Everything posted by nunavilan
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- சென்னை மெட்ரோ ரயில்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
Chandrashekar Azad's dead body kept on public display by the British to serve as a warning message for other revolutionaries. Betrayed by an informer on 27 February 1931 Azad was encircled by British troops in the Alfred park, Allahabad. He kept on fighting till the last bullet.Finding no other alternative, except surrender,Chandrashekar Azad shot himself.- கருத்து படங்கள்
- உங்களுக்கு தெரியுமா?
1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும்.(எப்போதுமே உள்ளே என்ன நடக்கிறது என்று கணிப்பது கஷ்டம்தான்.) 2.ரோலர் கோஸ்டரில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.(ரோலர் கோஸ்டர் அப்படீனா என்ன?) 3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும்(.நீல லென் மாட்டிக்கலாமா) 4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவது காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான்.(அது எப்படின்னு சொல்லீட்டிங்கன்னா சௌகரியமா இருக்கும்.) 5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும்.(மப்பு தலைக்கேறியிருக்கும்.) 6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும்.(கண்ணுக்கு பாதுகாப்பு வாயா?) 7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படுகிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான்.(எல்லாத்துலேயும் no.1 நாங்க) 8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.(அப்போ ஏற்கனவே காதில் பாக்டீரியா இருக்கா?) 9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்பது வருடங்கள் உயிர் வாழ்கிறார்கள்.(இது என்ன புது புரளி?) 10.ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தப் பட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.அப்படினா (ஓயாம சிரிச்சுகிட்டே இருந்தா?) 11.நமது மூக்கு நமது உடலில் ஒரு குளிர் சாதனப் பெட்டி போல் இயங்குகிறது.இது உடலுக்குள் செல்லும் குளிர் காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது.சூடானக்காற்றை குளிரச் செய்து அனுப்புகிறது.மேலும் காற்றில் உள்ள மாசுக்களை தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாகவும் மூக்கு செயல்படுகிறது.(மூக்கைப் பற்றி மூக்குமுட்டச் செயதி) 12.நமது மூளையானது சக்தி வாய்ந்த கணினியை விட பல மடங்கு சக்தி வாயந்தது.மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.(ஆனா அந்த மூளையே உதவிக்கு கணினியைதானே தேடுது.) 13.மனிதன் இறக்கும் போது முதலில் அவனின் கேட்கும் திறனையே இழக்கிறான்.(எல்லாம் முடிந்த பிறகு பார்த்தா என்ன கேட்டா என்ன) 14.ஒரிகான் என்ற இடத்தில் 2400 வருடங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் காளான் ஒன்று உள்ளது.இது 3.4 சதுரமைல் இடத்தில் பரந்து காணப்படுகிறது.இதில் விசேசம் என்னவென்றால் அது இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.(காம்ப்ளான் தொழிற்சாலை பக்கத்தில் இருக்குதோ என்னவோ?) 15.மற்ற வகை நாய்களை விட, ஜெர்மன ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த நாய்களே மனிதனை அதிக அளவில் கடிக்கிறது.(இனிமேல் அந்த நாய்களை ஹிட்லர் ஷெப்பர்ட் என்று அழைக்கலாம்.) 16.ஆண்களின் சட்டைகளில் வலது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.ஆனால் பெண்களின் சட்டைகளில் இடது பக்கத்தில் பட்டன்கள் இருக்கும்.(அப்படியா.ஆச்சர்யக்குறி ) 17.நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது .நமது விழித்திரையானது சாதாரண நிலையவிட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.(பாக்க நல்லாவா இருக்கும்?) 18.தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம் அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டிருப்பதுதான்.(எனக்கு ரொம்ப உபயோகப்படும்) 19.உண்மையான டைட்டானிக் கப்பலைத் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? வெறும் ஏழு மில்லியன் டாலர் மட்டும்தான்.ஆனால் டைட்டானிக் படம் தயாரிக்க எவ்வளவு செலவானது தெரியுமா? 200 மில்லியன் டாலர்.(கப்பல உடைக்கிறதுக்கு இவ்வளவு செலவாகியிருக்கும்.) 20.நாம் நமது கழுத்தை அசைக்கும் போது டிரிக் என ஏற்படும் சத்தமானது நைட்ரஜன் வாய்வுக் குமிழ்கள் எரிக்கப்படுவதால் உண்டாகிறது.(நல்ல வேளை ஹார்பன் டை ஆக்ஸைடு இல்ல.) 21.மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத பகுதி எது தெரியுமா? கண்ணின் கருவிழி.ஏனென்றால் கருவிழி அதற்கு தேவையான ஆக்ஸிஜனை காற்றிலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்கிறது.(இது எனக்கு புதுசு.) இன்னும் கோடி கோடி காணக்கான ஆச்சர்ய தகவல்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் இல்லாமல் துயில் கொள்கிறாள் இயற்கை அன்னை. தகவல்கள். தினதந்தி தங்கமலர். நன்றி.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.- கருத்து படங்கள்
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காலங்காத்தாலே பாடியவர்: கார்த்திக் படம்: வேங்கை http://youtu.be/yJuwA4TCyOg- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
எப்படி உணர்த்துவது? நா.பாலா 'என் உலகமே இருளில் இருக்கிறது' என்று பிதற்றினாய்! விரல் எட்டும் தொலைவில்தான் விளக்குகளின் பொத்தான் இருப்பதை! 'சபிக்கப்பட்ட முகம் எனது' என்று சலித்துக் கொண்டாய்! உன் கண்ணாடியில் பாதரசம் போய்ப் பல வருடங்கள் ஆகி விட்டதை! 'என்னால் பல மணி நேரங்கள் தொடர்ச்சியாய்ப் பேச முடியும்' என்று பெருமிதப்பட்டாய்! அதில் முக்கால்வாசி நேரம் யாரையாவது குறை கூறுவதை! 'புரிகிற மாதிரி கதைகளைப் புதுமைப்பித்தன் எழுதுவதில்லை' என்றாய்! 'நீயே தத்துப்பித்து' என்பதை! 'அனாவசியமாய்ப் பேசுவதில்லை' என்றாய்! அவசியமான தருணங்களிலும் நீ அமைதியாயிருப்பதை! 'கோபுரத்தில் தங்கக் கலசம் என் உபயம்' எழுதி வைத்து வரலாற்றில் இடம் பிடித்திட முனைந்தாய்! உன் வீட்டருகே போன கோடையில் பற்றியெரிந்த குடிசைகளில் பாதி இன்னும் கூரை வேயப்படாமல் இருப்பதை! 'யாருமே என்னுடன் பேசுவதில்லை' என்று கதறினாய்... 'யார் பேசுவதையும் நீ காது கொடுத்துக் கேட்பதில்லை' என்பதை! 'நேற்றுக் கனவில் அவள் எனக்கு முத்தமிட்டாள்' என்று வெட்கப்பட்டாய்.... 'உன் ஆசைகளின் பிரதிபலிப்புத் தான் கனவுகள்' என்பதை எப்படி உணர்த்துவது? http://thangameen.com/Archieves/contentdetails.aspx?tid=405&iid=38- உங்களுக்கு தெரியுமா?
தமிழர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தஞ்சை பெரிய கோவிலின் சிறப்புகள் : :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: ::::::::::: வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத பெருமை நிறைய தஞ்சை கோவிலுக்கு உண்டு, அந்த சிறப்பம்சங்கள் ... * கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதா கும்... * 1003 வருடங்கள் ஆனாலும் பழமை மாறாமல் இருப்பது இன்னொரு பெருமை. * ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை, ஆகியவற்றில் நம் பெரிய கோவில் உள்ளது, இவை மூன்றிலும் இடம் பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில் மட்டுமே. * இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. * இக்கோவிலின் மிகப்பெரிய சிறப்பு, இக்கோவிலின் மேல் இடம்பெற்றுள்ள கோவில் கலசம், கீழே உள்ள சிவன் லிங்கத்திற்கு துல்லியமாக நேர்க்கோட்டில் அமைந்திருப்பது... * இங்குள்ள சிவ லிங்கம் மூலஸ்தானத்தின் நிலை கதவைவிட பெரிதானது, அப்படியானால் லிங்கத்தை வைத்தபிறகு கோவிலை கட்டினார்களா, அப்படி இருந்திருக்க முடியாது காரணம் ஆகம விதிப்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் லிங்கத்தை கடைசியகதான் பிரதிஷ்டை செய்திருக்கவேண்டும். அப்படியானால் அவர்களுக்கு லிங்கத்தை சிறிதாக்கி உள்ளே எடுத்துசென்று பெரிதாக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும். * இங்குள்ள முருகன் சன்னதியில் உள்ள சிற்பங்களில், மெல்லிய முடி மட்டுமே செல்லும் அளவுக்கு சிறிய துளைகள் செய்துள்ளார்கள். இன்னும் நமக்கு தெரியாமல் எத்தனை ரகசியங்களை மறைத்து வைத்திருக்குறார் அந்த ராஜ ராஜ சோழன்... fb- சிந்தனைக்கு சில படங்கள்...
- கருத்து படங்கள்
- அதிசயக்குதிரை
"ஆறாத ரணம்னு டாக்டர்கிட்டே போனியே, என்ன சொன்னார்?" "ஒண்ணும் பயப்பட வேண்டாம். இது சாதா'ரணம்'னுட்டார்" @ இரண்டு பேய்கள், "வாக்கிங் போக முடியலேங்கிற ஒரு குறைதான்!" @ மனைவி கணவனிடம், "சே..! வர வர நீங்க ரொம்ப மோசம். வீட்டில் தூங்கும்போது கூட மானேஜர் வர்ரார்னு சொன்னதுக்கப்புறம்தான் கண்ணையே திறக்கறீங்க!" @ "ஆனாலும், நம்ம ஜம்புலிங்கம் இப்படிச் செய்யக்கூடாது.." "ஏன், என்ன ஆச்சு?" "கொஞ்சம் உயர்ந்த நிலைக்கு வந்ததும் தன்னோட பேரை 'ஹைஜம்ப்லிங்கம்'னு மாத்தி வெச்சுட்டார்!" @ "குடும்பப் படம்னு சொல்லிட்டு நிறைய சண்டைக் காட்சிகளை இணைச்சிருக்கீங்களே?" "சண்டை இல்லாத குடும்பம் ஏது சார்...!" @ நர்ஸ்; "நீங்க அப்பாவாகப் போறதா சொல்றேன். கொஞ்சம் கூட மகிழ்ச்சி அடையலியே.." மற்றவர்; "எத்தனை தடவைதான் நர்ஸ் மகிழ்ச்சி அடையிறது?" @ "சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் என் மனைவி என் கூட சண்டை போடுறா..." "ஏன் அப்படி?" "நான் சின்ன வீடு வச்சிருக்கது அவளுக்குப் பிடிக்கலையாம்!" @ "முன்பெல்லாம் இராத்திரியில் படியில ஏறி இறங்குற மாதிரி கனவு வந்துச்சு..." "நான் குடுத்த மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்ட பிறகு எப்படி இருக்கு?" "இப்ப ஏறி இறங்குறதெல்லாம் இல்லீங்க டாக்டர். லிப்டிலேயே போயிடுறேன்...!" @ "பணம் சம்பாதிக்க பத்து வழிகள்னு ஒரு புத்தகம் எழுதி இருக்கேன்" "சரி, மீதி ஒன்பது வழிகள் என்னென்ன?" @ "நமது நாட்டு மன்னரிடம் எந்த நாட்டு மன்னரும் போருக்கு வருவதில்லையே. ஏன்?" "போரில் தன்னை வெல்பவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்து வைப்பேன்னு அறிவிச்சிருக்காரே அந்தப் பயம்தான்!"- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காற்றே காற்றே பாடியவர்: வைகொம் விஜயலட்சுமி- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: புதிய உலகம் பாடியவர்: வைகொம் விஜயலட்சுமி இசை: டி.இமான் படம்: என்னமோ ஏதோ- தமிழீழ பாடல்கள்
- சிந்தனைக்கு சில படங்கள்...
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
பாடல்: காத்திருந்தாய் அன்பே படம்: நவீன சரஸ்வதி சபதம் இசை: பிரேம் பாடியவர்கள்:சின்மயி,நிவாஸ், அபேய் வரிகள் வைரமுத்து- மனதைக் கவர்ந்த கவிதைகள்
என் ஊரும் ஒரு நாளும்... பெருமழைதான் என்றாலும் வியர்வை பிசுபிசுக்க நான் பிறந்த மண்ணில் பரிச்சயமற்றவளாய் பெண் தெய்வம் ஒன்றைத் தேடி மிக நிதானமாக நடந்துகொண்டிருந்தேன். வாகனங்கள் நிறைந்த ஒரு கூட்ட நெரிசலில் பெண் தெய்வம் நிற்பதாக அறிவித்துக்கொண்டிருந்தார்கள் நானோ.... பாதை மாறியதை உணர்ந்து மார்க்கங்களற்ற பெண் தெய்வத்தை தேடிக்கொண்டிருந்தேன் பிறகும். மன்னிப்பும் தவறும் மனித இயல்பென மறுதலிக்கும் மனதில் புத்தனின் பிறப்புக்கு முன் பிறந்து கடவுளாக மதிக்கப்படாத மனிதனின் மென்சாந்தம் கண்டேன் ஒரு சிலரிடம். சிரிப்பு என்னவென்றால் பெண்கடவுளர்களோடு வீரக் கடவுளர்களையும் பூட்டி வைத்திருந்தார்கள் கள்ளர்களுக்குப் பயந்து. ஊர்க்காற்றை மட்டும் சேமித்துக்கொண்டு மீண்டும்..... வாடகை தேசம் வந்துவிட்டேன் வெள்ளைக் கடவுளர்களைக் கும்பிட!!! http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6058- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
தயவு செய்து இவன் மேல் பரிதாபப்பட்டு இவனது புன்னகையை பறித்து விடாதீர்கள்...!Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்