Everything posted by nochchi
-
2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்.
2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்- பாகம் இரண்டு.(காணொளி) Posted on January 23, 2025 by சமர்வீரன் 25 0 தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடுஇ தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தாயகம். தமிழகம். சிங்கப்பூர். மலேசியா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கும் கொண்டாடிவருகின்றனர். Video Player 00:15 03:00 https://www.kuriyeedu.com/?p=650512
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
அவர்கள் இதைக் கடந்துபோய்த் தத்தமது கணக்குகளை நிரப்பிக்கொள்வார்கள். ஏமாற்றிவிட்டு மக்களிடம் போவது குறித்து எந்த வெட்கமோ சூடுசுரணையோ அற்றவர்களான அரசியல்வா(வியா)திகளுக்கு இதெல்லாம் தூசு. ஆனால் மக்களின் நிலை எப்போதும் மண்குதிரையில் ஏறிய நிலையே. மாற்றங்கள் வாக்குறுதிகளில் அல்ல மனங்களில் வரவேண்டும். இந்தியா போய் வந்தபின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாவிப்பது குறித்துத் தொடர்ந்து பேசுகிறது, விளக்குகிறது அனுர அரசு. தமிழினம் கொஞ்சம் சுதந்திரமாக ஒன்றுகூடுவதும், நினைவேந்துவதும் இந்தியாவுக்கு எரிச்சலாக இருக்கிறது. எங்கே முழுமையாக வடக்குப் பறிபோய்விடுமோ என்று தமிழீழத்தவரைவிட இந்தியாவே அதிகம் அஞ்சுகிறதுபோல் இருக்கிறது. சிங்கள அரசும், தமிழரும் சுமுகமாகி ஒரு அச்சில் ஓடத்தொடங்கினால் இந்தியாவின் நிலை ஆப்பிழுத்த குரங்கின் நிலையே. அதனால், சிங்களமே முன்வந்தாலும் இந்தியா தமிழருக்கு எந்த நல்லதையும் செய்யவிடாது. தமிழ்ச் சிங்கள முரணே தனக்கான சுரண்டலுக்கு வாய்ப்பான வழி. எனவே வழியை மூடக்கூடிய எந்தச் சூழலையும் தடுக்கும். சிங்களத் தலைமைகள் தமிழர் தரப்பைச் சமதரப்பாக ஏற்று ஒரு புதிய அரசியல் பண்பினை துணிவோடு முன்னெடுக்க வேண்டும். அப்போது எல்லாவற்றிற்கும் உலகிடம் கையேந்தும் நிலை மாறும். வளமான நாடு என்பது அர்த்தமுள்ளதாகும். அடுத்த நினைவேந்தல் நெருக்குவாரங்களை எதிர்கொள்ளும் என்றே நினைக்கின்றேன். தமிழர் தரப்பின் பிரிவுநிலையும், பணத்திற்காக விலைபோகும் தன்மையும், நாம் இனவழிப்புக்குள்ளாகிறோம் என்ற சிந்தனையற்ற போக்கும், எமது 100 ஆண்டுகாலத் துயரத்துக்கான கரணியத்தைச் சீர்தூக்கிப் பார்க்காமையின் விளைவுகளே இன்றைய மேலதிக அரசியல் துயரங்களை பிரசவித்து வருகின்றன. இந்த மெய்நிலையை சரியாக மதிப்பீடு செய்யவோ அவை குறித்து ஆரோக்கியமான விவாதங்களை நடாத்தித் தன்முனைப்புநிலைப் போக்கைக் கைவிட்டு ஒன்றுதிரளும் தன்மையது இல்லாத சூழல் தொடருமானால் அநுர மட்டுமல்ல, அனுர தோற்று நாமல் வந்தால்கூட அதனை வரவேற்றுக் காணொளி போட ஒரு கூட்டமும், கைதட்ட ஒரு கூட்டமும் எம்மிடையே தோன்றிக்கொண்டே இருக்கும். அரசியலரங்கில் தமிழினம் தன்னைப் பலப்படுத்தி ஒருநிலை எடுக்கும்வரை இந்த மாயமான்கள் ஊடறுத்து ஓடி விளையாடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
அனுர விசிறிகள் எதிர்பார்த்த மாற்றங்கள் இவைபோலும்... இன்னும் வரும். தமிழ்மொழிப் பிராந்தியங்களில் தமிழ்மொழிக்கு முதலிடம் கொடுப்பதையே விரும்பாதவர்கள்தான் தமிழருக்குத் தீர்வுதரப்போகிறார்களாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
கட்டளையனுப்பியோருக்கு இனமுறுகலா அல்லது மதமுறுகலா என்றே தெரியவில்லை. திருவள்ளுவரை வைப்பதால் இனமுறுகல் என்பதைப் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. திருவள்ளுவருடைய பெயரைவிட மேலே சுட்டியுள்ள விடயமே முதன்மையாக நோக்க வேண்டியதாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள்.
2025 தமிழர் திருநாளில் பண்பாட்டுப் படையலிடும் தமிழாலயங்கள். Posted on January 20, 2025 by சமர்வீரன் 52 0 தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தாயகம், தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கும் கொண்டாடிவருகின்றனர். தமிழ்க் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் 100 மேற்பட்ட தமிழாலயங்கள் தமிழ்மொழியோடு, தமிழினத்தின் பண்பாட்டுப் பனுவல்களை எமது அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு ஊட்டி வருகின்றன. ஆண்டின் தொடக்கமான தை மாதத்திலே உலகை தன் சக்தியால் உய்வித்துவரும் கதிரோனின் வளம்போற்றி நன்றி செலுத்தும் பண்பாட்டுப் பெருவிழாவான தைப்பொங்கலைத் தாயகம், தமிழகம், சிங்கப்பூர், மலேசியா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளெங்கும் கொண்டாடிவருகின்றனர். தைத்திருநாளை தமிழினம் தனது நன்றியுணர்வின் வெளிப்பாடாகக் கதிரவனுக்கும், உழவுப்பொறியற்ற காலத்தில் உழவுக்கு உறுதுணையாக இருந்த காளைகளுக்கும் பொங்கலிட்டான். உற்றார், உறவுகளோடு கூடிக் குதூகலித்து விருந்துண்டு, விளையாடி மகிழ்ந்தான். புலம்பெயர் நாடுகளில் குளிரான காலநிலையிலும் தமது பாரம்பரியங்களைப் படையலிட்டு மகிழும் தமிழாலயங்களின் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், நகரமக்கள் மற்றும் நிர்வாகத்தினர் என ஒன்றிணைந்து மரபுவழிப் பொங்கலிடல், கலைநிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகளோடு, தமிழாலயங்களின் உயிரோட்டமாகத் திகழும் ஆசான்களுக்கான பரிசுப்பொருட்கள் வழங்குதல் எனத் தமிழினத்தின் திருநாளானது பெரும் கூட்டுணர்வின் வெளிப்பாடாகவும் அமைகின்றது. தமிழர் திருநாள் சிறப்புமிகு விழாவிலே தமிழ்க் கல்விக் கழகத்தால் வெளியிடப்பட்டுவரும் செயல்திறன் தொகுப்பான வெளிச்சவீடு 2024ஆம் ஆண்டிற்கான இதழின் வெளியீட்டு நிகழ்வானது சுவேபிஸ்கால் தமிழாலயத்தில் நடைபெற்ற தமிழர் திருநாள் நிகழ்விலே, தமிழ்க் கல்விக் கழகத்தின் பரப்புரைப் பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் அவர்களால் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது. சுவேபிஸ்கால் தமிழாலய நிர்வாகி திருமதி கமலேஸ்வரி கனகராஜா அவர்கள் தமிழாலய மாணவர்களான செல்வி திவாகரன் வைஷ்னா செல்வன் எட்வர்ட் மதன் மிதுன் ஆகியோரை அரவணைத்து நிற்க, அந்த மாணவச் செல்வங்களிடம் முதற்பிரதி கையளிக்கப்பட்டது. தமிழ்க் கல்விக் கழகம் இன்று புலம்பெயர் தலைமுறையின் பேரக்குழந்தைகளை வரவேற்று நிற்கும் சூழலில் எதிர்கால வரலாற்று ஆவணமாக இருக்கவுள்ள வெளிச்சவீடு மலர் அந்த மழலைகள் கைகளில் ஏந்திய காட்சியானது புதிய வரலாற்றைப் படைப்பார்கள் என்பதை எடுத்தியம்புவதுபோல் அமைந்தது. https://www.kuriyeedu.com/?p=649890
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
ஆனாலும்என்ன செய்யவது திருந்தமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்களே.. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?
இணைப்புக்கு நன்றி. இது பேசாப்பொருளல்ல. 'நலமோடு நாம் வாழ' பகுதியில் போடலாம். இது பெருகிவரும் பிரச்சினையாக உள்ளது. பெற்றோர், குறிப்பாக இளம் தாய்மாரது நிலை சிக்கலானது. தனிக்குடித்தனம். இருவரும் வேலை. பிள்ளைகளைக் கவனிப்பதைவிட சமூக ஊடககங்களோடு செலவிடும் நேரம் என ஒரு நெருடலான சூழலில் பெண் பிள்ளைகள் வளரும் நிலையை அவதானிக்க முடிகிறது. இது விழிப்பூட்டலுக்கான கட்டுரையாக உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
எம்மதமும் சம்மதம் என்ற சைவர்களின் தாராண்மையால் வந்தவினையாக இருக்குமோ! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் என்ன மதவாதியா அல்லது இனவாதியா? என்ன கொடுமையடா இது. இப்பவே தமிழருக்கு இந்தநிலை என்றால்..... யேர்மன் டோட்முண்டிலை வள்ளுவருக்கு சிலைவைக்கேக்க ஒரு காவல்துறைகூட இல்லை. ஆனால் தமிழ்மொழி பேசுவோரின் பிரதேசத்தில் பொய்யாமொழிப் புலவனுக்கு இந்தநிலை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
நன்று. நடப்பவை நல்லவையாக நடந்தால் நன்மையே. ஆனால், எப்படி இவளவு உறுதியாகக் கூறுகின்றீர்கள். ஆயுதமற்ற தமிழர்களோடு ஒரு சத்தமற்ற இன அழிப்பை சிறிலங்கா தொடர்கிறது. தமிழர் பிரதேசங்கள் ஊடறுக்ப்பட்டு சிதைக்கப்பட்டுவரும் சூழலில் அரசுதான் புதிதே தவிர அதனது இனவாதமுகம் புதிதல்லவே. அவர்கள் 13ஐயே ஒழித்தக்கட்டும் திட்டத்தோடு, நீங்களோ இப்படிக் கூறுகின்றீர்கள். யார் குத்தியாவது அரிசியானால் சரி. ஆனால், உமியைத் தந்துவிட்டு அரிசையைக் கொடுத்தோம் என்று சிங்களத்தோடு சேர்ந்து உலகு சொல்லாதவரை நன்மையே. ஏதோ சட்டுபுட்டெண்டு முடிந்தால் AfD காரன் அனுப்பமுதல் ஊருக்குக் கிளம்பிவிடலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
நாங்கள் தொடர்ந்தும் சிங்களத்தில் அரசியல் மதிநுட்பத்திறனைக் குறைத்து மதிப்பிட்டு வருவதன் விளைவாகவே வீழ்த்தப்பட்டு வரும் அதேவேளை சிங்களம் பெரும் தமிழின அழிப்பைத் தொடர்ந்து செய்தவாறு புதுப்புது அரசியல் முகங்களோடு முன்னோக்கி நகர்கிறது. தமிழினமோ சிங்களத்தை ஒருவகை எள்ளலோடு நோக்குவதன் விளைவாக இழப்புகளைச் சந்தித்து வருகிறது. புலம்பெயர் நாடுகள் முதல் தாயகம் வரை தமிழரிடையே 2009பின்னர் ஒரு நிலைத் தன்மையற்ற சூழலையே காணமுடிகிறது. இவற்றைக் கடந்து உண்மையான சுய ஆய்வைத் தமிழினம் மேற்கொள்வதே தன்னைத தகவமைத்துக்கொள்ள வழிபிறக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
அரசியல் கைதிகள் எவரும் சிறையில் இல்லை எனக்கூறுவார்களாயின் அவர்களை காணாமல் ஆக்கியது யார்?
தமிழினத்தின் இருத்தலை இல்லாமற் செய்தலே தலையாய கடமையாகக் கொண்ட சிங்களத்தின் முகங்கள்மாறினாலும், அதனது நிகழ்சிநிரல் மாறாது. 80ஆண்டுகளில் நில ஆக்கிரமிப்பு முதல் தமிழின அழிப்புவரை ஒரு தொடர் செயற்பாடாக அடாவடியாகச் செய்துவரும் சிங்களத்திடம் மாற்றங்கள் நிகழாதென்பது பட்டறிவாகும். இதில் இலங்கைத்தீவுக்கு அனுர என்ன, ஆண்டவரே அரசுத்தலைவரானாலும் நிலைமாறாது. இலங்கை ஒரு கூட்டரசாக மாறாதவரை மாற்றங்கள் சாத்தியமற்றவை. இனஅழிப்பும் ஓயாத தொடர்கதையே. தமிழினம் தற்துணிவோடு உலக அரசியல் போக்குகளோடு உறவை வளர்த்துத் தனக்கான அரசியல் இலக்கை அடையாதவரை இலவுகாத்தகிளியாகப் பறந்து போய்க்கொண்டிருக்க வேண்டியதே.
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து - 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?
பலஸ்தீனர்களின் துயரங்கள் முடிவுக்கு வருமா? அல்லது போரின் களைப்பு நீங்குவதற்கான காலமாக நகருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆக்கிரமிப்பாளர்களின் அடாவடிகளை முடிவுக்கொண்டுவர இந்த உலகு ஏன் உறுதியான முடிவுகளை எட்டாதிருக்கிறதோ. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தைப்பொங்கல் வரலாறு தைப்பொங்கல் - ஒரு வரலாற்று நோக்கு நீண்ட வரலாற்றையும் காலவோட்டத்தோடு நெருங்கிப் பிணைந்த தனித்துவமான பண்பாட்டு நீட்சியையும் கொண்ட தமிழர், காலந்தோறும் பல்வேறு விழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். அவற்றை வழிபாட்டு விழாக்கள், குடும்ப விழாக்கள், தொழில் விழாக்கள் என பருமட்டாகச் சில பகுப்புகளுக்குள் அடக்கலாம். ஓரினம் கொண்டாடிவருகின்ற அனைத்து விழாக்களுமே காலத்தின் வழியே நின்று நிலைத்து விடுவதில்லை. சில விழாக்கள் மறைந்துவிடக் கூடியவை, வேறு சில காலத்தை வென்று நிலைத்து நின்றுவிட வல்லவை. இன்றைய காலத்தில் தமிழர் கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் பன்னூறு ஆண்டுகளாகத் தமிழர் வாழ்வோடு நிலைத்து நிகழ்கின்ற விழாவாகச் சிறப்புற்றிருக்கின்றது. கதிரவனுக்கு நன்றியறிவித்து, உழவுத்தொழிலைச் சிறப்பிக்கும் விழாவாக மட்டுமன்றி, ஓரினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் மரபுகளையும் மானுட விழுமியங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது தைப்பொங்கல் விழா. மானுடத்தின் வரலாற்றையும் வாழ்வையும் வடிவமைப்பதில் நிலவமைவு முதன்மை இடம் பெறுகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நிலவமைப்பின் அடிப்படையில் தமது வாழ்வை நான்காக வகுத்து, ஒவ்வொன்றுக்குமான சிறப்புகளை வரையறுத்து அதற்கமைய வாழ்ந்தோர் தமிழர். இவ்வாறான நிலவகைப்பட்ட வாழ்விலிருந்தே தேவைக்கேற்ப, விழாக்களும் தோற்றம் கொள்கின்றன. நான்கு நிலத்து மக்களும் தமது அமைவுகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப, வேறுபட்ட விழாக்களையே கொண்டாடி வந்திருக்கின்றனர். பழந்தமிழர் வாழ்வு கொண்டாட்டங்களால் நிறைந்தது. ஆடுவோரும் பாடுவோரும் வாழ்வை அழகுமிக்கதாக்கினர். கூத்தர், பாணர், விறலியர் போன்ற இலக்கிய மாந்தரே இந்தக் கொண்டாடங்களுக்குச் சான்றாவர். ஒவ்வொரு நிலத்தவரும் பல்வகைப்பட்ட கூத்துகளை ஆடியுள்ளனர். நிலவமைவில் பொருளியல் வேறுபாடு: மேற்குறித்த நில அமைவியல் வழி நின்றே தமிழரின் நிலவுடைமைச் சமூக வரலாறு தோற்றம் பெறுகின்றது. நிலவமைவைப் பொறுத்தே ஒரு சமூகத்தின் உறவுகள் வடிவமைக்கப்படுகின்றன வலிமை பெறுகின்றன. சமூக இருப்பின் தளமான பொருளாதார ஆக்கத்தையும் நிலவமைவே வடிவமைக்கின்றது. "ஒரு சமூகத்தின் மேற்கட்டுமானத்தில் காணப்படும் பண்பாடு என்பது அடிக்கட்டுமானமான பொருளாதார உற்பத்தியைச் சார்ந்தே அமைகின்றது" என்கிறார் கார்ஸ் மார்க்ஸ். நால்வகை நிலத்தினுடைய பண்பாட்டு வேறுபாடுகளும் பொருளாதார வளர்ச்சியின் போக்குகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. மலைகளைக் கொண்ட நிலவமைவான குறிஞ்சியும் மலைகளின் சாரல்களான காடுகளைக் கொண்ட முல்லை நிலமும் வேட்டை சமூக வாழ்வின் கூறுகளைக் கொண்டவையாக இருந்தன. அதேவேளை நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்கக் களங்களைக் கொண்டவையாகவும் இருந்தன. நெய்தல் நில மக்களின் பொருளாதார இருப்பு நிலத்தைச் சார்ந்திராது கடலைச் சார்ந்திருந்தது. இதுவே மாறுபட்ட பண்பாட்டு அடையாளங்களுக்குக் காரணமாயிற்று. இந்நிலவமைவுகளில் மருதநிலமே வலிமையான நிலவுடைமைச் சமூகம் வேகமாக உருவாகவல்ல தளமாக இருந்தது. வரட்சியால் பெரிதும் அழிவுறும் நிலமாக இல்லாமலும் பரந்த விவசாய வயல்வெளிகளைக் கொண்ட தளமாகவும் இது அமைந்தது. நேர்த்தியான குடும்பக் கட்டமைப்பும் தலைமைத்துவத் தோற்றமும் இங்குதான் தோன்றியது என்பர். மக்கள் பாதுகாப்பாக வாழ வல்லதாகவும் தேவைகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய இடமாகவும் மருதம் அமைந்திருந்தது. மக்களின் வாழ்க்கை முறைரய மேலாண்மையை நோக்கி நகர்த்திய சமூகமாகவே மருதச் சமூகம் அடையாளம் காணப்படுகின்றது. இந்த நகர்வுகளின் வழியே நகர், நகரம், நகரியம் நாகரிகம் என்ற சொற்கள் தோன்றியதாகக் கூறுவர். ஒவ்வொரு நிலத்திலும் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உற்பத்திகள் வழியே அறுவடை முடிந்து, விளைந்த பொருட்கள் வீடு வரும் நாட்களை மகிழ்வோடு கொண்டாடியிருக்கின்றனர். ஏனைய மூன்று நிலத்தோருக்கும் தலைமை நிலமாகவே மருதம் திகழ்ந்தது. தமிழ் நிலத்தின் பெரும் பரப்பு மருதநிலமாகவே இருந்தது. விவசாயம் சார்ந்த உற்பத்தி முறைக்கு அமைவாகவும் இருந்தது. இதன்வழியே தமிழ்ச் சமூகம் வேளாண்மை சார்ந்த நிலவுடைமைச் சமூகமாக உருப்பெற்றது. விவசாய நிலங்களின் பண்பாடு மற்ற திணைக்குரிய சிறுபான்மை நிலப்பகுதிகளிலும் தாக்கம் செலுத்தியது. எனவே மருதத்திணையில் அறுவடைக்காலக் கொண்டாட்டங்கள் மற்ற திணை சார்ந்த மக்களிடம் பரவியது. இதனால் மருதநில மக்களின் அறுவடைக் கொண்டாட்டமான பொங்கல் விழா காலவோட்டத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பண்பாட்டின் அடையாளமாக மாறியது. இப்பொங்கல் விழாவுடன் தொடர்புடைய பண்பாட்டுக் கூறுகள் தமிழர்களின் அடையாளங்களாக நிலைபெற்றன. பொங்கல் விழாவின் தோற்றம்: உழவு: வேட்டைச் சமூக வாழ்வின் முடிவாகவும் வேளாண்மைச் சமூக வாழ்வின் தொடக்கமாகவும் அமைந்த காலமே மானுடத்தை வாழ்வியல் மேன்மையை நோக்கி நகர்த்திய காலமாகும். நீர்நிலையருகே நிரந்தரமாகத் தங்கி, உழவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய மாந்தர் இயற்கை இடர், பிறவுயிரிகள் ஏற்படுத்திய தடைகளைக் கடந்தே விளைவுகளைப் பெற்றனர். நீண்டதும் கடுமையானதுமான உழைப்புக்குப் பின்னர் உழவின் பயனை வீட்டுக்கு எடுத்துவரும் வேளையில் மகிழ்ச்சி இயல்பாகவே ஏற்படும். அந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கு வித்திடும். பொங்கல் என்ற அறுவடைத் திருநாளுக்கு இந்த மகிழ்வே வித்தாக இருந்திருக்க வேண்டும். உழவுத்தொழில் சிறு பயிர் உற்பத்தியிலிருந்து வளர்ச்சி பெற்று, மாரிகால மழையை நம்பிய பெரும்பயிர்ச்செய்கையாக மாற்றம் கண்ட காலத்தில் நெல் பயிரிடல் முதன்மைத் தொழிலாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆவணியில் விதைத்த விதை பயிராகி தைமாதத்தில் அறுவடைக்காகக் காத்திருக்கும். தன்னிறைவுக்கு அப்பால் பிறருக்கும் வழங்கும் வணிகத்தன்மையோடு உழவுத் தொழில் மேன்மை பெறத் தொடங்கிய காலத்தில் உழவைப் போற்றும் விழா மற்றுமொரு வடிவத்தைக் கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. உற்பத்திப் பொருட்களை வணிகம் செய்வதன் வாயிலாகப் பிற தேவைகளையும் நிறைவேற்றி மகிழும் காலமும் இதுவே என்பதால் இந்த அறுவடைக்காலம் கொண்டாட்ட காலமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அறுவடைக்காலத்தில் புத்தரிசி இட்டு மக்கள் பொங்கல் கொண்டாடினர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் எவ்வகைச் சான்றுகளும் இல்லை. அறுவடை சிறப்பாக நடைபெற்று, தாம் விரும்பியவை நிறைவேற வேண்டும் என பெண்கள் தை மாதத்தில் நோன்பு இருந்தார்கள் எனச் சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணையும் “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகையும் “தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறும் “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகையும் கூறுகின்றன. வானவியல்: ஆங்கில நாட்காட்டிக்கு அமைய ஜனவரி 14ம் நாள் தமிழ் நாட்காட்டியின்படி தை முதல்நாள் ஆகும். கதிரவனைச் சுற்றும் பூமின் நீள்வட்டப் பாதையில் கதிரவன் வடக்கு நோக்கி நகரத் தொடங்குவதைப் போன்ற நிலையில் பூமி தன் சுற்றுவட்டத்துக்குள் நகர்கின்றது. இதனை சூரியத் தோற்ற நகர்ச்சி என்பர். தை முதல் ஏற்படும் தோற்ற நகர்ச்சி ஆனி மாதம் வரை இருக்கும் இதை வட செலவு என்பர். வடமொழி உத்தர அயனம் எனப்படும். ஆடி மாதம் முதல் மார்கழி வரை தென்படும் தோற்ற நகர்ச்சியைத் தென் செலவு (தக்கண அயனம்) என்பர். தென் செலவில் இருந்து கதிரவத் தோற்ற நகர்ச்சி வட செலவுக்குள் நுழையும் நாளே தமிழர் நாட்காட்டிக்கமைய தை முதல் நாளாகும். இரவும் பகலும் எப்போதும் ஒத்த நேரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆண்டில் இரு நாட்கள் மட்டும் இரவும் பகலும் ஒத்த நேரத்தைக் கொண்டிருக்கும். இதைத் தமிழர் ஒக்க நாட்கள் என அழைக்கின்றனர். மார்ச் 22 இல் இரவும் பகலும் 12 மணி நேரத்தைக் கொண்டிருப்பதைப் போல, செப்டெம்பர் 22ம் நாளும் கொண்டிருக்கும். மார்ச் 23 வசந்தகாலத்தில் தொடக்கமாக ( Spring equinox) அமைகின்றது. செம்ரெம்பர் 23 இலையுதிர்காலத்தின் தொடக்கமாக அமைகின்றது. இதைப் போன்றே ஓராண்டில் அதிக நீளமான இரவைக் கொண்ட நாள் ஒன்றும், அதிக நீனமான பகலைக் கொண்ட நாள் ஒன்றும் உள்ளன. டிசம்பர் 22 நீளமான இரவைக் கொண்ட நாளாகவும் ஆனி 22 மிக நீளமான பகலைக் கொண்ட நாளாகவும் உள்ளன. பனிகாலத்தைக் கொண்ட நீண்ட இரவு குறைத் தொடங்குவதால் இதைப் தமிழர் பனி முடங்கல் என்பர். கடும் வெய்யிலைக் கொண்ட வேனில் காலத்தின் பகல் நேரம் குறையத் தொடங்குவதால் ஆனி 23ம் நாளை வேனில் முடங்கல் என்பர். மேற்குறித்த இந்த நான்கு நாட்களுமே நான்கு காலத்தினதும் தொடக்கங்களாக இருக்கின்றன. அத்தோடு பலவினத்தவரின் ஆண்டுத் தொடக்கங்களாகவும் இவை இருக்கின்றன. பூமி தன் உருட்டம் (self-rotation) வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration) என்ற இயக்கத்தையும் கொண்டிருக்கின்றது. இந்த இயக்கங்கள் நீள்வட்டப்பாதையில் சுற்றும் பூமியை என்றும் ஒரே மாதிரியாக இயங்க விடுவதில்லை. நீண்டகால ஒழுங்கில் மேற்கூறிய நான்கு நாட்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த இயக்கங்களை அடிப்படையாக் கொண்டு கணிக்கும் முறைக்கு சக அயன முறை (Sayana method) என இந்தியர் பெயர் வைத்திருக்கின்றனர். இந்த முற்செலவத்தைப் பொருட்படுத்தாமல் காலம் கணிக்கும் முறைக்கு, நில்லாயன அயன முறை (Nirayana method) என்று பெயர். மேலை நாட்டவர் சக அயன முறையைப் (Sayana method) பின்பற்றியே காலத்தைக் கணிக்கின்றனர். இந்த முறைக்கமைய எப்போதுமே நீண்ட இரவு டிசம்பர் 22ம் நாளில் இருந்ததும் இல்லை. நீண்டகாலத்தின் பின் இருக்கப் போவதும் இல்லை. பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேறு நாட்களில் இருந்திருக்கும் என்கிறது அறிவியல். சில ஆய்வாளர்களின் கருத்துக்கு அமைய, பனி முடங்கல் என அழைக்கப்படும் இரவு கூடிய இறுதிநாள் ஜனவரி 14 அல்லது 15 நாளிலே முன்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்கின்றனர் சிலர். குளிர் தரும் இரவுப்பொழுது குறையத் தொடங்குகின்ற, பனி முடங்கல் எனப்படும் அந்த நாளை, தமிழர் பொங்கலாகக் கொண்டாடத் தொடங்கியிருப்பர் என்கின்றது இந்த ஆய்வு. தெற்கு நோக்கிச் சென்று குளிர் தந்த கதிரவன் இனி வடக்கு நோக்கிச் சென்று வெய்யில் தரப் போகின்றான், அவனுக்கு நன்றி கூறுவோம் எனத் தோன்றியதே தைப்பொங்கல் என மேலும் கூறுகின்றது இந்த ஆய்வு. இதுவே பண்டைத் தமிழரின் ஆண்டுத் தொடக்கமாகும் என்பதையும் இது குறிப்பிடத் தவறவில்லை. பொங்கலின் தோற்றமும் ஊரக ஒருமைப்பாடும் தைப்பொங்கல் விழாவின் தோற்றம் குறித்து பல்வகைக் கருத்துகள் கூறப்பட்டாலும் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் இந்த விழா நீண்டகாலமாகவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றது எனக் கருத இடமுண்டு. சமூகப் பொருண்மை மிக்க விழாக்களின் வேர்கள் பாமரர்களை அதிகமாகக் கொண்ட ஊரக வாழ்க்கைமுறைகளிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஊரும் உறவுமாய் நெருங்கி வாழும் கிராமத்தோர், சமூக ஒருமைப்பாட்டையும் ஒருமித்த இலக்குகளையும் கொண்டதாக விழாக்களை உருவாக்கினர். இவர்களே குடும்ப விழாக்களைக் கூட ஊர் கூடி நடத்தும் விழாக்களாகக் கொண்டாடியோர் ஆவர். விழைவுற்று நிகழ்த்துவது விழா என வேர்ச்சொல் ஆய்வாளர் கூறுவர். கிராமத்தார் எப்போதுமே விழைவுகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை நாட்டுப்புற இலக்கியங்கள் கூறுகின்றன. பொங்கல் விழாவும் ஊரக வாழ்வியலின் பொதுமைச் சிறப்புகளைக் கொண்டதாக அவர்களாலேயே வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வேதகால வழிபாட்டு நெறிகளை அறிந்திராத பாமர மக்கள், குழுக்களாக வழிபடும் கிராமியத் தெய்வ வழிபாடுகளை விடுத்து, அனைவருக்கும் பொதுவான கதிரவனுக்கு நன்றி செலுத்துவதைப் பொதுப் பண்பாகக் கொண்டிருக்க வாய்ப்புகள் உண்டு. பொங்கல் விழா வெளிப்படுத்தும் உயர் கூறுகள் ஊரக வாழ்வியலுக்கே உரியவை. நகர மாந்தரால் வகுக்கப்பட முடியாத தனித்துவங்கள் பொங்கல் விழாவிலே உண்டு. சங்க இலக்கியங்கள் உட்பட பல பெரும்பாலான ஏட்டு இலக்கியங்கள், நாட்டுப்புற வாழ்வியலை பெரிதும் பிரதிபலிக்கவில்லை என்பது உண்மையே. வேந்தரையும் கடவுளரையும் பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்கள் பாரம மக்களின் வாழ்வைப் பதிவு செய்யத் தவறியிருக்கின்றன என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கியங்களுக்கு உண்டு. ஆனால் உழவுத்தொழில் குறித்துப் பல குறிப்புகளைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. ஏறு தழுவுதல் குறித்தும் பல செய்திகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. இவ்வகையில் பாமர மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பொங்கல் போன்ற பல ஊரக மக்களின் விழாக்களை ஏட்டு இலக்கியங்கள் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறே ஊரக அளவில் நடைபெற்று வந்த பொங்கல்விழாவும் இலக்கியங்களில் வேறு பதிவுகளிலும் இடம் பெறாது போயிருக்கலாம். பொங்கல் பற்றிய வரலாற்றுச் சான்றுகள்: பழங்காலப் பெண்கள் தைமாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன என்பதை முன்னர் பார்த்தோம். தைமாத்தில் நோன்பிருந்து, வையை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்ப்பபெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாகப் பரிபாடல் (பாடல் 11) கூறுகின்றது. ‘வையை நினைக்கு மடை வாய்த்தன்று மையாடல் ஆடன் மழப்புலவர் மாறெழுந்து பொய்யாடலாடும் புணர்ப்பி ரைவர் தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ தாயருகா நின்று தவத் தைந்நீராடல் நீயுரைத்தி வையை நதி’ பண்டைக்காலத்தில் நெற்பயிர்ச்செய்கை செழித்துச் சிறந்திருந்ததைப் பல இலக்கியங்கள் அழகாக எடுத்துக் கூறுகின்றன. உழவுத் தொழிலின் அனைத்துப் படிநிலைகளையும் சங்கப் பாடல்களில் காணலாம். சேற்றில் நாற்றை அழுத்தி நடுவதை, 'நீர்உறு செறுவின் நாறுமுடி அழுத்த நடுநரொடு சேறி ஆயின்..." என நற்றிணை கூறுகின்றது. 'பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின் தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்" என அறுவடை செய்யும் உழவரைப் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடைவிழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நம்பலாம். புறநானூறு என்ற சங்க இலக்கியத்தின் 22வது பாடலில், குறுங்கோழியூர்க் கிழார் என்ற புலவர், 'அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல.." எனக் குறிப்பிடுகின்றார். அதாவது 'நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும், கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன' என்று கூறுகின்றார். அறுவடைக்களங்களில் விழாக்கள் கொண்டாப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இதன் வாயிலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாற்சோறு செய்யும் வழக்கம் பழந்தமிழர் காலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. அதை புழுக்கல் என்றே இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும் நோடையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' எனச் சுட்டுகிறார். சங்ககாலத்திலும் பக்தி இயக்க காலத்திலும் புழுக்கல் என்பது தான், பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. அடுத்து, கிட்டத்தட்ட கி.பி 9ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றிய குறிப்பு இடம்பெறுகின்றது. ‘மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் வளர்த்த செந்தீப் புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்’ என கூறுவதன் வாயிலாகப் பொங்கல் என்ற சொல்லை முதல் தடவையாக இலக்கியத்தில் பதிவு செய்கின்றது. சோழர்காலத்தில் 'புதியேடு' பண்டிகை என்ற என்ற பெயரில் புதிய அரிசியிட்டுப் பொங்கும் விழா நடைபெற்றதாகத் திருவொற்றியூர் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. முதல் ராஜேந்திரனின் காளஹஸ்தி கல்வெட்டில் மகர சங்கராந்தி அன்று பெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலைத் தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ளார். தை முதல்நாளைக் கதிரவனின் வடசெலவு தொடங்கும் மகர சங்கராந்தி என்றே வட இந்தியர்கள் குறிப்பிடுகின்றனர். இங்கு படைக்கப்பட்ட திருவமுதை நாம் பொங்கலாகக் கொள்ளலாம். கண்டெடுக்கப்பட்ட மற்றுமொரு கல்வெட்டு கீழ்க்காணும் தகவலைத் தருகின்றது. சோழர் காலத்தில் உத்தம சோழனுடைய இறுதி ஆட்சியாண்டில் அவனுடைய மனைவியருள் பட்டத்தரசியாக விளங்கியவவள் 'உரட்டை சரஅபயன்" எனப்படும் திரிபுவன மாதேவி கைலாசமுடைய மாகாதேவர் கற்கோவிலுக்கு ஒரு நிவந்தம் அளித்துள்ளாள். சங்கராந்தி நன்னாளில், கைலாசமுடைய மகாதேவருக்குத் திருமுழுக்கு (அபிஷேகம்) ஆட்டுவதற்கும், நந்தாவிளக்கு எரிப்பதற்கும், நூறு பிராமணர்களுக்குப் பொங்கல் சோறு அளிப்பதற்கும் தேவையான வருவாயை அளிக்கத் தக்க வகையில் நன்செய் நிலத்தை அக்கோயிலுக்கு அவ்வரசி தானமாகக் கொடுத்து இருக்கிறாள். இக்கல்வெட்டின் வாசகத்தில் 'உத்தராயண சங்கராந்தி" எனும் தொடரும், 'பொங்கல் சோறு" எனும் தொடரும் நம் கருத்தைக் கவருகின்றன. சமயப் போர்வையில் 'பொங்கல் விழா" கோயில்களில் கொண்டாடப்பட்டதற்கு இக்கல்வெட்டு சான்று பகருகிறது. கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் அப்போ டூபாய் எனும் போத்துகல் நாட்டைச் சேர்ந்த பயணி இந்தியாவிற்கு வந்தார். அவர் தென்னிந்தியா முழுவதையும் சுற்றிப் பார்த்தார். இந்து மக்களிடையே அவர் கண்டவற்றையும் கேட்டவற்றையும் “இந்துக்களின் பழக்க வழக்கங்களும் வாழ்க்கை முறையும்" (Manners and Customs of the Indus ) எனும் நூலை எழுதியுள்ளார். உழவர்களுடைய அறுவடைத் திருநாளாகவும் சங்கராந்திப் பண்டிகையாகவும் ஊர்கள் தோறும் எவ்வாறு அது கொண்டாடப்பட்டது என்பதை அவர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். பொங்கல் விழா தொடங்குவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அதற்குரிய ஏற்பாடுகள் ஆர்வத்தோடும் ஆரவாரத்தோடும் மக்கள் செய்ததாகவும் வீடுகளைப் பழுது பார்த்தல் குடிசைகளில் புதிய கூரை வேய்தல், வெள்ளையடித்தல், வண்ணம் தீட்டுதல், அலங்கரித்தல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். பொங்கல் நாளன்று சூரியனுக்குச் செய்யப்படும் வழிபாட்டையும், பொங்கல் படையலையும் அவர் பாராட்டியுள்ளார். மறுநாள் மாடுகளுக்குச் செய்யப்பட்ட அலங்காரங்களையும், ஊர்ப் பொது இடத்தை மக்கள் கூடி, அவற்றிற்கு வழிபாடு செய்ததையும் கூடக் குறிப்பிட்டிருக்கின்றார். மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள் காளையாட்டுப் போட்டிகளிலும் 'மஞ்சு விரட்டு" போன்ற வீர விளையாட்டுகளிலும் பேரார்வத்தோடு ஈடுபட்டதை அவர் பதிவு செய்துள்ளார். இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல்: விஜயநகரப் பேரரசு காலத்திலும் ஐரோப்பியர் காலத்திலும் தைப்பொங்கல் பற்றிய செய்திகள் பரவலாக எங்கும் காணப்படவில்லை. எனினும் தொடர்ச்சியாக நாட்டார் வாழ்வியல் அழுத்தமானதோர் விழாவாக பொங்கல் நடைபெற்று வந்திருக்கின்றது. தமிழகக் கிராமங்களில் கொண்டாடப்படுகின்ற பொங்கல் விழாக்களை உற்று நோக்கினால் அதன் ஆழமான நீண்ட தொடர்ச்சியையும் செழுமையையும் உணர முடியும். தமிழினத்தவரிடையே இருபதாம் நூற்றாண்டில் தைப்பொங்கல் பெற்ற எழுச்சி அதற்கு முன்னான காலங்களில் இருக்கவில்லை என்பது உண்மையே. பொங்கல் பற்றிய பிந்திய இலக்கியப் பதிவாக நமக்குக் கிடைப்பது பாரதிதாசன் பாடல்களே. தைம்மதி பிறக்கும் நாள்; தமிழர்தங்கள் செம்மை வாழ்வின் சிறப்புநாள்; வீடெலாம் பாலும் வெல்லப் பாகும் பருப்பு நெய் ஏலமும் புதுநெருப் பேறி, அரிசியைப் பண்ணிலே பொங்கப் பண்ணித் தமிழர் எண்ணிலே மகிழ்ச்சி ஏற்றும் இன்பநாள்! தலைமுறை தலைமுறை தவழ்ந்து வரும் நாள்! என்கிறார் பாரதிதாசன். இக்காலத்தின் தோன்றிய திராவிட அமைப்புகளும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஊரக வாழ்வியலின் எல்லைகளுக்குள் மட்டுப்பட்டிருந்த பொங்கல்விழாவைத் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாக வெளிக்கொணர்ந்தனர். பொங்கல் விழாவினூடே விரவிக் கிடந்த தமிழரின் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தி விழாவின் சிறப்பை உலகறிச் செய்தனர். அதுவே தமிழரின் புத்தாண்டு எனவும் அறிவித்தனர். இன்றைய நாட்களில் உலகத் தமிழர் அனைவரும் பொங்கல் திருநாளைத் தமது தனித்துவமான பண்பாட்டு விழாவாகவே கருதத் தலைப்பட்டுவிட்டனர். மெய்யியற் சமய வழிபாடுகளுக்கப்பால் பழந்தமிழர் வழிபாட்டு முறையான இயற்கை வழிபாட்டின் எச்சமாகவே பொங்கல்விழா திகழ்கின்றது. இவ்விஉண்மையும் உணர்வும் மிக்கதாக இருக்கின்றது. பொங்கல் விழா வெளிப்படுத்தும் நுட்பமும் ஆழமும் மிக்க பண்பாட்டுக் கூறுகள் குறித்து மற்றுமொரு கட்டுரையில் காண்போம். https://paniveli.blogspot.com/2019/01/blog-post.html
-
இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களா? அனுமதியளித்தது யார் என முஜிபுர் ரஹ்மான் கேள்வி
முதலில் தைத்திருநாள் வாழ்த்துகள்! நீங்கள் சுட்டியிருப்பது ஏற்புடையதே. கிழக்கிலே சோனகர்கள் செய்த கொடுமைகளின் பாதிப்புகளைச் சந்தித்தவர்கள் இன்றும் உயிரோடு உள்ளனர். இதுவரை எந்தவொரு சோனகரும் வருத்தம் தெரிவித்ததாக நிலை தொடர்கிறது. ஆனால் மாறிவரும் சூழலையும் தமிழினத்தின் இருப்பையும் தக்க வைத்து நகரத் தொடர்ந்தும் ஒரு சமண்பாட்டைத் தேட வேண்டியதும், உரையாடி, உறவாடி மறந்தும் மன்னித்தும் எமது எதிர்காலச் சந்ததியின் இருப்புக்காக நாம் சிந்திக்க வேண்டிய தேவையும் உள்ளதென்பதை நாம் கடந்து செல்ல முடியாது. இங்கேயுள்ள சிக்கலில் மேலும் இடியப்பச் சிக்கலாகிவிடக்கூடாதல்லவா? அதைவிட எமது அரசியல் மேதாவிகள் இஸ்ரேல் அல்லது சீனா போன்ற சக்திகளை அணுகும் ஆற்றலையோ கையாளும் திறனையோ கொண்டிருக்கிறார்களா? அவர்களுக்கு அதைப்பற்றிச் சிந்திக்க நேரமேது. அவர்கள், தமக்குள் கட்சிகளைச் சிதைத்துக் குட்டிக் குழுக்களாக்குவதில் காலத்தைச் செலவழிக்கிறார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
இன்பமும் இனிமையும் பொங்க வளமும் வண்ணமும் பொங்க அன்பும் அறமும் பொங்க அறிவும் ஆற்றலும் பொங்க புதுமையும் பழமையும் பொங்க இளமையும் நலமும் பொங்க கனிவும் களிப்பும் பொங்க யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உரித்தாகுக! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களா? அனுமதியளித்தது யார் என முஜிபுர் ரஹ்மான் கேள்வி
இது ஒரு ஆபத்தான நிலைமையைத் தோற்றுவிக்கப்போகிறது. மதங்களைக் கடந்து முழு இலங்கைத்தீவையும் மையப்படுத்திப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடும். இஸ்ரேல் தனக்கேற்றவாறு தான்தோன்றித்தனமாகப் போரை எல்லைகளைக்கடந்து முன்னெடுத்தவருகிறது. அதனது முகவர்கள் மதநிறுவனங்கள் என்ற போர்வையில் இலங்கையில் முகாமிடுவது எதிர்காலத்தில் ஏலவே குழம்பியுள்ள இலங்கைத்தீவிலே மேலதிக குழப்பங்களை விளைவிக்கலாம் அல்லவா? சிந்திக்க வேண்டிய விடையம். உண்மையில் வந்துபோகும் ஒவ்வொரு நாட்டவரும் தமக்கான மதக்கட்டமைப்புகளை நிறுவ முனைந்தால் குழம்பங்களை ஏற்படுத்தாதா?
-
அநுர அரசாங்கத்தில் அதிகாரப்பகிர்வுக்கான சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன!
அநுர அரசாங்கத்தில் அதிகாரப்பகிர்வுக்கான சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன! Posted on January 12, 2025 by தென்னவள் 5 0 ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான அதிகாரப்பகிர்வுக்குரிய சாத்திய நிலைமைகள் மறைந்து வருகின்றன என்று குறிப்பிட்டுள்ள கலாநிதி.தயான் ஜயத்திலக்க கடந்த காலத்தில் தமிழ் அரசியல்வாதிகள் செய்துள்ள பத்து பாவங்களையும் பட்டியலிட்டுச் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் சம்பந்தமாக தனது கருத்துக்களை வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பதற்கு 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி இந்திய, இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னணியில் உருவான 13ஆவது திருத்தச்சட்டத்தினை அடுத்து இரண்டு சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. அச்சமயத்தில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் சிலர் 13ஆவது திருத்தச்சட்டத்தினை கடுமையாக எதிர்த்தார்கள். சிலர் 13ஆவது திருத்தச்சட்டத்தினை உடன் அமுலாக்குவதற்கு முயற்சித்தார்கள். ஆனால் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் எவரும் அதனை முறைப்படியாக நடைமுறைப்படுத்தி பரிநாமரீதியான வளர்ச்சியை அடைந்து அதிகாரப்பகிர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கவில்லை. இதன்காரணமாக, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பத்து பாவச் செயல்களை இழைத்துள்ளார்கள் என்பது எனது நிலைப்பாடாகிறது. அவர்கள் செய்துள்ள அந்தப் பத்து பாவச்செயல்களை நான் பட்டியலிடுகின்றேன். அதில் முதலாவதாக, தமிழ்நாடு வழியாக டில்லிக்கு ஆணையிட முடியும் என்று கருதியமையாகும். இரண்டாவதாக, புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு காணப்படும் மேற்கத்தேய ஆதரவானது டில்லியை விடவும் முக்கியமானது என்று கருதியமையாகும். மூன்றாவதாக, தெற்கில் இந்திய எதிர்ப்பு மற்றும் அதிகாரப்பகிர்வு ஆகியவற்றுடன் ஜே.வி.பி மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில், மாநில அதிகாரத்துக்கான அதிகாரப்பகிர்வு நூலில் தொங்கிக்கொண்டிருந்த தருணத்தில் 13ஆவது திருத்தச்சட்டத்தினை வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண அரசு உடனடியாக அமுலாக்குவதற்கு முனைந்தமையாகும். நான்காவதாக, இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராக தனிநாடு கோரிப்போரிட்டு வந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பதன் ஊடாக 13ஆவது திருத்தத்தைக் கடந்து அப்பால் செல்லதற்கு முயன்றமையாகும். ஐந்தாவதாக, தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு சாதகமான மனோநிலையில் இருந்த இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அந்த ஆதரவைப் பெறுவதற்கு முயன்றமையாகும். ஆறாவதாக, பிரபாகரன் மரணிக்கப்பட்டு விடுதலைப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கான அடிப்படையாகவோ, அல்லது தொடக்கப்புள்ளியாகவோ 13ஆவது திருத்தச்சட்டத்தினை நிராகரித்தமையாகும். ஏழாவதாக, உள்ளுர் மற்றும் வெளிநாடுகளில் இணைத்தலைவர்களாக நேர்வே மற்றும் தென்னாபிரிக்கா செயற்பட்ட காலத்தில் சந்திரிகா, ரணில் போன்றவர்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை விடுத்துச் செயற்படுவதற்கான அனைத்து சாத்தியமான வழிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தமையாகும். எட்டாவதாக, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைப் பாதுகாப்பதற்கு பதிலாக சீனாவுக்கு எதிரானதொரு அரணாக அதனை காண்பித்துக் கொண்டிருக்கின்றமையாகும். ஒன்பதாகவதாக, டில்லியானது தனது பொருளாதார மற்றும் மூலோபயங்களை பாதுகாப்பதற்காகநகர்ந்தபோது 13ஆவது திருத்தச்சட்டத்தினை செயற்படுத்துவதில் தாமதமாக இந்தியாவின் உதவியை நாடும் போக்காகும். பத்தாவதாக, சமஷ்டி முறைமையைக் கோரிக்கொண்டு 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் டில்லியுடனான இணைப்பினை துண்டிக்கும் போக்கானது அதிகாரப்பகிர்வு மறைந்து போவதற்கு காரணமாகின்றது. இவ்விதமான நிலைமையில், தற்போது 13ஆவது திருத்தச்சட்டம் அல்லது மாகாண ரீதியான அதிகாரப்பகிர்வுக்கு வாய்மொழி ரீதியான உறுதிமொழியைக் கூட வழங்காத தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியில் உள்ளது. அதுமட்டுமன்றி குறித்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கு தமிழர்கள் இல்லை, அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் காணப்படுகின்றது. அரசுக்கு தமிழ்தேசியம் சார்ந்த நாடுகளிடத்தில் நட்பற்ற நிலைமையும் காணப்படுகின்றது. இத்தகைய அரசாங்கமொன்றை கையாள வேண்டிய நிலைமையானது தற்போது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழ்த் தேசியவாதத்தின் சுயாட்சி, அதியுச்ச அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட வலியுறுத்தல்களுக்கு அரசாங்கத்திடம் உரிய பதில்கள் மட்டுமல்ல அங்கீகாரம் கூட இல்லை. மேலும் 1983ஆம் ஆண்டில் தோற்றம்பெற்ற இந்திய இலங்கை படைகளுக்கு எதிரான தமிழ் இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சியால் 13ஆவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எதனையும் பெற்றுக்கொள்ள முடிந்திருக்கவில்லை. ஒற்றையாட்சியை நிராகரித்ததன் காரணமாக, 13ஆவது திருத்தச்சட்டத்தினையும் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைமைகள் ஏற்பட்டதோடு சமஷ்டி நோக்கி செல்ல முடியாத நிலைமைகளும் ஏற்பட்டுள்ளதோடு தற்போது ஒற்றையாட்சிக்குள் 13ஐயும் இழந்துவிடும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஒற்றையாட்சிக்கு வெளியில் அதிகாரப்பகிர்வினைப் பெறுவதற்கான சாத்தியப்பாடுகளும் காணப்படவில்லை. சிரியாவின் அசாத்தும், சுயாட்சியைப் பெற்றுக்கொண்ட குர்து இனத்தவரும் வொஷிங்டன் அல்லது மொஸ்கோவை விடவும் தமது அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அண்டைநாடான துருக்கி மிகவும் பொருத்தமானது என்பதையே புரிந்துகொண்டனர். வடக்கு தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் ஒத்துழையாமையானது இந்திய, இலங்கை உறவின் நிகழ்ச்சி நிரலில் இருந்து தமிழர்கள், அதிகாரப்பகிர்வு, 13ஆவது திருத்தச்சட்டம் ஆகிய விடயங்கள் நீக்கப்படுவதற்கு காரணமாகின்றது. தற்போது தமிழ்த் தேசிய அரசியல்வதிகள் வரலாற்று ரீதியாக மிகவும் பலவீனமாக உள்ளநிலையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரிப்பதும், டில்லியின் இணைப்பை துண்டிப்பதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரப்பகிர்வுக்கான வெளிப்புற செல்வாக்கை இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றார். https://www.kuriyeedu.com/?p=648180
-
சீனாவின் அறிவிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்ட இந்தியா
கவலைகள் ... கருத்துகள் என்றால் என்ன கட்டியழுதிட்டு வாறவைபோலகிடக்குது. மேயரும் பொக்கிஷமும ஏதோ இந்தியக்கொடியைப் பெஜ்ஜிங்கிலை ஏத்தினமாதிரி புழந்து கட்டுகிறார்கள். உக்கிரேனை சத்தமிட்டுப் பிடிக்க, இங்காலை சத்தமில்லாமல் பிடிப்பு நடக்குதாக்கும்.
-
அனுர குமார திஸ்ஸநாயக்க கூறியது என்ன? - உண்மையின் தரிசனம்
Anura Kumara Dissanayaka கூறியது என்ன? | Sri Lanka Politics | Unmaiyin Tharisanam | IBC Tamil சமகால தமிழர் அரசியல் குறித்தான அரசியல் பார்வையை தொட்டுள்ளதாலும், சில கவனத்திற்குரியன என்பதாலும் இணைத்துள்ளேன். நன்றி-யூரூப்
-
பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் - ஜனாதிபதி
சிங்கள அரசியல் கடந்த 2500ஆண்டுகள் இராசதந்திரப் பாரம்பரியத்தையும், ஆட்சியமைப்பியல் (புனைகதைப் புதினங்களையும் உள்ளடக்கியதானபோதும்) மகாவம்சமெனும் வரலாற்றுத்திரிபைத் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். மகிந்தவரை எழுதப்பட்டாத அறியமுடிகிறது.தமிழர் அரசியலில் எங்களால் 75ஆண்டுகளான கட்சியைக்காக்கவோ அல்லது 35ஆண்டுகள் தொடர்ந்த மதிப்பிடமுடியாத உயிர்களை அர்ப்பணித்து வளர்த்தெடுத்த உயிர்ப்போராட்டத்தைக்கூட முழுமையான பதிவாக நாம் வைத்திருக்கவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பொருளாதாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் - ஜனாதிபதி
அநுர மகாத்தையா கொஞ்சம் பின்னோக்கி பார்த்து பேசினால் கொஞ்சம் நம்பலாமெல்லோ. 2004 சுனாமி நிவாரணப்பணிக்காக நிறுவப்பட்ட அதிகாரமற்ற P-TOMS யே இல்லாமலாக்கியவர்கள் பேசுவதைப் பார்த்தால், ஏதோ தற்போதுதான் வானிலிருந்து வந்து இலங்கை அரசுத்தலைவராகியதுபோல் பேசுவதுதான் வேடிக்கை. இதற்கும் கைதட்ட ஒரு கூட்டம் எம்மிடையே இல்லாமலில்லைத்தானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி தமது சுயவாழ்வின் கறறல்வழியாகத் தோன்றிய இடதுசாரிகளையும், அதனைப் பார்த்துவிட்டுப்பேசும் இடதுசாரிகளையும் பிரித்துப்பார்க்கத் தவறிவிட்டோம். மழைக்கால இடதுசாரிகளையும் மா வோ சேதுங் போன்றோரையும் சமனாக நோக்கிவிட்டோம். அதனால் வந்தவினையென்று நினைக்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
2025 புதுவருட வாழ்த்து
யாழ்க்கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! பிறந்துள்ள 2025இல்.... அகமகிழ்வும் உடல் நலனும் உயர்வளமும் பெற்றுப் பேருவைகையுடன் வாழ வாழ்த்துகின்றேன்! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை.
ஒரு இனத்தின் துயரச்சுவட்டை ஆதாரமாகக்கொண்டு புலம்பெயர்ந்த நாம் நிலைபெயர்ந்து வருகின்றோம் என்ற கசப்பான உண்மையை எதிர்கொண்டு நிற்கின்றோம். உலகில் ஒரு சிறிய மக்கள் கூட்டமானபோதும் நாம் 30ஆண்டுகளில் சாதித்தவை பல. அவற்றை வேற்றவர் அபகரித்துச் செல்லத் தம்மையறியாமலே தமிழினம் துணைபோவது துயரமானது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
காசாவில் இறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்த மருத்துவமனையும் செயல் இழந்துள்ளது - மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைது
இதனைத்தானே முள்ளிவாய்க்காலிலும் செய்தார்கள். இவர்களுக்கு வெட்கமென்பதே கிடையாது. இல்லையென்றால், முட்கம்பி வேலிக்குள் இருந்த மக்களை உலங்குவானூர்தியில் சென்று பார்த்துவிட்டுத் திரும்பியவர்தானே ஐ.நா அவைத்தலைவர். உண்மையில் அந்தக் காட்சியைப் பார்த்தவுடன் ஐ.நா செய்திருக்கவேண்டியது அங்கேயொரு பணியகம் அமைத்துச் செயற்பட்டிருக்க வேண்டாமா? காஸாவில் கொட்டைகளுள்(கொட்டைகை என்று கூறமுடியாது) இருந்த 5மழலைகள் குளிரால் இறந்துள்ளார்கள்.இதனையே இந்த வெட்கப்படாத அனைத்துலகு கண்டுகொள்ளவில்லை என்பது எவளவு துயரமானது.