-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
சரி தான். முத்தில்லை
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
இப்படி இன்னுமொரு கதையும் அக்காலத்தில் கூறினார்கள். ஏதோவொரு வகைப் பாம்பு இரவு உணவுதேடிச் செல்லும்போது தனது வாயில் எப்போதும் வைத்திருக்கும் முத்தினை வெளியே துப்பிவிட்டு, அவ்வெளிச்சத்தில்த்தான் தனது இரையை வேட்டையாடுமாம். ஆகவே பாம்பு இரைதேடச் செல்லும்போது அந்த முத்தினை எடுக்க அதன் பின்னால் போய், பாம்பு முத்தினை துப்பிவிட்டு இரைதேட ஆரம்பிக்கும்போது ஓடிச்சென்று அம்முத்தின் மேல் சாணியையோ அல்லது களி மண்ணையோ போட்டு மூடிவிட்டு வந்துவிட வேண்டுமாம். இருட்டினுள் தனது முத்தினைத் தேடிக் களைத்துவிட்ட பாம்பு காலையில் இறந்துவிடுமாம். பின்னர் தாராளமாகச் சென்று சாணிக்குள் புதைந்துப்போன முத்தினை எடுத்து வரமுடியுமாம். யாராவது இப்படிக் கேளவிப்பட்டிருக்கிறீர்களா? என்ன மாதிரி அளந்துவிட்டிருக்கிறார்கள்??
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
அச்சொட்டாக இக்கதையினை கேட்டிருக்கிறேன். கரவெட்டி - நாவலர் மடத்தில் தோட்டக்காணியில் அமைந்திருந்த குடிசைக்குள் படுத்திருந்த ஒரு குடும்பத்தில் தகப்பன், பிள்ளைகள் இருவர் என்று மூவரை பாம்பு தீண்டி இறந்துபோனார்கள். 80 களின் நடுப்பகுதியிலாக இருக்கலாம். இரு பாம்புகள் தோட்டத்தில் பிணைந்தபோது தகப்பனார் மண்வெட்டியால் அவற்றை அடித்ததாகவும், அப்போது ஒன்று இறந்துவிட , மற்றையது தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறினார்கள். உயிர் தப்பிய பாம்பே அன்றிரவு வீட்டினுள் நுழைந்து அக்குடும்பத்தில் தகப்பானாரைக் கொல்லவந்ததாகவும் ஆனால் அவர் கடிபட்டதும் பாம்பைத் தூக்கி எறிந்துவிட அப்பாம்பு அருகில் படுத்திருந்த இருபிள்ளைகளையும் கடித்துவீடுச் சென்றதாகவும் கூறினார்கள். மரண ஊர்வலம் நடக்கும்போது அருகில் இருந்த வீதியில் நின்ற பனையில் அப்பாம்பு ஏறியிருந்ததை சிலர் கண்டதாக கூறினார்கள். மயானத்தில் அந்த மூவரும் எரிக்கப்பட்ட பின்னரே அப்பாம்பு இறங்கிச் சென்றதை இன்னும் சிலர் கண்டதாகவும் கூறினார்கள். அந்தவயதில் எவர் என்ன சொன்னாலும் உண்மையென்று நம்பியதால் (இப்போதும் சிலவேளைகளில் அப்படித்தான்) சிலகாலம் பாம்பென்றால், அதுவும் கொம்பேறி மூக்கன் என்றால் கெட்ட பயம். என்ன மாதிரி எங்களைப் பேய்க்காட்டி வைச்சிருக்கிறாங்கள் எண்டு இப்பத்தான் தெரியுது!
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
இந்தக் கொம்பேறி மூக்கன் பாம்பு குறித்து என்னிடம் ஒரு கதை இருக்கிறது. இது புனைந்தது இல்லை, மாறாக நேரில்க் கண்டது. 1986 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். பாடசாலை நாட்களில் ஒன்று. பிற்பகல் பாடசாலை முடிந்து நானும் தம்பியும் சைக்கிளில் டெம்பிள் ரோட் ஊடாக கோண்டாவில் நோக்கி வந்துகொண்டிருந்தோம். பக்கத்தில் நண்பன் விஜயரூபனும் வந்துகொண்டிருந்தான். நல்லூர்க் கோயிலைத் தாண்டி ஆடியபாதம் வீதிச் சந்திக்குச் செல்வதற்கு சில மீட்டர்கள் தூரத்தில், வீதியின் இடதுபக்கத்தில் வீதியை அடைத்து மூடி பெருஞ்சனத்திரள். எங்களால் தொடர்ந்து பயணிக்கமுடியாததால் சைக்கிள்களை விட்டு இறங்கிக்கொண்டோம். வீதியோரத்தில் இருந்த பாரிய காணியொன்றிற்குள் இருந்தது மண்ணால் கட்டப்பட்ட, ஓலையினால் வேயப்பட்ட கூறையைக் கொண்ட வீடு. நடுத்தரவர்க்கத்தை எட்டியிருக்க வாய்ப்பில்லாத குடும்பம் ஒன்று வாழும் வீடுபோலக் காட்சியளித்த அவ்வீட்டின் முற்றத்தில் இரு சாரைகள் பிணைந்தபடி முற்றமெங்கும் அரைந்து கொண்டிருந்தன. சுற்றி நின்ற அனைவரும் வேடிக்கை பார்க்க, அவ்வீட்டின் பெண்மணியோ கையில் ஒரு சாக்குடன் பாம்புகளுக்குக் கிட்டச் செல்வதும் பின்னர் பாம்புகள் (பிணைந்தபடி) அவர் அருகில் வரும்போது விலகி ஓடுவதுமாக இருந்தார். எங்களுக்கோ அவர் அப்படி கையில் சாக்குடன் நிற்பதன் காரணம் தெரியவில்லை. அருகில் நின்ற பெரியவர்களிடம் என்ன நடக்கிறது என்று பேச்சுக் கொடுத்தோம். அப்போதுதான் சாக்கின் மகிமை தெரிந்தது. பிணைந்த பாம்புகளில் ஒன்று கொம்பேறி மூக்கனாம். விசமுள்ளது என்று கூறினார்கள். அதனை அடிப்பதற்கு அப்பகுதியில் நின்றவர்கள் முயன்றபோது, அவ்வீட்டின் பெண்மணி அவர்களை மறித்துவிட்டாராம். ஏனென்று கேட்டால், பாம்புகள் பிணையும்போது அவற்றின் மீது துணியினையோ அல்லது சாக்கினையோ போர்த்து மூடி, பின்னர் பாம்புகள் கலைந்து சென்றவுடன் அச்சாக்கினை கவனமாக எடுத்துக்கொண்டுபோய் வீட்டின் அலுமாரிக்குள் வைத்துவிட்டால் அவ்வீட்டில் செல்வம் கொழிக்குமாம் என்று அப்பெண்மணி கூறியிருக்கிறார். இதனாலேயே பாம்புகளை அடிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். சிறிதுநேரத்தில் சுற்றியிருந்த ஆட்களின் சத்தத்தினால் பாம்புகள் கலைந்து ஒவ்வொரு பக்கமாகச் சென்றுவிட, அப்பெண்மணியும் அச்சாக்கினை கவனமாக மடித்து வீட்டிற்குள் எடுத்து சென்றார். ஆனால் என்ன, அதற்குப் பிறகும் அதே வீதியினால் குறைந்தது 2 வருடங்களாவது சென்று வந்திருப்பேன், வீட்டின் நிலையோ மாறாமல் அப்படியே இருந்தது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதுகூட என்னைக் கண்டிக்கவேண்டும் என்று சிலர் இங்கே வெளிப்படையாக கருத்துப் பகிர்ந்ததனால் ஏற்பட்டது. ஏனென்றால், என்னை யாராவது கண்டித்துவிடுவார்கள் என்கிற காரணத்திற்காகப் பயந்துபோய் எழுதாமல் நான் இருக்கப்போவதில்லை. எனது கருத்து தெனாவட்டாக வந்திருப்பின் அதற்காக வருந்துகிறேன், எனது நோக்கம் அதுவல்ல. நல்லது. ஆனால் என்னை நீங்கள் உங்களின் இதற்கு முந்தைய பதிவில் மேற்கோள் காட்டி எழுதியிருக்க வேண்டாமோ என்று தோன்றுகின்றது. நான் அன்று எழுதியது எவரினதும் அனுதாபத்தினை எதிர்பார்த்து அல்ல. மாறாக புலம்பெயர்ந்த நாட்டிலும் சிங்களவர்கள் தமது இனக்குரோதத்தினை தமது பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கிறார்கள் என்று குறிப்பிடவே. ஆனாலும் என்ன, அன்றைய நாட்களில் ரஸ்ஸிய உக்ரேன் திரியில் ஏற்பட்ட பிணக்கினால் நான் இதனைக் கற்பனையில் புனைந்து எழுதியதாக உங்களின் "நண்பர்" கப்டன் கூறியதும் நினைவிலிருக்கிறது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
எனக்கு அவர் ஒரு முஸ்லீம் என்று தெரியாது. அண்மையில் இக்களத்தில் அவரை ஒருவர் நானா என்று விளித்தபோது அதனை உண்மையென்று நம்பியே எழுதினேன். தமிழ்த் தேசியத்திற்கெதிராக (இப்படிக் கூறுவதால் புலிகளை எதிர்க்கிறார் என்றல்ல அர்த்தம், ஏனெறால் ஒருகாலத்தில் நீங்களும் புலிகளை முற்றாக எதிர்த்தவர், ஆனால் தேசியத்தை நேசிப்பவர்) தந்தை செல்வா காலத்து தமிழரசுக் கட்சிமுதற்கொண்டு புலிகள் வரை கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வந்தவர். சிறிமா பண்டாரநாயக்காவைப் புகழ்ந்து எழுதியவர். ஆகவேதான், இவரை ஒருவர் "நானா" என்று அழைத்தபோது, இவரது தமிழ்த்தேசியத்திற்கெதிரான விஷக் கருத்துக்களைப் அடிப்படையாக வைத்து, இவர் ஒரு முஸ்லீமாக இருக்கலாம் என்று முடிவிற்கு வந்தேன். உண்மையில் இவர் எவ்வினத்தவர் என்பது எனக்குத் தெரியாது. இவரிடமிருந்து நான் விலகியே இருந்தபோதிலும் பலமுறை எனது திரிகளில் மிகவும் தீவிரமாக என்னை விமர்சித்து, பொய்களையும் புரட்டுக்களையும் எழுதுவதாக கருத்தெழுதி வருபவர் (இன்றுகூட அவரது கருத்தொன்றில் என்னைப்பற்றி, பெயர் குறிப்பிடாது எழுதப்பட்டிருக்கிறது), தமிழர்கள், தமிழ்த் தேசிய நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும், இலங்கையராக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்றும் எனக்கான பதிவுகளில் எழுதிவருபவர். பலமுறை இவருக்கான பதில்களை நான் தவிர்த்து வந்தபோதிலும், தவிர்க்கமுடியாமல் சிலவேளைகளில், இவரை மேற்கோள் காட்டாது எனது பதிலைக் கருத்தாக பதிந்திருக்கிறேன். என்னைத் தனிப்பட்ட ரீதியில் இந்த மனிதர் தாக்கி எழுதுவது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சிலவேளை புலிகளுக்கு ஆதரவானவன் என்று முத்திரை குத்தப்பட்ட என்மேல் வைக்கப்படும் எந்த விமர்சனமும் உங்களைப்பொறுத்தவரை கடந்துசெல்லப்படவேண்டியவையாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த மனிதருக்கும் எனக்கும் இடையில் நீண்டநாள் பகையொன்று இருக்கிறது. அதனை நீங்கள் பார்க்கத்தவறிவிட்டு, நான் ஒரு இனவாதியாக , மதவாதியாக கருத்துக்களில் விசம் கட்டி எழுதுவதாக விமர்சிக்கிறீர்கள். உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே முன்னர் இக்களத்தில் நடைபெற்ற மிகவும் காரசாரமான கருத்து மோதல்களை நாம் அவதானித்திருக்கிறேன். அவர் இப்போது இங்கு இல்லையென்றாலும்கூட உங்களின் கருத்துக்களில் இருந்த கசப்புணர்வு வெளிப்படையானது. தனிப்பட்ட ரீதியில் நீங்கள் தாக்கப்படும்போது பதிலில் கோபம் இருப்பது இயல்பானது. நான் இப்போது செய்வதும் அதுவே. நான் விலகிச் செல்ல எத்தனிக்கும் ஒவ்வொரு தறுவாயிலும் விசமத்தனமாகப் பிந்தொடர்ந்து, எனது கருத்துக்களை விமர்சித்து, தனிப்பட்ட ரீதியில் தாக்கும்போது தவிர்க்கமுடியாமல் நானும் கடுமையாக எழுதவேண்டியிருக்கிறது. ஒன்றில் அவர் என்னைத் தொடர்ந்து, தனிப்பட்ட ரீதியில் தாக்குவதை நிறுத்தவேண்டும், அல்லது நான் அவருக்குத் தனிப்பட்ட ரீதியில் பதிலளிக்க வேண்டி ஏற்படும். அவர் கேட்பது கேள்வியல்ல, மாறாக மற்றையவர்களின் கருத்துக்களுக்கெதிரான விசமத்தனமான விமர்சனங்களே என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் தேசியத்திற்கும், புலிகளுக்கும் எதிராக எழுதுவதால், அவரது விமர்சனங்கள் உங்களுக்கு கேள்விகளாகத் தெரிகிறது. குதர்க்கத்தனமான, புலிகளையும், தேசியத்தையும் சீண்டும் விதமான கேலிகளை கைவிட்டு விட்டு, இயல்பாக தனது கேள்விகளை முன்வைக்கட்டும், நான் பதிலளிக்கிறேன். நான் புலிகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பவன் அல்ல. முன்னர் ஒருகாலத்தில் அப்படி இருந்தவந்தான், ஆனால் தெளிவு இருக்கிறது இப்போது. தவறைத் தவறென்று ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கிறது. ஆகவே சீண்டாமல் முன்வைக்கப்படும் எக்கருத்திற்கும் பதிலளிக்க காத்திருக்கிறேன். எனது உளவியலை, எனக்கும் இந்த மனிதருக்கும் இடையே இத்தளத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் பின்னணியிலிருந்து பார்த்தால் புரிந்துகொள்வது உங்களுக்குக் கடிணமாக இருக்காது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இனிமேல் முழுமையாக வாசித்து பதில் எழுதுங்கள், அது போதும். விருப்புக்குறி எதுவும் வேண்டாம். யார் தமிழர்கள்? இஸ்லாமியர்கள் தமிழர்களா? அவர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்துகிறோம் என்று உங்களிடம் சொன்னார்களா? வடக்குக் கிழக்கு இணைந்த பிராந்தியமே தமிழர் தாயகம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகளும் தமக்கு இருக்கும் பிரச்சினைகளும் ஒன்றாதலால், நாம் சேர்ந்தே போராடி எமக்கான உரிமைகளைப் பெறுவோம் என்று சொன்னார்களா? அவர்களே தம்மை தனியான இனக் குழுமம், தமக்கான தனியான மாகாணம், தனியான அலகு, தனியான பிரதேச சபை என்று கோரி வரும்போது, நீங்கள் மட்டும் எவ்வாறு அவர்களையும் சேர்த்தே விடுதலை சாத்தியம் என்று கூறுகிறீர்கள்? உங்களது இருப்பிற்கான பாதுகாப்பு என்பது அவர்களின் பங்களிப்பினாலேயே இன்று சாத்தியமற்றதாக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுடன் சேர்ந்தே உங்களின் விடுதலை சாத்தியம் என்று நீங்கள் கருதுவது எங்கணம்? அண்மைய காலங்களில் இஸ்லாமிய அரசியல்வாதிகளோ அல்லது அவர்களின் சமூகத் தலைவர்களோ தமிழ் மக்கள் சார்பாக, அவர்களின் உரிமைகள் தொடர்பாக, அவர்களின் தாயகம் தொடர்பாகச் சாதகமாகப் பேசிய ஒரு சந்தர்ப்பத்தை கூறுங்கள் பார்க்கலாம். அல்லது தமிழருடன் சேர்ந்தே தமக்கான விடுதலை சாத்தியம் என்று அவர்களின் எவராவது கூறிய ஒரு சந்தர்ப்பத்தைக் கூறுங்கள்? அவர்கள் தம்மை தனியினமாகக் கோரி, தமக்கான தாயகத்தை அடையாளப்படுத்தும்போது அதனை ஏற்கமறுக்கும் ஒரு உத்தியாகவே "அவர்களுடன் சேர்ந்தே எமக்கான விடுதலையும்" என்று நீங்கள் கூறுவதாக எனக்குத் தெரிகிறது. அதாவது தமிழர்கள் வாழும் தாயகத்தில் முஸ்லீம்களும் வாழலாம், ஆனால் அவர்கள் தமக்கான தனியான தாயகத்தைக் கொண்டிருக்க முடியாது என்பதே உங்களின் கருத்தில் இருந்து நான் எடுத்துக்கொள்வது. முஸ்லீம்கள் தனியான இனமா? ஆம், தனியான இனம். அவர்கள் தமிழர்களா? இல்லை, தமிழ் பேசுபவர்கள், சிங்களமும் தாராளமாகப் பேசக் கூடியவர்கள். அவர்களுக்கென்று தனியான தாயகம் வேண்டுமா? ஆம் வேண்டும். உங்களுக்கான விடுதலையினை நீங்கள் வென்றெடுங்கள். அவர்களுக்கானதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஏனென்றால் உங்களின் பிரச்சினைகளும், அவர்களின் பிரச்சினைகளும் ஒன்றல்ல, ஒரே பேரினவாதத்தினால் பாதிக்கப்பட்ட இரு சிறுபான்மையினங்கள் என்பதைத் தவிர.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்களது பிரச்சினைதான் என்ன? எதற்காக என்னை விமர்சித்து வருகிறீர்கள்? நான் எனக்காக ஒரு எதிரியை உருவாக்கவில்லை. நான் எழுதும் எக்கருத்திற்கும் குதர்க்கமாக பதில் எழுதும் ஒருவருக்கான பதிலே நான் எழுதியது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழர்களும், இஸ்லாமியர்களும் ஒரே மரத்தில் இருந்து வந்தவர்கள் என்கிற கருத்துக்கள் அர்த்தமற்றுப் போய் பல தசாப்த்தங்கள் ஆகிவிட்டன. சிங்கள பேரினவாதிகளின் சூழ்ச்சிகளுக்குட்பட்டு விடுதலைக்காகப் போராடிய தமிழினத்தை பேரினவாதத்தோடு சேர்ந்து அழிக்கத் துணைபோன காலத்திலேயே இந்த "ஒருமரம், இருகிளை" எனும் சப்பைக்கட்டல்கள் அழிந்துபோயின. தனி அடையாளம், தனிப் பிராந்தியம், தனியலகு, தனிக் கலாசாரம் என்று இஸ்லாமியர்கள் தமிழர்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்கள். 90 களில் கிழக்கில் இடம்பெற்ற தமிழருக்கெதிரான படுகொலைகளில் முஸ்லீம்களின் பங்களிப்பிற்கு அப்பால், போரின் பின்னரான காலத்தில் வாழைச்சேனையில் ஹிஸ்புள்ளா தலைமையில் இடம்பெற்றுவரும் தமிழ் நில அபகரிப்பு, மன்னாரில் இடம்பெற்ற பதிருதீன் தலைமையிலான நில அபகரிப்பு, கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் என்பன சொல்லும் செய்தி முஸ்லீமும் தனியான ஒரு இனம், அது தனது நிலப்பரப்பை தமிழர்களை வஞ்சித்தாவது பெற்றுக்கொள்ளும் என்பதுதான். இன்று இலங்கையில் இருப்பது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்று மூன்று இனங்கள் மட்டுமே. அப்படியில்லாமல் முஸ்லீம்களும் தமிழர்கள்தான் என்று இங்கு யாராவது இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களை நீங்களே பேய்க்காட்டுகிறீர்கள் என்று அர்த்தம். என்னைக் கண்டிப்பதாக ஆளாளுக்கு போட்டிபோட்டு வருபவர்களுக்கு ஒரு செய்தி. நீங்கள் யார் என்னைக் கண்டிப்பதற்கு? நான் சரியென்று நினைப்பதை நான் எழுதுவதற்கு உங்களின் அனுமதியோ அல்லது அனுசரணையோ எனக்குத் தேவையில்லை. இத்திரியில் இன்னொருவருக்கு எழுதிய கருத்தில் தானாகப் புகுந்து, எனது கருத்தை கேலியாக விமர்சித்ததற்காகவே அந்த நபருக்கு நான் பதில் எழுதினேன். இத்தளத்தில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து, தமிழ்த் தேசியத்தை (புலிகளை மட்டுமல்ல, தந்தை செல்வாவிலிருந்து, தமிழரசுக் கட்சியிலிருந்த அனைவரையும் "யாழ்ப்பாணிகள்" என்று விளித்து) கடுமையாக விமர்சித்துவரும் வேற்றினத்தைச் சேர்ந்த ஒருவருக்கான எனது பதிலே அது. யாழ் இணையம் தமிழர்களின் விடயங்களை அலசுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்டது. எமது இனத்துடன் சம்பந்தப்படாத, ஆனால் எமதினத்தின் இருப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகின்ற இன்னொரு இனத்திலிருந்து ஒருவர் எனது கருத்திற்கு கேலியாக பதில் எழுதும்போது வருகின்ற இயல்பான கோபமே எனது பதிலில் இருப்பது, ஆனால் அதிலிருப்பது உண்மையான தகவல்களே என்பது உங்களுக்குத் தெரியும், ஆனாலும் நீங்கள் போடும் கனவான் வேடங்களை அது பாதிக்கும் என்பதால் என்னை வைகிறீர்கள். நீங்கள் என்னைக் கண்டித்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நான் எழுதுவதை மாற்றப்போவதில்லை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தமிழர்களுக்கெதிரான சிங்களப் பேரினவாதத்தின் இனவழிப்பிற்குத் துணைபோய், தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து அழித்து, தமிழர்கள் அவலங்கள் ஊடாக ஏதும் அவர்களுக்குக் கிடைத்தாலும் அதில்ப் பங்குகேட்டு, கோடரிக் காம்பாகச் செயற்பட்ட இழிவான இனக்குழுமத்தினைச் சேர்ந்த தமிழின விரோதிக்குப் பதில் எழுதி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
லக்ஷ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டதை தவறென்றோ அல்லது சரியென்றோ வாதிடுபவர்களுக்கு இக்குறிப்பு உதவலாம். The Real Reason Behind Kadirgamar’s Assassination (2005) Core Reason: He destroyed the LTTE internationally Kadirgamar did what no other Sri Lankan official had ever done successfully: This fatally damaged LTTE survival. What exactly did Kadirgamar do? 1) He globalised the terrorist designation campaign Before Kadirgamar: LTTE: Had offices worldwide Raised funds openly Lobbied Western governments Operated propaganda networks After Kadirgamar: LTTE was banned as a terrorist group in: USA UK EU Canada India Australia This meant: Bank accounts frozen Front organisations shut Fundraising criminalised International travel restricted Intelligence cooperation against LTTE ➡️ This crippled LTTE’s financial and diplomatic lifelines. 2) He personally lobbied Western governments Kadirgamar: Had elite access in Washington, London, Brussels, Delhi Used: Legal arguments Counterterror frameworks Post-9/11 geopolitics He reframed LTTE as: This was catastrophic for LTTE legitimacy. 3) He blocked LTTE’s diplomatic recovery attempts Even during the 2002 ceasefire, when LTTE tried to re-legitimise itself: Kadirgamar: Blocked international recognition Prevented formal diplomatic acceptance Ensured bans stayed in place ➡️ This meant: LTTE could not convert battlefield gains into political legitimacy. Why LTTE decided to kill him By 2004–2005: LTTE leadership concluded: So: They authorised strategic assassination Chose: A sniper operation Low-collateral, high-precision Political assassination, not terror bombing ➡️ This shows cold strategic calculation, not revenge. Secondary Factors (NOT the main reason) 1) He was Tamil, yet opposed LTTE This was symbolically devastating for LTTE: A Tamil: Defeating Tamil separatism internationally Framing LTTE as terrorists This undermined their moral narrative. But this was symbolic, not the main motive. 2) His attacks on LTTE human rights abuses He: Publicised: Child soldiers Political assassinations Ethnic cleansing of Muslims But again — these were reinforcing factors, not the central cause.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சம்பந்தர் பேசியதை நீங்கள் உண்மையென்று நம்புவதை என்னால் விளங்கிக்கொள்ள முடியும், அது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. மற்றையவர்களை எள்ளி நகையாடுவதால் மட்டுமே நீங்கள் கூறுவது உண்மையென்று ஆகிவிடப்போவதுமில்லை. உங்களின் மனோநிலையில் வலம்வருபவர்களுக்கு உங்கள் கருத்துக்கள் உவப்பானதாக இருக்கும், சமூக ஊடகவெளியில் இப்படிப் பலர் வலம் வருகிறார்கள். புலியெதிர்ப்பினால் உந்தப்பட்டு எழுதுபவர்கள் தமது கருத்துக்களை உண்மையென்று நம்புவதற்கு இருக்கும் உரிமை போன்று புலிகளின் போராட்டத் ஆதரிப்பவர்கள் தமது கருத்துக்களை எழுதுவதற்கும் உரிமை இருக்கிறது. எள்ளி நகையாடுங்கள். இங்கு எல்லோரையும்போன்று நீங்களும் சாதாராண கருத்தாளர் மட்டுமே, என்னைப்பொறுத்தவரை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சம்பந்தர் ஆயுதப் போராட்டத்திற்கு எதிரானவர். புலிகள் மட்டுமல்ல, எவர் ஆயுதமேந்திப் போராடினாலும் அவர் எதிர்த்திருப்பார். ஜனநாயக வழிகள் மூலம் தமிழ் மக்களின் விடுதலையினை (ஆரம்பத்தில் இப்படித்தான் அவரும் நம்பினார்) பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு, ஈற்றில் பிரிக்கப்படாத, ஒற்றையாட்சி இலங்கைக்குள் சிங்களவர்கள் விரும்பி வழங்குகின்ற, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, கெளரவமான தீர்வு என்று இறங்கினார். புலிகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மக்கள் கோருவதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்கான தலைமையினை புலிகள் மட்டுமே கொண்டிருக்கவேண்டும் எனும் தலைவரின் கொள்கையினை சம்பந்தன் ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்ற அரசியல் மூலம் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் (இன்றுவரை முயல்வது போல) என்று அவர் இறுதிவரை நம்பினார், வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடுத்த செல்வநாயகம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழருக்கான கெளரவமான தீர்வையே விரும்பினார் என்று தனது சொந்தக் கருத்தை மக்கள் ஆணைக்குள் திணித்தார், மிதவாதிகள் என்று அழைத்துக்கொண்டு புலிகள் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தீவிரமாக எதிர்த்து விமர்சித்தவர்களுடன் சம்பந்தன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். இதனாலேயே புலிகளின் கொலைப்பட்டியலில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது. எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போலவே அவருக்கு அரசாங்கத்தால் கடுமையான இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டதுடன், தமிழர் பகுதிகளுக்குச் செல்வதை சம்பந்தர் முழுமையாகத் தவிர்த்தார். ஆனாலும் அவர் கொல்லப்படவில்லை. அவரது ஜனநாயக அரசியலை தமது நோக்கத்திற்காக புலிகள் பயன்படுத்த நினைத்தார்கள். சம்பந்தரின் ஜனநாயக முகம் புலிகளுக்குத் தேவைப்பட்டது, அதனால் அவரைக் கொல்லாமல்த் தவிர்த்தார்கள். ஆகவேதான் புலிகள் அழிக்கப்பட்டு, குறிப்பாக தலைவர் வீரமரணம் அடைந்தது சம்பந்தருக்கு ஆறுதலைக் கொடுத்தது. அதன் விளைவாகவே புலிகளின் ஆயுதப் போராட்டம் மீதும், தலைவர் மீதும் தனக்குள்ளே கணன்றுகொண்டிருந்த கோபத்தை 2009 இன் பின்னர் அவ்வப்போது வெளிக்காட்டி வந்தார். புலிகளிடம் இருந்து தான் அந்நியப்பட்டவர் என்பதை முடிந்த அனைத்து வழியிலும் அவர் நிரூபித்தார். அதன் ஒரு வடிவமே, "என்னையே கொல்லப்பார்த்தார்கள், அப்படியிருக்க நான் அவர்களின் வாலாக இருப்பது எங்கணம்?" எனும் சம்பந்தனின் அங்கலாய்ப்பு.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதுவும் நீங்கள் நம்பக்கூடியதுதான். ஆனால், புலிகளுக்கெதிரான உங்களது நிலைப்பாட்டில் இருந்து சற்று வெளியே வந்து, (அதாவது 2009 இற்கு முன்னர் நீங்கள் இருந்த நிலைப்பாடு) இதனைச் சிந்தித்தீர்கள் என்றால், புலிகள் அழிக்கப்பட்டது இதற்காகவல்ல என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். சர்வதேச நலன்கள் மற்று இந்துசமுத்திரக் கடற்பாதையினைப் பாதுகாத்தல் (அமெரிக்கா), பிராந்திய நலன்கள் மற்றும் ரஜீவின் கொலைக்கான பழிவாங்கல் (இந்தியா), போரில் உதவி பின்னர் இலங்கையில் நிரந்தரமாகக் கால்பதித்தல் (சீனா), தனது ஆயுத வளங்களைப் பரிசோதித்துப் பார்க்கும் களம் (இஸ்ரேல், இலங்கையே ஆசியாவில் முதன்முதலாக இஸ்ரேலினால் வழங்கப்பட்ட ஆளில்லா வேவு விமானங்களைப் பாவிக்கத் தொடங்கியது) என்று இவை அனைத்துமே புலிகளை அழித்தது. சொந்த மனிதவுரிமை மீறல்கள் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாத அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும், இஸ்ரேலும் சேர்ந்து புலிகளின் மனிதவுரிமை மீற்லகளுக்காகவே அழித்தார்கள் என்பதை நீங்கள் நம்பலாம், நான் ஆச்சரியப்படவில்லை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சம்பந்தன் கூறுவதை அவரே நம்புகின்றாரோ தெரியவில்லை. ஆனால் நீங்கள் அதனை உண்மை என்று நம்பக்கூடும். செஞ்சோலை மாணவிகள் மீதான குண்டுவீச்சையும், நவாலி புனித பீட்டர்ஸ் தேவாலயக் குண்டுவீச்சையும் ஆரம்பத்தில் தமது விமானப்படை செய்யவில்லையென்று மறுதலித்துவிட்டு, பின்னர் அப்படிச் செய்திருந்தாலும் கூட கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்று கூறி நியாயப்படுத்தியவர் கதிர்காமர். அவர் நிச்சயம் 2009 இனக்கொலையில் தமிழர்கள் அழிக்கப்பட்டது குறித்து கிஞ்சித்தும் கவலைப்பட்டிருக்கப்போவதில்லை (உயிரோடு இருந்திருந்தால்). அன்றிருந்த மகிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷெ, ரோகித்த போகொல்லாகம, தயான் ஜயத்திலக்க, மகிந்த சமரசிங்க, ரஜீவ் விஜேசிங்க, பாலித்த கோகோண்ண, தமாரா குணநாயகம், சரத் பொன்சேக்கா மற்றும் சவேந்திர சில்வா ஆகியோரைக் காட்டிலும் மிகத்தீவிரமாக இனக்கொலையினை, "மக்களைப் புலிகளிடம் இருந்து மீட்கும் மனிதாபிமானப் போர்" என்றே நியாயப்படுத்தியிருப்பார். ஆனால், அப்படியில்லை, அவர் தமிழ் மக்களின் அவலங்களைக் கண்டு, "கிலேசம்" அடைந்திருப்பார் என்று சம்பந்தர் சொல்வதை நீங்கள் நம்பலாம், இதில் நாம் ஆச்சரியப்படுதற்கு ஒன்றுமில்லை. ஆனால் என்ன, தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த காலம் முழுதும் இனக்கொலையினை நியாயப்படுத்தி வந்த ஒருவர், (உயிருடன் இருந்திருப்பின்) எதற்காக 2009 இனக்கொலையினை ஏற்றுக்கொண்டு, தமிழர்கள் பட்ட அவலங்களுக்காகக் கண்கலங்கியிருப்பார் என்பதை சம்பந்தனும் (அவரால் இப்போது முடியாது) நீங்களும்தான் தெளிவுபடுத்த வேண்டும். As Sri Lanka’s Foreign Minister, Lakshman Kadirgamar explicitly denied the Sri Lankan Air Force’s responsibility for the Navaly St. Peter’s Church bombing (1995) and strongly attacked the Red Cross for blaming the air force. Regarding Sencholai (2006), the Sri Lankan government — including its diplomatic leadership — initially denied that the air force had bombed a civilian girls’ school and claimed it was an LTTE training camp, which reflected the official line promoted internationally. Below is the documented detail. 1) Navaly St. Peter’s Church bombing (1995) This case is very clearly documented. After the Sri Lankan Air Force bombed St. Peter’s Church in Navaly, killing over 140 Tamil civilians, Kadirgamar: Denied that the Sri Lankan armed forces carried out the attack Publicly rebuked the ICRC (Red Cross) for blaming the Air Force Claimed the Red Cross relied on “so-called eyewitness accounts” This is recorded in: Wikipedia – Lakshman Kadirgamar biography Amnesty International references ICRC records Tamil Guardian investigations Quote summary (paraphrased): Kadirgamar denied armed forces responsibility and lashed out at the Red Cross for reporting the bombing. ➡️ Conclusion: Yes — Kadirgamar directly denied Sri Lankan Air Force responsibility for the Navaly church massacre. 2) Sencholai School bombing (2006) After the Sri Lankan Air Force bombed Sencholai children’s home, killing 53 schoolgirls, the Sri Lankan government: Initially denied bombing civilians Claimed it struck an LTTE training base Said those killed were “terrorists” This was the official diplomatic line promoted internationally, including through the foreign ministry. While Kadirgamar himself was assassinated in 2005, just before Sencholai (2006), the foreign ministry he built and the diplomatic framework he shaped continued the same pattern of denial. ➡️ Conclusion: Yes — the Sri Lankan state denied Air Force responsibility for Sencholai, portraying it as an LTTE camp bombing, despite overwhelming civilian evidence. Final Summary Incident Did Kadirgamar / Govt deny Air Force role? Navaly Church (1995) YES – directly denied, rebuked Red Cross Sencholai School (2006) YES – government denied, called it LTTE camp Big Picture Pattern These denials were part of a systematic wartime diplomatic strategy: Deny → Deflect → Blame LTTE → Discredit witnesses → Attack NGOs Maintain international cover for air operations Protect Sri Lanka from war crimes scrutiny