Everything posted by தமிழ் சிறி
-
மூன்றாம் உலக போருடன் யுக்ரைன் ஜனாதிபதி சூதாடுகிறார் – வெள்ளை மாளிகையில் கருத்து மோதல்
👉 https://www.facebook.com/theivigan.panchalingam/videos/1539574740779215 👈 செலென்ஸ்கி, ட்றம்ப்... சந்திப்பு, யாழ் வலம்புரி ஹோட்டலில் இடம் பெற்று இருந்தால்…. 😂
-
நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்!
கால நிலையை முன் கூட்டியே அறியாமல் கப்பல் புறப்பட்டதா. பயணிகளின் உயிருடன் விளையாடலாமா. கப்பல் நிறுவனத்தின் பொறுப்பற்ற செயலை என்னவென்பது.
-
நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்!
நடுக்கடலில் தத்தளித்த நாகை-இலங்கை கப்பல்! இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணித்த பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது கப்பலில் 17 ஊழியர்கள் உள்பட 95 பேர் பயணம் செய்துள்ள நிலையில் பயணிகள் கூச்சலிட்டதால் கப்பல் பாதியிலேயே நாகை துறைமுகத்திற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல் சேவை வானிலை மாற்றம், சர்வதேச தொழில்நுட்ப அனுமதி உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு நவம்பர் 18ம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து கடந்த மாதம் 22ம் திகதி முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் கடல் காற்று அதிகமாக வீசுவதால் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வானிலை மாற்றம் சீரடைந்ததும் மீண்டும் மார்ச் 1ஆம் திகதி முதல் நாகப்பட்டினம்-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு 78 பயணிகளுடன் புறப்பட்டது. வேளாங்கண்ணிக்கு தென்கிழக்கே 15 மைல்கல் தொலைவில் கப்பல் சென்றபோது கடல் சீற்றம் அதிகமான நிலையில் கப்பல் கடலில் தத்தளிக்க ஆரம்பித்ததால் பயணிகள் கூச்சளிட்டுள்ளனர். வானிலை மோசமானதை தொடர்ந்து கப்பலை அவசரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பலின் கெப்டன் திருப்பியுள்ளார். இதை தொடர்ந்து நேற்றும்(02) இன்றும்(03) கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1423882
-
இரசித்த.... புகைப்படங்கள்.
யானையின் குடும்பம் ஒன்று, நித்திரை கொள்கின்றது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- கொஞ்சம் ரசிக்க
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- போராட்டம் குறித்து சுகாதார தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை!
போராட்டம் குறித்து சுகாதார தொழிற் சங்கங்கள் எச்சரிக்கை! எதிர்வரும் மார்ச் மாதம் 06 ஆம் திகதி காலை 08.00 மணி முதல் நாடு முழுவதும் சுகாதார நிபுணர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக 20 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சுகாதாரத் துறையுடன் இன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ள கலந்துரையாடல் தோல்வியுற்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சுகாதார தொழிற்சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தியுள்ளனர். சுகாதார நிபுணர்களின் கொடுப்பனவுகளை மீளாய்வு செய்வதற்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பிரதிநிதிகள் மேலும் தெரிவித்தனர். அடையாள வேலைநிறுத்தத்திற்கு மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும், சிறுவர் மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் சிறுநீரக மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படாது என மருத்துவமனைகளின் அதிகாரிகள் தெரிவித்தனர். தாதி ஒருவரின் சம்பளம் தொடர்பில் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தவறானது என சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு (HTUA) அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்களை பாதிக்கும் கணிசமான சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய 2025 வரவுசெலவுத் திட்டத்தில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1423812- மார்ச் 5 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!
மார்ச் 5 அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்! வைத்தியர்களின் கொடுப்பனவுகளை குறைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்ச் 5 ஆம் திகதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் கணிசமான குறைப்புக்கள் உள்ளதாகவும், இது மருத்துவ நிபுணர்களை பாதிக்கும் என்றும் GMOA தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளின் சேவைகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகாதாரத் துறையில் இடையூறுகளைத் தவிர்ப்பதற்கான முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு GMOA அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1423844- இலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2025; செய்திகள்
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு! உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி, மார்ச் 17, முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் மார்ச் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1423809- நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை!
எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் குழு தொடர்பில் சிஐடி விசாரணை! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) எரிபொருள் விநியோக செயல்முறைக்கு இடையூறு விளைவிப்பதற்காக எரிபொருள் விநியோகஸ்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவொன்று தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3% கமிஷனை இரத்து செய்ய CPC எடுத்த முடிவு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, எரிபொருள் விநியோகஸ்தர்கள் என்று கூறிக்கொள்ளும் குழு தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த குழு செயல்படுவதாக முறைப்பாட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதேநேரம், எரிபொருள் விநியோகத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1423835- நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
சுமந்திரனுக்கு... கட்டுக்காசும் கிடைக்காது. 👇 சுமந்திரனின் தோல்வி பட்டியல் கீழே... 👇 1) தமிழரசு கட்சி தலைவர் போட்டியில்... தோல்வி. 2) பாராளுமன்ற தேர்தலில் தோல்வி. 3) அடுத்து... மாகாண சபை தேர்தலிலும் தோல்வியுற்று, கின்னஸ் சாதனை படைக்க உள்ளார். தோல்வியின் நாயகன் சுமந்திரனுக்கு, மீண்டும் தோல்வியுற... முற்கூட்டிய வாழ்த்துக்கள். 🙃- நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தைத் தயாரிப்பதற்காக கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகி இருந்தனர். குறித்த பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது.ஆனால் கடன் தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் திகதி உத்தரவிட்டார். உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் தயாரிப்பு நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையடையவில்லை எனக் கூறி பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், மத்தியஸ்தர் தீர்ப்பை அமுல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், தற்போது வரை கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும், இந்த உத்தரவு குறித்து தொடர்புபட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். https://athavannews.com/2025/1423843- உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு மோடியின் சஃபாரி!
உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு மோடியின் சஃபாரி! உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (03) காலை குஜராத் மாநிலம் ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சஃபாரி சென்றுள்ளார். இது குறித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்று காலை, உலக வனவிலங்கு தினத்தன்று, நான் கிரில் ஒரு சஃபாரிக்குச் சென்றேன், இது நாம் அனைவரும் அறிந்தபடி, கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகம் என்று குறிப்பிட்டுள்ளார். வனவிலங்கு சரணாலயத்தில் சிங்கங்கள் சுதந்திரமாக சுற்றித் திரியும் போது மோடி, அவற்றின் வசீகரிக்கும் அழகினை கையில் இருந்த கமரா மூலம் புகைப்படம் எடுத்தார். இந்த பயணித்தின் போது, ஆசிய சிங்கத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண்களின் முயற்சிகளையும் பிரதமர் மோடி பாராட்டினார். https://athavannews.com/2025/1423858- மன்னர் சார்லஸ்ஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி!
மன்னர் சார்ல்ஸுடன் கனேடிய பிரதமர் இன்று சந்திப்பு! கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று (03) பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்தித்து “கனடா மற்றும் கனேடியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்” பற்றி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக இணைக்கும் டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் குறித்து கனடாவின் அரச தலைவர் சார்லஸ் மன்னர் ஏன் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரூடோ, கனடா மற்றும் கனேடியர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களைப் பற்றி இந்த சந்திப்பின் போது விவாதிப்போம், நாளை (திங்கள்) அவரது மாட்சிமையுடன் அமர்வதை நான் எதிர்நோக்குகிறேன். மேலும், கனேடியர்களுக்கு நமது இறையாண்மை மற்றும் ஒரு தேசமாக நமது சுதந்திரத்திற்காக நிற்பதை விட வேறு எதுவும் முக்கியமானதாகத் தெரியவில்லை – என்றார். கடந்த வாரம் சார்லஸ், பிரிட்டனுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது அரசுப் பயணத்தை மேற்கொள்ளுமாறு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்தார். ஓவல் அலுவலகத்தில் உலக ஊடகங்கள் முன்பு நடந்த சந்திப்பின் போது பிரித்தினாயி பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அழைப்பிதழை வழங்கினார். அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறுவதற்கு கனடா ஒப்புக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று ட்ரம்ப் பலமுறை பரிந்துரைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423798- கருத்து படங்கள்
- நாட்டில் எரிபொருளுக்கு எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை!
- அதானி வெளியேற்றம், பெரும் பிழை..!
இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது!- மனோ கணேசன் இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது எனவும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வெளியேற்றம் சர்வதேச முதலீட்டாளருக்கு இலங்கை குறித்த எதிர்மறை செய்தியைக் கொண்டு சென்று விட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம் குறித்து நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்த போதே மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல எனவும், அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும் எனவும், அதற்காக இலங்கை-இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இப் பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது எனவும்,அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது அதானியை இலங்கை அரசு வெளியேற்றவில்லை எனவும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் இலங்கையை விட்டு வெளியேறி விட்டது எனவும் தெரிவித்த மனோ கணேசன், இச்சம்பவம் இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளருக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்றும் விட்டது எனவும், தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை-இந்திய மின் சுற்று மூலம், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை மின்சாரம் இலங்கைக்கு கொண்டு வரும் வருமானம் மூலம் இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க முடியும் எனவும், எதிர்காலத்தின் மீது கண் வைத்து தீர்மானம் எடுக்க இலங்கை அரசு தவறிவிட்டது எனவும், அதானியின், யூனிட் விலை தொடர்பில் பிரச்சினை இருக்கும் போது, அதை பேசி தீர்த்து இருக்கலாம் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது இலங்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்காளர்களுடன்தான் வருவார்கள் எனவும், மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கையை நோக்கி முதலீட்டாளர்கள், இந்தியா விட்டு இங்கு வருவார்கள் என ஆட்சி யாளர்கள் நினைக்கின்றார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1423733- CPC எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!
CPC எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு! இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் உப தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கான 3% கமிஷன் தொகையை குறைப்பது தொடர்பான மகஜர் ஒன்றை சமர்ப்பிக்க இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தரவுள்ளதாக சந்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும், லங்கா ஐஓசி எரிபொருளின் விநியோகஸ்தர்கள் எரிபொருள் ஆர்டர்களை வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன் தலைவர் கோசல விதான ஆராச்சி கூறுகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செல்வாக்கு காரணமாக ஒரு ஆர்டருக்கு 35,000 ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனிடையே, நொச்சியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எரிபொருள் விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கத்திற்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என குற்றம் சுமத்தினார். https://athavannews.com/2025/1423760- மாணவனை தாக்கிய பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்!
மாணவனை தாக்கிய பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்! இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனை தாக்கி காதில் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபர் எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹிங்குராங்கொட பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், மாணவர் தொடர்பான நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1423784- உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர, ஐரோப்பிய தலைவர்கள் 4 அம்ச திட்டம்!
உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர, ஐரோப்பிய தலைவர்கள் 4 அம்ச திட்டம்! பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உக்ரேனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்யாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். அத்துடன், ஐரோப்பிய தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (02) உக்ரேன் அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் முன்வைக்க ஒப்புக்கொண்டதாகவும் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். இது ரஷ்யாவைத் தடுப்பதற்கு அவசியமானது என்று கெய்வ் கூறும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வொஷிங்டன் வழங்குவதற்கான ஒரு முக்கிய படியாகும். லண்டனில் நடந்த உச்சிமாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனிய ஜனாதிபதிக்கு வலுவான ஆதரவை வழங்கினர் மற்றும் அவரது தேசத்திற்கு மேலும் உதவுவதாக உறுதியளித்தனர். வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மோதலில் ஈடுபட்டு, வொஷிங்டனுக்கான விஜயத்தை குறைத்துக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த சந்திப்பு வந்தது. உண்மையான அமைதி மற்றும் உத்தரவாதமான பாதுகாப்பிற்காக அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான அடிப்படையை கண்டுபிடிப்பதற்காக நாங்கள் அனைவரும் ஐரோப்பாவில் ஒன்றாக வேலை செய்கிறோம் என்று உச்சிமாநாட்டிற்குப் பின்னர் ஜெலென்ஸ்கி கூறினார். தலைவர்களின் கூட்டத்திற்குப் பின்னர் ஒரு செய்தி மாநாட்டில் பேசிய ஸ்டார்மர், உக்ரேனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்யாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நான்கு அம்ச திட்டம் ஒப்புக் கொள்ளப்பட்தாகக் கூறினார். உக்ரேனுக்குள் இராணுவ உதவிகள் வருவதைத் தடுக்கவும், ரஷ்யாவின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கவும் எந்தவொரு நீடித்த அமைதியும் உக்ரேனின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உக்ரேன் எந்த அமைதிப் பேச்சுக்களிலும் கலந்து கொள்ள வேண்டும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டால், உக்ரேனின் தற்காப்பு திறன்களை உயர்த்தி எதிர்கால படையெடுப்பைத் தடுக்கும் உக்ரேனில் ஒரு ஒப்பந்தத்தைப் பாதுகாக்கவும் அதன் பிறகு அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கவும் “விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை” உருவாக்குதல் எந்தெந்த நாடுகள் இந்த கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டன என்பதை பிரித்தானிய பிரதமர் குறிப்பிடவில்லை, ஆனால் உறுதியளித்தவர்கள் உண்மையான அவசரத்துடன் திட்டமிடலை தீவிரப்படுத்துவார்கள் என்று கூறினார். Athavan Newsஉக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர 4 அம்ச திட்டம்!பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உக்ரேனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்யாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார். அத்துடன், ஐரோப்ப...- மன்னர் சார்லஸ்ஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி!
மன்னர் சார்லஸ்ஸை சந்தித்த உக்ரேன் ஜனாதிபதி! உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இருவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு உக்ரைன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் குறித்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த ஐரோப்பியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னரே உக்ரைன் ஜனாதிபதி இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்துள்ளார். இதேவேளை, இரு தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மிகச் சிறந்த மட்டத்தில் இருந்ததாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1423778- பிளாஸ்டிக் தாளில் வேக வைத்த இட்லியால் என்ன ஆபத்து? மருத்துவர்கள் விளக்கம்
கடைசியில்…. இட்லியையும், பிளாஸ்ரிக் தாளில் அவித்து நோயை உருவாக்குகின்றார்கள். துணி மலிவான பொருளாகவும் எல்லா இடமும் கிடைக்கக் கூடிய பொருளாக இருந்தும்…. ஏன் பிளாஸ்ரிக் மோகம் என்று தெரியவில்லை. நம்மவர்கள்…. இடியப்பத்தை, பிளாஸ்ரிக் இடியப்பத்தட்டில் அவிப்பதை பரவலாக காண முடிகின்றது. அவதானம் தேவை.- 14ஆவது முறையாக தந்தையானர் எலான் மஸ்க்!
இப்ப உள்ள ஆண்களுக்கு இடுப்பில், பெலன் குறைவு. 😂 எலான் மஸ்க்… விதி விலக்கு. 🤣 - கொஞ்சம் ரசிக்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.