-
Posts
5398 -
Joined
-
Last visited
-
Days Won
6
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nochchi
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
nochchi replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
ஆழந்த இரங்கல். மனித உயிர்களை அழிப்பதற்கான கருவிகளின் தொழிற்றுறைக்கு நல்லவாய்ப்பு. அதில் ரஸ்யாவுக்கும் பங்குண்டு. ஆனால், உலகெங்கும் சிறிய இனங்களை,தேசங்களை அழித்துச் சுரண்டிப்பெருக்கும் சக்திகளுக்கு பெரும் சவாலாக இஸ்லாமிய மதத்தூய்மைவாதமானது மாறியுள்ளது. அது படிப்படியாக உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளது. யேர்மனிய உள்த்துறை அமைச்சர் நான்ஸி ஃபேஸர் அவர்கள், யேர்மனியும் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்துள் உள்ளதாக ரஸ்யாவில் நடைபெற்ற தாக்குதலின் பின் கூறியுள்ளார். இன்று உலகில் எங்குமே பாதுகாப்பென்பது கேள்விக்குறியே. உலகம் இனங்களையும் மதங்களையும் தம்பாட்டில் வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. அவரவர் தமது தேசஎல்லைகளுள் சுதந்திரமாக வாழவிடும்போதுமட்டுமே உலக அமைதி தோன்றும். இல்லையேல் இவை தொடர்கதையே. நன்றி -
மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பரம்பரைப் படிமங்கள்
nochchi replied to நன்னிச் சோழன்'s topic in எங்கள் மண்
நேற்றும் அழித்தனர் எழுந்தோம் இன்றும் அழிக்கிறார்கள் எழுகின்றோம் நாளையும் எழுவோம் தலைவா நின் நாமமே அடிநாதமாய் நிமிரும் காலத்தேரேறி வரும் மக்கள்படை தமிழீழத் தேரிழுத்துத் தம் கடன் நிறைப்பர்! நன்னிச்சோழனவர்களே தொடரட்டும் உங்கள் பணி.- 114 replies
-
- தலைவர்
- சாள்ஸ் அன்ரனி
-
(and 24 more)
Tagged with:
- தலைவர்
- சாள்ஸ் அன்ரனி
- ஏரம்பு சின்னம்மா
- குண்டன்
- பிரபாகரன் மதிவதனி
- துவாரகா
- பொக்கான்
- திருவேங்கடம் வேலுப்பிள்ளை
- தேசியத் தலைவர்
- வேலுப்பிள்ளை மனோகரன்
- பாலாயிரம்
- பாலச்சந்திரன்
- ஏரம்பு
- துவாரகன்
- வேலுப்பிள்ளை
- வேலுப்பிள்ளை பிரபாகரன்
- பிரபாகரன்
- தலைவர் மாமா
- மதிமகள்
- தம்பி
- பாலா
- மதி
- பெரியவர்
- பெரியப்பா
- மதி மாமி
- குடும்பப் படிமங்கள்
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!
nochchi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ஆழ்ந்த இரங்கல், மெதுவாகக் கொன்றுவிட்டார்கள். ராஜீவுக்காக ஒரு இனத்தையே அழித்த மாபாதக அரசு. இந்த அரசிடம் நீதியை எதிர்பார்ப்பது எவளவு மடமை என்பதை சாந்தன் தனது உயிரீகத்தூடாக மீண்டும் நிறுவியுள்ளார். -
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி.சிறிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள். நெருக்கடியான சூழலில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் தலைவருக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. அனைவரையும் இணைத்துப் பயணிக்கத் துணிய வேண்டும். அப்போதுதான் ஒரு சிறந்த தலைமையாக இருக்க முடியும். தமிழ்த் தேசிய அரசியலில் உதிரிகளாக நின்று எதையும் அடையமுடியாது என்பதைப் புரிந்து கொண்டு புதிய தலைவர் செயற்பட்டால் மட்டுமே தமிழருக்கு நன்மை.
-
கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி.
nochchi replied to nochchi's topic in வாழும் புலம்
உண்மை, கருத்துப்பகிர்வுக்கு நன்றி. -
தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. Posted on January 22, 2024 by சமர்வீரன் 112 0 தமிழ் மரபுத் திங்களோடு தமிழாலயங்களின் எழுகை 2024. – குறியீடு (kuriyeedu.com)
- 1 reply
-
- 1
-
இணைப்புக்கு நன்றி, வெயில் காலத்தில் ஏற்படும் தொண்டைக் கரகரப்பு ஏற்படும்போது பாவித்தால் கரகரப்புக் குறையும். அன்னம் என்ற பெயரில் இந்தியாவிலிருந்து வருகிறது. பனம்பொருள் உற்பத்திச் சபை இதுபோன்ற தொழில் முயற்சிகளை ஊக்குவித்தால் அன்னியச் செலாவணியை ஈட்டலாம். இன்று நவீன கருவிகளை தேவைக்கேற்றவாறு தயாரித்துப் பெறக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. மூலப்பொருளைத் திரட்டுவதற்கான பொறிமுறைகளை இலகுவாக்கி இலாபமீட்டும் தொழிலாக மாற்றலாம். பொலிகண்டியில் 50ஆண்டுகளின் முன் இருந்த தொழிலை மீண்டும் ஏன் கொண்டுவரக்கூடாது. நன்றி
-
உதயன் யாழிலிருந்து பனஞ்சீனியின் உற்பத்தி விளத்தம் சிறப்போ சிறப்பு. கரும்பிலிருந்து செய்வதால் கரும்புச் சீனியென்றல்லவா அழைக்கப்படுகிறது. அல்லது உதயன்காரர் பெயரை மாற்றிவிட்டார்களா?
-
கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி.
nochchi replied to nochchi's topic in வாழும் புலம்
தமிழ் சிறி அவர்களே, உங்கள் பாராட்டுகள் தன்னலம்கருதாது அறப்பணியாற்றும் தமிழாலயங்களின் ஆசியருக்கும், இணைந்து பயணிக்கும் பெற்றோருக்கும் உரித்தாகுக. கருத்தினைப் பகிர்ந்து கொண்டமைக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக. -
என்ன நடந்தது என்பதை அறியத்தூண்டும் வகையில் சிறப்பான எழுத்துநடை.துளையிடுவதும் எண்களைக் கூறுவதும்,...என்ன கொடுமை. சட்டத்தைக் கையிலே எடுக்கும்நிலை. பயமாக இருக்கிறது. முடிவில் உள்ளதுபோன்று அவர்கள் தமது சொந்தநாட்டில் செழிப்பான வாழ்வுக்கான அத்திவாரமோ யாரறிவார்... உண்மைச் சம்பவமானபோதும் அதனை வாசகன் சுவைக்கும் வகையில் அழகுற நகர்த்திச் செல்வதென நன்றாக உள்ளது. பாராட்டுகள். (அண்மையில் ஒரு செய்தியில் நொயிஸ் நகரில் உள்ள பாடசாலை உயர்வகுப்பு இஸ்லாமிய மாணவரிடைய நடந்த கருத்தாடலில் "சரியா பொலிஸ்,, தேவையென்று கூறியதாகப் படித்தேன்.)
-
எங்கள்மேல அக்கறை இல்லாமல், விட்டுப்போட்டுப் போறியள், நீங்கள் ஒரு சுயநலவாதி" இந்தக் கேள்வியோடு தாயகப்பயணத்தை எண்ணுவதில்லை. தடைகளோடு பயணப்படுவதில் விருப்பமில்லை. பார்ப்போம்...
-
ரஞ்சித் அவர்களே, பயண அனுபவங்களை அழகாக அப்படியே வடித்திருக்கிறீர்கள். சிறப்பு. சில இடங்களில் மனம் நொருங்கிச் சரிகின்றது. மண்ணின் வாசத்தையும், பாசத்தையும் குழைத்தெடுத்து, எமது ஏக்கங்களையும் சேர்த்துப் பதிவிட்டுள்ளமை அழகு.
-
கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. Posted on January 8, 2024 by சமர்வீரன் கலைத்திறன் போட்டி 2024 -தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி. – குறியீடு (kuriyeedu.com)
-
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
nochchi replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்
யாயினி அவர்களுக்கு எனக்கான வினவுதலுக்கான பதிலை கொடுத்துள்ளேன். நீங்கள் கேட்டுக்கொண்ட விடயத்தை நானும் சுட்டியுள்ளேன். ஜஸ்ரின் அவர்களுக்கு நன்றி, நானிங்கே பத்து விடயங்களைச் சுட்டியுள்ளேன். அதில் ஒரு விடயமாக ஒருபாலினச் சேர்க்கையை எப்படி இந்த உலகு ஏற்புநிலையைப் பெற்றது என்பதையும், பிறப்புவிகிதம் தேய்வடையும் சூழலொன்றை உலகு எதிர்கொள்ளும் என்பதையும் சுட்டியுள்ளேனேயன்றி, நான் ஒருபாலினத் திருமணங்களைக் கண்டிக்கவில்லை. ஒருவரது விருப்பத் தேர்வுக்குரியதான பாலியல் தேடலை கட்டுப்படுத்தும் உரிமையை யாரும் கையகப்படுத்த முடியுமா? அதற்குச் சட்டங்கள்தான் அனுமதிக்குமா? அதேவேளை நானறிந்தவரையில் எம்மவர்கள் வலதுசாரிகளோடு இணைந்து எதிர்ப்பதைக் கேள்விப்பவும் இல்லை. உடனுக்குடன் பதில் தருபவாராக இருக்கும் நெடுக்கருக்கு சார்புநிலையாக எழுதும் தேவை இல்லையென்றே நினைக்கின்றேன். குழுநிலைச் செயற்பாடுகள் குறித்த பார்வைகள் உண்டு. அதேவேளை பரந்துபட்ட தளத்தினுள் குழுநிலைவாதமானது எந்தவொரு விடயத்திற்கும் பொருத்தமானதாக அல்லது முன்னேற்றமானதாகவோ நான் நோக்கவில்லை. 35நாடுகளில் சில நாடுகளில் மட்டும் குடியேற நீங்கள் கூறியுள்ளவைகள் கரணியமாகவும் உள்ளன. நோகாமல் நொங்கு சாப்பிட விரும்பாத மனிதர் உலகில் இல்லைத்தானே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
nochchi replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்
அகதியாகப் புலம்பெயர்ந்த பெற்றோர், தமது பண்பாட்டு வாழ்வியலை இழந்த சூழலிற் பிள்ளைகளை ஆளாக்கி எடுக்கப்படும்பாடு புலத்திலே வாழும் அனைவரும் அறிந்ததே. மனித வாழ்வில் காதல் ஒரு அர்த்தமுள்ளதாகவும், அன்பின் வழிப்பட்டதாகவும் இருந்தகாலம் ஒன்று இருந்தது. இன்று அந்தநிலை இருப்பதாகத் தெரியவில்லை. காதலிக்கும்போதே, அன்பு ஒரு கட்டத்தில் அடக்குமுறையாக மாறுகிறது. சில காதல் திருமணம்வரை போய்ப் பின்னர் அது மணமுறிவில் போய் நிற்கிறது.(தற்கொiயாளி) அவர் முன்பே சில காதல் முறிவுகளுக்குட்பட்டவர் என்பதாற் கொல்லப்பட்டவர் விரும்பாது கூறிவிட்டு விலத்தி நடந்துள்ளார். அதனை ஏற்காது தொடர்சியாகப் பின்தொடர, அது காவற்றுறைவரை சென்று தண்டனையும் பெற்றிருக்கிறார் என அறியமுடிகிறது. இங்கே காதலால், காதல் முறிவால் நடந்திருப்பது ஒரு கொலையும், தற்கொலையுமாகும். (பெண்ணின்) கொலையுண்டவரின் முறைப்பாட்டாற் தற்கொலை செய்துகொண்டவர் நீதித்துறையால் தண்டிக்கப்பட்டுள்ளார். தற்கொலையாளி வெளியே வந்தகாலத்தில் ராகவி வீட்டில் குடும்ப நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது. அவ்வேளை தொடர்புகொண்டு இதுதான் உனது கடைசிக்கொண்டாட்டம் என்றும் எச்சரித்துள்ளார். காதல் முறிவை ஏற்காத மனநிலையில், அது பழிவாங்கும் மனநிலையாக மாறிக் கொலையிலும்,தற்கொலையிலும் போய்முடிந்திருக்கிறது. இரண்டு குடும்பங்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன என்பது எவளவு துயரமானது என்பதை மனங்கொள்ள வேண்டியது அவசியமாகும். குமுகாய நோக்கு நிலையில் இது ஒரு பெரும் அவலமான சூழல். புலத்திலே தமிழர் நிறுவனங்கள் விடுதலை மற்றும் தமிழ் கற்பித்தலுக்கப்பால் குமுகாயம் தொடர்பான ஊடாட்டமின்மையும் இந்தத் தேய்வுநிலைக்குக் கரணியமாகும். ஒருபுறம் திருமணத்தில் ஆர்வமின்மை மறுபுறம் மாற்றுபால் திருமண வளர்ச்சி வீத அதிகரிப்பு. அத்தோடு, அதன் மீதான ஒருவகைப் புதுமைக் கவர்ச்சியும் உள்ளமை நோக்குதற்குரியதாகும். மனித வளர்ச்சியும், அறிவியல் வளர்ச்சியும் உலகை இன்று பல்வேறு வகைமைகளுள் நகர்த்திவருகின்ற சூழல் அது இயற்கையா, செயற்கையா என்பதற்கப்பால் தவிர்க்க முடியாத நிலையை உலகம் எட்டிவிட்டது. இதிலே ஒருபால் விருப்போ, இருபால் விருப்போ, முப்பால் விருப்போ நாடுகளும்; மக்களும் படிபடிப்படியாக மாற்றம் பெற்று வருகின்றனர். மேலைநாடுகளில் மட்டுமல்ல, பண்பாட்டில் மேலோங்கிய நாடெனப்படும் இந்தியாவிலும்(மறைமுகமாக)குழுநிலைப் பாலியல் செயற்பாடுகள் அரங்கேறுகின்றன. நாளை இதுகூடச் சட்டமாகலாம். பின் வெளியே போன கணவனோ, மனைவியோ வரும்வரை காத்திருக்கும் நிலை தோன்றினாலும் ஆச்சரியப்பட முடியாது. சட்டங்களுக்குள் உடல் கட்டுப்படுகின்ற நிலையில் இல்லைத்தானே. ஆனால், அவர்களது வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெறிமுறைகளின் வழியாகவும், அரசுகள் மற்றும் அரச நிறுவனங்கள் சட்டமெனும் சட்டகங்கள் வழியே வழிநடாத்தப்படுதல் வழியாக மனிதர்கள் கட்டுப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஒருபாலினச் சேர்க்கையை உலகம் நாடுகளெதும் தாமாக முன்வந்து அறிமுகப்படுத்திய பொறிமுறையல்ல. மக்களிடையே ஆங்காங்கே மறைவாக நடைபெற்ற விடயத்தைத் தடுத்தபோது எழுந்த கொந்தளிப்புகளே பின்னாளில், அங்கீகாரமாகிச் சட்டமாக்கி அதற்கொரு குமுகாய ஏற்புநிலையைப் பெறவைக்கப்பட்டது. ஐ.நா. சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193இற்கு மேற்பட்ட நாடுகளைக் கொண்ட உலகில், 35நாடுகள் மட்டுமே ஒருபாலினச் சேர்க்கையை அங்கீகரித்துள்ளன. எனவே இது உலகம் தானாக முன்வந்து கொண்டு வந்த பொறிமுறையென்றோ அல்லது உலகம் தோன்றியது முதல் உள்ளதாகவோ கருதமுடியாது. குமுகாய நோக்கு நிலையிற் பார்த்தால் ஓருபாற் திருமணங்கள் இனத்துவ அழிவுக்கும், மனிதர்களின் சுயவிருப்பின் நிறைவுக்கும்(உலகினது தனிமனித சுதந்திரத்தை அனுபவித்தல்) பாலியற் துணைப்பொருள் உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் துணைபுரியலாம். இந்த நிறுவனங்களே ஊக்குவிக்கும் நிலையும் உள்ளது. இரு தமிழ்க் குடும்பங்களின் அவலமான சூழலை, அதனது அர்த்தபரிமாணத்தில் நோக்குதலே பொருத்தமானது. காதல் ஏற்பும் மறுப்பும் உயிரிழப்புகளில் முடிந்கிறது என்பது நோர்வே போன்ற வளர்ந்த நாட்டின் கல்விப்புலத்திலே பயின்றவர்களில் ஒருவர் கொலைவரை சென்றிருப்பது எப்படி? குழந்தைகளைக் கண்டித்தாலே வந்து காவிச்சென்றுவிடும் நோர்வே அரச நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுக்கவும் முயல வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி -
நோர்வேயில், இலங்கையை பூர்விகமாகக் கொண்ட தமிழ் பெண் சுட்டுக்கொலை!
nochchi replied to தமிழ் சிறி's topic in வாழும் புலம்
தத்தமது பிள்ளைகளை இழந்துவாடும் பெற்றோரோடும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்கின்றேன். -
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்!
nochchi replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
சீச்சீ நீங்கள்அப்படிக் கூறக்கூடாது. சிறிலங்காத் தமிழ் ஜனநாயகக் காவலர்களுக்குக் கோபம் வரப்போகிறது. சிங்களத்துக்கு எதிராகக் காத்திரமாக நின்று உண்மையாகப் போராடும் இவர்களை ஒருவித பதற்றத்தோடு பார்க்கிறது. சிங்களம். இவர்களையோ, இவர்களது கோரிக்கையையோ தொடர்ந்து தட்டிக்கழிக்க முடியாது. பதில் கொடுக்கவேண்டும்.அந்த பதிலே சிங்களத்துக்கு ஆப்பாகவும் மாறலாம். அதனால் காலத்தைக்கடத்துகிறது. -
வெள்ளவத்தைப் படங்களும் வருகின்ற விவரிப்புகளும் 35ஆணடுகள் இந்தியப்படைக்காலத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. அனுபவப்பகிர்வுக்கு நன்றி. ஆற்றிலை போட்டாலும் அளந்து போடுவதைப் பின்பற்றும் மனிதர்.
-
யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்!
nochchi replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அதுதானே..! சும்மாச்சும்மா... திருந்தவிடமாட்டீங்களா தமிழ்மக்களே ... -
யாழ் வைத்தியசாலையில் எனது அம்மாவை அவமதித்து விரட்டிய ஊழியர் 😡😡 | Jaffna Hospital Security Problem மக்களது அவலத்தைப் பேசுகின்ற காணொளியாக உள்ளது. தன்னிலை சார்ந்த பதிவாக இருந்தபோதும் அனைத்துலகிலும் இருந்து யாழ் களத்தை பார்ப்பதாலும் பயன்படுத்துவதாலும் இணைத்துள்ளேன். தமிழருக்குத் தமிழரே அவலத்தை கொடுத்தல் சரியானதா? நன்றி - யூரூப்