Everything posted by தமிழ் சிறி
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது. இன்று காலை 8:47 மணியளவில் யாழ்ப்பாணத்தில் 6.8 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிடங்கள், வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் உடனடியாக என்ன நடக்கின்றது என்று புரியாமல், அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த போது... வீட்டின் ஓடுகள் சர சர என விழுந்து பலருக்கு மண்டை உடைந்தது. அவர்கள் உடனடியாக சமூக ஆர்வலர்கள் மூலம் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்டார்கள். இதில் வீரசிங்கம் மண்டபம் பெரும் அதிர்வுடன் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. யாழ் மாநகர ஆளுநர் உடனடி உதவி தேவை என்று கொழும்பிற்கு செய்தி அனுப்பியுள்ளார். தற்போது இராணுவத்தினர் களத்தில் நின்று கட்டிட இடிபாடுகளை மந்த கதியில் அகற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆனாலும்... அவர்களின் வேகம் போதாது என்றபடியால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகின்றது. பலாலி விமான ஓடுபாதையில்.... விரிசல்கள் ஏற்பட்டதால் அங்கு விமானங்கள் தரை இறங்க முடியாமல், திருச்சியில் இருந்து புறப்பட்டு வந்த விமானம் கொழும்பிற்கும், சென்னையிலிருந்து வந்த விமானம் சிங்கப்பூருக்கும் திருப்பி அனுப்பப் பட்டது. இந்தியாவால் யாழ். மக்களுக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட 15 மாடி உயரம் கொண்ட, யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் பல விரிசல்களுடன் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகில் எவரும் செல்ல வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தி உள்ளார்கள். பூட்டி இருக்கும் கடைகளிலும், மக்கள் இல்லாத வீடுகளிலும்... சமூக விரோதிகளும், திருடர்களும் புகுந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிக் கொண்டு செல்வதைக் கண்டு மக்கள் கொந்தளித்த போது... முதுகில் செருகி இருந்த வாளை உருவி பயமுறுத்தியதால் மக்கள் வேதனையுடன் நமக்கு ஏன் வம்பு என்று மௌனமாகி விட்டார்கள். கட்டிட இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து மோப்ப நாய்களுடன் ரிசேர்வ் இராணுவம் வந்து கொண்டு இருப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. புலம்பெயர் மக்களிடம் "யூ ரியூப்" இணையம் நடத்துபவர்கள்... வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடி உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தமது வங்கி கணக்கு இலக்கத்தை பகிர்ந்து உள்ளார்கள். http www. Lusan .com.த
-
கருத்து படங்கள்
- நிவாரணப் பணிகளுக்காக மியன்மார் செல்லும் இலங்கை மருத்துவ குழு!
நிவாரணப் பணிகளுக்காக மியன்மார் செல்லும் இலங்கை மருத்துவ குழு! சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாரில் நிவாரணப் பணிகளுக்காக அனுப்ப இலங்கை மருத்துவக் குழு தயார் நிலையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். ஊடகங்களுக்குப் பேசிய அமைச்சர், மருத்துவக் குழுவில் இலங்கை மருத்துவ நிபுணர்கள் மற்றும் தாதியர் ஊழியர்கள் உள்ளனர். மருத்துவக் குழுவுடன் சேர்த்து அனுப்புவதற்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் மூலம் மியான்மரில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் உள்ள இலங்கை தூதரகத்திலிருந்து தகவல் கிடைத்தவுடன் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படும். மேலும், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை அரசின் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார். மியான்மரில் தாய்லாந்து மற்றும் சீனா வரையிலான பகுதிகளை பாதித்த 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மியான்மர் இராணுவ அரசாங்கம் ஒரு வாரம் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. அந் நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:51 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும், அதாவது வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்ட சரியான நேரம் இது. அண்டை நாடான தாய்லாந்தில், 20 பேர் இறந்ததாக அறியப்படுகிறது, மேலும் பாங்கொக்கில் விரிசல் ஏற்பட்ட கட்டிடங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்திற்குப் பிறகு முதல் 72 மணிநேரம் கடந்துவிட்டதால் நம்பிக்கைகள் மங்கி வருகின்றன என்றாலும், இரு நாடுகளிலும் மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடுகின்றனர். நான்கு வருட உள்நாட்டுப் போரின் நடுவில் இருக்கும் மியான்மரில், இந்த நிலநடுக்கம் “ஏற்கனவே ஒரு மோசமான நெருக்கடியை” அதிகப்படுத்தியுள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. அழிவு இருந்தபோதிலும், நாட்டின் இராணுவத் தலைவர்கள் ஜனநாயக சார்பு கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக இன்னும் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1426998- மே 09 அமைதியின்மை: உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச – ஜனாதிபதி!
மே 09 அமைதியின்மை: உரிமை இல்லாத வீட்டிற்கு இழப்பீடு பெற்ற ராஜபக்ச – ஜனாதிபதி! 2022 ஆம் ஆண்டு மே 09 ஆம் திகதி நடந்த மக்கள் போராட்டத்தின் போது அழிக்கப்பட்ட செவனகல பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு ராஜபக்ச ஒருவர் இழப்பீடு பெற்றதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இழப்பீடு பெற்ற ராஜபக்ச குறித்து விரைவில் அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், கேள்விக்குரிய வீடு இந்த குறிப்பிட்ட ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார். நிலப் பத்திரம் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது, அதே நேரத்தில் வீடு மற்றொருவரின் பெயரில் உள்ளது. இருப்பினும், இழப்பீடு ஒரு ராஜபக்சவால் பெறப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் அடங்கிய அறிக்கை அண்மையில் தனக்குக் கிடைத்ததாகவும், அது இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். புத்தலயில் திங்கட்கிழமை (மார்ச் 31) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். https://athavannews.com/2025/1426984- இன்று முதல் அமுலாகும் புதிய எரிபொருள் விலை!
இன்று முதல் அமுலாகும் புதிய எரிபொருள் விலை! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் வகையான இரு பெற்றோல்களும் ஒரு லீட்டருக்கு 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட விலைகள் நேற்று (மார்ச் 31) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் CPC கூறியுள்ளது. 92 ஒக்டேன் பெற்றோல் – புதிய விலை 299 ரூபா 95 ஒக்டேன் பெற்றோல் – புதிய விலை 361 ரூபா இந்த விலை குறைப்புக்கு அமைவாக லங்கா ஐஓசி நிறுவனமும் இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப திருத்தியமைத்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 299 ரூபாவாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 361 ரூபாவாகும். ஏனைய அனைத்து விலைகளும் மாறாமல் இருக்கும். https://athavannews.com/2025/1426942- விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு!
விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவிப்பு! உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்வது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால், அவர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக இருத்தல் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல தகுதி சான்றிதழல் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும் என்பதுடன், தகுதி சான்றிதழலை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது www.elections.gov.lk என்ற தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1426994- ஜப்பானை காவு கொள்ள காத்திருக்கும் “மெகா நிலநடுக்கம்”
ஜப்பானை காவு கொள்ள காத்திருக்கும் “மெகா நிலநடுக்கம்” ஜப்பானின் பசுபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு “மெகா நிலநடுக்கம்” ஏற்பட்டால், ஜப்பானின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும். அதேநேரம், இது பேரழிவு தரும் சுனாமிகளைத் தூண்டக்கூடும், நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழும் மற்றும் சுமார் 300,000 மக்களைக் உயிரிழக்கக் கூடும் என்று திங்களன்று (மார்ச் 31) ஒரு புதிய மதிப்பீட்டில் ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் தெற்கு ஜப்பானில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 14 பேர் காயமடைந்தனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட பாதியாக 270.3 டிரில்லியன் யென் அல்லது எதிர்பார்க்கப்படும் பொருளாதார சேதம், முந்தைய மதிப்பீட்டான 214.2 டிரில்லியன் யென்களை விட கூர்மையாக அதிகரித்துள்ளது. ஏனெனில், புதிய மதிப்பீட்டில் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிலப்பரப்பு மற்றும் தரை தரவுகள் காரணமாக வெள்ளப் பகுதிகள் விரிவடைந்துள்ளதாக அமைச்சரவை அலுவலக அறிக்கை காட்டுகிறது. ஜப்பான் உலகின் மிக அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றாகும். மிக மோசமான சூழ்நிலையில், அந்தப் பகுதியில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்ற அடிப்படையில், ஜப்பானில் 1.23 மில்லியன் மக்கள் அல்லது அதன் மொத்த மக்கள் தொகையில் 1% பேர் வெளியேற்றப்படுவார்கள். குளிர்காலத்தில் இரவில் தாமதமாக நிலநடுக்கம் ஏற்பட்டால், சுனாமி மற்றும் கட்டிட இடிபாடுகளால் 298,000 பேர் வரை இறக்க நேரிடும் என்று அறிக்கை காட்டுகிறது. கடந்த ஆண்டு, ஜப்பான் தனது முதல் மெகா நிலநடுக்க எச்சரிக்கையை வெளியிட்டது, ஏனெனில் பள்ளத்தாக்கின் விளிம்பில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, பள்ளத்தாக்கில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான “ஒப்பீட்டளவில் அதிக வாய்ப்பு” உள்ளது. 2011 இல் ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியையும் வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஒரு அணு மின் நிலையத்தில் மூன்று உலை உருகலைகளையும் ஏற்படுத்தியது. 15,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஜப்பானின் தெற்கே நான்கை பள்ளத்தாக்கில் ஒரு பெரிய பூகம்பத்தின் சாத்தியமான விளைவுகளுக்கான 2014 ஆம் ஆண்டு செய்யப்பட்ட முந்தைய மதிப்பீட்டிலிருந்து புள்ளிவிவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 800 கிலோ மீட்டர் நீளமுள்ள கடலுக்கடியில் உள்ள அகழி டோக்கியோவின் மேற்கே உள்ள ஷிசுவோகாவிலிருந்து கியூஷு தீவின் தெற்கு முனை வரை செல்கிறது. கடந்த 1,400 ஆண்டுகளில், நான்கை பள்ளத்தாக்கில் மெகாபூகம்பங்கள் ஒவ்வொரு 100 முதல் 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்ந்துள்ளன. கடைசியாக 1946 இல் நிகழ்ந்தது. நிலநடுக்கங்களை கணிப்பது மிகவும் கடினம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஜனவரி மாதம், அடுத்த 30 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஓரளவு அதிகரித்துள்ளது என்றும், அது நிகழ 75-82 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் அரசாங்கக் குழு ஒன்று கூறியது. https://athavannews.com/2025/1426966- ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
ஐக்கிய அரபு இராச்சியத்திற்குச் செல்லும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார். ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத்த மாதம் நடக்கலாம், ஒருவேளை சிறிது தாமதமாகலாம் என்று ட்ரம்ப் பதில் அளித்தார். பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இப் பயணத்தின் நோக்கமாகும். சவுதி அரேபியா மற்றும் கட்டாரில் அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளங்கள் உள்ளன, மேலும் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1426969- இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
மூன்றாவது…. முற்றிய கேஸ் போல் உள்ளது. 😂 உடனடியாக மனநோய்க்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். 🤣- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஏழும் வந்தால்… அவரின் ரீ சேர்ட்டில் ஒரு பிட்சாவும் இராது. ரீ சேர்ட்… டிசைன் இல்லாமல் போய் விடும். 😂- பெண் நோயாளிகளை படம்பிடித்த அறுவை சிகிச்சை நிபுணர் கைது - ஜேர்மனியில் சம்பவம்
43 வயதில்… ஒரு லட்சம் படங்களை எடுத்துள்ளார். இவர் வைத்தியருக்கு படித்த நேரம் புகைப்பட பிடிப்பாளராக வந்திருக்கலாம்.- பகிடிவதைக்குள்ளான யாழ்.பல்கலையின் விஞ்ஞான பீட மாணவன் : காது கேட்கும் திறனும் இழப்பு
பகிடி வதையால்….. மாணவ, மாணவிகள் தற்கொலை செய்த சம்பவங்களும் உண்டு. அப்படி இருந்தும் இன்னும் இதனை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றார்கள் வருங்கால தூண்கள். அத்துடன் சோதனை முடிந்த கடைசி நாளில்… சட்டையில் மை அடிப்பதும், பாடசாலை பொருட்களை அடித்து உடைக்கும் செயல்களையும் சிலர் செய்கின்றார்கள். ஜேர்மனி பல்கலைக்கழகங்களில்… பகிடி வதைகள் இல்லை. இங்கிலாந்தில் இருந்து இது இலங்கை, இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என நினைக்கின்றேன். கேட்கும் திறனை இழக்க வைத்த மாணவர்களை பல்கலைக் கழகத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றி விட வேண்டும். அப்போதான்… மற்றவர்களுக்கு புத்தி வரும்.- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அதுதான்... மற்றவர்கள் பார்த்து, நாவூறு படுத்தாமல் இருக்க... தொப்பி போட்டு மறைத்து வைத்திருக்கிறார்கள் போலுள்ளது. 😂- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
முஸ்லீம்களுக்கு மூன்று சுழி இருக்கும் என நினைக்கின்றேன். 🤣- இரண்டும் முரண்பட்டு... இறுதியில் கண்ட பலன்?
ஓம். காலம் காலமாக... நடந்து வருவது தான். இன்னும்... அதிலிருந்து பாடம் படிக்கவில்லை என்றால், இவர்களை என்ன செய்வது. மற்றைய இனத்தவரிடம் இல்லாத ஒரு கூடாத பழக்கம் எம்மவரிடம் உள்ளது.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரண்டும் முரண்பட்டு... இறுதியில் கண்ட பலன்?
இரண்டும் முரண்பட்டுக் கொண்டன. கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன. நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை. மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன. இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை. இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும்சண்டைகளும் கூட! நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல. மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம். உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை. உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று சகித்து வாழ பழகுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால்... எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம் அனைத்திலும் நுட்பம் பார்க்கவேண்டாம்! விட்டுக் கொடுத்து வாழ்வோம்! உறவு செழிக்கும், அன்பு தழைக்கும். Palani Yappan- சிரிக்கலாம் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
தலையில் இரட்டை சுழி இருந்தால்... இரண்டு பெண்களை திருமணம் செய்வார்கள். 😂- அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை!
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை! “அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாகத் தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல” என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”தற்போது சிறையில் உள்ளவர்களில் யாரும் வெறும் சந்தேகநபர்கள் அல்ல எனவும், அனைவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள் எனவும், எனவே முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். மேலும் ”முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான கொலைச்சதி, பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு, மத்திய வங்கி குண்டுவெடிப்பு மற்றும் தலதா மாளிகை குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களில் குறித்த கைதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவை எளிதாக எடுத்துவிட முடியாது எனவும், சமூகத்திற்குள் ஒற்றுமையை வளர்ப்பது மட்டுமல்ல, அரசியல் ஆதாயத்திற்காக எவரும் சூழ்நிலையைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும் எனவும் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1426875- மீன்பிடி பிரச்சினை குறித்து இலங்கை-இந்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தை – அரசாங்கம்!
மீன்பிடி பிரச்சினை குறித்து இலங்கை-இந்திய அரசு விரைவில் பேச்சுவார்த்தை – அரசாங்கம்! பிரதமர் நரேந்திர மோடி தனது நாட்டிற்கு வருகை தருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீன்பிடி தகராறு குறித்து அரசு மட்ட பேச்சுவார்த்தை விரைவில் மீனவர்கள் முன்னிலையில் நடைபெறும் என மீன்வளம், நீர்வாழ் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழு அவருடன் ஒரு சந்திப்பை நடத்திய பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார். மீனவர் தலைவர் ஆர்.சகாயம் தலைமையிலான குழு, இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தையை தொடங்குமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது. இந்தப் பிரச்சினை குறித்து இறுதியாக அமைச்சர்கள் மட்ட பேச்சுவார்த்தை 2016 இல் நடைபெற்றது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு நீடித்த தீர்வைக் கோரி, தீவு நாட்டின் காவலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு குழு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தது. பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார், மேலும் இலங்கை பிரதமருடனான அவரது சந்திப்பில் மீனவர் பிரச்சினையும் விவாதிக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கும். இதற்கிடையில், ராமேஸ்வரத்திலிருந்து வந்த குழுவினர் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களைச் சந்தித்து, இலங்கையின் கடல் எல்லைக்குள் மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை ஆய்வு செய்தனர். மார்ச் 26 அன்று வவுனியாவில் மீனவர் தலைவர்கள் தங்கள் சகாக்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தனர். இழுவைப் மீன்பிடியை நிறுத்த இந்தியத் தரப்பு அவகாசம் கோரியது, ஆனால் இலங்கை மீனவர்கள் தங்கள் நீரில் இழுவைப் மீன்பிடித்தல் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை தெளிவுபடுத்தினர். இருப்பினும் அவர்கள் ஒரு இணக்கமான தீர்வுக்கு தயாராக உள்ளனர். https://athavannews.com/2025/1426904- வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; 06 வயது சிறுவன் உயிரிழப்பு!
வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; 06 வயது சிறுவன் உயிரிழப்பு! களுத்துறை தெற்கில் ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பெற்ரோல் குண்டு தாக்குதலில் 06 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சனிக்கிழமை இரவு (மார்ச் 29) மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் மீது பெற்ரோல் குண்டை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் வீட்டினுள் இருந்த 28 வயதுடைய ஒரு பெண்ணும் 06 வயதுடைய ஒரு சிறுவனும் காயமடைந்தனர். சிறுவனம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1426916 - நிவாரணப் பணிகளுக்காக மியன்மார் செல்லும் இலங்கை மருத்துவ குழு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.