Everything posted by தமிழ் சிறி
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
நீர் கூட அருந்தாமல்… உண்ணா நோன்பு இருந்த தியாக தீபம் திலீபனுக்கு, நினைவு வணக்கங்கள். 🙏
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இங்கும் பாடசாலை தொடங்கி விட்டது. விமானச் சீட்டின் விலையும் குறையும். பென்சன் எடுத்தவர்களும், பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளும் சுற்றுலா செல்ல உகந்த நேரம்.
-
புதைத்து பல ஆண்டுகள் ஆகியும் சில உடல்கள் அழுகாமல் இருப்பது ஏன்?
இது சுமார் 30 வருடங்களுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற பொறியியலாளர். அவர் திருமணம் செய்து கொள்ளாத கட்டை பிரமச்சாரி. அந்தக் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுடனும், உறவினர்களுடனும் எந்தவித தொடர்பும் இல்லை. தனியாக நடக்கப் போவது, கடைக்குப் போய் சமையல் பொருட்கள் வாங்கி தானே சமைத்து சாப்பிடுவது என்று… அவரின் ஓய்வு காலம் அமைதியாக போய்க் கொண்டு இருந்தது. நீண்ட நாட்களாக அவரை வெளியே ஒருவரும் காணவில்லை. அவரின் வீட்டு தபால் பெட்டி கடிதங்களாலும், விளம்பரங்களாலும் நிரம்பி வழிந்ததை கண்ட அயலவர்கள் காவல்துறைக்கு அறிவித்து… அவர்கள் வந்து பல வழிகளிலும் முயற்சித்து எந்தவித பதிலும் வீட்டிற்குள் இருந்து வராமல் போக, காவல்துறையினர் கதவை உடைத்துப் பார்த்த போது… வீட்டின் வரவேற்பறையில் உள்ள கதிரையில் தொலைக்காட்சி பார்த்த நிலையில் அவர் மூன்று மாதத்திற்கு முன்பே இறந்து விட்டார். மூன்று மாதமாக… இறந்த ஒருவருக்காக தொலைக்காட்சியும் ஓடிக் கொண்டு இருந்தது. ஆச்சரியம் என்னவென்றால்…. இறந்த அவரின் உடலில் இருந்து நாற்றம் எதுவும் வராததால் அயலவர்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இச் செய்தி அக்காலத்தில்… பிரபலமாக பேசப் பட்டது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
யாழ்ப்பாண புகையிரத நிலையம். படம் எடுத்த ஆண்டு 1908. Francis P Welangoda
-
நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா
சீனத் தூதுவர்.... மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சேனநாயக்க போன்ற முன்னாள் ஜனாதிபதிகளை சந்திக்க, இருப்புக் கொள்ள முடியாத இந்தியத் தூதுவர்... ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை மாதிரி, நாமலை சந்தித்து... தமது "அரிப்பை" போக்கியுள்ளார்.
-
ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்!
ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்! இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி, அந்தக் கடற்றொழிலாளர்களுக்கு, தலா 5 கோடி ரூபாய் வீதம் 50 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் தமிழகக் கடற்றொழிலாளர்களை, இலங்கை கடற்படை கைது செய்வதும், அபராதம் விதிப்பதும் கடும் கண்டனத்திற்குரியது என்றும் குறித்த மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை அரசின் இத்தகைய செயற்பாடுகளைத் தொடர்ந்தும் இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது கடற்றொழிலாளர் சமூகத்தைக் கொந்தளிக்கச் செய்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447347
-
ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா!
ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா! அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர். AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரின் பெயர் டியல்லா (Diella). அல்பேனியாவில் அதிகம் ஊழல் நடப்பதாக வந்த புகாரையடுத்து, ஊழலை தடுக்க அல்பேனியா பிரதமர் எடி ராமா (Edi Rama) செயல்படுத்தியிருக்கும் புதிய யோசனைதான் இந்த AI அமைச்சர். அமைச்சர் என்றால் ஏதாவது துறையை ஒதுக்க வேண்டும். அதனால் அரசு திட்டங்களை தனியாரிடம் கொடுத்து செயல்படுத்தும் பொது கொள்முதல் (Public Procurement) துறையை டியல்லாவிடம் ஒதுக்கியுள்ளனர். இதேவேளை, அல்பேனிய அரசின் ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்து அந்த துறை 100 சதவிகிதம் ஊழல் இல்லாமல் செயல்பட AI அமைச்சர் டியல்லா உதவி செய்வார் என பிரதமர் கூறியிருக்கிறார். ஆனால் இதில் எந்த அளவுக்கு மனித மேற்பார்வை இருக்கும் என பிரதமர் இன்னும் கூறவில்லை. டியல்லாவை அல்பேனிய அரசு பயன்படுத்துவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பே அல்பேனியாவின் டிஜிட்டல் சேவை தளங்களில் மக்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை விண்ணப்பிப்பதற்கு மெய்நிகர் உதவியாளராக டியல்லா உதவி செய்திருக்கிறது என அல்பேனிய பிரதமர் கூறியிருக்கிறார். இந்நிலையில் இந்த AI அமைச்சர் யோசனை சட்டத்துக்கு எதிரானது எனவும் முட்டாள்தனமானது எனவும் அல்பேனியாவில் எதிர்கட்சியினர் கூறியுள்ளதுடன் AI அமைச்சர் குறித்து பல எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதை அல்பேனிய அரசு அதிகாரபூர்வமாக நியமிக்கவில்லை. இது ஒரு அடையாள நடவடிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447407
-
கருத்து படங்கள்
- கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
குமாரசாமி அண்ணை... நமது அரசியல்வாதிகள் எல்லோரும். மக்கள் சேவை செய்ய என்று பாராளுமன்றம் போவதெல்லாம் தமது சந்ததிக்கு சொத்து சேர்க்க மட்டுமே. இப்போ இருக்கும் இந்தத் தற்குறி அரசியல்வாதிகளால்... மக்களுக்கோ, இனத்திற்கோ எந்தவித பிரயோசனமும் இல்லை என்பதுடன், இருக்கும் பிரச்சினைகளை இழுத்தடித்து மேலும் சிக்கலாக்கி மீள முடியாத நிலைக்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இந்த இழுத்தடிப்பு நேரத்தில் எதிரியானவன்... பலமடங்கு முன்னேறி எம்மை விழுங்கி விடுவான். அண்மையில்... ஒரு செய்தி பரவலாக பேசப்பட்டத்தை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். ரணில் ஜனாதிபதியாக இருந்த போது ... சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாயும், சுமந்திரனுக்கு 90 கோடி ரூபாயும் கொடுக்கப் பட்டதாம். உடனே சாணக்கியன், மக்களின் தேவைகளை நிறைவேற்றவே அந்தப் பணத்தை பெற்றுக் கொண்டதாக சுய வாக்குமூலமும் கொடுத்து இருந்தார். ஆக சாணக்கியனும், சுமந்திரனும் எப்போதும் பின்கதவால் ஜனாதிபதிகளை சந்தித்து தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றார்கள். "நக்குண்டார் நாவிழந்தார்" என்பது போல்... இவர்கள் தமிழ் மக்களுக்கு பலன் பெற்றுக் கொடுப்பார்கள் என்பது முட்டாள்தனமானது. ரணிலிடம் வாங்கிய 90 கோடி ரூபாயை பற்றி, சுத்துமாத்து சுமந்திரன்... ஒன்றும் நடவாதமாதிரி அதைப்பற்றி கதைக்கவே இல்லை. அண்மையில் ரணில் கைது செய்யப் பட்ட போது ... விழுந்தடித்து ரணிலுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதன் மர்மமும்... அந்த செஞ்சோற்று கடன் அன்றி வேறு இல்லை. பல வருடங்களாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு குரல் கொடுக்க முடியாத சுமந்திரனுக்கு, ஊழல் செய்த ரணிலை கைது செய்தவுடன்.. பாசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதுகள்... எல்லாம், தமிழருக்கு கிடைத்த சாபக்கேடுகள். சிலர் இதற்கு வழக்கம் போல் ஆதாரம் வேண்டும் என்று கேட்கலாம். கோடிக்கணக்கில் கள்ளக் காசு வேண்டுகின்றவன் ஆதாரம் எல்லாம் வைத்துக் கொண்டு இதுகளை செய்வான் என்று நம்புகின்றமை.... அடிப்படை அறிவும் இல்லாத விதண்டாவாதக் காரர்களாகத்தான் இருப்பார்கள் என்பதை பலரும் அறிவார்கள். தீய சக்திகளுக்கு வெள்ளையடிக்க வரும் அவர்களை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை. 😂- கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு! கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூனகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவிலுள்ள 07 ஏக்கர் காணி கடந்த 07ஆம் திகதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணி தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திடம் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இதே போன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன் பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சி பகுதியில் இரானுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான எட்டுப் பேரின் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447340- ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி!
ரஷ்யா–பெலருஸ் இணைந்து மாபெரும் இராணுவப் பயிற்சி! ரஷ்யா மற்றும் பெலருஸ் நாடுகள் இணைந்து நடத்தும் ‘Zapad‑2025‘ என்ற மாபெரும் இராணுவப் பயிற்சி, ஐரோப்பிய நாடுகளுக்கான நேரடி எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. செப்டம்பர் 12 முதல் 16 வரை நடைபெறும் இப் பயிற்சியில் ஹைபர்சோனிக் ஏவுகணைகள், Su‑34 போர் விமானங்கள், கனரக ராணுவ வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும், ரஷ்யா வெலருஸ் நிலப்பரப்பில் இடைத் தூர ஏவுகணைகள் (intermediate-range missiles) அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா–பெலருஸ் கூட்டணி இந்த இராணுவப் பயிற்சி “பாதுகாப்பு நோக்கத்துக்காக மட்டுமே” எனத் தெரிவிக்கின்ற போதும் ஐரோப்பிய நாடுகள் இது குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. குறிப்பாக போலந்து, லிதுவேனியா போன்ற நாடுகள், எல்லைப் பாதுகாப்பு மற்றும் வான்வழி கண்காணிப்பு குறித்து கூடுதல் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச நிபுணர்கள், இந்த பயிற்சிகள் சாதாரண இராணுவப் பயிற்சி அல்ல எனவும் தங்கள் சக்தியை வெளிப்படுத்தி, ஐரோப்பாவுக்கும் NATO கூட்டமைப்பிற்கும் எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது எனக் குறிப்பிடப்படுகின்றது. முன்னதாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அதற்கு பதிலாக கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447312- குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!
பிரித்தானிய நாடாளுமன்றம் குறித்து எலோன் தெரிவித்த கருத்துக்கு எதிராக வலுக்கும் கண்டனம்! ‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க்கிற்கு, அந்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிபோவதாகவும், அவர்களை திருப்பி அனுப்பும் படியும் வலியுறுத்தி, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், ‘யுனைட் தி கிங்டம்’ என்ற பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இதில், 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர். இதற்கு போட்டியாக, ‘பாசிசத்துக்கு எதிரான அணிவகுப்பு’ என்ற பெயரில், ‘ஸ்டாண்ட் அப் டு ரேசிசம்’ என்ற குழு போராட்டம் நடத்தியது. இதில், 5,000 பேர் பங்கேற்றனர். இரு தரப்பும் மோதலில் ஈடுபடாமல் தடுக்க 1,000க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர். அப்போது பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததில், 26 பொலிஸார் காயமடைந்தனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர். யுனைட் தி கிங்டம் பேரணியில், நேரலை மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த உலகப் பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் உரையாற்றினார். அப்போது, ‘பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். அங்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும். இடதுசாரி கட்சிகள் கொலைகார கட்சிகள்’ என, உரையாற்றியிருந்தார். இந்நிலையில், எலோன் மஸ்க்கின் இக் கருத்து பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் எலோன் மஸ்கிற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் ‘வன்முறையைத் துாண்டும் வகையில் பேசிய எலான் மஸ்க்கை கண்டிக்க வேண்டும் எனவும் அவரது பேச்சு பொருத்தமற்றது எனவும் அவருக்கு எதிராக தடை விதிக்கப்பட வேண்டும்’ எனவும் கொதித்தெழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447302- கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
அந்த இரண்டு பேர்... சுமந்திரனும், சிவஞானமும்தான். 😂 அவர்கள் மாறி, மாறி... முதுகு சொறிஞ்சு கொண்டு இருக்க, சோக்காக இருக்கும். 🤣- மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு! ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாயவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்காவின் சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இந்தோனேசியாவில் அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும். முன்னதாக, நுவரெலியா, மித்தேனியா, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தான ஆகிய இடங்களில் இதுபோன்ற ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447215- செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்!
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கு புதைகுழிகளுக்கு நீதிகோரி கையெழுத்து போராட்டம்! செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (15) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் உள்ள மனித புதை குழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்குமான சர்வதேச நீதிக்கோரிய கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பினால் யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்த கையெழுத்து போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1447169- கருத்து படங்கள்
- தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
- இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்!
இலங்கைக்கு ஆதரவு தெரிவித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்த விஜித ஹேரத்! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடரில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுதொடர்பாக இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது இதேவேளை உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை அமைச்சர் விஜிதஹேரத் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் கலந்துகொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா பயணம் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சு அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளது அனைத்து இலங்கையர்களின் பொருளாதார, சமூக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உட்பட அனைத்து மனித உரிமைகளையும் நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தின் ஜெனீவா விஜயத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்துடன் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நாட்டிற்குள் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கக்கூடிய ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றை முழுமையாக நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நேரம் மற்றும் அவகாசம் தேவை என்பதை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயரர்ஸ்தானிகர், வோல்கர் டர்க் உடனான சந்திப்பின் போது அமைச்சர் குறித்த விடயங்களை வலியுறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது இதேவேளை மனித உரிமைகள் பேரவையின் தலைவரான, சுவிட்சர்லாந்தின் ஜூர்க் லோபரையும் அமைச்சர் விஜித ஹேரத் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் உயர் மட்ட அரசியல் ஈடுபாட்டின் அவர் வரவேற்றதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது இதேவேளை இலங்கைக்கு ஆதரவாகப் உரையாற்றியிருந்த ஏனைய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுக்கும் அமைச்சர் விஜித ஹேரத், நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1447155- யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது!
யானை தந்தங்களுடன் இராணுவ சிப்பாய் கைது! ஒரு ஜோடி யானை தந்தங்களை வைத்திருந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் ஹல்மில்லவெவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். மொரகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, மொரகொட ஹல்மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த ஜோடி தந்தங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களுடன் சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1447160- குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்!
அப்ப... உங்கடை "பவுசு" காட்டுற மச்சானை, ஊரிலை பார்க்கலாம் எண்டுறியள். 😂- வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
சுமந்திரனுக்கு… நாக்கிலை சனி. அதற்கு வாய்ப்பில்லை ராஜா. 😂 அவருக்கு மாகாணசபை முதல்வர் பதவி எல்லாம் எட்டாக்கனி. இவர் போட்டியிட்டால்…. தமிழரசு கட்சிக்கு விழும் எதிர் வாக்குகள், அனுரவுக்கு போகும். வட மாகாண முதலமைச்சராக ஒரு சிங்கள கட்சியை சேர்ந்தவரை தெரிவு செய்ய வைத்த கேவலத்தையும் சுமந்திரன் போட்டியிடுவதால் ஏற்படும் தீமையாக அமையும். ஏற்கெனவே சுமந்திரனின் செய்கைகளால்…. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தானும் தோற்று….. அனுரவின் கட்சியை சேர்ந்த மூன்று பேரையும், டாக்டர் அர்ச்சுனாவையும் வெல்ல வைத்தது... இந்தத் தேவா*கு தான். 😂 🤣- வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
வட மாகாணத்தில்… எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் பல நல்ல விடயங்களை நடைமுறைப் படுத்திக்கொண்டு இருக்கும் நல்லூர் பிரதேச சபைக்கு பாராட்டுக்கள். இந்த நல்லூர் பிரதேச சபையை நிர்வகிக்கும் கட்சி எது என்று அறிய ஆவலாக உள்ளது.- யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமை... நாய் பிடிக்க கிளம்பியாச்சு. 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கட்சியில் இருந்து பலர் நீக்கப்படுவர்..! சுமந்திரன் எச்சரிக்கை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.