Everything posted by தமிழ் சிறி
-
“நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
கஷ்ட காலம்… ஜெயலலிதாவுக்கும் வாரிசு இல்லாமல் போயிட்டுது. இருந்திருந்தால்… கட்டுமரம் கோஷ்டி நிறைய போராட வேண்டி வந்திருக்கும்.
-
வடக்கு மாகாண ஆளுநர் பதவி விலகல் குறித்து வெளியிட்ட அறிவிப்பு
இவர்கள் தாமாக பதவி விலகாவிடில்… புதிய அரசு, அழுத்தம் கொடுத்து விலக வைப்பார்கள். அதானால் தாமாகவே மரியாதையாக விலகிச் செல்கிறார்கள். அதுகும் நல்லதுதான்.
-
அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
த.தே.கூ. வுக்கு… ராஜதந்திரமா? வாய்ப்பில்லை ராஜா…. 😂 🤣
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
அவர்களை அமெரிக்காவில் வைத்தாவது கைது பண்ணி நாட்டுக்கு கொண்டு வந்தால்தான்… அனுர தனது விம்பத்தை உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால் இந்த நடைமுறைகள் ஒப்பேற சில / பல வருடங்களாவது எடுக்கும். அதற்குள்…. அடுத்த பிரச்சினை கதவை தட்டும். 😂
-
வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை!
பசிலும், கோத்தாவும்…. சுழியன்கள். 🤣 அனுர தான் அடுத்த ஜனாதிபதி என்று மோப்பம் பிடித்து… தேர்தல் நடப்பதற்கு முதல் நாளே… அமெரிக்காவுக்கு ஓடித் தப்பி விட்டார்கள். 😂 இளனி குடித்தவன் யாரோ இருக்க…. கோம்பை சூப்பினவனை கைது பண்ண போகிறார்கள். 😁 😃
-
பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர்…. ரணிலையும், சஜித்தையும் இணைக்கத்தானே இந்தியா பாடு பட்டது. அப்போ முடியாது என்று விட்டு… இப்போ இணையப் போகிறார்களாம். இருவரும் இணைந்தால்… அனுர கட்சியால், எதிர்பார்க்கும் பாராளுமன்ற கதிரைகளை பெற முடியாது போகலாம். இந்திய சார்பு பாராளுமன்றமும், சீன சார்பு ஜனாதிபதியும்…. நல்ல கூத்தாக இருக்கப் போகுது. 😁
-
தமிழரசு எதிர் பொதுக் கட்டமைப்பு: வென்றது யார்?
சுமந்திரன் கை காட்டின சஜித்தை… சுமந்திரனின் சொந்த ஊர் பருத்தித்துறையிலேயே அரியநேத்திரன் 8658 வாக்குகள் பெற்று முதலாம் இடம். சஜித் 6100 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம். சுமந்திரனை…. அவரது சொந்த ஊர் மக்களே கணக்கில் எடுக்கவில்லை. இதற்குள் சுமந்திரன் துதி பாட.. சில செம்புகள் முண்டியடிக்குதுகள். 😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அந்த….இரண்டு கோஷ்டியும் ஒன்றாக நின்று கூப்பாடு போடும் போதே… இவர்களின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று புரிந்து விட்டது. போலிகளை அம்பலப்படுத்திய… நியாயமான கேள்விகள் ரஞ்சித். 👍🏽
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
பொரியல்களுக்கு இடமளிக்கப் படாது என்றால் என்ன அர்த்தம். ஏதாவது எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளதா...? அல்லது எண்ணையை மிச்சம் பிடிக்க... கத்தரிக்காய், மீன் போன்றவை பொரிக்க முடியாதா? 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
தொலைபேசி கம்பத்தில்.. பிரமாண்ட குருவிக் கூடு.- யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
"நாம் ஒரு நாள் இறந்தாலும், நாம் மகிழ்ச்சியாக இறக்கலாம், எங்கள் சொந்த மக்களுக்காக போராடினோம் என்ற நிம்மதியுடன்." என் அப்பா அரச ஊழியர்... அம்மாவால் இன்றும் எழுத முடியாது. தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த எங்களுக்கு உணவு கிடைக்காமல் தாய், தந்தை படும் துன்பத்தை நம் கண்களால் பார்த்தோம்... எங்கள் கிராமப்புற பள்ளியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லை.விரைவாக, வந்த ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் பெற்று வேறு மாகாணங்களுக்கு சென்றனர். மிகச்சில ஆசிரியர்களே எங்களைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி எங்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.அவர்கள் இல்லாமல் நாம் இன்று இல்லை. பெற்றோரின் சொற்ப வருமானம் கல்விச் செயல்பாடுகளுக்குப் போதாததால், பள்ளி விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் மாம்பழம், டொபி, சிகரெட் விற்று, மகாவலி கிராமத்திற்கு வியாபார நிமித்தம் வந்த போது மகாவலிக்குட்பட்ட வீதிகளில் வடிகால் வெட்டி,அப்போது, இருபது ரூபாய் ஒரு வடிகால் வெட்ட. நானும், ஊர் நண்பர்களும் இருபது ரூபாய்க்கு ரோட்டில் வடிகால் வெட்டுவது வழக்கம். அந்த அளவுக்கு ஏழ்மை எங்கள் வாழ்வில் அழுத்தத்தை கொண்டு வந்தது. எனது நண்பர்கள் பலர் தங்கள் கல்வியை நாசப்படுத்தினர். கற்றுக்கொள்ள முடியாததால் அல்ல குடும்பத்தில் படிக்க போதிய பணம் இல்லாததால். வறுமையின் காரணமாக சிலர் குடிபோதையில் பழகி அகால மரணம் அடைந்தனர். அவர்கள் இறக்கும் வயது வரவில்லை. சிலரது மனைவிகள் வெளிநாடு சென்று அவர்களது குடும்பங்கள் அழிந்தன. இந்த வறுமை நமது சமூகத்தில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. வறுமையை ஃபேஷன் ஆக்கி, மாளிகைகளில் வாழ்ந்து கொண்டு, உலகம் பார்க்க ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்பவர்கள் அல்ல நாம்.. நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. தூரத்தில் உள்ள கிராமத்தில் பல ஏழைகள் தந்தை மற்றும் சகோதரர்கள் ஜனாதிபதியான, சிறந்த பள்ளிகளில் படித்த. கொழும்பை மையமாகக் கொண்ட, இச் சமூகத்தில் ஆடம்பரமான மாளிகைகளில் வளர்ந்த வேட்பாளர்கள் மத்தியில், தூரத்துக் கிராமத்தில் இருந்து வந்து இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக போராட வந்த ஒரு சிறிய மனிதனான நான், தோளோடு தோள் நிற்கிறேன். என்னுடன் எனது சொந்த வகுப்பில் வாழ்ந்த இந்த நாட்டின் ஏழை மக்கள் எனக்கு பலம் தந்து உதவினர். வறுமையில் வாடும் என் வர்க்கத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய மீள முடியாத பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காக அரசியல் செய்கிறோம். ஒரு நாள் இறந்தாலும், நம் மக்களுக்காகப் போராடினோம் என்ற நிம்மதியுடன், மகிழ்ச்சியாக இறக்கலாம்... - அனுரகுமார திஸாநாயக்க - உண்மை உரைகல்- அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
அவர்களின் உலுப்பலில்.... யார் முதல் அம்பிடுகின்றார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது. அனுர... மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில், பிள்ளையானை ஒரு பிடி பிடித்திருந்தார். கிழக்கில் சில இடங்களில் அவர்கள் ஆயுதத்துடன் நடமாடுவது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்றார். தான் ஆட்சிக்கு வந்தால்... துணை இராணுவக் குழுக்களிடம் உள்ள ஆயுதம் எல்லாம் உடனடியாக களையப் படும் என தெரிவித்து இருந்தார். அப்ப... டக்ளசும், தனது ஒட்டுக்குழு தோழர்களிடம் உள்ள ஆயுதங்களையும் கொடுக்க வேண்டி வரும். 😂- நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
பைடன் அமெரிக்க தேர்தல் போட்டியிலிருந்து விலகாமல் எவ்வளவு அடம் பிடித்துக் கொண்டிருந்தார். தனக்கு கடவுள் வந்து சொன்னால் தான்... விலகுவேன் என்று ஒரு போடு போட்டாரே. நேற்று ரணில்.... ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறும் போது... தளர்ந்த நடையுடன், சோகம் அப்பிய முகத்துடன் வெளியேறிய காட்சியும்... பதவி சுகத்தை துறப்பது கடினமானது என உணர்த்தியது. நம்ம... சம்பந்தர் ஐயாவை, சுமந்திரன் ஓய்வெடுக்கச் சொன்ன போது, மக்கள் தெரிவு செய்து வந்த தன்னை... யாரும் அப்புறப் படுத்த முடியாது என்று... கட்டையில் போகும் மட்டும் அதில் ஒட்டிக் கொண்டு இருந்ததையும் கண்டோமே.- அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
இதுவரை காலமும் கொள்ளையடித்ததை பாதுகாக்க வேண்டும் என்றால், ஒட்டித்தான் இருக்க வேண்டும். ஆனால், வழமையாக எல்லா இடமும் அவியும் பருப்பு... ஜே.வி.பி.யிடம் அவியுமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி. 😂- அநுரவின் அரசிற்கு ஆதரவை வழங்க மறுக்கும் கட்சிகள்
அப்பவும், இப்பவும்.... அவர்கள் தோற்கிற குதிரைக்குத்தான் ஆதரவளிப்பார்கள். 😂- நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
எல்லோரையும் சொல்ல முடியாது என்றாலும், பலருக்கு... வேறு, பணம் கொழிக்கும் வருமானங்களும் உண்டு.- சென்னை நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்த இந்திய உயர் நீதிமன்றம்!
சென்னை நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்த இந்திய உயர் நீதிமன்றம்! சிறுவர் ஆபாசப் படங்களைப் பார்ப்பதும் அவற்றை பதிவிறக்கம் செய்து சேமித்து வைத்திருப்பதும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO) கீழ் குற்றமாகும் என்று இந்திய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தச் செயல்பாட்டில், டிஜிட்டல் சாதனங்களில் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாசப் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை இரத்து செய்தது. சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையான சட்டம் குறித்த முக்கிய தீர்ப்பில் இந்திய உயர் நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பளித்தது. 28 வயது இளைஞர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் சிறுவர் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், குறித்த நபருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை இரத்து செய்தது. இந்த நிலையில் இன்று மேற்கண்ட உத்தரவினை அறிவித்துள்ளது இந்திய உயர் நீதிமன்றம். தீர்வினை அறிவித்த இந்திய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜேபி பார்திவாலா ஆகியோர், குறித்த தீர்ப்பினை வழங்குவதில் சென்னை உயர் நீதிமன்றம் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியது. https://athavannews.com/2024/1400744- “நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
ஆசை, தோசை, அப்பளம் வடை.... 😂 உதய நிதிக்கு பிறகு இன்பநிதிக்கு முடிசூட்டினாலும்... தமிழக மக்கள்... டோன்ற் ஓறி, (B) பீ ஹாப்பி. 🤣- கருத்து படங்கள்
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.- பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவி விலகல் – புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய?
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவி விலகல் – புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய? புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர். எவ்வாறெனினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. https://athavannews.com/2024/1400706- ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்!
ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400710- “நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
குமாரசாமி அண்ணை சிங்களவர்கள் நீதி, நியாயத்துக்கு அப்பால்... தம்மை பெற்றோலுக்கும், உணவுக்கும் வீதியில் அலைய வைத்த, மகிந்த கோஷ்டியை காப்பாற்றிய கோபத்தை ரணிலிலும், அரகலய போராட்டத்தின் பின்.. சஜித் ஜனாதிபதி பொறுப்பு எடுக்க தயங்கியதையும் சிங்கள மக்கள் விரும்பாமல் ஒரு அலையாக திரண்டு அனுரவை ஆதரித்து இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன். புதிய தலைமுறையினரில்... பழைய கட்சிகளை விரட்டி விட்டு, புதிய முயற்சியாக அனுரவை தெரிவு செய்திருக்கலாம் என்றே ஊகிக்கின்றேன். இது "சட்டியில்... இருந்து, அடுப்புக்குள் விழுந்த கதை" மாதிரி போய் விடுமோ என்ற ஐயமும் உண்டு. 😂- “நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
ரணில் அவர்களே…. நீங்கள் மகிந்த கூட்டத்தை பாதுகாக்காமல், தண்டனை பெற்று கொடுத்து இருபீர்களாக இருந்தால்… இன்று மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஜனாதிபதியாக தொடர்ந்து இருந்திருப்பீர்கள். என்ன செய்வது…. உங்களது சேவை இரண்டு வருடம் போதும் என்று மட்டுப் படுத்தப் பட்டு விட்டது.- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
ஒரு ஜனாதிபதியின் batchmate உடன் யாழ்.களத்தில் கருத்தாடிக் கொண்டு இருக்கின்றோம் என்பதில், எங்களுக்கும் பெருமை. 😁 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.