Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வங்காளதேசத்தில் மோசமான நிலை. நாடு முழுவதும் இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். உள்ளூர் அதிகாரிகள் இடைக்கால பாணியில் அடித்துக் கொல்லப்பட்டனர், உடல்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப் படுகின்றன.
  2. வங்காளதேசத்தில் இந்துக்களின் கடை மற்றும் வீடுகளை கொள்ளை அடிக்கும் முஸ்லீம்கள்.
  3. சீனப் படை இலங்கை வந்தால்... இந்தியா கோவிக்க மாட்டுதா...? பல பில்லியன் டொலர் காசு குடுத்து, இலங்கையை மஜா பண்ணி வைத்திருந்ததெல்லாம் வீணாகி போய் விடாதா?
  4. இலங்கையில் நடக்கும் சம்பவங்களும், வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்களும் கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால்... இதன் கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எல்லாம் பெரிய அண்ணரின் வேலையோ அல்லது பக்கத்து கிரகம் பிடித்த நாட்டின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கின்றது. வங்காள தேசத்து பிரதமரின் உள்ளாடையை எடுத்தது போல்... கோத்தாவின் மனைவியின் உள்ளாடையை எடுத்த காணொளியையும் முன்பு பார்த்திருந்தேன். கண்டு பிடித்தால்... இணைத்து விடுகின்றேன். அது வரை கோத்தாவின் "ஜட்டி"யை, மீண்டும் பாருங்கள். 😂
  5. நண்பனை கண்டவுடன்... வாயெல்லாம் பல்லாக, கால் நிலத்தில் படமால் துள்ளிக் குதிக்கின்றார். 😂
  6. கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளா்கள் தொடா்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு! 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, P.W.S.K .பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே.ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரதன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளனர். இதேவேளை, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் நேற்று பிற்பகல் சுயேட்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அத்துடன், ஐக்கிய தொழிற்சங்க மையத்தின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் சுயேட்சை வேட்பாளராக நேற்று கட்டுப்பணத்தை செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அருணலு மக்கள் முன்னணி சார்பில் அதன் செயலாளர் வைத்தியர் கே.ஆர். கிஷான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1394866
  7. கோத்தா போல்... குப்பைத் தொட்டிக்குப் போன வங்கதேச பிரதமர். 😂
  8. கோத்தா போல்... குப்பைத் தொட்டிக்குப் போன வங்கதேச பிரதமர். 😂 🤣
  9. பங்களாதேஷின் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது! பங்களாதேஷில் உள்ள டாக்கா சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையம் பல மணி நேரம் மூடப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், பங்களாதேஷிற்கு வருகைத்தரும் சில விமானங்கள் இந்தியாவுக்கு திருப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது. பங்களாதேஷின் டாக்கா நகரில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2024/1394872
  10. திருமணத்திற்குப்பின் இந்திய பணக்காரர் ஆனந்த் அம்பானி மற்றும் அவரின் மனைவி ராதிகா இருவரும் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை பார்த்து ரசித்த வண்ணம் தங்கள் தேனிலைவை கொண்டாடுகின்றார்களாம். அதுவல்ல நான் கூற வந்த விடயம். உலகத்தில் அமேசன் காட்டு மூலிகை முதற்கொண்டு ஆட்டு மூ...ம் வரை இயற்கை அல்லது செயற்கை ரீதியான முடி முளைக்கும் மருந்து கண்டு பிடிக்கிறதா விளம்பரம் செய்ற கம்பனிகளே, சித்த வைத்திய சிகாமணிகளே.. ஆனந்த் அம்பானி தலையில் அரை வட்ட வடிவில் சொட்ட தெரியுதே… அதுல, ஒத்த முடிய வளர வச்சு காட்டுங்க பார்ப்போம். 😂 உங்களுக்கு Life Time settlement Confirm. Meera Ramesh
  11. மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் மனச்சாட்சி உள்ள உத்தியோகத்தர்களே! மன்னாரின் புத்திஜீவிகளே! மன்னார் மக்களின் வாக்குகளைப்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களே, அமைச்சர்களே! மன்னாரின் மதத்தலைவர்களே! அரச அதிகாரிகளே! அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளே! சட்டத்துறை வல்லுநர்களே! காவல்துறை தமிழ் அதிகாரிகளே! சமூக சேவையாளர்களே! சமூக ஊடகப் போராளிகளே! மன்னாரைச் சோர்ந்த சமூக அக்கறையுள்ள புலம்பெயர் தேசத்தவர்களே! இந்த நாதியற்ற ஜீவன்களுக்கு நாம் என்ன பதில் வழங்கப்போகின்றோம்? இல்லை மட்டக்களப்பில் இருந்து இன்னுமொரு அர்ச்சுனா வந்து நியாயம் கேட்கட்டும் என்று காத்திருக்கப் போகின்றோமா? நம் ஒவ்வொருவரிற்கும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது. ஒரு அநீதி இழைக்கப்படும் பொழுது அதை வேடிக்கை பார்த்து மொளனியாக இருப்பவன் அநீதியை இழைத்தவனைவிட மோசமானவன் ஆகின்றான். நமது குடும்பத்தில் இவ்வாறு நடந்திருந்தால்? நம் எதிர்வினை எவ்வாறு அமைந்திருக்கும். இதுவரை இலங்கையில் குறிப்பாக வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் நடந்த எந்த ஒரு மருத்துவ உதாசீன கொலைகளிற்கும் நீதி வழங்கப்பட்டுள்ளதா? குற்றவாளியை அவனது தாய் புலன் விசாரணை செய்தால் நியாயமான தீர்ப்பு கிடைக்குமா? ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டு அதற்கு சரியான தண்டனை வழங்கப்படுமானல் மீண்டும் அதே குற்றங்கள் நிகழ்வதை தடுக்கலாம். அநீதிகளுக்கு நியாயம் கேட்பது என்பது காழ்ப்புணர்ச்சியினால் அல்ல அக்குற்றங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்கே. அன்பார்ந்த வைத்திய துறைசார் உறவுகளே! ஒருவன் உங்களை கொலை செய்ய வருகின்றான் நீங்கள் கடவுளே! காப்பாற்று என்று கோவிலுக்குள் ஓடுகின்றீர்கள் அந்த தெய்வமே உஙகளுக்கு ஈட்டியால் குத்தினால் உங்களுக்கு எவ்வாறான உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு தான் உங்கள் மருத்துவ உதாசீனத்தின் போதும் எமக்கும் ஏற்படுகின்றது. வைத்தியத்துறை புனிதமானது அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை எனினும் ஒருசிலரின் தான்தோற்றித்தனமான செயற்பாடுகளினால் அர்ப்பணிப்பான சேவையாளர்கள் பாதிக்கப்பட கூடாது. Rex Leon
  12. ஒரு லெமன் ஜூஸ் குடுங்க. ~ 25 ரூபா குடுப்பா... நேத்தும் இங்கதான் குடிச்சேன். 20 ரூவாதான் வாங்குனாங்க... ~அப்படியா.. அந்த 5 ரூவாயும் சேர்த்து 30 ரூபாவா கொடுப்பா..! 😂😂😂
  13. தற்செயலாக, ரணில் தேர்தலில் வென்றால்.... கிடைக்க இருக்கும் ஒரு அமைச்சர் பதவிக்காக, செம்மறி ஆடு, பெரிய திட்டம் போடுகின்றது. 😃 சம்பந்தர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து... காலத்தை வீணடித்த மாதிரி, செம்மறி ஆடும் ஆயத்தப் படுத்துகின்றது. 😂 "சோழியன் குடும்பி சு(ம்)மா ஆடாது." 🤣
  14. கோத்தபாயாவுக்கு ஏற்பட்ட நிலைமை… இந்த மனிசிக்கும் ஏற்பட்டு விட்டது. 😂 கெட்டவர்களுடன் சகவாசம் வைத்தால்… இப்பிடித்தான் நடக்கும் போலை. 🤣
  15. நான் ரணிலுக்கு வாக்கு போடச் சொல்லி சொல்லவில்லை. சுமந்திரன்தான் ரணிலுக்கு வாக்குப் போடச் சொல்லி சொல்லுகிறார். இப்போ… யார் செம்மறி ஆடு என்று தெரிகிறதா. 🤣
  16. சோறு வடிச்சதுக்கு அப்புறம் நாங்க ஏன்(டா) சப்பாத்தி சுடணு ம்..? 🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️ 😂😂😂😂
  17. 1. ஆண்ட்ராய்டு வேண்டாம் என்றது நோக்கியா 2. கூகுள் வேண்டாம் என்றது யாகூ 3. மின்னணு கேமராக்களை ஒதுக்கியது கோடக். இன்று, நோக்கியா, யாகூ,கோடக் நிலைமை என்ன? படிப்பினை மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் ஒதுக்கித் தள்ளப்படுவீர்கள். 1. சந்தைக்குப் புதிதாக வந்த whatsapp instagram ஐ முகநூல் தன் வசப்படுத்திக் கொண்டது 2. தென்கிழக்கு ஆசியாவில் ஊபர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது கிராப் Grab. படிப்பினை போட்டியாளர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது வலிமையைப் பெருக்கும்; வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 1. Colonel Sanders 65 வயதில் கென்டகி ஃபிரைட் சிக்கன் நிறுவனத்தைத் தொடங்கினார். KFC. 2. Jack Ma வுக்கு KFC யில் வேலை கிடைக்கவில்லை. Alibaba நிறுவனத்தைத் தொடங்கினார். சீனாவின் மிகப்பெரும் பணக்காரர் ஆனார். 55 வயதில் ஓய்வு பெற்றார். படிப்பினை வயது ஒரு பொருட்டு அல்ல. தொடர்ந்து முயற்சிப்பவர்களே வெற்றி பெறுகிறார்கள். உழைப்பே உயர்வு தரும். யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். காலம் பொன் போன்றது. தோல்வியே, வெற்றிக்குப் படிக்கட்டு. Arunagiri Sankarankovil
  18. மன்னார் பெண்ணின் மரணம் – உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கை! மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்த பினனர், உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத்.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண்ணான மரியராஜ் சிந்துஜா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசமந்த போக்குடன் செயற்பட்டதாக பெண்ணின் தாயார் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு உரிய தரப்பினருடன் கலந்துரையாடியிருந்தார். இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூறை ஏற்படுத்திய வைத்தியர் அர்ஜுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். https://athavannews.com/2024/1394781
  19. சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம்! இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்படும் என எதிர்பார்ப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு E-விசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை அமுல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அதற்கமைய ஆகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைய முறையின் ஊடாக விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக விசா பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்தியவர்களுக்கு அந்த பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ON ARRIVAL விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1394793
  20. தமிழ்ப் பொதுவேட்பாளர் யார்? – வவுனியாவில் இன்று தீர்மானம்! ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியப் பொதுக்கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்படும் தமிழ் பொதுவேட்பாளர் யார் என்பது குறித்து இன்று வவுனியாவில் தீர்மானிக்கப்படவுள்ளது. இந்நிலையில், பொதுவேட்பாளர் பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரநேரு சந்திரகாந்தன் மற்றும் அரியநேத்திரன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் கே.வி.தவராசா மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவு என்று ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பொதுச்சபையின் 7 பிரதிநிதிகளும் 7 அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளும் கூட்டிணைந்து இந்த தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை ஸ்தாபித்துள்ளனர். எனினும், ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படும் நபரை தெரிவு செய்வதற்காக நீண்ட பட்டியலொன்று தயார் செய்யப்பட்ட நிலையில் தற்போது சந்திரநேரு சந்திரகாந்தன், தவராசா, அரியநேத்திரன் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் இறுதிப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கில் இருந்து அரசியல் சாராத ஒருவரை களமிறக்குவதற்கு முயற்சிக்கப்பட்டபோதும் அது பலனளிக்காத நிலையில் தற்போது அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாகவும் இணக்கப்பாடுகள் எட்டப்படவில்லை. இந்த நிலையில் எந்தவொரு தரப்பினரும் பொருந்தாத நிலையில் இறுதியாக சி.வி. விக்னேஸ்வரனை பரிசீலிப்பதாகவும் குறிப்பாக அவர் இரண்டாவது வாக்கு தொடர்பில் அதிகமாக பிரஸ்தாபித்து வருவதால் அவருடைய பெயரை இறுதி நிலையில் வைப்பதற்கு பொதுக்கட்டமைப்பின் சிவில் தரப்பினர் தீர்மானித்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1394799
  21. விருப்பு வாக்கினைப் பயன்படுத்துவது தமிழா்களின் ஜனநாயக உரிமை – சி.வி.விக்னேஸ்வரன்! விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை என்பதால் குறித்த ஒரு நபருக்கே வாக்களிக்குமாறு தான் எந்தத் தருணத்திலும் கூறவில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளாா். தமிழ் பொது வேட்பாளா் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். அத்துடன், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பது தொடர்பில் தான் தெரிவித்திருந்த கருத்துக்கள் பற்றி தவறான பிரச்சாரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேலும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தும் போது, ஒட்டு மொத்த தமிழ் மக்களும் அந்த வேட்பாளருக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் தொிவித்துள்ளாா். ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் குறித்தே தேர்தலைப் பிற்போட்டால் நாட்டுக்கு நன்மை பயக்கும் என தான் முன்னா் கூறியிருந்ததாகவும், எந்த ஒரு சிங்கள வேட்பாளரினாலும் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற முடியாமல் போகும் பட்சத்தில் நாட்டின் அரசியல் நிலை கவலைக்கிடமாகலாம் என்றும் சி.வி.விக்னேஸ்வரன் தொிவித்தாா். விருப்பு வாக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கு உட்பட்ட விடயம் என்பதால், இது தொடர்பில் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினா் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1394797 @புலவர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.