Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. எங்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யும் உங்களிற்கு எங்கள் இதயத்திலிருந்து நன்றிகள் - அமெரிக்க கனடா பல்கலைகழக மாணவர்களிற்கு பாலஸ்தீன சிறுவர்கள் 02 MAY, 2024 | 11:05 AM காசாபள்ளத்தாக்கின் மத்தியில் உள்ள டெய்ர் எல் பலாவில் இடம்பெற்ற பேரணியில் அமெரிக்கா கனடாவில் தங்களிற்காக குரல்கொடுக்கும்மாணவர்களிற்கு ஆதரவு தெரிவிக்கும் வாசகங்களுடன் பாலஸ்தீன சிறுவர்கள் காணப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. கொலம்பியா பல்கலைகழக மாணவர்களிற்கும் ஏனைய பல்கலைகழக மாணவர்களிற்கும் அவர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/182463
  2. வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்கும் பணிகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக ஒப்படைக்கவில்லை - அரசாங்கம் 02 MAY, 2024 | 09:45 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் பணிகளுக்கு உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா விநியோகத்தில் ஏற்பட்ட தாமத நிலைமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருகை தரும் போது(உள் வருகையின் போது விசா) முறைமை ஊடாக விசா விநியோகிக்கும் செயற்பாடு வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் வழங்கப்பட்டது. 2023.09.11 ஆம் திகதி நாட்டுக்குள் உள் வரும் போது விசா விநியோகிக்கும் செயற்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளியாள் நிறுவனத்துக்கு வழங்கும் பத்திரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமர்ப்பித்திருந்தார். இதற்கமைய முறையான விலைமனுகோரலுக்கு அமைய விண்ணப்பம் கோரப்பட்டு,கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களில் இந்த நிறுவனம் மிகச் சிறந்ததாக கருதப்பட்டது. வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருகை தரும் போது விசா விநியோகித்தல் மற்றும் நிகழ்நிலை முறைமை ஊடாக விசாவுக்கு விண்ணப்பம் செய்தல் என்பனவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. இந்த நிறுவனம் நவீன தொழில்னுட்பத்தை பயன்படுத்தி சேவைகளை முன்னெடுத்துள்ளது. 3388 மத்திய நிலையங்கள் ஊடாக 151 நாடுகளுக்கு விசா விநியோகிக்கும் வகையில் இந்நிறுவனம் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்துள்ளது. இருப்பினும் கடந்த நாட்களில் இந்நிறுவனத்தின் சேவையில் சிக்கல் தோற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவையின் அனுமதி இல்லாமல் இந்த நிறுவனத்துக்கு பொறுப்பு வழங்கபட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகிக்கும் பணிகள் வெளிநாட்டு நிறுவனத்துக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. விசா விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக உரிய வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு மாத்திரமே இந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி கருத்துக்களை வெளியிடும் அல்லது செயற்படும் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182525
  3. யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை ; அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் - எரிக் சொல்ஹெய்ம் Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 05:16 PM (நா.தனுஜா) தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதாகவும், யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் சமாதானத்தூதுவரும், நோர்வே நாட்டு இராஜதந்திரியுமான எரிக் சொல்ஹெய்ம், இருப்பினும் இன்னமும் தமிழர்களின் அபிலாஷைகள் முழுமையாகப் பூர்த்திசெய்யப்படாத நிலையில் இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மே தினத்தன்று (1) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எரிக் சொல்ஹெய்ம் வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், இலங்கைத் தமிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.சிறிதரன் உள்ளிட்ட தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தியிருந்தார். அதேவேளை இவ்விஜயம் தொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் எரிக் சொல்ஹெய்ம், அதில் மேலும் கூறியிருப்பதாவது: சுமார் இருபது ஆண்டுகளின் பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருப்பதானது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச்செய்திருக்கின்றது. இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் பலமுறை நான் இங்கு வந்திருக்கின்றேன். சிங்களவர்கள் மற்றும் தமிழர்களின் எனது நெருங்கிய நண்பர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். யுத்தத்தின் பின்னர் இப்போதுதான் நான் முதன்முறையாக யாழ்ப்பாணத்துக்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்திருக்கின்றேன். என்னுடைய நண்பர்களான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹிமன்ஷு குலாட்டி மற்றும் கவின்குமார் கந்தசாமி ஆகியோருடன் இன்று (நேற்று முன்தினம்) இங்கு சென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. அதேபோன்று இலங்கையின் சிரேஷ்ட தமிழ் தலைவரான எஸ்.சிறிதரனுடன் அண்மையகால அரசியல் நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடியதுடன், தற்போது ஆன்மிக நிலையமொன்றை நடாத்திவருபவரும், சமாதானப்பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலத்தில் எனது பழைய நண்பருமான ஜே.மகேஸ்வரனையும் சந்தித்தேன். அத்தோடு எம்மைச் சந்திப்பதற்கு அழைப்புவிடுத்த வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு நன்றி கூறுகிறேன். தற்போது வட இலங்கை சமாதானத்தை அனுபவிப்பதுடன், அது மிகச்சிறந்த விடயமாகும். பாதுகாப்பு சிறந்த நிலையில் உள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்துக்குத் திரும்பிச்செல்வதை எவரும் விரும்பவில்லை. இருப்பினும் தமிழர்களின் பல அபிலாஷைகள் இன்னமும் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. குறிப்பாக யுத்தத்தின்போது காணாமல்போன தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்திருக்கின்றன. கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இன்னமும் முழுமையாக அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மதவழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஆலயங்களை அடிப்படையாகக்கொண்டு நிலவும் குழப்பங்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படவேண்டும். வட இலங்கையில் வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுபீட்சம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கை அரசு அதிகாரங்களைப் பகிரவேண்டும். தமிழர் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும். இருப்பினும் அது வன்முறையற்ற விதத்தில் தொடரும் என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/182501
  4. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:14 PM முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். சுண்டிக்குளம் தேசியா பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கானது கடந்த வருடம் 7.12.2023 அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது , இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம். இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டு குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற ஜூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182505
  5. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:18 PM மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் வலியுறுத்தியுள்ளார். கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் போசாக்கு மட்டமே ஒரு பிள்ளையின் கல்வியையும் விளையாட்டு துறையையும் நிர்ணயிக்கின்றது என்றும் சுட்டிக்காடியுள்ளார். வேலணை மத்திய கல்லுரியின் வருடாந்த விளையாட்டு திறமை காண் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அன்ரன் ரோய் தலைமையில் கடந்த 30.04.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் - வேலணைப் பிரதேசத்தின் மாணவர் மத்தியிலான போசாக்கின்மைக்கு வறுமை ஒருபோதும் காரணமாக இருக்காது. அவர்கள் உண்ணும் உணவின் தரங்கள் அல்லது பழக்கங்கள் தான் அதற்கு முழுமையான காரணமாகின்றது என தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நிலைக்கு பெற்றோரே முக்கிய பொறுப்பானவர்களாகவும் இருக்கின்றனர். ஏனெனில் இப்பிரதேசத்தின் மாணவர் இடையே போசாக்கு மட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான தகவல் எம்மை ஆச்சரியமடைய செய்துள்ளது. குறிப்பாக அந்த ஆய்வின்படி பாதிக்கப்பட்ட 90 வீதத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் பெற்றோர் வறுமைக்கோடின் கீழ் அல்லாத நிரந்தர வருமானம் கொண்டவர்களாகவும் பணம் படைத்தவர்களாகவுமே இருந்துள்ளனர். குறித்த ஆய்வின் பெறுபேறுகளுக்கமைய அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகியுள்ளதை அறிய முடிந்தது. இதனடிப்படையில் பணம் இருக்கின்றது என்பதற்காக ஆடம்பரமான ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் பயனில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை வளர்க்க பெற்றோர் தமது அவசர உணவு பழக்க வளக்கத்தில் மாற்றத்தை கொண்டுவருவதும் அவசியமாக உள்ளது. அந்தவகையில் பிள்ளைகளின் கல்வித் தரநிலையையும் விளையாட்டு உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளையும் ஆரோக்கியமான உடற்கட்டமைப்பையும் நிர்ணயிப்பது ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்க வழக்கமாகவே உள்ளது. அதனடிப்படையில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் ஒவ்வொரு பிள்ளைகளினதும் பெற்றோர் முழுமையான பங்கெடுப்பது அவசியம். இதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடுவதும் அவசியம் . அதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடாதிருப்பதும் அவசியமானது அந்தவகையில் இந்த விளையாட்டு திறமைகாண் நிகழ்வானது வெற்றி பெறுவதற்காக மடுமல்ல கூட்டிணைந்த உறவுகளுடன் கூடிய சிறந்த மனப்பாங்கையும் உருவாக்கிக் கொள்ளும் களமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182492
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES 46 நிமிடங்களுக்கு முன்னர் நவீன யுத்தத்தின் சவால்களைக் கருத்தில் கொண்டு சீனா தனது ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. பிபிசி மானிட்டரிங் செய்திப் பிரிவின்படி, ஏப்ரல் 19 அன்று சீனா ஒரு புதிய ராணுவப் பிரிவை உருவாக்குவதாக அறிவித்தது. சீனாவின் அரசாங்க செய்தி முகமை ஷின்ஹுவாவின் கூற்றுப்படி, இந்தப் புதிய ராணுவப் பிரிவுக்கு தகவல் ஆதரவுப் படை (Information Support Force) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ராணுவப் பிரிவு ஒரு நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்டதாக, அச்செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஷி ஜின்பிங்குடன் மத்திய ராணுவ ஆணையத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக ஷி ஜின்பிங் உள்ளார். இந்தச் சிறப்புப் பிரிவு ராணுவத்தின் ஒரு மூலோபாயப் பிரிவாக இருக்கும் என்றும், தகவல் அமைப்புச் சங்கிலியை வலுப்படுத்துவதே அதன் பணியாக இருக்கும் என்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகளிடம் அவர் கூறினார். கட்சியின் கட்டளைகளை உறுதியாகக் கேட்டு, ராணுவத்தின் முழுமையான தலைமையின் கொள்கை மற்றும் அமைப்பைச் செயல்படுத்தி, அப்பிரிவு விசுவாசமாகவும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதி செய்யும்படி ஷி ஜின்பிங் கேட்டுக் கொண்டார். சீனாவின் நான்கு படைப் பிரிவுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES செய்தி முகமை ஷின்ஹுவாவின் அறிக்கைப்படி, டிசம்பர் 31, 2015 அன்று உருவாக்கப்பட்ட மூலோபாய ஆதரவுப் படை கலைக்கப்பட்டதுதான், ராணுவத்தில் கடைசியாக செய்யப்பட்ட பெரிய சீர்திருத்தம். இதன்கீழ், விண்வெளி மற்றும் சைபர் பிரிவுகள் தகவல் ஆதரவுப் படைக்கு இணையாகச் செயல்படுகின்றன. புதிய பிரிவு உருவாக்கம் குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியது. புதிய சீர்திருத்தத்தின் கீழ், மக்கள் விடுதலை ராணுவம் இப்போது ராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் ராக்கெட் படை என நான்கு சேவைகளைக் கொண்டுள்ளதாக செய்தித் தொடர்பாளர் வூ கியான் கூறினார். இந்த நான்கு சேவைகளைத் தவிர, பிஎல்ஏ (மக்கள் விடுதலை ராணுவம்) நான்கு படைப் பிரிவுகளையும் கொண்டுள்ளது. அவற்றில், விண்வெளி படை, சைபர் படை, தகவல் ஆதரவுப் படை மற்றும் கூட்டுத் தளவாடங்கள் ஆதரவுப் படை ஆகியவை அடங்கும். "விண்வெளி படையின் உதவியுடன் சீனா விண்வெளியில் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும், சைபர் தாக்குதல்களில் இருந்து சைபர் படை நாட்டைப் பாதுகாக்கும், தரவுகளைப் பாதுகாப்பதற்கும் உதவும்" என்று செய்தித் தொடர்பாளர் வூ கியான் கூறினார். இருப்பினும், புதிய பிரிவு குறித்து அவர் அதிக தகவல்களைத் தெரிவிக்கவில்லை. ராணுவத்தின் செய்தித்தாளான பிஎல்ஏ டெய்லி, நவீன போர்களில் வெற்றி என்பது தகவல்களைப் பொறுத்தது, அத்தகைய சூழ்நிலையில் சிறந்த தகவல்களைக் கொண்டவர்களே போரில் வெற்றி பெறுவர் எனத் தெரிவித்துள்ளது. மூலோபாயப் படையில் பணிபுரிந்தவர்களுக்கு புதிய பொறுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஷி ஜின்பிங் சீன ஊடகங்களைப் போலன்றி, ஹாங்காங் ஊடகங்கள் இந்தப் புதிய பிரிவை யார் வழிநடத்துவார்கள் என்பதில் ஆர்வமாக உள்ளன. புதிய பிரிவின் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் பி யி (Bi Yi) நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு அவர் மூலோபாய ஆதரவுப் படையின் துணைத் தளபதியாக இருந்தார். ஹாங்காங்கின் சுயாதீன செய்தித்தாள் மிங் பாவோவின் கூற்றுப்படி, மூலோபாய ஆதரவுப் படையின் அரசியல் ஆணையராக இருந்த ஜெனரல் லி வெய், புதிய பிரிவின் அரசியல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வியூக ஆதரவுப் படையின் முன்னாள் தளபதியும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மத்தியக் குழுவின் உறுப்பினருமான சூ கியான்ஷெங், புதிய பிரிவை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என ட்சிங் டாவ் டெய்லி (Tsing Tao Daily) எழுதியுள்ளது. இதனால் அவர் ராணுவ ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. தற்செயலாக, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபு, 2016இல் மூலோபாய ஆதரவுப் படையின் துணைத் தளபதியாக இருந்தார். கடலில் சீனாவின் ஏற்பாடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கிடையில், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மேற்கு பசிபிசிக் கடற்படை நிகழ்ச்சியின் 19வது நிகழ்வு சீனாவின் செங்டுவில் ஏப்ரல் 21 முதல் 24 வரை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மையத்தில் கடல்சார் பாதுகாப்பில் சீனாவின் எதிர்கால ஏற்பாடுகள் குறித்துப் பேசப்பட்டது. சீன ஊடகங்கள் இந்த நிகழ்வைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் அதன் அமைதியான நோக்கங்களை ஊக்குவிக்கின்றன. அதே நேரத்தில், சீன ஊடகங்களும் அமெரிக்கா பிராந்தியத்தைச் சீர்குலைப்பதாக விமர்சித்துள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணுவ நிபுணர் ஜாங் ஜுன்ஷே கூறுகையில், இந்தக் கூட்டத்தை சீனா நடத்துவது, 'சர்வதேச கடல்சார் வணிகத்தில் சீனாவின் பங்கை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது' என்பதற்கான அறிகுறி என்று தெரிவித்தார். ஏப்ரல் 23ஆம் தேதி சீன ராணுவ நாளிதழில் வெளியான செய்தியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். சீன அரசாங்கத்தின் ஆதரவு செய்தித்தாளான 'குளோபல் டைம்ஸ்' அதன் தலையங்கத்தில், 'மேற்கு பசிபிக் கடற்படை திட்டத்தில் சீன கடற்படையின் அர்ப்பணிப்பு வெளிப்பட்டதாக' தலைப்பிட்டிருந்தது. சீனாவின் ராணுவ பலம் பட மூலாதாரம்,GETTY IMAGES "அமைதி என்ற வார்த்தை இந்த ஆண்டுக்கான கூட்டத்தின் முக்கிய வார்த்தையாக இருந்தது. மேலும், இது பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது," என்று அந்த தலையங்கம் கூறியது. "பிராந்தியத்திற்கு வெளியே சில நாடுகள் அடிக்கடி ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சூழ்நிலைகளில் இது நடைபெற்றுள்ளதாக" தலையங்கம் கூறியது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவது ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் பொறுப்பல்ல, அனைத்து நாடுகளின் கூட்டு முயற்சிகள் தேவை. இந்த நிகழ்வில் பிலிப்பைன்ஸ் பங்கேற்காதது குறித்தும் ஊடகங்கள் விவாதித்தன. ஏப்ரல் 22 அன்று 'குளோபல் டைம்ஸ்' உடன் பேசிய ஜாங் ஜுன்ஷே, சர்வதேச கவனத்தை ஈர்க்கும் திட்டத்தில் பிலிப்பைன்ஸ் இல்லாதது, திட்டத்திற்கு சிரமங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று கூறினார். இதுதவிர, ஸ்வீடன் நாட்டு சிந்தனைக் குழுவான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பத்து ஆண்டுகளில் கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு செலவு செய்யப்பட்டுள்ளது என்று, ஏப்ரல் 22 அன்று ஹாங்காங்கின் 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' கூறியது. சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ பலத்தைக் கருத்தில் கொண்டு, அதன் அண்டை நாடுகளான ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் தங்கள் ராணுவ வரவு செலவுகளை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/ck7lk07mykgo
  7. Published By: DIGITAL DESK 7 02 MAY, 2024 | 05:20 PM ( எம்.நியூட்டன்) உள்ளூர் உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தரச் சான்றிதழைப் வழங்கும் நிறுவனம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கொன்றோள் யூனியன் (CONTROL UNION) என்ற நிறுவனம் யாழ்ப்பாணம் செட்டித்தெரு இல.40 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொடர்பில் யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ. ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கையில் வடமாகாணத்திலுள்ள உற்பத்தியாளர்கள் விவசாயம் உணவு உற்பத்தி போன்ற பல வகையான உற்பத்திகளுக்கான உற்பத்தி தரச் சான்றிதழை வழங்குவதற்கு இந்த நிறுவனம் தயாராகவுள்ளது. உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கான தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கான ஆலோசனைகளையும் , தரச் சான்றிதழ்களுக்கான ஆய்வுகள் செய்து வழங்குவார்கள் ஏற்கனவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருப்பவர்களும் இந்த நிறுவனத்தின் தரச் சான்றிதழைப் பயன்படுத்தி தரத்தை உயர்த்தி பொருட்களை எற்றுமதி செய்யமுடியும். ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கான தரச் சான்றிதழ்களைப் பெற்று அனுப்புகின்றபோது குறித்த உற்பத்திப் பொருட்களை தங்கு தடையின்றி தொடர்ந்தும் அனுப்பக்கூடியதாக இருக்கும். வடக்கு மாகாணத்தில் இருந்து ஏற்கனவே பல நிறுவுனங்கள் இந்தச் தரச் சான்றிதழ்களை கொழும்பு சென்றே பெற்று பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வியாழக்கிழமை இந்த நிறுவனம் இங்கு ஆரம்பித்துள்ளமையினால் ஏனைய உற்பத்தியாளர்களும் இந்த நிறுவனத்தைப் பயன்படுத்தி தரச் சான்றிதடைகளைப் பெற்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை பெற்றுக் கொள்ளமுடியும் எனவே உள்ளுர் உற்பத்தியாளர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் இந் நிறுவனத்தின் முகாமத்துவ பணிப்பாளர் றொசான் றணவக்க ,வர்த்தக முகாமையாளர் சுனர விக்கிரமாராச்சி மற்றும் நிறுவன அதிகாரிகள்,யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர் இ,ஜெயசேகரன்,மாகாண கைத்தொழில் அபிவிருத்தி பணிப்பாளர் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/182506
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அதீத காலநிலை நிகழ்வுகள் காரணமாக தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். புனேவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், இந்தியப் பெருங்கடல் அடுத்த 80 ஆண்டுகளில் அதீத காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளப் போவதாகவும் இதனால் பெருங்கடல் பகுதியில் பவளப்பாறைகள் அழிவு, கடல் அமிலமயமாதல், அதிக புயல் மற்றும் சூறாவளி நிகழ்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது. எல்சேவியர்ஸ் ஆய்விதழில் வெளியாகியுள்ள ‘இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டல பகுதிக்கான எதிர்கால கணிப்புகள்’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானியான ஐஐடிஎம் புனேவை சேர்ந்த காலநிலை விஞ்ஞானி ராக்சி மேத்யு கோல், “எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் வெப்பநிலை உயர்வு, ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்புக்கு நிகரான வெப்பத்தை உண்டாக்கும்” என்று தனது ஆய்வின் முடிவுகள் குறித்து விவரிக்கிறார். மேலும், “இந்த மாற்றங்களின் தாக்கங்கள் நமது எதிர்கால சந்ததிகள் எதிர்கொள்ளக் கூடியவை என்று புறக்கணிக்க முடியாது. இவற்றின் விளைவுகளை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம்." என்கிறார் அவர். பட மூலாதாரம்,ROXY MATHEW KOLL/FB "வெள்ளம், வறட்சி, சூறாவளி, நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலும் நிகழும் வெப்ப அலைகள் நம்மை அதிகளவில் பாதிக்கின்றன. காலநிலை நெருக்கடியைத் தணிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், இந்தத் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆய்வு முடிவுகள் கூறும் காலத்திற்கும் முன்பே தீவிரமடையும்,” என்று எச்சரிக்கிறார் ராக்சி மேத்யூ கோல். இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதி குறித்து ஆய்வறிக்கை முன்வைக்கும் எச்சரிக்கைகள்: கடந்த 70 ஆண்டுகளில்(1950-2020) நூற்றாண்டுக்கு 1.2 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவுக்கு இந்தியப் பெருங்கடலில் வெப்பநிலை அதிகரித்தது. ஆனால், அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) நூற்றாண்டுக்கு 1.7 டிகிரி செல்ஷியஸ் முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும். அரபிக் கடல் உட்பட வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதி அதிகபட்ச வெப்பநிலை உயர்வை எதிர்கொள்ளக்கூடும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிதீவிர பருவநிலை நிகழ்வுகள் ஏற்படலாம். கடந்த 1950கள் முதல் அதிகன மழை, அதிதீவிர சூறாவளிகள் ஆகியவை அதிகரித்துள்ளன. இந்த நிகழ்வுகளின் அளவு வரும் ஆண்டுகளில் உயரப்போகும் கடல் வெப்பநிலை காரணமாக மேன்மேலும் அதிகரிக்கும். கடல் மேற்பரப்பு மட்டுமின்றி, கடலின் 2000 மீட்டர் ஆழத்திலும்கூட பத்து ஆண்டுகளுக்கு 4.5 ஜெட்டா-ஜூல் என்ற கணக்கில் ஏற்கெனவே வெப்பமடைந்து வருகிறது. இவற்றின் விளைவாக இந்தியப் பெருங்கடலில் அதிகரிக்கப் போகும் கடல் அமிலமயமாதல், பவளப்பாறை அழிவு, கடல்புல் அழிவு, கடல்பாசி நிறைந்த பகுதிகளின் அழிவு ஆகியவற்றால் வாழ்விடச் சிதைவு ஏற்படக்கூடும். இதனால் பெருங்கடலின் மீன்வளத்துறை பெரியளவில் பாதிக்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் காலநிலை விளைவுகளால் மீனவர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆபத்து என்ன? "இதுபோன்ற எச்சரிக்கைகள் புதிதல்ல" என்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ். "இவை குறித்து என்ன செய்யலாம் என்று மீனவ சமூகங்களிடம் கலந்து பேசினால் மட்டுமே அவர்களுக்கு ஏற்ற உரிய தீர்வு கிடைக்கும்" என்றும் வலியுறுத்துகிறார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச இடை அரசுக் குழுவின் (ஐபிசிசி) சிறப்பு அறிக்கை, “கடல் வெப்பநிலை எதிர்பாராத வேகத்தில் உயர்வதாகவும் இதனால் அதைச் சார்ந்துள்ள சமூகங்கள் பெரியளவிலான பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் எச்சரித்தது. அந்த எச்சரிக்கையை மேலும் அழுத்தமாகத் தற்போதைய ஆய்வு எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார் ஜோன்ஸ். கடல் வெப்பநிலை அதிகரிப்பது, கடல் மட்டம் உயர்வது, கடல் நீர் உட்புகுதல் ஆகியவை கழிமுகப் பகுதிகளில் ஆக்சிஜன் நீக்கம் ஏற்படக் காரணமாக அமைவதாகவும் இதனால், மீன் இனங்களின் இடப்பெயர்ச்சி நடப்பதாகவும் ஐபிசிசி அறிக்கை எச்சரித்தது. அதன்படி, வாழ்விடப் பரவல், மீன்களின் இருப்பு ஆகியவற்றின்மீது வெப்பநிலை உயர்வு ஏற்படுத்தியதன் விளைவுகளை ஏற்கெனவே மீன்பிடித் தொழிலும் அதைச் சார்ந்து வாழும் சமூகங்களும் எதிர்கொள்கின்றன. படக்குறிப்பு,மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருவதாக எச்சரிக்கிறார் நெய்தல் சமூக ஆய்வாளரும் உலக மீனவர் மன்றத்தின் பிரதிநிதியுமான ஜோன்ஸ் தாமஸ் பார்டகஸ். இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஆய்வு “கடந்த 70 ஆண்டுகளில் (1950-2020) இந்தியப் பெருங்கடலின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், காலநிலை மாதிரிகள் கணித்துள்ளதன்படி அடுத்த 80 ஆண்டுகளில் (2020-2100) இந்த அளவு குறைந்தபட்சம் 1.7 டிகிரி முதல் அதிகபட்சமாக 3.8 டிகிரி வரை இருக்கும்” என்று எச்சரிக்கிறது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியும் அரபிக் கடலும்தான் இதன் தீவிரத்தை அதிகம் உணரப் போவதாகவும் ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன. இது கடலோர சமூகங்கள், குறிப்பாக கடல் வளங்களைச் சார்ந்திருக்கும் மீனவ சமூகங்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் ஜோன்ஸ். கேள்விக்குறியாகும் மீனவர்களின் வாழ்வாதாரம் சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற 55-ஆவது மனித உரிமை மன்றத்தில் மீனவ சமூகங்களின் பிரதிநிதியாகப் பங்கெடுத்த ஜோன்ஸ், “இந்தியப் பெருங்கடல் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் எனப் பல முனைகளிலும் குறிவைக்கப்படுவதால், இதுபோன்ற காலநிலை நெருக்கடிகளோ அதன் விளைவாகப் பாதிக்கப்படும் மீனவ சமூகங்களோ கண்டுகொள்ளப்படுவது இல்லை,” என்று கடுமையாக விமர்சிக்கிறார். “இந்தியப் பெருங்கடல் என்னும்போது, அதை மட்டுமே பார்க்கக்கூடாது. இதைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் சுமார் 80 சதவீதம் வர்த்தகம் நடைபெறுகிறது. அதுபோக, பாதுகாப்பு ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. பல நாடுகள் இங்குள்ள தீவுகளின்மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. மீன் சார்ந்த தொழில் துறையும் இங்கு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், இங்குள்ள மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரம் குறித்து யாருமே கவலைப்படுவது இல்லை,” என்று குற்றம் சாட்டுகிறார் ஜோன்ஸ். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பகுதியிலுள்ள அனைத்து மீனவர்களும் வரலாற்று ரீதியாகவே ஓர் இன ஒதுக்கலை எதிர்கொள்வதாக அவர் கூறுகிறார். “இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பொறுத்தவரை பேரிடர்களும் வளர்ச்சிகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஆனால், அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் மீனவ மக்கள் அதன் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்களே தவிர, இங்கு கிடைக்கும் நன்மைகள் அவர்களைச் சென்றடைவதே இல்லை.” சமீபத்திய ஆய்வறிக்கை, இந்தியப் பெருங்கடலின் வெப்பமண்டலப் பகுதிகளில் ஆக்சிஜன் செறிவு குறைந்து வருவதாகவும் கண்டறிந்துள்ளது. சர்வதேச அளவில் கரிம உமிழ்வை உடனடியாகக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் இந்த ஆய்வின் முன்னணி விஞ்ஞானி ராக்சி மேத்யூ கோல். பலமுனைகளில் இருந்து இதை அணுகுவதன் மூலம்தான் வரவிருக்கும் சவால்களைச் சமாளிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதாவது, உலகளாவிய கரிம உமிழ்வைக் கட்டுப்படுத்துவது, இதன் விளைவாக ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளத்தக்க கட்டுமானங்களை உருவாக்குவது எனப் பலமுனை நடவடிக்கைகளை ஒருசேர எடுப்பதே கடலோர சமூகங்கள் எதிர்கொள்ளவிருக்கும் இந்தப் பேராபத்தைத் தடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘மூச்சுமுட்டும் நிலையில் தவிக்கும் மீனவர்கள்’ ஆனால், ஏற்கெனவே மீனவர்கள் எதிர்கொண்டு வரும் அபாயங்களே அவர்களை மூச்சுமுட்ட வைப்பதாகவும் இந்த நிலையில் இப்படியொரு எச்சரிக்கை வந்திருப்பது சிவப்பு எச்சரிக்கையைவிடத் தீவிரமானது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ். “கடலோர பொருளாதார மண்டலங்கள், கடலில் நடக்கும் பொருளாதார நடவடிக்கைகள், இவற்றுக்கு மேல் காலநிலை நெருக்கடியால் ஏற்படும் தொழில், வாழ்வாதார பாதிப்புகள் என்று அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நிகழும்போது மீனவர்களால் எந்தப் பக்கம் ஓட முடியும்?” என்று வினவும் ஜோன்ஸ், மீனவ சமூகங்கள் அனைத்துமே இப்போதே உள்நாட்டு சூழலியல் அகதிகளாகத்தான் இருப்பதாகவும் கூறுகிறார். அதே நேரத்தில், இத்தகைய ஆய்வுகளை முற்றிலுமாகச் சார்ந்திருக்க முடியாது என்கிறார் ஐஐடி மும்பையை சேர்ந்த பேராசிரியரும் காலநிலை விஞ்ஞானியுமான ரகு முர்துகுட்டே. அவரது கூற்றுப்படி, ஒருவேளை உண்மையாக இத்தகைய பேராபத்து வரவுள்ளது என வைத்துக்கொண்டாலும்கூட அதைச் சமாளிக்க என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான பதில் நம்மிடம் இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES காலநிலை மாதிரிகள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் எதிர்காலம் குறித்த ஊகங்களை மட்டுமே வழங்குவதாகவும் அவற்றை முழுமையாக நம்ப முடியாது என்று கூறும் முர்துகுட்டே, பவளப் பாறைகள் அழிவு, கடல்பரப்பில் வெப்பநிலை உயர்வு, கடல் அமிலமயமாதல் ஆகிய அபாயங்கள் அதிகரித்து வருவதை ஏற்றுக்கொள்கிறார். “கடல் பகுதியில் ஏற்படும் வெப்ப அலைகளை, அதன் பாதிப்புகளை இப்போது எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பது குறித்து நாம் கலந்தாலோசித்து திட்டமிட வேண்டும். அதன் பிறகு, 2100-இல் ஏற்படப்போகும் ஆபத்துகளைப் பற்றிச் சிந்திக்கலாம்.” மீன் வளத்தைப் பொறுத்தவரை அளவுக்கு அதிகமாக மீன் பிடிப்பது ஒருபுறம் பிரச்னையாக இருக்க, மறுபுறம் காலநிலை நெருக்கடியால் மீன் வளம் குறைவது ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. இந்த இரண்டையும் தனித்தனி பிரச்னைகளாக அணுக வேண்டியது அவசியம் என்கிறார் ரகு முர்துகுட்டே. “கடலோரங்களில் அலையாத்திக் காடுகள், பவளப் பாறைகள் மீது அதிக கவனம் செலுத்துவது, மாசுபாடுகளைக் கட்டுப்படுத்துவது, மீனவ சமூகங்கள் ஒட்டுமொத்தமாக மீன் பிடிக்காமல், அவர்களில் யாரெல்லாம், எந்தெந்த காலகட்டங்களில் மீன் பிடிக்கலாம் என்பது போன்ற ஏற்பாடுகளைச் செய்வது, மீன்வள மேலாண்மையில் நிலைத்தன்மையைக் கொண்டு வருவது எனப் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்த வகையில் எடுக்க வேண்டியது அவசியம். அதன்மூலம் இந்த அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியும்.” எனவும் வலியுறுத்துகிறார் அவர். காலநிலை நெருக்கடியைக் கையாள என்ன செய்ய வேண்டும்? பட மூலாதாரம்,GETTY IMAGES உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்லுயிர்ச் சூழலைப் பாதுகாக்கவும், காலநிலை தகவமைப்புடன் கூடிய அணுகுமுறையைக் கையாள வேண்டியது அவசியம் எனவும் இதில் சர்வதேச ஒத்துழைப்பையும் வளர்க்க வேண்டும் என்று சமீபத்திய ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது. ஆனால் காலநிலை நெருக்கடியின் விளைவாக ஏற்படும் ஆபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாகவும் கூறுகிறார் ரகு முர்துகுட்டே. கடலோர பொருளாதார மண்டலங்கள் மூலம் துறைமுகங்களைப் புதிதாகக் கட்டுவது, ஆழ்கடல் சுரங்கங்கள், ஹைட்ரோகார்பன் திட்டங்கள், தூய ஆற்றல் என்ற பெயரில் ஆழ்கடலில் காற்றாலைகளை நிறுவுவது எனப் பல திட்டங்கள் இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் பகுதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், “இத்தகைய பொருளாதார நோக்கிலான திட்டங்களால் தற்போது கூறப்படும் காலநிலை எச்சரிக்கைகள் துரிதப்படுமே தவிர, தணியாது” என்று விமர்சிக்கிறார் ஜோன்ஸ். மனித நடவடிக்கைகளால் துரிதமடையும் அபாயங்களை மட்டுப்படுத்தாமல், “வளர்ச்சித் திட்டங்கள்” மூலம் அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதையே அரசு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். பட மூலாதாரம்,SIVA.V.MEYYANATHAN/TWITTER காலநிலை நெருக்கடியின் விளைவுகள் மட்டுமின்றி மேற்கூறிய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் அபாயங்களையும் கையாள்வதற்கான அணுகுமுறையைத் திட்டமிடும்போது மீனவ சமூகங்களின் பார்வை மிகவும் அவசியம் என அவர் வாதிடுகிறார். “உள்ளூர் மக்கள் சமூகங்களைத் திட்டமிடுதலில் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற பார்வையே அதிகாரிகள், வல்லுநர்கள் என யாரிடத்திலும் இல்லை. அப்படி நினைத்தால் மட்டுமே அவர்களுக்குத் தேவையான நடவடிகைகளை மேற்கொள்ள முடியும். அதன் மூலமாகத்தான் எதிர்வரும் அபாயங்களைக் கையாள முடியும்” என்கிறார் ஜோன்ஸ். மீனவர்கள் நலனில் அரசு அக்கறை செலுத்துகிறதா? தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டு காலத்தில் எந்தவித அபாயகரமான திட்டமும் கடற்கரையோரங்களில் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார் தமிழ்நாடு சுற்றுச்சூழல், காடு, காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன். எந்தவொரு திட்டமோ நடவடிக்கையோ கொண்டு வரப்படும்போது மீனவ சமூகங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்துக் கேட்டபோது, “மீனவ மக்களுடைய உரிமைகள், வாழ்வாதாரம் தொடர்பான பணிகளை, மீனவ சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டு, அவர்கள் அறிவுறுத்தியதன்படியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்றார். எதிர்காலத்தில் காலநிலை நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டே நெய்தல் மீட்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறினார் மெய்யநாதன். அந்தத் திட்டத்தால் மீனவ மக்களுக்குப் பெரிய பயன் ஏதுமில்லை என்ற விமர்சனம் குறித்துக் கேட்டபோது, “மீன்பிடித் தடைக்காலத்தில் கொடுக்கப்படும் தொகை உயர்த்தப்பட்டுள்ளது, மீனவ மக்களுக்கான வீட்டு வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன” என்று கூறியவர் அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் நிறைவேற்றித் தருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c84z39xx194o
  9. லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு! 02 MAY, 2024 | 08:04 PM லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, 4,115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் தற்போது 4,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/182519
  10. Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 04:41 PM பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய தேடுதல் நடவடிக்கையின் கீழ் குற்றப்புலனாய்வு பிரிவு கீழ் பணிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக சட்ட விரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மன்னாரில் சந்தேக நபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று வியாழக்கிழமை (2) முடக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு வீடுகள்,சொகுசு வாகனம் உள்ளடங்களாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மேற்படி நீதிமன்ற அனுமதியுடன் முடக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றை பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதாரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பல கோடி சொத்துக்களை சேர்த்துள்ளார். அதன் அடிப்படையில் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் இயங்கும் சொத்து முடக்கள் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியை பெற்று வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜசேகர மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவின் சட்ட விரோத விசாரணை பிரிவு பொலிஸாரினால் தற்காலிகமாக இன்றில் இருந்து 7 தினங்களுக்கு சந்தேக நபரின் சின்னக்கடையில் காணப்படும் கடைதொகுதியுடன் கூடிய வீடு ஒன்றும் தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு சொகுசு வாகனம் ஒன்று முடக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இதனை தொடர்ந்து உயர் நீதி மன்றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈட்பட்டுள்ளனர். வடக்கில் சட்ட விரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் முறை என்பதுடன் இது போன்று சட்ட விரோதமாக சொத்துக்கள் ஈட்டிய பல்வேறு நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182504
  11. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தொடரக்கூடாது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இந்தச் சம்பவங்களில் என்ன நடந்தது? கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "காவல் நிலைய மரணங்களே இல்லை என்ற நிலையை தமிழக காவல்துறையினர் ஏற்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த ஆண்டுத் துவக்கத்தில் இருந்து ஏப்ரல் மாதத்திற்குள் மட்டும் 3 காவல் மரணங்கள் நடந்திருந்தன. முதலமைச்சர் இப்படிச் சுட்டிக்காட்டிப் பேசிய பிறகும்கூட போலீஸ் காவலில் இருப்பவர்கள் மரணமடைவது தொடர்ந்துகொண்டே இருந்தது. ஆனால், இப்போது ஒரே மாதத்தில் 12 நாட்களுக்குள் நான்கு பேர் போலீஸ் காவலில் இறந்திருப்பதுதான் பலரையும் அதிர வைத்திருக்கிறது. ஏப்ரல் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதிவரை நான்கு பேர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது உயிரிழந்திருக்கின்றனர். இந்த நான்கு பேரில் 2 பேர் காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கின்றனர். இரண்டு பேர் நீதிமன்றக் காவலில் உயிரிழந்திருக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர் காவலில் மரணம் மணிமேகலையும் அவரது கணவர் கணேசனும் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையின் வாயிலில் கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் கடைகள் அங்கிருந்து அகற்றப்படவே, தற்போது கூலி வேலை செய்கிறார்கள் இந்தத் தம்பதி. இவர்களது ஒரே மகன் கார்த்திக். இவருக்குத் திருமணமாகி, ஒரு வயதிலும் 3 வயதிலும் குழந்தைகள் இருக்கின்றனர். இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில்தான் ஒரு வழிப்பறி வழக்கில் கைதுசெய்யப்பட்ட கார்த்திக், போலீஸ் காவலிலேயே இறந்து போயிருக்கிறார். "ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவனை போலீஸ்காரர்கள் வந்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நான் வேலைக்குப் போயிருந்ததால், பிற்பகல் நான்கு மணி அளவில் தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். நான் என் மருமகளிடம் விவரத்தைச் சொன்னேன். அதற்குப் பிறகு ஆறு மணிக்கு என் மகனே போன் செய்தான். தன்னை ரிமாண்ட் செய்யப்போவதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னான். உடனே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனோம். பத்து மணியளவில் அவனை ரிமாண்ட் செய்து ஜெயிலுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். நாங்கள் வீட்டுக்குப் போய்விட்டோம்." என்கிறார் கார்த்தியின் தாயாரான மணிமேகலை. "அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு காவல் துறையிடமிருந்து போன் வந்தது. என்னுடைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள். போய்ப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினோம். அன்று இரவு 2 மணிக்கு போலீஸிடமிருந்து மறுபடியும் போன் வந்தது. எனது மகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் வந்து பார்க்கும்படியும் சொன்னார்கள். நாங்கள் போய் பார்த்த சிறிது நேரத்திலேயே அவன் இறந்துவிட்டான். என்ன நடந்ததென்றே தெரியவில்லை" என்கிறார் மணிமேகலை. அதீத காய்ச்சலால் இறந்ததாகக் கூறிய காவல்துறை அவர் அதீதமான காய்ச்சலால் உயிரிழந்ததாக காவல் துறை கூறியிருக்கிறது. இருந்தாலும் குடும்பத்தினரால் நம்ப முடியவில்லை. நன்றாகப் பேசிக்கொண்டிருந்த மகன் எப்படி திடீரென இறக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் போலீஸ் காவலில் இறந்து போனார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,இட்லி கார்த்திக். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படம் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு நேர்ந்தது என்ன? பா.ஜ.கவின் பட்டியல் அணி பிரிவின் மாநிலப் பொருளாளரான சங்கர் என்பவர் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலரான 30 வயது சாந்தகுமார் என்பவர் கைதுசெய்யப்பட்டு 11 மாதங்களுக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார். அவர் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட்டுவந்தார். இதற்காக புட்லூரில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் அவரையும் அவருடன் இருந்த வேறு ஆறு பேரையும் கைதுசெய்தனர். செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக சாந்தகுமார் கூறியதாகவும் அதனால், அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES திட்டமிட்ட படுகொலை எனக் கூறும் சாந்தகுமாரின் மனைவி இது திட்டமிட்ட படுகொலை என்று குற்றம்சாட்டிய சாந்தகுமாரின் மனைவியும் அவரது குடும்பத்தினரும் சாந்தகுமாரின் மரணம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். "என் கணவரின் சொந்த ஊரே புட்லூர்தான். அவருடைய அம்மா வழியில் வந்த நிலம் அங்கிருந்தது. அதை விற்பது குறித்து பேசத்தான் அவர் அங்கே போயிருந்தார். ஆனால், ஆயுதங்களோடு இருந்ததாகக் கூறி கைதுசெய்திருக்கிறார்கள். அன்று மாலை நான்கு மணியளவில்தான் எனக்குத் தகவல் தெரிந்தது. நான் வழக்கறிஞர்களை அனுப்பிவைத்தேன். உள்ளே விசாரணை நடந்துவந்ததால், அவர்களால் அவரை சந்திக்க முடியவில்லை. ஐந்தரை மணியளவில் போன் செய்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வரச் சொன்னார்கள். அங்கே போனபோது, மார்ச்சுவரியில் என் கணவரின் உடல் இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள்" என்கிறார் அவரது மனைவி விஜயலட்சுமி. இப்போது இந்த விவகாரம் தொடர்பாக குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. சாந்தகுமாரிடம் விசாரணை நடத்திய நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது எப்படி நடந்தது என்பது குறித்து ஆவடி மாநகர காவல் துறை ஆணையர் ஷங்கரிடம் கேட்டபோது, "பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், இதுவரை கிடைத்த தகவல்களின் படி அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை. இருதய நாளங்களில் அடைப்பு இருந்ததால்தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். ஆனால், காவல் நிலையத்தில் இருக்கும்போது இந்தச் சம்பவம் நேரிட்டதால் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நீதித்துறை நடுவர் விசாரணை நடக்கிறது. விசாரணையின் முடிவை வைத்து கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்தார். ஆனால், சாந்தகுமாருக்கு வயது வெறும் 30தான் எனும்போது சந்தேகம் ஏற்படாதா எனக் கேட்டபோது, "இப்போது சிறு வயதினருக்கே மாரடைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி கூடத்தில்கூட மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இருந்தாலும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் எதையும் சொல்ல முடியும்" என்கிறார் அவர். உயிரிழந்த சாந்தகுமாருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேபோல, ஏப்ரல் 10ஆம் தேதி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு வீடு திரும்பிய கே. ராஜா என்பவர், வீட்டிற்குள் வந்தவுடன் உயிரிழந்தார். விழுப்புரம் டவுன் ஜிஆர்பி தெருவைச் சேர்ந்த 44 வயதான கே. ராஜா என்பவரை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் காணவில்லை. ஏப்ரல் பத்தாம் தேதி காலையில் அவர் காவல் துறையால் கைதுசெய்யப்பட்டிருப்பது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது. இதற்குப் பிறகு அவரைச் சந்திக்க அவரது குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் கைதியை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்குப் பிறகு காலை 11.30 மணியளவில் அவர் வீடு திரும்பினார். டாஸ்மாக் ஒன்றுக்கு அருகில் இருந்த உணவகத்தில் வேலை பார்த்த ராஜா, மது விற்பனைக்கான நேரம் முடிந்த பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்ற குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டதாக காவல்துறை கூறியது. வீட்டுக்குத் திரும்பிய ராஜா, தன்னைக் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதாக குடும்பத்தினரிடம் கூறியிருக்கிறார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் வாயிலிருந்து நுரை தள்ளி கீழே சாயவே, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது இது தொடர்பாக விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட சிவகாசியை சேர்ந்த 60 வயதான ஜெயக்குமார் என்ற விசாரணைக் கைதி ஏப்ரல் 15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அங்கேயே உயிரிழந்தார். விழுப்புரம் வழக்கைத் தவிர, மற்ற மூன்று சம்பவங்கள் தொடர்பாகவும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 176 (1) (அ)ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு சம்பவங்களிலும் தமிழ்நாடு அரசு இழப்பீடு ஏதும் அறிவிக்கவில்லை. விழுப்புரம் ராஜாவின் மரணம் சந்தேக மரணமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இப்போது மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. "இந்த வழக்குகளின் புலன் விசாரணையை உடனடியாக குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CB-CID) மாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த மரணங்களில் தொடர்புடைய காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். மேலும் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த நான்கு சம்பவங்களிலும் தொடர்புடைய அனைத்து காவலர்கள், சிறைச்சாலை அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இது தொடர்பான விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையத்திடம் (NHRC) தெரிவிக்க வேண்டும்" என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளரான ஹென்றி திஃபேன். மேலும் சில விஷயங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். "இதுபோல நடந்தால் என்ன செய்ய வேண்டுமென 'சந்தேஷ் VS மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்' வழக்கின் தீர்ப்பில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் போலீஸ் காவலில் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் பார்க்காமல் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கே அனுப்பக்கூடாது. பிரேதப் பரிசோதனை அறிக்கையை உடனடியாக குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும். அவர்கள் அதனைப் படித்துப் பார்த்து, ஒப்புதல் தெரிவிக்க கால அவகாசம் வழங்கியே சடலத்திற்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தாலே, பாதி பிரச்னைகள் எழாது. இந்தப் பரிந்துரைகள் எல்லாமே காவல்துறைக்கு எதிரானவையல்ல. அவர்களுக்கு ஆதரவானவைதான். இந்த விதிமுறைகளின்படி நடந்தால், காவல்துறை அதிகாரிகள் எந்தச் சிக்கலிலும் சிக்க மாட்டார்களே.. ஆனால், அப்படி செய்யாமலிருப்பது ஏன் எனத் தெரியவில்லை" என்கிறார் ஹென்றி. பட மூலாதாரம்,GETTY IMAGES காவல்துறையில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள விதிமுறைகளைப் பின்பற்றினாலே போதும் என்கிறார் முன்னாள் டிஜிபியான திலகவதி. "ஒருவரை காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துவரும்போது பல சமயங்களில் அவரது உடல் நிலை மோசமாகக்கூட இருக்கலாம். அதனால்கூட மரணங்கள் நேரலாம். அதற்கு காவல்துறை பொறுப்பேற்க நேர்கிறது. ஆகவே, ஒருவரை விசாரணைக்கு அழைத்துவரும்போதே அவரை மருத்துவ பரிசோதனை செய்துதான் அழைத்து வரவேண்டும். அவருக்கு உடல்நிலை மோசமாக இருந்தால், மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமே தவிர, காவல் நிலையத்திற்கு அழைத்துவரக்கூடாது. கைது செய்யப்பட்டவுடனேயே உறவினர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். கைதி விரும்பினால் வழக்கறிஞர்களிடம் பேச அனுமதிக்க வேண்டும்." "எந்தக் கைதியையும் இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் தங்க வைக்கக்கூடாது. காரணம், இரவில் காவல் நிலையத்தில் மிகக் குறைவான காவலர்களே இருப்பார்கள். திடீரென கைதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால் ஒன்றிரண்டு காவலர்களால் எதுவும் செய்ய முடியாது. இந்த விதிமுறைகளை திரும்பத் திரும்ப காவல்துறையினருக்கு சொல்லிவர வேண்டும். மனித உயிர் விலைமதிப்பற்றது" என்கிறார் திலகவதி. தேசிய மனித உரிமை ஆணையம் அளிக்கும் புள்ளிவிவரங்களின்படி, 2018-19ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 11 காவல் மரணங்களும் 89 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. இந்திய அளவில் 137 காவல் மரணங்களும் 1797 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. 2019 - 20ல் தமிழ்நாட்டில் 12 காவல் நிலைய மரணங்களும் 57 சிறை மரணங்களும் நடந்திருக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/c72pkrxp3xxo
  12. யாழ். புங்குடுதீவு மனித எச்ச அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தது Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 02:14 PM யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன. அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை, அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர். அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி, அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை பார்வையிட்ட நீதவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்ததுடன் மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182482
  13. பிரபஞ்சத்தில் தனித்துவிடப்பட்ட உயிர்க்கோளமான பூமிக்கு அப்பால், அதே போன்ற இன்னொரு கிரகத்தில் உயிர்களின் சாத்தியத்தை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி உறுதி செய்திருக்கிறது. சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றிவரும் K2-18b என்ற கிரகத்தை, உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளுடன் ஜேம்ஸ் வெப் விண்வெளி ஆய்வுக்கான தொலைநோக்கி கண்டறிந்துள்ளது. இதுவரை ஏவப்பட்டவற்றில் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் தந்திருக்கும் தரவுகள், விண்வெளி ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தந்துள்ளன. பூமி – K2-18b கற்பனை ஒப்பீடு K2-18b கிரகம் பலவகையிலும் பூமியை ஒத்துள்ளது. பூமியின் அளவில் 2.6 மடங்கு பெரிதான K2-18b, பூமி போன்றே கடல்கள் சூழ அமைந்துள்ளது. கூடவே இந்த கிரகம் உயிர்கள் வாழத் தகுதியானது என்பதை நிரூபிக்கும் தரவுகளும் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இவை உலகம் முழுக்க விண்வெளி அறிவியலாளர்களை K2-18b திசைக்கு திருப்பியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த கிரகத்தின் இருப்பு உறுதி செய்யப்பட்டாலும், அண்மை ஆய்வுகள் அதில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகம் உறுதிசெய்து வருகின்றன. குறிப்பாக உயிர்களால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டைமெதில் சல்பைடு வாயு அந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட ஆய்வுகள் மேற்படி கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பனி ரொ க்சைடு இருப்பை உறுதிப்படுத்த முயன்று வருகின்றன. அடுத்த 6 மாதங்களில் இதற்கான விடை கிடைத்துவிடும் என்றும் நாசா அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அங்கிருக்கும் ஏலியன்கள் அல்லது ஏதோவொரு உயிர்களை, மேலும் நெருக்கமாக ஆராய்வதற்கு பூமிக்கும் K2-18b கிரகத்துக்கும் இடையிலான தொலைவு பெருந்தடையாக உள்ளது. 124 ஒளியாண்டுகள் தொலைவு என்பது, K2-18b கிரகத்தை நோக்கி பயணம் மேற்கொள்வதில் மனிதனின் அற்பமான ஆயுளோடு ஒப்பிடுகையில் மிகப் பிரம்மாண்டமானது. மணிக்கு 38,000 மைல் வேகத்தில் சீறும் வாயேஜர் விண்கலத்தில் ஏறி விரைந்தாலும் கூட, அந்த கிரகத்தை அடைய சுமார் 22 இலட்சம் ஆண்டுகள் ஆகும். தலைசுற்றச் செய்யும் இந்த தொலைவுதான் K2-18b ஏலியனுக்கும் நமக்கும் இடையே பெரும் தடையாக இருக்கிறது. இதற்கு தீர்வு தரும் தொழில்நுட்பம் கண்டறியப்படும்போது K2-18b ஏலியனை மெய்யாலுமே சந்தித்து ஹலோ சொல்லலாம். ஒன்று மட்டும் நிச்சயமாகி இருக்கிறது. நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாக இல்லை. https://thinakkural.lk/article/300607
  14. 02 MAY, 2024 | 01:30 PM ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா புதன்கிழமை (01) ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ஒலுவில் துறைமுக விஜயத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சீ.ரியாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஜே.பீ, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய இணைப்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் நஜீயா சாபீர், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான ஏ.சீ.சமால்டீன், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பள்ளிவாசல்களின் தலைவர்கள், மீனவ சங்கங்களின் தலைவர்கள், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் நிந்தவூர் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/182471
  15. "ஆனந்த ராகம் கேட்கும் காலம்" - இளையராஜா இசையில் உமா ரமணன் பாடிய மறக்க முடியாத 10 பாடல்கள் பட மூலாதாரம்,AV RAMANAN கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தனித்துவமிக்க குரல் வளமுடைய பாடகரான உமா ரமணன் 69 வயதில் காலமானார். தமிழ்த் திரைப்படங்களில் இளையராஜாவின் இசையில் சில மறக்க முடியாத பாடல்களைப் பாடியிருக்கிறார். உமாரமணன் பாடிய முக்கியமான 10 தமிழ்ப்பாடல்கள் இதோ. 1. பூங்கதவே தாழ் திறவாய்: பாரதிராஜா இயக்கத்தில் 1981ல் வெளிவந்த 'நிழல்கள்' படத்தில் உமா ரமணன் பாடிய பாடல் இது. இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய இந்தப் பாடலை தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாடியிருப்பார் உமா ரமணன். 1977ல் வெளியான கிருஷ்ண லீலா படத்திலேயே உமா ரமணன் பாடியிருந்தாலும், இந்தப் பாடலே அவரை வெளியுலகிற்கு பிரபலப்படுத்தியது. இந்தப் பாடல் வெளியாகி 44 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்தப் பாடல் இன்றும் பரவலாக ஒலிக்கப்படுகிறது. பாடலின் இரண்டாவது பகுதியில், "திருத்தேகம் எனதாகும்" என தீபன் சக்கரவர்த்தி பாட ஆரம்பிக்க, உமா ரமணன் 'ம்ம்..' என ஹம்மிங் செய்வார். அது இந்தப் பாடலில் அதிகம் ரசிக்கப்பட்ட இடமாகும். 2. ஆனந்த ராகம் கேட்கும் காலம்: 1981ல் பாரதி வாசு வெளியான பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. கங்கை அமரன் எழுதிய பாடலுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடலின் துவக்கத்தில், வயலின், கீபோர்ட், கிடார் ஆகியவை இணைந்து ஒலிக்கும். அதன் பிறகு "ஆனந்த ராகம்" என உயரும் உமா ரமணனின் குரல் கவனிக்கப்பட்டது. இளம்பருவத்துக் காதலின் உணர்வைச் சொல்வதாக ஒலிக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள், சற்றேனும் கடந்த காலத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வருவார்கள் எனலாம். 3. பூபாளம் இசைக்கும்: இளையராஜா இசையில் வெளியான தூறல் நின்னு போச்சு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாக்யராஜும் சுலக்ஷணாவும் பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலை எழுதியவர் முத்துலிங்கம். இந்தப் பாடலில் முதல் சரணம் முடியும்போது 'தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது... னன னன னன னன னா னன னன னன னன னா' என்று உமா ரமணன் பாடும் இடம் அதிக ரசனைக்குரியது. பட மூலாதாரம்,AV RAMANAN படக்குறிப்பு,1977ல் வெளியான கிருஷ்ண லீலா படத்திலேயே உமா ரமணன் பாடியிருந்தாலும், பூங்கதவே தாழ் திறவாய் பாடலே அவரை வெளியுலகிற்கு பிரபலப்படுத்தியது. 4. செவ்வந்தி பூக்களில் செய்த வீடு: 1983ல் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான மெல்லப் பேசுங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பானுப்ரியாவுக்கு இது முதல் படம். இந்தப் பாடலின் துவக்கத்தில் மாணிக்கவாசகர் எழுதிய திருப்பள்ளியெழுச்சியின் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிகளைப் பாடிவிட்டு, "செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு" என உமா ரமணன் துவங்கும்போது, அதிகாலையின் புத்துணர்வைத் தரும். இந்தப் படம் பெரிதாக அறியப்படவில்லை. ஆனால், பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. 5. செவ்வரளி தோட்டத்துல உன்னை நினைச்சேன்: 1983ல் ஆர். செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பகவதிபுரம் ரயில்வே கேட்' படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடலை, கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற 'காலை நேரக் காற்றே வாழ்த்திச் செல்லு' என்ற பாடலும் மிகச் சிறப்பாக இருந்தாலும், இந்தப் பாடலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை உமா ரமணனுடன் இணைந்து இளையராஜா பாடியிருப்பார். 80களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது. 6. கண்மணி நீ வரக் காத்திருந்தேன்: ஸ்ரீதர் இயக்கி 1985ல் வெளியான தென்றலே என்னைத் தொடு படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மோகனும் ஜெயஸ்ரீயும் பாடுவதாக வரும் இந்தப் பாடல். வாலி எழுதிய இந்தப் பாடலை கே.ஜே. யேசுதாஸுடன் இணைந்து பாடியிருந்தார் உமா ரமணன். 'அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகேஏஏ' என உமா ரமணனின் குரல் உயரும் இடம் முக்கியமானது. 7. யார் தூரிகை தந்த ஓவியம்: இந்தப் பாடலை பார்த்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள். ஆனால், 80களில் வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல் இது. 'பாரு பாரு பட்டணம் பாரு' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை, எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியிருந்தார் உமா ரமணன். இளையராஜாவின் இசை, உமா ரமணனின் குரல், கங்கை அமரனின் வரிகள் இணைந்து இந்தப் பாடலை கவனிக்க வைத்தன. பட மூலாதாரம்,GNANAPRAKASAM படக்குறிப்பு,இளம் வயதில் உமா ரமணன் 8. நீ பாதி நான் பாதி கண்ணே: வசந்த் இயக்கத்தில் வெளியான கேளடி கண்மணி படத்தில் கே.ஜே. ஜேசுதாஸும் உமா ரமணனும் இணைந்து பாடிய பாடல் இது. இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல், சோகத்திற்கான சக்ரவாக ராகத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால், ஜேசுதாஸ் - உமா ரமணனின் குரல்கள், கேட்பவர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் இருந்தன. இடையிடையே வரும் கிடார் இசை ஒரு போனஸ். 9. ஆகாய வெண்ணிலாவே, தரை மீது வந்ததேனோ: 1990ல் ஃபாசிலின் இயக்கத்தில் வெளியான அரங்கேற்ற வேளை திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இளையராஜாவின் இசையில் உருவான இந்தப் பாடலை, கே.ஜே. ஜேசுதாஸும் உமா ரமணனும் இணைந்து பாடியிருந்தார்கள். தமிழ் சினிமாவின் ஆரம்ப காலப் பாடல்களின் தொனியில் உருவாக்கப்பட்ட இசையில், நவீன இசைக் கருவிகளைப் பயன்படுத்தி பாடலைக் கம்போஸ் செய்திருப்பார் இளையராஜா. பாடலை "ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ" என்று ஜேசுதாஸ் ஆரம்பித்தவுடன், "அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ" என்று உமா ரமணன் பின்தொடரும்போதே முழு பாடலையும் கேட்ட திருப்தி ஏற்பட்டுவிடும். "தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம். பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம். வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம். கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்" என்று செல்லும் பாடல் வரிகளை எழுதியவர் வாலி. 10. நில் நில் நில்.. பதில் சொல் சொல்: பி.ஆர். விஜயலட்சுமி இயக்கத்தில் 1995ல் வெளியான 'பாட்டுப் பாடவா' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை வாலி எழுதியிருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இந்தப் பாடலையும் உமா ரமணனுடன் இணைந்து பாடியிருந்தார். இந்தப் பாடலின் வரிகளே இதற்கு ஒரு தனித்துவத்தைத் தந்தன என்றாலும், உமா ரமணனின் குரல் கூடுதல் இனிமையைச் சேர்த்தது. https://www.bbc.com/tamil/articles/cle0wxvxlqno
  16. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிலியின் அடகாமா பாலைவனத்தில் லித்தியம் பிரித்தெடுக்கப்படுகிறது. இது "லித்தியம் முக்கோணத்தில்" உள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், குளோபல் சைனா யூனிட் பதவி, பிபிசி நியூஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வடக்கு அர்ஜென்டினாவில் தான் தங்கியிருந்த விடுதிக்கு வெளியே கோபமான முழக்கங்கள் எழுப்பப்படுவதைக் கேட்டபடி நள்ளிரவில் ஐ கிங் கண் விழித்தார். அவர் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தார். அர்ஜென்டினா தொழிலாளர்கள் வளாகத்தைச் சுற்றி வளைப்பதையும், எரியும் டயர்களால் நுழைவாயிலைத் தடுப்பதையும் அவர் கண்டார். "எனக்கு பயமாக இருந்தது. ஏனென்றால் நெருப்பு கொழுந்துவிட்டு எரிவதை என்னால் பார்க்க முடிந்தது," என்கிறார் ஆண்டிஸ் மலைகளில் உள்ள உப்பு அடுக்குகளில் இருந்து, பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்தை பிரித்தெடுக்கும் சீன நிறுவனத்தில் பணிபுரியும் ஐ கிங். பல அர்ஜென்டினா தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த காரணத்தால் நிகழ்ந்த இந்த எதிர்ப்பு ஆர்பாட்டம், சீன வணிகங்கள் மற்றும் சீனாவை முதலீட்டிற்கு அழைக்கும் சமூகங்களுக்கு இடையே வளர்ந்து வரும் பதற்றத்தின் பல நிகழ்வுகளில் ஒன்று. சீனா ஏற்கெனவே பசுமை பொருளாதாரத்திற்கு தேவைப்படும் முக்கியக் கனிமங்களை சேகரிப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறது. சுரங்க நடவடிக்கைகளிலும் தன்னை விரிவுபடுத்தி வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சீன நிறுவனம் உலகின் பெரும்பாலான லித்தியம் இருப்புகளைக் கொண்ட அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலியின் "லித்தியம் முக்கோணத்தில்" லித்தியம் பிரித்தெடுக்கும் திட்டத்தில் முதல் பங்குகளை வாங்கியது. உள்ளூர் சுரங்க நடவடிக்கைகளில் இன்னும் பல சீன முதலீடுகள் தொடர்ந்தன என்று சுரங்கத்துறை வெளியீடுகள், பெருநிறுவன, அரசு மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவர்களின் பங்குகளின் அடிப்படையில் பிபிசி அதைக் கணக்கிட்டபோது. சீன நிறுவனங்கள் தற்போது கனிமத்தை உற்பத்தி செய்யும் அல்லது கட்டுமானத்தில் உள்ள திட்டங்களில் 33% லித்தியத்தை கட்டுப்படுத்துகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லத்தீன் அமெரிக்காவின் "லித்தியம் முக்கோணம்" உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு பெரிய அளவிலான பசுமைக் கனிமங்களைக் கொண்டுள்ளது. ஆனால் சீன வணிகங்கள் விரிவடைந்த நிலையில், மற்ற சர்வதேச சுரங்க நிறுவனங்களின் மீது அடிக்கடி சுமத்தப்படும் அதே முறைகேடு குற்றச்சாட்டுகளை அவையும் எதிர்கொண்டன. டயர் எரிப்பு போராட்டம் ஐ கிங்கிற்கு ஓர் அதிர்ச்சி தரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அவர் அர்ஜென்டினாவில் ஓர் அமைதியான வாழ்க்கையை எதிர்பார்த்தார். ஆனால் ஸ்பானிய மொழி தெரிந்த காரணமாக அவர் மத்தியஸ்தத்தில் ஈடுபட வேண்டியிருந்தது. "இது எளிதாக இருக்கவில்லை," என்று அவர் கூறுகிறார். ”தொழிலாளர்கள் சோம்பேறிகள், தொழிற்சங்கத்தை அதிகம் நம்பியிருக்கிறார்கள் என்று நிர்வாகம் நினைக்கிறது, சீனர்கள் தங்களைச் சுரண்டுவதற்காக மட்டுமே இங்கு இருக்கிறார்கள் என்று உள்ளூர்வாசிகள் நினைக்கிறார்கள். இதுபோன்ற எண்ணங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டியிருந்தது." பிபிசி குளோபல் சீனா யூனிட் உலகெங்கிலும் சீன நிறுவனங்களின் பங்கு உள்ள குறைந்தது 62 சுரங்கத் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. லித்தியம் அல்லது பசுமை தொழில்நுட்பங்களுக்கு முக்கியமான மூன்று தாதுக்களான கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசில் ஏதாவது ஒன்றை பிரித்தெடுக்க அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மின்சார வாகனங்கள் மற்றும் சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்தத் தொழில்கள் சீனாவின் உயர் முன்னுரிமைகளாக உள்ளன. உலகில் இந்தக் கனிமங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளர்களில் ஒன்றாக இவற்றில் சில திட்டங்கள் உள்ளன. சாதம் ஹவுஸ் சிந்தனைக் குழுவின் கூற்றுப்படி, லித்தியம் மற்றும் கோபால்ட்டை சுத்திகரிப்பதில் சீனா நீண்ட காலமாக முன்னணியில் உள்ளது. 2022இல் உலக விநியோகத்தில் முறையே 72% மற்றும் 68% பங்குகளை அது கொண்டிருத்தது. கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் விற்கப்பட்ட மின்சார வாகனங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உற்பத்தி செய்யவும், காற்றாலை விசையாழிகள் உற்பத்தித் திறனில் 60% அளவை எட்டவும், சோலார் பேனல் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் 80% அளவை எட்டவும், லித்தியம், மற்றும் பிற முக்கியமான கனிமங்களைச் செம்மைப்படுத்தும் அதன் திறன் உதவியது. இந்தத் துறையில் சீனாவின் பங்கு இந்தப் பொருட்களை மலிவானதாகவும், உலகளவில் எளிதாக கிடைக்கக் கூடியதாகவும் மாற்றியுள்ளது. ஆனால் பசுமைப் பொருளாதாரத்திற்குத் தேவையான கனிமங்களைத் தோண்டி எடுப்பது மற்றும் பதப்படுத்துவது என்பது சீனாவுக்கானது மட்டுமல்ல. 2050ஆம் ஆண்டிற்குள் உலகம் முழுவதும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை நிகர பூஜ்ஜியமாக ஆக்க வேண்டுமென்றால், அவற்றின் பயன்பாடு 2040க்குள் ஆறு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது. இதற்கிடையில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை சீன விநியோகங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான உத்திகளை உருவாக்கியுள்ளன. சீன நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு சுரங்க நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளதால், இந்தத் திட்டங்களால் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. தன்னார்வ அமைப்பான, வணிகம் மற்றும் மனித உரிமைகள் வள மையம், இத்தகைய பிரச்னைகள் "சீன சுரங்க தொழிலுக்கு மட்டுமே உரியது அல்ல" என்று கூறுகிறது. ஆனால் கடந்த ஆண்டு அது சீன நிறுவனங்களுக்கு எதிராக 102 புகார்களை விவரிக்கும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. உள்ளூர் சமூகத்தின் மீது இழைக்கப்படும் உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம் மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் இதில் அடங்கும். இந்தக் குற்றச்சாட்டுகள் 2021 மற்றும் 2022இல் செய்யப்பட்டவை. 2023இல் செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட அதிகப்படி குற்றச்சாட்டுகளை பிபிசி கணக்கிட்டது. தன்னார்வ அமைப்புகள் அல்லது ஊடகங்கள் இவை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளன. உலகின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள இரண்டு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கதைகளை எங்களிடம் சொன்னார்கள். பட மூலாதாரம்,BBC BYOBE MALENGA படக்குறிப்பு,காங்கோ குடியரசில் உள்ள ருவாஷி சுரங்கத்திற்கு அருகில் தன்னார்வலர் கிறிஸ்டோஃப் கப்விடா வசிக்கிறார் ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசின் தெற்கில் உள்ள லுபும்பாஷியின் புறநகர்ப் பகுதியில் கிறிஸ்டோஃப் கப்விடா, 2011ஆம் ஆண்டு முதல் ஜின்சுவான் குழுமத்திற்குச் சொந்தமான ருவாஷி கோபால்ட் சுரங்கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறார். அவரது வீட்டு வாசலில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திறந்தவெளி சுரங்கம், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பாறையில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார். வெடிப்பு தொடங்குவதற்கு முன்பு ஒரு சைரன் சத்தம் கேட்கிறது. மக்கள் தாங்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதை இந்த சைரன் அறிவுறுத்துகிறது. "வெப்பநிலை என்னவாக இருந்தாலும், மழை அல்லது புயல் என்று எதுவாக இருந்தாலும், நாங்கள் எங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சுரங்கத்திற்கு அருகில் உள்ள தக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும்," என்று அவர் கூறுகிறார். நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் பிரசவித்த பெண்கள் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும், ஏனென்றால் வேறு எந்த இடமும் பாதுகாப்பானது அல்ல. பட மூலாதாரம்,BBC BYOBE MALENGA படக்குறிப்பு,ருவாஷி சுரங்கத்தின் எல்லையில் இருக்கும் கிராமம் கடந்த 2017ஆம் ஆண்டில் டீனேஜ் பெண் கேட்டி கபாசோ, பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது பறந்து வந்த பாறையால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் சில பாறைகள் உள்ளூர் வீடுகளின் சுவர்கள் மற்றும் கூரைகளில் துளைகளை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ருவாஷி சுரங்கத்தின் செய்தித் தொடர்பாளர் எலீசா கலாசா "அப்பகுதியில் ஒரு சிறுமி இருந்தார். அவர் அங்கு இருந்திருக்கக்கூடாது. அவர் பறந்து வந்த பாறையால் தாக்கப்பட்டார்," என்று ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, "நாங்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளோம். இப்போது நாங்கள் செய்யும் வெடிப்பு மூலம் பாறைகள் பறந்து செல்வதில்லை,” என்று அவர் கூறினார். இருப்பினும் பிபிசி, அந்த நிறுவனத்தின் செயலாக்க மேலாளரான பேட்ரிக் டிஷாண்டிடம் பேசியது. அவர் கூறியது வேறுவிதமாக இருந்தது. "நாங்கள் சுரங்க வேலை செய்கிறோம். வெடிமருந்துகளைப் பயன்படுத்துகிறோம். வெடிமருந்துகள் பாறைகளை பறக்கச் செய்யலாம். மக்கள் சுரங்கத்திற்கு மிக அருகில் வசிப்பதால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம். அதனால் இதுபோன்ற பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன," என்றார் அவர். இந்த நிறுவனம் 2006 மற்றும் 2012க்கு இடையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுரங்கத்தில் இருந்து தூரமாக இடம்பெயர்வதற்கு இழப்பீடு வழங்கியதாகவும் கலாசா கூறினார். இந்தோனீசியாவின் தொலைதூர ஓபி தீவில், லிகண்ட் ரிசோர்சஸ் & டெக்னாலஜி என்ற சீன நிறுவனம் மற்றும் இந்தோனீசிய சுரங்க நிறுவனமான ஹரிதா குழுவிற்கும் சொந்தமான சுரங்கம், கவாசி கிராமத்தைச் சுற்றியுள்ள காடுகளை வேகமாக விழுங்கியுள்ளது. கிராம மக்கள் அரசு இழப்பீடுகளை ஏற்று வெளியேற வேண்டிய அழுத்தத்தில் உள்ளனர் என்று உள்ளூர் சுரங்க கண்காணிப்பாளர் ஜாதம் கூறுகிறார். வழங்கப்படும் தொகை சந்தை மதிப்பைக் காட்டிலும் குறைவாக இருப்பதாகக் கூறி டஜன் கணக்கான குடும்பங்கள் இடம் பெயர மறுத்துள்ளன. இதன் விளைவாக தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாங்கள் அச்சுறுத்தப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர். சுரங்கத்திற்கு வழி செய்யும் வகையில் பழங்கால காடுகள் வெட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் இருந்த பழமையான கடல் சூழல் மாசுபடுத்தப்பட்டு, ஆறுகள் மற்றும் பெருங்கடல்கள் எவ்வாறு வண்டல்களால் நிரம்பியுள்ளன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஜாதம் கூறுகிறார். "ஆற்று நீரை இனி குடிக்க முடியாது. அது மிகவும் மாசுபட்டுள்ளது, பொதுவாக தெளிவான நீல நிறத்தில் இருக்கும் கடல், மழை பெய்யும் போது சிவப்பு நிறமாக மாறுகிறது," என்கிறார் கவாசி கிராமத்தில் வசிக்கும் ஆசிரியர் நூர் ஹயாடி. சுரங்கத்தைப் பாதுகாப்பதற்காக இந்தோனீசிய துருப்புகள் தீவில் நிறுத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் பிபிசி அங்கு சென்றபோது அங்கு ராணுவ இருப்பைப் பார்க்க முடிந்தது. சுரங்கத்திற்கு எதிராகப் பேசும் மக்களை அச்சுறுத்தவும் தாக்கவும்கூட ராணுவ வீரர்களைப் பயன்படுத்தப்படுவதாக ஜாதம் கூறுகிறார். "சுரங்கத்தின் நலன்களை பாதுகாப்பதற்காக ராணுவம் உள்ளது. சமூகத்தின் நலனுக்காக அல்ல என்று மக்கள் நினைக்கிறார்கள்,” என்று நூர் கூறுகிறார். மிரட்டல் குற்றச்சாட்டுகளை "நிரூபிக்க முடியாது" என்றும், "சுரங்கத்தைப் பாதுகாப்பதற்காக" படையினர் இருக்கின்றனர், "உள்ளூர் மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு” அல்ல என்றும் ஜகார்த்தாவில் உள்ள ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். சுரங்கத்தின் செயல்பாட்டிற்காக நடக்கும் கிராம மக்களின் இடமாற்றம்,"அமைதியான மற்றும் சுமூகமான முறையில்" காவல்துறையால் கண்காணிக்கப்படுவதாக ஓர் அறிக்கையில் அவர் கூறினார். கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தோனீசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் சுரங்கத்தின் தாக்கத்தை எதிர்த்துப் போராடிய கிராமவாசிகள் குழுவில் நூர் இருந்தார். ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார் எதுவும் வரவில்லை என்று உள்ளூர் அரசு பிரதிநிதி சம்சு அபுபக்கர், பிபிசியிடம் தெரிவித்தார். "ஹரிதா குழுமம் சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு கடமைகளுக்கு இணங்கச் செயல்படுகிறது" என்ற அதிகாரப்பூர்வ அறிக்கையையும் அவர் பகிர்ந்து கொண்டார். தங்கள் நிறுவனம் "நெறிமுறை வணிக நடைமுறைகள் மற்றும் உள்ளூர் சட்டங்களைக் கண்டிப்பாகக் கடைபிடிக்கிறது" என்றும், "எந்தவித எதிர்மறையான தாக்கங்களையும் நிவர்த்தி செய்வதற்கும் தணிப்பதற்கும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது," என்றும் ஹரிதா குழுமம் எங்களிடம் தெரிவித்தது. தான் பெரிய அளவிலான காடழிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரத்தைக் கண்காணித்ததாகவும், தண்ணீரானது அரசின் தர நிர்ணயத்திற்கு ஏற்றபடி இருப்பதை சுதந்திரமான சோதனைகள் உறுதிப்படுத்தியதாகவும் அக்குழு கூறியது. வலுக்கட்டாயமான வெளியேற்றம் அல்லது நியாயமற்ற நில பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவில்லை என்றும் யாரையும் மிரட்டவில்லை என்றும் அது மேலும் கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கவாசியில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளும், கடலும் தற்போது சிவப்பு நிறமாக மாறியுள்ளன சிசிசிஎம்சி எனப்படும் சீனாவின் சுரங்க வர்த்தக அமைப்பு, ஓராண்டுக்கு முன்பு சீனாவுக்குச் சொந்தமான சுரங்கத் திட்டங்களுக்கு எதிரான புகார்களைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட புகார் தீர்ப்பு நடைமுறையை அமைக்கத் தொடங்கியது. உள்ளூர் சமூகங்கள் அல்லது சிவில் சமூக அமைப்புகளுடன் தொடர்புகொள்வதற்கான "கலாசார மற்றும் மொழியியல் திறன் இரண்டும் நிறுவனத்திடம் இல்லை" என்று செய்தித் தொடர்பாளர் லீலியா லி கூறுகிறார். இருப்பினும், இந்த நடைமுறை இன்னும் முழுமையாகச் செயல்பட ஆரம்பிக்கவில்லை. இதற்கிடையில், வெளிநாட்டு சுரங்க நடவடிக்கைகளில் சீனாவின் ஈடுபாடு அதிகரிக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இது ஒரு முக்கிய சந்தையைக் கட்டுப்படுத்தும் "புவிசார் அரசியல் நடவடிக்கை" மட்டுமல்ல, வணிகக் கண்ணோட்டத்திலும் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஆம்பர் நிறுவனத்தின் ஆசிய திட்ட இயக்குநர் ஆதித்யா லோலா கூறுகிறார். "சீன நிறுவனங்களால் கையகப்படுத்துதல்கள் செய்யப்படுகின்றன, ஏனெனில், அவர்களுக்கு இது லாபம்," என்று அவர் கூறுகிறார். இதன் விளைவாக சீனத் தொழிலாளர்கள் உலகெங்கிலும் உள்ள சுரங்கத் திட்டங்களுக்குத் தொடர்ந்து அனுப்பப்படுவார்கள். மேலும் இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நல்ல பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பைக் குறிக்கின்றன. காங்கோ குடியரசில் உள்ள சீனாவுக்கு சொந்தமான கோபால்ட் சுரங்கங்களில் 10 ஆண்டுகளாக பணியாற்றுகிறார் வாங் கேங். 48 வயதான அவர் நிறுவனத்தின் தங்குமித்தில் வசிக்கிறார் மற்றும் ஊழியர்களின் கேண்டீனில் சாப்பிடுகிறார். அவர் தினமும் 10 மணி நேரம் வேலை செய்கிறார். மாதத்தில் நான்கு நாட்கள் அவருக்கு விடுமுறை. பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவில் சம்பாதிப்பதைவிட அதிகமாக சம்பாதிப்பதால், ஹூபே மாகாணத்தில் உள்ள தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருப்பதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். காங்கோ குடியரசில் தெளிவான வானம் மற்றும் வானுயர்ந்த காடுகளையும் அவர் அனுபவிக்கிறார். அவர் உள்ளூர் சுரங்கத் தொழிலாளர்களுடன் பிரெஞ்சு, ஸ்வாஹிலி மற்றும் ஆங்கிலம் கலந்த கலவையான மொழியில் பேசுகிறார். "வேலை தொடர்பான விஷயங்களைத் தவிர அவர்களுடன் அதிகம் பேசுவது இல்லை,” என்றார் அவர். தான் வாழும் நாட்டின் மொழியை சரளமாகப் பேசும் ஐ கிங் கூட, வேலைக்கு வெளியே அர்ஜென்டீன தொழிலாளர்களுடன் அதிகம் பேசுவதில்லை. அவர் தனது சக சீன ஊழியருடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். அவர்கள் பெரும்பாலும் தங்களைப் போன்ற மற்றவர்களுடன் மட்டுமே வேலைக்கு வெளியிலான பழக்கத்தை வைத்துக்கொள்கிறார்கள். லித்தியம் வெட்டப்பட்டு வாழ்க்கை "குளிர்ச்சியாக" இருக்கும் ஆண்டிஸ் மலை சிகரத்தில் உள்ள உப்பு அடுக்குகளைப் பார்வையிடுவது அவருக்கு பிடித்தமான ஒன்று. "மலையேற்றத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகள் என்னை எப்போதும் தொந்தரவு செய்கின்றன. என்னால் தூங்கவும் சாப்பிடவும் முடியாது," என்று அவர் கூறுகிறார். "ஆனால் நான் அங்கு செல்வதை மிகவும் ரசிக்கிறேன். ஏனென்றால் அங்கு விஷயங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் அலுவலக அரசியல் எதுவும் இல்லை," என்று அவர் குறிப்பிட்டார். (ஐ கிங் மற்றும் வாங் கேங் இரண்டுமே புனைப்பெயர்கள்) (கூடுதல் செய்தி சேகரிப்பு – எமிரி மேக்யூமெனு, பியாக் மேலிங்கா, லூசியன் கெஹோஸி) https://www.bbc.com/tamil/articles/crgylng342go
  17. காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மே நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் - இந்திய உயர்ஸ்தானிகர் Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 03:43 PM காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்குமிடையிலான கப்பல் சேவை மே நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வியாழக்கிழமை(02.05.2024) மட்டக்களப்பு காந்திபூக்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதன்போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் (ஜனா), மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் ஆகியோரும் இணைந்திருந்தனர். காங்கேசன்துறைக்கு நாகப்பட்டினத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் சேவையை ஆரம்பித்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. மே மாதத்தின் நடுப்பகுதியில் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைத்தல் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், அது தொடர்பில் நிலத்தொடர்பை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்து வருகிறோம். முதலாவது கட்ட பேச்சுக்கள் நிறைவடைந்துள்ளன. இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. இது நீண்டகாலத் திட்டம் என்ற வகையில் இது ஒரு சில வருடத்தில் நிறைவடையக்கூடியதல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182491
  18. Published By: RAJEEBAN 02 MAY, 2024 | 12:06 PM புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை திட்டத்தின் ஒரு பகுதியாக புகலிடக்கோரிக்கையாளர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை பிரிட்டிஸ் அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் புகலிடக்கோரிக்கையாளர்களுடன் முதலாவது விமானம் ஜூலை மாதம் முதல் வாரம் ருவாண்டா செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிட்டனில் தங்கியிருப்பதற்கு உரிமையில்லாதவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளில் எங்களின் அர்ப்பணிப்பு மிக்க சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிலெவெர்லி இவர்களை விரைவாக கைதுசெய்தால் எங்கள் விமானங்களை ருவண்டாவிற்கு அனுப்பலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ருவண்டா பாதுகாப்பான மூன்றாவது நாடு என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதை தொடர்ந்தே சட்டவிரோத குடியேற்றவாசிகளை அங்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. பிரிட்டனின் உயர்நீதிமன்றம் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள நிலையிலேயே பிரிட்டன் நாடாளுமன்றம் ருவண்டா பாதுகாப்பான மூன்றாவது நாடு என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனிற்குள் சிறிய படகுகள் மூலம் வரும் குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து நிறுத்தப்போவதாக பிரதமர் ரிசி சுனாக் கடந்த வாரம் அறிவித்துள்ளார். பத்து அல்லது 12 வாரங்களிற்குள் நாடு கடத்தல் விமானங்கள் புறப்பட ஆரம்பிக்கும் அதற்கு முன்னர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருப்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும் என ரிசி சுனாக் தெரிவித்துள்ளார். பல இடங்களில் குடிவரவு துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி வசிப்பவர்களை கைதுசெய்து கைவிலங்கிட்டு அழைத்து செல்லும் படங்களை வெளியிட்டுள்ள பிரிட்டனின் உள்துறை அமைச்சு ருவண்டா திட்டத்தில் இது ஒரு மைல்கல் என தெரிவித்துள்ளது. இந்த அரசாங்கம் மனிதாபிமானத்தின் கடைசி துளியையும் இழந்துவிட்டது என பிரீடம் புரொம் டோர்ச்சர் என்ற மனிதாபிமான அமைப்பு பிரிட்டன் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. https://www.virakesari.lk/article/182470
  19. உமாஓயா திட்டத்தினால் நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிப்பு உமாஓயா அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மின்சார சபைக்கு நாளொன்றுக்கு 80 மில்லியன் ரூபா சேமிக்கப்படும் என அதன் திட்டப் பணிப்பாளர் சுதர்ம எலகந்த தெரிவித்துள்ளார். உமாஓயா திட்டத்தினால் இதுவரை சுமார் 1,500 மில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் சுமார் ஒருமாத காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஆகியோரின் தலைமையில் குறித்த திட்டம் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது. 2007 நவம்பர் 27ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் 2008 ஏப்ரல் 21ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. https://thinakkural.lk/article/300669
  20. எமது ஆட்சியின் கீழேயே அடுத்த மே தினக்கூட்டம் - கொழும்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் அநுரகுமார சூளுரை Published By: VISHNU 02 MAY, 2024 | 03:19 AM (நா.தனுஜா) முதலாளித்துவ வர்க்கத்தின் கீழ் இடம்பெறும் இறுதி மே தினக்கூட்டம் இதுவாகவே இருக்கும். அடுத்த மே தினக்கூட்டம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழேயே நடைபெறும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளார். அத்தோடு நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட எவருக்கும் தமது ஆட்சியின்கீழ் பொதுமன்னிப்பு வழங்கப்படமாட்டாது எனவும் அவர் நெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் தலைமையில் கொழும்பில் புதன்கிழமை (மே.01) இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் பிரதான உரை நிகழ்த்தியபோதே அவர் அவர் இவ்வாறு சூளுரைத்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது, நாம் காலிமுகத்திடலை எமது மே தினக் கூட்டத்துக்காக கேட்டோம். ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அதேபோல் இதற்கு முன்னர் நாம் மே தினக்கூட்டங்களை நடத்திய இடங்களையாவது தாருங்கள் என கேட்டோம். ஆனால் எல்லாவற்றுக்கும் அரசாங்கம் ஒவ்வொரு காரணம் கூறி நிராகரித்தது. எனினும் இன்று நாம் நடத்திய சகல மே தினக்கூட்டங்களும் இலட்சக்கணக்கான மக்களால் நிரம்பியுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக ஊழலுக்கு எதிராகவும், பிரபு வர்க்கத்துக்கு எதிராகவும் பொதுமக்கள் ஒன்றிணைந்துள்ளனர். தேசிய மக்கள் சக்தி நாடளாவிய ரீதியில் துறைசார் கட்டமைப்புக்களைப் பலப்படுத்தி வருகின்றது. எதிர்காலத்தில் சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், பெண் பிரதிநிதிகள், மதத்தலைவர்களுக்கான மாநாடுகளை நடத்த நாம் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். அதுமட்டுமல்ல, புலம்பெயர் இலங்கையர்களுடன் பல சந்திப்புகளை நாம் முன்னெடுத்துள்ளோம். வேறு எவரும் முன்னெடுக்காத வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். இவை அனைத்தையும் தாண்டி சகல மக்களையும் எம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டும். ஏனைய கட்சிகளை இவ்வளவு காலம் நம்பியிருந்த அனைவரையும் நாம் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் தற்போது சகல மக்களுக்கும் எம்மீதான நம்பிக்கை உருவாக ஆரம்பித்துவிட்டது. அதற்கு இன்றைய கூட்டம் நல்லதொரு உதாரணமாகும். நாம் எந்தவொரு நபருக்கும் எதிராக எம்மை உருவாக்கவில்லை, இது சகல மக்களையும் ஒன்றிணைத்து புதிய ஆட்சியை, புதிய யுகத்தை நோக்கிய பயணமேயாகும். அதனையே நாம் உருவாக்கப்போகின்றோம். உலகை வெற்றிக்கொள்ளும் பலமான நாடாக நாம் உருவாக வேண்டும். அதற்காக சகல மக்களும் கட்சி பேதங்களை கைவிட்டு எம்முடன் கைகோர்க்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். இன்று யாரைக்கேட்டாலும் திசைக்காட்டி பற்றியே பேசுகின்றனர். கருத்துக்கணிப்புகளில் மட்டுமல்ல மக்களின் கணிப்பிலும் திசைகாட்டி மீதே நம்பிக்கை அதிகரித்துள்ளது. 76 ஆண்டுகால பயணத்தை மாற்றும் நோக்கத்தில் நாம் இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம். இதுவரை காலம் பழைய அரசியலுக்கு பழக்கப்பட்ட சமூகமே இன்று நாட்டில் உள்ளது. இதற்கு ஒரு மாற்றம் வேண்டாமா? ஆகவே இந்த சமூகத்தை மாற்றியமைக்கவே நாம் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இதில் எமக்கு கிடைக்கும் வெற்றி சாதாரண வெற்றியாக அல்ல மிகப்பெரிய வெற்றியாக அமைய வேண்டும். இன்றளவிலே நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் வளங்கள் விற்கப்படுகின்றன. யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் உயிரிழக்கின்றன. முழு இயற்கை கட்டமைப்பையும் சீர்குலைந்துள்ளது. இந்த நிலைமையிலேயே நாட்டை வைத்திருக்க வேண்டுமா? இல்லை. மாறாக நாம் எதிர்நீச்சல் அடித்து நாட்டை மீட்டெடுக்க நினைக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/182446
  21. Published By: VISHNU 01 MAY, 2024 | 11:57 PM இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம் என்று தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் மேதினப் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வவனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெற்றபோது வெளியிடப்பட்டுள்ள பிரகடனத்திலேயே மேற்கண்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அப்பிரகடனத்தில்,மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தமிழ்மக்கள் காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆம் திருத்தத்தையோ அல்லது ஒற்றையாட்சிக்குட்பட்ட வேறு எந்தவொரு தீர்வையோ தமிழினம் நிராகரிக்கிறது. அந்நோக்கில் தமிழர்களது நீண்டகால அரசியல் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் நிலையை உருவாக்குவதற்கு ஏதுவாக ஆட்சியாளர்கள் மீது அழுத்தங்களை ஏற்படுத்தும் முகமாக, நடைபெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டுமொத்த தமிழர் தேசத்து மக்களும் நிராகரிக்க வேண்டுமென அழைப்பு விடுக்கின்றோம். தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்படவேண்டும். இனவழிப்பு யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ்த் தேசத்தை, போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனம் செய்து, அத்தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதியேற்பாடுகள் செய்யப்படவேண்டும். அத்துடன் குறித்த செயற்திட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள், பெண்தலைமைத்துவக் குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் போன்றோர் உள்வாங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும். அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையை வலியுறுத்துவதோடு, அச்சுறுத்தி, தமது உரிமைகளுக்காக போராடும் தரப்புக்களை சிறைக்குள் தள்ளி உரிமைகளை நசுக்க ரணில் அரசால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ அல்லது அதனையொத்த எந்தவொரு சட்டத்தையோ முற்றாக எதிர்க்கின்றோம். ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் நசுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்புச் சட்டம் நீக்கப்படல் வேண்டும். சட்டத்திற்கு புறம்பான கொலைகள் நிறுத்தப்படல் வேண்டும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்த் தேசத்தின் விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டும். அவர்களுக்குரித்தான நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும். தொழிலாளர்கள் ஒன்றுபட்டு செயற்படக் கூடிய அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். தோட்டத் தொழிலாளர்களது உரிமைகள் வழங்கப்படல் வேண்டும். கடற்தொழிலாளர்கள் தமது கடற்தொழிலை தத்தமக்குரிய கடற்பரப்பில் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவேண்டும். தென்னிலங்கை மீனவர்களது அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகள் தடுக்கப்படல் வேண்டும். போரினால் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கான உதவிகளும் மேற்கொள்ளப்படவேண்டும். அத்துடன் கடற்தொழிலாளர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படவேண்டும். வெளிநாட்டு மீனவர்கள் எமது கடலில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படக்கூடாது. எமது கடற்பரப்பினுள் அத்துமீறும் இந்திய மீனவர்களது நடவடிக்கைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் அதிகாரங்களைப் பறிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படல் வேண்டும் என்பதுடன், அந்த அலுவலகத்திற்கு கணக்காளர் ஒருவர் உடனடியாக நியமிக்கப்படல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/182443
  22. வெப்பமான வானிலை 2 வாரங்களுக்கு நீடிக்கும் நிலவும் வெப்பமான வானிலை மேலும் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் பருவப்பெயர்ச்சி மழையும் எதிர்வரும் 2 வாரங்களுக்கு மாத்திரமே பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/300663
  23. 02 MAY, 2024 | 10:55 AM பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனக் கூறி வியாபாரிகளிடமிருந்து பணம் பெறும் கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பண மோசடிகள் தொடர்பில் பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்தார். இந்த மோசடி கும்பலானது தொலைபேசி அழைப்புகள் மூலம் வியாபாரிகளுடன் தொடர்பு கொண்டு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எனக் கூறி பண மோசடி செய்வதாகவும் அவ்வாறான நபர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/182457
  24. Published By: DIGITAL DESK 3 02 MAY, 2024 | 11:51 AM முல்லைத்தீவு - அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினருக்கு சுவீகரித்து வழங்க எடுத்த முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று வியாழக்கிழமை (02) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் மற்றும் கரைதுறைப்பற்று காணி உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள், குறித்த மாவீரர் துயிலுமில்ல காணியினை அளவீடு செய்ய வருகை தந்திருந்தனர். இந்நிலையில், மாவீரர்களின் பெற்றோர், அப்பகுதிமக்கள் மற்றும், அப்பகுதி அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஜீட்சன் ஆகியோரின் தலையீட்டால் குறித்த காணிசுவீகரிப்பு நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர். அத்தோடு, குறித்த காணியினை அளவீடு செய்து, இராணுவத்திற்காக சுவீகரிக்கும் நடவடிக்கையினை அனுமதிக்க முடியாதென அப்பகுதிமக்களாலும், மக்கள் பிரதிநிதிகளாலும், அங்கு வருகைதந்த நில அளவைத்திணைக்கள அதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இராணுவத்தினருக்காக காணி சுவீகரிக்கும் முயற்சி கைவிடப்பட்டு, நில அளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றிருந்தனர். குறித்த பகுதியில் அதிகளவிலான பொலிஸாரின் பிரசன்னம் இருந்திருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியினை தற்போது 23 ஆவது சிங்க ரெஜிமென்ட் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இதனால் துயிலுமில்லக்காணியின் வெளிப்புறத்திலேயே வருடாவருடம் மாவீரர் நாளில் மாவீரர் நாள் அஞ்சலிகள் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலில் கடந்தவருடம் குறித்த மாவீரர் துயிலுமில்லக் காணியினை இராணுவத்தினர் விடுவிக்க வலியுறுத்தி மாவீரர்களின் உறவுகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்ததுடன், இவ்வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதியும் அளவீட்டு பணிக்காக வருகைதந்த போது எதிர்ப்பினை வெளியிட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தனர். இதற்கு முன்னரும் பலதடவைகள் நில அளவைத் திணைக்களத்தினர் இவ்வாறு நில அளவீட்டு முயற்சியில் ஈடுபட்டபோதும் மக்கள் எதிர்ப்புகளால் கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182469

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.