Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

vasee

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by vasee

  1. அவுஸ்ரேலிய அணித்தெரிவு பற்றிய சர்ச்சைகள் உள்ளது, 2 இடது கை சுழல் பந்து வீச்சாளர்கள் உள்ளார்கள், கோனலி அனைத்துறை ஆட்டக்காரராக இருந்தாலும் அவரரது துடுப்பாட்டம் சிறப்பாக இல்லை ஏற்கனவே கூனமன் இடது கை சுழல் வீசுகின்ற நிலையில் இன்னொரு பந்து வீச்சாளர் அதுவும் பகுதி நேர பந்து வீச்சாளர் தேவையா? மக்ஸ்வல் கோனலி போலவே பி பி எல் தொடரில் மோசமான போர்மில் உள்ளார்.
  2. நியுசிலாந்து அணி இந்தியணியினை ஒருநாள் போட்டி தொடரினை வென்றதற்கு பின்னர் ரி 20 போட்டியில் நியுசிலாந்து அணியினை இந்தியணி துவம்சம் செய்திருந்தது, இந்த இந்தியணியினை பார்க்கும் போது நிச்சயமாக இந்தியாவிற்குத்தான் கோப்பை போல இருக்கின்றது, நான் வளமை போல இந்தியணியினை தெரிவு செய்யவில்லை அந்த அதிர்ஸ்டமும் இந்தியணிக்கு சாதகமாக உள்ளது.
  3. பாபர் மிக மெதுவாக இந்த தொடர் முழுவதும் ஆடினார், குறித்த போட்டியில் பவர் சேர்ச் இன் முதலாவது பந்தினை தான் எதிர்கொள்வதற்காக சிமித் ஓட்டத்தினை மறுத்து விட்டார் அதனால் ஏற்பட்ட மனஸ்தாபம். சிமித் சிறப்பாக இந்த போட்டி தொடரில் விளையாடினார் ஏனோ அவுஸ்ரேலிய அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. புதிய தலைமுறை ரி20 வீரர்கள் முதலாவது பந்திலேயே அடித்தாடுகிறார்கள் பாகிஸ்தான் அணியினர் சிலர் ஆடியிருந்தார்கள் பெரிதாக ஒருவரும் சோபிக்கவில்லை, ஸாகின் சா அப்ரிடி கூட ஆரம்பத்தில் பந்து வீச்சில் தடுமாறினார் பின்னர் சிறப்பாக செயற்பட்டார், சிறப்பாக செயற்படவேண்டும் என நினைத்து மேலதிக அழுத்தத்தினை தாமாக உருவாக்கினார்களா என தெரியவில்லை. அந்த போட்டியின் பின்னர் சிட்னி சிக்ஸர் அணித்தலைவர் கூறினார் தாம் கலாச்சார இடைவெளியினை புரிந்து கொண்டோம் எனவும், பாபரினை பற்றி நல்ல விதமாகவே கூறினார், அதனை போலவே சிமித்தும் கூறியிருந்தார், பாபரின் ஈகோவினை பாதித்திருக்க கூடும் அதற்கான எதிர் வினையினை இந்திய யுரிப்கள் மிகைப்படுத்தியிருந்தார்கள் என நினைக்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் பாபர் உள்ளடங்கலாக களத்தடுப்பில் மிக உற்சாகமாக இருந்தார்கள்.
  4. பெரும்பான்மை பெளத்த சிங்களவர்கள் கூட இந்த தமிழ்தேசியம் தொடர்பான பீதியினாலேயே தமிழ் மக்களின் மீதான இன அடக்குமுறையாக சுமந்திரன் கூற முற்படுகிறார், இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை, இலங்கையில் உள்ள அனைத்து சிறுபான்மை மக்களும் நேரடியான அடக்குமுறைக்குள்ளாக்கப்படுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள். அதிகார பரவலாக்கமோ அரசியல் சட்டமைப்பு சீர்திருத்தமோ நாட்டை பிரிக்கும் என நினைப்பது ஒரு முட்டாள்தனம் அதற்கான சூழலை இந்த அடக்குமுறைகளாலேயே உருவாக்குகிறார்கள். தமிழ் தேசியம் என்பது தவிர்க்க முடியாதது என்பது போலவே உணருகின்றேன், ரே டாலியோ இன் மாறுகின்ற உலக ஒழுங்கினை கையாள்வது எனும் புத்தகத்தில் கூறியுள்ள பண்புகளினடிப்படையில் தமிழ் தேசியத்தின் பண்புகள் பல இருக்கின்றது அதனால் எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நிலை ஏற்படலாம். அது ஒரு வெறும் நிகழ்தகவு போன்ற விடயம்.
  5. தமிழ் தேசியம் தவிர்க்க முடியாத உண்மை, அந்த யதார்த்த புரிதல் எனக்கும் உள்ளது.
  6. இவரது சகோதரர் கரி கூட இத்தாலிக்காக விளையாடுகிறார். பாபர் பிபிஎல் தொடரில் சிட்னி சிக்ஸர் அணிக்காக விளையாடியிருந்தார், தொடர் முழுவதும் மோசமான போர்மில் இருந்தார்.
  7. அவுஸ்ரேலிய பிபிஎல் பார்க்கின்றவர் நீங்கள், அவுஸ்ரேலியாவிலுள்ள மெனன்டி சகோதரர்களும் இத்தாலிக்காக ஆடுகிறார்கள் என கூறப்படுகின்றது, பல சர்வதேச வீரர்களை கொண்ட அணி.
  8. அண்மையில் நடந்த போட்டித்தொடரில் பாகிஸ்தான் அவுஸ்ரேலிய அணியினை ஊதித்தள்ளியுள்ளார்கள், இந்திய இலங்கை போட்டிகள் இலங்கையில் நடைபெறுகிறது, ஒப்பீட்டளவில் இலங்கை ஆடுகளம் இந்திய மைதானங்கள் போல பந்து முட்டுக்காலுக்கீழாகவும் திரும்பாத செத்த பிட்சாக இருக்காது, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்குமிடையே ஒரு சமநிலையான போட்டியாக இருக்க வாய்ப்பாக இருக்கும் (விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய வீரர்களே சுழல் பந்து வீச்சினை சமாளிக்கக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்).
  9. இது புதிய உலக ஒழுங்கின் பிரகாரம் இல்லை என நினைக்கிறேன். எனது நண்பர் ஒருவர் இருந்தார் (இப்போதும் இருக்கிறார் என நம்புகிறேன்), அவர் பேச்சுக்கள் அவரரது தோற்றத்திற்கும் எதிரும் புதிருமாக இருக்கும், அவர் 90 களின் பிற்பகுதிகளில் கூறினார் புலிகள் இல்லாவிட்டால் இலங்கை (அவர் கூறிய வார்த்தையினை அப்படியே கூற முடியாது) பாலியல் தொழில் செய்பவரது வீட்டில் இருக்கும் வெத்திலை பெட்டி போன்றது என்றார். அது தற்போது கண்முன்னால் நடைமுறையாகி நிற்கின்றததனை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது. 4 வகையான போர் விளைவுகளை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்கிறார்கள் என கூறுகிறார்கள். அரசியல் ரீதியான வெற்றி போர் முடக்கம் வெற்றி மோசமான விளைவுகளுடன் அற்புதமான வெற்றி புலிகளை தோற்கடித்ததன் மூலம் இலங்கை பெற்ற வெற்றி 3 ஆவது வகை அதன் பின்விளைவுகள் தற்போது புலிகள் இல்லாத நிலை ஏற்படுத்திய வெற்றிடம் இலங்கையில் பல சக்திகள் தலையீடு உறுதி செய்யப்பட்டுள்ளது (இது ஒரு ஆச்சரியமான பலச்சமனிலையின் பண்பாக இருக்கின்றது). இலங்கை இதிலிருந்து என்றும் வெளியேற முடியாது (இலங்கை அரசியல் பொருளாதார ரீதியாக பிச்சைக்கார நிலையிலிருந்து). இந்த நிலையினை இலங்கை மாற்றமுடியுமா? முடியும்! ஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மதிப்பளிக்கப்பட்டு உரிமைகள் வழங்கி சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டு ஒரே சக்தியான நாடாக கட்டியமைத்தால் மட்டுமே சாத்தியம், மகா வம்ச சிங்கள மேலாதிக்க எண்ணத்தில் இருக்கும் இலங்கையால் அது சாத்தியமல்ல. இந்தியாவினை பொறுத்தவரை இலங்கை ஒரு நேர வெடிகுண்டு (உடைந்த அயல் தேசம்) எந்த ஒரு நாடும் தனது அயல் நாடு ஒரு உடைந்த தேசமாக இருக்க விரும்பாது அதனால் அதன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எப்போதும் இருக்கும். அதனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்விற்கு இந்தியா கடும் அழுத்தத்தினை இலங்கை மேல் பயன்படுத்தியே ஆக வேண்டிய நிலையினை தவிர்க்கவே முடியாது. இங்கு மகாவம்ச சிங்கள மேலாதிக்கத்தின் தோல்வி (ஆனால் இலங்கையின் தோல்வி எப்போதோ நடந்து விட்டது அதன் பெறுபேறுகள்தான் தற்போது நிகழ்கிறது) உறுதிப்படுத்தாத முறையில் (சுய நிர்ணயம், கூட்டாட்சி போன்றவற்ற வாசகங்களை தவிர்த்து ஆனால் அதே உரிமைகளை) அதிகாரப்பகிர்வு எனும் பதத்திற்கு தமிழர்கள் வரவேண்டும், அதனால் தமிழ் தேசியம் என கூறுவதனை தவிர்ப்பதன் மூலம் (மகா வம்ச சிங்கள மேலாதிக்கத்தின் முகத்தினை காக்க) பிரச்சினையினை இலகுவாக தீர்க்கலாம் என கருதுகிறேன்.
  10. இரன்டாம் உலக யுத்தத்தின் முடிவின் பின்னர், ஜேர்மனி மற்றும் ஜப்பான் இரண்டினையும் அதன் சொந்த இராணுவத்தினை பேண கூடாது எனும் கட்டுப்பாட்டிலேயே இவ்வாறான உடன்பாட்டிற்கு வந்ததாக நினைவுள்ளது. இரண்டு நாடுகளும் போர் இழப்பின் பின்னர் போர் வெற்றி, வீரம் என பேசி காலம் கடத்தாமல் அவர்களுக்கிருந்த கட்டுப்பாடுகளுக்குள்ளாகவே பொருளாதார ரீதியாக தம்மை கட்டமைத்தார்கள். எங்கோ இருக்கும் அவுஸ்ரேலியா தனது வழஙகளில் குறிப்பிட்ட பகுதியளவு உரிமை எடுக்க முற்பட்டாலே ஆட்சி கவிழ்ப்பு நிகழுகின்ற நிலை காணப்படுகிறது. அவுஸ்ரேலியாவில் வர்த்தக வரி 28% என நினைக்கிறேன், ஒரு அதிபர் மிக பெரும் இலாபம் பெறும் சுற்றுசூழல் பாதிப்பினை ஏற்படுத்தும் சுரங்க அகழ்வு வர்த்தகத்திற்கு 40% வரி விதிக்கப்போவதாக கூறினார் (அதிகரித்து வரும் வயோதிகர்களின் எண்ணிக்கையினை சமாளிப்பதற்கான பணத்தினை பெறும் முயற்சி), அவர் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதற்கு முன்னரும் பிரச்சினை ஏற்படுத்தும் அதிபர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
  11. இந்தியா, இலங்கை எல்லாம் வெறும் லேபிள்தான், உரிமைகள்தான் முக்கியம். பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருபதனை விட ட்ரம்பிடம் காசு வாங்கிக்கொண்டு அமெரிக்காவுடன் சேர்ந்தால் (கிறீன்லாந்து பேரம்) நல்ல தனிமனித உரிமை, பொருளாதார சுதந்திரம் எல்லாம் இருக்கும் (இந்தியா என லோக்கலா சிந்திக்காமல் இன்ரனெசனாலா போகலாமே), பிச்சைக்கார இலங்கையுடன் ஒட்டிக்கொண்டிருந்தால் இருக்கிறதையும் பிடுங்கி விடுவார்கள்🤣. 20. இந்தியாவின் அரசியல், பொருளாதார பங்களிப்புகளைப் பற்றி உங்கள் பார்வை என்ன? இந்தியா இந்தப் பிராந்திய வல்லரசு என்பதையும் தாண்டி ஒரு உலக வல்லரசாக மாறியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இதற்கான முக்கிய காரணம். மிக அண்டை நாடான நாம் இந்தியாவின் வளர்ச்சியை எமதாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவின் பங்களிப்பு எமது அரசியலிலும் கட்டாயமாக இருக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு ஒரு போதும் கேடாக அமையாது. இந்தியா என்றைக்குமே உலக வல்லரசாக முடியாது என்பதே தற்போதய யதார்த்தம் .
  12. கற்கால மனிதன் காட்டினில் வாழ்ந்த காலத்தில் இருந்த சுய பாதுகாப்பு பொறிமுறை முழுவதும் பல தலைமுறையாக இக்கால மனிதனுக்கும் கடத்தப்படுகிறது. இருளை கண்டால் இயல்பாக ஏற்படும் பயம், எமது புலன் மட்டுப்படுத்தப்படும் போது அதன் பின்னால் இருக்கும் ஆபத்திலிருந்து காக்க சுய பாதுகாப்பு பொறிமுறை பயத்தினை தூண்டிவிடுகிறது. இவ்வாறான பயமான சூழலில் விரைவாக செயற்படுவதற்காக மூளை குறுக்கு வழிகளை தேடுகின்றது. நவீன காலத்திற்கு இந்த விதமாக வேகமாக சிந்திப்பது பாதகமானது, ஆனால் மிருகங்கள் போல மனிதனும் சுய பாதுகாப்பு பொறிமுறையால் தூண்டப்படுகின்ற நிலை தொடர்ந்து காணப்படுகிறது. இந்த ஒலி ஆயுதம் தொடர்பாக கூறும் ஒரு தமிழ் யுரியூப் காணொளியாளர் மிகையான ஒலி அலைகளை பயன்பாடுபற்றி கூறியவர் பின்னர் இறந்த கியூப பாதுகாப்பாளர்கள் உடலங்கள் சிறிய பெட்டியில் கொண்டு செல்லப்பட்டதாக இரண்டையும் தொடுக்குக்கின்றார். ஆதிகாலத்தில் இடி மின்னல் போன்ற இயற்கை விளைவுகள் ஏற்படும் போது மனிதன் அதன் காரண காரியத்தினை விளங்கிக்கொள்ளமுடியாத நிலையில், அந்த இயற்கை விளைவுகலை தமக்கான ஆபத்தாக பார்த்து அதிலிருந்து தப்ப முதன் முதலில் உருவாக்கப்பட்டதுதான் இயற்கை தெய்வ வழிபாடு (எமது இந்து மதத்தில் அதன் தொடர்ச்சி இன்னமும் காணப்படுகிறது). பனிப்போர் காலத்தில் இரஸ்சியா "மொஸ்கோ சிக்னல்" (அதிக ஒலி அதிர்வுகள்) மூலம் வெளிநாட்டு தூதுவர்களது உடல்நிலையில் பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவ்வாறான விடயங்கள் எமது புரிதலுக்கு அப்பாற்பட்டிருக்கும் போது ஏற்படும் மிகைப்படுத்தப்பட்ட பயம் தூண்டப்படும், அதே நேரம் பயத்தில் இருக்கும் போது எமது புரிதல்கள் மட்டுப்படுத்தப்படும் (இரு வழிகளிலும் நிகழும்). இது ஒரு அமெரிக்க உளவியல் யுத்த பிரச்சாரம், இது போல எதிர்த்தரப்பினை பலவீனப்படுத்த பல யுத்திகள் அமெரிக்காவினால் கடந்த காலத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எதிரிகளுக்கு எதிராக மட்டுமல்ல சொந்த மக்களுக்கெதிராகவும் உதாரணமாக ஒரு எதிர்த்தரப்பு மிக பயங்கரமான கொடிய ஆயுதம் வைத்துள்ளது என கூறி மக்களை பீதிக்குள்ளாக்கி தனது நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிப்பது போன்ற செயல்கள். இவ்வாறான ஆயுதங்களின் பயன்பாடு மிக மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு கொண்டதாகவே உண்மையில் இருக்கும் ஆனால் அவை மிகைப்படுத்தப்படுவதற்காக அது பற்றிய குறிப்புகளை கூறாமல் விடுவதன் மூலம் மக்களின் இயல்பான சுய பாதுகாப்பு பொறிமுறையினை தூண்டிவிட்டு அதனை மிகைப்படுத்துகிறார்கள் (வெனிசுலா இராணுவத்தினர் தாம் இராணுவ சட்டத்தினை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் பரப்புரையினை பயன்படுத்தியிருக்கலாம்). போரில் இந்த உளவியல் யுத்தம் மிக காத்திரமானது.
  13. யதார்த்ததிற்கும் எதிர்பார்ப்பிற்குமிடையே இடைவெளி இருக்கும் போது, யதார்த்தத்திற்கு புறம்பான மாய மந்திரத்தால் மாங்காய் விழுத்துவோம் என வாக்குகள் வாங்கி அரசியல்வாதிகளாகி அனுகூலம் பெறமக்களை ஏமாற்றி வருடக்கணக்கில் அரசியல்வாதிகளாக வலம் வரலாம், ஆனால் உண்மையினை கூறினால் அதற்கான எதிர்வினை? கடந்தகால போரும், வெற்றியும் பேசப்படும் அளவிற்கு கூட எதிர்காலம் பற்றிய சிந்தனை தேடல் இல்லாமல் இருக்கின்றோம். இந்த இரண்டுக்கும் இடையே உள்ள யதார்த்த இடைவெளியினை கடக்க முடியாமல் இருக்கின்றோம்.
  14. 1950 இல் அமெரிக்க கொள்கையாக இரஸ்சியாவினை வெளியேயும் ஜேர்மனியினை கீழேயும் வைத்திருக்கும் இரட்டை கட்டுப்பாட்டு கொள்கையினனி அமெரிக்கா கொண்டிருந்த்து. ஜேர்மனானால் என்ன அவுஸ்ரேலியாவானால் என்ன தேசிய வளம் நலன் என பேசும்போது பிரச்சினைகள் உருவாகும். கட்சிகள் ஆட்சிக்கு வந்தபின் தமது ஆட்சியினை தக்கவைக்கவே விரும்புவார்கள்.
  15. செல்லும் செல்லாததெல்லாம் செட்டியாருக்கு சொந்தம், அமெரிக்க கண்டத்தில் ட்ரம்ப் ஒன்றெடுத்தால் ஒன்று இலவசம்.🤣
  16. அமெரிக்க இராணுவத்தினால் அவ்வாறான மரபு வழி சமரினை செய்யமுடியாது, மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் செய்யும் நிலையிலேயே இருக்கின்றது எனக்கருதுகிறேன்.
  17. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளில் பெருமளவான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செலுத்தும் நாடுகளில் ஜேர்மன் முன்னிலையில் உள்ளது ஆனால் புதிதுதாக ஐரோப்பிய ஒன்றியம் வடிவேலு நகைசுவை மாதிரி இவன் (ஜேர்மன்) ரொம்ப நல்லவன்டா எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறான் என உக்கிரேன் சுமையினையும் தலையில் வைத்துவிடுவார்களோ என பயப்பிடுகிறார் ஜேர்மன் அதிபர். அவர்களுக்கு செலன்ஸ்கியின் பதில்.🤣 தற்போது உலக நடப்பு, சிரிப்பு பகுதியாகிவிட்டது.
  18. அமெரிக்க பாதுகாப்புத் தலைவர் பீட் ஹெக்செத் முக்கிய நேட்டோ அமைச்சர்கள் கூட்டத்தைத் தவிர்க்கிறார் பென்டகனின் கொள்கைத் தலைவரும் தனிமைப்படுத்துபவருமான எல்பிரிட்ஜ் கோல்பி அதற்குப் பதிலாகக் கலந்துகொள்வார், அமெரிக்க உயர் அதிகாரிகள் நேட்டோ கூட்டத்திற்கு ஒரு துணை அதிகாரியை அனுப்புவது இது இரண்டாவது முறையாகும். கேளுங்கள் இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கூட்டத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக போதுமான அளவு செலவிடவில்லை என்று கடுமையாக விமர்சித்து சீற்றத்தைத் தூண்டிய பீட் ஹெக்செத், பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இரு அதிகாரிகளும் தெரிவித்தனர், இருவரும் சுதந்திரமாகப் பேசுவதற்கு பெயர் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. | ஷான் தியூ/இபிஏ ஜனவரி 29, 2026 மாலை 6:22 CET விக்டர் ஜாக் மற்றும் பால் மெக்லியரி எழுதியது பிரஸ்ஸல்ஸ் - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் அடுத்த மாதம் நடைபெறும் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு தனது துணை அதிகாரியை அனுப்புவார் என்று அமெரிக்க அதிகாரி மற்றும் ஐரோப்பிய தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு அட்லாண்டிக் கடல்கடந்த கூட்டணிக்கான வாஷிங்டனின் அர்ப்பணிப்பு குறித்து மேலும் கேள்விகளை எழுப்பக்கூடும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முடியும் என்று மீண்டும் மீண்டும் கூறி கூட்டணியை வெடிப்பின் விளிம்பிற்கு கொண்டு வந்ததிலிருந்து , நேட்டோவின் 32 பாதுகாப்புத் தலைவர்கள் பிப்ரவரி 12 அன்று முதல் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்திற்காக கூடுவார்கள். ஆனால், கடந்த ஆண்டு இதே கூட்டத்தில் ஐரோப்பியர்கள் தங்கள் பாதுகாப்புக்காக போதுமான அளவு செலவு செய்யவில்லை என்று கடுமையாகத் தாக்கி சீற்றத்தைத் தூண்டிய ஹெக்ஸெத் , பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுதந்திரமாகப் பேச பெயர் வெளியிட அனுமதிக்கப்பட்டுள்ள இரு அதிகாரிகளும் தெரிவித்தனர். அதற்கு பதிலாக, பாதுகாப்பு கொள்கைக்கான துணைச் செயலாளரான எல்பிரிட்ஜ் கோல்பி, அவருக்குப் பதிலாக கலந்து கொள்ள உள்ளார் என்று தூதரும் அதிகாரியும் கூறினார், இந்த முடிவு இன்னும் மாற்றத்திற்கு உட்பட்டது. கோல்பி பென்டகனில் மூன்றாவது மிக உயர்ந்த பதவியில் உள்ள சிவில் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸின் நெருங்கிய கூட்டாளி ஆவார். POLITICOவின் கருத்துக்கான கோரிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை உடனடியாக பதிலளிக்கவில்லை. "பிரிட்ஜ்" என்று செல்லப்பெயர் பெற்ற கோல்பி, பென்டகனுக்குள் ஐரோப்பாவின் மீது கடுமையான போக்கைக் கொண்டவராகக் கருதப்படுகிறார், மேலும் உலகளவில் குறைவான செயலில் உள்ள அமெரிக்க பங்கை - குறிப்பாக இராணுவ ரீதியாக - ஆதரிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். மீண்டும் மீண்டும் தாமதங்களை எதிர்கொண்டுள்ள ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான திட்டங்களை வரைவதற்கும் அவர் பொறுப்பு. கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய அமெரிக்க பாதுகாப்பு மூலோபாயத்தை வடிவமைப்பதற்கு கோல்பி பொறுப்பேற்றார், இது ஐரோப்பாவை தரமிறக்கி , அதற்கு பதிலாக அமெரிக்க தாயகத்தையும் சீனாவையும் பாதுகாப்பதற்கு வாஷிங்டன் "முன்னுரிமை அளிக்கும்" என்று கூறியது. வெளியிடப்படுவதற்கு முன்பு, இந்த ஆவணம் அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் அவர்களால் ஆழமான திருத்தங்களுக்கு உட்பட்டது , அவர் பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் வெளிச்சத்தில் சீனப் பிரிவில் மாற்றங்களை வலியுறுத்தினார். பெசென்ட்டின் உள்ளீடுகள் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு உத்தியில் சீன மொழியைக் குறைத்தன. அமெரிக்காவிற்கு "குறைவான கடுமையான" அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஐரோப்பாவில் "கூட்டாளிகள் முன்னிலை வகிப்பார்கள்" என்பதையும் பாதுகாப்பு உத்தி தெளிவுபடுத்துகிறது - இது ரஷ்யாவிற்கு ஒரு மறைமுகமான சொல். ஹெக்செத் நேட்டோ கூட்டத்தைத் தவிர்ப்பது இது முதல் முறை அல்ல . ஆனால் , கடந்த மாதம் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தனது துணை அதிகாரியை நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு அனுப்பிய பின்னர், அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் உயர்மட்டக் கூட்டத்தைத் தவறவிடுவது இது இரண்டாவது முறையாகும் . முன்னாள் நேட்டோ செய்தித் தொடர்பாளர் ஓனா லுங்கெஸ்கு, இந்த நடவடிக்கை "அமெரிக்கா தனது நட்பு நாடுகளின் கவலைகளை கவனமாகக் கேட்கவில்லை என்பதற்கான கூடுதல் சமிக்ஞையை அனுப்பும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, குறிப்பாக மார்கோ ரூபியோ கடைசி கூட்டத்தைத் தவிர்த்த பிறகு," என்றார். "இதைச் சொன்ன பிறகு, ஒரு நன்மையும் இருக்கிறது," என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவில் மூத்த உறுப்பினராகப் பணிபுரியும் லுங்கெஸ்கு கூறினார், "எல்பிரிட்ஜ் கோல்பி ... [புதிய அமெரிக்க பாதுகாப்பு மூலோபாயத்தின்] நோக்கம் மற்றும் தாக்கங்களை விளக்கவும், நட்பு நாடுகளின் கருத்துக்களைக் கேட்கவும் சிறந்த இடத்தில் உள்ளார்." https://www.politico.eu/article/us-defense-chief-pete-hegseth-to-skip-key-nato-ministerial-meeting/
  19. கியூபா மீது தேசிய அவசரநிலையை டிரம்ப் அறிவித்தார் Olha Kovalchuk, Iryna Balachuk - 30 ஜனவரி, 08:07 டொனால்ட் டிரம்ப். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 36392 வது கியூபா மீது தேசிய அவசரநிலையை அறிவிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார், இது வாஷிங்டன் தீவுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது வரிகளை விதிக்க அனுமதிக்கும் ஒரு நடவடிக்கையாகும். மூலம்: வெள்ளை மாளிகை வலைத்தளத்தை மேற்கோள் காட்டி ஐரோப்பிய பிராவ்தா விவரங்கள்: ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் மற்றும் ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா குழுக்களை உள்ளடக்கிய "பல விரோத நாடுகள், நாடுகடந்த பயங்கரவாத குழுக்கள் மற்றும் தீங்கிழைக்கும் நடிகர்களுடன்" கியூபா ஒத்துழைப்பதால், அது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அசாதாரண அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது . அமெரிக்காவின் ஆபத்தான எதிரிகளை கியூபா வைத்திருப்பதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இராணுவத் திறன்களை அதன் பிரதேசத்தில் நிலைநிறுத்த கியூபா அனுமதிக்கிறது என்றும் டிரம்ப் கூறினார். "கியூபா ரஷ்யாவின் மிகப்பெரிய வெளிநாட்டு சமிக்ஞை புலனாய்வு வசதியை நடத்துகிறது, இது அமெரிக்காவின் முக்கியமான தேசிய பாதுகாப்பு தகவல்களைத் திருட முயற்சிக்கிறது. கியூபா தொடர்ந்து PRC உடன் ஆழமான உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்குகிறது" என்று நிர்வாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமெரிக்கா இரண்டாம் நிலை வரிகளை அறிமுகப்படுத்துகிறது, அதாவது கியூபாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணெய் விற்கும் அல்லது வழங்கும் நாடுகளின் பொருட்களுக்கு வரிகள். அமெரிக்க வர்த்தகச் செயலர் மற்றும் வெளியுறவுச் செயலரின் மதிப்பீடுகளுக்குப் பிறகு, அத்தகைய கட்டணங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். பின்னணி: கடந்த ஆண்டு, அமெரிக்க செனட்டர்கள் குழு ஒன்று இதேபோன்ற வழிமுறையைப் பயன்படுத்தி ரஷ்யாவிற்கு எதிராக தடைகளை முன்மொழியும் மசோதாவைத் தொடங்கியது. ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட டிரம்ப் தயாராக உள்ளார் , அந்த நடவடிக்கைகள் குறித்து இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்தால். https://www.pravda.com.ua/eng/news/2026/01/30/8018593/
  20. டாவோஸில் ஐரோப்பாவை விமர்சித்ததற்கான காரணத்தை ஜெலென்ஸ்கி விளக்கினார்: வான் பாதுகாப்பு ஏவுகணைகள் இல்லாதது Serhiy Sydorenko, VALENTYNA ROMANENKO — 30 ஜனவரி, 10:47 பேட்ரியாட் அமைப்பு. புகைப்படம்: விமானப்படை 13807 என்பது நிதிப் பற்றாக்குறை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பற்றாக்குறைக்கு வழிவகுத்த பின்னர், ரஷ்யர்கள் உக்ரேனிய தலைநகரின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தாக்க முடிந்ததும் , ஐரோப்பாவிற்கு எதிராக தனது விமர்சன அறிக்கைகளை வெளியிடுவதற்கு தனக்கு அடிப்படைகள் இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார் . மூலம்: பத்திரிகையாளர்களுடனான உரையாடலின் போது ஜெலென்ஸ்கி விவரங்கள்: தனது பேச்சு ஐரோப்பிய தலைநகரங்களுக்கு மிகவும் கடுமையாகத் தோன்றியிருக்கலாம் என்பதை ஜெலென்ஸ்கி மறுக்கவில்லை, மேலும் " நாம் அனைவரும் வெவ்வேறு தகவல் சூழல்களில் வாழ்கிறோம் - உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகள்" என்று கூறி இதை விளக்கினார். இது தகவல்களின் அடிப்படையில் உள்ள வேறுபாடுகளைப் பற்றியது மட்டுமல்ல, நிகழ்வுகளின் பார்வையில் " உணர்ச்சிபூர்வமான " வேறுபாடுகளைப் பற்றியது என்பதையும் ஜனாதிபதி ஒப்புக்கொண்டார் . டாவோஸில் தனது உரைக்கு முன்னதாக, ரஷ்யர்கள் கியேவில் கணிசமான எண்ணிக்கையிலான இலக்குகளைத் தாக்கியபோது, எரிசக்தி உள்கட்டமைப்பு மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அரச தலைவர் விளக்கினார், மேலும் உக்ரைனின் ஆயுதப் படைகளால் இந்தத் தாக்குதலைத் தடுக்க முடியாது என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டார். "உதாரணமாக, இங்கே உக்ரைனில் கியேவின் CHP-6, CHP-5 மற்றும் CHP-4 [ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் - பதிப்பு] மீது ரஷ்ய தாக்குதல்கள் உள்ளன, அதே நேரத்தில் பாலிஸ்டிக் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் நமது வான் பாதுகாப்பு பேட்டரிகள் காலியாக உள்ளன - வெறுமனே காலியாக உள்ளன என்பதை நான் அறிவேன். இதை கற்பனை செய்து பாருங்கள்: பாலிஸ்டிக் ஏவுகணைகள் நமது எரிசக்தி உள்கட்டமைப்பிற்கு எதிராக வருகின்றன என்பது எனக்குத் தெரியும் , எங்களிடம் பேட்ரியாட் அமைப்புகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும் , மேலும் மின்சாரம் இருக்காது என்பது எனக்குத் தெரியும், ஏனென்றால் அவற்றை இடைமறிக்க ஏவுகணைகள் இல்லை," என்று அவர் கூறினார். அமெரிக்காவிடமிருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட PAC-3 ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை வாங்குவதற்கு நிதி பற்றாக்குறையே ஏவுகணை பற்றாக்குறைக்கு காரணம் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார் . இருப்பினும், அமெரிக்க ஏவுகணைகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், தனது விமர்சனம் அமெரிக்காவை நோக்கி அல்ல, குறிப்பாக ஐரோப்பாவை நோக்கி ஏன் இயக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தக் கேட்டபோது , ஜெலென்ஸ்கி நேரடியான பதிலைத் தவிர்த்தார் . " அமெரிக்கா நமக்கு ஏவுகணைகளை இலவசமாக வழங்குவதில்லை. இதை வேறு விதமாகப் பார்க்கலாம். ஐரோப்பா இதற்கு பணம் செலுத்துகிறது , மேலும் PURL முன்முயற்சியின் கீழ் தொகை செலுத்தப்படவில்லை. ஏவுகணைகள் வந்து சேரவில்லை. என்ன நடக்கிறது என்பதை நான் வெறுமனே கூறுகிறேன். அதனால்தான், உணர்ச்சி ரீதியாகவும் தகவல் ரீதியாகவும் நாம் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன் , இதனால் மற்ற அனைத்தும் பயனுள்ளதாகவும் சரியான நேரத்திலும் இருக்கும், " என்று அவர் மேலும் கூறினார். அதன் பிறகு, பற்றாக்குறை ஈடுசெய்யப்பட்டதாகவும் , ஆனால் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு நாட்கள் தாமதமாக வந்ததாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார் . "நாங்கள் இருட்டடிப்பு நிலைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு PAC-3 ஏவுகணைகள் வந்தன, " என்று அவர் கூறினார். பின்னணி: முன்னதாக, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், "இடைமறிப்பு இருப்புகளில் அமர்ந்திருக்கும்" நாடுகள் இந்த ஏவுகணைகளை உக்ரைனுக்கு மாற்றுமாறு அழைப்பு விடுத்தார் . ஜனவரி மாதத்தில், நாசாம்ஸ் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்காக நோர்வே கணிசமான எண்ணிக்கையிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு மாற்றியது. உக்ரைனின் வான் பாதுகாப்பின் நிலை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் ஒற்றுமையைப் பொறுத்தது என்று ஜெலென்ஸ்கி கூறியுள்ளார் . https://www.pravda.com.ua/eng/news/2026/01/30/8018616/
  21. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவாக இணைவது சாத்தியம் என்று ஜெலென்ஸ்கி கருதுகிறார். Serhiy Sydorenko, VALENTYNA ROMANENKO — 30 ஜனவரி, 10:35 ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன். ஸ்டாக் புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 11443 உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது ஒரு விரைவான சூழ்நிலையில் யதார்த்தமானது என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நம்புகிறார் , இதன் மூலம் தேவையான பணிகளில் ஒரு பகுதி இணைந்த பிறகு முடிக்கப்படும். மூலம்: ஜெலென்ஸ்கி, கியேவில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, ஐரோப்பிய பிராவ்தாவின் கேள்விக்கு பதிலளித்தார். விவரங்கள்: உக்ரைனின் பாதுகாப்பிற்கான இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் மிக அதிகமாக இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான தனது முயற்சியை உக்ரைன் கைவிடாது என்று ஜெலென்ஸ்கி வலியுறுத்துகிறார். "ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கும் ஐரோப்பா முழுவதற்கும் ஒரு பாதுகாப்பு உத்தரவாதமாகும். இது நமது எதிர்காலத்திற்கான பாதுகாப்பு உத்தரவாதமாகும். இது ஒரு இருத்தலியல் தேர்வு," என்று அவர் கூறினார், இது புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார யதார்த்தங்களைப் பற்றியது மட்டுமல்ல, " பகிரப்பட்ட மதிப்புகள் " பற்றியது என்றும் குறிப்பிட்டார். "ஒரு உறுதியான தேதியைப் பொறுத்தவரை, நான் எங்கள் இராஜதந்திரிகளிடம் கேட்டேன்: நாங்கள் எப்போது தொழில்நுட்ப ரீதியாக தயாராக இருப்போம்? தொழில்நுட்ப ரீதியாக, 2027 இல் நாங்கள் தயாராக இருப்போம்," என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். குறிப்பாக, தனது பதிலில், ஜெலென்ஸ்கி 2027 ஐ குறிப்பாக அதிகாரப்பூர்வ ஆவணங்களில் நிர்ணயிக்க வலியுறுத்தவில்லை, மேலும் இந்த தேதி உக்ரைனின் அணுகலுக்கான தொழில்நுட்ப தயார்நிலை தொடர்பான எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்று விளக்கினார். ஆயினும்கூட, உக்ரைன் ஒரு சிறப்பு, துரிதப்படுத்தப்பட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், மேலும் இந்தத் தேவை மற்ற விருப்பங்கள் ரஷ்ய எதிர்ப்பை எதிர்கொள்ளும் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது என்றும் விளக்கினார். "எங்களுக்கு ஆர்வமாக இருப்பது ஒரு விரைவான ரேக் . மற்ற அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது - நமது அண்டை நாடுகள் மற்றும் நமது பால்கன் நண்பர்கள் - வேட்பாளர்களாகவும், சரியாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேரும் நாடுகளுடன் - அவர்கள் போரில் ஈடுபடவில்லை, மேலும் அவர்களின் எல்லைகளிலோ அல்லது ஐரோப்பாவின் எல்லைகளிலோ ஒரு விரோதப் படை இல்லை, அது எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர்கள் இணைவதைத் தடுக்கும். ரஷ்யா எதிர்காலத்தில், அமைதிக் காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நாம் இணைவதைத் தடுக்கும் - அது வெளிப்படையானது; அவர்கள் ஏற்கனவே அதைச் செய்திருக்கிறார்கள். [...] உக்ரைன் நேட்டோவிலோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலோ இல்லாமல் இருப்பதில் அது ஆர்வமாக உள்ளது. [...] இது உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு எதிரான ஒரு கலப்பினப் போராக இருக்கும்" என்று ஜெலென்ஸ்கி கணித்தார். உறுப்பினர் சேர்க்கைக்கு சில முன்நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஐரோப்பிய தலைவர்களின் கூற்றுகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, ஒரு அரசியல் முடிவிற்குப் பிறகு இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற உக்ரைனுக்கு ஒரு பாதை இருக்கும் ஒரு மாதிரியை முன்மொழிந்தார். " நிகழ்வுக்குப் பிறகு , ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முன் உக்ரைன் தான் செய்ய உறுதியளிக்கும் அனைத்தையும் செய்ய முடியும். வேட்பாளர் அந்தஸ்துடன் இது சரியாகச் செயல்பட்டது. இது நம் நாட்டிற்கு வேலை செய்தது. [...] நாங்கள் முதலில் வேட்பாளர் அந்தஸ்தைப் பெறுகிறோம், பின்னர் பல படிகளை முடிக்கிறோம். அவற்றை நாம் முடிக்கவில்லை என்றால், எந்த அந்தஸ்தும் இருக்காது. அது ஒரு சாதாரண அணுகுமுறை," என்று ஜெலென்ஸ்கி விளக்கினார். பின்னணி: முன்னதாக, ஐரோப்பிய ஆணையம், 2027 இல் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது ஜெலென்ஸ்கியின் விருப்பம் மட்டுமல்ல , பல உறுப்பு நாடுகளின் விருப்பமும் கூட என்று கூறியது. இருப்பினும், 2027 இல் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது நம்பத்தகாதது என்று ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறினார் . உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் தேதி குறித்த தனது தொலைநோக்குப் பார்வையையும் உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் கோடிட்டுக் காட்டியுள்ளார். https://www.pravda.com.ua/eng/news/2026/01/30/8018611/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.