Jump to content

theeya

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    500
  • Joined

  • Last visited

Everything posted by theeya

  1. நன்றி: https://samugammedia.com/ Advertisement தனது இருப்பைத் தக்கவைப்பதற்காக எல்லா வழிகளிலும் போராட நிர்பந்திக்கப்பட்டுள்ள தமிழினத்தின் வரலாற்றை, வாழ்வியலை, உணர்வுநிலைகளைப் பேசும் பல்வேறு படைப்புகளை தமிழ்த் தேசியத் தளத்தில் நின்று படைத்தளிக்கும் தியா காண்டீபன் போன்ற இளம் எழுத்தாளர்களின் உருவாக்கம் நிறைவைத் தருகிறது. அத்தகைய படைப்பாளர்களின் படைப்புத்தளம் என்பது எமது இனத்தின் இருப்புக்கு வலுச்சேர்ப்பதாய் தொடர்ந்து விரிவடைய வேண்டும். அதற்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவை தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (20) கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் அங்குரார்ப்பணத்தோடு இணைந்த, புலம்பெயர் எழுத்தாளர் தியாவின் (இராசையா காண்டீபன்) 'நீ கொன்ற எதிரி நான் தான் தோழா' எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரட்ணம், முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியின் அதிபர் திருமதி.சூரியகுமாரி இராசேந்திரம், துணுக்காய் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சுந்தரலிங்கம் லோகேஸ்வரன், ஆசிரியர் அருணாசலம் சத்தியானந்தன், தேசிய கல்வி நிறுவகத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் சிதம்பரநாதன் கதிர்மகன், மூத்த எழுத்தாளர் குரு சதாசிவம் ஆகியோரோடு கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  2. மிக்க நன்றி இணைப்புக்கு நன்றி , மிக்க நன்றி ஆதவன் நியூஸ் நன்றி
  3. “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா” நூல் வெளியீடு இனிதே நிறைவுபெற்றது உறவுகள் அனைவருக்கும் வணக்கம். “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா” கவிதை நூல் வெளியீட்டு விழா இனிதே நடந்தேறி முடிந்திருக்கின்றது. முக்கியமாக இது நான் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா என்பதைத் தாண்டி “தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை”யின் முதலாவது நூல் வெளியீட்டு விழா என்பதில் நான் பெருமிதமடைகிறேன். அந்தவகையில் படைப்பாளி இல்லாத வெற்றிடம் தெரியாமல், இந்த விழாவினை முன்னின்று ஒழுங்கமைத்து தலைமை தாங்கி சிறப்பான முறையில் நிறைவேற்ற உதவி, எனக்கு எல்லாமுமாகி நிற்கின்ற சகோதரன், எழுத்தாளர், கவிஞர் தீபச்செல்வன் அவர்களுக்கும் விடிவுகளின் தேடல் குழுமம், மற்றும் சக நண்பர்களுக்கும் முதலில் என் நன்றியைக் கூறிக்கொள்கின்றேன். மேலும் நூல் வெளியீட்டைச் சிறப்பித்த, எங்களின் இன்றைய நம்பிக்கை ஒளியாக இருக்கும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஐயா சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் எனது அகம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் திரு.கி அலெக்ஷன், மற்றும் மிகச் சிறந்த வாழ்த்துரைகளை வழங்கிய கௌரவ . த. குருகுலராசா, கௌரவ. அ. வேழமாலிகிதன், கௌரவ. அ. சத்தியானந்தன் ஆகியோருக்கும், அழகிய முறையில் ஆய்வுரை செய்த என் பல்கலைக் கழக கால நண்பரும் இன்றைய ஆசிரிய ஆலோசகருமான எஸ். லோகேஸ்வரன் அவர்களுக்கும் நன்றி. மற்றும் சிறப்பான முறையில் குறை நிறைகளை வாரி வழங்கிய திறனாய்வாளர் ஆசிரியர், செந்தூரன் அவர்களுக்கும், மேலும் விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும், மற்றும் நேரலையில் விழாவைப் பார்த்து கருத்துக்கள், வாழ்த்துகளை பதிவிட்ட அனைவருக்கும் அன்பு கலந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 2009 மேயுடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், அல்லது போர் ஓய்ந்த பின்னர்; தமிழீழ அல்லது தமிழ் தேசிய இலக்கியங்களுக்கான இடம் பற்றிய பல கேள்விகள் எழுந்தன. தமிழ் தேசிய எழுத்தாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளப்பட்ட பலர் தங்கள் கருத்தியல் தளத்தில் இருந்து விலகி நின்று இலக்கியங்கள் படைக்க, இன்னும் பலர் கொண்ட கொள்கை மாறாமல் தாயகத்திலும், தாம் புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ் தேசியம் சார்ந்த இலக்கியங்களை படைத்துக்கொண்டே இருக்கிறார்கள், அது தொடரும், அதற்கான தேவை நிறையவே இருக்கிறது. அந்தவகையில் கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை இரண்டு தசாப்தங்களாக எழுதப்பட்ட என்னுடைய கவிதைகளில் இருந்து தெரிவு செய்த 59 கவிதைகளை ஒரு நூலாக்கி உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறோம். நண்பர்களே, உறவுகளே, முடிந்தால் இந்த புத்தகத்தை படித்துப் பார்த்து முடிந்தவரை உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். உங்கள் விமர்சனம் இனிவரும் எனது படைப்புகளுக்கு பேருதவியாக இருக்கும். உலகமெங்கும் கோவிட் பெருந்தொற்று நிலவிய காலகட்டத்தில் வெளிவந்த எனது “எறிகணை” நாவல் வெளியீட்டை பெரு விழாவாகச் செய்ய முடியவில்லை என்ற கவலை இருந்தது. அப்போதைய சூழலில் நாம் மெய்நிகர் ஊடகங்களூடாகவே அதற்கான அறிமுக விழாவை செய்திருந்தோம், அந்தக் குறையை இவ்விழா நிவர்த்தி செய்திருக்கின்றது. அத்துடன், தமிழ் தேசிய பயணத்தில் தொடர்ந்து எழுதும் முனைப்போடு இருக்கும் எங்களைப் போன்ற பலருக்கு ஒரு நம்பிக்கையைத் தந்திருக்கின்றது. மேலும், இந்த நூல் வெளியீட்டில் கிடைக்கும் நிதியை தாயகத்தின் பின்தங்கிய பாடசாலை ஒன்றின் கற்றல் நடவடிக்கைக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்து வரவிருக்கும் எனது “அமெரிக்க விருந்தாளி” சிறுகதை நூல், மற்றும் அதைத் தொடர்ந்து வரவிருக்கின்ற நாவல் மூலம் கிடைக்கின்ற நிதியும் அவ்வாறே நல்ல காரியங்களுக்கு பயன்படவுள்ளது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொண்டு; உங்கள் வேலைப் பழுக்களுக்கு மத்தியில் இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும், ஆதரவளித்த அத்தனை நண்பர்களுக்கும், முன்னின்று ஒழுங்கமைத்த அத்தனை உறவுகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது அன்பையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து, அடுத்த வருடம் சந்திப்போம் என்ற உறுதிமொழியுடன் விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்! தியா காண்டீபன் 20.08.2023
  4. இன்று (20.08.2023) கிளிநொச்சியில் வெளியீடு காணவுள்ளது, "நீ கொன்ற எதிரி நான் தான் தோழா" கவிதை நூல். எழுத்தாளர் தியா காண்டீபன் அனைவரும் இணைவோம். நன்றி
  5. மிக்க நன்றி உண்மை, வேலைப்பளுவுக்கு இடையிலும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் எழுதுகோல் தூக்க உங்களைப் போன்ற பலரின் ஆதரவு, மற்றும் விமர்சனமே காரணமாகும். மிக்க நன்றி நன்றி மிக்க நன்றி
  6. வரும் 20ஆம் திகதி ஞாயிறு அன்று கிளிநொச்சியில் "தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை"யின் ஏற்பாட்டில், தியா காண்டீன் எழுதிய "நீ கொன்ற எதிரி நான்தான் தோழா" கவிதை நூல் வௌியீட்டு விழா நடைபெற உள்ளது. அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கிறோம், உங்கள் ஆதரராவையும் பேரன்பையும் தாருங்கள். நாள்: 20.08.2023 நேரம்: பிற்பகல் 3.10 இடம்: கரைச்சிப் பிரதேச சபை மண்டபம் தலைமை எழுத்தாளர் தீபச்செல்வன் முதன்மை விருந்தினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் யாழ் தேர்தல் மாவட்டம் வாழ்த்துரைகள்: கௌரவ த. குருகுலராசா - முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கௌரவ அ. வேழமாலிகிதன் - முன்னாள் தவிசாளர். கரைச்சிப் பிரதேச சபை திருமதி சூரியகுமாரி இராசேந்திரம், அதிபர் - கிளி/ முருகானந்தா கல்லூரி வரவேற்புரை கி. அலெக்ஷன் (யாழ் பல்கலைக்கழக மாணவன், ஒருங்கிணைப்பாளர் - விடிவுகளின் தேடல்) வெளியீட்டுரை கௌரவ அ. சத்தியானந்தன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நயவுரை: எஸ். லோகேஸ்வரன், ஆசிரிய ஆலோசகர் - துணுக்காய் வலயம் விமர்சனவுரை: விமர்சகர் க. செந்தூரன், ஆசிரியர் - கிளி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை ஏற்புரை: நூலாசிரியர் தியா - காண்டீபன் (அமெரிக்கா) நன்றியுரை: த. செல்வா, கவிஞர், எழுத்தாளர் குறிப்பு: இவ் வெளியீட்டில் கிடைக்கும் நிதி தாயகத்தின் பின்தங்கிய பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவர்களுக்கான கல்வித் தேவைக்காக அன்பளிப்பு செய்யப்படவுள்ளது.
  7. வாசித்துப் பாருங்கள், மிகவும் சிறப்பான கதை
  8. காணாமல் போனவன் - சிறுகதை - தியா கதை சொல்லவா? (11)/ காணாமல் போனவன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
  9. காணாமல் போனவன் -சிறுகதை -------------------------------------------------- கதை சொல்லவா? (11)/ காணாமல் போனவன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
  10. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். நான் இவ்வருட நிகழ்வில் கலந்து கொள்ள மின்னெசோட்டாவில் இருந்து குடும்பத்துடன் கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோ சென்றிருந்தேன்... இணைப்பில் சென்று கட்டுரையை படியுங்கள்... ‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா
  11. அதுதானே பார்த்தேன், "அடி மடியில் கனம் ஏதோ இருக்கு" என்று நினைத்தேன், அது உண்மைதான் போல.
  12. சான் ஃபிரான்சிஸ்கோவில் வெப்பம் கொஞ்சம் குறைவு 56°F (13°C), ஆனால் சாக்ரமெண்டோவில் அப்பிடியே இரட்டிப்பு வெப்பம் 110°F (43°C), நீங்களும் வந்தீர்கள்தானே சொல்லியா தெரிய வேண்டும் ஆம்
  13. கலிபோர்னியா பயண அனுபவம் =============================== வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக கிட்டத்தட்ட 10,000க்கு மேற்பட்ட ஏரிகள் சூழ்ந்த அமெரிக்காவின் அழகிய மாகாணம் மின்னெசோட்டாவில் இருந்து கடற்கரை நகரான கலிபோர்னியாவின் சான்ஃபிரான்சிகோ சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கி, பின்னர் சாக்ரமெண்டோ சென்று அடுத்த மூன்று நாட்கள் தமிழ் விழாவில் பங்கெடுத்திருந்தோம். எனது அவதானிப்புப்படி, உலகப் புகழ்பெற்ற சான்ஃபிரான்சிகோ கோல்டன் கேட் குடாப்பகுதியில் திருடர்களின் அட்டகாசம் கொஞ்சம் அதிகமாக இருந்தது, இதைப் பார்த்த எங்கள் மகள் பகடியாக, இது கலிபோர்னியா இல்லை "கள்ளர் போனியா" என்றாள், பயண அனுபவம் பற்றி ஒரு சிறுகதை எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றும் தமிழ் விழா தொடர்பான கட்டுரை பனிப்பூக்கள் / Panippookkal இதழில் விரைவில் வெளிவரவுள்ளது. அன்புடன், தியா
  14. உலகத்தரம் வாய்ந்த "பயங்கரவாதி" நாவல் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகின்றது. அண்மைய நாட்களில் உலகெங்கும் பல நாடுகளில் பயங்கரவாதி நாவல் அறிமுகமாகிறது. லண்டனில் மக்களின் பேராதரவுடன் பயங்கரவாதி நாவல் அறிமுக விழா இடம்பெற்ற நிலையில் வரும் மாதம் 22ஆம் திகதி பிரான்ஸில் அறிமுக நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது. அதைத் தொடர்ந்து ஜூலை 30ஆம் திகதி கனடாவில் தமிழ் தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில் பயங்கரவாதி நாவலின் அறிமுகவிழா இடம்பெறுகின்றது. அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு பேரன்புடன் வேண்டுகிறோம். பயங்கரவாதி நாவலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய திறனாய்வை இந்த இணைப்பில் பாருங்கள். நன்றி, தியா
  15. கதை சொல்லவா? 10/ தியா காண்டீபன் - பவா செல்லத்துரை அவர்கள் எழுதிய "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" சிறுகதை.
  16. கதை சொல்லவா? 10/ தியா காண்டீபன் பவா செல்லத்துரை அவர்கள் எழுதிய "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" சிறுகதை
  17. ஜுன் 20 / உலக அகதிகள் தினம் ========================= ஈழத்தமிழ் அகதிகளின் வலிகளைக் சொல்லும் தமிழ்நதி அவர்களின் "என் பெயர் அகதி" சிறுகதை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.