Everything posted by nochchi
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
மகிழாதிங்கையா! அவளவிலை தி.மு.க அரசு விடுமா? மானியம் அது இது என்று கொடுத்துக் காத்துவிடும். பிறகு அவிங்க பிழைப்பு என்னாகிறது.
-
தமிழீழ படைத்துறைச் செயலர் கேணல் தமிழேந்தி
தமிழரின் சுதந்திரத்தை மீட்டெடுக்க வீரமறவராய் களமாடி விதையான உங்களுக்கு வீரவணக்கம்.
-
2024ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிக கவனம் ஈர்த்த 12 புகைப்படங்கள்
எப்படி இந்த பிபிசி கணக்கெடுத்தது. குளிரிலும்,இஸ்ரேலின் குண்டிலும் மடியும் இதுபோன்ற குழந்தைகளை உலகுக்குத் தெரியவில்லையா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உலக வல்லரசின் வீழ்ச்சியை உறுதிப்படுத்திய ஆண்டாக கடந்து செல்லும் 2024 – வேல்ஸில் இருந்து அருஸ்
2009திலேயே இந்த நிறுவனங்கள் செயலிழந்து வெறும் பொம்மை நிறுவனங்களாகவும், மேற்கிற்கு ஆதரவான சார்புநிலை மனிதஉரிமை அறிக்கை அமைப்புகளாகிவிட்டன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உலகே மாந்தநேயம் இழந்தாயே!
உலகே மாந்தநேயம் இழந்தாயே!-மா.பு.பாஸ்கரன் – யேர்மனி. Posted on December 29, 2024 by சமர்வீரன் 33 0 அன்பின் மொழியில் பேசுங்கள் ஆண்டவன் மொழியில் சிந்தியுங்கள் என்று கூறிடும் மேற்கும் கிழக்கும் உன் வசதிக்கேற்ப நியாயங்களை நினைத்தவாறு வளைத்தபடி நீள்வளமாகக் கிடப்பதுமேன்? காஸா மனித வேட்டையை வேடிக்கைபார்க்கின்ற சிந்தனையை மாற்றிடும் போக்கைக் காண்பாயா மூன்று வாரமேயான குழந்தை சிலா(SILA) குளிரில் வாடியே இறந்ததை அறியாது மருத்துவமனைக்கு கொண்டு போனதும் மரணம் பற்றி அறிந்து கொண்டதும் தாயின் மனதையும்; தந்தையின் நிலையையும் விபரிக்க வார்த்தைகள் ஏதும் உண்டா? உலகுக்கென்ன ஆறாந்தலைமுறை ஆயுதங்களுக்கான ஆய்வுகளில் அற்புதமான அழிவா யுதங்களை படைப்பதற்கான தேடல்களில் மாந்தநேயம் இழந்த உலகில் மனிதம் அழிந்த உலகினிலே கொடுமைத்தனமான ஆயுதங்கள் குவியல் குவியலாய் தேடுவாரற்றுக் கிடக்கும் ஒருநாள் அன்று நீயும் தேடுவாரற்றுபோவாய்தானே உலகே நீயும் இன்றேனும் சிந்திப்பாயா எதுவும் அறியா மழலைகளும் குழந்தைகளும் என்ன கெடுதல் செய்தார் உங்களுக்கு ஏனின்னும் இரக்கம் எழவில்லை மனதில் மாந்தநேயத்தை மண்ணுள் புதைத்து பக்கச்சார்பாகப் பேசிடும் போக்கை மாற்றிடும்போதே மனிதம் தோன்றிடும் மாந்தநேயத்தை உலகம் காணும்! மா.பு.பாஸ்கரன் – யேர்மனி https://www.kuriyeedu.com/?p=646054
-
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்
- வாடியிட்டபுலம்
உண்மையைக் கதையாக... கண்களில் நீர்வழியக் கதை நகர்கிறது. படைப்புக்குப் பாராட்டுகள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
இவர்கள் கலைகிறார்களோ இல்லையோ மக்கள் கலைத்தும் களைந்தும் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், சிலதுகள் புரிந்தும் புரியாதது மாதிரித் திரிகிறார்கள். அதைவிட இனிக் கலைக்கவோ, களையவோ ஏதும் இல்லை. கட்சியை இயங்காதவகையில் எதிர்வரும் கால நீதிமன்ற நடவடிக்கைகள் அமையலாம். நட்பார்ந்து நன்றியுடன் நொச்சி- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஆண்டுநிறைவில் ராமபக்தர்கள் கூடிக் கும்மியடிக்கும் பலன் உள்ளதுபோல் தெரிகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?
கேள்வி 12 நொடிகள்; ஆனால் சும்மு சுற்றிவளைத்து பதிலளிக்க 118நொடிகள் தேவைப்பட்டிருக்கு. காய் கட்சியை ஒருவழிபண்ணிக் கிட்டவந்து சேடமிழுக்கும் நிலை. ஆனா மனுசன் சனமே கழித்துவிட்டாலும் சங்கூதித் தூக்கிறவரைக்குமான கடமை உணர்விலை பின்வாங்கேல்லையே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை.
எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் - தேசியத் தலைவர் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை. பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 28 Dec, 2024 தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கையை காலத்தின் தேவை கருதி இன்று மீள் வெளியீடு செய்கின்றோம் .! இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும்.! வரலாற்று ரீதியாக ஈழத்தமிழினம் ஒரு அப்பட்டமானஇன அழிப்பை எதிர்நோக்கி நிற்கின்றது. தமிழரின் தேசிய அடையாளத்தைச் சிதைத்துவிடும் நோக்கில் மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு இந்த இன அழிப்பு நிகழ்கின்றது. இதன் உண்மையான முகம் பிரச்சாரப் பொய்களால் மூடிமறைக்கப்பட்டிருக்கின்றது. இதனை சர்வதேச சமூகம் இன்னும் புரிந்து கொள்ளாதது எமக்கு வேதனையையும், கவலையையும் தருகின்றது தமிழின அழிப்பை அடிப்படையாகக் கொண்ட சிங்களஇனவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராகவே தமிழீழ மக்கள் அன்று தொட்டு இன்று வரை போராட்டங்கள் நடத்திவருகின்றார்கள். எமக்கு முந்திய பரம்பரையினர் அரைநூற்றாண்டு காலத்துக்கு மேலாக காந்தியடிகளின் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் அறவழிப் போராட்டங்களை நிகழ்த்தினர் அறவழிப்போரின் ஆன்மீகப் பண்பியல்பை சிங்கள அரசு உணர்ந்து கொள்ளவில்லை அதற்கு மதிப்பும் அளிக்கவில்லை அகிம்சைப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் மிருகத்தனமாக நசுக்கியது அறவழியில், சனநாயக வழியில் தொடங்கப்பட்ட போராட்டங்கள் ஆயுத வன்முறையால் நசுக்கப்பட்ட நிலையில், இன அழிப்பு மேலும தீவிரமடைந்து தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை என்ற இக்கட்டான வரலாற்றுக் காலகட்டத்தில்தான் விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழரின் ஆயுதப் போராட்டமும் தோற்றம் கொண்டது . தன்னாட்சி உரிமைகோரி தமிழீழத்தில் தோற்றம் கொண்ட ஆயுதப் போராட்ட வடிவத்தைப் பயங்கரவாதம் என்றும் பிரிவினைவாதம் என்றும் சித்தரித்துவிட சிங்கள அரசு பகீரத முயற்சி செய்கிறது. இத்தகைய தவறான கருத்து இந்திய மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் வருகிறது. இந்தச் சித்தரிப்பில் எவ்வித உண்மையும் இல்லை ஈழத்தமிழரின் போராட்ட வடிவத்தை திரிபுபடுத்தி கொச்சைப்படுத்தும் நோக்கில் இவ்விதம் பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது . நாம் பயங்கரவாதிகளும் அல்லர், பிரிவினைவாதிகளும் அல்லர், ஆயுதக் கலாச்சாரத்தை வழிப்படுத்தும் வன் முறையாளரும் அல்லர். நாம் ஒரு இலட்சியத்திற்காக, ஒரு உயரிய குறிக்கோளுக்காகப் போராடுகின்றோம். இன அழிவிலிருந்து எமது இனத்தைப் பாதுகாததுக கொள்வதற்காகவே நாம் போராடுகின்றோம் இனக்கொலை வடிவம் எடுத்துள்ள ஆயுத வன்முறைக்கெதிராகவே நாம் ஆயுதமேந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். உயிர் வாழும் உரிமைக்காக உயிரைக் கொடுத்துப் போராட வேண்டிய ஒரு சிக்கலான, நெருக்கடியான ஒரு வரலாற்றுச்சூழலை நாம் எதிர்கொண்டு நிற்கின்றோம். இலங்கைத்தீவில் சுதந்திரம் பெற்றதிலிருந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகள் தமிழரை அரவணைத்து வாழ விரும்பாது அடிமைகொண்டு ஆளவிரும்பியதால் தமிழ் மக்கள் தமது அரசியல் தலை விதியை தாமே நிர்ணயித்துக் கொள்ள விரும்பினர். ஒருதேசியக் கட்டமைப்பைக் கொண்ட இனம் என்ற ரீதியில் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள் .அதுவும் அரச ஒடுக்குமுறையானது இனஅழிப்பு வடிவமெடுத்த சூழ்நிலையில்தான் எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்காகப் போராடத்துணிந்தார்கள். நாம் விடுதலையில் பற்றுக்கொண்டு ஒன்றுபட்டு உறுதி கொண்டு நிற்கின்றோம். இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம்பூண்டு நிற்கின்றோம். இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண் நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் நம்பிக்கை எமக்கு உண்டு. -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் 28.12.1995 அன்று வெளியிட்ட அறிக்கை “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.thaarakam.net/news/77736f89-e973-404a-95c7-832c238b0046- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
கடந்து 15 ஆண்டுகளிற் தமிழினத்தைக் ''கொத்துப்பறோட்டா'' வாக்கிவிட்டுள்ளது.இது போதாதென்று சில ஊட(கா)கங்கள் வேறு கரைகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
முன்பெல்லாம் ஊடகவியலாளர்களால் செய்திகள் தயாரிக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டு வெளிவந்தன. தற்காலம் ஊதகவியலாளர்களால் செய்தியிடப்படுவதால் வந்த வினை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்!
தமிழருக்குள் கொம்புசீவுவதில் வேகமாகச் செயற்படும் ஊடகங்கள், ஏன் மக்களது பிரச்சினைகளை அறிவியல்பூர்வமாக அணுகி விளக்குவதில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- பிரிக்ஸ் இணைவு குறித்து ஜனாதிபதி அநுர, புட்டினுக்கு கடிதம்!
என்னதான் தேர்தலுக்காக நிமிர்வுகாட்டி வாக்குக்கொடுத்து, வாக்கு வேண்டிப் பதவியைப் பிடித்தாலும் யதார்த்தமென்று ஒன்று இருக்கிறதல்லவா? அதனைக் கடந்துபோக முடியாது. பெரும் வல்லரசுகள் முதல் எண்ணெய்வளம் உள்ள நாடுகளே தடுமாறிநிற்க, சுயபொருண்மியத் திரட்டுகளற்றுக் கடனிலும், சுற்றுலாத்துறையிலும் தங்குபொருளாதாரத்தில் நிற்கும் இலங்கைத்தீவை ஆள்வது அவளவு இலகுவல்ல. என்று இவர்கள் ஒரு தெளிவான அரசியல் கொள்கையை முன்வைத்து நகர்கிறார்களோ அன்றுதான் உண்மையான வளர்ச்சியைக் காணமுடியும். அதுவரை இப்படிக் கையேந்தியநிலையே தொடரும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் - நாமல்
உத்தேசிக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்களை இலக்குவைத்துப் பரப்புரையில் பொது சன பெரமுன களத்தில் இறங்கியுள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது என்னவிதமான ஒரு மனநிலை. பைத்தியக்காரத்தனமான தலைப்புகள் இன்று அனைத்து ஊடகங்களிலும் மலிந்துவிட்டன. இதனை வெறுமனே அனைத்து அறிவார்ந்தோரும் கடந்து செல்வதும் கவலைக்குரியது. பிழைப்புக்காக எதையும் எழுதவும் செய்யவும் துணிந்த உலகிலே சாமானியர்களது குரல்கள் எடுபடுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
கிறிஸ்மஸ் தினத்தைக் கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் உளம்கனிந்த நத்தார்தின நல்வாழ்த்துகள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- இத்தாலி பலெர்மோவில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024
தாயக மண்மீட்புப் போரிலே தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவு கூர்ந்து, தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024, 27.11.2024 புதன்கிழமை அன்று Don Orione மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒழுங்கமைப்பின் கீழ் மிகவும் சிறப்பாகவும், உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றல், ஈகச்சுடரேற்றலுடன், வெண்திரையில் மாவீரர் துயிலுமில்லக் காட்சி ஒளிபரப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், முதல் மாவீரரான சங்கர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அனைத்து மக்களாலும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. பலெர்மோ மாநகர சபை ஆளுநருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருக்கும் இடையில் உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. தமிழர்களுக்கு இலங்கை அரசால் இழைக்கப்பட்ட அநீதி, துரோகம் என்பதை எடுத்துக் கூறி இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. மேலும் மாவீர்ர் நினைவு சுமந்த எழுச்சி கானங்கள், தமிழீழத் தேசிய மாவீர்ர் நினைவு சுமந்த பேச்சுப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்கழுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டு அவர்களின் பேச்சுக்களும் இடம்பெற்றன. அத்துடன், மாணவர்களின் மாவீர்ர் வணக்கப் பாடலுக்கான நடனங்கள், எழுச்சிநடனங்கள் போன்றவற்றுடன் சிறப்ப அதிதியாக வருகை தந்த மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின், மாவீரர் நாள் சிறப்புரை, நன்றியுரைகள் வழங்கப்பட்டதுடன், தேசியக்கொடி இறக்குதல், உறுதிமொழி எடுக்கப்பட்டு, “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடன், மாவீரர்களை நெஞ்சிலே சுமந்த வண்ணம் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 நிறைவு பெற்றது You Might Also Like https://firetamil.com/?p=5837- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஞ்சித் அவர்களே, தேடுதலும் வரலாற்றறிகையும் வற்றிச் செல்லும் உலகில் காலத்திற்கு ஏற்றவாறு தேடியெடுத்து மொழிபெயர்த்து அவற்றை அறிந்துகொள்ளப் பாலமாகச் செயலாற்றிய தங்களுக்கும் தங்கள் நேரத்துக்கும் யாழ் களமும் நாமும் நன்றியுடையோராவோம். தங்கள் தேடல்கள் தொடரட்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
நீங்கள் சுட்டிய விடயங்களனைத்தும் செயலாக்கம் பெறுமானால் நன்று. பெரும்பாலான யூரூப்பர்கள் யதார்த்தத்தை உணராதவர்களாக அனுர அரசுக்குக் காவடி எடுப்பதில் கவனம் செலுத்துவதோடல்லவா நிற்கிறார்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
பிபிசீயின் தலைப்பு. * இவர்களெல்லாம்... நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் - நாமல்
புத்தனின் பெயரால் தமிழினப்படுகொலையளர்கள் அனைவரையும் புத்தர் பாதுகாப்பாரென்றுதானே அரங்கேற்றுகிறீர்கள். அப்போ புத்தனும் எம்மைக் கொலைசெய்ய உடந்தையாகிவிட்டார். உலகு வாழ் புத்தமதத் தலைவர்களும், புத்தரை வழிபடும் மக்களும் வெட்கித் தலைகுனியும் நிலைக்குச் சிங்களவர்களால் புத்தர் இழுத்துவரப்பட்டுள்ளார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்தேசம் என்பதைவிடத் சிங்களத்திற்கான தமிழினப் படுகொலைத் தேசமாகவே தமிழர்தாயகமெங்கனும் பதிவாகியுள்ளமை என்பது எவளவு இழப்பு, எவளவு துயரம். தங்கள் உறவுகளை இழந்தோரை, சந்ததிகளையோ இழந்தோரை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. குறிப்பாக தமிழர் தாயகத்தின் எல்லைக் கிராமங்களின் மக்களது நிலை இனியும் அச்சத்திற்குரியதே. ஆட்சித்தலைமை மாறும். ஆனால் கொலைப்படைகள் அப்படியே இருப்பவை. தண்டனைகள் வழங்காது பாதுகாக்கப்படும் தமிழினக் கொலைக்காக உருவாகிய சிங்களப்படைகளின் கீழ் தமிழினத்தின் அழிவு தொடர்கதையாகவே இருக்கிறது. ரஞ்சித் அவர்களே தங்களின் தொடர் முயற்சிக்குப் பாராட்டுகள் உரித்தாகுக. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
17:47 - வாடியிட்டபுலம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.