Everything posted by ரஞ்சித்
-
மாகாணசபை முறையை நீக்கவேண்டும் - லங்காலோகய தீர்மானம்
மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கு மேலான எந்த அதிகாரத்தையும் தமிழருக்குத் தரமுடியாது என்று ஜெயார் 1984 இலேயே கூறிவிட்டான். இவற்றிலும் 2 அல்லது 3 மாவட்ட அதிகார சபைகள் மட்டும்தான் தமிழரின் கைகளில் இருக்கும் என்று கூறியிருக்கிறான். இது, சிங்கள குடியேற்றங்கள் ஆரம்பித்த காலப்பகுதியில் நடந்தது. இன்றோ சிங்களக் குடியேற்றங்களின் எண்ணிக்கையும் விஸ்த்தரிப்பும் பன்மடங்காகி வருகிறது. இந்த நிலையில் ஒரேயொரு மாவட்ட சபைதான் தமிழரின் கைகளில் தரப்படும் சென்று சொன்னாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் இது. தாயகத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர் தமிழரும் இணைந்து தமிழரின் பொதுவான கோரிக்கையினை முன்வைக்கவேண்டும். சிங்களவன் விரும்பித் தருவதை ஏற்றுக்கொள்ளலாம் என்றிருந்தால் அவன் எதையுமே தரப்போவதில்லை. ஏனென்றால், தமிழருக்கு எதனையும் கொடுக்க அவனுக்கு விருப்பமில்லை.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ் மக்களை வெளியேறுமாறு கோரிய லலித் அதுலத் முதலி மட்டக்களப்பில், கார்த்திகை 30 ஆம் திகதி, படகு ஒன்றில் இருந்து இறங்க எத்தனித்த ஐந்து ஆயுதம் தரித்த போராளிகள் இராணுவத்திற்கு உளவு பார்ப்பவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு, அப்பகுதியில் பதுங்கியிருந்த இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்படகிலிருந்து 10 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும் 3,000 தோட்டாக்களையும் இராணுவத்தினர் கைப்பற்றினர். இரண்டாவது படகு இராணுவத்தினரின் தாக்குதலுக்கு மத்தியிலும் தப்பிச் சென்று விட்டது. இராஜாங்க அமைச்சரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் செய்தியாளர் மாநாட்டில் பேசும்போது தமிழ் நாட்டிலிருந்து வந்து இலங்கையை ஆக்கிரமிக்க தமிழ்ப் பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகவும், 1985 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி, தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் அன்று தமிழ் ஈழத்திற்கான சுதந்திரப் பிரகடணத்தைச் செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் கூறினார். "அப்படியான நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்தால் நாம் போருக்குச் செல்வோம்" என்று அவர் முழங்கினார். அல்விஸின் கூற்றிற்கு இந்தியா தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்ததுடன், இலங்கையரசு தேவையற்றவிதமாக போர் உளவியலுக்குள் மக்களை இழுத்துச் செல்வதாகவும் கூறியது. தமிழர்கள் மீது கொடூரமான இராணுவ நடவடிக்கை ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இலங்கையரசு இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருக்கிறது என்றும் இந்தியா குற்றஞ்சாட்டியது. இந்தியாவின் குற்றச்சாட்டினை லலித் ஏளனம் செய்தார். "தமிழர்களுடன் போருக்குச் செல்வதன் மூலம் நாம் எதனை அடையப் போகிறோம்?. இந்த அரசாங்கத்திற்கு அறுதிப் பெரும்பான்மையிருக்கிறது. அடுத்துவரும் தேர்தல் 1989 இல் தான் நடக்கவிருக்கிறது" என்று கவனமாகப் பேசியிருந்தாலும்கூட, அவரது இந்தப் பேச்சு இந்தியாவை நோக்கித்தான் என்பது புதிரல்ல.ராஜீவ் காந்தியும் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன், அதற்கான பிரச்சாரமும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் தேர்தல்ப் பிரச்சாரங்களில் இலங்கையில் நடைபெற்றுவரும் இன முரண்பாடே முக்கிய பேசுபொருளாக மாறியிருந்தது. இஸ்ரேலிய ஆலோசகர்களுடன் தான் மிகவும் நுணுக்கமாக வகுத்திருந்த இராணுவ நடவடிக்கைகளுக்கான சூழலினை லலித் ஏற்படுத்தத் தொடங்கியிருந்தார்.போராளிகளை நோக்கி அவர் விடுத்த எச்சரிக்கையில், "இலங்கைப் படைகள் மீது நீங்கள் நடத்திவரும் பைத்தியக்காரத்தனமானதும், விளைவுகளற்றதுமான தாக்குதல்களை உடனே நிறுத்தி சரணடையுங்கள். அப்படிச் சரணடைந்தால் உங்களுக்கு மன்னிப்பளிக்கப்படும்" என்று கூறியிருந்தார். ஆனால், போராளி அமைப்புக்கள் லலித்தின் எச்சரிக்கையினை நிராகரித்தன. லலித்தின் வேண்டுகோளினை தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்து ஒரு கடிதத்தை புலிகள் அவருக்கு அனுப்பியிருந்தனர். தமிழில் எழுதப்பட்டிருந்த அக்கடிதம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டது. சிங்கள ஆங்கில ஊடகங்கள் புலிகளின் கடிதத்தை முற்றாகவே புறக்கணித்திருந்தன. யாழ்ப்பாணப் பத்திரிக்கைகள் அக்கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. அக்கடிதத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் பின்வருமாறு, அன்பான திரு அதுலத் முதலிக்கு, நீங்கள் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக இனவாத யுத்தம் ஒன்றினைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறீர்கள். இந்த யுத்தத்தில் கொடூரமானவனான ஹிட்லரையும் நீங்கள் மிஞ்சி விட்டீர்கள். தமிழ் இனத்தை இரத்தமும் கண்ணீரும் சிந்தவைத்து பெரும் பாவத்தையும், குற்றவுணர்ச்சியையும் உங்கள் தலைகளில் சுமந்துவருகிறீர்கள். நீங்கள் செய்துவரும் கொடூரங்கள் சரித்திரம் காணாதவை. எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று நீங்கள் அழைக்கிறீர்கள். ஆனால், எமது போராட்டம் என்பது அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஆயுத ரீதியிலான எதிர்ப்பு மட்டுமே. உங்களின் அரச பயங்கரவாதத்தின் விளைவான பிள்ளையே நாம் போராடிப் பெறவிருக்கும் தமிழ் ஈழமாகும். அதன் உருவாக்கத்திற்கு நீங்களே பொறுப்பானவர்கள். அதனை இராணுவ அடக்குமுறை மூலம் நீங்கள் தடுத்து நிறுத்திவிட முடியாது. எங்களைப் பயங்கரவாதிகள் என்று அழைப்பதன் மூலமும் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. இராணுவ ரீதியிலான உங்களின் முன்னெடுப்புக்கள் உங்களுக்கு அழிவுகளை மட்டுமே கொண்டுவரப்போகின்றன. எங்களை அடையாளம் காண்பதோ, அழிப்பது உங்களால் இயலாத காரியம். நாங்கள் எங்கும் பரந்திருக்கிறோம்.குறிப்பாகச் சொல்லப்போனால் நாங்களே மக்கள். பலம் பொறுந்திய நாடுகளே மக்கள் எழுச்சிக்கு முன்னால் தோற்றுப்போன வரலாறுகள் எம் முன்னால் இருக்கின்றன. மக்களின் உண்மையான விருப்பினை அழித்து வெற்றிகொண்ட அரசுகள் கிடையாது. எமது இலட்சியமான தமிழ் ஈழத்தை அடைவதில் நாம் உறுதிபூண்டு நிற்கிறோம். எத்தடைகள் வரினும், எவ்வகையான தியாகங்கங்களைச் செய்தாவது எமது இலட்சியத்தை அடைந்தே தீருவோம் என்று நாம் உறுதி பூண்டிருக்கிறோம். உலக மக்களின் மனச்சாட்சியின் முன்னால் நீங்களே உங்கள் குற்றங்களுக்காக குற்றவாளியாக ஆடையாளம் காணப்படுவீர்கள். என்று கூறப்பட்டிருந்தது. புலிகளின் கடிதத்திற்கு காரசாரமான பதிலை லலித் வழங்கினார். தமிழ்நாட்டை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாதிகள் இலங்கையை ஆக்கிரமிக்க எடுத்துவரும் நடவடிக்கையினைத் தடுத்து இலங்கையின் இறையாண்மையினையும், சுதந்திரத்தையும் காக்கவே தான் பாடுபடுவதாக அவர் தெரிவித்தார். உடனடியாக இரண்டு வகை அவசரகால திட்டங்களை அவர் வெளியிட்டார். முதலாவது கடல்ப்பரப்பினைப் போராளிகள் பாவிப்பதனைத் தடை செய்வது. இரண்டாவது புலிகள் கூறிய "நாமே மக்கள்" எனும் பதத்திற்கான எதிர்வினையினை வழங்குவது. கார்த்திகை 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசிய அதுலத் முதலி மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பிரதேசம் மக்கள் செல்ல முடியாத பகுதியென்று அறிவிக்கப்படுவதுடன் இப்பகுதியில் கடற்றொழிலிலோ அல்லது போக்குவரத்திலோ ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைமூலம் நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பிரதேசங்கள் குறித்தும் அறிவித்தார். இப்பிரதேசங்களில் தனியார் வாகனங்களான பஸ்வண்டிகள், மோட்டார் வண்டிகள், மோட்டா சைக்கிள்கள், பாரவூர்திகள், உழவு இயந்திரங்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றில் பயணம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். அரச பேரூந்துக்கள் மட்டுமே இப்பிரதேசத்திற்கு வரமுடியும் என்றும், அவை கூட ஒரு நாளை 2 மணிநேரத்திற்கு மேல் இப்பகுதிகளுக்குள் நிற்கமுடியாதென்றும் கூறினார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ இதுகுறித்து எழுதுகையில் "கொடூரமான அப்பயங்கரவாதிகள் இனி என்ன செய்யவிருக்கிறார்கள்? முச்சக்கர சைக்கிள் வண்டிகளில் பயணம் செய்வார்களோ? கடைசியாக முச்சக்கர சைக்கிள்களும் தடைசெய்யப்படுமோ? பயங்கரவாதிகள் சிலர் சைக்கிள்களைப் பாவித்ததால் சைக்கிள்கள் தடைசெய்யப்படுகின்றவென்றால், சில மக்கள் பாலியலில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காக உடலுறவையும் தடைசெய்துவிடுவார்களோ? என்று கேள்வி எழுப்பியிருந்தது. மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரையான கரையோரப் பிரதேசம் பாராளுமன்றத்தில் தனது உரையினை நிறைவுசெய்கையில் லலித் அதுலத் முதலி யாழ்ப்பாண மக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை விடுத்தார். அதுதான் யாழ்க்குடாநாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள் என்பது. யாழ்ப்பாணத்திற்கு வெளியே உள்ள உறவினர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ விடுமுறையினைக் கழிப்பதற்கு யாழ்ப்பாண மக்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டால் பயங்கரவாதிகளுக்கு உதவுவது யார், எதிர்ப்பவர் யாரென்பதைக் கண்டறிவது இராணுவத்தினருக்கு இலகுவானதாக இருக்கும் அன்று அவர் கூறினார். எனக்கும் அந்த அறிவித்தல் வந்தபோது நான் கடும் அதிர்ச்சியடைந்தேன், இதனை என்னால் நம்பவே முடியவில்லை. மறுநாள் காலை 5:30 மணிக்கு லலித்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட நான் அவரது இந்த அறிவித்தலுக்கெதிராக அவரிடம் முறைப்பாடு செய்தேன். எனது தந்தையார், சகோதரி மற்றும் அவரது குடும்பம், எனது மாமியார், மைத்துனி மற்றும் எனது நெருங்கிய உறவினர்களையெல்லாம் என்ன செய்வது என்று அவரைக் கேட்டேன். தமிழர்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளால் தான் மூழ்கிவிட்டதாகத் தெரிவித்த லலித், பயங்கரவாதிகளைப் புறக்கணிக்க யாழ்ப்பாணத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை மீள்பரிசீலினை செய்கிறது என்று ஒரு செய்தியைப் போடுங்கள்" என்று அவர் என்னிடம் கூறினார். மேலும், இச்செய்தியைத் தன்னுடன் எந்தவிதத்திலும் தொடர்புபட்டதாகக் காட்டவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
- Coastline map.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சாவகச்சேரி தாக்குதல் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1984 ஆம் ஆண்டென்பது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட முக்கியமான திருப்புமுனை என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த அத்தியாயத்தில் இலங்கை அரசால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அக்கிரமங்கள் அவர்களை அரசிடமிருந்து அந்நியப்பட வைத்திருந்தது என்று எழுதியிருந்தேன். தனக்கு எதிரானவர்களை, அவர்கள் தமிழர்களாகவோ அல்லது சிங்களவர்களாகவோ இருந்தாலென்ன, முற்றாக அழித்துவிடுவது எனும் ஜெயாரின் கொள்கையும், எதிர்த்தோரைப் பழிவாங்கும் அவரது இயல்பான குணமும், இஸ்ரேலிய அதிகாரிகளின் ஆலோசனைப்படி தமிழர்களின் பாரம்பரிய வாழிடங்களிலிருந்து அவர்களை அச்சுருத்தி அகற்றிவிட்டு அப்பிரதேசங்களில் இராணுவ ஆதரவுடன் சிங்களக் குடியேற்றங்களை நிறுவியும், தனது படைகள் மீதான தாக்குதலுக்கு தமிழ் மக்கள் மீது பழிவாங்கல்த் தாக்குதல்களைச் சரியென்று நிறுவியும் வந்த லலித் அதுலத் முதலியின் கொடுங்கரமும் தமிழர்களை போராளிகளின் பின்னால், குறிப்பாக புலிகளின் பின்னால் அணிதிரள வைத்திருந்தது. இந்த அத்தியாயத்தில் அதன் அடுத்த கட்டமான பிரதேசங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது முதல் தனிநாட்டிற்கான அடிப்படைக் கட்டுமாணங்களை புலிகள் உருவாக்கியது வரையான விடயங்களைப் பார்க்கலாம். அடுத்துவரும் அத்தியாயங்களில் புலிகள் இராணுவ நிர்வாகக் கட்டமைப்புக்கள் பற்றி பார்க்கலாம். அந்த அத்தியாயத்தில் பிரபாகரன் எனும் மேதையின் செயற்றிறனும் ஏனைய நான்கு போராளி அமைப்புக்களிடமிருந்து புலிகளை அவர் எவ்வாறு விதிவிலக்காக்கி வழிநடத்திச் சென்று ஈற்றில் 1987 ஆம் ஆண்டு ஒற்றை அமைப்பாக, தமிழ் மக்களின் நம்பிக்கையாக புலிகளை எவ்வாறு மாற்றினார் என்பதையும் பார்க்கலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன் அதன்பின்னர் எழுதப்படும் கதை பிரபாகரனினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கதையாகவே அமையும். ஏனைய போராளி அமைப்புக்கள் வினைத்திறன் அற்ற வெற்று ஆமைப்புக்களாகவும் இன்னும் சில சிங்கள அரசாங்கத்தின் கருவிகளாகவும் மாறிப்போனார்கள். தமிழ் மக்கள், ஏறக்குறைய அனைவருமே பிரபாகரன் மீதும் புலிகள் மீதும் தமது முழு நம்பிக்கையினையும், விசுவாசத்தையும் வைத்தார்கள். இன்றும் அதே நிலைதான் தொடர்கிறது. தமிழ் மக்கள் பிரபாகரனின் பின்னாலும், புலிகளின் பின்னாலும் உறுதியாக அணிவகுத்து நிற்கிறார்கள். மேலும் கருணா மற்றும் அவர் போன்றவர்களைப் பயன்படுத்தி அரசாங்கம் பிரபாகரனை பலவீனப்படுத்தி தோற்கடிக்க எடுத்த முயற்சிகள் அவர்களின் நோக்கத்திற்கு எதிராகவே அமைந்தன என்பதையும் என்னால் கூறமுடியும். இவர்களின் முயற்சிகளுக்கு மத்தியிலிருந்து தமிழர்களின் ஒற்றுமையின் அடையாளமாக பிரபாகரன் வெளித்தெரிந்தார். பிரபாகரனைப் பலவீனப்படுத்தித் தோற்கடிக்க அரசாங்கமும் அதன் தமிழ்க் கருவிகளும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தமிழ் மக்களின் உரிமைகளை கொடுக்க மறுக்கும் கைங்கரியங்கள்தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்ட தமிழ் மக்கள் அவர்பின்னால் அணிதிரண்டார்கள். தமது சுய கெளரவமும், மரியாதையும், கண்ணியமும் பிரபாகரனின் இராணுவ வல்லமையிலேயே முற்றாகத் தங்கியிருப்பதை அவர்கள் முற்றாக உணர்ந்தார்கள். இந்திய ரோ வின் அழுத்தத்தினால் ஈரோஸ் அமைப்பினர் ஐப்பசி 22 ஆம் திகதி போரினை கொழும்பிற்குக் கொண்டுவந்திருந்தார்கள். தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் ஜெயாருக்கும் லலித் அதுலத் முதலிக்கும் கடுமையான அதிர்ச்சியைக் கொடுத்திருந்தன. அவர்கள் சிங்களவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். தமிழர்களை அடக்கியாள அவர்கள் அதுவரை வைத்திருந்த "இனக்கலவரம்" எனும் ஆயுதத்தையும் இழந்து நிர்க்கதி நிலைக்கு கீழிறக்கப்பட்டிருந்தார்கள். ஐப்பசி 27 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் செய்த அமெரிக்க செயலாளர் ரிச்சேர்ட் மேர்பியின் மூலம் ஜெயார் தேடிக்கொண்டிருந்த ஆறுதல் அவருக்குக் கிடைத்தது. "இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வென்பது எவ்வளவு அவசியமோ, அதேயளவு அவசியமானது அத்தீர்வு வெளியாரின் தலையீடுகள் இன்றி அமைவது" என்று மேர்பி கூறியிருந்தார். 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 31 ஆம் திகதி கொல்லப்பட்ட இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்காகத் தமிழ் மக்கள் இரங்கினார்கள். பிரபாகரனும் ஏனைய அமைப்புக்களின் தலைவர்களும் தமது இரங்கல் அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள். இந்திரா காந்தியை "அன்னை இந்திரா" என்று விளித்து பிரபாகரன் தனது இரங்கல் உரையினை வெளியிட்டிருந்தார். இந்திராவின் மறைவிற்குப் பின்னர் அவரது மகனான ரஜீவ் காந்தி கார்த்திகை 1 ஆம் திகதி பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி புலிகள் தமது கண்ணிவெடித் தாக்குதல்களை தொடர்ந்தும் நடத்தியே வந்தார்கள். ரஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நாள் இரவே அச்சுவேலி - வசாவிளான் வீதியில் பயணித்த இராணுவக் கவச வாகனத்தைக் குறிவைத்து கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றினை அவர்கள் நடத்தினார்கள். இத்தாக்குதலில் 9 இராணுவத்தினர் பலியானதுடன் இன்னும் மூவர் காயமடைந்தனர். மறுநாள், கார்த்திகை 2 ஆம் திகதி தொண்டைமானாறு பலாலி வீதியில் இராணுவக் கவச வாகனம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தில் இன்னும் 6 இராணுவத்தினரை அவர்கள் கொன்றனர். பலாலி முகாமிலிருந்து மக்கள் குடியிருப்புக்கள் ஊடாக இரவு வேளைகளில் ரோந்து வரும் இராணுவத் தொடரணியை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் இரண்டும் நடத்தப்பட்டன. தமது பாதுகாப்பிற்காகவும் , பொதுமக்களை அச்சுருத்தி அடிபணியவைக்கும் நோக்கிலும் இராணுவத்தினர் கவச வாகனங்களில் வரிசையாக ரோந்து புரிவதை அப்போது வழமையாகக் கொண்டிருந்தனர். இந்திரா காந்தியின் உடல் தகனம் செய்யப்பட்ட கார்த்திகை 3 ஆம் திகதியை துக்கதினமாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அன்றும், மறுநாளும் புலிகளும் அமைதி காத்தனர். அதன்பின்னர் அவர்களின் கண்ணிவெடிப் போர் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது. கார்த்திகை 9 ஆம் திகதி இராணுவம் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலையடுத்து யாழ்ப்பாணம் சந்தைக்குள் நுழைந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது நடத்திய சரமாரியான துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட மேலும் பலர் காயமடைந்தனர். இராணுவம் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் நடத்தப்படவேண்டும் என்கிற இஸ்ரேலின் ஆலோசனைக்கு அமைய "கூட்டுத் தண்டனை" தமிழர்களுக்கு வழங்கப்படத் தொடங்கியது. பண்டிதர் கார்த்திகை 19 ஆம் திகதி இராணுவத்தினர் மீது பாரிய தாக்குதல் ஒன்றினை நடத்தினர். இராணுவத்தின் அதிகாரியான கேணல் ஆரியப்பெருமவும் இன்னும் ஏழு சிப்பாய்களும் பயணம் செய்த ஜீப் வண்டி புலிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. புலிகளின் தாக்குதல்கள் தீவிரமாகக் காணப்பட்ட பருத்தித்துறைப் பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் திறமைசாலியான கேணல் ஆரியப்பெருமவை பாதுகாப்பு அமைச்சு தெரிவுசெய்து அனுப்பியிருந்தது. பருத்தித்துறைப் பகுதியிலிருந்து புலிகளை முற்றாக துடைத்தழிப்பதே அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி. ஆனால், புலிகளோ பதிலுக்கு அவரை அழித்துவிட திடசங்கற்பம் பூண்டனர். புலிகளின் வடபகுதித் தளபதியாவிருந்த பண்டிதரை இத்தாக்குதலை நடத்துமாறு பிரபாகரன் பணித்திருந்தார். பண்டிதரும் அவரது உப தளபதியான கிட்டுவும் ஆரியப்பெருமவுக்கான பொறியைத் திட்டமிட்டனர். கட்டுவன் - தெல்லிபழை வீதியில் அமைந்திருந்த கல்வெட்டொன்றினை வேண்டுமெறே தகர்த்த அவர்கள் தெல்லிப்பழை சந்திக்கு அருகில் கண்ணிவெடியொன்றினை புதைத்துவிட்டுக் காத்திருந்தனர். பண்டிதர் எதிர்பார்த்ததைப் போலவே தகர்க்கப்பட்ட கல்வெட்டைப் பார்க்க ஆரியப்பெருமவும் வந்தார், கண்ணிவெடியிலும் அகப்பட்டார். ஒரு ஜீப்பும் இரு கவச வாகனங்களும் கொண்ட இராணுவத் தொடரணியில் ஆரியப்பெரும தெல்லிபழைக்கு வந்தார். தொடரணியின் முன்னால் பயணம் செய்துகொண்டிருந்த ஜீப் வண்டியில் ஆரியப்பெரும பயணித்திருந்தார். ஜீப் வண்டியை இலக்குவைத்து கண்ணிவெடித் தாக்குதலை நடத்திய புலிகள் ஆரியப்பெரும உட்பட எட்டு இராணுவத்தினரைக் கொன்றனர். ஆரியப்பெருமவின் இழப்பு இலங்கை இராணுவத்திற்கு விழுந்த பெரிய அடியாகக் கருதப்பட்டது. அவரது மரணத்தின் பின்னர் அவர் பிரிகேடியர் தரத்திற்கு பதவியுயர்வு பெற்றார். தாக்குதல் நடைபெற்ற தெல்லிப்பழை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்கள் மீது இராணுவத்தினல் காலை 3 மணியிலிருந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதல் நடைபெற்றிருக்கொண்டிருந்த வேளையிலேயே அன்றுவரை நடந்த ஆயுதப் போராட்டத்தில் மிகவும் அதிகளவு இழப்புக்களை ஏற்படுத்திய தாக்குதலை டெலோ அமைப்பு நடத்தியது. அன்று பிற்பகல் 2:30 மணிக்கு நன்கு பலப்படுத்தப்பட்டு, காவலுக்கு உட்பட்டிருந்த இருமாடிகளைக் கொண்ட சாவகச்சேரி பொலீஸ் நிலையத்திற்கு 14 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் சென்றான். வாயிலில் காவலுக்கு நின்ற பொலீஸ் காவலாளியிடம் தனது தேசிய அடையாள அட்டை தொலைந்து விட்டதாகவும், ஆகவே அதுகுறித்து முறைப்பாடு ஒன்றினைச் செய்து, இன்னொரு அடையாள அட்டையினைப் பெறவே தான் வந்திருப்பதாகக் கூறினான். மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக தான் காத்திருப்பதால் அடையாள அட்டை மிகவும் அவசியம் என்றும் அவன் கூறவே, போலீஸ் காவலாளியும் கேட்டினைத் திறந்து அவனை உள்ளே அனுமதித்தார். ஏக காலத்தில் பொலீஸ் நிலையத்தின் முன்னால் வந்த உள்ளூரில தயாரிக்கப்பட்ட கவச வாகனத்திலிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துகொண்டே வெளியில் குதித்த நிக்கலஸ் எனும் இயற்பெயரைக் கொண்ட நியூட்டன் எனும் போராளி பொலீஸ் நிலையம் நோக்கி ஓடத் தொடங்க அவரைத் தொடர்ந்து மேலும் பல டெலோ போராளிகள் உள்ளே புகுந்தார்கள். கொழும்புத்துறைப் பகுதியைச் சேர்ந்த நியூட்டன் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். நியூட்டனின் பின்னால் பத்து போராளிகள் சுட்டுக்கொண்டே உள்நுழைய மேலும் 20 போராளிகள் அவர்களைத் தொடர்ந்து உள்நுழைந்து பொலீஸ் நிலையத்தின் ஏனைய பகுதிகள் நோக்கிச் சென்றனர். இராணுவச் சீருடையில் இருந்த அவர்களில் ஒரு பிரிவினர் ஆயுதக் கிடங்கு நோக்கிச் சென்று அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றினர். கட்டிடத்தின் மேற்பகுதியில் அமைந்திருந்த தொலைத் தொடர்பு அறைக்குச் சென்ற ஒரு குழு தொலைத்தொடர்புச் சாதனங்களை அடித்து நொறுக்கியதுடன், பொலீஸாரின் தங்குமிடத்திற்குள் ஒளித்திருந்த பொலீஸாரைச் சுட்டுக் கொன்றனர். டெலோ போராளிகள் கிர்னேட்டுக்களைப் பாவித்துத் தாக்குதல் நடத்தியபோது, இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட சிறப்புக் கொமாண்டோக்கள் அதிர்ச்சியுற்று சிதறி ஓடத் தொடங்கினர். இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான லொறியைக் கடத்திவைத்திருந்த 3 போராளிகள் அதனுள் வெடிகுண்டுகளை நிரப்பி ஓட்டி வந்தனர். பொலீஸ் நிலைய வளாகத்தின் நடுவில் அந்த லொறியை நிறுத்திவைத்த அவர்கள் அதிலிருந்து தாம் வந்த வானிற்கு வயர்கள் மூலம் தொடர்பை ஏற்படுத்தினர். சிறிது நேரத்தில் போராளிகளில் ஒருவர் விசில் ஒலியை எழுப்பியதும் உள்ளிருந்த போராளிகள் வெளியேறிவிட பாரிய சத்தத்துடன் லொறிக் குண்டு வெடித்தது. சீமேந்துத் தூண்களினாலும், தகடுகளாலும் பலப்படுத்தப்பட்ட பொலீஸ் நிலையக் கட்டிடம் நொறுங்கி வீழ்ந்தது. தாக்குதல்க் நடத்தப்பட்ட கட்டிடத்தைப் பார்க்கப் பள்ளிச் சிறுவர்கள் வந்திருந்தார்கள். சேதப்படுத்தப்பட்டுக் கிடந்த பல ஆயுதங்களை அவர்கள் பொறுக்கியெடுத்தார்கள். தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பிய தமிழ் பொலீஸ் பரிசோதகர் ஒருவர் அச்சூழ்நிலை இதயத்தைப் பிளக்கும் உணர்வைத் தந்ததாகக் கூறினார். அன்றைய தாக்குதலை தமிழ் மாணவர்கள் மகிழ்வுடன் கொண்டாடிய விதத்தினைப் பார்க்கும்போது எவ்வளவு தூரத்திற்கு தமிழ்ச் சமூகம் இலங்கை அரசிடமிருந்தும், சட்டம் ஒழுங்கினைக் காக்கும் இலங்கைப் பொலீஸாரிடமிருந்தும் தம்மை அந்நியப்படுத்திக் கொண்டிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "இலங்கை அரசிடமிருந்தும் அதன் படைகளிடமிருந்தும் தமிழ் மக்கள் முற்றாகப் பிரிந்து சென்றுவிட்டார்கள்" என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ் ஒன்றிற்கு அவர் கூறினார். 24 பொலீஸாரும், உதவிக்கு இருந்த மூன்று சிவிலியன்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். மீதமாயிருந்த பொலீஸாரில் பெரும்பாலானோர் காயமடைந்தனர். மிகவும் திட்டமிட்ட ரீதியில், குறுகிய நேரத்தில் கச்சிதமாக அத்தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. வெறும் 15 நிமிடத்தில் அனைத்தும் முடிந்திருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து படையணியொன்றினை சாவகச்சேரி நோக்கி இராணுவம் உடனடியாக அனுப்பிவைத்தது. ஆனால், இராணுவம் பொலீஸாருக்கு உதவிக்கு வரும் என்பதை எதிர்பார்த்த டெலோ போராளிகள் கைதடிப் பகுதியில் இராணுவம் மீது கடுமையான தாக்குதல் ஒன்றினை நடத்தினர். கண்ணிவெடிகளை இயக்கிய அதேவேளை கடுமையான துப்பாகித் தாக்குதலையும் அவர்கள் மேற்கொண்டனர். கண்டி வீதியின் இருபக்கத்திலிருந்து தாக்குதல் நடத்திய டெலோ போராளிகள் இராணுவம் மீது சரமாரியாக கிர்ணேட்டுக்களையும் எறிந்து தாக்கினர். டெலோவின் கடுமையான தாக்குலில் குறைந்தது 20 இராணுவத்தினர் கைதடியில் பலியானார்கள். இஸ்ரேலினால் பயிற்றப்பட்ட பொலீஸார் மீதும், இராணுவத்தினர் மீதும் தாக்கும் வல்லமையினைப் போராளிகள் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் இத்தாக்குதல் நிரூபித்திருந்தது. இத்தாக்குதலையடுத்து இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் தமிழ்நாட்டிலும் மக்கள் மகிழ்வுடன் கொண்டாடினார்கள். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் இருந்து வெளிவந்த அனைத்துத் தமிழ்ப் பத்திரிக்கைகளும் இத்தாக்குதலை மகிழ்ச்சியுடன் செய்தியாக வெளியிட்டன. சிங்கள அரசுக்கு தமிழர்கள் பாடம் ஒன்றினைப் புகட்டியிருக்கிறார்கள் என்பதே இச்செய்திகளின் கருப்பொருளாக இருந்தது. டெலோ அமைப்பும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டது. இறுதியாக தமிழ் மக்களின் அபிமானத்தை வென்றுவிட்டோம் என்கிற பூரிப்பு அவ்வியக்கத்தில் காணப்பட்டது. அதுஅவரை காலமும் புலிகள் அமைப்பே மக்களின் கவனத்தை ஈர்ந்திருந்தது. பொலீஸார் மீதும் இராணுவத்தினர் மீதும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் புலிகள் தாக்குதல் நடத்திக்கொண்டு வந்தனர். இத்தாக்குதல் தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாகவே வெளிவந்திருந்தன. ஆகவே, மக்களின் கவனம் தனது இயக்கம் நோக்கியும் திரும்பவேண்டும் என்று நினைத்த டெலோ அமைப்பின் தலைவர் சிறீசபாரட்ணம் பெரியளவில் தாக்குதல் ஒன்றினைச் செய்யவேண்டும் என்று நினைத்தார். மேலும், இதே பொலீஸ் நிலையம் மீது இரு வருடங்களுக்கு முன்னர் புலிகள் நடத்திய தாக்குதலைக் காட்டிலும் வெற்றிகரமான தாக்குதலாக இது அமையவேண்டும் என்றும் எதிர்பார்த்தார். இத்தாக்குதலைத் திட்டமிடுவதற்கு தமிழ்நாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அவர் வந்திருந்தார். இத்தாக்குதலை ஒளிநாடாவாகப் பதிவுச் செய்யும் நடவடிக்கைகளையும் அவர் எடுத்திருந்தார். இந்த ஒளிப்படத்தைத் தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் டெலோ அமைப்பினர் மக்களிடம் காண்பித்தனர். இதன்மூலம் பணத்தினை மக்களிடமிருந்து அவர்களால் பெற முடிந்தது. ஆனால், தாங்கள் ஏற்படுத்திய தாக்குதல் வெற்றியைத் தொடர்ச்சியாகக் கொண்டுசெல்ல டெலோவினால் முடியவில்லை. எப்போதாவது இருந்துவிட்டு நடத்தும் தாக்குதல்கள் ஊடாக விடுதலைப் போராட்டத்தை வென்றுவிட முடியாது என்பதற்கு டெலோவின் இத்தாக்குதல் ஒரு உதாரணமாக அமைந்தது. ஆனால், புலிகள் அமைப்போ இராணுவத்தினதும், பொலீஸாரினதும் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்தி, பிரதேசங்களை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கும் கண்ணிவெடித் தாக்குதல்களை முதன்மையாகக் கொண்ட நகர்வு முறியடிப்புத் தாக்குதல்களைத் தொடர்ச்சியாக நடத்தியபடியே இருந்தனர்.
- Pandithar.jpg
- LTTE Flag.jpg
- Jaffna map.jpg
- Prabakaran.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழின அழிப்பில் இங்கிலாந்தின் கூலிப்படையான கீனி மீனி சேவையின் பங்களிப்பு புது தில்லியும், கொழும்பின் இராணுவ ஆய்வாளர்களும் ஜெயாரின் மூன்றுவழித் திட்டத்திற்கு இந்திரா காந்தி கடுமையான முறையில் பதிலளிப்பதாகவே கருதின. குறிப்பாக ஜெயார் முன்வைத்த இராணுவத் தீர்வில் பாவிக்கப்பட்ட ஆள்ப்பலம், வெளிநாட்டு இராணுவ வல்லுனர்களின் ஆதரவு என்பன இந்திராவைக் கோபப்பட வைத்திருந்தன. தமிழர்களுக்கெதிரான போரில் இஸ்ரேலிய உளவு அமைப்புக்களான மொசார்ட், ஷின்பெட், இங்கிலாந்தின் முன்னாள் விசேட வான் மற்றும் தரை படையணியினரினால் நடத்தப்படும் தனியார் இராணுவக் கூலிப்படையான கீனி - மீனி மற்றும் அவர்களால் கொழும்பில் கொண்டுவந்து இறக்கப்பட்ட சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க கெரில்லா யுத்தங்களின்போது கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விசேட படையணி வீரர்களின் ஈடுபடுத்தலும், பாக்கிஸ்த்தான் , சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தருவிக்கப்பட்ட பெருமளவு நவீன ஆயுதங்களும் இலங்கையரசை இராணுவத் தீர்வு நோக்கிச் செல்ல உந்தியிருந்தன. லலித் அதுலத் முதலியும், ரவி ஜயவர்த்தனவும் ஒருவரையொருவர் வெளிப்படையாகவே தூற்றி வந்தபோதிலும் தமிழர் தாயகத்திலிருந்து அவர்களை அச்சுருத்தி வெளியேற்றி, தமிழ்க் கிராமங்களின் எல்லைகளில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் முன்வைத்த திட்டத்தை முழுதாக ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வந்தனர். எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமா, இஸ்ரேலின் திட்டங்களை ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வந்தார். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேலியர்கள் முன்னெடுத்துவரும் இதே திட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளதால், இலங்கையிலும் அதே நிலைதான் ஏற்படும் என்று அவர் அரசை எச்சரித்தார். நடந்ததும் அதுதான். தம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் அஞ்சவில்லை. மாறாக அதற்கெதிரான அவர்களின் எதிர்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. தமிழர்கள் ஒன்றிணையத் தொடங்கினார்கள். தமிழ் மக்களால் முன்னர் ஆதரவளிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் தமிழரின் ஒற்றுமையின் முன்னால் அடிபட்டுப் போயிற்று. இலங்கைக் கொலைப்படையான விசேட அதிரடிப்படைக்கு பயிற்சியளிக்கும் கீனி மீனி கூலியொருவன் இங்கிலாந்தின் கூலிப்படையான கீனி மீனி சேர்விசஸ் அமைப்பை தமிழின அழிப்பில் ஈடுபட வைத்தது லலித் அதுலத் முதலியே. லண்டனில் இருந்து வெளிவரும் டெயிலி நியுஸ் பத்திரிக்கை இக்கூலிப்படை இலங்கையில் செய்துவரும் நடவடிக்கைகளை 1987 பங்குனியில் செய்தியாக வெளியிட, 1987 ஆம் ஆண்டு வைகாசி 19 ஆம் திகதி வெளியான அமெரிக்காவின் வோஷிங்டன் டைம்ஸ் பத்திரிக்கை மேலும் பல ஆதாரங்களுடன் இக்கூலிப்படையினரின் செயற்பாடுகள் குறித்த இரகசிய விபரங்களை வெளியிட்டது. ஆனால், இந்த விபரங்கள் எல்லாமே 1984 ஆம் ஆண்டிலேயே இந்தியாவுக்குத் தெரிந்திருந்தது. லண்டன் டெயிலி நியுஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில் பல டசின்கணக்கான கீனி மீனி கூலிப்படையினர் இலங்கையில் போரில் பங்கெடுத்திருப்பதாகவும் அவர்களுக்கு வருட வருமானமாக 33,000 (1984 இல்) அமெரிக்க டொலர்கள் இலங்கையரசால் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தது. வோஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதிய ரிச்சேர்ட் எல்ரிச், குறைந்தது 35 கீனி மீனி கூலிப்படையினர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றிவருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பு : பி. பி. சி செய்திச்சேவை 2020 ஆம் ஆண்டு, கார்த்திகை 30 ஆம் திகதி வெளியிட்ட ஆய்வறிக்கையில், "இலங்கையின் விசேட அதிரடிப்படை வீரர்களுக்கு கீனி மீனி கூலிப்படையினர் 1980 களில் பயிற்சியளித்து வந்ததாகவும், இலங்கையின் விமானப்படையினருக்கான விசேட பயிற்சிகளில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாகவும்" கூறியிருந்தது. கட்டுக்குருந்தை - விசேட அதிரடிப்படையின் பயிற்சி முகாம் தமிழ் கெரில்லாக்களைக் கொல்வதற்கான பயிற்சிகளை இலங்கை விசேட அதிரடிப்படையின் பயிற்சி முகாமான கட்டுக்குருந்தையில் இங்கிலாந்துக் கூலிப்படை வழங்கி வந்ததாக எல்ரிச் கூறுகிறார். இலங்கையின் உள்நாட்டுப் போரில் கீனி மீனி கூலிப்படையினரின் பங்கு குறித்து எல்ரிச் முன்னாள் இங்கிலாந்து விசேட படைகளின் கேணல் தர அதிகாரியும் பின்னாட்களில் கூலிப்படையின் அதிகாரியாகவும் செயற்பட்ட கென் வைட், இங்கிலாந்து உயர்ஸ்த்தானிகராலய பேச்சாளர் ஜக் ஜோன்ஸ், கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கும் மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் மற்றும் லலித் அதுலத் முதலி ஆகியோரிடம் வினவியிருந்தார். கென் வைட் பேசுகையில், "நாம் இலங்கை அரசாங்கத்தின் ஊழியர்கள். ஆகவே, எம்மைப்பற்றி இலங்கையின் பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலியும், இங்கிலாந்தின் உயர்ஸ்த்தானிகரும் கூறும் விடயங்களைச் செவிமடுக்குமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதைத்தவிர நான் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை" என்று கூறினார். இலங்கை கொலைப்படையுடன் கீனி மீனி கூலிகளில் ஒருவன் இங்கிலாந்து தூதரகப் பேச்சாளர் ஜக் ஜோன்ஸ் மிககவனமாகத் தேர்ந்தெடுத்த வசனங்களைக் கொண்டு பதிலளித்தார், "கீனி மீனி சேவைகளின் இலங்கையின் பிரசன்னம் என்பதை அந்த தனியார் அமைப்பிற்கும் இலங்கை அரசுக்குமிடையிலான தனிப்பட்ட விடயமாகவே இங்கிலாந்து அரசு கருதுகிறது. இங்கிலாந்தின் படை வீரர்கள் இலங்கையில் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூறமுடியும். ஆனால், கீனி மீனி அமைப்பில் இன்று இலங்கையில் செயற்படும் வீரர்கள் முன்னர் இங்கிலாந்து இராணுவத்தில் பணியாற்றியவர்கள் என்று நான் அறிவேன். அவர்கள் இலங்கையில் செயற்படுவதை ஆதரிக்கவோ அல்லது தடுக்கவோ இங்கிலாந்து அரசால் முடியாது. என்னைப்பொறுத்தவரை ஒரு சட்டபூர்வமான தனியார் கம்பெனி சட்டபூர்வமான இலங்கை அரசாங்கத்துடன் வியாபார ஒப்பந்தம் ஒன்றில் இணைந்திருக்கிறது. இந்த வியாபார ஒப்பந்தத்தின்படி கீனி மீனி யின் வீரர்கள் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள் என்பதையும், நேரடியான இராணுவ நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கவில்லை என்பதையும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்" என்றும் கூறினார். ஜோன்ஸ் மேலும் கூறுகையில், "இங்கிலாந்தின் உள்த்துறை அமைச்சரான டேவிட் வடிங்க்டன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது கூறிய விடயத்தைக் கவனியுங்கள், இலங்கையின் கீனி மீனியின் பிரசன்னம் உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதமாகும் என்றும், அவர்களின் பயிற்சியினால் இலங்கை இராணுவத்தின் போரிடும் திறன் அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் அல்லவா?" என்றும் கூறினார். இலங்கைக் கொலைப்படையான விசேட அதிரடிப்படைக்கு பயிற்சியளிக்கும் கீனி மீனி கூலியொருவன் எல்ரிச்சுடன் பேசிய மேற்குநாட்டு இராஜதந்திரி ஒருவர் கீனி மீனி சேவை, இலங்கையின் உள்நாட்டுப் போரில் மேற்கொண்டுவரும் செயற்பாடுகளால் இங்கிலாந்து அரசாங்கம் அவமானப்பட்டிருப்பதாகக் கூறினார். "கீனி மீனி சேவையின் பங்களிப்பு என்பது உள்நாட்டுப் போரில் இங்கிலாந்தின் பங்களிப்பு என்றே பலராலும் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அரசாங்கம் தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வே சரியானது என்று கூறினாலும், கீனி மீனி சேவை உள்நாட்டுப் போரில் நேரடியாக ஈடுபட்டிருப்பதன் மூலம், இங்கிலாந்தும் இராணுவத் தீர்வையே விரும்புகிறது போலத் தெரிகிறது. கீனி மீனி சேவையின் உதவிகள் ஊடாக தமிழ் கெரில்லாக்கள் கொல்லப்பட்டு வருவதானது இங்கிலாந்து அரசும் அரசியல் ரீதியிலான தீர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதையே காட்டுகிறது" என்றும் கூறினார். கீனி மீனி கூலிப்படையில் இலங்கையில் பணியாற்றிய கொமாண்டோ சமி டொரத்தி என்பவன் லண்டன் டெயிலி நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், "அங்கு பல அட்டூழியங்கள் நடந்திருக்கலாம், ஆனால் நாம் அங்கு செல்லாதிருந்தால் இவை நடந்திருக்காது என்றும் கூற முடியாது. ஒழுக்கயீனமே அட்டூழியங்கள் நடைபெறக் காரணமாகி விடுகின்றன. போரிற்குப் பயந்த, தகுந்த பயிற்சி வழங்கப்படாத படைவீரர்களே அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால், நான் வழங்கும் பயிற்சிகள் அவர்கள் அட்டூழியங்களில் ஈடுபடுவதைத் தடுக்கிறது. நாம் அவர்களுக்கு வழங்கும் பயிற்சிகள் மூலம் சுயகட்டுப்பாடு அவர்களுக்கு ஏற்படுவதோடு பல உயிர்களும் காக்கப்படுகின்றன என்பதே உண்மை" என்று கூறினான். தொடர்ந்து எழுதும் எல்ரிச், "கீனி மீனி சேவையினால் பயிற்றப்பட்டு வரும் இலங்கை பொலீஸாரின் விசேட அதிரடிப்படையினர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஒரு கொலைப்படையாகவே செயற்பட்டு வருவதாகவும், கடுமையான சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றில் ஈடுபட்டுவருவதன் மூலம் அப்பிரதேசத்தை கடுமையான அச்சத்தில் ஆள்த்தி வைத்திருப்பதாகவும் தமிழர்கள் குற்றஞ்சுமத்துகிறார்கள்" என்றும் எழுதுகிறார். கென் வைட் அவருடன் பேசும்போது, "நாம் அவர்களுக்கு வழங்கிவரும் பயிற்சிகளின்மூலம் அட்டூழியங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார். ஆனால், கொழும்பில் தங்கியிருக்கும் பல மேற்குநாட்டு இராஜதந்திரிகளோ கீனி மீனியின் பயிற்சிகளின் பின்னரே கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்படையினரால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் படுகொலைகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் காண்பித்திருந்தார்கள். எல்ரிச்சுக்குப் பேட்டியளித்த லலித் அதுலத் முதலி, "இலங்கை அரசாங்கம் அரசியல்த் தீர்வில் நம்பிக்கை கொள்ளவில்லை. வெளிநாட்டுக் கூலிப்படைகளின் உதவியின் மூலம் இராணுவத் தீர்வு சாத்தியப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார். கீனி மீனி கூலிப்படையினரால் செலுத்தப்பட்ட இலங்கை வான்படையின் பெல் 212 ரக உலங்குவானூர்தியொன்று " நாம் அவர்களை எமது விசேட அதிரடிப்படை வீரர்களைப் பயிற்றுவிக்கவும், துணை இராணுவக் குழுக்களை அமைக்கவுமே பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறோம். இப்பயிற்சிகளின் ஊடாக எமது வீரர்கள் பல நுணுக்கங்களைக் கற்றிருக்கிறார்கள். பல பகுதிகளை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அவர்களால் முடிந்திருக்கிறது. இலங்கையின் அரச படைகள் படுகொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தமிழ்மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் கீனி மீனி சேவையினரின் பயிற்சியினால் 42 வீதம் குறைந்திருக்கிறது. கீனி மீனி சேவையின் வீரர்களை நாம் நேரடியான சண்டைகளில் பயன்படுத்தி வருகிறோம் என்பது பொய்யான குற்றச்சாட்டாகும்" என்றும் கூறினார். தனது ஆய்வுகளின் சாரம்சமாக எல்ரிச் பின்வருமாறு கூறுகிறார், "கீனி மீனி சேவைகளின் வீரர்கள் பயிற்சி நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள் என்று அரசு கூறினாலும் கூட, பயிற்சிக்கும் நேரடியான சண்டைக்கும் இடையே இருக்கும் மெல்லிய கோடு சிலவேளைகளில் அழிக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக வான் தாக்குதல்களில் கீனி மீனீ சேவையின் வீரர்கள் நேரடியாகவே பங்கெடுக்கிறார்கள். உதாரணத்திற்கு, 35 கீனி மீனி சேவைகளின் வீரர்கள் அமெரிக்கத் தயாரிப்புக்களான பெல் 212 மற்றும் பெல் 412 ஆகிய உலங்குவானூர்திகளில் இலங்கை வான்படை வீரர்களுக்குச் சண்டைப்பயிற்சி அளித்து வருகிறார்கள். சாட்சியங்களின்படி, போராளிகள் மீதான வான் தாக்குதல்களுக்குச் செல்லும் வேளைகளில் இலங்கையைச் சேர்ந்த விமானி ஒருவர் பிரதான விமானியின் ஆசனத்தில் அமர்ந்திருக்க, கீனி மீனியின் வீரர் உதவி விமானியின் ஆசனத்தில் அமர்ந்திருந்த்து தாக்குதலில் ஈடுபடுகிறார். வெளியில் இருந்து பார்ப்போருக்கு இலங்கை விமானியே உலங்குவானூர்தியைச் செலுத்துவதால், கீனி மீனியின் பங்களிப்பு மறைக்கப்பட்டு விடுகிறது. ஆனால், உலங்கு வானூர்தி மீது போராளிகள் தரையிலிருந்து தாக்கும்போது நிலைமை மாறி விடுகிறது. போராளிகளின் தாக்குதல்களிலிருந்து விமானத்தைத் தப்புவிக்க, இலாவகமாக ஓட்டிச் செல்ல கீனி மீனியின் விமானி பிரதான ஆசனத்தில் அமர்ந்துகொள்ள இலங்கை விமானியோ இயந்திரத் துப்பாக்கியை இயக்கச் சென்றுவிடுகிறார். அமெரிக்காவால் வழங்கப்பட்டு கீனி மீனி கூலிப்படையினரால் இயக்கப்பட்ட பெல் 412 உலங்கு வானூர்தி பெருமளவு கூலிப்படையினரும் ஆயுதங்களும் இலங்கை அரசால் தருவிக்கப்பட்டபோது இந்திரா காந்தி எரிச்சலடைந்தார். இதுகுறித்து நரசிம்ம ராவோ லோக் சபையில் அறிக்கையொன்றினை வெளியிட்டார். இந்தியாவைக் கடந்து, வெளிநாடுகளில் இருந்து கூலிப்படையினரின் உதவிகள் பெறப்பட்டிருப்பதை இந்தியா உறுதியாக நம்புகிறது. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இராணுவ ரீதியில் தீர்வு காண முயன்றால் அழிவுகரமான விளைவுகளே ஏற்படும் என்றும் இலங்கை அரசாங்கத்தை அவர் எச்சரித்தார். இதனால் கொதிப்படைந்த ஜெயார், இந்தியாவுக்கெதிரான கடுமையான பிரச்சாரத்தை முன்னெடுத்தார். பெரியண்ணை பாத்திரத்தை இந்தியா வகிக்க எத்தனிப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பிராந்திய வல்லரசு எனும் இந்தியாவின் எண்ணம் வெறும் கனவுதான் என்றும் எள்ளி நகையாடினார். இந்தியாவை அவமானப்படுத்த அவர் எடுத்த முயற்சிகள், அதற்கு எதிர்மறையான விளைவுகளையே அவருக்குக் கொடுத்தன. அதுமட்டுமல்லாமல், இலங்கையின் நிலையினையும் இன்னும் மோசமாக்கி விட்டிருந்தது. பெருமளவு போராளிகளும் அவர்களுக்கான ஆயுதங்களும் இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு இந்தியாவால் நகர்த்தப்பட்டன. தமிழ்நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கொடுத்த பணத்தினால் வாங்கப்பட்ட அதி நவீன ஆயுதங்களும் புலிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ராணுவத்திற்கெதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்துமாறு போராளி அமைப்புக்களை ரோ கோரத் தொடங்கியது. தம்மீதான தாக்குதல்களுக்குப் பழிவாங்கலாக பொலீஸாரும் இராணுவத்தினரும் தமிழ் மக்கள் மீது நடத்திய தாக்குதல்கள் ஆவணி, புரட்டாதி, ஐப்பசி ஆகிய மாதங்களில் மிகவும் அதிகரித்துக் காணப்பட்டன. இதனையடுத்து தமிழ் மக்கள், போராளி அமைப்புக்களுக்கு முற்றான ஆதரவினை வழங்கத் தலைப்பாட்டார்கள். இலங்கை அரசுக்கெதிரான புரட்சியில் அவர்கள் ஈடுபட்டார்கள். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அவர்கள் முன்னர் வழங்கிவந்த ஆதரவு முற்றாக போராளிகளுக்கு கைமாறியிருந்தது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த விசுவாசத்தினை இலங்கை அரசாங்கம் இழந்தது. இலங்கையரசு என்பது சிங்கள அரசுதான் என்கிற நிலைக்குக் அது கீழிறக்கப்பட்டது. தொடர்ந்துவந்த மூன்று மாதங்களில் புலிகளின் தலைமையில் தமிழ்ப் போராளிகள் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததுடன், தமிழர்களுக்கான தனிநாட்டினை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர். மேலதிக வாசிப்பிற்கு : கீனி மீனிக் கூலிப்படையின் இலங்கைச் செயற்பாடுகள் குறித்த ஆவணம் ஒன்று https://www.puradsimedia.com/wp-content/uploads/2019/02/britains_dirty_war.pdf
- BELL 412.jpg
- BELL 212.jpg
- Katukurntha STF camp.jpg
- kms 4.jpg
- KMS 3.jpg
- kms 2.jpg
- KMS 1.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கொழும்பில் வெடித்த குண்டுகள் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 22 ஆம் திகதி கொழும்பில் முதலாவது குண்டு வெடித்தது. இந்நாட்களில் இந்திரா காந்தி உயிருடன் இருந்தார் என்பதுடன் ஜெயாரின் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளினால் கடும் அதிருப்தியிலும் இருந்தார். வடக்குக் கிழக்கில் ஆயுதப்போராட்டம் புலிகளால் உக்கிரப்படுத்தப்படுகையில் ஈரோஸ் கொழும்பிற்கு குண்டுவெடிப்பு செயற்பாடுகளை நகர்த்தியிருந்தது. பேச்சுவார்த்தைகள் மூலமான தீர்வினை விட்டு இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டு செயற்பட்டு வந்த ஜெயாரை அச்சுருத்தி மீளவும் பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் உத்தியாகவே இந்தக் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இலங்கையில் இந்தியாவின் நலன்களை முற்றாக முடக்கிவிட ஜெயவர்த்தனவுக்கு இராணுவ உதவிகள் என்கிற பெயரில் இந்தியாவுக்கெதிரான சீனா, பாக்கிஸ்த்தான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் முயன்றுவருவதாக இந்திரா அஞ்சினார். இதனைத் தடுப்பதற்கான ஒரே வழி தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதுதான் என்று இந்தியா கருதியது. (குறிப்பு : சமாதானப் பேச்சுக்கள் மூலம் மட்டுமே தமிழருக்குத் தீர்வொன்றினை வழங்க இந்தியா விரும்பியதே ஒழிய, பிரபாகரன் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தமிழர்களுக்கு தனி நாடு ஒன்று உருவாக்கப்படுவதை இன்றுவரை இந்தியா முற்றாக எதிர்த்தே வருகிறது. அதேவேளை புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் என்கிற பெயரில் தமிழர்களை முற்றாக ஒடுக்கிவிட ஜெயார் முயல்வதையும் இந்தியா வரவேற்கவில்லை . இதன் ஒரு பகுதியாகவே இலங்கையுடன் இந்தியா 2005 இல் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தமும் பார்க்கப்படல் வேண்டும்). புறக்கோட்டை புகையிரத நிலையம் அன்று கொழும்பு முழுவதும் மிகவும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. முதலாவது குண்டுவெடிப்பு காலை 5:30 மணிக்கு கொட்டாஞ்சேனை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்த்தப்பட்டது. பொலீஸ் நிலையத்திற்கு மிக அண்மையாகக் குண்டை வெடிக்கவைக்கும் நோக்கில் ஊர்காவற்றுரையைச் சேர்ந்த இளம் பொறியியலாளரான பரிபூரணம் அதனைக் காவிவந்த வேளை எதிர்பாராத விதமாக அது வெடிக்க அவரும் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து கொழும்பின் 9 வேறு இடங்களில் முதல் நான்கு மணிநேரத்திற்குள் குண்டுகள் வெடித்ததனால் மக்களிடையே பீதி பரவ ஆரம்பித்தது. புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு அண்மையாக வெடித்த குண்டினால் பல பொதுமக்கள் காயப்பட்டனர். ஏனைய குண்டுகள் அரச வானொலி, தொலைக்காட்சி நிலையங்கள், மத்திய பேரூந்து நிலையம், உள்ளூர் அலுவல்கள் அமைச்சுக் கட்டிடம் மற்றும் இதர பகுதிகளில் வெடித்தன. குப்பைகூழங்களைக் கொட்டிவைக்கும் கொள்கலன்களிலேயே இக்குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தன. பெலியகொடை பகுதியில் வீடொன்றில் இன்னொரு குண்டு எதிர்பாராத விதமாக வெடித்தபோது இரு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். அரசுக்கு இக்குண்டுவெடிப்புகள் கடுமையான அழுத்தத்தினை ஏற்படுத்தின. லலித் அதுலத் முதலி கொதித்துப்போனார். விசேட பத்திரிக்கையாளர் மாநாடொன்றினைக் கூட்டிய அவர் 10 மணியளவில் ஆற்றிய உரையில் நாட்டு மக்கள் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார். தமிழ் மக்கள் மீது இன்னொரு படுகொலையினை சிங்களவர்கள் நடத்தவேண்டும் என்பதற்காகவே இக்குண்டுவெடிப்புக்களை பயங்கரவாதிகள் நடத்திவருவதாக அவர் கூறினார். ஆகவே, பயங்கரவாதிகளின் சதிக்குள் சிக்கிவிட வேண்டாம் என்று சிங்களவர்களை அவர் கேட்டுக்கொண்டார். இக்குண்டுவெடிப்புக்கள் இரண்டு முக்கிய செய்திகளை அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் கூறியிருந்தன. முதலாவது செய்தி, நாட்டின் தலைநகரான கொழும்பிற்கும், சிங்கள மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளுக்கும் குண்டுகளைக் கொண்டுவந்து வெடிக்கவைக்கும் வல்லமையினைப் போராளிகள் பெற்றுள்ளார்கள் என்பது. இரண்டாவது, கொழும்பு அரசாங்கம் இராணுவத் தீர்வில் அதீத கவனம் செலுத்தினால், போரினை மேலும் விரிவாக்குவதற்கு இந்தியா ஒருபோது பின்னிற்காது என்பது.
- Fort station.jpg
-
மரணம்
இப்பதிவில் கருத்துப் பகிர்ந்து, உணர்வுகளை இங்கு வெளிக்காட்டிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது இனத்தில் லட்சக்கணக்கானோரை இழந்திருக்கிறோம். ஆனால், அவர்களது இறப்பில் வராத துயரம் ஒரு வேற்றினத்தவன் இறக்கும்போது வருவது எப்படிச் சாத்தியம் என்று பலர் இதனைக் கருதலாம் என்கிற தயக்கம் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது. உண்மையென்னவென்றால், எனது இனம் அழிக்கப்பட்ட வலி எனக்கு எப்போதும் அப்படியே இருக்கும். அது மறையாது. அதற்கான வடிகால்கள் தேடித்தான் இன்றுவரை இனம் சார்ந்தும், போராட்டம் சார்ந்தும் எதையாவது எழுதவேண்டும் என்று மனம் விரும்புகிறது. நாம் நடந்து வந்த பாதைகளில் எம்மைப் பாதித்த ஒரு சில வேற்றினத்தவர்களையும் நாம் சந்தித்திருப்போம். அவர்களில் ஒருவன் தான் இவனும். அவன் குறித்து நான் ஆரம்பத்தில் கொண்டிருந்த தப்பபிப்பிராயமும் இதனை எழுத என்னைத் தூண்டியிருக்கலாம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள் !
-
மரணம்
மண்டபத்தினுள் நுழைந்தேன். அவனைக் காணவில்லை. சிலவேளை குடும்பத்தினர் மட்டுமே பார்க்க அவனை அடக்கம் செய்யலாம் என்று எண்ணிக்கொண்டேன். மண்டபம் நிறைந்த சனம். எல்லாம் அவனை நேசித்தவர்களும், அவனுடன் கூடப் பழகியவர்களும். ஒரு 25 அல்லது 30 கதிரைகள் தான் போடப்பட்டிருக்கும். சிலர் இருந்துகொண்டார்கள். பின்னால் ஒரு சிலர் நிற்பது தெரியவே, அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். கூடவே எனது நண்பர்கள், வேலைக்கள சக பணியாளர்கள். அங்கு நின்றபடியே மண்டபத்தின் முற்பகுதியில் நடப்பவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். மண்டபத்தின் முற்பகுதியில் ஒரு மேசை வைக்கப்பட்டு அதில் அவனுடைய சில படங்கள் அடுக்கப்பட்டிருந்தன. கூடவே மரத்தினால் செய்த ஆமை பொம்மை. அவனுக்கு விருப்பமான பொம்மையாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன். அருகில் சிறிய கணிணித் திரையில் அவன் வாழ்வு படங்களாக ஓடிக்கொண்டிருந்தது. அவன் தனது குடும்பத்துடன், காதலியுடன், பெற்றோருடன், நண்பர்களுடன் வாழ்வை முழுமையாக அனுபவித்த பொழுதுகள் திரையில் செக்கன்களுக்கு ஒருமுறை வலம் வந்துகொண்டிருந்தன. அவன் வாழ்ந்து முடித்ததைப் பார்க்கும்போது, இதுவல்லவோ வாழ்வு என்று எண்ணத் தோன்றியது. அன்றைய நிகழ்வை நடத்தியவள் அவனது நண்பிகளில் ஒருத்தி. வந்தவர்களை வரவேற்றுக்கொண்டே அவன் பற்றிச் சொல்லிக்கொண்டு போனாள். திகைத்துப்போனேன். 16 வயதில் மார்ஷல் ஆர்ட்ஸ் என்று சொல்லும் தற்காப்புக் கலைக்காக அமெரிக்காவின் போட்டியொன்றில் அவுஸ்த்திரேலியா சார்பாகக் கலந்துகொண்டிருக்கிறான். மலையேறுதல், தரையிலும், கடலிலும் மட்டைகளில் ஓடுதல் என்று தொடங்கி இரசாயணவியலில் இளங்கலை, இரட்டைப் பொறியியல் இளங்கலை என்று நிறையவே படித்திருக்கிறான் என்பது புரிந்தது. இவனுடனா ஆரம்பத்தில் அநியாயமாகப் போட்டி போட்டுக்கொண்டோம் என்ற குற்றவுணர்வு வந்துபோனது. அவள் பேசப்பேச அவன்குறித்த எனது பார்வை மாறிக்கொண்டே போனது. என்னவொரு மனிதன்!!! தான் விரும்பிய விடயங்களுக்காக உலகெல்லாம் சுற்றித்திரிந்து, நண்பர்களுக்காக வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் முற்றாக அனுபவித்து, அழியா நினைவுகளை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, வெறும் 44 வயதில் எம் எல்லாரையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டான். அவளைத்தொடர்ந்து அவனது உற்ற நண்பர்கள் இருவரும் அவனது சகோதரனும் பேசினார்கள். பேசும்போது அடங்க மறுத்துப் பீறிட்டுக் கிளம்பிய அழுகைகளை வெளியே வரவிட்டு, தாமும் அழுது எம்மையும் அழப்பண்ணினார்கள். முன்னால் இருக்கையில் இருந்த பெண்கள் தேம்புவது தெரிந்தது. ஒரு கட்டத்தில் மேசையில் வைக்கப்பட்டிருந்த படங்கள் குறித்து நண்பி பேசினாள். அவை எடுக்கப்பட்ட பொழுதுகள், அப்போது நடந்த சுவாரசியமான சம்பாஷணை என்று பல விடயங்களை அவர் பகிர்ந்துகொண்டாள். மீதமாயிருந்தது மரத்தால் செய்யப்பட்ட கழுத்து நீண்ட ஆமை. அதைப் பற்றியும் அவள் கூறினாள். அவன் தனது இன்றைய மனைவியும் முன்னாள்க் காதலியுமானவளுடன் காரில்ப் பயணிக்கும்போது வீதியோரத்தில் உயிருள்ள ஆமையொன்றைப் பார்த்திருக்கிறான். உடனேயே காரை நிறுத்தி, ஆமையைத் தூக்கிக் காரில் வைத்துக்கொண்டே அப்பகுதியெங்கும் சுற்றித் திரிந்து நீர்நிலையொன்றில் அதனைப் பத்திரமாக இறக்கிவிட்டிருக்கிறான். அதே பயணத்தில் வேடிக்கையாகப் பேசும்போது தனது காதலியுடன், "நான் இறந்தால் இதே போன்றதொரு ஆமை செய்து, எனது அஸ்த்தியை அதனுள் இட்டு நீரில் இறக்கிவிடு. இந்தச் சமுத்திரத்தையும் நான் பார்க்க வேண்டும்" என்று கேட்டிருக்கிறான். அவன் கேட்டுக்கொண்டது போலவே அவனது அஸ்த்தியை அந்த ஆமையினுள் வைத்து மண்டபத்திற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மரத்தால் செய்யப்பட்ட ஆமையொன்று எதற்காக அங்கே இருக்கிறது எனும் பலரது கேள்விக்கு அவள் பதிலளித்தாள். கூடவே அவனது இறுதிக் கிரியைகள் முடிவுற்று விட்டதையும் அவள் எங்களுடன் பகிர்ந்து கொண்டாள். அவனது சகோதரன் பேசும்போது, "உங்கள் எவரையும் கண்களுக்கு நேரே நான் பார்த்துப் பேசப்போவதில்லை. ஏனென்றால் நான் அழுவேன் என்பது எனக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டே அழுதான். அவனது நிலைகண்டு கண்களில் வழிந்தோடிய எனது கண்ணீரை துடைக்க விருப்பமின்றி நின்றிருந்தேன். அவன் தனது பேச்சினை முடிக்கும் தறுவாயில் அவனது இளைய மகள் ஓடிச்சென்று தந்தையின் கழுத்தில் தொங்கி, இடையில் ஏறிக்கொண்டாள். நானும் பெரியப்பாவிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன் அன்று அவனது காதில் இரகசியமாகக் கூறினாள். சரி, சொல்லலாமே என்று அவன் கூறவும், நீங்களே அதைச் சொல்லிவிடுங்கள் என்று அவள் கூறிவிட்டுச் சிணுங்கினாள். தழுதழுத்த குரலில் அவன் தனது மகள் கூறியதை அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான், "பெரியப்பா, நான் உங்களை நேசிக்கிறேன்". பலர் அழுதார்கள், பலர் கண்கலங்கினார்கள், நானும்தான். அருகில் நின்ற நண்பன் , "உனது மரணத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்று நீ நினைக்கிறாய்?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். ஒருகணம் சிந்தித்துப் பார்த்தேன். எனக்கென்று நெருங்கிய நண்பர்கள் ஒருவர் அல்லது இருவர்தான். நெருங்கிய உறவுகள் என்று ஒரு இரண்டு அல்லது மூன்று பேர். "மிஞ்சி மிஞ்சிப் போனல் பத்துப்பேர் கூட வரப்போவதில்லை" என்று கூறினேன். அவன் சிரித்தான். அவன் பற்றிய நினைவுப் பகிர்வு முடிவடைந்தபின்னர் சிற்றுண்டி பரிமாறப்பட்டது. சிறிய குழுக்களாக வட்ட வடிவில் நின்றுகொண்டு அவன்பற்றிப் பேசினோம். இடையிடையே சிற்றுண்டிகளையும் சுவைத்தோம். இறுதியாக அவனது சகோதரனுடன் நின்று உரையாடினேன். கடுமையான சோகத்தினை மறைத்துக்கொண்டு வந்தவர்களுடன் முகம் கோணாது அவன் பேசினான். இடையிடையே நாம் பேசிய நகைச்சுவைகளுக்காகச் சிரித்தான். ஆனால் அவன் இன்னமும் தனது சகோதரனுக்காக மனதினுள் அழுவது தெரிந்தது. மாலை 5 மணியாகிக்கொண்டிருந்தது. இரவு வேலை 6 மணிக்கு. இப்போதே ஓடத் தொடங்கினால்த்தான் சிட்னியின் பின்னேர வாகன நெரிசலுக்குள் நுழைந்து வெளியேற முடியும். ஆகவே அவனிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வேலை வந்து அடையும்வரை அவனது நினைவுகள் மனதில் சுழன்றுகொண்டிருந்தன. இவனைப் போல என்னால் வாழ முடியாது. எமது அகம்பாவமும், தற்பெருமையும், எம்மைச் சுற்றி நாமே வரைந்துகொள்ளும் குறுகிய வட்டங்களும் எமது வாழ்நாள் எவ்வளவுதான் நீண்டு சென்றாலும் அதனைப் பூரணப்படுத்தப்போவதில்லை என்பது புரிந்தது. அவன் வாழ்ந்தது வெறும் 44 வருடங்கள் மட்டும்தான். ஆனால், வாழ்ந்தால் இப்படி வாழுங்கள் என்று எமக்கெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். மனிதன் தான் ! சென்றுவா!!! என்று மனதினுள் சொல்லிக்கொண்டு அலுவலகக் கதவு திறந்து உள்ளே நுழைந்தேன். முற்றும்.
-
மரணம்
அவனது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல்கள் வெளிவந்தபோது, இதனைத் தவற விடக்கூடாதென்று உறுதியெடுத்துக்கொண்டேன். அது மாசி மாதம் 15 ஆம் திகதி, நேற்று பிற்பகல் 3 மணிக்கு. புதன் இரவும், வியாழன் இரவும் வேலை. நித்திரை அசதி, களைப்பு..இப்படி என்னதான் இருந்தாலும் அவனை வழியனுப்பி வைக்கவாவது செல்லவேண்டும் என்று மனம் சொல்லியது. ஆகவே, வியாழன் காலை பணிமுடித்து வீடுவந்து, அவசர அவசரமாகத் தூங்கி (எல்லாம் ஒரு ரெண்டுமணிநேர தூக்கத்திற்காகத்தான் ), விழித்தபடியே துயில் எழுந்து (ஏனென்றால், இப்போதெல்லாம் எப்போதாவதுதான் நித்திரை வருகிறது), கறுப்பு நிறத்தில் புதன்கிழமை வாங்கிவைத்த சற்று இறுக்கமான சேர்ட்டுக்குள் புகுந்து அவனது நினைவுநாள் நடக்குமிடத்திற்குச் சென்றேன். மழை இன்னும் மெதுவாகத் தூறிக்கொண்டிருக்க, கோடைகால சிட்னியின் வெய்யில் முகில்களுக்குள் முற்றாக மறைந்து நிற்க, அமைதியான ஆற்றுப்படுக்கையின் ஓரத்தில் சவுக்கு மரங்களின் பின்னணியில் உயர்ந்து நின்ற கட்டடம் ஒன்றிற்கு முன்னால், அங்கு ஏலவே வந்திருந்த வேலைத்தள நண்பர்களுடன் ஒட்டிக்கொண்டு நின்றேன். அங்கு நின்றவர்களில் பலரை எனக்குத் தெரிந்திருந்தது. எல்லோரும் என்னுடன் ஏதொவொரு காலத்தில் பணியாற்றியவர்கள். இப்போது வேறு வேலைத்தளத்தில் இருக்கிறார்கள். சிலர் வந்து, "எப்படி இருக்கிறாய்?" என்று கேட்டார்கள். பதிலுக்குக் குசலம் விசாரித்துவிட்டு அமைதியாக கூட்டத்துடன் கரைந்துபோனேன்.
- Josh.jpg
-
மரணம்
ஒரு ஏழெட்டு நாட்கள் இருக்கலாம். அவந்து சகோதரன் தொலைபேசியில் அழைத்தான்."நான் இன்றைக்கு வேலைக்கு வரவில்லை, அண்ணாவை பலியேடிவ் கெயருக்கு வருகிற வாரம் கொண்டு செல்லவிருக்கிறோம், அம்மாவாலும், அப்பாவாலும் அதனைத் தனியே செய்ய முடியாது. ஆகவேதான் நான் லீவெடுத்து அதனைப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன், நாளைக்கு நிச்சயம் வருவேன், அனுமதி தருவாயா?" என்று கேட்டான். "ஒரு பிரச்சினையுமில்லை, தாராளமாக எடு. நாளைக்கும் நீ வரவேண்டும் என்றில்லை, பார்த்துச் செய்" என்று கூறினேன். நன்றியென்று குறுந்தகவல் வந்தது. மறுநாள் அவன் வரவில்லை, நானும் அவனை அழைத்துத் தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை. பணி ஆரம்பித்து ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கைத்தொலைபேசிக்குக் குருந்தகவல் ஒன்று வந்திருந்தது. அது இப்படிச் சொல்லிற்று, "வணக்கம் அன்பர்களே, துரதிஸ்ட்டவசமாக இன்று பிற்பகல் 3 மணிக்கு நாங்கள் எங்கள் சகோதரன் ஜோஷை இழந்துவிட்டோம். அவனின் மனைவியும், எங்கள் குடும்பமும் அவனைச் சூழ்ந்திருக்க, அவன் அமைதியாக எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றான். தயவு கூர்ந்து உங்களின் வேலைத்தள அணிகளில் இருக்கும், எனது சகோதரன் குறித்து அக்கறைப்படும் எல்லோருக்கும் இதனைத் தெரியப்படுத்துவீர்களா? உங்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது நன்றி. உங்களுடன் விரைவில் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்" என்று அது சொல்லியது. மனதில் இடி இறங்கியது போன்ற உணர்வு. கண்கள் கலங்கிவிட்டேன். முதன்முறையாக ஒரு வெள்ளைக்காரனுக்காக மனம் அழுதது. அவன் எனக்குச் சொந்தமில்லை, எனது இனமில்லை, எனது நெருங்கிய நண்பர் வட்டத்திலும் அவன் இல்லை. ஆனாலும் மனம் அழுதது. இது எப்படிச் சாத்தியம்? ஏன் அவனுக்கு? இதுதான் எனது மனதில் எழுந்த கேள்விகள். அவனைச் சென்று பார்க்கமுடியாத வருத்தமும் சேர்ந்து அழுத்த முழுவதுமாக மனமுடைந்து போனேன்.
-
மரணம்
அண்ணை, அது 2006 இல. என்ன சொல்கிறார்கள் என்று மூளை மொழிபெயர்த்து, கிரகிக்க டயிம் எடுத்த காலம். இப்ப பரவாயில்லையாக்கும் !!!😁
-
மரணம்
இந்தப் பலியேடிவ் கெயர் பற்றியும் சொல்ல வேண்டும். வாழ்வு முடியும் தறுவாயில், இனிமேல் அவர்களை மீள அவர்களின் பழைய வாழ்விற்குக் கொண்டுவர முடியாது என்கிற நிலை வரும்போது, சிகிச்சைகள் இன்றி, அவர்களை அவர்கள் பாட்டில், வாழ்வு முடியும்வரைக்கும் மகிழ்வாக வைத்துப் பராமரிக்கும் ஒரு நிலை. வெகுசில வைத்தியசாலைகளும், அநேகமான வயோதிபர் பராமரிக்கும் நிலையங்களும் இதற்கான வசதியைக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையங்களுக்குச் செல்வோர் ஓரிரு வாரங்களில் இயற்கை எய்துவதுதான் வழமை. நீங்கள் உங்களின் இறுதிநாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கும் உறவுகளுக்கும் சொல்லி, இறுதி யாத்திரிகைக்கு ஆயத்தப்படுத்த கால அவகாசம் கொடுக்கும், வாழ்வின் இறுதி நிலையின் கடைசிப்படி என்று வைத்துக்கொள்ளலாம். அப்படியில்த்தான் அவனும் இருந்தான்.இதனைக் கேட்டவுடன், அவன் உயிருடன் இருக்கும்போது எப்படியாவது அவனைப் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம் எழவே, "உனது அண்ணாவை நான் வந்து பார்க்க விரும்புகிறேன், எப்படிச் செய்யலாம்?" என்று கேட்டேன். "அவன் வீட்டில்த்தான் இருக்கிறான், நண்பர்கள் வந்து அங்கு, இங்கென்று அழைத்துச் செல்வார்கள். அவனது மனைவியும் அவன் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்கிறாள்" என்று கூறிவிட்டு, "நீ அவனுடன் பேசு, நிச்சயம் பேசுவான். உனக்கு விருப்பமான நேரத்தைக் கேட்டு, போய் பார்த்துவா" என்று சொன்னான். "என்னை அவனுக்கு அடையாளம் தெரியும் என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட்டேன். "உனது பெயரை அவன் மறந்திருக்கலாம், ஆனால் உன்னைக் காணும்போது உன்னைப்பற்றி அவன் பேசுவான், போனால் உனக்குத் தெரியும்" என்று அவன் கூறவே, எப்படியாவது பார்த்துவிட மனம் துடித்தது. வேலைத்தளத்தில் என்னுடன் பணிபுரியும் இன்னொரு நண்பனுடன் இதுபற்றிக் கேட்டேன். "நீ போவதென்றால் நானும் வருகிறேன்' நேரத்தைச் சொல்லு" என்று கூறினான். வீடு வந்ததும், "சனிக்கிழமை ஜோஷைப் பார்க்க செல்லவிருக்கிறேன், பாவம், இன்னும் கொஞ்ச நாள்த்தான் வாழப்போகிறான், நானும் அண்டியும் போகிறோம்" என்று கூறவும், "சனிக்கிழமை பிரியாவின்ர மகளின்ர சாமத்திய வீடு இருக்கெண்டெல்லோ சொல்லிக்கொண்டுவாறன்? அண்டைக்குப் போகப்போறன் எண்டுறியள்?" என்று முதலாவது தடை வீழ்ந்தது."எத்தனை மணிக்குச் சாமத்திய வீடு? மத்தியானத்துக்கிடையில வந்துருவன்" என்று கூறவும், "காலமை 8 மணிக்கு அங்க நிக்க வேணும்" என்று தடை இறுகியது. போச்சுடா, அவனைப் பார்க்க முடியாது என்று எண்ணிக்கொண்டு அண்டிக்கு (வேலைத்தள நண்பன்) தொலைபேசி எடுத்து, "மச்சான், சனிக்கிழமை சரிவராது போல கிடக்கு, வாற கிழமை போகலாமோ?" என்று கேட்கவும், "சரி, போகலாம்" என்று கூறினான். கடந்தவாரம் அவனது சகோதரனுடன் பேசும்போது அவன்பற்றி மீளவும் கேட்டேன். "இப்போது படுக்கையாகி இருக்கிறான். யாருடனும் பேசுவதில்லை. எனது பிள்ளைகள் அவனது கட்டிலின் அருகில் சென்று பெரியப்பா என்று காதில் பேசும்போது சிறிய புன்னகை மட்டும் பதிலாக வருகிறது. அவனை இந்த நிலையில் பார்க்கவே கஸ்ட்டமாக இருக்கிறது" என்று கூறினான். "அவனை இனியும் பார்க்க வரலாமா?" என்று கேட்டபோது, "நான் நினைக்கவில்லை, அவனால் எவருடனும் பேசவோ அல்லது எவரையும் பார்க்கும் உடல் நிலையோ இப்போது இல்லை. அம்மாவையும் அப்பாவையும் தவிர வேறு எவரும் அவனருகில் தற்போது இல்லை". என்று மிகவும் அமைதியாகக் கூறினான். அவனைப் பார்க்க முடியவில்லையே என்கிற குற்றவுணர்வும், கூடவே வந்துசென்ற சாமத்திய வீட்டுத் தடையும் ஆத்திரத்தையும் ஆற்றாமையினையும் எனக்குத் தந்தது.