Everything posted by vasee
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
துபாயும் உபகண்ட ஆடுகளம்தான்.
-
காதலர் தினக் கதை
சீன பெண்கள் சுய பொருளாதாரத்தில் மிக் திறமையானவர்கள், என்னுடன் ஒரு பெண்மணி வேலை செய்தார் அவர் பதின்ம வயதின் இறுதிப்பகுதியில் வேலையினை ஆரம்பித்தார் 20 களின் இறுதிப்பகுதிக்குள்ளே வேலையினை விட்டு விட்டு தனது சொந்த முயற்சியில் இறங்கி விட்டார், அவர் கூறுவார் முதலாவது மில்லியன் டாலர் உழைப்பதுதான் கடினம் அதன் பின்னர் அனைத்தும் இலகுவாகிவிடும் என கூறுவார். Think & grow rich, 7 steps to wealth என இரண்டு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார், இது வரை வாசிக்கவில்லை கிட்டதட்ட 10 ஆண்டுகளாகின்றன. real estate இல் முதலிட்டிருந்தார்.
-
இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
3 வகை ஆட்டங்களிலும் இந்தியணிதான் மிக சிறந்த அணி, ஆனாலும் உபகண்டத்திற்கு வெளியே போனால் உப்புக்கண்டம் போட்டு அனுப்பிவிடுகிறார்கள்.
-
The Mehta Boys- அப்பா - மகன் உறவு பற்றி நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்த, அருமையான படம்!
படம் நன்றாக உள்ளது, நன்றி! prime video இலே இதே போல ஒரு ஒரு பிரிந்து வாழும் தந்தைக்கும் மகளுக்குமிடையேயான கதை I want to talk இதற்கு தமிழில் உப தலைப்பும் உள்ளது. அதில் அந்த சிறிய குழந்தை தனக்கு நெருக்கமான பெரியவர்களின் பேச்சை உண்மை என கருதி தந்தை பொய் கூறுகிறார் என உறுதியாக கருதியிருக்கும் போது உண்மை தாக்கும் போது குழந்தை காட்டும் அந்த அதிர்ச்சியான உணர்வினை வெளிப்படுத்தும் அழகு, மிக சிறப்பான நடிப்பு, உங்களை இந்த படமும் கவரும் என கருதுகிறேன். அந்த குழந்தைக்கு தந்தை நெருக்கமானவர் அல்ல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கிரிக் இன்போ தரவுகளின் அடிப்படையில் சிலந்தி வரைபின் அடிப்படையில் இறுதிப்போட்டிக்கு பாக்கிஸ்தானும் தென்னாபிரிக்காவும் தெரிவாகும் என வந்துள்ளது ( தரவுகளை சாட் ஜிபிடி மூலம் பெற்றுக்கொண்டேன், கணிப்பீடு தவறாக இருக்கலாம்). இதில் மைதானத்தின் பங்கும் கவனத்தில் எடுக்கப்பட்டது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
AUS நன்றி அவுஸ்ரேலிய விளையாட்டு துறை பத்திரிகையாளரான ஜெராட் கிம்பரின் சிலந்தி வரைபின் அடிப்படையில் இந்தியாவும் பாகிஸ்தானும் குழுநிலை போட்டியில் (Group A) தெரிவாகும். காணொளி
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இரண்டு அணிகளும் நல்ல அணிகள்தான் ஆனால் பெரிய அரங்கங்களில் சோபிப்பதில்லை எனும் கருத்து நிலவுகிறது. காணொளி இந்த காணொளியில் அவுஸ்ரேலிய அணி பற்றி கார்ஸா போகிளே கூறியுள்ள விடயத்தினை பாருங்கள். தற்போதய அவுஸ்ரேலிய அணி ஒரு பலவீனமான அணி ஆனால் அவர்கள் ஒரு வெல்லும் அணியாக எவ்வாறு மிளிர்கிறார்கள் எப்போதும், கடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய சார்பு இந்திய ஆடுகளத்தில் ஒப்பீட்டளவில் அவுஸ்ரேலியாவினை விட மிக பலமான இந்தியணியினை எவ்வாறு அவுஸ்ரேலியா வென்றது? அழுத்தமான சூழ்நிலைகளில் சரியாக முடிவெடுக்கும் அணியே வெற்றி பெறுகிறது, அத்துடன் அவர்களின் ஆட்ட திட்டத்தினை சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைக்க கூடிய துணிச்சலான தலைமை வேண்டும். இதனை கழுதைகளுக்கு தலைமையாக சிங்கத்தினையும், சிங்களுக்கு தலைமயாக கழுதையும் வைத்தால் சிங்க தலைமையே வெல்லும் என கூறுவார்கள். புதிய முடிவுகள் தவறாக இருந்தால் அதற்கான முழு பொறுப்பையும் அணித்தலைவர் ஏற்க வேண்டும் என பயந்து திட்டமிட்ட முறையிலேயே சூழ்நிலைக்கு ஏற்ப திட்டத்தினை மாற்றாமல் செயல்படும் அணிகள் இந்த மாதிரியான பெரிய அரங்குகளில் சொதப்புவார்கள். ஆனால் இந்த இரு அணிகளும் மிக சிறந்த அணி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உங்களுக்கான ஒரு வாசகத்தினை ஒரு திரைப்பட வாசகமான வந்தா ராஜாவாத்தான் வருவேன் என மாற்றினால் நன்றாக இருக்கும்.😁 தென்னாபிரிக்க அணியினை சொதப்புபவர்கள் என அழைப்பார்கள், அவர்களை போல இந்தியணி ஐ சி சி போட்டிகளில் சொதப்புபவர்கள், இந்த இரண்டு அணிகளையும் விட்டு தள்ளி நிற்க வேண்டும்.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆம் 2-0. இந்தியணி பவர்பிளேயிலேயே அடித்து விளையாட விரும்பும் என போகிளே கூறுகிறார், அதனால் நீண்ட ஒரு துடுப்பாட்ட நீளம் இருப்பதனை இந்தியா விரும்பும் எனும் தொணிபட கூறுகிறார். அதனால் இந்த 3 சகலதுறை ஆட்டக்காரர்களுள் ஒருவரையும், சிறந்த சுழல் பந்து வீச்சாளர் ஒருவரையும் இந்தியா தெரிவு செய்யும். நீங்கள் கூறுவது போல சுந்தரையும் அக்சரையும் எடுப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாகவே கருதுகிறேன். பந்தினை அடித்து விளையாடுவதன் மூலம் பந்தின் swing & seam இனை கட்டுப்படுத்தி பந்தினை விளையாடுவதற்கு இலகுவாக்க முடியும், அதே நேரம் களத்தடுப்பில் உள்ள கட்டுப்பாட்டினை பயன்படுத்தி நல்ல ஆரம்பத்தினையும் வழங்கலாம், அதனால் ரோகித்தின் அடித்தாடும் முயற்சி பெரும்பாலும் கைகொடுக்கும் ஆனால் ஆடுகளம் சிறிது உயிர்ப்பாக இருந்தால் ரோகித் மற்றும் கில்லால் விளையாடுவது கடினமாக இருக்கும். சுந்தர் விரல் சுழல் பந்து வீச்சாளர், இந்த துபாய் ஆடுகளத்தில் நாணய சுழற்சியில் வெல்லும் அணி முதலில் பந்து வீசவே விரும்பும். ஆடுகளம் காய்ந்து மின் ஒளியில் பந்து இலகுவாக வரும், dew (புல் பனியினால்) பந்து ஈரமாகி பந்தினை பிடிக்க முடியாது கடினமாகி விடும், அதே நேரம் பந்து வழுக்கி வரும் என்பதால் மட்டையாளருக்கு சாதகமாகி விடும். சுந்தரினால் பவர் பிளேயில் பந்து வீச முடியும், ஆனால் ஆட்டத்தின் நடுப்பகுதியில் பந்து பெரிதாக சுந்தருக்கு திரும்பாது ஆனால் இந்த ஆடுகளத்தில் flat & quicker (கிடையாகவும் வேகமாகவும்) வீசும் ஜடேயா (விரல் சுழல் பந்து வீச்சாளர்) சிறப்பான தெரிவு, அத்துடன் இரண்டு மணிக்கட்டு பந்து வீச்சாளர்களில் ஒருவரான் குல்தீப் இந்தியாவின் முதல் தெரிவாக இருக்கும் (வருணிடம் பல தெரிவுகள் இருந்தாலும்), அதற்கு அவரது அனுபவமும் முற்று முழுதான மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர் என்பதால் நான் நினைக்கிறேன் ஜடேயா, குல்தீப் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கலை இந்தியணி தெரிவு செய்யலாம். காணொளி அவுஸ்ரேலிய முன்னால் ஆட்டக்காரான கிளார்க்கின் கருத்துப்படி பார்த்தால் பையனின் டெம்ப்பிளேட் தான் சிறந்தது. துபாய் ஆடுகளம் இந்தியணிக்கு சாதகமாக இருப்பதற்கான காரணத்தினையும் கூறுகிறார், இந்தியணி ஒரே ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவது மற்றது வெவ்வேறு ஆடுகளத்திற்காக பயணிக்க தேவையில்லை என கூறுகிறார். இந்தியணியே வெல்லும் எனவும், சிறந்த ஆட்டக்காரராக ரோகித்தையும் சிறந்த பந்து வீச்சாளாராக ஆர்ச்சரையும் கூறுகிறார். அவரது அணி வரிசை (அவர் இந்த வரிசையில் கூறவில்லை பொதுவாக கூறினாலும் அவர் மனதில் உள்ளது) IND AUS Pak NZ SA ENG AFG BAN அவரின் கருத்துப்படி பார்த்தால் உங்கள் கருத்து அப்படியே தலைகீழாக உள்ளது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவும் இலங்கையில் தொடரை இழந்துதான் சென்றவர்கள் 2-0 அல்லது 3-0 என கருதுகிறேன்), இந்த அவுஸ்ரேலிய அணி புதியணி, அனுபவமற்ற அணி இந்த ஆடுகளத்தில் மெதுவான கையில் விளையாட வேண்டும், ஆனால் அவுஸ்ரேலிய அணி விரைவாக தனது தவறுகளை அடையாளம் கண்டு திருத்திவிடும் அணி அதனால் பதட்டமடைய தேவையில்லை. 2006 மேற்கு இந்திய தீவில் நடைபெற்ற உலக கோப்பையில் இலங்கை அணிக்கெதிராக கில் கிறிஸ்ட் மெதுவான் கையினை பயன்படுத்தி விளையாடுவதற்காக தனது கையுறைக்குள் கோல்ப் பந்தினை வைத்து விளையாடினதாக கூறுவார்கள், கடந்த உலக கிண்ணத்தில் இந்தியணிக்கு இடது புறத்தில் 5 வீரர்களை களத்தடுப்பு வைத்து ஒரு ஆபத்தான (Risky) திட்டத்துடன் வந்து வென்றார்கள். அவர்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் சரியான திட்டமிடலுடனே வருவார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆனால் போட்டியின் போது இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களை அதிக பட்சமாக பயன்படுத்துவார்கள் என கருதுகிறேன். குளிர் காலமாக இருப்பதால் பந்து ஆடுகளத்தில் உள்ள ஈரப்பதனால் வழுக்கி வரும் Skiddy, ஆடுகளத்தில் பந்து திரும்பாது சுழல் பந்து வீச்சாளர்களுக்கு, காரணம் ஆடுகளத்தில் உள்ள ஈரலிப்பு பந்தினை வழுவ (no grip) அனுமதிப்பதால் பந்து திரும்பாது. ஆனால் மணிக்கட்டை பயன்படுத்தி பந்து வீசும் குல்தீப் மற்றும் வருணிற்கு பந்து ஓரளவு திரும்பும். இந்த மாதிரி ஈரலிப்பு உள்ள ஆடுகளம் இரண்டு வேகம் கொண்ட ஆடுகளமாக இருக்கும், பந்து சுழல் பந்து வீச்சாளருக்கு திரும்பாது ஆனால் சில பந்து வேகமாக வழுக்கி வரும் சில பந்து தரையில் நின்று வரும், அத்துடன் பந்து உயர்ந்தும் தாழ்ந்தும் வரும், மட்டையாளர்கள் இதனை எதிர்கொள்ள நேர் கோட்டில் விளையாட முற்படுவார்கள், முக்கியமாக மெதுவான கையினை பயன்படுத்தி விளையாடாவிட்டால் மிக சிரமாக இருக்கும். ஜடேயாவுடன் குல்தீப் இனை இந்தியா இறக்க்க கூடும், சில வேளை ஆடுகளம் மோசமாக இருந்தால் இரண்டு விரல் சுழற்பந்து வீச்ச்சாளர்களான ஜடேயா மற்றும் அக்சர் விளையாட கூடும். இரண்டு வேக பந்து வீச்சாளருடன் பாண்டியாவினை மூன்றாவது வேக பந்து வீச்சாளராக இந்தியா பயன்படுத்தக்கூடும். 3 வேக பந்து வீச்சாளர்கள் + 2 சுழல் பந்து வீச்சாளர்கள், ஆனால் பாண்டியா முழுவதுமாக 10 ஓவர் போடுவாரா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.
-
இன்றைய அதிசயம்
கவிதையின் ஆரம்பத்தில் மூட நம்பிக்கையினயும் பின்னர், உலக வெப்பமயமாதலையும் குறிப்பிட்டமை கவிதையின் கரு தொடர்பில் குழப்பம் ஏற்பட்டது, நான் நினைத்தேன் நீங்கள் முட்டாள் மனிதர்களை கவிதையின் கருவாக கொண்டீர்களோ அல்லது மழையினை கவிதையின் கருவாக கொண்டீர்களோ என ஒரு குழப்பம் இருந்தமையாலேயே தெளிவிற்காக கேட்டேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கார்ஸா போகிளேயின் இந்தியா ஏன் இந்த போட்டியில் வெல்லும் என்பதான திறனாய்வு, இதில் பையனின் கருத்தான 5 சுழல் பந்து வீச்சாளர்களை இந்தியணி தக்க வைத்துள்ள விடயத்தினை பையனின் கருத்திலிருந்து எடுத்துள்ளார். காணொளி
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மற்றது கால நிலை மாறுபடும் போது குறிப்பாக கோடை காலத்தில் ஆடுகளம் காய்ந்து சுழல் பந்து வீச்சிற்கு சாதகமாகும், தற்போது அங்கு குளிர்காலம் அந்த ஆடுகளத்தில் ஈரலிப்பு இருந்தால் வேக பந்து வீச்சு மட்டுமன்றி சுழல் பந்து வீச்சிற்கும் சிலவேளை சாதகமாக இருக்கும் இரட்டை தன்மை கொண்ட ஆடுகளமாக மாறும் (பந்து தரையில் பட்டு எழும் வேகம் மாறுபடும்).
-
இன்றைய அதிசயம்
நான் அவுஸ்ரேலியா வந்த போது மழை பெய்து கொண்டேயிருந்தது, அப்போது கூறினார்கள் மழை இல்லாமல் தண்ணீருக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தார்களாம் என, நான் அவர்களிடம் கூறுவதுண்டு நான் வந்ததனால் அவுசில் மழை பெய்ததது என இன்றுவரை தண்ணீருக்கு கட்டுப்பாடில்லாமல் மழை பெய்து கொண்டே இருக்கிறது, ட்ரம்ப் அழைத்தால் அமெரிக்கா வருவது பற்றி சிந்திக்கலாம்.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஆம், இரண்டும் வெள்ளை பந்து போட்டிகள்தானே! ஆடுகளத்தின் தன்மை பற்றி அந்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆடுகளம் தொடர்பாகவே உரையாடப்பட்டதனால் ஆடுகளம் இரண்டு வகை போட்டிகளும் இரவில் ஏற்படும் Dew இரண்டு போட்டிகளிலும் பொதுவாக இருக்கும் அத்துடன் இரண்டும் வெள்ளை பந்து போட்டி ஒரே வகையாக தன்மையினை கொண்டதாகவும் இருக்கும். நீங்கள் வேறு ஏதாவது காரணத்திற்காக கூறுகிறீர்களா?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நன்றாக அனைத்தையும் நினைவில் வைத்துள்ளீர்கள்!
-
இன்றைய அதிசயம்
உங்கள் கவிதையில் தற்காலத்தில் மழை பெய்வது அதிசயம் என ஏன் கூறுகிறீர்கள்? (இந்த கவிதையின் கரு மழைதானே?)
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நான் நினைக்கிறேன் இந்தியணியினை விட பையனுக்கு அதிர்ஸ்டம் அதிகம்.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சும்மா சுவாரசியத்திற்காக எழுதிய தேவையற்ற கருத்துக்கள்தானே, அதனால் எந்த நட்டமுமில்லைதானே. அத்துடன் எமது கருத்துக்கள் மற்றவர்களை தவறாக திசை திருப்பலாம் என்பதால் நீங்கினது கூட நல்லதுதான்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கு பாகிஸ்தான் அணியினை விட இந்தியணியில் நம்பிக்கை அதிகம்.😁 பாகிஸ்தான் வென்றாலும் இந்தியா வெல்லாது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்னை ஏன் குறை கூறுகிறீர்கள்? பாகிஸ்தான் சூழ்நிலை இந்தியணிக்கு மிகவும் சாதகமானது (கட்டாந்தரை), இந்தியணி இளகிய இரும்பைக்கண்டால் அடிப்பவர்கள், ஆனால் அவர்கள் செய்த அரசியலால் துபாயில் போய் தாங்களாகவே சூனியம் செய்துள்ளார்கள், முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல். இந்தியணியால் மிக சிறந்த வேக பந்துவீச்சையும் சமாளிக்க முடியாது, மிக சிறந்த சுழல் பந்துவீச்சையும் சமாளிக்க முடியாது அண்மையில் இலங்கை கூட தனது சுழல் பந்து வீச்சு மைதானத்தில் இந்தியாவின் பல்லை புடுங்கி அனுப்பியிருந்தார்கள், நியுசிலாந்து அவர்களின் நாட்டிற்கே போய் உதைத்தார்கள் அவர்களது சுழற்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளங்களில். துபாய் ஆடுகளம் நான் கூறுவது போல வேக பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தாலும் சரி நீங்கள் கூறுவது போல சுழல் பந்து வீச்சிற்கு ஏற்ற சிறந்த ஆடுகளமாக இருந்தாலும் இந்தியாவினால் விளையாட முடியாது, துபாய் ஆடுகளம் செத்து போன ஆடுகளமாக இருந்தாலே இந்தியா சிறப்பாக ஆடும் ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வென்ற ரி20 உலக கிண்ண போட்டியிலும் இந்தியா வென்றது ஒரு விபத்தாகவே வென்றது. இந்தியணிக்கு இப்படி பல வரலாறு உள்ளது அதனாலேயே இந்தியணி இன்னுமொரு ஐ சி சி போட்டியில் விபத்தாக கூட வெல்வதற்கு வாய்ப்பு இல்லை என கூறினேன்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கில்லை அதிக ஓட்டங்கள் பெறுபவர் என தெரிவு செய்துள்ளீர்கள், சரிபார்க்கவும்.😁
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
துபாய் சர்வதேச மைதானம், UAE: ILT20 2025 சீசனுக்கு முன்னதாக T20 போட்டிகளில் பிட்ச் அறிக்கை, சாதனைகள் மற்றும் அதிக ஸ்கோர்கள் சோஹம் முகர்ஜி 07 ஜனவரி, 2025•மாலை 5:35 AEDT சிறந்த கிரிக்கெட் வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் பந்தயம் கட்ட கிளிக் செய்யவும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் தலா ஒரு பட்டத்தை வென்ற பிறகு, சர்வதேச லீக் டி20 (ILT20) போட்டியின் மூன்றாவது சீசனுக்கு தயாராகி வருகிறது. ஆறு அணிகள் கொண்ட லீக் ஜனவரி 11 சனிக்கிழமை தொடங்கி ரவுண்ட் ராபின் முறையில் 34 ஆட்டங்கள் நடைபெறும், பிளேஆஃப்கள் பிப்ரவரி 9 வரை நடைபெறும். போட்டியின் தொடக்க ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (DICS) இரவு 8:45 மணிக்கு (IST) துபாய் கேபிடல்ஸ் மற்றும் MI எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். துபாய் சர்வதேச மைதானத்தில் T20 சாதனைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் TSN உங்களுக்குச் சொல்கிறது. துபாய் சர்வதேச மைதானம் எத்தனை டி20 போட்டிகளை நடத்தியது? துபாய் சர்வதேச மைதானம் மொத்த டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் 230 ஆட்டங்களை நடத்தியுள்ளது. அவற்றில் முதல் போட்டி 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது, அதில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாய் சர்வதேச மைதானத்தின் கொள்ளளவு என்ன? துபாய் சர்வதேச மைதானம் சுமார் 25,000 பேர் அமரக்கூடிய திறன் கொண்டது. துபாய் சர்வதேச மைதானம்: ஆடுகள அறிக்கை துபாய் சர்வதேச மைதானம் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருவருக்கும் உதவியாக இருக்கும். பந்து வீச்சாளர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் ஆரம்ப ஓவர்களில் மேற்பரப்பு உதவியைப் பெறுகிறார்கள். புதிய பந்தைப் பயன்படுத்தி ஆடுகளம் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் வழங்குகிறது. இருப்பினும், முதல் சில ஓவர்களுக்குப் பிறகு பேட்ஸ்மேன்கள் போட்டியின் மீது தங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வார்கள். நடு ஓவர்களில் ரன்கள் எடுப்பது எளிதாகிவிடும். ஆடுகளத்தின் மேற்பரப்பு காரணமாக, சுழற்பந்து வீச்சாளர்கள் சில நேரங்களில் ஆட்டத்தை தக்கவைத்துக்கொள்வது கடினமாக இருக்கும். மைதானம் துரத்தும் அணிக்கு சாதகமாக இருக்கும். டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் ஒரு பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் சர்வதேச மைதானம், துபாய்: டி20 போட்டிகளில் சராசரி ஸ்கோர்கள் மற்றும் டாஸ் முடிவுகள் துபாய் சர்வதேச மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 139 தமிழ் முதலில் பேட்டிங் செய்த பிறகு வென்ற போட்டிகள் 51 अनुक्षिती अनु துரத்திச் சென்ற அணி வென்ற போட்டிகள் 58 (ஆங்கிலம்) துபாய் சர்வதேச மைதானத்தில் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ன? 2020 இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 219/2 ரன்கள் எடுத்தது, இது டி20 போட்டியில் மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் டி20 போட்டிகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எவ்வளவு? 2020 ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் கே.எல். ராகுல், 132* ரன்கள் எடுத்தார். 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன், கிங்ஸ் லெவன் ஐபி அணி 206/3 ரன்கள் எடுத்தது. துபாய் சர்வதேச மைதானத்தில் டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சு எண்ணிக்கை எது? பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிராக முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக 6/24 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் இந்த மைதானத்தில் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்களைப் பெற்றார். அவருக்கு பலியானவர்களில் ஷேன் வாட்சன், ரிலே ரோசோவ் மற்றும் சர்பராஸ் அகமது ஆகியோர் அடங்குவர். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதான பிட்ச் அறிக்கை, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதான பிட்ச் அறிக்கை பேட்டிங் அல்லது பந்துவீச்சு, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதான பிட்ச் அறிக்கை இன்று சிறந்த கற்பனை கிரிக்கெட் அணிகளை உருவாக்க பெர்ஃபெக்ட்லைனப் உங்களுக்கு உதவுகிறது. சமீபத்திய கணிப்புகள், போட்டி நுண்ணறிவுகள், வரிசை தலைமுறை கருவிகள் மற்றும் இன்னும் பலவற்றையும் அணுகவும் .சரியான வரிசையை இலவசமாக முயற்சிக்கவும் டி20கள் ஒருநாள் போட்டிகள் டி 10 துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வரவிருக்கும் போட்டிகளின் அட்டவணை , டி20 போட்டி அட்டவணை தற்போது வரவிருக்கும் போட்டிகள் எதுவும் இல்லை. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 போட்டிகளுக்கான விளையாட்டு நிலைமைகள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் டி20 கிரிக்கெட்டுக்கு ஒரு சிறந்த இடமாகும், நல்ல விளையாட்டு நிலைமைகள் மற்றும் வசதிகள் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. பேட்ஸ்மேன் நட்புறவு இது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான ஆடுகளமாக இருந்தால், உங்கள் வரிசையில் அதிக பேட்ஸ்மேன்களையும் பேட்டிங் ஆல்ரவுண்டர்களையும் தேர்வு செய்யவும். பந்து வீச்சாளர் நட்புறவு பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் உகந்த ஆடுகளமாக இருந்தால், உங்கள் வரிசையில் அதிக பந்து வீச்சாளர்களையும், பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களையும் தேர்ந்தெடுக்கவும். வேக நட்புறவு அதேபோல், ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால், அந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம், எனவே உங்கள் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்களை விட அதிக வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். சுழல் நட்புறவு ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று அர்த்தம், எனவே உங்கள் வரிசையில் வேகப்பந்து வீச்சாளர்களை விட அதிக சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டும். துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் T20 சர்வதேச சராசரி ஸ்கோர்: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் T20 சராசரி ஸ்கோர் மற்றும் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸ் கடைசி 10 போட்டிகள் 160 சராசரி மதிப்பெண் 6 சராசரி விக்கென்கள் 140 <140-180180+ க்கு மேல் 4 2 4 அதிகபட்ச ஸ்கோர் தொகுப்பு DC vs ADKR 217 / 4 02 பிப்ரவரி 2025 மிக உயர்ந்த துரத்தல் டிடிவி vs டிசி 193 / 5 05 பிப்ரவரி 2025 அதிகபட்ச ஸ்கோர் பாதுகாக்கப்பட்டது DC vs ADKR 217 / 4 02 பிப்ரவரி 2025 துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் vs இரண்டாவது இன்னிங்ஸ் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சராசரி ஸ்கோர், 4கள், 6கள், இழந்த விக்கெட், கற்பனை புள்ளிகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் கடந்த 10 போட்டிகளின் இன்னிங்ஸ் வாரியான ஒப்பீடு. முதல் இன்னிங்ஸ் 160 தமிழ் 7 3 6 113 53 - अनुक्षिती - अनुक्षिती - 53 23 ஆம் வகுப்பு 26 மாசி சராசரி இன்னிங்ஸ் ஸ்கோர்சராசரி 4 வினாடிகள்சராசரி 6 வினாடிகள்சராசரி விக்கெட்டுகள் இழப்புபேட்டிங் ஃபேண்டஸி புள்ளிகள்பவுலிங் ஃபேண்டஸி புள்ளிகள்பேஸ் ஃபேண்டஸி புள்ளிகள்ஸ்பின் ஃபேண்டஸி புள்ளிகள் 2வது இன்னிங்ஸ் 154 தமிழ் 7 3 4 107 தமிழ் 71 (அ) 33 தமிழ் 30 மீனம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கடைசி டி20 போட்டி முடிவுகள், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் டி20 சாதனைகள், துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கடைசி 5 டி20 போட்டிகளின் முடிவுகள்
-
அர்ச்சுனா எம்.பி.யின் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் படுகாயம்!
இந்திய திரைப்பட சண்டைக்காட்சி போல இருக்கிறது இது உண்மையானதா? அல்லது நவீன தொழில்னுட்பத்தில் உருவாக்கப்பட்ட காட்சியா? அர்ச்சுனா ஒருவரை இழுத்தெறியுமளவிற்கு பலமானவராக தெரியவில்லை (எனது கருத்து தவறாக இருக்கலாம்), யாரோ குசும்பிற்காக இப்படி ஒரு காணொளியினை உருவாக்கியுள்ளார்களா?