Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்.com
  2. தாதியர்களின் கட்டாய ஓய்வு வயது குறித்து வௌியான சுற்றறிக்கை! தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. ஓய்வூதிய வயதை குறைப்பதால் தற்போதுள்ள தாதியர் பற்றாக்குறை மேலும் மோசமடையும் என்று அதன் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். தாதியர் அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை 63 ஆக நீட்டித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுகாதார அமைச்சு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதன்படி, குறித்த வழக்கு முடியும் வரை மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றம் மார்ச் 6 ஆம் திகதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, 60 வயதை நிறைவு செய்த அனைத்து தாதியர் அதிகாரிகளும் ஓய்வு பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சின் செயலாளரால் கடந்த 4 ஆம் திகதி சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438389
  3. IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்! 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, வரி சமத்துவத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுத்துறை நிதியுதவியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொத்து வரிவிதிப்புக்கு ஆதரவளிக்க தேவையான தரவு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான விரிவான வரைபடத்தை IMF அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த முயற்சியின் மையமானது சொத்து மதிப்பீடுகளின் விரிவான மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதாகும். இது சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரி பொறுப்புகளைக் கணக்கிடுவதற்கும் முதுகெலும்பாக செயல்படும். 2027 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் அரசாங்கம் 56 பில்லியன் ரூபாவை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், 2028 ஆம் ஆண்டில் சொத்து வரி மூலம் எதிர்பார்க்கப்படும் வருவாய் 122 பில்லியன் ரூபாவாக இருக்கும். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) மூலம் ஆதரிக்கப்படும் பொருளாதார சீர்திருத்த திட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகக் கூறியுள்ளார். அந்தக் கடிதம், அரசாங்கம் தொடர்ந்தும் திட்ட நோக்கங்களுக்கு உறுதியுடன் இருப்பதாகக் எடுத்துரைக்கிறது. https://athavannews.com/2025/1438377
  4. இலத்திரனியல் அடையாள அட்டை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு! இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் பிரதேச செயலகங்களின் கணினி மற்றும் உபகரண அமைப்புக்கான மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வது தொடர்பான ஊடக அறிக்கைகள் தொடர்பில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் வணிகங்களுக்கு இக் கொள்முதல்களின் கீழ் தேவையற்ற நன்மைகள் வழங்கப்படும் என்ற ஊடகச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மீதமுள்ள அனைத்து கொள்முதல்களும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இதுவரை செய்யப்பட்டுள்ளபடி அதிக வெளிப்படைத்தன்மை, சரியான தரநிலைகள் மற்றும் செலவு-செயல்திறனுடன் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438357
  5. 14 நாடுகளுக்கு ட்ரம்பின் புதிய இறக்குமதி வரிகள்! அமெரிக்க இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிப்பதை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாமதப்படுத்தியுள்ளார். அதேநேரத்தில் ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் வரிகளை விவரிக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார். இந்த வாரம் மிகவும் அதிகமான இறக்குமதி வரிகளில் சிலவற்றின் மீது வெள்ளை மாளிகை விதித்த 90 நாள் இடைநிறுத்தம் காலாவதியாகவிருந்த நிலையில், ட்ரம்பின் உலகளாவிய வர்த்தகம் குறித்த அண்மைய முன்னேற்றம் வந்துள்ளது. திங்களன்று, ஜப்பான் மற்றும் தென் கொரியாவிலிருந்து நாட்டிற்குள் நுழையும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்ற தனது அச்சுறுத்தலை ஜனாதிபதி புதுப்பித்தார். மேலும், ஆகஸ்ட் 1 முதல் வரிகள் குறித்து எச்சரிக்கும் உலகத் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களின் பட்யடிலையும் பகிர்ந்து கொண்டார். ட்ரம்ப் கோடிட்டுக் காட்டிய பெரும்பாலான கட்டண விகிதங்கள், ஏப்ரல் மாதத்தில் அவர் தனது “விடுதலை நாள்” அறிவிப்பை வெளியிட்டபோது கோடிட்டுக் காட்டியதைப் போலவே இருந்தன. வரிகளை அறிமுகப்படுத்துவது அமெரிக்க வணிகங்களை வெளிநாட்டுப் போட்டியிலிருந்து பாதுகாக்கும் என்றும், உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைகளை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆனால், இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவில் விலைகளை உயர்த்தும் மற்றும் வர்த்தகத்தைக் குறைக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ட்ரம்பின் வரி அறிவிப்புடன் அமெரிக்காவின் மூன்று முக்கிய பங்கு குறியீடுகள் திங்களன்று சரிந்தன. குறிப்பாக டொயோட்டாவின் அமெரிக்காவில் பட்டியலிடப்பட்ட பங்குகள் 4% சரிந்தன. அமெரிக்க வர்த்தக தரவுகளின்படி, ஜப்பான் கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு $148 பில்லியனுக்கும் அதிகமான பொருட்களை அனுப்பியது. இது அமெரிக்காவின் ஐந்தாவது பெரிய இறக்குமதி விநியோகஸ்தராக மாறியது. தென் கொரியா மற்றும் ஜப்பானுடன், மியான்மர் மற்றும் லாவோஸிலிருந்து வரும் பொருட்களுக்கு 40%, தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 36%, செர்பியா மற்றும் பங்களாதேஷிலிருந்து வரும் பொருட்களுக்கு 35%, இந்தோனேசியாவிற்கு 32%, தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பொருட்களுக்கு 30% மற்றும் மலேசியா மற்றும் துனிசியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கும் திட்டங்களை ட்ரம்ப் திங்களன்று வகுத்தார். https://athavannews.com/2025/1438383
  6. இன்று பிறந்தநாளை கொண்டாடும் @nilminiக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
  7. பிள்ளையானும், இனிய பாரதியும்.... தம்மை ஏவி விட்ட, சிங்களத் தலைமைகளை காட்டிக் கொடுத்தால், அனுர அரசில் தண்டனை குறைவாக கிடைக்கலாம். ஆனால் இந்த ஊத்தைவாளிகள்... தமிழரைத்தான் காட்டிக் கொடுக்குமே தவிர, சிங்களவனை காட்டிக் கொடுக்காதுகள். அதுகளின் டிசைன் அப்பிடி.
  8. இப்போது சோளக காற்று வீசும் நேரம் அல்லவா ஏராளன்.
  9. அமெரிக்காவை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை. தமிழ் கூடம்
  10. செம்மணி புதைகுழியும் அம்மணியின் ஆட்சியும்! இன்றுவரை (06/07/2025) செம்மணியில் 47,தமிழரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு. 1994, நவம்பர்,12 தொடக்கம் 2005, நவம்பர்,19 வரை 11 வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர் சமாதானப்புறா என அழைக்கப்பட்ட சந்திராகா குமாரதுங்க அவர் காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை விபரம்: 1. 1995,யூலை,09, நவாலி தேவாலய படுகொலை-131, தமிழர்கள். 2. 1995, செப்டம்பர்,22,நாகர்கோயில் பாடாசாலை படுகொலை-137, தமிழர்கள். 3. 1996, செம்மணிப்படுகொலை-140, தமிழர்கள். 4. 1996,பெப்ரவரி,11, குமரபுரம் படுகொலை -143, தமிழர்கள். 5. 1996, மார்ச்,16,நாச்சிக்குடா படுகொலை -146, தமிழர்கள். 6. 1996, மே,17,யாழ் தம்பிராஜ் சந்தை குண்டுவீச்சு-148, தமிழர்கள். 7. 1996,யூலை,24-மல்லாவி படுகொலை -150, தமிழர்கள். 8. 1996, செப்டம்பர்,07, கைதடி கிரிசாந்தி உட்பட தமிழினப்படுகொலை படுகொலை-151, தமிழர்கள். 9. 1996, செப்டம்பர்,1997, ஆகஷ்ட்,15, இரண்டு தினங்கள் வவுனிக்குளம் படுகொலை -160, தமிழர்கள்.1998 10. 1996, செப்டம்பர்,27, கோணாவில் குண்டு வீச்சு படுகொலை-153, தமிழர்கள். 11. 1997, மே,13, முள்ளிவாய்க்கால் படுகொலை-155, தமிழர்கள். 12. 1997, யூண்,08, மாங்குலம் செல்வீச்சு படுகொலை-156, தமிழர்கள். 13. 1997, யூலை,05, பன்னங்கட்டி படுகொலை-158, தமிழர்கள். 14. 1997,யூலை,15, அக்கிராசன் அரசினர் வைத்தியசாலை படுகொலை-159, தமிழர்கள். 15. 1998,பெப்ரவரி,01, தம்பலகாமம் படுகொலை-162, தமிழர். 16. 1998, மார்ச்,26,பழைய வட்டக்கச்சி படுகொலை -163, தமிழர்கள். 17. 1998, யூண்,10, சுதந்திரபுரம் படுகொலை -165, தமிழர்கள். 18. 1998, கிளிநொச்சி நகர் படுகொலை-142, தமிழர்கள். 19. 1998, நவம்பர்,25,விசுமடு படுகொலை -167, தமிழர்கள். 20. 1998, டிசம்பர்,02, சுண்டிக்குளம் படுகொலை-169, தமிழர்கள். 21. 1999, செப்ரம்பர்,15,மந்துவில் படுகொலை-169, தமிழர்கள். 22. 1999,நவம்பர்,03, பாலிநகர் படுகொலை -172, தமிழர்கள். 23. 1999, நவம்பர்,20, மன்னார் மடுதேவாலயம் படுகொலை- 173, தமிழர்கள். 24. 2000, அக்கோடபர்,25, பிந்துனு வெவ படுகொலை- 177, தமிழர்கள். 25. 2000, டிசம்பர்,11, மிருசிவில் படுகொலை -180, தமிழர்கள். ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சி 11, வருடங்கள் அதில் முக்கியமான 25, படுகொலைகள் அவரின் ஆட்சியிலேயே இடம்பெற்றது. சந்திரிகாவின் ஆட்சிக்கு முன்பிருந்த ஐனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன, ஆர். பிரமதாச, டி வி.விஜயதுங்க, சந்திரிகாவின் ஆட்சியில் இருந்து கைமாறிய மகிந்தராசபக்ச, காலத்து இனப்படுகொலைகள் பற்றிய விபரம் இன்னும் ஒரு பதிவில் எதிர் பாருங்கள்.. தற்போது பேசும் பொருளாக மாறியுள்ள யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி, சிந்துப்பாத்தி இந்துமயாணத்தில் தோண்டப்படும் புதைகுழிகளில் இருந்து இதுவரை சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என 40, க்கு மேற்பட்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவைகள் அனைத்தும் சந்திரிகா ஆட்சிக்காலத்தில் நடந்தவை என கூறப்படுவதால் அவருடைய ஆட்சிக்கால படுகொலைகள் மட்டும் அறிவதற்கான பதிவே இது… இன்னும் எத்தனை எலும்பு கூடுகள் அங்கிருந்து எடுக்கப்படும் என்பதையும் பார்ப்போம். இனப்படுகொலை வரலாறுகள் இன்றைய இளைஞர்கள் அறியப்படவேண்டும் என்பதற்காகவே இதனை பதிவிட்டேன். -பா.அரியநேத்திரன்- 06/07/2025 Monisha Kokul
  11. எத்தனையோ “பெருங்கவி”களைப் பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன். ஆனா முதற்தடவையா இப்புடி ஒரு “கொடுங்கவி” யை இப்பதான் பார்க்கிறேன். Rj Prasath Santhulaki
  12. ‘என் அம்மாவை விசாரித்தீர்கள் என்றால் கொல்லப்படுவீர்கள்’ என மிரட்டல் விடுத்ததாக சொல்லப்பட்ட டொக்டரின் மகள் கைது! Vaanam.lk
  13. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள் கைது! விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவின் மகள், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக கடந்த வாரம் தகவல் வெளியாகியதையடுத்து இன்று வாழைத்தோட்டம் பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியர் மகேஷி விஜேரத்ன, தான் இணைந்த தனியார் நிறுவனம் மூலம் 50,000 ரூபா பெறுமதியுடைய மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு 175,000 ரூபாவுக்கு விற்றபனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவருடைய மகளான மகளான 21 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1438309
  14. எரிசக்தி திட்ட ஆரம்ப செலவை திருப்பிச் செலுத்துமாறு அதானி நிறுவனம் கோரிக்கை! அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை கைவிட்ட அரசாங்கம், இப்போது அந்த நிறுவனத்தால் ஆரம்பத்தில் செலவழிக்கப்பட்ட சில மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீவு நாட்டுடனான இரண்டு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டங்களிலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் இலங்கை அரசாங்கத்திற்கு முன்னதாகத் தெரிவித்திருந்தது. தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலையைக் குறைக்க இலங்கை முயன்றதை அடுத்து, நிறுவனம் அந்த முடிவை எடுத்தது. அதானியுடன் இந்தத் திட்டத்தை மேற்கொண்ட கடந்த அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவை NPP அரசாங்கம் ஏற்கவில்லை. வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மற்றும் பூனேரி நகரங்களில் 442 மில்லியன் டொலர்களை முதலீடு செய்து, காற்றாலை மின் நிலையத் திட்டத்தை இந்த நிறுவனம் நிர்மாணிக்கவிருந்தது. இந்தத் திட்டம் 2025 ஆம் ஆண்டுக்குள் தேசிய மின் கட்டமைப்பில் குறைந்தது 350 மெகாவாட் மின்சாரத்தைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம், நிறுவன அதிகாரிகள், இலங்கையில் நிலையான எரிசக்தி ஆணையத்துடன் (SEA) இணைந்து ஆராய்ச்சி மற்றும் விசாரணைக்காக ஆரம்பத்தில் செய்த செலவுகளைத் திருப்பிச் செலுத்துமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினர். இருப்பினும், SEA-க்கு செலுத்தப்பட்ட 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உட்பட அனைத்து செலவுகளையும் உள்ளடக்கிய மதிப்பீடு செய்யப்பட வேண்டிய சரியான தொகையை நிறுவனம் இன்னும் குறிப்பிடவில்லை. திருப்பிச் செலுத்துவது குறித்து மின் மற்றும் எரிசக்தி அமைச்சு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தற்போதைய நிலை குறித்து கேட்டபோது, இது தொடர்பாக சட்ட ஆலோசனை பெறப்படும் என்று மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏதேனும் பணம் செலுத்தப்பட வேண்டியிருந்தால், அது அமைச்சரவை ஒப்புதல் மூலம் மட்டுமே இறுதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438289
  15. மெக்சிகோவில் முதலையைத் திருமணம் செய்த மேயர்! மெக்ஸிகோ நாட்டின் ஓக்சகா பகுதியில் மழை வேண்டி, மேயருக்கும்,முதலையொன்றுக்கும் பொதுமக்கள் திருமணம் செய்து வைத்த நிகழ்வு உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது. இந்த நிகழ்வு, ஓக்சகா மாநிலத்திலுள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா என்ற நகரத்தில் நடைபெற்றது. அந்நகரின் மேயராக செயற்பட்டுவரும் டேனியல் குடியெரஸ் பென்யா என்பவரே “பிரின்சஸ் கேர்ல்” என அழைக்கப்படும் ஒரு பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் Chontal மற்றும் Huave எனப்படும் இரண்டு பழங்குடி சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படும் இத்திருமண நிகழ்வானது அப்பகுதி மக்கள் இயற்கை மீது வைத்திருக்கும் நெருங்கிய உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. சுமார் 230 வருடங்களாக அப்பகுதி மக்கள் குறித்த மரபினை பின்பற்றி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சடங்குகள் மழை, விளைநில வளம் மற்றும் மீன்பிடி வளம் பெருக வேண்டி நடத்தப்படும் ஆன்மீக நிகழ்வாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438336
  16. ஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள். ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ச்சியான நில அதிர்வு செயல்பாடு சிறிய தீவு சமூகத்தினரிடையே கடுமையான துயரத்தையும் பரவலான தூக்கமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (06) இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், திங்கட்கிழமை நிலவரப்படி அகுசேகி தீவில் பெரிய சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்பதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், ஜூன் 21 ஆம் திகதி தொடங்கிய தொடர்ச்சியான நிலநடுக்கங்கள், மக்களின் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜூன் 21 முதல் இந்தப் பகுதி சுமார் 1,582 நில அதிர்வு நிகழ்வுகளால் உலுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Athavan Newsஜப்பான் தீவில் ஒரு வாரத்தில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள்;ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தொலைதூரப் பகுதியான அகுசேகி தீவில் கடந்த இரண்டரை வாரங்களில் சுமார் 1,600 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகள...
  17. ஆப்ரேஷன் சிந்தூர்; ரஃபேல் நற்பெயரை கலங்கப்படுத்த முயற்சிக்கும் சீனா! பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர், பிரான்சின் முதன்மை ரஃபேல் போர் விமானங்களின் செயல்திறன் குறித்த சந்தேகங்களைப் பரப்ப சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரெஞ்சு உளவுத்துறையின்படி, போர் விமானங்களின் விற்பனை மற்றும் நற்பெயரைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த சீனா தனது தூதரகங்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையின்படி, பிரெஞ்சு இராணுவ போர் விமானத்தை வாங்குவதை நாடுகளை நிறுத்த வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரஃபேல் ஜெட் விமானங்களின் விற்பனை மற்றும் செயல்திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குற்றச்சாட்டை வழிநடத்த சீன தூதரகங்களில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிற ஆயுதங்களின் விற்பனை பிரெஞ்சு பாதுகாப்புத் துறைக்கு ஒரு பெரிய வணிகமாகும். முதன்மை ஜெட் விமானங்களின் விற்பனை பாரிஸுக்கு ஏனைய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளது. குறிப்பாக ஆசியாவில் சீனா ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய சக்தியாக மாறி வருகிறது. AP செய்திச் சேவையின் தகவலின்படி, பெயர் வெளியிட விரும்பாத ஒரு பிரெஞ்சு இராணுவ அதிகாரி இந்த தகவல்களை வெளியிட்டார். பிரான்சின் குற்றச்சாட்டு, அதன் முதன்மை ரஃபேல் ஜெட் விமானத்திற்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவதாகக் கூறுகிறது. மே மாதத்தில் நான்கு நாள் மோதலின் போது ஐந்து இந்திய விமானப்படை விமானங்களை இஸ்லாமாபாத் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியதைத் தொடர்ந்து, தவறான தகவல் பிரச்சாரத்தை பாகிஸ்தான் மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளியான சீனா தூண்டிவிட்டுள்ளன என்று பிரான்ஸ் மேலும் கூறியது. பாகிஸ்தான் என்ன கூறியது? இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலுக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், இஸ்லாமாபாத் ஐந்து இந்திய விமானங்களை வீழ்த்தியதாகக் கூறியது, அதில் மூன்று ரஃபேல் விமானங்களும் அடங்கும். மறுபுறம், இந்தியா இராணுவ இழப்புகளைச் சந்தித்ததாகக் கூறியுள்ளது, ஆனால் ஆப்ரேஷன் சிந்தூரின் போது இழந்த மொத்த விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. பிரெஞ்சு விமானப்படைத் தலைவர் ஜெனரல் ஜெரோம் பெல்லாங்கர், ஒரு ரஃபேல், ஒரு ரஷ்ய தயாரிப்பான சுகோய் மற்றும் ஒரு முந்தைய தலைமுறை பிரெஞ்சு தயாரிப்பான மிராஜ் 2000 ஆகிய மூன்று இந்திய இழப்புகளை மட்டுமே சுட்டிக்காட்டும் ஆதாரங்களைக் கண்டதாகப் பகிர்ந்து கொண்டார். இந்தியா அமைதியாக இருந்தாலும், அது ஒரு ரஃபேலின் முதல் போர் இழப்பாகக் கருதப்படும் என்று பிரெஞ்சு அதிகாரி மேலும் கூறினார். பிரெஞ்சு உளவுத்துறை என்ன சொல்கிறது? பிரெஞ்சு உளவுத்துறையின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் கூற்று ரஃபேலின் செயல்திறன் குறித்து பிரெஞ்சு போர் விமானங்களை வாங்க விரும்பும் பிற நாடுகளிடமிருந்தும், பிரான்ஸ் அவற்றை விற்ற எட்டு நாடுகளிடமிருந்தும் கேள்விகளை எதிர்கொள்ள வழிவகுத்தது. ரஃபேலுக்கு எதிரான தவறான தகவல் பிரச்சாரத்தின் கூற்றுகளுக்கு மத்தியில், சீன அதிகாரிகள் ரஃபேலை கைவிடுமாறு சாத்தியமான வாடிக்கையாளர்களை வற்புறுத்தியதாக பிரெஞ்சு உளவுத்துறை வெளிப்படுத்தியது. அதன் கூற்றுக்கள் இருந்தபோதிலும், தவறான தகவல் பிரச்சாரத்தை பெய்ஜிங்குடன் நேரடியாக இணைக்க பிரான்சால் முடியவில்லை. எவ்வாறெனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை “அவதூறு” என்று சீனா நிராகரித்துள்ளது. https://athavannews.com/2025/1438283
  18. நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன்- தலாய் லாமா பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா,(Dalai Lama) தனது 90வது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார். கடந்த 1935 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் திகதி திபெத்தில் உள்ள தக்சேர் கிராமத்தில் பிறந்த தலாய் லாமா, திபெத் மக்களின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாது திபெத் மக்களின் உரிமைகள், மத சுதந்திரம், மற்றும் உலக அமைதி ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாக அமைதிப்பூர்வமாக போராடி வருகிறார். இதற்காக அவர் கடந்த 1989ஆம் ஆண்டு நோபல் அமைதி பரிசு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் தனது பிறந்த நாள் உரையில் ‘நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன். மறுபிறப்பும் தொடரும். என் மறுபிறப்பை நிர்ணயிப்பது என் விருப்பத்திற்கேற்ப இருக்கவேண்டும். இதில் சீன அரசு எவ்விதத் தலையீடும் செய்யக்கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தார். சீன அரசு, தலாய் லாமாவின் மறுபிறப்பை சட்டபூர்வமாக தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. ஆனால் தலாய் லாமா, “Gaden Phodrang Trust” ‘ மூலம் தமது மறுபிறப்பை தீர்மானிக்கப்படும் என முன்னதாகவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்இ தலாய் லாமாவுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கக்கோரி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438329

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.