Everything posted by தமிழ் சிறி
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
பின்னை… நெடுக அதை, அழைந்து கொண்டு இருந்தால்… பிள்ளை பெறுகின்ற நினைப்புத்தானே வரும். இங்கு சாலைகளில், பல்பொருள் அங்காடிகளில் காணும் இஸ்லாமிய பெண்களில் 50 % மானவர்கள் பிள்ளைதாச்சியாகத்தான் இருக்கின்றார்கள். விசுகர்… நீங்களும் இதை பிரான்சில் கண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
ஜேர்மனிக்கு வந்த ஆரம்பத்தில்… அப்போ எனக்கு திருமணமாகவில்லை. நான் மூன்றாம் மாடி வீட்டில் வசித்தேன். வேலை முடிந்து இரவு பத்து மணி போல் வீடு வரும் போது, இரண்டாம் மாடியில் வசிக்கும் துருக்கி குடும்பத்தின் வீட்டு வாசல் கதவு சாதுவாக திறந்து இருந்தது. அடுத்த வீட்டில் என்ன நடக்குது என்று எட்டிப் பார்ப்பது, 😅 மனித இயல்புதானே… என்று நானும் சாதுவாக எட்டிப் பார்த்தால்…. Sofaவில் துருக்கி மனிசி காலை அகட்டிக் கொண்டு இருக்க, துருக்கி கணவர் முழங்காலில் இருந்து சேவ் எடுத்துக் கொண்டு இருந்ததை என் கண்ணால் கண்டேன். 😲 ஆகவே… அவர்கள், அங்கும் சேவ் எடுக்கின்றார்கள் என்பது உறுதியாகின்றது. 😁 எல்லாரும் எடுக்கின்றார்களா என்பதற்கு… கருத்துக் கணிப்புத்தான் வைக்க வேண்டும். 😂
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
இவர்களின்… சொல்லுக்கும், செயலுக்கும் வெகு தூரம். 😂 சொல்வதை செய்ய மாட்டார்கள், செய்வதை சொல்ல மாட்டார்கள். 🤣
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
பிராம்டன் நகர பிதா பற்றிக் பிரவுண் அவர்களின் காத்திரமான பதிலுக்கு மிகவும் நன்றிகள். 🙏
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
கமக்கட்டு உட்பட… மற்ற மறைவிடங்களில் உள்ள, மயிரை வழிக்கும் போது வராத ஹராம்… தாடிக்கு மட்டும் வந்து விடுகின்றது. வினோதமான சட்டம். 🙂
-
ஆட்சியை கைப்பற்றி 3 ஆண்டுகள் - ராணுவ அணிவகுப்பு நடத்திய தாலிபன்கள்
தாடிக்கும்… தலிபானுக்கும் அப்படி என்ன ஒற்றுமையோ. தலிபான்களின் அணிவகுப்பில்… எல்லோரும் தாடியுடனேயே வருகின்றார்கள். ஒரு ஷேவ் எடுத்த மூஞ்சையை கூட காண முடியவில்லை.
-
தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை கனடாவில் நிர்மாணித்தால் நல்லிணக்க செயன்முறையைப் பாதிக்கும் - பிரம்டன் நகர மேயருக்கு இலங்கை கடிதம்!
இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகவும், ஈழப்போர் முடிந்து 15 ஆண்டுகளாவும்… ஶ்ரீலங்கா அரசு, தமிழர்களுக்கு என்ன நல்லிணக்கத்தை கட்டி எழுப்பி இருக்கின்றார்கள். மாறாக தமிழர் பகுதியை அபகரிக்கும் செயலை மட்டும் விரைவாக செய்வதை தவிர வேறு எதுவும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் கால அவகாசங்கள் எல்லாம்… தமிழரை விழுங்கி, ஏப்பம் விட்டு விடும் என்பதை மேற்குலகு கவனத்தில் எடுத்து, ஶ்ரீலங்காவுடன் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
"அது... வேறை லெவல்" என்னும் போதே, உங்கள் இருவரின் அனுபவமும்.. கணக்கில் அடங்காது என்பதை புரிந்து கொண்டேன். 😂 🤣
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
நீங்கள், இன்னும்... குஷ்பூ பிரியரா. ❤️😂
-
78 வது சுதந்திர தினம் – வளர்ந்த பாரதம் எனும் கருப்பொருளில் கோலாகல கொண்டாட்டம்
அதுதானே... நியாயமான கேள்வி. 😂
-
பதவியை இராஜினாமா செய்தார் குஷ்பு!
"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்று சும்மாவா சொன்னார்கள். 🤣 இனி இவ போறதுக்கு... கடசிகளே இல்லை என நினைக்கின்றேன். எல்லா இடமும் ஒரு ரவுண்டு அடித்து விட்டு, வந்து விட்டார். 😂
-
சங்கே முழங்கு ! - சுப.சோமசுந்தரம்
சுப.சோமசுந்தரம் அவர்களுக்கு, வாழ்த்துக்கள்.
-
தமிழ் வேட்பாளருக்கு சங்கு.
தமிழ் வேட்பாளருக்கு சங்கு. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தலில் ரணில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பொது வேட்பாளரான பா.அரியநேந்திரன் போட்டியிடும் சின்னம் சங்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்தில் அவர் போட்டியிடவுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளனர். அதன்படி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார், மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கலாநிதி கயாஷான் நவனந்த, திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான ஸ்ரீயானி விஜேவிக்ரம, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர், ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் கலாநிதி சிறிமசிறி ஹப்புஆராச்சி உட்பட பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1395872
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!
இந்த ஜனாதிபதித் தேர்தலில்... இரண்டு தமிழர்களும், இரண்டு முஸ்லீம்களும், இரண்டு பிக்குகளும், இரண்டு விக்கிரமசிங்கக்களும், இரண்டு நாமல் ராஜபக்சக்களும்.... போட்டியிடுகின்றார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் பெயர் பட்டியல்! 2024 ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர் மூன்று ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் தேர்தல் சட்டத்தின்படி அந்த ஆட்சேபனைகளை நிராகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 01. திலித் சுசந்த ஜயவீர 02. சரத் மனமேந்திர 03. அபூபக்கர் முகம்மது இன்பாஸ் 04. ஏ. எஸ். பி. லியனகே 05. பானி விஜேசிறிவர்தன 06. பிரியந்த புஸ்பகுமார விக்கிரமசிங்க 07. அஜந்தா டி சொய்சா 08. பத்தரமுல்லை சிரலதன தேரர் 09. சரத் பொன்சேகா 10. நுவன் சஞ்சீவ போபகே 11. ஹிதிஹாமிலாவின் டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத் 12. ஜனக பிரியந்த குமார ரத்நாயக்க 13. கே.கே. பியதாச 14. மையில்வாகனம் திலகராஜா 15. சிறிபால அமரசிங்க 16. பாக்கியசெல்வம் அரியநேத்திரன் 17. சரத் கீர்த்திரத்ன 18. கே. ஆனந்த குலரத்ன 19. நாமல் ராஜபக்ஷ 20. அக்மீமன தயாரதன தேரர் 21. கே.ஆர். கிஷன் 22. பொல்கம்பொல ரலாலாகே சமிந்த அனுருத்த 23. விஜயதாச ராஜபக்ச 24. அனுர சிட்னி ஜயரத்ன 25. சிறிதுங்க ஜயசூரிய 26. மஹிந்த தேவகே 27. முகமது இல்லயாஸ் 28. லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ 29. ஆண்டனி விக்டர் பெரேரா 30. கீர்த்தி விக்கிரமரத்ன 31. சஜித் பிரேமதாச 32. ரணில் விக்கிரமசிங்க 33. மரக்கலமான பிரேமசிறி 34. லலித் டி சில்வா 35. பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா 36. டி.எம். பண்டாரநாயக்கா 37. அனுரகுமார திஸாநாயக்க 38. அகம்பொடி பிரசங்க சுரங்ச அனோஜ் டி சில்வா 39. அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான https://athavannews.com/2024/1395854
-
இங்கிலாந்து - இலங்கை கிரிக்கெட் தொடர் செய்திகள்
இங்கிலாந்துக்கு தனியாக செல்லும் இலங்கை வீரர்கள். இலங்கை டெஸ்ட் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ள கமிந்து மெண்டிஸ் மற்றும் jeffrey vandersay ஆகியோர் இன்றைய தினம் இங்கிலாந்து நோக்கி செல்லவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் குழாம் கடந்த 11ஆம் திகதி இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், விசா கிடைக்காமை காரணமாக அன்றைய தினம் குறித்த இரண்டு வீரர்களும் செல்ல முடியாமல் போனது. அதேநேரம், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395815
-
யாழில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்
யாழில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டம். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இடம்பெற்றது. இதன் போது யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து இந்திய ஐனாதிபதியின் உரையை துணைத்தூதுவர் சாய் முரளி வாசித்தார். இந் நிகழ்வில் துணைத்தூதரக அதிகாரிகள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395807
-
ரணிலுக்கு கிடைத்த முக்கிய தமிழர் தரப்பின் ஆதரவு.
விக்னேஸ்வரன் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு... இன்று காலை தமிழ் பொது வேட்பாளர் அாியநேந்திரன் உடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளமை கேலிக்கூத்தாக உள்ளது. உண்மையில்... இவர்களின் செய்கை மக்களை முட்டாள்கள் ஆக்கும் செயலே அன்றி வேறில்லை. இப்படியான அரசியல் மூலம் மக்களை வெறுப்படைய செய்கின்றார்கள்.
-
கருத்து படங்கள்
- சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!
வேட்புமனு தாக்கல் செய்ய ஜனாதிபதி வருகை! ஜனாதிபதித் தோ்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்காக தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளாா். 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிழலையில் வேட்புமனுக்களைச் சமா்ப்பிப்பதற்காக தமிழ்ப் பொது வேட்பாளா் பா.அாியநேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச, எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதாச ஆகியோா் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனா். ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வேட்புமனுக்களை ஏற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1395760- மியன்மாரில் 20 இலங்கையர்கள் மீட்பு!
மியன்மாரில் 20 இலங்கையர்கள் மீட்பு! மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் சுமார் 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களில் 8 பேர் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டதுடன் மியன்மாரின் சைபர் கிரைம் வலயத்தில் மேலும் 28 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1395736- சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!
வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் – அாியநேந்திரன் – நாமல் வருகை! 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. இந்நிழலையில் வேட்புமனுக்களைச் சமா்ப்பிப்பதற்காக தமிழ்ப் பொது வேட்பாளா் பா.அாியநேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினா் நாமல் ராஜபக்ச ஆகியோா் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளனா். ராஜகிரியில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. வேட்புமனுக்களை ஏற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை சுற்றி பாலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் குறிக்கப்பட்டுள்ளனர். தற்போது பாதுகாப்பு கடமையில் அதிகளவான பொலிசார் ஈடுப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. மேலும், வேட்புமனு தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது https://athavannews.com/2024/1395746- வவுனியாவில் 2,85,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!
வவுனியாவில் 2,85,000 ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்! வவுனியா, உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழமொன்று 2,85,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ம் நாளான நேற்று(14) மாம்பழத் திருவிழா நடைபெற்றது. இதன்போது விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழமொன்றே ஆலயத்தின் வளர்ச்சி நிதிக்காக இவ்வாறு ஏலத்தில் விடப்பட்டது. இந்நிலையில் பலத்த போட்டிக்கு மத்தியில் குறித்த மாம்பழத்தை உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் 2,85,000 ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/2024/1395794- சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!
சூடு பிடித்துள்ள தேர்தல் களம்! 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுடன் நிறைவிற்கு வந்துள்ளது. இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமானது இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குறிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது பாதுகாப்பு கடமைகளில் அதிகளவான பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. மேலும், வேட்புமனு தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேலதிக ஒருமணித்தியால காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 40 வேட்பாளர்கள் நேற்று நண்பகல் 12 மணிவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர். இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது. அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்துள்ளனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்றுள்ளனர். அதேநேரம், தமிழ்ப் பொது வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரன் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பென்சேகா, மக்கள் போராட்ட முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்டோரும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது வேட்புமனுவை கையளித்தார். இதனிடையே ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவானவற்றில் வன்முறை சம்பவமொன்றும் தேர்தல் சட்டத்தை மீறிய 392 முறைப்பாடுகளும் அடங்குகின்றன. எவ்வாறாயினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வரையிலான காலப்பகுதிக்குள் பதிவாகும். தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கையானது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1395836- 78 வது சுதந்திர தினம் – வளர்ந்த பாரதம் எனும் கருப்பொருளில் கோலாகல கொண்டாட்டம்
2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவோம் -மோடி. இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘தேசத்திற்காக தியாகம் செய்த எண்ணற்ற தியாகிகளுக்கு இன்று அஞ்சலி செலுத்தும் நாள் எனவும், இந்த நாடு அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” பிரித்தானிய அரசை எதிர்த்து 40 கோடி மக்கள் ரத்தம் சிந்தி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இன்று 140 கோடி மக்களாக இருக்கும் நாம் ஒன்றுபட்டால் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கலாம். இந்த ஆண்டும், கடந்த சில ஆண்டுகளாகவும் அதிகரித்து வரும் இயற்கை பேரிடர்கள் நம்மை கவலை கொள்ள செய்கிறது. இயற்கைப் பேரிடரில் பலர் தங்கள் குடும்ப சொந்தங்களை, சொத்துக்களை இழந்துள்ளனர். தேசமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இன்று, அவர்கள் அனைவருக்கும் எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த நெருக்கடியான நேரத்தில் இந்த தேசம் அவர்களுடன் நிற்கிறது என்று நான் அவர்களுக்கு உறுதியளிக்கிறேன். உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்துக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்” இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். http://athavannews.com/2024/1395797 - சூடு பிடித்துள்ள தேர்தல் களம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.