Everything posted by Elugnajiru
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
சிறீலங்காவின் நாடாளுமன்றில் ஒரு சிங்கள உறுப்பினர் ஒரு மாதத்திற்குள் சாணாக்கியனின் காதலி ஒரு சிங்களப்பெண் அவரைத்தன் சாணாக்கியன் திருமணம் செய்யவுள்ளார் எனக்கூறும் போது சாணாக்கியன் எந்தப்பதிலும் கூறவில்லை. அப்படி அவர் சுத்தமானவராக இருந்தால், தனது நாடாளுமன்றப் பதவியின் அடிப்படை உரிமையை சம்பந்தப்பட்ட ஊறுப்பினர் மீறுகிறார் எனக்கூறியிருக்கவேண்டும். இந்த ஆதாரம் போதுமா நான் வாழுவது பின்லாந்து நாட்டில் இப்போது பின்லாந்தின் அடிப்படைவாதிகளும் பணக்காரர்களுக்குமான கட்சியும் சேர்ந்தேதான் அரசை அமைத்திருக்கிறது குறிப்பிட்ட அளவு பல்லின மக்கள் இங்கும் வாழுகிறார்கள். அதில் அனேகமானவர்கள் வேலைசெய்தே தமது வாழ்க்கையைக் கொண்டுசெல்கிறார்கள். பின்லாந்தின் அடிப்படைவாதக்கட்சி என்ன சொல்லுது என்றால் பின்லாந்து பின்லாந்தியர்களுக்கே என, இலங்கைத் தீவிலிருந்து நான் புலம்பெயரக்காரணமானது சிங்கள அடிப்படைவாதமே ஆனால் சிங்கள் அடிப்படைவாதம் எனப்படுவது சிங்களவர்களுக்கு இருந்தே ஆக வேண்டும் அதேவேளை மாற்று இனத்தவர்களுக்கான உரிமைக்கும் மதிப்பளிக்க வேண்டும் என. பின்லாந்தின் அரசமைப்பு மற்றும் சட்டதிட்டங்கள் அனைத்தும் பின்லாந்தியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது அது கனடாபோன்ற பல்லினமக்கள் வாழும் நாட்டில் உள்ள சட்டதிட்டங்களுடன் ஒத்துப்போகாது. ஏன் பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுடனேயே ஒத்துப்போகாது. பின்லாந்து மக்களது எண்ணங்களுடன் நான் ஒத்துப்போகிறேன் அந்தவகையில் சுத்த தமிழ்தேசிய அடிப்படைவாதம் எனக்கு இருந்தால் எவருக்கும் எந்தப்பிரச்சனையும் இல்லை. நான் அப்படியே இருந்துவிட்டுப்போகிறேன். நான் எந்தவிதமான ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எனது எதிரிதான் தீர்மானிக்கிறான் என்பதுபோல் நான் எந்தவிதமான சிந்தனை உடையவனாக இருக்கவேண்டும் என்பதையும் எனது எதிரிதான் தீர்மானிக்கிறான். சும்மா சகோதரத்துவம் தேசிய ஒருமைப்பாடு எனக்கூறிக்கொண்டிருந்தால் சுரணை கெட்டவனாக இருப்பதுபோன்றதாகும்.
-
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீண்டும் ஆயுதங்களை வழங்கவேண்டும் : சாணக்கியன் கோரிக்கை!
முள்ளிவாய்க்கால் கொலைக்களம் முடிவடைந்ததும் அதைத் "தமிழர்விரோத தேசமாம்" இந்தியாவுக்காக முன்னின்று நடாத்திய கொலையாளிகளான இராஜபக்ஸ்ச பரிவாரங்களுடன் கைகுலுக்கி, அதனால் தனது கைகளில் ஒட்டிக்கொண்ட உள்ள தமிழர்களது குருதியின் மணம் இதுவரை மாறாது எந்தச் சவர்க்காரம் போட்டால் இந்த மணம் போகும் என அங்கலாய்த்து அது, தான் ஒரு சிங்களத்தாயாருக்குப் பிறந்ததுக்கு நன்றிகடனாக இருக்கட்டும் என உள்மனதில் பெருமைகொண்டு, அடுத்துவரும் தனது சிங்களக்காதலிக்குத் தனது திருமணப்பரிசாக அந்தத் "தமிழரின் இரத்த வாடைய" ப் பரிசளிப்பதற்காகக் காத்திருக்கும் சாணாக்கியன் எனும் முன்னாள் பிள்ளையான் குழுவின் முக்கிய தொண்டரை நம்பித் தமிழினம் ஏமாந்து போவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்கிதில்லை.
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
முதலில் இப்படிக்கூக்குரல் போடுபவர்கள் செய்யவேண்டியது தாயகத்தில் உள்ள தமிழர் அரசியலைப் பேசுபவர்களைச் சந்தித்து நீங்கள் ஒரு கோரிக்கையின் பின்னால் ஒன்றுதிரளுங்கள் என்பதே. மற்றப்படி புலம்பெயர் தேசங்களில் உள்ள புலிகளின் முன்னாள்கள் மற்றும் புலிவால்களைக் குறைகூறுபவர்கள் இந்த இமாலயா அறிக்கையைத் தெளாஅரித்து சிங்களத்திடம் முன்மொழிய முன்னர் தாங்கள் யார் என்பதை மக்களுக்கு முன்னால் சொன்னார்களா? எந்த மக்களுக்காக ஒரு அறிக்கை கையளிப்பு அரசியலைச் செய்கிறார்களோ அந்த மக்களது கருத்துக்களை உள்வாங்கியுள்ளார்களா? இவர்களும், இவர்களால் விமர்சிக்கப்படும் ஏனையோரைப்போலவேதானே முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இப்பதானெ இவர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் சிங்களவன் சரியானபடி நல்ல ஆப்பாக இரக்குவான் அதோட துண்டைக்காணோம் துணியக்காணோம் எண்டு போய்விடுவினம். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் கோட்டுச்சூட்டுகளைப் பத்திரமா வைத்திருப்பினம் சனம் பழையதை மறந்ததும் "பூஜி மலைப் பிரகடனம் " எனச்சொல்லிக்கொண்டு மறுக்காலும் வருவினம். நல்லூருக்கு முன்னால வந்து நிண்டு சுரேன் ச்ரேந்திரன் முப்பது வருடத்துக்கு முன்னம் நான் நல்லூர் திருவிழாவில் கடைலையுடன் பெண்களுக்குக் கடலைபோட்டதை நினைச்சுச் சந்தோசப்பட்டதை மாதிரி இன்னுமொருவரும் ஒரு சீ ஆர் கொப்பியில பிரகடனம் என எழுதிக்கொண்டு நல்லூர் வாசலில் வந்து "நினைவிடை தோய்வார்" அ ப்பவும் யாராவது அவர்களுக்கு வக்காலத்து வாங்குவினம்.
-
பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பதினைந்தாம் வட்டாரத்து மாநகரசபை உறுப்பினர் இவர் யாழ் அம்மன் வீதியிலுள்ள விடுதி ஒன்றில் பியூட்டி பார்லர் நடாத்தி அங்கு தென்னிலங்கை யுவதிகளைக் கொண்டுவந்து விபச்சாரம் செய்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டு பின்பு அவர் மறுப்பு அறிக்கை விட்டவர். அவர் அண்மையில் சி வி கே சிவஞானம் அவர்களது தலைமையில் நல்லூர் சட்டநாதர் கோவிலடியில் உள்ள மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் கிளை நிர்வாகக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார் சிவிகே சிவஞானம் அவர்கள் முன்னர் அல்பிரட் துரையப்பா காலத்தில் மாநகரசபைக் ஆணையாளராகக் கடமையாற்றியவர் இவரது திருமணை தற்போது நல்லூரடியில் உள்ள யாழ் மாநகரசபை மண்டபத்தில் நடந்தது. அப்போது அது கலியான மண்டபம். இப்படியான திருகுதாளக்காரர்களை கூட்டமைப்பின் சிவஞானத்தார் உடன் கொண்டு திரிகிறார். ஆனால் சிவஞானத்தார் ஒரு மாவீரரின் தந்தையார் ஆவார். ஐலண்ட் யுத்தகாலத்தில் எல்லாம் சீரளிஞ்சு போச்சுது எனச்சொல்லுறியள் யுத்தம் முடிந்து இப்போ பதின்நாஙு வருடத்தை அண்மிக்கிறது அங்கு சிறிலங்கா ஜனநாயகக் குடியரசின் அரசியலமைப்புச்சட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான அரசியல் சட்டங்களின்படி மாநகரசபை நிர்வாகம் நடைபெறவேண்டும் அதில் வரி அறவீடுகள் மற்றும் மராமத்துப்பணிகள் தவிர எதிர்காலத்தில் ஏற்படும் குடிசனக்கொள்ளளவுக்கு ஏற்றதுபோல ஒரு திட்டமிடல் அறிக்கை ஆகியவற்றைத் திறணாளர்கள்மூலம் தயாரித்து அதனை உள்ளூராட்சி அமைச்சுக்கு அனுப்பவேண்டும் சும்மா மணிவண்ணன் சுமந்திரன் கஜேந்திரகுமார் என அலப்பறை செய்யவேண்டாம் இது சாதாரணமான சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிர்வாகம் இதனுடன் கொண்டுவந்துதமிழ் தேசியத்தை உள்நுளைக்கவேண்டாம். கடந்தமுறை நான் யாழ் சென்றபோது ஒரு காணொளியை எனது யூ ரியூப் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தேன் அதில் கோட்டை முனியப்பர் கோவிலை அண்டியுள்ள முற்றவெளிப்பகுதியும் யாழ் வீரசிங்கம் மணடபத்துக்கு முன்னால் உள்ள தமிழாராச்சி நினைவிடமும் எப்படிக்கோரமாகக் காட்சியளிக்குது என காட்டியிருந்தேன் அதற்கு ஒரு வாரத்துக்குப் பின்பு மணிவண்ணனும் அவரது பரிவாரங்களும் ஒப்புக்குச் சப்பாணியாக சிறிது துப்பரவு வேலை செய்துவிட்டு அப்படியே போட்டது போட்டபடி விட்டாச்சு. ஒரு மாநகரத்தைப் பராமரிப்பது என்பது இன்று கூட்டிக்கழுவிவிட்டு அடுத்த ஆறு மாதத்துக்கு மறப்பது இல்லை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து செப்பனிடவேண்டும். யாழ் மாநகரசபையின் "கோல்டன் எரா" என்பது அல்பிரட் துரையப்பா காலமாகும் அவர் தமிழின விரோதியாகட்டும் இல்லை வேறு எதுவாகவும் இருக்கட்டும் அந்த வேளையில் யாழ்ப்பாண நகர்ப்பகுதிக்கு அவர் செய்த சேவை என்பது சொல்லி மாளாது அவரது காலத்திலேயே பல இடங்களில் ஆயுர்வேதச் சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டது.இப்போது யாழ் வைத்திய சாலை சுற்றுச்சுவருக்கு அண்மித்த நடைபாதை மேடை அப்போதுதான் அமைக்கப்பட்டது. அப்போது இருந்ததைவிட இப்போது வாகனப்பெருக்கம் அதிகரித்துவிட்டது ஆனால் அப்போதே பாட்டா சந்திக்கு அண்மிதத கஸ்தூரியார் வீதி வின்ஸர் தெயேட்டர் வரைக்கும் ஒற்றைவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஆனால் இப்போது அப்படியான ஒழுங்குபடுத்தல் எதுவுமே இல்லை உதாரணமாக யாழ் வைத்தியசாலை வீதி மற்றும் மின்சார நிலையவீதி ஆகியவை கட்டாயமாக ஒருவழிப்பாதையாக மாற்றமடையவேண்டும் யாழ் சிற்றூர்தி நிலையம் புகையிரத நிலையத்துக்குப்பின்னால் உள்ள ஸ்ரான்லிவீதிப்பக்கத்தில் இருக்கும் இரயில்வே காணிக்குள் அமைய வேண்டும் தவிர தற்போதைய பேரூர்து நிலையம் வாகனம் தரித்து நிற்காது உடனடியாகவே புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்டு குறுகிய நேர நிறுத்தத்துக்குப் பின்பான புறப்படுகயை மேற்கொள்ளவேண்டும். தவிர அங்கு காணப்படும் கழிவுநீர் வடிகால்கள் யாவும் மூள் ஒழுங்கமைக்கப்படல்வேண்டும். இப்படியாக பல வேண்டும்களை உள்ளடக்கி யாழ் மாநகரசைப் பிரதேசம் காத்துக்கிடகுது. இதில் தமிழ் தேசியம் தமிழர் உரிமை யுத்தம் இவைகளைப் பற்றிப்பேச என்ன கிடக்குது. தேவை தமிழர்கள் தலைநிமிர ஒரு சிறந்த நிர்வாகம். ஆனால் எமது பிரதிநிதிகள் அனைவரும் குறுகிய மனம் படைத்த சிறு குள்ளர்கள்.
-
தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!
இவர் எழும்பி நிற்க முடிஞ்சபோதே தமிழ் மக்கள் பக்கம் நிற்கவில்லை. இனிமேல் எப்படி நிற்பார்?
-
பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
ஐலண்ட் அவர்களே, நாம் பின்னோக்கிப்போகவில்லை தற்போதைய தொழில்நுட்பங்களை எங்கள் சமுதாயம் உள்வாங்கப்பழகவில்லை அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் எமக்குக்கிடைக்கவில்லை அல்லது அப்படியான சந்தர்பங்கள் கிடைப்பதற்கு பல்வேறு தடைகளை யாரோ எங்கள் முன்பு ஏற்படுத்தியுள்ளார்கள். ஒரு குளத்தை நாம் வெறும் சாதாரண குளமாக நினைத்து ஒதுக்கிவிட்டுப்போகமுடியாது, அந்தப்பிரதேசத்தின் நிலத்தடி நீரில் கூடிய அளவு கடல்நீர் சேராமல் பாதுகாக்கும் பொறிமுறெளக்கான ஒரு அலகு என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். யாழ் ந்நகர்ப்பகுதியில் காணாமல் போன குளங்கள் பல அதில் வண்ணான் குளம் இறுதியாகக் காணாமல் போனது நரியஙுண்டுக்குளம் முலவைவைச்சந்திக்குளம் தாராக்குளம் இவைகள் முன்னமேயே காணாமல்போய்விட்டன. பொம்மை வெளி காக்கைதீவு ஆகிய இடங்கள் பெருமுதலாளிகளது வணிக நிறுவனங்களின் பண்டகசாலையாக மாறிவிட்டது யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் சேரும் குப்பகளில் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொம்மைவெளி தொடங்கி நவாலி நோக்கி காற்றில் பயணப்பட்டு அந்த இடத்தின் சூழலே மாற்றமடைந்துவிட்டது இதற்கு யார் பொறுப்பு? வேலிகளாக இருந்த குடியிருப்புக்காணிகளின் எல்லைகள் அனைத்தும் யாழ் மாநகர எல்லைக்குள் மதில்களாக மாறி வெள்ளம் வழிந்தோடாது பெரும் சீரளிவு இதை யார் திருத்தவேண்டும் யாழ் மாநகரசபைதானே? யாழ் குடாநாட்டின் அனைத்துப்பகுதியும் இப்போது சன நெரிசலாம் அல்லாடுகிறது அங்கு காணப்படும் மலசலக்குழிகள் அடுத்தவீட்டின் கிணற்றுக்கு அண்மையாகக் கைகோர்த்து நிற்கிறது அப்போ கிணற்று நீரின் தரம் பற்றிய கேள்வி எழுகிறது? கோடைகாலத்தில் நிலத்திலிருந்து உறிஞ்சும் நீர மரிகாலத்தில் நிலத்துக்கு ரீசார்ச் செய்யக்கூடிய இலகுவான தொழில் நுட்பத்தை ஏன மாநகரசபை குடியிருப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தவில்லை? எங்கே ஆரியகுளப்பிரதேசத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மாநகரசபை ஊழியர்கள் சரியாக எட்டு மணி நேரம் தமது கடமையைச் செய்கிறார்களா? அல்லது மாநகர சபை நிர்வாகம் ஆரியகுளத்தை வருடம்தோறும் எப்படிப்பராமரிப்பது என்பதற்கான ஒரு வரைபுக்கோப்பை வைத்திருக்கிறார்களா? நல்லூர் திருவிழாகாலத்தில் தற்காலிக சந்தைக்கடைகளுக்காக அறவிடப்படும் பணம் எந்தக்கணக்கில் வருகிறது? யாழ் மாநகரசபையில் இப்போது பணிபுரியும் துறைசார் வல்லுனர்களது பட்டியல் இருக்குதா? மராமத்துக்கான பொறியாளர்களது தராதரம் என்ன? சோலைவரி எனச்சொல்லப்படும் சொத்துவரியை மாநகரசபை சரியாக அறவிடுகிறதா? அப்படி அறவிடப்பட்டாலும் அவை புதிய கணக்கீடுகளுக்கு உட்பட்டதா?
-
பராமரிப்பில்லாத ஆரியகுளம்!
இந்த ஆரியர் குளத்தை திருத்தும்போது நான் நிறைய இடங்களில் கண்டனம் செய்திருக்கிறேன் காரணம் யாழ் மாநகரசபைக்கு அப்படி எதையும் தொடர்ந்து பராமரிக்கும் வளமோ அல்லது தொழில்நுட்ப அறிவோ அறவே இல்லை என தவிர அங்கு அதிகாரிகள் உட்பட தொழிலாளர் வரைக்கும் அசமந்தப்போக்குடன் நடப்பவர்கள் தைவிடக் கேவலம் யாழ் குடாநாட்டில் அதுவும் யாழ் மாநகர சபை எல்லைக்குள்ளும் அதன் சுற்றுப்புறங்களிலும் வதிவோர் கொஞ்சமேனும் சமூக அக்கறை இல்லாத கூட்டம். யாழ் பேரூர்ந்து நிலையத்தைச் சுற்றி நடக்கும் அக்கிரமமும் குற்றச்செயல்களும் சொல்லி மாளாது. இப்போது இருக்கும் கார்கிள்ஸ் பூட்சிற்றிக்கு அருகாமையில் வெளியூர் செல்வதற்காக ஒரு தரிப்பு நிலையம் கட்டினார்கள் ஆனால் நாங்கள் அங்கு வண்டிகளை நிறுத்தமாட்டோம் என தனியார் மற்றும் அரச போக்குவரத்தாளர்கள் அடம்பிடிக்கிறார்கள்.
-
தமிழ் மக்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது – சுரேஷ் பிரேமச்சந்திரன்
இல்லை மண்டையன் குழுத்தலைவர் சுரேசர் இப்போ இந்தியாவின் காய் நகர்த்தலுக்கு ஆடுகிறார் அதாவது பொது வேட்பாளரை நிறுத்தி தமிழ் மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக அவ்வேட்பாளருக்கு ஓட்டுப்போடாமல் இருக்கப்பண்ணி தீர்வுக்கு தமிழர்கள் எவருக்குமே விருப்பம் இல்லை சிங்களவருடன் இணைந்து இப்போது இருப்பதுபோல் வாழவே அவர்கள் விரும்புகிறார்கள் என நிரூபிக்க விளையாடினம். இவர்கள் தமிழர் பிரச்சனை தீர்ந்து எமக்கான உரிமைகள் கிடைப்பதற்காக ஒன்றாகப்போராடுவதை எப்போதுமே தவிர்த்து அனைத்துத் தமிழ் அரசியல் --------குறுக்குச்சால் ஓடுபவர்கள் ஆனால் இந்தக் ------ எல்லாம் தமிழர் பகுதியில் இப்போது காணப்படும் போதைவஸ்துக்கலாச்சாரத்துக்கு காரணமான குற்றவாளிகளை முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் அங்கு காணப்படும் வன்முறைகள் அனைத்தையும் சிங்கள அரசு முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் என ஒரு பொதுவான வேண்டுகோளாக ------- ஒன்றுசேர்ந்து இன்னமும் சிங்களத்திடம் இதுவரை கோரிக்கை விடவில்லை அப்படியான --------------------எமக்கு உரிமை எடுத்துத்தர பொதுவான வேட்பாளரை இறக்கி உரிமையைப் பெற்றுத்தரப்போயினமாம். ----------------------------------------------------------------------------------------------
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
எதைச் சாதிப்பதற்காக? தடை நீக்கப்பட்ட அமைப்பாக இனிமேல் என்ன செய்யமுடியும்?
-
இமாலயபிரகடனம் - தெளிவற்றதாக காணப்படுகின்றது - நாட்டின் சகவாழ்விற்கும் ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது அவசியம்- மெதகம தம்மானந்த தேரர்
இந்த இமையமலைப் பிரகடனத்தை வரைவு செய்தவர்கள் யார் அதாவது இவர்கள் யாரது பிரதிநிதிகள் அதாவது யாரால் தமிழர் பிரதிநிதிகள் எனத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் இதைத் தயார் செய்தவர்களில் தாயகத்தில் இப்போது வதிவோர் யார்? புலம்பெயர் தேசத்தில் வதிபவர்கள் யார்? இதில் பெரும்பாலனவர்கள் புலம்பெயர் தேசத்தி வதிபவர்களாயின் இவர்களை ஒட்டுமொத்த தமிழர்களது பிரதிநிதிகள் அல்லது புலம்பெயர் தமிழர்களது பிரதிநிதிகள் எனத் தெரிவுசெய்யப்பட்டது யாரால் அப்படித் தெரிவு செய்யப்பட்டாலும் இப்படி ஒரு வரைபை எழுத அதிகாரம் கொடுத்தது யார். இதன் உள்ளடக்கம் இப்படி இருக்கவேண்டும் என யாருடன் கலந்து கருத்துக்கள் சேகரிக்கப்பட்டது? புலம்பெயர் தேசங்களில் அரசியல் ரீதியான அச்சுறுத்தல்களோ அல்லது தாம் வாழும் நாடுகளில் ஜனநாயகரீதியான அரசியல் செயல்பாடுகளுக்கு அந்த நாடுகளின் பாதுகாப்புக்குப் பங்கம்வராது செயற்படும் அமைப்புகளுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்பதால் இவர்கள் புலம்பெயர் தேசங்களில் பொதுவெளியில் இந்த வரைபைப்பற்றி பொது விவாதத்துக்கு மக்கள் முன்பு கொண்டுவந்தார்களா? காதும் காதும் வைத்தாற்போல் ஒரு வரைபை எழுதி கோட்டுச்சூட்டுப் போட்டுக்கொண்டு அந்த வெக்கையான நாட்டுக்கு விமானம் ஏறிப்போய் மிகவும் அவசரமாக அதுவும் இரகசியமாக சிறீலங்காவின் அரச தலைவரிடமும் பேரினவாத பெளத்த தலைமைகளிடமும் கையளிக்கவேண்டிய அவசியம் இந்த மேதாவிகளுக்கு ஏன் வந்தது. இப்படிப் பல கேள்விகள் இருக்குது இதற்குப்பின்னாலை.
-
இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் - இந்திய உயர்ஸ்தானிகர்
முள்ளிவாய்காலுக்குப் பின்பு ஒரு சிலர் என்ன பலர் இவையள் ஒரு தீர்வுக்குப் போயிருந்தால் இப்படி நடந்திருக்கது எனச் சொன்னவையள் ஆனால் அவர்கள் கள யதார்த்தம் அறியாது இப்படிப்பேசியவர்கள். காரணம் விடுதலைப் புலிகளுடன் எந்தவித சமரசத்துக்கும் இடம்கொடுக்கக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இப்போதும் இருக்கின்றது. அதேபோல் இப்போது இலங்கைத் தமிழர் மத்தியில் இந்தியா எம்மை நிம்மதியாக வாழ விடாது எனும் எண்ணம் மெல்லமெல்ல ஏற்படத்தொடங்கிவிட்டது, இது வலுவானதாக மாறும், இப்போது துவாரகா விடையத்தில் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. துவரகா விடையம் பிழைச்சுப்போகுமாகில் அடுத்து என்ன செய்ய வேண்டும் எனும் திட்டம் இரண்டை அவர்கள் ஏற்கனவே சமகாலத்தில் நடைமுறைப்படுத்திவிட்டார்கள் அதன் ஒரு பகுதிதான் நேசக்கரம் சாந்தியினது காணொளிகள், தேசியத்தலைவரும் பொட்டம்மானும் இந்திய அரசினால் தேடப்படும் குற்றவாளிகள் எனும் வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கு. அப்படி இருக்கையில் காசியரும் நெடுமாறனும் வெளியில வந்து மிக நிதானமாக தலைவர் இருக்கிறார் என அறிவிக்கிறார்கள் எனில் தேடப்படும் குற்றவாளியைப்பற்றிய தகவலை அறிந்திருக்கிறார்கள் எனும் முகதாவில் அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணக்கு உட்படுத்தப்பட்டிருப்பார்கள் ஆனால் இதுவரை எப்படி இவர்கள் எதுவித பிரச்சனையும் இல்லாது அங்கு வாழ்கிறார்கள்? ஆகவே நான் கூறியதுபோல் இந்தியா எக்காரணம் கொண்டும் எமை வாழ விடாது எனும் தமிழர்களது எண்ணம் இன்னமும் பலமடங்காகவே அதிகரிக்கும் அப்போது வேறி ஒரு புதிய முயற்சியுடன் இந்தியா எம்மத்தியில் வரும். அதுவும் அடிபட்டுப்போகும். அதன்பின்பு எதிர்காலத்தில். இப்போது தொலைதூரத்திலுள்ள அமெரிக்கா பின்லாந்து நாட்டின் பதினைந்து இராணுவ முகாம்களில் தனது இராணுவத் தளபாடங்களையும் அதிப்பராமரிப்பதற்கான துருப்புக்களையும் வைத்திருக்கலாம் எனும் நேற்றைய தினம் முடிவுசெய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க பின்லாந்துக்குள் இராணுவ நடவடிக்கையை ஆரம்மிக்கப்போகின்றதோ அதேபோல் சீனா இலங்கைத் தீவின் பல பகுதிகளில் தனது படைகளையும் போர்த்தளபாடங்களையும் உள்நுழைக்கும் நேரம் விரைவில் வரும். அப்போது வடை போச்சே எனும் வடிவேலுவாக இந்தியா இருக்கும்.
-
இந்தியா பாதுகாப்பாகயிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாகயிருக்கும் - இந்திய உயர்ஸ்தானிகர்
சரிதான் போங்க சார் உங்க ஊரில அதுதான் டெல்கியில நாடாளுமன்றக்கட்டிடத்துக்குள்ள நுலம்புத்தொல்லை எண்டு யாரோ புகையடிச்சிட்டாங்களாம் அதுவும் சங்கிக்கூட்டமாம் போய் அதைப்பாருங்க. உக்க்ரேனின் ஒரு பகுதிய ஆக்கிரமிச்சிருக்கு ரஸ்யா ரஸ்யாவுடன் நீண்ட தூரத்துக்கு எலையைப் பங்கிட்டுகொள்ளும் நாடு பின்லாந்து, எதிர்காலத்தில் எப்போது வேண்டுமாகிலும் யுத்தம் வரலாம் ஆனால் பின்லாந்து நாட்டின் அரசாங்கமோ அல்லது உங்களைப்போன்ற இராஜங்க அதிகாரிகளோ எங்கேயும் இப்படிக் கேனைத்தனமாகக் கதைப்பதில்லை. பின்லாந்து நாட்டின் பொதுமக்களோ அல்லது அரசியல் பிரமுகர்களோ, ஐயோ யுத்தம் வரப்போகுதே என வாயிலும் வயித்திலும் அடிச்சுக்கொண்டு மத்தவங்களுக்குப் பீதியேத்துவதில்லை எதிர்வரும் கிறிஸ்துமத்தை கொண்டாட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பல இலட்சம் படைவலு, ஏவுகணைகள் அணு ஆயுதம் விமானம் தாங்கிக்கப்பல்கள் அனைத்தையும் வைத்துக்கொண்டு குத்துதே குடையுதே என அலறுகிறியள். உங்களது சாதாரண மக்களோ நயனதார நாப்கின் கொடுக்கிறா என இடுப்பளவு தண்ணிக்க நிண்டு ஜெயகோ கோசம் போடுகினம். யாழ் குடாநாட்டிலும் ஏனைய தமிழர் பகுதியிலும் அங்கிங்கெண்ணாதபடி உங்களது உளவுத்துறையை இறக்கிவிட்டு அனைவரையும் மிரட்டல் உருட்டல் செய்கிறீர்கள். யாழில் உள்ள யூ ரியூப்பர் உமாகரைனையும் வளைச்சுப்போட்டுள்ளீர்கள். அப்போ புலம்பெயர் தேசங்களிலிருந்து இயங்கும் இணயத்தள ஊடகங்களையும் கண்காணிப்பீர்கள் அதற்காக சில அல்லக்கைகளை நீங்கள் அஞ்சோ பத்தோ கொடுத்து ஏவி விட்டிருப்பீர்கள் யாழ் இணையத்தளத்தில் என்ன சொல்லுறாங்கள் என அறியவும் யாரையாவது ஏவி விட்டிருப்பியள் காரணம் யாழ்கழத்தில் எவரும் வந்து தமது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் அதனால்தான். ஆகவே இங்கு யாழ் கலத்தில் "தழர் விரோத தேசமாகிய" இந்தியாவின் அல்லக்கை எவராவது இருந்தால் உங்களுக்கு எலும்பு எறிகிற எஜமானுக்கு இதைப்போய் சொல்லுங்கோ.
-
துவாரகா உரையாற்றியதாக...
இக்காணொளியில் விடுதலைப்புலிகள் பாவிக்காத ஒரு சொல்லை பலதடவை பாவிச்சிருக்கிறார் அதாவது ஒரே சொல்லை அதுவும் விடுதலைப்புலிகள் தங்கள் உரையில் பாவிக்காத சொல்லைப் பலதடவைகள் பாவித்ததால் துவாரகா என்று சொல்லி உரை நிகழ்த்தும் இவரைப் போட்டியிலிருந்து விலக்குகிறோம். அந்தசொல் என்னவெனில் நாம் என்று தேசியத்தலைவர் பாவிக்கும் சொல்லை நான் எனப் பல இடங்களில் இவர் பாவிக்கிறார் அதாவது தேசியத்தலைவர் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடும் கொள்கை விளக்க உரையை எப்போதும் நான் தெரிவித்துகொள்கிறேன் எனச்சொல்வதில்லை அதாவது "நாம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்றே உரைப்பது வழக்கம். ஆனால் மிகவும் அருவருக்கத்தக்கதும் புலிகளது ஈகத்தை மலினப்படுத்துவதும் தலைவரது குடும்பத்தை இழிவுபடுத்துவதும் தவறு எனச்சொல்லிக்கொண்டு போரில் மரணித்துவிட்ட ஒரு உயிரை கண்டவர்கள் எல்லாம் நக்கல் நையாண்டி செய்ய திட்டமிட்டே நாடகமாடிவிட்டது "தமிழர் விரோததேசமாகிய இந்தியா" இந்தியா நாசமாகிப்போகும் காலம் மிகவிரைவில் வரும். கொசுறாக இந்தியாவின் வேண்டுதலின் பிரகாரம் விடுதலைப்புலிகளது படங்கள் மற்றும் காணொளிகள் அனைத்தையும் தடை செய்து அதனை வெளியிட்டவர்களது கணக்குகளைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைசெய்யும் முறைமையை இப்போது முகப்புத்தகம் தவிர்த்திருக்கிறது. இதன்மூலம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்னுமாப்போல் இந்தியா தனது கபடமுகத்தைத் தோலுரித்துக்காட்டி மிகவும் அசிங்கமாகச் சிரிக்கிறது.
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
கனடாவில விட்ட விளையாட்ட அங்கையும் விட்டிருக்கினம் இனி என்ன ஒரு வெள்ளிக்கிழமை பாங்கு சொன்னவுடன் கோழிச்செவலை கவுணாவத்தையில வெட்டுறமாதிரி வெட்டிப்போடுவாங்கள் இந்தியனுக்கு எங்க போனாலும் கை நமநமக்கும். இங்கையும் இப்படித்தான் ஒரு டெலிபோண் ஒப்பிறேற்றர் கொம்பனிக்கு வந்து உங்கட பில்லுகளது விபரம் தாங்கோ உள்ளுக்குள்ள போறதுக்கு எங்களிடன் அட்மின் இருக்கு உங்கட பில்லை ஒண்டுமில்லாமல் செய்துவிடுகிறம் எண்டு சொல்லி எங்கடையளும் கொடுத்து பிறவிப்பயன் அடைந்ததுKஅல். பிறகு என்ன நடந்ததோ தெரியாது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இப்படியான தாக்குதலுக்கு எங்கட ஊரில உள்ளூரிலேயே தயாரிக்கக்கூடிய சிறிய ரக ட்ரோன் போதுமா அதை வடிவமைக்கவும் முதல் பிரதியை உருவாக்கி சோதனை செய்ய வெற்றியடைந்தபின்பு பல்லாயிரக்கணக்கில் உருவாக்க ஒரு சில சி என் சி மிசினும் கண்ணாடி இழை மூலப்பொருளும் சின்னச்சின்ன இலத்திரனியல் சிப்ஸ்சும் அதனுடன் கொழுத்திப்போட ஒரு ட்ரோனுக்கு ஒரு கிலோ வெடிமருந்தும் அதன் தொழில் நுட்பமும் இருந்தால் ஒரு ஆட்டு ஆட்டலாம் தவிர இதை சரியான திசையில் அனுப்ப எங்களுக்கே உரிய ஒரு ஜி பி எஸ் தொழில் நுட்பமும் தேவை அடுத்த கட்ட யுத்தம் இப்படித்தான் இருக்கும் இலங்கைத்தீவில். காலப்போக்கில் இது சர்வ சாதாரணமாகும்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மரியோபோல் இன்னுமொரு முள்ளிவாய்க்கால் இல்லை காரணம் முள்ளிவாய்க்கால் உலகநாடுகளாலும் அனைத்துலக நிறுவனங்களாலும் இலங்கைத்தீவின் தமிழ் இனத்தைக் கைவிடப்பட்டு அனைத்துத் தப்பும் வழிகளும் மறிக்கப்பட்டு நாம் இப்போது தீர்வுபெற்றுத்தா என எந்த நாடுகளின் காலகளைக் கழுவுறோமோ அதே நாடுகளது ஆதரவுக்கரம் மற்றும் இனாமாகவோ கடனாகவோ நவீன ஆயுதங்கள் கொடுப்பனவுடன் நடாத்தப்படும் உக்ரைன் ரஸ்யா யுத்தத்துடனும் அதனால் ஏற்படும் மனித அவலங்களுடனும் ஒப்பிடமுடியாது. எனினும் மனித அவலம் எங்கு நடப்பினும் அதற்காக எதிர்ப்புக் குரல் கொடுப்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகக் கருத்துக்கூறுவதும் ஆதரிப்பதும் நியாயமானது. ஆனால் ரஸ்யா எந்தவித நிபந்தனையுமின்றி தமிழர் அழிப்பிற்கு உதவியது உக்ரைனும் அதே போலவே தவிர உக்ரைனை ஆதரிக்கும் நாடுகள் அனைத்துமே தமிழர் அழிப்புக்குத் துணைபோனது இவைகளை நான் மனதில் நிற்கும்போது நான் யார்பக்கம் நிற்கவேண்டும் ? யாராவது யாழ்கள நியாயவாஙள் கூறுங்களேன் எனுனும் யுத்தம் கொடியது அதிகாரவர்க்கத்தின் அகோரப்பசிக்கு சாதாரண குஞ்சுகுருமான் உட்பட சிறுகச் சிறுகத்தேடிய தேட்டங்கள் வாழ்விடங்கள் அனைத்தையும் விட்டு அகன்று அகதியாக வேறிடம் செல்வது கொடூரத்திலும் கொடூரம். நான் வாழும் நாட்டில் பேரூர்ந்துச் சாரதியாக வேலைசெய்யும் இலங்கையிலிருந்து அகதியாகவந்து இப்போது தன்னை இந்த நாட்டில் நிலைநிறுத்திய ஒருவர் உக்ரேன் கடவுச்சீட்டுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம் என இந்த அரசாங்கம் அறிவித்தவுடன் எல்லாரும் பஸ்ஸில வந்த் ஏறத்தொடங்கிட்டுதுகள் எனச்சொல்லும்போது தான் யார் எனும் அறுவுகூட இல்லாது வாழும் ஜந்துகள்போல வாழும் இவர்கள்போல் வாழ என்னால் முடியாது. எனது மனம் உக்ரேனில் வாடும் அனைவருக்குமாகப் பிரார்த்திக்கிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
சரி இன்னுமொரு விடையம் கிரிப்டோவில் காசு போட்டால் போட்டது போட்டதுதான் அது யூ எஸ் டி டியில் வரவு வைக்கப்பட்டிருக்கும் அதைக் காசாக்கவேண்டுமானால் யாருக்காவது யூ எஸ் டி ரியை விற்கவேண்டும் அதைவிட ஒரு நல்ல விடையம் இருக்கு Revolut bank கில் ஒரு கணக்கைத் திறந்து அதற்கு நீங்கள் வேண்டிய கரன்சியில் உங்களது USDTயை மாற்றலாம்.பிரச்சனப்பிடவேண்டியதில்லை. அபரா, SHIBA/USDT வை நான் ஆரம்பத்தில் வாங்கி அது 0.00005400 வரை ஏறியது நல்ல காசு பாத்திட்டேன் இப்போ அது இறங்குமுகம். ஆனால் பைனான்ஸ் இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது சீபா இனு ஆறு இல்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால் "bainance" இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது SHIBA/USDT ஆறு மில்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. சரி விடையத்துக்கு வருகிறேன் பைனான்ஸ்சில் இப்போது இலாபமீட்டும் காயின் எனப் பட்டியலிடுவார்கள் அதில் இருபத்து நாலு மணிநேர உயர்வு / தாழ்வு என வரும் அதைக்கவனித்தால் மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம் ஆனால் ஆக அடிமட்டத்திலிருந்து திடீரென உயரும் காயினில் முதலீடு செய்யவேண்டாம். அடிச்சுக்கொண்டு போயிடும். இப்போ NU/USDT எனும் காயின் சிலநேரம் ஏறும்போல இருக்கு ஆனால் அவதானம். TRX/USDT இப்போது ஏறுது விருப்பமானால் வித்துக்காசு பாக்கலாம்
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
கிரிப்டோ கரன்சி எனக்கு நீண்ட நாளாக அறிமுகம் ஆனாலும் சென்ற மாதம்தான் ஒரு 150 யூரோ முதலீடு செய்தேன் ஆரம்பத்தில் 0.0000034 என ஒரு நாணயத்தை வாங்கி காத்திருப்புக்குப் பின்பு 0.00005490 என்னும் அளவுக்குக் கூடியது வித்த வகையில் ஒரு 150 யூரோ இலாபம் அதுக்குப் பின்புதான் பிரச்சனை கண்டதையெல்லாம் வாங்கிப்போட்டால் லாபம் சம்பாதிக்கலாம் என நினைச்சு வாங்கியவிடத்தில் கால்வாசி அடிபட்டுட்டு. பின்பு கொஞ்சம் இலாபம் வந்தது பிற்காயின் விலை அதிகரிக்குது என இருந்த 300 யூரோவை அதில் போட இலாபம் என்பது கண்ணுக்குத் தெரிந்தது ஆனால் கணக்குக்கு வரவில்லை காரணம் 56000 த்தை பிற்காயின் தாண்டியதால எனது பணம் அதுக்குப் புழுதியாகத் தெரிந்தது. பின்பு அதை வித்திட்டு யூ எஸ் டி ரீ ஆக வைத்திருக்கிறேன் எங்காயாவது சந்தர்ப்பம் கிடைத்தால் இறக்கிப்பார்க்கலாம் என. சரி அதைவிடுங்கோ வீ ஆர் ஏ எனும் காயின் வாங்கும்போது அரைமனத்தில வாங்கினேன் இப்போ அது கொங்சம் ஏறி நிற்குது ஒருத்தன் சொல்லுறான் அண்ணை அவசரப்பட்டு விற்காதையுங்கோ இன்னும் ஏறும் என பாப்பம் இன்னுமொரு விடையம் இதில் கூடய அளவு ஈடுபாடு காட்டவேண்டாம் பிறகு கசிணோ விளையாட்டாக மாறிவிடும். முக்கிய தகவல் இன்னுமொருதர் ரோபோ ஒன்றைச் செற் பண்ணிவைத்திருக்கிறார் 5000 யூரோகளை முதலிட்டு, ஒருநாளைக்கு 25 டாலர் தருகுது நீங்கள் ஒப்போ இதலை போடவேண்டாம் இப்பதான் ரோபோவைச் செற்பண்ணிணான் ஒருமாதத்துக்குப் பின்பு சொல்லுறன் இலாபமா நட்டமா என அதுக்கு பிறகு நீங்கள் செற் பண்ணுங்கோ என எதோ சின்ன வீடு செற் பண்ணுமாப்போல் சொல்லுறான் நல்லா வந்தால் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம் என நினைக்கிறன். மீண்டும் சொல்லுறன் ஆயிரம் தடவை யோசிச்சுச் செய்யுங்கோ இது கசிணோ விளையாட்டு மாதிரி இரவு பகலாக நித்திரை கொள்ளவும் விடாது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இப்போ யாரும் பெரிய முதலீட்டில் ஈடுபடவேண்டாம் எவர்கிராண்ட் வீழ்ச்சி கிரிப்டோ மந்தகதியில் போகும். வாரண்ட் பப்பட் கூறியதுபோல் மாதம் குறிப்பிட்ட ஒரு சிறு தொகைய இன்டெக்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் ஒருவருடத்கிற்கு குறிப்பிட்ட ஒரு சில விகிதம் இலாபம் சம்பாதிக்கலாம். ஆனால் எல்லாமே ரிஸ்க்தான்
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
எங்கள் தேசத்தில் எம் ஆளுகைக்குள் இருந்தபோது நாம் புதைகுழிகளில் விதைத்த வீரப்பரம்பரைகளது வித்துடலை வெட்டியெறிந்து வீசியதே சிங்களம் அத்துடன் நாம் இன்னுமொரு விதிசெய்ய முனைந்துள்ளோம், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தினை தமிழின எதிரிகள் இப்படி இடித்தழிக்காதுவிடினே நாம் வியப்புறல்வேண்டும். மீண்டும் காலம் எமக்கு எதிரி யார் நண்பர்கள் யார் என்பதை அடையாளம் காட்டியிக்கின்றது. இதில் வியப்பேதுமில்லை. தமிழகத்தின் அரசியற்களத்திலிருந்து அழித்தொழிக்கப்படவேண்டியது கருனாநிதியும் காங்கிரசும் இல்லை அத்தோடு தன்னையும்தான் என ஜெயலலிதா தானாகவே அடையளம் காட்டியிருக்கிறார். தவிர முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இப்போது தமிழகத்தின் கடைக்கோடிவரை தன்னை அடையாளப்படுத்தியிருக்கின்றது, தஞ்சையில் பெரியகோவில் பார்ப்பதற்கு அடுத்ததாக இதுவே எதிர்காலத்தில் அனைவரது தேர்வாகவும் இருக்கும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முற்றிலுமாக அழிப்பதற்கு தமிழின விரோதிகள் முயல்வதற்குமுன்பு எந்தவித சேதாரமும் இல்லாது அதைப் பெயர்த்தெடுத்து நாம் வாழும் புலம்பெயர்தேசத்தில் எங்காவது நிறுவுவதே நல்ல முயற்சி ஆகும். அவைகள் எமது சொத்துக்கள் அவற்றைக் காப்பது எமது கடன். மேலும் எஜமானர்கள் வீசிய எலும்புத்துண்டுக்காய் இங்கு பல விசுவாச வாலை ஆட்டுகின்றன, விழுங்கிய எலும்புகள் ஜீரணிக்காது பேதியாக்கி வெளியேறும்போது வால்களிலும் ஒட்டிக்கொண்டு, அவை விசுவாச வலாட்டும்போது எமது முகங்களிலும் தெறிக்கின்றன ஆகவே தூர விலகி இருங்கள் இல்லையேல் அசிங்கம் எமக்குத்தான். தேர்தல் காலத்திலும் சில வந்தது பின்பு போனது அதுபோல இவைகளும் வரும் போகும் அதுகளை அதுபாட்டுக்கு விடுங்கோ.
-
தமிழகம் கருத்துக் கணிப்புகளில் முடிவு: அதிமுக கூட்டணி அமோக வெற்றி
அப்போ திருக்குவளை முத்துவேலர் கருனாநிதி அவர்கட்குக் கடைசிகாலத்திலை சென்னை மரீனா கடற்கரையில் இடம்கிடையாது கண்ணம்மாப்பேட்டைதான் என்கிறீர்கள்.