Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இலங்கைத் திருநாட்டின் பெருமைகள். தங்கமகள் மற்றும் தங்கமகன் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கத்தை வென்று வந்த முஸ்லீம் பெண்ணும், கானா நாட்டில் 50 கிலோ தங்கம் வாங்க, இரண்டு மில்லியன் அமெரிக்க டொலரை கொடுத்து ஏமாந்த முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் ஹிஸ்புல்லாவும். Rooban Mahan
  2. 🔴 கடுமையாக ஏமாற்றப்பட்டிருக்கும் ஹிஸ்புல்லா! கானா நாட்டின், அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. இது குறித்து கானா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட பதினொருவருக்கும் தலா 500,000 கானா செடிகள் (சுமார் $33,000) ஜாமீன் தொகை விதிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் 2023-ஆம் ஆண்டில் சதி செய்து, அதிக அளவிலான தங்கத்தை வழங்க முடியும் என்று கூறி, இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹிஸ்புல்லாவை மோசடி செய்ததாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். பணத்தைப் பெற்ற பிறகு, அந்த குழுவினர் தங்கத்தை வழங்கத் தவறியதாகவும் குறிப்பிடப்படுகிறது. தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர்கள் அக்ராவின் வெய்ஜா எஸ்.சி.சி பகுதியில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதிகாரிகள் தங்கமாக இருக்கலாம் என்று நம்பப்படும் இரண்டு மஞ்சள் உலோகப் பொருட்களைக் கைப்பற்றினர். அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க ஆய்வகச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றம் செய்யச் சதி செய்தல், பொய்ப் பிரதிநிதித்துவத்தின் மூலம் மோசடி செய்தல் மற்றும் மோசடி செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் மேலும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. Vaanam.lk
  3. இந்தியாவில்... கைது செய்யப் படும் இலங்கைத் தமிழர் பலருக்கும் விடுதலைப் புலி முத்திரையை குத்துவது, இந்தியாவை... பிடித்த ஒரு வியாதி. அப்படி குத்தும் போதுதான்... விடுதலைப்புலிகளால் இன்னும் இந்தியாவிற்கு ஆபத்து என்று சர்வதேசத்திற்கு காட்டவும், விடுதலைப் புலிகளை மீதான தடையை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கவும் அவர்களுக்கு உதவும். இப்படி பலர்... புலி முத்திரை குத்தப் பட்டு தமது வாழ்க்கையை இழந்த ஈழத்தமிழர் ஏராளம். காந்தி வேசம் போட்டுக் கொண்டு... உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கும் நேர்மை அற்ற சகுனி நாடுதான் இந்தியா. ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் பட்டதாக கூறப் பட்டு... 30 வருடங்களுக்கு மேலாக இந்திய சிறையில் இருந்து மரணித்த சாந்தன் கூட... ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப் படாத ஒருவர் தான். அந்நேரம் வெளிநாடு போக இந்தியாவிற்கு போனவரை ராஜீவ் கொலையில் முடிச்சுப் போட்டு சிறையில் அடைத்த நயவஞ்சகர்கள். சாந்தன் என்ற பெயரில் உள்ள வேறு ஒருவரை கைது செய்ய வேண்டிய இடத்தில், அப்பாவியான இவரை கைது செய்து... கேடு கெட்ட வேலை செய்த நாடு தான் இந்தியா. இந்த நாடு... எப்ப சுக்கு நூறாக உடையுதோ... அன்றுதான் ஈழத்தமிழனுக்கு நிம்மதி.
  4. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை விமானத்தில் தாக்கும் பயணி; வைரலாகும் காணொளி! கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL266 இல், விமான ஊழியர்கள் தங்களைத் தாக்கியதாகக் கூறப்படும் ஒரு சவுதி அரேபிய பயணியைத் தடுக்க முயற்சிக்கும் பதட்டமான சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் பயணிகள் ஆசனப் பட்டிகளை அணிந்துகொண்டு இருக்க வேண்டும். ஆனால் குறித்த சவுதி நாட்டவர், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றதன் விளைவாக இந்த வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விமான நிலைய பொலிஸார் உறுதிப்படுத்தினர். https://athavannews.com/2025/1451471
  5. இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று இலங்கையர்கள் விமான நிலையத்தில் கைது! குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் நேற்று (28) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சந்தேக நபர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கும் அங்கு வசிப்பதற்கும் எந்த செல்லுபடியாகும் பயண ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது. இலங்கையில் மூன்று சந்தேக நபர்கள் மீதும் தற்போது பல குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்தன. இதனிடையே, வல்வெட்டித்துறையில் அண்மையில் விடுதலைப் புலிகள் அமைப்பால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படும் வெடிபொருட்களுடன் சந்தேக நபர்கள் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451489
  6. பிரேசிலில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை - 64 பேர் உயிரிழப்பு! போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் மோதல் முற்றியுள்ளது. இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது. பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார். இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1451511
  7. டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி! பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1451457
  8. கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்! புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி வாடியில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் இறந்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். அதன் பின்னர், மீன்பிடி வாடியிலிருந்த மற்றொரு நபரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர். சம்பவம் தொட்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451439
  9. செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்கும் இரண்டு சோதனையை நடத்தியது. இருந்தாலும் மழை பொழியவில்லை. டில்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்பின‍ை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சமயத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த டில்லி அமைச்சரவை முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக மே 7 அன்று டெல்லி அமைச்சரவை மேக விதைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஐந்து சோதனைகளுக்கு ₹3.21 கோடி ஒதுக்கியது – ஒரு முயற்சிக்கு சுமார் ₹64 லட்சம். கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து திட்டமிடப்பட்ட இந்த சோதனைகள் ஆரம்பத்தில் மே மாத இறுதியில் மற்றும் ஜூன் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டன. ஆனால் இரண்டு ஒத்திவைப்புகளை எதிர்கொண்டன: இந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளுக்கும் மொத்தம் தோராயமாக ₹1.28 கோடி செலவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. மேக விதைப்பு என்றால் என்ன? மேக விதைப்பு (Cloud Seeding) என்பது — மழை பெய்யும் அளவை அதிகரிக்க செயற்கையாக மேகங்களில் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு வானிலை மாற்றுதல் தொழில்நுட்பம் ஆகும். இதில் பொதுவாக வெள்ளி அயோடைடு (Silver Iodide), சோடியம் குளோரைடு (உப்பு), அல்லது டிரை ஐஸ் (Dry Ice – கார்பன் டைஆக்சைடு உறைவு வடிவம்) போன்ற பொருட்கள் விமானங்கள் அல்லது ராக்கெட் மூலம் மேகங்களுக்குள் விடப்படுகின்றன. இவ்வித பொருட்கள் மேகங்களுக்குள் உள்ள நீராவியை துகள்களாக ஒட்டச் செய்து, மழைத்துளிகள் உருவாக வழி செய்கின்றன. அதன் விளைவாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். https://athavannews.com/2025/1451447
  10. ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"! இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்கிழக்கு மற்றும் மத்திய பஹாமாஸுக்கும் சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. பெர்முடாவிற்கு சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு, மெலிசா மணிக்கு 130 மைல் (215 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, வடகிழக்கில் 9 மைல் (15 கிமீ) வேகத்தில் நகர்ந்தது. இந்த சூறாவளி கியூபாவின் குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 110 மைல் (175 கிலோமீட்டர்) தொலைவில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451468
  11. சென்ற தலைமுறை.... மொத்த தாலிக்கொடி கட்டி கெத்தாக வாழ்ந்தார்கள். பாவம்... வாற தலைமுறை, மஞ்சள் கயிறுதான் தஞ்சம் போலை. 😂
  12. முஸ்லீம் தாதிகளுக்கு சீருடையில் விலக்கு அளிக்கப் பட்டமைக்கு சில பிக்குகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அரசு அறிவித்த சீருடையில் வேலை செய்ய விரும்பாவிடில்… வேறு வேலையை தேடச் சொல்லி உள்ளார்கள்.
  13. ஹிஸ்புல்லாவிடம் அந்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் எப்படி வந்து என்று, லஞ்ச ஊழல் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  14. பத்து நாளில் முதல் முறையாக, கொழும்பு புறக்கோட்டை சந்தையில் 22 காரட் தங்கம் தற்போது ரூ. 298,000க்கு விற்கப்படுகிறது. இது அக்டோபர் 17 அன்று பதிவான ரூ. 379,200 விலையுடன் ஒப்பிடும்போது ரூ. 81,200 குறைவாகும். The Morning
  15. தங்கத்தின் விலை மீண்டும் சரிவு; 22 கரட் 298,000 ரூபா! உலக சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்களுக்கு கீழே தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (28) உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாகக் குறைந்தது. புவிசார் அரசியல் பதட்டங்கள் தணிந்து வருவதால், தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், உலகளவில் தங்கத்தின் விலை குறையும் போக்கு ஏற்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,381.21 என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் கடந்த வாரம் 3.2 சதவீதம் பின்வாங்கி திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000 க்கும் கீழே சரிந்தது. சற்று முன்னர் வரையான சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைவாக, ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1.87% சரிந்து 3,930.14 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேநேரம் வெள்ளி 46.41 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அமெரிக்க-சீன வர்த்தக பதட்டங்கள் தளவர்வதற்கான அறிகுறிகளும் தங்கத்தின் பாதுகாப்பான புகலிட ஈர்ப்பைக் குறைத்தன. ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் சீனாவின் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்க கட்டணங்களை இடைநிறுத்துவதற்கும் சீனாவின் அரிய-பூமி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஒத்திவைப்பதற்கும் ஒரு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை கோடிட்டுக் காட்டிய பின்னர், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையிலான வர்த்தக பதட்டங்களைத் தணிப்பதற்கான அறிகுறிகள் எழுந்தன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வியாழக்கிழமை (30) சந்தித்து மேலும் வர்த்தக விதிமுறைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த வாரம் பணவியல் கொள்கையை எளிதாக்க நடவடிக்கை எடுக்கும் என்ற வர்த்தகர்கள் நம்பிக்கையும் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. பல ஆய்வாளர்கள் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், அண்மைய விலை ஏற்றத்தின் நிலைத்தன்மை குறித்து சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். கேபிடல் எகனாமிக்ஸின் ஆய்வாளர்கள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,500 அமெரிக்க டொலர்களாக தங்கள் கணிப்பை திருத்தியுள்ளனர். இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 320,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 298,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1451391
  16. வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை! வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினரால் நேற்று மலை(26) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் மஹரகம, நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை, துபாயிலிருந்து பெறப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் , கொலைக்கு முன்னர் அந்தப் பணம் கொலையாளிக்கு ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் விசாரணைகள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன. இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட 7 பேர் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்தக் கொலை தொடர்பான விசாரணை பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதற்காக, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, கொழும்பு மாவட்டம் பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணம் தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், குற்ற அறிக்கைகள் பிரிவின் பணிப்பாளர் மற்றும் தெற்கு அதிவேகச் நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவு பணிப்பாளர் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர். https://athavannews.com/2025/1451256
  17. புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை! எட்டு ஆண்களில் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மொத்தம் 58,218 ஆண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டகாக கண்டறியப்பட்டனர். இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த நோய் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் ஒரு நாளுக்குள் நோயறிதலை மேற்கொள்ள இங்கிலாந்தில் புதிய சோதனை முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, MRI ஸ்கேன்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சில நிமிடங்களில் உடலில் இருக்கும் சிக்கலான படையணிகளைக் கண்டறிய கூடிய முறைகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் புற்றுநோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாக ஸ்கேன் முடிவு செய்தால், அது முன்னுரிமை மதிப்பாய்வுக்காக ஒரு கதிரியக்க நிபுணருக்கு அனுப்பப்படுவதுடன் அதே நாளில் நோயாளி செல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யப்படுவார். இந்த தொழில்நுட்பம் ஆரம்பத்தில் 15 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்படும் என்றும், இந்த அணுகுமுறை ஆண்களின் நோய் குறித்த காத்திருப்பைக் குறைக்கும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் தற்போது, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் தங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த நோயறிதல் முறையினையும் செல் பரிசோதனையையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1451385
  18. இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை! இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது. இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது. உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்துமாறு பிரதமர் கியர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அகதிகளை விடுதிகளில் தங்க வைக்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இதேவேளை, விடுதிகள் வழியாக தங்குமிடம் வழங்கும் திட்டம், அரசுக்கு பல பில்லியன் பவுண்டுகள் இழப்பை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451369
  19. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ரியாத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் போது விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் 28 வயதான சவுதி நாட்டவர், அவர் மலேசியாவிற்கு தனது பயணத்தைத் தொடர திட்டமிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில், அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். இருப்பினும், சந்தேக நபர் இந்த விதிமுறையை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றார், இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் சுற்றுலா பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர் இன்று (27) கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1451228
  20. வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்! அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன. இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க வரிகளை அதிகரிப்பதையும் சீன அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் இடைநிறுத்துவதையும் நோக்காக்க கொண்டுள்ளது. கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த பேச்சுவார்த்தைகள், நவம்பர் 1 முதல் சீன இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் 100% வரிகளின் அச்சுறுத்தலை நீக்கியதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் குறித்து மிகவும் கவனமாக இருந்தனர், மேலும் சந்திப்புகளின் முடிவுகள் குறித்து எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (30) ட்ரம்பும் ஜியும் சந்தித்து, விதிமுறைகளில் கையெழுத்திட உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப்-ஜி பேச்சுவார்த்தைகளை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சந்திப்பார்கள் என்பதை சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. https://athavannews.com/2025/1451204
  21. Cow boy அப்படித்தான். மற்றவனை தட்டிச் சுத்தித்தான் வாழ்க்கை நடத்துவார்கள். 😂
  22. வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி! வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் மேலும் ஒரு சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரம் – கெகிராவ பொலிஸ் பிரிவின் 50 வீட்டு தொகுதியில், இக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்டனர். இதன்போது, பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் சந்தேகநபர் ஒருவர் தப்பி சென்றுள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்யவே பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார். இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) – 071 859 8888 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011 233 7162 / 071 859 2087 இதேவேளை, குறித்த வீட்டில் சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1451164
  23. வெலிகம பிரதேசசபை தலைவர் கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது! வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸாரால் காலியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை பெண் ஒருவர் உள்ளடங்கலாக நான்கு சந்தேகேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, உயிரிழந்த லசந்த விக்ரமசேகரவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறுகின்றன. https://athavannews.com/2025/1451160

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.