Everything posted by கந்தப்பு
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
கூடா நட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011 சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
நன்றி
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
4ம் இடம் என்று சொன்னேன். 4 இடங்கள் என்று சொல்லவில்லை . (ஒரு இடமும் கிடைக்காது) ஓம்.
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை.
-
மதிமுக எம்பி கணேசமூர்த்திக்கு என்ன நடந்தது?
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக குரல் குடுத்தாக பொடா வில் ஒன்றரை வருடங்கள் சிறையில் இருந்தவர் கணேசமூர்த்தி அவர்கள். கண்ணீர் அஞ்சலிகள்
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
மோடிதான் மீண்டும் பிரதமர். தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லும். சிலவேளை 39 தொகுதியிலும் வெற்றி பெறலாம். சீமானின் கட்சி பெரும்பாலும் 4ம் இடத்தில்தான் வரும். ஒரு சில இடங்களில் 3 ம் இடத்தில் வரலாம்.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
- திரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..
91ல் தமிழக ஆட்சியினைக் கைப்பற்றுகிறார் ஜெயலலிதா அம்மையார். தமிழகத்தில் இருக்கும் ஈழ அகதிகளின் பல்கலைக்கழக அனுமதிகள் மறுக்கப்படுகின்றன. அகதிமுகாம்களில் இருந்து ஈழ அகதிகள் சிலர் காணாமல் போகிறார்கள். அவர்களின் உடலங்கள் வீதிகளில் கிடக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். 96ல் கலைஞர் ஆட்சியினைக் கைப்பற்றுகிறார். ஈழ அகதிகளுக்கான பல்கலைக்கழக அனுமதியினை வழங்குகிறார். தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 இடங்களை ஈழ அகதிகளுக்கு வழங்குகிறார். அதாவது பொறியியல்துறைக்கு 20 இடங்களும், மருத்துவதுறைக்கு 10 இடங்களுமாக கோட்டா முறையில் 30 ஈழ அகதிகளுக்கு இலவசக்கல்வியினை வழங்குகிறார். ஈழத்தில் பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளைகளை வெற்றிகரமாக செய்து முடித்து திரும்பிய இந்தியப்படைகளினை வரவேற்க செல்லாமல் தவிர்த்தவர் கலைஞர். ஆனால் அவரின் இறுதிக்காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு செய்ய வேண்டியவற்றை புத்திர பாசத்தினால் செய்யாமல் தவிர்த்தார். செய்திருந்தால் இன்னும் உயர்ந்திருப்பார். கலைஞரின் பராசக்தி திரைப்படத்தினை பலமுறை பார்த்து இரசித்திருக்கிறேன். அவரின் நாவல்கள் பலவற்றினை வாசித்திருக்கிறேன். 'வான் கோழி' பிடித்தநாவல். எனக்குப்பிடித்த கலைஞரின் பேட்டிகளில் சில 1) 90களில் ஒரு பத்திரிகையாளர் கலைஞரினைப் பார்த்து ஒருவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிச் சொல்லும் படி கேட்டிருந்தார். அவரின் பதில் - ஜெயலலிதா ஒரு சிறந்தநடிகை. மேலோட்டமாகப்பார்த்தால் நடிகை ஜெயலலிதாவைப்பற்றிச் சொல்வதாகத் தோன்றும். ஆனால் அரசியல்வாதி ஜெயலலிதாவைப் பற்றி கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். 2) இன்னுமொரு பத்திரிகையாளர் 'திமுகவுக்கும் அதிமுகவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கலைஞரைப்பார்த்து கேட்டிருந்தார். கலைஞரின் பதில் 'சுத்தம்' உடன் 'அ' சேர்த்தால் 'அசுத்தம்' என்று வரும் 'நீதி' உடன் 'அ' சேர்த்தால் 'அநீதி' வரும். 'திமுக'வுடன் 'அ' சேர்த்தால் 'அதிமுக' வரும். தமிழக உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.- அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்!
தமிழக இளசுகள் பறவாயில்லை. ஈழத்து இளசுளில் சில, தங்கள் இனத்தினை, ஒரு இலட்சம் பேர்களைக் கொன்று அழித்தவர்களின் அணியை ஆதரிக்க சிங்கக் கொடிகளுடன், சிங்கக்கொடி போட்ட டில்மா ஆடைகளை அணிந்து சென்று இலண்டன் லோட்சிலும், ஓவலிலும், அவுஸ்திரெலியா எஸ் எஸ் சியிலும், எம் சி சி களிலும் முன்பாக நுளைவுச் சீட்டுக்கு அழைகிறார்களே. ஈழத்துக்காக தன்னுடயுரைத் தியாகம் செய்தவன் முத்துக்குமார் என்ற இளைஞன். ஈழத்துக்காக மெரினாவில் கூடியவர்களும் பல தமிழகத்து இளைஞர்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி- யூனியன் கல்லூரி பழைய மாணவர்கள்(uk) கவனத்துக்கு
- யூனியன் கல்லூரி பழைய மாணவர்கள்(uk) கவனத்துக்கு
யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்க பிரித்தானிய கிளையால் ஒரு கேளிக்கை நிகழ்வு எதிர்வரும் 25ம் திகதி கார்த்திகை மாதம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது எமது தாயக விடுதலைக்கு தங்கள் உயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூறும் வாரத்தில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை சுட்டிக்காட்டி பாடசாலை அதிபர், யாழ்ப்பாணத்தில் இயங்கும் பழையமாணவர் தாய் சங்கம், ஏனைய நாடுகளில் இயங்கும் பழையமாணவர் சங்க நிர்வாகிகள், உலகமெங்கும் வாழும் பழையமாணவர்கள், மற்றும் பிரித்தானிய பழையமாணவர்கள், நலன் விரும்பிகள் என பலர் தங்கள் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தும், பிரித்தானிய பழையமாணவர் சங்கம் இந்நிகழ்வை நடத்தியே தீர்வது என்று அனைவரின் எதிர்ப்பையும் மீறி முடிவு எடுத்துள்ளது. மார்கழி 9 மற்றும் 16 திகதிகளில் அதே மண்டபம் கிடைக்க கூடிய வாய்ப்பு இருந்தும் அவர்கள் மாற்றுவதற்கு தயார் இல்லை. மேலும் இந்தவருட பழைய மாணவர்கள் ஒன்று கூடல் கடந்த ஆனி மாதமளவில் பிரித்தானிய நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அல்லாது மேற்படி நிர்வாக சபை குறிப்பிட்டது போல் இது ஒரு இலாபநோக்கம் அல்லாத மற்றும் பாடசாலையுடன் தொடர்பில்லாத களியாட்ட நிகழ்வு. மேற்குறிப்பிட்ட காரணங்களில் இருந்து அறியக்கூடிய விடயம் யாதெனில், இது ஒரு நன்கு திட்டமிட்ட செயல். நிர்வாக குழுவில் இடம்பெற்று இருக்கும் ஒரு சிலர் தங்கள் தனிப்படட இலாபத்துக்காக அல்லது வேறு சிலரின் நோக்கத்தை நிறைவேற்ற இந்த நிகழ்வை பயன்படுத்துகிறார்கள். வருடத்தில் 52 கிழமைகள் உள்ளன. ஏன் இந்த வாரத்தில் தான் இக்களியாட்ட நிகழ்வை ஒழுங்கு செய்ய வேண்டும்? எனவே இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்ட திகதி எங்கள் கல்லூரியின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக அமைகின்றது. பழைய மாணவர் அமைப்புக்கள் பாடசாலை வளர்ச்சிக்காகவே உருவாக்கப்பட்டன அன்றி அவைகளின் கண்மூடித்தனமான நடவடிக்கைகளால் பாடசாலையின் புனிதத்தன்மையான பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவதற்காக இல்லை. இதை அந்த பழைய மாணவர் அமைப்பை பிழையான வழியில் இயக்கிக்கொண்டிருக்கும் வயதில் பெரியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் அதிக பணம் கொடுத்த அமைப்பு, ஆகவே நாங்கள் என்ன செய்தாலும் நீங்கள் யாரும் கேட்க முடியாது என்று நினைப்பது மிகவும் தவறான விடயம். உங்களது நடவடிக்கையானது எங்களது பாடசாலையின் பெயருக்கும் அதில் கல்வி கற்ற எங்களுக்கும் மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிடும் என்பதை மறந்துவிட வேண்டாம். இனியாவது மனத்தை மாற்றி நல்ல முடிவாக எடுக்கவும். இல்லையெனில் இதனை அனைவரும் ஒன்று இணைந்து தடுக்காது விட்டால், எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் புற்றீசல்கள் போல் பெருகும்.- சென்னை மெட்ரோ ரயில்...
நல்லவிடயம். ஆளும்கட்சி மாறி அடுத்த தேர்தலில்பின் வேறு ஒருகட்சி ஆளும்கட்சியானால் சென்னை மெட்ரோ ரயிலில் ஊழல் என்று எதாவது செய்தாலும் செய்துவிடுவார்கள் என்று சந்தேகம் இருக்கிறது.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
யாழ்கள உறவு ஜெயபாலன் அவர்கள் மீண்டும் நோர்வேக்கு திரும்பிவந்தது மகிழ்ச்சி. இனிமேல் தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு செல்லவேண்டாம்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் ஜெயபாலன் அவர்கள் மூஸ்லிம்களையும் தமிழர்களையும் இணைக்க விரும்பினார். தமிழர்களும் முஸ்லீம்களும் பிரிந்து இருப்பதையே சிங்களம் விரும்புகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு நன்மைதானே. இதனால் இவர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
யாழ்கள உறுப்பினரும் கவிஞருமான ஜெயபாலன் அவர்கள் விரைவில் விடுதலை பெறவேண்டும். அவுஸ்திரெலியா குடியுரிமை பெற்ற மெல்பேர்னைச் சேர்ந்த ஒருவர் முன்பு சிங்களதேசத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவுஸ்திரெலியா அரசின் அழுத்தத்தினாலும் ,மனிதவுரிமை அமைப்புக்களின் அழுத்தத்தினாலும் அவரை வேண்டாவெறுப்பாக சிங்களம் விடுதலை செய்திருக்கிறது. யாழில் இச்செய்தி சென்ற வருடம் வந்தது. அதே போல நோர்வே குடியுரிமைபெற்ற ஜெயபாலன் அவர்களின் விடுதலைக்கு நோர்வேயினூடாக சிங்களத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். உலகில் எத்தனையோ அழகான அமைதியான நாடுகள் இருக்கின்றன. தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு பயணிப்பதினைத் தவிருங்கள்.- பிரான்சில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் (படங்கள்)
மாவீரர்களுக்கு வீரவணக்கம். தாயகத்தில் மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் சிங்கள அரசினால் அழித்து இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்ட துயிலும் இல்லங்கள் தான் சிங்களத்தினால் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றது. புலம் பெயர்ந்த நாடுகளில் மாவீரர்களுக்கு துயிலும் இல்லங்கள் அமைத்தால் நல்லது என நினைக்கிறேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும் ,கோமகன்,பிரியா, குமாரசாமிக்கும் பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.- கேணல் சாள்ஸ் நினைவு வணக்க நாள்
வீரவணக்கம் 2008ல் யாழில் வந்த இணைப்பு http://www.yarl.com/forum3/index.php?showtopic=33018- லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன் - மேஜர் வளவன் நினைவு நாள்
வீர வணக்கங்கள்- இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
- தமிழ்நாடு தேர்தல் - முழுமையான வெற்றி விபரங்கள்
- மெளனப் புரட்சி
ஒருமாத கால புதிருக்கு விடை கிடைத்துவிட்டது. அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்வி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதி நாட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்ததைவிட வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்த நேரம்தான் அதிகம். ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கியதுமே, தி.மு.க. மீதான இமேஜ் சரியத் தொடங்கியது. இலவசங்களாலும், பணத்தாலும் மக்களின் மனதை மாற்றி விடலாம் என தி.மு.க. நினைத்தது. அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள் மக்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஈழத் தமிழர் பிரச்னை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலம் அது. ஈழ ஆதரவாளர்களும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வேலை செய்தனர். அதையும் தாண்டி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியை கரு ணாநிதி தனக்கு சாதகமாக நினைத்திருக்கக் கூடும். ஆனால், மத்தியில் ஆட்சி என்பது வேறு, மாநில ஆட்சி என்பது வேறு என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வை த்துள்ளார்கள் என்பதைத்தான் சட்டமன்றத் தேர்தல் வெற்றி உணர்த்துகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்று முடிவானதுமே, தி.மு.க.வின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அ.தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்திருந்தது அதற்கு ஒரு காரணம். ஜெயலலிதாவா, கருணாநிதியா என ஜம்ப் ஆகிக் கொண்டிருந்த ராமதாஸ் கருணாநிதியுடன் இணைய, தி.மு.க.வுக்கு வட மாவட்டங்களில் பலம் கிடைத்தது போல் ஒரு தோற்றம் உருவானது. ஆனால் அது தோற்றம் மட்டுமே என்பதை தேர்தல் பிரசாரத்தின் போது காண முடிந்தது. ‘‘முதல்முறையாக நாங்கள் இணைகிறோம், எங்கள் கனவு நனவாகி விட்டது’’ என்றெல்லாம் ராமதாஸும், திருமாவளவனும் கட்டியணைத்து போஸ் தந்தார்கள். ஆனால், தலைவர்களிடம் இருந்த நெருக்கம் தொண்டர்களிடம் இல் லாமல் போனது. வட மாவட்டங்களில் வன்னியர்களால் தலித்துகள் தாக்கப்படும் சம்பவங்களும், தலித்துகள் வன்கொடுமைச் சட்டத்தில் பொய்ப்புகார் கொடுக்கிறார்கள் என வன்னியர்களும் புகார் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து தேர்தல் பணியாற்றவே இல்லை. இளைஞர் காங்கிரஸ் நடைபயணம், காங்கிரஸ் தலைவர்களின் தி.மு.க.விற்கு எதிரான பேச்சு என காங்கிரஸ் தொண்டர்களிடையே தி.மு.க.விற்கு எதிரான மனநிலையே தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்புவரை இருந்தது. திடீரென காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி என அறிவிக்க, தொண்டர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினரும், தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ்காரர்களும் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தார்கள். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வேறு நிறுத்தப்பட்டனர். நானா, நீயா என போட்டி போட்டு மாறி, மாறி தோற்கடிக்கும் வேலையை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியினர் சரியாகவே செய்தார்கள். பா.ம.க. - காங்கிரஸ் மோதல், விடுதலைச் சிறுத்தைகள் - காங்கிரஸ் மோதல் என கூட்டணிக்குள் குழப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. ஆனால் இது எதுவும் வெளியில் தெரியாதவாறு, அதன் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் சித்திரிக்கப்பட்டது. அனைவரும் மேடையில் ஒன்றாகப் பேசி, தங்கள் கைவசம் இருக்கும் மீடியாக்கள் மூலம் ஒற்றுமையை பரப்பிக் கொண்டிருந்தார்கள். அ.தி.மு.க.வில் நிலைமை நேர் எதிராக இருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மேடையில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை, ஜெயலலிதா பெயரை விஜயகாந்த் சொல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் நோக்கம், தலைவர்களைப் போலவே, தி.மு.க.வை வீழ்த்துவதாக இருந்தது. இந்த நோக்கத்தில் அவர்கள் ஒன்றுபட்டு தேர்தல் வேலை செய்தார்கள். இந்த எல்லா அரசியலையும் தாண்டி ஓட்டுப்போட்ட மக்களுக்கு மின்வெட்டுதான் தி.மு.க. அரசின் மீது தீராத கோபத்தை வரவழைத்தது. காலை ஆறுமணிக்கே தொலைந் துபோகும் மின்சாரத்தின் முன் கிரைண்டர், கலர் டி.வி. எல்லாம் எடுபடவில்லை. கடந்த ஆண்டுகளில் இந்த மின்தடையால் ஏராளமான சிறுதொழில்களும், விவசாயமும் கிட்டத்தட்ட அழிந்து போனது என்பதுதான் உண்மை. அதிரடியாய் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியை சமாளிக்க முடியாமல் நடுத்தர, ஏழை மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், ‘‘மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது, எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் பொருட்களை வாங்குவார்கள் என்பதற்கு தி.நகரே சாட்சி’’ என்றெல்லாம் கருணாநிதி பேசி மக்களை வெறுப்பேற்றினார். கடந்த தேர்தல்களில் தங்களுக்கு வெற்றியைத் தந்ததாக தி.மு.க. நம்பிக் கொண்டிருக்கும் திருமங்கலம் ஃபார்முலாவும் இந்தமுறை கவிழ்த்து விட்டது. தேர்தல் கமிஷனின் எல்லாக் கெடுபிடிகளையும் மீறி, கடைசி நாட்களில் தி.மு.க. பணப்பட்டுவாடா செய்தது. ‘‘ஸ்பெக்ட்ரம் பணத்தில் கொள்ளையடித்ததை உங்களுக்குத் தருவார்கள் வாங்கிக் கொள்ளுங்கள்’’ என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து கொண்டிருக்க, இந்தப் பணம் பெ ரும்பாலும் பொதுமக்களுக்கு போய்ச் சேரவேயில்லை என்பதுதான் உண்மை. கட்சி கொடுத்த பணத்தை கட்சிக்காரர்களே அமுக்கிக் கொண்டனர். கடந்த தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணமாக சொல்லப்பட்ட தேர்தல் அறிக்கை நலத்திட்டங்கள் முழுக்க மக்களை போய்ச் சேரவேயில்லை. கலர் டி.வி., இலவச சிலிண்டர் எல்லாவற்றையும் கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கே தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பூஜ்யங்களை எண்ண முடியாத அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஊழல் பணத் தில்தான் கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது, கனிமொழி, தயாளு மீது வழக்கு, ராஜாத்தி அம்மாள் நீரா ராடியாவுடன் நடத்திய பேச்சு, பேரனுக்கு பதவி கொடுக்க தயாளு அம்மாள் 600 கோடி வாங்கினார் என கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் மக்களை எரிச்சலடையச் செய்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி மகன்களும், பேரன்களும் சினிமா, டி.வி., பத்திரிகை என எல்லாத் தொழில்களிலும் கால் பதிக்க, அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு சினிமா கூட வெளிவர முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆட்சி மாறினால் உடனே அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் சினிமா துறையினர் கூட கருணாநிதி கு டும்பத்தின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். இந்தக் குடும்ப ஆதிக்கம் தி.மு.க.வின் அமைச்சர்கள் மட்டத்திலும் பரவ ஆரம்பித்தது. மாவட்ட வாரியாக அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளைக் களமிறக்க கட்சிக்காக வேலை செய்த தொண்டர்கள் குமுற ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் மீது தொடர்ந்து கூறப்பட்ட நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து கொலைக் குற்றப் புகார்களால் தி.மு.க.வின் இமேஜ் கடுமையாகச் சரிந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து மதிப்பு கற்பனை பண்ண முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்தார்கள். கருணாநிதியின் உதவியாளர் தனி ராஜ்ஜியமே நடத்த ஆரம்பித்தார். குடும்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிகார மையமாகச் செயல்பட்டது கட்சியினரிடையே கோபத்தையே ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு புதிய விஷயங்களை கவனிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கே வாக்களித்த வரலாறுடைய அரசு ஊழியர்கள் இந் தமுறை பெருமளவில் அ.தி.மு.க.விற்கு வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க.வின் உண்மையான கட்சித் தொண்டர்கள், ‘‘கட்சி வளர வேண்டுமானால் குடும்ப ஆதிக்கம் ஒழிய வேண்டும். அதற்கு இந்த முறை தி.மு.க. தோற்க வேண்டும். அதிலிருந்தாவது கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார்கள். கட்சியில் பல ஆண்டுகளாக வேலை செய்பவர்களை விட, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட, சீனியர் தி.மு.க.வினர் எரிச்சலடைந்தனர். தி.மு.க.வின் பலவீனங்கள் அ.தி.மு.க.வுக்கு பலமாகி விட்டது. அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் உழைப்பு இந்தத் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம். வெற்றி பெறும் தொகுதிகளாக தேர்வு செய்தது, மக்களுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்டது, தி.மு.க.வின் பலவீனங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டது என பல காரணங்களை அடுக்கலாம். பெரிய ஊடக பலம் இல்லாததால் இந்த வேலைகள் வெளித்தெரியாமல் போயின. இதைத்தவிர, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இலவச ஆடு, பசுமை வீடு போன்ற திட்டங்கள் கிராம மக்களை அதிகம் ஈர்த்துள்ளன என்பதும் உ ண்மை. விஜயகாந்துக்கு எதிராக தி.மு.க.வால் களமிறக்கப்பட்ட வடிவேலு, அ.தி.மு.க.வை தாக்கி ஒரு வார்த்தையும் பேசவில்லை. எம்.ஜி.ஆர். பாடல்கள் வேறு பாடி ஓட் டுக்கேட்க, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்ததுதான் பெரும் நகைச்சுவை. சீமான் போன்ற தமிழ்த்தேசியவாதிகள் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பெரிய அளவில் வேலை செய்ய, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமானது. நாட்டை விட, வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் பலனை கருணாநிதி இப்போது உணர்ந்திருப்பார். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, ‘‘இது அ.தி.மு.க.வின் வெற்றி அல்ல. தி.மு.க.விற்கு எதிரான கோபம் மட்டுமே’’ என்பதைத்தான். மக்களின் மௌனப் புரட்சியே இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்குவதற்கு முன்பாக அறிவாலயத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். முடிவுகள் வரத்தொடங்கிய சிறிது நேரத்திற்கெ ல்லாம், ஒரு போலீஸார் கூட அங்கு இல்லை. கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் மட்டும் இ ருந்தனர். பின்னர் ஆயிரம்விளக்கு உசேன் மட்டும் வந்து சேர்ந்தார். சளித் தொல்லை காரணமாக முதல்வர் யாரையும் பார்க்காமல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தார். அங்கு பாதுகாப்புக்குப் போடப்பட்டிருந்த போலீஸாரும் சிறிது நேரத்தில் காணாமல் போயினர். வடிவேலு வீட்டுக்கு காவல்! 1967-ம் ஆண்டு அண்ணாதான் பிரசார பலமாக இருந்தார். அண்ணாவை முன்னிலைப்படுத்தியே தி.மு.க. பிரசாரம் செய்தது. மக்கள் அலைகடலென திரண்டு வந்து அவரது பேச்சை கேட்டார்கள். இந்தத் தேர்தலுக்கு அதே தி.மு.க., நடிகர் வடிவேலுவை நம்பியே களத்தில் இறங்கியது. விஜயகாந்தை திட்டுவது, எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடி தி.மு.க.வுக்கு ஓட்டுக் கேட்பது, தேர்தலுக்குப் பிறகு கருணாநிதியைச் சந்தித்து, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அறிவிப்பது...என பிஸியாகவே இருந்தார் வடிவேலு. தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்ததால், வடிவேலுவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. வடிவேலு வீட்டருகே அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களைச் சந்தித்தார். நடிகர் வடிவேலுவைப் பற்றி கருத்துக் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார். சட்டசபையில் எதிர்க்க ட்சியாகும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்போம் என்று முடித்துக்கொண்டார். - குமுதம் ரிப்போட்டர்- பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி
உண்மைதான். வன்னி அவலம் நடைபெற்ற போது பல காணொளிகள் திரு.வேல்முருகன் அவர்களைப் பார்த்தேன். - திரு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.