Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. படப்பிடிப்பு :- GTA Video Entertainment (கெங்கா)அப்பாவின் பாசம். இப் பாடல் அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்.பாடல் வரிகள் தமிழ்மணி :- க. உயிரவன் ஒலிப்பதிவு :- சுதர்சன் பாடியவர் :- அபிநயா பவன்(Canada)
  2. தலைகீழாக விழும் கோபுர நிழல்! பதில் தெரியாத மர்மம்!! கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனுமிடத்தில் விருபாட்சர் கோயில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில், பெங்களூரிலிருந்து 350 கி.மீ., தொலைவில் உள்ள இக்கோயில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது. விருபாட்சருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். ஆனால், கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவன் சிலையோ 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். அதனால், இந்தக் கோயில் கட்டி எழுப்பிய பிறகு ஆண்ட மன்னர்கள் கோயிலை இன்னும் பிரம்மாண்டப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் இருந்தே ஹம்பி நகரத்தில் பல படையெடுப்புகள் நடத்தப்பட்டதால் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் காணாமல் போய்விட்டதாம். இந்தக் கோயில் பல ஆண்டுகளாக விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டதாம். இந்தியாவின் பழமையான கோயிலும் இதுதான். கோயிலின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கோபுரம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 160 அடி உயரத்தைக் கொண்டது. 1565 இல் இந்த நகரம் முழுவதும் அழிந்தபோது கூட, இந்தக் கோயில் அழியாமல் இருந்ததோடு, கோவிலில் நடைபெறும் வழிபாடுகளும், ஆராதனைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. ரங்க மண்டபத்தைச் சுற்றி சிறு சிறு கோயில்கள், தூண் மண்டபங்கள் என அனைத்து அம்சங்களும் அழகாக எழுப்பப்பட்டுள்ளது. கோயிலின் மத்தியில் இருக்கும் ரங்க மண்டபத்தின் கோபுர நிழலான ஒரு அறையில் தலைகீழாக தெரிகிறது. இதுதான் இந்தக் கோயிலின் உச்சக்கட்ட சிறப்பு ஆகும். இதற்கான அறிவியல் ஆராய்ச்சிகள் பலகாலமாக நடப்பட்டு ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டது. கோயிலின் கோபுரத்திற்கும் நிழல் விழும் தூண் மண்டப அறைக்கும் இடையே ஒரு துவாரம் இருப்பதால் அந்தத் துவாரம் வழியாக வரும் பிம்பம் தலைகீழான பிரதிபலிப்பை தருகிறது. இப்படியொரு விளக்கம் ஒரு சில அறிஞர்களால் கொடுக்கப்பட்டாலும், அந்தத் துவாரம் கோபுரத்தின் பிம்பம் செல்லும் வழியில் இல்லை என்று வேறுசில அறிஞர்களால் சொல்லப்பட்டது. அதனால், கோபுரத்தின் நிழலானது தலைகீழாக விழுவதற்கான காரணம் என்ன என்பது விடை தெரியாத மர்மமாகத்தான் உள்ளது. இந்தியாவின் மர்மமான கோயிகளில் ஒன்றான இந்த விருபாட்சர் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுவதைப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தக் கோயிலில் குவிந்து வருகின்றனர். அதோடு, கோயிலின் வடிவமைப்பு ராமாயணம், மகாபாரதத்தைச் சித்தரிக்கும் சிற்பங்கள் கல்வெட்டுக்கள் கோயிலின் கலைநயத்தை பார்த்து வியப்புடன் செல்கின்றனர். இந்தக் கோயில் இந்திய கலாசார பண்பாட்டுக்கு எடுத்துக்காட்டு என யுனெஸ்கோவால் புகழாரம் சூட்டப்பட்டது. பல இடிபாடுகளுக்குக்கிடையே சிக்கி தற்போது அழகாகக் காட்சியளித்து வரும் இந்த விருபாட்சர் கோயிலில் டிசம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும், வருடாந்த ரத திருவிழா பிப்ரவரி மாதத்தில் சிறப்பாக நடத்தப்படுகிறது. http://lankapuri.com/2019/09/07/தலைகீழாக-விழும்-கோபுர-நி/
  3. விசுகு அண்ணாவுக்கும் மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  4. தியாகத்தின் மற்றுமொரு சிகரம் தொட்டவர் கேணல் சங்கர் அவர்கள். Canada, Montrealஇல் Air Canadaவுக்கான விமானப் பொறியியலாளராக உயர்வான பணி, பாதுகாப்பான நாடு ஒன்றில் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் துறந்து, கரடு முரடான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சரளமான ஆங்கிலத்தில் அவரது சிநேகமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது. விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற அவர், 83 இனக்கலவரத்தை கொழும்பில் நேரில் காண நேர்ந்தது. எம்மக்களின் சுதந்திர வாழ்வின் அவசியத்தை உணர்ந்து போராட்டத்தில் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இவரது இரண்டு சகோதர்களும் கூட மாவீரர்களாவார்கள். சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்த தனது அறிவு மற்றும் அனுபவத்தை முதலீடாகக் கொண்டு புலிகளின் வான்படையை உருவாக்கி அதன் தலைவராகச் செயற்பட்டார். தொழில்நுட்பம், பயிற்சி, விமான கட்டுமானம் என்று அனைத்துத் தடைகளையும் கடந்து இயங்கிய புலிகளின் வான் படையின் மூலம், வெற்றிகரமாகப் பல தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எத்தனை விமானங்கள், அவை எங்கிருந்து இயக்கப்படுகின்றன என்ற புலனாய்வுத் தகவல்களைக் கூட சரியாகப் பெற முடியாமல் இலங்கை அரசு அந்தக் காலப்பகுதியில் தடுமாறியிருந்தது. உலகிலேயே முப்படைகளையும் பெற்றிருந்து, இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்த புலிகளின் முப்படைகளின் வளர்ச்சிக்கும் அளப்பெரும் பணியாற்றியவர் இவர். ‘கடற்புறா’ என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, போராளிகளைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகள் பற்றியும் கற்பித்தவர். அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். இறுதியில், இலங்கைப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் இந்த வீரமகன். (Sep 26, 2001) என்றும் வரலாறு உங்கள் பெயர் சொல்லும் அண்ணா ! எனது கண்ணீர் வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறேன்.
  5. பாடல்: மச்சக்கண்ணி படம்:சீமராஜா பாடியவர்: டி.இமான் இசை:சாம் டி.இமான் வரிகள்:யுகபாரதி
  6. பாடல்:வெள்ளை கனவொன்று படம்:புரியாத புதிர் பாடியவர்கள்:கரிகரன், கரிணி இசை:சாம் C.S வரிகள்:ரஞ்சித் ஜெயக்கொடி வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது.. கண்கள் இருளதடி.. என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி .. (Humming: அடி பெண்ணே.. பெண்ணே..) கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை.. பேசி தீர்த்த பின்பும் பேச வார்த்தை இன்னும் தேடுதே .. இனி பேச ஏதுமின்றி கேட்க ஏதுமின்றி தொடருதே .. (Humming: அடி பெண்ணே.. பெண்ணே..) கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை.. வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி.. என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து ஏதோ சொல்லுதடி... மயக்கும் பார்வையில் பாதை மறந்தும் இந்த பயணம் தொடருதடி.. உன் மந்திர புன்னகையில் என் மனம் சொக்கி சொக்கி சொர்க்கம் தெரியுதடி.. புத்தம் புது மழை என்னை நனைத்ததே .. நெஞ்சம் மட்டும் வேர்க்கும் மாயமென்ன ? நித்தம் இந்த மழை என்னை நனைத்திட..ஏனோ உள்ளம் ஏங்கும் நியாமென்ன? இரு கரங்களியிடையே இருக்க இதமாகுதே .. நீ விழுங்கும் சொற்கள் காதினோரம் கனமாகுதே.. (Humming: அடி பெண்ணே.. பெண்ணே..) கண் முன்னே தேவதை .. உயிர் எங்கும் பெரும் வதை .. உன் மூச்சு காற்று பட்டு ரோமக்கூட்டம் மொத்தம் சிலிர்க்குதே.. உன் தேகச்சூட்டில் என் உதடு கொஞ்சம் முத்தம் உதிர்க்குதே.. ஓ ஓ.. வெள்ளை கனவொன்று உள்ளே நுழைந்தது .. கண்கள் இருளதடி.. என் மொத்த புலன்களும் மெல்ல எழுந்து வந்து எதோ சொல்லுதடி .. Humming: அடி பெண்ணே.. பெண்ணே..
  7. இதை சொன்னவர் ஒன்பதாவது அதிசயம்
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேஸ்.
  9. எனது வெற்றிக்கு உங்களின் ஆதரவு தேவை சேர்(sir)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.