Everything posted by தமிழ் சிறி
-
ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
சந்தேகப்படும்படியான சோலிங்கன் தாக்குதலாளி பொலிஸாரிடம் சரணடைந்தார். சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Nordrhein-Westfalens உள்துறை மந்திரி ஹெர்பர்ட் ரியுல் (CDU) ARD இன் "Tagesthemen" தொலைக்காட்சிக்கு இதை அறிவித்தார். மற்றும் நாள் முழுவதும் தேடப்பட்ட ஒரு "உண்மையில் சந்தேகத்திற்குரியவர்" பற்றி பேசினார். "Spiegel" மற்றும் "Bild" செய்தித்தாளின் தகவலின்படி, 26 வயதான Syrer Issa al H. சனிக்கிழமை மாலை "இன்னும் இரத்த வெள்ளத்தில்" சோலிங்கன் பொலிஸ் ரோந்து அதிகாரிகளை அணுகி... "நான் தான், நீங்கள் தேடுகிற ஆள்" என கூறினார். சந்தேகத்திற்குரிய கொலையாளி சிரியாவின், டெய்ர் அல்-சோர் நகரில் பிறந்தார். அவர் டிசம்பர் 2022 இறுதியில் ஜெர்மனிக்கு வந்து Bielefeld நகரத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஒரு வருடம் கழித்து, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகள் அடிக்கடி பெறும் துணை பாதுகாப்பு என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு சன்னி முஸ்லீம் மற்றும் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியா என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லை. https://www.morgenpost.de/panorama/article407086955/anschlag-stadtfest-solingen-news-aktuell-messerangriff-taeter-flucht.html
-
பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
பண்டாரவன்னியனின் 221 ஆவது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு! வன்னி ராஜ்ஜியத்தின் இறுதி மன்னனான பண்டார வன்னியனின் 221 வது ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகர சபை மற்றும் பண்டார வன்னியன் விழா குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வவுனியா மாவட்ட செயலத்துக்கு முன்பாக அமைந்துள்ள பண்டாரவன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத் சந்திர, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரதீஸ்வரன், நகரசபை செயலாளர் அ.பாலகிருபன் மற்றும் தமிழ்மணி அகளங்கன், முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397034
-
கருத்து படங்கள்
- ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்றுள்ள அதி முக்கிய செய்தி .
- மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
மன்னார் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு. மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். 26 வயதுடைய எஸ்.சுதன் என்பவரே வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் நேற்று இரவு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மன்னார் வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் சிந்துஜா, குழந்தை பெற்ற நிலையில் சில நாட்களின் பின்னர் இரத்த போக்கால் மீண்டும் மன்னார் வைத்தியசாலைக்கு சென்ற போது அங்கு வைத்தியசாலை ஊழியர்களால் கவனிக்கப்படாத நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து அவருடைய கணவர் தனது சொந்த ஊரான வவுனியா பனிக்கர் புளியங்குளத்தில் வசித்து வந்த நிலையில் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1397031- இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது- அரியநேத்திரன். நாட்டில் நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கியிருந்தால் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார செயற்பாடுகளின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் பெற்றே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பியுள்ளதாகவும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார் https://athavannews.com/2024/1396968- ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
சோலிங்கன் (Solingen) நகரத்திற்குப் போய்த்தான் கத்தி வாங்க வேண்டும் என்று இல்லை. ஜேர்மனி முழுக்க உள்ள பெரிய கடைகளில் இந்தக் கத்தியும் இருக்கும். கத்தியில்.. அதன் முத்திரை குத்தப் பட்டு, Solingen என்றும் இருக்கும். மேலே... அங்கு கத்தி தயாரிக்கும் நிறுவனங்களின் முத்திரைகள் (Logo) சில உள்ளன. ஆனால்... கத்தியை விமானத்தில் கொண்டு வரும் போது... சிலவேளை சிக்கலை தரலாம்.- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
ஏராளன்... இந்தப் பதிவை, @Kapithanக்கு காட்டிப் போடாதேங்கோ. 😂 பிறகு அந்தாள்... நித்திரை இல்லாமல் தவிக்கும். 🤣- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
சுமந்திரன் இந்தக் கருத்துக் கணிப்பை பார்த்தால்.... அரியநேந்திரன் 18% வாக்கு எடுத்ததை பார்த்து, மாரடைப்பு வந்தாலும், வந்து விடும். 😂 🤣- ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
Solingen நகரம் கத்தி தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. அங்கு தயாரிக்கப் படும் கத்தி, கத்தரிக்கோல் போன்ற ஆயுதங்கள் சற்று விலை அதிகம் என்றாலும்.... அதன் பாவனையில் திருப்தியான தரம் இருக்கும். அங்கு வாங்கும் கத்திகள் தலைமுறை தாண்டியும் பாவிக்கக் கூடிய நிலையிலேயே இருக்கும் என்பது சிறப்பு. இந்தக் கத்திகளின் சிறப்பை அறிந்த அநேகமானவர்கள் ஜேர்மனிக்கு வரும் போது... இங்கிருந்து ஒரு கத்தியையாவது வாங்கிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். கத்திக்குப் பெயர் போன நகரத்தின் 650´வது ஆண்டு விழாவில் கத்திக் குத்து நடந்தமை சோகமான விடயம்.- நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஆமா, இதெல்லாம்.... கருத்துக் கணிப்பில் சொல்லிப் போட்டு செய்யிற விஷயம் இல்லை. 😂 🤣- யாழில் மீளுருவாக்கம் செய்யப்படும் 400 வருடங்கள் பழமையான சிவன் ஆலயம்..!
கொஞ்ச நாளாய்.. ஆளின்ரை பேச்சு மூச்சை காணவில்லை. இந்தியாவில் இருந்து, எஜமானர் சம்பளம் கொடுக்கவில்லையோ. இல்லாவிடில்... சனம், கழுவி ஊத்தினதில் அடங்கி விட்டாரோ. 😂- நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1397015- தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் -இன்பராசா
தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் -இன்பராசா. தமிழர்கள் சிலின்டர் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் தவைலர் இன்பராசா தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தாங்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்த போது தமது கோரிக்களை ஆழ்மனதுடன் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி நிச்சயமாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தன் பிரகாரம் தாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ,வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் வீணாக போராளிகளை அழைத்து விசாரனைகள் என்ற ரீதியில் கைதுகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வடக்கு கிழக்கில் உள்ள முன்னால் போராளிகளுக்கு தங்களூடாக உதவித்திட்டங்கள் மற்றும் பொருளாதார ரீதியான செயல்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தனர் எனவும் தெரிவித்தார். இதேவேளை கடந்த காலங்களில் ரணில் ஒரு தந்திரவாதி என தெரிந்து கொண்டு தான் அவருடன் பேச்சுவார்த்தைக்கு அன்ரன் பாலசிங்கம் சென்றிருந்தார். எனவே, தாமும் அந்த ரீதியிலேயே அவருக்கு ஆதரவை கொடுப்பதற்கு முன் வந்துள்ளதாகவும், தமிழ் மக்கள் சிலின்டர் சின்னத்துக்கு மாத்திரம் புள்ளடியிட்டு ரணில் விக்கிரமசிங்க அவர்களை வெற்றியடைய வைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். https://athavannews.com/2024/1397002- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர்.
இந்தப் பெட்டி... பால் தேத்தண்ணி நிறத்தில், நல்ல வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது. 😂- தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் : நிறம் என்ன தெரியுமா?
உதயநிதியை முதலமைச்சர் ஆக்க முதல், விஜய் கட்சி தொடங்கினால்... 200 ரூபாய் உடன்பிறப்புகள் பதற்றம் அடையத்தானே செய்வார்கள்.- ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
ஜேர்மனியில் நடந்த ... இந்த கத்திக்குத்து, எங்களுக்கு தெரிய முதல்.. வட்டுக்கோட்டையில் உள்ள @ஏராளன்க்கு தெரிஞ்சிட்டுது. 😂- அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய முக்கிய சுயேட்சை வேட்பாளர்.
போட்டியில் இருந்திருந்தால்.... பெட்டி, நீங்கள் கொடுப்பீர்களா. 😂 🤣- வேட்பாளர்கள் தொடர்பான ஆய்வு நடவடிக்கை – முடிவுகள் தொிவிப்பது என்ன?
கருத்துக்கணிப்புக்களை நம்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணைக்குழு. எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினர் மேற்கொண்டுள்ள கருத்துக்கணிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, கருத்துக்கணிப்புகளை வைத்து ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது கருத்தை வாக்காளர்கள் மாற்ற வேண்டிய அவசியமில்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1396989- பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம்
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம். பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுமார் 1 இலட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பழனியில், உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழனியே விழாக்கோலம் பூண்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396958- கப்டன் பிறந்தநாள் – 71 நிமிடங்களில் 71 டாட்டூ.
கப்டன் பிறந்தநாள் – 71 நிமிடங்களில் 71 டாட்டூ. விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்று நிறைவடைவதை ஒட்டி 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்வு நடைபெற உள்ளது. 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டூ போட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட உள்ளது. கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என 71 பேருக்கு 71 டாட்டூ கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடத்தில் டாட்டூ போடுகின்றனர். டாட்டூ போடும் நிகழ்ச்சியை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1396985- ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் - மூவர் பலி
நகர திருவிழாவிற்கு வந்தவர்களை முன்பின் தெரியாத ஒரு குற்றவாளி கத்தியால் சரமாரியாக குத்தியதில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். கத்திக்குத்துகள் பாதிக்கப்பட்டவர்களின் கழுத்தை இலக்காகக் கொண்டவை என்பதால், தற்போதைய தகவல்களின் அடிப்படையில் இது ஒரு வெறித்தனமாக தாக்குதல். குற்றவாளி தப்பியோடி இருக்கிறார். இன்னும் துல்லியமான தனிப்பட்ட விளக்கம் கிடைக்கவில்லை. குற்றத்திற்கான நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரம் தோன்றி 650வது ஆண்டை குறிக்கும் திருவிழாவில் இது நடந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்கள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என கூறப்படுகிறது. வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவின் பிரதமர் Wüst அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இச்செயல் நாட்டின் இதயத்தை தாக்கியது. Solingen இன் மேயர் Kurzbach அதிர்ச்சி, திகில் மற்றும் பெரும் சோகம் பற்றி பேசினார். உள்துறை மந்திரி ரியுல் அன்றிரவு குற்றம் நடந்த இடத்திற்கு வந்து நிலைமையை கண்டறிந்து கொண்டார். https://www.deutschlandfunk.de/polizei-geht-von-einzeltaeter-aus-110.html மேலும் எட்டுப் பேர் கத்திக் குத்து தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும், அதில் ஐந்து பேர் பெரும் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. 👇 காணொளி. 👇 https://www.tagesschau.de/inland/solingen-attacke-100.html- கருத்து படங்கள்
- 100 புத்தகங்களின் உலக சாதனை விழா இலங்கையில்
100 புத்தகங்களின் உலக சாதனை விழா இலங்கையில். கவிமலர்கள் பைந்தமிழ்ச்சங்கம் நடாத்தும் இலங்கை கிளையின் உலகசாதனை புத்தக வெளியீட்டு நிகழ்வு இம்மாதம் 25.08.2024 ஆம் திகதி பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணி வரை வெகு விமர்சையாக இடம்பெற இருக்கின்றது. இதன்போது இலங்கை இந்தியா உட்பட நாடுகள் பூராகவும் உள்ள நூற்றுக்கும் அதிகமான படைப்பாளிகளின் படைப்புக்கள் வெளிவர இருக்கின்றன. இதில் உலக சாதனைக்காக புதிய வெளியீடாக 100 புத்தகங்கள் வெளிவர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு தொகுப்பு நூல் ஒன்றும் வெளியீடு செய்து வைக்கப்படுவதுடன் பங்குபற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் கொடுத்து கௌரவிக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக திட்ட அபிவிருத்தி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கலந்து கொள்வதோடு கௌரவ அதிதிகளாக பிரம்ம ஸ்ரீ நாகராஜ குருக்கள் (கதிரேசன் கோவில்) S. ராஜேந்திரன் அறங்காவலர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக இந்திய மண்ணைச் சேர்ந்த முனைவர் எஸ் யாசின் ஷரீப் மனித உரிமைகள் கழகமும், மாநில துணை அமைப்பாளரும், (தெற்கு) திரு ஈகை கா கருணாநிதி சென்னை தென் மாவட்ட பிரதிநிதி தி.மு.க முனைவர், கவிஞர். வீரை மைதீன் (திருநெல்வேலி) அவர்களும் வருகை தந்து சிறப்பிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1396946- மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை – சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா?
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை – சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? மக்கள்தொகை கணக்கெடுப்பானது தாமதப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் மத்திய அரசு அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். பீகார் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ஏற்கெனவே சாதிவாரி கணக்கீடு நடத்தப்பட்டுள்ளன. பீகார் மாநில புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில், கர்நாடக மாநில புள்ளி விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் தெலுங்கானா, தமிழ்நாடு, மேற்குவங்கம், மற்றும் கேரளா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கீடு தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுக இந்த கோரிக்கையை ஆதரித்து வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கீடுகளில், நாடு முழுவதும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடிகள் மக்கள்தொகை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவில் உள்ள பல்வேறு சமுதாயத்தினரின் விவரங்கள் தனித்தனியே சேகரிக்கப்படவில்லை. இதேபோல பல பிரிவினர்களின் மக்கள்தொகை புள்ளி விவரங்களும் சேகரிக்கப்படவில்லை. அனைத்து சமுதாயங்களுக்கும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டால் மட்டுமே இடஒதுக்கீடு தொடர்பான புதிய முடிவுகள் சட்டரீதியாக நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என கருதப்படுகிறது. 2011 ஆம் வருடத்திலேயே மன்மோகன் சிங் அரசு சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரித்தது, ஆனால் அந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை. அந்தப் புள்ளி விவரங்களில் பல குழப்பங்கள் உள்ளதாக 2021 ஆம் வருடத்தில் நரேந்திர மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஆகவே உள்ஒதுக்கீடு போன்ற முடிவுகளை மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசால் எடுக்கப்பட்டாலும், நீதிமன்றத்தில் அத்தகைய முடிவுகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டால், மக்கள்தொகை கணக்கீடு இல்லாதது அத்தகைய இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக அமையும் என கருதப்படுவாதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தள்ளனர். https://athavannews.com/2024/1396887 - ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் டெல்லிக்கு சென்றுள்ள அதி முக்கிய செய்தி .
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.