படம்: தரிசனம்(1969)
இசை: சூலமங்களம் ராஜலட்சுமி
வரிகள்: கண்ணதாசன்
பாடியோர் :T M S & L R ஈஸ்வரி
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தேடுது எனக்கும் (இது)
இது காலதேவனின் கலக்கம்
இதை காதல் என்பது பழக்கம்
ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
பெறப் போகும் துன்பத்தின் துவக்கம் (இது)
பனியும் நிலவும் பொழியும் நேரம்
மடியில் சாய்ந்தாலென்ன
பசும் பாலைப் போல மேனி எங்கும்
பழகிப் பார்த்தாலென்ன
உடலும் உடலும் சேரும் வாழ்வை
உலகம் மறந்தாலென்ன
தினம் ஓடியாடி ஓயுமுன்னே
உண்மை உணர்ந்தாலென்ன
உறவுக்கு மேலே சுகம் கிடையாது
அணைக்கவே தயக்கமென்ன
இது ஒட்டை வீடு ஒன்பது வாசல்
இதற்குள்ளே ஆசையென்ன (இது)
முனிவன் மனமும் மயங்கும் பூமி
மோக வாசல் தானே
மனம் மூடி மூடிப் பார்க்கும்போதும்
தேடும் பாதை தானே....
பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கானல் நீரே.....
இது மேடு பள்ளம் தேடும் உள்ளம்
போகும் ஞானத்தேரே......
இல்லறம் கேட்டால் துறவறம் பேசும்
இதயமே மாறி விடு
நான் வாழ்ந்து பார்த்து சாய்ந்த தென்னை
உன்னை நீ மாற்றி விடு (இது)