Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. 🤣................. நான் ஒரு தனித் துண்டில் எழுதி வைப்பதாக நினைத்தேன். அதற்குப் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றி................. வெறுமனே நினைத்ததற்கே இப்படி என்றால், எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ...............😜.
  2. 👍.............. தோனி ரியலி கிரேட் தான்.............. கடைசி வருடம் விளையாடாமல் விட்டிருக்கலாம்......... பல ஜாம்பவான்களும் இப்படித் தான்......... கடைசியில் இழு இழு என்று இழுத்துவிடுவார்கள்............
  3. 🤣.............. இந்த தோணி, கப்பல் என்று சொல்லிச் சொல்லியே போன ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் புயலில் மாட்டுப்பட்டது போல சின்னாபின்னமாகியது.................🤣.
  4. 🤣............. டென்மார்க்கில் இருந்து எறியப்பட்ட கற்கள் இலக்கு தவறி இந்திய வீராங்கனைகளின் தலைகளில் விழுந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.................. இந்தியாவை நம்பியோர் கைவிடப்படுவார்..................🤣.
  5. விஜய் 41 குடும்பங்களையும் பனையூருக்கு வரச் சொல்லவில்லையே என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியது தான்.....................🫣. 'ரசிகர்களா, நடிகர்களா.............. தமிழ்நாட்டில் இதில் எவருக்கு அதிக உளவியல் ஆலோசனைகள் தேவை..........' என்று ஒரு வழக்காடு மன்றமே வைக்கலாம் போல............... முழுச்சட்டையையும் கிழிக்காமல் விடமாட்டார்கள்............
  6. இத்தனை வருடங்கள் தோற்றாகி விட்டது, அப்படியே இந்த வருடமும் இந்தியா தோற்று, அகஸ்தியனை அரியணையில் ஏற்ற வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம்..........🤣. இன்றைக்கு Mooney அடித்தார்........... அடுத்த போட்டியில் Sunny என்று ஒருவர் வந்து அடிப்பார்............ இப்படித்தானே போட்டிகள் தாறுமாறாக போய்க் கொண்டிருக்கின்றன..........ஆனால் ஃபைனலில் எதுவுமே மாறாது............🤣.
  7. 🤣.................. இந்த பெண் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக விளையாடுகின்றார்கள். புரியாத புதிராகவே இருக்கின்றார்கள்................................... வீடுகளில் தான் அப்படி இருக்கின்றார்கள் என்றால், போட்டிகளிலும் இப்படியா இருப்பது.................🤣.
  8. 15 பேரில் ஒரு 10 பேர்கள் வரை, நான் உட்பட, சும்மாதான் கிறுக்கியிருக்கின்றோம் போல...... ஏதோ இப்போதைக்கு காற்று என் பக்கம் வீசுது..............🤣. அதுவே தான்....... கடந்த ஐபிஎல் அது ஒரு சரித்திரம், பையன் சார்............. அதில் 5, 6, 7 என்று தொடராக முட்டைகள் வாங்கியவர்கள் பலர்................ ஆனால் நந்தனும், புலவரும் அப்படியே ஒன்று, இரண்டாகவே நின்றார்கள்................
  9. 🤣............. சர்வர், நிறைய முட்டைகளை வாங்கி அடிக்கி வையப்பா........... இவர்கள் இப்படி மாறி மாறி வென்றால், நிறைய கோப்பி போட வேண்டும் போல...................
  10. துண்டில் ஈழப்பிரியன் அண்ணாவின் பெயரை எழுதிய உடனேயே, அன்றைக்கு 69 அடித்த தென் ஆபிரிக்கா இன்றைக்கு எங்கேயோ போயிட்டுதே.............🤣. கிரிக்கெட்டிலும் எதுவும் நடக்கலாம் போல.................
  11. அண்ணாவின் பெயரையும் சேர்த்து எழுதுவதில் என்ன தயக்கம், இப்பவே எழுதுவோம் என்று நினைத்து, அண்ணாவின் தெரிவுகளையும் ஒரு தடவை போய்ப் பார்ப்போம் என்று பார்த்தால்.................... 30) ஆரம்ப சுற்று போட்டியில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? தென்னாபிரிக்கா .............. ஜக்கம்மா, அக்கம்மா, எந்த அம்மா துணைக்கு வந்தாலும் நிலைமை கொஞ்சம் கஷ்டம் போலத்தான் தெரியுது, அண்ணா.................🤣.
  12. 69.................. என்ன ஒரு தெய்வீக எண்............ இது ஒரு கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி தெரியவில்லை, யாரோ பிறந்த வருடம் மாதிரித் தான் தெரிகின்றது..................😜.
  13. ஹேமமாலினி ஏற்கனவே சொல்லிவிட்டார். பாஜக என்றால் யார் என்று தெரியும் என்பதால், நாங்கள் எவரும் அவர்களின் கருத்தை இங்கே ஒரு பொருட்டாக கொண்டு வருவது கூட இல்லை. கும்பமேளாவில் இறந்தால் சொர்க்கத்திற்கு போகலாம் என்று சொல்லும் கூட்டம் அது.............🫣. என்ன நடந்தது என்பதில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பார்வைகள் இருக்கும். அவை பெரும்பாலும் அவர்களின் முன்னைய ஆதரவு - எதிர்ப்பு நிலையை ஒட்டியே இருக்கும். ஆனால் இந்த தலைவர்கள் எல்லோரும் இப்போது என்ன சொல்கின்றார்கள், என்ன செய்கின்றார்கள், எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதில் பல பார்வைகள் இருக்கமுடியாது.
  14. நான் அந்த 100 பேர்களின் பெயர்களை இங்கே போட்டாலும், நீங்கள் அவர்களில் ஒருவர் விடாமல் ஏதோ சொல்லத்தான் போகின்றீர்கள். அதை உங்கள் தரப்பின் பார்வையாக எடுத்துக் கொள்கின்றோம். நீங்கள் திமுகவால் இறக்கி விடப்பட்ட 100 பேர்கள் என்று இவர்களைச் சொல்கின்றீர்கள். நான் அவர்களாகவே முன்வந்து தமிழ் சமூகத்தின் மேல் இருக்கும் அக்கறையில் இதைச் செய்கின்றார்கள் என்கின்றேன். நான் கூட அந்த அக்கறையினால் தான் விஜய்க்கும், அவரது நடவடிக்கைகளுக்கும் எதிராக என்னால் முடிந்த இடங்களில் என் கருத்துகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றேன்.
  15. 🤣........... அந்த முகபாவங்கள் காட்டுகின்ற பிள்ளை............... இப்ப சசியையே தீண்டுவார் இல்லை, அதால அந்தப் பிள்ளையும் இப்ப அவுட் ஆஃப் ஃபோகஸில் போயிட்டுது..........🤣.
  16. 👍.................... நான் கிரிக்கெட்டை மட்டுமே பார்ப்பதாக இருக்கின்றேன், பையன் சார்...................🤣
  17. நான் வங்கதேசம் தான் மிகக் குறைவான ஓட்டங்கள் எடுப்பார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். அக்கம்மாவும், ஜக்கம்மாவும் கைவிடமாட்டார்கள்............... வங்கதேசம் ஏதாவது ஒரு போட்டியில் 99 ஓட்டங்கள் மட்டுமே எடுக்கத்தான் போகின்றார்கள்...................😜.
  18. மக்கள் அவரை கைவிட்டு விடுவார்கள் என்று தான் நானும் நினைக்கின்றேன். ஆனாலும் அவரது இளம் ரசிகர்கள் பலர் அவருடன் சேர்ந்தே நிற்பார்கள், ஆனால் அது ஒரு அரசியல் சக்தியாக அவரை தக்கவைக்க போதியதில்லை. இன்றைய நிலையில் பல் எதிர்க் கட்சிகள் அவரை உடனடியாக கைவிடப் போவதில்லை. 'தவிர்க்க முடியாத விபத்து.............' என்று சொன்ன சீமானுக்கு தம்பி விஜய் அவருக்கே அருகே வரப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இனிமேல் அவர் எதிர்ப்பக்க வாக்குகளையே நோக்கிப் பேசவேண்டும், பேசுகின்றார். ஒரு 20 அல்லது 30 தொகுதிகளை மட்டுமே கொடுத்து விஜயை மடக்கிப் போடலாம் என்று எடப்பாடியார் நினைக்கின்றார். கடைசியில் எடப்பாடியாரின் கொங்குநாடும் இந்த முடிவால் அவரது கைவிட்டுப் போகப் போகின்றது.
  19. எஸ்.வி. ராஜதுரை, சந்துரு, பாலகிருஷ்ணன் போன்றோரையும் அப்படியே ஒரு கூடைக்குள் போட்டு மூடி விட முடியாது தானே, கோஷான். விஜய்யின் காணொளியை பார்த்த பின், தமிழ்நாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டிய முதலாவது விஷம் விஜய் என்று தான் தோன்றுகின்றது. சீமானும், சாதிக் கட்சிகளும் கூட விஜய்யை விட பல மடங்குங்கள் சமூகத்திற்கு ஆபத்தில்லாதவர்கள்.
  20. கரூர் துயரம் : தமிழக அரசுக்கு ’முக்கிய’ வேண்டுகோள் வைத்த சமூக செயற்பாட்டாளர்கள்! Published On: 2 Oct 2025, 7:33 PM | By Pandeeswari Gurusamy கரூரில் நடந்த பெருந்துயர சம்பவத்தில் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டறிக்கை ஒன்றை இன்று (அக்டோபர் 2) வெளியிட்டுள்ளனர். கரூரில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த நிலையில் மூன்னாள் நீதியரசர் சந்துரு, ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எம்.ஜி.தேவசகாயம் ஐஏஎஸ், எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை, ஊடகவியலாளர் ‘தி இந்து’ என்.ராம், வழக்குரைஞர் ஹென்றி டிபேன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்ட கலை இலக்கிய வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு 7.20 மணியளவில் கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய “சாலையில் காட்சிதரும் – ரோடு ஷோ” நிகழ்வில் அதன் தலைவர் நடிகர் விஜய் அவர்களைக் காணவந்த பொதுமக்களில் 41பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். இதனால் ஆற்றொணா துயரத்திலும் கடும் மனவுளைச்சலிலும் தமிழக மக்கள் தவித்து வரும் இவ்வேளையில், தவறான தகவல்களைப் பரப்பி இந்த மரணங்கள் உதாசீனப்படுத்தப்படுவதைக் காணச்சகியாமல் நாங்கள் இந்தக் கூட்டறிக்கையினை வெளியிடுகின்றோம். விஜய் அரசியல் கட்சி துவங்கியதிலோ தனது கட்சியினரை அவர் சந்திப்பதிலோ எவருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. நாட்டின் குடிமக்கள் எவரொருக்குமானது போலவே அது அவருக்குரிய சனநாயக உரிமை. ஆனால் அவர் தனது கட்சியினரையும் ரசிகர்களையும் சந்திக்கத் தெரிவுசெய்துள்ள முறை, இந்த நாட்டின் அரசியல் முதிர்ச்சிக்கும் பொதுவாழ்க்கைக்கும் தனிமனித கண்ணியத்திற்கும் உகந்ததல்ல என்பதுடன், அதுவே இந்தப் பேரழிவுக்கும் இட்டுச்சென்றுள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறோம். கரூருக்கும் முன்னதாக விக்கிரவாண்டி, மதுரை, திருச்சி, அரியலூர், நாகை ஆகிய இடங்களில் விஜய்யின் கூட்டங்கள் இந்தப் பேரழிவுக்கான முன்னோட்டம் போலவே நடந்திருக்கின்றன. போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்காமலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும் வாகனங்களில் பயணம் செய்தது, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது மற்றும் மின் கம்பங்கள், மரங்கள், அருகமைக் கட்டிடங்கள் ஆகியவற்றில் ஏறி சேதப்படுத்தியது என அவரது கட்சியினர் பொறுப்புணர்வின்றியும் கட்டுப்பாடற்றும் சுயஒழுங்கின்றியும் நடந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் முப்பது வயதுக்குட்பட்டவர்கள், புதிதாக அரசியல் ஆர்வம் கொண்டவர்கள், விஜய்யின் சொல்லுக்கு கட்டுப்படக்கூடியவர்கள். அத்துமீறல்களுக்காக அவர்களைக் கண்டித்து, நல்வழிப்படுத்த அவர் அறிவுறுத்தியிருக்க வேண்டும். ஆனால் விஜய் அப்படியான முயற்சியெதையும் மேற்கொள்ளாமலும் அவர்களது அத்துமீறல்களை ரசிப்பவராகவும், அவர்கள் அவ்வாறு இருப்பதுதான் தனது பலமென்று கருதியும் அவற்றை இயல்பானதாக்க முயற்சித்தன் விளைவே இந்த அநியாய மரணங்கள். விஜய், அறிவித்திருந்த நேர அளவுக்குள் கரூருக்கு வராமல் தன்னைக் காண்பதற்காக திரண்டிருந்தவர்களை 7 மணிநேரத்திற்கும் மேலாக காக்கவைத்ததும், அங்கு குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட அடிப்படைத்தேவைகள் போதுமானதாக இல்லாதிருந்ததும், கூட்டத்திற்குள் வந்த பிறகும் முகம் காட்டாமல் மக்களை தன் வண்டிக்குப் பின்னேயே அலையவிட்டதும்தான் உயிரிழப்புக்குக் காரணம் என்பதை காணொளிச்சான்றுகள் காட்டுகின்றன. ஆனால் இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னே “திட்டமிட்ட சதி” இருப்பதாகவும் விஜய் மீது எந்தத் தவறுமில்லையெனவும் உண்மைக்கு மாறான ஒரு கட்டுக்கதையை விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் பரப்பத் தொடங்கினர். மணிப்பூர் உள்ளிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்கள், மோதல்கள், கலவரங்கள், ஒடுக்குமுறைகள் பற்றி விசாரிக்கப் போயிராத தேசிய ஜனநாயகக் கூட்டணி, கரூர் மரணங்கள் பற்றி ஆராய தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றை அனுப்பியுள்ளதும் அந்தக் குழுவினர் “சதி” கட்டுக்கதையை வலுப்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்து வருவதும் ஏற்கத்தக்கதல்ல. தன் கண்முன்னேயே விபரீதம் நடப்பதைப் பார்த்தப் பிறகும் அதில் கவனம் செலுத்தி நிலைமையைச் சீராக்காமல் அங்கிருந்து வெளியேறிப் போய் இரண்டு நாட்கள் அமைதிகாத்த விஜய், இந்தக் கட்டுக்கதை கொடுத்த தைரியத்தில் 30.9.2025 அன்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். தன்னால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்தன என்பது பற்றிய குற்றவுணர்ச்சியோ வருத்தமோ தார்மீகப் பொறுப்பேற்போ இல்லாத அவரது காணொளி விளக்கத்தில் அரசின் மீது பழிசுமத்திவிட்டு தப்பித்துவிடும் உள்நோக்கமே துருத்திக் கொண்டுள்ளது. கலையும் இலக்கியமும் சமூகத்தை மேம்படுத்துவதாக, விடுதலை உணர்வைத் தருவதாக, அடிமைச்சிந்தனைக்கு எதிராக தன்மதிப்புணர்வைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை நேர்மைத்தன்மையற்றதாகவும், தனது ரசிகர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துவதாகவும் உள்ளது. உழைப்பும், பொது சிந்தனையும், சமூக அக்கறையுமற்ற வழியில் அதிகாரத்தைப் பெறும் முனைப்பு மேலோங்கியுள்ளது. இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக, இதுவரை தனது கொள்கை எதிரி என்று குறிப்பிட்டு வந்த வலதுசாரிகளை அண்டி நிற்கவும் தயாராகிவிட்டார் என்பதை அவரது அடுத்தடுத்த நகர்வுகள் உணர்த்துகின்றன. எவ்வளவு கொடிய தீங்கினையும் இழைத்துவிட்டு வதந்திகளையும் கட்டுக்கதைகளையும் களமிறக்கி தப்பித்துவிட முடியும் என்கிற விஜய்யின் கெடுநோக்கம் தடுக்கப்பட வேண்டும். ரசிக மனப்பான்மையில் அவரது பின்னே திரண்டுள்ள சிறார்களையும் இளைஞர்களையும் மீட்டெடுத்து சமூகப் பொறுப்புணர்வும் தன்மதிப்பும் உள்ளவர்களாக, தமது உள்ளாற்றல்கள் மூலம் வியத்தகு சாதனை புரிபவர்களாக வளர்த்தெடுப்பதில் கலை இலக்கியவாதிகளுக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளதென உணர்கிறோம். விஜய்யின் முந்தைய நிகழ்வுகள், விளைவுகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கரூரில் மேற்கொண்டிருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் தமிழ்நாடு அரசு கண்டறிய வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் உருவாகாமல் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய, கரூர் உயிரிழப்புகளுக்கு காரணமான விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நேர்நிறுத்த தமிழ்நாடு அரசு தயங்கக்கூடாதென வலியுறுத்துகிறோம். மேலும், கரூர் நிகழ்வைக் காரணம் காட்டி சமூக, சனநாயக, பண்பாடு மற்றும் அரசியல் இயக்கங்களின் கருத்துரிமை, கூட்டம் கூடும் உரிமை, சங்கம் சேரும் உரிமை, போராடும் உரிமை ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை காவல்துறையிடம் ஒப்படைத்துவிடக் கூடாது. அரசமைப்பு உரிமைகளான அவற்றைக் காப்பாற்றுவதில் தனக்குள்ள பொறுப்பினை தமிழ்நாடு அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  21. வங்காளதேசத்திலும் பெண்கள் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்று எனக்கு முன்னரே ஒருவரும் சொல்லவில்லை..................... ஏதோ எட்டாவது அணியாக உள்ளே பிடித்துப் போட்டிருக்கின்றார்கள் என்று நான் நினைத்துவிட்டேன்....................😜. 'இன்று கறுப்பு பிட்சில் வெள்ளைப் பந்து போட்டார்கள்................' என்று கலர் கலராக காமெண்ட்ரி சொல்லும் வசீயின் காமெண்ட்ரி மிஸ்ஸிங்..............❤️.
  22. திமுக அரசு, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என்பவற்றின் மேல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளும், எழுப்பப்படும் கேள்விகளும் நியாயமானவையே. 10,000 பேர்களே என்று அனுமதி வாங்கப்பட்டாலும், காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் முன்னரே தோராயமாக எவ்வளவு பேர்கள் வருவார்கள் என்று தெரியாதா என்பதே அரச நிர்வாகத்தின் அடிப்படைத் தவறாகத் தெரிகின்றது.அதற்குப் பின்னர் நடந்தவை எல்லாம் இந்த அடிப்படைத் தவறின் தொடர்வுகளே, தொடர் நிகழ்வுகளுக்கும் அழிவுகளுக்கும் தவெகவும், திமுக அரசுமே பொறுப்பு. ஆனாலும் இதற்கு எந்த தரப்பும் மன்னிப்பும் கேட்கப் போவதில்லை. அதைப் போலவே இதில் நேரடியாக பங்கு இல்லாத மற்றைய தரப்புகள் எல்லாம் தங்களின் சுயலாபம் ஒன்றில் மட்டுமே குறியாகவும் இருக்கப் போகின்றார்கள். கள்ளக்குறிச்சி கல்வராயன்மலைக்கு போகாத தலைவர்கள் எல்லோரும் கரூரில் நின்றதன் காரணம் இதுவே. கரூர் மக்களின் இழப்புக்கு ஈடில்லை. நியாயமும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் எந்த மெத்தனத்திற்கும், அதனால் உண்டாகும் அழிவுகளுக்கும் எவரும் பொறுப்பு கூட ஏற்பதில்லை. அடுத்ததாக விஜயை மட்டுமே நம்பி உள்ள அவரது ரசிகர்களின் நிலை. இவர்கள் தவெக என்னும் அரசியல் கட்சியின் தொண்டர்களே கிடையாது. அங்கு அப்படி ஒரு அமைப்பே கிடையாது. உதாரணமாக, தவெக கரூர் மாவட்டச் செய்லாளர் மதியழகனை காவல்துறை பாண்டிச்சேரியில் வைத்து கைது செய்கின்றார்கள். பின்னர் அவர் அப்படியே காணாமல் போகின்றார். அவரின் மனைவி அழுது புலம்பிக் கொண்டே என் கணவர் எங்கே என்று தேடுகின்றார். ஒரு தவெக வழக்கறிஞர் கூட அந்தப் பெண்ணுடன் இல்லை. தவெக தொண்டர்கள் ஒரு சிறு அமைதியான எதிர்ப்பைக் கூட எங்கேயும் காட்டவில்லை. மதியழகனுக்கு மட்டும் இல்லை, இன்று புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டாலும் இதுவே தான் அங்கே நிலை. ஒரு தவெக தொண்டர் கூட எங்கேயும் எதிர்ப்பு காட்டப் போவதில்லை. ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்பட்டால் லாட்டரி மார்ட்டின் மத்திய அரசு வரை போய் ஆதவ் அர்ஜூனாவை வெளியே எடுத்துவிடுவார். ஆனால் மற்றைய தவெகவினர் ஒரு கைவிடப்பட்ட நிலையிலேயே, கரூர் மக்களைப் போன்றே, உள்ளார்கள். இறுதியில் வந்த உளவுத்துறை அறிக்கையின் படி, மக்களின் கோபம் இரு தரப்புக்குக்கும் மேலேயே இருந்தாலும், விஜய் மேலேயே அதிகமாக இருக்கின்றது என்கின்றார்கள். அதன் எதிரொலியே திமுகவால் அதிகரிக்கப்பட்டிருக்கும் விஜய்க்கு எதிரான நடவடிக்கைகளும், தொடர் கைதுகளும். எடப்பாடியாரிடம் போய்ச் சேர்வதை விடுத்து வேறு எந்த தெரிவுமே இல்லாத ஒரு நிலை விஜய்க்கு. எடப்பாடியாருக்கும் அது இப்போது தெரியும். முதலில் செய்ய வேண்டியது 'ரோட் ஷோ' என்பதை தமிழ்நாட்டில் முற்றாக தடைசெய்யவேண்டும். அரங்கினுள் மட்டுமே இவர்களின் பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும்.
  23. பையன் சார், உங்களை ஒரு சின்ன இடைவெளியின் பின் மீண்டும் இங்கே காண்பதில் மிகவும் சந்தோசம்............❤️. நல்ல அழகான பிள்ளையார் படம்........... அவர் அப்படியே தன்னைப் போலவே உங்களையும் யாழ் களத்தில் என்றும் அமரவைக்கட்டும்............. 🤣.................. ஜக்கம்மா எதிர் அக்கம்மா................. அக்கம்மா அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஜக்கம்மாவின் சொந்தம்..............
  24. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இல்லாத எந்தக் கட்சியும், சிறிதோ பெரிதோ புதிதோ பழையதோ, ஆளும் கட்சியையும் அரசையும் எதிர்த்தே அரசியல் செய்யும். புதிய தமிழகம் கூட திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. இந்த விடயத்தில் திமுகவின் மேல் முற்று முழுதாக குற்றமும் சுமத்தியிருக்கின்றது. அன்புமணி பிரிவு பாமகவும் திமுகவை எதிர்த்தே அரசியல் செய்கின்றது. அன்புமணி கரூரில் நின்று கொண்டே இரவு நேரத்தில் எப்படி பிரேத பரிசோதனைகள் செய்தீர்கள் என்று பத்திரிகையாளர்களின் முன் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். ஆளும் கட்சியையும், அரசாங்கத்தையும் எதிர்க்காமல் பிற கட்சிகளுக்கு அரசியலே கிடையாது. தவெக ஓடி ஒழிந்ததிற்கு அவர்கள் ஆளும் கட்சியை எதிர்த்தது அரசியல் செய்தார்கள் என்பது காரணம் அல்ல. விஜய்யும், புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் ஆனந்தும், ஜான் ஆரோக்கியசாமியும், நிர்மலும் தங்களின் செல்ஃபோன்களை ஆஃப் செய்து விட்டு தலைமறைவானது அவர்களுக்கு இந்த சூழ்நிலையை கையாளும் திராணி கிடையாது என்பதனாலேயே. தவெகவின் அந்த மாவட்டச் செயலாளரும் தலைமறைவாகினார். இதற்கு மேல் தவெகவில் ஒரு கட்டமைப்பும் கிடையாது. விஜய்யின் ரசிகர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்கு போயிருப்பார்கள். தவெகவிற்கு தொண்டர்களோ அல்லது ஒரு கட்டமைப்போ இருந்திருந்தால், அதில் சிலராவது மக்களுடன் நின்றிருக்கவேண்டும். இப்படியே ஓடி ஒழிந்து கொண்டிருந்தால், எப்போது மக்களுடன் நிற்கப் போகின்றீர்கள்....... திமுக உங்களை அழித்து விடும் என்றால், இதற்குப் பிறகு திமுக ஓய்ந்து விடப் போகின்றதா......... இன்னுமொரு சூழ்நிலையில் மீண்டும் ஓடி ஒழியப் போகின்றீர்களா........... தமிழ்நாட்டில் இதற்கு முன் எந்தக் கட்சியாவது இப்படி முற்றாகப் பதுங்கிய வ்ரலாறு இருக்கின்றதா.................... முக்கியமாக நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லிய கட்சி ஒன்று, அது சம்பந்தப்பட்ட அனர்த்தம் ஒன்றில் இருந்து இப்படி ஓடிப் பதுங்கி இருந்தது உண்டா............
  25. இந்தப் பிள்ளைகள் எல்லோரும் நன்றாக விளையாடுகின்றார்கள்........... நான் இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை..............👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.