Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஜெயசிக்குறு எதிர்ச்சமர் ஒன்றின் போது காலம்: 1997
  2. எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை காலம்: ?????
  3. அது என்ன எப்படி என்று தெரியவில்லை. மெய்ய பொய்யா என்று. எது எப்படி ஆயினும் இஸ்ரேல் உள்ளே சென்றாப் பிறகு எல்லாம் தெளிஞ்சிடும். அப்போது பார்ப்போம், உண்மையா பொய்யா என்று.
  4. பாலஸ்தீனப் பயங்கரவாதத்தின் முகம் HOW DOES THE MINISTRY ARRIVE AT A DEATH TOLL? https://apnews.com/article/israel-hamas-war-gaza-health-ministry-health-death-toll-59470820308b31f1faf73c703400b033
  5. ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலும் உதே மாதிரித்தான் போஸ் கொடுத்திருக்கிறாங்கள்... அப்ப அங்க போஸ் குடுக்கத்தான் பயிற்சி போல!
  6. உண்மையிலேயே ஆரேனும் செத்தவங்களோ அடிபாட்டிலை? கேட்கவே சோகமாக உள்ளது... தகவலுக்கு நன்றி... அப்படிச் சண்டையிட்டு நிராஜ் டேவிட் அவர்கள் சொல்வது போன்று ஆரேனும் செத்தவங்களோ? நல்லது செய்யாவிடிலும் தூர நோக்கில் நாசம் செய்யாமல் இருந்திருக்கலாம்.
  7. நேரடிச் சமரிலா?.... அதுவும் இஸ்ரேலோடா?🤡 பயிற்சிக்குப் போனால் பயிற்சியை மட்டும் முடித்துவிட்டு திரும்புங்களேன்டா... ஏன் இந்தத் தேவையில்லா வேலை என்று கேட்கத் தோன்றுகிறது. தகவலுக்கு நன்றி ஐயனே.
  8. நல்ல கருத்துக்கள்.... ஆனால், இதில் இவர் கூறுகிறார், ஈழத் தமிழர்கள் 1970களில் நடந்த இஸ்ரேலியப் போரில் ஈழ்தமிழர்கள் பாலஸ்தீனம்/லெபனான் ஓடு சேர்ந்து நின்று போராடி உயிர்த்தியாகம் செய்தார்கள் என்று. இது எவ்வளவு தூரம் உண்மை. நான் இப்படியொரு தகவல் அறிந்ததில்லை, அதனால்தான் கேட்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்.
  9. தலைநகர் திருகோணமலையில் புலிகளால் பாவிக்கவென பதுங்ககழிக்குள் மறைத்து வைத்திருந்த இரு வெப்பமுக்க உந்துகணை செலுத்திகளை (Thermobaric Rocket Launcher) சிங்களத் தரைப்படையினர் கைப்பற்றினர் (2006ம் ஆண்டு) என்பது போன்ற செய்தி ஒன்று.
  10. மோகன் அண்ணா, வணக்கம்...
  11. அப்பன்ர இயக்கத்தை அழிக்க பிள்ளை வேலை செய்துள்ளார்.... தகவலுக்கு நன்றி
  12. தகவலுக்கு மிக்க நன்றி ஐயனே. இவர் இப்போதும் உயிருடன் உள்ளாரா? (நான் கட்டுரையை வாசிக்கவில்லை)
  13. தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் தேவர் அண்ணாவின் கருத்துகள்…. தேசியத்தலைவர் 81 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் வந்திறங்கினார். 82இல் தலைவர் மதுரையில் இருந்த காலத்திற்தான் ஓவியர் நடராஜாவுடன் சந்திப்பு ஏற்படுகின்றது.78 இலேயே விடுதலைப்புலிகளின் இலச்சினையோடு கூடிய உரிமைகோரல் கடிதம் சிறில் மத்தியூவின் அரசபணியில் என்ற என் வலப்புக்களில் இலங்கை பூராவுமே ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டதை கிருஷ்ணா அம்பலவாணர் அறிவாரா?அப்போது அவர் இயக்கத்தில் இருந்தாரா?
  14. பிரபாகரனும் நானும்…பழ.நெடுமாறன் | (மரக்காணம்பாலாவுக்குஅளித்தபேட்டி) ”1982-ம் ஆண்டு மே மாதம் 24-ம் தேதி. சென்னை பாண்டி பஜாரில் தம்பி பிரபாகரனும், பிளாட் அமைப்பின் தலைவர் முகுந்தனும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டார்கள். அது துப்பாக்கிச்சண்டையில் முடிந்தது. இருவரும் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போது நான் மதுரையில் இருந்தேன். புலிகளின் அரசியல்பிரிவு பொறுப்பாளராக இருந்த பேபி சுப்பிரமணியம் என்னை உடனடியாக சென்னைக்கு வரும்படி அழைத்தார். நான் இல்லாத வேளைகளில் மயிலாப்பூரில் உள்ள எனது அறையில்தான் பேபி தங்கியிருந்தார். அவரோடு வேறு சிலபுலிகளும் இருந்தனர். கைது செய்யப்பட்ட பிரபாகரனையும் முகுந்தனையும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி சிங்களப்போலீஸ் உயரதிகாரிகள் சென்னை வந்திருந்தார்கள். நான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினேன். ‘பிரபாகரன் முகுந்தன் ஆகியோரை எவ்விதநிபந்தனையும் இன்றி விடுவிக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் சிங்களபோலீஸாரிடம் ஒப் படைக்கக்கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருபதுகட்சிகள் ஒன்றுகூடி நிறைவேற்றிய இத்தீர்மானம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இருவரையும் நாடு கடத்துவது நிறுத்தப்பட்டது. இதன் பிறகு, நான் சிறையில் இருந்த பிரபாகரனையும் முகுந்தனையும் சந்திக்கச் சென்றேன். இந்த இடத்தில் ஓர் உண்மையைச் சொல்லியாக வேண்டும். அதுவரை நான் பிரபாகரனைச் சந்தித்தது இல்லை. எனதுஅறையில் தங்கும் பேபி மற்றும் அவரது தோழர்களிடம், ‘பிரபாகரனை நான் சந்திக்க வேண்டும்’ என்று பலமுறை கேட்டிருக்கிறேன். ஏதேதோ சாக்குகள் கூறி வந்தார்களே தவிர பிரபாகரனை அழைத்துவரவில்லை. சென்னைச்சிறையில் சிறைஅதிகாரி அறையில் நான் அமர்ந்திருந்தேன். பிரபாகரன், முகுந்தன் மற்றும் இருதோழர்கள் உள்ளே நுழைந்தார்கள். முகுந்தனை எனக்கு அடையாளம் தெரியும். எனவே பிரபாகரன் யாரென்று தெரியாமல் நான் திகைத்தேன். பிரபாகரன் முன்வந்து ‘அண்ணா! நான்தான் பிரபாகரன்’ என்றபோது… அந்தக் காட்சியை பார்க்கவேண்டுமே! எனக்குப் பேரதிர்ச்சி ஏனென்றால் பேபியோடு எனது அறையில் தங்கியிருந்தவர்களில் இவரும் ஒருவர். பலமுறை இவரை என்வீட்டில் பார்த்திருக்கிறேன். ‘எங்கய்யா உங்கதலைவர்?’ என்று கேட்டபோதெல்லாம் ‘அவரும் உங்களை பார்க்கனும்னுதான் விரும்பறார்’ என்று பதில்வரும். இவர் வாய்பேசாமல் உட்கார்ந்திருப்பார். புலிகளை மாதிரி ரகசியம் காப்பதற்கு இன் னொருவர் பிறந்துவர வேண்டும்.” என்றபடி மலரும் நினைவுகளில் வியப்பில் ஆழ்கிறார் தடைசெய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ.நெடுமாறன். ”வழக்கறிஞர் என்.டி.வானமாமலைதான் பிரபாகரனுக்கு பிணை விடுதலை வாங்கிக்கொடுத்தார். ‘அவர் மதுரையில் தங்கி கையெழுத்திடவேண்டும்’ என்று உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைதான் பிரபாகரனை எனக்கு நெருக்கமாக்கியது. சுமார் ஏழுமாதங்கள் என் இல்லத்தில் அவர் தங்கியிருந்தார். அந்த காலகட்டத்தில், பிரபாகரனைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிறையவே நான் அறிந்துகொண்டேன். மதுரையில் இருந்தபோதுதான் இயக்கத்துக்கான சின்னம் வடிவமைக்கப்பட்டது. ஓவியர் நடராசன் அதை வரைந்து கொடுத்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பார்மஸிஸ்ட்டாக பணியாற்றியவர். எங்கள்வீட்டில் குடியிருந்த டைலர் தங்கராசுதான் சீருடையை வடிவமைத்துக் கொடுத்தார். தொப்பி மட்டும் மதுரை புதுமண்டபத்தில் இருந்த ஒருகடையில் தேர்வு செய்தார்கள். சீருடையை பார்த்துவிட்டு, ‘நூறு பேர் இந்த ராணுவ சீருடையோடு அணிவகுக்கவேண்டும். அதை நான் பார்க்கவேண்டும்’ என்றார் பிரபாகரன். அது ஆயிரம், பல்லாயிரம் என்று பெருக்கெடுத்தது. இவ்வளவு பெரிய ராணுவத்தை கட்டமைத்து அதற்கு திறம்பட பயிற்சியளித்த மாபெரும் தலைவன், யாரிடமும் பயிற்சி பெறவில்லை என்பதுதான் ஆச்சர்யமான விஷயம். பழ.நெடுமாறன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.