Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. இவர்கள் இருவரையும் இனி தமிழர்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள். கருணா - இந்திய சிங்களத்துடன் கூட்டு சேர்ந்து தமிழர்களை நேரடியாக அழித்த இனப்படுகொலைக்கு துணை போனவர். ஜெயா - தமிழ் மொழியையும், தமிழர் அடையாளங்களையும் அழித்து மற்றுமொரு இனப்படுகொலைக்கு துணை நிற்பவர். இவர்கள் இருவரையும் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாத வரை தமிழினத்திற்கு விடிவில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளும் இனி தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத நிலையை தமிழர்கள் நாம் உருவாக்குவோம். படத்தின் கருத்தாக்கம்: சித்ரா சுப்பிரமணியன். facebook
  2. தமிழர் விடுதலை கழகம்- நேற்று நடத்திய போராட்டத்தின ஒரு பகுதி...முற்றத்தை இடித்தமைக்கு அரசை எதிர்த்து அம்பத்தூரில் சாலை மறியல் நடைபெற்றது..
  3. நேற்று முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவர்இடிப்பின் போது நிகழ்ந்த காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான எனக்கும் என்னோடு தாக்குதலுக்கு உள்ளான தம்பி கரிகாலனுக்கும் ஆறுதலை நல்கிய அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள். நான் இப்போது நலமாக இருக்கிறேன். அய்யா நெடுமாறன் உள்ளிட்ட 85 பேர் தடுப்புக்காவலில் 14 நாட்கள் தண்டனையில் திருச்சி சிறைச்சாலையில் உள்ளனர். அவர்களை பிணையில் எடுப்பது பற்றியும் அடுத்த கட்ட போராட்டங்கள் பற்றிய முன்னெடுப்பிலும் இருக்கிறோம். ஜெயாவின் துரோக நிலையை விரைவில் விளக்கமாக எழுதுகிறேன்... தனக்கு தானே ஆப்பு வைத்துகொண்ட ஜெயாவிற்கு கோடான கோடி நன்றிகள்... செந்தில்நாதன் சேகுவேரா
  4. விஜய தரணி அவாவின் கட்ச்சி ஆக்களே அவாவை மிடியா முன்னால் வைச்சு அசிங்கப் படுத்தினவை...உண்மை சொல்ல அவாக்கு பத்தி கொண்டு வந்து விட்டது ஹா ஹா
  5. இதக் காணொளியில் 5.20 நிமிடத்தை மறக்காமல் பாருங்கோ காது குளிருது.... அந்த மானம் உள்ள தமிழனுக்கு நன்றிகள் பல......
  6. ஒரு தவறும் செய்யாத அந்த வயது போன ஜயாவுக்கு இரண்டு கிழமை ஜெயில்....இந்தியா தான் உண்மையான ஜனநாயக்க நாடு......
  7. நன்றி மல்லை அண்ணா உங்களுக்கு இருக்கிற புரிந்துணர்வு மற்றவர்களுக்கு இல்லை என்று நினைக்க வருத்தமாக்க இருக்கு.....
  8. கூத்தாடிகளையும் வேற்று இனத்தவர்களையும் தமிழன் தலைவனாக ஏற்று கொண்டால் "முள்ளி வாய்க்கால் முற்றம்" போல் இன்னும் கேவலமாக பல கொடுமைகள் தமிழர்களுக்கு நடக்கும். நாளை கூடங்குளம் என்பது உறுதி. இன்னொரு கூத்தாடி நாளை தமிழ் நாட்டிற்கு முதவராக வர துடிக்கும் கன்னட நடிகன் ரஜினியை முதல்வராக ஏற்று கொண்டாலும் இதுவே நடக்கும் கிந்தி நடிகர் சஞ்சய் மனிதராக தெரிந்த ரஜினிகாந்திற்கு ஈழ மக்களும், தமிழக மீனவனும் ஏன் மனிதர்களாக தெரியவில்லை. தமிழர் உழைப்பில் வாழும் இந்த கன்னட நடிகன் ரஜினிகாந்திற்கு பாலச்சந்திரனும் இசைப்பிரியாவும் ஏன் இளம் பிஞ்சுகளாக தெரியவில்லை. தமிழா விழித்தெழு உன் தலைவனை உன் இரத்தம் சார்ந்தவனாக தேர்ந்தெடு ஏன் என்றால் நாளை எங்கள் சந்ததி நிம்மதியாக வாழ வேண்டும். தமிழீழத்தின் வேங்கை
  9. தீ பரவட்டும் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் சுடர் பயணக்குழு முன்னெடுக்கும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" தமிழகத்தின் ஐந்து பகுதிகளில் இருந்து 04/11/2013 அன்று காலை 9 மணிக்கு மாணவர்களால் சுடரேந்தப்பட்டு தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் உள்ள எட்டு கோடி தமிழர்களையும் சந்தித்து 08/11/2013 அன்று முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் துயரச்சின்னமான "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் "அமைந்துள்ள தஞ்சையை வந்தடைகிறது. . தமிழர்களாகிய அனைவரும் இப்பயணத்தில் பங்கெடுக்க வேண்டுகிறோம். மாணவர்களின் இனஉணர்வு சுடர்பயணத்தில் பங்கெடுக்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்! தொடர்புக்கு :9790847797 ,8148751527.
  10. காமன்வெல்த்மாநாட்டை இலங்கையில்நடத்தாதே-IND-ENGஅலுவலகங்கள்முற்றுகை 25 10 2013 காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே,காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்திய-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகைப் போராட்டம் மே 17 இயக்கம் சார்பில்(25-10-2013) ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தோழர்கள்கல்ந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். முற்றுகைப் போராட்டத்தின் போது காமன்வெல்த் அமைப்பின் கொடி தீ வைத்து எரிக்கப்பட்டது. மாணவர்கள் சாலை மறியல் செய்ய முற்பட்ட போது காவல் துறைக்கும் தோழர்களுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தமிழ்த் தேச பொதுவுடமைக் கட்சியின் தலைவர் அய்யா பெ.மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தோழர் சைதை சிவா,மனித நேய மக்கள் கட்சியின் தோழர் அனிஸ், SDPI கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் அம்சா, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, இன அழிப்புக்கு எதிரான இசுலாமியர் இயக்கம், மக்கள் விடுதலை இயக்கம், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம், உயிர்த் துளிகள் இயக்கம், தமிழ்த் தேச குடியரசு இயக்கம் ஆகிய இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டனர்.
  11. தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும்! - கு.இராமகிருட்டிணன் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ---------------------------- இனப்படுகொலை செய்த இலங்கை மண்ணில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாதென்றும் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா எந்த வடிவத்திலும் பங்கேற்க கூடாதென்றும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இருபது நாள் பிரச்சார இயக்கத்தை நடத்தி விட்டு கோவையில் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, தொலைதொடர்பு அலுவலக முற்றுகை என தொடர் போராட்டங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு எந்த வகையிலும் பங்கேற்கக் கூடாது என வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் கடந்த காலங்களைப் போல் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை அலட்சியப்படுத்தி விடாமல் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த தீர்மானத்தை உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்துகிறது. காமன்வெல்த் கூட்டமைப்பிற்கு என்று விதிமுறைகள் உள்ளன. இன ஒதுக்கல் கூடாது, நிறபேதம் பார்க்கக் கூடாது, ஆண்-பெண் வேற்றுமை கூட பார்க்கக் கூடாது. சமத்துவம் காக்கப்பட வேண்டும். ஜனநாயகம், நீதி, மனித உரிமைகள், பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் இப்படி பல விதிமுறைகள் உள்ளன. இவற்றில் ஒன்று கூட சிங்கள இன வெறி மண்ணில் கடைப்பிடிக்கப் படுவது இல்லை என்பது உலகத்துக்கே தெரியும். ஆனாலும் இந்தியா எப்பாடு பட்டாவது ராஜபக்சேவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த "கமலேஷ் சர்மா' மூலமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்தை மட்டுமல்ல உலகளாவிய மனித உரிமை சட்டங்களையும், காமன்வெல்த் கூட்டமைப்பின் விதிமுறைகளையுமே அவமதிக்கிற செயலாகும். இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்களை மட்டுமல்ல இந்தியக் குடிமக்களான 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை கூட்டுப் படுகொலை செய்திருக்கிறது இலங்கை அரசு. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும். ஈழத் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்கிற தீர்மாங்கள் தமிழக சட்டமன்றத்தில் முதல்வராலேயே முன்மொழிந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றையயல்லாம் மதிக்காமல் தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவாகவே இந்திய காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. இவற்றையயல்லாம் மக்களிடையே எடுத்துக் கூறவும், காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராண போராட்ட சூழலை தமிழத்தில் உருவாக்கவும்தான் கடந்த 20 ஆம் தேதி நாகை மாவட்டம் மயிலாடுதுறையிலே தொடங்கி இந்த மாதம் 10 ஆம் தேதி சேலத்திலே முடிவடைந்த ஒரு பிரச்சார பயணத்தை நடத்தினோம். இருபது நாட்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பல்லாயிரக் கணக்கான மக்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை விளக்கியிருக்கிறோம். நாங்கள் சென்ற இடமெல்லாம் இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், முதியோர் என அனைத்துத் தரப்பு மக்களும் எங்கள் பிரச்சாரங்களுக்கும் பேராதரவை வழங்கினார்கள். இதில் உள்ள நியாயங்களை மக்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே, மக்களின் உணர்வுகளுக்கும், நியாயத்திற்கும், தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து மத்திய காங்கிரசு அரசு நடந்து கொள்ளவேண்டும். இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து வெளியேற்றவும், அங்கு மாநாடு நடைபெறாமல் தடுக்கவுமான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்கவேண்டும். இலங்கையில் மாநாடு நடந்தால், இந்தியா அதைப் புறக்கணிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு இந்தியாவின் வாயில் இருந்து வருகிறவரை நாங்கள் ஓயமாட்டோம்! தொடர்ந்து பல வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுப்போம்! என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 20-09-2013 முதல் 10-10-2013 வரையிலும் 20 நாட்கள் தினமும் பல ஊர்களிலும் கடும் வெயிலிலும் பிரச்சாரப் பயணம் ! அதன்பின்பும் கோவையில் 18-10-2013 அனைத்துக் கட்சிகளின், அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் ! 19-10-2013 கோவை காந்திபுரத்தில் அனைத்துக் கட்சிகளி
  12. வீரவணக்கம்... என்ன சொல்வது என்று தெரிய வில்லை....ஒரு கனம் இவர்களை நினைத்து பார்த்தால் மனம் கலங்கும்.....
  13. பெங்களூரில் மாபெரும் போராட்டம்- இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது ------------------------------------------------------------------------------------ சிங்கள பேரினவாத நாடான இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது என்றும்., இந்தியா அதை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெங்களூரு, கருநாடகம் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. 2000 திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எழுச்சியுற கலந்து கொண்டனர். போராட்டம் பெங்களூரு டவுனால் முன்பு 20/10/2013 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.