Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. 🤣................. ஏதேதோ வெளியிடுகின்றார்கள், இதை மட்டும் வெளியே விடுகின்றார்கள் இல்லை........😜. அதிபர் ட்ரம்ப் இவ்வளவு ஆதரவாக இருந்துமே, சேற்றில் ஒரு கால், சகதிக்குள் ஒரு கால் என்று ரஷ்யாவும், அதிபர் புடினும் இழுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்............. உக்ரேன் மக்களின் வீரம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று......................👍.
  2. இன்றைய செய்தியை பார்த்தீர்களா, வசீ................. அமெரிக்கா உக்ரேனின் நிலப்பகுதிகளை தங்களுக்கு கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருப்பதாக ரஷ்ய தரப்பிலிருந்து சொல்லுகின்றார்கள்..................🫢. நாங்கள் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை பாடசாலைகளில் எங்களுக்கு பிஸ்கட் கொடுத்தார்கள். அது அமெரிக்கா கொடுத்த பிஸ்கட்டே............... அப்படி ஏதோ பெட்டிக்குள்ளிருந்து பிஸ்கட் எடுத்துக் கொடுப்பது போலவே இந்தச் செய்திகளும் இருக்கின்றன................. ஆனால் அவர்கள் இருவரும் மாறி மாறி ட்ரோன்களை விட்டு, இரண்டு நாடுகளையும் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்............ நேற்று ஒரு நீர்மூழ்கி போய்விட்டதா.............🫣.
  3. 🤣................... அவர்களே எஸ்ஐஆரின் பின்னே கோடிக் கணக்கிலோ அல்லது பல லட்சங்கள் கணக்கிலோ வாக்காளர்கள் காணாமல் போய் விட்டார்கள் என்று அவசரமாகத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குப் பிறகு விஜய்யின் ஈரோடு கூட்டம், அடுத்த கட்டம் என்று அவர்கள் எல்லோருமே படு பிசி............... திருவண்ணாமலை தூண் சமணர் தூணா அல்லது ஒரு அளவையாளார் வைத்த தூணா அல்லது தொல்பொருளா என்றே தெரியாமல் குழம்பிப் போய், அவர்கள் ஒருவருடன் ஒருவர் மல்லுக்கட்டிக் கொண்டும் நிற்கின்றார்கள்.......... இதை விட பெரிய பிரச்சனை காங்கிரஸ் 60 சீட் கேட்பதும், பாஜக அதற்கு மேலே கேட்பதும்.................. வெறுமனே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால் மட்டும் போதாது...........அப்பப்ப ஆக்சனிலும் இறங்க வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் போல ஒரு நிபுணர் சொல்லியிருப்பாரோ..............🤣.
  4. மருதங்கேணியாரே, ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எல்லாம் ஏலவே தெரியும் என்கின்றீர்கள்.............. கொஞ்சம் கீழே வந்தால் சின்னப் புள்ளைக்கும் தெரியும் என்கின்றீர்கள்................ அப்படி என்ன தான் இவர்களுக்கு தெரியுது என்று எங்களுக்குத் தான் மூன்று வருடங்களாகத் தெரியவில்லை................🤣. கிரீமியா எல்லாம் எப்பவோ முடிந்த கதை............ இப்ப டான்பாஸ்............... ரஷ்ய பாஸ் நாங்கள் சொல்லியா கேட்கப் போகின்றார்.............. கெடு குடி சொற் கேளாது............ எப்படி இருந்த ரஷ்யா இப்படி ஆயிட்டுதே என்று போய்க் கொண்டிருக்க வேண்டியது தான்.................
  5. தலை முழுவதும் வெற்றுப் பெருமிதத்தை நிரப்பிக் கொண்டு வாழும் ஒரு மனப்பிறழ்வே இது, வில்லவன்.............. தலைவர் இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிவார் என்று தான் இருந்தோம். அவர்களுக்கு இருந்த இமாலயப் பணிகளை முடித்துக் கொண்டு பின்னர் இதைப் பார்ப்போம் என்று இருந்திருப்பார் போல.................. இனி ஒவ்வொரு தலைமுறையும் இந்த விடயத்தில் சில அடிகளாவது முன்னோக்கி போனார்கள் என்றால் கூட பரவாயில்லை........................
  6. வில்லவன், மலையக தமிழ் மக்களின் நன்மைக்கும், பாதுகாப்பிற்கும், எதிர்காலத்துக்குமாக, மலையக மக்களின் சுயவிருப்புடன் அவர்கள் வடக்கு கிழக்கில் குடியேற்றப்பட்டு, கௌரவத்துடன் நடத்தப்படுவார்கள் என்றால், அதைவிட நல்லதொரு விடயம் இருக்கமுடியாது. ஆனால் எனக்கு எம் மக்கள் மீது நம்பிக்கை இல்லை. எம் மக்களின் சில பிடிவாதங்கள், கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் என்பன மனிதர்களை அவர்களின் பிறப்புகளினால் வரும் அடையாளங்களை வைத்து வகைப்படுத்துகின்றன. ஒரு மனிதன் ஒடுக்கப்படுகின்றான் என்பது கண்ணீரை வரவழைக்கின்றது. மார்த்தாண்டம் என்னும் ஊர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா என்று தெரியாது. கன்யாகுமரி மாவட்டத்தில் உள்ளது. உலகிலேயே மிகவும் கறுப்பு என்றால் மார்த்தாண்டக் கறுப்பு என்று சொல்வார்கள். அங்கிருந்து ஒரு பையன் இங்கு வேலை செய்ய வந்தான். டாடா கன்சல்டிங். மிகப் பெரிய விசயம். அந்தச் சமூகத்திலிருந்து அப்படி ஒரு பையன் இங்கு வருவது நினைத்துப் பார்க்கவே முடியாத ஒன்று. அதுவும் டாடா கன்சல்டிங் போன்ற நிறுவனங்களில் இருந்து வருவது. ஆனாலும் அவனை இங்கிருந்த தமிழ்நாட்டவர்கள் முற்றாகவே, வெளிப்படையாகவே ஒதுக்கினார்கள். வேலையில் என்னை மீறி அந்தப் பையனை அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இது தமிழ்நாட்டு மக்கள், ஆனால் நாங்கள் வேறு என்று நாங்கள் நினைக்கக்கூடும். இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்களும் இவ்வாறானவர்களே. இது தான் என்னுடைய பயம். என்னுடைய வேறு பல சொந்த அனுபவங்களும் உள்ளன. சிலவற்றை நான் எழுதினாலும், அப்படி நடந்திருக்கும் என்று பலர் நம்பப் போவதில்லை. ஆனாலும் இந்த விடயம் அடங்கிய பின், கதைகளாக எழுதுவதாக உள்ளேன். இவ்வகையான சமூக புறக்கணிப்புகள் இருக்காது என்றால், அந்த மக்கள் இந்தக் குடியேற்றத்தை விரும்புகின்றார்கள் என்றால், இதை வரவேற்கும் முதல் ஆட்களில் ஒருவனாக, உங்களைப் போலவே நானும் இருப்பேன். இது நான் இங்கு இணைந்தவுடன் எழுதிய ஆக்கங்களில் ஒன்று. சொந்த அனுபவமே.
  7. பிந்தி வந்த செய்திகள் அதிபர் ட்ரம்ப் 'பிளாட்டினம் பாதுகாப்பு உத்தரவாதம்' ஒன்றை உக்ரேனுக்கு வழங்கவுள்ளார் என்று சொல்கின்றன. இந்த திட்டத்தை அவர் அமெரிக்க காங்கிரஸின் முன் கொண்டு செல்லப் போகின்றார் என்றும் செய்தியில் இருக்கின்றது. ஆனால் இந்த உடன்படிக்கை முழுவதையும் ரஷ்ய அதிபர் புடின் முற்றாக நிராகரிக்கப் போகின்றார். அவர் எந்த உடன்படிக்கையையுமே நிராகரிப்பார், ஆனால் இது என்ன உடன்படிக்கை............ ரஷ்ய அதிபரைப் பார்த்தால் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும், உக்ரேனுக்கும் ஒரு கோமாளியாகத் தெரிகின்றாரா...................... மூன்று வருட சண்டைக்கு பலனாக ஒரு கொஞ்சமாவது ரஷ்யாவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டாமா.................
  8. மலையக தமிழ் மக்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதற்கான பிரதான காரணமாகவும், பெரு விருப்பமாகவும் நாங்கள் சொல்லும் காரணம் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் மிகவும் சரிந்து இருக்கும் சனத்தொகையையும், தமிழ் மக்களின் சனப் பரம்பலையும் அதிகரிக்கலாம் என்பதே. அதன் மூலம் எங்களின் நிலத்தையும், இருப்பையும், அரசியல் பலத்தையும் தக்கவைத்துக் கொள்ளலாம் என்பதே இதன் பின்னால் இருக்கும் நோக்கம். இவ்வாறு குடியேற்றப்படும் மலையக தமிழ் மக்களின் நிலை என்னவாகும் என்றே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். மலையக மக்கள் இதை விரும்புகின்றார்களா என்ற இன்னொரு பிரதான கேள்வியும் இருக்கின்றது. இந்த மக்கள் குடியேற்றப்படும் அல்லது குடியேறும் இடங்களில் அங்கு ஏற்கனவே இருக்கும் சமூகங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதே நிஜம். மூன்று தலைமுறைகளாக அவர்கள் புதிய ஒரு இடத்தில் இருந்தாலும், அங்கு அவர்கள் சமனான மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை. பறை என்னும் இசை பற்றி சமீப காலங்களில் நிறையவே உரையாடப்படுகின்றன. தமிழர்களின் ஆதி இசைகளில் இதுவும் ஒன்று என்கின்றோம். கொண்டாடப்பட வேண்டும் என்கின்றோம். பறையும், இசையும், அந்த மனிதர்கள் பற்றியும் சினிமாக்கள், கதைகள் கூட வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 50 வருடங்களாக, போராட்ட காலம் உட்பட, இந்த பறை வாசிப்பவர்கள் கோவிலுக்கு வெளியே அதே இடத்திலேயே நின்று வாசிக்கின்றார்கள் என்று நாம் சொல்லத் தவறுகின்றோம். கோவில்களில் ஒரு தவில் அல்லது நாதஸ்வரக் கலைஞக்கும், ஒரு பறையை வாசிப்பவருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் வேறுபாடுகளை நாம் காணத் தவறுகின்றோம். இந்த வேறுபாடுகளின் பின்னால் இருப்பது சமூகக் காரணிகளே. அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், நிற்கும் தோரணை, பார்க்கும் பார்வை இப்படி எல்லாமே வேறுபட்டவை. குடியேற்றப்பட்டால் இதுவே தான் மலையக தமிழ் மக்களுக்கும் ஆகும். ஆங்கிலேயர்கள் அவர்களின் தேவைக்காக இலங்கை, மலேசியா, பிஜி, கரீபியன், பர்மா என்று உலகெங்கும் தொழிலார்களாக இந்த மக்களை குடியேற்றினார்கள். பின்னர் கைவிட்டார்கள். இவர்கள் குடியேறிய எந்த தேசத்தில் வளமாக இருக்கின்றார்கள். இலங்கையில் தான் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உண்மையே. பிஜியில் அரச அதிகாரம் கிடைத்தது, இந்த மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த ஒரே காரணத்தால். அதுவும் பிஜியின் மற்றைய சமூகத்தால் ஒரு இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்டது. மற்றபடி அங்கும் இந்த மக்கள் ஒரு வளமான வாழ்வை வாழவில்லை. ஆங்கிலேயர்கள் தங்களின் நோக்கத்துக்காக பெரும் சுயநலத்துடன் இந்த மக்களை குடியேற்றியது போலவே, நாங்களும் இந்த மக்களை இன்று மீண்டும் குடியேற்ற நினைக்கின்றோம் அல்லவா. மலையக மக்களுக்கு முதலில் தேவையானது அவர்கள் வாழும் இடத்திலேயே சொந்த வீடும், அதனுடன் சேர்ந்த சிறிய நிலமும். அவர்கள் வளமாவதுஅங்கிருந்தே ஆரம்பிக்கும். அடுத்ததாக உயர் கல்வி அல்லது முறையான தொழில் பயிற்சிகள். மலையக, கொழும்பு, வட கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் இந்த திசையில் நகர்வது தான் மலையக மக்களுக்கு நிரந்தரமான, கௌரவமான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொடுக்கும். அந்த நாட்களில் ஊரில் பீட்டர் அம்மா என்று நாங்கள் கூப்பிடும் ஒருவர் ஒரு சின்னக்கடை வைத்திருந்தார். பாண் பணிஸ் போன்றன விற்பார். வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில், வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் அவரின் கடை இருந்தது. எனக்கு அவர் அடிக்கடி பணிஸ் கொடுப்பார். அது நான் அவருக்கு செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி, வேறு சில வேளைகளில் அது ஒரு பண்டமாற்று. கதையாகவே எழுதலாம். என்னையே ஒரு பணிஸை எடு என்று சொல்லிவிடுவார். எல்லா பணிஸும் ஒரே மாதிரியாகவே இருக்கும். அதைப் போலவே தான் இந்த தமிழ் அரசியல்வாதிகள், எல்லோரும் ஒன்றே. 'பணிஸ் அரசியல்வாதிகள்..........'................
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் @நிழலி !
  10. அண்ணா, பிரதேசவாதமும், பிரதேச மேட்டிமைவாதமும் வேறுபட்டவை. உலகெங்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கென்ற சில அடையாளங்களுடனேயே வாழ்கின்றார்கள். அது இனம், மொழி,மதம், பிரதேசம் என்று பல வகைகளில் இருக்கலாம். குலம், கோத்திரம் என்று கூட இந்த அடையாளங்கள் இருப்பதுண்டு. தங்களின் அடையாளங்களுக்கு விசுவாசமாகவும், தங்களின் அடையாளங்களை முன்னிறுத்தியும் மனிதர்கள் வாழத் தலைப்படுகின்றார்கள். ஆனால் தங்களை நிகர்த்த அடையாளங்கள் இல்லாதவர்கள் கீழானவர்கள், இழிவானவர்கள், திறமையற்றவர்கள், வீரம் அற்றவர்கள் என்பது போன்ற ஒப்பீடுகளும், கணிப்புகளும் மேட்டிமைவாதம் என்னும் வகையிலேயே வருகின்றது. பிறப்பினாலேயே தங்களை மேலானவர்கள் என்று நினைத்துக் கொள்வது மட்டும் இல்லாமல், அப்படியே நடந்து கொள்வதும் மேட்டுமைவாதமே. இந்த பிரதேச மேட்டுமைவாதமே இலங்கையில் சில பிரதேச மக்களிடம் இருக்கின்றன என்று தான் நான் சொல்ல முயன்றிருந்தேன். உதாரணம்: யாழ்ப்பாண தமிழ் மக்கள், கண்டி சிங்கள மக்கள். இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் வெளிப்படுத்தும் மேட்டுமைவாதத்தை இலங்கையில் வேறு எவரும் வெளிப்படுத்துவதில்லை என்பதே என் அனுபவம். பிறப்பினாலேயே ஒருவர் சிறந்தவர் ஆகி விடுகின்றார் என்றால், இங்கே எதற்குமே பொருள் இல்லை என்று ஆகிவிடுகின்றது அல்லவா.
  11. இது ஒரு நல்ல முயற்சி இல்லை என்றே எனக்குத் தோன்றுகின்றது. அரசை நிர்ப்பந்திப்பதற்கான ஒரு வெறும் பேச்சாக இது இருக்கலாம், ஆனால் இது நடைமுறையில் மலையக தமிழ் மக்களை பல தசாப்தங்கள் பின்னுக்கு தள்ளி விடும் ஒரு நிகழ்வகாவே இருக்கும். 1970ம் மற்றும் 80 ஆண்டுகளில் என்னுடைய ஊரில் குடியேற்ற்றத் திட்டம் என்னும் ஒரு சிறிய இடம் இருந்தது. இது ஊரின் சுடலையின் முன்னே இருந்தது. பருத்தித்துறை - வல்வெட்டித்துறை வீதியின் ஒரு பக்கம் சுடலையும், மறுபக்கம் இந்த குடியேற்றத் திட்டமும் இருந்தன. அங்கு இந்த மலையக மக்களே குடும்பங்களாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் எல்லோரும் நகரசபையில் சுத்திகரிப்பு பணியாளர்களாக வேலை செய்தனர். வெறும் கைகளாலும், கைகளால் தள்ளும் வண்டில்களும் கொண்டு அவர்கள் தங்கள் வேலைகளைச் செய்தனர். மனிதக் கழிவுகளை கூட அவர்களே அள்ளினார்கள்...........😭😭. அவர்களை நான் வேறு எங்கும், எந்த நிகழ்வுகளிலும் கண்டது இல்லை. அவர்களின் பிள்ளைகள் எங்களுடன் பாடசாலையில் படித்தார்களா என்றும் எனக்கு தெரியவில்லை. கோவில்களுக்குள் நிச்சயம் விட்டிருக்கமாட்டார்கள். யாழ்ப்பாண மக்கள் வறட்டுத்தனமான கௌரவம் மிகவும் அதிகமாக உள்ள சமூகங்களில் ஒன்று. இதை நான் ஊரில் இருந்த நாட்களில் என் வீட்டிலேயே பார்த்திருக்கின்றேன். யாழ்ப்பாண மக்கள் வேறு எவரையும் ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது நான் ஊருக்கு போகும் போதெல்லாம் அந்த குடியேற்ற திட்டம் இருந்த இடத்திற்கு ஒரு தடவையாவது போகின்றேன். அங்கு எவரும் இல்லை. பாழடைந்து போய்விட்டது. ஆனாலும் அங்கே யாரையோ தேடுகின்றேன். இலங்கையிலிருந்து சாஸ்திரி - பண்டா ஒப்பந்தத்தின் பின் தமிழ்நாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிலையும் தமிழ்நாட்டில் இதுவேதான். அங்கும் அவர்களை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. விளிம்பு நிலை மக்களாக, பட்டியலின மக்களாகவே அவர்கள் இன்றும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மலையகப் பூமியே மலையக தமிழ் மக்களுக்கு சுயமரியாதையையும், கௌரவத்தையும் கொடுக்கும். மலையகத்தை கட்டி எழுப்ப வேண்டியது அரசினது கடமையே. அதை இனியாயினும் செய்ய முன்வந்தார்கள் என்றால் அதுவே மலையக மக்களுக்கான சரியான ஒரு தீர்வாக இருக்கும். ஆனால் இலங்கையின் வடக்கும், கிழக்கும் குடிசனப் பரம்பல் மிகக் குறைந்த இடங்களாக வந்துவிட்டன. வவுனியாவின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வரப் போகும் சிங்கள மக்களை எதுவும் தடுக்கப் போவதில்லை.
  12. நண்பன் இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம் என்று தான் விரும்புகின்றேன், கவிஞரே. அது சாத்தியமும் கூட. ஏராளமானோர் இதே குறைபாட்டுடன் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இதை ஒரு நோய் என்று சொல்லாமல், குறைபாடு என்றே சொல்கின்றார்கள். அசட்டுத்தனமாக அவசரப்பட்டு கேட்கும், வாசிக்கும், பார்க்கும் எல்லாவற்றையும் அவன் அப்படியே நம்பி விடாமல் இருந்திருக்கலாம். 'உணவே மருந்து............' என்பது ஆரோக்கியமாக இருக்கும் நாட்களுக்கு பொருந்தும். நோயோ அல்லது குறைபாடு ஒன்றோ வந்துவிட்டால், சரியான சிகிச்சை மிக அவசியம் என்றே நான் நினைக்கின்றேன்..............🙏.
  13. இப்படியான விளக்கங்கள் தான் இணையத்தில் கிடைக்கின்றன: ஒரு கறுப்பு மனிதன் தனது தோலின் நிறத்தை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது. இதைப் போலவே, எருசலேமே, நீயும் உன்னை மாற்றி நன்மை செய்ய முடியாது. நீ எப்போதும் தீமையே செய்கிறாய். எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 13:23
  14. 👍........... இந்தச் சிக்கல் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, தொடர் கவனத்துடன் நன்றாகவே நீண்ட காலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், ஏராளன். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற அணுகுமுறை மருத்துவத்திற்கு பொருந்தாது...................
  15. அமர்த்தியா சென் அவர்களின் ஐந்து புத்தகங்களை வாசித்து விட்டு தான் கருத்து எழுதுவது என்று நான் நினைத்திருக்க, ஆறாவதாக விவிலியத்தையும் வாசி என்று சொல்லி விட்டீர்களே, வாலி...........................🤣.
  16. அதுவே கிருபன்................. முழுச் சமூகமுமே மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய விடயங்களில் மருத்துவம் முதன்மையான ஒன்று.
  17. அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் தென் பகுதிகளில் சில வாழைத் தோட்டங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன், அண்ணா. கலிஃபோர்னியாவின் தென் பகுதிகளிலும் வாழை நன்றாகவே வருகின்றது. என்னுடைய வீட்டில் வாழைகள் குட்டிகளும், குலைகளுமாக வருடம் முழுவதும் நிற்கின்றன. ஆனால் இங்கு கலிஃபோர்னியாவில் வாழைகளை தோட்டங்களாக நான் பார்த்ததில்லை. அமெரிக்காவின் வாழைத் தோட்டம் தான் தென் அமெரிக்கா. அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்க நாடுகளில் காடுகளை எரித்து வாழைத் தோட்டங்களை அமைத்து, அந்த நாடுகளைச் சூறையாடினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. உலகில் வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுபவர்கள் ஜேர்மனியர்களே என்றும் ஞாபகம். அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்காவை எரித்து எடுத்த வாழைப்பழங்களை ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்தார்கள்................... First banana, Second banana (முதல் போக வாழைப்பழம், இரண்டாம் போக வாழைப்பழம்) என்னும் குறியீடும், இவை ஒரு வகையான தர அளவீடுகள், இங்கிருந்தே வந்தன. காட்டை எரித்தவுடன் செய்யப்படும் முதல் போகத்தில் விளையும் வாழைப்பழங்கள் பெரிதாகவும், அடுத்த அடுத்த போகங்களில் சிறிதாகவும் ஆகும் என்று சொல்லப்படுகின்றது. இங்கு தொழில்முறை விளையாட்டு வீரர்களை இந்த குறியீட்டால் குறிப்பிடுவார்கள். மிகச் சிறந்த வீரர்கள் - First banana, அடுத்த நிலை வீரர்கள் - Second banana ,....................
  18. மிக்க நன்றி அல்வாயன். சில இன்றைய செய்திகள் அல்லது நிகழ்வுகள் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிடுகின்றன, அல்வாயன். அப்படியே மனம் போன போக்கில் அலைந்து அலைந்து எழுதுகின்றேன் போல.................... அவனின் முடிவு பெரும் துயரமே..........
  19. அண்ணா, ஏறக்குறைய இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் அப்படியே நடந்தவை. அந்தக் கடைசி ஒரு வரி போலவே நண்பனின் வாழ்க்கை அவசரமாக, அநியாயமாக முடிந்தது. சொல்ல முடியாத சோகம் எந்த நாளில் நினைத்துப் பார்த்தாலும். நான் இதை கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தே அப்படி ஒரு (கடைசி) வரியில் முடித்தேன். மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து மட்டுமே பெறப்படவேண்டும் என்பதே இதன் சாரம், அண்ணா.
  20. வாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார முயன்று கொண்டிருந்தேன். நேற்று துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மிகவும் செழிப்பாக இருந்தார். அவர் அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைக்குள் மிகவும் சிரமப்பட்டே தன்னை திணித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தடவை எட்டி எடுப்பதற்காக அசைந்த போது அந்தக் கதிரை ஒரு கணம் வளைந்து படீரென்று உடைந்து போனது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பதறிப் போனார்கள், அவர்களின் பிள்ளைக்கு ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று. அவனை நான் கடைசியாகப் பார்த்து 35 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிறு வயதில் ஒரே வகுப்பில் படித்தோம். பாடசாலையிலிருந்து என்னுடைய வீட்டுக்கு வரும் வழியிலேயே அவனுடைய வீடு இருந்தது. அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கின்றேன். அங்கே எல்லோருமே அழகாக இருந்தார்கள். பயில்வான்கள் போன்ற உடற்கட்டும் அவர்களுக்கு இருந்தது. படிப்பு தான் சுத்தமாக வரவில்லை. அவனோ அல்லது அவன் வீட்டிலோ அதையிட்டு எவரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. என் வீட்டிலும் அதே நிலைதான். பிள்ளைகள் காலை எழும்பி கண் காணாமல் எங்கேயாவது போனால் போதும் என்றே பல குடும்பங்கள் இருந்தன. தினமும் பாடசாலை முடிந்த பின்னும் நாங்கள் உடனேயே வீடு போய் சேர்ந்ததும் இல்லை. அங்கங்கே நின்று இருந்து என்று வீடு போக பொழுது செக்கல் ஆகிவிடும். எவரும் எவரையும் தேடவில்லை என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு நாள் பாடசாலை முடிந்து கடலாலும், கரையாலும் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரண்டு ஆட்கள் அளவு இருக்கும் பெரிய சுறா மீன் ஒன்றை கடல் தண்ணீரில் வைத்து துண்டு துண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். நீலக் கடல் செக்கச் சிவந்து இருந்தது அப்போது. பின்னரும் அந்தக் கடல் பல சமயங்களில் சிவப்பாகியது. உலகில் கடல் போல வேறு எதுவும் தன்னைத் தானே உடனடியாக விரைவாகச் சுத்தம் செய்து கொள்வதில்லை. பயில்வான் போன்று இருந்தவன் இப்போது மிகவும் மெலிந்து இருந்தான், ஆனால் முகம் அதே அழகுடன் இருந்தது. அடுத்த கதிரையின் நுனியில் ஒரு எச்சரிக்கையுடன் இருந்து கொண்டே எப்படியடா இருக்கின்றாய் என்று ஆரம்பித்தான். அவன் வீட்டிலேயும் யாரோ ஒரு கதிரையை உடைத்து இருப்பார்கள் போல. நல்லா இருக்கின்றேனடா என்று சொல்ல வேண்டிய பதிலைச் சொன்னேன். மனைவியையும், மகளையும் கூப்பிட்டு அழைத்து என்னை அறிமுகப்படுத்தினான். நாங்கள் சிறு வயது நண்பர்கள் மட்டும் இல்லை, சொந்தக்காரர்கள் கூட என்று அவர்களுக்கு சொன்னான். அவர்கள் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். துக்கம் நடந்த வீட்டுக்கும் அவனுக்கும் போன வாரம் கூட பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததாக எனக்கு முன்னரேயே சொல்லி இருந்தார்கள். அவன் வளர்க்கும் கோழிகளை அவர்களின் வீட்டு நாய்கள் கடித்துக் கொன்று விட்டன என்பதே கடைசி சண்டைக்கான காரணம். அவர்களோ தங்களிடம் நாய்களே இல்லை என்கின்றார்கள். ஆனால் தெருவில் போய் வரும் வாழும் எந்த நாய்க்கும், அதன் குட்டிகளுக்கும் அவர்கள் மிஞ்சுவதை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டின் முன்னால் எப்போதும் ஒரு நாலு ஐந்து படுத்தே இருந்தன. எல்லோருமே சொந்தமா என்பதே அவனுடைய மனைவியினதும், மகளினதும் ஆச்சரியமாக இருக்கவேண்டும். தலைமுறை தலைமுறையாக அங்கேயே பிறந்து, அங்கேயே திருமணமும் முடித்தால், அங்கே எல்லோரும் சொந்தமாகத்தானே இருக்கவேண்டும். பிராமண குடும்பங்களில் வழக்கத்தில் இருக்கும் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முறையை அந்த ஊரில் அறிமுகப்படுத்தினால், அந்த ஊரின் நிலை சிக்கலாகிவிடும். நீ எப்படியடா இருக்கின்றாய் என்று தான் நானும் ஆரம்பித்தேன். வசதிக்கு ஒரு குறைவும் இல்லை என்றே தெரிந்தது. அழகான பெரிய புது வீடு கட்டியிருந்தான். வீட்டின் வெளியே தெருவிலேயே இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உள்ளூர் சுற்றுலாக்களையும், வாகனங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கும் தொழிலில் இருந்தான். தொழிலும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது என்றே தெரிந்தது. நான் நினைத்தவற்றையே அவனும் சொன்னான். வாழைப்பூ வடை என்றபடியே அவனுடைய மகள் ஒரு தட்டு நிறைய வடைகளை கொண்டு வந்து பிளாஸ்டிக் மேசையில் வைத்தார். வாழைப்பூ வடை சாப்பிட்டு சில வருடங்கள் ஆகியிருந்தது. தமிழ்நாட்டு நண்பன் ஒருவன் ஒரு நாள் வேலையில் கொண்டு வந்திருந்தான். வீட்டில் செய்ததாக ஞாபகம் இல்லை. வாழைத் தண்டிலும் அவர்கள் கூட்டு அல்லது கறி என்று ஏதோ செய்வார்கள். பல மரக்கறிகளைப் போலவே அதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் மிகவும் நல்லது, உடல்நலத்திற்கு உகந்தது என்றார்கள். உடல்நலத்திற்கு உகந்தவை எல்லாம் கொஞ்சம் முயற்சி செய்தே சாப்பிட வேண்டியவை போல, 'கொஞ்சம் சுகர்..........' என்று சொன்னான். அப்பொழுது தான் அவனை கவனமாக உற்றுப் பார்த்தேன். பயில்வான் போல இருந்தவன் மெலிந்து போயிருந்த காரணம் தெரிந்தது. கொஞ்சம் என்றில்லை, மிக நன்றாகவே நீரிழிவு அவனை தாக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மருந்து ஏதும் எடுக்கின்றாயா என்றேன். தான் முந்தி ஆங்கில மருந்துகள் எடுத்ததாகவும், ஆனால் இப்போது எடுக்கவில்லை என்றும் சொன்னான். ஆங்கில மருந்துகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றான். நல்ல ஒரு நாட்டு வைத்தியர் அங்கே இருப்பதாகவும், அத்துடன் தான் சில பத்தியங்களை பின்பற்றுவதாகவும் சொன்னான். அதில் ஒன்று வாழைப்பூ வடை. உடம்புக்கும், இரத்தத்திற்கும் மிகவும் நல்லது என்றான். சுவையாகவும் இருந்தது. பழங்கள் சாப்பிடாமல்ல் காய்களைச் சாப்பிடுவதாகவும் சொன்னான். மாம்பழம் சாப்பிடாமல்ல் மாங்காய் சாப்பிடுவதாகச் சொன்னான். அதுவும் ஒரு மருந்து என்றான். இதை ஆபிரிக்காவில் ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கின்றார்கள் என்றான். ஆபிரிக்காவில் மனிதர்கள் தோன்றினார்கள் என்ற தகவலை விட வேறு எந்த தகவலையும் நான் அதுவரை ஆபிரிக்காவுடன் இணைத்து வைத்திருக்கவில்லை. ஆபிரிக்க மாங்காய் புதிய தரவு ஒன்றாக தலைக்குள் போனது. ஒரு சிவராத்திரி பின் இரவில் ஒரு வீட்டு மாமரத்தில் ஏறி மாங்காய்கள் பிடுங்கிக் கொண்டிருந்தோம். நான் தான் மரத்தில் ஏறி இருந்தேன். உச்சியில் நின்று கொண்டிருந்தேன். சத்தம் கேட்டோ அல்லது இயற்கை உபாதை ஒன்றை கழிக்கவோ அந்த வீட்டுக்காரர் எழம்பி அவர்களின் பின் வளவு நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழே நின்றவர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். டேய்............டேய்.......... என்று சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்காரர் நடந்து வந்தார். அவருக்கு வயிறு முட்டியிருந்தது போல, அவர் ஓடி வரவில்லை. உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நான் இனிமேல் இறங்குவதற்கு நேரமில்லை என்று ஒரே குதியாகக் குதித்து விழுந்து ஓடினேன். கைகால்கள் எதுவும் உடையவில்லை. சில உடம்புகள் மிகப் பாவம் செய்தவை. அவை சில ஆன்மாக்களிடம் மாட்டுப்பட்டு எந்தக் கவனிப்பும் இல்லாத ஒரு சீரழிந்த வாழ்வை வாழ்கின்றன. அவன் தனக்கு இது எதுவுமே ஞாபகம் இல்லை என்றான். ஆனால் நாங்கள் அப்பவே மாங்காய்கள் நிறைய சாப்பிட்டது நல்ல ஞாபகம் என்றான். சில நாட்களின் பின், நான் திரும்பி வருவதற்கு விமான நிலையம் போவதற்கு அவனுடைய இரண்டு வாகனங்களையே எடுத்திருந்தோம். ஒன்றில் அவனும் வந்தான். அருகே இருந்தான். கோழிச் சண்டைக்காக அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டான். வழியில் போக்குவரத்து மிகவும் நெரிசலாகி விமான நிலையம் வந்து சேர்வதற்கு மிகவும் தாமதமானது. யாரோ அமைச்சரோ அல்லது பிரபலமான ஒருவர் அந்த வழியால் போய்க் கொண்டிருந்தார் போல. அவசரமாக இறங்கி, இரண்டு வாகனங்களிலும் வந்த சொந்தபந்தங்களிடம் இருந்து விடைபெற்று, ஓடி ஓடி, விமானம் கிளம்பும் கதவடிக்கு வந்த பின் தான் அவனுக்கு நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்லவில்லை, அவனை நான் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது புரிந்தது. அவன் இறந்து விட்டான் என்ற செய்தி சில மாதங்களில் வந்தது.
  21. வணக்கம் லிங்கம். மிகப் பழைய ஒரு உறவு போல......................👍.
  22. மிக்க நன்றி வில்லவன். ஒரு 'காமடி டிராமா' எழுதித் தாருங்கோ என்று தான் இங்கு நான் இருக்கும் இடத்தில் என்னைக் கேட்பார்கள். இந்த நாடகத்தையும் அப்படித்தான் எழுதினேன். ஆனால் அப்பொழுது எழுதி முடித்த போது, பல வருடங்களின் முன், நான் சிரிக்கவில்லை, கண்களை துடைத்துக் கொண்டே இருந்தேன். பின்னர் இன்று இங்கு களத்தில் கடைசிக் காட்சியை மீண்டும் எழுதிய போதும், காலையிலேயே, கண்கள் கலங்கிக் கொண்டேயிருந்தன................ இனி எங்கு காண்பமோ................ மிக்க நன்றி கவிஞரே. பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களினதும் ஒரே நோக்கம் தங்கள் சந்ததியை உருவாக்குதலே என்று சொல்லப்படுகின்றது. மரம் செடி கொடிகள் கூட. 'உருண்டு........' என்று அதையே சுட்டியிருந்தேன். ஆணும், பெண்ணும் இணைவது என்பதன் ஒரு வடிவம்...................
  23. அமெரிக்காவின் சி - 130 சிறிய ஓடுபாதையிலேயே இறங்கி ஏறும் ஆற்றல் உள்ளது. அதனாலேயே அமெரிக்கா இந்த விமானத்தை பலாலி விமான நிலைய ஓடுபாதையில் இறக்கி ஏற்றக் கூடியதாக இருக்கின்றது. 2000 தொடக்கம் 3000 அடிகள் வரை நீளமான, ஒழுங்காக செப்பனிடப்படாத ஓடுபாதையிலேயே இந்த விமானம் இறங்கி ஏறும். பொதுவாக பெரிய பயணிகள் விமானம் ஏறி இறங்குவதற்கு 5000 அடிகள் அல்லது அதற்கு மேலான மிகச் சிறப்பான ஓடுபாதைகள் தேவையாக இருக்கின்றது. இந்தியா விமானப்படையிடம் சி - 130 இருக்கின்றது. ஆனாலும் அதை அவர்கள் இலங்கைக்கான மீட்பு நடவடிக்கைகளில் இன்னமும் உபயோகிக்கவில்லை என்று நினைக்கின்றேன். சி - 130 க்கு சமனான ரஷ்ய தயாரிப்பு விமானங்களும் உண்டு. அன்டனோவ் - 12. ஆனாலும் ரஷ்யா இலங்கைக்கு இன்னமும் எதையும் அனுப்பவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.