Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. தொழிற்சங்க கோரிக்கைகளை தமிழீழ விடுதலை Bindutmil 9 அனைத்து கல்லூரி மாணவர்கள் மாணவர்கள் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் 1. நாம் கடுமையாக அமெரிக்க தீர்மானத்தை கண்டனம். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் (UNHRC) அதை கடக்க வேண்டாம் 2. Ilangai [இலங்கை] என்பது ஒரு போர் குற்றம் அல்லது மனித உரிமைகள் மீறல், ஆனால் திட்டமிட்ட இனப்படுகொலை மட்டும் தான் 3. சர்வதேச மீளாய்வு மற்றும் வாக்கெடுப்பு தமிழர்களுக்கு ஒரே தீர்வு இருக்கும். அரசாங்கத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த சர்வதேச மீளாய்வு மற்றும் சுதந்திர தமிழீழ கொண்டு ஒரு தீர்மானம் முன்மொழிய வேண்டும் 4. ஒரு திட்டம் பேரினவாத Singla பிரதி உயர் இந்தியா தமிழ் மண்ணின் ஆணையம் இருக்க வேண்டும் தீவிர Ilangai [இலங்கை] அனைத்து இராஜதந்திர உறவுகளையும் உடன். நீக்க வேண்டும் 5. இந்தியா, தமிழ்நாடு மாநில அரசு கோரிக்கை இணைவதற்கு, Ilankai [இலங்கை] பொருளாதார தடைகளை விண்ணப்பிக்க வேண்டும். 6. தமிழ்நாடு மாநில அரசாங்கம், வெளிநாட்டு உறவுகள் துறை உலக தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். 7. கூட இல்லை மற்ற ஆசிய நாடு, [சர்வதேச] உறுப்பினராக விசாரணை சேர்ந்து கூடாது 8. கொல்லும் தமிழ்நாடு மீனவர்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 9. இந்திய அரசாங்கம் தமிழீழ Totmilon என்ற கேள்விக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்க முடியவில்லை எனில், நாம், வரி எந்த விதமான வரி Chukaage தமிழ்நாடு இல்லை. இந்த பிரச்சாரத்தில் நாம் தீவிரமாக அனைத்து மாணவர்கள் Hune செய்ய ஈடுபட வேண்டும். நன்றி. http://translate.google.com
  2. தமிழக மாணவர்கள் போராட்டம் எதிரொலியாக சென்னையில் இயங்கி வரும் இலங்கை தூதரகத்தை கேரளாவுக்கு மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது ! இது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் . இதற்காக பல இயக்கங்கள் , கட்சிகள் உழைத்தன . நாமும் இதற்கான பங்களிப்பை செய்துள்ளோம் . பல தலைவர்களை சந்தித்து இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த கையெழுத்துகள் பெற்றுள்ளோம் . மக்களிடத்தில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம். அதன் பயனாகவும் , மாணவர்களின் அதிதீவிர போராட்டத்தாலும் இன்று இலங்கை அரசு தனது (உளவு) தூதரகத்தை கேரளாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இது இலங்கை அரசு தானே எடுத்த முடிவல்ல. தமிழகத்தில் இருந்து கிளம்பிய அழுத்தத்தின் காரணமாகவே இது நடத்துள்ளது . அடுத்த இலக்கு இலங்கை மீதான பொருளாதார தடை மற்றும் உறவுகளை துண்டிப்பது . இதையும் நாம் தான் நடத்தியாக வேண்டும் . ஒவ்வொரு வெற்றியாக பெற்று தமிழீழத்திற்கு காணிக்கையாக்குவோம் ! தமிழீழம் பெற்றிட வழி காண்போம் . Rajkumar Palaniswamy fb
  3. மாலைமலர் இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்கும் வரை போராட்டம் தொடரும்: மாணவர் கூட்டமைப்பு ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 24, சென்னை, ஈழத்தமிழர்களின் நலனுக்காக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மாணவர்கள் போர்க் கோலம் பூண்டுள்ளனர். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மிஞ்சும் அளவுக்கு மாணவர்களின் போராட்டம் தற்போது வீரியம் அடைந்து காணப்படுகிறது. கடந்த 15-ந்தேதி மாநிலம் முழுவதும் கல்லூரிகள் மூடப்பட்டதில் இருந்து முற்றுகை போராட்டம், சாலை மறியல், கொடும்பாவி எரிப்பு என பல்வேறு வடிவங்களில் மாணவர்கள் போராடி வருகிறார்கள். இலங்கைக்கு எதிராக ஐ.நா மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்துக்கு பின்னர் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்தை உடனடியாக முடித்துக் கொள்ளப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான தினேஷ் தெரிவித்துள்ளார். அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். அதன் விபரம் வருமாறு:- கே: இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி பெற்றுவிட்ட நிலையில் இனியும் போராடுவது எதற்காக? ப: இந்த தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு எதுவும் நன்மைகள் நடந்து விடப்போவதில்லை. எனவே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியே எங்கள் போராட்டம் தொடர்கிறது. கே: இதற்கு மேல் அது சாத்தியமா? ப: எல்லாம் முடிந்து போகவில்லை. இன்னும் 4 மாதங்கள் கழித்து ஐ.நா. மாமன்றம் மீண்டும் கூடுகிறது. அப்போது மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தியாவே, இலங்கைக்கு எதிரான நிலையை எடுத்து தீர்மானம் கொண்டு வரும் என்று நம்புகிறோம். கே: தொடர் போராட்டங்களால் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறதே? ப: இப்போதுள்ள சூழ் நிலையில் மாணவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. மாணவர்களில் பெரும்பாலானோர், எப்போது கல்லூரி திறக்கப்போகிறது என்று கேட்கவில்லை. அடுத்து என்ன போராட்டம் என்று தான் கேட்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசுகள்தான் நல்ல முடிவை எடுக்க வேண்டும். கே: 4 மாதம் கழித்துதானே ஐ.நா. மன்றம் கூடுகிறது. அப்போது போராடினால் போதாதா? ப: இந்த முறை மாணவர்கள் நடத்திய போராட்டமே மிகவும் தாமதமாக அமைந்து விட்டது. எனவே அடுத்த 4 மாதங்களுக்கும் எங்களது போராட்டத்தை தொடர்ச்சியாக எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். கே: எந்த மாதிரியான போராட்டங்களை நடத்தப் போகிறீர்கள்? ப: மத்திய அரசுக்கு வரி செலுத்த மாட்டோம். ரெயில்களில் டிக்கெட் எடுக்கப் போவதில்லை. இதுமட்டுமின்றி முக்கியமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீரர்களை அனுமதிக்க போவதில்லை என்ற முடிவுக்கும் வந்துள்ளோம். இவ்வாறு தினேஷ் கூறினார். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி, ஈழத்தமிழர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். fb
  4. அன்று தமிழக மாணவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடினார்கள் . அதனால் நம் மொழியை இன்றளவும் நம்மால் காக்க முடிந்தது . அந்த போராட்ட வரலாற்றை தமிழக பாட திட்டத்தில் இருந்து அடியோடு மறைத்தது தமிழக அரசு. அதனால் மாணவர் போராட்ட வரலாறே பல மாணவர்களுக்கு தெரியாமல் போனது . உயிர் நீத்த பல ஈகிகளை இன்றளவும் யாரும் நினைவு கூறவில்லை . ஆனால் அதையும் தாண்டி தமிழக மாணவர்களின் உணர்வு இன்று தட்டி எழுப்பப் பட்டு உள்ளது . இன்று வீழ்ந்த நமது இனத்தை காக்க மாணவர்கள் போராட தொடங்கி உள்ளனர் . நிச்சயம் இம்முறையும் மாணவர்கள் வெல்வார்கள் . நாளைய தமிழகமும் இனி மாணவர்கள் கைகளில் தான் உள்ளது . மாணவர்களுக்கு நாம் துணை நிற்போம் . fb
  5. ராஜபக்சேவை தூக்கிலிடு! பால்மணம் மாறா பிஞ்சுகள் போராட்டம்! மாணவர்களிடம் தொடங்கி சிறுவர்களிடம் பரவி தற்போது பிஞ்சுகள் கையில் எடுத்துள்ளனர் ராஜபக்சேவிற்கு எதிரான போரை. சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட்டோர் போராட, ஊரே அவர்களை ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்தது. ஆம் அனைவரும் குழந்தைகள். பாலச்சந்திரனிற்கு மெழுகுவர்த்தி அஞ்சலி செலுத்திவிட்டு'ராஜபக்சே ஒழிக அவனை தூக்கிலிடுங்கள்' என முழக்கமிட்டனர். குழந்தைகள் ஒருங்கினைப்பாளர் சிறுவன் 'தோழன் தமிழமுதன்' நம்மிடம் பேசியபோது, "எங்களை மாதிரி சின்ன பைய்யனு கூட பார்க்காம எங்க பாலச்சந்திரன் அண்ணனை சுட்டு கொன்னு இருக்காங்க. ஆனா எங்க அண்ணன் சாகும் போது கூட வீரமா தான் இறந்து இருக்காரு. அவரு இந்த உயிரையே தரும் போது நாங்கலாம் சும்மா விளையாடிகிட்டேவா இருக்கிறது? நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம்' என்றார் உணர்வுப்பூர்வமாய். அதன் பின் மீண்டும் முழக்கமிட தொடங்கினர். கைகளில் கருப்பு துணி கட்டி, கைகளை உயர்த்தி கழுத்து நரம்பு புடைக்க முழங்கிய இந்த பிஞ்சுகளின் வீர மொழியை பார்க்கும்போது, இன பகைவர்கள் வீழ்ந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகிறது என்றனர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள்.
  6. மருத்துவக்கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக எச்சரிக்கை..!நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 600க்கும் மேற்பட்டவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இலங்கை அரசை கண்டித்து பதாதைகள் மற்றும் படங்களுடன் கறுப்பு பேட்ஜ் அணிந்து பேராட்டம் நடத்தினர். இந்தியாவே கட்சத் தீவை திரும்பப்பெறு, இந்தியாவே இலங்கை தூதரகத்தை உடனே அகற்றிடு, தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்ற இலங்கை உனக்கு நட்பு நாடா? தமிழீழத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு இலங்கை மீது பன்னாட்டு விசாரணை நடத்து, என் பது போன்ற பேனர்களை தூக்கிப்பிடித்து கோஷமிட்டதுடன் இந்தியாவே இலங்கை வேண்டுமா தமிழ்நாடு வேண்டுமா என்பது போன்ற ஆவேஷ முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போராட்டத்திற்கு மாணவர் பேரவை தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். நிதி செயலாளர் மகராஜன் முன்னிலை வகித்தனர். ”600 மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளோம். மருத்துவக் கல்லூரி மாணவர்களின் இந்தப் போராட்டம் ஒரு தொடக்கம்தான். இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவார்கள்” என்று போராடிய மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். facebook
  7. மாணவர் போராட்டத்தால் மதுரை மாநகரம் ஸ்தம்பித்தது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக அனைத்து கல்லூரி மாணவர்களின் தொடர்முழக்க போராட்டம் தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெரியார் பேருந்து நிலையம் நோக்கி பெரும் பேரணி நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் போராட்டம் நடை பெற்று வருகிறது. சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களும் ஆர்வமாக பேரணியில் கலந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது http://www.facebook.com/tamilnaduhungerstrike?fref=ts
  8. ஈழத் தமிழர்களுக்கு சுய அதிகாரம், சுதந்திரமான வாழ்க்கை கிடைக்க வேண்டும். அவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதார தடைவிதிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை இந்தியா எடுக்காமல் இலங்கை நட்பு நாடு என்று சொல்-க்கொண்டிருந்தால் மாணவர்கள் நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டோம். ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும். இது இல்லையென்றால் எங்களின் தமிழ்நாட்டை பிரித்து கொடுங்கள். நாங்கள் தனி தமிழ்நாடு அமைத்துக்கொள்கிறோம் என்று ஆவேசமாக கூறினர்.
  9. இணையவன் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.