-
Posts
1760 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by vasee
-
அப்பாவி மக்களை குறிவைத்த இவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டியவர்கள், இவர்களது செயலை யாரும் நியாயப்படுத்தமுடியாது, சுதந்திரத்திற்காக போரிடுவதாக கூறும் இவர்களுக்கு சுதந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் உள்ளார்கள். அதேவேளை இவர்களை குற்றம் சாட்டும் அடிப்படை உரிமை இஸ்ரேலிற்கு எந்த காலத்திலும் இருந்ததில்லை, இனிமேலும் வரப்போவதில்லை. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.
-
மகாவம்ச மனோபாவம்: இலங்கையின் இன நல்லிணக்கம் எதிர்கொள்ளும் சவால்!
vasee replied to colomban's topic in அரசியல் அலசல்
கொளும்பான் வித்தியாசமான ஒரு நல்ல கட்டுரையினை இணைத்துள்ளீர்கள். மார்டின் விக்கிரமசிங்கவின் அடிமைகள் கதையினை சிறுவயதில் வாசித்துள்ளேன், அது ஒரு மாட்டு வண்டிக்காரரின் கதை, ஆனால் கதையூடாக அடிமைத்தனம் எவ்வாறு அனைத்து மட்டங்களிலும் உள்ளது என நுண்ணியமாக கதையின் போக்கில் விவரிப்பார், அந்த கதை ஒரு விபத்து சம்பவ விவரிப்பு மட்டுமே; ஆனால் அதில் இலை மறை காயாக சமூக அடக்குமுறைக்குள்ளாகும் ஒருவர் எவ்வாறு இன்னொரு தரப்பாரை அடக்குமுறைக்குள்ளாக்குவார் என்பதை விவரிக்கும். இலங்கையில் பெரும்பான்மை மட்டுமே அடக்குமுறையாளர்கள் எனும் கருதுகோள் சிறுபான்மை சமூகமான எமக்குள்ளது, ஆனால் எமது சமூகத்திற்குள்ளேயே பல அடக்குமுறைகள், மற்றுமொரு சிறுபான்மையின் மீதான அடக்குமுறை என தொடர்ந்து செல்கிறது, இதனை தடுக்க மேலைநாடுகளில் உள்ளது போல அடக்குமுறைக்கெதிராக கடும் சட்டங்கள் இயற்றப்பட்டு அதனை நடைமுறைப்படுத்தினாலேயே இலங்கையில் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் (எனது கருத்து தவறாக இருக்கலாம்), அனைத்து சமூகமும் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ அனைத்து பிரஜைகளும் சட்டத்திற்குமுன் சமம் எனும் நிலை உருவாக வேண்டும். முதலில் நிறைவேற்று அதிகாரமுள்ள (சர்வாதிகார) ஆட்சி முறைமை ஒழிக்கப்படவேண்டும் (இந்த ஆட்சி முறைமையினை தவறான நோக்கத்தில் மட்டுமே இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது). -
இந்த கூட்டணியில என்னையும் சேர்த்துக்கொள்ளலாம், 1tamilmv.phd இந்த தளத்தில் தரவிறக்கி பார்ப்பதுண்டு, அத்துடம் அமேசன்,நெட்பிளிக்ஸ் தளங்களிலும் பார்ப்பதுண்டு.
-
நடுவானில் வெடித்த சண்டை; தம்பதியால் அவசர அவசரமாகத் தரையிறங்கிய விமானம்!
vasee replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
தகவலுக்கு நன்றி, இப்போது தமிழ் மொழி கூட மறந்து போகிறது (வயது போய்விட்டது). -
நடுவானில் வெடித்த சண்டை; தம்பதியால் அவசர அவசரமாகத் தரையிறங்கிய விமானம்!
vasee replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
தற்போது இல்லை, நிங்கள் கேட்டதால சொல்கிறேன், ஆரம்பத்தில் வேலைக்கு போவதுடன் வீட்டு வேலைகள் அனைத்தும் நான் தான் செய்தேன் (சமையல் உள்ளடங்களாக, எல்லாம் ஒருவருக்கொருவர் உதவிதான்). ஆரம்பத்தில் உணவகத்தில் வேலை செய்த அனுபவம் சிறிது உள்ளது அதனால் கோப்பி தாயாரிப்பு அனுபவம் சிறிதளவு தெரியும். -
பெயர்களில் குழப்பம் எப்போதும் இருக்கும் மூளை சில வேறுபட்ட எழுத்துகளை ஒரே மாதிரி உணர்வதனை போல அதனால் பெரிதாக அதனை எவரும் கவனிப்பதில்லை அத்துடன் அது ஒரு தவறும் அல்ல ,சிலவேளைகளில் உங்களின் அவதானிப்புகளை பார்ர்கும் போது ஆச்சரியமாக இருக்கும், அதைவிட அதனையே ஒரு நகைசுவையாக கூறும் போது அதனை வாசிப்பவர்களிடம் ஒரு புன்னகை தோன்றும், ஆனால் நிங்கள் மற்றவர்களை புண்படுத்தும் நோக்குடன் எழுதவில்லை என கூறிவிட்டால் தேவையற்ற குழப்பம் இருக்காது(ஆனால் பெருமாள் நகைசுவையினை புரிந்து கொள்ள கூடிவர் என்பதால் பிரச்சினை இல்லை). ஈரோஸ் பதுளையினை இணைத்து தமிழீழம் வரைபடம் வெளியிட்டதாக நினைக்கிறேன், சிறுபான்மையினராக இருக்கும் மலையக மக்களின் குடியிருமையினையே கேள்விக்குறியாக்கும் சிங்கள அரசுக்கெதிராக செயல்படுவதனை விட இஸ்லாமிய மக்களை போல முரளிதரனின் கொள்கை மிக சாதுரியமான அரசியல் நடவடிக்கையே மலையகமக்களிற்கு சாதகமானது. நிழலி கூறுவதனை போல இதில் தவறில்லைதான், ஆனால் இன்னொரு பக்கம் தமிழர்களின் பிரச்சினைக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையினை தவிர்க்கலாம். அனைத்து சமூகமும், தனிப்பட்டவர்களும் தன்பார்க சிந்திப்பதே (சுயநலமாக) பிரச்சினைக்கு காரணமாகிவிடுகிறது.
-
டெலோ இயக்கத்திலிருந்து இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட போராளி (செட்டி) ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டதாக அவரை இலங்கை தொலைக்காட்சியில் நேர்முகம் கண்டிருந்தார்கள் அதில் அமிருக்கும் போராளி குழுக்களுக்கும் தொடர்புள்ளது என்பதனை நிறுவவே இலங்கையரசு முயன்றது. ஐரிஸ் போராளி அமைப்பு கொண்டிருந்த இராணுவம் அமைப்பு தனிப்பட இயங்கியிருக்க அரசியல் அமைப்பு எந்த வித தொடர்புமில்லாமல் இயங்கியதனை போல ஒரு நிலை உருவாகாமல் அமிரின் அரசியல் கட்சியினையும் பயங்கரவாத தடைசட்டத்தினூடே எதிர்கொள்ளும் ஒரு முயற்சி என கருதவைக்கிறது. அல்லது தனது அரசியல் எதிரிகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியா என தெரியவில்லை ( சிறிமாவின் குடியுருமையினை பறித்தது போல ஒரு செயல்).
-
நடுவானில் வெடித்த சண்டை; தம்பதியால் அவசர அவசரமாகத் தரையிறங்கிய விமானம்!
vasee replied to ஏராளன்'s topic in செய்தி திரட்டி
சில வேளைகளில் தெரிவு குறைவாக இருப்பது நல்லது, எனக்கு தெரிவு செய்வதில் பிரச்சினை உள்ளது. உதாரணமாக காலை உணவு என்ன வேணும் என கேட்டு ஒரு சின்ன பட்டியலை தருவார்கள், ஆரம்பத்தில் எதனை தெரிவு செய்வது என்பது குழப்பமாக இருக்கும் ஏதாவது இலகுவான விடயத்தினை செய்யுங்கள் என்றால் கோபம் வந்துவிடும் (அவர்கள் சிரமம் எடுத்து செய்வதினை கருத்து எடுக்கவில்லை என நினைக்கிறார்ககள் என நினைக்கிறேன்). நீங்கள் உங்களுக்கு செய்வதையே எனக்கும் செய்யுங்கள் என உசாராக கூறிவிடுவதுண்டு (பெரிதாக சமைப்பதென்று நினைக்கவேண்டாம் உடனடி பொதி செய்யப்பட்ட உலர் உணவில் கொதிநீரை விடுவதுதான் அந்த சமையல்). நிங்கள் ஒரு யாழ்கள இன்று ஒரு தகவல் தென்கச்சி சுவாமிநாதன் (ஒரு நடமாடும் புத்தகசாலை). உங்களுடைய தகவலுடன் நான் கேள்விப்பட்ட தகவலையும் இங்கு இணைக்கிறேன். கோப்பி தாயாரிப்பதற்கு பாலினை அதிகமாக சூடாக்க கூடாது என்பார்கள் (பெரும்பாலான கடைகளில் சூடு கணிக்கும் கருவி பயன்படுத்துவார்கள், ஆனால் பாத்திரத்தின் சூட்டினை உணரடிப்படையிலும் கோப்பியினை தயாரிப்பார்கள்), கோப்பித்தூளை பயன்படுத்தும் கருவியினை சரியாக சுத்திகரிக்கவேண்டும் (ஒரு கோப்பி போட்டபின்னர் சுடுநீரில் கழுவுவது நல்லது என கூறுவார்கள்), போப்பி தூள் பயன்படுத்தும் கருவியினுள் கோப்பிதூள் சம அளவில் பரவி அழுத்தம் சமமாக இருக்கவேண்டும் என கூறுவார்கள்( சுடு நீர் ஒரு பகுதியினூடாக மட்டும் துளைத்து செல்லகூடாது என்பார்கள்) அத்துடன் கோப்பியினை உடனடியாக வறுத்து உடனடியாக பயன்படுத்தும் போது சுவையாக இருக்கும் எனகூறுவார்கள், முக்கியமாக பாலின் நுரையும், கோப்பியும் (கசாயம்) அளவீடுகள் பேணப்படவேண்டும் என கூறுவார்கள் (நான் கோப்பி இரசிகன் இல்லை மேலே கூறப்பட்டவை அனைத்தும் கேள்விப்பட்டவை). -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
vasee replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
மாவீரர் நாள் கொண்டாட்டத்தை நிறுத்தினாலும் மக்கள் மனங்களில் இருந்து மாவீரர் நினைவு போகாது என நம்புகிறேன். 90 களில் தமிழகத்தில் உள்ள அகதிமுகாமில் தங்கியிருந்த இலங்கை தமிழர்கள் அக்காலகட்டத்தில் மாவீரர் நினைவினை வெளிப்படையாக காட்ட முடியாது ஆனால் குறித்த நாளில் அவரர் தத்தமது மத ஆலயங்களுக்கு சென்று நினைவு கொண்டார்கள். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
இந்த காணொளியில் அவுஸின் களத்தடுப்பு,ஆடுகளத்தன்மை (மேலே கூறிய விடயம்) பற்றியும் அஸ்வின் கூறுகிறார். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
நீங்கள் கூறுவது போலவே வர்ணையாளர்களும் குறிப்பிட்டிருந்தார்கள், சற்று மாறுதலாக உதாரணமாக அகலமான களத்தடுப்பின் மூலம் இரண்டு களத்தடுப்பு இடங்களை ஒரே நபர் கையாளும் விதமாக அதற்கேற்றவாறு களத்தடுப்பாளர்களும் தமது அதிக பட்ச உழைப்பினை வெளிப்படுத்தினர். அவ்வாறு சேமித்த (வலது புறம்) களத்தடுப்பாளர்களை (இடது புறமாக) மறு பக்கம் அதிகளவில் பயன்படுத்தியிருந்தார் விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு, குறிப்பாக பந்தினை மிக சரியான அளவுகளில் (முன் காலில் சென்று விளையாடினால் பந்து மட்டை உயரமான பகுதியில் பட்டு கட்டுப்பாட்டை இழக்கும், அதே நேரம் பின் காலில் சென்று தூக்கி அடிப்பதற்கு ஏற்ற உயரத்திற்கும் குறைவான ஒரு சிக்கலான அளவுகளில்) பந்து வீசினர் ( 3 விக்கெட்டுகள் அவ்வாறு இந்தியா இழந்த நினைவு கில், கோலி, மூன்றாம் நபர் நினைவில்லை). அளவு குறைந்த பந்துகளை வீசி மட்டையாளர்களை தூக்கி அடிக்க தூண்டினர், அதனை பிடி எடுப்பதற்காக இடது புறமாக வழமைக்கு மாறாக அதிக வீரர்களை களத்தடுப்பில் பயன்படுத்தியிருந்தார். அவுஸ் அணித்தலைவர் தனது உத்தியினை சரியாக செயல்படுத்தியிருந்தார், மறுவளமாக இந்திய அணித்தலைவர் ஏற்கனவே திட்டமிடாத சில உத்திகளை களநிலைக்கு ஏற்ப செயற்படுத்தி அதனால் பாதிப்பு ஏற்பட்டதோ என கருதுகிறேன் ( எனது கருத்து தவறாக இருக்கலாம்) உதாரணமாக சிராஜிற்கு பதிலாக சமி பந்து வீச்சு, அவசர அவசரமாக சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களை முடிக்க நினைத்தமை. இந்தியணித்தலைவரின் முடிவு பற்றி வாதப்பிரதிவாதங்கள் பல உள்ளன சரியா பிழையா என தெரியாது. -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
போட்டி ஆரம்பமாவதற்கு முதல் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தும் எதிர்மாறாக நிகழ்ந்துள்ளது. இந்த போட்டியினை முழுமையாக பார்த்தேன், ஆரம்பத்தில் இந்தியணி அவுஸின் பந்துவீச்சினை சிதறடித்த போது இந்திய முன்னால் ஆட்டக்காரரும் தற்போதய வர்ணனையாளருமான சஞ்சே மஞ்சுரேக்கர் கூறினார் அவுஸ் நாணய சுழற்சியில் வென்று தவறாக பந்து வீச்சினை தேர்வு செய்துவிட்டது, ஏனெனில் ஆடுகளம் மைதான ஈரப்பதன் ஏற்படும் போது ஏற்கனவே உள்ள மெதுவான ஆடுகளத்தில் பந்து, மேலும் காய்ந்து போன ஆடுகளம் ஈரப்பதன் ஏற்படும் போது பசை தன்மை போல் பந்தினை தாமதிக்கும்(என்பதான அர்த்தத்தில் கூறினார் sticky) அது துடுப்பாட்டத்தினை கடுமையாக்கும் என ஆனால் எதிர்மாறாக நிகழ்ந்தது, ஆடுகளத்தின் மேற்பரப்பு ஈரப்பதத்தில் இறுக்கமாகி பந்து முதலாவது இனிங்ஸினைவிட தாமதிக்காமல் மட்டைக்கு இலகுவாக வரத்தொடங்கிவிட்டது. இந்தியாவும் மைதான ஈரப்பதன் வருவதற்கு முன்னரராக சுழற்பந்து வீச்சாளரை பயன்படுத்திவிட வேண்டும் என 10 ஆவது ஓவரில் இரண்டு பக்கமுமாக சுழற்பந்து விச்சாளர்களை பயன்படுத்தியது. ஆனால் மைதான ஈரப்பதன் குறைவான அளவில் ஏற்பட்டது, மைதானத்தின் போக்கினை கணிப்பது கடினமாகவே இர்குந்தது என்பதனை நேர்முக வர்ணனையாளர்களின் கருத்தின் மூலம் தெளிவாகியிருந்தது. அவுஸிற்கு ஒரு அதிர்ஸ்டம் என்றே நான் கருதுகிறேன், மறுவளமாக இந்தியணி தோற்றுப்போன அதிர்ஸ்டமற்ற அணி, ஆனால் இந்தியணியின் தோல்விக்கு காரணம் இறுதிப்போட்டியில் அவர்களின் தரத்திற்கு அவர்கள் விளையாடததுதான் காரணம் என கருதுகிறேன். மிக சரியாக கணித்துக்கூறியுள்ளீர்கள். இந்தியணிக்கு இந்த போட்டியில் ஏற்பட்ட ஒரு தோல்வியின் மூலம் அதன் போட்டிக்கான தயாரிப்புகளை குறைசொல்லமுடியுமா தெரியவில்லை, இந்தியணி 5 பந்துவீச்சாளர்களுடனேயே பல சாதனைகளை இந்த போட்டியில் ஏற்படுத்தியுள்ளது, மறுவளமாக அவுஸ் ஒரு முழுநேர சுழற்பந்து வீச்சாளரையும் 3 முழுநேர வேக பந்து வீச்ச்சாளர்க்ளை கொண்ட மொத்தமாக 4 பந்து வீச்சாளர்களுடன் பகுதிநேர பந்துவீச்சாளர்களுடன் இந்த போட்டியினை வென்றுள்ளது. இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேரத்தில் இந்தியணி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவுஸ் தனது பகுதிநேர பந்து வீச்சாளர்களை எந்தவித சேதாரமுமின்றி 10 ஓவர்களை வீசி முடித்துவிட்டிருந்தது. இந்தியாவிற்கு தெரியும் எப்படியும் 10 ஓவர்களை பகுதிநேர பந்து வீச்சாளர்களின் மூலம்தான் அவுஸ் பயன்படுத்தவேண்டும் என, ஆனால் முதல் 10 ஓவர்களின் பின் விக்கெட்டினை இழக்காமல் அவதானமாக விளையாடி பின்னர் இந்த 10 ஓவர்களை எதிர்கொள்ளவே திட்டமிட்டிருக்கும், ஆனால் இந்தியா எதிர்பார்த்தது போல நிகழவில்லை. இந்த போட்டியில் அவுஸின் பந்துவீச்சும் களத்தடுப்பும் சிறப்பாக இருந்தது இந்தியாவின் களத்தடுப்பு மோசம் ஆனால் வளமையான இந்தியணியின் சிறப்பான பந்துவீச்சும் இந்த போட்டியில் காணாமல் போய்விட்டது. ஒரு அணியின் தரத்தினை ஒரு போட்டியின் முடிவினை மட்டும் கருத்தில் கொண்டு முடிவெடுப்பது தவறாகும் என கருதுகிறேன், இதனை இந்திய இரசிகர்கள் புரிந்து கொள்ளவேண்டும், அவுஸ்ரேலியர்கள் இதனை நன்றாக உணர்ந்துள்ளார்கள் என்றே தோன்றுகிறது, இந்த போட்டியின் வெற்றியினை அவுஸ்ரேலிய அணியும், இரசிகர்களும் சாதாரணமாக கடந்து செல்வதன் மூலம், ஆனால் இந்திய இரசிகர்கள் மட்டும் இந்த தோல்வியினை தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறார்கள். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
நீங்கள் அவுஸினை குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் எப்போதும் இந்த வகை முக்கிய ஆட்டங்களுக்கு ஒரு திட்டத்துடன் வருவார்கள். உதாரணமாக ஒரு உலக கோப்பை இறுதிப்போட்டியில் அதுவரை இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளரான வாஸ் அதிகப்படியான விக்கெட்டுகளை எடுத்த வீரராக இறுதிப்போட்டியில் அவுஸினை எதிர்கொண்டார் அவரது பந்தினை ஆரம்ப ஓவர்களில் ஏற்படுதும் (பந்து உறுதியாக இருக்கும் போது) சாதகங்கலை இல்லாமல் செய்வதற்காக ஆரம்ப ஓவர்களில் கில் கிறிஸ்ட் பந்தினை அடித்தாடினார், அதற்காக தனது கீழ் கையில் (மட்டையின் மெதுவான கையில்) உறையினுள்ளே கோல்ப் பந்தினை வைத்து விளையாடினதாக கூறப்படுகிறது (அது ஒன்றும் விதிமுறையற்ற செயல் அல்ல கீழ் கை ஆதிக்கம் செலுத்தும் போது மட்டை கட்டுப்பாட்டினை இழந்து உயர்த்தி அடித்து ஆட்டமிழக்கலாம்). இந்த ஆடுகளத்தில் (வழமையான) சடுதியான மாற்றம் ஏதாவதினை இந்திய நிர்வாகம் செய்யாவிட்டால், பொதுவாக இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகமாகும். குறிப்பாக இந்தியணியில் இரண்டு இடது கை சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர் அது அவுஸிற்கு பெரும் தலையிடியாக இருக்கும் அவர்களை இந்த போட்டியில் துவம்சம் செய்வதற்கான திட்டத்துடனே அவுஸ் களத்தில் இறங்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களில் அளவுகளையும் திசைகளையும் குழப்புவதுதான் அவுஸ் ஆரம்ப ஆட்டக்காரர்களின் திட்டமாக இருக்கும் அத்துடன் முதல் 10 ஓவருக்குள் விரைவாக ஓட்டத்தினை குவிக்க முற்படுவர் என கருதுகிறேன். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
உங்கள் கரிசனைக்கு நன்றி, இந்த வகை சூதாட்டங்களில் house always win என்பார்கள், இதில் வீடு என்பது சூதாட்ட நிறுவனம் இதனை மறுவளமாக பார்த்தால் சூதாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எபோதும் தோற்பார்கள். உதாரணமக இந்திய அவுஸ்ரேலிய ஆட்டத்திற்கான வெற்றி இலாபம் அவுஸ் 2.75 இந்தியா 1.50 3 டொலரில் 2 டொலரை இந்தியாவில் பந்தயம் வைத்தால் இலாபம் 3 டொலர் மறுவளமாக இந்தியா தோற்பதால் ஏற்படும் இழப்பினை ஈடு செய்ய (Hedge) அவுஸில் மிகுதி 1 டொலரினை இட்டால் வரும் பெறுமதி 2.75. இந்த 3 டொலருக்கும் 2.75 இடையே உள்ள இடைவெளி 0.25 (இழப்பு), இது House edge இந்த ஆட்டங்களில் அவர்கள் எப்போதும் வெல்வதற்கான காரணம் இந்த சாதக நிலைதான்(Edge). இந்த நிலைஒருபோதும் சூதாட்டத்தில் பங்கு கொள்பவர்களுக்கு சாதகமாக வரப்போவதில்லை, ஆனால் இதனை புரிந்து கொண்டே சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இழப்பு என தெரிந்து கொண்டே சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு உளவியல் ரீதியான வேறு காரணங்கள் (trigger) இருக்கலாம்(Self destruction). நீங்கள் கூறிய காலப்பகுதி 2010, உங்கள் விடயத்தில் 2009 தாக்கம் இருக்கலாமோ என கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்). அல்லது இதனை வெளியில் இருந்து பார்க்கும் என்னால் புரிந்து கொள்ளமுடியாமலும் இருக்கலாம். மற்றது நான் இந்த சூதாட்டத்தில் ஈடுபடமாட்டேன் எனவே கருதுகிறேன். -
நான் நினைக்கிறேன் நிங்கள் கூற வரும் விடயம் ஒரு நாட்டின் நீதி துறைக்குள் வரும், ஆட்சிமுறைமை என்பதனடிப்படையிலேயே இவ்வாறான பதம் (ஜனநாயகம்) பாவிக்கப்படுகிறது என கருதுகிறேன். நான் நினைக்கிறேன் நீங்கள் இதனையும் தவறாக புரிந்து கொண்டுள்ளீர்களோ என. அல்லது நான் தான் உங்களை தவறாக புரிந்து கொண்டேனோ என தெரியவில்லை, சற்று தெளிவாக எழுத முடியுமா?
-
நீங்கள் கூறுவது சரிதான், அதே போல் அமெரிக்க அதிபரும் சர்வாதிகாரிதான். சர்வாதிகாரி என்பது அனைத்து அதிகாரங்களையும் கொண்டவர் என பொருள்படும், பெரும்பாலானா நாடுகளில் உள்ள பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறைமை (Westminster system) போலில்லாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினை கொண்ட ஜனநாயக நாடாக அமெரிக்கா உள்ளது. இங்கு ஜனநாயகம் என்பது அரசினை மக்கள் தேர்ந்தெடுப்பதால் அதனை ஜனநாயகம் என கூறுகிறார்கள். சீனாவில், கட்சி நாட்டின் தலைவரை தீர்மானிக்கின்றது! அதனால்இரண்டு இடத்திலும் முடிவுப்பொருள் கிட்டதட்ட ஒன்றே. இல்ங்கையிலும் அமெரிக்க முறை ஜனநாயக அமைப்பே உள்ளது (நிறைவேற்று அதிகாரம் கொண்ட). பயங்கரவாத தடுப்புச்சட்டம் என்ற ஒன்றினை அவசரகால நிலை எனகூறி தமக்கு வேண்டாவதர்களை எல்லாம் காணாமல் போகும் கண்கட்டு வித்தைகளை இந்த ஜனநாயக ஆட்சி மூலம்தான் நிகழ்த்துகிறார்கள்.
-
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
நீங்கள் கூறுவதும் சரிதான். ஆனால் இந்திய நிர்வாகம் செய்த மைதான குளறுபடியால் ( பழைய மைதானம் பாவித்ததால்) இங்குள்ளவர்கள் நாணய சுழற்சியில் பயன்படுத்தப்பட்ட நாணயமும் மோசடி செய்யப்பட்டது என கூறி இந்தியர்களை மிகவும் இழிமைப்படுத்துகிறார்கள். இதுவரை எட்டியும் பார்த்ததில்லை இப்போது நீங்கள் கூறிய பின்புதான் எட்டிப்பார்க்கும் ஆர்வம் வந்துள்ளது ஆனால் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு ஆர்வம் இருக்குமா எனத்தெரியவில்லை. எனது இந்திய நண்பர் ஒருவர் இதனை முன்னர் முழநேர தொழிலாக செய்துவந்ததாக கூறினார், ஆர்வம் இல்லாததால் அதன் சூட்சுமங்களை காதில் வாங்கவில்லை அடுத்தமுறை அவர் அது பற்றி கூறினால் கவனமாக செவிமடுப்பேன். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவே கருதுகிறார்கள். https://www.sportingnews.com/au/cricket/news/narendra-modi-stadium-pitch-report-records-highest-scores-odis-cwc-2023/1c128ad4cb8838c5223df5a9 மைதான அறிக்கை பற்றிய இந்த இணையத்தளத்தில் உள்ள விளையாட்டு சூதாட்ட விளம்பரத்தில் இந்திய அணிக்கு 1.50 உம் அவுஸ்ரேலிய அணிக்கு 2.75 என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இணையத்தளத்தில் குறிப்பிட்ட சராசரி ஓட்டம் 243. இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய போது 244 ஓட்டங்களை பெற்றுள்ளது அதனை தென்னாபிரிக்க அணி 47.3 ஓவர்களில் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மைதானம் மெதுவானது மற்றும் சுழற்பந்து வீச்சாளருக்கு சாதகம் என கூறப்பட்டுள்ளது. மைதான ஈரப்பதன் விபரம் தெரியவில்லை, ஆனால் ஆடுகளம் மெதுவாகும் பட்சத்தில் இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடவேண்டும். அவுஸ்ரேலிய அணியின் இரு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை தவிர்த்து முன்னிலை துடுப்பாட்ட காரர்கள் வலது கை ஆட்டக்காரர்களாக உள்ளதனால் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் மிகவும் சாதகம். இந்தியணி பெரும்பாலும் வலது கை ஆட்டக்காரர்கள் கொண்ட அணி ஸ்ராக்கின் பந்து வீச்சினை சமாளித்து விட்டால் இந்தியணிக்கு பெரிதாக பிரச்சினை இல்லை. ஆனாலும் இறுதியாக நியுசிலாந்துடன் விளையாடிய போட்டியில் இந்தியணி அதிர்ஸ்டவசமாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்றாலும், முதல் இனிங்ஸில் நிலவிய அதிஅக் வெப்பநிலை எதிரணி பந்துவீச்சிற்கு சாதகமற்ற நிலையிலும் இந்தியணி எடுத்த ஓட்டங்களை நியுசிலாந்து அணி மின்விளக்கு வெளிச்சத்தில் வேகப்பந்து வீச்சு மற்றும் பழைய ஆடுகலம் இரண்டாவது இனிங்ஸில் சுழற்பந்துவீச்சாளருக்கு சாதகமான சூழ்னிலை நிலவிய போது நியுசிலாந்து அணி அதிக ஓட்ட அழுத்தங்களை எழிதாக கையாண்டது. இவ்வளவிற்கும் இந்தியணியில் உலக புகழ்பெற்ற துடுப்பாட்ட, பந்துவீச்சு கொண்ட அணி ஆனால் சாதாரண நியுசிலாந்து அணி அத்தகைய இந்திய அணீயினை கையாண்ட விதத்துடன் ஒப்பிடும்போது இந்தியணி மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். தற்போது மிக பலமான கோலியாத் போன்று திகழ்ந்த இந்தியணி நியுசிலாந்து போட்டியின் பின்னர் பலவீனமான அணி போல ஒரு தோற்றத்தினை உருவாக்கியுள்ளதுதான் சற்று சிந்திக்க வைக்கிறது. அவுஸ்ரேலிய அணி நியுசிலாந்து அணியினை விட நீண்ட தரமான துடுப்பாட்ட (வெற்றியினை தீர்மானிக்கும்) மற்றும் சிறப்பான பந்து வீச்சினை கொண்ட அணி. ஆகையால் இந்திய மைதானம் தற்போதுள்ளது போல் இல்லாமல் உயிரற்ற மைதானமாக இருக்கவேண்டும் (துடுப்பாட்டத்திற்கு சாதகமான) அதில் இந்தியணி முதலில் துடுப்பெடுத்தாடி பெரிய ஓட்டத்தினை எடுக்க வேண்டும், பின்னர் இரண்டாவது இனிங்ஸில் மைதானம் மெதுவாகும் போது அது இந்தியணிக்கு சாதகமாக அமையும். இறுதி போட்டிக்கு இந்தியா வரும் என்பதடிப்படையில் இறுதிப்போட்டிக்கான மைதானத்தினை துடுப்பாட்டத்திற்கு சாதகமாக ஏற்கனவே தயார்படுத்தியிருந்தால் இந்தியணிக்கு வாய்ப்பு அதிகம். ஆனால் என்னை பொறுத்தவரை அவுஸ்ரேலிய அணியினை எதிர்கொள்வது மிகவும் கடினமான விடயம், குறிப்பாக ஆடுகளம் சிறிது பந்துவீச்சாளருக்கு சாதகமாக இருந்தாலும் சிறிது கடினம்தான். ஆனாலும் இந்தியா வெல்லவேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு (இந்தியணி அதற்கு தகுதியான அணி), அவுஸ்ரேலியா வென்றால் அவர்களின் இம்சை தாங்கமுடியாது. -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
மிக துல்லியமாக இந்தியா வெற்றியீஇட்டும் என கணித்த உங்களுக்கு வாழ்த்துக்கள். மைதானத்தில் வெப்பம் அதிகமாக இருந்தமையால் முதல் இனிங்ஸில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை, அதே நேரம் இந்த அதிக வெப்பநிலை மைதானத்தில் இரண்டாவது இனிங்ஸில் எதிர்பார்த்த மைதான ஈரப்பதன் ஏற்படவில்லை அதனால் இரண்டாவதாக பந்துவீசிய இந்திய அணியினை எதிர்பார்த்தது போல பாதிக்கவில்லை, அத்துடன் பழைய மைதானம் இரண்டாவது இனிங்ஸில் ஒப்பீட்டளவில் பந்துவீச்சாளருக்கு சாதகமாக மாறிவிட்டது என கருதுகிறேன். மைதானம் ஆரம்பத்தில் துடுப்பாட்ட மைதானமாக இருந்து பிற்பகுதியில் ஓரளவிற்கு பந்துவீச்சாளருக்கு சாதகமான நிலை இக்காரணங்களால் ஏற்பட்டதாக உணர்கிறேன் (இந்த கருத்து தவறாக இருக்கலாம்) சுழற்பந்து வீச்சாளருக்கு மைதானம் அதிக திருப்பத்தினையும் பந்தின் சமச்சீரற்ற துள்ளலை இரண்டாவதாக பந்து வீசிய அணிக்கு வழங்கியது போல கருதுகிறேன் (ஆட்டத்தின் தொகுப்பினை மட்டுமே பார்த்தேன்). இந்தியணியின் மிக சிறப்பான ஆட்டத்தினை எந்த வகையிலும் குறைகூறுவதாக இல்லை, மிக பெரிய சாதனைகளை இந்த போட்டியில் இந்தியணி அடைந்துள்ளது. மறுவளமாக நியூசிலாந்து அணியின் திறமையினை பற்றி கருத்துகள் இந்த வெளிச்சத்தில் காணாமல் போய்விடும், நியூசிலாந்து அணி மிக திறமையாக எதிர்கொண்டார்கள், ஆனால் அவர்கள் பக்கம் நேற்று அதிர்ஸ்டம் துணைநிற்கவில்லை, நானய சுழற்சி என்ற ஒரு விடயம் அனைத்தையும் மாற்றிவிட்டதாக கருதுகிறேன்.. எனக்கு கிரிக்கெட்டினை பற்றி பெரிதாக தெரியாது வெறும் 2.5 வருட அனுபவ அடிப்படையில் கருத்து கூறுவதால் எனது கருத்து தவறாக இருக்கலாம். -
இந்த போரினால் இரஸ்சியாவிற்கோ உக்கிரேனிற்கோ பெரிதாக எந்த இலாபமும் இருப்பதாக தெரியவில்லை, இவ்வாறான சமூக விரோத எண்ணம் கொண்டவர்களை உள்ளடக்கியதாகவே இரண்டு தரப்பு இராணுவமும் உள்லது. இரஸ்சிய இவ்வாறான ஒரு சமூக விரோதிக்கு பொது மன்னிப்பு வழங்கியதை போல ஒரு காலத்தில் அமெரிக்க அரசு தடை செய்த அசோவ் படை பிரிவினரை உடைய உக்கிரேன் இராணுவமும் உள்ளது. https://english.almayadeen.net/news/politics/pentagon-lobbied-to-remove-neo-nazi-battalion-ban-succeeded இந்த தேவையற்ற அழிவுநிறைந்த போரினை நீட்டிப்பதற்காக இந்த சமூக விரோதிகளின் காலில் விழும் நிலைக்கு நாடுகள் தரம் தாழ்ந்துள்ளன.
-
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
இந்த தொடரின் முடிந்த போட்டிகளினடிப்படையில் நியுசிலாந்திற்கான வெற்றி வாய்ப்பு 17%, இந்தியாவிற்கான வெற்றி வாய்ப்பு 83% இருப்பதாகவே கூறுகிறார்கள் அதனை மறுக்கவில்லை. அதனாலேயே அனைவரும் இந்தியா இலகுவாக நியுசிலாந்தினை வென்றுவிடும் என கூறுகிறார்கள். ஆனால் நியுசிலாந்தினை வழிநடத்தும் வில்லியம்சனின் அமைதியான சுபாவமும் அவரது களத்தடுப்பு வியூகம் (சந்தர்ப்பத்திற்கேற்றவாறு) நியுசிலாந்து முண்ணனியில் இருப்பதாகவே கருதுகிறேன். மறுவளமாக இந்திய அணி தலைவர் வெளியே அமைதியாக இருப்பதாக காட்டி கொண்டாலும் அவரது உணர்வுகள் அவரை இவ்வாறான முக்கிய போட்டிக:ளில் வென்றுவிடும். மைதானத்தில் ஈரப்பதன் இருக்கும் என கூறுகிறார்கள்(முன்னர் மைதான இரப்பதன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என தவறாக கூறிவிட்டேன்) இந்த மைதானத்தில் 320 ஓட்டங்களை முதலில் துடுப்பெடுத்தாடி நியூசிலாந்து எடுத்து விட்டால் உறுதியாக நியுசிலாந்தினால் அந்த ஓட்டத்தினை வைத்து வெற்றி பெற்றுவிடலாம். நாணய சுழற்சியில் வெற்றி பெறுவது நியுசிலாந்திற்கு மிக முக்கியம் போட்டியினை வெல்வதற்கு, மறுவளமாக இந்தியா நாணய சுழற்சியில் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியே ஏனெனில் இந்தியா வெற்றி பெற்றுவிடும், அதற்கான அனைத்து தகுதியும் உள்ள ஒரே அணி இந்திய அணி. இறுதி ஓவர்களில் பந்து ஈரமானால் பந்து வீசுவது கடினமாகிவிடும் அத்துடன் ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சிற்கு மின்விளக்கு வெளிச்சத்தில் கை கொடுக்கும் முதல் 15 ஓவர்களை கடந்துவிட்டால் நியுசிலாந்து அணி பல இடது கை ஆட்டக்காரர்கலை கொண்ட அணி! குல்தீப், ஜடேயா ஆகிய இரண்டு இடது கை சுழற்பந்து வீரர்களும் தலா 10 ஓவர்கள் வீசியே ஆகவேண்டும் (5 பந்து வீச்சாளர்கள் கொண்ட அணியாக இந்திய அணியுள்ளது பாண்டியா இல்லாத இந்திய அணி பந்து வீச்சில் சிறிது பின்னடைவு) மொத்தமாக 20 ஓவர், இவர்களை நியுசிலாந்து அணி குறிவைக்கும் (வலது கை சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினை அணியில் இணைக்கமாட்டார்கள் எனவே கூறப்படுகிறது) இதனால் இரண்டாவதாக நியுசிலாந்து துடுப்பெடுத்தாடினாலும் சிலவேளை நியுசிலாந்து வெல்ல வாய்ப்புண்டு. இலங்கையுடன் விளையாடிய இறுதிப்போட்டியில் நியுசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசினார்கள் குறிப்பாக ரென்ட் போல்ட், சரியான நேரத்தில் நியுசிலாந்து அணி தனது பந்து வீச்சினை பலப்படுத்தியுள்ளது. நியுசிலாந்தின் களத்தடுப்புதான் தற்போது மிக மோசமாக உள்ளது அத்துடன் அணியின் நடுப்பகுதில் ஆடுபவர்கள் சரியாக ஆடவில்லை, இந்த ஆட்டத்தில் நீசம், பில்ப்ஸ், சாப்மன் மூவரும் சிறப்பாக விளையாடினால் இறுதி ஓவர்களில் மிக பெரிய அளவில் ஓட்டங்களை குவிப்பார்கள்(அவர்கள் மூவரும் அவ்வகையான ஆட்டக்காரர்களே), ஒரு வேளை நியுசிலாந்து இரண்டாவதாக துடுப்பெடுத்தாட நேரிட்டால் ஆரம்ப 15 ஓவர்களுக்கு விக்கட் இழப்பின்றி குறைந்த ஓட்டங்கள் குவித்தால் இந்த நடுப்பகுதி வீரர்களின் அடித்தாடும் ஆட்டம் கை கொடுக்கும். முக்கியமாக சிறந்த இந்தியணியின் பந்துவீச்சினை எவ்வாறு நியுசிலாந்து எதிர்கொள்ளப்போகிறது என்பது முக்கியம் இந்தியணியுடன் தர்மசாலாவில் விளையாடிய போது ஓரளவு சுமாராகவே விளையாடியுள்ளார்கள், அந்த அணியில் வில்லியம்சன் இடம்பெறவில்லை என கருதுகிறேன். -
ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் செய்திகள்
vasee replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
நியுசீலாந்து அணியினை இதிய அணி லீக் ஆட்டத்தில் ஏற்படுத்திய தோல்வியினூடாக இந்தியாவிற்கு அரையிறுதியில் இலகுவான வெற்றி கிடைத்துவ்டும் என கூறுகிறார்கள். இந்த போட்டியினை கோலியாத், தாவீது போட்டிக்கு இணையாக கூறுகிறார்கள். எதிர்வரும் புதனற்று மும்பாயில் நடைபெறும் போட்டி பெரிதாக மைதான ஈரப்பதன் இருக்காது என நம்புகிறேன் (கடலினை அண்டிய நகரம் என்பதால்). நியுசீலாந்து இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரென்ட் போல்ட் விக்கெட்டிற்கு மேலாக வந்து வீசும் பந்துகள் இந்திய நட்சத்திர ஆரம்ப ஆட்டக்காரர்களை சிரமத்திற்குள்ளாக்கும், அவர் வழமையாக பந்தினை மட்டையின் வெளி விளிம்பிலிருந்து உள்நோக்கி திருப்பும் பந்துகளுக்கு ரோகித் சர்மா மிகவும் சிரமப்படுவார், எல் பி டபிள்யு முறையில் ஆட்டம் இழப்பார் அல்லது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு சிலிப்பில் பிடி கொடுத்து ஆட்டமிழப்பார். நாணய சுழற்சியில் வென்று நியுசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி இந்திய அணியினை மின் விளக்கு வெளிச்சத்தில் பந்து வீசினால் நியுசிலாந்திற்கான வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்கலாம்), ஆனால் இந்திய அணி மைதானத்தில் இறங்கி வந்து விளையாட (கோலி) முனைவார்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் நியுசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் அகலமான சிலிப்பினை வைத்து மைதான தடுப்பில் நியுசிலாந்தின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ரென்ட் போல்டின் பந்து வீச்சினை பயன்படுத்டுவது வழமை. இந்திய இரசிகர்கள் நினைப்பதுபோல நியுசிலாந்து ஆட்டம் இலகுவாக இருக்கபோவதில்லை என உறுதியாக நம்புகிறேன், சில வேளை இந்திய முதலாவது தோல்வியினை சந்திக்கலாம் இந்த போட்டியில், அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒரு ஆச்சரியமான நிகழ்வாக இருக்காது. இந்திய அணியினரை, நியுசீலாந்து அணி தொடர்ச்சியாக நெருக்கடிக்குள் உள்ளாக்ளாக்கும் முதல் 15 ஒவர்களில் இந்திய அணியின் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி அடுத்த 15 ஓவர்களின் பின்னர் லொக்கி பெர்குசனின் அளவு குறைந்த உயரமாக எழும் பந்துகளின் மூலம் இந்தியணியினரை தூக்கி அடிக்கவும், வெட்டி ஆடவும் கூக் செய்யவும் தூண்டுவதுடன் மிட்சல் சான்ட்னர் அவருக்கு துணையாக அழுத்தத்தினை பிரயோகித்து விக்கெட்டினை எடுக்க தூண்டுவார்கள் என கருதுகிறேன். நியுசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் மிக திறமையாக திட்டமிட்டு அணியினை வழிநடத்தக்கூடியவர், எனது எதிர்பார்ப்பு நியுசிலாந்து அணி, இந்திய அணிக்கு அரையிறுதியில் முதலாவது தோல்வியினை கொடுப்பார்கள். -
கருப்பு அக்டோபர், யாழ்ப்பாணம் முஸ்லிம்களுக்கு விடிவை தருமா?
vasee replied to colomban's topic in நிகழ்வும் அகழ்வும்
இதனை மறுக்கவில்லை அப்போது நிலமை கட்டுக்கடங்காமல் இருந்ததனாலேயே ஒரு ஒட்டு மொத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது, அப்போதய நிலையில் புலிகளுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ரிவிரச நடவடிக்கைக்கு முன்னர் ஏறத்தாழ 150 தமிழ் போராளிகள் (உண்மை தெரியாது) காணாமல் போனதாக கூறப்பட்டது (சிங்கள இராணுவத்துடன் சேற்ந்து இயங்கிய) அவர்கள் வேறு ஒரு சமூகத்தினராக இருந்திருந்தால் அது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக ஆகியிருக்கும். இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் தொடர்ந்தும் குறை சொல்வதால் எந்த பயனும் ஏற்படாது மென்மேலும் பிரிவினையே ஏற்படும்.