Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா எங்கும் மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்காக உணர்வெழுச்சியுடன் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தைக் கண்டு மத்திய அரசு, மற்றும் அதன் உளவுத்துறை என்பன மூக்கின் மேல் விரலை வைத்து மிரண்டு போய் யோசித்துக் கொண்டு இருக்கின்றனர். காவல்துறை மாணவர்களை தாக்குவதாக செய்திகள் வெளிவருகின்றது. எந்த காரணத்தைக் கொண்டும் திருப்பி அடித்து விடாதீர்கள். இது உங்கள் உண்ணா நோன்பை சீர்குலைக்க நடக்கும் ஒரு சூழச்சி… கவனமாக இருங்கள்… BBC, Channel 4, IBC, IBC Asia இன்னும் பல மீடியாக்கள் இப்பபோது தான் உங்கள் பக்கம் திசை திரும்பி உள்ளது… இந்திய உளவுதுறை இஸ்ரேலிய உளவுத்துறையுடன் இந்த மாணவர்களின் போராட்டத்தை நசுக்க ஆலோசனை மற்றும் வியூகம் வகுத்துக் கொண்டிருப்பதாக ஒரு செய்தியும் லண்டனில் கசிந்துள்ளது… கவனம் மாணவர்களே… தமிழ் நாட்டில் நடக்கும் மாணவ போராட்டங்களை அண்டைய மாநிலங்களுக்கும் பரப்புங்கள், மாணவர்கள் மேல் கை வைத்தால் எந்த மாநில மாணவனும் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டான்…. காவல்துறை மாணவர்களை அடித்த செய்தி அறிந்த மலேசிய மாணவர்கள் கொந்தளித்துள்ளனர்… இந்த மாணவ போராட்டம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விட்டது… பிள்ளையார் சுழி போட்ட லயோலா கல்லுரி மாணவர்களுக்கு நன்றி…… மாணவர் சக்க்தியே மாபெரும் சக்தி. fb
  2. என்று தனியும் இந்த சுதந்திர தாகம்!!! என்றுதான் மலரும் தனித் தமிழ் ஈழம்.....!!!காத்திருப்போம் கலையாத மனம் உள்ள வரை.... துடிப்புடன் போராடுவோம் உயிருள்ள வரை....!!! –
  3. விழுப்புரம் ஏழுமலை தொழில்ஞுட்ப கல்லூரி மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர்.... குறிப்பு: உங்களால் முடிந்தவரை ஆதரவுக்காக share செய்யுங்கள் தொடர்புக்கு: அ.அகிலன் தொலைபேசி :+919345400622 fb
  4. மாணவர் போராட்டம் ஓயாத அலையாக : ஈழ விடுதலைக்காக திருப்பூர் தொடர்வண்டி மறியல் போராட்டத்தில் மாணவ, மாணவியர் கலந்து கொண்ட காட்சி http://www.facebook.com/tamilnaduhungerstrike
  5. உறவே எங்களுக்கு நன்றி சொல்ல வேண்டாம்...இது எங்கள் கடமை...சின்னக் கவலை அந்த மாணவர்கள் கூட இருந்து போராட முடிய வில்லையே என்று
  6. மதுரையை விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காமராஜ் பொறியியல் கல்லூரியில் இலங்கை தமிழர்களுக்காக, தமிழீழ விடுதலைக்கான மாணவர் குழுவினர்முற்றுகை போராட்டம். http://www.facebook.com/tamilnaduhungerstrike/photos_stream
  7. தர்மபுரி அரசு கல்லூரி விடுதி மாணவர்களின் ராஜபக்ஷேவிற்கு எதிராக போராட்டம்.மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்போம். http://www.facebook.com/tamilnaduhungerstrike சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்இன்று மதியம் 12 மணியளவில் தங்களின் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஏற்கனவே கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பெருந்திரளான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இதுவரைகாலமும் அமைதி காத்திருந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடக்கம் தங்களின் ஈழ ஆதரவு உணர்வை தமிழரின் பாரம்பரிய இசையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது தொடர் உண்ணாவிரதமாக மாறவும் சாத்தியமிருப்பதாக கலந்துகொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். http://www.facebook.com/tamilnaduhungerstrike
  8. சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள்இன்று மதியம் 12 மணியளவில் தங்களின் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஏற்கனவே கல்லூரிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பெருந்திரளான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர். இதுவரைகாலமும் அமைதி காத்திருந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று தொடக்கம் தங்களின் ஈழ ஆதரவு உணர்வை தமிழரின் பாரம்பரிய இசையுடன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது தொடர் உண்ணாவிரதமாக மாறவும் சாத்தியமிருப்பதாக கலந்துகொண்டிருக்கும் மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். fb
  9. மாணவர் போராட்டத்தை மூன்றாம் தர செய்தியாக பாவிக்கும் தமிழ் பத்திரிக்கைகளின் செயல் பச்சை துரோகம். தமிழ் ஈழ போராட்டத்தில் அனேக துரோகிகள் முதுகில் குத்தி உள்ளனர். அந்த துரோகிகள் வரிசையில் நீங்களும் (தமிழ் பத்திரிகைகள் ) சேர்ந்துவிடாதீர்கள். நேற்றுக் கூட கவட நாடகம் ஆடும் குள்ள நரி கருணாநிதியின் செய்தியை முதல் போட்டு மாணவர் செய்தி பின்னுக்கு போடப் பட்டது...
  10. ஈழத்தின் ஒரு மாணவன் குரல் .. எந்த அரசியல் வாதியையும் நாம் முழுமையாய் நம்பவில்லை அவர்கள் பேச்சிலும் அதிகம் அக்கறை இல்லை .. பத்திரிக்கை பார்த்த போது மெய்சிலிர்த்தது .. முக நூல் பார்த்த போது அகம் மலர்ந்தது.. எம் இனம் காக்க எங்களுக்கு குரல் கொடுக்க எம் தோழர்கள் பள்ளி படிக்கட்டு விட்டு இறங்கி வந்தமை .. பற்றி எரிகிற உங்கள் தமிழ் உணர்வு கண்டு எந்த இனமும் கலங்க வேண்டும் நம் மீது கருணை கொள்ள வேண்டும் .. அமெரிக்கா தீர்மானமும் தெரியாது எந்த நாடு எதனுடன் இராஜ தந்திர உறவு கொண்டமையும் புரியாது எங்களுக்கு .. எங்களுக்கும் உங்களை போல் போராட வேண்டும் .. ஆனால் எங்கள் அப்பன் அம்மாக்கு கொள்ளி இட நாங்கள் இருக்கவும் மாட்டோம் .. எங்கள் அஸ்தி கூட எங்கள் வீடு செல்லாது என்பது நீங்கள் அறிவீர் .... மாணவர் மாணவராய் இயங்குங்கள் .. எங்கள் மண்ணில் மாற்றம் வார விடினும் உங்கள் எழுச்சியில் எந்த இழுக்கும் இடம் வர கூடாது .. நாங்கள் இங்கு வாழ்கிறோம் எங்களை சுத்தி காவலுக்காய் எத்தனை துப்பாக்கிகள் அரசாங்க பணத்தில் அர்பணிப்பான செயலுடன் .. தமிழன் வீரம் தொலைந்தது தமிழின துரோகிகள் காரணம் .. இப்போ ! உலக தமிழினமே கண்கள் கொண்டது உங்கள் தமிழகம் மீது உங்கள் போராட்டம் மீது .. ஏளனம் செய்வோரை ஏங்க வையுங்கள் உங்கள் சக்தி என்னவென்று .. இது எங்கள் சுய நலத்துக்காய் உங்களை நுனி கிளையில் ஏற்றவில்லை .. முறிந்து வீழ்ந்தாலும் எம் மூச்சு நின்றாலும் எம் இனத்தின் சுய மரியாதைக்காய் என்று போராடுங்கள் .. உங்கள் போராட்டதுக்காய் எங்கள் ஆதரவு இதயத்தில் மட்டும் அல்ல ஒவ்வரு குருதி துளியிலும் உணர்வாக உண்மையாக கலந்து உள்ளது . அதை நாம் மௌனமாகவே தைத்து பூட்டி உள்ளோம் .. எம் இனத்தின் பரம்பரை வளர்சிக்காக .. உங்களை உன்னிப்பாக பாக்கிறோம் உங்கள் ஆதரவை அன்பாக ஏற்கிறோம் .. எப்போதும் எங்கள் அண்ணன் அக்காவாக ஏற்கிறோம் .. எங்களுக்காய் குரல் கொடுங்கள் உங்களுக்காய் எதையும் கொடுப்போம் .. இது வெறும் பேச்சு அல்ல நாங்கள் எழுதி வைக்கும் வேதம்.. வாழ்க தமிழ் வாழ்க நம் இனம் வாழ்க நம் மொழி வாழ்க நம் தேசம். fb
  11. பாரதியார் பல்கலைகழகம். ஏழாவது நாளாக தொடரும் மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டம் . தமிழீழ நில வரைபடம் வரைந்து காயக் கட்டுகளுடன் மாணவர்கள் நடத்திய போராட்டம் பலரையும் ஈர்த்தது . ஈழத்தின் சோகத்தை சொல்லியது . http://www.facebook.com/tamilnaduhungerstrike

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.