Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. தமிழீழத்தை வேட்டையாடிய இரண்டுமே ஓநாய்கள். ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல. அமெரிக்காவும் இணைந்தே எம்மை அழிந்தன. எமது தாயகனின் நிருவாகத்தை அழத்துவிட்டு சிங்களத்தை காத்தவாறு தமிழித்துக்கு உதவுவதாக நாடகம் போடுவதன் நோக்கம் தமிழர்கள் மீதான அக்கறையல்ல. சீனாவால் உள்வாங்கப்பட்ட சிறிலங்காவைவிட தமிழர்கள் எதற்கும் இசைவாக்கம் அடையும் இயல்புடையோரான தமிழரைக் கையாள்வது இலகுவானதென்பதை அமெரிக்கா அறியாதிருக்குமா? ஆனாலென்ன தமிழரால் துரத்தப்பட்டோர் போய் இருப்பதையும் விற்காமிலிருந்தால் சிறப்பு.
  2. நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா (சிறி) அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு. Posted on October 23, 2025 by சமர்வீரன் 342 0 யேர்மனியின் தலைநகரில் நீன்டகால செயற்பாட்டாளர், நாட்டுப்பற்றாளர் யோகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு மிகவும் சிறப்பாகவும் உணர்வு பூர்வமாகவும் தலைநகரில் நடைபெற்றது. பல்முகத் தேசியச் செயற்பாட்டாளராகிய சிறியண்ணாவுக்கு பல நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் தங்கள் இறுதிவணக்கத்தை உணர்வு பூர்வமாகச் செலுத்தினர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளையின் ஆளுகைக்கு உட்பட்டு யேர்மனியின் பேர்லின்மாநிலத்தின் நகரப் பிரதிநிதியாகவும் பல்முகச் செயற்பாட்டாளராகவும் பணியாற்றிக் கடந்த 12.10.2025 அன்று உடல்நலக் குறைவினால் சாவடைந்த நாட்டுப்பற்றாளர் யேகராசா சிறிஸ்கந்தராஜா அவர்களது இறுதி வணக்க நிகழ்வானது இன்று (23.10.2025) மிகவும் உணர்வுப்பூர்வமாக தலைநகரில் நடைபெற்றது. அனைத்துலகச் செயலகத்தினால் வழங்கப்பெற்ற நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு அறிக்கை வாசிக்கப்பட்டு, யேர்மனிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும், அனைத்துலக மக்களவையால் வெளியிடப்பட்ட நினைவுப் பிரசுரமும் வாசிக்கப்பட்டது. நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பெற்ற வரலாற்று ஆவணம், திருவுருவப்படப் பேளை, வித்துடல்மீது போர்த்திய தமிழீழத் தேசியக் கொடி என்பன, மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பிற்கு அமைவாக குடும்பத்தாரிடம் கையளிக்கப்பெற்றது. https://www.kuriyeedu.com/?p=704009
  3. போரைச் சந்தித்த ஒரு நாடு அல்லது ஓர் அரசானது போரின் தோற்றுவாய்க்கான தீர்வை முன்வைத்து அனைத்துத்தரப்பினரையும் ஒரு நேர்கோட்டிற் கொண்டுவராதவரை எப்படியான ஆட்சியை செய்தாலும் அரசியல் வறட்சியே நிலவும்.. அதிலும் பொதுவுடமைச் சிந்தாந்த கோட்பாடுடையோரின் ஆட்சிகள் ஒருவகை மறைநிலை எதேச்சதிகார ஆட்சிகளாகவே இருந்துள்ளன. மிகமோசமான பொருண்மிய வீழ்ச்சியைச் சந்தித்த ஈழத்தீவில் முதல்முறையாக பொதுவுடமைச் சிந்தாந்தக் கோட்பாடுடையோர் ஆட்சியமைத்துள்ள அரசாக உள்ளநிலையில் அவர்கள் ஒருநிலையெடுப்பதற்குள் ஆட்சிக்காலம் முடிவடைந்துவிடலாம். மாறிமாறி ஆண்ட இருதரப்புகளும் தமிழினத்தை அழிக்கும் நோக்கிலே ஒருவகைப் படையப் பலப்பிரயோக ஆட்சியை (இராணுவ ஆட்சி)கடந்த அரைநூற்றாண்டாகச் செயற்படுத்தின. அதனையே இன்றைய அரசும் தொடர்கிறது. அங்கே பயின்ற படைகளும், சிவப்புக்கொடிக்குள் மறைந்துள்ள யே.வி.பி என்ற என்.பி.பி அரசும் தமது முன்னாள் இன்னாள் எதிரிகளை ஒடுக்க பல்வேறு தந்திரங்களைக் கடந்த ஓர் ஆண்டாகச் செயற்படுத்திவருதை காணக்கூடியதாக உள்ளது. அதிலே ஒரு வேறுபாட்டையும் காணமுடிகிறது. சிலரைக் கைது, மருத்துவவசதி என்று உயர்பிரிவிலும், சிலரை உயிர்பிரிப்புப் பிரிவிலும் என அரச நிகழ்ச்சிநிரலோடு நகர்வதாகவே தோன்றுகிறது. ஆனால், மகிந்த தரப்பைக் கைவைத்து இருப்பதையும் இழப்பான் ஏன் என்ற ஒரு அச்சநிலையோடு ஆட்சியைத் தொடர்கின்றனர். அனுர அரசும் என்னதான் சமத்துவம் சமதர்மம் என்றாலும் இனத்துவநிலையில் இருந்து சிந்திப்பதையே காணமுடிகிறது. அதற்கான அளவுகோலாக வடமாகாணத்திலுள்ள தையிட்டியில் தனியாருக்கு உரித்துடைய காணிகளை அத்துமீறி அடாத்தாகப் பிடித்து அமைக்கப்பட்டுள்ள விகாரை விடயத்தை அனுர அரசு கையாளும் தன்மையே போதுமானது. இன்னுமொருபடி மேற்சென்று சர்ச்சைக்குரிய விகாராதிபதியிடம் ஆசீர்வாதம்வேறு பெற்று அதை உறுதிப்படுத்தியது என்பன சான்றாகும். இனமோ, இனப்பிரச்சினை என்ற ஒன்றோ இல்லை. பொருண்மியப் பிரச்சினையே உள்ளது. எனவே அபிவிருத்தி அரசியலைச் செய்தால் தமிழரது பிரச்சினை தீர்ந்துவிடும் என்று பொய்களை அவிட்டுவிட்டு பொருண்மிய உதவிகளை வெளிநாடுகளிடம் பெற்றுச் சிங்களப்பகுதிகளின் மேல் அபிவிருத்திக்;குவிப்பைப் பல பத்தாண்டுகள் செய்ததுபோல் அனுர அரசும் செயற்பட்டு வருவதை காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்தி மீதான அக்கறையின்மை தெளிவுறக்காட்டுகிறது. எனவே, துணிவுடைய அரசுத்தலைமையும், நாட்டின் முதன்மைப் பிரச்சினையான இனப்பிரச்சினையைத் தற்துணிவோடு எதிர்கொள்ளும் ஆளுமையும் உள்ள ஒரு அரசுத் தலைமையால் மட்டுமே ஈழத்தீவை மீட்டெடுக்க முடியும். ஈழத்தீவை நிலையாக்கக் குறைந்தபட்சம் உள்ளக சுயநிர்ணய உரிமையைக் கொண்ட கூட்டாட்சி முறையொன்றை உளத்தூய்மையோடு நிறுவுதலே ஒட்டுமொத்த ஈழத்தீவினது மீட்சியாகவும் ஒரு திறந்தநிலைச் சட்டத்தின் ஆட்சியாகவும், தெற்காசியவட்டகையில் உயர்நிலைச் சனநாயக விழுமியங்களைக் கொண்ட சிறந்த மக்களாகவும் நாடாகவும் அமையும். அடிப்படை மாற்றங்களைச் செய்யாது தற்போதுள்ள அரசியற் சட்டம் ஒர் அரசுப்பொறியாக இல்லாது மக்களை அழிக்கும் ஆட்சிப்பொறியாகவே இருக்கும். அனாமதேயக் கொலைகளுக்கும் பஞ்சமிருக்காது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. சிறப்பான ஆய்வு. ஆனால், எமது மூளைக்குள் புகுந்துள்ள ஆரியமாயையில் இருந்துவிடுபடுதல் என்பது சாத்தியமா(?)தெரியவில்லை. இதுபோன்ற ஆய்வுநிலையிலிருந்து சிந்திக்கும் நிலையில் தமிழினம் இருக்கிறதா? அடுத்த தலைமுறையில் கடவுளை வணங்கும் தொகை குறைந்து வருவதால் ஆரியமாயையில் இருந்து விடுபடக்கூடும். அதேவேளை தமிழுக்கும் சைவத்துக்கும் இடையேயான உறவுநிலை கரணியமாக எமது பண்பாட்டோடு கலந்துள்ள கோவில் வழிபாடுகள் மக்களின் ஒன்றிணைவுக்கான தளமாக உள்ளமையையும் மறுக்கமுடியாது. அங்கு நடைபெறும் உரைகள் ஊடாக ஒரு குறிப்பிட்டு வீதத்தினர்ஆரியமாயையுள் கட்டுண்டு இருக்கவே செய்வர்.அதனைவிடக் கொடுமை அம்மன்கோவிலென்று போனால் ஐயப்பன் வரை உறையும் இடமாக உள்ளது. பல்பொருள் அங்காடிகள்போல் எந்துநாட்டு, எந்தக் கடவுளையும் வழிபடும் இடமாக புலத்திலே உள்ள கோவில்களின்நிலை. இராவணன் மீதான தெளிவான புரிதலை வளத்தெடுப்பதன் ஊடாக ஒரு தேடலை ஏற்படுத்த முடியும். ஒரு சில இளையோரிடம் இராவணன் மீதான ஈர்ப்பும் இல்லாமலில்லை. தமிழர்கள் தோற்றுப்போய் நிற்கின்ற இடமாக இருப்பது கருத்தியல் தளமே. பொய்களையும் புனைவுகளையும் கொண்டு உருவாக்கப்பட்டதாக சுட்டப்படும் மகாவம்சம் யுநெஸ்கோவால்(UNESCO) 2023இல் அனைத்துலக பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. தங்கள் நேரத்துக்கும் ஆக்கத்திற்கும் பாராட்டும் நன்றியும் உரித்தாகுக.
  5. உள்ளக மட்டத்தில் ஒரு ஆட்சியலகாகத் தோற்றம் பெற்றதும் எந்த நேரமும் கலைத்துவிடக்கூடியதுமான வட-கிழக்கு இணைந்த மாகாண அலகை வழக்குப்போட்டுப் பிரித்தமை... சுனாமிக் கட்டமைப்பை நடைமுறைப்பட்டுத்தவிடாது தடுத்தமையெனத் தமிழருக்கு எதிரான விடம் கக்கும் வேலைகளை செய்த அணியினது முக்கியமான பெரும்புள்ளி இப்போது இப்படிக் கொக்கரிக்கிறார். அவரே ஐ.நா விலிருந்து தமிழரது பிரச்சினையை வெளியே எடுப்பதுதான் தமதரசின் நோக்கமென்று சொல்லியுள்ளார். இதைவிட வேறென்ன விளத்தம் தேவை. எந்த சிங்கள அரசாயினும் அவை இனவாத அரசுகளே. தமிழரை அழிப்பதும், தமிழரென்று ஒரு இனமே இல்லையென்று நிறுவுவதும் முழு ஈழத்தீவையும் ஈற்றில் சிங்கள மயமாக்குதலே அவர்களது இலக்கு. யே.வி.பி யின் மறுவடிவான என்.பி.பி வாக்களித்த தமிழர்களின் மயக்கம் இந்த இனவாத முழக்கங்களைக் கண்டாவது தெளியுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. ரஸ்யாவை நோக்கிய நகர்வுகளின் தோல்வியைச் சரிசெய்து கொள்ளவும் அனைத்துலகிற்கெதிராக எடுத்த வர்த்தகப் போர் மற்றும் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் சவூதி அரேபியா போன்ற நாடுகள் பாகிஸ்தானுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் எனப் புதிய கூட்டுகளைத் தேடும் முடிவெனப் பல்வகமைகளிலும் வீழ்ந்துள்ள தனது செல்வாக்கை உயர்த்திவிட எடுக்கும் முயற்சி. அதனூடாக நோபலும் இலக்கு. ஆனால், நெத்தன்யாகுவும் கமாசும் அமைதி முயற்சிகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. அமெரிக்காவால் கிட்டத்தட்டக் கைவிடப்பட்டுள்ளநிலையில் இஸ்ரேலில் தொங்கிக்கொண்டு நிற்கும் வடவரின் நிலைதான் கவலைக்கிடமாகிப்போகும்போல் உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. இந்திய உளவுத்துறையை ஏதோ பேர்போனதென்று சில ஓய்வுபெற்ற இந்தியக் கைக்கூலிகள் காணொளிகளில் கூவுகிறார்கள். அப்படியென்றால் ஆதாரங்களை வெளியிட்டு நிரூபிக்கலாமே. கடப்பிலை நிண்டவர் கையூட்டுக் கேட்டிருப்பார், கொடுக்காதபடியால் மாட்டிவிட்டுட்டாரோ. யாரறிவார். அம்மணி வெளியே வந்து சொன்னால்தான் தெரியும். அதற்குமுன் ஆளை மனநோயாளியாக்கிவிடுவர்.
  9. உலக வல்லாதிக்க சக்திகளின் முகவராண்மை நாடான சுவிஸ் அரசானது தமிழர் தரப்பின் நாடிபிடித்துப்பார்ப்பதற்காக வைத்த கருத்தரங்காகவே தோன்றுகிறது. தமிழினம் தனது விடுதலையைத் தனது கரத்தில் எடுத்துப் போராடாதவரை இந்த இடைத்தரகு வேலைகளைச் செய்து அலைக்கழித்து போராட்டத்தை நீறாக்கிவிடுவர்.
  10. ஆனால், ஒருவரே தலைவர். ஒருவரே உறுப்பினர் உள்ள கட்சிகளும் இலங்கைத்தீவில் உள்ளனவாமே. சனநாயகத்தில் இதெல்லாம் இல்லாதவையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. இந்தியாவில் 'இந்துத்வா' வும் தமிழகத்தில் 'சாதி' அரசியலும் உள்ளவரை நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் நிகழா? மாற்றத்திற்காகவேணும் வாக்குப் புரட்சியைக்கூடத் துணிந்து செய்யமுடியாத மனநிலைகொண்டோராகத் தமிழக மக்களும், தமிழகத் தமிழ் மக்களும் உள்ளனர் என்பதை வாக்கு வீதங்கள் காட்டி நிற்கின்றன. நா.த.கவின் முதலாவது சட்டமன்றத் தேர்தலில் 1.10வீதத்தையும், 2021 சட்டமன்றத் தேர்தலில் 6.72வீதத்தையும், நாடாளுமன்றத் தேர்தலில் 8.19வீதத்தையுமே மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் மனநிலை நுகர்வு மனநிலையாகிவிட்ட காலத்தில் யாராண்டால் என்ன என்ற எண்ணப்போக்கு, வாக்களித்த மக்கள் தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றாமையால் ஏற்படும் ஏமாற்றம், சிறிய கட்சிகளால் என்னத்தை செய்துவிடமுடியும் என்ற பார்வை எல்லாம் தாக்கம் செலுத்துகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சீனா சுயபொருண்மியத்தில் முன்னேறிய நாடு. ஆனால் சுற்றியிருக்கும் மற்ற நாடுகள் இந்த இருநாடுகளிடமும் கையேந்தும் நிலையானபடியால் நிம்மதி வராது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. அதுதானே, எங்கடை சிங்களப்படைகள் செய்ததெல்லாம் தெரிந்துகொண்டு வெளிநாட்டுப்பொறிமுறையை ஏற்று இனவழிப்பு நடைபெற்றுள்ளது என்பதை உறுதிப்படுத்த அனுமதிக்க முடியாதென்பதை எப்படித் தந்திரமாகப் 16ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார்கள். இவர்களும்(மேற்கும், மேற்கின் நிறுவனங்களும்) அறிக்கைவிட்டுத் தமிழினத்துக்கு ஏதோ செய்வதுபோல் காட்டுகிறார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. வட-கிழக்குப் பிரிப்பில் தொடங்கித் தமிழினத்தை இல்லாதொழிக்கும் அத்தனை செயற்பாட்டிற்கும் தூண்டுகோலாக இருந்த,இருக்கின்றவர்களான நீங்கள் தீர்ப்பீர்கள். இனத்தனித்துவத்தை இல்லாது தீர்ப்பதுதானே உங்களது மறைநிலை திட்டமாகும். இனப்பிரச்சினையை பொருளாதாரப் பிரச்சினை என்று அழைப்பதன் ஊடாகத் தமிழரது இனப்பிரச்சினையை இருட்டடிப்பு செய்ய எண்ணுவது 'பூனை கண்ணைமுடிப் பாலைக் குடித்தால் யாருக்கும் தெரியாதென்பதுபோல்' உங்கள் முன்மொழிவுகள் இருக்கிறது. இந்த உலகுகக் உங்கள் இனவாத முகம் தெரிய இன்னும் பல ஆண்டுகள் தேவை. ஈழத்தமிழர்களில் பெரும்பாலானோருக்கு நீங்கள் யே.வி.பி யின் மாற்றுவடிவம் என்பதில் தெளிவுண்டு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. அஜீவன் அவர்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர் மற்றும் யாழ்க்கள உறவுகளோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
  15. உறுதிகொண்ட விடுதலை வீரர்களை உலகின் ஆதிக்க சக்திகள் ஏற்பதில்லை. விடுதலையை விரும்பும் மக்களும் உலகும் இருக்கும் விடுதலை வீரர்கள் மறைவதில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  16. சிரியாவைச் சேர்ந்த பலர் நான் வேலைசெய்யும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். அதில் குர்திஸ் இனத்தவர்களும் உள்ளனர். ஒருவர் புதிதாக வந்தபோது அவரும் சிரிய குர்திஸ்ஸாக இருக்கலாம் என்று கேட்போது அவர் 'அரபா' என்றார். அப்போ சிரியா இல்லையா என்று கேட்டதற்கு.. சிரியாதான் ஆனால் நான் 'அரபா' என்றார். இவர்கள் மதத்தாலும், நிலத்தாலும் ஒன்றானபோதும் ஒரு இனமாக இல்லை. ஆனால் இலங்கைச் சோனகரே தம்மை மதத்தால் இனமாக அடையாளம் கொள்கின்றனர். மதங்களால் வேறானாலும் மொழியால் ஒன்றாகி அவரவர் பண்பாடுகளைத் தனித்துவமாகப் பேணும் அலகுகளை அணியமாக்கி வாழ்தவதே தமிழ்பேசும் தரப்புக்குப் பாதுகாப்பானது என்ற புரிதல் சோனகருக்குத் தலைமை தாங்கிய முன்னைய தலைவர்களுக்கு இருந்தது. சில கசப்பான சூழல்களையும் பேசித்தீர்த்துக் இணைந்து செல்லும் முயற்சி சமாதான காலத்தில் முன்னெடுக்கப்பட்டதை நினைவு கொள்ளல் வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. உயிரோடு இருத்திச் செய்யப்பட்ட படுகொலையாக இருக்குமா? வாசிக்கவே என்னவோ செய்கிறது. அந்த மரணத்தை எதிர்கொண்டவரது நிலை. நீதியற்ற உலகில் நாமொரு இனமாக எப்படி அமைதியாகக் கடந்துபோகின்றோம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  18. இன்று கூத்தென்றால், கூத்தா என்று கேட்கும் சூழலில் அதனைப் பேணுகின்ற செயற்பாட்டில் உள்ள கலைஞர்கள்; குறிப்பாக இளைய தலைறையின் கலைச் செயற்பாடு பாராட்டிற்குரியதாகும். இணைப்புக்கு நன்றி. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. திரியோடு தொடர்புடைய விடயங்கள் உரையாடப்படுவதால் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்
  20. உண்மை, ஆனால் எங்கள் அரசியல்வியாதிகள் சிலருக்குப் புரியவில்லையே.
  21. வணக்கம் ஐயா, இரண்டு விடயங்களும், அதாவது சட்டத்தின் கடமை அல்லது பழிவாங்கல் எதுவாயினும்; தமிழருக்கு இதில் ஒரு நல்விளைவும் கிடையாது. சட்டவாட்சிக்குரிய விட்டுக்கொடுப்பற்ற அரசு தனது அரசென அனுர நிறுவ முயல்கிறார். அவளவுதான். எங்கள் ஊடகங்களும் ஆய்வுகளும் புல்லரிக்கிறது. வெள்ளைநரியள் வெட்கமற்றவைதான். ஆனால், இவர்கள் வெட்கப்பட வாய்பில்லைத்தான். சுரண்டிக்கொழுத்துச் சுகம்கண்டோரல்லவா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. அரசியல் திருடர்கள் தங்களுள் பங்காளிச் சண்டையில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் இந்த வெள்ளைநரியும் கூட்டென்பது வெட்கத்திற்கரியது. ஆனால் இவர்கள் வெட்கப்படுவார்களா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  23. சிறிலங்கா ஆட்சியாளர்கள் மிகத்திறமையானதும் காலத்துக்கேற்றவாறான சிங்களத்தேசியத்தை நிலைநிறுத்தும் நகர்வுகளில் தலைசிறந்த முன்னோடிகள் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். ரணிலின் கைதின் ஊடாகத் தீவின் பல முதன்மைப் பிரச்சினைகளைப் பின்தள்ளி ஊடகங்கள் ரணிலோடு கட்டிப்புரளுகின்றன. யே.வி.பியா கொக்கா. கொழும்பு உயர்குழாம் மட்டுமா வித்தை காட்டும். நாங்களும் காட்டுவம் இல்லை என்று அனுர சிரித்துக்கொண்டு திரிகிறாராம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  24. பச்சை இனவாதிகளின் கைகளில் அரசு. வட-கிழக்கைப் பிரிப்பதில் முன்னின்ற இனவாதிகளில் ஒருவரான இவர் ஈழத்தமிழரையும் மலையகத் தமிழரையும் வெவ்வேறான அடையாளப்படுத்தலுள் கொண்டு வருவதன் ஊடாகத் தமிழினத்தை மேலும் பலவீனப்படுத்தும் நயவஞ்சக நோக்கமாகும். மலையகத் தமிழர் என்ற அடையாளப்படுத்தல் தேவையாயின் ஏனைய தமிழர்களையும் இலங்கைத் தமிழர் அல்லது ஈழத்தமிழர் என்று ஆவணங்களிற் குறிப்பிடவும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள முடியுமா? முன்பு இலங்கைத் தமிழர் என்ற பதம் பாவனையில் இருந்தது என்பதை இவர் அறியாதிருக்கமாட்டார்தானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.