Jump to content

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    76875
  • Joined

  • Days Won

    770

Posts posted by தமிழ் சிறி

  1. 436353940_445069854713503_23624138733157

    ஏங்க.... ஓட்டுக்கு, பணம் கொடுத்தார்களாமே எங்க...??
    அதை... வெள்ள நிவாரண நிதியா.... "துபாய்க்கு" கொடுத்துட்டேன்டி. 🤣

  2. 8 minutes ago, ஈழப்பிரியன் said:

    இந்தப் போட்டியில் @குமாரசாமி  உம் @தமிழ் சிறி உம் கலந்து கொள்ளாதது ஏமாற்றமாக இருக்கிறது.

     

    4 minutes ago, பையன்26 said:

    இவ‌ர்க‌ள் க‌ல‌ந்து இருந்தா இன்னும் சிற‌ப்பாய் இருந்து இருக்கும்🙏🥰.................................

    இம்முறை வேறு அலுவல்களில் கவனத்தை செலுத்திக் கொண்டு இருந்ததால்,
    போட்டியில் பொறுமையாக கலந்து கொள்ளும் ஆர்வம் இருக்கவில்லை.
    தேடிய @ஈழப்பிரியன், @பையன்26, @கிருபன்ஜீ ஆகியோருக்கு நன்றி. 🙂

  3. Just now, satan said:

    ஆஹா.....  அற்புதம்! இப்படிதான் கனிந்ததா உங்கள் காதலும்?

    animiertes-liebe-bild-0025.gif animiertes-liebe-bild-0080.gif 

    சீச்சீ....  எனக்கு 15, 16 வயதில் ஒரு காதல் அரும்பியது.
    இரண்டு மூன்று கடிதப் போக்குவரத்துடன்... கடிதம் அப்பாவிடம் அம்பிட்டு,
    தோலை உரித்து எடுத்தவுடன்... அந்தக் காதல் கருகிப்  போச்சு. 

    • Sad 1
  4. 5 hours ago, satan said:

    இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!

     

    animiertes-computer-bild-0142.gif    animiertes-computer-bild-0134.gif  animiertes-computer-bild-0062.gif   animiertes-computer-bild-0375.gif  

    சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள் உருவாகி இருக்க மாட்டாது. 

    • Like 1
  5. 1 hour ago, MEERA said:

    நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று. 

    ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை.

    ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0

    நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று  தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂
    நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂

    • Haha 2
  6. ibrahim-raisi.jpg

    ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை.

    ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

    இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

    ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

    https://athavannews.com/2024/1379001

  7. 7 minutes ago, MEERA said:

    ஓ… அப்ப சம்பவம் புதிது…. 

    FnoQfA6aMAEc7Fd.jpg

    "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣

  8. 5 minutes ago, பையன்26 said:

    தெரியும் ஆனால்
    இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை
    எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை

    ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................

    யார்….😎 தீம்காவா கொடுத்தது பையா…😂🤣

  9. 13 minutes ago, பையன்26 said:

    ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000
    இதை தாண்ட‌ வில்லை
    ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................

    இந்தத் தேர்தலில் எவ்வளவு அதிகமாக போனது என்று தெரியவில்லை.
    ஆனால் மறியலில் இருக்கும் தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி ஒரு தேர்தலில் அந்தத் தொகுதி மக்கள் எல்லாருக்கும் லட்சக் கணக்கில் பணத்தை விநியோகித்தது தெரியும். 😎

  10. 15 minutes ago, குமாரசாமி said:

    அடேங்கப்பா....ஒரு வாக்கு 25,000 எண்டால் அங்கை வாழுற சனமும் அந்த மண்ணும் எவ்வளவு முன்னேறி இருக்கும்? 🤣

    அதுதான்…. இல்லை.
    அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.

  11. 3 minutes ago, குமாரசாமி said:

    ம்....ம்...ம்

    சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣

    கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎

    குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா?
    25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂

    • Haha 1
  12. 8 hours ago, satan said:

    ஒரு உழுந்து வடை, தேநீருக்கு நோகாமல் எண்ணூறு ரூபா வாங்கியவர் எப்படி விறைப்பெடுக்கிறார் பாருங்கள். தண்டம் கொடுக்கும் போது, கொடுத்தவரின் வலி தெரியும், அப்போ நினைப்பார்; இப்படி வரும் என்று தெரிந்திருந்தால், சும்மாவே கொடுத்து புண்ணியத்தை தேடியிருக்கலாமென்று. நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரியும்.

     

    🍩 🍩 "வடை மாத்தையா". 😂 🤣

  13. 15 minutes ago, பையன்26 said:

    த‌மிழ் சிறி அண்ணா
    அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா
    அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு

    800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ

     

    9 hours ago, தமிழ் சிறி said:

    vadai.jpg

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது!

    வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

    மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    https://athavannews.com/2024/1378864

     

    9 hours ago, தமிழ் சிறி said:

    sri-Lanka-2-750x375.jpg

    சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை!

    நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

    அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

    நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

    அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன.
    இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

    https://athavannews.com/2024/1378849

    பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன.
    அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால், 
    "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள்.
    அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.

    • Like 1
  14. 3 hours ago, goshan_che said:

    @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.

    vadivelu soona paana comedy checking

    vadivelu-vadivelu-comedy.gif

    இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது.
    ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் 
    அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்...
    ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள்.
    அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂
    "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣

    • Haha 2
  15. 19 hours ago, goshan_che said:

    இப்போ பெரும்பாலான கடைகளில் தாச்சியில் கொத்த்தை - கொத்தாமல் கிண்டுகிறார்கள் அண்ணை.

    நான் ஒரு கொத்து அடிப்படைவாதி.

    தகரத்தில் கொத்தும் கடை தேடியே பல மணிகளை வீணடித்தேன்🤣

     

    கொத்து என்றால்.... தகரத்தில் அடிக்கும் கொத்துதான் கெத்து. 😂
    அந்தச் சத்தமே.... வாயில் இருந்து உணவுக் குழாய் வரை குதூகலிக்கும் சத்தம் அது.
    தாச்சியில்... அதுகும்  இலங்கையில்  கொத்து செய்வதை இப்போதான் கேள்விப்படுகின்றேன்.

    • Like 1
  16. spacer.png

    2.-Sutta-pazham-sudadha-pazham.jpg

    18 hours ago, kandiah Thillaivinayagalingam said:

    "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" 

    உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .  

    உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை... 
    எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம்,
    சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? 
    என்று கேட்டது தான். 😂

    காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.