Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சித்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரஞ்சித்

  1. எப்பிடியண்ணை, புலிப் பயங்கரவாதிகளை சிங்கள அரசு அழித்த பின்னர் மீதமாய் இருக்கிற தமிழர்கள் இன்று சிங்களவருடன் இணக்க அரசியல் செய்வது போலவோ? சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்து இணக்க அரசியல்தானே செய்துகொண்டிருக்கிறம், ஒரு 26 வருஷத்தைத் தவிர‌?
  2. கென்ட் - டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் இராணுவ இலக்குகளாகவே பார்க்கப்படல் வேண்டும் ‍- சிங்களப் பாதிரியார் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் இருந்து இந்திய வம்சாவளித் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டதும் பின்னர் வலி ஓயாவில் குடியேறிய சிங்கள் காடையர்கள் அயலில் உள்ள பாரம்பரிய தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்து தமிழ் மக்களுக்கு சொல்லொணாத் துன்பங்களைக் கொடுத்து வந்ததும் தமிழ் மக்களுக்கு மிகுந்த வலியினை ஏற்படுத்தியிருந்தது. சிங்களத் தலைவர்களிடமிருந்து நியாயத்தன்மையினை ஒருபோதுமே எதிர்பார்க்க முடியாது என்கிற நிலைக்குத் தமிழ் மக்கள் வந்துவிட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தொண்டைமான். என்னுடன் தனிப்பட்ட ரீதியில் அவர் பேசும்போது சிங்களத் தலைவர்கள் தூரநோக்கற்றுச் செயற்படுகிறார்கள் என்றும் தமது செயற்பாடுகளால் தமிழ் மக்கள் எவ்வகையான துன்பங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள் என்றோ அல்லது தமிழ மக்களின் இதுதொடர்பான உணர்வுகள் என்னெவென்றோ அவர்கள் சிறிதும் சிந்திக்கவில்லை என்றும் கூறினார். "இதற்குச் சரியான விலையினை அவர்கள் விரைவில் செலுத்த வேண்டி வரும்" என்று என்னிடம் அவர் மேலும் கூறினார். அவர் கூறியவாறே தமது செயல்களுக்கான விலையினை சிங்களத் தலைவர்கள் 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 30 ஆம் திகதி செலுத்தினார்கள். மறுநாள்க் காலை தொண்டைமானைச் சந்திப்பதற்காக அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். நான் உள்ளே நுழையும்போதே என்னைப் பார்த்துப் புன்னகைத்தார் அவர். "செய்தி கேள்விப்பட்டீர்களா?" என்று என்னைக் கேட்டார். அவர் சொல்வதைக் கேட்கவேண்டும் என்பதற்காக எதுவும் தெரியாதவர் போல அவரைப் பார்த்துக்கொண்டு நின்றேன். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் அரசால் குடியேற்றப்பட்டிருந்த காடையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்துப் பேசிய அவர், "தம்மிடம் அதிகாரப் பலம் இருப்பதால் தாம் எதனையும் செய்துவிடமுடியும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இவர்களைக் காட்டிலும் பலமான சக்திகளும் இருக்கின்றன" என்று கூறினார். தொண்டைமானிடமிருந்து தமிழ் உணர்வு வெளிப்பட்டது இதுவே முதற்தடவையுமல்ல. அப்பாவிச் சிங்களவர்கள் கொல்லப்பட்டது தனக்கு வருத்தத்தினையளிப்பதாக அவர் கூறினாலும், தமிழர்களுக்கும் சுயகெளரவம், கண்ணியம், தமது மொழி மீதான பற்று, தமது மதம் மீதான பற்று, தமது அடையாளம் குறித்த பெருமை ஆகியன இருப்பதை சிங்களத் தலைமைகள் கண்டுகொள்ளாமைக்கான தண்டனையாக இத்தாக்குதல்களை அவர் பார்த்தார். கென்ட் - டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல் கார்த்திகை 30 ஆம் திகதி நடைபெற்றது. சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன் இத்திட்டத்தினை வகுக்க, தாயகத்தில் இருந்த மாத்தையா அதனை செயற்படுத்தினார். சுமார் 50 போராளிகள் கொண்ட குழுவினர் இரவு வேளையில் பஸ் வண்டிகளில் ரைபிள்கள், இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் என்பவற்றைத் தாங்கியவாறு அப்பகுதி நோக்கிச் சென்றனர். ஒரு பஸ் கென்ட் பண்ணை நோக்கிச் செல்ல மற்றையது டொலர் பண்ணை நோக்கிச் சென்றது. அதிகாலை வேளையில் ஒரே நேரத்தில் இந்த பண்ணைகள் மீது தாக்குதல்கள் ஆரம்பமாகின. தாக்குதலில் ஈடுபட்ட புலிகள், காவலாளிகள், ஆண்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததுடன் சிலரை வெட்டியும் கொன்றனர். சில காடையர்கள் அறைகளுக்குள் அடைக்கப்பட்டுக் குண்டுவைத்துக் கொல்லப்பட்டார்கள். டொலர் பண்ணையில் அன்று 62 சிங்களவர்களும் மூன்று சிறைக் காவலர்களும் புலிகளால் கொல்லப்பட்டார்கள். டொலர் பண்ணையில் இருந்து 8 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்திருந்த கென்ட் பண்ணைக்குச் சென்ற புலிகள் அங்கும் 20 சிங்களவர்களைக் கொன்றார்கள். மறுநாள்க் காலையில் இராணுவமும் பொலீஸாரும் அவ்விடத்தை அடையுமுன்னர் புலிகளின் அணி அங்கிருந்து வெளியேறியிருந்தது. காலையில் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலீஸாரும் அப்பகுதியைச் சுற்றித் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதன்போது 30 புலிகளைத் தாம் கொன்றுவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அயலில் இருந்த தமிழ்க் கிராமங்களில் இருந்து இராணுவத்தால் இழுத்துவரப்பட்ட பொதுமக்கள் தான் என்று கிராமவாசிகள் தெரிவித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தமது அணி இழப்புக்கள் எதுவுமின்றி பாதுகாப்பாக தளம் திரும்பியதாக புலிகள் பின்னர் அறிவித்திருந்தனர். பொதுமக்கள் மீது புலிகள் முதன்முதலாக நடத்திய தாக்குதலே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களாகும்.இத்தாக்குதல்களை புலிகளுக்கெதிரான தீவிரப் பிரச்சாரப் பொருளாக அரசு பாவித்தது. சிங்களப் பொதுமக்கள் மீதான இத்தாக்குதல்கள் ஏனைய போராளி அமைப்புகளுக்குள்ளும் தமிழ் மக்களுக்குள்ளும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் பத்மநாபா இத்தாக்குதல்களைக் கண்டித்திருந்தார். தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள அரசுக்கும் அதன் இராணுவத்திற்கும் எதிரானதேயன்றி சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்று அவர் கூறினார். பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மனச் சாட்சிக்கு விரோதமானவை என்று புலிகள் கருதியதால் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோருவதில் இருந்து விலகிநின்றனர். ஆனால், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் அமைப்பினர் சிலர் பிரபாகரனிடம் தனிப்பட்ட ரீதியில் இத்தாக்குதல்கள் குறித்து வினவியபோது அதனைத் தாமே நடத்தியதாக அவர் ஒத்துக்கொண்டிருந்தார். ஆனால், தம்மால் கொல்லப்பட்டவர்கள் சாதாரண பொதுமக்கள் இல்லையென்பதை ஆணித்தரமாக மறுத்த அவர், தமிழரின் தாயகத்தைக் கூறுபோடுவதற்காக அரசாலும், இராணுவத்தாலும் அப்பகுதியில் அடாத்தாக குடியேற்றப்பட்ட சிங்களக் கிரிமினல்கள் மீதே தாம் தாக்குதல் நடத்தியதாக அவர் வாதிட்டார். மேலும், தாக்குதல்களின்போது பெண்களையும் குழந்தைகளையும் தவிர்த்து விடுமாறு தனது போராளிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார். தாக்குதலில் ஒரேயொரு பெண் மட்டுமே கொல்லப்பட்டதாகவும், அவர்கூட தனது கணவரை அணைத்தபடி அறைக்குள் சென்றபோது அவ்வறை மீது குண்டெறியப்பட்ட வேளை கொல்லப்பட்டதாக அவர் கூறினார். இத்தாக்குதல் குறித்து இரு சிங்களக் கத்தோலிக்கப் பாதிரியார்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். அவர்களில் ஒருவரான செலெஸ்ட்டின் பெர்ணான்டோ எனும் பாதிரியார், வலி ஓயா குடியேற்றத் திட்டம் அரசால் வேண்டுமென்றே வலிந்து உருவாக்கப்படதென்றும், தமிழ் மக்களையும் போராளிகளையும் சீண்டும் நோக்கிலேயே இது ஆரம்பிக்கப்பட்டதென்றும் கூறியதோடு, இத்தாகுலை பொதுமக்கள் மீதான தாக்குதல் என்று பார்க்கமுடியாதென்றும் இராணுவ இலக்காகவே பார்க்கப்படல் வேண்டும் என்றும் கூறியிருந்தார். தாக்குதல் நடந்தவேளையில் அங்கிருந்து உயிர்தப்பிய சிங்களப் பெண்ணான ஜெஸி நோனா என்பவர் தானும் தனது மகளும் அயலில் இருந்த இன்னொரு சிங்களக் குடியேற்றக் கிராமமான‌ பதவியாவின் பராக்கிரமபுரவுக்குள் ஓடிச் சென்றதாகவும், தனது மருமகன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் தெரிவித்திருந்தார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் சிங்களப் பத்திரிக்கையான சிலுமினவுக்குப் பேட்டியளித்த ஹேமசிறி பெர்ணாண்டோ சாவிலிருந்து தான் எவ்வாறு தப்பி வந்தேன் என்பதை விளக்கியிருந்தார். "எனது குடும்பத்தினருடன் ஆழ்ந்த உறக்கத்தில் நான் இருந்தேன். திடீரென்று நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. கூடவே துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்கத் தொடங்கின. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வெளியே வந்தேன். யாரோ ஒருவர் எனது முகத்தை நோக்கி டோர்ச் வெளிச்சத்தைப் பாய்ச்சுவது தெரிந்தது. என் முகத்திற்கு நேரே துப்பாக்கியை ஏந்திப் பிடித்த அவர் எனது கைகளை உயர்த்துமாறு கட்டளையிட்டார். பின்னர் சத்தம் போடாமல் ஓடிவிடு என்று மெதுவான குரலில் என்னைப் பணித்தார், நானும் அதற்குப் பணியச் சம்மதித்தேன்.." "அவர் என்னை அருகிலிருந்த ஒரு குடிசைக்குள் இழுத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து இன்னொரு குடிசைக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். என்னைப்போல இன்னும் மூன்று ஆண்களை அவர் பிடித்து வைத்திருந்தார். நாங்கள் நடத்திச் செல்லப்படும்போது குண்டு வெடிக்கும் ஓசையொன்று கேட்டது. அவ்வெடிப்பில் 15 கைதிகள் கொல்லப்பட்டனர். அதுவே போராளிகள் தாக்குதலை முடித்துக்கொண்டு திரும்புவதற்கான சமிக்ஞையாக இருந்திருக்கும்" என்றும் அவர் கூறினார்.
  3. சிலரது பெயரைக் குறிப்பிடும் அளவிற்கு அவர்களை நான் உயர்த்த விரும்பவில்லை. மற்றும்படி எவருக்கும் பயந்துபோய் நான் பெயரைத் தவிர்த்து எழுதவில்லை. அவரது கருத்துக்களைப் பார்த்தும், அவர் வாழும் பிரதேசத்தை ஊகித்துமே அவர் கத்தோலிக்கராக அல்லது கிறீஸ்த்தவராக இருக்கலாம் என்று அனுமானித்தேன்.
  4. தமிழ்க் கிராமங்களைச் சூறையாடி, தமிழ்ப் பெண்களை இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சிங்களக் குடியேற்றக்காரர்கள் தனது குறிக்கோள்களை நிறைவேற்றிக்கொள்ள, தான் அமைத்த இணைந்த தலைமையகம் உதவும் என்று லலித் கருதினார். இத்தலைமையகத்தின் முக்கிய கடமைகளாக மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்பினைக் கண்காணிப்பது, சிவில் நிர்வாகத்தைக் கண்காணிப்பது, நில வழங்கலைக் கையாள்வது என்பன காணப்பட்டன. மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் "L" வலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இந்தத் தலைமையகம் தனது கட்டுப்பாட்டினைக் கொண்டிருந்தது. இத்தலைமையகத்திற்கு முப்படைகள், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களின் முற்றான ஆதரவு கிடைக்கப்பெற்று வந்தது. தமிழர்களின் பூர்வீகப் பிரதேசமான மணலாற்றில் தான் விரும்பிய வகையில் இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அமைத்துக்கொள்ளும் அதிகாரத்தினை இணைந்த தலைமையகத்தினூடாக லலித் அதுலத் முதலி பெற்றுக்கொண்டார். மணலாறு பிரதேசம் ஏற்கனவே அமைக்கப்பட்டு வந்த இன்னொரு சிங்கள குடியேற்றமான பதவியாவிற்கு வடக்கே அமைந்திருந்தது. மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு உட்பட்ட பகுதி எனும் அடிப்படையில், இப்பிரதேசத்தில் இருக்கும் காணிகளில் தனது திட்டத்திற்கென்று எவற்றையும் கையகப்படுத்தும் அதிகாரம் லலித்திற்கு வழங்கப்பட்டிருந்தது. அசோக டி சில்வா மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினுள் உள்வாங்கப்படுகின்ற பகுதி எனும் போர்வையில் மணலாற்றின் நிர்வாகத்தை பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட‌ அநுராதபுரத்திற்கு லலித் மாற்றினார்.இப்பகுதியை முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததுடன் தமிழர்களை இப்பகுதியிலிருந்து முற்றாக வெளியேற்றினார் லலித்.வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் தமிழ் நிர்வாக அதிகாரிகள் கூட இராணுவத்தினரின் அனுமதியின்றி இப்பகுதிக்குள் செல்வது தடுக்கப்பட்டது. இராணுவத் தேவைக்காக வலி ஓயா (மணலாறு) தனிமாவட்டமாக கணிக்கப்பட்டு இப்பகுதிக்கென்று தனியான ஒருங்கிணைப்பு அதிகாரியொருவரும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். லலித்தின் கூட்டுச் சேவைகள் தலைமையகத்திற்கு முன்னாள் கடற்படைத் தளபதியான அசோக டி சில்வா நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாளராக முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமாகக் கடமையாற்றிய டி.ஜே. பண்டாரகொட நியமிக்கப்பட்டார். பண்டாரகொடவுக்கு வழங்கப்பட்ட ஒரே பணி வலி ஓயா திட்டம் வெற்றிகரமாக நடத்தப்படுவதைக் கண்காணிப்பது மட்டும்தான். பண்டாரகொடவை ஜெயார் தனது சொந்த விருப்பின் பெயரில் முன்னர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமித்திருந்தார். ஜெயாரின் அபிமானத்தைப் பெற்றிருந்த பண்டாரகொடவும் தனது நிர்வாகத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தில் பெரும் எடுப்பிலான சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுத்ததுடன், தமிழர்களின் சனத்தொகை வீதாசாரத்தில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தார். இவரையே வலி ஓயா திட்டத்திற்கும் அரசாங்கம் நியமித்திருந்தது. லலித்தினால் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுச் சேவைகள் தலைமையகம் உடனடியாகச் செயற்பாட்டில் இறங்கியது. இதன் செயற்பாடு குறித்து 1984 ஆம் ஆண்டு மார்கழி 2 ஆம் திகதி வீக்கெண்ட் எனும் வார இறுதிப் பத்திரிக்கையில் டொன் மிதுன இவ்வாறு எழுதுகிறார், "கிழக்கு மாகாணத்தில் சர்ச்சைக்குரிய‌ வடமுனையில் சிங்களவர்களைக் குடியேற்ற அரசு முன்னெடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்ததையடுத்து அவர்களை வேறு பகுதியில் குடியமர்த்தவேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டிருந்தது. ஆகவே, பதவியாவின் எல்லையோரமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணியிலிருந்து பதவியா வரையான பகுதிகளை சிங்களப் பாதுகாப்பு அரணாக மாற்றும் நோக்கத்துடன் சிங்களக் குடியேற்றத்தை உருவாக்க‌ அரசு தீர்மானித்திருக்கிறது". ஆரியகுண்டம், டொலர் பண்ணை மற்றும் அதனையண்டிய பகுதிகளில் இருந்த காடுகளை அரசு அழித்து துப்பரவு செய்ய ஆரம்பித்தது. பதவியா சிங்களக் குடியேற்றத்திலிருந்து டொலர் பண்ணை, கும்பகர்ணன் மலை, ஆரியகுண்டம், கொக்குச்சான்குளம், கொக்குத்தொடுவாய் மற்றும் வெடுக்கன் மலை ஆகிய பகுதிகளை இணைக்க நான்கு சாலைகள் அமைக்கப்பட்டன. வலி ஓயா குடியேற்றத்தை முன்னெடுக்க இராணுவ வாகனங்கள், விவசாயக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள், இல்மனைட் தொழிற்சாலையின் வாகனங்கள், புகையிலைக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் என்பன பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. டொலர் பண்ணைப் பகுதியில் உடனடியாகவே சில சிங்களக் குடும்பங்கள் குடியேறத் தொடங்கியிருந்தன. வவுனியா மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், காணி அதிகாரிகள் என்று தமிழ் பேசும் எவருமே வலி ஓயாத் திட்டம் குறித்து எதுவித தகவல்களையும் அறிந்துகொள்ளாதபடி இருட்டில் வைக்கப்பட்டிருந்தனர். இப்பகுதியினை இராணுவம் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுடன் விமானப்படையினருடன் இணைந்து தொடர்ச்சியான ரோந்துகளும் இப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு, வெளியார் இப்பகுதிக்குள் நுழைவதை முற்றாகத் தடுத்து வந்தனர். முல்லைத்தீவில் வசித்துவந்த தமிழர்கள் இரவுவேளைகளில் தொடர்ச்சியாக பாரிய புல்டோசர்கள் காட்டுப்பகுதிகளில் இயங்கிவருவதைக் கேட்டதுடன், பாரிய குழாய்கள் அப்பகுதி நோக்கிக் கொண்டுசெல்லப்படுவதையும் கண்டிருக்கின்றனர். பிரபல சிங்களச் செய்தியாளர் ஒருவரின் அறிக்கை கீழே. "தமிழர்களின் தாயகமான தமிழ் ஈழத்தின் முக்கிய மாகாணங்களான வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முக்கிய நிலப்பகுதியை உடைத்து சிங்களக் குடியேற்றம் ஒன்றினை ஏற்படுத்து அரச உயர்மட்டத்தின் இரகசியத் திட்டத்தின் ஆரம்பமே இந்தக் குடியேற்றமாகும்". இத்திட்டத்தின்படி 200,000 சிங்களவர்களை வலி ஓயாவில் அரசு குடியேற்றியதாக குணரட்ண பின்னாட்களில் என்னிடம் கூறினார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேற்றப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் ஆகும். களவு, கள்ளச்சாரயம் காய்ச்சுதல், வன்முறைகளில் ஈடுபடுதல், பொதுமக்களை அச்சுருத்தல் ஆகிய குற்றங்களுக்காகத் தென்பகுதிச் சிறைகளில் அடைக்கப்பட்டவர்களையே குடும்பங்களுடன் இப்பகுதியில் அரசு குடியேற்றியது. பின்னாட்களில் இப்பண்ணைகளில் அரசால் குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களையடுத்து பல தென்பகுதி ஊடகங்களும், அரச ஊடகங்களும் கடுமையான பிரச்சாரத்தை முடுக்கிவிட்டிருந்தன. தாக்குதலில் உயிர்தப்பிய சில சிங்களவர்கள் பேசும்போது சிங்களக் குடியேற்றத்திற்கு அருகில் இருந்த தமிழ்க் கிராமங்களுக்குள் சென்ற இராணுவத்தினரும், சிறைக் காவலர்களும், சிறைக் கைதிகளும் தமிழர்களைத் தொடர்ச்சியாகத் துன்புறுத்தி வந்ததுடன், அப்பகுதிகளில் இருந்து தமிழர்களை விரட்டுவதிலும் ஈடுபட்டு வந்ததை ஒத்துக்கொண்டிருந்தனர். சிங்களக் குடியேற்றத்திற்கு அயலில் இருந்த‌ தமிழ்க் கிராமங்களில் இளைஞர்களைத் தாக்கித் துன்புறுத்தியதுடன், அங்கிருந்து கால்நடைகளையும் விவசாயப் பொருட்களையும் மிரட்டி எடுத்துவந்ததாகவும் அவர்கள் மேலும் கூறினர். மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எனும் அமைப்பினர் புலிகளின் தாக்குதலின் பின்னர் உயிர்தப்பியவர்களுடன் நடத்திய நேர்காணலில் சில விடயங்களைச் சிங்களக் குடியேற்றவாசிகள் தெரிவித்திருந்தனர். சிங்களக் கைதிகளையும், காடையர்களையும் இப்பகுதியில் குடியேற்றியதன் இன்னொரு நோக்கம் அயலில் உள்ள தமிழர்களை விரட்டுவது ஆகும் என்று கூறினர். மேலும் பல தமிழ்ப்பெண்களை இழுத்துவந்து கூட்டாகப் பாலியல் வன்புணர்வில் சிங்களவர்கள் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இராணுவத்தினரால் இழுத்துவரப்படும் தமிழ்ப்பெண்கள் முதலில் இராணுவத்தால் கூட்டுப் பாலியல் வன்புணர்வுள்ளாக்கப்பட்டபின்னர் சிறைக் காவலர்களிடம் கொடுக்கப்படுவார்கள் என்றும், சிறைக்காவலர்கள அவர்களைக் கூட்டாக வன்புணர்ந்த பின்னர் இறுதியாக சிங்களக் கைதிகள் அப்பெண்கள் மீது வன்புணர்வில் ஈடுபடுவார்கள் என்றும் உயிர்தப்பிய சிங்களவர்கள் தெரிவித்தனர். Jessi Nona, Hemasiri Fernando and others also spoke of harassment of Tamils living in surrounding villages by soldiers, prison guards and some convicts. Those from the settlement stole poultry, cattle and agricultural produce. They assaulted Tamil youths. The UTHR (J) report quotes a Sinhala activist from a leftwing political group who went to Dollar and Kent Farms for humanitarian work following the LTTE attack thus: Winner of the Young Journalist Award for 2002, Amantha Perera of the Sunday Leader, in his On the Spot Report published in his paper of 19 May 2002, says: "The convicts, in fact, had been used to stealing from Tamil villages from the area and incidents of rape too had been attributed to the convicts".
  5. யேசுநாதரின் மூதாதையர் எனும் காரணத்திற்காக யூத ஆக்கிரமிப்பாளர்களை ஆதரிக்கும் ஒரு சிலர் இங்கு உலவுகிறார்கள். ஆனால், 1980 களின் நடுப்பகுதியில் இஸ்ரேலிய மொசாட் ஈழத்தமிழர் விடயத்தின் என்ன செய்துகொண்டிருந்தது என்பதை இந்த அடிவருடிகள் அறிந்துகொள்வது நல்லது. மணலாற்றில் சிங்கள மயமாக்கலினைச் செய்யுமுன் நெடுங்கேணியில் இருந்து தமிழர்களை மொசாட்டின் ஆலோசனனியின்படி எப்படிச் சிங்களப் பேரினவாதம் விரட்டியது என்பதற்கான சிறிய வரலாற்றுக் குறிப்பு ஒன்று, "MOSSAD’s plan was nothing but the classic counterinsurgency program – complete evacuation and destruction of villages supporting the insurgents along with destruction of crops and prevention of cultivation. The British implemented that scheme in Malaya (Malaysia) during the communist insurgency of the ‘fifties and Israel modified it to suit its needs by establishing Jewish border settlements to plug the infiltration and movement of Palestinian guerillas. MOSSAD advised Athulathmudali to do the same: plug the routes and dry up the supplies. Israeli advice suited Athulathmudali’s mission of destroying the territorial base of Tamil Eelam and his ambition of becoming Jayewardene’s successor".
  6. இங்கே மேற்கை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் புரியும் வாதங்களுக்கு நடுவிலே ஒருவர் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டுப் போகிறார். அது உங்கள் இருவரினதும் கண்களுக்குத் தெரியவில்லை, நீங்கள் உங்கள் சண்டையில் மும்முரமாக இருக்க, சந்தில் சிந்துபாடிவிட்டு ஒருத்தர் போயிருக்கிறார். முடிந்தால், புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று கூறுங்கள் . அல்லது, அமைதியாக இருந்து அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். கத்தோலிக்கர்களின் இயல்பான மேற்குச் சார்பு நிலையும், வேதாகமத்தின் வழியான யூதச் சார்பு நிலையும் சொந்த மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்திவிட்டுச் செல்ல தூண்டியிருக்கிறது. உங்களுக்கென்ன, அமெரிக்கா ஈரான் சண்டையில் நீங்கள் திளைத்திருங்கள் !
  7. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு, இஸ்ரேலிய பிராந்திய வல்லரசு என்று எத்தனை பலம்பொருந்திய நாடுகள் வந்தாலும் கூட, தாம் இவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஒருபோதும் வெல்லப்போவது கிடையாது என்று தெரிந்தும், இன்றுவரை தம்மால் முடிந்தளவு இந்தப் பலங்களுக்கு அழிவை ஏற்படுத்த பலஸ்த்தீனர்களும், ஏனைய முஸ்லீம்களும் ஏன் முயல்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. கெஞ்சியும், இரைஞ்சியும், கால்களில் வீழ்ந்தும் கேட்டாயிற்று. பல லட்சக் கணக்கில் உயிர்களைக் கொடுத்தும் அனுதாபத்தையோ நீதியையோ அவர்களால் தேட முடியவில்லை. ஆகவேதான் திருப்பியடிக்கிறார்கள். எடுப்பார் கைப்பிள்ளைகளாகி ஒருநாள் அழிவதைக் காட்டிலும் திருப்பியடித்து அழிந்துபோனாலும் பரவாயில்லை என்கிற நிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களில் தவறில்லை.
  8. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் உளவுப்படையான மொசாட்டின் ஆலோசனைகளின் படி செயற்பட்ட லலித் லலித்தும் அவருடன் வந்தோரும் நெடுங்கேணிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் அடைக்கலமாகியிருந்த கென்ட் மற்றும் டொலர் எனப்படும் செழிப்பான பண்ணைகளுக்கு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். சிறு தானியப் பயிர்ச்செய்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பேட்டி காண்பதற்கு எமக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமக்குப் போதுமான வருமானம் கிடைப்பதால் தாம் மகிழ்ச்சியாக அங்கு வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர். அப்பிரதேசமெங்கும் பச்சைப் பசேல் என்று காட்சியளித்தது. காந்தியம் பண்ணையில் அடைக்கலமாகி வாழும் இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் ஆனால், அதேவருடம் ஆனியில் இப்பகுதியில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அவர்கள் விரட்டப்பட்டனர். வவுனியா பொலீஸ் அத்தியட்சகர் ஹேரத் இந்த விரட்டியடிப்பிற்கான சூழ்நிலையினை ஏற்படுத்தினார். இப்பண்ணைகள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்பட்டு வருவதாக சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களுக்கு அவர் வதந்திகளைக் கசியவிட்டார். அதன்பிறகு இப்பண்ணைகள் வேலைபார்த்துவந்த மலையகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பஸ்வண்டிகளில் ஏற்றப்பட்டு, மலையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு தெருக்களில் அநாதரவாக விடப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவரான தொண்டைமானை இச்செயல் கடும் சினங்கொள்ள வைத்தது. மந்திரிசபையில் இந்த விவகாரத்தை தான் எழுப்பியதாக அவர் என்னிடம் கூறினார். அதற்குப் பதிலளித்த இனவாதியான சிறில் மத்தியூ பண்ணைகளில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்ததாக கர்ஜித்தார். சிறில் மத்தியூவிற்கு ஆதரவாக காமிணி திசாநாயக்கவும் அமைச்சரவையில் தொண்டைமானுடன் தர்க்கித்தார். அங்கு பேசிய லலித் அதுலத் முதலி அரசாங்கத்தின் ஒரே நோக்கம் தமிழ்ப் பயங்கரவாதத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்பதுதான் என்று கூறினார். பின்னர் ஜெயாருடனான தனியான சந்திப்பொன்றில் இப்பிரச்சினை குறித்து தான் பேசியதாக தொண்டைமான் கூறினார். ஆனால், சிரித்துக்கொண்டே தொண்டைமான் கூறிய விடயங்களை அவர் புறங்கையால் தட்டிவிட்டதாக தொண்டைமான் கூறினார். "இதன் பின்னால் இருந்தது ஜெயார் தான் என்பதை நான் அப்போது உணர்ந்துகொண்டேன்" என்று தொண்டைமான் என்னிடம் கூறினார். எஸ் தொண்டைமான் டொலர் பண்ணையிலிருந்து துரத்தப்பட்ட இரு மலையகத் தமிழ்க் குடும்பங்களை தொண்டைமான் சந்தித்துப் பேசினார். அக்குடும்பங்களில் ஒன்றின் தலைவரான‌ பாண்டியன் அவிசாவளையில் அமைந்திருந்த இறப்பர் தோட்டத்தில் பணியாற்றி வந்தவர். அவர் வாழ்ந்துவந்த லயன் அறை 1977 ஆம் ஆண்டுக் கலவரத்தின்போது சிங்களவர்களால் எரிக்கப்பட்டிருந்தது. சிலகாலம் அகதிகள் முகாம் ஒன்றில் தங்கியிருந்துவிட்டு பின்னர் வவுனியாவுக்குச் சென்றது அவரது குடும்பம். வவுனியாவில் அவரது குடும்பத்தைப் போலவே சிங்களவர்களால் மலையகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பல இந்திய வம்சாவளித் தமிழர்கள் அடைக்கலமாகியிருப்பதை அவர் கண்டார். "நாங்கள் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவந்தோம். எமது பண்ணையில் கடலையும், மிளகாயும் பயிரிடப்பட்டிருந்தன. நல்ல விளைச்சலும் எமக்குக் கிடைத்தது. 1984 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் இந்திய வம்சாவளித் தமிழர்களை இப்பண்ணைகளில் இருந்து பொலீஸார் விரட்டியடித்துவருவதாக எமக்குத் தகவல் கிடைத்தது. வெள்ளியன்று மாலை நான்கு பஸ்களில் பொலீஸார் வந்திறங்கினர். ஒலிபெருக்கியூடாகப் பேசிய பொலீஸார் அப்பகுதியில் இருந்த ஆண்களையெல்லாம் முன்னால் வரும்படி கூறினார்கள். அவர்கள் கூறியதன்படியே வீதியில் நாம் வரிசையில் வந்து நின்றோம். எங்களனைவரையும் மீண்டும் எமது குடிசைகளுக்குச் சென்று அங்கிருந்த மனைவி மற்றும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு, உடைமைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் வீதிக்கு வருமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். ஏன் என்று கேட்ட சிலர் பொலீஸாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்" என்று பாண்டியன் கூறினார். "பின்னர் எங்களை தாம் கொண்டுவந்த பஸ்வண்டிகளில் ஏறுமாறு பொலீஸார் கட்டளையிட்டனர். நாம் மறுக்கத் தொடங்கினோம். உடனடியாக எம்மீது தாக்குதல் நடத்திய பொலீஸார் எம்மைப் பலவந்தமாக பஸ்களில் ஏற்றினர். எம்மீது தாக்குதல் நடத்தப்படுவதைப் பார்த்து அழுதுகொண்டிருந்த எமது குடும்பங்களையும் பொலீஸார் பஸ்களில் பலவந்தமாக ஏற்றினர். இரவோடு இரவாக நாம் அங்கிருந்து மலையகத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டோம். காலை புலரும் வேளைக்கு முன்னர் பஸ்களில் இருந்து எம்மை வீதியில் தள்ளி இறக்கிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். பொழுது புலரும்போது நாம் இறக்கிவிடப்பட்டிருப்பது ஹட்டன் நகரம் என்பது எமக்குப் புரிந்தது. பின்னர் அங்கிருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்றோம்" என்று பாண்டியன் மேலும் கூறினார். இரண்டாவது குடும்பத்தின் தலைவரான வடிவேலும் இதே சம்பவத்தை தானும் நினைவுகூர்ந்தார். மேலும், பொலீஸார் தம்மை பலவந்தமாக பஸ்களில் ஏற்றிய வேளை தமது குழந்தைகளின் ஒன்று கடும் சுகவீனமுற்று இருந்ததாகவும், பொலீஸார் தம்மீது நடத்திய தாக்குதல்களைக் கண்ணுற்ற அவரது குழந்தை கடுமையான அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்டு சில வாரங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். இந்தியாவில் இருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றிற்காக இச்செய்தியை நான் அப்போது எழுதியிருந்தேன். இந்திய வம்சாவளித் தமிழர்களை இப்பண்ணைகளில் இருந்து விரட்டியடிக்கும் கைங்கரியத்தை லலித் மிகவும் சாதுரியமாகக் கையாண்டார். தனது நடவடிக்கைக்கான சூழலை ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரவ விட்டதன் மூலம் உருவாக்கிக் கொண்டார். ஆனால், பொதுக்கூட்டங்களில் பேசிய லலித் தான் மலையகத் தமிழர்களையோ இலங்கைத் தமிழர்களையோ வெறுக்கவில்லை என்று தொடர்ச்சியாகக் கூறிவந்தார். பயங்கரவாதிகளிடமிருந்து அவர்களைக் காக்கவே தான் பாடுபட்டு வருவதாக அவர் வாதாடினார். இந்திய வம்சாவளித் தமிழர்களை அச்சுருத்தி, அவர்களின் பிள்ளைகளைக் கடத்திச் சென்று பயங்கவாத‌ நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தமிழ்ப் பயங்கரவாதிகள் முயன்றுவருவதாக அவர் மேலும் கூறினார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழ்ந்துவரும் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தின் நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவை அரசாங்கத்தால் குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறிய லலித், அவற்றினை அரசாங்கம் மீள எடுத்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், இந்திய வம்சாவளித் தமிழர்கள் இப்பகுதிகளில் இருந்து விரட்டப்பட்ட பின்னர் இப்பகுதி திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டு கைதிகள் குடியமர்த்தப்படுவர் என்றும், அவர்களுடன் அவர்களது குடும்பங்களும் இப்பகுதிகளில் குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் கூறினார். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தால் மீளக் கையகப்படுத்தப்பட்டதுடன் அவற்றில் திறந்த வெளிச் சிறைச்சாலைகளை அமைப்பதாக விசேட வர்த்தமாணி அறிவித்தல் மூலம் அரசு தெரிவித்தது. சில நாட்களிலேயே சுமார் 450 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். இந்திய வம்சாவளித் தமிழர்களால் ஆரம்பிக்கப்பட்டு செழிப்பாக வளர்க்கப்பட்டு வந்த பயிர்களும், தமிழர்கள் வாழ்ந்து வந்த நிரந்தரக் குடிசைகளும் சிங்களக் கைதிகளுக்கு வழங்கப்பட்டன. சிங்களக் குற்றவாளிகளை வெற்றிகரமாக நெடுங்கேணியின் டொலர் மற்றும் கென்ட் பண்ணைகளில் குடியேற்றிய கையோடு ஒன்றிணைந்த படைகளின் விசேட படையணியின் தலைமையகத்தினை அநுராதபுரத்தில் லலித் நிர்மாணித்தார். இஸ்ரேலிய புலநாய்வுத்துறையான மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டத்திற்கமைய தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டின் அடித்தளத்தினைச் சிதைக்கும் நடவடிக்கைகளை இந்த தலைமையகத்திலிருந்தே லலித் முன்னெடுக்க ஆரம்பித்தார். இஸ்ரேலிய உளவுப்படையான மொசாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைத் திட்டம் பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது, 1. இப்பகுதிகளில் இருந்து தமிழர்களை முற்றாக விரட்டியடிப்பது. 2. தமிழர்கள் வாழும் கிராமங்களை அழிப்பதன் ஊடாக தீவிரவாதிகளுக்கு உதவிகள் கிடைப்பதைத் தடுப்பது. 3. தமிழர்களால் நேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்ச்செய்கைகளை அழிப்பதுடன் அவர்கள் தொடர்ந்தும் இப்பகுதிகளில் பயிர்ச்செய்களில் ஈடுபடுவதைத் தடுப்பது. இவ்வகையான திட்டத்தினை மலேசியாவை ஆக்கிரமித்து நின்றவேளை பிரிட்டிஷாரும் நடைமுறைப்படுத்தியிருந்தனர். அன்று அவர்கள் பயன்படுத்திய திட்டத்தினை தமக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்த இஸ்ரேலியர்கள், எல்லையோர யூதக் குடியேற்றங்களை உருவாக்கி அப்பகுதியூடாக ஊடறுத்து உள்நுழையும் பலஸ்த்தீனப் போராளிகளை தடுக்க முயன்று வந்தனர். தாம் ஆக்கிரமித்துவரும் பலஸ்த்தீனத்தில் தாம் கைக்கொள்ளும் திட்டத்தினையே இலங்கையும் கைக்கொள்ள வேண்டும் என்று மொசாட் அதிகாரிகள் லலித்திடம் வலியுறுத்திவந்தனர். "பயங்கரவாதிகள் உள்நுழையும் வழிகளை அடைத்துவிடுங்கள், அவர்களுக்கான வளங்களை தடுத்துவிடுங்கள்" என்பதே அவர்களின் தாரக மந்திரமாகும். தமிழர்களின் தாயகத்திற்கான அடித்தளத்தினைச் சிதைத்து ஜெயாருக்குப் பின்னர் ஜனாதிபதியாகும் கனவில் இருந்த லலித்திற்கு மொசாட் அதிகாரிகள் வழங்கிய ஆலோசனைகள் மிகுந்த திருப்தியைக் கொடுத்தன.
  9. வலி ஓயவாக மாறிய தமிழர்களின் தாயகப்பகுதியான மணலாறு தமிழர் தாயகத்தின் இரு மாவட்டங்களான திருகோணமலைக்கும் முல்லைத்தீவிற்கும் இடையிலான நிலத்தொடர்பினை தந்திரமாக அறுத்தெறிவதுதான் யான் ஓயா அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தினை வகுத்தவர்களின் நோக்கம் இப்பகுதியூடாகப் பாய்ந்து, திருகோணமலையின் வடக்கில் அமைந்திருக்கும் திரியாய்ப் பகுதிக்கூடாகக் கடலில் கலக்கும் யான் ஓயாவின் கரைகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலம் இதனைச் செய்வதாகும். யான் ஓயாவின் கரைகளில் சிங்கள விவசாயிகளையும், முல்லைத்தீவின் கரைகளில் சிங்கள மீனவர்களையும் குடியமர்த்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் தோல்வியடைவதை உணர்ந்த மகாவலி அபிவிருத்தி அமைச்சின் தலைவர் பண்டிதரட்ண, மாதுரு ஓயாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள விவசாயிகளைக் குடியமர்த்துவதற்கு வவுனியாவுக்கு அருகில் உகந்த பகுதியொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பணித்து கருணாதிலக்கவை அனுப்பிவைத்தார். 1983 ஆம் ஆண்டு ஐப்பசி மாத முதல்வாரத்தில் வவுனியாவுக்குச் சென்ற கருணாதிலக்க, வவுனியாவின் பொலீஸ் அத்தியட்சகர் ஆதர் ஹேரத்தையும், வவுனியாவுக்கான மேலதிக அரசாங்க அதிபரான சிங்களவரையும் சந்தித்துப் பேசினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் நெடுங்கேணிக்கு கருணாதிலக்கவை அழைத்துச் சென்ற அவர்கள் இருவரும், அப்பகுதியில் காணப்பட்ட செழிப்பான விவசாய‌ நிலங்களை அவருக்குக் காண்பித்தனர். இப்பகுதியின் பெரும்பாலான நிலங்களில் பாரம்பரிய தமிழ் விவசாயக் கிராமங்கள் காணப்பட்டன. மேலும், மீதியிடங்களில் தமிழருக்குச் சொந்தமான தனியார் நிறுவனங்கள் பண்ணைகளை குறுகிய மற்றும் நீண்டகால குத்தகை அடிப்படையில் அமைத்துச் செயற்பட்டு வந்தன. 1965 ஆம் ஆண்டிலிருந்து 99 வருடக் குத்தகைக்கு இக்காணிகள் தமிழர்களுக்கு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்தன. தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு காணித் துண்டும் சுமார் 10 இலிருந்து 50 ஏக்கர்கள் வரை கொண்டிருந்தது. வியாபா நிறுவனங்கள் பாரிய பண்ணைகளை இப்பகுதியில் அமைத்திருந்ததுடன், இவ்வகையான 16 வியாபாரப் பண்ணைகள் சுமார் 1000 ஏக்கர்கள் அல்லது அதற்கும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்டிருந்தன. அவ்வாறான பாரிய பண்ணைகளில் நாவலர் பண்ணை, சிலோன் தியெட்டர்ஸ் பண்ணை, ரயில்வே குறூப் பண்ணை, போஸ்ட் மாஸ்ட்டர் பண்ணை, கென்ட் பண்ணை, டொலர் பண்ணை ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். 1977 ஆம் ஆண்டு மலையகத்தில் தமிழர்கள் மீது சிங்களவர்களால் நடத்தப்பட்ட படுகொலைகளையடுத்து அங்கிருந்து விரட்டப்பட்ட பல தமிழர்கள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் வாழ்ந்துவந்தனர். இப்பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட சிறப்பான அறுவடைகளையடுத்து இப்பெயர்கள் அனைவராலும் அக்காலத்தில் அறியப்பட்டிருந்தன. இக்காணிகளை கருணாதிலக்கவிடம் காண்பித்த பொலீஸ் அத்தியட்சகர் இவற்றில் வசிப்பவர்கள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் என்றும் கூறியதோடு ஈ.பி.ஆர்.எல்.எப் பயங்கரவாதிகள் இந்தப் பண்ணைகளில் தங்கியிருப்பதாகவும் கூறினார். இப்பண்ணைகளினால் பதவிய எனும் சிங்களக் குடியிருப்பின் வடக்கு நோக்கிய விஸ்த்தரிப்பு தடைப்பட்டு நிற்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐப்பசி 12 ஆம் திகதி தனது அறிக்கையினை கருணாதிலக்க மகாவலி அதிகார சபையிடம் கையளித்தார். அவரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் பின்வருமாறு, "சட்டத்திற்குப் புறம்பானதும், தேசியத்திற்கு எதிரானதுமான இத்தமிழ்க் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் குடியேற்றங்களினால் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் தட்டுக்கப்பட்டு வருவதோடு, தேசியப் பாதுகாப்பிற்கும் இவற்றால் அச்சுருத்தல் ஏற்பட்டிருக்கிறது". வடக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு வந்த பதவியா சிங்களக் குடியேற்றம் ஆனால், நெடுங்கேணியில் சிங்களவர்களைக் குடியேற்றும் திட்டத்தினை ஜெயாரிடம் கொண்டுசெல்வதில் மகாவலி அபிவிருத்திச் சபைக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஏனென்றால், மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் காமிணியின் தாந்தோன்றித்தனத்தினால் பிசுபிசுத்துப்போனதனால் கோபம் அடைந்திருந்த ஜெயார், யான் ஓயாத் திட்டத்தை லலித் அதுலத் முதலியிடமே கொடுத்திருந்தார். அவரும் அதனை மிகவும் தந்திரமாக நடைமுறைப்படுத்திக்கொண்டிருந்தார். 1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி நாட்டின் தேசியப் பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பந்தோபஸ்த்து அமைச்சராகவும் லலித் நியமிக்கப்பட்டார். விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட திட்டமான கொவி பொல என்பதை மாங்குளத்தில் ஆரம்பித்து வைக்க அப்பகுதிக்குச் சென்றார் லலித் அதுலத் முதலி. அவரது விஜயத்தை செய்தியாக்கும் நோக்குடன் அங்குசென்ற பத்திரிக்கையாளர் குழுவில் நானும் அங்கம் வகித்தேன். லலித்தும், காமிணியும் செய்தித்தாள்களின் முதற்பக்கங்களில் எவ்வாறு இடம்பிடிப்பது எனும் கைங்கரியத்தில் மிகவும் கைதேர்ந்தவர்களாகத் திகழ்ந்தனர். இவர்களிடமிருந்து முக்கியமான செய்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் பத்திரிக்கையாளர்களும் இவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கிச் செய்தி வெளியிட்டனர். இவர்கள் இருவர் பற்றியும் செய்திகளை வெளியிட எனக்குச் சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தன. இதற்கிடையில், 1984 ஆம் ஆண்டு கார்த்திகை 26 ஆம் திகதி லலித்தின் பிறந்தநாளிற்கு நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார், "சபா, இன்றைக்கு பிரபாகரனுக்கும் பிறந்தநாள் என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். நாங்கள் இருவரும் ஒரே நாளில், ஒரே மாதத்தில் பிறந்திருக்கிறோம். அவர் என்னைவிடவும் வயதில் நன்கு இளையவர். நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரம வைரிகளாக மாறியிருக்கிறோம். இருவரில் எவர் வெற்றிபெறப்போகிறோம் என்பது எனக்குத் தெரியாதுவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயம். நாம் இருவரும் இலங்கையின் சரித்திரத்தில் முக்கியமான பங்கினை ஆற்றவே படைக்கப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார். பிரபாகரனோ தமிழரின் தனிநடான ஈழத்தை அமைக்கப் பாடுபட்டு வந்தார். ஆனால் லலித்தோ அந்த ஈழத்திற்கான அடித்தளத்தை அழிக்கப் பாடுபட்டு வந்தார். தமிழர் தாயகத்தின் அடித்தளத்தை அழிக்கும் அவரது முயற்சியின் முதற்பகுதியான மாங்குளம் - நெடுங்கேணிப் பகுதியை அவருடன் சென்று பார்க்க எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவருடன் பயணித்த ஊடகவியலாளர் குழுவில் நானும் இருந்தேன். வழமைபோல கொவி பொல (விவசாயிகள் சந்தை) சனிக்கிழமை காலை ஆரம்பமானது. தன்னுடன் வந்திருந்த செய்தியாளர்களுக்கு சிறப்பான செய்தியொன்றினை லலித் வழங்கினார். கொழும்பிலிருந்து வெள்ளிக்கிழமை வந்திருந்த செய்தியாளர்களும், வர்த்தகக் குழுவினரும் மாங்குளம் விருந்தினர் மாளிகையின் அன்றிரவு தங்கினர். அங்கு அவர்களுக்கு இரவு விருந்தொன்றும் வழங்கப்பட்டது. வவுனியா பொலீஸ் நிலையத்தின் அத்தியட்சகர் ஆதர் ஹேரத்தும் அந்த இரவுணவில் கலந்துகொண்டார். அவருடன் நீண்ட உரையாடல் ஒன்றில் நான் ஈடுபட்டேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் என்பதைத் தெரிந்துவைத்திருந்த ஹேரத், மலையகத் தமிழர்கள் இப்பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளதால் வவுனியாவைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளுக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து இப்பகுதியில் குடியேறி வாழும் விவசாயிகளுக்கும் கடுமையான இடைஞ்சல் ஏற்பட்டிருப்பதாக என்னிடம் கூறினார். "இந்த இந்தியர்கள் மிகவும் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கின்றனர். இதனால் இப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளிகள் வேலையின்றித் திண்டாடுகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்குச் சொந்தமாகவேண்டிய அரச காணிகளை இந்தியத் தமிழர்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்” என்று கூறினார். மறுநாள்க் காலை சந்தை திறந்துவைக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த சில வியாபாரிகளுடன் பேசிய ஹேரத் முன்னாள் இரவு என்னிடம் கூறிய அதே முறைப்படுகளை அவர்களிடமும் கூறினார். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கெதிராக யாழ்ப்பாணத் தமிழர்களையும், வன்னித் தமிழர்களையும் தூண்டிவிடவே ஹேரத் முயல்கிறார் என்பது எனக்கு அப்பட்டமாகத் தெரிந்தது.
  10. கைவிடப்பட்ட நிதியம் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றத் திட்டம் குறித்த தகவல்கள் வெளியே வருவதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து காமிணி கவலைப்படவில்லை. தனது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு நவீன துட்டகைமுனுவாக சிங்களவரின் முன்னால் தன்னை அவர் காண்பிக்க நினைத்தார். ஆகவே, தனது உத்தியோகபூர்வ‌ வாசஸ்த்தலத்திற்கு முன்னணிச் சிங்கள வர்த்தகர்களை அழைத்த காமிணி தமிழரின் இலட்சியமான தமிழ் ஈழத்தின் அடித்தளத்தை எப்படி அழிக்கலாம் என்று ஆலோசனை நடத்தினார். தன்னுடைய‌ அமைச்சான மகாவலி அபிவிருத்திச் சபையில் பணிபுரியும் அதிகாரிகளை தமது இரகசியத் திட்டம் குறித்து வந்திருந்த வர்த்தகர்களுக்கு விளக்குமாறு அவர் கூறினார். தமது இரகசியத் திட்டம் இந்தியாவை உசுப்பேற்றிவிடும் என்பதனால், அரசாங்கத்தின் ஊடாக தமது திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்று அவர் தெரிவித்தார். ஆகவே தனியாரின் உதவியின் மூலம் பணம் திரட்டப்பட்டு சிங்கள குடியேற்றத் திட்டம் நடத்தப்படவேண்டும் என்று அவர் வாதிட்டார். காமிணி திசாநாயக்க‌ தாச முதலாளி காமினியிடம் பேசும்போது "இந்த இரகசியக் குடியேற்றம் குறித்து ஜனாதிபதி அறிவாரா?" என்று கேட்டார். அதற்கு ஆமென்று பதிலளித்தார் காமிணி. மேலும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து இக்குடியேற்றத்திட்டத்திற்குத் தேவையான பணத்தைத் தரமுடியும் என்று கூறியதாகவும் காமிணி குறிப்பிட்டார். அதன்பின்னர், நிதியத்திற்கான தகுந்த பெயர் ஒன்றினை தேடும்படியும், நல்லநாள் பார்த்து நிதியத்தை ஆரம்பிக்கலாம் என்றும் தாச முதலாளியிடம் கோரினார் காமிணி. தாச முதலாளி நிதியத்தின் தொடக்க நாள் நிகழ்வும் காமிணியின் வீட்டிலேயே நடைபெற்றது. தாச முதலாளி முதலாவதாக பத்து இலட்சம் ரூபாவுக்கான காசோலையினை நிதியத்திற்கு வழங்கினார். அன்று அங்கு வருகை தந்திருந்த ஏனைய சிங்கள வர்த்தகர்களும் தமது பங்களிப்பைச் செய்தனர். மொத்தமாக அன்று 35 லட்சம் ரூபாய்கள் நிதியத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், இவ்வாறு வழங்கப்பட்ட காசோலைகள் வங்கியில் மாற்றப்படும் முன்னரே ஜெயவர்த்தன இந்த விவகாரத்தில் தலையிட்டு, திட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரான ஹேர்மன் குணரட்ணவைக் கைது செய்ததுடன் தமிழர் காணிகளில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சிங்களவர்களையும் அங்கிருந்து அகற்றினார். பதறிப்போன காமிணி, தனக்கும் மாதுரு ஓயாத் திட்டத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று நழுவி விட்டார். இந்தியாவிடமிருந்தும் சர்வதேசத்திடமிருந்தும் ஜெயார் மீது கடுமையான அழுத்தம் பிரியோகிக்கப்பட்டது. சென்னையில் அப்போது தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இத்திட்டம் குறித்து இந்திரா காந்தியை எச்சரித்திருந்தனர். லண்டனில் இருந்து இந்திராவையும், பார்த்தசாரதியையும் தொடர்புகொண்டு பேசிய அமிர்தலிங்கம், "தமிழருக்கு ஜெயார் கொடுக்கவிருக்கும் இறுதித்தீர்வின் ஒரு அங்கமே அவர் முன்னெடுத்திருக்கும் மாதுரு ஓயா சிங்களக் குடியேற்றம்" என்று கூறியிருந்தார். என்னுடன் பின்னர் பேசிய அமிர்தலிங்கம் மாதுரு ஓயாத் திட்டம் குறித்து அறிந்துகொண்டபோது இந்திரா கோபப்பட்டதாகக் கூறினார். கொழும்பிலிருந்த இந்தியத் தூதரான சத்வாலிடம் இந்தியாவின் ஆட்சேபத்தினை ஜெயவர்த்தனவிடம் தெரிவிக்கும்படி இந்திய வெளியுறவுத்துறை கோரியது. அதன்படி, ஜெயாருடன் பேசிய சத்வால் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பை இந்தியா எதிர்க்கிறது என்று கூறினார். இதனால் ஆத்திரப்பட்ட ஜெயவர்த்தன, தனது கோபத்தினை காமிணி மீது காட்டினார். காமிணி தன்னை அவமானப்படுத்திவிட்டதாக அவர் கருதினார். இரகசியமாகத் தான் முன்னெடுக்க விரும்பிய ஆக்கிரமிப்புத் திட்டத்தினை காமிணி வெளிப்படையாகப் போட்டுடைத்து விட்டதாக அவர் உணர்ந்தார். 500 அல்லது 1000 பேருடன் ஆரம்பித்திருக்க வேண்டிய தனது திட்டத்தை, காமிணி ஒரே நேரத்தில் 45,000 சிங்களவர்களைக் குடியேற்ற முற்பட்டதன் மூலம் கெடுத்துவிட்டதாக அவர் காமிணி மீது கோபப்பட்டார். மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுடன் பல கூட்டங்களை ஜெயார் நடத்தினார். ஆக்கிரமிப்புத் திட்டத்தின் முன்னோடியான பண்டிதரட்ணவிடம் அப்பகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களை உடனடியாக விலக்கிவிடுமாறு பணித்தார். அதற்குப் பதிலளித்த பண்டிதரட்ண, "சிங்களவர்களை அங்கு அழைத்துச் சென்றது திம்புலாகலை பிக்குதான்" என்று பதிலளித்தார். இதனால் கோபமடைந்த ஜெயார், "மகாவலி அதிகார சபையினை திம்புலாகலை பிக்குவே நடத்துவதாக இருந்தால், நான் அவரை தலைவராக நியமிக்கிறேன், நீங்கள் எனக்குத் தேவையில்லை, வீட்டிற்குச் செல்லலாம்" என்று கூறினார். பண்டிதரட்ணவும் ஏனைய அதிகாரிகளும் மாதுரு ஓயா ஆக்கிரமிப்பினை சிறிய விடயமாகக் காண்பிக்க எத்தனித்தனர். உள்நாட்டுப் பத்திரிக்கைகளிலும், இந்தியாவின் ஊடகங்களிலும் வெளிவரும் அறிக்கைகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டவை என்று அவர்கள் கூறினர். வெறும் 2000 சிங்கள விவசாயிகளே மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்குச் சென்றதாக அவர்கள் ஜெயாரிடம் கூறினர். ஆனால், கூட்டத்தில் கலந்துகொண்ட லலித் அதுலத் முதலியும் இன்னும் சிலரும் ஊடகங்களில் வந்த செய்திகள் உண்மைதான் என்று ஜெயாரிடம் வலியுறுத்தினர். மேலும், நேர்த்தியாகச் செய்யப்படவேண்டிய ஆக்கிரமிப்பினை காமிணி போன்றவர்கள் தவறாக வழிநடத்தி வெளிக்கொணர்ந்துவிட்டனர் என்று ஜெயாரிடம் கூறினர். காமிணியுடனான ஜெயாரின் தற்காலிக வெறுப்பினைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஜெயாருடன் நெருக்கமாகலாம் என்று லலித் கணக்குப்போட்டுக் கொண்டார். ஜெயார் செய்துவந்த அரசியல் நடைமுறை அவருக்கான படுகுழியினை அவரே தோண்டும்படி செய்துவிட்டிருந்தது. தனது அமைச்சர்களுக்கிடையே போட்டி மனப்பான்மையினை அவரே தூண்டிவிட்டார். லலித்தும் காமிணியும் இளமையான, அரசியலில் வளர வேண்டும் என்கிற ஆசையைக் கொண்டிருந்த மனிதர்கள். ஜெயாருக்குப் பின் கட்சியின் தலைமைப்பதவிக்குத் தாமே சரியானவர்கள் என்பதை இருவரும் தனித்தனியாக அவ்வப்போது வெளிப்படுத்தி வந்திருந்தனர். ஆனால், பிரதமாரான பிரேமதாசவும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ஆர்வமாக இருந்தார். ஆனால், இவர்கள் மூவரிலும் காமிணியையே ஜெயார் அதிகம் விரும்பினார் என்பது இரகசியமல்ல. அமைச்சுக்களில் முக்கியமான காணிகள் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சு எனும் பதவி காமிணிக்கு வழங்கப்பட்டிருந்தது. லலித்தோ ஆரம்பத்திலிருந்தே எப்படியாவது ஜெயாருக்கு நெருக்கமாக வரவேண்டும் என்று அயராது முயன்று வந்திருந்தார். நான்கு இனவாதிகள் :காமிணி பொன்சேக்கா, லலித், காமிணி திசாநாயக்கா மற்றும் ஜெயார் இக்காலத்தில் ஜெயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த ஏ.ஜே.வில்சன் (தந்தை செல்வாவின் மருமகன்) முன்னாள் இந்தியத் தூதுவர் திக்சீத் எழுதிய "கொழும்பில் எனது பணி" எனும் புத்தகத்திற்கான உரையில் ஜெயாரின் இந்த மூன்று அமைச்சர்களிடையேயும் நிலவிவந்த போட்டி மனப்பான்மையினை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். 1998 ஆம் ஆண்டு மாசி மாதம் 8 ஆம் திகதி ஐலண்ட் நாளிதழில் வில்சன் எழுதிய இவ்வுரையில், ஜெயாரின் மைதானத்தில் இந்த மூன்று அமைச்சர்களுக்கிடையேயும் நிகழ்த்தப்பட்டு வந்த சூழ்ச்சிகள் பற்றி எழுதியிருந்தார். "தனக்குப் பின்னர் ஜனாதிபதிப் பொறுப்பு காமிணிக்கே வழங்கப்படவேண்டும் என்று ஜெயார் விரும்பியிருந்தது ஒன்றும் இரகசியமல்ல. தொண்டைமானே ஒருமுறை காமிணி பற்றிப் பேசும்போது அவர் ஜெயாரின் செல்லப்பிள்ளை என்று குறிப்பிட்டிருந்தார். ஜெயாருடனான எனது சம்பாஷணைகளின்பொழுது காமிணிக்கு ஜெயார் தனது இதயத்தில் தனியான இடம் ஒன்றினைக் கொடுத்திருந்தார் என்பதை உணர்ந்துகொண்டேன். 1982 ஆம் ஆண்டுத் தேர்தல்களின் பின்னர் தொல்லைகொடுப்பவரான பிரதமர் பிரேமதாசவை அகற்றிவிட்டு காமிணியைப் பிரதமராக்கும் எண்ணம் ஜெயாருக்கு இருந்தது" என்று வில்சன் எழுதியிருந்தார். ஜெயாருக்குப் பின்னர் தான் தலைமைப் பொறுப்பினை எடுக்கமுடியாது என்பதை லலித் நன்கு அறிந்தே இருந்தார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் ஒன்றியத்தில் செயலாளராக ஆரம்பத்தில் பதவி வகித்து பின்னர் ஒன்றியத் தலைவராக வந்ததுபோல ஐக்கிய தேசியக் கட்சியில் பின்னாட்களில் இணைந்தபோதும் கூட ஒருநாள் நிச்சயமாக தலைமைப் பதவியினைப் பிடிப்பேன் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் பலமுறை கூறியிருக்கிறார். லலித்திற்குக் கிடைத்த சந்தர்ப்பம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு, அரசாங்கத்திற்கு அவப்பெயரினை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாகப் பாவிக்க லலித் நினைத்தார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டம் வெளிவந்ததையடுத்து சர்வதேசத்தில் ஜெயாரின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்டிருப்பதாக ஜெயாரின் காதுகளில் உரைக்கத் தொடங்கினார் லலித். அக்காலப்பகுதியில் இந்தியாவிடமிருந்தும், சர்வதேசத்திடமிருந்தும் மிகக் கடுமையான அழுத்தம் ஜெயார் மீது பிரியோகிக்கப்பட்டு வந்தது. ஆகவே, ஜெயாரின் கோபம் காமிணி மீதும், பண்டிதரட்ண மீதும் திரும்பியது. அவர்களுடன் பேசுவதையே ஜெயார் தவிர்க்கத் தொடங்கினார். அவர்களுக்குச் செவிமடுப்பதையோ அல்லது அவர்கள் கூறுவதை நம்புவதையோ அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார். போல் பெரேரா தனக்கு நெருக்கமான இன்னொரு அமைச்சரான போல் பெரேராவிடம் மாதுரு ஓயா ஆக்கிரமிப்புப் பகுதிக்கு மேலால் உலங்குவானூர்தியில் சென்று, நிலைமைகளை ஆராய்ந்து தனக்கு அறிவிக்குமாறு பணித்தார் ஜெயார். அதன்படி ஐப்பசி 1 ஆம் திகதி அப்பகுதியின் மேலாக வானூர்தியில் வலம் வந்தார் பெரேரா. அவர் கொழும்பிற்கு வந்தவுடன் அவருடன் தொலைபேசியில் நான் உரையாடினேன். உலங்கு வானூர்தியில் இருந்து பார்க்கும்போது சுமார் 20,000 குடிசைகளை அப்பகுதியெங்கும் தான் கண்டதாக பெரேரா என்னிடம் கூறினார். உடனடியாக செயலில் இறங்கிய ஜெயார், பெரேராவை பொலொன்னறுவை மாவட்டத்தில் மேலதிக அமைச்சராக நியமித்ததுடன் மாதுரு ஓயாவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் சிங்களவர்களை உடனடியாக அப்பகுதியிலிருந்து அகற்றுமாறு பணித்தார். தேவையேற்படின் பொலீஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியினையும் கோரலாம் என்றும் அவருக்குக் கூறப்பட்டது. தன்னார்வ ஆயுதப் படைகளின் அதிகாரியான கேணல் பெனடிக்ட் சில்வா பெரேராவுக்கு உதவியாளராக ஜெயாரினால் நியமிக்கப்பட்டார். ஆனால், பெரேராவோ உடனடியாக செயலில் இறங்க விரும்பவில்லை. தனது பணிக்குச் சார்பான சூழ்நிலையினை ஊடகங்கள் ஊடாக உருவாக்க அவர் நினைத்தார். அவர் என்னிடம் ஒரு விசேட கதையொன்றினைக் கூறினார். அக்கதையின்படி, மாதுரு ஓயாவை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களவர்களிடம் தமது பகுதிகளுக்குத் திரும்புமாறு தான் கேட்கப்போவதாகக் கூறினார். அரசுக்குச் சொந்தமான நிலங்களை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் அதிகாரம் தனியாருக்கு இல்லையென்று தான் கூறப்போவதாக அவர் தெரிவித்தார். மேலும், தனது கோரிக்கைக்கு விவசாயிகள் இணங்காதவிடத்து வேறு வழியின்றி தான் பலத்தைப் பிரியோகிக்க வேண்டி ஏற்படும் என்பதையும் மிகவும் நாசுக்காக அவர் கூறினார். போல் பெரேரா தனக்குக் கொடுக்கப்பட்ட பணியினை மிகவும் திறம்படச் செய்யத் தொடங்கினார். தனது கோரிக்கையினை நிராகரித்து மாதுரு ஓயாவில் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சிங்கள விவசாயிகளை பொலீஸாரையும் இராணுவத்தினரையும் கொண்டு அகற்றினார். பொலொன்னறுவைக்குச் சென்ற பெரேரா அங்கு இராணுவத்தினருடனும் பொலீஸாருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டார். மிகவும் தந்திரமாக செயற்படுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். "அவர்கள் அனைவருமே தவறாக வழிநடத்தப்பட்ட மக்கள். அவர்கள் மீது தாக்குதல் எதனையும் நடத்த வேண்டாம்" என்று அவர் படையினரிடமும், பொலீஸாரிடமும் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அங்கிருந்த சிங்கள விவசாயிகள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர். திம்புலாகலைப் பிக்குவும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் பொலீஸாரை உதாசீனம் செய்து அப்பகுதியில் தொடர்ந்தும் தங்கியிருக்க பிக்கு முயன்றபோதும், ஜெயாரின் கட்டளைக்கு அமைவாகவே தாம் அவரை வெளியேற்றுவதாகப் பொலீஸார் கூறியவுடன் அவர் அங்கிருந்து வெளியேறச் சம்மதித்தார். ஜெயாருக்கு நெருக்கமாகும் தனது முயற்சியில் லலித் சிறிது தூரம் தற்போது பயணித்திருந்தார். தேசியப் பாதுகாப்பிற்கான அமைச்சராகவும், உதவிப் பந்தோபஸ்த்து அமைச்சராகவும் ஜெயாரினால் நியமிக்கப்பட்ட அவர் எட்டு மாதங்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு வைகாசி மாதம், அமைச்சரவையில் மிகப் பலம் பொறுத்தியவராக வலம்வரத் தொடங்கினார். இதனால் பிரேமதாசவுக்கான முதலாவது எதிரியாகவும் அவர் தெரியத் தொடங்கினார். காமிணி சிறிது சிறிதாக வெளிச்சத்திலிருந்து மறைந்து போய்க்கொண்டிருந்தார். தனது முக்கியத்துவத்தினை மீளக் கட்டியெழுப்ப காமிணிக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. இந்தியாவுக்கு நெருக்கமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதுடன், 1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு இலங்கை அரசு சார்பாக செயற்பட்டவர்களில் முக்கியமானவராகத் தன்னைக் காட்டிக்கொண்டதன் மூலமும் அந்நிலையினை அவரால் எய்தமுடிந்தது. மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டத்தை இரத்துச் செய்ய ஜெயார் இட்ட ஆணையினை மீளப் பெறச் செய்யும் நோக்குடன் காமிணியையும், பண்டிதரட்ணவையும் சந்திக்க கொழும்பிற்குச் சென்றார் திம்புலாகலைப் பிக்கு. மகாவலி அமைச்சிற்குச் சென்ற அவரைச் சந்திக்க காமிணியும், பண்டிதரட்ணவும் மறுத்து விட்டனர். அதன்பின்னர் கொழும்பில் இயங்கிய அனைத்துச் செய்திதாள்களின் அலுவலகங்களுக்கும் அவர் சென்றார். லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு வந்த அவர் தினமின நாளிதழின் ஆசிரியரைச் சந்தித்தார். பின்னர் ஆசிரியரின் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவர் ஆசிரியர் அலுவலக ஊழியர்களிடம் பேசினார். தினமின ஆசிரியர்ப் பீடத்தின் அருகிலேயே டெயிலி நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியர்ப் பீடமும் அமைந்திருந்தது. நான் அன்று அங்கு நின்றிருந்தேன். திம்புலாகலைப் பிக்கு மிகுந்த ஆவேசமாகக் காணப்பட்டார். உச்சஸ்த்தானியில் கடுமையாகப் பேசிக்கொண்டிருந்தார். சிங்கள நாட்டிற்கும், சிங்களத் தேசியத்திற்கும் எதிராக போல் பெரேரா செயற்பட்டுள்ளதாக அவர் கடுமையாகச் சாடினார். பெரேரா ஒரு கத்தோலிக்கர் என்பதாலேயே சிங்கள பெளத்தர்களுக்கெதிராகச் செயற்பட்டுள்ளதாக பிக்கு குற்றஞ்சுமத்தினார். தான் கொண்டுவந்த பெரிய குடையினை உயர்த்திக் காட்டிய பிக்கு, "அவனைக் கண்டால் இதனாலேயே அவனை அடிப்பேன்" என்று கத்தினார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்புத் திட்டத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்துவது ஜெயாருக்கு அன்று தேவையாக இருந்தது. தேவநாயகம் பதவி விலகிச் செல்வதை ஜெயார் விரும்பவில்லை. இன்னொரு இனக்கலவரம் ஆரம்பிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. இவை எல்லாவற்றையும் விட, இந்தியா இராணுவ ரீதியில் இலங்கையில் தலையிடுவதை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்று அவர் கருதினார். மாதுரு ஓயா ஆக்கிரமிப்பின் மூலம் இந்திரா காந்தி மிகவும் சினங்கொண்டிருப்பதாக இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்த்தானிகர் பேர்ணாட் திலகரட்ண ஜெயாரிடம் அப்போது கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆகவே, இச்சிக்கலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சில விடயங்கள ஜெயாரினால் செய்யவேண்டியிருந்தது. முதலாவதாக ஹேர்மன் குணரட்ணவும் இன்னும் 40 மகாவலி உயர் அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், ஈழத்திற்கான அடித்தளத்தினைச் சிதைப்பதை ஜெயார் தொடர்ந்தும் முன்னெடுக்க கங்கணம் கட்டினார். தனது இரகசியத் திட்டத்தினைக் குழப்பியதற்காக காமிணி, ஜெயாரினால் ஓரங்கட்டப்பட்டார்.அப்பொறுப்பினை காமிணியின் எதிரியான லலித்திடம் ஜெயார் கொடுத்தார். யன் ஓயா அபிவிருத்தித் திட்டத்தினைக் கையாளும் பொறுப்பு லலித்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்களை அடுத்துவரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.