Everything posted by ரசோதரன்
-
முழிக்கும் மொழி
🤣....................... சுவி ஐயாவிடம் பலப்பல அனுபவங்களும் இருக்கின்றன போல..............🤣. நீங்கள் சொல்லியிருக்கும் மூன்று வழிகளும் சிறப்பானவையே............ டன்னிங் க்ரூகர்.........................! ஐடியில் தேவையில்லாத ஆணிகளை கழட்டியும், அடித்தும் கொண்டும் இருக்கின்ற எங்களைப் போன்ற சிலர் கிடைக்கின்ற எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டு இருக்கின்றோம் போல.........🤣. நிறையவே வாசித்திருக்கின்றேன், வில்லவன்......... பாதிப்பும் நிறையவே இருக்கின்றது..............😜.
-
கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
❤️............... அப்படியே வந்தார் என்றால் முதலில் அந்த தடியுடன் நிர்மலா சீதாராமனிடம் கூட்டிப் போகவேண்டும். அந்த அம்மா பாராளுமன்றத்திலேயே அடியும் நுனியும் தெரியாமல் பேசுகின்றார். இணையத் தளங்களில் அடித்து விடப்படும் ஒற்றை வரிகளை பாராளுமன்றத்திலுமா, அதுவும் நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், அடித்து விடுவது...................🫣. அதற்கப்புறம் நிறைய பார்த்தீனியங்களை அவர் சுத்தப்படுத்த வேண்டும்............. இந்தச் சொல் அவரை விட்டுப் போகாது போல...............🤣.
-
பார்த்தீனியம்
👍........... இன்று ஓணாண்டியார் விஷச்செடி என்று ஒரு திரி ஆரம்பித்திருந்தார். அந்த திரியின் தொடர்ச்சி இது............. சீ. பார்த்தீனியம் அ. பார்த்தீனியம் T. பார்த்தீனியம் என்று என்னை/எங்களைச் சுற்றி மூன்று இருக்கின்றன.................🤣.
-
பார்த்தீனியம்
பார்த்தீனியம் பற்றி சிறு வயதில் ஒரு கட்டுரையை எங்கேயோ வாசித்திருந்தேன். இந்தப் பெயரே புதுமையாக இருந்தது, அப்படியே மனதில் அது ஒட்டியும் விட்டது. பின்னர் தான் இந்தச் செடியை/களையை அதன் பெயருடன் சேர்த்து அடையாளம் கண்டுகொண்டேன். இந்த ஆக்கத்தில் இன்றைய உலகில் இருக்கும் சில அரசியல்வாதிகளை பார்த்தீனியங்களாக உருமாற்றி விட்டுள்ளேன்.............
-
பார்த்தீனியம்
பார்த்தீனியம் ---------------------- கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில் பச்சையாக ஒன்று புதிதாக வந்தது பார்க்க அழகாகவும் படபடவென்று வளருதே என்றும் இன்னும் வளர்த்தனர் அதில் இருக்கும் முட்கள் அவை என்ன முட்கள் அவை வளர வளர போய்விடும் என்றனர் அதை வளர்த்தவர்கள் கெட்ட வாடை வருகுதே என்றால் ஆனால் பசுமையாக இருக்குதே இது நிலத்தை காக்கும் ஆடு மாட்டைக் காக்கும் இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர் நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால் அதன் வாடை அண்டாது என்றும் சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர் கள்ளியும் முள்ளும் காணாமல் போனது பச்சை செடியின் சாதனை ஆனது பரந்து வளர்ந்த பச்சை செடி விஷத்தை கொட்டிக் கொட்டி வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து கெட்ட வாடையை பரப்பி சீரழித்துக் கொண்டே இருக்கின்றது இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் இனி கண்களையும் மூட வேண்டியது தான் விஷத்தை முளையிலேயே கிள்ளாமல் எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.
- Parthenium.jpg
-
கண் கண்ட தெய்வம்
🤣................ முன்வரிசைகளில் இருப்பதற்கு மிகத் தெளிவான சில காரணங்களே உண்டு: உயரம் அல்லது முன்னரே ஒதுக்கப்பட்ட இருக்கை, கண் பார்வையின் திறன், எதிலும் கவனமெடுக்கும் ஆர்வம் போன்றன.............. ஆனால் பின்வரிசைகளில் இருப்பதற்கு பின்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை வைத்திருக்கின்றார்கள் போல............
-
முழிக்கும் மொழி
வசதியுள்ளவர்களில் பெரும்பாலானோர் இதையே தான் அங்கு செய்கின்றார்கள். அங்கு சில தனியார் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை பாலர் வகுப்புகளில் சேர்ப்பதற்கே வருடா வருடம் வரிசையில் நிற்பவர்கள் ஏராளமானோர். இந்த விடயத்தில் மொழிக்கொள்கை அங்கு ஒரு பொருட்டே அல்ல.................... ஆனால் இங்கு மதிய உணவு இடைவேளையின் போதும், தேநீர் இடைவேளைகளின் போதும், சந்திப்புகளிலும், அங்கு அரசியல் மேடைகளிலும் மொழிப்பற்றும், மொழி எதிர்ப்பும் அனலாகப் பறக்கும்...............🤣.
-
முழிக்கும் மொழி
ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பினால் கிடைத்த தகவல்கள் மூலம் நேற்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை வாசித்து இருக்கின்றீர்கள் போல, வில்லவன்..............🤣. எங்களின் பிரபஞ்சம் இன்னொரு பெரிய பிரபஞ்சத்தின் ஒரு கருந்துளைக்குள் இருக்கின்றதோ என்று அந்தக் கட்டுரையில் சந்தேகம் எழுப்பியிருந்தார்கள்..........🤨. நீங்கள் சொல்லியிருப்பது போலவே, பல இடங்களிலும் இது ஒரு ஆதிக்க அல்லது அதிகாரப் போட்டியின் ஒரு பக்கமாகவே வெளிப்படுகின்றது. அதிகாரத்தை அடைவதற்கு, அடைந்ததை விஸதரிப்பதற்கு இது ஒரு இலகுவான வழியாகின்றது. மனிதர்களை மிக இலகுவாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் தள்ள மதங்களாலும், மொழிகளாலும், சில அடையாளங்களாலும் முடிகின்றது.
-
கண் கண்ட தெய்வம்
🤣............... அண்ணா, இந்தப் பெரிய அமெரிக்க கிணற்றுக்குள் விழ முன், ஊர் என்னும் குட்டிக் கிணற்றுக்குள் எங்களை விட்டால் ஆளே இல்லை என்று இருந்தோம் என்று சொல்லவந்தேன்................ எங்கள் ஒவ்வொருவரினதும் முதல்நாள் வெளிநாட்டு அனுபவங்களை எழுதித் தொகுத்தால், அது நல்லதொரு முழுநீள நகைச்சுவை நாவலாக வரும்............. என்னுடைய முதல்நாளில், அந்த ஊரில் இருக்கும் ஒரு சின்ன விடுதியில் அறை ஒன்றை எடுத்துக் கொடுத்திருந்தார்கள். அது சரியான குளிர் பிரதேசம். காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. நான் வருவதற்கு சில நாட்கள் பிந்திவிட்டன. காலையில் குளிப்பம் என்று போனால், தண்ணீர் விறைக்கும் குளிரில் வந்தது. அன்று அதுகூட எனக்கு தெரியாது............... ஓடிப்போய் சில வேலைகளை முடித்து, வகுப்புகளுக்கும் போய் விட்டு, அங்கிருந்த உணவு விடுதிக்கு சாப்பிடப் போனால், அவர்களின் மொழியே சுத்தமாக புரியவில்லை....... ஆனாலும் இரண்டு பக்கங்களும் ஆங்கிலமே பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்தன.........🤣. ஒரு கிளாஸ் பாலாவது கொடுங்கள் என்று நான் சொன்னதை தட்டுத்தடுமாறி அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படியே, 'இரண்டு வீதமா, ஒரு வீதமா அல்லது முழுப்பாலா................' என்று கேட்டார்கள்................. ஏற்கனவே இருந்த பசி மயக்கத்தை விட, அந்தப் பால் கேள்வி என்னை அப்படியே சரித்து விழுத்தியது..................🤣.
-
வாழ்ந்து பார்க்க வேண்டும்
இந்த இடத்தில் கண் கலங்கிவிட்டது............... எவ்வளவு தான் நேசமாக, உயிருக்கு உயிராக இருந்து வாழ்ந்தாலும், சில வேளைகளில், சில சந்தர்ப்பங்களில், மனிதர்கள் கையில் இருப்பதையே போட்டு உடைத்து விடுகின்றார்கள்........ சிலது மீண்டும் ஒட்டவே முடியாமல் போகின்றன, அப்படியே கிடைத்த இந்த ஒரேயொரு வாழ்க்கையும் அல்ங்கோலமாகிவிடுகின்றது...............😌.
-
கண் கண்ட தெய்வம்
🤣........... நல்லா சேர்த்து சேர்த்து யோசிக்கின்றீர்கள், அண்ணா..........
-
கண் கண்ட தெய்வம்
🤣......... இதில் கோபிக்க என்ன இருக்கின்றது, அல்வாயன்........... நானே இதைத்தானே சொல்லுகின்றேன்..........
-
கண் கண்ட தெய்வம்
அட ராமா......... எல்லா வகைகளிலும் ஒன்று இன்னொன்றின் பிரதி போலவே தெரிகின்றது.........🤣.
-
கண் கண்ட தெய்வம்
🤣................... சமைக்கும் ஆண்கள், சமையலில் கருத்து சொல்லும் ஆண்களை நான் சூப்பர் சிங்கர் போட்டிகளில் வந்து பாடுபவர்களை பார்ப்பது போன்றே, அதே ஆச்சரியத்துடன் பார்க்கின்றேன்........ இது என்ன திறமை, இவர்களுக்கு மட்டும் இது எப்படி அமைந்தது என்ற அதே ஆச்சரியம்....... உலகத்தில் உள்ள எல்லோரையும் சமையலில் வரிசைப்படுத்தினால், நான் கட்டக் கடைசியில் வருவேன். போட்டியே கிடையாது. என்னளவிற்கு சமையல் பற்றி எதுவுமே தெரியாத ஒருவரை நான் இன்னமும் சந்திக்கவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட என்னை விட சமைப்பார் என்றே நினைக்கின்றேன்................... பெண்களின் கராத்தே என்றவுடன் ஞாபகத்தில் வந்த விடயம் ஒன்று. அப்போது இங்கு நாங்கள் வந்த புதிது. நான் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியும் இங்கே வந்துவிட்டார். என்னுடன் அதே பல்கலையில் இலங்கையில் இருந்து வந்த பெண்மணி ஒருவரும், அவர் ஆங்கிலத்தில் மேற்படிப்பு, படித்துக் கொண்டிருந்தார். தமிழ்ப் பெண்தான். முதலில் அவர் யாரென்று எனக்குத் தெரியாது. வீட்டுக்கும் வருவார். பின்னர் அவர் யாரென்று, அவரின் பின்புலமும் தெரிந்தது. அவர் இலங்கையில் மிகப்பிரபலமான ஒருவர் தான், ஆனால் நான் ஒரு கிணற்றுத் தவளை, என் வீட்டுக்காரி என்னுடன் சேர்ந்த இன்னொரு தவளை. ஒரு நாள் அவர் வீட்டுக்கு வந்து, 'வாங்கோ, கராத்தே வகுப்புக்கு போவோம்........' என்று கேட்டிருக்கின்றார். வீட்டில் வெருண்டு போய்விட்டார்கள். 'இது என்னணை..........' என்று நான் வந்ததும் சொன்னார். எனக்கு ஒரே சிரிப்பு தான்............... பின்னர் அந்தப் பெண் தனியவே கராத்தே வகுப்புகளுக்கு போனார் என்று நினைக்கின்றேன். ஆனால் அது ஒரு காலம்................. இப்ப என் வீட்டுக்காரி ஒரு கராத்தே வகுப்பே நடத்தும் அளவிற்கு முன்னேறிவிட்டார்.................. அந்தப் பெண்மணி இலங்கையில் ஒரு பல்கலையில் ஒரு பேராசிரியராக இருப்பதாக செய்திகளில் பார்த்திருக்கின்றேன். ஆங்கிலத்துடன், கராத்தேயும் கற்றுக் கொடுக்கின்றாரோ தெரியவில்லை............ உண்மையிலேயே மிகவும் துணிந்தவர் அவர்..........👍.
-
கண் கண்ட தெய்வம்
🤣......... அடுப்படி, கோவில் போன்ற இடங்களில் சுதந்திரத்தை உணர்கின்றார்கள் போல............. ஆனால் சமீபத்தில் சுமே அக்காவின் கதை ஒன்றில் வந்தது போல, அடுப்படியிலும் அவர்களின் சுதந்திரத்திற்கு இப்பொழுது தடைகள் வர ஆரம்பித்துவிட்டன.............
-
கண் கண்ட தெய்வம்
நீங்கள் போயிருந்தது இன்னொரு கோவில் என்று நினைக்கின்றேன், விசுகு ஐயா. அந்தக் கோவிலை பின்னர் மிகப் பெரிதாகக் கட்டினார்கள். அங்கு தான் சுற்றுலா வருபவர்கள் போவார்கள். அதே சுவாமி நாராயணன் கோவில் தான். இந்தப் பெரிய கோவில் என் வீட்டிலிருந்து ஒரு அரை மணி தூரத்தில் இருக்கின்றது. இங்கு குஜராத் மக்கள் மிகவும் வசதியானவர்களாக இருப்பதால், இதே கோவிலை பல இடங்களில் அமைத்திருக்கின்றார்கள். மாலிபு கடற்கரையுடன் இன்னொன்று இருக்கின்றது. மேல் கோவில் வெங்கடாசலபதி, கீழே இருக்கும் கோவில் சிவன். 'ஜீன்ஸ்' படத்திலும், வேறு படங்களிலும் இந்தக் கோவில் வந்திருக்கின்றது. இங்கு சுற்றுலா வருபவர்கள் அங்கேயும் போவார்கள். 🤣................ இந்த வழிபாடு எப்படி ஆரம்பாகியது என்பது தான் எப்போதும் தோன்றும் எண்ணம், அண்ணா....... சிவலிங்கம், சிவனைத் தவிர, எதைக் குறிக்கின்றது என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். இது உலகம் முழுவதும் பல நாடுகளில், பல சமூகங்களில் இருந்த ஒரு வழிபாட்டு முறையே. மனிதர்கள் எப்படி இந்தக் குறியீட்டை தெய்வத்தின் வடிவமாக்கினார்கள் என்று தான் தோன்றிக் கொண்டேயிருக்கின்றது..........
-
கண் கண்ட தெய்வம்
வேறு பல நாடுகளில் வரும் பிரச்சனைகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன், நீங்கள் சொல்லியிருப்பதைப் போலவே............... ஆனால் இங்கே லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் நாங்கள் சிலர் மட்டுமே இருந்து கொண்டு, இங்கேயும் அதே பிரச்சனை வந்தது என்னும் போது, முதலில் நம்ப முடியாமல் இருந்தது, பின்னர் கொஞ்சம் அதிர்ச்சி ஆகவும் இருந்தது........😌 இடையில் சில விடயங்களை தவற விட்டிருந்தேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன், வில்லவன். நீங்கள் சொன்ன பின் தான் முடிவிலும் ஒரு நிறைவு இல்லை புரிகின்றது. மனதில் இருந்தது சரியாக வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன். பொதுவாகவே எதையும் எழுத ஆரம்பித்தால் ஒரே மூச்சில் எழுதிவிடுவேன். இதை அவசரம் அவசரமாக எழுதும் போது, எண்ணமும் சொல்லும் வேறு வேறாகிப் போய்விட்டது........ ஐயர் குண்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து, அதை செயற்கை நுண்ணறிவுக்கு சொன்ன நான், முதலில் கதை முழுவதையும் எனக்கு சொல்லியிருக்க வேண்டும்..........🤣. மிக்கநன்றி வில்லவன். உங்களின் ஓவியங்கள், எழுத்து, வாசிப்பு எல்லாமே மிகக் கூர்மையானவை..........❤️.
-
கண் கண்ட தெய்வம்
மிக்கநன்றி அண்ணா. மனிதர்களின் சக்தி அளவற்றது தானே, அண்ணா...............🤣. இங்கு பின்னர் ஒரு இலங்கை தமிழர்களின் கோவிலும் ஆரம்பித்தது. என்னுடைய வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம். என்னுடைய மனைவி அவர் எப்போதும் போகும் பழைய கோவிலுக்கே போய்க் கொண்டிருந்தார். நான் என் வழியில் அவர் பின்னால் போய்க் கொண்டிருந்தேன்.............🤣. நாங்கள் இலங்கை தமிழர்களின் கோவிலுக்கு போவதில்லை என்று ஒரு சமயம் பிரச்சனையை கிளப்பிவிட்டார்கள். முகத்துக்கு நேரே எவரும் எதுவும் சொல்லவில்லை, ஆனாலும் சிலர் ஒன்றாகக் கூடும் போது, தேவைப்பட்டால் இதையும் கதைத்துக் கொண்டார்கள். பின்னர் என்னவோ ஏதோ நடந்து, அவர்கள் இரண்டாக உடைந்தார்கள். இன்னொரு கோவிலை ஆரம்பித்தார்கள். அவர்களின் பூசகர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறினார். இன்னொரு பூசகர் வந்தார். கூட்டம் இரண்டாகியது. ஒரு கூட்டம் மறு கோவிலுக்கு போவதில்லை. இப்பொழுது அந்த இரண்டு கோவில்களும் மூடப்பட்டு விட்டன என்று சொல்கின்றனர். கடவுள்களை உருவாக்கி, பிரித்து, அழிக்கும் மனிதர்களின் சக்தி அளவற்றது தானே...........🤣.
-
சிம்பொனி என்றால் என்ன?
தமிழ் இலக்கிய உலகில் அறவே இல்லை என்று நினைக்கின்றேன். ஆனால் தமிழ்ச் சினிமா உலகில் இப்படி இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்பொழுது இயக்கம் என்று மட்டும் போடும் இயக்குனர்களே கிடையாது................ எழுத்து & இயக்கம் என்று போடுபவர்களே எல்லோரும். இந்த எழுத்து எனப்படும் கதை & திரைக்கதையின் முதல் பிரதியில் உதவி இயக்குனர்களின் பங்கில்லை. வேறு சிலரே மறைவில் இருந்து எழுதிக் கொடுக்கின்றார்கள் போல..............
-
கண் கண்ட தெய்வம்
மிக்கநன்றி ஓணாண்டியார்................ நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே. இந்த மாற்றங்களை பதிவு செய்தே ஆகவேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். அத்துடன் இந்த வாரம் யாழில் ஒன்றும் எழுதவில்லையே என்பதும், தனிப்பட்டவகையில், எனக்கு ஒரு குறையாக இருந்தது. அவசர அவசரமாக மிகவும் சுருக்கி எழுதிவிட்டேன் என்று பின்னர் புரிந்தது......... எங்கேயும் பின்னுக்கு இருக்கும் போது கொஞ்சம் ஒட்டாத தன்மை ஒன்று, விலகி நின்று பார்க்கும் போக்கு ஒன்றும் இருக்கின்றது போல என்று நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்........... சரியாகத் தெரியவில்லை, ஆனால் பிடித்திருக்கின்றது...............🤣.
-
சிம்பொனி என்றால் என்ன?
🤣................ சாரு இந்த வாரம் இன்னோரு கட்டுரையில் கிட்டத்தட்ட இப்படி எழுதியிருந்தார்: என்னுடைய 75 புத்தகங்கள் இப்பொழுது விற்பனையில் இருக்கின்றது. விற்பனையின் மூலம் எனது பங்காக வருடத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் கொஞ்சம் அதிகமாக வருகின்றது. மாத வருமானம் பத்தாயிரம் ரூபாய் சொச்சம். இதை வைத்துக்கொண்டு நான் சென்னையில் எப்படி வாழ்வது....................... நான் இந்தச் சமூகத்திற்காகத்தானே என்னை வருத்தி எழுதிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் தான் என்னைப் பார்க்கவேண்டும்..................தெருமுனையில் இஸ்திரி போடுபவரே மாதம் இருபதினாயிரத்தை விட அதிகமாக பெறுகின்றார். இந்த விடயத்தில் சாருவில் அன்றிலிருந்து இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை. தமிழில் முழுநேர எழுத்தாளராக வாழவே முடியாது, விதிவிலக்கு ஜெயமோகன் போன்ற ஓரிருவர், அதுவும் விட்டுக் கொடுப்புடன் சினிமாவில் பணியாற்றுவதால்........ தமிழில் இலக்கியம் எழுதி சம்பாதிக்கவே முடியாது....... முடிந்தால் இலவசமாக எழுதுவதே உள்ளவற்றில் நல்ல தெரிவு.................🤣.
-
சிம்பொனி என்றால் என்ன?
எழுத்தாளர் சாரு இந்த வாரம் இந்த நிகழ்வு பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். இளையராஜாவின் மீதான சாருவின் பார்வை முன்னரே தெரிந்தவர்களுக்கு 'இசையும் சமூகமும்' என்னும் கட்டுரையால் அதிர்ச்சி ஏதும் ஏற்படாது. அவரின் தளத்தில் பல கட்டுரைகள் இதே பார்வையுடன் இருக்கின்றன. 'ஸிம்ஃபனி' என்னும் கட்டுரை மிகச் சிறியது, ஆனால் முக்கியமானது. லிடியன் நாதஸ்வரம் என்ற 20 வயதுகள் ஆன தமிழ் இளைஞர், இசைக் கலைஞர் அடுத்த வருடம் சர்வதேச இசை நாள் அன்று தான் ஒரு ஸிம்ஃபனி அரங்கேற்றப் போவதாகச் சொல்லியிருக்கின்றார். இணையத்தில் போய்க் கொண்டிருக்கும் லிடியன் - இளையராஜா உரசல்களின் பின்னணி இதுவே. இசையும் சமூகமும்: https://charuonline.com/blog/?p=15463 ஸிம்ஃபனி: https://charuonline.com/blog/?p=15461
-
கண் கண்ட தெய்வம்
இந்த வாரம் சுய ஆக்கங்கள் பகுதியில் எதுவும் எழுதவில்லையே என்று அவரசரமாக எழுதிப் போட்டதில், இதே கதையில் பதியப்பட்டிருக்க வேண்டிய ஒரு முக்கிய விடயத்தை எழுத மறந்துவிட்டேன். பின்னர் இதே கதையை எப்போதாவது விரித்து எழுதினால், அப்போது அதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இங்கு ஆரம்பிக்கப்பட்ட கோவில்கள் ஆரம்பத்தில் எவ்வாறு ஒரு சமூக நீதியுள்ள கோவில்களாக இருந்தன என்றும், பின்னர் காலப்போக்கில், மக்கள் திரள் அதிகம் ஆக ஆக, அதே கோவில்கள் ஒரு பிரிவினரால் எப்படி கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் எங்காவது பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தக் கதை அதற்கு மிகவும் பொருத்தமான இடம். இவ்வாறான கோவில்களில் ஏற்பட்ட அதிகார மாற்றத்தால் நடந்த சில சம்பவங்கள் முன்பு ஊரில் நடந்தவற்றுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவை..................🫣.
-
தூத்துகுடி கொத்தனாரு….
இதே போன்ற முயற்சிகளில் இந்த துறையில் இப்பொழுது தான் பிரபலமானாலும், இலக்கிய உலகில் இது போல காலத்துக்கு காலம் நடந்து கொண்டேயிருக்கின்றது.சில ஈழப் பின்புலம் உள்ள எழுத்தாளர்கள் உட்பட சிலர் மிகவும் வெளிப்படையாகவும், பல இடங்களில் வேண்டும் என்றே திணித்து எழுதுவது போன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சொற்களும், விவரணைகளும் இருந்தாலே அது ஒரு உச்சமான இலக்கியம் என்றும் ஒவ்வொரு காலத்திலும் ஒரு பிரிவினரால் கருதப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் வெறும் வார்த்தை ஜாலங்கள், அது எந்த வகை என்றாலும், டி ராஜேந்தர் வகை என்றாலும், அராத்து வகை என்றாலும், தூத்துக்குடி கொத்தனார் வகை என்றாலும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடும். ஒரு உடனடி மனக் கிளர்ச்சியை மட்டுமே கொடுக்கும் எந்த படைப்பும் நீண்ட காலம் தங்கி நிற்பதும் இல்லை. ஒரு மனிதனின் அடிமனதில் போய் தங்கி நிற்பதுக்கு எதுவும் இல்லாத எந்த வகையான படைப்பும் மறைந்து விடும் என்பதே என் அனுபவம்.