Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nochchi

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by nochchi

  1. என்ன நீங்க இப்படிச் சொல்லீட்டீங்க. அதுதான் 'ஆனையிறவு உப்பு' என்று மாத்தியாச்சாமே. உப்புச்சப்பில்லாத விடயங்களைச் செய்தவாறு விகாரங்களையும், தாதுகோபுரங்களையும் மறைமுகமாக விரைந்து அமைத்து ஐ.தே.க,சி.சு.க, இ.பொ.முன்னணி போன்றவற்றைமிஞ்சியோர் என்று அதிகமாகத் தமிழரது நிலங்களைப் பிடித்துள்ளோம் எனச் காட்ட வேண்டாமோ. எங்கட சனமும் ஏடேய் நல்ல அரசு பெயரையே மாத்தீட்டாங்கள் என்று புளங்காகிதமடைந்து மீண்டும் குப்பறப் படுத்துவிடுவர். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அத்துடன் கஞ்சா மற்றும் போதைப்பொருள்களின் பரவலாக்கம் கரணியமாக இருக்கின்ற இளசுகளுக்கு எப்பிடி நாட்டம் வரும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  2. வசியவர்களே நன்றி, யப்பானியர்களது கொடுமையைக் கண்ட உலகு அதையே திருப்பி ஏன் மற்றைய இனங்கள் மீதும்,நாடுகள் மீதும் தொடர்கிறது. எல்லாம் பொருண்மிய நலன். அகதியாக ஈராயிரமாண்டுகள் அலைந்ததாகக் கூறும் இஸ்ரேலியர்கள் இன்று பலஸ்தீனர்களை அகதியாக்கி நாடற்றவராக்கும் செயற்பாடு ஏன் நிகழவேண்டும். ரஸ்யா அச்சத்தில் போரிடவில்லை. அது தற்காப்பு நிலையெடுக்கிறது. ஒன்றாக இருந்து இன்று அயலவராக இருக்கும் உக்ரேன் தனது பகைச்சக்திகளைக் குடியேற்ற முனையத் தாக்குகிறது. இன்னும் சில ஆண்டுகளின் பின் மகிந்த சொல்லியது போல் நாம் மேற்கின் போரை நடாத்தினேன் என ஜெலன்ஸ்கி சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  3. அனைவருக்கும் நன்றி! உண்மை! ஆனால், மனிதர்களுக்குச் சுடும். அவர்கள் பூனைகள். இன்றுகூட டீ.எல்.எவ் DeutschlandFunk வானொலியில் காலையில் 5:30மணிக்கு இளம் யூத அமைப்பின் தலைவரையும், 15:30க்கு ஈரான் புலம்பெயரமைப்பின் ஒருங்கிணைப்பாளரையும் செவ்விகண்டு ஒலிபரப்புகிறார்கள். இந்த ஊடகங்கள் 2009இல் சிங்களம் இன அழிப்பில் ஈடுபட்டபோது, எமது மக்கள் தினம்தோறும் வீதிகளில் நின்று அவலக் குரலெழுப்பியபோது திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. உலக அமைதியை ஒரு முனையில் வட அத்திலாந்திக் கூட்டாண்மையின் நாட்டாண்மைத்தனம் உரசிப்பார்க்கத் தீப்பற்றிய நிலை. மறுபுறத்தே மிகப்பெரும் இனவழிப்பை இஸ்ரேல் மேற்கொள்வதன் ஊடாக மத்திய கிழக்கைக் கொதிநிலையாக்கியதோடு, அனைத்துலக விதிகளுக்கு முரணாக ஈரான் மீது அத்துமீறிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதற்கு முட்டுக்கொடுப்பதில் அதிதீவிரமாக யேர்மனியும் ஈடுபட்டிருப்பதன்வாயிலாக, அதனது சனநாயக முகமூடி கிழிந்து தொங்குகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி நீங்கள் கூறுவதைப் பார்த்தால் ஊர்ச் சண்டியர்களின் நினைவுதான் வருகிறது. அதாவது பார்த்ததற்காகச் சண்டைக்குப்போதல். தர்க்கரீதியாக யோசித்தால் அமெரிக்காவும் இஸ்ரேலியர்களும் செய்த, செய்கின்ற அத்துமீறிய அநியாயங்களின் முன் இவர்களால் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகள் அணுகுண்டை ஏன் வைத்திருக்கக் கூடாது. யப்பானியர்களை எலிகளாக எண்ணி அணுகுண்டைப் போட்டழித்த அமெரிக்காவுக்கு ஈரானை அணுகுண்டு செய்யாதே என்று உத்தரவிடும் தார்மீக உரிமை இருக்கிறதா? 90 அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலுக்கு ஈரானைத் தாக்க என்ன அருகதை இருக்கிறது போன்ற வினாக்களுக்கு விடைகாண முடியுமா? நிகழ்தகவைக் குறைத்தல் என்பது முதலில் 5000க்கு மேல் அணுகுண்டுகளை வைத்திருக்கும் அமெரிக்காவிலிருந்து தொடங்க வேண்டும். தமது அணுகுண்டுகளை அழித்தொழித்துவிட்டல்லவா ஏனைய நாடுகளைக் கேட்கவும் தாக்கவும் வேண்டும். ஐ.நா. என்று ஒரு நிறுவகம் உலகில் இருக்கிறதா? அப்படி இருந்தால் அடாத்தாக ஆபிரிக்க நாடுகளுள் இறங்கும் ஐ.நா. படைகள் இலங்கைத் தீவிலோ அல்லது இஸ்ரேலிலோ இறங்கி இன அழிப்பைத் தடுக்க முனையவில்லை. அமெரிக்கா ஆப்கான் முதல் லிபியா வரை வளர்த்தவிட்ட தீவிரவாதத்தைவிட வேறொருநாடும் செய்துவிட முடியாது. ப.வி. இயக்கத்தைப் பலவீனப்படுத்த இஸ்ரேல் உருவாக்கிய பல குழுக்களில் கைமாறிக் கட்டுமீறியதே கமாஸ். " இந்த உலகம் நீதியின் அச்சில் சுழலவில்லை. தார்மீகச் சட்டநெறிகளோ, மக்களின் உரிமைகளோ அல்ல, பொருளாதார வணிக நலன்கள்தான் தற்போதைய உலகப் போக்கைத் தீர்மானிக்கின்றன..." என்ற மேதகு அவர்களின் கூற்று 17 ஆண்டுகளைக் கடந்தும் பொருந்திப் போகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அதனை மாற்றியமைக்க முனைந்தவர்களை உலக வல்லாதிக்க சக்திகள் அழித்து வரும் நிலை தொடர்வதால் உலகம் தொடர்ந்தும் நசிந்தழிகிறது. ஆனால், பல சர்வாதிகாரிகளை இந்த உலகம் கடந்து நிமிர்வதும் நடந்துள்ளது. இனியும் நடக்கும் என நம்புவோம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  4. ஈரானை அணுகுண்டுத் தயாரிப்புக்கு நெருங்கிவிட்டதாகக்கூறி இஸ்ரேல் தாக்குகிறது. ஆனால் இஸ்ரேல் அணுகுண்டை வைத்திருக்கிறது. இது என்ன நியாயம். ஏன் உலக வல்லாதிக்க சக்திகள் இஸ்ரேலைக் கேட்கவில்லை அல்லது தாக்கவில்லை.
  5. நன்றி குமாரசாமியாரையா! இன்று பொதுவாக மக்களிடமும் ஒருவகை ஆதிக்க மனோபாவம் வளர்ந்துவரும் சூழலைக்கொண்டுள்ளது. யேர்மனியின் புதிய அரசுத்தலைமையின் கூற்றுக்கூட அப்படியானதே. அதாவது, தமது பணியினை இஸ்ரேல் கையிலெடுத்துள்ளதாம். ஆனால், போரின் கொடுமையை இங்கு சாதாரண மக்களே சுமக்கின்றனர். மக்களின் வரிப்பணம் யுத்தத்தின்மேல் கொட்டப்படுகிறது. அது உதவி என்ற பெயரில் இலங்கை முதல் உக்ரேன், இஸ்ரேல் வரை.. வரி அறவீடுகூடச் சாதாரண மக்களிடமே கணக்கீடும் அறவீடுமாகத் தொடர்கிறது. முதலாளிகளோ நட்டமென்றும், பொருளாதாரச் சரிவென்றும் தப்பித்துவிடுகின்றனர். சாதாரண மக்கள் வருமான வரிக் கணக்கைக் கொடுக்காவிடின் உடனடியாக வரிக்கட்டணத்திற்கான பற்றுச்சீட்டை அனுப்பிவிடும் நிலை. உலகின் போர்களனைத்தும் பொருண்மியத்தை மையப்படுத்தியதே. மத்திய கிழக்கில் மேற்கினது நிலையான சுரண்டலுக்குத் தடையாகச் சதாம் இருந்தார். அவரை குர்துகளைக் கொன்றதற்காகத் தூக்கிலிட்டார்கள். சதாமைவிடப் பன்மடங்காகப் பலஸ்தீனர்களைப் இனவழிப்புச் செய்துவரும் நெத்தன்யாகுவைத் தூக்கிலிடுவார்களா? மணிப்பூர் முதல் காஷ்மீர்வரை இன அழிப்புச் செய்த, செய்துவரும் இந்தியத் தலைவர்களையோ, குர்துகளை அழித்துவரும் எற்டோகானைத் தூக்கிலிடுவார்களா? ஏன் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தமென அழைக்கப்படும் இனவழிப்பைச் செய்த சிறிலங்காவையே தண்டிக்க முன்வராதவர்களிடம் நீங்கள் சுட்டியதுபோல் நீதியையோ நடுநிலையையோ(ஆனால், நீதியின் முன்னால் நடுநிலை இல்லை என்பதே மெய்நிலையாகும்) எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் மனிதராக மனிதர்கள் குறைந்தபட்சம் தமது கண்டனத்தைவது பதியலாம் என்பதே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. யே.வி.பி யின் இயல்பான இனவாதமுகம் என்.பி.பி என்ற முகத்திரையைக் கிழித்து மெல்ல மெல்ல மேலெழுந்து வருகிறது. வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும். மாற்றென்பது சிங்களத்தின் கைக்கூலிகளைத் தேர்வு செய்வதல்ல என்பதை இவளவு விரைவாக உணரவைப்பார்களென எதிர்பார்க்கவில்லை நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  7. இரண்டு போரரங்கு மூன்றாக விரிவடைந்துள்ளது.உலகை அழித்துவரும் முதலாளித்துவ உலகின் முரண். மேற்கினது செல்லப்பிள்ளையான இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்திருக்கலாம். தயாரிக்கலாம். ஏன் ஈரான் வைத்திருக்கக்கூடாது. இஸ்ரேல் தான்தோன்றித் தனமாக மக்களையும் அழிப்பதோடு, ஐ.நாவின் விதிகளையோ அனைத்துலகால் பின்பற்ற அறிவுறுத்தப்படும் மனிதநேயங்களையோ மதிக்காது கொலைக்களங்களைத் திறந்துவரும்சூழலில் ஈரான் போன்ற நாடுகள் தம்மைப் பாதுகாக்க ஆயுதங்களைத் தயாரிப்பதை எப்படித் தவறாகக்கொள்ளமுடியும். ஈராக்கிலும் இப்படித்தான் செய்தார்கள். பின்னர் லிபியா, சிரியா... ஈரானில் வந்து நிற்கிறார்கள். கடந்த 5 நாட்களில் பலஸ்தீன மக்கள் படும் துயரத்தில் லட்சத்தில் ஒரு துளியையாவது இஸ்ரேலியர்கள் உணர்ந்திருப்பார்களாயின் அந்த மக்கள் எதிர்காலத்தில் கடும்போக்கு அரசியல்வாதிகளை நிராகரிப்பதோடு, ஆக்கிரமிப்பு மனோபாவத்தையும் கைவிட்டுப் பலஸ்தீனத்தை ஒரு அயல் தேசமாக ஏற்று வாழ்வதே இரு இனங்களும் அமைதியாக வாழ்வதற்கான வழியாகஇருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  8. எங்கட சட்ட மேதைகள் ஒருவருக்கொருவர் அரசியல் குழிபறிப்பதில் நேரத்தை விரயமாக்குவதில் மட்டுமே வல்லவர்கள். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  9. செம்மணி தொடர்பில் இதுவரை வெளிவராத பல உண்மைகள்! இந்தத் திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  10. தையிட்டியில் இருந்து சற்று முன்னர் விடுக்கப்பட்ட அறிவிப்பு! | Jaffna | Srilanka | ST Suman இந்தத் திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி தையிட்டி விகாரையில் கைதான இளைஞன்; கனரக வாகனங்களுடன் பின்வாங்கிய காவல்துறை! | UshanthanView இந்தத் திரியோடு தொடர்புடைய காணொளியாதலால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  11. நானும் இவரது சில உரைக்காணொளியைப் பார்த்துவிட்டு, யாழில் இணைக்கலாமே என்ற நோக்கோடு வந்தால் இப்படியொரு விமர்சனம் உள்ளது. உங்களது பார்வையே எனது பார்வையும். காழ்ப்புணர்வு வரலாற்று உண்மைகளைத்தரா.இப்படி எழுதுவோர் ஆதாரங்களுடன் நிறுவ வேண்டும். கீழடி அகழ்வாராய்ச்சி தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியம்? - ஓய்வுபெற்ற IAS அதிகாரி பாலகிருஷ்ணன் இந்தத் திரியோடு தொடர்புடையதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  12. அகமேந்திய நினைவுகளோடு பயணிக்கும் துணைவர், பிள்ளைகள், உற்றார் உறவுகளோடு நினைவினைந்த அஞ்சலி!
  13. இணைப்புக்கு நன்றி. புலிகளின் ஆளுகைக்குள் புலி உறுமல். இப்போ புலிகளைப் பலியாக்கி நரி ஊளை. எல்லாம் தமிழினத்தின் கொடும் விதியாகியநிலை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  14. நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025 பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 04 Jun, 2025 யேர்மனிய நாட்டிற்கு வரும் பேரினவாத சிங்கள அரசின் சனாதிபதி அனுரா மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம் நீதிக்காய் எழு தமிழா! யேர்மனியின் தலைநகரில் ஆர்ப்பாட்ட ஒன்றுகூடல் 10.06.2025 https://www.thaarakam.com/news/436c2aba-f27e-4714-9bee-63bdd7be0a6f
  15. மணிப்பூரில் பதற்றம் – இணையசேவைகள் முடக்கம்! பதிவேற்றுனர்: தமிழ்விழி திகதி: 09 Jun, 2025 மணிப்பூரில் மெய்தி அமைப்பின் தலைவரை கைது செய்தமையால் போராட்டக்காரர்கள் தீக்குளிக்கப் போவதாக அறிவித்தல் விடுத்துள்ளனர் . வன்முறைகளை அடுத்து மணிப்பூரில் 5 நாட்களுக்கு இணைய சேவையை மாநில அரசு தடை செய்துள்ளது. ஜூன் 7 நள்ளிரவிலிருந்து 5 மாவட்டங்களில் இணைய சேவையும், தொலைபேசி சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளன.மணிப்பூரில் மெய்தி சமுதாயத்தின் ஆரம்பை டேங்கோல் அமைப்பின் தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதால், மணிப்பூரின் 5 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.இருப்பினும், கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்களையோ அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையோ வெளியிட பொலிஸார் மறுத்ததால், போராட்டம் தீவிரமானது. போராட்டத்தில் பஸ் உட்பட பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதுடன், தீக்குளித்து விடுவோம் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்கைது செய்யப்பட்டவர்கள் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படுவதாகப் பெறப்பட்ட உறுதிப்படுத்தப்படாத தகவல்களையடுத்து, போராட்டக்காரர்கள் விமான நிலையம் அமைந்திருக்கும் பகுதியையும் முற்றுகையிட்டனர்.கிளர்ச்சியடைந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாகவும், தடியடி தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, விஷ்ணுபூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவும், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங் மாவட்டங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கு தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.https://www.thaarakam.com/news/866fbd45-0754-4cc4-a578-ae4946d2029d
  16. தமிழ்வின்னுக்கு அரசியல் ஆய்வுமுதல் சாதாரண செய்திகள்வரை குசும்பு கூடி ஆடுகிறது. இவர்கள் இப்போது 'பரபரப்பு,அதிர்ச்சி,வாய்ப்பு' இப்படித் தலைப்புகளைப்போட்டுத் தமது பார்வையாளர்களைக் கூட்டும் தந்திரம்.
  17. பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும் Posted on June 3, 2025 by தென்னவள் காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். மேலும், காசா போரை எதிர்த்துப் போராடியதற்காக தனது சகாக்களைப் பாராட்டிய அவர், இஸ்ரேலுடனான பல்கலைக்கழகத்தின் உறவுகளை விமர்சித்தார். இதையடுத்து, மேகா வெமுரி மீது பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. “எம்ஐடி கருத்து சுதந்திரத்தை ஆதரிக்கிறது. அதேநேரத்தில், மேகா வெமுரி மீதான நடவடிக்கையில் பல்கலைக்கழகம் உறுதியாக உள்ளது. ஏனெனில், அந்த நபர் வேண்டுமென்றே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி மேடையில் இருந்து போராட்டத்தை வழிநடத்தி இருக்கிறார்” என்று பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனினும், மேகா வெமுரி தனது பட்டத்தைப் பெறுவார் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேகா வெமுரி, “இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேடையைக் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். எனினும், எம்ஐடி அதிகாரிகள் உரிய நடைமுறை இல்லாமல் என்னைத் தண்டிக்க முயன்றதால் பெருமளவில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் உரையாற்றியதால் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு விதியும் மீறப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், பேச்சு சுதந்திரத்திற்கு எம்ஐடி ஆதரவு அளிப்பதாகக் கூறுவது பாசாங்குத்தனம் என்றும் அவர் விமர்சித்தார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள மேகா வெமூரி தடை விதிக்கப்பட்டதற்கு அமெரிக்க – இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) கண்டனம் தெரிவித்துள்ளது. “எம்ஐடி கல்வி சுதந்திரத்தை மதிக்க வேண்டும், அதன் மாணவர்களின் குரல்களை மதிக்க வேண்டும், இனப்படுகொலைக்கு எதிராகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பேசுபவர்களைத் தண்டிக்கவோ மிரட்டவோ கூடாது,” என்று சிஏஐஆர் – மாசசூசெட்ஸ் நிர்வாக இயக்குனர் தஹிரா அமதுல்-வதூத் தெரிவித்துள்ளார். https://www.kuriyeedu.com/?p=677701
  18. யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி. Posted on June 1, 2025 by சமர்வீரன் யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும். மேற்படி நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் 01.06.2025 அன்று மதியம் நடைபெற்றது. “எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்” எனும் வாசகம் பதாதையில் பொறிக்கப்பட்டு, 44 ஆண்டுகளை நினைவுபடுத்தும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பால் கண்காட்சி வைக்கப்பட்டது பல்லினமக்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது. பிரசித்திபெற்ற நினைவிடத்தில் வித்தியாசமான முறையில் இக் காட்சிப்படுத்தல் நடைபெற்றதால் பல்லின மக்கள் அதிகம் ஆர்வத்தோடு கவனித்ததோடு, மட்டும்மல்லாமல் மேலதிகமான விளக்கங்களை பெற்றுக்கொள்ள உரையாடல்களிலும் ஈடுபட்டனர். அத்தோடு ஆர்வம் கொண்டவர்களுக்கு ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. https://www.kuriyeedu.com/?p=677349
  19. யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு. Posted on June 1, 2025 by சமர்வீரன் 70 0 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களில்,அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு மாவீரர் பொதுப்படத்திற்கான ஈகைச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமாகி நடைபெற்று. தமிழீழ விடுதலைக்காக இறுதி மூச்சுள்ளவரை போராடி வீரகாவியமானவர்களது வீரவணக்க நிகழ்வைச் செய்யமுடியாது எமது தாயகம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற இவ்வேளையில், வீரஞ்செறிந்த தமிழீழ விடுதலைவரலாற்றில் இவர்களது வீரவரலாறும் பதியம்பெற்று, எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இம்மாவீரர்களின் இலட்சியத்தை நாமும் சுமந்து தமிழீழம் விடுதலையடையும் வரை தொடர்ந்து போராடுவோம் என்ற உறுதியுடன் தாயகம் நோக்கி பயணிப்போம். உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் பெயர் விபரம். 01. வீரவேங்கை ஆனந்தி – அருண்மொழி 02 – வீரவேங்கை கோபி 03 – வீரவேங்கை முத்தப்பன் 04 – வீரவேங்கை ஆண்டாள் 05 – வீரவேங்கை அகழிசை 06 – வீரவேங்கை பேரின்பன் 07 – வீரவேங்கை பிரதீப் 08 -வீரவேங்கை சீத்தா 09- வீரவேங்கை மதுவிழி 10 – வீரவேங்கை கோமதி – நிதர்சனா 11 – வீரவேங்கை அருளினி 12 – வீரவேங்கை இளையவன் 13 – வீரவேங்கை புனிதா 14 – காவல்துறை மாவீரர் அம்பிகைபாலன் 15 – வீரவேங்கை சுபேசினி 16 – வீரவேங்கை காதாம்பரி 17 – வீரவேங்கை காந்தன் 18 – வீரவேங்கை சந்திரன் 19 – வீரவேங்கை இரும்பொறை – https://www.kuriyeedu.com/?p=676900
  20. உண்மை. இந்த உண்மை சாதாரண மக்களிடம் சென்றடைவதைத் தடுப்பதில் ஊடகங்களின் உசுப்பேத்தலும் வெற்றி முரசுகளும் முன்னிலையில் உள்ளன. கிந்திய இந்தியாவில் அன்றாடங்காய்ச்சிகளாக வாழும் மக்களும் தமது பசியை மறந்து இந்த உசுப்பேத்தலில் மயங்கிவீழ்ந்துவிடுவர். மும்பையின் சேரி வாழ் மக்களை மீட்க இந்ந யுத்தத் தளபாடச் செலவுகளைப் பயன்படுத்தலாமே. ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களைத் தேடும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு இந்தக் காணொளி சமர்ப்பணம். நட்பார்ந் நன்றியுடன் நொச்சி
  21. ஆக்கிரமிப்பாளரின் அதீத போர்வெறிக்குப் பலியாவது படைகள் மட்டுமல்ல. படையினரின் குடும்பங்களுமே. ஆனால், ஐந்து பத்தடுக்குப் பாதுகாப்போடு வலம் வரும் அரசுத்தலைமைகளுக்கு இந்த வலிகள் புரியாது. அவர்களுக்கு வெறும் எண்ணிக்கை மட்டுமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. நடிகர்களின் மீதான கவர்ச்சி ஒருவகை போதையாக மாறிக் குமுகாயச் சீரழிவுகளைத் தூண்டியுள்ளமை ஒன்றும் புதிரல்ல. யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்வது ஒன்றும் மறைவுநிலையுமல்ல. அவற்றையும் நாம் கடந்து சென்று கொண்டிருக்கின்றோம். ஒரு கட்டத்தில் அவற்றில் ஈடுபடுவோரும் சலிப்படைந்தோ அல்லது தாம் பின்சென்ற காதாநாயகன் மங்கியவுடனோ அடங்கிவிடுவர். சிலநடிகர்கள் புறநிலையாகவும், பரந்துபட்ட இலக்கியத் தேடலுடையோராகவும் மொழிப்பற்றுடையவராகவும் உள்ளனர். இந்தப் பேட்டியில் இவரது தமிழ்ப் பற்றும் உரையாடலும் நோக்குதற்குரியதாக இருந்ததால் யாழில் பகிரப்பட்டுள்ளது. நடிகர்களை ஆய்வு செய்யவோ அல்லது அவர்களது ஏற்ற இறக்கம் குறித்து ஆய்வு செய்வதற்காகவோ அல்ல. நடிகராகத் தொழில் புரிவது இலகுவானது என்று யாரும் இங்கு சுட்டவில்லையே! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  23. அதிபர் ரம்பை நோக்கித்திரும்பியுள்ள முதலாவது சாட்டையாக நோக்கலாமா?அவரது எல்லை கடந்த அதிகாரத்துக்கும் விழுந்த சாட்டையடியா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  24. நடிகர்களின் விரோதி செல்போன்? யாழ்பாணத்து உணவை ரசிச்சி ருசிச்சி சாப்பிட்டேன்... ஒரு நடிகராகப் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களது உரையாடலும் அவரது தமிழ்ப்பற்றும் என்னை நடிகருக்கப்பாலான வேறொரு கோணத்தில் நோக்க வைக்கிறது. அதனை யாழ் கள உறவுகளோடு பகிரந்துகொள்ளும் நோக்கோடு இணைத்துள்ளேன். நன்றி யூரூப் இணையம் வேண்டுகோள்: பொருத்தமற்ற பகுதியில் இணைத்துள்ளேனென்றால், பொருத்தமான பகுதிக்கு நிருவாகத்தினர் மாற்றி உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.