Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. படம்: மகனே நீ வாழ்க (1969) வரிகள்: கண்ணதாசன் இசை : TR பாப்பா. பாடியோர் : TMS & P சுசீலா .. ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் போது வந்து தடுக்குதடி - நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி முத்தமிடக் கூடாத திருமணமா மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா - இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா முத்தமிடும் போது வந்து தடுக்குதடி ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி முத்தமிடக் கூடாத திருமணமா மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து கள்ளோடு பூவிரண்டைக் கிள்ளி எடுத்து திருக்கல்யாணக் கதைகளை சொல்லிக் கொடுத்து உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து உள்ளூர உள்ளூர எண்ணிக் களித்து நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து நான் உறக்கத்தில் விழிப்பேன் உன்னை நினைத்து ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு வெள்ளரிப் பழம் பிளந்த பிள்ளைச் சிரிப்பு இன்று வேறோடு பூப்பறிக்க வந்த நினைப்பு முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில் முள்ளிருக்கும் பூவுமுண்டு பெண்களிடத்தில் அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில் அதை முன்னாலே சொல்லிவிட்டேன் கண்களிடத்தில் ஒத்தக்கல்லு மூக்குத்தி ஜொலிக்குதடி முத்தமிடும் போது வந்து தடுக்குதடி நான் முத்தமிடும் போது வந்து தடுக்குதடி முத்தமிடக் கூடாத திருமணமா மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா இந்த மூக்குத்தி பஞ்சணையில் தடை செய்யுமா ?
  2. அழகு மலர் ஆட .. அபிநயங்கள்..💐 சிதம்பரம் நடராஜர் கோயில்
  3. அண்ணை வண்டி 20 கிமீ மேல போகாது.. காத்தடிச்சா பறந்துடுவே.. கிடுகு வண்டி
  4. "தில் பசந்தி" செய்யும் முறை (சுவீட் பாண் போன்றது )👌
  5. படம் : சாந்தி(1965) இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி வரிகள் :கண்ணதாசன் பாடியவர்: P சுசீலா செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கண்கள் இரண்டை வேலென எடுத்து கையோடு கொண்டானடி கன்னி என் மனதில் காதல் கவிதை சொல்லாமல் சொன்னானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் வந்தானடி ஊர்வலம் போனவன் ஓரிரு மாதம் வாராமல் வந்தானடி வாராமல் வந்தவன் பாவை உடலை சேராமல் சென்றானடி சேராமல் சென்றானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாளை வருவான் நாயகன் என்றே நல்லோர்கள் சொன்னாரடி நாயகன் தானும் ஓலை வடிவில் என்னோடு வந்தானடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து வாசலில் வருவேனடி மன்னவன் என்னை மார்பில் தழுவி வாழ்கென சொல்வானடி வாழ்கென சொல்வானடி செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்
  6. தொல்லியல் அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் மோதலா?- கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ரத்து: தொல்லியல் ஆர்வலர்கள் கடும் அதிருப்தி ..! தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜனுக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நேற்று தொடங்கப்படவிருந்த 5-ம் கட்ட அகழாய்வுப் பணி திடீரென ரத்து செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை (பெங்களூரு) பிரிவு சார்பில், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015-ல் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. 3 கட்டங்களாக அகழாய்வு நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை விரும்பவில்லை. இதையடுத்து 4-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறையே மேற்கொண்டது. இப்பணியை தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையிலான குழு மேற்கொண்டது. இந்த அகழாய்வு கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப்.30 வரை நடைபெற்றது. இதில் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. 4-ம் கட்ட அகழாய்வு முடிந்த நிலையில், 5-ம் கட்ட அகழாய்வு நடத்த, தமிழக அரசு ரூ.47 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இதற்காக கொந்தகையைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் தேர்வு செய்து சுத்தப்படுத்தி வைத்திருந்தனர். கடந்த ஜனவரி மாதமே அகழாய்வு தொடங்க இருந்த நிலையில், மக்களவைத் தேர்தலால் அப்பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் அகழாய்வு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அமைச்சர் -அதிகாரிகள் மோதலா? இதற்கிடையே, திடீரென அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைப்பதற்காக ஜூன் 10-ம் தேதிக்கு அகழாய்வுப் பணி தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், நேற்றும் அமைச்சர் வராததால் அகழாய்வுப் பணி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அமைச்சருக்கும், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலால்தான் அகழாய்வுப் பணி ரத்தானதாக தகவல் வெளியாகியுள்ளது. கீழடியில் 2.10 ஏக்கரில் ரூ.1 கோடி செலவில் தொல்லியல் பொருட்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் தள்ளிப் போவதால் அருங்காட்சியக கட்டுமானப் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இப்பணி எப்போது தொடங்கப்படும் என தெரியாததால் தொல்லியல் ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: 5-ம் கட்ட அகழாய்வுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் நிதி ஒதுக்கீடு இல்லாதது, மக்களவைத் தேர்தல் ஆகிய காரணங்களால் அகழாய்வைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிதி ஒதுக்கியுள்ள நிலையில் அகழாய்வை தாமதப்படுத்தி வருகின்றனர். அகழாய்வை அதிகாரிகளே தொடங்கிவிடலாம். இதற்குமுன் அதிகாரிகளே அகழாய்வை தொடங்கினர். ஆனால், தற்போது அமைச்சரை காரணம் காட்டி தாமதப்படுத்தி வருகின்றனர். ஏற்கெனவே தொல்லியல் ஆர்வலர்கள், நீதிமன்றம் வற்புறுத்தலால்தான் கீழடி அகழாய்வுப் பணியை தமிழக அரசு மேற்கொள்கிறது. இந்த அகழாய்வில் ஆரம்பத்தில் இருந்தே தமிழக தொல்லியல் அதிகாரிகள் மிகவும் மெத்தனமாக உள்ளனர். ஆர்வமுள்ள அதிகாரிகளை நியமித்து தொல்லியல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “உயரதிகாரிகளிடம் இருந்து உத்தரவு ஏதும் வராததால் அகழாய்வுப் பணியைத் தொடங்கவில்லை” என்ற ர் https://tamil.thehindu.com/tamilnadu/article27768215.ece
  7. படம் : அன்னமிட்ட கை(1972) வரிகள் : வாலி இசை :K V மகாதேவன் பாடியோர் :TMS & S ஜானகி அழகுக்கு மறுபெயர் பெண்ணா? அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா? தமிழுக்கு மறுபெயர் அமுதா? - அதைத் தருகின்ற இதழ் தங்கச் சிமிழா? அழகுக்கு மறுபெயர் பெண்ணா... நூறு கோடி பாடல் நெஞ்சில் ஊறுகின்ற வேளையிது! ஏடு போன்ற கன்னம் கண்டு இதழ்களாலே எழுதுவது! அந்திப் பொழுதில் தொடங்கும்! அன்புக் கவிதை அரங்கம்! இளமைக்குப் பொருள் சொல்ல வரவா? அந்தப் பொருளுக்கு மறுபெயர் உறவா? அழகுக்கு மறுபெயர் பெண்ணா... நாடி நரம்பில் கோடி மின்னல் ஓடிப் பாய்ந்து மறைவதென்ன? கூந்தல் தொடங்கி பாதம் வரையில் கைகள் கொண்டு அளப்பதென்ன? அது முதல் முதல் பாடம்! அடுத்தது என்ன நேரும்? எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்! அதில் இருவர்க்கும் சரிபங்கு கிடைக்கும்! அழகுக்கு மறுபெயர் பெண்ணா... ஆலிலை மேலே கண்ணனைப் போலே நூலிடை மேலே ஆடிடவோ? ஆடும் போது கூடும் சுகத்தை வார்த்தை கொண்டு கூறிடவோ? பெண்மை மலர்ந்தே வழங்கும்! தன்னை மறந்தே மயங்கும்! விடிந்த பின் தெளிவது தெளியும்! அது தெளிந்த பின் நடந்தது புரியும்! அழகுக்கு மறுபெயர் பெண்ணா...
  8. ஆன்ரி கிந்தியன் பாவங்கள் -- கோபி , சுதாகர் ..☺️

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.