Jump to content

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5414
  • Joined

  • Last visited

  • Days Won

    6

Everything posted by nochchi

  1. எப்போது வினாத் தொடுப்பீர்! ---------------------------------------------- எரிகின்ற காசாவிலிருந்து என்னதான் கிடைக்கும் எலும்புகளும் கிடைக்காது ஏனென்றால் பார்வைக்குக் சிறுமீன்போல் திமிங்கலமாய் நெளிகின்ற இஸ்ரவேலே விழுங்கிவிடும் அப்போ எதற்காக இந்தப் போருக்குள் மேற்கு மேய்கிறது அரபுலகை வெட்டுகின்ற தங்கக் கத்தியாக இஸ்ரவேல் இருக்கிறது அதனால் இருக்குமோ! எவளவு மக்கள் எவளவு பலஸ்தீனர் எவளவு சிறுவர்கள் எவளவு குழந்தைகள் எவளவு மழலைகள் அழிந்தொழிந்து போனாலும் அதைப்பற்றிக் கவலையேது! எமக்குத் தேவை எமது தேவைகள் நிறைவேற எந்தடையும் இல்லாத உலக வெளிதேவை ஊடறுப்போர் யாரெனினும் நாளையது இஸ்ரவேலேயானாலும் பாலஸ்தீனத்தை வைத்தே படை நடாத்தி அடக்கிடுவோம் இனமென்ன நாடென்ன எமக்கேதும் கவலையில்லை கவலையெல்லாம் எம்மிருப்பே காரணத்தை அறியாத உலகின் கடைநிலை மனிதனது தலைமேலும் கவிறது யுத்தவெறிச் செலவு! கண்ணாடி மாளிகையில் போர் நடக்கும் இடங்களிலே விழுகின்ற தலைக் கணக்கு எழுதுகின்ற ஐ நாவோ வெற்றுக் கடதாசி வெறும் பேச்சு நிறுவனமாய் போனதினை அறியாமல் மக்களது அங்கலாய்ப்பு! உலக மக்களெல்லாம் இனக்கொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கத் துணியாவிடில் தம் நலன்களுக்காக இனங்களை அழிக்கத் துணிந்திடும் ஆதிக்க சக்திகளின் தொடர்கதையாய் உலகழியும் நிலைதோன்றும் முன்னாலே உலகே விழித்தெழமாட்டாயா! இனக் கொலைகளின் பின்னிற்கும் ஆதிக்க உலகினது முகத்திலே நீ அறைந்து எப்போது வினாத் தொடுப்பாய் அதுவரை இவர்களது ஆட்டங்கள் ஓயாது! தம் தேவைகளை அடைவதற்கு அரசுகளை அழித்தொழித்து கைப்பாவை அரசுகளை நிறுவி ஆட்டுவிக்கும் ஆதிக்க உலகினது அடிமைகளாய் உலக மக்கள் உள்ளவரை ஓயாது போர்முனைகள் தணிவதும் மூள்வதுமாய் உலகம் துயரத்துள் சிதைகிறது சிதைவினிலே வாழ்கின்ற சீர் மிகு நாடுகளோ மனித உரிமையின் காவலராய் வேடமிடும் அற்பத்தனத்தாலே அழிகின்ற உலகமதை யார் வருவார் காத்திடவே! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. அடைக்கலம் கொடுத்தவர்களது நோக்கத்தை இஸ்லாமியர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களால் மதக்கடமைகளைக் கடந்து வரமுடியாது. இதற்கு ஒரேவழி அரச மற்றும் பொதுமக்களின் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்போரை அவர்களது நாட்டுக்கே அனுப்பிவைப்பது நல்லது. அவர்கள் தமது நாட்டில் போய் தமது கடமையை செய்ய வேண்டியதே.
  3. எல்லாம் ஆதிக்க சக்திகளுக்கே வெளிச்சம். இங்கே அணுகுண்டின் அழிவைக் கண்ட நாடு யப்பான். அணுகுண்டைப் போட்டநாடு அமெரிக்கா. ஆனால், அந்தப் பெரும் அழிவின் பின்னும் அணுகுண்டின் மீதான பாசத்தை வல்லாண்மை மிகு நாடுகள் கைவிடவில்லை. அமெரிக்காவை யாரும் தண்டிக்கவும் இல்லை. உலகை அழிக்கும் வல்லமையோடு இன்றும் இந்த நாடுகள் சர்வசாதாரணமாக மனிதஉரிமை மண்ணாங்கட்டி என்று பேசியவாறு மனித குலத்தை அழிக்க வல்ல அணு ஆயுதங்களோடு நடமாடுகின்றன. இன்றைய நாளில் 9 நாடுகள் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளதாக இணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஸ்யா 1458தயார்நிலையிலும் 3039பயன்படுத்தக்கூடிய நிலையிலும்,அமெரிக்கா 1389தயார்நிலையிலும் 2361பயன்படுத்தக்கூடிய நிலையிலும்;, சீனா350, பிரான்ஸ்290,பிரித்தானியா225,பாகிஸ்தான்165,இந்தியா156,இஸ்ரவேல்90, வட கொரியா 40 - 50 பயன்படுத்தக்கூடிய நிலையிலும் வைத்திருக்கின்றன. மறைநிலையாக எத்தனை நாடுகள் வைத்திருக்கின்றவோ தெரியாது. இந்த உலகிடம் மனிதாபிமானத் எதிர்பார்த்தல் சாத்தியமுள்ளதா? உலக நாடுகள் தத்தமது நாட்டின் பட்டினியைப் போக்குவதற்குச் செலவழிப்பதைவிட பலநூறுமடங்கு ஆயுத தளபாடங்களுக்குச் செலவழிக்கின்றன. இந்த உலகம் இயற்கையாக அழிகிறதோ இல்லையோ மனிதர்களால் அழிக்கப்படுவதற்கான எல்லாம் தயார்நிலையில் உள்ளதாகவே தென்படுகிறது. இதில் யாரிடம் அணுகுண்டு இருக்கவேண்டுமென யார் தீர்மானிப்பது? இந்த வல்லாண்மை நாடுகளால் அணு ஆயுதக்களைவைச் செய்யும் தற்துணிவுள்ளதா? பயணத்தின்போது சுண்டிவிடத்தயாரானநிலையில் பெட்டிகளோடு திரிகிறார்கள். இவர்களை இந்த உலகு ஏதோ காப்பர்கள் போல நோக்கியவாறு அழிகிறது. நன்றி.
  4. பெரும்பாலான மேலைத்தேய நாடுகளின் பார்வையில், தம்மைத் தவிர யாரிடமும் அணுகுண்டு இருக்கக்கூடாது என்பதே. ஆனால் கைமீறிவிட்டது. தற்போது அதனை அனைத்துலக அணு ஆயுதப் பரவல் தடுப்பு அமைப்பின் ஊடாகக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அச்சத்தின்பாற்பட்டு முஸ்லிம் நாடுகள் அணு ஆயுதரீதியில் முழுமையடைவதை அவை எதிர்க்கின்றன. அப்படி அவர்கள் அச்சப்படக் கரணியமாக அமெரிக்காவினது நடவடிக்கையும் உள்ளது. இதிலே மேற்கினது சுரண்டலாதிக்கம் ஓயும்வரை போர்கள் ஓயாது.
  5. Vela incident : Does Israel really have nuclear weapons? | Niraj David's Nitharsanam | Israel Weapon இஸ்ரேலிடம் உண்மையிலேயே அணு ஆயுதங்கள் உள்ளதா? நிராஜ் டேவிட் ஒரு அப்பாவி நாடான இஸ்ரேலைப்போய் இப்பிடி அபாண்டமா பழி சுமத்தலாமா ஐயா!
  6. இணைப்புக்கு நன்றி! எமது இனம் தனது ஆற்றலைத் தேடவும், வளர்க்கவும், வாழவுமான ஒரு களமாகவும் புதில உலகை நோக்கிய தேடலோடு நகர்வது சிறப்பு. புலம்பெயர் முதலீட்டாளர்களால் கவனிக்கப்படவேண்டிய பல தெரிவுகள் உள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில துறைகளைக் கடந்து செல்லத் தமிழினம் முயல்வது நிமிர்வுக்கான வழியாக அமையும். பொருளாதாரமும் தொழில் நுட்பமும் பின்னிப்பிணைந்தவை. வெளிநாடுகளுக்கு தொழில் நுட்பங்களை ஏற்றுமதி செய்வோராக மாறினால், புலம் பெயர்ந்து தொழில் தேடும்நிலை மாறிவிடும். சுயவளர்ச்சியை கொண்ட பொருண்மியம் உருவானால் தமிழினத்தோடு உலகுக்கு ஒரு நெருக்கமும் வரலாம். ஒன்றும் அற்றவர் இவர்களை எதற்காக என்ற நிலையும் மாறும்.
  7. American nurse who got out of Gaza describes desperation she saw காஸாவில் இருந்து வெளியே வந்த அமெரிக்க மருத்துவத்தாதி(எ.ம.ச) தான் கண்ட விரக்தியோடு விவரிக்கிறார்
  8. 33வது நாளில் இஸ்ரேலுக்கு பேரிடி-நெதன்யாகுவுக்கு எதிராக திரும்பிய அமெரிக்கா-7 நாடுகள் அதிரடி முடிவு
  9. உண்மை, மாற்றத்துக்கான அனைத்துக் களங்களையும் திறக்கவேண்டியது அவசியமானது. இதில் காத்திருப்பதைவிடக் களமிறக்கிச் செயற்பட்டுப் பார்ப்தே நன்று. அதனைப் பொருத்தமாகச் செய்துள்ளார்.
  10. உண்மை, மதங்களைக் கடந்து மனிதத்தை நேசிக்காதவரை வாய்ப்பில்லை. அதற்கான எந்தவொரு முன்னெடுப்பும் அரசுகளிடமோ மதபீடங்களிடமோ இல்லை.
  11. ஹிட்லரை மிஞ்சிய இஸ்ரேல் பிரதமர்..? - 7ம் திகதி கொழும்பு குழுங்க வேண்டாமா..?
  12. நன்றி, அவர்கள் இப்போதும் அங்கு வாழ்கின்றார்கள்தானே? இவளவு தொலைதூர ஆய்வுகளை செய்யும் உங்களுக்குத் தெரியாமல் என்னிடம் கேட்கின்றீர்கள்!
  13. இஸ்ரேல் மீது பாய்ந்த 8000 ராக்கெட்டுகள்! 4000 பேர் மரணம் | THUPPARIYUM SHAMBU
  14. நன்றி, இங்கே யாழிலேயும் சில ஆய்வுகள் உண்மையாகத்தானிருக்கும் என்றே பலரும் படித்தறிகிறார்கள். அதுபோல் அருஸ் அவர்களதும் உண்மையாயிருக்கலாம். அதேவேளை இன்று சொந்தநிலத்தவனைவிட வந்த நிலத்தவரது அழிச்சாட்டியமே அதிகரித்து அழிவுகளை விதைத்துவருகிறது. நன்றி
  15. தந்தையின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினி அவர்களோடும் அவரது குடும்பத்தினரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்வதோடு, ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திப்போமாக.
  16. அண்மையில் ஒரு காணொளியில் அருஸ் அவர்கள் தமிழ் - சோனக முரணைத் திட்டமிட்டதே இஸ்ரேல் உளவுப்படை என்று கூறியுள்ளார். மதத்தைக் கடந்து நிலத்தையும் வாழ்வையும் சிந்திக்காதவரை அழிவின் தொடர்ச்சியைத் தடுக்க முடியாது.
  17. Gaza -வுக்குள் நகரும் Israel இராணுவம்..அடுத்து என்ன? | Niraj David's Nitharsanam | IBC Tamil | Hamas
  18. தமிழீழத்தவர்களின் வலியைத் தமிழீழ மற்றும் சிறிலங்காவினது சோனகர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் சிங்களப் படைகளோடு நின்று தமிழின அழிப்பை மேற்கொண்டார்கள். இன்றும் அதன் தொடர்ச்சியைப் பேணுகின்றார்கள் என்ற அடிப்படையில் இன்னுமொரு நாட்டில் சோனகர்கள் கொல்லப்படலாம் அல்லது அழிக்கப்படலாம் என்ற நோக்குநிலை ஏன்? இந்தப் பார்வை சரியானதா? இதற்கான ஏதுநிலையானது எமது அழிவின், எம்மை அழித்தமையின், எம்மை அழித்தவருகின்றனர் போன்றனவற்றின் ஊடான பார்வையின் ஊடாக நகரும் போக்கினைத் தமிழர் கைக்கொள்வதால் ஏதாவது நன்மைகள் விளையுமா? அல்லது சோனகரல்லாத நாடுகளின் ஆதரவு எமக்குக் கிடைக்குமா? இவை இரண்டிலும் ஒன்றும் நிகழப்போவதில்லை. எந்த நன்மையுமற்ற நிலைப்பாட்டைவிட ஒரு நாகரீக உலகில் மனித அழிவுக்கெதிரான நிலைப்பாட்டை கைக்கொள்வது நியாயமற்றதா? உலகம் நீதியினச்சில் சூழலவில்லை என்பதையும், உலக மையநீரோட்டதின் போக்கினையும் தேசியத் தலைவரவர்கள் 2008ஆம் ஆண்டின் மாவீரர் தின உரையிலே மிகத்தெளிவாகச் சுட்டியுள்ளார். எமது தேவை எமது சுயநிர்ணய உரிமைக்கான வழியைத் தேடுவது. போர்களின் சார்புநிலை எமக்கான சுயநிர்ணய உரிமைப்போருக்கு உதவப்போவதில்லை. நாம் வென்றெடுக்க வேண்டிய சக்திகள் எமக்கு மிக அருகிலேயே இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டு பயணித்து எதையும் அடைந்தவிட முடியாது. நாம் மேற்கிலே அனைத்து சௌகரியங்களோடும் பாதுகாப்போடும் இருக்கின்றோம். ஆனால், தாயகத்திலே தினமும் அவலத்துள் வாடும் உறவுகளை மனம்கொள்வோமாயின், அவர்களது அவலங்களை வெளிக்கொணரவேண்டிய வரலாற்றுக் கடமை எம்முன்னே உள்ளதை நாம் சிந்திக்கவேண்டியவர்களாக உள்ளோம். நன்றி
  19. மதங்களைக் கடந்த மனிதாபிமான உலகை எமது அடுத்தலைமுறைக்கு அர்பணிக்கத் துணியாதவரை அமைதியை அடையமுடியாதுபோல் தெரிகிறது. உலகம் இசுலாமிய பயங்கரவாதம் என்கிறது. ஆனால் இந்துத்வா, யூதத்துவா,புத்தத்துவா என மதங்களின் பயங்கரவாதம் கோலோச்சி வருவதே இன்றைய உலகின் துயரங்களின் அடிப்படையாக இருக்கிறது. பாவம் அப்பாவிகள். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
  20. சாத்தான்கள் 'சாது' காளாக மாறி வேதம் ஓதுகிறார்களாம். அதனால் எவளவு பலஸ்தீனர் இஸ்ரேலால் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை பயங்கரவாதத்தை அனுமதிக்க முடியாதாம். அரச பயங்கரவாதம் அனுமதிக்கக்கூடியதாம். இது இவர்களின் சந்தர்ப்பவாத சனநாயகம். ?????????????????
  21. இதனை யார் செய்ய வேண்டும்? ஏனிந்த நீண்ட கால இழுத்தடிப்பு? ஒருவேளை இருதரப்புக்கும் வேறு திட்டங்கள் உள்ளனவா? 1.இதனை உலகமும் ஏதோ சகட்டுமேனிக்குச் சொல்கிறதேயன்றி நடைமுறையில் அப்படியவர்கள் நேர்மையோடு சிந்திக்கிறார்களா? ஏன் அதனை செய்ய இவளவுகாலம்? அல்லது பலஸ்தீனத்தை அழித்து ஒரு அகண்ட இஸ்ரவேலை உருவாக்கும் பெரும்பான்மைக் கிறிஸ்த்தவ நாடுகளின் மறைமுகத் திட்டத்தின் தொடர்ச்சியா இந்த அழிப்பு நடவடிக்கை? 2. அல்லது சுற்றியிருக்கும் இசுலாமிய நாடுகளின் அகண்ட பலஸ்தீனத்துக்கான ஆதரவுடனான மறைமுகத்திட்டத்தறிகான பலியாக இந்த அழிவு நடவடிக்கை அனுமதித்துக் காத்திருக்கிறதா? யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவார்களா? விடுவதாயின் புதிதாக இடங்களை ஆக்கிரமிக்கமாட்டார்கள் அல்லவா? இந்தியா ஒரு 'பச்சோந்தி' நாடென்பது உலகறிந்தது. தனது மக்களையே சமமாக நடாத்தத்தெரியாத நாடு எப்படி உலக விடயங்களில் நேர்மையோடு இருக்கும் என்று எதிர்பார்கலாம்.
  22. 1986ஆம் ஆண்டு அதிகாலையை நெருங்கிய பொழுதொன்றில் சிறிலங்கா அரசபயங்கரவாதப் படைகளின் கவசவாகனங்களின் சத்தம் எமது வீட்டிற்கு அருகிலே கேட்டது. எழுந்து சுதாகரிப்பதற்குள் வெடியோசைகள். சன்னங்கள் நாலாபக்கமும் பாய்ந்தது. ஜெயந்திநகர் நோக்கிய திசையில் திருநகரின் பிரதான வீதியை ஊடறுத்துச் சிறிலங்கா அரசபயங்கரவாதப் படைகளின் கவசவாகனங்களின் நகர்வு. நாமனைவரும் வீட்டின் பின்புற வேலியால் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தோம். நாம் ஓடும் திசையில் வேட்டுகளும் வந்தகொண்டிருந்தன. ஆனால், அம்மா சொல்லவதுபோல் தெய்வாதீனமாக எவருக்கும் எதுவும் நடக்கவில்லை. வளவிலே வேம்பு,பலா, நாவல், தென்னை, கொய்யா, தோடை, மாதுளை,தேசி போன்ற மரங்களும் செடிகளுமாக நின்றதால் சன்னங்களைப் பெரிய மரங்கள் வாங்கிக்கொண்டு கொப்புகள் முறிந்து வீழும் ஓசையைக் கேட்டவாறு ஓடிய ஓட்டத்தில் திருநகரின் உட்பகுதிக்குள் அறிந்தவரொவரின் வீட்டிற்குள் சென்றுவிட்டோம். அது ஓட்டாலும், பகுதியாகத் தகரத்தாலும் வேயப்பட்ட வீடு. அங்கும் சன்னங்களின் சன்னதம். வேட்டொலிகள் அடங்கியிருந்தது. ஆனால் ஆங்காங்கே கண்ணில் பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தனர். கறுப்பு உடைப்படைகள் இன்னும் வீதிக்கரைகளில் படுத்திருப்பதாகக் கூறினார்கள். படைகள் பின்னகர்ந்தபின் சென்றுபார்த்தபோது எமது வீட்டிற்கு அருகில் இருந்த சிறிய வீடு, வேலியுட்படக் கொழுத்தப்பட்டிருந்தது. வீடெரிந்த சுவாலையினால் செவ்விளைநீர் மரம் கருகியிருந்தது. வளவு யானை வெண்கலக்கடைக்குள் புகுந்தநிலை. காலங்களும் இடங்களும் வேறானபோதும் சம்பவங்கள் என்னவோ ஒரேமாதிரியே நகர்கிறது. இந்தப் பகுதியைப் படித்தபோது என்மனதில் வந்த காட்சிகள்....
  23. தமிழர்களாகிய நாம் தனியே, ஐ.நா உட்பட அனைவராலும் கைவிடப்பட்டோம். ஆனால் காஸா அனைவராலும் கவனிக்கப்படுகிறது.கமாஸை அழிக்க துணைபுரிவோம் என்ற ஒரு உறுதிமொழியைத்தானும் பெற முடியாது அன்ரனி பிளிங்கனும், யோ பைடனும் அரபுலகிலிருந்து வெறும்கையோடல்லவா போயிருக்கிறார்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.