Everything posted by ராசவன்னியன்
-
நேசமணி புகழ்ந்த துபாய் துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்..
நேசமணி புகழ்ந்த துபாய் பஸ் & துபாய் பஸ் ஸ்டாப்.. "காண்ட்ராக்டர் நேசமணி" அவர்கள் துபாயில் வேலை செய்து வெற்றிக் கொடி நாட்டியபோது அவர் துபாய் நகரின் முக்கிய அம்சமான துபாய் பஸ் ஸ்டாப் மற்றும் துபாய் பஸ் பற்றி விளக்கியதை அறிந்து நாமும் தெரிந்துகொள்வோமா..? Let us #Pray_for_Nesamani 😢 யாழ்க்கள உறவு திரு.பாஞ் அவர்கள், துபாய் வந்தபோதும் துபாய் மியூசியம் அருகே இந்த பஸ் நிறுத்தத்தினுள்ளே சென்று சற்றே ஓய்வெடுத்தார். நீங்களும் பாருங்களேன்..!
-
Nesamani: Who is he and why is the world praying for him?
Nesamani: Who is he and why is the world praying for him? பிபிசி யில் வந்துள்ள செய்தி இது.. (இதில் முக்கியமான ட்விட்டை சிவப்பு எழுத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளேன்..! "...இந்தியாவே மோடி அரசை பற்றி பேசிக்கொண்டிருக்கையில், தமிழர்களாகிய நாங்கள் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை, எங்கள் வழி தனி வழி, நேசமணி பற்றி பெருமை கொள்வோம், வாழ்க நேசமணி ..." என பொருள்பட எழுதியிருப்பது மிக அருமை..! தமிழனுக்கென்று ஒரு குணமுண்டு, அவன் தனித்துவமானவன் என்பதை பிற மக்கள் புரிந்திருப்பர்கள்..! ) Who is Nesamani and why is seemingly everyone in the world praying for him on Twitter? Many Indians were left wondering what was going on as #Pray_for_Neasamani and #Nesamani began trending first in India and then across the world. And no-one seemed to know him - apart from those from the southern state of Tamil Nadu who began the trend. Contractor Nesamani is actually a fictional character from a 2001 Tamil film played by an iconic comedian. The "plea" to pray for him is based on a scene from the popular film Friends. In the scene, Nesamani is a building contractor played by actor Vadivelu. He is trying to restore a historic building, but is struggling with his bumbling assistants who insist on taking everything he says literally. Disaster soon strikes. One of them, who is trying to fix a doorway at the top of a staircase, drops his hammer. It lands right on top of Nesamani's head, causing him to (very theatrically) fall down. #Nesamani is still the number one trend in India on Twitter, and also the second trend worldwide. But why is this trending now? According to Sowmya Rajendran, the film and features editor for the south Indian website The News Minute, it all began with a memes page in Pakistan on Wednesday. Someone on the page, called Civil Engineering Learners, posted a picture of a hammer with the question "what is the name of this tool in your country?". This prompted an alert Tamil Facebook user to comment that it was called Suthiyal in his language and then added, without any context whatsoever, that "contractor Nesamani's head was broken... with it". PM Narendra Modi's Tamil Nadu problem Political satire pokes fun at India's 'bizarre democracy' "Another Tamil user who was clearly in on the joke answered 'is he ok now?' and that's where it all began," Ms Rajendran said. Other Tamil users began commenting as well, all making references to the scene from the film. And soon, it took on a life of its own. On Twitter, people began "praying for him" and the memes it seems, wouldn't stop coming. Skip Twitter post by @VijayIsMyLife End of Twitter post by @VijayIsMyLife Skip Twitter post by @arun1208kumar End of Twitter post by @arun1208kumar Nothing was spared. People referenced "hospital bulletins" similar to those issued when prominent state politicians are sick and there were even photoshopped 'tweets' from world leaders. Skip Twitter post by @fredy7321 End of Twitter post by @fredy7321 And everyone wanted in. Politicians piped up, as did senior journalists and stars from the film fraternity. The 'political tone' Many seemed to revel in the fact that no-one in the rest of the country seemed to know what was going on, with many making mocking references to politics. "As you know, Tamil Nadu completely bucked the national trend, voting overwhelmingly in favour of the party that did not ally with (Prime Minister) Narendra Modi's Bharatiya Janata Party (BJP). In Tamil Nadu, people take a lot of pride in their culture - in standing apart and being different. This is also an assertion of identity. The rest of India doesn't understand us - we walk our own path," said Ms Rajendran. Skip Twitter post by @Iamnot46770316 End of Twitter post by @Iamnot46770316 Skip Twitter post by @thulasideva06 End of Twitter post by @thulasideva06 She added that for the people of the state, the film was so familiar, they didn't even have to "think twice" when it became a meme. "Vadivelu is very popular here and Tamil Nadu has a very vibrant meme culture. So his films from the 90s and early 2000s are used a lot in memes - particularly in political commentary," she said. But what does the man himself think? "We asked him that ourselves and several Tamil television channels had reached out to him to ask precisely that. But he isn't on social media and he said he had no idea what was going on," she said. BBC News
-
உண்மையான நேசமணி யார் என தெரியுமா ?
உண்மையான நேசமணி யார் என தெரியுமா ? ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலுவின் நேசமணி கேரக்டர் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், இன்னொரு நேசமணியை பற்றியும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். இன்று தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமாக திகழ்கிறது கன்னியாகுமரி. ஆனால் இந்த கன்னியாகுமரி தமிழகத்தோடு இணைந்தது வெறும் சாதாரணமாக நடைபெறவில்லை. அதற்கு பின் பல போராட்ட சம்பவங்களுக்கு உண்டு. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் விளவங்கோடு வட்டத்தில் கடந்த 1895-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12-ஆம் தேதி பிறந்தவர் நேசமணி. வழக்கறிஞரான இவர் குமரி தந்தை எனவும் மக்களால் அறியப்படுகிறார். குமரி தந்தை என நேசமணி அறியப்படுவதற்கு காரணமும் உண்டு. இந்தியா சுதந்திரம் பெற்றபோது, கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவுடன் இணைந்திருந்தது. ஆனால், அங்குப் பெரும்பாலானோர் தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்தனர். இவர்கள், இம்மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க விரும்பினர். அத்துடன் அங்கு தமிழக மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பான போராட்டங்கள் வெடித்த நிலையில் அதனை முன்நின்று நடத்தியவர்களின் பெரும் பங்கிற்குரியவர் நேசமணி. இதனால்தான் மார்ஷல் நேசமணி என்று அம்மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இதனையடுத்து போராட்டத்தை முன்னெடுத்த நேசமணி உள்ளிட்டோர் 1954-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டமும் வெடித்தது. இதனால் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் நேசமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அதன்பின் நடைபெற்ற பலகட்ட போராட்டங்களுக்கு பின் 1956-ஆம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து 9 தாலுகாக்கள் தமிழகத்துடன் இணைக்ப்பட்டது. இதில் செங்கோட்டை பகுதி மட்டும் நெல்லை மாவட்டத்துடன் இணைந்தது. நேசமணி உள்ளிட்டோரின் போராட்டம் காரணமாகத் தான், தமிழகத்தின் தென் எல்லையாகக் குமரிமாவட்டம் மாறியது. அரசியலில் ஈடுபட்டு எம்எல்ஏ., எம்.பி உள்ளிட்ட பதவிகளையும் வகித்த நேசமணி, தனது 72-வது வயதில் 1968-ஆம் ஆண்டு மறைந்தார். புதிய தலைமுறை பலரும் மறந்துவிட்ட ஒரு தமிழக தலைவரை இந்நேரத்தில் நினைவூட்டியமைக்கு நன்றி..!
-
உலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்!
வடிவேலு சாரால் மட்டுமே இந்த அளவுக்கு ட்ரெண்ட்: #Pray_for_Neasamani ஹேஷ்டேக்கை உருவாக்கியவர் நெகிழ்ச்சி! வடிவேலு சாரால் மட்டுமே இந்த அளவுக்கு ட்ரெண்டாகியுள்ளது என்று #Pray_for_Neasamani ஹேஷ்டேக்கை உருவாக்கிய விக்னேஷ் பிரபாகர் நெகிழ்ந்துள்ளார். நேற்றிரவு (மே 29) #Pray_for_Neasamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட்டாகி வருகின்றன. ஏன் இந்த ஹேஷ்டேக்? என்று பலரும் ஆராயத் தொடங்க, அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது. 'Civil Engineering Learners' என்ற ஃபேஸ்புக் பக்கம், சுத்தியல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 'இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்?' எனப் பதிவிட்டது. மே 27-ம் தேதி இப்பதிவு வெளியானதும், பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அதில், விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதற்குப் பெயர் சுத்தியல். எதன்மீது இதைக்கொண்டு அடித்தாலும் ‘டங் டங்’ என்று சத்தம் வரும். ஜமீன் வீட்டில் பெயின்டிங் ஒப்பந்தக்காரர் நேசமணி தலைமீது, அவரது சொந்தக்காரர் சுத்தியலைப் போட்டுவிட்டார். இதனால் நேசமணி தலை உடைந்துவிட்டது. பாவம்" என்று கருத்திட்டார். உடனே, "அவர் எப்படியிருக்கிறார்?" என மற்றொருவர் கேட்க, "அவர் இப்போது நலம். அவருடைய அணியினர் உடனடியாக அவர்மீது தண்ணீரை ஊற்றி முதலுதவி கொடுத்துவிட்டனர்" என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்காகப் பிராத்திப்போம் என்று ஃபேஸ்புக் பக்கத்தின் கருத்துப் பக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் #Pray_for_Neasamani என்ற ஹேஷ்டேக். துபாயில் இருக்கும் விக்னேஷ் பிரபாகரின் பதிலால் மட்டுமே, இந்த ஹேஷ்டேக் உருவாகி ட்ரெண்டாகத் தொடங்கியது. தனது கருத்தால் உருவான இந்த ஹேஷ்டேக் இப்போது வைரலாகி வருவதால், அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தொடரும் வாழ்த்தால் திக்குமுக்காடிப்போன விக்னேஷ் பிரபாகர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் விக்னேஷ் பிரபாகர், “அனைவருக்கும் வணக்கம். துபாயிலிருந்து விக்னேஷ் பிரபாகர் பேசுறேன். ஒரே ஒரு கமென்ட்டால் இந்தியளவில் ட்ரெண்டான 'நேசமணி' விக்னேஷ் பிரபாகர். நான் என் கமென்ட்டால் இந்த மாதிரி எல்லாம் ட்ரெண்டாகும் என நினைத்துப் பார்க்கவில்லை. விளையாட்டாகப் போட்ட கமென்ட் அது. அதைப் போடும்போது 10, 15 பேர் லைக் பண்ணுவார்கள் என நினைத்தேன். இந்தளவுக்கு ட்ரெண்டாகும் என நினைத்துப் பார்க்கவில்லை. இந்த கமென்ட்டை நண்பர்கள் குரூப்பில் ஷேர் செய்த தீபனுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நேசமணி என்றால் யாரென்றே தெரியாது என்று கமென்ட் செய்துள்ளவர் என் பள்ளி நண்பர்தான். அவனுக்கு, நேசமணி யார்? என்று தெரியும். ஆனால், கமென்ட்டில் தெரியாத மாதிரி கேட்டான். நானும் அவனுக்கு விளக்கமளித்தேன். மற்றபடி திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. ப்ளான் பண்ணியிருந்தால் இந்தளவுக்கு ட்ரெண்டாகியிருக்குமா? என்று சொல்ல முடியாது. எதார்த்தமாகப் பண்ணியது இப்படி நடந்துவிட்டது. சத்தியமாக இந்த மாதிரியாகும் என நினைத்துப் பார்க்கவில்லை. என் ஃபேஸ்புக்கில், என்னை டேக் செய்து நிறைய போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் மொபைலே ஹேங்காகிவிட்டது. ரொம்ப நன்றி. டிவியில் எல்லாம் செய்தியாகப் போட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். இங்கு டிவி இல்லை. எனக்கு மொபைல், ஃபேஸ்புக்தான் பொழுதுபோக்கு. ஊரிலிருந்து ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினர். வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டு இருப்பதாகக் கருதுகிறேன். வடிவேலு சாருக்கு நன்றி. நம் வாழ்க்கையில் எந்தவொரு நிலைமைக்கும், வடிவேலு சாருடைய காட்சி ஒன்று இருக்கும். வெளிநாட்டு ஃபேஸ்புக் பக்கம், அதில் நம் ஆட்கள் நிறைய பேர் இருக்க மாட்டார்கள் என நினைத்தேன். அதில் பலரும் ‘டங் டங்’ என்ற சத்தம் கொண்ட கமென்ட்டைத்தான் விரும்புவார்கள் என நினைத்தேன். நேசமணியை நினைக்கவில்லை. வடிவேலு சாரால் மட்டுமே இந்த அளவுக்கு ட்ரெண்டாகியுள்ளது. எதற்கு இப்படியொரு ட்ரெண்டிங், நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன என்று சொல்வார்கள். போராட வேண்டிய விஷயத்தை விட்டுவிட்டு, இதுக்கு ஏன்? என்று சிலர் மனவருத்தப்படலாம். உங்களுக்காக மறுபடியும் சொல்றேன். இந்தளவுக்கு ட்ரெண்டாகும் என நினைக்கவில்லை. இணையத்தின் வலிமையை ஒருநாளில் தெரிந்து கொண்டேன். ஒரு கமென்ட்டால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வலிமையைக் காண்பித்துவிட்டீர்கள். நன்றி!” என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் பிரபாகர். தமிழ் இந்து
-
உலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்!
உலகளவில் டிரெண்டிங் ஆன வடிவேலு: ‘நேசமணி’க்காக விடிய விடிய பிரார்த்தனை செய்த ரசிகர்கள்! ஒரு சாதாரண ஃபேஸ்புக் பதிவும் அதற்கு அளிக்கப்பட்ட வேடிக்கையான பதிலும் இந்தளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சிவில் என்ஜினியர்ஸ் லேர்னர்ஸ் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் சுத்தியலின் படத்தை வெளியிட்டு, உங்கள் நாட்டில் இதன் பெயர் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழர், இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். எதிலாவது இதை வைத்து அடித்தால் 'டங் டங்' எனச் சத்தம் எழும்பும். ஜமீன் பேலஸில் பெயிண்டிங் காண்டிராக்டர் நேசமணியின் தலை இந்தப் பொருளால் தாக்கப்பட்டது. பாவம் என்று கிண்டலாக ஃப்ரெண்ட்ஸ் படத்தின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியை மையமாக வைத்துப் பதில் அளித்தார். உடனே அவருடைய நண்பர் வெங்கடேஷ், நேசமணி இப்போது நலமாக உள்ளாரா? என்று கேள்வியெழுப்ப.. அவ்வளவுதான் ஒரு பெரிய ‘சம்பவத்தின்’ தொடக்கமாக அந்த உரையாடல் அமைந்தது. இதையடுத்து ட்விட்டரில் இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் பகிரப்பட்டது. உடனே #Pray_for_Neasamani என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் புதிதாக உருவாக்கப்பட்டது. உடனே இதனை வைத்து பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையின்போது பேசப்பட்ட விஷயங்களை நேசமணியுடன் இணைத்து ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிவுகள் வர ஆரம்பித்தன. அப்பல்லோவில் சிகிச்சை பெறும் நேசமணி, இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் என்று எழுதப்பட்ட ட்வீட் அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதனால் ட்விட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #Pray_for_Neasamani, உலகளவில் ஆறாம் இடமும் பிடித்து அசத்தியது. இதனால் ரசிகர்கள் மேலும் உற்சாகமாகித் தொடர்ந்து இதுகுறித்த பதிவுகளை எழுதினார்கள். நேற்றிரவு விடிய விடிய ஆங்கிலத்திலும் தமிழிலும் நேசமணி தொடர்பாகப் பலரும் நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டதால் #Pray_for_Neasamani நீண்ட நேரம் டிரெண்டிங்கில் இருந்தது. ரசிகர்களுடன் இணைந்து செய்தியாளர்கள், ஹர்பஜன் சிங் போன்ற பிரபலங்களும் இதில் இணைந்துகொண்டதால் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்கள் களைகட்டின. கே டிவியில் நேற்றிரவு பஞ்சதந்திரம் படம் ஒளிபரப்பானது. ஃப்ரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு மீது சுத்தியலை வீசிய ரமேஷ் கண்ணாவைப் பஞ்சதந்திரம் படத்துடன் இணைத்து கே டிவியின் ட்விட்டர் கணக்குப் பதிவு வெளியிட்டது. இது அதிக வரவேற்பைப் பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிப்பான் பெயிண்ட் போன்றவையும் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளத் தவறவில்லை. மேலும் ஃப்ரெண்ட்ஸ் படத்தில் சூர்யா இடம்பெற்றதால் என்ஜிகே படக்குழுவும் இதை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்கியது. இப்படி நேற்றிரவு விடிய விடிய நேசமணிக்காக அனைவரும் நகைச்சுவையாகப் பிரார்த்தனை செய்து உலகளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். What conclusions we can draw from this tag #Pray_for_Neasamani : 1.Tamils have a gifted humour sense and creativity,perhaps next to none. 2.The unity of Tamils can make others feel envious of them.Together they can turn whole country's attention to them. 3.Vadivelu is immortal. — George Vijay Addict (@VijayIsMyLife) May 29, 2019 Now even I’m concerned about Nesamani’s health! Hashtag #Pray_for_Neasamani is a real laugh riot! Tamilians you rock! — Rifat Jawaid (@RifatJawaid) May 29, 2019 Hope u have assigned senior reporters to cover the hospital news. Round the clock coverage must. Track his health condition closely. #Pray_for_Neasamani — Karthigaichelvan S (@karthickselvaa) May 29, 2019 When national media wakes up tomorrow. #Pray_for_Neasamani pic.twitter.com/68HHuOXjML — Contractor Manasa Rao (@manasarao) May 29, 2019 My uncle's friend who is a doctor in that hospital says that #Nesamani is doing fine. I have a very strong source in that hospital #Pray_for_Neasamani — Shabbir Ahmed (@Ahmedshabbir20) May 29, 2019 என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani pic.twitter.com/zGfVbwwrGM — Harbhajan Turbanator (@harbhajan_singh) May 30, 2019 Oyyyyooooo #Pray_for_Neasamani Sollitten Kalaila 10 manikku annanukaaga mottai ... 12 manikku mann soru ... Evening thee mithi https://t.co/zD2ghBccCA — T R B Rajaa (@TRBRajaa) May 29, 2019 Will our PM visit the hospital to enquire about the health condition of Contractor Nesamani. Or will he atleast send a tweet #Pray_for_Neasamani is he doing this only cos Nesamani is from TN. What if Nesamani was from Gujarat???? — Saravanan Annadurai (@asaravanan21) May 29, 2019 #Pray_for_Neasamani get well soon Nesamani pic.twitter.com/aGsENbd7AP — Aravind (@aravind_rckz) May 29, 2019 JUST IN: C. R. Saraswathi releases photos of Contractor Neasamani eating Idly after the treatment. #Pray_for_Neasamani pic.twitter.com/Q59rH8VRoI — Alex Livingston (@AlexLivin24) May 29, 2019 Neasamani supporters have signed https://t.co/Ib1HNqhL1C petition to remove suthiyal from Communist party symbol. #Pray_for_Neasamani pic.twitter.com/a5WrEDKzlx — Shilpa Nair (@NairShilpa1308) May 29, 2019 There were three guys always plotting against Neasamani. First, they carried him on the bed while he's sleeping and beat him. Second, one of them deliberately dropped a hammer on his head. Third, they tied his legs with rope and slid him along the ground. #Pray_for_Neasamani pic.twitter.com/yA2QEamXkf — George Vijay Addict (@VijayIsMyLife) May 29, 2019 Follower of Neasamani perform prayers and offering for speedy recovery of his health. #Pray_for_Neasamani pic.twitter.com/7Q1nu0MH08 — Thala Veriyan Sandy (@Sandosh_N) May 29, 2019 நேசமணியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை வெளியிட்டது அப்போலோ மருத்துவமனை...#Pray_for_Neasamani pic.twitter.com/0yMMAORvxS — Thala Veriyan Sandy (@Sandosh_N) May 29, 2019 The man who did this to Contractor Nesamani is hiding in Sardarji Maaruvesham! பஞ்சதந்திரம் now running on #KTV #Pray_for_Neasamani pic.twitter.com/uleYMfFeCY — K TV (@KTVTAMIL) May 29, 2019 The only man who could've saved Contractor Nesamani with his Epic Reaction Time is now in England! #Thala #Yellove #Pray_for_Neasamani PC: @BCCI pic.twitter.com/oJMWWBlCfu — Chennai Super Kings (@ChennaiIPL) May 29, 2019 We so wish Krishnamurthy was as professionally trained as our PRO Store painters to have avoided causing this injury. We wish Neasamani a speedy recovery. #Pray_For_Neasamani Visit our PRO Stores for professional painting services in Chennai, Coimbatore & Trichy. #Nipponpaint pic.twitter.com/hxKF59VXjt — Nippon Paint India (@NipponIndia) May 29, 2019 சம்பவத்தின் பிள்ளையார் சுழி! தினமணி "அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நேசமணி, இட்லி சாப்பிட்டார்": டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக் பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாபாத்திரத்தின் பெயர் நேசமணி. இவர் அந்த படத்தில் காண்டிராக்டராக நடித்திருப்பதால் பிரபலமாக 'காண்டிராக்டர் நேசமணி' என்று அழைக்கப்படுவார். வடிவேலு தற்போது தமிழ்த் திரைப்படங்களில் தலை காட்டாத போதிலும், சமூக வலைதளங்களில் இன்னும் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அரசியல், விளையாட்டு, சினிமா என எந்தவிதமான மீம்ஸ் டெம்பிளேட்கள் என்றாலும் அதில் வடிவேலுவின் ஆதிக்கம் இல்லாமல் இருக்காது. அந்த வரிசையில், தற்போது மீம்ஸ்களைக் காட்டிலும் அடுத்தகட்டமாக டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளார் வடிவேலு. பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரமான 'காண்டிராக்டர் நேசமணி' தற்போது டிரெண்டாகியுள்ளது. பிரெண்ட்ஸ் படத்தில் வரும் ஒரு நகைச்சுவைக் காட்சியில், அவரது தலையில் சுத்தியல் விழும். இதையடுத்து, அந்தக் காட்சியில் அவர் தலை சுற்றி கீழே விழுவார். இதனை அடிப்படையாகக் கொண்டு #Pray for Neasamani (நேசமணிக்காக பிரார்த்திக்கவும்) மற்றும் Neasamani என்ற இரண்டு ஹேஷ்டேக்குகள் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. இதோடு இல்லாமல் நேசமணி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், நேசமணி இட்லி சாப்பிட்டார், நேசமணி நலமாக உள்ளார், நேசமணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்ற வகையிலான டிவீட்களும் இந்த ஹேஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகிறது. இதைப் பார்த்தால் தமிழக மீம் கிரியேட்டர்கள், இதை தேசிய அளவில் இருந்து உலகளவில் டிரெண்டாக்காமல் ஓயமாட்டார்கள் போல் தெரிகிறது. தினமணி
- சென்னையின் முகம்..
- சென்னையின் முகம்..
- கனடாவில் இருந்து இயக்குனர்..!
-
யாரு பார்த்த வேலையப்பு..?
நானும் முதலில் இது சிவாஜிதான் என நினைத்தேன். க்ளோசப்பில் காட்டும்போது முகம் வேறு மாதிரி இருந்ததாலும், 'இப்படி மேடை நடிகராக சிவாஜி வர வாய்ப்பே இல்லை' என்பதாலும் இவர் நகல்தான் என்ற முடிவிற்கு வந்தேன். ஆனால் இவரின் உடல்மொழியும், அசைவும் அச்சொட்டாக சிவாஜியின் நடிப்பை ஒத்தேயிருக்கிறது.
-
கனடாவில் இருந்து இயக்குனர்..!
கனடாவில் இருந்து இயக்குனர்..! பெரும்பாலும் பாரிஸ் லாசப்பல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வெளிவரும் இந்த நகைச்சுவை தொடர்கள் சிலவற்றை நான் பார்த்துள்ளேன். (செல்ப்ஃபி அக்கம் பக்கம், சேம் டூ யூ போன்றவைகள்) சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த நகைச்சுவை காணொளி அருமை..! இதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது. ஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை? வியப்பாக உள்ளது..!
-
யாரு பார்த்த வேலையப்பு..?
யாரு பார்த்த வேலையப்பு..? நகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல.. நம்ப முடியவில்லை..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி..! ஏதோ வேலையாவது செய்யுதே, இங்கே அதுவும் இல்லை..!! கடந்த ஆறு மாதங்களாக யாழின் வரம் கிடைக்குமா, தரிசணம் கிட்டுமா..? என தவமிருக்க வேண்டியுள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தமிழ் தேசியன்.. வாழிய பல்லாண்டு..!- அழ முடியாமல் அடக்கப்பட்ட தமிழ் இனம்..!
அவசியம் பார்க்க வேண்டிய காணொளி..!- மதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..!'
மதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..!' மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள "நெல்லு பேட்டை" என்ற உணவகத்தில் பழைய சோற்று கஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வீட்டில் மிஞ்சிய சோற்றை குப்பையில் கொட்டும் நகர்புற கலச்சாரத்துக்கு மத்தியில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழைய சோறு ஜி.எஸ்.டியுடன் மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது உணவு பழக்கங்கள் மாறிவரும் இந்த நிலையில் மீண்டும் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்கள் நகர தொடங்கி இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறிதான் மதுரை மாட்டுதாவணியில் பழைய சோறு விற்பனை செய்து வருகின்றனர்.பழைய சோற்றில் மோர் கலந்து பச்சைமிளகாயும், வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு சுறு சுறுப்பையும் கொடுத்தது. கால ஓட்டத்துக்கு ஏற்ப உடல் உழைப்பு குறைந்த பணிகளில் ஈடுபடும் படித்தவர்கள் மற்றும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் நகரவாசிகள் இட்லி, தோசை என்றும் வட நாட்டு உணவான புரோட்டா, சப்பாத்தி, பூரி, பானி பூரி என்றும் அன்னிய உணவுகளான பீட்சா, பர்கர், சாண்ட்விட்ஜ் என்றும் திசைமாறினர்.இதனால் பெரும்பாலான வீட்டில் மிச்சமாகும் சாப்பாடு பழைய சோறாகி குப்பைக்கும், ஆடு மாடுகளுக்கும் உணவாக வைக்கப்பட்டு வருகின்றது. கஞ்சிகளையத்தில் பழைய சோறு, தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், வெங்காயம், சீனியரக்காய் வத்தல், ஊறுகாய் என உச்சி வெயிலில் வரும் வாடிக்கையாளரை குளிர வைக்கும் பழைய சோறு காம்போவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை ஜிஎஸ்டி உடன் சேர்த்து50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதனை நம்மவர்கள் ஸ்பூனில் அள்ளி சாப்பிடுவதை காணும் போது, காலச் சக்கரம் வேகமாக சுழல்வதை கண்கூடாக காணமுடிகின்றது. தங்கள் ஓட்டலில் பழைய சோறு விற்பனை செய்யபடுவதாக இணையத்தில் தகவல் பரவியவுடன் ஏராளமான படித்த இளைஞர்கள் பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து ஓட்டலுக்கு தேடி வந்து சாப்பிடுவதாகவும், இன்னும் பலர் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சுமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலாக வாங்கிச்சென்று சாப்பிடுவதாக ஓட்டலின் மேலாளர் பெருமை கொள்கிறார். தொடர்ந்து தன் உணவகத்தை பாரம்பரிய உணவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டைம்ஸ் தமிழ்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1- 90- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி, பூரண நலம் பெற எனது வேண்டுதல்கள்!- சிக்கும் பணம்: மக்கள் கோபம்..!
சிக்கும் பணம்: மக்கள் கோபம் சென்னை: தேர்தலுக்கு, 13 நாட்களே உள்ளன. கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இருக்கின்றன. தேர்தல் கமிஷனும், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.அனைத்தையும் தாண்டி, மக்கள் விவாதிக்கும் விஷயம்: பணம். "உங்க ஏரியாவில் குடுத்துட்டாங்களா...? எந்த கட்சில்லாம் குடுத்திருக்கு...? எவ்வளவு குடுத்தாங்க...? தவணையா, புல்லா...?" எந்த தொகுதியை சுற்றி வந்தாலும், காதில் விழும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.வேலுாரில், பல கோடி சிக்கிய செய்தி பரவியபின், மேற்படி கேள்விகள் வேகம் எடுத்திருக்கின்றன. 'ஓட்டுக்கு பணம் கொடுக்காதே' என்று கட்சிகளையும், 'ஓட்டை விலைக்கு விற்காதே' என்று மக்களையும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கிறது. சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த கோஷங்களை பிரசாரமாக நடத்துகின்றன. பிரபலங்களும், தம் பங்குக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுகின்றனர். ஆனால், பொதுமக்கள் இதையெல்லாம் ரசிக்கவில்லை என்பதுதான் கள எதார்த்தம். காரணம், ஓட்டுக்கு தரப்படும் பணம், 'தங்களுக்கு சொந்தமானது' என்ற எண்ணம், மக்கள் மனதில் இறுகிக் கிடக்கிறது. அரசியல்வாதி நம்மிடம் பல வழிகளில் கொள்ளை அடித்த பணத்தை, நமக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் தான் தேர்தல். அதை தடுப்பது தான் தவறு என்கின்றனர். 'துரைமுருகன் வீட்டில் இத்தனை கோடி சிக்கியிருக்கிறது என்று செய்தி வாசிக்கின்றனர். அவர் என்ன, ஏர் பிடித்து வயலில் உழைத்து சம்பாதித்த பணமா அது? பொதுப்பணித்துறை அமைச்சராக பல ஆண்டுகள் உட்கார்ந்து சேர்த்த பணம் அது. அதில், ஒரு பகுதியை எடுத்து, தன் மகனின் வெற்றிக்காக மக்களுக்கு வினியோகிக்கிறார். அதை நாங்கள் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு,' என்று கேட்கின்றனர், வேலுார் தொகுதி வாக்காளர்கள். 'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் ஜனநாயகம் செத்துப் போகுமே?' என்ற கேள்வி அவர்களுக்கு ஆவேசத்தை உண்டாக்குகிறது. 'ஆளும் கட்சியாக இருந்தால், தலைக்கு, ஆறாயிரம், இரண்டாயிரம் என்று, பேங்க் அக்கவுன்டில் போடுகின்றனர். அது லஞ்சம் இல்லையா? உண்மையிலேயே எங்கள் மீதான அக்கறை என்றால், ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுகளில் இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை? தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பணம் கொடுக்க தோன்றுகிறது என்றால், அது லஞ்சம் அல்லாமல் வேறென்ன? ஆட்சியில் இருப்பவர்கள் பகிரங்கமாக எங்களுக்கு தருவதை, ஆட்சியில் இல்லாதவர்கள் ரகசியமாக தருகின்றனர். அரசாங்கம் கொடுப்பதை வாங்கினால் மட்டும் ஜனநாயகம் செத்துப் போகாதா?' என, கேட்கின்றனர். 'வருமான வரித்துறையின் ரெய்டு நடவடிக்கை, ஒருதலைப்பட்சமானது' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை, அனேகமாக எல்லா தொகுதி வாக்காளர்களும் ஆமோதிக்கின்றனர். 'ஆளும் கட்சியும் பணம் கடத்துது. பெரிய மனுசங்க போற வேன்லயும், கார்லயும் பொட்டிகள் போகுது. எந்த பறக்கும் படையும் அதை மட்டும் தொடுறது இல்ல. எதிர்க்கட்சிகள்னா மட்டும், வீடு தேடி, ரோடு தேடி, 'ரெய்டு' நடத்தி பிடிக்குது. இது ஓரவஞ்சனை இல்லாம வேற என்னவாம்?' என, பெண்களே குரல் உயர்த்தி கேட்கின்றனர். ஆர்.கே., நகர் தேர்தலில் நடந்த கூத்துகளை, அமைச்சரே பட்டுவாடா ஆவணங்களை தூக்கி எறிந்ததை, தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை, பதிவு செய்த வழக்கில் முதல்வரின் பெயரும் இருந்ததை, இன்றுவரை அதற்கெல்லாம் தேர்தல் கமிஷனோ, கோர்ட்டோ, அரசோ முடிவு கட்ட முன்வராததை, தேதி வாரியாக எடுத்து வீசுகின்றனர், கேள்விகளாக. புதிய, ஊடகத்தின் வீச்சு சுரீர் என உறைக்கிறது. 'இந்த நாட்டில், தேர்தல் மூலமாக தேர்ந்து எடுக்கப்படும், ஒரு மக்கள் பிரதிநிதி, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான செலவுக்கணக்கு தாக்கல் செய்து, தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறான் என்று சொன்னவர் யார், தெரியுமா?' என்று ஒரு இளைஞன் கேட்டபோது, சில நொடிகள் திணறித்தான் போனோம். அந்த பொன்மொழியை சொன்னவர், மறைந்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். எல்லா விஷயங்களிலும் எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள் கைகோர்க்கும் ஒரே விஷயம், தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் தான். கட்சிகள் கணக்கு காட்ட வேண்டியது இல்லை; வரி செலுத்த வேண்டியது இல்லை; நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிட வேண்டியது இல்லை; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... என்று அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எந்தக் கட்சியின் அரசு என்ற கேள்வியே எழவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது மாறாது. 'நோய் நாடி நோய் முதல் நாடி...ன்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்கார். 'அஞ்சு வருசம் பதவில இருந்தா சம்பாதிச்சுரலாம்னு தெரிஞ்சுதான ஓட்டுக்கு, நாலாயிரம், அஞ்சாயிரம்னு குடுக்குறாங்க.. அப்படி சம்பாதிக்க முடியாம எல்லா வழியையும் அடச்சிட்டா இப்படி முதலீடு செய்ய மனசு வருமா? அத செய்யாம ஜனங்கள தடுக்கறதும் பயமுறுத்துறதும், வேஸ்ட்,' என, ஓய்வு பெற்ற ஆசிரியர் சுட்டிக்காட்டியதை மறுக்க இயலவில்லை. பொது புத்தியில் மக்கள், பணத்துக்காக ஒரு நியாயத்தைச் சொன்னால், அதை ஏற்க சட்டம் அனுமதிக்காது தான். ஆனால், சட்டத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் அமைப்புகள் மீதுமே நம்பிக்கை குறைந்து வருகிற சூழலில், மக்கள் பேச்சில் உள்ள நியாயத்தை அடியோடு புறக்கணிக்கவும் முடியாது. சமூக பொருளாதார சீர்திருத்தங்களைக் காட்டிலும், அவசரமாக நமக்கு தேவைப்படுவது, தேர்தல் சீர்திருத்தம் என்பதை, அரசியல்வாதிகள் உணர எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் வாக்காளர்கள். தினமலர்- சென்னை மாணவ கண்மணிகள்..
சென்னை மாணவ கண்மணிகள்.. Keep going..- வழியால் ஒரு பறவை.. விரிக்கும் அதன் சிறகை..!
பிரேசில் நாட்டில் ரியோ-டி-ஜெனிரோ நகரத்தின் “சன்டோஸ் டுமொன்ட்” விமான நிலையத்திற்கு வடிவமைக்கபட்ட விமான தரவிறக்க வழி முறையானது(Landing approach) மிகுந்த ஆபத்தானதும், விமானிகளுக்கு மிகுந்த சவால் நிறைந்ததுமாகும். அதே நேரத்தில் விமானம் மலைக்குன்றுகளருகே வட்டமடித்து கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் மீது இறங்கி ஓடுபாதையை அணுகும் முறை கண்கொள்ளா காட்சியாகும். ரசிப்பீர்கள்தானே? சில காணொளிகள்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..- அடி ராக்கம்மா.. கையைத் தட்டு..!
இதே இசைக்குழுவினர் "வீரபாண்டிக் கோட்டையிலே.." பாடலை என்னமாய் இசைக்கருவிகளால் நர்த்தனமாடியிருக்கிறார்களென பாருங்கள்..!- அடி ராக்கம்மா.. கையைத் தட்டு..!
ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம். அப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது. நீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..! - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.