Jump to content

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1782
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by vasee

  1. குறிப்பிட்ட அமைப்பினர் மீது ஏற்கனவே அமெரிக்கா தாக்குதல் தொடங்கிவிட்டது, இதனை ஒத்த ஒரு சம்பவம் 90 களில் சோமாலியாவின் தலைநாகர் பகுதியில் அமெரிக்க இராணுவத்தினால் விமான தரையிறக்கம் மூலம் நடத்தப்பட்டு அது தோல்வியில் முடிவடைந்தது, சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சோமாலியரை சந்தித்த போது அந்த விபரம் கேட்டேன், அவர் பிறப்பதற்கு முன்னர் இச்சம்வம் நிகழ்ந்தாக குறிப்பிட்டார் அந்த விபரம் தெரியவில்லை ஆனால் ஒரு புதிய தகவல் ஒன்றினை கூறினார் அதனை வழமையான ஒரு சதிக்கோட்பாட்டு விடயமாக கடந்து சென்றுவிட்டேன், அவர் கூறிய விடயம் சோமாலியாவின் இயற்கை வழங்கல்களை சுரண்டும் பல மேலைத்தேய நிறுவனங்களு க்கும் அங்குள்ள குழுக்களுகும் உள்ள வாய்க்கால் தகராறின் வெளிப்பாடு என்பதானது. 1953 இல் ஈரானில் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியினை கலைத்து மீண்டும் அரச ஆட்சியாளர்களை சி ஐ ஏ ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு பிண்ணணியில் அந்த மக்களாட்சிக்கும் இங்கிலாந்து எரிபொருள் நிறுவனமான வி பி நிறுவனத்திற்குமிடையேயான தகராறு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் நீங்கள் கூறும் இக்குழுக்களின் பிண்ணனியில் ஈரான் இருப்பதால் அமெரிக்கா ஈரானை தாக்கிறதா என தெரியவில்லை, ஆனால் இந்தியர்கள் இந்த மத்திய கிழக்கு பிரச்சினக்கு பின்னால் சீனா இருப்பதாக நம்புகிறார்கள். இவற்றை பற்றி இந்த திரியில் பேசுவதனை தவிர்க்கிறேன் ( திரியின் தலைப்பிலிருந்து வேறுபட்ட விடயம்), ஏனெனில், பின் எனது கருத்தும் ஒரு கள உறவு ஒன்று கூறும் கருத்து போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கும். அண்மையில் ஒரு பிறந்ததின நிகழ்வொன்றிற்கு சென்றிருந்தேன், பெருமளவில் குழந்தைகளும் பெண்களும் மட்டும் அந்த பார்க்கில் இருந்தார்கள்,நண்பரின் தந்தையுடன் சேர்த்து 4 ஆண்கள் மட்டும் ஓரிடத்தில் இருந்தார்கள், வேறுவழியின்றி அவர்க்ளுடன் போய் அமர்ந்து கொண்டேன் அதில் அனைவரும் என்னை விட வயது கூடியவர்கள், ஒருவர் மட்டும் எனது வயதொத்தவராக இருந்தார், அதுவும் அவர் தன்னை எனது அண்ணனுடன் படித்தவர் என அறிமுகப்படுத்திய பின்னரே உணர்ந்து கொண்டேன். சிறிது நேரத்தின் பின்னர் அவரை விட ஒரு வயது கூடிய ஒருவரின் பெயரினை கூறி நிங்கள் அவருடன் படித்தீர்களா என கேட்டார், இல்லை அவர் எனது மற்ற அண்ணாவுடன் படித்தவர் எனகூற இன்னுமொரு பெயரை கூறி அவருடன் படித்தீர்களா என கேட்டார் இப்போது எனக்கு குழப்பமாகிவிட்டதுஅவர் முன்னர் கூறியவரை விட இரண்டாவதாக கூறியவருக்கு இன்னொரு வயது அதிகம், ஆரம்பத்தில் எனது அண்ணனுடன் படித்தவர் என அறிமுகம் செய்துவிட்டு எதற்காக இப்படி குழப்பமாக கதைக்கிறார் எனக்கு அதிர்ச்சி, ஒருவாறு, நீங்கள் எனது அண்ணாவுடன் படித்தவர் என கூறிய பின்பு தனது தவறை உணர்ந்து கொண்டார். எந்த திரியானாலும் ஒரே விதமான கருத்தினை தொடர்ந்தும் பதிகிறார், நீங்கள் உள்ளடங்கலாக பலரும் அவரது கருத்தினை கண்டும் காணாமலும் கடந்து செல்வதனை போலவே நானும் கடந்து செல்வதுண்டு ஆனலும் மனதளவில் அனைத்து கள உறவுகளையும் மதிப்பதுண்டு முடிந்தவரை அனைத்து கள உறவுகளின் கருத்திற்கும் பதிலழிப்பதுண்டு, அனைவரிலும் கரிசனை உண்டு.
  2. ஒரு முழு அளவிலான யுத்தத்தினை ஈரானிற்கெதிராக அமெரிக்காவால் தற்போது செய்யமுடியாமைக்கான காரணம் சீரான வளங்கல் மற்றும் பாதுகாப்பான களஞ்சியம் என்பன தற்போதுள்ள மத்திய கிழக்கு சூழலில் சாத்தியம் இல்லை என உறுதியாக நம்புகிறேன், பாலைவனப்போர் போன்றதோர் உவப்பான அரசியல் நிலைப்பாடு, பிராந்திய பாதுகாப்பான பின் தள வசதிகள் தற்போது இல்லை என கருதுகிறேன். அவ்வாறு ஒரு யுத்தம் நிகழுமாயின் அந்த யுத்தம் முற்றுமுழுதான கடல்வழி வழங்கல் பாதையிலேயே தங்கியிருக்கின்ற நிலை உள்லது, தற்போதுள்ள சூழ்நிலையில் கடல்வழி வழங்கல் மிகவும் சிரமமானதுடன் பாதுகாபுமற்றது. அதிகமான இழப்பாக உள்ளது 50% இழப்பு உள்ளது.
  3. வியட்நாம் போரின் விளைவாக அமெரிக்கா தனது தங்க மதிப்பிலான முழுப்பெறுமதி பணக்கொள்கையிலிருந்து முகப்பெறுமதி பணக்கொள்கைக்கு மாறவேண்டிய நிலை ஏற்பட்டது, ஈராக் போரின் போது பல உலகநாடுகளின் பொருள், படை உதவியினூடாக நிகழ்த்தப்பட்டது, அது போல ஒரு முழு அளவிலான யுத்தம் ஒன்றினை இன்னொரு கண்டத்தில் நிகழ்த்துவது தற்போதுள்ள நிலையில் அமெரிக்காவினால் முடியாது என உறுதியாக கூறலாம், ஒரு சிறிய மட்டுப்படுத்தப்பட்ட தேர்ந்த இலக்குகளில் மட்டுமே அமெரிக்காவினால் தற்போது தாக்குதல் நடாத்தும் தகமையுள்ளது, அதனை கூட தவிர்ப்பது அமெரிக்க நலனுக்கு நல்லது, பேச்சுவாத்தையினூடாக பிரச்சினையினை தீர்க்க வாய்ப்புள்ளது. மத்திய கிழக்கில் அமெரிக்க ஆதரவு நிலைகள் பல இருந்தாலும் அமெரிக்க அடியாளக உள்ள இஸ்ரேலின் நிலைப்பாடு, அதனால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை என அமெரிக்காவிற்கு ஒரு பாதகநிலை அந்த பிராந்தியத்தில் நிலவுகிறது இதனையெல்லாம் புரிந்து கொண்டுதான் ஈரான் சண்டித்தனம் செய்கிறது, அமெரிக்காவும் வேறுவழியின்றி பொறுத்து கொள்கிறது. எதிர்காலத்தில் ஈரானின் பொருளாதார தடையினை நீக்குவதனை ஒரு பேச்சுவார்த்தையின் பேரம் பேசும் உத்தியாக அமெரிக்கா பயன்படுத்த விரும்பலாம்.
  4. தமிழ் மக்களின் போக்கு இவ்வளவு மலினப்ப்ட்டு போவது வருந்ததக்க விடயம்தான் (அதனை செய்திருந்தால்).
  5. இது ஒரு தனிப்பட்ட இரு தரப்பினருக்கிடையேயான பிணக்காக தெரிகிறது, தன்னை மக்கள் செயற்பாட்டாளராக காட்ட முனைந்து சுய தீர்மானத்தினடிப்படையில் மலர் மாலையினை கோவில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார், அதனை அணிவிப்பதும் அணிவிக்காததும் கோவில் நிர்வாகத்தின் விருப்பம் அதனால் ஏற்பட்ட பிணக்கினை நிதிமன்றில் தீர்த்து கொண்டுள்ளார்கள் அவ்வளவே, அவருக்கு சட்ட ரீதியான தீர்வு கிடைத்துள்ளது, அந்த சம்பவத்தினை தனது சுய விளம்பரத்திற்காக குறிப்பிட்ட நபர் பயன்படுத்தியுள்ளதனை போல உள்ளது. கனடிய தமிழர் பேரவையின் கட்டடத்தினை தாக்கினவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும், இவ்வாறான செயற்பாடுகளை தமிழர் நலன் விரும்பிகள் செய்திருந்தால் தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் (கனடிய தமிழர் பேரவை தந்து நிலைப்பாட்டினை தெளிவாக கூறிய பின்னும் அதற்கான மறுவினையாக இந்த சம்பவம் இருந்தால்). சிங்கள அரசின் கைகூலிகளின் வேலையாக இருக்கவும் சாத்தியமுள்ளது ஏன் கனடிய தமிழர் பேரவை கூட செய்திருக்கலாம் (அப்படி செய்திருந்தால் அவர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்). சிட்னியில் சில காலத்தின் முன்னர் எரிபொருள் நிலையத்தில் வேலையில் இருந்த இலங்கையர் தனது வாகன காப்புறுதி கட்டமுடியாமல் தனது உறவினர் உதவியினுடன் எரிபொருள் நிலையத்திலிருந்து காரினை எடுத்து சென்று ( அவர் அப்போது கடமையில் இருந்தார்.) ஒரு சிறிய கணப்பொழுதுகள் கண்காணிப்பு கருவிகளில் பதிவாகுமாறு தடயமில்லாமல் இருப்பதற்காக நீர்நிலை ஒன்றில் தள்ளிவிட்டு அந்த பணத்தினை பெற்று கொண்டாராம். தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் நிகழ்வுகளை பார்ர்கும்போது இரண்டே இரண்டு செயற்பாட்டாளர்கள்தான் அதிகளவில் செயற்படுகிறார்கள். 1. தமிழர் விரோத சிங்கள அரசின் நேரடி கை கூலிகள். 2. தமிழர் நல் செயற்பாட்டாளர் எனும் போர்வையில் இந்தமாதிரி பாதகமான செயல்களை செய்யும் சிங்கள அரசின் கைகூலிகளின் இரண்டாவது அணி.
  6. அதிகாரங்களின் மூலம் தனிப்பட்ட ரீதியில் பலனடைவதுதான் அவரது குறிக்கோளாக இருக்கலாம், இது அவரது கடந்த கால செயற்பாடு தொடர்பான கருத்தாக உள்ளது, இது தவறானதாக இருக்கலாம், ஆனால் காலம் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளது தன்னை நிரூபிப்பதற்கு, அவர்தான் தனது பாதையினை தெரிவு செய்யவேண்டும்.
  7. நல்ல ஒரு விடயத்தினை பகிர்கிறார், ஆனால் பார்வையாளர்களிடம் ஆர்வம் இல்லை.
  8. இதனை ஆர்வ கோளாறு என்று சாதாரண வழக்கில் சொல்லப்படுவதுண்டு. ஒரு விடயம் அல்லது ஒரு பொருள் எதுவாக இருப்பினும் குறிப்பிட்ட காலத்தில் திடீரென அதற்கான கேள்வி அதிகரித்த போது மக்கள் அதனை தவறவிடக்கூடாது எனும் எண்ணத்தில் அவசரப்பட்டு சரியாக ஆராயமல் செய்யும் விடயங்கள், இதனை Cognitive bias (FOMO - Fear Of Missing Out என்பதன் சுருக்கம்) என அழைக்கிறார்கள். https://www.convertize.com/psychology-black-friday/ சிறீதரனுக்கு திட்டமிடெல்லாம் சிந்தித்து மக்களை மாயையில் வைத்திருக்கும் நோக்கம் இல்லை என கருதுகிறேன்.
  9. கடந்த காலத்தில் இலங்கை ஸ்கொட்லன்ட் யார்டின் உதவியினை நாடியுள்ளது.
  10. இலங்கையின் நீதித்துறையின் சீரழிவே சர்வதேச நீதிமன்றத்தினை நாட மக்கள் விரும்புகிறார்கள், மக்கள் அனைத்தினையும் சகித்து வாழவேண்டும் என கூறுவதன்மூலம் கொஞ்ச நஞ்சமுள்ள சாதாரண மனிதர்களின் உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு காட்டு இராஜ்ஜியம் செய்ய அமைச்சர் விரும்புகிறார். இதனை எப்படி பகிரங்கமாக கூறுகிறார்கள்? எதிர்காலத்தில் மக்கள் சிந்திப்பதனை நிறுத்திவிடவேண்டும் என விரும்புகிறார்கள். ஆரம்ப பாடசாலை தமிழ் புத்தகத்தில் பக்தூர் எனும் கதை உள்ளது ரவீந்திரனாத் தாகூர் காதாசிரியர் என கருதுகிறேன்) ஒர் ஒநாய் ஒரு செல்வந்தர் வீட்டில் வசிக்கும் நாயின் செல்வசெழிப்பை பார்த்து தானும் அங்கு வாழ விரும்பும், அந்த நாயும் தன்னை எவ்வாறு அந்த வீட்டினர் கவனித்து கொள்கிறார் என கூறிகொண்டு வீடுவரை வந்துவிடும், ஓநாய் நாயின் கழுத்தில் ஒரு பட்டி காணப்பட அது என்ன என வினவ தன்னை கட்டிப்போட பயன்படுத்தும் பட்டி என நாய் கூற ஓநாயிற்கு புரிந்தது நாயின் நிலை. தொடர்ந்து நியாத்திற்காக போராடமல் விட்டால் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும். நீதியினை இலங்கையில் கோருவது மாயை என இலங்கை அமைச்சர் தன் வாயாலேயே கூறுகிறார்.
  11. தெற்காசிய நாடான இலங்கை எனும் நாடு ஒரு முன்னுதாரணமாக உள்ளது, அதனை பார்த்தும் திருந்தாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று, மக்களை பிரிக்கும் சாதாரண அரசியல் இலாபங்கள் இலங்கை போன்ற அதிகமான முட்டாள்கள் வாழும் நாடுகளிலே சாத்தியம்
  12. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகவுள்ள முன்னாள் நியுசிலாந்து அணித்தலைவர் பிரன்டன் மக்கலத்தின் ஆடுமுறை உத்தி, வழமையான 5 தின போட்டிகளில் ஆடும் பாதுகாப்பு முறையுடன் கூடிய 5 நாளிற்குரிய நேர்த்தியான ஆட்டம் போலில்லாமல் வழமைக்குமாறான ஆட்டமுறைமை, இது இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது குறிப்பாக கை மாற்றி ஆடுவது, நிலை மாற்றி ஆடுவது என. இதே போலவே மக்கலம் ஆக்கிரோசமாக இந்த மைதானத்திலே 200 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருந்தார் என கருதுகிறேன், இவரது பாணியினை இங்கிலாந்து அணிக்கு கடத்தியுள்ளார், இந்த வெற்றிகளின் பின்னே சத்தமின்றி இருந்த வீரராக மககலத்தினை கருதுகிறேன். https://en.wikipedia.org/wiki/Bazball
  13. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வரிகள் கேட்டி பைரன் என்பவரது வரிகள். இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் கருதுகோள் இரட்டை கோபுரத்தாக்குதலின் பின்னர் உருவானதாகும், அதில் சம்பந்தப்பட்ட இரண்டு தனிப்பட்ட தரப்புகளும் அவ்வாறான கருதுகோள் உருவாக்கத்திற்கு காரணியானவர்கள், தாக்குதல் நடத்தியவர் தனது தனிப்பட்ட பிணக்கினை (தன்னை பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்துவிட்டமையால்) ஒரு பொதுநலன் நடவடிக்கை என தனது பிணக்கினை தீர்த்து கொண்டார், அதன் மூலம் நிதி என பல விடயங்களில் ஆதாரமும் கிடைத்தது, மறுதரப்பிற்கு அதன் நவீன கால காலனித்துவ நோக்கத்திற்கு அது ஒரு அனுகூலமாக இருந்து. ஆனால் அதனால் உண்மையாக பாதிக்கப்பட்டது சாதாரண பொதுமக்கள் அவர்கள் மேலும் மேலும் அடக்குமுறைக்குள்ளாக்க இந்த கருதுகோள் உதவியது, மறுதரப்பிலிலும் பாதிக்கப்பட்டது சாதாரண பொதுமக்கள்தான். இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் இன்னுமொரு உதாரணம். Cognitive Distortions என்பது எமது சிந்தனைகள் எவ்வாறு ஒரே வகையாக சிந்திக்க தலைப்படுகிறது என கூறப்படுகிறது. இதில் குறிப்பாக ஒருவகை மனப்பிறழ்வினை கறுப்பு வெள்ளையாக சிந்தித்தல் என கூறுவார்கள், அதாவது ஒன்றில்லாவிட்டால் மற்றது (இரண்டே இரண்டு தெரிவுகள் கொண்ட சிந்தனை, சிந்தனைகளுக்கு அடையாளம் கொடுப்பது). இவ்வாறான மனப்பிறழ்வு சிந்தனை படித்த மற்றும் பாமர மக்களிடையே காணப்படுகிறறதாக கூறப்படுகிறது. இந்த வகை மனப்பிறழ்வினை வியாபாரத்தில் வாடிக்கையாளரது பலவீனத்தினை அவர்களுக்கெதிராகவே பயன்படுத்துவார்கள். தனிப்பட்ட சிலரது நடவடிக்கைகளுக்கு தவறான அடையாளம் கொடுத்து, வெறுப்பு சிந்தனைகளை உருவாக்குவது குறுங்கால நலனை கொடுக்கும் ஆனால் நீண்ட காலத்தில் அது அவர்களுக்கு தீமையினை அதிகம் உருவாக்கும், இலங்கையில் பேரினவாதம் போல்.
  14. உங்கள்கருத்திற்கு நன்றி, சாதாரண பத்திரிகை செய்திகளினடிப்படையாக கொண்டு சமூகமாற்றங்களை அடையாளம் காணுவதற்காக வியாபாரத்துறையில் முன்னாள் புலனாய்வாளர்கள் பயன்படுத்த பட்டுவதாக வாசித்துள்ளேன். https://trends.google.com/trends/?geo=AU&hl=en-US முக்கிய அரச அதிகாரிகள் மற்றும் அரச பிரதிநிதிகளின் தொலைதொடர்புகள் ஒரு முக்கியமான விடயமாக இருக்காதா? முன்னைய காலங்களை விட தற்கால தொலைதொடர்பில் மிகவும் பாதிப்பினை ஏற்படுத்த கூடிய நிலையில் (தொலை தொடர்பு, இணைய, பூகோள அமைவிட அவதானிப்பு) வளர்ந்துள்ளதாக கருதுகிரேன். தற்கால இலத்திரனியல் போருக்கு பெருமளவில் இந்த தொலைதொடர்பினை பயன்படுத்துகிறார்கள், வெளியில் இருந்து செய்யப்படும் செயலை கண்டுபிடித்துவிடலாம் ஆனால் அந்த சேவை வழங்குநரே செய்தால் வெளியே தெரியவாய்ப்பில்லை என கருதுகிறேன்.
  15. when the mind believes what it thinks, its names cannot be named, and tries to make it real through a name. it believes that its names are real, that there's a world out there separate from itself. that's an illusion. the whole world projected. சாதாரணமாக சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திசை திருப்ப மத ரீதியாக இஸ்லாமிய பயங்கரவாதம், இன ரீதியாக தமிழ் தேசியம் என பிரச்சினைகளை மடை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிலையினை எம்மவர்களும் அதன் தாக்கம் புரியாமல் உள்வாங்கப்படும் நிலை உருவாகி வருவது போல் காணப்படுகிறது. தனிப்பட்ட நிலையில் ஒருவரது புரிதலுக்கு ஒரு பெயர் வழங்கப்பட்டு அதனை தீவிரமாக்கி பின்னர் அதனை ஒரு தீவிரவாதமாக்குவதினூடாக அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதனை தவிர்ப்பதில் அடக்குமுறையாளருக்கு தொடர்ந்து வெற்றிகிடைத்துவருகிறது.
  16. இது இந்திய பாதுகாப்பு, மற்றும் உளவு சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்க வாய்ப்பிருக்கும் என கருதுகிறேன், இலங்கை அரசின் தகவல் பரிமாற்றம் ஒரு நெருக்கடிக்குள் தள்ளப்படலாம், சில தேசிய நிறுவனங்களை வெளியாருக்கு விற்க கூடாது, எனது கருத்து தவறாக இருக்கலாம்.
  17. https://en.wikipedia.org/wiki/1953_Iranian_coup_d'état 1953 இல் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரை தூக்கியெறிந்துவிட்டு மன்னர் ஷாவினை தொடர்ந்தும் ஆட்சிப்பொறுப்லிறுத்தியதற்கான காரணமாக BP எரிபொருள் நிறுவனம் தனது ஈரானிய எரிபொருளிற்கான கொடுப்பனவை சரியாக செய்கிறதா என பரிசோதிப்பதற்கான அனுமதியின மறுத்ததில் இருந்து ஆரம்பமாகிய விவகாரம், பின்னர் பிரித்தானிய அரசு, ஈரானிற்கெதிராக உலக பொருளாதார புறக்கணிப்பு, அதன் தொடர்ச்சியாக அந்த மக்களாட்சி அரசு தூக்கியெறியப்படும் நிலை என உருவாகியுள்ளதாகவும், இந்த சதிப்புரட்சியின் பிண்ணனியில் அமெரிக்க வகிபாகத்தினை 2013 இல் அமெரிக்கா வெளியிட்டதாக இந்த விக்கி இணைப்பில் கூறப்பட்டுள்ளது. தேசிய மயப்படுத்தல் எனும் வார்த்தை பிரயோகம் அந்தந்த நாட்டு மக்களை கவரலாம், ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது, அமெரிக்காவாகட்டும் பிரித்தானியாவாகட்டும் அந்த நாடுகளின் வெளிவிவகார கொள்கையினை முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது எனது தனிப்பட்ட அவதானிப்பு.
  18. சென்னை விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் அல்லது கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டு வெடித்தாலும் பாதிக்கப்படுவதென்னவோ சாதாரண மக்கள் என்ற அடிப்படை அறிவில்லாத செயல்.
  19. நீங்கள் தேவையில்லாமல் குழம்புகிறீர்கள். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவம், நியூசிலாந்திலிருந்து அமெரிக்கா செல்லும் இவர் மாறுபட்ட சாலை விதிகளால் நகரத்தில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்தும் நிலையினை தவிர்த்திருப்பார், அதற்கு மாறுபட்ட வீதி ஒழுங்கினை குற்றம் சாட்டுவார் அதாவது அமெரிக்காவில் வலது புறமாக வாகனத்தினை செலுத்தவேண்டும் நியுசிலாந்தில் இடது புறமாக வாகனத்தினை செலுத்தவேண்டும், அதற்கு அவருடன் கூட இருந்தவர் கூறுவார் நீங்கள் எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாகனம் ஓட்டலாம் உங்கள் சாரதி இருக்கை வீதியின் மத்திய பகுதியில் இருக்கவேண்டும் என்பார். இந்த தத்துவம் போலவே நாம் எங்கு வேண்டுமானாலும் போகலாம் அவர்கள் போல் பேசலாம் ஆனால் அடிப்படை மாறாது.
  20. 2002 இல் அமெரிக்க ஆதரவுடன் தமது படையினரை இலங்கை வலுப்படுத்தியுள்ளது. https://en.wikipedia.org/wiki/Sri_Lanka–United_States_relations அமெரிகா இலங்கை படையினருக்கு கொத்துகுண்டுகளை பயன்படுத்துவதற்கு ஆலோசனை தெரிவித்ததாக மேலே உள்ள இணைப்பில் கூறப்படுகிறது, ஆனால் இலங்கை அதனை முன்னரே பயன்படுத்தியிருந்தது. கவுதிகளினுடன் நேரடியாக போராட வேண்டியதேவை இலங்கை கடற்படைக்கு இல்லை, கவுதிகள் புலிகள் போல குறைந்த வளங்கலை மட்டும் வைத்து கொண்டே நேரடியாக மோதும் அமைப்பு அல்ல, அவர்கள் ஏவுகணைத்தாக்குதல் செய்வதுதான் கவுதிகளின் போர் முறை, இலங்கை கடற்படையிடம் ஏவுகணை எதிர்ப்பு தொழில்னுட்பம் இல்லை என்பதால் அந்த எல்லையினை விட்டு வெளியே ( இலங்கையில் துறைமுகத்தில் கட்டி வைப்பதை போல ஒரு நிலைதான்) பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையே உள்ள ஒப்பந்தினை இலங்கை அரசு மதிப்பதாக தெரிகிறது அதனாலேயெ இலங்கை தனது கடற்படையினையும் அங்கு அனுப்புகிறது (இலங்கைகு கடற்படை அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லாத போதும்), ஒரு காலத்தில் இலங்கைக்கு உதவிய அமெரிக்க, மேற்கு கூட்டணிக்கு தற்போது இலங்கை தனது நன்றி கடனை செலுத்துகிறது. அதுவும் ஒரு அரசியல்தான், இலங்கையில் தற்போதுள்ள அரச தலைவர் வலதுசாரி பின்புலம் கொண்டவர் (யு என் பி) அதனால் அமெரிக்க, மேற்கு மற்றும் இஸ்ரேலிய ஆதரவு நிலைதான் உண்மையான நிலைப்பாடு.
  21. நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள், அந்த பதிவும் இன்னுமொரு யாழ்கள முக்கிய பதிவாக வருவதற்கு வாய்ப்புள்ளது.
  22. இந்த றோ அதிகாரியினை தேன் பொறி (Honey Trap) எனும்முறையில் தம்பக்கம் அமெரிக்கா ஈர்த்திருந்ததாக கூறப்பட்டது, இந்திய இலங்கை ஒப்பந்தம் நிக்ழ்ந்த 3ம்ணித்தியாலத்திற்குள் அமெரிக்க அரசு அதனை வரவேற்றதன் பிண்ணனியிலேயே அவரினை இந்தியா அடையாளம் கண்டு கொண்டதாக பத்திரிகைகளில் வாசித்தாக நினைக்கிறேன். அவ்வாறாயின் இலஙகை அரசிற்கும் இந்த ஒப்பந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது, இலங்கை அரசு இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு ஆவணம் (Documentary) ஒன்றினை வெளியிட்டிருந்தது அதன் தலைப்பு அக்கோடிங் அன்ட் வித்டோரவல் என நினைக்கிறேன் சரியாக தெரியவில்லை, ஒப்பந்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் என்ன நிகழும் எனும் தொனியிலான ஒரு ஆவணம்.
  23. தாம் இலங்கையர் என பெருமையாக கூறுபவர்கள் அவமானப்படும் வகையில், இலங்கை ஒரு சிறுபான்மையினரினை அடக்குவதற்காக கடன் வாங்கி; இப்போது அதனை செலுத்த முடியாமல் திணறுகின்றது. இலங்கையில் இன்னமும் பயங்கரவாத சட்டத்தின் பின்னே மறைந்து கொண்டே அரசுகள் இயங்கும் கேவலமான நிலையிலேயே இலங்கை உள்ளது, இதனை பற்றி படித்த, பாமர மக்கள் கூட கவலைப்படுவதில்லை, காரணம் அந்தளவிற்கு இனவாதம் கண்ணை மூடியுள்ளது, அந்த அவமானகரமான நிலையினை கூட உணரமுடியாதவாறு எருமை மாட்டின் மேல் மழை பெய்வது போல இருக்கும் இலங்கை குடிமக்களுக்கு, அவர்கள் அரசு கொடுக்கும் பரிசு என்ன என்பதனை காலம் தீர்மானிக்கும். இலங்கை எவ்வாறான கடன் மீழ்சீரமைப்பிற்கு தயாராகிறது என்பதனை இதுவரை தெரிவிக்கவில்லை, 87 பில்லியன் கடனினை எவ்வாறு தீர்க்கவுள்ளது? debt swap 1:1 அல்லது 1:2 என்பது கூட தெரிவிக்கபடவில்லை. நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தெரியவில்லை, ஆனால் நிறுவனங்கள் தமது கடன் மறு சீரமைப்பிற்கு 1:1 என்றால் $100 கடனிற்கு $100 செலுத்துவது 1:2 என்றால் $100 கடனிற்கு $200 செலுத்துவது. ஏற்கனவே 87 பில்லியன் கடன் நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் 131% இந்த 87 பில்லியனை 1:2 என செலுத்துவதாயின் 174 பில்லியன் கடனாகிவிடும், அது தற்போதய கடனினை விட இரட்டிப்பானது. இந்த கடன் சுமைகள் அனைத்தும் மக்கள் மேலேயே சுமத்தப்படும், ஆரம்பத்தில் 10 வருட பணமுறியினை பயன்படுத்தி கடன் மீழழிப்பு செய்யப்படும் என கூறப்பட்டது, இலங்கையின் கிரடிட் தரம் தாழ்வாக உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் எவ்வாறு ஆர்வம் காட்டுவார்கள்? இலங்கை பணமுறியில் முதலிட? அல்லது அதிக வட்டி செலுத்த வேண்டும் (ஆபத்தான முதலீடு). வட்டி அதிகம் செலுத்தினால் ஒரு கட்டத்தில் மீண்டும் இலங்கை கடன் செலுத்த முடியா முறிவு நிலைக்குள்ளாகும் (குறைந்த கால முதிர்ச்சி கடன்), உதாரணமாக 30 வருட வீட்டுக்கடனை 10 வருடத்திற்குள் செலுத்துவதென்றால் மீள செலுத்தும் மாதாந்த கட்டணம் அதிகரிக்கும் அதனை போல ஒரு நிலைதான். இலங்கை தொடர்ந்தும் கடன் வாங்கி கடன் செலுத்தி ஒரு ஐந்தாறு வருடங்களின் பின்னர் மீண்டும் தற்போதுள்ளதனை விட அதிக கடனுக்கு வட்டி கூட செலுத்தமுடியாமல் தற்போதுள்ள நிலையினை விட இன்னும் மோசமானநிலையில் முறிவடையலாம். இதற்கு காரணம் அரசுகள் மட்டுமல்ல அங்குள்ள மக்களின் மனங்களும்தான் காரணம். பொதுவாக பார்க்கும் போது இலங்கை இந்த நச்சுவட்டத்திற்குள்ளே தொடர்ந்திருக்க வாய்ப்புள்ளது அல்லது ஏதாவது புரட்சிகரமான மாற்ற்ம் நிகழ வேண்டும்.
  24. சின்ன வயதில் பழைய VHF & UHF video cassette player இனை செய்மதி அலைகளை பெறுவதற்காக செய்த கோமாளித்தனங்கள் நினைவுக்கு வருகின்றது இந்த கட்டுரையினை வாசிக்கும் போது😁.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.