Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. டெல்லியின் கனவைக் கலைத்த தமிழ்நாட்டு வீரர்; ஷ்ரேயாஸ் சொன்ன ரகசியம் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளத்தில்தான் 262 ரன்களை சேஸிங் செய்த சம்பவத்தையும் ரசிகர்கள் பார்த்தனர். ஆனால், நேற்று அப்படியே தலைகீழாக மாறி, பாரம்பரிய கொல்கத்தா மைதானம் போல் குறைந்த ரன்னை சேஸிங் செய்யும் வழக்கமான ஆட்டமாகவும் அமைந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 47-வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் இலக்குடன் புறப்பட்ட கொல்கத்தா அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில், 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டமே ஒருதரப்பாக அமைந்தது போல் இருந்தது. கொல்கத்தா தொடக்க வீரர் பில் சால்ட் பவர்ப்ளே ஓவர்களில் 79 ரன்களும், 9 ஓவர்களில் 96 ரன்களும் சேர்த்தபோதே ஆட்டம் ஏறக்குறைய முடிவுக்குவந்து, கொல்கத்தா அணி வென்றதுபோல் ஆகிவிட்டது. கொல்கத்தா அணிக்கு சவால் விடுக்கும் வகையில் டெல்லியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் இல்லாததால் ஆட்டம் ஒருதரப்பான முடிவையே அளித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES புள்ளிப்பட்டியலில் வலுவாக அமர்ந்த கொல்கத்தா இந்த வெற்றியால் கொல்கத்தா அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து அணிகளையும்விட நிகர ரன்ரேட்டில் உயர்வாக 1.096 என்று உச்சத்தில் இருக்கிறது. இந்த வெற்றியால், அடுத்தடுத்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. கலைந்துவிட்டதா டெல்லியின் ப்ளே ஆஃப் கனவு? ஆனால், டெல்லி அணி இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றுவாய்ப்பு மறுக்கப்படவில்லை என்றாலும், சற்று கடினமாகியுள்ளது. டெல்லி அணி தற்போது 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன்6-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மோசமாகக் குறைந்து மைனஸ் 0.442 என சரிந்துவிட்டது. இனி அடுத்துவரும் 3 போட்டிகளையும் டெல்லி அணி கட்டாயமாக வெல்ல வேண்டிய நிலையிலும் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், அடுத்த 3 போட்டிகளை டெல்லி அணி வென்றாலே அதிகபட்சமாக 16 புள்ளிகள்தான் பெற முடியும். ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல 4-ஆவது இடத்துக்கு 16 புள்ளிகள் அளவுகோலாக இருக்கும் பட்சத்தில் பல அணிகள் கடும் நெருக்கடி கொடுக்கும். அப்போது ரன்ரேட் முக்கியமாகும், அதை பராமரிக்க வேண்டிய நிலையில் டெல்லி அணி இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாட்டு வீரர் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் அமைத்துக் கொடுத்த அடித்தளமும், பந்துவீச்சில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட் வீழ்த்தியதும் முக்கியக் காரணமாகும். கடந்த 8 போட்டிகளாக பந்துவீச்சில் திணறிக் கொண்டிருந்த வருண், 8 போட்டிகளில் 8 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தால், பந்துவீச்சு சராசரியும் 9 ரன்களாக இருந்தது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் வருண் மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார். அவருக்கு உதவும் வகையில் விக்கெட்டும் இருந்ததால், வருண் பந்துவீச்சில் பந்துகள் நன்றாக திரும்பின. டெல்லி பேட்டர்கள் வருண் பந்துவீச்சை சமாளித்து ஆடத் திணறினர். 4 ஓவர்கள் வீசிய வருண் 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். “ப்ளே ஆஃப்தான் எங்கள் இலக்கு” கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் கூறுகையில் “ஆடுகளம் உதவியதாக நினைக்கவில்லை. ஏனென்றால், பவர்ப்ளே ஓவருக்குப்பின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைத்தது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது. முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது ஒருவிதத்தில் நல்லதாகிவிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட, நரைன் இருவரிடமும் எப்படி விளையாட வேண்டும் என்று டீம் மீட்டிங்கில் பேசியதில்லை. அவர்களும் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார்கள். ஆனால் அவர்களின் பங்களிப்பில் எந்தச் சிக்கலும் இல்லை.” “வருண் கடந்த சில போட்டிகளாக தடுமாறிய நிலையில் இன்று சிறப்பாகப் பந்துவீசினார். ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றுவிட வேண்டும் என்று முதல் போட்டியிலிருந்து இலக்காக வைத்து ஆடி வருகிறோம். அதை நோக்கித்தான் செல்கிறோம், எங்கள் திறமையை வெளிப்படுத்துகிறோம்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,SPORTZPICS நெருக்கடி தந்த கொல்கத்தா பந்துவீச்சு கொல்கத்தா ஈடன்கார்டன் ஆடுகளத்தில் கடந்த சில போட்டிகளாக தட்டையான ஆடுகளத்திலே ஆட்டங்கள் நடந்த நிலையில் நேற்று சுழற்பந்துவீச்சுக்கு உதவும் வகையில் மெதுவான விக்கெட் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆடுகளத்தை டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியதைவிட கொல்கத்தா பந்துவீச்சாளர்களே நன்றாகப் பயன்படுத்தினர். முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வரிசையில் 3 விக்கெட்டுகளை மிட்ஷெல் ஸ்டார்ஸ், வைபவ் அரோரா ஆகியோர் பவர்ப்ளே ஓவருக்குள் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். நடுப்பகுதி ஓவர்களில் வருண், நரைன், ராணா ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி அணியை பெரிய இக்கட்டில் சிக்கவைத்தனர். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 68 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த டெல்லி அணி, அடுத்த 43 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து சரிவை நோக்கிச் சென்றது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் 26 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்து கவுரமான ஸ்கோர் கிடைக்க உதவினார். இல்லாவிட்டால் டெல்லி அணி 120 ரன்களுக்குள் சுருண்டிருக்கும். குறிப்பாக கொல்கத்தா சுழற்பந்துவீச்சாளர்கள் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 40 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஹர்சித் ராணா, வைவப் அரோரா இருவரும் ஓரளவுக்கு கட்டுக்ககோப்பாக பந்துவீசி ஓவருக்கு 7 ரன்கள் வீதம் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். ஸ்டார்க் பந்துவீச்சில் ரன்கள் வாரி வழங்கப்பட்டன, 3 ஓவர்கள் வீசிய ஸ்டார்க் 43 ரன்களை வழங்கி ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக்கு அடித்தளமிட்ட பில் சால்ட் குறைவான இலக்கை துரத்திய கொல்கத்தா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட், நரைன் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். டெல்லி பந்துவீச்சாளர்கள் கலீல், வில்லியம்ஸ்,ரசிக் சலாம் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்த பில் சால்ட் பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். லிசாட் வில்லியம்ஸ் வீசிய முதல் ஓவரிலேய சால்ட் 23 ரன்கள் சேர்த்தார், கலீல் அகமது வீசிய 2வது ஓவரிலும் சால்ட் 15 ரன்கள் சேர்த்து பவர்ப்ளே ஓவரை நன்றாகப் பயன்படுத்தினார். பில் சால்ட் 26 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்த பில் சால்ட் இந்த சீசனில் 4வது அரைசதத்தை அடித்தார். பவர்ப்ளே ஓவர்களில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் சேர்த்து, ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்தது. தொடக்கத்திலேயே சுழற்பந்துவீச்சைக் கொண்டுவராமல் பவர்ப்ளே ஓவருக்குப்பின்புதான் அக்ஸர் படேல், குல்தீப் இருவரும் பந்துவீச வந்தனர். ஆனால், அக்ஸர் வந்த உடனே முதல் பந்திலேயே சுனில் நரேன்(15) விக்கெட்டை எடுத்தார். முதல் விக்கட்டுக்கு இருவரும் 79 ரன்கள் சேர்த்தனர். அடுத்த 9-வது ஓவரை அக்ஸர் வீச வந்தபோது, களத்தில் நங்கூர மிட்டு பேட் செய்த பில் சால்ட்டை(68) க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார்.வழக்கமாக கீழ் வரிசையில் களமிறங்கும் ரிங்கு சிங் பதவி உயர்வு பெற்று 3வதுவீரராகக் களமிறங்கினார். ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது என்று நினைத்தபோது, ரிங்கு சிங் ஏமாற்றினார். வில்லியம்ஸ் ஓவரில் ரிங்கு சிங்(11) ரன்களில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் இருவரும் சேர்ந்து நிதானமாக பேட் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஸ்ரேயாஸ் 33 ரன்களிலும், வெங்கடேஷ் 26 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS டெல்லி அணி சறுக்கியது எங்கே? டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் ஆகிய 3 துறைகளுமே நேற்று மோசமாக இருந்தது. இதில் சுழற்பந்துவீச்சு மட்டுமே ஓரளவுக்க டெல்லிக்கு கை கொடுத்தது. பவர்ப்ளே ஓவரிலேயே அக்ஸர், குல்தீப் யாதவை பந்துவீச அழைத்திருந்தால், கொல்கத்தா அணி பவர்ப்ளேயில் ரன் குவிப்பைத் தடுத்திருக்கலாம். ஆட்டத்தை இன்னும் சிறிது நெருக்கடியாகக் கொண்டு சென்றிருக்கலாம். பீல்டிங்கில், முதல் ஓவரில் பில் சால்ட் அடித்த ஷாட்டை கலீல் அகமது கோட்டைவிட்டு பெரிய தவறு செய்தார். பந்துவீச்சில் லிசாட் வில்லியம்ஸ், ரசீக் சலாம், கலீல் ஆகியோர் ரன்களை அதிகமாக வழங்கியதும் ஆட்டத்தை இன்னும் நெருக்கடியாகக் கொண்டு செல்லத் தவறியது. பேட்டிங்கில் பிரேசர் மெக்ருக் அதிரடியாகத் தொடங்கினாலும், அவரை கட்டம் கட்டி கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் தூக்கினர். அதிலும் மிட்ஷெல் ஸ்டார்க், பிரேசருக்கு வீசிய 7 பந்துகளில் 5 பந்துகள் யார்க்கராக வீசினார். வைபவ் அரோராவும் யார்கர்களை வீசி மெக்ருக்கை திணறவைத்தனர். இறுதியில் ஸ்டார்க் பந்துவீச்சில் மெக்ருக்(12) விக்கெட்டை இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஹர்சித் ராணா பந்துவீச வந்து முதல் பந்திலேயே அபிஷேக் போரெலை 15 ரன்னில் க்ளீன் போல்டாக்கினார். ஏற்கெனவே எதிரணி பேட்டர்களுக்கு “சென்ட்ஆஃப்” செய்து அபாராதத்தை வாங்கிய ஹர்சித் நேற்றும் “சென்ட்ஆஃப்” செய்ய முயன்று கட்டுப்படுத்திக்கொண்டார். ரிஷப்பந்த்-அக்ஸர் படேல் ஜோடி சரிவிலிருந்து அணியை மீட்க முயன்றனர். ஆனால், வருண், நரைன் ஓவரில் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் டெல்லி பேட்டர்கள் விக்கெட்டை இழந்தனர். ரிஷப் பந்த்(27), வருண் பந்துவீச்சிலும் அக்ஸர்(15) நரைன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஸ்டப்ஸ்(4), குஷ்ஹரா(1) விக்கெட்டுகளை வருண் வீழ்த்தவே டெல்லி அணி 111 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நேரத்தில் குல்தீப் யாதவ் கேமியோ ஆடிய 35 ரன்கள் சேர்க்காமல் இருந்தால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும். https://www.bbc.com/tamil/articles/c6pydxq0pzwo
  2. மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை.! பதைபதைப்பு நிறைந்த மீட்பு காட்சிகள்.!
  3. Published By: RAJEEBAN 29 APR, 2024 | 12:43 PM சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினரில் நால்வர் தேவாலய கத்திக்குத்து இடம்பெற்ற சில நாட்களின்பின்னர் மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் செய்தியான சிக்னல் மூலம் உரையாடியுள்ளனர். நான் உயிரிழக்க விரும்புகின்றேன் நான் கொலை செய்ய விரும்புகின்றேன் நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என அவர்கள் தங்களுக்குள் தெரிவித்துள்ளனர். எப்படியும் நாங்கள் கொல்லப்போகின்றோம் பொறுமையாகயிருக்கவேண்டும் என 16 வயது இளைஞன் தெரிவித்துள்ளான். அவன் திட்டம் உயிருடன் பிடிபடுவதா இறப்பதா என மற்றுமொரு இளைஞன் கேள்வி எழுப்பியுள்ளான். நாங்கள் திட்டமிடப்போகின்றோம் தப்பிப்பதுதான் எங்கள் திட்டம், ஆனால் என்ன நடந்தாலும் அது அல்லாவின் வலிமை என அவன் தெரிவித்துள்ளான். அல்லாவின் படைவீரர்கள் என்ற பெயரை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர் த டெய்லி டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிகளை கொள்வனவு செய்யதிட்டமிட்டனர் என காவல்துறையினர் குற்றம்சாட்டவுள்ளனர். இந்த இளைஞர்கள் தாங்கள் யாரை இலக்குவைக்கவேண்டும் என்பது குறித்தும் சிக்னலில் உரையாடியுள்ளனர். நான் யூதர்களை இலக்குவைக்க விரும்புகின்றேன் என 15 வயது இளைஞன் தெரிவித்துள்ளான். https://www.virakesari.lk/article/182224
  4. ஜேர்மனியில் உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவர் குத்திக்கொலை - ரஸ்ய பிரஜை கைது 29 APR, 2024 | 12:13 PM உக்ரைன் படைவீரர்கள் இருவரை ஜேர்மனியில் ரஸ்ய பிரஜையொருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். ஜேர்மனியின் தென்பகுதியில் உள்ள வணிகவளாகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேர்னோவ் என்ற நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கத்திக்குத்திற்கு இலக்கான 36 வயது அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் 28 வயது நபர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். உக்ரைன் இராணுவத்தை சேர்ந்த இருவரும் ஜேர்மனியில் மருத்துவசிகிச்சை பெற்றுவந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து ரஸ்யர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182219
  5. Published By: RAJEEBAN 29 APR, 2024 | 11:08 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உட்பட முக்கிய அதிகாரிகளிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்க தயாராவதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹமாசுடனான மோதல் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிரதமர் உட்பட முக்கிய அதிகாரிகளுக்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்கலாம்; என ஐந்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாசின் தலைவர்களுக்கு எதிராகவும் பிடியாணைகளை பிறப்பிப்பது குறித்தும் சர்வதேச நீதிமன்றம் ஆராய்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. நீதிமன்றம் தனது நடவடிக்கையை தொடரதீர்மானித்தால் காசா பள்ளத்தாக்கிற்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை தடுத்தமை ஹமாசின் ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு மிகக்கடுமையான பதில் தாக்குதலை முன்னெடுத்தமை போன்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் இஸ்ரேலிய அதிகாரிகளிற்கு எதிராக சுமத்தலாம் என ஐந்து அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை கொண்டுள்ள இஸ்ரேலிய அதிகாரிகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிராகவும் பிடியாணை பிறப்பிக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர். எனினும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த யாருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்ற விபரங்கள் வெளியாகவில்லை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணைகளை உலகம் இஸ்ரேலிற்கான ஒரு தார்மீக கண்டனமாக பார்க்ககூடும். காசாவில் அதன் நடவடிக்கைகளிற்காக கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை எதிர்கொண்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி இஸ்ரேலின் நடவடிக்கைகள் மிகவும் அளவுக்கதிகமானவை என தெரிவித்துள்ளார். ஹமாசிற்கு எதிராக இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுக்கின்ற நிலையில் பிடியாணை இஸ்ரேலின் கொள்கைகள் மீது தாக்கத்தை செலுத்தலாம். நீதிமன்றம் பிடியாணையை பிறப்பிக்கலாம் என்பதை இஸ்ரேலிய அரசாங்கத்தின் திட்டமிடல் பிரிவிற்கு தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182208
  6. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிறுவனத்தின் முன்பதிவு தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 101 வயது மூதாட்டி ஒருவரை குழந்தை என்று தவறாக பதிவு செய்து பயணச்சீட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. 101 வயது மூதாட்டியான பாட்ரிசியா (தன் குடும்பப் பெயரை பகிர விரும்பாதவர்) விமானத்தில் பயணிக்க பயணச்சீட்டு பதிவு செய்த போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணச்சீட்டு விநியோக தளத்தால் பாட்ரிசியா 1922 இல் பிறந்தவர் என்பதை கணக்கிட முடியவில்லை, எனவே 2022 இல் பிறந்ததாக தளத்தில் பதிவாகிவிட்டது. சமீபத்தில் நிகழ்ந்த இந்த நகைச்சுவையான சம்பவத்தின்போது பிபிசி செய்தியாளரும் அங்கிருந்தார். பாட்ரிசியாவுக்கு குழந்தைகளுக்கான பயணச்சீட்டு பதிவு செய்திருந்தது, கேபின் குழுவினர் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. "வயதான பெண்ணான என்னை சின்னக் குழந்தை என்று நினைத்தது வேடிக்கையாக உள்ளது" என்று சிரிக்கிறார் பாட்ரிசியா . இப்படி நடப்பது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பயணச்சீட்டு பதிவு செய்த போதும் அதே தவறு நடந்ததாக கூறும் பாட்ரிசியா, “இதனால் எனக்கு வேறு சில பிரச்னைகளும் ஏற்படுகிறது. எனவே, இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட வேண்டும்” என்கிறார் நூறு வயதை கடந்த பாட்ரிசியா. உதாரணமாக, ஒரு பயணத்தின்போது நான் குழந்தை என்று விமான நிலைய ஊழியர்கள் நினைத்துக் கொண்டதால், முனையத்திற்குள் வயதானவர்களுக்கான வசதிகளை தயார்படுத்தவில்லை. சிரமங்களை எதிர்கொள்ளும் மூதாட்டி பட மூலாதாரம்,GETTY IMAGES பாட்ரிசியா சிகாகோவில் இருந்து மிச்சிகனில் உள்ள மார்க்வெட்டிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணித்த அதே விமானத்தில் பிபிசி-யின் நிருபரும் பயணித்தார். பாட்ரிசியா தனது மகள் கிரிஸுடன் வந்திருந்தார். "என் மகள் டிக்கெட்டுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தாள், விமான நிலையத்தில் உள்ள கணினி எனது பிறந்த தேதி 1922 ஆக இருக்காது, 2022 ஆக தான் இருக்கும் என அதுவாக கணித்துவிட்டது. கடந்த ஆண்டும் இதேதான் நடந்தது, ஒவ்வொரு முறையும் இந்த விமானத்தில் ஒரு குழந்தை பயணிக்கப் போகிறது என எதிர்பார்க்கிறார்கள். என்னை பார்த்ததும் அதிர்ச்சி அடைகின்றனர்" என்கின்றனர். பாட்ரிசியாவின் இருக்கை பெரியவர்களுக்கான டிக்கெட்டாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், விமான நிலைய கணினியால் 1922 என்ற பிறந்த ஆண்டை கணக்கிட இயலவில்லை. காரணம் இந்த பிறந்த தேதியில் இதற்கு முன்னர் அதிக பயணிகளை கண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே 1922 என்பதை ‘default’ ஆக 2022 என்று மாற்றிப் பதிவு செய்துவிட்டது.” ஓய்வு பெற்ற செவிலியரான பாட்ரிசியா, ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தைப் பார்க்கவும் குளிர்காலத்தில் இருந்து தப்பிக்கவும் மிச்சிகன் செல்வது வழக்கம். கடந்த இரண்டு பயணத்தின் போது அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என் வயதை தவறாக பதிவிட்டு குழப்பம் ஏற்படுத்திவிட்டது. ஆனாலும் ஊழியர்கள் அன்பாகவும் உதவியாகவும் நடந்து கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பதிலளிக்க மறுத்துவிட்டது. மேலும் பேசிய மூதாட்டி, ”நான் இந்த பிரச்னை சரி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். முந்தைய விமான பயணத்தின் போது விமான நிலைய ஊழியர்கள் எனக்கு சக்கர நாற்காலியை ஏற்பாடு செய்யாததால், மற்ற பயணிகள் சென்ற பிறகும் நீண்ட நேரம் நானும் எனது மகளும் விமானத்தின் உள்ளே காத்திருந்தோம். என் உண்மையான வயதை பதிவு செய்திருந்தால் என் மகள் கிரிஸுக்கும் அது உதவியாக இருந்திருக்கும். என் மகள், எங்கள் அனைத்துப் பைகளையும் தனி ஆளாக ஒரு வாயிலில் இருந்து மற்றொரு வாயிலுக்குக் கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது" என்று அவர் கூறினார். அடுத்த பயணம்... பட மூலாதாரம்,GETTY IMAGES பாட்ரிசியா தனது 97 வயது வரை தனியாக தான் பயணம் செய்தார். ஆனால் அதன் பிறகு அவரால் குடும்பத்தின் துணை இன்றி பயணிக்க முடியவில்லை. "எனக்கு கண் பார்வையில் சில பிரச்சனைகள் உள்ளன, அதனால் நான் தனியாக பயணம் செய்ய விரும்பவில்லை," என்கிறார் பாட்ரிசியா. ”ஆனால், இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஒருபோதும் என் பயணங்களை தடுத்து நிறுத்தாது” என்று உறுதியாகக் கூறுகிறார் அவர். மேலும் இலையுதிர் காலத்தில் தனது அடுத்த விமான பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார். அப்போது அவருக்கு 102 வயது ஆகி இருக்கும் - ஒருவேளை அடுத்த முறை விமான நிலைய கணினிகள் அவரின் உண்மையான வயதை பதிவு செய்யக்கூடும்! https://www.bbc.com/tamil/articles/c1d43d95kyxo
  7. நாட்டில் சனத்தொகை வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கம் பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல இதனைத் தெரிவித்துள்ளார். 2000ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது, 180,000ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2020ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது. இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சிடைந்துள்ளது. இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக இளைஞர் யுவதிகள் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300497
  8. Hamas வெளியிட்ட Hostages Video; நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இஸ்ரேல் மக்கள் - ஏன்? இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் 6 மாதங்களைக் கடந்து நடந்துவரும் நிலையில், பணயக்கைதிகள் இருவர் பேசுவது போன்ற வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அதில், அவர்கள் குண்டுவீச்சுக்கு மத்தியில் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறுவதைக் காண முடிகிறது. இது ஒருபுறமிருக்க, ஹமாஸிடம் உள்ள பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  9. Published By: VISHNU 29 APR, 2024 | 06:24 PM (நா.தனுஜா) 'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று செவ்வாய்க்கிழமையிலிருந்து (30) ஆரம்பமாகவிருப்பதாகவும், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகள், பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபடும் கொலைகாரர்களைக் கொல்வது பாவம் அல்ல என கடந்த வாரம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தையடுத்து, அவர் பதவி விலகவேண்டும் எனவும், அன்றேல் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தற்போது வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இத்தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் அமைச்சர் டிரான் அலஸின் நிர்வாகக்குழு உயரதிகாரி ஒருவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், சில சட்டத்தரணிகளுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக பெரும் கருத்து முரண்பாடு தோற்றம் பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரபல சட்டத்தரணிகள் பலர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகி, பல மில்லியன் ரூபாயைப் பெற்றிருப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்ட கருத்தே இந்த முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு 'யுக்திய' செயற்திட்டத்துக்கு எதிராக, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தொடர்பில் வெளிப்படுத்தும் விசேட பிரசாரமொன்று இன்றைய தினத்திலிருந்து ஆரம்பமாகவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய உயிரச்சுறுத்தல்கள் ஏற்படினும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக் குற்றவாளிகிளை ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துச்செல்வதில் அமைச்சர் டிரான் அலஸ் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182269
  10. காசாவில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் பலி! ராஃபா மற்றும் காசா நகரங்களில் ஒரே இரவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் அடங்குவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்காக ஹமாஸ் அதிகாரிகள் கெய்ரோவிற்குச் செல்ல உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் இதுவரை 34 ஆயிரத்து 454 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். https://thinakkural.lk/article/300514
  11. பிறந்தநாள் வாழ்த்துகள் புரட்சி, வாழ்க வளத்துடன்.
  12. மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் - மின் பொறியியலாளர் சங்கம் எதிர்ப்பு Published By: VISHNU 29 APR, 2024 | 09:27 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணத்தை தீர்மானிக்கும் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது முறையற்றது என மின்சார சபையின் மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் தனுஸ்க பராக்ரம தெரிவித்தார். இலங்கை மின்சார சபை மின் பொறியியலாளர் சங்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. மின்சார சபையை 12 ஆக கூறுப்படுத்தி அதன் உரிமத்தை தனியார் நிறுவனங்களுக்கு உரித்தாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் பெறும் இலாபத்துக்கு அமைய மின்கட்டணம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவது பாரதூரமான நெருக்கடிகளை ஏற்படுத்தும். மின்சட்டத்தை திருத்தம் செய்வதுடன் மின்கட்டமைப்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வகிபாகத்தை வரையறுப்பதற்கும் இச்சட்டமூலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ளது. நியாயமற்ற வகையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படும் போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கு இடமளிக்காததால் ஆணைக்குழுவின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படவுள்ளது. நாட்டின் மின்கட்டமைப்பை இருண்ட யுகத்துக்கு தள்ளும் வகையில் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்துக்கு அமைய செயற்பாடுகளை எதிர்வரும் நவம்பர் மாதமளவில் முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். சில வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அது அரசாங்கத்தை பொறுப்பேற்கும் தரப்புக்கு சவாலாக அமையும். உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தை நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம். ஆகவே சட்டமூலத்தில் உள்ள குறைகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/182273
  13. இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக விசேட வைத்தியர் டொக்டர் சஞ்சய் ஹெயன்துடுவ தெரிவித்துள்ளார். “நம் நாட்டில் சுமார் 10% பேருக்கு சிறுநீரக நோய் உள்ளது. உண்மையில் நோய் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. இந்த நோய்களை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நம் நாட்டில் சிறுநீரக பாதிப்பை பாதிக்கும் முக்கிய காரணியாக நீரிழிவு நோய் உள்ளது. மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது மற்றும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உணவில் உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் அளவைக் குறைப்பதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம். குறிப்பாக ஒரு நாளில் 3, 1/2 லீற்றர் தண்ணீர் பருகுதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடலாம்”. https://thinakkural.lk/article/300492
  14. மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஒன்றில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வயதில் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியை ஒருவர் வெல்வது இதுவே முதல்முறையாகும். மிஸ் வோர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் உள்ளிட்ட உலக அழகி போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அழகி போட்டிகளில் இளம் பெண்கள் மட்டுமே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். ஆனால், இங்கே அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ள அதேநேரம், அழகுப் போட்டியின் பன்முகத்தன்மை மற்றும் அனைவருக்கும் சம அளவில் வாய்ப்பு தர வேண்டும் என்ற முடிவை எடுத்த மிஸ் யுனிவர்ஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் பலரும் பாராட்டி வருகிறார்கள். யார் இவர்: அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த அலெஜாண்ட்ரோ.. பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்து வரும் இவர், அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார். அழகிற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இவரது வெற்றி காட்டுகிறது. இந்த வயதில் மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெறும் முதல் பெண் இவர் ஆவார். அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர். மேலும், இந்த அழகி போட்டியைக் காண வந்த பார்வையாளர்கள் சப்போர்ட்டும் இவருக்கு தான் அதிகம் இருந்துள்ளதாம். அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதையே தனது இலக்காக வைத்துள்ளதாக அலெஜாண்ட்ரா தெரிவித்துள்ளார். அதிலும் அவர் வெற்றி பெற்றால் இந்தாண்டு செப். மாதம் மெக்சிகோவில் நடைபெறும் சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் அவரால் பங்கேற்க முடியும். மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அழகுப் போட்டிகளில் இப்படியொரு மாற்றம் என்னால் நடந்துள்ளது என்பதை நினைத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பெண்கள் உடல் அழகை மட்டுமின்றி, அவர்களின் மற்ற மதிப்புகளை வைத்தும் அவர்களை மதிப்பிட வேண்டும் என்பதையே இது காட்டுகிறது” என்றார். கட்டுப்பாடு நீக்கம் இதற்கு முன்பு வரை மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற ரூல்ஸ் இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதேபோல டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/300429
  15. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமானார்..! Published By: DIGITAL DESK 3 29 APR, 2024 | 04:17 PM தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். கனடா – டொராண்டோவிலுள்ள வைத்தியசாலையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் தனது 72ஆவது வயதிலேயே பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாத காரணத்தினால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறிபோயிருந்தது. https://www.virakesari.lk/article/182238
  16. 29 APR, 2024 | 10:55 AM இலங்கை மக்கள் நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை புகைபிடிப்பதற்கு செலவிடுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. 83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், புகைபிடித்தல் இதற்கான முக்கிய காரணம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182206
  17. Published By: RAJEEBAN 29 APR, 2024 | 10:23 AM தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக இலங்கையின் அரசியலில் எதிர்எதிராக உள்ள சக்திகள் ஒன்றிணையக்கூடும் எனவும் அவர் சுவீடனின் ஸ்டொக்கோமில் தெரிவித்துள்ளார். சந்திரிகா, ரணில், மகிந்த உட்பட அரசியலில் வேறுவேறு துருவங்களாக காணப்படும் சக்திகள் ஒன்றிணையக்கூடும் அவர்கள் ஒரே தளத்தில் காணப்படலாம் அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையிலான தனிப்பட்ட தகராறுகள் இதற்கு தடையாக காணப்படலாம் எனவும் சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க கொள்கைகள் அடிப்படையில் அவர்கள் மத்தியில் பிரச்சினைகள் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக அதன் வளர்ச்சியை தடுப்பதற்காக அவர்கள் ஒன்றுசேரலாம் எனவும் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 28 முதல் ஒக்டோபர் நான்காம் திகதிக்குள் நடைபெறலாம் என சுவீடனில் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களும் அதனை தடுக்கவேண்டியவர்களும் இணைந்து செயற்பட்டனரா என்ற கேள்வி காணப்படுகின்றது இது உண்மை என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு இட்டுசெல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார். தாஜ்சமுத்திரா ஹோட்டலில் குண்டை வெடிக்கவைக்க முயன்று தோல்வியடைந்த ஜமீல் தெகிவளைக்கு சென்றார் என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அவர் மீண்டும் குண்டை வெடிக்க வைக்க முன்னர் புலனாய்வு பிரிவினர் அவரின் வீட்டுக்கு சென்றுள்ளனர் இது எப்படி சாத்தியம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். பொடி ஜஹ்ரான் என்ற நபர் மாத்தளையில் கைதுசெய்யப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182203
  18. 29 APR, 2024 | 10:37 AM தமிழ்நாட்டில் சென்னை ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 6 மாத பெண் குழந்தை, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரையில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. குடியிருப்புவாசிகள் உயிரை பணயம் வைத்து, அந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் 8 மாத பெண் குழந்தை கிரண்மயி. இந்நிலையில், நேற்று காலை குடியிருப்பு வளாகத்தின் 4-வது தளத்தில் இருந்தபடி, குழந்தைக்கு தாய் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, தாயின் பிடியில் இருந்து தவறிய குழந்தை, பால்கனி வழியாக கீழே விழுந்தது. தாய் அலறித் துடிக்க, அதிர்ஷ்டவசமாக, 2-வது மாடியில் மழைக்காக அமைக்கப்பட்டிருந்த தகர கூரை மீது குழந்தை விழுந்தது. இந்த நிலையில், சத்தம் கேட்டு, குடியிருப்புவாசிகள் ஓடி வந்தனர். தகர கூரையின் நுனியில் குழந்தை அழுதபடியே தொங்கிக் கொண்டு இருப்பதை பார்த்து பலரும் பதறினர். பிடி நழுவினால் 2-வது மாடியில் இருந்து எந்நேரத்திலும் குழந்தை கீழே விழக்கூடும் என்ற நிலை இருந்ததால், ஒரு பெரிய துணியை கையில் பிடித்தபடி, பலரும் கீழே சூழ்ந்து நின்றனர். பின்னர், ஒரு பெரிய போர்வையை எடுத்து வந்து 10-க்கும் மேற்பட்டவர்கள் சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனர். எதிர் குடியிருப்பில் இருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர், “குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என தொடர்ந்து வேதனையுடன் குரலெழுப்பியபடி இருந்தனர். இதற்கிடையே, தகர கூரையில் தொங்கிக்கொண்டு இருக்கும் குழந்தையை பத்திரமாக மீட்பதற்கான முயற்சியில் குடியிருப்புவாசிகள் சிலர் இறங்கினர். உயிரை பணயம் வைத்து, முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக இறங்கினர். ஒருவரை ஒருவர் பத்திரமாக பிடித்து கொள்ள, ஒருவர் துணிச்சலுடன் ஏறி, தகர கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையை லாவகமாக மீட்டார். குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றியில் லேசாக காயம்பட்டிருந்தது. உடனடியாக குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கூரையின் நுனியில் குழந்தை தவிப்பது முதல், பத்திரமாக மீட்கப்பட்டது வரை வீடியோவாக பதிவு செய்த ஒருவர் இதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். வலைதளங்களில் இது வைரலானது. குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. https://www.virakesari.lk/article/182204
  19. Published By: DIGITAL DESK 3 29 APR, 2024 | 09:08 AM அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் ஞாயிற்றுக்கிழமை வீசிய சூறாவளியால் ஒரு கைக்குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடுமையான வானிலை காரணமாக ஒரு கிராமப்புற நகரத்தின் மையப்பகுதியில் கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. ஓக்லாஹோமா மாநிலம் முழுவதும் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர். 20,000 மேற்பட்ட வீடுகளில் மின்னிணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர். சுமார் 5,000 மக்கள் வசிக்கும் சல்ஃபூரில் நகரே உருகுலைந்துள்ளது.அங்கு ஏராளமான வீடுகள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. கார்கள் மற்றும் பேருந்துகளை தூக்கி வீசப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓக்லஹோமா அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182192
  20. Published By: DIGITAL DESK 7 29 APR, 2024 | 10:01 AM பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை நிவாரணங்களும் கிடைக்கவில்லையென கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். பட்டித்திடல் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் படு கொலை செய்யப்பட்டிருந்தனர். கடந்த 26 ஆம் திகதியுடன் 37வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு எவ்வித நீதியும், நிவாரணங்களும் கிடைக்கபெறவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் கிராமத்தில் 26.04.1987 ஆம் ஆண்டு இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதில் மூன்று கைக்குழந்தைகளும் பாடசாலை மாணவ, மாணவிகளும் அடங்குவர். தாக்குதல் நடந்த வீட்டிலிருந்து கோணன் உலகநாதன் மற்றும் மேரி கணேசபிள்ளை ஆகியோர் மட்டுமே உயிர் தப்பியிருந்தார்கள். குறித்த கொலைச் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காலை பட்டித்திடலுக்கு அண்மித்த பகுதியின் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் வைத்து கண்ணிவெடி தாக்குதலில் சில இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். இதன் பின்னணியிலேயே இப்படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இந்த கொலைச்சம்பவத்தின்போது அவர்களது உறவினரான மேரி கணேசபிள்ளை என்ற 50 வயது பெண் ஒருவர் வீட்டில் இருந்து ஓடிச்சென்று மரங்களுக்குள் ஒழிந்து கொண்டு நடந்த சம்பவத்தை பார்த்ததாக அப்போதைய பத்திரிகைகளுக்கு அவர் இவ்வாறு வாக்குமூலம் வழங்கியிருந்தார், இராணுவம் உள்ளே நுழைந்தவுடன் வீட்டின் பெரியவரும் அவருடைய மகனும் பேசத் தொடங்கினார்கள். ஆனால் இராணுவத்தினர் உடனடியாக சரமாரியாக சுடத் தொடங்கி விட்டனர். பின்னர் பெண்களின் அவலச் சத்தம் கேட்டது. மறுபடியும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. பெண்கள் மட்டும் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களுடன் தள்ளாடியபடி வீட்டுக்கு வெளியே வந்தனர். ஆனால் இராணுவத்தினர் அவர்கள்மீது பனை ஓலைகளை அடுக்கி எண்ணை ஊற்றி தீயை வைத்தனர். பின்னர் வீட்டுக்கும் தீயை வைத்துவிட்டு அவர்கள் வந்த லொறியில் ஏறிச் சென்றுவிட்டனர் என்று அப்பெண் கூறினார். இச்சம்பவத்தில் கொல்லப்பட்டோர் 01. உலகநாதன் ஜெயப்பிரியா (வயது 06) 02. உலகநாதன் ஜெயரதி (வயது 01) 03. உலகநாதன் யோகேஸ்வரி (வயது 26) 04. கோணன் பத்தினியன் (வயது 42) 05. பத்தினியன் சீதையம்மா (வயது 34) 06. பத்தினியன் நேசன் (வயது 17) 07. பத்தினியன் பிரகாஸ் (வயது13) 08. பத்தினியன் சோபனா (வயது 12) 09. பத்தினியன் கிருசாந்தி (வயது 10) 10. பத்தினியன் அற்புதராசா (வயது 😎 11. கோணன் பொன்னம்மா (வயது 60) 12. கோணன் மேரி (வயது 23) 13. சின்னத்துரை யோகேஸ்வரி (வயது 29) 14. சிந்தாமணி பாலமுருகன் (வயது 11) 15. சிந்தாமணி யோகராசா (வயது 14) 16. சிந்தாமணி கோகுலேஸ்வரி (வயது 15) 17. சிந்தாமணி செந்தில்மணி (வயது 30) https://www.virakesari.lk/article/182196
  21. Published By: VISHNU 28 APR, 2024 | 11:00 PM (இராஜதுரை ஹஷான்) நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகிறது. அரச நிறுவனங்களின் ஊழியர்களின் உரிமை மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, மே தின கூட்டத்தை பிரமாண்டமான முறையில் கொண்டாடவுள்ளோம்.பெருமளவான தொழிலாளர்களை உள்ளடக்கிய வகையில் மே தின கூட்டத்தை நடத்தி எமது பலத்தை உறுதிப்படுத்துவோம்.மே தின கூட்டத்தின் போது முக்கிய அரசியல் தீர்மானங்கள் அறிவிக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்களே தெரிவு செய்தோம்.அவர் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம் ஆகவே எமது கோரிக்கைகள் மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பி;ல் அவர் கவனம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு முதலீடுகளுக்கும், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்புக்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.நட்டடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன. அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.இலாபமடையும் நிறுவனங்களினதும்,நட்டமடையும் நிறுவனங்களினதும் ஊழியர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியறுத்தியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலம் பதிலளித்துள்ளது.2014 ஆம் ஆண்டு எமக்கு துரோகமிழைத்து விட்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணிமைத்து நல்லாட்சி அரசாங்கத்தை தோற்றுவித்தார்.இறுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து வெளியேற்றினார். நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. சுதந்திர கட்சியின் நிலைமை கவலைக்குரியது என்றார். https://www.virakesari.lk/article/182182
  22. தோனி போன்ற சீனியர்களை கையாளும் ருதுராஜின் உத்தி; ஹைதராபாத் அணியில் அம்பலமான பலவீனம் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் குவித்தும் வெற்றி முடியாமல் இதே சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த வாரத்தில் சிஎஸ்கே தோற்றது. கிட்டத்தட்ட அதே அளவு ரன்களைக் குவித்து அதே சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது. அது மட்டுமல்லாமல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பலவீனத்தை ஆர்சிபி “எக்ஸ்போஸ்” செய்துவிட்டு சென்றது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை பெற்ற 5 வெற்றிகளில் சேஸிங் செய்து பெற்ற வெற்றிகளைவிட முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து எதிரணியை திக்குமுக்காடவைத்து வெல்வதையே ஃபார்முலாவாக வைத்திருந்தது. முதல் முறையாக ஆர்சிபிக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ய வேண்டும் என்றபோது, சன்ரைசர்ஸ் பலவீனம் வெளிப்பட்டுவிட்டது. இதை சிஎஸ்கே அணி இறுகப்பற்றிக் கொண்டு அதே உத்தியை கையாண்டு வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை சன்ரைசர்ஸ் அணியால் வெல்ல முடியவில்லை என்ற வரலாறு நேற்றும் தொடர்ந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 46-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்தது. 213 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களில் சுருண்டு, 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றம் இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6-வது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி திடீரென உயர்வு பெற்று, 3வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் 5வெற்றி 4 தோல்வி என 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் உயர்வால் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.810 ஆக இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு இணையாக 10 புள்ளிகளுடன் கொல்கத்தா, லக்னெள, சன்ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 5 அணிகள் உள்ளன. இதனால் முதல் 4 இடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த 5 அணிகளில் டெல்லி அணி மட்டுமே 10 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நிகர ரன்ரேட் மைனசில் வைத்துள்ளது. மற்ற 4 அணிகளின் நிகர ரன்ரேட்டும் பாசிட்டிவாக இருக்கிறது. கொல்கத்தா-டெல்லி அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் ஆட்டத்தின் முடிவில் 2வது இடத்தைப் பிடிக்கப் போவது என்பது தெரிந்துவிடும். தற்போது நிகர ரன்ரேட் அடிப்படையில்தான் கொல்கத்தா அணி 2வது இடத்தில் இருக்கிறது. டெல்லி அணியும் 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 5வது இடத்தில் இருக்கிறது. இன்று நடக்கும் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி 12 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணியைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணிக்கு எதிராக மோசமாகத் தோற்றதால் சன்ரைசர்ஸ் நிகரரன்ரேட் மோசமாகக் குறைந்து, 0.075 ஆகச் சரிந்துள்ளது. 10 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டை குறைவாக சன்ரைசர்ஸ் வைத்துள்ளது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள்தான் முக்கியக் காரணம். ஏனென்றால், இதே மைதானத்தில் 210 ரன்களை டிபெண்ட் செய்ய முடியாமல் லக்னெள அணியிடம் தோற்ற சிஎஸ்கே அணி, நேற்றைய ஆட்டத்தில் 212 ரன்கள் அடித்து சன்ரைசர்ஸ் அணியை டிபெண்ட் செய்து வென்றுள்ளது. ஆதலால் சிஎஸ்கே பந்துவீச்சில் ஏற்பட்ட முன்னேற்றம், பந்துவீச்சாளர்களிடையே ஏற்பட்ட மாற்றம்தான் முக்கியக் காரணம். அதேநேரம், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 54 பந்தகளில் 98 ரன்கள் சேர்த்து 2 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ருதுராஜ் கணக்கில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். சிஎஸ்கே ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக இருந்த கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல கெய்க்வாட்டுக்கு துணையாக டேரல் மிட்ஷெல் 32 பந்துகளில் அடித்த அரைசதம்(52), ஷிவம் துபே(39)ரன்கள் ஆகியவையும் ஸ்கோர் உயர்வுக்கு காரணம். கடந்த சில போட்டிகளில் சொதப்பியதால் அமரவைக்கப்பட்ட மிட்ஷெல் நேற்று சிஎஸ்கே அணிக்காக தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். கெய்க்வாட்-மிட்ஷெல் கூட்டணி 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதேபோல ஷிவம் துபே, கெய்க்வாட் கூட்டணி 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த இரு பார்ட்னர்ஷிப்தான் அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. இவர்கள் தவிர அணியில் பெரிதாக யாரும் ஸ்கோர் செய்யவில்லை. ரஹானே தொடக்க வீரராக தொடர்ந்து சொதப்பி வருவதால், அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டு ரவீந்திரா உள்ளேவரவும் வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES சீனியர் வீரர்களை கெய்க்வாட் எப்படிக் கையாளுகிறார்? வெற்றிக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில் “ பனிப்பொழிவுக்கு மத்தியில் இந்த ஆடுகளத்தில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெல்வது கடினமானது. எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி. சேப்பாகத்தில் அதிகமான வெப்பம், ஈரப்பதமும் கூடுதலாக இருந்தது. நான் சதம் அடிப்பதைப் பற்றி நினைக்கவே இல்லை, அணியின் ஸ்கோரை 220 அதற்கு மேல் நகர்த்தவே திட்டமிட்டேன். கடந்த போட்டியில்கூட நான் சதத்தைப் பற்றி நினைக்கவில்லை. சில ஷாட்களை நான் தவறவிட்டது எனக்கு வருத்தம். கடந்த போட்டியில் நாங்கள் சில தவறுகளைச் செய்தோம். தவறான பந்துகள் பல வீசினோம், பீல்டிங் சரியில்லை. ஆனால், தவறுகளைத் திருத்திக்கொண்டு, திட்டங்களுடன் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளோம். தேஷ்பாண்டே சிறப்பாகப் பந்துவீசினார், அவரின் கடின உழைப்புக்கு கிடைத்த பலன். குறிப்பாக இந்த ஈரப்பதமான சூழலில், சுழற்பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 25ரன்கள் மட்டுமே கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்திய ஜடேஜாவின் பங்கு சிறப்பானது.” “'நான் அதிகமாக சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன். டிரெஸ்ஸிங் ரூமில் அனைவருமே மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள். சீனியர் வீரர்களிடம் நேரில் சென்று இப்படி விளையாடுங்கள், இப்படி பந்துவீசுங்கள் எனக் கூற முடியாது. அதனால் நான் அவர்களுக்கு பின்னால் இருந்து கொள்கிறேன் அவ்வளவுதான்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணி எப்படி வென்றது? லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகள் ஏதும் இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி செய்யாததே வெற்றிக்கு முக்கியக் காரணம். சன்ரைசர்ஸ் அணியில் எந்த பேட்டரையும் நங்கூரமிட வைக்கவில்லை. ஏனென்றால், ஸ்டாய்னிஸைவிட ஆபத்தான பேட்டர்கள் சன்ரைசர்ஸ் அணியில் இருக்கிறார்கள். குறிப்பாக டிராவிஸ் ஹெட், கிளாசன், மார்க்ரம், அபிஷேக் ஆகியோர் நிலைத்துவிட்டால் ஸ்கோர் எங்கோ சென்றுவிடும் என்பதால் இந்த பேட்டர்களை தனியாகக் கட்டம் கட்டி சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர். அடுத்தாக ஷர்துல் தாக்கூர், தேஷ்பாண்டே, முஸ்தபிசுர், பதிரணா ஆகியோர் தங்களின் ஒவ்வொரு ஓவரிலும் பந்துவீச்சில் வேரியேஷனை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் பேட்டர்களை திணறவிட்டனர். பந்துவீச்சில் சரி செய்யப்பட்ட தவறுகள், ஆட்டத்தின் போக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே பீல்டிங் மோசமாக இருந்தது. ஆனால், அந்தத் தவறுகள் நேற்று திருத்தப்பட்டு, கட்டுக்கோப்பான பீல்டிங் வீரர்களிடையே காண முடிந்தது. குறிப்பாக மிட்ஷெல் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் 5 கேட்சுகளைப் பிடித்து, ஒரே போட்டியில் அதிக கேட்சுகளைப் பிடித்த முகமது நபி சாதனையுடன் சமன் செய்தார். பெரிதாக எந்த பவுண்டரிகளையும் கோட்டைவிடாமல், கட்டுக்கோப்பாக பீல்டிங் செய்தது, மனரீதியாக சன்ரைசர்ஸ்பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தது. பட மூலாதாரம்,SPORTZPICS மெருகேறிய தேஷ்பாண்டே பந்துவீச்சு சிஎஸ்கே அணியில் சொல்லிக்கொள்ளும் வகையில் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்றாலும், இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பாக காய்களை நகர்த்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்குள் சென்றுவிட்டால் எந்த வீரரும் விளையாடுவிடுவார்கள், விளையாட வைத்துவிடுவார்கள் என்று ஐபிஎல் வட்டாரங்களில் பேசப்படுவதுண்டு. அதுபோல் அன்கேப்டு வீரர் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் நேற்று பெரிய மாற்றம், துல்லியம், லைன்லென்த் காணப்பட்டது. தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் ஹெட் ,பவுண்டரியும், அடுத்த ஓவரில் சிக்ஸரும் விளாசினாலும் கவலைப்படவில்லை. ஸ்லோவர் பாலை வைடாக தேஷ்பாண்டே வீச, அதை அடிக்க முற்பட்டு ஹெட் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அன்மோல்பிரித் சிங்கை வந்தவேகத்தில் தேஷ்பாண்டே வெளியேற்றினார். டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்ததைதப் போல், அபிஷேக் சர்மாவையும் வெளியேற்றினார் தேஷ்பாண்டே. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் டாப் ஆர்டரை நிலைகுலைய வைத்து அந்த அணிக்கு பெரிய அதிர்ச்சியை தேஷ்பாண்டே அளித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES குறிப்பாக தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். ஆனால், இந்த திறன் லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இல்லை, இந்த உத்தியை செயல்படுத்தவும் இல்லை. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் 3 பெரிய விக்கெட்டுகளை இழந்ததுமே மனரீதியாக நம்பிக்கை உடைந்துவிட்டது. லக்னெள அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர்கூட அடிக்காமல் பயணித்தது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் கம்மின்ஸ் வீசிய 9-வது ஓவரில் மிட்ஷெல் சிக்ஸர் அடித்தும், கெய்க்வாட் ஒரு சிக்ஸரும் விளாசினர். ரன்களை அதிகமாகச் சேர்க்க சிக்ஸர், பவுண்டரி அவசியம் என்பதை உணர்ந்து நேற்று மிட்ஷெல், கெய்க்வாட் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பேட் செய்தனர். இதனால் சிஎஸ்கே அணி 10.5 ஓவர்களில் 100 ரன்களைக் குவித்தது. மிட்ஷெல்(52) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தபோது, 13.3 ஓவர்களில் சிஎஸ்கே 126 ரன்கள் சேர்த்திருந்தது. சிஎஸ்கே அணிக்கு கடைசி நேரத்தில் பினிஷிங் பணியை ஷிவம் துபே சிறப்பாகச் செய்து வருகிறார். சன்ரைசர்ஸ் அணியினர் நேற்று டெத் ஓவர்களில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினாலும், துபே தனது அதிரடியால் மிரட்டி 4 சிக்ஸர்களை விளாசி 20 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். இந்த ஆட்டத்திலும் கடைசி நேரத்தில் களமிறங்கி, 2 பந்தகளில் ஒருபவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்து தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் என்ன? சன்ரைசர்ஸ் அணியின் பலவீனம் வெளிப்பட்டதிலிருந்து தொடர்ந்து 2ஆவது தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆர்சிபிக்கு எதிராக சேஸிங்கில் தோற்று, இந்த ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராகவும் சேஸிங்கில் வீழ்ந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி மீது எழும் கேள்வி அவர்களின் சேஸிங் முறைதான். ஏனென்றால், இதுவரை டிபெண்ட் செய்து ஒரு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ், சேஸிங் செய்தும் ஒருவெற்றிதான் பெற்றுள்ளார்கள். முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து, எதிரணியை திணறவைத்து வெல்வதையே உத்தியாக சன்ரைசர்ஸ் இதுவரை செயல்படுத்திவந்தது. ஆனால், வலிமையான, பவர் ஹிட்டர் பேட்டர்கள் அணியில் இருந்தும், சேஸிங்கில் கோட்டைவிடுகிறது. அதிலும் தொடர்ந்து இரு ஆட்டங்களும் சேஸிங்கில் சன்ரைசர்ஸ் அணி தோற்றது அந்த அணியின் ஆட்டமுறையை சுயபரிசீலனைக்கு உட்படுத்தும் எனத் தெரிகிறது. ஹெட், அபிஷேக், கிளாசன், மார்க்ரம், நிதிஷ் ரெட்டி, அன்மோல் பிரித் சிங், அப்துல் சமது ஆகியோர் இருந்தும் சேஸிங்கில் தோல்வி அடைந்தது அந்த அணியின் அடுத்தக் கட்டநகர்வை கேள்விக்குள்ளாக்குகிறது. பந்துவீச்சில் நேற்று சன்சைர்ஸ் அணி வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியதே தவிர சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. நிதிஷ் ரெட்டிக்கு ஒரு ஓவர் வழங்கிய நிலையில் அப்படியே நிறுத்திக்கொண்டது. சிஎஸ்கே அணி ஜடேஜாவை பயன்படுத்திய அளவுக்கு சன்ரைசர்ஸ் அணி, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தவில்லை. https://www.bbc.com/tamil/articles/c0dexjmmzglo
  23. பத்தே பந்துகளில் 50 ரன்: தமிழக வீரர்களின் அதிரடியை ஊதித் தள்ளிய ஜேக்ஸ் - ஆர்சிபியால் எந்த அணிகளுக்கு நெருக்கடி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் 2024ம் ஆண்டு சீசன்தான் உண்மையில் கணிக்க முடியாத ஆட்டங்களையும், முடிவுகளை ஊகிக்க முடியாத ஆட்டங்களாகவும் அமைந்துவிட்டது என்று கூற முடியும். இதற்கு முன் நடந்த சீசன்களில் ஒரு அணி 200 ரன்களை எட்டினாலே அந்த அணிக்கு வெற்றி பெற்றுவிடுவோம் என்று மனரீதியாக நம்பிக்கையும், உற்சாகமும் வந்துவிடும். ஆனால், இந்த சீசனில் மட்டும் எவ்வளவு ஸ்கோர் அடித்தாலும் அதை டிபெண்ட் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு தேநீர் குடிக்கும் நேரத்தில் ஒட்டுமொத்த ஆட்டமும் தலைகீழாக மாறிவிடுகிறது. அப்படித்தான் இன்று ஆர்சிபி-குஜராத் அணிகள் மோதிய ஆட்டமும் அமைந்திருந்தது!! அகமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 45-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. 201 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 4 ஓவர்கள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 206 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. விக்கெட் சரிவில் குஜராத் அணி டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. குஜராத் அணியின் சுப்மான் கில், சாஹா ஆட்டத்தைத் தொடங்கினர். அகமதாபாத் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு எடுக்கும் என்பதில் முதல் ஓவரிலே ஆப் ஸ்பின்னர் ஸ்வப்னில் பந்துவீசினார். 2வது பந்தில் பவுண்டரி அடித்த சாஹா, அதே ஓவரில் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார். அடுத்து சாய் சுதர்சன் களமிறங்கி கில்லுடன் சேர்ந்தார். யாஷ் தயால், சிராஜ் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக பந்துவீசவே கில், சுதர்சன் ரன் சேர்க்க தடுமாறினர். பவர்ப்ளேயில் எதிர்பார்த்த அளவு ரன் சேர்க்கமுடியாமல், 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் மட்டுமே குஜராத் அணி சேர்த்தது. 7-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார். அவரின் 4வது பந்தில் கில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஷாருக்கான் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். இரு தமிழக வீரர்கள் களத்தில் இருந்து குஜராத் அணிக்காக ஆடினர். பட மூலாதாரம்,GETTY IMAGES ஷாருக்கான் மிரட்டல் அரைசதம் வழக்கமாக ஷாருக்கான் நடுவரிசையில் களமிறங்குவார் ஆனால் அவரை 3வது வீரராக களமிறக்கினர். களத்துக்கு வந்தது முதலே ஷாருக்கான் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கரன் ஷர்மா வீசிய 8வது ஓவரில் சுதர்சன் ஒருபவுண்டரி, சிக்ஸர்உள்பட 12 ரன்களை விளாசினார். மேக்ஸ்வெல் வீசிய 9-வது ஓவரில் ஷாருக்கான் ஒருசிக்ஸர், பவுண்டரி என 13 ரன்கள் சேர்த்தார். கரன் ஷர்மா வீசிய 10-வது ஓவரிலும் ஷாருக்கான் ஒருசிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார். 10 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் சேர்த்தது. கேமரூன் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்ஸர், கரன் ஷர்மா வீசிய 12ஓவரில் 2 சிக்ஸர் என ஷாருக்கான் அகமதாபாத் ரசிகர்களுக்கு விருந்தளித்தார். 11.3 ஓவர்களில் குஜராத் அணி 100 ரன்களை எட்டியது. கிரீன் வீசிய 13வது ஓவரை வெளுத்த ஷாருக்கான் 2பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 17 ரன்கள் சேர்த்து 24 பந்துகளில் ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். ஷாருக்கான் களத்துக்கு வந்தது முதல் குஜராத் அணி ஓவருக்கு 10 ரன்ரேட்டில் பயணித்தது. நிதானமாக ஆடிய சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பெருமை சேர்க்கும் தமிழக வீரர் சுதர்சன் சாய் சுதர்சன் தனது ஐபிஎல் வாழ்க்கையை 2022 சீசனில் இருந்து அருமையாகத் தொடங்கியுள்ளார். ஐபிஎல் தொடரில் 900 ரன்களுக்கு மேல் குவித்த சுதர்சன் 23 போட்டிகளில் எட்டி, சராசரியாக 45 ரன்கள் வைத்துள்ளார், 135 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாகவே பேட் செய்து வருகிறார். சாய் சுதர்சன் 3வது வீரராக சிறப்பாக ஆடி வருவதால், அவரை தொடர்ந்து 3வதுவீரராக களமிறக்கவே குஜராத் அணி நிர்வாகமும் விரும்பியது. சுழற்பந்துவீச்சை எளிதாக,அனாசயமாக ஆடக்கூடிய சுதர்சன் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தக்கூடியவர். கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து 166 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். சுழற்பந்துவீச்சை எந்த அளவுக்கு விரும்பி ஆடக்கூடியவரோ அதேபோல வேகப்பந்துவீச்சையும் எளிதாக சுதர்சன் ஆடும் திறமை உடையவர். இந்த சீசனில் வேகப்பந்து வீ்ச்சுக்கு எதிராக சுதர்சன் 122 ஸ்ட்ரைக் ரேட்டும், சுழற்பந்துவீச்சுக்கு எதிராக 137 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார். 2023 சீசனில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக சுதர்சன் 148 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக வீரர் சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். பவர் ப்ளேவில் 18 பந்துகளில் 16 ரன்கள் என நிதானமாக பேட் செய்த சுதர்சன் ஷாருக்கான் களத்துக்கு வந்தபின் பேட்டிங் கியரை மாற்றி ரன் சேர்ப்பை வேகப்படுத்தினார். 23 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த சுதர்சன் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த பின் ரன் சேர்ப்பை இன்னும் வேகப்படுத்திய சுதர்சன் 13 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இன்றை ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சுதர்சன் 205 ஸ்ட்ரைக் ரேட் வைத்து 20 பந்துகளில் 41 ரன்களும், வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 148 ஸ்ட்ரைக் ரேட்டில் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கலக்கிய தமிழக வீரர்கள் முகமது சிராஜ் 15வது ஓவரை வீசியபோதுதான் திருப்பம் ஏற்பட்டது. அரைசதம் நிறைவு செய்து பேட் செய்த ஷாருக்கான், முதல் பந்திலேயே யார்கரில் க்ளீன் போல்டாகி 58 ரன்களில் (30பந்துகள், 5 சிக்ஸர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முதல் 13 ஓவர்களுக்குள் குஜராத் அணி ஷாருக்கான் அதிரடியால் 43 ரன்கள் சேர்த்தது. 3வது விக்கெட்டுக்கு ஷாருக்கான், சுதர்சன் இருவரும் சேர்ந்து 45 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்தனர். நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் அணி மந்தமாக ஆடும் என்று குற்றச்சாட்டு இருந்த நிலையில் இந்த ஆட்டத்தில் 7-வது ஓவர் முதல் 16வது ஓவர் வரை 100 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் குஜராத் அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அடுத்து மில்லர் களமிறங்கி, சுதர்சனுடன் சேர்ந்தார். 16 ஓவர்களுக்குப்பின் சுதர்சன், மல்லர் இருவரும் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். கிரீன் வீசிய 17-வது ஓவரில் சுதர்சன் 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் சேர்த்தார். சிராஜ் வீசிய 19வது ஓவரில் சுதர்சன் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி, 2வது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஆனால், மிகவும் சிரமமான அந்த கேட்சை ஜேக்ஸ் தவறவிட்டார். அந்த ஓவரில் சுதர்சன் பவுண்டரி அடித்து 13 ரன்கள் சேர்த்தார். யாஷ் தயால் வீசிய கடைசி ஓவரில் மில்லர் சிக்ஸர் உள்பட 13 ரன்கள் சேர்த்தனர். 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்த்தது. தமிழக வீரர் சாய்சுதர்சன் 49 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து(4 சிக்ஸர், 8பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார், மில்லர் 26 ரன்களுடன் களத்தில் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES கணினி கணிப்பை பொய்யாக்கிய பேட்டர் பவர்ப்ளே முடிவில் ஆர்சிபி அணி வெற்றி பெற 84 பந்துகளில் 138 ரன்கள் தேவைப்பட்டது. கணினியின் கணிப்புகள் ஆர்சிபி வெற்றிபெற 38.33 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தது. ஆனால், 24 பந்துகள் மீதமிருக்கையில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று கணினியின் கணிப்பையே பொய்யாக்கியது. கணினியின் கணிப்பை பொய்யாக்கியதற்கு முக்கிய காரணமான பேட்டர் வில் ஜேக்ஸ். அதிரடி என்று சொல்வதைவிட காட்டடி அடித்த வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் சதம் அடித்து ஆர்சிபி வெற்றிக்கு முக்கியக் காரணமாகி ஆட்டநாயகன் விருது வென்றார். இதில் 5 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் அடங்கும். 243 ஸ்ட்ரைக் ரேட்டில் ஜேக்ஸ் ஆடினார். 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்து மிரட்டியுள்ளார். குஜராத் அணியின் பேட்டர்கள் 10 சிக்ஸர்கள் அடித்த நிலையில் அந்த 10 சிக்ஸர்களையும் ஆர்சிபி பேட்டர் வில் ஜேக்ஸ் ஒருவரே அடித்து 200 ரன்களை அனாசயமாக சேஸிங் செய்ய உதவினார். குறிப்பாக 31 பந்துகளில் அரைசதம் அடித்த வில் ஜேக்ஸ், அடுத்த 10 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து சதம் அடித்து மிரட்டியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆக்ரோஷம் தெறித்த பேட்டிங் 3வது வீரராக களமிறங்கிய ஜேக்ஸ் தொடக்கத்தில் மிகவும் நிதானமாக பேட் செய்தார். ரன்களைவிட பந்துகளை அதிகம் வீணாக்கி ஜேக்ஸ் ஆடினார். ஆனால், 10 ஓவர்களுக்குப்பின் ஜேக்ஸ் மதம் பிடித்த யானை போன்று ஆக்ரோஷமாக பேட் செய்து குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களை ஓடவிட்டார். குறிப்பாக மோகித் சர்மா வீசிய 15-வது ஓவரில் 2 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 29 ரன்களை ஜேக்ஸ் சேர்த்தார். கடைசி 5 ஓவர்களில் ஆர்சிபி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சிபி அணி வெற்றி பெறுவதற்கு 2 அல்லது 3 ஓவர்கள் வரை ஆகும் என்று ரசிகர்கள் எண்ணி தேநீர் குடிக்க சென்றவர்களுக்கு திரும்பி வந்தபோது வியப்புதான் காத்திருக்கும். ஏனென்றால், ரஷித்கான் வீசிய 16-வது ஓவரில் வில் ஜேக்ஸ் 4 சிக்ஸர்கள், ஒருபவுண்டரி அடித்து ஆர்சிபி அணியை 24 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெறவைத்து அஹமதாபாத் அரங்கையே வியப்பில் ஆழ்த்தினார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கோலி, 32 பந்துகளில் அரைசதம் அடித்து 44 பந்துகளில் 70 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேக்ஸின் மிரட்டலான ஆட்டத்தின் முன் கோலியின் அரைசதம் கவனிப்பின்றி மாறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES பாவப்பட்ட பந்துவீச்சாளர்கள் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் பாவப்பட்டவர்கள். வில் ஜேக்ஸுக்கு எப்படி பந்து வீசுவதென்று தெரியாமல் சிக்கித் தவித்தனர். இதில் பலிகடாவாகியது ரஷித் கான், மோகித் சர்மாதான். இருவரின் ஓவரில்தான் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது, மோகித் சர்மா 2 ஓவர்களில் 41 ரன்களை வாரி வழங்கினார், ரஷித் கான் நிலைமை அதைவிட மோசம் 4 ஓவர்கள் வீசி 51 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒட்டுமொத்த குஜராத் பந்துவீச்சாளர்களும் ஜேக்ஸ் அதிரடியால் துவைத்து தொங்கவிடப்பட்டனர். ஓமர் ஜாய் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார். இதுபோன்ற பேட்டர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக சிக்கிக் கொண்டு பேட்டர்களால் கொடுமையாக வதம் செய்யப்படுகிறார்கள். பந்துவீச்சாளர்கள் இதுவரை கட்டிக்காத்துவந்த தன்னம்பிக்கை எனும் சராசரி, ஸ்ட்ரைக்ரேட் ஆகியவை பேட்டர்களை கிழித்து தொங்கவிடப்படுகின்றன. ரசிகர்களின் ரசனைக்காக, பந்துவீச்சாளர்கள் பலியிடப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES "நம்பிக்கை துளிர்விடுகிறது" ஆர்சிபி கேப்டன் டூப்பிளெசிஸ் கூறுகையில் “ அருமையான விக்கெட். நாங்கள் முதலில் பந்துவீசியபோதே சேஸிங் எளிதாக இருக்கும் என நினைத்தோம். கடந்த சில போட்டிகளை விட தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கிறோம். எங்கள் அணிக்குள் நம்பிக்கை துளிர்விடத் தொடங்கிவிட்டது. பந்துவீச்சாளர்கள் புத்துணர்ச்சி பெற்று நம்பிக்கையுடன் பந்துவீசுகிறார்கள். நாங்கள் இப்போது அடிப்படையான விஷயங்களை சிறப்பாக செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார் நெருக்கடி தரும் ஆர்சிபி இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக எந்த மாற்றத்தையும் சந்திக்கவில்லை என்றாலும், நிகர ரன்ரேட்டில் முன்னேறி வருகிறது. இதுவரை ஆர்சிபி அணி 10 போட்டிகளில் 3 வெற்றி, 7 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில்தான் இருக்கிறது, ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 0.415 ஆகக் குறைந்துவிட்டது. தற்போது 6 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி என 3 அணிகள் இருக்கின்றன. இதில் ஆர்சிபி அணிக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்களும், மற்ற இரு அணிகளுக்கும் 5 லீக் ஆட்டங்களும் உள்ளன. ஆர்சிபி அணி அடுத்துவரும் 4 ஆட்டங்களிலும் இதுபோல் பெரிய வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உண்டு. ஆர்சிபியின் தொடர் வெற்றிகளால் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது பாதியில் உள்ள அனைத்து அணிகளுமே நெருக்கடியில் சிக்கியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES மோசமாகும் குஜராத் குஜராத் அணி கடந்த 10 நாட்களில் சந்திக்கும் 3வது தோல்வி இதுவாகும். 10 போட்டிகளில் 4 வெற்றி, 6 தோல்வி 8 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி கூடுதலாக 2புள்ளிகள் பெற்றுள்ளதேத் தவிர நிகர ரன்ரேட்டில் ஆர்சிபிக்கும் மோசமாக மைனஸ் 1.113 ஆக இருக்கிறது. அடுத்து ஒரு போட்டியில் கூட குஜராத் அணி தோற்றாலும் அதன் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் வந்துவிடும். ஏனென்றால், நிகர ரன்ரேட் மற்ற அனைத்து அணிகளையும் விட மோசமாக இருப்பது பெரும் பின்னடைவாக மாறும். https://www.bbc.com/tamil/articles/cprg1v1lgero

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.