Everything posted by வாத்தியார்
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அப்படியென்றால் இங்கே நின்று சுமந்திரனுக்கு காவடி தூக்குவது எதற்காக ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தேவை ஏற்படின் ஒரு பிரேரணையை முன்வைத்து அவரைக் காலி பண்ணலாம் என்று யோசிக்க வேண்டாம் எல்லாரும் அன்றே எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவி்த்து விட்டீர்கள் .... எதிர்க்காமல்....
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
சரி பெயரை மாற்ற முயற்சிக்கின்றேன்🙏
-
நன்றி கெட்ட உலகமிது 😡
இல்லை மிகுதி 80% இல் 20 % வெளிநாட்டவர்களுக்கு அதிக சலுகை கொடுக்கக் கூடாது எனும் பகுதி. ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம். இன்னும் ஒரு 20 % வெளிநாட்டவர்களை தங்கள் அடிமைகளாக நினைத்து அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த நினைப்பவர்கள். அதனால் வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம் மிகுதி 20 வீதத்தினர் வெளிநாட்டவர்கள் தங்களைவிடப் பொருளாதாரத்தில் முன்னேறுவதை பிடிக்காதவர்கள் . அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம். இன்னும் 20 வீதமானவர்கள் நித்திரை போல நடிப்பவர்கள் தங்களுக்குள்ளேயே வெளிநாட்டவர்களுக்கு எதிராகப் பேசிக்கொள்வார்கள் நல்லவர்களை போல நடித்துக் கொண்டிருப்பார்கள் . நேரம் வரும்போது AFD எனும் கட்சியை விடப் பலமடங்கு துவேசத்தைக் காட்டுவார்கள் . ஆனாலும் அதுவரை வெளிநாட்டவர்கள் இங்கே இருக்கலாம்
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இந்த ஐரோப்பியர்களைக் காலம் காலமாகக் காப்பாற்றும் கனேடியர்களும் அமெரிக்கர்களும் வானத்தில் இருந்து குதித்தவர்களாக்கும்
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
இங்கே ஜெர்மனியியில் AFD எனும் இனவாதக் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது- ஒரு காலத்தில் மலேசியா சிங்கப்பூர் எனக் குடியேறி அல்லது பலவந்தமாக குடியேற்றப்பட்டு அங்கு குடித்தனமாக வாழ்ந்து ஒய்வு காலம் வந்தபோது குறிப்பிட்ட தொகை மக்கள் இலங்கை திரும்பியிருந்தார்கள் . அந்த மாதிரி இனி வரும் காலத்தில் ஒரு தொகை மக்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் காலம் விரைவில் வரும். அதற்கு இந்த இனவாத ரீதியான கட்சிகளின் ஆக்கரமிப்பும் ஒரு காரணமாக இருக்கும் .
-
மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ!
மோடி 3.0: மத்திய அமைச்சர்கள் யார்.. யார்..? – முழு பட்டியல்! இதோ! by Web EditorJune 9, 20240 குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய இணை அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் இன்று (ஜூன் 9) டெல்லியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு மாநில கவர்னர்களும் கலந்துகொண்டனர். நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள் பிரதமர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதனைத்தொடர்ந்து கேபினட் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங் அமித்ஷா நிதின் கட்காரி ஜே.பி.நட்டா சிவராஜ் சிங் சவுகான் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் மனோகர் லால் கட்டார் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி பியூஷ் கோயல் தர்மேந்திர பிரதான் ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா கட்சியைச் சார்ந்த ஜித்தன் ராம் மஞ்சி ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லலன் சிங் சர்வானந்த சோனாவால் வீரேந்திர குமார் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு பிரகலாத் ஜோசி ஜூவல் ஓரம் கிரி ராஜ் சிங் அஸ்வினி வைஷ்ணவ் ஜோதிராதித்ய சிந்தியா பூபேந்தர் யாதவ் கஜேந்திர சிங் ஷெகாவத் அன்னபூர்ணா தேவி கிரண் ரிஜிஜூ ஹர்தீப் சிங் புரி மன்சுக் மாண்டவியா ஜி.கிஷன் ரெட்டி லோக் ஜன சக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான் சி.ஆர்.பாட்டீல் இணை அமைச்சர்கள் தனிப்பொறுப்பு: ராவ் இந்திரஜித் சிங் ஜிதேந்திர சிங் அர்ஜுன்ராம் மேக்வால் சிவசேனா (ஏக்நாத் சிண்டே) கட்சியைச் சேர்ந்த பிரதாப் ராவ் ஜாதவ் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த ஜெயந்த் சவுத்ரி இணை அமைச்சர்கள்: ஜித்தன் பிரசாதா சிரிபத் நாயக் பங்கஜ் சவுத்ரி கிருஷ்ணன் பால் குர்ஜால் ராம்தாஸ் அத்வாலே நித்யானந்த் ராய் அப்னா தள கட்சியைச் சேர்ந்த அனுப்பிரியா படேல் சோமன்னா பெம்மசாணி சந்திரசேகர் எஸ்.பி.சிங் பாகேல் சோபா கரந்லாஜே கீர்த்தி வர்தன் சிங் பி.எல்.வெர்மா சாந்தனு தாகூர் கமலேஷ் பாஸ்வான் பண்டி சஞ்சய்குமார் அஜய் தாம்தா எல்.முருகன் சுரேஷ் கோபி ரன்வீத் சிங் பிட்டு சஞ்சய் சேத் ரக்ஷா கட்சே பாகிராத் சவுத்ரி சதீஷ் சந்திரடூபே துர்கா தாஸ் உய்கி சுகந்தா மஜும்தார் சாவித்ரி தாக்கூர் டோக்கான் சாவ் ராஜ் பூஷன் சவுத்ரி பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஹர்ஸ் மல்ஹோத்ரா நிமுபென் பாம்பனியா முரளிதர் மொஹோல் ஜார்ஜ் குரியன் பபித்ரா மார்கரீட்டா https://news7tamil.live/modi-3-0-who-are-the-union-ministers-full-list-here-it-is.html
-
2026 தான் இலக்கு” – தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி!
2026 தான் இலக்கு” – தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேட்டி! by Web EditorJune 9, 20240 தவெகவிற்கு 2026 தான் இலக்கு எனவும், ஜூன் 18-ம் தேதி சென்னையில் தவெகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக வெளியான செய்தி உண்மையல்ல எனவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “விஜய்யின் கட்டளையை நிறைவேற்ற தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும். முதலில் தொழில் நடத்தி சம்பாதிக்க வேண்டும். அதன் பின்னர் குடும்பத்தை கவனிக்க வேண்டும். அதற்கு அடுத்தபடியாக சம்பாதித்த காசில் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் விஜய்யின் கட்டளை. அதை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும். விஜய் கூறியவாறு 2026 தான் நமது இலக்கு. 2026 இல் கண்டிப்பாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். அதற்கு ஒவ்வொருவரும் அயராது உழைக்க வேண்டும். நாம் யாரையும் விமர்சனம் செய்து பேச வேண்டாம். நம்முடைய மக்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம். பொதுமக்கள் பிரச்னையில் முன்னுரிமை கொடுத்து அவற்றை தீர்ப்பதற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறூ பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவது குறித்து தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. அவசரப்பட வேண்டாம். தமிழக வெற்றிக் கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது. அடுத்ததாக நாமக்கல்லில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18-ம் தேதி கூட்டம் என்று கூறவில்லை. இது எப்படி வெளியானது என்று தெரியவில்லை. 2026-ம் ஆண்டு தான் எங்களுடைய இலக்கு என்று ஏற்கனவே தலைவர் விஜய் அறிவித்து விட்டார்” இவ்வாறு தெரிவித்தார். https://news7tamil.live/2026-is-the-goal-dwega-general-secretary-bussi-anand-interview.html
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்ன நடக்கின்றது இந்த முறை கிரிக்கெட் T 20 உலகக் கோப்பைக்கான போட்டிகள் ஆரம்பமான நிலையில் பலரும் எதிர்பார்த்த மாதிரியே ஸ்ரீலங்கா அணி இரண்டு விளையாட்டுக்களில் தோல்வி . அடுத்து இலங்கைக்கு இந்த விளையாட்டினை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து அணியும் இரண்டாவது விளையாட்டில் அவுஸிடம் தோல்வியடைந்ததது. யாரும் எதிர்பாராத அமெரிக்க அணி முதல் இரண்டு விளையாட்டுக்களிலும் வெற்றி- அவுஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் தாங்கள் விளையாடிய இரு விளையாட்டுக்களிலும் வெற்றி, இருந்தாலும் இன்னும் சில விளையாட்டுக்கள் இருப்பதால் இன்றைய நிலை நாளை மாறும் என்பதைப்போல எல்லா அணிகளும் தங்கள் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றே கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புகின்றார்கள் .😂
-
யாழில் சாதனை படைத்த மாணவிக்கு கௌரவிப்பு.
வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எப்பவுமே இருக்கிற இடம் தெரியாமல் இருந்திட்டுப் போயிடனும் பிரச்சனையேயில்லை 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது சரி இவருக்கும் கிரிக்கட்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்கா அமெரிக்காவில் ஏதாவது கிளப்புக்களை வாங்கி வைத்திருக்கின்றாரா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கென்னவோ எங்கடை அமெரிக்கன் தாத்தா மேலை தான் சந்தேகம்🤣
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]"
ஓம் சாந்தி
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்❤️
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
விகிதாசார முறைப்படி மாற்றினால் இலகுவாக காங்கிரஸ், பா ஜ போன்றவர்களும் தமிழ் நாட்டில் உறுப்பினர்களை பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றது. தேர்தல் முறையை மாற்றினாலும் தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைக்க முடியாது என்றில்லையே .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் சொன்ன 800 டாலருக்கும் டிக்கெட் கிடைக்குமோ தெரியாது குறைந்த விலை கவுண்டரில் 300 டொலர் .க்கு வாங்கியவர்கள் இப்போது 1500 டாலருக்கும் விக்கலாம் களவாக 😧
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நிச்சயமாக அது இன்றைய நிலையில் இந்தியாவில் நடக்காது. அங்கு மக்களுக்கான அரசியல் என்பது அறவே இல்லை என்று சொல்லலாம். தங்கள் கட்சியை வளர்ப்பதற்குத் தேவையான பணத்தை மக்கள் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடிப்பதற்காகவே அரசாங்கத்தை பயன்படுத்துகின்றார்கள். மேற்கில் அரசியல் என்பது ஒப்பந்தம் எழுதுவது போல சொன்னதை செய்வார்கள் அல்லது செய்யக்கூடியதை மட்டுமே சொல்வார்கள் இந்தியாவில் அப்படி அல்ல இன்றைய இந்திய அரசியல் என்பது மக்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கும் ஒரு தொழில் என்றே சொல்ல வேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கொஞ்ச நாளைக்கு விடுவம் கூட்டாளிமார் நிக்கட்டும் முன்னுக்கு ..பிறகு தான் ஆப்பு.....😂
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அதே தான் கோஷான் மேலதிக தகவல்களுக்கு நன்றி இப்போது நாயுடுவும் நித்திஷ்ம் ஆதரவு தருவதாகக் கடிதம் கொடுத்து விட்டார்கள் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன மோடியைக் கூட்டணியின் தலைவராக ஏகமானதாகத் தெரிவு செய்துள்ளார்கள். மோடியை விட்டுப் பிடிக்க நினைக்கின்றார்கள் போலத் தான் தெரிகின்றது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கண்டு பல அரசியல்வாதிகளும் மிரண்டு போய் இருக்கிறார்கள் அதுவும் இளையவர்களின் ஆதரவு வளர்ச்சி அடைவது என்பது மற்றைய கட்சிகளுக்கு ஆபத்தானது என்று செல்வப்பெருந்தகை கருத்துக் கூறியுள்ளார்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
2016 சட்ட மன்றத் தேர்தலில் பா ஜ க பாரி வேந்தருடைய இந்திய ஜனநாயக கட்சி மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், கொங்கு ஜனநாயகக் கட்சி ஆகிய( தனி நபர் கட்சிகள் எனக் கூடச் சொல்லலாம்) கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் பெற்ற வாக்குகள் 12 லட்சத்து 30 ஆயிரம் மட்டும் தான் ( 234 தொகுதிகள் 165 + 45 + 24 ). இது 2,9 வீதம் இப்படியான கூட்டணியும் இல்லாமல் போட்டியிட்டிருந்தால் இன்னும் விகிதாசாரம் குறைந்தும் இருக்கலாம் இப்படியான ஒரு அரசு இந்தியாவில் 2000 ( சரியாகத் தெரியவில்லை ) ஆண்டளவில் இருந்திருக்க வேண்டும் அப்போது சந்திர சேகர் என்பவர் பிரதமராக இருக்க காங்கிரஸ் கூட வெளியே இருந்து ஆதரவளித்தது. நாயுடுவும் நித்திஷ் குமாரும் மோடிக்கு ஆதரவு கொடுக்காமல் அமித்ஷா வை அல்லது இனினொருவரைக் கூட பிரதமராக்க முயற்சிக்கலாம்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இதுதான் சந்திரபாபு நாயுடு.. "சபாநாயகர்"பதவியை எங்களுக்கு தரணும்!பாஜகவுக்கு போட்ட முக்கியமான கண்டிஷன் By Vigneshkumar Updated: Wednesday, June 5, 2024, 12:20 [IST] Google Oneindia Tamil News விஜயவாடா: தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கத் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கடந்த இரு தேர்தல்களைப் போல இல்லாமல் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் பாஜக ஆட்சியை அமைக்க என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தெலுங்கு தேசம் கட்சியிடம் 16 இடங்கள் இருக்கும் நிலையில், அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இப்படி லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். இதற்கிடையே ஆந்திராவில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது தான் என்டிஏ கூட்டணியிலேயே இருப்பதாகவும் அதன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். கிங் மேக்கர்: அதேநேரம் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2014இல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க அப்போதைய மத்திய அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், அதையும் தாண்டியே தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. நிபந்தனை 1: இதனால் ஆந்திராவின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இருப்பினும், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாகவே இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதற்கிடையே இப்போது பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்றால் ஆந்திராவுக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன "கிங் மேக்கர்" சந்திரபாபு நாயுடு.. குஷியில் பாஜக நிபந்தனை 2: அது மட்டுமின்றி சபாநாயகர் பதவியை விட்டுதர வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக லோக்சபாவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இதுபோன்ற சூழல் ஏற்படும் போது சபாநாயகர் பதவி முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அவையில் முக்கிய முடிவுகள் எல்லாம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும். இதன் காரணமாகவே சபாநாயகர் பதவி தங்களுக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார். பாஜக இந்த இரு நிபந்தனைகளுக்கும் செவி சாய்க்குமா இல்லை அமைச்சரவையில் கூடுதல் சீட்களை கொடுத்துவிட்டு சபாநாயகர் பதவியை தங்களிடமே தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். Read more at: https://tamil.oneindia.com/news/india/what-are-the-conditions-for-bjp-by-chandrababu-naidu-611525.html
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பா ஜ க கூட்டணிக் கட்சிகள் எவை பாஜக - தெலுங்கு தேசம் கட்சி - ஐக்கிய ஜனதா தளம் - சிவசேனா - பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு - லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) பீகார் - தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரா - பாரத தர்ம ஜன சேனா கேரளா - மதசார்பற்ற ஜனதா தளம் - அசோம் கண பரிஷத் அசாம் - ஜன சேனா கட்சி ஆந்திரா - தேசிய மக்கள் கட்சி மேகாலயா - ராஷ்டிரிய லோக் தளம் உத்தரப் பிரதேசம் - அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் ஜார்கண்ட் - ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா பீகார் - நாகா மக்கள் முன்னணி மணிப்பூர் - தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி நாகாலாந்து - ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா பீகார் - ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா மகாராஷ்டிரா - சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி உத்தரப்பிரதேசம் - ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் அசாம் - இத்தூண்டு கட்சிகளுடன் அமைத்தது தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அலியாஸ் பா ஜ க கூட்டணி