Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. கே எல் ராகுல் என்னைக்காப்பாற்றி விட்டார்.
  2. சென்னை அணித்தலைவர் ருத்துராஜ் கைக்வாட் காயம் காரணமாக இனிமேல் 2025 ஐபிஎல்லில் விளையாடமாட்டார். தோனி சென்னை அணியின் அணித்தலைராகுகிறார்.
  3. கோயிலில் சுண்டல் சாப்பிட்டது இந்தாளுக்கு எப்படி தெரிஞ்சது 🤫 Hazelwood க்கும் ஸ்ரார்க்கும்தான் போட்டி. ( கோஷான் சேக்கும் எனக்கும் போட்டி- யார் கடைசி இடத்தில் வராமல் இருப்பது) 😄
  4. ராஜஸ்தானின் இலங்கை வீரர் ஹசரங்கா நேற்று தனிப்பட்ட காரணமாக விளையாடவில்லை. குஜராத்தின் வாஷிங்டன் சுந்தர் நேற்று அணியில் இடம்பெறவில்லை. 2024 இலும் வாசிங்டன் சுந்தர் SRH விளையாடிய 17 போட்டிகளில் 2 போட்டி மட்டுமே விளையாடினார். இம்முறை குஜராத் விளையாடிய போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடினார்.
  5. பெங்களூர் அணி சென்ற ஐபிஎல்லில் (2024) சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டிகளில் பெரிதாக வெல்லவில்லை.
  6. இந்த போட்டியில் பங்களூர் அணி வென்றால் எனக்கும் கோஷான் சேக்கும் ஒரே புள்ளிகள் 😳. மிச்சல் சார்க், கே எல் ராகுல் - நீங்கள் தான் என்னைகாப்பாற்றவேண்டும். இன்று 100% வீதம் காயத்தில் இருந்து குணமடைந்தால் நடராஜனும் டெல்கிக்கு சிலவேளை விளையாடலாம் என நினைக்கிறேன்.
  7. ரபாடா தென்னாப்பிரிக்காவுக்கு தனிப்பட்ட பிரச்சனை காரணமாக சென்றதாக செய்திகளில் படித்தேன். திரும்பி வந்திட்டாரா?
  8. வீரப்பையன் - நான் நகைச்சுவைக்காகவே எழுதினேன். நீங்கள் அழைத்தினால்தான் போட்டியில் கலந்து கொண்டேன். கலந்து கொண்டது மகிழ்ச்சி. போட்டியில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அடுத்தமுறையும் கட்டாயம் கூப்பிடுங்கோ. நிச்சயம் கலந்து கொள்வேன். நீங்கள் கருத்துகள் எழுதுவதினால்தான் இந்த திரி கலகலப்பாக இருக்கிறது. அவர் 8 புள்ளிகளுடன் இருப்பதினால்தான் 10 புள்ளிகளுடன் ஓரளவு நிம்மதியாக இருக்கிறேன் 😀
  9. பவர் பிளே முடிந்தபின்பு 7 ஓவரில் ஜடேஜா 6 ஓட்டங்களை வழங்கினார். 8 ஓவரில் அஸ்வின் 2 ஒட்டங்கள் மட்டும் குடுத்து 2 விக்கெட்டுக்கள் எடுத்தார். 9 வது ஓவரில் ஜடேஜா 6 ஒட்டங்களும் 10 வது ஓவரில் அஸ்வின் 5 ஓட்டங்களையும் கொடுத்தார் . 11 ஓவரில் நூர் அகமத் 14 ஓட்டங்களை குடுத்தார் பவர் பிளே முடிந்தபின்பு ஜடேஜா 2 ஓவரில் 12 ஆட்டங்களையும், அஸ்வின் 2 ஓவரில் 7 ஓட்டங்களையும் (2 விக்கெட்கள் ), நூர் அகமத் 1 ஓவரில் 14 ஒட்டங்களையும் குடுத்ததினால் சிலவேளை அஸ்வினுக்கு 12 வது ஓவரும் வழங்கியிருக்கலாம். 12 வது ஓவரில் அஸ்வின் வீசிய பந்தினை அடித்து ஆடிய ஆர்யாவின் பந்தினை முகேஷ் சவுத்திரி பிடித்தாலும் தவறுதலாக காலால் எல்லைக்கோட்டில் தொட்டுவிட்டார். தொடாவிட்டால் ஆர்யா ஆட்டமிழந்து இருப்பார்
  10. சென்னையில் 6 பந்து வீச்சாளர்கள். இவர்களில் Khaleel Ahamed பவர் பிளே ஓவர்களில் சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். பெரும் பாலும் இவர் முதல் 6 ஓவர்களில் 3 ஓவர்கள் வீசுவார். மற்றைய 3 ஓவர்களில் ஜடேஜா, பதிரானா போன்றவர்கள் ப ந்து வீசுவதில்லை . முன்பு வீசி பல ஓட்டங்களை விட்டு கொடுத்திருக்கிறார்கள். பதிரானா இறுதி ஓவர்கள் சிறப்பாக வீசக்கூடிய death bowler. முன்பு மேற்கிந்தியா வீரர் பிராவோ சென்னை அணியின் death blower ஆக இருந்தார். பதிரனவுடன் பெரும்பாலும் கடைசி ஓவர்கள் வேகப்பந்து விச்சளார்கள்தான் பந்து வீசுவார்கள். சுழல் பந்து /மெதுவாக வீசுபவர்கள் வீச்சாளர்கள் வீசினால் எதிரணி வீரர்கள் பல ஓட்டங்கள் பெறுவார்கள். ( பங்களூர் அணியின் கருணால் பாண்டியா சில போட்டிகளுக்கு வீசி இருக்கிறார்.இதில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் தோனி கடைசி ஓவரில் இரண்டு 6 ஒட்டங்களும், 1 நான்கு ஓட்டமும் பெற்றார். ரித்து சிங் (KKR) நேற்று கடைசி ஓவரில் ரவி பிஷ்னோய்க்கு எதிராக 4,4,6 என ஓட்டங்கள் பெற்றார்). khaleel அஹமத் மிகுதியாக இருந்த 4 வது ஓவரையும் இறுதி ஓவர்களில் வீசினார் சென்னையின் Khaleel Ahamed பவர் பிளேயில் 3 ஓவர்கள் போட மிகுதி 3 ஓவர்களில் 2 ஓவர்கள் முகேஷ் சவுத்திரி வீசினார் . அவருடைய 2 வது ஓவரில் அதிக ஓட்டங்களை எதிர் அணியினர் எடுத்ததினாலே அஸ்வினை 6 ஓவருக்கு அழைக்கப்பட்டார். (பவர் பிளே ஓவரில் சுழல் பந்து வீச்சாளர்களில் முன்பு இலங்கை வீரர் திக்சனா பந்து வீசுபவர். அஸ்வினும் வேறு அணியில் இருந்தபோதும், முன்பு சென்னைக்காக விளையாடியபோதும் வீசியிருக்கிறார். அத்துடன் பவர் பிளே ஓவர்களில் ஜடேஜா, பத்திரான போன்றவர்கள் பந்துவீசுவதில்லை.) 6 ஓவரில் அஸ்வின் 20 க்கு மேற்பட்ட ஓட்டங்களை வழங்கினார். பவர் பிளே முடிந்த 8 வது ஓவரில் அஸ்வின் 2 விக்கேற்றுக்களை பெற்றார் . kahaleel ahamed, பத்திரனா தலா 4 ஓவர்கள் எல்லபோட்டிகளிலும் வீசுவார்கள். ஆக இவர்களின் 8 ஓவர்கள் பவர் பிளே, இறுதி ஓவர்களில் உபயோகிக்கப்படும். 2 ஓவர்கள் மகேஷ் சவுத்திரி வீசியதினால் மிகுதி 10 ஓவர்களில்தான் சென்னை அணி, சுழல் பந்து வீச்சாளர்களை பயன் படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் அஸ்வின் 4 ஓவர் வீசியதால் மற்றைய இருவருக்கும் தலா 3 ஓவர்கள் வழ்ங்கப்பட்டது . முன்பு சென்னை அணியில் தீக்சனா, மொயின் அலி, ஜடேஜா என இருந்தபோதும் ஒரு முறையும் 12 ஓவர்கள் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சென்னை அணியில்தான் பிரபல்யமான 3 சுழல் பந்து விச்சளார்கள் இருக்கிறார்கள். மற்றைய அணியில் அதிக பட்சம் 2 பிரபல்யமான சுழல் பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.
  11. என்னுடைய ராசிக்கு நல்லாய் விளையாடிய KKR 7 க்கு விக்கெட் போயிட்டுது
  12. என்னுடைய ராசி நல்லாய் வேலை செய்யுது. LSG நல்லாய் விளையாடுகிறார்கள். இன்னும் ஒரு முட்டை கிடைக்கும் போல இருக்கிறது .🤔😳
  13. தீபக் சகார் 2 ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 29 ஓட்டங்கள் கொடுத்ததினால் அவரின் மிகுதி 2 ஓவர்களுக்கு பகுதி நேர பந்து விச்சாளர் வில் ஜாக்கும், இளம் பந்து விச்சாளார் விக்னேஷ் புதுருக்கும் தலா ஒரு ஓவர் வழங்கப்பட்டது. ரோகித் சர்மா, SRH அணியின் ட்ரெவர் கெட் போல out of form இல் இருப்பதாக தெரிகிறது. எனினும் 9 பந்துகளில் விரைவாக 17 ஓட்டங்கள் பெற்றார் . யாஷ் டயல் வீசிய சிறப்பான பந்தில் ஆட்டமிழந்தார். அந்த பந்து வீச்சினை superb riposte என வர்ணனையாளர்கள் வியந்து சொன்னார்கள். சூரியகுமார் யாதவ் இதற்கு முன்பு விளையாடிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.
  14. கடைசி 14 போட்டிகளில் ஒரே ஒரு கேள்வி மட்டும் சரி எடுத்திருக்கிறேன். எனது ராசிப்படி நான் தெரிவு செய்யாத LSG, PBKS ஆகிய அணிகள் இன்று வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றன.
  15. நீங்கள் வாழ்க்கையில் ஐபிஎல் ஏலம் பார்க்கவில்லை போல. ஏலத்தில் 90க்கு பிறகு ஆளாக வரும் ஒருவருக்காக எந்த அணியும் வெயிட் பண்ணமாட்டினம். ஒருவருக்காக வெய்ட் பண்ணப்போய் அவரும் இல்லை, இவரும் இல்லை என்ற கதையாகும். முக்கியமாக முதல் நாள் ஏலம் முதல் 83 பேருடன் முடிந்துவிட்டது. பெரும்பாலான அணிகள் தங்களுக்கு தேவையான 10 க்கு மேற்பட்ட வீரர்களை தெரிவு செய்துவிட்டார்கள். 2 ஆம் நாள் எல்த்தில்தான் வாஷிங்டன் சுந்தர் வந்தார். பெரும்பாலான அணிகளிடம் குறைவான பணமே இருந்தது. வாசிங்டன் சுந்தர் முந்தைய ஐபிஎல்களில் பெரிதாக சாதிக்காததும் ஒரு குறை இருக்குது எனினும் வாசிங்டன் சுந்தர் குழு 4 இல் இருந்தால் ஓரளவு பெரிய விலைக்கு போயிருப்பார். தம்பி சின்னப்பிள்ளை மாதிரி கோவிக்காமல் வந்து எழுதுங்கள். நீங்களும் கேட்டதினால்தான் இப்போட்டியில் கலந்து கொண்டேன். வீட்டில வாங்கி வைக்க இடமெல்லாத அளவுக்கு முட்டைகள் வாங்கி குவிக்கிறேன் 😀
  16. ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 5 capped players இனை தக்கவைக்கமுடியும் . ஏற்கனவே நான் எழுதியது போல இம்முறை 18,14,11,18,14 = 70 கோடி இவர்களுக்கு செலவு செய்யவேண்டும். சென்ற ஐபிஎல்இல் SRH 2 ஆம் இடத்தை பிடித்தது. இதற்கு காரணமானவர்களை SRH தக்கவைக்க விரும்பியது. க்ளாசன் 23 கோடிக்கும் அணித்தலைவர் கம்மின்ஸ் 18 கோடிக்கும் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட சோடிகளான ஹெட், அபிஷேக் சர்மாவை தலா 14 கோடிக்கும் தக்கவைத்தனர். மிகுதி 6 கோடிக்கு உடன்பட்ட நடிஸ்ஜ் குமார் ரெட்டி தக்க வைக்கப்பட்டார். ஏலத்தில் SRH இடம் இருந்த மிகுதி தொகை 50 கோடி மட்டுமே ( 120- 70 =50) இதில் மீதி 20பேரை வாங்க வேண்டும் . அணிகள் தக்கவைக்காத ஏலத்தில் வரும் வீரர்களை ஒவ்வொரு குழுவாகப்பிரித்து குழு 1 இல் இருந்து 79 குழுக்களாக பிரித்தார்கள். குழு1 இல் இருந்து ஆரம்பித்து வீரர்களை ஏலம் விடுவார்கள். முதல் 2 குழுவில் சிறந்தவீரர்கள் இருப்பார்கள் முதல் குழுவில் 6 பேர் இருந்தார்கள். இதில் இருந்தவர்களை எல்லா அணிகளும் அடிபட்டு அதிக விலை குடுத்து வாங்கினார்கள் . இந்த குழுவில் இருந்த ரிஷப் பாண்ட், சிரேஷ அய்யர், ஆர்சிப் சிங் போன்றவர்கள் அதிக விலைக்கு போனார்கள். வாசிங்டன் சுந்தர் 14 வது குழுவில் இருந்தார். 96 வது வீரராக இவருக்கு ஏலாத்தின் இலக்கம் வழங்கப்பட்டது. அஸ்வின் 4 வது குழுவில் இருந்தார் வாஷிங்டன் சுந்தர் 4 வது குழுவில் இருந்தால் சென்னை சிலவேளை வாசிங்டன் சுந்தருக்கு போட்டியிட்டு இருக்கும்
  17. ஹர்ஷால் படேல் நேற்று காயம் காரணமாக விளையாடவில்லை. அடம் சம்பா SRH இன் முதல் 3 போட்டிகளில் விளையாடினார். அப்போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை ரபாடா தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தென்னாப்பிரிக்கா சென்று உள்ளார். விரைவில் வந்து விளையாடுவார். SRH சென்ற ஐபிஎல் இல் அதிக விக்கேட்கள் எடுத்த ஹர்திக் பட்டேல், இந்தியாவின் தலை சிறந்த வேகப்பந்துவீச்சாளர் மூகமத் சாமி , ஆஸ்திரேலியாவின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் அடம் சம்பா என நல்ல வீரர்களைதான் எடுத்தார்கள்.
  18. ஒரு போட்டியில் சரியாக விளையாடாததினால் மட்டும் திலக் வர்மாவை நீக்க மாட்டார்கள். சென்ற போட்டியில் காயம் காரணமாக விளையடாத ரோகித் சர்மா இபோட்டியில் விளையாடவுள்ளார்
  19. இன்று வாசிங்டன் சுந்தர் விளையாடுகிறார். நாளை பூமாரா விளையாடுவார். நடராஜனும் குணம் பெற்று வருகிறார். விரைவில் விளையாடலாம்.
  20. சாம்பியன் கோப்பை போட்டியில் பூமரா விளையாடவில்லை. அபொழுது ,ஏப்பிரல் மாதம் இருந்துதான் பூமாரா விளையாடுவார் என்று எங்கேயோ வாசித்த ஞாபகம். இந்த ஐபிஎல்லில் SRH, MI,CSK ஆகிய 3 அணிகளும் KKR இணை வெல்லும் என நினைத்தேன். ஆனால் பூமரா விளையாடமாட்டார் என்பதினால் MI, KKR போட்டியில் KKR வெல்லும் என விடை எழுதினேன், பலர் MI வெல்லும் என எழுதி புள்ளிகள் பெற்றார்கள் . நான் பூமரா காயம் பட்டது தெரிந்ததால் முட்டை வாங்கினேன். தற்போது கிடைத்த தகவலின் படி பூமாரா நாளை RCB க்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
  21. இன்று ஒரு போட்டி மட்டுமே நடைபெறும். முதலாவது போட்டி செவ்வாய்க்கிழமைக்கு பிற்போடப்பட்டிருக்கிறது கொல்கத்தா நகரில் நடக்கும் ராமா நவமி நிகழ்வுக்காக பலர் கூடவுள்ளதற்காக பாதுகாப்பு காரணமாக இன்று நடைபெறவுள்ள போட்டி செவ்வாய் அன்று பிற்போடப்பட்டுள்ளது.
  22. 16 போட்டி முடிய 5 கேள்விக்கு மட்டும் சரியாக பதில் அளித்து 10 புள்ளிகள் எடுத்திருக்கிறேன். 11 கேள்விகள் பிழை. பேசாமல் விடைகளை எழுதும் போது எது எனக்கு பிழையான விடையாகத் தோன்றிய அணிகளை விடையாக எழுதியிருக்கலாம். 11 கேள்விக்கு சரி எடுத்து 22 புள்ளிகள் பெற்று செம்பாட்டன், அல்வாயனுக்கு முன்னால் நின்று இருப்பேன். போகிற போக்கை பார்த்தால் குமாரசாமியும் கோஷானும் என்னை முந்துவார்கள் போல இருக்குது. SRH,MI , CSK இணை நம்பி மோசம் போயிட்டேன்
  23. நீங்கள் சொல் வது சரி. மகேலாதான் முதலில் முடிவெடுத்தார். பிறகு கார்திக் பாண்டியா அதற்கு ஆதரவு அளித்தார்
  24. நீங்கள் சொல்வது சரி. கடைசி சில ஓவர்களுக்கு முதல் முடிவெடுத்தாலும் திலக் வர்மா அடிப்பார் என்று கொஞ்ச நேரம் விட்டுப்பார்த்தார்கள். அணியில் ராஜ் பவார் என்று ஒரு சகலதுறை ஆட்டக்காரரும் இருந்தார். அவர் பந்தும் வீசவில்லை. மிச்சல் சான்ட்னரை விட வேகமாக அடிப்பாரா தெரியாது. மிச்சல் சாண்டார் பெரிய அடிகாரர் இல்லை. ஆனால் கண்டபாட்டுக்கு குறைந்த பந்துகளுக்கு அடிக்கக்கூடியவர்.
  25. திலக் வர்மா காயம் காரணமாக (Retired hurt)வெளியே செல்லவில்லை. அவர் சரியாக விளையாடதாதினால் அணித்தலைவர் கார்திக் பாண்டியாவும் மகேலா ஜெயவர்த்தனாவும் எடுத்த முடிவினால் வெளியேறினார் (Retired out). ஐபிஎல் வரலாற்றில் இது 4 வது சம்பவம். முன்பு அஸ்வினும் இவ்வாறு ராஜஸ்தான் அணிக்கு விளையாடும் போது வெளியேறினார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.