Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அனைவர் வாழ்வின் விமானப் பயணத்தின் போதும் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை… நகைச்சுவையுடன் விவரித்த விதம் அழகு. அதிலும் அந்த கடைசிப் பந்தி அருமை. 😂
  2. வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர். சம்பந்தனை மறந்து விட்டார்கள் என்று பதிவுகள் வந்த பின்னர் தான் ஏற்பாடு தீவிரம். நான்கு நாட்களுக்கு முதல் சம்பந்தரின் நினைவு நாள் என்பதே இப்போதுதான் எதேச்சையாக ஒரு செய்தியைத் தேடிய போது தெரிய வந்தது. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக - அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன், ரவிராஜ் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் நினைவுதினங்களையும், தமக்காய் ஈகையாகிய மறவர்கள் தினங்களையும் மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன? 'சம்பந்தர்'களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை. அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை - வரலாறும் மன்னிப்பதில்லை. நாளை 'சுத்துமாத்து' களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை. யாழ்ப்பாண புலனாய்வு
  3. திடீரென இடிந்து விழுந்த பாலம், வாகனங்களோடு ஆற்றுக்குள் விழுந்தனர் பலர் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரிப்பு! குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் இருந்தது. வழக்கம்போல நேற்று காலை வாகனங்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர். திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக இதுவரை உயர்ந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டனர். தகவலறிந்து விரைந்துவந்த `பொலிஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர், இருப்பினும் பலர் காயமடைந்ததுடன் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து மாநில மற்றும் மத்திய அரசு விஷேட கவனம் செலுத்தி வருகிறது. Vaanam.lk
  4. ஹன்ட் ( The Hunt )என்னும் பெயரில் ராஜீவ் காந்தி கொலை விசாரணை பற்றிய வெப் தொடர் ஒன்று வந்துள்ளது. நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அது பற்றி எழுத முடியவில்லை. ஆனால் பொதுவாக இவ்வாறான நடந்த சம்பவங்களை படமாக்குபவர்கள் ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து படமாக்குவதில்லை. பொலிஸ் என்ன சொல்கிறதோ அதையே ஊடகங்கள் வெளியிடும். ஊடகங்கள் என்ன வெளியிடுகின்றனவோ அதையே இவர்கள் படமாக்குவார்கள். உதாரணமாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரணம் பற்றி ஊடகங்கள் உண்மையை கண்டறிந்து எழுதவில்லை. கமிசனர் தேவாரம் தலைமையில் 300 பொலிசார் பாதுகாப்பில் வேதாரணியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார் என்று தேவாரம் கூறியதை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டன. நீதிமன்றம்கூட அது குறித்து கேள்வி எழுப்பாமல் அது தற்கொலை மரணம் என்று ஏற்றுக்கொண்டது. ஆனால் உண்மை என்னவெனில் விசாரணையின்போது கோடியாக்கரை சண்முகம் வேதாரணியம் காங்கிரஸ் எம்எல்.ஏ ராஜேந்திரன் பெயரைக் கூறிவிட்டார். ராஜேந்திரன் மூப்பனாரைக் கைகாட்டுவார். அதனால் ராஜேந்திரனையும் மூப்பனாரையும் காப்பாற்றுவதற்காக கோடியாக்கரை சண்முகம் அடித்துக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டார் என்றே அன்று பேசப்பட்டது. தோழர் பாலன்
  5. ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன் கருதி விசேட நடவடிக்கை. ஓட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதோடு ஒருங்கிணைப்பு பணிகளை ஜனாதிபதி அலுவலகம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் ஓட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை முன்னெடுக்கப்பட்டது. ஓட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 250 மில்லியன் நிதியை சமூக சேவைகள் திணைக்களத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குதல், பராமரிப்பு நிலையங்களை செயல்படுத்த தேவையான மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது, இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களை இணைத்து அறிவியல் பின்னணியுடன் கூடிய புதிய மாதிரியொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது.இந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர். ஓல்கா, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க,மேலதிகச் செயலாளர் எச்.ஏ. ஹேமா பெரேரா, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, சுகாதார அமைச்சின் சமூக சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் வருணி ரசாதரி, சமூக சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமாலகே மற்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷித சேனாதிபதி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1438718
  6. 15 வயது சிறுமியை… அந்த இளைஞன் விடுதிக்கு கொண்டு வரும் போதே, விடுதி உரிமையாளர் காவல் துறைக்கு இரகசிய தகவல் கொடுத்திருக்க வேண்டும். மாறாக… அந்த விடுதி உரிமையாளரும் சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டமைக்காகவும், சிறுமியை பற்றிய தகவல்களை பொலிசாருக்கு வழங்காமல் இருந்தமைக்காகவும் பாரதூரமான குற்றமாக கருதி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்,
  7. அறப் படித்த ஆட்கள்தான்… இப்பிடியான கூழ் முட்டை வேலை செய்யுறது. 😂
  8. 5- வகையான பாரம்பரியமான துவையல் 🥥 1. தேங்காய் துவையல் (Coconut Thuvaiyal) சிறப்பம்சம்: எளியதும், பரம்பரிய சுவையும் 🔸 பொருட்கள்: துருவிய தேங்காய் – 1 கப் வத்தல் மிளகாய் – 2 உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய், சிறிது இம்லி 🔸 செய்முறை: 1. எண்ணெயில் பருப்பு, மிளகாய் வதக்கி, இறுதியில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கவும். 2. தேங்காய், உப்பு, இம்லி சேர்த்து அரைக்கவும். 3. சாதத்துடன் கலந்தால் அருமை! --- 🍅 2. தக்காளி துவையல் (Tomato Thuvaiyal) சிறப்பம்சம்: கொஞ்சம் காரமானும், நல்ல Shelf life கொண்டதும் 🔸 பொருட்கள்: தக்காளி – 3 வத்தல் மிளகாய் – 3 கடலை பருப்பு – 1.5 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிய துண்டு பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, பின் தக்காளி சேர்த்து வெந்துவிடும்வரை வதக்கவும். 2. உப்பு சேர்த்து அரைத்து, சிறிது எண்ணெயில் சுட்டு வைக்கவும். --- 🌿 3. கொத்தமல்லி துவையல் (Coriander Thuvaiyal) சிறப்பம்சம்: கொத்தமல்லி வாசனையுடன் அருமையான பச்சை நிற துவையல் 🔸 பொருட்கள்: கொத்தமல்லி இலை – ஒரு கட்டு பச்சை மிளகாய் – 2 கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி இஞ்சி – சிறிது இம்லி, உப்பு 🔸 செய்முறை: 1. பருப்பு, பச்சை மிளகாய் வதக்கி, பின் கொத்தமல்லி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். 2. அனைத்தையும் அரைத்துத் தாளிக்கவும். --- 🌶️ 4. கார வெங்காய துவையல் (Spicy Onion Thuvaiyal) சிறப்பம்சம்: சாதத்துடன் சும்மா சூப்பரா இருக்கும் 🔸 பொருட்கள்: வெங்காயம் – 2 (நறுக்கியது) வத்தல் மிளகாய் – 3 இஞ்சி – சிறிது பெருங்காயம் – சிட்டிகை உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. எண்ணெயில் வெங்காயம், மிளகாய், இஞ்சி வதக்கவும். 2. உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். 3. தேவைப்பட்டால் எண்ணெயில் சிறிது வதக்கவும். --- 🫘 5. பருப்பு துவையல் (Mixed Dal Thuvaiyal) சிறப்பம்சம்: அதிக நாள்கள் வைத்துக் கொள்ளக்கூடியதுடன், சத்து அதிகம் 🔸 பொருட்கள்: உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி கடலை பருப்பு – 1 மேசைக்கரண்டி வத்தல் மிளகாய் – 3 இம்லி – சிறிது தேங்காய் – 2 மேசைக்கரண்டி (ஐச்சிகை) பெருங்காயம், உப்பு, எண்ணெய் 🔸 செய்முறை: 1. பருப்பு, மிளகாய் வதக்கி, தேங்காய், இம்லி சேர்த்து அரைக்கவும். 2. எளிய சாதம், இடியாப்பம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சூப்பர். தமிழ்நாடு ரெசிப்பீஸ்
  9. யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது. யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து, துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த 17 நாட்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், குறித்த சிறுமி நல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டார். இதனையடுத்து பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் காதலித்து வந்ததாகவும், அவரே சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து வந்து 17 நாட்கள் விடுதியொன்றில் தங்க வைத்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. அதேவேளை, விடுதியின் உரிமையாளரும், குறித்த சிறுமியுடன் தவறாக நடந்து கொண்டார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞனைக் கைதுசெய்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438714
  10. செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம். செம்மணி மனித புதைகுழியில் கடந்த 15 நாட்களாக அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று நண்பகலுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438700
  11. யாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்! யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டத்தில், காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. Athavan Newsயாழ். தையிட்டியில் கவனயீர்புப் போராட்டம்!யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மால...
  12. Avocado பழத்தை... மாம்பழம் என எழுதி வைத்திருக்கின்றார்கள்.
  13. இலங்கை மீது அமெரிக்கா விதிக்கும் வரியில் தள்ளுபடி! அமெரிக்காவால் அதிகளவு வரி தள்ளுபடி வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குவதாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு பல்வேறு பங்குதாரர்களுடன் மேற்கொண்ட தீவிர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே இந்த வரிக்குறைப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அமெரிக்கா, ஏற்கனவே ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்த 44 சதவீத வரியை மறுசீரமைத்து, இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் 30 சதவீத வரி மட்டுமே விதிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் குறித்த தீர்மானம், இலங்கையின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்குமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த வரிச் சலுகை காரணமாக இலங்கை தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் போட்டித் திறனை அதிகரிக்கும் என்பதுடன், முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அதுமட்டுமல்லாது இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கும் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438688
  14. சர்வதேச விசாரணை குறித்து நீதி அமைச்சருக்கு விளக்கிய சாணக்கியன்! செம்மணி மற்றும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் போன்றவற்றுக்கு உடனடி சர்வதேச விசாரணை வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். எனினும் சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசியலமைப்பில் இடமில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்திருந்தார். அவரது கருத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாணக்கியன் தெரிவித்த கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது” ‘மாண்புமிகு நீதி அமைச்சர் அவர்களே, இலங்கையின் சட்டத்தின் கீழ், சர்வதேச விசாரணை நடைபெறக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழிகள் உள்ளன. இதற்கான OMP ச ட்டம் நிறைவேற்றப்பட்டது .அதை நீங்கள் சென்று படித்துப்பாருங்கள். விஜயதாச ராஜபக்ஷ எதிர்க்கட்சியில் இருந்தபோது, அவர் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தார் ஆனால் அது நிறை வேற்றப்படவில்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, ஒரு நீதிபதி நீக்கப்படும்போது வெளிநாட்டு விசாரணையாளர்கள் அல்லது வெளிநாட்டு நீதிபதிகள் நீதிபதி நீக்கப்படுவது சரியா இல்லையா என்பதை விசாரிப்பில் ஈடுபட வேண்டும் என்று மசோதா கூறியது. இது அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல என்றும், அவர்கள் தொடர்ந்து செயல்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. எனவே உங்கள் துறையில் இவ்வாறான சட்டம் பற்றிய உங்கள் அறிவு போதுமானதாக இருக்காது,இல்லையா? ஒருவேளை நீங்கள் இந்த அவையில் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு ஒரு சில ஜனாதிபதி மன்றங்களுடன் பேசி சில ஆலோசனைகளைப் பெற வேண்டும். சரியான தகவல் இல்லாமல் தெளிவில்லாமல் எனது தீர்மானத்தின் அடிப்படையை நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். சர்வதேச பங்கேற்பைக் கொண்டிருக்க இலங்கையின் சட்ட கட்டமைப்பிற்குள் போதுமான இடம் உள்ளது. எனவே உங்களுக்கு இவை பற்றி தெரியாவிட்டால், அதைச் சொல்லாதீர்கள். மேலும் நான் உங்கள் சுயாதீன வழக்கறிஞர்களுடன் என்னைக் குழப்பிக் கொள்ளவில்லை, நான் மனித உரிமை மீறல்களுக்கான சிறப்பு வழக்கறிஞர் அலுவலகத்தைப் பற்றிப் பேசுகிறேன்” இவ்வாறு சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்திருந்தார். https://athavannews.com/2025/1438664
  15. அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை! நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்” சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை மட்டும் அடைக்கும் வசதி உள்ளபோதும், தற்போது 33,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.” கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது ” சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் பற்றாக்குறை காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த நாடு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். அதேசமயம் ”சிறைச்சாலை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள் எனவும், ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகள் நம்பிக்கையை சேதப்படுத்தியிருக்கலாம் எனவும், இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சிறைச்சாலை ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் உள்ளது எனவும், தொலைபேசிகள் குறைவாகவே உள்ளன எனவும் தற்போது முடிந்தவரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438652
  16. நிலவிவரும் வறட்சியான காலநிலை! நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை. தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நிலவும் வறட்சியான காலநிலையினால் முக்கிய நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதோடு நீரின் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், எனவே, அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. எனவே, குடிநீர் விநியோகம் குறைவாக இருப்பதால், அனைவரின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு தண்ணீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டுமே நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு 1939 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438657
  17. பால்மாவின் விலை அதிகரிப்பு! இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்துள்ளது. இலங்கை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 400 கிராம் பால் மா பொதியொன்றின் புதிய விலை 1,200 ரூபாயாகும். அதேபோல், 1 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438673
  18. செம்மணி மனிதப் புதைகுழி: 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம். யாழ் – அரியாலை சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 63 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 54 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்று 14வது நாளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் மேலும் 7 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438665
  19. குஜராத்தில் இடிந்து வீழ்ந்த பாலம்; 09 பேர் உயிரிழப்பு, பலர் மீட்பு! குஜராத்தின் வதோதராவில் வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் காம்பிரா பாலம் இன்று (10) காலை இடிந்து விழ்ந்துள்ளது. இதன்போது, பாலத்தில் பயணித்த 05 வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் பலர் மீட்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கம்பீரா பாலம் கடந்த ஆண்டுதான் பழுதுபார்க்கப்பட்டதாகவும், பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, மூன்று மாதங்களுக்கு முன்பு மாநில முதலமைச்சர் ரூ.212 கோடி மதிப்பிலான புதிய பாலத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறுகின்றனர். எவ்வாறெனினும், விபத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுக்கள் மீட்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர். வதோதரா மாவட்டத்தின் பத்ராவில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி முற்றிலுமாக இடிந்து விழுந்ததை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் காட்டுகின்றன. https://athavannews.com/2025/1438581
  20. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுப்போம்! – பிரேசில் ஜனாதிபதி. அமெரிக்கா விதித்த 50% வரிக்கு பதிலடி கொடுக்கப்படும் என பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா ( Lula da Silva) தெரிவித்துள்ளார். அமெரிக்கா, பிரேசிலில் இருந்து வரும் பொருட்களுக்கு 50% வரி விதிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, தங்களது இறையாண்மை நிலையை வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது” ‘பிரேசில் ஒரு இறையாண்மை நாடு. நாங்கள் வெளியில் இருந்து வரும் எந்தவொரு கட்டுப்பாடு அல்லது அழுத்தத்தையும் ஏற்கமாட்டோம். பிரேசில் டிஜிட்டல் வலைதளங்களில் வரும் வெறுப்பு பேச்சு, இனவெறி, சிறுவர்கள் துஷ்பிரயோகம், மோசடிகள், மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களை ஏற்காது. பிரேசிலில் பேச்சுரிமை என்பது எந்தவொரு வன்முறையையும் ஊக்குவிக்காது. பிரேசிலில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும், இங்கே இயங்குவதற்கு பிரேசில் சட்டத்தை பின்பற்ற வேண்டும். பிரேசில் உடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை கூற்றுகள் தவறானவை. கடந்த 15 ஆண்டுகளில், பிரேசில் உடனான அமெரிக்காவின் வணிக உபரி 410 பில்லியன் டொலர்கள் என்று அமெரிக்காவின் தரவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா எங்கள் மீது புதிய வரிகளை விதித்தால், பிரேசில் அதற்கான பதிலடியை பிரேசிலின் பொருளாதார பரஸ்பர சட்டம் மூலம் கொடுக்கும். பிரேசில் இறையாண்மை,பரஸ்பர மரியாதை, மற்றும் உலகளாவிய உறவுகளில் மக்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை மதிக்கிறது’ இவ்வாறு பதிவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438672
  21. யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வு 14ஆம் நாள் 09.07.2025 யாழ்ப்பாணம்.com
  22. தடுப்பூசி ஏற்ற... உங்கள் நண்பர்கள், உங்களுக்கு நன்மையே செய்துள்ளார்கள். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.