Everything posted by ரஞ்சித்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்தியாவை மீறிக் கொள்வனவு செய்யப்பட்ட புளொட்டின் ஆயுதங்களைப் பறித்த ரஜீவும், புலிகளின் கொள்கலனை விடுவித்த எம்.ஜி.ஆர் உம் விடுதலை வேட்கை எனும் தனது புத்தகத்தில் எழுதும் அடேல், எம்.ஜி.ஆர் வழங்கிய பணத்தைக் கொண்டு புதிய போராளிகளை இனைக்கவும், அவர்களுக்கான பயிற்சிமுகாம்களை அமைக்கவும், ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவும், அரசியல்த் துறையினைப் பலப்படுத்தவும் பிரபாகரனால் முடிந்தது என்று கூறுகிறார். கறுப்புச் சந்தையில் இருந்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்துகொள்ள சர்வதேச ஆயுதக் கொள்வனவுப் பிரிவினை கே.பி தலைமையில் பிரபாகரன் உருவாக்கினார். லெபனானில் இருந்து பெருமளவு ஆயுதங்களைக் கொள்வனவு செய்த கே.பி, அவற்றைக் கொள்கலன் ஒன்றில் அடுக்கி வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் ஒன்றின் மூலம் சென்னைத் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்தார். அக்கொள்கலனில் பெருமளவு நவீன ஆயுதங்களும், தொலைத்தொடர்புக் கருவிகளும் இருந்தன. 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம் சென்னை துறைமுகத்தை அந்தக் கொள்கலன் வந்தடைந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக துறைமுகத்திலிருந்து அக்கொள்கலனை விடுவிக்க முடியாது போய்விட்டது. அதனை விடுவிக்க புலிகள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்தன. முதல் மாதத்தில் புளொட் அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட கொள்கலன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து சுங்க அதிகாரிகள் புலிகளின் கொள்கலனை விடுவிக்க அஞ்சினார்கள். அந்நேரம் தில்லியில் இருந்த மத்திய அரசை புளொட் அனுகியபோதும், கொள்கலனை விடுவிக்க முடியாது போய்விட்டது. 1984 ஆம் ஆண்டு சித்திரை 2 ஆம் திகதி ஹொங்கொங் நாட்டிலிருந்து புளொட் கொள்வனவு செய்த ஆயுதங்கள் நிரம்பிய கொள்கலன் ஒன்றினை சென்னைத் துறைமுகத்தில் இறக்கும்போது சுங்க அதிகாரிகள் அதனை கையகப்படுத்திக் கொண்டனர். பழைய செய்தித்தாள்கள் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட அக்கொள்கலனில் 1400 ரைபிள்கள், 300 ஸ்டன் துப்பாகிகள், ஐந்து ஜப்பானிய தொலைத்தொடர்புக் கருவிகள், எலெக்ட்ரோனிக் வானொலிக் கருவி மற்றும் பெருந்தொகையான ரவைகள் காணப்பட்டன. தவறான தசகவல்களைக் கொண்டு பெருமளவு ஆயுதங்கள் தருவிக்கப்பட்டதால் அக்கொள்கலன் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. தாய்வானிய ஆயுத முகவர் ஒருவரூடாக இவ்வாயுதங்களை புளொட் அமைப்பு கொள்வனவு செய்திருந்தது. தமது கொள்கலனை விடுவித்துக்கொள்ள புளொட் அமைப்பினர் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர். தில்லியில் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு புளொட் அமைப்பினர் அதனை விடுவிக்க முயன்றபோது அது கைகூடவில்லை. பின்னர் கம்மியூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக புதிய பிரதமர் ரஜீவ் காந்தியை அணுகி விடுவிக்க முயன்றனர், அதுவும் கைகூடவில்லை. தமிழ்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஊடாக ரஜீவ் காந்தியைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன. தன்னை அணுகிய தமிழ்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேசிய ரஜீவ், ஆயுதங்கள் கொண்டுவரப்படுவது குறித்து தன்னிடம் முன்னரே அறிவித்திருந்தால் தன்னால் உதவியிருக்க முடியும் என்று கூறியிருந்தார். தற்போது விடயம் ஊடகங்களுக்குச் சென்றுவிட்டதால் தான் செய்யக் கூடியது எதுவுமில்லை என்று ரஜீவ் கூறினார். "அதனை அவர்களை மறந்துவிடச் சொல்லுங்கள்" என்று தமிழ்நாடு கம்மியூனிஸ்ட் உறுப்பினர்களைப் பார்த்துக் கூறினார் ரஜீவ். நான் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று பிரபாகரன் ஒரு முருக பக்தர். தனது ஆயுதக் கொள்கலன் விடுவிக்கப்படுமிடத்து பழனி முருகன் ஆலயத்திற்கு வருவதாக அவர் நேர்ந்திருந்தார். அவ்வாறே அக்கொள்கலன் புலிகளின் மறைவிடத்தை பத்திரமாக வந்தடைந்ததும் வேண்டிக்கொண்டது போல பழனி முருகன் ஆலயத்திற்குச் சென்றார். ஆயுதங்கள் விடுவிக்கப்பட்டதற்காக முருகனுக்கும், தவறாது எம்.ஜி.ஆர் இற்கும் அவர் நன்றி கூறினார். புளொட் அமைப்பிற்காகக் கொண்டுவரப்பட்ட ஆயுதங்களை ரஜீவ் அரசு கையக்கபடுத்தியதன் மூலம் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கு அது ஒரு தெளிவான செய்தியைக் கூறியிருந்தது. அதாவது, போராளிகள் தமது ஆயுதத் தேவைக்காக இந்தியாவில் மட்டுமே தங்கியிருக்க முடியுமென்பதும், இந்தியாவைத் தாண்டி எடுக்கப்படும் எந்த முயற்சியும் இந்தியாவால் தடுக்கப்படும் என்பதுமே அது. இது பிரபாகரனுக்கு நன்கு தெரிந்தே இருந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்கள் இந்தியாவின் நலன்களுக்காக செயற்பட வேண்டுமே தவிர சொந்த விருப்புகளுக்காக அல்ல என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இலங்கை அரசு மீது அழுத்தம் கொடுப்பதே இந்தியாவால் போராளிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒரே பணி. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் பேச்சுவார்த்தைக்கு வந்து தமிழருக்கான தீர்வொன்றினை அடைவதற்கான இராணுவ அழுத்தத்தினை ஜெயவர்த்தன மீது கொடுப்பதைத் தவிர வேறு விடயங்களில் போராளி அமைப்புக்கள் ஈடுபட முடியாது என்பதை இந்தியா தெளிவாகவே சொல்லியிருந்தது. ஆகவேதான், இவ்வழுத்தத்தினைப் பிரியோகிக்க மட்டுமே போதுமான ஆயுதங்கள் என்று இந்திய அதிகாரிகள் கணக்கிட்ட சிறியளவிலான ஆயுதங்கள் போராளிகளுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டிருந்தன. ஆகவேதான், தனது ஆயுதக் கொள்கலனை இந்திய மத்திய அரசு ஒருபோது விடுவிக்காது என்பதை பிரபாகரன் தெளிவாக உணர்ந்துகொண்டார். ஆகவே, பாலசிங்கத்தை எம்.ஜி.ஆர் இடம் உதவிகேட்டு தூது அனுப்பினார். எம்.ஜி.ஆர் ஐ அவரது வாசஸ்த்தலத்தில் சந்தித்த பாலசிங்கம், அவர் வழங்கிய பணத்தினைக் கொண்டு வாங்கப்பட்ட ஆயுதங்கள் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றினை விடுவிக்க அவர் உதவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், அவை விடுவிக்கப்பட்டாலன்றி, விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்வது பிரபாகரனுக்குச் சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இதனைக் கேட்டதும் எதுவித தயக்கமும் இன்றி எம்.ஜி.ஆர் செயலில் இறங்கியதை பாலசிங்கம் நன்றியுடன் நினைவுகூர்கிறார். உடனடியாக சுங்க அதிகாரி ஒருவருடன் தொலைபேசியில் உரையாடிய எம்.ஜி.ஆர், அவரது பெயரை ஒரு காகிதத் துண்டில் எழுதி, சுங்கத் திணைக்களத்தில் அவரைச் சென்று சந்திக்கும்படி பாலசிங்கத்திடம் கூறினார். "அவர் உங்களுக்குத் தேவையானதைச் செய்வார்" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார் எம்.ஜி.ஆர். கொள்கலனை மீட்டுவரும் நடவடிக்கையினை சங்கரிடம் கொடுத்தார் பிரபாகரன். சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த புலிகளின் இரகசிய மறைவிடத்திற்கு பூரண பொலீஸ் காவலுடன் ஆயுதக் கொள்கலன் கொண்டுவந்து சேர்க்கப்பட்டது. அங்கு சேமிக்கப்பட முடியாத மேலதிக ஆயுதங்கள் பாலசிங்கத்தின் படுக்கையறையிலும் சேமிக்கப்பட்டன. தனது ஆயுதக் கொள்கலன் விடுவிக்கப்பட்டவுடன் எம்.ஜி.ஆரைச் சென்று சந்தித்து நன்றி கூறிய பிரபாகரன், அவரிடம் நன்றிப்பரிசாக ஒரு ஏ.கே - 47 ரக ரைபிளையும் கொடுத்து, "நீங்கள் கொடுத்த பணத்திலிருந்து வாங்கிய ஆயுதங்களில் ஒன்று" என்று கூறினார். மேலும், அதனை அங்கேயே துண்டு துண்டுகளாகக் கழற்றி மீளவும் ஒன்றாக்கிக் காட்டினார். பிரபாகரனின் நன்றியை ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், அவர் கொடுத்த துப்பாக்கியையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர் இன் பரோபகாரம் அன்றுடன் நின்று விடவில்லை. 1985 ஆம் ஆண்டு தனது நடவடிக்கைகளை புலிகள் விரிவாக்கியபோதும் அவர்களுக்கும் மேலதிகப் பணம் தேவைப்பட்டது. ஆகவே, எம்.ஜி.ஆர் உடன் இதுகுறித்துப் பேசி உதவி கேட்க பாலசிங்கத்தைப் பிரபாகரன் அனுப்பி வைத்தார். "உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர். "ஐந்து கோடிகள்" என்று பாலசிங்கம் பதிலளித்தார். "கவலைப்பட வேண்டாம்" என்று கூறிய எம்.ஜி.ஆர், தனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடிகளை அன்று வழங்கினார். சுமார் ஒருவருடம் சுகயீனமுற்றிருந்த பின்னர் 1987 ஆம் ஆண்டு மார்கழியில் எம்.ஜி.ஆர் இயற்கை எய்தினார். அவ்வருட ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவேளை பாலசிங்கம் அவரைச் சென்று சந்தித்தார். பாலசிங்கத்தைக் கண்டதும் எழுது அமர்ந்துகொண்ட எம்.ஜி.ஆர், அருகிலிருந்த தலையணையை மேலே தூக்கி, அடியில் இருந்த ஏ.கே - 47 ரகத் துப்பாக்கியை வெளியே எடுத்து பாலசிங்கத்திடம் காட்டி, "தம்பி இதை எனக்குப் பரிசளித்தான்" என்று மூன்று வருடங்களுக்கு முன்னர் பிரபாகரன் தனக்குக் கொடுத்த துப்பாக்கியை மகிழ்வுடன் அவருக்குக் காண்பித்தார். தான் இறக்கும்வரை பிரபாகரன் தனக்குப் பரிசளித்த துப்பாக்கியை தலைமாட்டில் அவர் வைத்துக்கொண்டிருந்தார்.
- Chennai port.jpeg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர் இற்கும் இடையிலான நட்பு அந்தவாரமே பிரபாகரன் எம்.ஜி.ஆரை ஐச் சென்று சந்தித்தார். பாலசிங்கமும் பிரபாகரனுடன் கூடவே சென்றிருந்தார். பிரபாகரனை மிகுந்த அன்புடன் எம்.ஜி.ஆர் வரவேற்றார். அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு அப்போதே ஆரம்பித்து விட்டது. தனது சொந்தத் தம்பி போன்றே பிரபாகரனை எம்.ஜி.ஆர் நடத்தினார். அவரை வாஞ்சையுடன் "தம்பி" என்று அவர் அழைக்க ஆரம்பித்தார். பிரபாகரனுடன் பேசும்பொழுது அவரது பெற்றோர், சகோதரர்கள், அவரது இளம்பிராயம், அவரது கனவுகள், இலட்சியம் ஆகியனபற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். இளைஞனாக தனது கெரில்லா வாழ்வினை தான் ஆரம்பித்த நாட்கள் குறித்து பிரபாகரன் பேசும்பொழுது எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போனார். இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்திவரும் அட்டூழியங்கள் குறித்து பிரபாகரன் பேசும்பொழுது எம்.ஜி.ஆர் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். அச்சந்திப்பு எம்.ஜி.ஆர் இன் வாக்குறுதி ஒன்றுடன் அன்று முடிவிற்கு வந்தது, "தம்பி, உனக்கு என்ன வேண்டுமென்றாலும், எப்போதும் என்னைக் கேள்" என்பதுதான் எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்குக் கொடுத்த வாக்குறுதி. "சந்திப்பு பொதுவானதாகவே அன்று காணப்பட்டது. பிரபாகரன் பேசப் பேச எம்.ஜி.ஆர் அமைதியாக அவற்றை உள்வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால், அக்கணமே எம்.ஜி.ஆர் இற்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய நட்பு உருவாகி விட்டது" என்று எம்.ஜி.ஆர் குறித்து எழுதும்போது மோகன்தாஸ் குறிப்பிடுகிறார். தனக்குப் பிரியமானவர்களை தன்னுடன் காலையுணவுக்கு அழைப்பதென்பது எம்.ஜி.ஆர் இற்குப் பிடித்த ஒரு விடயம். அவர்களுக்கிடையிலான முதலாவது சந்திப்பு முற்றுப்பெற்று சில நாட்களுக்குள் எம்.ஜி.ஆர் இன் காரியதிரிசியிடமிருந்து பாலசிங்கத்திற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. உடனடியாக பிரபாகரனை அழைத்துக்கொண்டு சந்திப்பொன்றிற்கு வாருங்கள் என்பதே அந்த அழைப்பின் நோக்கம். "முதலமைச்சர் அவருக்காகக் காத்திருக்கிறார்" என்று அந்த அதிகாரி பாலசிங்கத்திடம் கூறினார். அவர்கள் உடனடியாக எம்.ஜி.ஆர் இன் வாசஸ்த்தலத்திற்கு விரைந்தார்கள். வாசலிலேயே அவர்களை வரவேற்ற காரியாதிரிசி, அவர்களை உணவருந்தும் அறைக்கு அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆர் அங்கிருந்தார். "வா தம்பி, உன்னுடன் இன்று காலையுணவு அருந்த விரும்புகிறேன்" என்று அவர் பிரபாகரனைப் பார்த்துக் கூறினார். முதலில் சட்னி, சாம்பாருடன் இட்லி பரிமாறப்பட்டது. பின்னர் தோசை. பூரி, உப்புமா போன்றவையும் பின்னர் பரிமாறப்பட்டன. நீரிழிவு நோயினால் அவஸ்த்தைப்பட்டு வந்த பாலசிங்கம் அன்றைய அவதியில் தனது இன்சுலின் ஊசி மருந்தினை எடுக்க மறந்திருந்தார். ஆகவே சிரமப்பட்டுக்கொண்டு நின்ற பாலசிங்கத்தை எம்.ஜி.ஆர் கவனித்து விட்டார். "எனது விருந்தினர்கள் வயிறார உணவருந்தவேண்டும் என்று நான் விரும்புவேன்" என்று எம்.ஜி.ஆர் பாலசிங்கத்தைப் பார்த்துக்கொண்டே கூறவும், பாலசிங்கம் செய்வதறியாது பிரபாகரனைப் பார்த்தார். ஆனால் பிரபாகரனது உணவருந்தும் தட்டோ சுத்தமாகக் காலியாகியிருக்கவே எம்.ஜி.ஆர் அகமகிழ்ந்து சிரித்தார். "தம்பியைப் பாருங்கள், உங்களை விருந்திற்கு அழைத்தவர்களை திருப்திப்படுத்துவது எப்படியென்று கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு பரிமாறப்படும் உணவிற்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக்கொண்டே எம்.ஜி.ஆர் கூறினார். அருகிலிருந்து உணவு பரிமாறிக்கொண்டிருந்த ஊழியரைப் பார்த்தும் மேலும் இட்லி, தோசை சாம்பார் ஆகியவற்றை அவர் எடுத்துவரச் சொன்னார். "எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது, நான் வழமையாக எடுக்கும் இன்சுலின் மருந்தினை இன்று எடுக்க மறந்துவிட்டேன், ஆகவேதான் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன், நான் அதிகம் சாப்பிடலாகாது" என்று கெஞ்சுமாற்போல் கூறினார் பாலசிங்கம். சிரித்துக்கொண்டே பேசிய எம்.ஜி.ஆர், "எனக்கும் நீரிழிவு நோய் இருந்தது, ஆனால் நான் சுகமடைந்து விட்டேன். நீரிழிவு நோய் இருந்தால் உண்ணக் கூடாது என்று யார் உங்களுக்குச் சொன்னது? உங்களை தவறாக வழிநடத்தும் அந்த வைத்திய மூடர் யார்?" என்று கேட்டார் எம்.ஜி.ஆர். பதிலளித்த பாலசிங்கம், தான் ஒவ்வொருநாளும் இன்சுலின் மருந்தினைத் தவறாது எடுப்பதாகவும், தனது வாழ்வே அதில் தங்கியிருப்பதாகவும் கூறினார். ஆனால், நீரிழிவு நோயினைக் குணப்படுத்த முடியும் என்று எம்.ஜி.ஆர் தொடர்ந்தும் விவாதித்தார். தனது வைத்தியர் தன்னிடம் அப்படியே கூறியதாகவும் அவர் கூறியதுடன் தனது வைத்தியரையும் அங்கு வரவழைத்தார். வைத்தியருடன் பேசிய எம்.ஜி.ஆர், "பாலசிங்கம் தன்னை ஒரு நீரிழிவு நோயாளியென்றும் , அதனைக் குணப்படுத்த முடியாதென்றும் கூறுகிறார். நான் அவரிடம் நீரிழிவு நோயினைக் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறேன். நீங்கள் ஒரு நிபுணர்தானே? எங்களில் யார் கூறுவது சரியென்று கூறுங்கள் பார்க்கலாம்" என்று கேட்டார். பதிலளித்த வைத்தியரும், "நீங்கள் சொல்வதே சரி" என்று எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறினார். தொடர்ந்து பேசிய எம்.ஜி.ஆர், வைத்தியரைப் பார்த்து, "நீரிழிவு நோயினைக் குணப்படுத்த எவ்வளவு காலம் தேவைப்படும்? சுமார் இரு வாரங்கள் போதுமல்லவா?" என்று கேட்டார். அதற்கு ஆமென்று பதிலளித்தார் வைத்தியர். "சரி, அப்படியானால் பாலசிங்கத்தை அழைத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துப் பராமரியுங்கள்" என்று பணித்தார் எம்.ஜி.ஆர். பாலசிங்கம் திரும்பிப் பிரபாகரனைப் பார்த்தார். அவரது முகம் எந்தச் சலனமும் இல்லாமல் இருப்பதைக் கண்ட அவர், நடப்பதை பார்த்து உள்ளுக்குள் இரசித்துக்கொண்டிருக்கிறார் பிரபாகரன் என்பதை நன்கு புரிந்துகொண்டார். எம்.ஜி.ஆர் இன் வீட்டை விட்டுக் கிளம்பியதும், அடக்கமுடியாமல் வெடித்துச் சிரித்தார் பிரபாகரன். வைத்தியர் பக்கம் திரும்பிய பாலசிங்கம், "எதற்காக எம்.ஜி.ஆர் இடம் பொய் கூறினீர்கள்?" என்று கேட்டார். பதிலளித்த வைத்தியர், "எனது முதலமைச்சருடன் நான் எப்படி முரண்பட முடியும்? இப்போது ஒரு பிரச்சினையுமில்லை. நீங்கள் என்னுடன் வைத்தியசாலைக்கு வாருங்கள், இரு வாரங்கள் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என்று அமைதியாகக் கூறினார். வைத்தியர் கூறியவாறே இரு வாரங்கள் ஓய்வெடுக்கச் சம்மதித்தார் பாலசிங்கம். சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை பிரபாகரனும், பாலசிங்கமும் எம்.ஜி.ஆர் உடன் காலையுணவினை அருந்த அழைக்கப்பட்டார்கள். அன்று செல்லுமுன் தேவைக்கு அதிகமாகவே இன்சுலின் மருந்தினைச் செலுத்திக்கொண்டார் பாலசிங்கம். அவர்களைக் கண்டதும், "உங்களின் நீரிழிவு நோய் எப்படி இருக்கிறது? குணமாகிவிட்டீர்ர்களா?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர். "ஆம் சேர், மிக்க நன்றி" என்று பதிலளித்தார் பாலசிங்கம். அன்று அவருக்குப் பரிமாறப்பட்ட அனைத்தையும் எம்.ஜி.ஆர் திருப்திப் படுமளவிற்கு உண்டுமுடித்தார் பாலசிங்கம்.
- MGR.jpg
-
யாழில் விமானப்படையின் கண்காட்சி
2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பை ஏதுவாக்கிய காரணிகளில் சிங்கள விமானப்படையின் விமானங்களும் முக்கிய பங்கினை ஆற்றின. தமிழரைப் பொறுத்தவரையில் இவ்விமானங்கள் அவர்களை அழிப்பதற்காகவே சிங்களத்தால் கொள்வனவுசெய்யப்பட்டு, பாவிக்கப்பட்டு வருகின்றன. அப்படியொரு விமானத்தில் தமிழ் மாணவர்கள் ஏறிப் பார்த்துவிட்டார்கள் என்றும், அவர்கள் தமது பிறப்பின் பயனை அனுபவித்துவிட்டார்கள் என்றும், இலங்கையர்களாக நாம் ஒன்றிணைவோம் என்றும் கூக்குரலிடுவது ஆக்கிரமிப்பினை தமிழர்களிடமிருந்தே ஆமோதித்து, அரவணைக்கும் செயலேயன்றி வேறில்லை. தமது யூடியூப் சனல்களுக்குச் செய்திகிடைக்காதா என்று அலையும் சில தெரு........ இந்தச் சிங்களக் கொலைக்கருவிகளும் செய்திதான். இதனைச் செய்தியாக்கி லைக்குகளை அள்ளக் காத்திருக்கும் பதர்கள் தமது இனத்தின் பிணங்களை வைத்துப் பணம் பண்ணுவதற்குச் சமனானவர்கள். தமிழர்களின் மீதான இனவழிப்பினை சிங்கள வெற்றிவிழாவாகக் கொண்டாடும்போது அவ்விழாவில் தமிழர்கள் கலந்துகொள்வதும் ஒன்றுதான், இனக் கொலையில் முக்கிய பங்காற்றிய இவ்விமானங்களின் கண்காட்சியில் கலந்துகொள்வதும் ஒன்றுதான். "உங்களை அழிக்க நாம் பாவித்த கொலைக்கருவிகளை வந்து பாருங்கள், இனியொரு முறை சுதந்திரம் கேட்டாலும் இவற்றைக் கொண்டே மீண்டும் ஒருமுறை உங்களை அழிப்போம்" என்பதுதான் சிங்களம் விடுக்கும் செய்தி. எமது உறவுகளை பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்த எதிரியின் கொலைக்கருவிகளில் இருந்து எம்மை விலத்தியே வைத்திருப்போம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
கருநாநிதி நடத்திய நாடகமும், எம்.ஜி.ஆர் புலிகளுக்குக் கொடுத்த இரண்டு கோடி ரூபாய்களும் தமிழ்ப்போராளி அமைப்புக்கள் அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் என்கிற பொதுவான விருப்பம் தமிழ்நாட்டில் அன்று இருந்துவந்தது. இதனை தனது அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த தந்திரசாலியான எம்.ஜி.ஆர் எண்ணினார். போராளி அமைப்புக்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்த தமிழ்நாட்டின் பொலீஸ் உளவுத்துறைத் தலைவர் மோகன் தாஸ், போராளிகளை எம்.ஜி.ஆர் சந்திப்பதற்கான ஒழுங்குகளைச் செய்தார். இந்த சந்திப்பு குறித்து பத்திரிக்கைகளிலும் பரவலான விளம்பரம் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டு எதிர்க்கட்சித் தலைவராக அன்று இருந்த கருநாநிதியுடன் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் தலைவர்கள். 1984 ஆம் சித்திரையில் பாலசிங்கம் தம்பதிகள் சென்னை திருவாண்மியூரில் தங்கியிருந்தனர். அருகிலிருந்த இன்னொரு வீட்டில் பிரபாகரன் தங்கியிருந்தார். அடையாரில் அமைந்திருந்த புலிகளின் அரசியல்ப் பணிமனையில் ஒருநாள் பாலசிங்கம் இருந்தவேளை தமிழ்நாடு பொலீஸ் புலநாய்வுத்துறையைச் சேர்ந்த பொலீஸ்காரர் ஒருவர் போராளித் தலைவர்களை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சந்திக்க விரும்புவதாகக் கூறி அழைப்பிதழ் ஒன்றினைக் கொடுத்தார். மேலும் இச்சந்திப்பின்போது ஐந்து போராளி அமைப்புக்களையும் ஒன்றிணைத்து பொதுவான அமைப்பொன்றினை ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் அப்பொலீஸ் அதிகாரி பாலசிங்கத்திடம் கூறினார். போராளிகளுக்கிடையிலான பிணக்குகள் குறித்து எம்.ஜி.ஆர் அக்காலத்தில் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததுடன் "ஒற்றுமையே பலம்" என்றும் அடிக்கடி பேசி வந்தார். மறுநாள் அதேவகையான அழைப்பிதழ் ஒன்றினை எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த கருநாநிதியிடமிருந்தும் பாலசிங்கம் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆர் நடத்தவிருந்த சந்திப்பிற்கு ஒருநாள் முன்னதாக கருநாநிதி தனது சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். கருநாநிதியின் போராளிகளுடனான சந்திப்பிற்கும் பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தம்மை விலத்தியே வைத்திருப்பது என்கிற புலிகளின் நிலைப்பாட்டிற்கு தமிழ்நாட்டின் இரு முக்கிய அரசியல்த் தலைவர்கள் விடுத்திருந்த சந்திப்பிற்கான அழைப்புக்கள் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தன. பாலசிங்கம் தமிழில் எழுதிவந்த விடுதலை இதழில் குறிப்பிடும்போது தன்னிடம் வழங்கப்பட்ட இரு அழைப்பிதழ்களையும் பிரபாகரனிடம் தான் காட்டியபோது அவை எவற்றிலும் தாம் பங்கேற்கப்போவதில்லை என்று அவர் கூறியதாக எழுதுகிறார். பிரபாகரனின் இந்த முடிவிற்கு இரு காரணங்கள் இருந்தன. முதலாவது, எம்.ஜி.ஆர் இற்கும் கருநாநிதிக்கும் இடையிலான அரசியப் போட்டியில் தான் அகப்பட்டு விடக் கூடாதென்பது. அவரைப்பொறுத்தவரை ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு இவ்விரு தலைவர்களினதும் ஆதரவு தேவை என்று அவர் உறுதியாக இருந்தார்.இவர்களுள் எவரினதும் எதிர்ப்பினைத் ஈழத் தமிழர்கள் சம்பாதித்துவிடக்கூடாதென்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இரண்டாவது, இவ்வாறான சந்திப்புக்களின்போது உமாமகேஸ்வரனும் பங்குகொள்வார் என்பதனால் அவ்வாறான சந்திப்புக்களை பிரபாகரன் வெறுத்தார். ஒருவரையொருவர் நேராகச் சந்திக்கும்போது தேவையற்ற மோதல்கள் இடம்பெறலாம் என்று பிரபாகரன் கருதினார். ஆகவே, இது சந்திப்பிற்கான மூல நோக்கத்தையே கலைத்து விட்டுவிடும் என்று பிரபாகரன் வாதிட்டார். ஐந்து முக்கிய போராளி அமைப்புக்களின் தலைவர்களில் மூன்று அமைப்புக்களின் தலைவர்களே கருநாநிதியின் சந்திப்பில் கலந்துகொண்டனர். சிறீசபாரட்ணம், பத்மநாபா, பாலக்குமார் ஆகியோரே அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். பிரபாகரனைப் போலவே உமா மகேஸ்வரனும் இக்கூட்டத்தில் இருந்து தன்னை விலத்தி வைத்திருந்தார். ஆனாலும், மூன்று போராளி அமைப்புக்களின் தலைவர்களைச் சந்தித்த நிகழ்வினை பெருவெற்றியாகக் காட்டிய கருநாநிதி அச்சந்திப்பின் பின்னர் பெரும் எடுப்பில் பத்திரிக்கை மாநாடு ஒன்றினையும் நடத்தினார். இதனால் எம்.ஜி.ஆர் சினமடைந்தார். போராளித் தலைவர்கள் சிலரைச் சந்தித்தன் மூலம் கருநாநிதி அரசியல் வெற்றியொன்றினைச் சம்பாதித்துவிட்டதாக எம்.ஜி.ஆர் எண்ணினார். ஆனால், கருநாநிதியிடம் தோற்றுப்போக அவர் விரும்பவில்லை. மறுநாள் தான் நடத்த எண்ணியிருந்த போராளித் தலைவர்களுடனனான சந்திப்பினை திடீரென்று அவர் இரத்துச் செய்தார். அவரிடம் வேறொரு திட்டம் இருந்தது. "அன்று மாலை, புலநாய்வுத்துறையின் உப தலைவர் அலெக்ஸாண்டர் அடையார் அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார்" என்று பாலசிங்கம் விடுதலையில் எழுதுகிறார். "அவரை எனக்கு நன்கு தெரிந்திருந்தது. எமக்குப் பலமுறை அவர் உதவியிருக்கிறார். கருநாநிதியைச் சென்று சந்தித்த மூன்று போராளித் தலைவர்கள் மீதும் எம்.ஜி.ஆர் கோபத்தில் இருக்கிறார் என்று அவர் என்னிடம் கூறினார். அன்று மாலையே புலிகளைச் சந்திக்க எம்.ஜி.ஆர் விரும்புவதாக அலெக்ஸாண்டர் என்னிடம் கூறினார். தனது விருந்தினர் மாளிகைக்கு புலிகளை அழைத்துவர எம்.ஜி.ஆர் தனக்குக் கட்டளை பிறப்பித்திருப்பதாகவும் அவர் கூறினார். நான் தலைமையிடம் இதுகுறித்துப் பேசியபின்னரே முடிவெடுக்க முடியும் என்று கூறவும், உங்களை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறார், அவரை ஏமாற்றி விடாதீர்கள் என்று அலெக்ஸாண்டர் பதிலளித்தார்" என்று பாலசிங்கம் குறிப்பிடுகிறார். மேலும், பாலசிங்கத்திடமிருந்து விடைபெற்றுச் செல்லுமுன் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறிச் சென்றார் அலெக்ஸாண்டர். அதுதான், "தமிழ்நாட்டு முதலமைச்சரை கோபப்பட வைத்துவிட்டு தமிழ்நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்து செயற்படலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்" என்பதுதான் அந்த எச்சரிக்கை. "எம்.ஜி.ஆர் உமாமகேஸ்வரனையும் சந்திக்கிறாரா?" என்று பாலசிங்கம் வினவினார். அதற்குப் பதிலளித்த அலெக்ஸாண்டர், "அவரை இன்னொருநாள் சந்திக்கலாம், ஆனால் பிரபாகரனைச் சந்திப்பதில் அவர் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார்" என்று கூறினார். பின்னர் பிரபாகரனுடன் இந்தக் கோரிக்கை குறித்து ஆலோசித்தார் பாலசிங்கம். எம்.ஜி.ஆர் உடனான சந்திப்பை எக்காரணம் கொண்டும் தவிர்க்க முடியாது என்று அவர் பிரபாகரனிடம் விளங்கப்படுத்தினார். இதனையடுத்து பாலசிங்கத்தை சங்கரையும், பேபி சுப்பிரமணியத்தையும், நித்தியானந்தனையும் அழைத்துக்கொண்டு எம்.ஜி.ஆரைச் சந்திக்கச் செல்லுமாறு பிரபாகரன் கேட்டுக்கொண்டார். நித்தியானந்தன் அப்போது விடுதலைப் புலிகள் சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். எம்.ஜி.ஆர் தன்னை சந்திக்க அழுத்தம் கொடுத்தால் தான் அவரைச் சந்திக்க வரமுடியும் என்றும் பாலசிங்கத்திடம் தெரிவித்தார் பிரபாகரன். புலிகளின் தூதுக்குழுவினரை மிகுந்த வாஞ்சையுடன் வரவேற்ற எம்.ஜி.ஆர், "உங்களின் தலைவர் பிரபாகரன் வரவில்லையா?" என்று பாலசிங்கத்திடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த பாலசிங்க, "அவர் சென்னையில் இல்லை, அடுத்த சந்திப்பில் அவரும் கலந்துகொள்வார்" என்று கூறினார். பின்னர், "கருநாநிதி ஏற்பாடு செய்த சந்திப்பில் ஏன் நீங்கள் கலந்துகொள்ளவில்லை" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "போராளிகளுக்கிடையிலான ஒற்றுமை குறித்து பேச முதன்முதலாக அழைப்பு விடுத்த தலைவர் நீங்களே. ஆனால், உங்களைத் தோற்கடிக்கவே கருநாநிதி ஒருநாள் முன்னதாக தனது சந்திப்பினை நடத்தினார். அவரது சந்திப்பில் கலந்துகொள்வதன் ஊடாக அவருக்கு அரசியல் ஆதாயத்தை நாம் வழங்கிவிட விரும்பவில்லை. அதனாலேயே நாம் அச்சந்திப்பினைத் தவிர்த்தோம்" என்று கூறினார். இதனையடுத்து எம்.ஜி.ஆர் இன் முகம் பிரகாசமானது. "தமிழ்நாடு அரசியலை நீங்கள் நன்கு தெரிந்துவைத்திருக்கிறீர்கள்" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார் எம்.ஜி.ஆர். பின்னர், "நீங்கள் ஏன் குழுக்களாகப் பிரிந்து இயங்குகிறீர்கள்? ஏன் நீங்கள் சேர்ந்து இயங்கக் கூடாது?" என்று பாலசிங்கத்திடம் வினவினார் எம்.ஜி.ஆர். இச்சந்தர்ப்பத்தினை இலங்கையில் நடக்கும் இனப்பிரச்சினையின் அடிப்படை, பல தமிழ்ப் போராளி அமைப்புக்களின் உருவாக்கம், புலிகள் அமைப்பின் கொள்கைகள், கட்டமைப்புக்கள், இலட்சியம் மீதான உறுதிப்பாடு, போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஆகிய விடயங்கள் குறித்து விளங்கப்படுத்துவதற்காக பாலசிங்கம் பாவித்தார். இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் வன்கொடுமைகள் குறித்த புகைப்படங்களையும், ஒளிநாடாக்களையும் எம்.ஜி.ஆர் இடம் அவர் காண்பித்தார். பின்னர் , "உமா மகேஸ்வரனைப்பற்றிக் கூறுங்கள். அவர் தனது அமைப்பே உண்மையான புலிகள் என்று கூறிவருகிறாரே? பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையே என்னதான் பிரச்சினை?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் அம்.ஜி.ஆர். பாலசிங்கம் பதிலளித்தபோது, "தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் எல்லாவற்றையும் ஈழத்துப் புலிகள் என்றே அழைக்கிறார்கள். அதனால் சில சமூக விரோத அமைப்புக்களின் செயற்பாடுகளும் புலிகளின் பெயரிலேயே வந்து வீழ்ந்துவிடுகின்றன. உமா மகேஸ்வரனும் ஒருகாலத்தில் புலிகள் அமைப்பில் இருந்தவர்தான், ஆனால் ஒழுக்கச் சீர்கேடு ஒன்றிற்காக அவரை அமைப்பிலிருந்து நீக்கிவிட்டோம்" என்று அவர் மேலும் கூறினார். அதன்பின்னர், இந்தியாவினால் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், நிதியுதவிகள் குறித்து பாலசிங்கத்திடம் எம்.ஜி.ஆர் வினவினார். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், இந்தியப் பயிற்சி மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது என்று கூறினார். இப்பயிற்சியின் மூலம் 200 புலிகளையே பயிற்றுவிக்க முடிந்திருக்கிறது. புலிகளை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்தியா நடத்துகிறது. புலிகளைக் காட்டிலும் மிக அதிகளவான மாற்றியக்கப் போராளிகளை இந்தியா பயிற்றுவித்து வருகிறது. ஆனால், இப்போராளிகள் ஈழத்தில் செயற்றினுடன் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதில்லை என்று கூறியதோடு, இந்தியாவினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் வினைத்திறன் குறைந்த பழமையான ஆயுதங்கள் என்றும், மிகச் சிறிய எண்ணிக்கையான ஆயுதங்களே இந்தியாவினால் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாத்துக்கொள்வதற்காகவே தமிழ்ப் போராளி அமைப்புக்களை இந்தியா பயன்படுத்தி வருகிறதென்பது தமக்கு நன்கு தெரியும் என்றும் அவர் கூறினார். பாலசிங்கம் பேசுவதைப் பொறுமையாக செவிமடுத்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர், "இப்போது எனக்கு எல்லாமே புரிகிறது. நான் என்ன செய்யவேண்டும் என்று கூறுங்கள். என்னிடம் இருந்து எவ்வகையான உதவியினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று அவர் பாலசிங்கத்திடம் வினவினார். அதற்குப் பதிலளித்த பாலசிங்கம், "இந்தியாவினால் பயிற்றப்பட்ட 200 புலிகளைக் கொண்டு இலங்கை இராணுவத்தைப் போரில் வெற்றிகொள்ள முடியாது. குறைந்தது 1000 பயிற்றப்பட்ட போராளிகளாவது எம்மிடம் இருக்க வேண்டும். ஆகவே, மேலதிகப் போராளிகளைப் பயிற்றுவிக்க தமிழ்நாட்டில் நாமாகவே சில பயிற்சி முகாம்களை அமைத்துக்கொள்ள விரும்புகிறோம். பின்னர் அவர்களுக்கான ஆயுதங்களையும் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பெருமளவு பணம் வேண்டும். அதற்கான நிதியுதவியினை உங்களால் கொடுக்க முடியுமா? அப்படி நீங்கள் உதவினால், அது எமது போராட்டத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக அமையும். நீங்கள் செய்யும் இந்த உதவியினை எமது மக்கள் என்றென்றும் நினைவில் வைத்து நன்றிகூர்வார்கள்" என்று எம்.ஜி.ஆர் ஐப் பார்த்துக் கூறினார் . "சரி, என்னிடம் இருந்து எவ்வளவு பணத்தினை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?" என்று பாலசிங்கத்திடம் கேட்டார் எம்.ஜி.ஆர். இந்த தருணத்தை பாலசிங்கம் இப்படி நினைவுகூர்கிறார், "எனக்கு எப்படிப் பதிலளிப்பதென்றே தெரியவில்லை. எமக்குப் பெருமளவு பணம் தேவைப்படும் என்று நான் இழுத்தேன். பரவாயில்லை, எவ்வளவுதான் வேண்டுமென்று சொல்லுங்கள் என்று அவர் என்னைடம் மீண்டும் கேட்டார். நான் சங்கப்படுவதை உணர்ந்துகொண்ட சங்கர், இடையில் பேசத் தொடங்கினார். எமக்குக் குறைந்தது இரண்டுகோடி ரூபாய்களாவது வேண்டும் என்று அவர் கூறினார். ஆயிரம் போராளிகளைப் பயிற்றுவிக்க ஒரு கோடியும், அவர்களுக்கான ஆயுதங்களை வாங்கிக்கொள்ள இன்னொரு கோடியும் தேவைப்படும் என்று சங்கர் கூறினார். பெருமூச்சு ஒன்றினை வெளியிட்ட முதலமைச்சர், வெறும் இரண்டு கோடிகளா? என்று கூறிவிட்டு, என்னைப்பார்த்து, நாளைக்கு இரவு 10 மணிக்கு ஒரு வாகனத்தையும் எடுத்துக்கொண்டு வந்து பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று சாதாரணமாகக் கூறவும் நாம் வாயடைத்துப் போனோம். அவரது பரோபகாரத்தை மெச்சிக்கொண்ட நாங்கள், நாளை நிச்சயம் பிரபாகரனையும் அழைத்து வருகிறோம் என்று கூறிவிட்டுச் சென்றோம்" என்று கூறுகிறார். பாலசிங்கமும் ஏனையோரு இந்த மகிழ்ச்சியான செய்தியை பிரபாகரனிடம் தெரிவிக்க அவரது வாசஸ்த்தலத்திற்குச் சென்றார்கள். பிரபாகரனாலோ அதனை நம்ப முடியவில்லை. ஆகவே, தாம் நகைச்சுவைக்காக இதனைக் கூறவில்லை என்று அவர்கள் மீண்டும் அவரைப் பார்த்துக் கூறினார்கள். அதன்பின்னர் பேசிய பிரபாகரன் ஓரிரு நாட்களில் தான் எம்.ஜி.ஆரைச் சந்தித்து, தனிப்பட்ட ரீதியில் இதற்கு நன்றி கூறப்போவதாகக் கூறினார். எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டவாறே மறுநாள் வாகனம் ஒன்றினை அமர்த்திக்கொண்டு எம்.ஜி.ஆர் இன் மாளிகைக்குச் சென்றார் பாலசிங்கம். ரகுவே வாகனத்தை செலுத்திக்கொண்டு போனார். தனது மாளிகையின் வாசலில் பாலசிங்கத்தின் வருகைக்காக எம்.ஜி.ஆர் காத்து நின்றார். வாசலை நோக்கி வாகனம் வருவதை அவதானித்த எம்.ஜி.ஆர் சற்று விலகி நின்று, வாகனத்தை தனது மாளிகையினை நோக்கி செலுத்துமாறு கூறினார். மாளிகையின் முன்னால் வாகனம் நின்றதும் பாலசிங்கத்தை அவர் வரவேற்றார். பின்னர் பாலசிங்கத்திற்கு அருகில் நின்றிருந்த ரகுவைப் பார்த்து, "இந்தப் பையன் யார்?" என்று எம்.ஜி.ஆர் வினவினார். "இவர் பிரபாகரனின் நம்பிக்ககைக்குரிய மெய்ப்பாதுகாவலர்" என்று பாலசிங்கம் பதிலளித்தார். திருப்தியடைந்த எம்.ஜி.ஆர், அவர்களை மாளிகையினுள் அழைத்துச் சென்றார். பின்னர் தனியே பாலசிங்கத்தை அழைத்துச் சென்ற எம்.ஜி.ஆர், வீட்டினுள் அமைக்கப்பட்டிருந்த லிப்ட்டினுள் நுழைந்து வீட்டின் நிலக்கீழ் பகுதிக்குச் சென்றார். லிப்ட்டின் கதவு திறந்துகொண்டதும், அங்கிருந்த அறைகளில் ஒன்றிற்குள் பாலசிங்கத்தை அழைத்துச் சென்றார் அவர். அப்பகுதியில் சில பெட்டிகள் நிரையாக அடுக்கப்பட்டிருக்க இரு திடகாத்திரமான மனிதர்கள் அவற்றிற்குக் காவல் காத்து நின்றனர். அந்த இரு நபர்களுடனும் மலையாளத்தில் பேசிய எம்.ஜி.ஆர், "அவர்களுக்கு இரு கோடிகளைக் கொடுங்கள்" என்று கூறினார். அவர்கள் 20 பெட்டிகளை எடுத்து லிப்ட்டினுள் வைத்தார்கள். வீட்டின் முன்பகுதிக்கு வந்ததும் வாகனத்தில் அப்பெட்டிகளை ஏற்றிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் இடம் நன்றி தெரிவித்த பாலசிங்கம், கூடவே பொலீஸாரையும் துணைக்கு அனுப்பமுடியுமா என்று வினவினார். பெருந்தொகைப் பணத்தை தனியாக எடுத்துச் செல்லும்போது வழியில் பொலீஸார் மறித்தால் விபரீதமாகிவிடும் என்பதே அதற்குக் காரணம். உடனேயே பொலீஸாருடன் தொலைபேசியில் எம்.ஜி.ஆர் பேசவும், சில நிமிடங்களில் ஆயுதம் தரித்த பொலீஸார் இரு ஜீப் வண்டிகளில் வந்திறங்கினர். அவர்களின் அதிகாரியிடம் பேசிய எம்.ஜி.ஆர், பாலசிங்கமும் ஏனையோரும் வந்த வாகனத்தை பத்திரமாக அவர்களின் வீடுவரை வழிநடத்திச் செல்லுமாறு பணித்தார். "எமது வாகனத்திற்கு முன்னால் ஆயுதம் தரித்த பொலீஸ் ஜீப்பொன்று சென்றுகொண்டிருந்தது. இரண்டாவது ஜீப் எமக்குப் பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. வண்டியில் இரண்டு கோடி ரூபாய்களை வைத்துக்கொண்டு நானும் ரகுவும் சென்னையின் கடற்கரைச்சாலயூடாக திருவாண்மியூரில் இருந்த எமது வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தோம். எமது தலைவர் பிரபாகரன், நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி, கேணல் சங்கர் மற்றும் சில போராளிகள் எமது வருகையினை எதிர்பார்த்து ஆர்வத்துடன் காத்திருந்தனர். வீட்டினையடைந்ததும், என்னிடம் வந்து பேசிவிட்டு பொலீஸார் அங்கிருந்து சென்றனர்" என்று அந்த எதிர்பாராத அனுபவம் குறித்து பாலசிங்கம் எழுதுகிறார். பெட்டிகளில் இருந்த பணம் பாலசிங்கத்தின் படுக்கையறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. ஒவ்வொரு பெட்டியாக அவற்றை அவர்கள் திறக்கத் தொடங்கினார்கள். பெட்டிகளுக்குள் நூறு ரூபாய்க் கட்டுகள் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்படிருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் பத்துலட்சம் ரூபாய்கள் இருந்தன. பணத்தை எண்ணி முடிக்கும்போது விடிந்துவிட்டிருந்தது. விரைவில் எம்.ஜி.ஆர் ஐச் சந்தித்து தான் நன்றி தெரிவிக்கப்போவதாக அங்கு பிரபாகரன் அறிவித்தார். பிரபாகரன் சிலிர்த்துப் போயிருந்தார். ஏனையவர்களும் அப்படித்தான். புலிகள் அமைப்பு பெரும் பண நெருக்கடியில் அப்போது சிக்கித் தவித்துக்கொண்டிருந்தது. புலம்பெயர்ந்து வாழும் சில தமிழர்களின் உதவியின் மூலமே அவர்களது நாளாந்தச் செலவுகள் சமாளிக்கப்பட்டு வந்தன. சிலவேளைகளில் பிரபாகரன் பெரும் விரக்தியில் காணப்பட்டுவார். புலிகளை கெரில்லா இராணுவம் எனும் நிலையிலிருந்து தேசிய விடுதலை இராணுவமாக மாற்றும் தனது நோக்கம் ஈடேறும் நிலையில் தான் இல்லையோ என்றும் அவர் வருந்தியிருக்கிறார். ஆனால், இந்த அச்சத்தையெல்லாம் போக்கி, அவரது நோக்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அன்று உதவியிருந்தார்.
- with rebel leaders.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர் இற்கும் இடையிலான நட்பு தமிழர்களின் மிகுந்த அபிமானத்திற்கு உரியவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமாகவிருந்த எம்.ஜி.இராமச்சந்திரனை முதன்முதலாக 1984 ஆம் ஆண்டு சித்திரை மாத்தில்த்தான் பிரபாகரன் சந்தித்தார். இந்தச் சந்திப்பே அவர்கள் இருவரையும் மிக நெருக்கமாக்கிவிட்டதுடன் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் மிகுந்த மாற்றத்தினையும் ஏற்படுத்தியிருந்தது. எம்.ஜி.ஆர் இன் பரோபகாரம் பிரபாகரனின் கனவான தனது கெரில்லாப் படையணியை ஒரு தேசிய விடுதலை இராணுவமாக மாற்றுவதைச் சாத்தியப்படுத்தி இருந்தது. எம்.ஜி.ஆர் உடன் பிரபாகரன் மாசி 1985 இவர்கள் இருவருக்குமிடையிலான நெருக்கமான நட்பினை எவராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய சகாவும் அவரது அரசாங்கத்தில் அமைச்சராகவிருந்து இலங்கை தொடர்பான விடயங்களைக் கவனித்துக்கொண்டவருமான பன்ருட்டி இராமச்சந்திரன் கூறும்போது, "அது ஒரு நெருக்கமான நட்பு" என்று கூறுவார். அச்சந்திப்பினூடாக இருவரும் நெருக்கமாகி வந்ததுடன் எம்.ஜி.ஆர், பிரபாகரனை வாஞ்சையுடன் "தம்பி" என்றே அழைக்கத் தொடங்கினார். பிரபாகரனும் எம்.ஜி.ஆர் இற்கு மிகுந்த மரியாதையுடனான கெளரவத்தை வழங்கி வந்தார். பிரபாகரன் குறித்து அறிந்த காலத்திலிருந்தே அவரைச் சந்திக்க மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார் எம்.ஜி.ஆர். வெண்திரையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி, நீதியினை நிலைநாட்டும் வீரனாக நடித்துவந்த எம்.ஜி.ஆர், தான் வெண்திரையில் செய்வதை ஒருவர் நிஜவாழ்விலேயே செய்துவருகிறார் என்று அறிந்தபோது, பிரபாகரனில் தன்னையே அவர் கண்டிருக்கலாம். பன்ருட்டி இராமச்சந்திரன், எம்.ஜி.ஆர் மற்றும் கே.கருணாகரன் இலங்கைத் தமிழர்கள் மீது, குறிப்பாக மலையகத் தமிழர்கள் மீது எம்.ஜி.ஆர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். அவர் கண்டியில் பிறந்திருந்ததோடு அவரது பெற்றோர்கள் அங்கேயே வாழ்ந்தவர்கள். 1983 ஆம் ஆண்டு இனக்கொலை தமிழ்நாட்டில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்ததோடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமிழ்நாட்டிலேயே அடைக்கலம் தேடிக்கொண்டபோது இலங்கைத் தமிழர்களின் அவலங்கள் குறித்த கரிசனை தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும், இலங்கைத் தமிழரின் பிரச்சினையே எம்.ஜி.ஆர் இற்கும் அவரது பரம வைரியான கருநாநிதிக்கும் இடையே கடுமையான போட்டியினை உருவாக்கியிருந்தது. சி.என்.அண்ணாத்துரையினால் உருவாக்கப்பட்ட திராவிட அரசியற் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தில் எம்.ஜி.ஆர் உம், கருநாநிதியும் ஒன்றாக முன்னர் பயணித்தவர்கள். 1967 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. கட்சியின் தலைவரான அண்ணாத்துரை புற்றுநோயால் அவதியுற்று இறந்தபொழுது கட்சியை தலைமைதாங்குவது யார் என்பதில் எம்.ஜி.ஆர் இற்கும் கருநாநிதிக்கும் இடையே கடுமையான பூசல் உருவானது. இதனையடுத்து எம்.ஜி.ஆர், தி.மு.க விலிருந்து விலகி தனக்கென்று புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். அதுவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைக்கப்படலாயிற்று. 1977 ஆம் ஆண்டு இலங்கையில் ஜெயவர்த்தன ஆட்சியைக் கைப்பற்றிய அதே காலத்தில் எம்.ஜி.ஆர் உம் தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றினார். வீர தீரச் செயல்களை விரும்பும் பிரபாகரனும் எம்.ஜி.ஆர் இன் தீவிர ரசிகர் தான். அவரைப்போன்றே அவரது நெருங்கிய சகாவும், தமிழ்நாட்டில் பிரபாகரனது தொடர்பாடல் உதவியாளருமான பேபி சுப்பிரமனியமும் எம்.ஜி.ஆர் ரசிகர் . முத்துவேல் கருநாநிதி தமிழ்நாட்டிலிருந்து இயங்கிவந்த இலங்கைத் தமிழ்ப் போராளி அமைப்புக்கள் குறித்து எம்.ஜி.ஆர் இற்கு தொடர்ச்சியான தகவல்களை தமிழ்நாட்டு உளவுத்துறையான கியூ பிராஞ்ச் வழங்கி வந்தது. தமிழ்ப் போராளி அமைப்புக்களை வளைத்துப்போடுவதன் மூலம் கருநாநிதி கோரிவந்த "உலகத் தமிழரின் தலைவன்" எனும் பெயரினை அடைந்துகொள்ள முயலக்கூடும் என்பதனால், போராளி அமைப்புக்களைத் தொடர்ச்சியாக அவதானித்து வந்தார் அம்.ஜி.ஆர். உண்மையாகவே டெலோவின் சிறீசபாரட்ணம், ஈரோஸின் பாலக்குமார், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பத்மநாபா ஆகிய போராளித் தலைவர்கள் தொடர்ச்சியாக கருநாநிதியின் அலுவலகத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து வரலானார்கள். அரசியல் சூழ்ச்சிகளை நன்கு அறிந்துவைத்திருந்த பிரபாகரனோ தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தன்னை விலத்தியே வைத்திருந்தார். இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு மொத்தத் தமிழ்நாட்டினதும் ஆசீர்வாதம் வேண்டும் என்று விரும்பிய பிரபாகரன், தனிப்பட்ட அரசியற்கட்சிகளை ஆதரிப்பதன் மூலம் ஏனையவர்களைப் பகைவர்களாக்கி, தமிழ்நாட்டு மக்கள் ஈழத்தமிழரின் போராட்டத்திற்கு கொடுத்துவரும் ஆதரவினை இழக்கலாம் என்று அவர் கருதினார். தமிழ்நாட்டு பொலீஸ் புலநாய்வுத்துறையான கியூ பிராஞ்சின் தலைவரான உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் மோகன்தாஸ் தமிழ்ப் போராளி அமைப்புக்களுக்கும் கருநாநிதிக்கும் இடையிலான நெருக்கம் குறித்து எம்.ஜி.ஆர் இன் கவனத்திற்குக் கொண்டுவந்தார். போராளி அமைப்புக்கள் அனைத்திலும் புலிகளே மிகவும் திறமையானவர்கள் என்றும், பிரபாகரனே போராளித் தலைவர்களில் மதிநுட்பமும், இலட்சிய உறுதியும் கொண்டவெரென்றும் எம்.ஜி.ஆர் இடம் அவர் கூறினார். மேலும் போராளி அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தமக்கான புலநாய்வுப் பிரிவுகளைக் கொண்டிருக்கின்றன என்பதையும், புலிகளின் புலநாய்வுப் பிரிவே அவை அனைத்திலும் செயற்றிறன் மிக்கது என்பதையும் அவர் எம்.ஜி.ஆர் இடம் தெரிவித்திருந்தார். தமிழ்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் அன்றைய காலகட்டத்தில் தமிழர்களால் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயம் தான் போராளி அமைப்புக்களுக்கிடையிலான ஒற்றுமை என்பது. ஆகவே, 1984 ஆம் ஆண்டு சித்திரை மாத ஆரம்பத்தில் போராளி அமைப்புக்கள் அனைத்தையும் வரவழைத்து ஒற்றுமையின் அவசியம் குறித்து வலியுறுத்தப் போவதாக மோகன் தாஸிடம் கூறினார் எம்.ஜி.ஆர். போராளி அமைப்புக்களுக்கிடையிலான ஒற்றுமையின் மூலம் விடுதலைப் போராட்டத்தை வீரியப்படுத்தலாம் என்கிற நோக்கமே எம்.ஜி.ஆர் இன் இந்த அழைத்தலுக்குக் காரணம். ஆனால், பிரபாகரனுக்கு இக்காரணம் திருப்தியைத் தரவில்லை. ஏனெனில், ஒருமித்துச் செயற்படுதல் என்பதனூடாக உள்வீட்டுப் பிணக்குகளும், கசப்புணர்வுகளுமே உருவாகும் என்பதை தனது அனுபவத்திலிருந்து அவர் கற்றிருந்தார். "வெளியே எதிரியுடன் சண்டையிடுவதற்குப் பதிலாக, உள்வீட்டில் ஒருவருடன் ஒருவர் சண்டையிடுவார்கள்" என்று அவர் கூறினார்.
- KARUNANITHI.jpg
- MGRnPrabakaran1985-1.jpg
- MGR&PANRUDDI.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தனது தலையீட்டின் மூலம் சிங்கள தேசத்தைக் காப்பாற்றிய இந்தியா தனது கெரில்லா இராணுவத்தை பாரிய தேச விடுதலை இராணுவமாகக் கட்டியெழுப்ப முயன்று வந்த அதேவேளை, தனிநாட்டிற்கான அடிப்படைக் கட்டமைப்புக்களை அமைப்பதிலும் பிரபாகரன் மும்முரமாகச் செயற்பட்டு வந்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல கிராமப் பகுதிகளை இராணுவத்தினதும், பொலீஸாரினதும் பிடியிலிருந்து அவர் விடுவித்திருந்தார். யாழ்க்குடாநாட்டில் இயங்கிவந்த 16 பொலீஸ் நிலையங்களில் வெறும் 7 நிலையங்களே அப்போது இயங்கிவந்தன. இப் பொலீஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ள பொலீஸார் முன்வந்த போதிலும், அவைகுறித்த விசாரணைகளை அவர்கள் முன்னெடுக்க விரும்பவில்லை. மேலும், மஜிஸ்ட்ரேட் நீதிமன்றில் புதிய வழக்குகளையும் அவர்கள் தாக்கல் செய்ய விரும்பவில்லை. பழைய வழக்குகளே விவாதிக்கப்பட்டு வந்தன. வீதி ஒழுங்கு நடவடிக்கைகளையும் பொலீஸார் நிறுத்தியிருந்தனர். இராணுவத்தினரின் உதவியுடனேயே பொலீஸாரின் வீதி ரோந்துக்கள் நடைபெறலாயின. இராணுவத்தினரின் கவச வாகனங்களில் பொலீஸாரும் கூடவே வலம் வந்தனர். பொலீஸார் இயக்கமற்று இருந்த இச்சந்தர்ப்பத்தினைப் பாவித்து சில சமூக விரோத சக்திகள் செயலில் இறங்கத் தொடங்கின. களவுகள், அச்சுருத்தல்கள், கப்பம் அறவிடுதல், பாலியல் வன்புணர்வுகள் உள்ளிட்ட பல சமூகச் சீர்கேடுகளை இச்சக்திகள் அரங்கேற்றத் தொடங்கியிருந்தன. புலிகளும், புளொட் அமைப்பும் இச் சமூக விரோத சக்திகளிடமிருந்து மக்களைப் பாதுகாக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கின. 1984 ஆம் ஆண்டு பங்குனியில் புலிகள் வெளியிட்ட அறிவித்தல் ஒன்றில் சமூக விரோத நடவடிக்கைகள் ஈடுபடுவோர் உடனடியாக அவற்றினை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருந்தனர். மேலும், தமது எச்சரிக்கைகள் உதாசீனப்படுமிடத்து அவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவ்வெச்சரிக்கையில் கூறப்பட்டிருந்தது. புலிகளின் எச்சரிக்கை வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அச்சுவேலிச் சந்தியில் நபர் ஒருவரின் உடல் மின்கம்பம் ஒன்றில் கட்டப்பட்டுக் கிடந்தது, அருகில் ஒரு காகிதத் துண்டும் காணப்பட்டது. உடலின் தலைப்பகுதியில் குண்டு துளைத்த அடையாளம் தெரிந்தது. புலிகளின் இலச்சினையுடன் காணப்பட்ட அக்காகிதத் துண்டில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது, "மக்களைத் துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டதற்காக இத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது". 28 வயதுடைய பொன்னம்பலம் நடராஜா என்பவரே அந்த சமூக விரோதியாவார். கல்வியங்காட்டைச் சேர்ந்த குணரட்ணம் என்பவரும் புலிகளின் எச்சரிக்கையினை உதாசீனம் செய்திருந்தார். குக்கு என்ற புனைபெயருடைய குணரட்ணம் எனும் 29 வயதுடைய நபர் தொடர்ந்தும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். பகல் வேளை ஒன்றில் நவாலிப் பகுதியிலிருந்த வீடொன்றிற்குள் நுழைந்த குணரட்ணம், அங்கு தனியாகவிருந்த பெண்ணைக் கடுமையாகத் தாக்கியதுடன், அவ்வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய்கள் பெறுமதியான நகைகளையும் களவாடிச் சென்றார். இக்கொள்ளைச் சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின்னர் தேநீர்க் கடையொன்றில் அமர்ந்திருந்த குக்குவை மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் வெளியே வருமாறு அழைத்தனர். வந்திருப்பது யாரென்பதை உடனேயே அடையாளம் கண்டுவிட்ட குக்கு ஓட ஆரம்பித்தார். இளைஞர்களில் ஒருவர் குக்குவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவே அவர் இறந்து வீழ்ந்தார். குக்குவின் உடலை அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் கட்டிய இளைஞர்கள் கையால் எழுதப்பட்ட காகிதம் ஒன்றினையும் அருகில் வைத்துவிட்டுச் சென்றனர். புலிகளின் இலச்சினையோடு இருந்த அத்துண்டில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது, "நாங்கள் இவருக்கு மூன்று முறை எச்சரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் அவர் அவற்றை உதாசீனம் செய்திருந்தார். அதனாலேயே அவருக்குத் தண்டனை வழங்கினோம்". புளொட் அமைப்பும் சில சமூக விரோதிகளுக்குத் தண்டனை வழங்கியது. அவர்களில் ஒருவர் சுழிபுரத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சின்னையா சிவபாலன். துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது உடல் சுழிபுரம் சந்திக்கருகில் கிடக்கக் காணப்பட்டது. அவரது குற்றங்களைப் பட்டியலிட்ட துண்டொன்று அருகில் கிடந்தது. சுழிபுரம் பகுதியில் பல வீடுகளில் நகைக்கொள்ளையில் ஈடுபட்டது, இளம் பெண் ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்தது, வாகனங்களைக் கொள்ளையிட்டது ஆகிய குற்றங்களுக்காக அவர் கொல்லப்பட்டுள்ளதாக அத்துண்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. புளொட் அமைப்பின் சங்கிலியன் பஞ்சாயத்து எனும் பிரிவே இத்தண்டனையினை வழங்கியதாகவும் அத்துண்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதே புலிகளின் முக்கிய கரிசணையாக மாறியது. பழமையான பஞ்சாயத்து முறைமூலம் குற்றங்களை தீர்க்கும் வழிகளும் ஆராயப்பட்டன. கிராமத்திலிருக்கும் முதியவர்கள், சிவில் மற்றும் சிறிய கிரிமினல்க் குற்றங்களை விசாரித்து தீர்ப்பு வழங்குமாறு புலிகளால் கோரப்பட்டனர். மேலும் சிங்கள அரசினால் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் மனிதவுரிமை மீறல்களைப் பதிவுசெய்து, விசாரித்து பின்னர் அரச அமைப்புக்களுடன் இணைப்பாளர்களாக இதுகுறித்துப் பேசி நீதியைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக சிவில் அமைப்புக்கள் செயற்படவேண்டும் என்றும் புலிகள் கோரினர். இதனையடுத்து வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் பிரஜைகள் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரதேசத்திலும் வசித்த மதிப்பிற்குரியவர்களும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களும் இணைந்து பிரஜைகள் குழுவினை அமைத்தனர். இக்குழுக்கள் உருவாவதற்கு புலிகளும் ஆதரவு வழங்கினர். தமிழ்நாட்டில் அக்காலப்பகுதியில் தங்கியிருந்த பிரபாகரன், பிரஜைகள் குழுக்களுடன் புலிகள் சார்பாக தொடர்புகொள்ள தனது உப தலைவரான மாத்தையாவை நியமித்தார். பிரஜைகள் குழுக்கள் இணைந்து யாழ்ப்பாணப் பிரஜைகள் குழு மற்றும் கிழக்கு மாகாண பிரஜைகள் குழு என்று இரு கிளைகளாக இயங்கி வந்தன. பின்னர் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான பிரஜைகள் குழுவின் ஒருங்கிணைப்புக் குழு உதயம் பெற்றது. யாழ்ப்பாணப் பிரஜைகள் குழுவிற்கு ஓய்வுபெற்ற பேராசிரியர் கே சிவத்தம்பியும், கிழக்கு மாகாணப் பிரஜைகள் குழுவிற்கு எஸ் சிவபாலனும் தலைமை தாங்கினார்கள். இவ்விருவரும் இணைந்து வடக்குக் கிழக்கு பிரஜைகள் குழுவின் ஒருங்கிணைப்புச் சபையின் தலைவர்களாகச் செயற்பட்டு வந்தார்கள். பேராசிரியர் கே சிவத்தம்பி 2003 இப்பிரஜைகள் குழு மக்களாலும், புலிகளாலும், அரசாங்கத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் பிற்காலத்தின் மனிதவுரிமை மீறல்கள் குறித்து அவதானிக்கும் அமைப்பாகவும், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களின் அமைப்பாகவும் மாறலாயிற்று. இதன் உறுப்பினர்கள் இராணுவ முகாம்களிலும், பொலீஸ் நிலையங்களிலும் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வந்த தமிழ் இளைஞர்களைச் சென்று பார்வையிட்டு வந்ததுடன், அவர்கள் மீதான சித்திரவதைகளின் கடுமையினையும் இவர்களால் குறைக்க முடிந்தது. மேலும், சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள், புலிகள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்புக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பாளராகவும் இவ்வமைப்பு செயற்பட்டு வந்தது. அத்துடன் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த மக்களை வேறு இடங்களில் குடியமர்த்தும் நடவடிக்கைகளிலும், அகதிகளுக்கான பராமரிப்புக்களை ஒழுங்குசெய்யும் நடவடிக்கைகளிலும் முன்னின்று செயற்பட்டு வந்தது. சிங்கள அரசாங்கத்தின் பிடியிலிருந்து பெருமளவு பிரதேசங்கள் புலிகளால் விடுவிக்கப்பட்டதையடுத்து இப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அரசுக்கு வரிசெலுத்தும் கட்டாயத்திலிருந்து விடுதலை பெற்றனர். இப்பிரதேசங்களைப் பொறுப்பேற்ற புலிகள், மக்களைப் பாதுகாக்கும் கடமையினைச் செய்ததோடு பாதுகாப்பு வரி உள்ளிட்ட அரசு ஒன்று அறவிடும் வரிகளைப்போன்ற வரிகளை இப்பிரதேசங்களில் அறவிடத் தொடங்கினர். இப்பிரதேசங்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கான உறபத்திவரி மற்றும் இப்பிரதேசங்களுக்குள் கொண்டுவரப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி ஆகியவை புலிகளால் அறவிடப்பட்டன. புலிகளின் வரி வசூலிப்பினை அறிந்த அரசாங்கம் கொதிப்படைந்தது. வரி அறவிடுவது அரசாங்கத்தின் உரிமையென்றும், புலிகளுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது என்றும் அரசு வாதிட்டது. மேலும், மக்களை மிரட்டியே புலிகள் பணத்தினைப் பறிக்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டியது. ஆனால், புலிகள் தொடர்ந்து வரிவசூலிப்பில் ஈடுபட்டே வந்தனர். அப்படிச் செய்வதன் மூலம் ஒரு அரசு செய்யும் செயற்பாடான வரி அறவிடுதலை நிழல் அரசுபோன்று செயற்படுத்தி வந்தனர். மக்களுக்கான பாதுகாப்பு, சட்ட ஒழுங்கினை நிலைநாட்டுதல், வரி வசூலித்தல் ஆகிய செயற்பாடுகள் மூலம் ஒரு அரசாங்கத்தின் அத்தியாவசியச் செயற்பாடுகளை பிரபாகரன் கையகப்படுத்திக்கொண்டார். இந்த அரசுக்கான அடிப்படைக் கட்டுமாணங்களைச் சரிவர அமைத்துக்கொண்ட பிரபாகரன், அவற்றை மென்மேலும் பலப்படுத்தி வருகிறார் (2004 இன் படி). எம்.ஜி.ஆர் இனால் வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியினை பிரபாகரன் அரசியற் செயற்பாடுகளுக்குச் செலவிட்டார். சென்னையில் இயங்கிவந்த புலிகளின் அரசியற் பிரிவு விரிவாக்கப்பட்டதுடன் மேலும் பலப்படுத்தப்பட்டது. புலிகளின் அரசியற் செயற்பாடுகளுக்கு அன்டன் பாலசிங்கமே பொறுப்பாகவிருந்தார். மாதாந்த சஞ்சிகையான விடுதலைப் புலிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட வெளிவரலாயிற்று. இதற்கு மேலதிகமாக புலிகளின் குரல் எனும் பத்திரிக்கையும் அச்சுவடிவில் வெளிவரத் தொடங்கியது. புலிகளின் குரல் வானொலி ஆரம்பிக்கப்பட்டதுடன், போர்க்குரல் எனும் சஞ்சிகை போராளிகளுக்காக வெளிவரத் தொடங்கியது. தனியான பிரச்சாரப் பிரிவு ஒன்றினை புலிகள் உருவாக்கினார்கள். புகைப்படத்துறையிலும், ஒளிநாடாத் துறையிலும் கைதேர்ந்தவர்களைச் சேர்த்து உருவாக்கிய அமைப்பொன்று புலிகளின் இராணுவத் தாக்குதல்களைப் படமாக்கத் தொடங்கியது. தாக்குதல்களின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஒளிநாடாக்கள் ஆகியவை பிரச்சாரத்திற்காகவும், இயக்கத்தின் நிதிதேடல்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன. 1984 ஆம் ஆண்டு மார்கழியின்போது விடுதலைப் போராட்டத்திற்குள் மக்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் புலிகள் இறங்கினார்கள். பொதுவிடங்களில் அறிவித்தல்ப் பலகைகள் வைக்கப்பட்டு அப்பகுதி இளைஞர்கள் மூலம் புலிகளின் செய்திகள் அப்பலகைகளில் பதிவேற்றப்பட்டு வந்தன. மேலும், இராணுவ முகாம்களுக்கும், பொலீஸ் நிலையங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் புலிகளின் காப்பரண்களில் இருந்துகொண்டு இராணுவத்தினரின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் இளைஞர்கள் பழக்கப்பட்டனர். சிலருக்கு வோக்கி டோக்கி எனப்படும் தொலைத்தொடர்புக் கருவியும் புலிகளால் வழங்கப்பட்டது. இராணுவமோ அல்லது பொலீஸாரோ தமது முகாம்களை விட்டு வெளியே வர எத்தனித்தால் அதுகுறித்த தகவல்களைப் புலிகளுக்கு உடனடியாக அறிவிக்கவே இக்கருவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றிற்கு மேலதிகமாக, இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வீதித்தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் மக்கள் புலிகளுக்கு உதவினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற எத்தனித்த வேளைகளில் கண்ணிவெடிகளை இயக்கியோ அல்லது குண்டுகளை எறிந்தோ புலிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். 1985 ஆம் ஆண்டு தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்னொரு முக்கிய ஆண்டாகும். பொலீஸாரும், இராணுவத்தினரும் அவர்களது முகாம்களுக்குள்ளேயே தள்ளி, முடக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் தலையீடு நடந்திருக்காவிட்டால் மொத்த வடக்குக் கிழக்குப் பிரதேசங்களுமே தமிழ்ப் போராளி அமைப்புக்களின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வாய்ப்பிருந்தது. தமிழ்ப் போராளித் தலைவர்களுக்கு இந்தியா இட்ட கடுமையான கட்டளை எதுவெனில், "ஜெயவர்த்தனவை பேச்சுவார்த்தை மேசைக்கு வரப்பண்ணுவதே உங்கள் போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும், அதை மீறி எச்செயற்பாட்டிலும் நீங்கள் ஈடுபடுவதை நாம் அனுமதிக்கப்போவதில்லை" என்பதாகும். தனது தலையீட்டின் மூலம், இந்தியா சிங்களவர்களை அச்சந்தர்ப்பத்தில் காப்பாற்றிவிட்டது.
- SIVATHAMBY.jpg
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
சாந்தனின் மறைவிற்கு தமிழ் மக்கள் கொடுக்கும் அஞ்சலி இந்திய அராஜகப் பேய்களுக்கு நல்ல பாடத்தைக் கொடுக்கட்டும். கண்ணீர் அஞ்சலிகள் !
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!
இப்படி இன்னமும் ஆட்கள் இருக்கிறார்களா? ஓ, தமிழரசுக் கட்சியைச் சொல்கிறீர்களா? உண்மைதான். தீபாவளிக்கும், பொங்கலுக்கும் புதுவருடத்திற்கும் தீர்வு வரப்போவதாகச் சொல்லும் ஆட்கள் தானே?? ஏனோ யாழ்ப்பாணத்தில் நடந்த ஹரிகரன் இசைநிகழ்ச்சியும், சிட்னியில் நடக்கவிருக்கும் அனிருத்தின் இசைநிகழ்ச்சியும் மனதில் வந்து தொலைக்கிறது. காங்கிரஸ் உதவியுடன் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தீம்காவே இக்கொலையை நடத்தியதாக நான் உணர்கிறேன். ரஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று புலிகளையும், ஒன்றரை இலட்சம் தமிழர்களையும் அழித்த காங்கிரஸ் , இறுதியாக தமிழ்நாட்டுச் சிறையில் இருந்த சாந்தனையும் கொன்றுவிட்டது.
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
புலிகளை மக்கள் இன்னமும் மனதில் வைத்திருக்கிறார்கள் என்பதும், ரஜீவ் தனது பாவங்களுக்கான தண்டனையினைப் பெற்றுக்கொண்டார் என்பதும் தான் அந்தச் செய்தி.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இந்தியாவின் நலன்களும், எமது இலட்சியமும் வேறுவேறானவை, நாம் இந்தியாவின் கைக்கூலிகள் அல்ல - பிரபாகரன் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியிலேயே தமக்கென்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்யவேண்டும் என்று பிரபாகரன் சிந்திக்கத் தொடங்கினார். சர்வகட்சிக் குழு கூட்டத்தை ஜெயவர்த்தன கூட்டியிருப்பது தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்தி தமிழரின் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வொன்றைக் காண்பதற்கே என்று இந்தியா உணர்ந்துகொண்டபோது, 1984 பங்குனியில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது என்று அது முடிவெடுத்தது. இச்செய்தி கேட்டு மகிழ்வடைந்த புலிகளின் சில போராளிகள் இதனை பிரபாகரனுக்கு அறியத் தந்தார்கள். இதனைக் கவனமாகச் செவிமடுத்த பின்னர் பிரபாகரன் பின்வருமாறு கூறினார், "நாம் வெளியாரிடமிருந்து உடனடியாக ஆயுதங்களை வாங்கத் தொடங்க வேண்டும்". பிரபாகரனின் கூற்றைக் கேட்டு அச்சரியமடைந்த போராளிகள், "இந்தியா ஆயுதம் தருவதாகக் கூறுகையில் நாம் வெளியாரிடமிருந்து ஆயுதங்களை வாங்கவேண்டிய தேவை என்ன?" என்று வினவினார்கள். அதற்குப் பதிலளித்த பிரபாகரன், "இந்தியா எமக்கு ஆயுதங்களைத் தருவதே நம்மைத் தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கத்தான். தனது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காகவே அது எமக்கு ஆயுதங்களைத் தருகிறது. நாம் இந்தியாவின் கூலிப்படைகளாக இருக்க முடியாது. எமது கால்களில் நாம் நிற்கவேண்டுமானால் எமக்கென்று ஆயுதங்களை வெளியாரிடமிருந்து கொள்வனவு செய்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறினார். பின்னைய நாட்களில் போராளிகளுடனான கலந்துரையாடல்களில் தனது கருத்தினை மீளவும் முன்வைத்தார் பிரபாகரன். தமது இலட்சியத்திற்கும் இந்தியாவின் நலன்களுக்கும் இடையே இருக்கும் பாரிய பிணக்கினை அவர் விளங்கப்படுத்தினார். "எமது இலட்சியம் இலங்கைக்குள் தமிழருக்கென்று சுதந்திரமான தனிநாடொன்றினை உருவாக்குவதே" என்று கூறிய அவர், "இந்தியா இதனை ஒருபோதும் ஆதரிக்காது" என்று கூறினார். "இந்தியாவுக்குத் தேவைப்படுவதெல்லாம் இலங்கையை தனது செல்வாக்கு வட்டத்திற்குள் வைத்திருப்பது மட்டும்தான். சிறிமா ஆட்சியில் தற்போது இருந்திருப்பின், தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதங்களையோ, பயிற்சிகளையோ தருவதை இந்தியா ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்காது" என்றும் அவர் கூறினார். "இப்போதே ஜெயார் தனது அமெரிக்கச் சார்பு நிலைப்பாட்டிலிருந்து விலகி, அணிசேராக் கொள்கையினைக் கடைப்பிடித்து, இந்தியாவை இப்பிராந்தியத்தின் வல்லரசாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுவாராகில், இந்தியா தமிழ் மக்களின் அவலங்களை ஏறெடுத்தும் பார்க்கப்போவதில்லை" என்றும் அவர் கூறினார். "இந்தியாவின் நலன்கள் குறித்து ஜெயாரை அக்கறைகொள்ளவைக்க, தமிழ்ப்போராளிகளூடாக அழுத்தம் கொடுக்க இந்தியா முனைகிறது. இந்த அழுத்தத்தினைக் கொடுப்பதற்குத் தேவையான ஆயுதங்களை மட்டுமே இந்தியா எமக்கு வழங்கவிருக்கிறது. ஆனால், தமிழர் தாயகத்திலிருந்து இராணுவத்தை முற்றாக அகற்றத் தேவையான எந்த ஆயுதங்களையும் இந்தியா ஒருபோதும் எமக்குத் தரப்போவதில்லை. இந்தியா எமக்குத் தரவிரும்பும் ஆயுதங்களை நாம் ஏற்றுக்கொள்வோம், ஆனால், இராணுவத்தை எமது தாயகத்திலிருந்து அகற்றத் தேவையான ஆயுதங்களை நாம் வெளியாரிடமிருந்து பெற்றுக்கொள்வோம்" என்று பிரபாகரன் கூறினார். இந்தியாவால் போராளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் போதுமானவையாக இருக்கவில்லை. எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகக் குறைவான் ஆயுதங்களையே இந்தியா வழங்கியது. அவற்றில் பெரும்பாலானவை மிகப் பழமையானவையாகக் காணப்பட்டன. தனது போரும் சமாதானமும் எனும் புத்தகத்தில் எழுதும்போது அன்டன் பாலசிங்கம் பின்வருமாறு குறிப்பிடுகிறார், "வழங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்து பிரபாகரன் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தார். வழங்கப்பட்ட ஆயுதங்களில் இருந்த ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், 60 மி.மீ மோட்டார்கள் என்பன மிகவும் பழமையானவை, பாவனைக்கு உதவாதவை. எமக்குத் தேவையான நவீன, திறனுள்ள ஆயுதங்களைத் தருவதை இந்திய அதிகாரிகள் விரும்பவில்லை என்பதை நாம் நன்கு உணர்ந்துகொண்டோம். தமிழ்ப் போராளிகளின் ஆயுத வல்லமை மட்டுப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும், அவர்களின் போர்வல்லமை ஒரு அளவிற்கு மேல் விருத்தியடையக் கூடாது என்பதற்காக மிகவும் திட்டமிட்ட வகையிலேயே பழமையான ஆயுதங்களை இந்தியா எமக்கு வழங்கியது. நவீன ஆயுதங்களைப் பாவிக்கும், திறனுள்ள போர்ப்படையினைக் கட்டியெழுப்ப விரும்பும் பிரபாகரனுக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் எவ்விதத்திலும் போதுமானவையாகவோ தரமுள்ளவையாகவோ இருக்கவில்லை" என்று கூறுகிறார். தனது அமைப்பிற்குத் தேவையான நவீன ஆயுதங்களை உலகச் சந்தையில் இருந்து கொள்வனவு செய்ய பிரபாகரன் விரும்பினார். ஆனால், அதற்கு அதிகளவு பணம் தேவைப்பட்டது. எம்.ஜி.ஆர் அதற்கான பணத்தினை வழங்கியிருந்தார். அப்பணத்தைக் கொண்டு நவீன ரக ஆயுதங்களை லெபனனின் சட்டவிரோத ஆயுதச் சந்தையிலிருந்து பிரபாகரன் கொள்வனவு செய்தார். இவ்வாறான ஆயுதக் கொள்வனிற்காக இரகசிய ஆயுதக் கொள்வனவு அமைப்பொன்றை உருவாக்கிய பிரபாகரன் அதற்குப் பொறுப்பாக கே.பி என்றழைக்கப்பட்டும் குமரன் பத்மனாதனை நியமித்தார். அவர் இன்றுவரை அப்பணியில் செயற்பட்டு வருகிறார் (2005 இன்படி). உலகின் அனைத்துச் சட்டவிரோத ஆயுதச் சந்தைகளுக்கும் பயணம் செய்த கே.பி, மலிவான சந்தையென்று தான் கண்டறிந்த லெபனின் ஆயுதச் சந்தையிலிருந்து புலிகளுக்கான ஆயுதங்களை வாங்குவதென்று முடிவெடுத்தார். அவ்வயுதங்கள் மலிவானவை மட்டுமல்லாமல், திறனுள்ளவையாகவும் காணப்பட்டன. இதனையடுத்து கே,பி இன் பெயர், அவரது புனைபெயர்கள், அவரின் மறைவிடங்கள் போன்ற பல விடயங்கள உலகின் பல புலநாய்வு அமைப்புக்களின் கோப்புக்களுக்கு வந்து சேரத் தொடங்கின. அவரிடம் ஒரு இலங்கைக் கடவுச் சீட்டும், இரு இந்தியக் கடவுச் சீட்டுக்களும் காணப்பட்டன. புலிகளுக்கான ஆயுதக் கொள்வனவிற்காக பல கறுப்புச் சந்தைகளுக்கும் அடிக்கடி பயணித்தவர் என்கிற வகையில் கே.பி யின் பெயர் பலவிடங்களில் பிரபலமாகிப் போனது. புலிகளுக்காக கே.பி முதன் முதலாக கொள்வனவு செய்த ஆயுதக் கொள்கலனில் ஏ.கே - 47 ரக ரைபிள்கள், ஆர்.பி.ஜி க்கள், ஸ்னைப்பர் ரைபிள்கள், வெடிபொருட்கள், இரவு பார்வைக் கருவிகள், தாங்கியெதிர்ப்பு ஆயுதங்கள், நவீன தொலைத் தொடபு உபகரணங்கள் மற்றும் பெருமளவு துப்பாக்கி ரவைகள் போன்றவை இருந்தன. வெளிநாட்டுக் கப்பல் ஒன்றின் மூலம் இவ்வாயுதங்கள் சென்னை துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அக்கொள்கலனை வெளியே எடுத்துவிட புலிகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. அதுவரை புலிகளுக்கு உதவி வந்த சென்னைச் சுங்க அதிகாரிகள் இம்முறை உதவி செய்ய மறுத்தனர். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் உமா மகேஸ்வரனுக்காகக் கொண்டுவரப்பட்ட ஒரு கொள்கலன் ஆயுதங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தமையினால், இக்கொள்கலனை வெளியே விடுவது குறித்து அதிகாரிகள் அஞ்சினர். இறுதியாக, எம்.ஜி.ஆர் இன் தலையீட்டினையடுத்து புலிகளின் கொள்கலன் வெளியே வந்தது. இச்சம்பவம் குறித்த விபரங்களை இனிவரும் அத்தியாயங்களில் பார்க்கலாம். ஆர்.பி.ஜி உந்துகணையுடன் புலிகளின் போராளி ஒருவர் நான் முன்னர் குறிப்பிட்டது போல, பிரபாகரன் தமிழ்க் கடவுளான முருகன் மீது அதிக பற்று வைத்திருப்பவர். தனது அமைப்பிற்கென்று கொண்டுவரப்பட்ட கொள்கலன் சென்னை சுங்க அதிகாரிகளால் பிரச்சினைகளின்றி விடுவிக்கப்படுமிடத்து பழனி முருகன் ஆலயத்திற்கு வந்து வழிபடுவதாக அவர் வேண்டியிருந்தார். அவ்வாறே, கொள்கலன் புலிகளின் மறைவிடத்தை அடைந்ததும், தான் வேண்டிக்கொண்டவாறு பழனிக்குச் சென்று தனது வேண்டுலை நிறைவேற்றிக்கொண்டார். அந்நாள் முழுதும் உண்ணா நோன்பிருந்து, முருகனை வேண்டிக்கொண்டதுடன், தனது கொள்கலனை வெளியே எடுத்துத் தந்தமைக்காக நன்றியும் கூறினார். மறவாது எம்.ஜி.ஆர் இற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். பழனி முருகன் ஆலயம் மூத்த போராளியொருவர் என்னுடன் பேசும்போது, புலிகளின் கொள்கலன் மடக்கப்பட்டபோது எம்.ஜி.ஆர், சுங்க ஆணையாளர் மற்றும் பொலீஸ் டி.ஐ.ஜி ஆகியோருடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். இதனையடுத்து சுங்க அதிகாரிகள் அக்கொள்கலனை விடுவித்தது மட்டுமன்றி, பொலீஸ் பாதுகாப்புடன் அதனை புலிகளின் இரகசிய மறைவிடத்திற்கு இரவோடு இரவாக எடுத்துச் சென்று இறக்கியதாகவும் கூறினார். கொள்கலன் இருந்த ஆயுதங்கள் முழுவதையும் புலிகளின் மறைவிடத்தில் சேமிக்க முடியவில்லை. மேலதிக ஆயுதங்களை பாலசிங்கத்தின் வீட்டிற்கு எடுத்துச் சென்று மறைத்து வைத்தார்கள். தனது சுதந்திர வேட்கை எனும் புத்தகத்தில் எழுதும் அடேல், "ஒரு கட்டத்தில் நாம் வசித்து வந்த வீட்டின் ஒரு அறை முழுவதும் ஏ.கே - 47 ரைபிள்களும் ஆர்.பி.ஜி க்களும் குவிந்து காணப்பட்டன" என்று குறிப்பிடுகிறார். பின்னர் விரைவாக அவ்வாயுதங்கள் அனைத்தும் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் புலிகளுக்கு இருந்த ஆயுத மறைவிடங்களுக்கு மாற்றப்பட்டன. இதற்கு மேலதிகமாக கற்பாறைகளை உடைக்கப் பயன்படும் வெடிபொருளான ஜெலட்டினை பெருமளவில் தமிழ்நாட்டிலிருந்து புலிகள் கொள்வனவு செய்தனர். இயக்கத்திற்குள் கொண்டுவரப்பட்ட பெருமளவு நவீன ஆயுதங்களைக் கொண்டு தனது அமைப்பை மறுசீரமைப்புச் செய்தார் பிரபாகரன். தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கை ஐந்து வலயங்களாக வகுத்து அவை ஒவ்வொன்றிற்கு ஒரு தளபதியை அவர் நியமித்தார். அதன்படி யாழ்க்குடாநாட்டிற்குப் பண்டிதரும், வன்னிக்கு மாத்தையாவும், மன்னாருக்கு விக்டரும், திருகோணமலைக்குச் சந்தோசமும் நியமிக்கப்பட்டனர். ஐந்தாவது வலயமாக மட்டு அம்பாறை விளங்கியது.
-
an-ltte-fighter-in-clearing-operation-with-seized-weapons-from-the-sla.jpg
- Pazani Murugan.jpg
- Prabakaran with Anton.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
முதலாவது பெண்போராளிகள் பயிற்சிப் பாசறையும் புலிகளின் கடற்போக்குவரத்தும் 1984 ஆண்டின் புரட்டாதி மாதத்தில் மேலும் போராளிகளை அமைப்பில் இணைத்துக்கொண்ட பிரபாகரன் பயிற்சிகளை தீவிரப்படுத்தினார். அக்காலப்பகுதியில் மேலும் ஒரு பயிற்சிமுகாம் குமரப்பிட்டியில் புலிகளால் அமைக்கப்பட்டதோடு அந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது என மேலும் மூன்று தொகுதிப் போராளிகள் அம்முகாமில் பயிற்றப்பட்டு வந்தனர். இம்முகாமில் பயிற்றப்பட்ட போராளிகளின் எண்ணிக்கை என்பது முன்னர் பயிற்சியில் ஈடுபட்ட போராளிகளைக் காட்டிலும் அதிகமானது. ஐந்தாவது தொகுதிப் போராளிகள் 200 பேர் குமரப்பிட்டி முகாமில் பயிற்றப்பட்டார்கள். அதன் பின்னர் அனுப்பப்பட்ட குளத்தூர் முகாமிற்கான போராளிகளின் எண்ணிக்கை 350 ஆக இருந்தது. ஏழாவது தொகுதிப் போராளிகளே புலிகளின் முதலாவது பெண்போராளிகளின் அணியாகத் திகழ்ந்தது. அவ்வணியில் 100 பெண்போராளிகள் அங்கம் வகித்தனர். பெண்களுக்கென்று பிரத்தியேகமாக பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டது அதுவே முதன்முறையாகும். இப்பெண்போராளிகளுக்கான பயிற்சி சிறுமலை முகாமில் நடைபெற்றது. இம்முகாமிற்கு மன்னார் மாவட்டத் தளபதியான விக்டர் பொறுப்பாக இருந்தார். 1984 ஆம் ஆண்டில் மட்டும் ஐந்து தொகுதிப் போராளிகள் தமிழ்நாட்டில் பயிற்சியளிக்கப்பட்டிருந்தனர். 100 பெண் போராளிகள் அடங்கலாக 900 போராளிகள் தமிழ்நாட்டு முகாம்களில் பயிற்சியளிக்கப்பட்டனர். 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் புலிகள் இயக்கம் தன்னை மிகவும் பலமான நிலைக்கு உயர்த்தியிருந்தது. பின்னாட்களில் இவ்வெண்ணிக்கை 1000 ஐக் காட்டிலும் அதிகரித்துச் சென்றது. ஆனாலும், மற்றைய பிரதான அமைப்புக்களோடு ஒப்பிடுகையில் இவ்வெண்ணிக்கை மிகவும் குறைவானது. டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தலா 6000 போராளிகளை தம்மகத்தே கொண்டிருந்தன. 1984 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் ஆயுத அமைப்புக்களில் இருந்த போராளிகளின் மொத்த எண்ணிக்கை 30,000 ஐத் தொட்டது. இது இராணுவத்தில் இருந்த வீரர்களைக் காட்டிலும் இருமடங்கு அதிகமானது. 1984 ஆம் ஆண்டு பங்குனியில் லலித் அதுலத் முதலி பாதுகாப்பு அமைச்சரகாகப் பதவியேற்றபோது இருந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15,000 ஐக் காட்டிலும் குறைவானதாகவே இருந்தது. தமிழ்நாட்டில் தனது அமைப்பிற்கான பயிற்சி வசதிகளை விஸ்த்தரித்து வந்த அதேவேளை தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான வழங்கற்பாதையினை அமைப்பதிலும் பிரபாகரன் மும்முரமாக இறங்கியிருந்தார். 1983 ஆம் ஆண்டு இனக்கொலை வரை மீன்பிடிப் படகுகளையும், தனியார்களால் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட படகுகளையுமே பிரபாகரன் போக்குவரத்திற்காகப் பாவித்து வந்தார். ஆனால் இனக்கொலையின் பின்னர் தமக்கென்று படகுகளை உருவாக்கிப் பாவிப்பதென்று அவர் முடிவெடுத்தார். புலிகளால் உருவாக்கப்பட்ட முதலாவது படகிற்கு கடற்புறா என்று புலிகள் பெயரிட்டனர். சோழர் காலத்தில் தூர கிழக்கு நாடுகளுக்கு தமது இராணுவத்தை அனுப்புவதற்கு சோழ அரசர்கள் கட்டிய கப்பலின் பெயரையே பிரபாகரன் தனது முதலாவது படகிற்கு இட்டார். அதன்பின்னர் பல அதிவேகப் படகுகளை புலிகள் அமைத்தனர். இப்படகுகளைக் கட்டும் பணிக்கு சங்கர் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். மேலும், கப்பற்சேவை ஒன்றின் தேவையினையும் பிரபாகரன் உணர்ந்தார். போராட்டத்திற்குத் தேவையான ஆயுதங்களையும் இதர பொருட்களையும் தருவிப்பதற்கு அவருக்குக் கப்பல்கள் தேவைப்பட்டன. அரசுக்கெதிராகத் தனது போராட்டத்தை ஆரம்பித்த நாட்களில் இருந்தே அரசின் வளங்களுக்கு நிகரான வளங்களைத் தானும் கொண்டிருக்கவேண்டும் என்று அவர் எண்ணிச் செயற்பட்டு வந்தார். தமிழ் மக்களில் மட்டுமே தங்கியிருப்பது என்பது சிலவேளைகளில் பாதகமாகவும் அமையலாம் என்று அவர் கருதினார். தமிழ் மக்களிடமிருந்து வரிகளை அறவிடுவதன் மூலம் அமைப்பிற்கான வருமானத்தை ஈட்டலாம் என்று அவர் கருதினார். 1984 ஆம் ஆண்டளவில் தனது அமைற்கான வழங்கல்களை இலகுவாக்குவதற்கு கப்பற்பாதை ஒன்றினை அவர் உருவாக்கினார். புலிகள் முதன் முதலாக தமது கப்பல் நிறுவனத்தை தென்கிழக்காசியாவில் உருவாக்கினர். அந்த நிறுவனத்தால் முதலாவதாக கொள்வனவு செய்யப்பட்ட கப்பலின் பெயர் எம்.வி.சோழன். சீனாவின் நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கிய பழைய கப்பல் ஒன்றினை பழுதுபார்த்து, புதுமைப்படுத்தி, பணாமா நாட்டில் அதனைப் பதிவுசெய்து இயக்கத்திற்குத் தேவையான ஆயுதங்களையும் பொருட்களையும் கொண்டுசெல்வதற்கு அதனைப் பாவித்தனர். பிற்காலத்தின் இன்னும் பல கப்பல்களை புலிகள் கொள்வனவு செய்து தமது போக்குவரத்துக் கப்பல்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக்கொண்டனர். மேலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளுக்கும் இடையேயான கப்பற்போக்குவரத்துப் பாதையினையும் புலிகள் அமைத்தனர். தமிழ்நாட்டின் வேதாரணியம், நாகபட்டினம் ஆகிய கரையோரப் பகுதிகளையும், இலங்கையின் வடமாகாணத்தின் பொலிகண்டி, வல்வெட்டித்துறை, மணல்க்காடு ஆகிய கரையோரப்பகுதிகளையும் போராளிகளையும் ஆயுத தளபாடங்களையும் இறக்கியேற்றும் பகுதிகளாக உருவாக்கிக்கொண்டனர். இவற்றுக்கு மேலதிகமாக மீன்பிடிக் கிராமங்களான வெற்றிலைக்கேணி, மாதகல், பாசையூர், கொழும்புத்துறை மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளும் புலிகளின் இறங்குதுறைகளாக பயன்படுத்தப்பட்டு வந்தன. வல்வெட்டித்துறையினை வந்தடையும் ஆயுதங்களும், ஏனைய பொருட்களும் அதிவேகப் படகுகள் மூலம் முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்திருக்கும் புலிகளின் இறங்குதுறைகளுக்கு உடனுக்குடன் விநியோகிக்கப்பட்டு வந்தன.
- LTTE SHIP.jpg
- major sothiya.jpg
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
புலிகளின் ஆரம்பகால பயிற்சியணிகள் எம்.ஜி.ஆர் இன் உதவியை அடுத்து பிரபாகரன் இரு தீர்மானங்களை எடுத்தார். ஒன்று இராணுவ ரீதியிலானது, மற்றைய அரசியல் மயப்பட்டது. இரண்டுமே விடுதலைப் போராட்டத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையானவை. இராணுவ ரீதியிலான தீர்மானத்தின் அடிப்படைகள் பின்வருமாறு காணப்பட்டன, 1. தமக்கென்று தனியான சுதந்திரமான பயிற்சி முகாம்களை அமைத்துக்கொள்வது. 2. நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்வது. 3. நவீன தொலைத் தொடர்பு வலையமைப்பினை உருவாக்குவது. 4. கடற்புலிகள் அமைப்பினை உருவாக்குவது. 5. பெண்கள் படையணியினை உருவாக்குவது. 6. புலநாய்வு அமைப்பினை உருவாக்குவது. அவரது அரசியல்த் தீர்மானத்தின் அடிப்படைகளாக பின்வருபவை அமைந்திருந்தன, 1. அரசியல் பிரிவினைப் பலப்படுத்துவது. 2. பிரச்சார இயந்திரத்திரத்திற்கு புத்துயிர் அளிப்பது. 3. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களையும் மக்களையும் மீட்பது. 4. சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளை பொறுப்பெடுத்துக்கொள்வது. 5. வரி வசூலிப்பினை நடைமுறைப்படுத்துவது. 6. மக்களை போராட்டத்தினுள் உள்வாங்குவது. ஆகியனவே அவையாகும். பிரபாகரனுடன் குளத்தூர் மணி போராளிகள்க்குத் தேவையான பயிற்சியினை வழங்குவதும், தேவையான ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதுமே பிரபாகரனின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர் ஏற்கனவே தனிப்பட்ட ரீதியில் இரு பயிற்சி முகாம்களை அமைத்திருந்தார். முதலாவது மதுரை மாவட்டத்தின் திண்டுக்கல் பகுதியில் அமைந்திருக்கும் சிறுமலை காட்டுப்பகுதியிலும் இரண்டாவது பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அணைக்கு அருகில் அமைந்திருக்கும் குளத்தூரிலும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுமலை முகாம் நெடுமாறனின் உதவியுடனும், குளத்தூர் மூகாம் திராவிடர் கழக ஆதரவாளரான குளத்தூர் மணியின் உதவியுடனும் அமைக்கப்பட்டிருந்தது. சிறுமலை முகாமுக்கான உணவு மற்றும் ஏனைய வசதிகளை நெடுமாறன் ஒழுங்குசெய்ய, குளத்தூர் முகாமிற்கான ஒழுங்குகளை குளத்தூர் மணி செய்திருந்தார். 1984 ஆம் ஆண்டு தை மாதத்தில் குளத்தூர் முகாமை பிரபாகரன் மேலும் விஸ்த்தரித்தார். இங்கிருந்தே புலிகளின் பயிற்சித் திட்டம் விரிவாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. முதலாவது தொகுதியில் 125 போராளிகள் இம்முகாமிற்கு பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டார்கள். இத்தொகுதியை "மூன்றாவது தொகுதி" (பட்ச்) என்று இயக்கத்திற்குள் அழைத்தார்கள்.இத்தொகுதிப் போராளிகளுக்கு முன்னதாக உத்தர பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட இரு தொகுதிப் போராளிகளும் முறையே முதலாவது இரண்டாவது பட்ச் என்று அழைக்கப்பட்டார்கள். இப்பயிற்சிகள் ஆறு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்றது. லெப்டினன்ட் கேணல் பொன்னம்மான் இவ்விரு முகாம்களை அமைத்துப் பராமரிக்கும் பொறுப்பு பொன்னாமனிடம் தலைவரால் கொடுக்கப்பட்டது. நாம் இனிப் பார்க்கப்போவது போல, தனது நிர்வாகத்தைப் பரவலாக்கி, மத்தியிலிருந்து உப பிரிவுகளுக்கு விஸ்த்தரித்து வந்திருந்தார். இயக்கத்தின் பொறுப்புக்களை ஒவ்வொரு பிரிவுகளுக்கும் பரவலாக்கி வழங்கியதுடன் தனக்கு விசுவாசமான மூத்த போராளிகளை அவற்றிற்குப் பொறுப்பாக அவர் நியமித்தார். அந்த வகையிலேயே பொன்னாமான் சிறுமலை மற்றும் குளத்தூர் முகாம்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இம்முகாம்களுக்குப் பொறுப்பாகவிருந்த அதேநேரம், முன்னணி பயிற்சியாளராகவும் பொன்னம்மான் பணியாற்றினார். பொன்னம்மானுடன் வேறு சில முக்கிய தளபதிகளும் இம்முகாம்களில் பயிற்சியாளர்களாக இயங்கியிருந்தனர். பிரபாகரனால் தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரபிரதேசத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மூத்த போராளிகளான குமரப்பா, புலேந்திரன், கிட்டு, லிங்கம் மற்றும் ரகு ஆகியோரே பயிற்சியாளர்களாக அமர்த்தப்பட்ட ஏனைய மூத்த தளபதிகளாகும். பிரபாகரன் அடிக்கடி இம்முகாம்களுக்குட் விஜயம் செய்வது வழமை. தனது விஜயங்களின்பொழுது ஆயுதப்பாவனை மற்றும் ஆயுதங்களைப் பராமரித்தல் தொடர்பாக போராளிகளுடன் கலந்துரையாடுவதில் தனது நேரத்தைச் செலவிட்டு வந்தார். கைத்துப்பாக்கியை இலாவகமாக இயக்குவதில் கைதேர்ந்தவராகத் திகழ்ந்த பிரபாகரனின் திறமையினை போராளிகள் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்ப்பார்கள் என்றும் அறியப்பட்டிருந்தது. முகாம்களின் ஒட்டுமொத்த கண்காணிப்பினை நாயிக் என்கிற இந்திய அதிகாரியொருவரின் பொறுப்பில் பிரபாகரன் கையளித்திருந்தார். எம்.ஜி.ஆர் இடமிருந்து கிடைத்த பணத்தினைக் கொண்டு 1984 ஆம் ஆண்டு ஆடியில் சிறுமலை முகாமினையும் பிரபாகரன் மேலும் விஸ்த்தரித்தார். மேலும், அம்முகாமின் இரு துணை முகாம்களாக திருப்பரங்குன்றம் மற்றும் அழகர் மலை ஆகிய பகுதிகளில் சிறிய முகாம்களை உருவாக்கினார். இவ்விரு இடங்களும் தமிழ்க்கடவுளான முருகனின் ஆறு புனிதத் தலங்களில் இரண்டு என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. 1984 ஆம் ஆண்டு ஆடி மாதத்தில் மூன்றாவது பயிற்சி அணி தனது பயிற்சியினை நிறைவுசெய்துகொண்டு யாழ்ப்பாணத்தின் போர்க்களத்தில் அம்மாத இறுதியில் பிரபாகரனால் இறக்கப்பட்டது. மூன்றாவது அணியின் தலைவராக யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய கிட்டு, அப்போது யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த பண்டிதரின் உப-தளபதியாகக் கடமையாற்றினார். பண்டிதர், புலிகளின் அச்சுவேலி முகாமிலிருந்தே இயங்கிவந்தார். மூன்றாவது அணியின் யாழ்வரவுடன் இராணுவத்தினர் மீதான புலிகளின் வலிந்த தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டதுடன், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து மக்களையும் நிலங்களையும் விடுவிக்கும் பிரபாகரனின் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நான்காவது பயிற்சியணி சிறுமலை முகாமில் 1984 ஆம் ஆண்டு ஆடியில் இருந்து அவ்வருட இறுதிவரை பயிற்றப்பட்டது. அவ்வருடம் மார்கழி மாதத்தில் அவ்வணியும் யாழ்க்களத்தில் ஏனைய அணிகளுடன் இணைந்துகொண்டது. இவ்வணியின் அறிமுகத்தின் மூலம் யாழ்க்குடாநாட்டில் இருந்த புலிகளின் எண்ணிக்கை 500 ஐத் தொட்டிருந்ததுடன், மேம்படுத்தப்பட்ட ஆளணி எண்ணிக்கையூடாக பொலீஸாரை அவர்களின் நிலையங்களுக்குள்ளும், இராணுவத்தினரை அவர்களின் முகாம்களுக்குள்ளும் முடக்க புலிகளால் முடிந்தது.
- lt-col-ponnamman.jpg