தெரிவித்துள்ளார். புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான மருந்துகளுக்கான சுங்க வரி குறைக்கப்படும். ஆறு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான 36 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும். இந்திய அரசின் வட்டார விமான நிலையங்களின் வளர்ச்சி தொடர்பான உடான் திட்டம் (UDAN), 120 பிராந்திய அளவில் புதிய பகுதிகளை இணைக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும். இதன்மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி பயணிகள் விமானங்களில் பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. சக்ஷம் அங்கன்வாடி போஷன் 2.0 திட்டத்துக்கு உரிய நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம், 8 கோடி குழந்தைகள் பயன் பெறுவர். இதனுடன், ஒரு கோடி கர்ப்பிணிகளும் பயனடைவர். புத்தரின் காலம் மற்றும் வாழ்க்கையுடன் தொடர்புடைய இடங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும். தனியார் துறையுடன் இணைந்து மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும். மாநிலங்களுடன் இணைந்து 50 சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும். துளசிமதி முருகேசன்: அவமானங்களை கடந்து தந்தை உதவியுடன் சாதித்த தமிழக வீராங்கனையின் வெற்றிக் கதை18 ஜனவரி 2025 நடிகர் அஜித் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 53 வயதில் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்று சாதிக்க உதவியது எது?14 ஜனவரி 2025 வருமான வரியில் புதிய மாற்றம் என்ன? பட மூலாதாரம்,SANSAD TV முன்னதாக, ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு இந்த விலக்கு இருந்தது. இதற்கு முன்பு ரூ. 12.75 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரியிலிருந்து ரூ.75 ஆயிரம் என்பது நிலையான கழிவாக (Standard deduction) இருந்தது. அதாவது, ரூ.75,000ஐ திரும்பி பெற்றுக்கொள்ள முடியும். தற்போது புதிய அறிவிப்பின் மூலம், ரூ.75,000 கழிவு என்பதே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்போது பேசிய நிர்மலா சீதாராமன், "ரூ.2.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 2014இல் வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது. இந்த வரம்பு 2019இல் ரூ.5 லட்சமாகவும் 2023இல் ரூ.7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது" எனத் தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு நடுத்தர மக்கள் பெரும் பங்கு அளிப்பதாகவும், அதைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு காலகட்டங்களில் அவர்களின் வருமான வரி சுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தனது உரையில் தெரிவித்தார். 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் தொடர்ச்சியாக, 8வது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட்டுகளை வெவ்வேறு காலகட்டங்களில் தாக்கல் செய்துள்ளார். மொரார்ஜி தேசாய் நிதியமைச்சராக 1959-64 காலகட்டத்தில் 6 பட்ஜெட்டுகளையும் பின்னர் 1967-69 காலகட்டத்தில் 4 பட்ஜெட்டுகளையும் தாக்கல் செய்திருக்கிறார். தற்போது, நிர்மலா சீதாராமன் அந்தச் சாதனையை நெருங்கி வந்துள்ளார். பொருளாதார ஆய்வறிக்கை முன்னதாக, இந்தியாவின் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். அதில், 2025-26 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3-6.8% என்ற விகிதத்தில் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்ட கால தொழில் வளர்ச்சியை வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் அனைத்தும் வலுவாக இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து வலுவாக இருப்பதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77r3742476o
-
அமெரிக்கவில் மாற்றுமொரு விமான விபத்து
அமெரிக்காவில் வீடுகள் மீது விழுந்து நொருங்கிய விமானம்! Published By: DIGITAL DESK 2 01 FEB, 2025 | 11:26 AM ஒரு குழந்தை உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய அம்பியூலன்ஸ் விமானமொன்று அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு மேல் விழுந்து நொருங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது, விமானம் வீழ்ந்து வெடித்ததில் அங்கிருந்த பல வீடுகளில் தீ பற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேத விபரங்கள் பற்றி இதுவரை செய்திகள் வெளியாவில்லை. நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை நோயாளி மற்றும் அவரது தாய், விமானி உள்ளிட்ட 3 மருத்துவ பணியாளர்கள் குறித்த விமானத்தில் பயணித்துள்ளதாக ஏர் அம்பியூலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் அம்பியூலன்ஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/205488
-
இந்தியா - இங்கிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
IND vs ENG: இந்திய அணி டி20 தொடரை வென்றது எப்படி? ராணாவை களமிறக்கியது சர்ச்சையாவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் புனேவில் நேற்று நடந்த நான்காவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் சேர்த்தது. 182 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 15 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது. சூர்யகுமார் யாதவ் கேப்டன்சியில் இதுவரை தொடரை இழக்காமல் இந்திய அணி பயனித்துள்ளது. அது மட்டுமின்றி 2019ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இரு நாடுகளுக்கு இடையிலான டி20 தொடரைத் தொடர்ந்து 17வது முறையாக இந்திய அணி வென்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய அணி ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 3 விக்கெட், 79 ரன்களுக்கு 5 விக்கெட் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இடையிலான பார்ட்னர்ஷிப்தான் அணியை பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும், ஷிவம் துபே 33 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகள் உள்பட 53 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இருவரும் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு உதவினர். பந்துவீச்சில் வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்சித் ராணா, ரவி பிஸ்னோய் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். குறிப்பாக களத்தில் வலுவாகக் காலூன்றிய ஹேரி ப்ரூக் ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பியபோது, அவரின் விக்கெட்டை வருண் வீழ்த்தியதோடு, அதே ஓவரில் கார்ஸ் விக்கெட்டை சாய்த்து ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தியபோது இங்கிலாந்து தோல்விப் பாதைக்குள் பயணிக்கத் தொடங்கியது. மேலும், 19வது ஓவரின் இறுதிவரை களத்தில் நின்று 53 ரன்கள் சேர்த்த ஷிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விராட் கோலி: ரஞ்சி கோப்பை போட்டியில் க்ளீன் போல்ட் – சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர வேண்டுமா? ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் எதிரணிகளை கலங்கடித்த மறக்க முடியாத 10 தருணங்கள் வருண் வித்தியாசமான சாதனை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றியை பறித்த 'மோசமான முடிவுகள்' இந்தியா த்ரில் வெற்றி: ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய வாஷிங்டன் சுந்தர் விமர்சனத்திற்கு உள்ளாகும் இந்திய அணியின் வெற்றி ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றதில்தான் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஓவர்டன் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்டபோது, 143 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட 5வது பந்து ஷிவம் துபேவின் தலைக் கவசத்தில் பட்டு பந்து தெறித்தது. இதுபோன்ற நேரத்தில் உரிய முதலுதவியும், தேவைப்பட்டால் வீரரின் உடல்நிலைக்கு ஏற்ப மாற்று வீரர் விளையாடுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும் என்பது ஐசிசி விதி. இன்னிங்ஸ் முடிந்து பெவிலியன் சென்றபின் ஷிவம் துபேவுக்கு ஃபீல்டிங் செய்ய முடியாததால் அவருக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா கன்கசன் மாற்றுவீரராகக் களமிறக்கப்பட்டு பந்துவீச வைக்கப்பட்டார். ராணா எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகளும் வெற்றிக்கு முக்கியமானவையாக, திருப்புமுனையாக மாறின. ஐசிசி விதிப்படி, காயமடைந்த ஒரு வீரர் எந்தத் தகுதியில் இருக்கிறாரோ அதே தகுதியில்தான் கன்கசன் மாற்றுவீரரையும் களமிறக்க வேண்டும். ஒரு பேட்டர் கன்கசனில் வெளியேறினால் பேட்டரை களமிறக்கலாம், பந்துவீச்சால் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரையும், ஆல்ரவுண்டருக்கு பதிலாக ஆல்ரவுண்டரையும் களமிறக்கலாம். இந்நிலையில் ஷிவம் துபே ஒரு பேட்டர், ஆனால், அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரான ஹர்சித் ராணாவை களமிறக்கி விளையாட வைத்து இந்திய அணி பெற்ற வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என வர்ணனையாளர்களும், இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டென் மெக்கலமும் போட்டி முடிந்தபின் நடுவர்களுடன் மைதானத்தில் நீண்ட ஆலோசனை நடத்தினார். அமெரிக்கா: வெடித்துச் சிதறிய விமானம், குழந்தை நோயாளியுடன் சென்றபோது விபரீதம் - நிலவரம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று பட்ஜெட் தாக்கல்: வேலைவாய்ப்பு, பணவீக்கம் - இந்திய அரசு முன் உள்ள சவால்களும் எதிர்பார்ப்புகளும்6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "எங்கள் தோல்விக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், கன்கசனில் லைக் டூ லைக் மாற்றுவீரர் சரியானதாக எனக்குத் தெரியவில்லை, அதில் விருப்பமும் இல்லை," என்று தெரிவித்தார். அதோடு, "இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஷிவம் துபேவால் 25 கி.மீ வேகத்தில்கூட பந்துவீச முடியாது. ஆனால், ஹர்சித் ராணா 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர், பேட்டிங் சரியாக வராது. ஆனால், துபே சிறந்த பேட்டர். எப்படி இது சரியான கன்கசன் மாற்று வீரராக இருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் உண்மையாக வென்றிருக்க வேண்டும். கன்கசனில் மாற்று வீரராகச் சேர்க்கப்பட்ட முடிவை நாங்கள் ஏற்கவில்லை," என்றும் கூறினார். மாற்று வீரராக இதுபோன்ற வீரரைக் களமிறக்கும் முன்பாக எதிரணியிடம் ஆலோசனை நடத்த வேண்டும் எனவும் ஆனால் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை எனவும் ஜோஸ் பட்லர் குறிப்பிட்டார். "நான் பேட்டிங் செய்ய வந்தபோது, திடீரென ஹர்சித் ராணா பந்துவீச வருகிறார். இவர் எப்படி பந்து வீசுகிறார் என்று எனக்கு குழப்பம் ஏற்பட்டது. இது உண்மையில் ஏற்க முடியாத முடிவு. சரியான மாற்று வீரர் முடிவும் அல்ல. இது போட்டி நடுவர் ஸ்ரீநாத் எடுத்த முடிவு என்று இந்திய அணி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் போட்டி நடுவரிடம் சில கேள்விகளை எழுப்பி நாங்கள் எங்கள் நிலையைத் தெளிவுபடுத்துவோம். எங்களுக்கு வெற்றி பெறுவதற்குப் பல வாய்ப்புகள் இந்த ஆட்டத்தில் இருந்தன. ஆனால், பயன்படுத்த முடியாததற்குப் பல காரணங்கள் இருந்தாலும் அதில் இதுவும் ஒன்று" எனத் தெரிவித்தார். மகாராஷ்டிரா: பெண்ணின் கருவில் இருந்த குழந்தை வயிற்றில் ஒரு கரு உருவானது எப்படி?8 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் ஒரே இமெயிலில் 3,000 பேரை வேலையை விட்டு நீக்கிய அமெரிக்க நிறுவனம் – என்ன நடந்தது?31 ஜனவரி 2025 இந்திய அணி கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் மோர்கல் கூறுகையில், "இது முற்றிலும் எங்களின் முடிவல்ல. கன்கசன் மாற்றுவீரராக ராமன்தீப் சிங், ஹர்சித் ராணா இருவர் பெயரைக் கொடுத்தபோது, போட்டி நடுவர் ஸ்ரீநாத் தேர்வு செய்ததுதான் இறுதி முடிவு. ராணாவின் பெயரைத் தேர்வு செய்தபோது, அவர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார் உடனடியாகக் களமிறங்க அவரை அவசரப்படுத்தினோம். இந்த முடிவு எங்களை மீறியது, பெயரை மட்டுமே நாங்கள் அளிக்க முடியும், முடிவெடுப்பது போட்டி நடுவர்தான்" எனத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி வர்ணணனையாளர்களாக இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கெவின் பீட்டர்சன், நிக் நைட் இருவரும், இந்திய அணி கன்கசன் மாற்றுவீரராக துபேவுக்கு பதிலாக ஹர்சித் ராணா களமிறங்கியது குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பி விமர்சித்தனர். கன்சனில் செல்லும் வீரரின் தகுதிக்கு நிகரான மாற்றுவீரரைக் களமிறக்க வேண்டும், மாற்றுவீரரை களமிறக்கும் முன் எதிரணியினரிடம் ஆலோசிக்கலாம் என்ற இரு ஐசிசி விதிகளுமே நேற்று கடைபிடிக்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. ஒருவேளை ஐசிசி விதியின்படி துபேவுக்கு மாற்றாக ராமன்தீப் சிங் அல்லது பேட்டரை களமிறக்கி இருந்தால், நேற்றைய ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியிருக்கக் கூடும். ஏனென்றால், ஹர்சித் ராணா கடைசி நேரத்தில் எடுத்துக் கொடுத்த 3 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தது. அப்படியிருக்கையில் ஹர்சித் ராணாவால் வெற்றி பறிபோனதை, இங்கிலாந்து வீரர்கள் ஏற்கவில்லை என்று அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்திய அணி வெற்றி பெற்ற விதம் சரியானதா, இது நேர்மையானதா என்ற கேள்விகள், விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் ரசிகர்களால் முன்வைக்கப்படுகிறது. ஆதவ் அர்ஜுனா: திமுக-வில் அரசியலை தொடங்கியவர் விஜய் உடன் இணைந்தது எப்படி?31 ஜனவரி 2025 சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?31 ஜனவரி 2025 இந்திய அணியின் டாப் ஆர்டர் தோல்வி பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணியின் பேட்டிங்கில் நேற்றும் வழக்கம்போல் டாப் ஆர்டர் தோல்வி அடைந்தனர். சாம்ஸன் தொடர்ந்து 4வது போட்டியில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடினாலும் 29 ரன்களில் ரஷித் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் இரண்டாவது முறையாக டக்அவுட்டில் வெளியேறினார், இவரின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வருகிறது. ரிங்கு சிங் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளையும், 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையில் இருந்தது. 6வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே இருவரும் சேர்ந்து ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கி இருவரும், சரிந்திருந்த ரன்ரேட்டை உயர்த்தினர். ஹர்திக் 27 பந்துகளிலும், துபே 31 பந்துகளிலும் அரைசதம் அடித்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தநிலையில் பாண்டியா 53 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிவரை களத்தில் இருந்த துபே 53 ரன்களில் ரன்அவுட் ஆனார். கடைசி ஓவரில் மட்டும் இந்திய அணி அக்ஸர் படேல், அர்ஷ்தீப், துபே ஆகிய 3 விக்கெட்டுகளை இழந்தது. 180 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் என இருந்த இந்திய அணி ஒரு ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ஆட்டம் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து பக்கம் இருந்தது. 78 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என இக்கட்டான நிலையில் இருந்தபோது, ஹர்திக், துபேவின் ஆட்டம்தான் திருப்புமுனையாக மாறியது. அதேநேரம் இருவரும் பிரிந்த பிறகு களமிறங்கிய எந்த பேட்டரும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை. இந்தத் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட அக்ஸர் படேல் இதுவரை ஒரு போட்டியில்கூட பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. 'சரியான திசையில் செல்கிறோம்' வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "அணியில் உள்ள ஒவ்வொருவரும் தொடக்கம் முதல் கடைசி வரை சிறப்பாகச் செயல்பட்டோம். 12 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்த தருணத்தில்கூட நம்பிக்கையை இழக்காமல் அதிரடியாகவே பேட் செய்தோம். துபே, பாண்டியா தங்களின் அனுபவத்தை இந்த ஆட்டத்தில் வெளிப்படுத்தியது சிறப்பு. இதைத்தான் வலைப்பயிற்சியில் பேசினோம், அதைச் செய்துள்ளனர். சரியான திசையில் நாங்கள் செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. பவர்ப்ளேவுக்கு அடுத்து வரும் ஓவர்கள் முக்கியமானவை என்று எனக்குத் தெரியும், அந்த நேரத்தில் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. சில விக்கெட்டுகளை வீழ்த்தினோம், ராணா 3வது பந்துவீச்சாளராக வந்து சிறப்பாகப் பந்துவீசினார்" எனத் தெரிவித்தார். உங்களால் இரவில் தூங்க முடியவில்லையா? - நீங்கள் செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் என்ன?31 ஜனவரி 2025 சியரா ஸ்பேஸ்: காற்றே இல்லாத நிலவில் ஆக்சிஜன் தயாரிக்க உதவும் கருவி - எப்படி செய்யும்?30 ஜனவரி 2025 இங்கிலாந்து தோல்விக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் அற்புதமாக இருந்தது, நடுவரிசையில் ஹேரி ப்ரூக்கின் ஆட்டமும் வெற்றியின் அருகே கொண்டு சென்றது. ஆனால், முக்கியமான தருணத்தை கைப்பற்றத் தவறியதே இங்கிலாந்து அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. பென் டக்கெட், பில் சால்ட் இருவரும் அருமையான தொடக்கத்தை அளித்தனர். இந்தத் தொடரில் இதுவரை அதிரடியாக ஆடாத சால்ட் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடி பவுண்டரிகளை அடித்தார். பவர்ப்ளே முடிவில் 62 ரன்கள் சேர்த்து ட்கெட்(39) விக்கெட்டை பிஸ்னாயிடம் இங்கிலாந்து இழந்திருந்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 120 ரன்கள் தேவைப்பட்டது, 14 ஓவர்கள் இருந்தன, கைவசம் 9 விக்கெட்டுகள் இருந்தன. அந்த நிலையில், அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரில் சால்ட்(23) போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 ரன்னில் பிஸ்னாய் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 62 ரன்கள் வரை விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லிவிங்ஸ்டோன், ஹேரி ப்ரூக் இருவரும் களத்தில் நிலைக்கத் தொடங்கினர். ஹேரி பரூக் வழக்கத்துக்கு மாறாக இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக ராணா பந்துவீச்சில் சிக்ஸர்கள், பவுண்டரி என 18 ரன்கள் சேர்த்து, 25 பந்துகளில் அரைசதம் அடித்தார். ராணா பந்துவீச்சில் 9 ரன்னில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழந்தார். விக்கெட் சரிந்தபோதிலும் இங்கிலாந்து அணியை ஹேரி ப்ரூக் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். வருண் 15-வது ஓவரை வீசினார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக மாறியது. களத்தில் செட்டில் ஆன பேட்டர் ஹேரி ப்ரூக்கை(51) வீழ்த்தி, அதே ஓவரில் பிரைடன் கார்ஸும் விக்கெட்டை பறிகொடுத்தார். ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து சற்று ஆட்டம் கண்டது. அதன் பிறகு கடைசி வரிசை வீரர்கள் பெரிதாக பேட்டிங்கில் பங்களிக்கவில்லை, ஓவர்டன் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேரி ப்ரூக் ஆட்டமிழந்த பின், யாரேனும் ஒரு பேட்டர் பொறுப்பெடுத்து பேட் செய்திருந்தால் வெற்றி இங்கிலாந்து அணியின் கையிலிருந்து நழுவிச் சென்றிருக்காது. கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 36 ரன்களும், கடைசி 2 ஓவர்களில் 25 ரன்களும் தேவைப்பட்டன. இது டி20 போட்டிகளில் நிச்சயமாக அடைந்துவிடக்கூடிய ஸ்கோர்தான். ஆனால், இங்கிலாந்து அணியில் கடைசி வரிசை பேட்டர்கள் பொறுப்பெடுத்து பேட் செய்யாமல் இருந்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்று. பந்துவீ்ச்சில் சிறப்பாகச் செயல்பட்டு இந்திய அணியின் 5 விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்திய நிலையில் அதன் பிறகு நெருக்கடி கொடுக்கத் தவறியதும் தோல்விக்கான காரணங்களில் ஒன்று. ஹர்திக் - துபே பார்ட்னர்ஷிப்பை தொடக்கத்திலேயே உடைத்திருந்தால், நிச்சயமாக இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07k57l34l7o
-
சுனிதா வில்லியம்ஸ்: விண்வெளியில் அதிக நேரம் நடந்து சாதனை - ஈலோன் மஸ்க், டிரம்ப் கூறியது என்ன?
பட மூலாதாரம்,NASA 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச் செய்துள்ளார். விண்கலத்தை விட்டு வெளியேறி, பிரத்யேக பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு, விண்வெளியில் பணிகளை மேற்கொள்வதே விண்வெளி நடை எனப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து 5 மணிநேரம் 26 நிமிடங்கள் இதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்தமாக 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்ட முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனியின் சாதனையை, 62 மணிநேரத்திற்கு மேலாக விண்வெளி நடை புரிந்து அவர் முறியடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,NASA இந்த விண்வெளி நடையின்போது, அவர் சர்வதேச விண்வெளி மையத்தின் வன்பொருட்களின் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். அங்கு இருந்த தேவையற்ற தொலைத்தொடர்பு சாதனங்களை அவர் அகற்றினார். மேலும், சுனிதா வில்லியம்ஸ் டெஸ்டினி ஆய்வகம் மற்றும் குவெஸ்ட் ஏர்லாக் என்ற பகுதிகளின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளைச் சேகரித்தார். அந்த மாதிரிகளில் நுண்ணுயிரிகள் ஏதேனும் இருக்கின்றனவா, வேறு என்ன பொருட்கள் இருக்கின்றன என்று ஆய்வு செய்யப்படும். உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள் மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? AI உலகில் புதிய சகாப்தம்: சீன செயலியின் சவாலை அமெரிக்க நிறுவனங்கள் சமாளிக்குமா? கே.எம்.செரியன்: இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர் இவை அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் 72வது விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன. இந்த பயணம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. தற்போது சுனிதா வில்லியம்ஸ் மேற்கொண்டிருப்பது அமெரிக்காவின் 92வது விண்வெளி நடை. அவர் அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு (EST) இந்த விண்வெளி நடையை தொடங்கினார். சுனிதா வில்லியம்ஸ் சிவப்புக் கோடுகள் கொண்ட விண்வெளி வீரருக்கான உடையை அணிந்திருந்தார். அவருடன் விண்வெளிக்குப் பயணித்த மற்றொரு வீரரான புட்ச் வில்மோரும் இதில் பங்கேற்றார். பட மூலாதாரம்,X/@SPACE_STATION இந்த மாதத்திலேயே இதற்கு முன்பாக, விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் இணைந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு விண்வெளி நடையை மேற்கொண்டிருந்தார். புட்ச் வில்மோர் ஐந்தாவது முறையாகவும், சுனிதா வில்லியம்ஸ் ஒன்பதாவது முறையாகவும் விண்வெளி நடையை மேற்கொள்கின்றனர். 'உலகிலேயே முதன் முதலில் தமிழ்நாட்டில்தான் இரும்பு பயன்பாடு தொடங்கியது' - இரும்புக் காலம் ஏன் முக்கியம்?25 ஜனவரி 2025 தினமும் தொழ மாட்டார்கள், ரமலான் நோன்பு இருக்க மாட்டார்கள் - இஸ்லாம் மதத்தில் இப்படி ஒரு குழு இருப்பது தெரியுமா?26 ஜனவரி 2025 8 மாதங்களாக விண்ணில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். ஒரு சில நாட்களே இருக்க வேண்டியிருக்கும் என்று திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக எட்டு மாதங்கள் ஆகியும் அவர்கள் இருவரும் இன்னும் பூமிக்குத் திரும்பவில்லை. கடந்த ஆண்டு, விண்வெளிக்கு அவரை ஏந்திச் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அவர்கள் முதலில் எட்டு நாட்கள் மட்டுமே தங்குவதற்காகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் பயணித்த விண்கலனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு, வேறு சில கசிவுகள் காரணமாக அந்த விண்கலத்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்காது எனக் கருதப்பட்டது. எனவே அமெரிக்க தொழிலதிபர் ஈலோன் மஸ்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-இன் விண்கலத்தைக் கொண்டு அவர்களை பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது என 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடிவு செய்யப்பட்டது. அவர்களை இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குக் கொண்டு வருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு மார்ச் மாதம் என முடிவு செய்யப்பட்டது. பிரசவத்தின்போது வயிற்றில் பேன்டேஜ்: பெண்ணுக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு8 மணி நேரங்களுக்கு முன்னர் சுனிதா வில்லியம்ஸ்: எட்டே நாளில் பூமிக்கு திரும்ப வேண்டியவர் 8 மாதம் தங்கும் நிலை வந்தது ஏன்?9 ஆகஸ்ட் 2024 ஈலோன் மஸ்கிடம் வலியுறுத்திய டிரம்ப் பட மூலாதாரம்,REUTERS இந்நிலையில், இரு விண்வெளி வீரர்களையும் பூமிக்கு அழைத்து வரும்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி இருப்பதாக அதன் நிறுவனரான மஸ்க் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கதில், "சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள இரண்டு விண்வெளி வீரர்களையும் விரைவில் பூமிக்கு அழைத்து வருமாறு அதிபர் கூறியுள்ளார். நாங்கள் அப்படியே செய்வோம். பைடன் நிர்வாகம் இத்தனை காலம் அவர்களை அங்கேயே விட்டுவிட்டது மிகவும் மோசமானது," என்று பதிவிட்டுள்ளார். பைடன் நிர்வாகம் இரு வீரர்களையும் கைவிட்டுவிட்டதாக அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கமான ட்ரூத் சோசியலில் பதிவிட்டுள்ளார். "மிகவும் தைரியமான இரண்டு வீரர்களையும் திரும்பக் கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளேன், ஈலோன் விரைவில் செல்வார். அவர்கள் பத்திரமாகத் திரும்புவார்கள் என நம்புவோம், ஈலோனுக்கு வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vp1zp01dro
-
ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20 உலகக் கிண்ணம்
19 இன் கீழ் மகளிர் ரி - 20 உலகக் கிண்ண இறுதி ஆட்டம் : சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் குறிக்கோளுடன் தென் ஆபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா 31 JAN, 2025 | 10:03 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூர், பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ள ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் குறிக்கோளுடன் தென் ஆபிரிக்காவை நடப்பு சம்பியன் இந்தியா சந்திக்கிறது. இந்த இறுதிப் போட்டி இலங்கை நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தென் ஆபிரிக்காவில் 2023இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்தாடிய ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்தியா 7 விக்கெட்களால் வெற்றிபெற்று முதலாவது சம்பியனாகியிருந்தது. இப்போது அங்குரார்ப்பண அத்தியாயத்தை முன்னின்று நடத்திய தென் ஆபிரிக்காவை இறுதிப் போட்டியில் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா களம் இறங்கவுள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக இருப்பதால், இறுதிப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டிக்கு முன்னோடியாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 9 விக்கெட்களால் இந்தியாவும் மற்றைய அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் தென் ஆபிரிக்காவும் வெற்றிகொண்டு இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இந்தியா முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் 2 போட்டிகளிலும் அரை இறுதிப் போட்டியிலுமாக தான் விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றிபெற்றது. தென் அபிரிக்கா முதல் சுற்றில் 3 போட்டிகளிலும் சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டியிலும் அரை இறுதிப் போட்டியிலுமாக 5 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது. சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது. இந்த இரண்டு அணிகளில் இந்தியா சகலதுறைகளிலும் பலம்வாய்ந்த அணியாகத் தென்படுவதால் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா கடும் சவாலை எதிர்கொள்ளும் என கருதப்படுகிறது. இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீராங்கனைகளே அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் அதிகூடிய விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். ட்ரிஷா கொங்காடி 6 போட்டிகளில் ஆட்டம் இழக்காத ஒரு சதம் உட்பட 265 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன் தமிழக வீராங்கனை குணாலன் கமலினி 2 அரைச் சதங்களுடன் 135 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் வைஷ்ணவி ஷர்மா 5 போட்டிகளில் 15 விக்கெட்களையும் ஆயுஷி ஷுக்லா 6 போட்டிகளில் 12 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளனர். முதலாவது போட்டியில் விளையாடாமல் இருந்த வைஷ்ணவி, மற்றொரு சுழல்பந்துவீச்சாளர் காயமுற்றதால் இரண்டாவது போட்டியில் விளையாடினார். அப் போட்டியில் 5 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டார். இந்த நால்வருடன் ஏனைய வீராங்கனைகளும் இந்தியாவை மீண்டும் உலக சம்பியனாக்கும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளனர். தென் ஆபிரிக்க அணியில் ஜெம்மா போத்தா (86 ஓட்டங்கள்), கேலா ரினேக் (10 விக்கெட்கள்) ஆகிய இருவரே துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் ஓரளவு பிரகாசித்துள்ளனர். அணிகள் விபரம் இந்தியா: குணாலன் கமலினி, ட்ரிஷா கொங்காடி, சானிக்கா சோல்கே, நிக்கி ப்ரசாத் (தலைவி), ஈஷ்வரி அவாசரே, மிதிலா வினோத், ஆயுஷி ஷுக்லா, வி.ஜே. ஜோஷித்தா, ஷப்னம், பாருணிக்கா சிசோடியா, வைஷ்ணவி ஷர்மா. தென் ஆபிரிக்கா: ஜெம்மா போத்தா, சிமோன் லௌரென்ஸ், ஃபே கௌலிங், கேலா ரினேக் (தலைவி), கராபோ மெசோ, மியெக் வென் வூர்ஸ்ட், செஷ்னி நாயுடு, ஏஷ்லி வன் வைக், லுயண்டா நிசூஸா, மோனாலிசா லெகோடி, நிதாபிசெங் நினி. https://www.virakesari.lk/article/205474
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் : அவுஸ்திரேலியாவைவிட 518 ஓட்டங்கள் பின்னிலையில் 31 JAN, 2025 | 09:55 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது வோர்னர் - முரளிதரன் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் கடும் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததுடன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 518 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை மேலும் இரண்டு விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. கடந்த வருடம் துடுப்பாட்டத்தில் அசத்தி, ஐசிசியின் வளர்ந்துவரும் வீரர் விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் தனது சொந்த மைதானத்தில் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தினேஷ் சந்திமாலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் தினேஷ் சந்திமாலும் குசல் மெண்டிஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 136 ஓட்டங்களாக உயர்த்தியபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. மிகத் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடிவரும் தினேஷ் சந்திமால் 115 பந்துகளை எதிர்கொண்டு 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 102 ஓட்டங்களையும் பெற்று அவுஸ்திரேலியாவை பலப்படுத்தி இருந்தனர். https://www.virakesari.lk/article/205473
-
கரன்னாகொடவின் மனுவை விசாரிக்க புதிய நீதியரசர்கள் குழாம்
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கர்ணாகொடவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரிப்பதற்காக புதிய ஐவர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிரதிவாதியாக பெயரிடுமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐவரடங்கிய குழுவின் உறுப்பினர் அமல் ரணராஜா நேற்று விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன்படி, புதிய பெஞ்ச் ஒன்றை பெயரிடுவதற்கான உரிய மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்படி, குறித்த மனுவை விசாரிப்பதற்காக யாதுன்னே கோரயா, பி குமரன் ரட்ணம், சஷி மகேந்திரன், தமித் தோட்டவத்த மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டது. இது தொடர்பான மனு பெப்ரவரி 7ஆம் திகதி புதிய நீதியரசர்கள் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தம்மை பிரதிவாதியாக பெயரிட சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என முன்னாள் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார். எனவே, சட்டமா அதிபரின் தீர்மானத்தை செல்லுபடியாகாத ஆணை பிறப்பிக்குமாறு அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/315092
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
அமெரிக்க விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு, உடல்களை தேடும் பணி நிறுத்தம் - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 30 ஜனவரி 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் புதன்கிழமை இரவு, அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று, ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது. நொறுங்கிய விமானம், போடோமேக் ஆற்றில் விழுந்தது. அந்த விமானத்தில் 60 பயணிகளும் 4 விமான குழுவினரும் இருந்தனர். ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் 3 பேரும் இருந்தனர். மொத்தமாக, 67 பேரும் இந்த விபத்தில் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், விமானத்தின் தரவுகளும் விமானி அறையின் குரல் பதிவுகளும் அடங்கிய முக்கியமான கருவியான கருப்புப் பெட்டியை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிபிசியின் அமெரிக்க கூட்டாளி செய்தி நிறுவனமான சிபிஎஸ் ஊடகத்துக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கருப்புப் பெட்டியின் மூலம், விபத்து எப்படி நிகழ்ந்தது என்பதை கண்டுபிடிக்க முடியும். தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆய்வகத்தில் கருப்புப் பெட்டி சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், ஆபத்தான சூழல் காரணமாக இப்பணி நிறுத்தப்பட்டுள்ளதாக டைவிங் குழுவினர் தெரிவித்துள்ளனர். சிபிஎஸ் ஊடகத்துக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்கள் அனைத்திலும் தாங்கள் தேடிவிட்டதாக கடலில் மூழ்கி தேடும் டைவர்கள் தெரிவித்தனர். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த வாஷிங்டன் டிசியின் தீ மற்றும் அவசர உதவி சேவைகள் துறையின் தலைவர் ஜான் டொனெல்லி, அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று குறிப்பிட்டார். அதுகுறித்துப் பேசியபோது அவர், "இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருப்பதாக நாங்கள் நம்பவில்லை," என்று கூறினார். மேலும், தனது குழுக்கள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து 27 உடல்களையும், ஹெலிகாப்டரில் இருந்து ஒரு உடலையும் மீட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES என்ன நடந்தது? ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையத்தின் 33வது ஓடுதளத்தை நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்துகொண்டிருந்தபோது, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.30 மணியளவில்) இந்த விபத்து நிகழ்ந்ததாக, விமானப் போக்குவரத்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பார்டியர் சிஆர்ஜே 700 என்ற இந்தப் பயணிகள் விமானம், அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் விசிட்டா பகுதியில் இருந்து புறப்பட்டது. இதில் 60 பயணிகளும் நான்கு விமான பணியாளர்களும் இருந்ததாக அமெரிக்க ஏர்லைன்ஸ் கூறியுள்ளது. அதே நேரம், விபத்தில் சிக்கியது சிக்கோர்ஸ்கி எச்-60 என்ற ராணுவ ஹெலிகாப்டர் என்றும் அது வர்ஜீனியாவில் உள்ள பெல்வாய்ர் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டதாகவும் என்று அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. கும்பமேளா: 'அங்கு செல்ல வேண்டாம்' என யோகி ஆதித்யநாத் கூறிய திரிவேணி சங்கமம் என்றால் என்ன? உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? - அறிவியல் கூறும் 7 எளிய வழிகள் மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஹிட்லரின் யூத படுகொலை மையமாக திகழ்ந்த 'அவுஷ்விட்ஸ்' வதை முகாம் எவ்வாறு இயங்கியது? விபத்துக்கு பைடன் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய டிரம்ப் இந்த விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், "இந்த விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதாக" குறிப்பிட்டார். "இதன் பின்னணியைக் கண்டறியும் வரை ஓய மாட்டோம்" என்று குறிப்பிட்ட டிரம்ப், விமான போக்குவரத்து துறையில் பணியாற்றுவோர் அதிகபட்ச தரத்துடனும் அறிவுடனும் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். மேலும், இந்த விபத்துக்கு பைடன் நிர்வாகத்தைக் குற்றம் சாட்டிய டிரம்ப், பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய கொள்கைகளை இதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார். "விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பதவிகளுக்கு, மாற்றுத் திறனாளிகள், உளவியல் பிரச்னைகள் உள்ளவர்களை பணியமர்த்தியதாக" குற்றம் சாட்டிய டிரம்ப், வெளிப்படையாக "பைடன் நிர்வாகத்தை, குறிப்பாக முன்னாள் போக்குவரத்து செயலாளரை" குற்றம் சாட்டியுள்ளார். ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் 35,000 ஊழியர்களைக் கொண்ட ஒரு பெரிய நிர்வாக அமைப்பு. அவர்களில் ஒரு பகுதியினர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள். அங்கு "முன்னாள் போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக்கால் நியமிக்கப்பட்டவர்கள் விமானப் போக்குவரத்தைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்தும் தகுதியுடையவர்கள் என்று தான் நம்பவில்லை" என்றும் கூறினார். ஃபெடரல் விமானப் போக்குவரத்து அமைப்பு வெள்ளையர்களால் நிரம்பியுள்ளதாகக் கூறி, அதில் பன்முகத்தன்மை கொள்கையின்படி பணியிடங்கள் நிரப்பப்பட்டதால் அதன் தரம் குறைந்துவிட்டதாக" டிரம்ப் கூறியுள்ளார். மேலும், தான் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் "டேப்களை" கேட்டதாகக் கூறிய அவர், "விமானம் அனைத்தையும் சரியாகச் செய்து கொண்டிருந்ததாகவும்" வழக்கமான "பாதையில் இருந்ததாகவும்" அவர் கூறுகிறார். ஆனால், ஏதோ காரணத்தால் ஹெலிகாப்டர் அதே உயரத்தில் இருந்ததாகவும் அது நம்ப முடியாத அளவுக்கு மோசமான கோணத்தில் சென்றதாகவும் டிரம்ப் கூறினார். பட மூலாதாரம்,BERND DEBUSMANN JR/BBC அதோடு ஹெலிகாப்டர், மேலே, கீழே அல்லது பக்கவாட்டில் என எப்படி வேண்டுமேனாலும் திருப்பக்கூடிய திறன் கொண்டது எனக் குறிப்பிட்ட டிரம்ப், அந்த ஹெலிகாப்டர் தவறான பக்கமாகத் திருப்பியுள்ளது," என்று கூறினார். இந்த விபத்துக்கு பன்முகத்தன்மை கொண்ட பணியமர்த்தல் கொள்கைகளுக்குப் பங்கு உண்டு எனக் குற்றம் சாட்டுகிறாரா என்பதைத் தெளிவுபடுத்துமாறு செய்தியாளர் ஒருவர் டிரம்பிடம் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், "மூளை திறன் மற்றும் உளவியல் தரத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டிய சில வேலைகள் உள்ளன" என்றார். மேலும், தனது நிர்வாகம் மிக உயர்ந்த தரநிலைகளைக் கொண்டுள்ளதாகவும் முந்தைய அரசின் கீழ் தரநிலைகள் அதற்கு எதிர்மாறாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என்ன கூறுகிறார்கள்? விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஜார்ஜ் வாசிங்டன் பார்க்வே வழியாக கார் ஓட்டிச் சென்றபோது, விமானம் மோதியதை தான் பார்த்ததாக அரி ஷுல்மன் என்பிசி வாசிங்டன் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். முதலில் விமானம் சரியாகச் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிந்தது என்று கூறும் அவர், திடீரென விமானம் வலதுபுறமாகத் திரும்பியதாகவும், விமானத்தின் அடிப்பகுதியில் இருந்து தீப்பொறிகள் சீராக வரத் தொடங்கியதாகவும் அவர் கூறுகிறார். கிரீன்லாந்து: பனி சூழ்ந்த மலைகளுக்கு அடியில் என்ன இருக்கிறது? எதற்காக இந்த போட்டி?30 ஜனவரி 2025 விமானத்தை தாக்கிய மின்னல் - பின்னர் நடந்தது என்ன? (காணொளி)28 ஜனவரி 2025 அந்த நேரத்தில் அது "மிகவும் தவறு" என்று எனக்கு தெரிந்துவிட்டது. அந்த பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதை கடந்த காலங்களில் பார்த்திருந்த அவர், ஒரு விமானத்தின் அடிப்பகுதி அந்த இருட்டான நேரத்தில் தெரியக்கூடாது என்று கூறினார். அந்த தீப்பொறிகள் விமானத்தின் முன் பகுதியிலிருந்து பின்பகுதி வரை நீண்டு சென்றது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு பூங்காவில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, இந்த விமான விபத்தை பார்த்ததாக ஜிம்மி மசியோ கூறுகிறார். வானில் ஒரு 'ஒளிவீச்சு' உருவானதை பார்த்ததாக அவர் நினைவுகூறுகிறார். ரீகன் விமானநிலையத்தை நோக்கி செல்லக் கூடிய விமானங்கள் வழக்கமான பாதையில் செல்லவில்லை என்று தோன்றியதாக அவர் குறிப்பிடுகிறார். அந்த பகுதிக்கு அவசர சேவைகள் வந்தடையும் வரை, அவர் வானில் பார்த்தது குறித்து, பெரிதாக எதையும் யோசிக்கவில்லை என்கிறார். உறையும் குளிரில் மீட்புப் பணி படக்குறிப்பு,வாசிங்டன் டிசி மேயர் முரியல் பவுசர் தண்ணீரில் குதித்து தேடக்கூடிய காவலர்களும், காவல் படகுகளும் பல மணி நேரங்களாக மீட்புப் பணியை மேற்கொண்டு வந்ததாகவுவந்ததாகவும். உறையும் குளிர் அவர்களின் பணியை சவாலாக்கியுள்ளது. வாஷிங்டன் டிசியின் ஆளுநர் மேயர் பவுசர் செய்தியாளர்களை சந்தித்தபோது, அவசர சேவை பணியாளர்கள் "மிகவும் இருட்டான, குளிரும் சூழலில்" மீட்புப் பணியில் ஈடுப்பட்டு வந்தனர் என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஹெலிகாப்டஹெலிகாப்டர் "எனது மனைவி 20 நிமிடங்களில் தரையிறங்க போவதாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்" என்று ஹமாத் ராசா கூறுகிறார். அவர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த தனது மனைவி வருவதற்காக ரீகன் வாசிங்டன் தேசிய விமான நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். "இன்னும் 20 நிமிடங்களில் தரையிறங்குவோம் என்று கூறினார். அவரை யாராவது தண்ணீரிலிருந்து மீட்டு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் என்ன கூறினார்? பட மூலாதாரம்,GETTY IMAGES 'இந்த விபத்து தவிர்த்திருக்கக் கூடியது' - டிரம்ப் இந்த மோசமான சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர கால உதவியை மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அவர்களின் ஆன்மாக்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று கூறியிருந்தார். "விமானம் சரியான பாதையில் விமான நிலையத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானத்தின் எதிரே நேராக சென்றுள்ளது. இரவு வானம் தெளிவாக உள்ளது. விமானத்தின் விளக்குகள் பிரகாசமாக எரிந்துக் கொண்டிருந்தன." "அந்த ஹெலிகாப்டர் மேலேயோ, கீழேயோ அல்லது வேறுபுறமாக திரும்பியோ ஏன் செல்லவில்லை. விமானத்தை பார்த்தீர்களா என்று கேட்டதற்கு பதிலாக, ஹெலிகாப்டர் என்ன செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு மையம் ஏன் கூறவில்லை" "இது மிகவும் மோசமான நிலை, இதை தவிர்த்திருக்க வேண்டும். இது சரியே இல்லை" என்று ட்ரூத் சோசியல் என்ற தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். சம்பவத்தில் ஈடுப்பட்டிருந்தவர்களுக்காக பிரார்த்திக்க அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ் கேட்டுக் கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு செயலர் பீட் ஹெக்செத் மற்றும் போக்குவரத்து செயலர் சீயன் டஃபி நிலைமைகளை கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6275988jyeo
-
காசாவில் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ள 2500 சிறுவர்கள் - எவ்வேளையிலும் மரணிக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை
Published By: RAJEEBAN 31 JAN, 2025 | 02:30 PM உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர் என மருத்துவர்கள் எச்சரித்துள்ள காசாவை சேர்ந்த 2500 சிறுவர்களை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அங்கிருந்து வெளியேற்றுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க மருத்துவர்களுடனான சந்திப்பின் பின்னர் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். 15 மாதகாலமாக நீடித்த இஸ்ரேல் காசா யுத்தத்தின்போது காசாவில் மருத்துவ சேவையை வழங்கிய நான்கு மருத்துவர்களை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் சந்தித்துள்ளார். காசாவில் 2500 சிறுவர்களிற்கு உடனடி மருத்துவசிகிச்சை தேவைப்படுவதாக கடந்த வருடம் ஏப்பிரல் முதல் மே மாதம் வரை காசாவில் பணியாற்றிய கலிபோர்னியாவை சேர்ந்த மருத்துவர் பெரோஸ் சித்வா தெரிவித்துள்ளார். அடுத்த சில வாரங்களில் உயிரிழக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள 2500 சிறுவர்கள் உள்ளனர், சிலர் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர், சிலர் நாளை அல்லது நாளை மறுதினம் உயிரிழக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த 2500 பேரில் அனேகமானவர்களிற்கு சாதாரண சிகிச்சை போதும் என தெரிவித்துள்ள அவர் 3வயது சிறுவனிற்கு கையில் எரிகாயம் ஏற்பட்டுள்ளது, அந்த காயம் ஆறிவிட்டது, ஆனால் காயம்பட்ட திசு இரத்த ஓட்டத்தை துண்டிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சிறுவனிற்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார். ஸ்டான்போர்ட் பல்கலைகழக மருத்துவமனையின் அவசரசேவை மருத்துவர் ஆயிசா கானும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி முதலாம் திகதி வரை காசாவில் மருத்துவசேவையை வழங்கியுள்ளார். அவர் கைதுண்டிக்கப்பட்ட பல சிறுவர்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் அவர்களிற்கு புனர்வாழ்வு இல்லை என தெரிவித்துள்ளார். கைகள் துண்டிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் புகைப்படங்களை அவர் காண்பித்துள்ளார், அவர்கள் இருவரும் ஒரு சக்கரநாற்காலியில் காணப்படுகின்றனர். அவர்கள் அந்த தாக்குல் காரணமாக அநாதைகளாக்கப்பட்டனர் என தெரிவித்துள்ள ஆயிசா கான், அவர்களை அங்கிருந்து வெளியேற்றி மருத்துவசிகிச்சை வழங்கினால் மாத்திரமே காப்பாற்றலாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205428
-
குரானை எரித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நபர் சுவீடனில் சுட்டுக்கொலை
சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொலை - பின்னணியில் வேறு நாடு என சந்தேகம் Published By: RAJEEBAN 31 JAN, 2025 | 01:35 PM சுவீடனில் குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் வெளிநாடு ஒன்றிற்கு தொடர்புள்ளதாக சுவீடனின் பிரதமர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு தரப்பினர் இது குறித்த விசாரணைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் ஏனென்றால் இந்த கொலையின் பின்னணியில் வேறு ஒருநாடுஇருக்கலாம் என சந்தேகம் நிலவுகன்றது என சுவீடனின் பிரதமர் உல்வ் கிரிஸ்டேர்சன் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த கொலையை கண்டித்துள்ள சுவீடனின் பிரதிபிரதமர் எபாபுஸ் இது எங்களின் ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்இ எங்கள் சமூகம் இதனை முழுமையாக எதிர்க்கவேண்டும் என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர் எனினும் நாங்கள் இந்த சம்பவம் சுவீடனின் பாதுகாப்பிற்கு எவ்வாறான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என பார்ப்பதற்காக நிலைமைய உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம் என சுவீடனின் தேசிய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. ஏனைய நாடுகள் அமைப்புகள் தனிநபர்களிற்கு எதிரான வன்முறைகளிற்காக ஈரான் அரசாங்கம் சுவீடனிற்குள் ஆயுத குழுக்களை பயன்படுத்துகின்றது என கடந்த வருடம் சுவீடனின் தேசிய பாதுகாப்பு சேவை எச்சரித்திருந்தது. மொமிகா டிக்டொக்கில் நேரலையில் ஈடுபட்டிருந்தவேளையே சுடப்பட்டார் என சுவீடன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுவீடனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு சுவீடனில் குரானை எரித்ததன் மூலம் வன்முறை ஆர்ப்பாட்டங்களிற்கு வித்திட்ட சல்வான் மொமிகா என்ற 38 வயது நபர் ஸ்டொக்ஹோமில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுவீடனில் வசித்த ஈராக்கியரான மொமிகாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகயிருந்த நிலையிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மொமிகா இஸ்லாமிய மதத்தி;ற்கு எதிராக பல ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தில் மொமிகா இரண்டு தடவைகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்இ முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகள் அவரின் நடவடிக்கைகளிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டன. https://www.virakesari.lk/article/205418
-
அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது ; மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பம்
திருமணத்திற்காக காத்திருந்த இளம் விமானி, இந்திய வம்சாவளியினரின் மகள் - பனிச்சறுக்கு விளையாட்டு வீரர்கள் - அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் Published By: RAJEEBAN 31 JAN, 2025 | 11:40 AM அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதி ஆற்றில் விழுந்து நொருங்கிய அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும் துயரத்தில் சிக்குண்டுள்ள குடும்பங்களின் இதயங்களை மேலும் நொருங்கச் செய்யும் தகவலாக இது அமைந்துள்ளது. 2001ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்காவில் ஏற்பட்ட மோசமான விமானப் பேரழிவாக இந்த துயரம் மிக்க சம்பவம் கருதப்படும். துணை விமானி சாம் லில்லே --கப்டன் ஜொனதன் கம்போஸ் சாம் லில்லே தனது திருமண நாளிற்காக காத்திருந்த இளம் விமானி, ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு ஒருசில நிமிடங்களிற்கு முன்னர் அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதிய அமெரிக்க எயர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை செலுத்தியவர். நடுவானில் மோதுண்ட விமானமும் ஹெலிக்கொப்டரும் அதன் பயணித்தவர்களுடன் வேர்ஜீனியாவின் பொட்டொமக் ஆற்றில் விழுந்தன. சாம் விமானவோட்டியாக பணிபுரிய ஆரம்பித்தவேளை நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன் என தெரிவிக்கின்றார் அவரின் தந்தை டிமோதி. முகநூல் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மகனின் இழப்பு என்னை மிக மோசமாக பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் என்னால் அழக்கூடியமுடியவில்லை உறங்கமுடியவில்லை என தெரிவிக்கின்றார். நான் அவனை மீண்டும் பார்ப்பேன் என தெரியும், ஆனால் எனது இதயம் வேதனையால் துடிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த விமானத்தின் துணை விமானி லில்லேயின் தந்தை, தனது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பது அவன் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறந்து விளங்கினான். நான் மிகவும் நேசித்த ஒருவரை இழப்பது பெரும்துயரம் என தெரிவித்துள்ள தந்தை, எனது வாழ்க்கையின் மிக மோசமான நாள் இது எனவும் தெரிவித்துள்ளார். துயரத்தில் சிக்குண்டுள்ள தந்தை 20 வருடங்களாக அமெரிக்க இராணுவ விமானியாக பணிபுரிந்தவர். பயணிகள் விமானம் சரியான நடைமுறையையே பின்பற்றியது என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஹெலிக்கொப்டரின் இராணுவ விமானி மிகப்பெரும் தவறிழைத்துள்ளார். அது என்னை காயப்படுத்தியுள்ளது ஏனென்றால் அவர்கள் எனது சகோதாரர்கள் நான் எனது மகனையும் இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானியான ஜொனதன் கம்போசும் உயிரிழந்துள்ளார், 2022 இல் கொம்போஸ் விமானத்தின் கப்டனாக பணிபுரிய ஆரம்பித்தார் என அவரை நன்கு அறிந்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் அற்புதமான மனிதன் பறப்பது அவருக்கு பிடிக்கும் குடும்பத்தை அவர் மிகவும் நேசித்தார் என அவரை பற்றியறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார். அஸ்ரா ஹூசைன் ராசா விமானவிபத்தில் உயிரிழந்தவர்களில் அஸ்வரா ஹூசைன் ராசாவும்( 26) ஒருவர் என அவரின் மாமனார் வைத்தியர் ஹசீம் ராசா சிஎன்என்னிற்கு தெரிவித்தார். இந்திய வம்சாவளியினரின் மகளான இவர் 2020 இல் இந்தியானா பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 2023 ஆகஸ்ட்டில் தனது காதலனை கரம்பிடித்தார். ராசா வோசிங்டன் டிசியை தளமாக கொண்ட ஒரு ஆலோசகர், அவர் விசிட்டாவிற்கு மாதத்திற்கு இரண்டு முறை பயணம் செய்து அங்குள்ள ஒரு மருத்துவமனை திட்டத்தில் பணியாற்றினார் என அவரது மாமனார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/205408