Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஒரு வயதான அம்மா துவக்கால் சுட்டுவிட்டா. இதுதான் பரபரப்பாக பொலிசுக்கு வந்த தொலைபேசி. அதைவிடப் பெரிய அதிர்ச்சி... அவ சுட்டுக் கொன்றது, அவவின் சொந்தக் கணவனை.😳 பொலிசாருக்கு டென்ஷனால் தலை கிறுகிறுத்தது. ஏனென்றால் அவ கொன்ற காரணம்......🥶 அவ தனது வீட்டில், தண்ணீரால் கழுவிக் கொண்டிருந்த போது, வெளியே சென்ற கணவன் கழுவிய தரையில் காலடி எடுத்து வைத்து விட்டார் என்பதற்காக.🧐🥺 அதிர்ச்சி அடைந்த பொலீஸ் அதிகாரி, உடனே ரேடியோ தொலைபேசி மூலம் தனது பொலிஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு உடனடியாக பொலிசாரை அங்கு சென்று அந்த அம்மாவை கைது செய்யும் படி உத்தரவிட்டார்.😉🧐 நீண்ட நேரமாயும் போன பொலிசாரைக் காணவில்லை. குழம்பிப் போன பொலீஸ் அதிகாரி, தொலைபேசியில் கோபமாக..... " இன்னுமா கைது செய்யவில்லை என்று உறுமினார்.😡 அதற்கு அங்கு போன பொலிஸார் சொன்னார்கள்......🤭 " நோ சேர்... இன்னும் இல்லை. கழுவிய தரை, இன்னும் காயவில்லை..!😁😄😂 Rj Prasath Santhulaki
  2. யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை விட, கனடாவில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம். 😂 🤣
  3. தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நிழலி. மூன்று இலங்கைத் தமிழர்களும், ஒரு தமிழக தமிழருமாக... நான்கு தமிழர்கள் கனடா பாராளுமன்றத்தை அலங்கரிப்பது.. மகிழ்ச்சியுடன் பெருமையாகவும் உள்ளது. இம்முறைதானா அதிக தமிழர்கள் தெரிவாகி உள்ளார்கள். அல்லது முன்பும் பலர் தெரிவு செய்யப்படு இருந்தார்களா.
  4. அவசரப் படாதீர்கள் சாத்தான். மா... புளிச்சுக் கொண்டு இருக்கின்றது. எப்படியும் இன்று இரவு சண்டை தொடங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்களில் எதிர்வு கூறுகின்றார்கள். நீங்கள்... சண்டையை உன்னிப்பாக அவதானிக்க, சோளன் பொரி (பொப் கோர்ன்) வாங்கி வைத்து இருங்கள். 😂
  5. //ஜோனீட்டா நாதன் அவர்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாக பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். // வென்றவர்களில் இருவர் இலங்கைத் தமிழர்கள், ஜோனீட்டா நாதன் தமிழகத் தமிழர்.
  6. புரிந்து விட்டது இவர்தான் அந்தப் பையன். மலரும் நினைவுகள். 😂
  7. இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை! இந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு மந்திரிகளுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்திய அரசு அறிவித்ததுடன் பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை இரத்து செய்யப்படுவதாகவும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்திய மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது. இதே போல் பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும், சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டது. அத்துடன் இருநாட்டு அரசுகளும் தங்கள் இராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கின்றன. இந்நிலையில் , இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளுடன் பேச உள்ளார். இந்தியா, பாகிஸ்தான் விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வெளியுறவுத்துறை மட்டுமின்றி, பல்வேறு அளவுகளிலும் இருநாட்டு அரசுகளிடம் பேச உள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1430010
  8. இந்திய, பாகிஸ்தான் எல்லையில் நின்று சர்க்கஸ் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள். 😂 🤣
  9. கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள்! கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர். அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்துத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளனர். நாடு முழுவதும் நடைபெறும் மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவு நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் ஆகியோருக்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்கள், உத்தரவுகளை வழங்கியுள்ளது. கொழும்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். எனவே வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1429989
  10. இலங்கைக்கான பிணை எடுப்புத் திட்டத்தை திருத்தத் தயார்: IMF ஏற்றுமதிகள் மீதான அதிகரித்த வரிகளை அமெரிக்கா மீண்டும் விதித்தால், பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு வழங்க வேண்டிய 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்புக் கடனின் விதிமுறைகளை திருத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) நேற்று (29) முன்வந்தது. 2022 ஆம் ஆண்டில் பொருளாதார மந்த நிலையிலிருந்து மீள போராடி வரும் தெற்காசிய தீவு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் மற்றும் இறப்பர் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்த மாதம் 44 சதவீத வரியை விதித்தது. அதிகரித்த இந்த கட்டணங்கள் வொஷிங்டனால் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கை அதிகாரிகள் அவற்றை நீக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை. இந்த நிலையில், ட்ரம்பின் வரிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய வர்த்தகக் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் இலங்கைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தீவு நாட்டுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணித் தலைவர் இவான் பாபஜெர்ஜியோ செவ்வாயன்று (29) செய்தியாளர்களிடம் கூறினார். இந்த அபாயங்கள் ஏற்பட்டால், அந்த அதிர்ச்சிகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகளுடன் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். மேலும் தற்போதுள்ள IMF திட்டத்தின் வரையறைகளுக்குள் குறிப்பிட்ட கொள்கை பதில்களை உருவாக்குவதில் நாட்டிற்கு ஆதரவளிப்போம் – என்றும் அவர் உறுதியளித்தார். கொழும்பில் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் வொஷிங்டன் விதிக்கும் அதிகரித்த வரிகளை மீண்டும் அமுல்படுத்தினால் நாட்டின் மீட்சி பாதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்கு சுமார் மூன்று வாரங்களுக்குப் பின்னர் IMF இன் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் போன்ற மிக அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு கூட நிதியளிக்க அந்நிய செலாவணி தீர்ந்து போன பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டில் இலங்கை IMF இடமிருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பு பொதியை பெற்றது. 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க வரி அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, இலங்கை அதன் முன்னோடியில்லாத நெருக்கடிக்குப் பின்னர் முதல் முழு ஆண்டு பொருளாதார விரிவாக்கத்தைப் பதிவு செய்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பொருளாதாரம் 5.4 சதவீதம் வளர்ச்சியடைந்தது, இது முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 5.0 சதவீதமாகக் கொண்டு வந்தது, இது 2023 இல் 2.3 சதவீத சுருக்கத்துடன் காணப்பட்டது. இலங்கையின் மோசமான பொருளாதார செயல்திறன் 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதம் சுருங்கியது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல மாதங்களாக ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையானது வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுத்தது. இது இறுதியில் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்தது. அவரை அடுத்து ஜனாதிபதியாக பெறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்க வரிகளை இரட்டிப்பாக்கினார், மானியங்களைக் குறைத்தார், விலைகளை உயர்த்தினார் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஓரளவு மேம்படுத்தினார். எனினும், 2025 செப்டம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய நிர்வாகம், பிணை எடுப்புக்கு ஏற்ப சீர்திருத்தங்கள் மற்றும் வருவாயை உயர்த்துவதில் உறுதியாக இருப்பதாக IMF தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் பிணை எடுப்புத் திட்டத்தின் அடுத்த மீளாய்வு எதிர்வரும் ஜூன் மாதத்தில் IMF நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும் இவான் பாபஜெர்ஜியோ கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429980
  11. உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை! உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான MSC MARIELLA, செயல்பாட்டு நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை வந்தடைந்துள்ளது, இது இலங்கையின் கடல்சார் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இலங்கை துறைமுக ஆணையத்தின் (SLPA) கூற்றுப்படி, குறித்த கப்பல் தற்போது இலங்கை துறைமுகத்திற்கு வந்த மிகப்பெரிய கொள்கலன் கப்பலாக அங்கீகரிக்கப்படலாம். MSC MARIELLA இன் வருகை, உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல்களில் சிலவற்றைக் கையாளும் கொழும்பு துறைமுகத்தின் திறனை உறுதிப்படுத்துகிறது என்றும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு முக்கிய மத்திய துறைமுகமாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது என்றும் இலங்கை துறைமுக ஆணையம் குறிப்பிட்டது. 2023 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட MSC MARIELLA 399.9 மீட்டர் நீளமும் 61.3 மீட்டர் அகலமும் கொண்டது. தற்போது, முனையத்தில் மேம்பட்ட கப்பல்-கரை (STS) கேன்ட்ரி கிரேன்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவை திறமையான மற்றும் பாதுகாப்பான கொள்கலன் செயல்பாடுகளை செயல்படுத்துகின்றன என்று இலங்கை துறைமுக ஆணையம் குறிப்பிட்டது. இந்த சாதனை, நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை துறைமுக ஆணையத்தின் வலிமையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று துறைமுக அதிகாரசபை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1429957
  12. 36 மணி நேரத்திற்குள் இந்தியா தாக்குதல் நடத்தலாம் – பாகிஸ்தான் எச்சரிக்கை! அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தானின் தகவல் தொடர்பு அமைச்சர் அட்டாவுல்லா தரார் (Attaullah Tarar) இன்று (30) காலை கூறினார். ஏப்ரல் 22 அன்று 26 பேர் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை இந்திய ஆயுதப்படைகளுக்கு “முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை” வழங்கிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது தொடர்பில் அட்டாவுல்லா தரார் எக்ஸ் தளத்தில் பதவிட்ட ஒரு அறிக்கையில், எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும் என்றும், பிராந்தியத்தில் ஏற்படும் எந்தவொரு கடுமையான விளைவுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்தார். அத்துடன், பஹல்காம் சம்பவத்தை ஒரு தவறான சாக்காகப் பயன்படுத்தி, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்தியா இராணுவத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் இந்த பதவில் சுட்டிக்காட்டினார். அதேநேரம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வேதனையின் வலியை உண்மையிலேயே புரிந்துகொள்கிறது. உலகில் எங்கும் அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் நாங்கள் எப்போதும் அதைக் கண்டித்து வருகிறோம் என்றும் அவர் மேலும் கூறினார். பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானிய சதிகள் இருப்பதாக இந்தியா கூறி வருகிறது. இதனால், இரு அண்டை நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான இராஜதந்திர தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியதால், பஹல்காம் படுகொலையில் தொடர்புடைய ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களின் “ஆதரவாளர்களையும்” இந்தியா “அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும் என்று பிரதமர் மோடி ஏப்ரல் 24 அன்று உறுதியளித்தார். பதற்றங்களுக்கு நடுவே பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவுகளை இந்தியா குறைத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது, அட்டாரி-வாகா எல்லையை மூடியது, அனைத்து பாகிஸ்தான் இராணுவ இணைப்புகளையும் வெளியேற்றியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கைகளுடன் பதிலளித்து 1972 சிம்லா ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது. https://athavannews.com/2025/1429986
  13. கனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்! நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி இறுதியில் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து கனடாவின் இடைக்கால பிரதமராக செயல்பட்ட மார்க் கார்னி, மீண்டும் முழுநேர பிரதமராகக் கடமையாற்றுவார் எனக் கூறப்படுகிறது. அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேவேளை குறித்த தேர்தலில் இலங்கை தமிழர்கள் 2 பேர் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 5 இலங்கை தமிழர்கள் வேட்பாளராக களம் இறங்கியிருந்த நிலையில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழர்களான ஹரி ஆனந்த சங்கரி மற்றும் யுவனிதா நாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளமை இலங்கையர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Athavan Newsகனடா நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற இலங்கைத் தமிழர...நேற்றைய தினம் நடைபெற்ற கனடாவின் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் இத்தேர்தலில் ஆரம்பம் முதலே முன்னிலை பெற்றுவந்த முன்னாள் பிரதமர் ஜட்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்ச...
  14. கனடாவில் காணாமல் போன இந்திய மாணவி சடலமாகக் கண்டெடுப்பு! கனடாவில் 3 நாட்களுக்கு முன்னர் மாயமான இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான மாணவி கடற்கரையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த வன்ஷிகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனவும், இவர் கனடாவில் உள்ள ஒட்டாவா நகரில் கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 ஆம் திகதி இவர் மாயமாகியுள்ளளார் எனவும், வாடகைக்கு அறை ஒன்றை காணச் சென்ற வேளையில் அவர் மாயமாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது தொலைபேசியும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை தீவிரமாக தேடி வருவதாக தூதரகமும் அறிவித்து இருந்திருந்த நிலையில் வன்ஷிகாவின் உடல் கல்லூரி அருகில் உள்ள கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உரிய துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும், மாணவி எப்படி உயிரிழந்தார் கொல்லப்பட்டாரா, உடன் சென்றவர்கள் யார், தொலைபேசி எங்கே என்ற விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429944
  15. இந்தப் பெண் பல் வைத்தியர்... வாழ்க்கையில் சீன வெடியை பார்த்ததே இல்லையா? மோட்டு சிங்களத்தி. 🤪 😂
  16. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை. 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். இசைக்கலைஞர் இராஜ் வீரரத்ன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதி மிலிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் ஒரு நேர்காணலின் போது பேசிய ரணில் விக்கிரமசிங்க, தாக்குதல்களுக்குப் பின்னால் சஹ்ரான் ஹாஷிம் தான் மூளையாக செயல்பட்டார் என்று FBI விசாரணையில் முடிவு செய்யப்பட்டதாகக் கூறினார். இந்த நிலையில், தாக்குதல் குறித்து இலங்கை வேறுபட்ட கதையை ஊக்குவிக்க முயன்றால், அது அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோபப்படுத்தக்கூடும் என்றும், அவர் அதிக வரிகளை விதிப்பதன் மூலமோ அல்லது தனது பதவிக் காலத்தில் உக்ரேனின் தலைமையை நடத்தியது போன்ற இராஜதந்திர நடவடிக்கை எடுப்பதன் மூலமோ எதிர்வினையாற்றக்கூடும் என்றும் அவர் கூறினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப், தன்னுடன் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், விசாரணைகளுக்கு உதவ FBI ஐ நியமித்ததையும் ரணில் விக்ரமசிங்க இதன்போது நினைவு கூர்ந்தார். https://athavannews.com/2025/1429882
  17. புதிய பாப்பாண்டவரை தெரிவு செய்வதற்கான பணிகள் 7 ஆம் திகதி ஆரம்பம்! போப் பிரான்சிஸ்ஸின் மறைவைத் தொடர்ந்து புதிய போப்பைத் தெரிவு செய்வதற்கான பணிகள் எதிர் வரும் மே மாதம் 7 ஆம் திகதி ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவால் தனது 88 ஆவது வயதில் கடந்த 21 ஆம் திகதி மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் கடந்த 26ஆம் திகதி ரோமில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 88 வயதான போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இதற்கு விடை காணும் முயற்சியில் வத்திக்கான் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி கார்டினல் எனப்படும் கர்தினால்கள் நேற்று கூடி இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் கான்கிளேவை (மாநாடு) அடுத்த மே மாதம் 7ஆம் திகதி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப்பைத் தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் உள்ளனர் எனவும், அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429874
  18. உக்ரைனில் மூன்று நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் உத்தரவு! இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன், 80வது ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறவுள்ள நிலையில் 8-10 திகதிளில் மூன்று நாள் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். மனிதாபிமானக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்த போர்நிறுத்தம் மே 8 ஆம் திகதி நள்ளிரவில் ஆரம்பித்து 72 மணித்தியாலங்கள் தொடரும் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க ரஷ்யாவும், உக்ரைனை வலியுறுத்தியுள்ளது. இந்த காலகட்டத்தில், அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். போர் நிறுத்தத்தை மீறி உக்ரைன் படையினர் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவர துப்பாக்கிச் சூட்டை நிறுத்துங்கள் என்றும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புடினை வலியுறுத்தியதை அடுத்து இந்த அறிவிப்பு வந்தது. இதேவேளை, புடின் ஈஸ்டர் தினத்திற்கு 30 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429876
  19. ரணில் விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.