Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. மன்னார்ப் படுகொலைகளே அநுராதபுரத் தாக்குதலுக்கு வழிவகுத்தன‌ : மேரி ஆன் வீவர் எனும் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் 1985 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் மன்னாரில் இலங்கை இராணுவம் ஆடிய கோரத் தாண்டவங்களைச் செய்தியாக்கியிருந்தார். அவரது செய்தியின் தமிழ் வடிவம். அமெரிக்கா வியட்னாம் வீது நேபாம் குண்டுகளை வீசி அப்பகுதிகளை அழித்தபின் கிடந்த அகோரங்களை ஒத்த காட்சிகளை ஒடுங்கி நீண்ட தீவான மன்னாரில் நான் கண்டேன். கண்ணுக்கெட்டிய பகுதியெங்கும் எரிந்து, கருகிக் கிடந்த பனைமரங்களும், தென்னை மரங்களும் அகோரங்களின் அளவைச் சொல்லி நின்றன. மேலும் பல மரங்களை வெட்டிச் சாய்த்திருந்தார்கள். இலங்கையரசாங்கத்தைக் கேட்டால், பனைமரங்களை இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் அழித்துத் துப்பரவு செய்கிறோம் என்று காரணம் சொல்கிறது. ஆனால், மன்னாரில் வாழும் தமிழ் மக்களைக் கேட்டாலோ, இப்பகுதியில் சகட்டுமேனிக்குப் படுகொலைகளிலும், படுபாதகச் செயல்களிலும் ஈடுபட்டு வரும் அரச இராணுவம், புலிகளின் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள இப்பகுதியெங்கிலும் மரங்களை எரித்தும், வெட்டி வீழ்த்தியும் சுடுகாடாக்கி வருகிறது. வனாந்தரமாக்கிவிடப்பட்டிருக்கும் எமது நிலங்களிலிருந்து மண்ணை வாரி இழுத்துக்கொண்டுபோய் மண் அரண்களை அமைத்துப் பதுங்கிக் கொள்கிறது என்று கூறுகிறார்கள். இந்தியாவிலிருந்து வெறும் 22 மைல்கள் தொலைவிலேயே மன்னார் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில்த்தான் ஆறு பிரிவினைவாதப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாம்கள் அமைந்திருக்கின்றன. இந்த தீவில், குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்கில் நம்பிக்கை என்பது மருந்திற்கும் கிடைப்பதில்லை. பிரிவினை கோரிப் போராடும் பையன்களுக்கும், ஒழுக்கமற்ற இலங்கை இராணுவத்திற்குமிடையிலான மோதல்கள் முழு அளவிலான சிவில் யுத்தமாக மாறியிருக்கின்றது. தமிழ் மக்கள் இங்கு தொடர்ச்சியான அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். மார்கழி 4 முதல் தை 27 வரையான இரு மாத காலத்தில் மட்டும் குறைந்தது 160 தமிழ் மக்களை இராணுவம் கொலை செய்திருக்கிறது. ஏறக்குறைய நூறு வீதம் சிங்களவர்களைக் கொண்ட இராணுவம் பிரதிநிதித்துவம் செய்யும் நாட்டின் 75 வீதமான சிங்கள மக்களுக்கும், இந்து மற்றும் கிறீஸ்த்தவ மதங்களைப் பின்பற்றும் 20 வீதம் சனத்தொகையினைக் கொண்ட தமிழ் மக்களுக்கும் இடையிலான இனரீதியான பிளவென்பது மீளமுடியாத ஆளத்திற்குச் சென்றுவிட்டது போலத் தெரிகிறது. மன்னார் நோக்கிச் செல்லும் வீதியின் ஓரத்தில் காணப்பட்ட எல்லா வீடுகளும், கடைகளும் தீயில் கருகிப் போய்க் கிடக்கின்றன. பாழடைந்துபோன நிலையில் ஒரு வைத்தியசாலையும் கிடக்கிறது. வீதிகளில் அதீத பதற்றத்துடனும், அகம்பாவத்துடனும் நிற்கும் இராணுவத்தினர் வீதியில் வரும் பஸ்களையும், ஏனைய வாகனங்களையும் மறித்து போராளிகளுக்கான ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சல்லடை போடுகிறார்கள். மார்கழி 4 ஆம் திகதி இராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலையின் ஆதாரங்கள் எம்மைச் சுற்றி எங்கும் கிடக்கின்றன. அதிகாலை வேளையில் மூன்று இராணுவ வாகனங்கள் கண்ணிவெடியில் அகப்பட்டதைத் தொடர்ந்து இப்படுகொலைகள் ஆரம்பித்தன. இத்தாக்குதலில் ஒரு படைவீரர் கொல்லப்பட்ட இன்னும் மூன்று படைவீரர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து சுமார் 30 பேர் அடங்கிய இராணுவ அணியொன்று மன்னார் பகுதியெங்கும் படுகொலைகளில் இறங்கியது. ஆறு மணித்தியாலங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட அட்டூழியங்களில் முதலாவதாக அவர்கள் மன்னார் மத்திய வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தினார்கள். வீதியால் வந்துகொண்டிருந்த வாகனங்களை மறித்து உள்ளிருந்தோரை வெளியே இழுத்துச் சுட்டுக் கொன்றார்கள். தபால் நிலையத்தில் பணியாற்றிய 15 ஊழியர்களை வரிசையில் நிற்கவைத்துத் துப்பாக்கியால் சுட்டு, அவர்களில் எண்மரைக் கொலை செய்தார்கள். வயல்களில் வேலைசெய்துகொண்டிருந்த மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அருகிலிருந்த கன்னியாஸ்த்திரிகள் மடத்தினுள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், அவர்களிடமிருந்த கைக்கடிகாரங்கள், தங்கச் சிலுவைகள், சங்கிலிகள் என்பவற்றை அறுத்துச் சென்றார்கள். அன்று மட்டுமே நடத்தப்பட்ட படுகொலைகளில் 150 தமிழர்களை இராணுவம் கொன்றது. இன்னும் 20 தமிழர்களை தமது முகாம்களுக்கு இழுத்துச் சென்றது. இதுவரை அவர்கள் குறித்து எந்தச் செய்தியும் வெளியே தெரியவில்லை.
  2. பிற்சேர்க்கை: அநுராதபுரம் பெளத்த வழிபாட்டுத் தலம் மீதான புலிகளின் தாக்குதல் பெருமளவு அவப்பெயரினை எமக்கு ஏற்படுத்தியது. இலங்கையரசுகள் ஆண்டாண்டுகளாக சர்வதேசத்தில் எம்மைப் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்யவும், எமக்கெதிரான இனவழிப்பு யுத்தத்திற்கு பலம் சேர்க்கவும் இதனைப் பெருமளவில் பாவித்து வந்தன. ஆனால், இத்தாக்குதலுக்கான மூல காரணம் என்னவென்பதை சர்வதேசமோ அல்லது விமர்சகர்களோ ஒருபோதும் உணர்ந்துகொள்ளவில்லை. எம்மில்ப் பலரும் இதுகுறித்த விமர்சன‌ங்களைக் கொண்டிருக்கிறோம். ஆகவே. இத்தாக்குதலுக்கான முகாந்திரங்களை விளக்க இதனைச் சந்தர்ப்பமாகப் பாவிக்கிறேன். கீழ்வரும் சம்பவங்கள் அநுராதபுரத் தாக்குதலுக்கு முன்னர் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றவை. அதனைப் படித்தவாறே அநுராதபுரத் தாக்குதல் குறித்துப் பார்க்கலாம்.
  3. இதை சரியென்று என்னால் உணரக் கஷ்ட்டமாக இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால், அமெரிக்கா இலங்கையில் தலையீடு செய்தது ஜெயவர்த்தனவின் முதலாவது பதவிக்காலத்தின்போது. 80 களின் ஆரம்பத்தில். இரணவில வொயிஸ் ஒப் அமெரிக்கா, திருகோணமலைத் துறைமுகம் மீதான அதிகாரம் என்று இரு பிரதான நோக்கங்களுக்காகவே இலங்கையில் அமெரிக்கா தலையிட்டது. இதற்கு முக்கியமான காரணம் அப்போதிருந்த இந்திய அமெரிக்க பூசல். ஆகவே, இந்தியாவை வேவு பார்க்கவே இலங்கையில் அமெரிக்கா கால்பதித்தது. அடுத்ததாக, இந்தியாவினால் பயிற்றப்பட்ட தமிழ்ப் போராளி அமைப்புக்களை அடக்குவதற்கு அமெரிக்கா தானே முன்வந்து உதவியது. சோசலிசம் பேசிய சில போராளி அமைப்புக்களின் செயற்பாடும், அலன் தம்பதிகளைக் கடத்திச் சென்று இந்தியாவைப் பின்புலமாக வைத்து பத்மநாபா பேரம் பேசியதும் எம்மைச் சோசலிசவாதிகள் என்று அமெரிக்கா நம்பக் காரணமாகியது. உண்மையில் அமெரிக்கா போராளிகளை அணுகியது என்பதை நான் அறியேன், இப்படிக் கூறுவதால் அது நடக்கவில்லை என்று அர்த்தமில்லை, நான் அறியவில்லை, அவ்வளவுதான். மற்றும்படி, அமெரிக்க மாநிலம் ஒன்று எமக்கான அங்கீகாரத்தைத் தந்தது என்பதை மறுக்கவில்லை. ஆனால், அதனால் கிடைத்த பலனும் எதுவுமில்லை. அமெரிக்கா தனது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆட்சியதிகாரத்தில் எவர் இருக்கின்றாரோ அல்லது எவரது கைகளில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைக்கொண்டே தனது நலன்களை அடைய முனையும். அதற்காக அந்த ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவுதான் ஜனநாயக விரோதிகளாக இருந்தாலும் அமெரிக்கா உதவும். இது உண்மைதான். நாம் செய்த சில விடயங்கள் இதன் அடிப்படியிலேயே அமைந்திருந்தன. இல்லை. அதிகாரமும், ஆட்சியும் எம்மிடம் இருந்தால், நாம் அமெரிக்காவின் நண்பர்கள்.
  4. ஜெயாரின் கடிதத்தை புறக்கணித்த ரஜீவும், வடக்குக் கிழக்கில் போராளிகள் தீவிரப்படுத்திய தாக்குதல்களும் ஆனால், ரஜீவுக்கு ஜெயார் அனுப்பிய இக்கடிதம், பங்குனி 1 ஆம் திகதி அவர் அனுப்பிய கடிதத்திற்கு ஒத்த பயனைக் கொடுக்கவில்லை. பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள், தமிழ்நாட்டிற்கு வந்து குவிந்த அகதிகள், பேச்சுவார்த்தைக்கான அட்டவணை குறித்து ரோ மற்றும் இந்திய உயர்ஸ்த்தானிகருடனான பேச்சுக்களின்போது ஜெயவர்த்தனவும், லலித்தும் காட்டிய அசமந்தம் ஆகியவை ஜெயார் மீது ரஜீவ் காந்தி வைத்திருந்த மதிப்பினை மழுங்கடிக்கத் தொடங்கியிருந்தன. இராணுவ முஸ்தீபுகளைக் கைவிட்டு விட்டு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீவொன்றினை எட்டுவதற்கான அழுத்தத்தினை ஜெயார் மீது கொடுக்க ரோ முயன்றுகொண்டிருந்தது. அதன்படி, வைகாசி 10 ஆம் திகதி, ரோவின் கட்டளையில் கொக்காவிலில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைத் தொலைக்காட்சிச் சேவையின் பரிவர்த்தனைக் கோபுரத்தின் மீதும், அருகிலிருந்த ராணுவ முகாம் மீதும் டெலோ அமைப்புத் தாக்குதல் நடத்தியது. நான்கு நாட்கள் கழித்து புலிகள் நடத்திய தாக்குதலில் வழிபாட்டிற்குச் சென்றவர்கள் உட்பட 148 சிங்களவர்கள் அவர்களின் புனித நகரான அநுராதபுரத்தில் கொல்லப்பட்டனர். கொக்காவில் தாக்குதலில் ஒரு டசின் இராணுவத்தினரை டெலோ போராளிகள் கொன்றார்கள். ஆனால், அவர்கள் தரப்பிலும் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். இராணுவத்தினரின் கனரக ஆயுதப் பாவனையிலேயே டெலோவின் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இந்தியா தமக்கு வழங்கியிருக்கும் ஆயுதங்களின் ஊடாக விடுதலையினை வென்றெடுப்பது சாத்தியம் இல்லை என்பதை போராளி அமைப்புக்கள் உணரத் தலைப்பட்டன. ஆனால், புலிகள் இயக்கம் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்தது. ஆரம்பத்திலிருந்தே, தமக்கு வழங்கும் ஆயுதங்களின் மூலம் தமது இராணுவ வல்லமையினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இந்தியா முனையும் என்பதை பிரபாகரன் நன்கு உணர்ந்தே இருந்தார். ஆகவேதான் அமெரிக்காவிடமிருந்தும், இங்கிலாந்திடமிருந்தும் இலங்கையரசு தருவித்த ஆயுதங்களுக்கு நிகரான அல்லது அவற்றை விடவும் திறமையான ஆயுதங்களைத் தனது அமைப்பிற்காக அவர் தருவித்துக்கொண்டார். தலைவருடன் மன்னார்த் தளபதி விக்டர் மறுநாள் மூன்று வெவ்வேறு இடங்களில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்தினர். வைகாசி 11 ஆம் திகதி விக்டர் தலைமையில் புலிகள் மன்னார் பொலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தி அதனை நிர்மூலம் செய்தனர். பல பொலீஸார் கொல்லப்பட்டதுடன் பெருமளவு ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் தானியங்கித் துப்பாக்கிகளும், உப இயந்திரத் துப்பாக்கிகளும் அடங்கும். வைகாசி 12 ஆம் திகதி, சந்தோசம் தலைமையிலான புலிகளின் அணியொன்று திருகோணமலையில் நடத்திய தாக்குதலில் ஜீப்பொன்றில் பயணம் செய்த நான்கு பொலீஸார் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குள்ளான பொலீஸாருக்கு உதவிக்கு வந்த விசேட அதிரடிப்படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் மேலும் பத்து விசேட பொலீஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். அதேநாள் யாழ்ப்பாண மாவட்ட‌த்தில் புலிகளால் நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் மேலும் 13 இராணுவத்தினல் பலியானார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கில் அன்று நிலவிய சூழ்நிலையினை இந்தியா டுடே பின்வருமாறு பதிவுசெய்திருந்தது, "இலையுதிர்கால இலைகள் போல இலங்கை நடுங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையின் வடக்குக் கிழக்கில் நீளத்திற்கும், அகலத்திற்கும் இலங்கை இராணுவத்தை போராளிகள் தொடர்ச்சியாகத் துன்புறுத்திக்கொண்டிருக்கிறார்கள். கொழும்பை மண்டியிட வைக்க மிகவும் திட்டமிட்டு அவர்கள் செயற்படுவதுபோலத் தெரிகிறது".
  5. அதனால்த்தானே பேச்சுவார்த்தைக்குப் புலிகள் வந்தார்கள். ஆனால், நாம் கேட்ட எதனையும் சர்வதேசம் கொடுக்க விருபவில்லை, இடைக்கால நிர்வாக அலகைக் கூட. அதேவேளை அமெரிக்காவே முன்னின்று சர்வதேச வலைப்பின்னலை பின்னியது. இலங்கை அரச படைகளைப் பலப்படுத்த முன்னின்று உதவியது. புலிகளை சர்வதேசமெங்கும் தடைசெய்து செயலிழக்கப் பண்ணியது. உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் புலிகள் பங்கேற்பதையே தடை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் புலிகளைத் தடை செய்தது. இவை யாவுமே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதுதானே? சமபல நிலையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் இறுதியில், புலிகள் தரமிறக்கப்பட்டு, வேண்டப்படாதவர்களாக, தீண்டப்படாதவர்களாக மாற்றப்படும்வரை நடந்தது. மீதி நீங்களும் நானும் அறிந்தது. எமக்கான உண்மையான தீர்வில் சர்வதேசத்திற்கு அக்கறையிருந்தால் இன்று அதனைத் தரலாம், ஆனால் செய்ய மாட்டார்கள். அது எப்போதுமே அவர்களின் நோக்கமாக இருந்ததில்லை.
  6. ரஜீவ் காந்திக்கு ஜெயார் அனுப்பிய கடிதம், காங்கிரஸ் தலைவருக்கு, காங்கிரஸ் கட்சியின் நூறாவது நிறைவுநாளை நீங்கள் கொண்டாடும் இத்தருணத்தில், இக்கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களையும், ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். 1940 ஆம் ஆண்டு பீகாரில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் ராம்கத் மாநாட்டில் நானும் ஒரு இளைஞனாகக் கலந்துகொண்டிருந்தேன். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட இறுதி நிகழ்வு அது. இந்தியக் காங்கிரஸ் வழியில் நாமும் எமது சுதந்திரத்தை அடைந்துகொள்ள இலங்கை தேசிய காங்கிரஸ் எனும் அமைப்பின் சார்பில் நாங்கள் அன்று கலந்துகொண்டிருந்தோம். இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அனுபவங்களைக் கற்றுத் தெளிந்துகொள்ளுமாறு எங்களை அன்றைய தலைவர் மெளலானா ஆசாத், மகாத்மா காந்தி மற்றும் பண்டித் நேரு ஆகியோர் அழைத்திருந்தனர். இருவருடங்கள் கழித்து 1942 ஆம் ஆண்டு மும்பாயில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய உயர்குழுக் கூட்டத்திலும் நான் கலந்துகொண்டிருந்தேன். அக்கூட்டத்திலேயே மகாத்மா காந்தி, "இந்தியாவை விட்டு வெளியேறு" எனும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். அப்போராட்டம் இந்தியா சுதந்திரம் அடையும்வரையில் தொடர்ந்தும் நடந்து வந்தது. அப்போராட்டத்தினை ஒத்த போராட்டம் ஒன்றினூடாகவே எமது நாட்டின் சுதந்திரத்தையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்று உறுதிபூண்டோம். உங்களின் மிகப்பெரும் தலைவர் மகாத்மா காந்தி புத்தரின் போதனையான அகிம்சையில் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தவர். உங்களது நாட்டின் அயலில் வாழும் நாம் அதே புத்தரின் போதனைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டு எமது வாழ்க்கையினை முன்னெடுத்து வருகிறோம். புத்தரின் போதனைகள் ஊடாக உங்கள் நாடு அடைந்திருக்கும் மகத்தான வெற்றிகளை நாம் எப்போதும் பெருமையுடன் நோக்குகிறோம். ஆகவேதான், பண்டித் நேருவின் பேரனான உங்களுக்கு இந்நேரத்தில் நான் அனுப்பும் வாழ்த்து சரியான சந்தர்ப்பத்தில் அனுப்பப்பட்டதாக அமைகிறது. உங்களின் தலைமையின் கீழ், இந்தியாவும், அதனைச் சுற்றியுள்ள மக்களும் என்றுமே நலமுடன் வாழ்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் எனது கடிதத்தினை நிறைவு செய்கிறேன். ஜே.ஆர்.ஜெயவர்தன‌ ஜனாதிபதி, இலங்கை சோசலிசக் குடியரசு
  7. இல்லை வலவன், அப்படி நினைத்து எழுதவில்லை. உங்களின் தேசியத்தின் மீதான பற்று நான் அறியாதது அல்ல. பரிசில் இளைஞர்கள் நடந்துகொண்டவிதம் உணர்வு சம்பந்தப்பட்டது. இயல்பாகவே வரும் கோபத்தினால் உந்தப்பட்டது. அவர்களைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று நீங்கள் விழித்திருக்கத் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து. ஏனென்றால், நீங்கள், நான், நாம் எல்லாமே புலிகளின் ஆதரவாளர்கள் தான். ஏற்றுக்கொள்கிறேன், முழுமையாக.
  8. எமது விடுதலை எம்மால் மட்டுமே சாத்தியமாகும். அதனை 2009 வரை அடைய முடியாமல் அழித்தவர்களும், இன்றுவரை எம்மால் எந்த முயற்சியையும் எடுக்கவிடாமால் தடுப்பவர்களும் அவர்களே.
  9. இப்படியொரு தனிப்பட்ட குழுவினர் இருக்கிறார்களா? அப்படியானால் நீங்கள் யார்? உங்களை இந்த "புலிகளின் ஆதரவாளர்கள்" குழுவினருடன் நீங்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை போலத் தெரிகிறது. தனது இனத்தின்மீதும், விடுதலைக்கான போராட்டத்தின்மீதும், தாயின்மீதும் ஒருத்தி வசைபாடும்போது இயல்பாக எழும் கோபம் "புலிகளின் ஆதரவாளனாக" இருந்தால் மட்டுமே தான் வரவேண்டுமா?
  10. இராணுவத்தின் பழிவாங்கற்படுகொலைகளும், போராளிகளின் எதிர்வினையும் தம்மீதான தாக்குதல்களுக்கு இராணுவத்தினரிடமிருந்த ஒரே பதில் பொதுமக்கள மீது தாக்குதல் நடத்துவதுதான். இது மேலும் மேலும் தமிழ்மக்களை இந்தியாவிற்குத் தப்பிப் போக உந்தியது. பொதுமக்கள் மீதான தாக்குதல்களும், அதனால் ஏற்படுத்தப்பட்ட அகதிகள் பிரச்சினையும் தமிழ்நாட்டில் கொந்தளிப்பான நிலைமையினை ஏற்படுத்தியது. இவ்விரு பிரச்சினைகளும் வைகாசி 3 ஆம் திகதி பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவாதிக்கப்பட்டன. கீழ்ச்சபையில் பேசிய பிரதமர் ரஜீவ் பின்வருமாறு பதிலளித்தார். "இலங்கைத் தமிழர்கள் குறித்து நான் கவலைப்படுகிறோம். இது வெறுமனே தென்னிந்திய மக்களின் கவலை மட்டுமல்ல, மொத்த இந்தியாவினதும் கவலையாகும். இங்கே அகதிகளாகத் தஞ்சம் கோரி வந்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தமது நாட்டிற்குப் பாதுகாப்பாகத் திரும்பி, கெளரவத்துடனும், சுய மரியாதையுடனும், சுதந்திரத்துடனும், தமது அன்றாடச் செயற்பாடுகளில் ஈடுபடும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். இதுகுறித்த எமது நிலைப்பாட்டினை பலமுறை நாம் எடுத்துக் கூறியிருக்கிறோம்" ராஜ்ய சபாவில் பேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் குர்ஷிட் அலாம் கான், "இலங்கையில் நடைபெற்று வருவது மனித நேயத்திற்கு முரணானது, குரூரமானது, வருந்தத்தக்கது" என்று கடுமையான தொனியில் பேசினார். மேலும், தமிழ்ப் பிரதேசங்களில் "இராணுவத்தினரை அகற்றிவிட்டு சாதாரண பொலீஸாரைக் கடமையில் ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் முயல வேண்டும்" என்றும் கூறினார். அலாம் கானின் ராஜ்ய சபாப் பேச்சு ஜெயவர்த்தனவைச் சினங்கொள்ள வைத்திருந்தது. ஆகவே, தனது அரச ஊடகங்களைக் கொண்டு அலாம் மீது கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைக்கத் தொடங்கினார். ஆனால், ரூபவாகினி, லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் இயக்குநர்களைச் சந்தித்த ஜெயார், அவர்களது விமர்சனங்களின்போது ரஜீவ் காந்தியைத் தாக்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பணித்தார். அனுபவ முதிர்ச்சி அற்றவரான ரஜீவுடன் நட்புப் பாராட்டுவதன் மூலம் தமது திட்டங்களை இலகுவாக நடைமுறைப்படுத்திவிடலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்கள் எண்ணினார்கள். ஆனாலும், பார்த்தசாரதியின் முயற்சியினால் உருவாக்கப்பட்ட சவுத் புளொக்கின் தமிழர் சார்பு நிலைப்பட்டிற்கெதிரான விமர்சனங்களைத் தொடர்ந்தும் கைக்கொள்ள ஜெயார் விரும்பினார். ஐக்கியதேசியக் கட்சியின் திட்டமிடல்ப் பிரிவு இந்தியாவுக்கெதிரான பிரச்சாரத்தில் முழுமூச்சுடன் ஈடுபடத் தொடங்கியது. தமிழ் மக்கள் மீதான இராணுவத்தின் தொடர்ச்சியான பழிவாங்கற் தாக்குதல்களும், இந்தியாவுக்கெதிராக அரச ஊடகங்களினால் முடுக்கிவிடப்பட்டிருந்த கடுமையான பிரச்சாரங்களும் போராளி அமைப்புக்களின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதுடன், அநுராதபுரம் போன்ற இடங்களில் தாக்குதல்களை முன்னெடுக்கவும் உந்தித் தள்ளியிருந்தது என்று கூறலாம். வைகாசி 4 ஆம் திகதி (1985), ஊர்காவற்றுரையில் அமைந்திருந்த கடற்படை முகாம் மீதும், குருநகர் இராணுவ முகாம் மீதும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புத் தாக்குதல் நடத்தியிருந்தது.கடற்படை முகாம் மீதான தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் திருகோணமலை மாவட்டத் தளபதி மோட்டர் உந்துகணையினை வடிவமைத்திருந்தார். அவர் ஏவிய மோட்டார்க் குண்டுகள் கடற்படை முகாமினுள் வீழ்ந்து வெடித்தபோது முகாமினுள் இருந்த கடற்படையினரிடத்-தில் அச்சமும், பதற்றமும் பற்றிக்கொண்டது. மோட்டார்த்தாக்குதலையடுத்து கடற்படையினர் முகாமின் பின்புறத்திற்குச் சென்று நிலையெடுத்துக் கொண்டனர். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கவசவாகனமொன்றை ஓட்டியவாறே ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தாக்குதற்பிரிவு முகாமினுள் நுழைந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சின்னவன் மோட்டார் செலுத்தியினுள் நுழைத்துக்கொண்டிருந்த மோட்டார்க் குண்டு உள்ளேயே வெடித்ததனால், அவர் அவ்விடத்திலேயே உடல் சிதறி மரணமானார். இதனைக் கண்ணுற்ற கடற்படையினர், முன்னேறி வந்து தாக்குதலை ஆரம்பித்தனர். கடற்படையினரின் தாக்குதலில் 22 ஈ.பி.ஆர்.எல்.எப் போராளிகள் கொல்லப்பட, மீதமானோர் தாக்குதலைக் கைவிட்டு விட்டுப் பின்வாங்கிச் சென்றனர். தாக்குதல் அணியின் முக்கிய தளபதிகளான வேலு மற்றும் கணேஷ் ஆகியோரும் கொல்லப்பட்ட போராளிகளில் அடங்குவர். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பிற்கு இத்தாக்குதல் முயற்சி பெரும் பின்னடை-வாக மாறியது. கடற்படை முகாம் மீதான தாக்குதலின்போது குருநகர் இராணுவ முகாமிலிருந்து உதவிகள் கிடைப்பதைத் தடுக்கும் நோக்குடனேயே குருநகர் முகாம் மீதான திசைதிருப்பும் தாக்குதலை ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இன்னொரு அணி மேற்கொண்டது. கிட்டுவும் போராளிகளும் யாழ்ப்பாணம் 1987 வைகாசி 7 ஆம் திகதி வல்வெட்டித்துறை இராணுவ முகாமைத் தாக்கிய புலிகள் ஐந்து இராணுவத்தினரைக் கொன்றனர். இரு நாட்கள் கழித்து, வைகாசி 9 ஆம் திகதி இராணுவத்தினர் மீது புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் ஒரு மேஜரும் இன்னும் ஐந்து இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். தம்மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்க பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். கரையோரக் கிராமங்களைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், வீடு வீடாகச் சென்று இளைஞர்கள் அனைவரையும் இழுத்துச் சென்றனர். கைகள் பின்னால் கட்டப்பட்ட இளைஞர்களில் பல பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். பன்னிரு இளைஞர்களை பொதுக்கிணறு ஒன்றின் முன்னால் வரிசையில் நிற்கவைத்த இராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். வீடுகளில் இருந்த இளைஞர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். ஆனால், அன்று நடந்த படுகொலைகளில் மிகவும் கொடூரமான கொலைகள் ஊரணி எனும் வல்வெட்டித்துறையின் சிற்றூரில் நடைபெற்றது. சுமார் 25 இளைஞர்களை இழுத்துச் சென்ற இராணுவத்தினர் அவர்கள் அனைவரையும் சனசமூக நிலைய அறையொன்றினுள் அடைத்து அவ்வறையினைக் குண்டுவைத்துத் தகர்த்தபோது உள்ளிருந்த அனைவரும் கொல்லப்பட்டனர். அன்று மட்டும் கொல்ல-ப்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 75. பொதுமக்கள் மீதான படுகொலைகள் பிரபாகரனையும், வடக்குக் கிழக்கு வாழ் தமிழ் மக்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் மிகுந்த கோபத்திற்குள் ஆழ்த்தியிருந்தது. இராணுவத் தீர்வில் சென்றுகொண்டிருக்கும் ஜெயாரை சமாதான வழிகளுக்குத் திரும்பவைத்து, பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான அழுத்தத்தினைக் கொடுக்கவேண்டியதன் அவசியத்தை இப்படுகொலைகள் குறித்து நிற்பதாக ரஜீவின் அரசு கூறியது. தனது இராணுவம் தமிழர்களைப் படுகொலை செய்து கொண்டு வந்தபோது, தனது குள்ளநரித்தனமான அரசியலைத் தொடர்ச்சியாகச் செய்துவந்த ஜெயார், புது தில்லியின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டினைப் பலவீனமாக்கியும், அதேவேளை ரஜீவுடன் நட்புப் பாராட்டியும் நடந்துவந்தார். இந்தியக் கொங்கிரஸ் கட்சியின் நூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்கட்சியின் தலைவராகிய ரஜீவ் காந்திக்கு கடிதம் ஒன்றினை ஜெயார் எழுதினார்.
  11. மேற்குலகு என்பவர்கள் யார்? அவர்கள் இதுவரை எங்களுக்காகச் செய்தது என்ன? 1. 80 களில் இருந்து எம்மைச் சோசலிசவாதிகள் என்று அழைத்து எமது போராட்டத்தை அழிக்கத் துணைபோனவர்கள். 2. எமக்கெதிரான இனக்கொலைக்கு 80 களின் ஆரம்பத்திலிருந்தே ஆயுதமும், பயிற்சியும், ஆலோசனையும், கூலிப்படைகளும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள். 3. உரிமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாம் மேற்கொண்ட உயிர்ப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று அழைத்து உலகெங்கும் எம்மை முடக்கியவர்கள். 4. 2009 வரை இனக்கொலைக்கான சகல உதவிகளையும் செய்து, தமிழர்களின் போராட்டம் முற்றான அழிவையும், தமிழ் மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்படுவதையும் உறுதிப்படுத்தி, தமிழர்களின் இறையாண்மையினை தமது பிராந்திய நலன்களுக்காகவும், சர்வதேச நலன்களுக்காகவும் விருப்பத்துடனேயே எப்பம் விட்டவர்கள். 5. இனக்கொலை முடிவிற்கு வந்தபின்னரும் தமது நலன்கள் உறுதிப்படுத்தப்படுவதற்காக இனக்கொலையினையும் போர்க்குற்றங்களையும் விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்வதைத் தடுத்தும் அல்லது அவற்றை மிகவும் பலவீனமாக்கி, ஈற்றில் நீர்த்துப் போகச் செய்து போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றியதன் மூலம் தமது நலன்களை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவர்கள். 6. இன்றுவரை எமக்கு நடக்கும் அநீதிகளும், எம்மீதான அடக்குமுறையும், எம்மீதான திட்டமிட்ட இனழிப்பும் நடப்பது நன்கு தெரிந்தும், அதனை அமோதித்து வருபவர்கள். 7. எம்மைப்போன்றே விடுதலைக்காகப் போரிடும் இனங்கள் மீதான அடக்குமுறைகளை, படுகொலைகளை ஆதரித்து, உதவிசெய்து, சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி வருபவர்கள். ஆக, இவர்களிடமிருந்துதான் நாம் நற்சான்றிதழ் பெறக் காத்திருக்கிறோம். நற்சான்றிதழ் கிடைத்தவுடன், எமக்கான விடிவும், சுதந்திரமும், எமது தாயகத்தின் விடுதலையும் எமக்குத் தங்கத் தட்டில் கொண்டுவந்து தரப்படும். பிணந்திண்ணிப் பேய்கள். நீங்கள் எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை அப்படியே எழுதுங்கள், மேற்குலகிடம் இறைஞ்சும் ஜனநாயக மேதாவிகளின் பிதற்றல்களை ஓரத்தில் போட்டுவிட்டு எழுதுங்கள். எமக்கான விடுதலையும், மீட்சியும் எமது கரங்களில் இருந்தே வரவேண்டும். மேற்குலகு ஒன்றும் இறைவர்கள் அல்ல, மிக மோசமான பிணந்திண்ணிக் கழுகுகள். மேற்குலக அக்கிரமப் பிசாசுகளின் விருப்பங்களும், எண்ணங்களும், நோக்கங்களுமே அவர்களின் பணத்தினால் நடத்தப்படும் ஊடகங்களில் வெளிவருகின்றன. சர்வதேச ஊடகங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டே தமது படுகொலைகளை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆகவே, இவர்களின் ஊடகங்களில் நாம் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டால், நாம் அவர்களுக்கும், அவர்களின் நலன்களுக்கும் எதிரானவர்கள் என்று பொருள். ஆகவே, தொடர்ந்து நடவுங்கள். மேற்குலக ஜனநாயகப் பிணந்திண்ணிகளின் அலோசனைகளை அப்படியே தனது பத்திரிகைக் கட்டுரையில் வரையும், எமது வாழ்தலுக்கான போராட்டம்பற்றிய எதுவித தெளிவும் அற்ற ஒருவன் எழுதும் கருத்துக்களை நாம் பொருட்படுத்த‌த் தேவையில்லை.
  12. வணக்கம் நொச்சி, இங்கு சேரமான் என்ற பெயரில் பேசுவதும், துவாரகா உயிருடன் இருக்கிறார் என்று பேசும் சேரமானும் ஒன்றா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், இந்தக் காணொளியில் இவர் குறிப்பிடும் விநாயகம் என்கிற புலிகளின் முன்னாள் புலநாய்வுப் போராளி இராணுவப் புலநாய்வுத்துறையினால் வழிநடத்தப்படுவதாக இவர் கூறுகிறார். ஆனால், விநாயகம் என்பவர் இன்றும் தேசியத்தின் பால் நிற்பதாகவே வேறு செய்திகள் கூறுகின்றன. விநாயகம் மீது சேறடிக்கவே சேரமான் இப்பெண்ணையும் விநாயகத்துடன் இணைத்துப் பேசுவதாக எனக்குப் படுகிறது. அதாவது விநாயகமும் இராணுவ உளவாளி, இவளும் இராணுவ உளவாளி எனும் கருத்தினூடாக. இப்பெண் இராணுவத்துடன் பணிபுரிபவளாக இருக்கலாம், ஆனால் சேரமான் சந்தில சிந்துபாட விநாயகத்தையும் இதற்குள் இழுத்து விட்டிருக்கிறார்.
  13. அண்ணை, நாங்கள் கண்ணியத்தோட நடந்துகொண்டு சாதிச்ச சில விடயங்களைப் பாருங்கோ, 1. 76 வருட கால இரண்டாம் தர குடிமக்கள் என்கிற உன்னத நிலை 2. 76 வருட கால அடக்குமுறையும், அடிமைத்தனமும். 3. தொடர்ச்சியாக அரசாங்கத்தாலும் அதன் கருவிகளாலும் உரிமை கேட்டதற்காக எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட பழிவாங்கற் படுகொலைகள். 4. எமது தாயகத்தின் மீதான தொடர்ச்சியான ஆக்கிரமிப்பும், பெளத்த சிங்கள மயமாக்கலும். 5. பயங்கரவாதிகள் என்கிற நாமம். 6. 2009 இல் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலிகொண்ட திட்டமிட்ட இனவழிப்பு கண்ணியத்தோடு நடந்ததற்கே இந்தளவு சாதனைகள் என்றால், கண்ணியமில்லாமல் நடந்துகொண்டால் என்ன நடக்கும்? எமது அடையாளமும் இல்லாமற் போய்விடுமோ? ஆகவே, சத்தம் போடாமல் நடக்கிறதைப் பாத்துக்கொண்டு பேசாமல் இருங்கோ எண்டு சொல்லுறன், விளங்குதே?
  14. இவளது செயற்பாட்டினை சட்ட ரீதியாக அணுகினால் என்ன? பிரான்ஸில் உள்ளவர்கள் இதை ஏன் முயற்சிக்கக் கூடாது? விசுகு அண்ணை, இதுகுறித்து எவருடனாவது பேசினீர்களா? அல்லது முயற்சிக்க முடியுமா? இவள் இப்படியே தொடர்வது பலரையும் மனதளவில் பாதிக்கப்போகிறது. இங்கே சிலர் விமர்சனத்திற்கும், தூற்றலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரியாது பேசுகிறார்கள் என்றே நினைக்கிறேன். இது விமர்சனம் இல்லை. அப்பட்டமான இனவிரோதக் காழ்ப்புணர்வுடன் கொட்டப்படும் வக்கிரங்கள். இதை ஜனநாயகத்தைப் பேணுவோம், விமர்சனங்களுக்கு இடம்கொடுப்போம், ஆகவே அவளைப் பேச விடுங்கள் என்று எவராவது கருதினால், அவர்கள் அவள் பேசுவதைக் கேட்கவில்லையென்றே பொருள்.
  15. இந்தியாவின் சமாதான முயற்சிகளை தனது இராணுவத்தினரின் நலனுக்காகப் பாவிக்க எண்ணிய ஜெயாரும், தொடர்ச்சியான தாக்குதல்களில் இறங்கிய போராளிகளும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்கள், குறிப்பாக பிரபாகரன் இந்தியாவின் இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தார். ஆகவே, இந்தியாவின் இந்தத் திடீர் மாற்றத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையினைக் கையாள்வது குறித்து ஆராய ஈழத்தேசிய விடுதலை முன்னணி - புலிகள் கூட்டமைப்பு அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபடத் தொடங்கியது. அதுபோன்றே, இந்தியாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்த நினைத்த ஜெயவர்த்தனவும், லலித்தும், இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையூடாக தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தையும், அவர்களின் கோரிக்கையான தனிநாடு அல்லது சுயாட்சி நிறைந்த பிராந்தியம் எனும் கருப்பொருளையும் முற்றாகவே சிதைத்துவிட கங்கணம் கட்டினர். தனது இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு, அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்கிக் கொடுக்க நினைத்தார் ஜெயார். யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் கடமைகளை முற்றிலுமாகக் கைவிட்டிருந்த பொலீஸார் தமது முகாம்களைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தனர். வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் பொலீஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக கவச வாகனத் தொடரணிகளில் ரோந்து புரிந்து வந்தனர். போராளிகள், இந்த ரோந்து தொடரணிகள் மீதும், இராணுவ முகாம்கள் மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் தமது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே வந்தனர். சித்திரை 10 ஆம் திகதி ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்துகொண்ட அதே நாள், புலிகள் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்திருந்தனர். இத்தாக்குதல் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலும், பாதுகாப்புத் துறையினரின் அதிகாரிகள் மட்டத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக தமிழ் மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களுக்கு ஜெயார் உத்தரவிட்டார். இது அன்று நிலவிய சூழ்நிலையினை மோசாமக்கி விட்டிருந்தது.இத்தாக்குதல்கள் போராளிகளை நோக்கி மக்களை மேலும் தள்ளிவிட்டது. பெருமளவு இளைஞர்கள் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்டதுடன், தமிழ் மக்களைக் காக்கும் வீரன் என்கிற நிலைக்குப் பிரபாகரன் மக்கள் மத்தியில் உயர்ந்துகொண்டிருந்தார். தமிழ் மக்களைக் காக்கும் நோக்கில் புலிகளுடன் இணைந்து ஏனைய போராளி அமைப்புக்களும் கண்ணிவெடித் தாக்குதல்கள் மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என்பவற்றில் ஈடுபடலாயினர். இராணுவத்தினரும், பொலீஸாரும் முகாம்களுக்குள் தொடர்ந்தும் முடக்கப்பட்டு வந்ததுடன் அவர்களின் ரோந்து அணிகள் மீது பதுங்கியிருந்து தாக்கும் செயற்பாடுகளும் போராளிகளால் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. சித்திரை 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல எத்தனித்த 27 தமிழ்ப் பொதுமக்களை கடற்படை சுட்டுக் கொன்றிருந்தது. இத்தாக்குதலுக்குப் பழிவாங்க மாத்தையா தலைமையிலான புலிகளின் அணியொன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் ரோந்து சென்ற பொலீஸ் இராணுவ‌ வாகனத் தொடரணி மீது சித்திரை 21 ஆம் திகதி (1985) தாக்குதலொன்றினை மேற்கொண்டது. படகில் கொல்லப்பட்ட அனைவரையும் பயங்கரவாதிகள் என்று அழைத்த லலித் அதுலத் முதலி, கடற்பயணத் தடையினை மீறி எவர் சென்றாலும் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது சரியென்று பாராளுமன்றத்தில் கூறினார். ஒட்டுசுட்டான் கண்ணிவெடித் தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் பலியாகினர். தம்மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதலில் இராணுவ இறங்கியது. புலிகளின் தாக்குதல் நடைபெற்ற பிரதேசத்தைச் சுற்றிவளைத்த இராணுவம், அங்கிருந்த 24 இளைஞர்களை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றது. தம்மால் கொல்லப்பட்ட தமிழர்களை அனைவரையும் புலிகள் என்று அறிவித்த இராணுவம், கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னரான துப்பாக்கிச் சண்டையில் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது. பின்னர், அதேநாள், அப்பிரதேசத்தில் வான் ஒன்றில் பயணித்த 10 தமிழர்களை வீதியில் இறக்கிய இராணுவம், அவர்களையும் வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றது. அங்கு கொல்லப்பட்ட பத்து அப்பாவிகளும் புலிகளின் பட்டியலில் இராணுவத்தினரால் சேர்க்கப்பட்டார்கள். மறுநாளான சித்திரை 22 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பகுதியில் சென்ற இராணுவ தொடரணி மீது மாத்தையா தலைமையிலான புலிகள் அணி நடத்திய தாக்குதலில் 20 இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பலியானார்கள். சித்திரை 25 ஆம் திகதி, என்றுமில்லாதவாறு புளொட் அமைப்பு ஒரு தாக்குதலில் இறங்கியது. சிங்களப் பகுதியான மதவாச்சி பொலீஸ் நிலையம் மீது புளொட் நடத்திய தாக்குதலின் போது 12 ரைபிள்களும், 24 ஒற்றைச் சன்னத் துப்பாக்கிகளும், ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும், துப்பாக்கி ரவைகளும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இத்தாக்குதலில் சிங்களப் பொலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தேசிய புரட்சி குறித்துப் பேசிவந்த புளொட் , ஒரு சிங்களவரைக் கொன்றதற்காக சிங்கள மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது. புலேந்திரனுடன் பிரபாகரன் 1987 ல் அதேநாள், அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படை மீது ஈரோஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆறு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர். மறுநாள், சித்திரை 26 ஆம் திகதி, புலிகளின் திருகோணமலை மாவட்டத் தளபதி சந்தோசம் மாஸ்ட்டரும், புலேந்திரன் அம்மானும் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கட்டைப்பறிச்சான் பகுதியில் இராணுவ ரோந்தணி மீது தாக்குதல் ஒன்றினை நடத்தினர். கண்ணிவெடியில் அகப்பட்ட இராணுவத்தினர் பயணம் செய்த ஜீப் வண்டி சிதறியபோது, ஒரு லெப்டினன்ட் தர அதிகாரியும் ஆறு சிப்பாய்களும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடைபெற்று இருநாட்களுக்குப் பின்னர், சித்திரை 28 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருவேறு கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டன. இவற்றில் முதலாவது தாக்குதலை நடத்திய கிட்டு, ஈழநாடு பத்திரிக்கையிடம் பேசும்போது பிரபாகரனின் வழிநடத்துதலிலேயே அத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தின் கரவெட்டிப் பகுதியில், நவிண்டில் வீதியில் கண்ணிவெடி நிலத்திற்குக் கீழ் புதைக்கப்பட்டிருந்தது. "தொடரணியின் முன்னால் வரும் ஜீப் வண்டியை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்குவதென்றும் தீர்மானித்தோம். ஜீப் தாக்குதலுக்குள்ளானதும், பின்னால் வந்துகொண்டிருந்த துருப்புக் காவியில் பயணிக்கும் இராணுவத்தினர் உடனேயே வெளியில் குதித்து பதில்தாக்குதலுக்கு நிலையெடுப்பார்கள் என்று நான் அனுமானித்தோம். அவர்கள் நிலையெடுக்கக் கூடிய இடங்கள் என்று நாம் கருதிய இடங்களில் எமது போராளிகளை நிலைவைத்திருந்தோம். இராணுவத்தினர் நிலையெடுக்கும்போது அவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்குமாறு போராளிகளுக்குப் பணித்திருந்தோம். நாம் நினைத்தவாறே அனைத்தும் நடந்தது" என்று கிட்டு கூறினார். எட்டு வாகனங்கள் அடங்கிய தொடரணியின் முன்னால் வந்த ஜீப் வண்டி தாக்குதலுக்கு உள்ளானது. அதிலிருந்து எட்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். பின்னால் வந்துகொண்டிருந்த துருப்புக் காவி வாகனங்களில் பயணித்த இராணுவத்தினர் உடனடியாக வாகனங்களை விட்டிறங்கி அயலில் இருந்த தோட்டக் காணிகளில் நிலையெடுத்துத் தாக்கத் தொடங்கினர். ஆனால், அக்காணிகளில் ஏற்கனவே மறைந்திருந்த புலிகளின் தாக்குதல் அணி, இராணுவத்தினரின் பதுங்கு நிலைகளுக்குப் பின்னால் இருந்து இராணுவத்தினர் மீது மீது தனது தாக்குதலை ஆரம்பித்தது. இத்தாக்குதலில் மேலும் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மொத்தமாக 18 இராணுவத்தினர் அன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட, புலிகளின் தாக்குதல் அணி இழப்பின்றி முகாம் திரும்பியது. அதேநாள் மாலை, பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்கருகில் பதுங்கியிருந்த புலிகள், அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து வெளியே வரவிருந்த இராணுவத்தினருக்காகக் காத்திருந்தனர். வெளியே வந்த ஜீப் வண்டி மீது கிர்னேட்டுக்கள் கொண்டும், பெற்றொல்க் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடத்தினர். ஜீப் தீப்பற்றிக்கொள்ள அதில் பயணித்த நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சித்திரை 30 ஆம் திகதி, குருநகர் இராணுவ முகாமிலிருந்து கொழும்புத்துறை நோக்கிப் பயணித்து, பின்னர் அரியாலையூடாக நெடுங்குளம் வீதி வழியே வந்த இராணுவத் தொடரணியுடன் புலிகள் நேரடியான துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். கடுமையான சண்டையில் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட இராணுவத் தொடரணி பின்வாங்கிச் சென்றது.
  16. தாக்கப்பட்ட பின்னர் இன்னும் அதிகமாக இவள் தலைவர் மீதும், போராட்டம் மீதும் சேற்றை அள்ளி வார்க்கிறாள் என்று அறியக் கிடைத்தது. இப்படியானவர்கள் அடங்கப்போவதில்லை. அவள்பாட்டில் விட்டிருக்கலாம். ஒரு நாய்க்குக் கல்லெறிந்து, ஊரிலிருக்கும் நாய்களெல்லாம் குரைக்கத் தொடங்கியிருக்கின்றன. இவள் சிங்களத்தியாக இருக்கலாம். இவள் பேசும் தமிழ் கொச்சையானது. இவளுக்கும் குடு சித்தாத்துக்கும் தொடர்பிருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.