Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. உள்ளடக்கம்: சாதகமாக மாறி வரும் பூகோள அரசியல் சூழலும் ஈழத்தமிழர்களின் கையறுநிலையும் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கப்போட்டிக்குரிய நிலமாக இலங்கைத்தீவு மாறிவரும் நிலையில், தமிழ் மக்களுக்கு இந்நிலைமை சாதகமாகவே உள்ளது. ஆனால், இன்று எங்களிடம் ஒரு வலுவான அரசியல் தலைமை இல்லாததால் தமிழ்மக்கள் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழர் அரசியலில் பூகோள அரசியல் குறித்த உரையாடல்கள் மிகக் குறைந்தளவே இடம்பெறுகின்றன. இந்நிலையில் எங்களுக்கு வலுவான வெளிநாட்டுக் கொள்கை அவசியமாக உள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளரின் வருகையும் அதன் பின்னர் சீனா, இந்தியாவின் எதிர்வினைகள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களையும் முன்வைக்கிறார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
  2. வரி வரியாய் உங்கள் நினைவுகள்
  3. சிவபெருமானே - சிவமோடு சிவமாக
  4. முந்து தமிழ் மாலை ஊரும் பழனியப்பா
  5. இறைவனின் திருக்குலமே வருக அரச குரு குலமே வருக(2) கரையில்லா கருணையில் கனிவுடன் காக்கும் இணையில்லா இறைவனின் திருவடி பாடியே மகிழ்ந்து புகழ்ந்து இணைந்து விரைந்து பணிவோம் அவர் பதமே 1. தாயின் கருவில் தோன்றும் முன்பே தயவாய் நம்மை தெரிந்தார் தனிப்பெரும் கருணையில் நம் பெயரெல்லாம் தம் கையில் பொறித்து வைத்தார் தாயாக நாளும் சேயாக நம்மை கண்போல காக்கின்றார் இந்நாளில் நாமும் ஒன்றாகக்கூடி பண்பாடி பணிந்திடுவோம் 2. அரணும் கோட்டையும் கேடயமானவர் அவர் புகழ் பாடிடுவோம் வாழ்வும் வழியும் வலிமையும் ஆனவர் அவரடி பணிந்திடுவோம் வற்றாத நதியாய் அருள் வாரி வழங்கும் பலிபீடம் சூழ்ந்திடுவோம் அருளோடு நாமும் உறவோடு வாழ்வோம் உலகோர்க்கும் உரைத்திடுவோம்
  6. வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் நவம்பர் 7, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து பூநகரி வெற்றி விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்து விட்டது.” “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்துவிட்டதென்பதும் எமக்குத் தெரியும்” “தனக்குத் தெரிந்தது தெரிந்ததும், நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை. எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், இறுமாந்திருந்த அரக்கனும் சிறுவனும் போலான போதும் எம்மைக் “குறிதவறாத தாவீதாய்” ஆக்கினர் எம் வேவு வீரர்கள். வேவு வீரர்களாகப் பணியாற்ற எல்லோராலும் முடியாது. விடுதலைப் புலிகளிலும் எல்லோராலும் முடியாது. வேவு வீரனின் ஒவ்வொரு நாள் வாழ்வும், வாழ்வுக்கும் – சாவுக்கும் இடையேயான போராட்டம்; அந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நகர்வும் – ஒவ்வொரு அசைவும் அவனது உயிர் வாழ்விற்கான சாத்தியத்தையும் அசாத்தியத்தையும் மட்டுமல்ல, எம் போராட்டத்தின் புத்துயிர்ப்பையும், எம் மக்களின் புது வாழ்வையும் தீர்மானிப்பதாய் அமைந்தன. வேவுப் பணியில் ஈடுபடுபவர்களின் கடமை தனித்துவமான பல பண்புகளைக் கொண்டது. கடும் உழைப்புக்கு ஈடு கொடுக்கக்கூடிய உடல்வலு உள்ளவர்களாகவும், தொடர்ச்சியான – கடுமையான வாழ்க்கை முறைக்கு நின்றுபிடிக்கத்தக்க சகிப்புத் தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். நிலவில்லாத முழு இரவில், நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் இடங்களை அடையாளம் கண்டு, மைல்க் கணக்கான தூரத்தைப் பாதைகளற்ற, பாதுகாப்பானது எனத் தீர்மானிக்கும் பகுதியால், நடந்து கடக்க வேண்டும். குறைந்தளவிலான நேரத்தில், முழு இருட்டில் பார்;ப்பவற்றை சரியானபடி விளங்கிக்கொள்ளத்தக்க அவதானிப்புத்திறன் வேண்டும். அரைகுறையாகத் தெரிபவற்றை வைத்து முழு முகாம் அமைப்பையும் மதிப்பிடக்கூடியளவிலான இராணுவ அறிவுடன், திட்டமிடலுக்கான ஆலோசனை வழங்கக்கூடியவாறும், திட்டத்தின் பாதகமான அம்சங்களை வெளிப்படுத்தும் அளவிற்குமான இராணுவ வல்லமை வேண்டும். இவ்வளவுடனும் இலட்சியத்திற்காக உயிரைத் துச்சமெனச் செயற்படுத்தும் மனப்பக்குவம் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அடுத்த நாள் வாழ்வுக்கான, அடுத்த மணிநேர வாழ்வுக்கான, அடுத்த கண வாழ்வுக்கான உத்தரவாதம் ஏதுமில்லாது தொடர்ச்சியான மன இறுக்கத்துடனான வாழ்வை, ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு கொள்கைப் பிடிப்புடன், மன உறுதி கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். என்னதான் கடுமையான வாழ்க்கை எனினும், அதனை இயல்பானதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவமும், இலட்சியப்பற்றும்தான் அவர்களை இயக்கிக் கொண்டிருந்தன. உயிர்வாழ்வின் கடைசி அத்தியாயத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்த அவர்களின் பேச்சில் தொனிக்கும் நம்பிக்கை மட்டுமல்ல – நகைச்சுவையும் அலாதியானது! இப்படித்தான் ஒருமுறை எதிரி முகாமின் ஒரு பகுதியில் வேவு வேலையில் ஈடுபட்டிருந்தான் ஒரு போராளி. ஒருபகுதியில் எதிரிகண்டுவிட்டு அடிக்கத் தொடங்க, அதில் சுட்டுத்தப்பி வேறொரு பகுதிக்குப் போய்ச் சேர, அங்கும் எதிரிகள் கண்டு சுடத்தொடங்க…… அவற்றுக்குள்ளால் மீண்டுவந்து அடுத்தநாள் அதைப் பற்றிக் கதைக்கும் போது: “அப்பா அடிக்கிறார் என்று அம்மாட்டை ஓடினால், அம்மாவும் அடிச்சா எப்படி இருக்கும்? அப்படி இருந்தது” என்றவன், பலதடவை எதிரி முகாமுள்ளே அடிபட்டுத் தப்பி வந்து சேர்ந்தவன், ஒருமுறை வர முடியவில்லை; வரவில்லை. அவ் வேவு வீரர்களிடம் இருந்த பொறுப்புணர்வு அற்புதமானது. குறிப்பிட்ட இராணுவ நிலை மீதான தாக்குதலைச் செய்வதற்கான அணியினரை அழைத்துச் செல்லும் பொறுப்பு, தெரிந்தெடுத்த ஓரிரு வேவுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். அதன் பின்னர் அவனது சிந்தனை எல்லாம் குறிப்பிட்ட அணியினரின் வெற்றி, மற்றும் வெற்றிக்கான பாதை திறப்பு என்ற வட்டத்தினுள் வந்துவிடும். ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கைக்காகத்தான் முதன் முதலில் எமது மகளிர் அணியினர் வேவு வேலையில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அனுபவம்மிக்க ஆண் போராளிகளின் வழிகாட்டலில் செயற்பட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் “ஏன் நாம் தனித்துச் செயற்படக்கூடாது” என்று குரலெழுப்பி, “மௌனமாய்ச் சிரித்த தலைவருடன் சண்டை போட்டு தனியான வேவு அணியினராக செயற்பட்டதுடன், தாக்குதலில் ஈடுபட்ட ஆண் போராளி அணிகளுக்கான வழிகாட்டிச் செல்லும் பொறுப்பையும் திறம்படச் செய்தனர். “அந்தப் பிள்ளையள் இல்லை எண்டா அங்கால் பக்கத்தாலை சரியாகக் கஸ்டப்பட்டிருப்பம்” என்று, அவ்வணியின் தளபதி மனமாரச் சொல்லும் வண்ணம் திறம்படச் செயற்பட்டனர். பூநகரிச் சமரில் எமது மகளிர் அணியின் வேவுப் பிரிவினர் நால்வர் வீரச்சாவடைந்தனர். சம நேரத்தில் பலமுனைகளில் தாக்குதல் திட்டமிடப்பட்டதால், எல்லா முனைகளிலிருந்தும் ஒரேயடியாக வேவு நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஏதாவது ஒரு பகுதியில் அனுபவக் குறைவினாலோ, திறமைக் குறைவினாலோ வேலைகள் அரைகுறையாக இருக்கும்; அல்லது வேலைகளைப் பூரணப்படுத்தவென உள்ளே சென்ற வேவு வீரன் திரும்பி வராமலே மடிந்து விட்டிருப்பான். அந்த வேளையில் தனது வேலையைத் திறமையாக நிறைவு செய்து காத்திருப்பவனிடம் பொறுப்புக் கைமாறும். தான் பார்த்த எல்லா நிலைமையையும் புதிதாய் ஒருவனுக்கு ஒவ்வொன்றாய்க் காட்டிவிட்டு தனது புதியபகுதி நோக்கி நடப்பான் அந்தப் புலிவீரன். சில அணிகள் ஓரிரு வேவு வழிகாட்டலிலேயே நீண்டதூர நகர்வினை மேற்கொள்ள வேண்டியிருக்கும் போது தான், அவன் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிப்பான். வேவு வீரன் ஒருவனுக்கு மைன்ஸ் வெடித்துக் கால் இல்லையென்றால்? என்ற கேள்விக்கு, “துண்டுபட்ட காலை இறுக்கிக் கட்டிவிட்டு என்னைத் தூக்கினால் நான் காட்டிச் செல்வேன்” என உறுதியாகப் பதிலளித்தனர் எமது வேவு வீரர்கள். மிகக் குறைந்த ஓய்வுடன் தொடர்ச்சியான பணியில் ஈடுபடும் வாழ்வில், தொடர்ந்து பல நாட்களுக்கு நல்ல உணவோ ஆறுதலான தூக்கமோ அவர்களுக்கு வாய்ப்பதில்லை. கையையும், காலையும் எறிந்துவிட்டு அவர்கள் படுத்திருப்பதைப் பார்த்தால் பாவமாய்த்தான் இருக்கும்! இராத்திரி வேலை முடிந்து திரும்பி வந்து ‘மைப்’ வேலை எல்லாம் முடிந்து படுக்க நேரம் எப்படியும் பதினொரு மணியாகிப் போயிருக்கும். எழுப்பத்தான் வேண்டும், இப்ப எழுப்பினாத்தான் நேரம் சரியா வரும். எழும்பி எல்லா வேலையும் முடிந்து முதல் பார்த்ததில் உள்ள சந்தேகங்கள் எவை எனவும், புதிதாய் பார்க்க வேண்டியவை எவை எனவும் கேட்டு முடித்துவிட்டுப் புறப்படும் போது, அநேகமாய்ச் சூரியன் பூநகரிக்குப் பின்னால் மண்டைதீவுக்குள்ளே மறைந்து கொண்டிருப்பான். மெதுவாகச் சத்தமின்றி நகர வேண்டும். நிலையாய் நிற்பதற்கும் நகர்வதற்கும் இடையே வித்தியாசம் காணமுடியாதபடியான மெதுவான நகர்வு; சிறுதவறும் அவனையும் தோழர்களையும் ஆபத்துக்குள்ளாக்கும்இ அழித்துவிடும். முகாமின் வெளிக் காவலரண் வேலியை ஊடறுத்துச் செல்வதென்பது மிகவும் கடினமான பணி. ஒன்றன்பின் ஒன்றாக முட்கம்பிச் சுருள்களும் – நிலத்தின் மேல் அரையடி உயரமாய் முட்கம்பி வலைப்பின்னலும்; காலை வைத்தால் எடுக்க முடியாது. இதைவிட ஒவ்வொரு அடி வைக்கும் போதும் – அந்த இடமும் கண்ணிவெடியாய் இருக்கலாம் – படுத்திருந்து அங்குலம் அங்குலமாகக் கண்ணிவெடியைப் பரீட்சித்தபடி நகர வேண்டும். இராணுவ முகாமைச் சுற்றிய எல்லாப் பகுதியும் கண்ணிவெடிகளால் சூழப்பட்டிருக்குமென்பது சாதாரண விடயம்தான். ஆனால் நிலவில்லாத முழு இரவில், சத்தம் ஏதும் இன்றி இரகசியமாய், கண்ணிகளின் ஊடே ஊர்ந்து செல்வது என்பது, அதுவும் இயந்திரத் துப்பாக்கியுடனும், பளீரென மின்னும் ஒளி விளக்குடனும் காத்திருக்கும் எதிரிக்கு முன்னே நகர்ந்து செல்வது என்பது சாதாரண விடயமல்ல. படுத்திருந்து மெதுமெதுவாய் கையால் தொட்டுணர்ந்து, கண்ணிவெடி என நினைத்தெடுப்பது கல்லாய் இருக்கும்; கல்லென நினைத்து கவனமின்றி எடுக்க அது கண்ணியாய் இருந்து தொலைக்கும். வேவு வீரர்களுக்கு கண்ணிவெடி வெடிப்பது காலில் மட்டுமல்ல. இப்படித்தான் ஒருமுறை கம்பிச் சுருள்களுக்கிடையில் எதிரியின் மைன்ஸ் ஒன்று வெடிக்கிறது. வெளிச்சத்தில் தேடிய எதிரி முன்னேற முற்பட்ட போது, அழைத்துச் சென்ற பெண் போராளியை பத்திரமாய் அனுப்பிவிட்டுஇ குப்பி கடித்தான் ஒரு போராளி. இருளின் கவசத்தில் நகரும் புலியின் முன்னே, எதிரி. ரவையை மழைபோல் பொழியத் தயாரான இயந்திரத் துப்பாக்கியுடன்…… பளீரெனக் கண்களைப் பறிக்கும் ஒளியைப் பாய்ச்சித் தேடுவான். எதிரியின் ஒவ்வொரு காவலரணிலும் பிரகாசமான சிறு சிறுஇ ‘லைற்’ கள் இருந்தபோதும், முழு முகாமையும் சுற்றி இடையிடையே பெரியதும் பிரகாசமானதுமான லைற்களால் அடிக்கடி சுற்றி சல்லடை போட்டுத் தேடி அவதானிப்பான் எதிரி. அவற்றைவிடத் தனியாக ‘ஓரிடத்தில் இருந்து மறு இடத்திற்கு’ நகர்ந்துகொண்டிருக்கும் ‘சுத்துச் சென்றிக்காரன்’ தனது பங்குக்கும் எல்லா லைற்களாலும் தேடியபடி போவான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நாகதேவன்துறையில் ஒன்றும், ஆலடிச்சந்தியில் மற்றதுமாய், “பெரிய அரக்கனின் சூரியக் கண்கள் போல்” சுழலும் இரண்டு பெரும் தேடொளிகள். யாழ். குடாவின் மற்றக் கரையில் இரவுப் பயிற்சியில் கள்ளமடிக்கும் பெடியளை றெயினிங் மாஸ்ரரிடம் பிடித்துக் கொடுக்கவல்ல பிரகாசமான – அந்தச் சூரியக் கண்கள் திறக்கும்போது, அங்குள்ள முழு நிலவும் பகலாகும். இருளின் கவசம் அகன்று பறக்கும். ஒரு சாதகமான பாதையைக் கண்டுபிடிக்க வாரக்கணக்காகப் போராட வேண்டும். நகரும் பாதையில் மனித நடமாட்டத்திற்கான எந்தத் தடயத்தையும் விட்டுவிடக்கூடாது. வாரக் கணக்கில் போராடிக் கண்டுபிடித்த பாதையில் ஒரு சிறு தடயத்தை விட்டாலும் எதிரி உ~hராகிவிடுவான்; அந்தப் பாதை அடைபட்டுவிடும். அங்கே ஒரு எல்.எம். ஜீயோ ஜீ.பி.எம். ஜீயோ புதிதாக முளைத்துவிடும். கும்மென்ற இருட்டில், அவர்களுக்கு மட்டும் தெரிந்த குறிப்புக்களைப் பார்த்து, மணிக்கணக்காக நடக்க வேண்டும். வெளிப்படையாகத் தெரியத்தக்க எந்த அடையாளத்தையும் வைக்காது, மரத்தையும், மண்ணையும், புல்லையும் அடையாளப்படுத்தி நடக்க அதீதத் திறமை வேண்டும். எதிரி எங்கும் நிற்கலாம் – இரவின் முழு இருட்டை ஊடறுத்து நகர்பவனைக் காட்டும் ‘நைற்விசன்’ என்னும் இரவுப் பார்வைச் சாதனங்களுடன், ஆங்காங்கே சிறு குழுவாக எம்மவரை எதிர்கொண்டு காத்திருப்பான் – எதிரி. இருட்டுக் கவசத்தில் செல்லும் புலிவீரனை நோக்கி எதிரியின் துப்பாக்கி அதிரும். எதிர்பாராத வேளையில் எதிர் பாராத திசையிலிருந்து ரவை மழையாய்ப் பொழியும்; படுத்திருந்த அரக்கன் எழுந்துவிட்டது போல் தூங்கிக் கிடந்த எதிரி முகாம் உயிர் பெறும். எல்லாப் பொயின்ற்றுகளிலிருந்தும் துப்பாக்கிகள் இயங்கத் தொடங்கும் போது, ஆள் இல்லையென நினைத்திருந்த பொயின்ற்றில் இருந்தும் எல்.எம்.ஜி. சடசடக்கும். “நல்லவேளை டம்மிப்பொயின்ற் என்று – குறூப்பை கொண்டு போயிருந்தா, நல்ல குடவை குடுத்திருப்பான்” என நினைத்தபடி ஓடிக்கொண்டிருக்கையில், பராலைற் வெளிச்சம் போதாதென்று போகஸ் லைற்றும் அடிக்கத் தொடங்கியிருப்பான். க்கியூ, க்கியூ என்று தலைக்கு மேலாலும், பக்கத்தாலும் காற்றைக் கிழித்துச் செல்லும் ரவைகளுக்கிடையே ஓடிவந்து பார்த்தால், சகதோழனைக் காணவில்லை. பயிற்சி முகாமில் கண்டது முதல் இன்றுவரை – இதோ இப்போது வரை – ஒன்றாய் வாழ்ந்த நண்பன், ஒரு கோப்பையில் உண்டு, பாயில்லாமல் ஒரு பற்றையில் உறங்கி ஒன்றாய் வாழ்ந்த நண்பனைக் காணவில்லை…… இது எம் நிலந்தான். ஆனால், எதிரி முகாமின் உள்ளேயே…… “உனக்கு காயம்பட்டு விட்டதா? எங்கேயடா நிக்குறாயென் தோழனே……” என்று குரல் வைத்துக் கூப்பிட முடியாது, காத்திருந்து பார்த்திருக்கும் வேளை கொடுமையானது. இன்னொரு வேளை “நீங்கள் இதில் நில்லுங்கள்; நான் உள்ளே போய் கிளியர் பண்ணிக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லிப் போவான் ஒரு தோழன். மரத்துடன் மரமாய், பற்றையுடன் பற்றையாய், புல்லுடன் புல்லாய், நிலத்துடன் நிலமாய், நீருடன் நீராகக் கலந்து மணிக்கணக்காக, நாட்கணக்காக – காத்திருந்து பார்த்திருந்து மீளும் வேவு வீரனை எண்ணித் தோழர்கள் காத்திருப்பர் – வெளியே. ‘என்ன இன்னும் காணவில்லை’ என நினைத்திருக்கும் வேளைஇ உள்ளே போனவன் வந்ததும் உண்டு; வராமலே விட்டதும் உண்டு. தனிமையில் தன்னையும், கையில் உள்ள ஆயுதத்தையும், கழுத்தில் உள்ள குப்பியையும் நம்பி ஆயிரம் பகைவன் உள்ள எதிரிப் பாசறைக்குள் தன்னந் தனியாய் நுழையும் வேவு வீரனின் எண்ணங்கள் எங்கெங்கோ ஓடும். நீரில் மூழ்கி, மழையில் தோய்ந்து, ஈரத்தில் ஊறி எல்லாம் ஈரமாய் நடக்கும் வேளை, அரப்புவைத்து முழுகவிட்டு, ஈரம் துடைத்து, தலைக்குப் பவுடரும் போட்டுத் தேய்த்துக் காயவிட்டு “சாப்பிடடா மோனை” என்று கொஞ்சும் அம்மா…… நினைவுக்கு வராமலா போவாள்! உடலெங்கும் நுளம்பு மொய்த்து கண், காது, மூக்கு என எங்கும் கடித்துத் தின்ன, கலைக்கவும் மாட்டாது குளிரில் நடுநடுங்கி வாடும்வேளை, சும்மா படுத்ததைக் கண்டு போர்வையால் மெல்லப் போர்த்து அன்பாய்த் தடவிப் போகும் அப்பா…… நினைவுக்கு வராமலா போவார்? அதற்கும் மேலாய், எல்லாவற்றிற்கும் மேலாய் இது எங்களின் நாடு, எம்மக்களின் பூமி என்ற நினைவு மேலோங்கும். கடுமையான பயிற்சியும், கடினமான முயற்சியுமே வெற்றிக்கு அடிப்படை என அடிக்கடி உரைக்கும் தலைவனின் நினைவும் மேலோங்கும். “நீ இதில் நில், நான் உள்ளே போகிறேன் வெடிச்சத்தம் கேட்டால் நீ திரும்பிப் போ – நான் வருவேன்” என்று கூறிவிட்டுச் சென்று, வராமலே போய்விட்ட உயிர்த்தோழன் நினைவுக்கு வருவான். மெல்ல நகர்கையில் தடக்கி விழுத்திய வயலின் வரம்பு, ‘இப்ப முதல் உழவு உழுதிருக்க வேணும்……’ என்ற நினைப்பில் அவனை ஆழ்த்தும். சுதந்திரமாய் நீந்திக் குளித்த குளமும், ஏறிக் குதித்த மாமரமும் இன்று பகைவனின் பாசறையாய் ஆனதை எண்ணி நெஞ்சு கனக்கும். எங்களது தாய் மண்ணைப் போலவே அழகான யாழ்ப்பாணக் கடலேரி! அழகான அந்தக் கடலேரியின் உள்ளேதான் எத்தனை கொடுமையும், துயரமும்? நேரம் நீண்டு செல்லும். தண்ணீரில் நடந்தும்இ மிதந்தும், வலித்தும் செல்லும் வேவு வீரனின் எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றும். கத்தியுடன் வந்த பகைவனைப் பார்த்துக் கும்பிட்ட அந்த அம்மா “என் அம்மாவைப் போலொரு அம்மா” – வெட்டுண்ட தலையுடன் இந்தத் தண்ணீரில் தானே மிதந்தாள்? முத்தமிட்டு ‘டாட்டா’ காட்டிய சின்னவள் சொன்ன பொம்மையுடன் வந்த அப்பா – “என் அப்பாவைப் போலொரு அப்பா” – இந்தத் தண்ணீரில்தானே மிதந்தார்? “அப்பா எப்ப பொம்மையுடன் வருவார்?” என்ற பிள்ளையுடன் அம்மா கண்ணீரில் குளித்திருந்த போது, அப்பா இந்தத் தண்ணீரில்தானே கரைந்தார்? எங்களது சொந்தங்களும் உறவுகளும் கலந்து கரைந்த உப்புநீர், எம்மக்களின் குருதி கலந்த நீர்; குருதியுடன் உயிரும் கலந்த நீர். எம் மக்களின் குருதியும் உயிரும் கலந்ததாலோ அந்தத் தண்ணீரில் நனைகையில் புதிய உணர்வு பிறக்கிறது! “மேனியைத் தழுவும் தண்ணீரைத் தடவி, வாயில் எடுத்து மெதுவாய் உமிழும் போது…… உப்புக் கரிக்காது” யாழ். நீரேரிக்கும் எம் வேவு வீரர்களுக்கும் இடையேயான உறவு ஆழமானது. அன்பு கொள்வதும் கோபப்படுவதுமாய் அவர்களின் நட்பில் பல கதைகள்…… மாலை மென்னிருட்டில், தூரத்தே தெரியும் வெளிச்சத்தை பார்த்தபடி இடுப்பளவு தண்ணீரில் நடக்கத் தொடங்கும் போது, அந்தக் கடல் மகள்…… எங்கள் யாழ்ப்பாண நீர்நங்கை அற்புதமான அழகிதான்! கூட்டமாய்த் துள்ளும் திரளியும், வரிசையாய்ப் பறக்கும் கொக்குகளுமாய் அழகை ரசித்தபடி நடக்கையில், வழிமாறி வந்த பெரிய மீன் ஒன்று காலில் இடற, என்னவோ ஏதோவென்று பாய்ந்து விழுபவனை எல்லோரமாய்ச் சேர்ந்து தாட்டு மிதத்தி…… ‘றெக்கி’ வேலை முடிந்து பசியும் களைப்புமாய் உடல் சோர்ந்து, அதிகாலையில் பிறை நிலவைப் பார்த்தபடி திரும்புகையில், அவன் பேசாமல்தான் வருவான். என்னில் என்ன கோபமோ என்று, கடல் மகள் மெல்லக்குமுறி ஆர்ப்பரிக்க, இடுப்பளவாய் இருந்த நீர்மட்டம் மேலேறி, மேலே மேலே ஏறி, நுனிக்காலுக்கும் எட்டாத் தண்ணீராய் மேலெழுந்து நிற்கையில், கடல் மகளின் காதல் போய் எம்வீரர் தத்தளிக்கத் தொடங்குவர். முகாம் வேவுப்பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு திரும்பி வந்த எம் வேவு அணியினர், கடலில் தம் தோழனை இழந்த சோகத்துடன், கடல் மகள் மேல் கோபத்துடன் மீண்டதும் உண்டு. பௌர்ணமியும் அமாவாசையும், நிலவின் உதயமும் மறைவும் கடல் நீரேரியில் நிகழ்த்தும் மாற்றம் அற்புதமானது. நிலவின் உதயத்தில் அமைதியாய் இருக்கும் கடலேரி. நேரம் செல்லச் செல்ல, பெருங்கடலில் இருந்து மெதுவாக உள்ளே வரத் தொடங்கும் நீரோட்டம். ஆளை இழுக்கும் வேகம் பெற்று – உச்சவேகம் பெற்று, நீர்மட்டம் உயர்ந்து மெதுவாய்த் தணியும். பின்னர் நிலவு மறையத் தொடங்க கொஞ்சம் கொஞ்சமாய் கடலுக்குத் திரும்பும் தண்ணீர் வேகம் பெற்றுஇ உச்ச வேகம் பெற்றுத் தணிந்து, நிலவின் அடுத்த உதயத்தைப் பார்த்துத் தணித்திருக்கும் நீரோட்டம். பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையானது, நீர்மட்டத்திலும், நீரோட்டத்திலும் ஏற்படுத்தும் ஜாலத்தைத் துல்லியமாய் ரசிக்கலாம் யாழ். கடலேரியில். இந் நீரேரி புலிவீரர்களுடன் மட்டுமல்ல, எம் தாயகத்தின் நிலத்துடன் மட்டுமல்ல, எம்மினத்தின் நீண்ட வரலாற்றுடனும் பின்னிப் பிணைந்தது. நீண்ட வரலாற்றின் பல்வேறு காலங்களில், அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டது எமது மண். போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆக்கிரமித்ததும், பின்னர் அதிகார மாற்றம் ஏற்பட்டு ஈழத்தமிழர் சிங்களவர்களின் அடிமைகளாய் கைமாற்றமானதும், தொடர்ந்தும் தமிழர்கள் அடிமைகளாய் இருக்க மறுத்துப் போராடியதால் சிங்களவர்கள் தமது அதிகாரத்தை இந்தியர்களிடம் கைமாற்றிக் கொடுத்ததும்இ இந்தியர் சிங்களவர்களிடமே அதிகாரத்தைக் கொடுத்துவிட்டுப் போய்ச் சேர்ந்ததும் என, தமிழீழ மக்கள் மீதான ஆக்கிரமிப்பு நீண்ட பெரும் தொடர் வரலாறு. போர்த்துக்கீசர் கையில் யாழ்ப்பாணமும், ஒல்லாந்தர் கையில் கொழும்புடன் பிறபகுதிகளுமாகப் பிடிபட்டிருந்ததாம். போர்த்துக்கீசர் கையிலிருந்த யாழ்ப்பாணத்தைப் பிடிக்க வந்து மன்னாரில் தரித்திருந்த ஒல்லாந்துப்படை, அடம்பன் வழியாக பூநகரி வந்து, பூநகரியில் இருந்து இந்த ‘யாழ் நீரேரி’யூடாகச் சாவகச்சேரி வந்து, பின்பக்கத்தால் போர்த்துக்கீசரை மோதி அழித்து, யாழ்ப்பாணத்தைப் பிடித்து தமிழர் மீதான அடிமைக் கைமாற்றம் நிகழ்ந்ததாம். எம்மை அடிமைகொள்ள வந்த அந்தியப்படை நடந்த அதே நீரேரியில், எம்மக்களை விடுவிக்க இன்று எம் வேவு வீரர்கள் நடக்கிறார்கள். எம்மை அடிமைகொள்ள வந்த பகைவன் நடந்த பாதையில், எம் நாடு எமக்கே சொந்தம் என்ற இறுமாப்புடன் எம் வீரர்கள் நடப்பது கண்டு, யாழ். நீர்நங்கை சிரிக்கிறாள். அன்று பகைவனைப் பார்த்து அஞ்சி ஒடுங்கி, அழுது நடுநடுங்கி வாழ்ந்த எம் பெண்டிரின் பேத்தியின் பேத்திகள், இன்று நிமிர்ந்த நெஞ்சுடன் வேவுப் புலி வீரராய்ப் பகைவனைத் தேடிப் புறப்படும் காட்சி கண்டு, யாழ். நீர்நங்கை சிரிக்கிறாளோ! அந்த யாழ். நீர்நங்கை எல்லாம் அறிந்தவள். பகைவனின் கரையில் ஏறிய புலிகளில் எதிரியின் துப்பாக்கி தீ உமிழ்ந்ததும், பக்கம் ஒருவராய் நீரில் வீழ்ந்து சரிந்த எம் வீரரில் ஒருவனுடல் பகைவன் கையில் வீழ்ந்ததும். “அது எது” வென நெருங்கிய எம் மீனவர், “ஐயோ எம்பிள்ளை” எனத் துடித்துத் தூக்கியதும் இந்தக் கடல்மகள் அறிவாள். தூரத்தே எதிரி சுடும் சத்தம் கேட்டு, அது எதற்கோ……? எம்மவரைக் கண்டு சுட்டானோ……? போன எம் தோழன் வீழ்ந்துவிட்டானோ……? எனக் கலங்கிக் காத்திருந்து, காலைவரைக் காத்திருந்து…… மிதந்து வந்த தோழனை அள்ளி எடுத்தழுததும், மீண்டு வந்த தோழனை அணைத்து ஆடி மகிழ்ந்ததும், இந்தக் கடல்மகள் அறிவாள். வெற்றிலைக்கேணி, வளலாய், மண்கிண்டிமலை, பூநகரி என எம் ஒவ்வொரு வெற்றிக்கும் வித்திட்டவர்கள் எம் வேவு வீரர்கள். எம் தாயகத்தைச் சிதைத்தழிப்போம் எனச் சபதமிட்டு, யாழ் நகரைப் பிடிக்கவெனத் திட்டமிட்டுச் செயற்படுத்த முனைந்த வடபகுதியின் படைத்துறைத் தலைமையை, அராலியில் வைத்து அழித்தொழித்தவர்கள் எம் வேவு வீரர்களே. குறிப்பாக தமிழீழ நாட்டின் பெருவெற்றியாய் அமைந்த ‘ஒப்பரேசன் தவளை’ நடவடிக்கையில் வேவு வீரர்களின் பங்கு மகத்தானது. வெற்றிலைக்கேணி வெற்றிக்கு வித்திட்ட சிவாஜி. மண்கிண்டிமலையின் வரலாற்றுக்கு வழிகாட்டிய றொகான், ரமணன், பனம்பாரன். பதவியா கொங்கேவேயவின் வெற்றிச்சிற்பிகள் மழலேஸ், நித்தி. பூநகரி கேணல் மீதான கண்ணிவெடிக்கு தர்மேந்திராவுடன் கண்ணிவெடி சுமந்த குருவேல் என்று, பூநகரி வெற்றியில் வித்தான வேங்கைகள் பற்பலர். அவர்களது முயற்சியால், அர்ப்பணிப்பால் இன்று எம் தாயகம் வெற்றிக்களிப்பில் மிதக்கிறது. வீழ்ந்த வேங்கைகளின் தோழர்கள் தம்புதிய இலக்குகளை நோக்கி, அதே இருளின் கவசத்தில், அதே தேடொளிக்கு மறைந்து நகர்கின்றார்கள். இலக்கு புதியது, கையில் உள்ள ஆயுதம் புதியது, அவர்களது அனுபவமும் புதியது. ஆனால் நினைவில் மட்டும் அவர்களது அதே தோழர்களும், அதே இலட்சியமும் தான்! கப்டன் ராமன் ஏரம்பமூர்த்தி டேவிட் கன்னங்குடா, மட்டக்களப்பு 25.03.1974 – 05.01,1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வீரச்சாவு. லெப்டினன்ட் தமிழ்மறவன் / வீரபாண்டியன் மேகவண்ணன் பூசங்கர் ஒலுமடு, வவுனியா 27.05.1975 – 24.08.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடக் கடற்படை முகாமை வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு. லெப்டினன்ட் மழலேஸ்வரன் / மழலேஸ் செல்லத்தம்பி விநாயகர் நெடுங்கேணி, முல்லைத்தீவு 12.06.1972 – 24.08.1993 வன்னியில் நடாத்தப்பட்ட கோன்கோவேய மினிமுகாம் தகர்ப்பிற்கு சிறப்பாக வேவு பார்த்தமைக்காகத் தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர். மண்கிண்டிமலை முகாம் மீதான “இதயபூமி 01” தாக்குதலுக்காக சிறப்பாக வேவு பார்த்து, வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதிக்கு வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு. லெப்டினன்ட் ரட்ணேஸ் / ரட்ணம் சிறிதர் உமாச்சந்திரன் பிரதான வீதி, மன்னார். 07.03.1973 – 17.08.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியிலுள்ள பந்தலடி முகாமில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. லெப்டினன்ட் கெங்காதரன் / கங்கா கண்ணையா முத்துக்குமார் பாரதிபுடம், மட்டக்களப்பு 03.07.1970 – 22.02.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடாப் பகுதியை வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு. லெப்டினன்ட் ரவிக்குமார் சிவகுரு யுவராஜா கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு 19.09.1970 – 30.05.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதி வேவுவேலையை திறம்படச் செய்தவர். பின்னர் வேவுக்காக சென்றபோது மைன்ஸ் வெடித்ததால் குப்பி கடித்து வீரச்சாவு. லெப்டினன்ட் பத்மசீலன் அழகையா காந்தரட்ணம் ஏறாவூர், மட்டக்களப்பு 09.03.1973 – 15.06.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. லெப்டினன்ட் இளந்தேவன் / இளங்கோ தர்மலிங்கம் சிறிதரன் பூநகரி, மன்னார் 15.07.1970 – 07.091993 இவர் 1992ம் ஆண்டு இடம்பெற்ற சங்குப்பிட்டி – பூநகரி பாதையிலுள்ள “றவுண்டபோட்” பகுதியிலான தாக்குதலுக்காக சிறப்பாக வேவு பார்த்தவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி பல பகுதிகளையும் திறமையாக வேவு பார்த்தவர். பூநகரி முகாமினுள் ஊடுருவி வேவு பார்த்துவிட்டு திரும்பும்போது வீரச்சாவு. லெப்டினன்ட் செல்வன் / ஆனந்தன் முருகேசுப்பிள்ளை சரவணபவன் கலட்டி, யாழ்ப்பாணம் (காரைநகர்) 29.09.1975 – 09.091993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கித் தாக்குதலில் வீரச்சாவு. கப்டன் கதிரவன் / றொகான் வீரப்பு சந்திரன் சேமமடு, வவுனியா 31.07.1973 – 10.09.1993 லெப். கேணல் சுபன் தலைமையிலான பள்ளிக்குடாப் பகுதி 62 காவலரண்களின் தகர்ப்பில் சிறப்பாக வேவு பார்த்தமைக்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர். மண்கிண்டிமலை மீதான “இதயபூமி 01” நடவடிக்கைக்காக திறமையாக வேவு பார்த்து, வெற்றிக்காகப் பெரும் பங்காற்றியவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு பார்க்கச் சென்றபோது வீரச்சாவு. 2ம் லெப்டினன்ட் பனம்பாரன் தங்கராசா சதீஸ்வரன் கந்தர்மடம், யாழ்ப்பாணம் 20.04.1976 – 09.09.1993 மண்கிண்டிமலை மீதான “இதயபூமி 01” தாக்குதலுக்காக வேவு பார்த்தவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கி தாக்குதலில் வீரச்சாவு. லெப்டினன்ட் சிவம் சின்னையா கமலேஸ்வரன் கோப்பாய், யாழ்ப்பாணம் (வளலாய்) 17.05.1969 – 09.09.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வாடியடி சந்தியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, எதிரியின் யுத்த டாங்கி தாக்குதலில் வீரச்சாவு. கப்டன் ஆராமுதன் / நிரேஸ் குலவீரசிங்கம் தேவபாலன் மீசாலை, யாழ்ப்பாணம் 16.09.1972 – 23.09.1993 வளலாய் இராணுவ வேலியைத் தாக்கியழித்தமைக்கான வேவு, மாதகலில் இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலுக்கான வேவு. “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முகாமை வேவு பார்த்துவிட்டுத் திரும்புகையில் சங்குப்பிட்டி – கேரதீவு கடலில் வீரச்சாவு. கப்டன் அருளரசன் கணேசன் கருணாநிதி களுதாவளை, மட்டக்களப்பு 10.09.1974 – 13.10.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடா முகாமையும், கடற்கரை பகுதியையும் சிறப்பாக வேவு பார்த்து பூரணப்படுத்தியவர். பள்ளிக்குடா பகுதிக்குள் வேவுக்காக ஊடுருவிச் செல்லும்போது வீரச்சாவு. லெப்டினன்ட் செங்கண்ணன் / சத்தியராஜ் முருகேசு திராவிடமுத்து 15ம் கிராமம், அம்பாறை 09.11.1973 – 24.10.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. லெப்டினன்ட் நிலவேந்தன் / நடேஸ்வரன் சுப்பிரமணியம் கண்ணன் புலோலி, யாழ்ப்பாணம் 26.05.1974 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடம் முன்னணிக் காவலரண்களை வேவு பாத்ததுடன், தாக்கல் அணிக்கான வழிகாட்டியாக்க வீரச்சாவு. கப்டன் நிரஞ்சன் பாபு இராஜசிங்கம் வற்றாப்பளை, முல்லைத்தீவு 25.07.1972 – 12.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக கறுக்காய் பகுதியிலும், நாகதேவன்துறையிலும் வேவு நடவடிக்கையிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாக செயற்பட்டவர். கப்டன் துளசிராம் சின்னமணி தாமரைச்செல்வி கிளிநொச்சி (பருத்தித்துறை) 17.08.1974 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முன்னணிக் காவலரண் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், ஆண்களின் தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர்களில் இருவரும் ஒருவர். லெப்டினன்ட் திண்ணியன் / ரங்கா கணபதிப்பிள்ளை கருணாநிதி களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு 13.08.1971 – 24.10.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. லெப்டினன்ட் நித்தி துரைராஜசிங்கம் சுந்தரேஸ்வரன் நெடுங்கேணி, முல்லைத்தீவு 25.02.1975 – 30.10.1993 மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீதான “இதயபூமி 01” நடவடிக்கைக்கான வேவு. “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கெளதாரிமுனைப் பகுதி இராணுவ முகாம் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவு. கப்டன் குருவேல் சற்குருதாசன் செல்வநேசன் பாரியாரிகண்டல், மன்னர் 16.12.1970 – 11.11.1993 பூநகரி பகுதியில் ஊடுருவி கேணல் சித்திரப் புஞ்சிகேவா மீது நடாத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலுக்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் பரிசு பெற்றவர். லெப். கேணல் சுபன் தலைமையில் நடாத்தப்பட்ட பள்ளிக்குடா காவலரண்கள் 62 மீதான வேவு. “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் மீதான வேவுடன் வழிகாட்டியாகவும் சென்றவர். லெப்டினன்ட் மகிழினி அருள்வாசகம் சகாயபாமா செபஸ்ரியார் கோவிலடி, யாழ்ப்பாணம். 30.04.1974 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் மைனா / மணி செல்லையா வசந்தி புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு 09.10.1976 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண்கள் மீதான வேவிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் இளவரசி செல்லையா கலாநிதி ஜெயந்திநகர், கிளிநொச்சி 24.08.1968 – 11.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, வில்லடி முகாம் முன்னணிக் காவலரண்கள் மீதான வேவிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் அழகநம்பி / ரோமியோ கந்தசாமி செந்தில்நாதன் கொக்குவில், யாழ்ப்பாணம் 17.09.1976 – 13.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, ஞானிமடம் பகுதியில் வேவு பார்த்ததுடன், தாக்குதல் உதவி அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் செய்யவன் / நேரு கணபதிப்பிள்ளை தங்கரூபன் பெரியப்பளை, யாழ்ப்பாணம் 13.11.1993 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி முகாம் வேவு நடவடிக்கையிலும், தாக்குதல் அணிக்கான வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். லெப்டினன்ட் ரமணன் சிவஞானம் சிவபாலன் பன்னாலை, யாழ்ப்பாணம் 01.04.1975 – 13.11.1993 மண்கிண்டிமலை முகாம் மீதான தகர்ப்பிற்கான “இதயபூமி 01” நடவடிக்கைக்கான வேவு நடவடிக்கையில் ஈடுபட்டவர். “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு, தாக்குதல் அணிக்கு வழிகாட்டியாகவும் செயற்பட்டவர். மேஜர் செம்பியன் / சிவாஜி சின்னத்தம்பி குமரலிங்கம் செம்பியன்பற்று, யாழ்ப்பாணம் 25.02.1974 – 13.11.1993 கட்டைக்காடு மினிமுகாம் தகர்ப்பிற்கான வேவிற்காக தமிழீழத் தேசியத் தலைவரிடம் சிறப்புப்பரிசு பெற்றவர். வளலாய்ப் பகுதியில் இராணுவ வேலியைத் தாக்கி அழிப்பதற்கான வேவு. “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, பள்ளிக்குடாப் பகுதி வேவு; பின்னர் வில்லடி பிரதான கட்டளை முகாம் மீதான வேவுடன் பிரதான வழிகாட்டியாகவும் சென்றவர். கப்டன் முகுந்தன் / கிருமானி பிரான்சிஸ் றொபேட் வின்சன் குருநகர், யாழ்ப்பாணம் 29.08.1973 – 30.11.1992 “ஒப்பரேசன் தவளை” நடவடிக்கைக்காக பூநகரி, கல்முனைப் பகுதியை வேவு பார்த்துவிட்டுத் திரும்பும்போது வீரச்சாவு. “கெரில்லாப் போர் முறையில் சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்த நாம், இன்று பாரிய படைத்தளங்களைத் தாக்கி அழிக்கும் சக்தி பெற்றவர்களாக வளர்ச்சி கண்டுள்ளோம். இந்த அபாரமான முன்னேற்றத்திற்கு வேவுப்பிரிவினரின் பங்கு முக்கியமானது. மிகவும் கஸ்டமானதும், மிகவும் சாதுரியமானதும், மிகவும் ஆபத்து நிறைந்ததுமான வேவுப் பணியில் ஈடுபடும் போராளிகள் தரும் தகவல்களைக் கொண்டே தாக்குதல் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன; தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்த முடிகின்றது. வேவு வீரர்களின் துணிகர சாதனைகள் மூலமே, நாம் பூநகரியில் பெரும் சமர் புரிந்து வெற்றியீட்ட முடிந்தது. வேவுப்பணியில் ஈடுபடும் போராளிகளின் ஒவ்வொரு நிமிடமும் ஆபத்து நிறைந்தது; உயிருக்கு உத்தரவாதமில்லாதது. இந்தப் பணியின் போது எத்தனையோ அற்புதமான போராளிகளை நாம் பறிகொடுத்துவிட்டோம். இந்த அர்ப்பணிப்புக்களின் பயனாகவே நாம் போர்முனைகளில் பெரும் வெற்றிகளை ஈட்டிக்கொள்ள முடிகின்றது.” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். நினைவுப்பகிர்வு: ச.பொட்டு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (தை, 1994) https://thesakkatru.com/the-fighters-responsible-for-the-victory/
  7. கைகளை ஏந்தி விட்டேன் ... கண்ணீரை சிந்தி விட்டேன்
  8. 2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி நவம்பர் 7, 2020/தேசக்காற்று/அணையாத தீபங்கள், வழித்தடங்கள்/0 கருத்து சுதந்திரத்தைத் தேடி 2ம் லெப்டினன்ட் மயூரி, வீரவேங்கை வஞ்சி இரண்டும் சரியான துடியாட்டம். பரபரவென வண்டுகள் போல சுழலும் கருவிழிகளில் எப்போதுமே எதையும் ஆராய்ந்து துருவும் இயல்பு தெரியும். மயூரி, வஞ்சி என்றால் எல்லோருக்கும் விருப்பம். இரண்டும் சரியான சின்னன். வஞ்சி கறுப்பு. உருண்டைக் கண்கள். மயூரி மாநிறம் நல்ல சொக்கு. பால்மணம் கொஞ்சம்கூட மாறவில்லை. ஆனால் பயிற்சியின் போது ‘பெரிய மனிதர்கள்’ போல் நடந்துகொள்வார்கள். இருவரும் 1993ம் ஆண்டின் முற்பகுதியில், மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த மகளிர் படையணியுடன் வந்திருந்தார்கள். மட்டக்களப்புத் தமிழ் சாதாரணமாகவே கேட்க அழகாக இருக்கும். இவர்கள் தங்கள் மழலை மொழியில் அந்தத் தமிழை உச்சரிக்கும் போது இன்னும் அழகாக இருக்கும். ‘அக்கா’ என்று சொல்லத் தெரியாது.’ அக்கே, அக்கே’ என்று கொஞ்சுவார்கள். இருவரும் சின்னவர்கள் என்பதால் எல்லோரும் இவர்களுக்குச் சரியான செல்லம். செல்லம் என்பதால் குழப்படி செய்வதில்லை. நிறையக் குறும்புகள் செய்வார்கள். மட்டக்களப்பிலிருந்து வந்த புதிதில், அங்கிருந்து வந்த எல்லோரிடமிருந்தும் பயிற்சியாளர்கள் அவ்விடத்துப் பயிற்சி பற்றிக் கேட்டு இவ்விடத்துப் பயிற்சி பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு காடு என்பது தண்ணீர் பட்டபாடு, காவல் உலாப் போகும் இராணுவ அணியை மறைந்திருந்து தாக்குவது வெல்லம் சாப்பிடுவது போல. இங்கே நடக்கின்ற தளமுற்றுகைகள், தகர்ப்புக்கள், வெளிகளில் நடக்கும் சண்டைகள் எல்லாம் அவர்களுக்குப் புதிது. ஆனையிறவு வெளிகளில் எப்படிச் சண்டை நடந்தது என்று வஞ்சிக்கும், மயூரிக்கும் வாய்கொள்ளாத ஆச்சரியம். “எப்படி அக்கே வெளிக்குள்ளே நிண்டு சண்டை பிடிச்சீங்க? நாங்களெல்லாம் பத்தைக்குள்ள உருமறைஞ்சிருந்துதான் சண்டை பிடிப்பம். நீங்க எப்படி ஆனையிறவில சண்டை பிடிச்சீங்க?” “ஏன் அந்தச் சண்டைக்கு ஆகாய, கடல், வெளித் தாக்குதல் எண்டு பேர் வைச்சீங்க?” என்றெல்லாம் துருவித்துருவிக் கேட்பார்கள். பூநகரிச் சண்டைக்கான பயிற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் வந்ததால் இவர்களும் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இரண்டு பேருக்கும் குண்டுகள் கொடுக்கப்பட்டன. பயிற்சியின் போது இருவரும் நல்ல சுறுசுறுப்பு; வகுப்புகளிலும் அப்படித்தான். ஒருமுறை சொர்ணமண்ணை, பெண் போராளிகளின் பயிற்சித் தளத்திற்கு வந்து, தான் வகுப்பில் கேட்ட கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த ஆண் போராளிகளுக்குப் பத்துக் குண்டுகளைப் பரிசாக அனுப்பியதாகவும், அதேபோல பெண் போராளிகளும் சரியாகப் பதிலளித்தால் பத்துக் குண்டுகள் தருவதாகவும் கூறினார். வஞ்சி, மயூரி உட்பட எல்லோரும் வகுப்புகளுக்கு வந்துவிட்டார்கள். சொர்ணமண்ணையின் கேள்விகளுக்கு வஞ்சியும், மயூரியும் சுறுசுறுப்பாக எழுந்து நின்று சரியான பதில்களைச் சொல்லிவிட்டார்கள். சரியாகச் சந்தோசப்பட்ட சொர்ணமண்ணை அடுத்தநாளே இரண்டு பேருக்கும் கொடுக்குமாறு பத்துக் குண்டுகளை அனுப்பிவைத்தார். குண்டுகள் கிடைத்ததில் இரண்டு பேருக்கும் சரியான புளுகு. கண்ணில் பட்ட எல்லோரிடமும் குண்டுகள் கிடைத்த விடயத்தைச் சொல்லிவிட்டு, தங்களின் பயிற்சி ஆசிரியருடன் போய் பத்துக் குண்டுகளையும் எறிந்து பயிற்சி செய்தார்கள். நாலு குண்டுகள் வெடிக்கவில்லை. எறிந்து வெடிக்காத குண்டுகளை எப்படிக் கையாளவேண்டும் என்ற பயிற்சி அப்போது இவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கவில்லை. எனவே பயிற்சி ஆசிரியர், இருவரையும் அருகில் போகவிடாமல் தடுத்துவிட்டு, அந்த இடத்தை அபாயமானது என அடையாளப்படுத்தி பலகை நட்டுவிட்டு, இவர்களைப் போகுமாறு அனுப்பிவிட்டார். பயிற்சியாசிரியர் அந்த இடத்திலேயே ஏதோ வேலையில் மூழ்கிப் போனார். தாங்கள் எறிந்த குண்டுகள் ஏன் வெடிக்கவில்லை என்று மண்டையைக் குடைந்துபார்த்து அலுத்துப்போன மயூரியும், வஞ்சியும் குண்டுகளைச் சோதித்துப் பார்க்கும் யோசனையுடன் இன்னுமொரு போராளியையும் அழைத்துக்கொண்டு, பயிற்சியாளரின் கண்ணில்படாமல் பற்றைக்குள் மறைந்து மறைந்து குண்டுகள் விழுந்த இடத்தை அண்மித்தவர்கள், ஒரு தடியால் குண்டைத் தட்டிவிட்டு ஓடிவந்து நிலை எடுத்தார்கள். திடீரென்று குண்டு வெடித்ததில் திகைத்துப்போன பயிற்சியாசிரியர் திரும்பிப் பார்க்க, பற்றைக்குள் படுத்தவாறு மூன்று சோடிக்கண்கள் திருதிருவென முழிசிக் கொண்டிருந்தன. “ஏண்டாப்பா இந்த வேலை செய்தியள்?” என்று கேட்க, “என்ன நடக்கும் எண்டு பார்த்தனாங்களக்கே” என்று பதில் வந்தது. எதையுமே உடனேயே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் எப்போதுமே மிகுந்து காணப்பட்டது. தங்களிடம் குண்டுகள் மட்டுமே இருப்பதை நினைத்து இடையிடையில் கவலைப்படுவார்கள். “சண்டைக்குப் போகேக்க குண்டுதானே தருவியள், எங்களுக்கு அருள் 89 தாங்கோ” என்பார்கள். சின்னன்கள் விருப்பத்தைக் கெடுக்கக்கூடாது என்று அருள் 89களைக் கொடுத்தால், பயிற்சித் தளத்துக்குப் போய் அவற்றை ஏவி, வெடிக்கச் செய்துவிட்டு துள்ளிக் குதிப்பார்கள். சண்டைக்கான பயிற்சி காலை ஐந்து மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவு கடந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி அல்லது ஒன்றரை மணிவரையில் நடக்கும். அது முடிந்து தளத்துக்குத் திரும்பி வந்து படுக்க அதிகாலை நான்கு மணியாகிவிடும். படுத்துவிட்டு ஐந்து மணிக்கு விழுந்தடித்து எழும்பி, பல்லை விளக்காமலேயே மைதானத்துக்குப் போகும் வழியிலுள்ள அருவியில் முகத்தைக் கழுவிக்கொண்டு ஓடிப்போகும் வழியிலேயே தலையை கைகளால் கிளறிச் சீர்படுத்திக்கொண்டு, மைதானத்துக்குப் போய்ச் சேர்வார்கள். இவ்வளவு வேலைகளும் கண்கள் மூடிய நிலையிலேயே நடைபெறும். அவ்வளவு நித்திரை. திடீரென்று நெற்றி வலிக்கும். திடுக்கிட்டு கண்களை விழித்துப் பார்த்தால் மைதானத்துக்குப் போகும் ஒற்றையடிப் பாதையிலிருந்து விலகி, காட்டுமரமொன்றுடன் மோதியிருப்பது தெரியும். நெற்றியைத் தடவியவாறே மீண்டும் ஒற்றையடிப் பாதையால் ஓட்டம். ஓரளவு வெட்டையான இடங்களில் எழும்பி ஓடுவதற்கு அனுமதியில்லை. ஊர்ந்துதான் போகவேண்டும். காடுகள் என்பதால் இரவு நேரங்களில் மாடுகள் ஓரிடத்தில் கூட்டம் கூட்டமாக தங்கியிருந்துவிட்டுக் காலையில் போகும். அந்த இடம் ஒரே சாணமாக இருக்கும். சும்மாவே முழங்காலளவு சேறும், அதற்கு மேல் அரையடி உயரம் வரை தண்ணீரும் நிற்கும். அதற்குள் மாட்டுச் சாணமும் சேர்ந்தால், நிலைமையைச் சொல்லத் தேவையில்லை. அந்த அழகான பாதையால்தான் எங்கள் படையணி ஊர்ந்தவாறு செல்லும். நடக்கின்ற போதே நித்திரை செய்யக்கூடிய வல்லமை கொண்டவர்கள், ஊர்ந்து போகத் தொடங்கினால்….. பின்னால் வந்த அணியைக் காணவில்லையே என்று திரும்பிப் பார்த்தால் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருப்பார்கள். அந்தச் சேற்றுக்குள் வஞ்சியையும், மயூரியையும் கைகளை விட்டுத் தேடினால் கண்டுபிடிக்கலாம். எல்லோரையும் தட்டிவிட்டு, “என்ன பிள்ளையள், நித்திரையோ?” என்று கேட்டால், “சீ நாங்கள் நல்ல முழிப்பு. ஆர் சொன்னது நித்திரையெண்டு” என்றவாறு ஊர்ந்து போவார்கள். எழும்பி நடக்கின்ற வேளைகளில் பார்த்தால், விண்வெளியில் நடமாடுவது போல சமநிலை இல்லாமல் ஆடி ஆடிப் போவார்கள். பெரும்பாலான போராளிகள் வயதில் இளையவர்கள். வஞ்சி, மயூரி போல மிகச் சின்னவர்களும் இருக்கிறார்கள். அம்மா, அப்பாவுடன் செல்லப்பிள்ளைகளாக துள்ளிக் குதித்துத் திரிய வேண்டிய பருவத்தில், சூரியக் கதிர்கள் கூட ஊடுருவச் சிரமப்படும் அடர்ந்த காட்டுக்குள், நாட்கணக்காக குளிக்காமல், ஒழுங்காகச் சாப்பிட நேரமில்லாமல் தங்களை வருத்தி ஒவ்வொரு போராளியும் பயிற்சி எடுப்பதைப் பார்க்க நெஞ்சுக்குள் ஏதோ செய்யும். ஆனால்…… தமிழன் வலை வீசி மீன்பிடித்த நாகதேவன்துறையில், தமிழன் வேளாண்மை செய்த பூநகரியில், ஒரு அந்நிய மொழி பேசுகின்ற இராணுவம் ஆளுவதை நினைத்தால்…. “விடக்கூடாது” என்று வெறி வரும். “அக்கே பசிக்குதக்கே” என்று வஞ்சியும், மயூரியும் முன்னால் வந்து இருப்பார்கள். சட்டியில் இருக்கும் குழைத்த சோற்றை உருட்டி கையிலெடுத்து நிமிர்ந்து பார்த்தால் இருவரும் நித்திரை தூங்கிப் போயிருப்பார்கள். மெல்லமாக வாயைத் திறந்து ஊட்டிவிட்டால், வாய்க்குள் சோற்றை வைத்தபடியே உறங்குவார்கள். “அம்மன், வாய்க்குள்ள இருக்கின்ற சோத்தை விழுங்கம்மா” என்று சொல்லிச் சொல்லி, அவர்களைத் தட்டித்தட்டி, ஒவ்வொரு சோற்று உருண்டையாக ஊட்டி அவர்களைச் சாப்பிட வைக்கும்போது…. எங்கள் மனங்களில் எழும் வேதனையையும் விஞ்சி…. ‘இந்தத் துன்பம் அடுத்த தலைமுறைக்கு வரவிடக்கூடாது. எங்களோடேயே எல்லாம் முடியட்டும்’ என்ற எண்ணம் வலுப்பெறும். ஒருநாள் அதிகாலை ‘மாதிரிச் சண்டை’ செய்து பார்க்கப்பட்டது. இரவு ஒரு மணிக்கு தொடங்கிய சண்டை அதிகாலையில் நிறுத்தப்பட்டு, இராணுவத் தளத்தின் மாதிரியைச் சூழ போராளிகள் நிலை எடுத்துப் படுத்திருந்தனர். அணிகளின் பிரதான பொறுப்பாளர்கள் எல்லா நிலைகளுக்கும் போய் நிலைகள் சரியா என்பதைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓரிடத்தில் எல்லோரும் அப்படியே நின்று விட்டனர். அவசர அவசரமாக கைகளால் கிண்டி அமைக்கப்பட்ட நிலை ஒன்றில் ஒரு சின்ன உருவம் தன்னையும் தன் ஆயுதத்தையும் குழைகளால் உருமறைத்த நிலையில் நல்ல நித்திரை. உடையும் ஈரம், நிலமும் ஈரம். ஆனால் நல்ல நித்திரை. யாரென்று பார்த்தால் மயூரி! “மயூரி எழும்பு. முன்னுக்கு ஆமியின்ர இடம். நீ நித்திரை கொள்ளுகிறாய், என்ன?” என்று ஏச, எழும்பி பொறுப்பாளரின் முகத்தைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்றாள். பொறுப்பாளர் போய்விட்டார். அவர் திரும்பி அடுத்ததரம் நிலைகளைச் சோத்திதுக்கொண்டு வரும் போது பார்த்தால், மயூரி நல்ல நித்திரையில் இருந்தாள். “மயூரி, எழும்பு” அதட்டினார். கண்களைக் கசக்கியவாறே எழும்பிய மயூரி, பொறுப்பாளரின் முகத்தை பரிதாபமாகப் பார்த்து. “அக்கோய், பேசாதீங்கக்கா. எனக்கு இப்படி இரவில நித்திரை முழிச்செல்லாம் பழக்கமில்லையக்கா, எனக்கு நித்திரை நித்திரையா வருது” என்று கண்ணீர் வடிய கெஞ்சினாள். பொறுப்பாளருக்கோ இந்த வயதில், மழைக்காலத்தில், வீட்டிலே தான் குளிராமல் போர்த்துக்கொண்டு படுத்திருந்தது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் கலங்கிப் போனார். “சரி. இனி அலேட்டா இரு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். பயிற்சி நடைபெறும் நேரங்களில் சுறுசுறுப்பாக ஓடித்திரியும் மயூரிக்கும் வஞ்சிக்கும், வகுப்பு நேரத்தை நினைத்தாலே நித்திரை வரும். பயிற்சி ஆசிரியர் முன்னுக்கு நின்று தாக்குதல்களைப் பற்றியோ, ஆயுதங்களைப் பற்றியோ விளக்கிக் கொண்டிருப்பார். அமர்ந்திருந்து கேட்பவர்கள் எல்லோரும் மிகவும் சிரமப்பட்டு விழித்துக்கொண்டிருப்பார்கள். வஞ்சி ஆகாயத்தையே பார்த்துக் கொண்டிருப்பாள். கருமுகில் ஒன்றைக் கண்டதும் பக்கத்திலிருப்பவளைச் சுரண்டி முகிலைக் காட்டுவாள். அடுத்த முகிலைக் கண்டதும் மீண்டும் சுரண்டி, “ரெண்டு முகிலும் முட்டினவுடனே மழை பெய்யும் பார்” என்பாள். ஒரு துளி மழை விழுந்தாலும் போதும். தங்களுடைய அறைக்குப் போவதற்கு ஆயத்தமாகிவிடுவாள். மழை பெய்து, பயிற்சியாசிரியர் எல்லோரையும் போகுமாறு சொல்லி வாய்மூட முன்னரே வஞ்சியும், மயூரியும் அறைக்குள்ளே ஓடிப்போய் படுத்துவிடுவார்கள். காட்டுக்குள்ளே ஒருமுறை நாங்கள் புதிய கொட்டிலொன்றை அமைத்துக்கொண்டிருந்தோம். நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கும் போது ஒரு பாம்பு வர, அதை அடித்து வாலில் கட்டி, கொட்டில் வாசலில் தொங்கவிட்டுவிட்டு, வேலையைச் செய்துகொண்டிருந்தோம். எங்களைத் தேடி வஞ்சியும் மயூரியும் வந்துவிட்டார்கள். வாசலில் தொங்கிய பாம்பைப் பார்த்துவிட்டு, “ஏன் பாம்பைத் தொங்கவிட்டிருக்கிறீங்கக்கா?” என்றார்கள். அதற்கு நாங்கள், “இந்தக் கொட்டில் கட்டி முடிய இதுக்குள்ள வச்சுச் சமைக்கப்போறம்” என்று புளுக ஆரம்பித்தோம். “என்னண்டக்கா சமைக்கிறது?” “தலைப் பக்கமாகவும் வால்ப் பக்கமாகவும் ஒரு அங்குலம் வெட்டியெறிஞ்சு போட்டு, சின்னச் சின்னத் துண்டா வெட்டிப் பொரிச்சு குழம்பு வைக்கப் போறம். ஏன் நீங்க ஒருநாளும் சாப்பிடேல்லையா?” “மட்டக்களப்புக் காட்டிலையும் பாம்பு இருக்குத்தானக்கா. ஆனா நாங்க பாம்புக்கறி சாப்பிடுறதில்லைக்கா. இஞ்ச நீங்க சாப்பிடுறனீங்க எண்டு சொல்லுறவங்கள். ஒரு பாம்பு என்னண்டு எல்லோருக்கும் கறி வைக்கக் காணும்?” “இண்டைக்கு புதுக் கொட்டிலில சமைக்க வேணுமெண்டுதான் பாம்பைப் பிடிச்சனாங்கள். எல்லோருக்கும் குடுக்க காணாதுதான். சும்மா எல்லோரும் ரேஸ்ட் பண்ணிப் பார்ப்பம்” இருவரும் உண்மையிலேயே நம்பிவிட்டார்கள். பேசாமல் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டோம். இருவரும் வியப்புடன் எம்மைப் பார்த்தார்கள். “நாங்கள் சும்மா சொன்னனாங்கள். பாம்புக் கறி சமைக்கேல்ல. பாம்பை வெட்டி உறுப்புக்களைப் பார்க்கிறதுக்குத்தான் வச்சிருக்கிறம்” என்றோம். பாம்பை நெடுக்கு வெட்டாகக் கீறிப் பிளந்து, இதயம் குடல் போன்றவற்றைக் காட்டிய போது ஆர்வத்துடன் பார்த்தார்கள். “அதென்னக்கா, இதென்னக்கா” என்று ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். பாம்பைப் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொண்டதில் இருவருக்குமே மகிழ்ச்சி. ஒரு நாள் இருவரிடமும், “உங்களைச் சண்டைக்கு விடாட்டி என்ன செய்வீங்க?” என்று கேட்டோம். உடனேயே இருவரும் வரிந்து கட்டிக்கொண்டு, “நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்ததே அண்ணையைப் பாத்திட்டு, சண்டைக்குப் போயிட்டு திரும்பிப் போறதுக்குத்தான். அதெப்படிச் சண்டைக்கு விடாமலிருக்கலாம்?. எங்களை விட்டிட்டுப் போனாலும் நாங்க ஒருத்தருக்கும் தெரியாம, வாகனம் ஒண்டில ஏறிச் சண்டை நடக்கிற இடத்துக்கு வந்திடுவம்” என்றார்கள். சண்டைக்குப் போவதற்கு என்ன தடை வந்தாலும் தாண்டத் தயாராக இருந்தார்கள். சண்டைவிடயம் தவிர்ந்த ஏனைய எல்லாவற்றிலும் குழந்தைகளாகவே நடந்துகொள்வார்கள். காட்டிலிருக்கும் போது சிற்றுண்டிகள் வந்தால் முதலில் எங்களுக்கு வந்து, பின்னர்தான் ஆண் போராளிகளுக்குப் போகும். வாகனத்தில் ஏறி எமக்குரியதை இறக்கி விட்டு , வாகனத்தின் ஓட்டுனருக்குத் தெரியாமல் ஆண் போராளிகளுக்குரிய பொதிகளில் ஓட்டை வைத்து எடுத்து, காற்சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு இறங்கிவிடுவார்கள். இரண்டு பேருமே பிரபலமற்ற, ஆனால் மிகப்பெரிய சிற்றுண்டித் திருடர்கள். நல்லூர்க் கோயில் திருவிழாவுக்குக் கூட்டிப் போயிருந்தோம். இரண்டு, இரண்டு ஐஸ்கிறீம் குடித்துவிட்டு, ஊதுகுழல் வாங்கித்தருமாறு அடம்பிடித்து, வாங்கி ஊதுகுழலை ஊதியவாறே நல்லூரைச் சுற்றிப் பார்த்தார்கள். இந்தமாதிரி எங்கேயாவது கூட்டிப்போனால் இருவருக்கும் உற்சாகம் வந்துவிடும். சின்னவர்கள்தானே? ஒருமுறை மக்கள் குடியிருப்புப் பகுதியில் தங்கிநின்ற போது பக்கத்துக் கோயிலொன்றில் திருவிழா நடந்தது. எங்களுடைய இடத்தில் நின்று பார்த்தால், சிற்றுண்டிக் கடைகள் தெரியும். விடுவார்களா வஞ்சியும் மயூரியும்? “அக்கோய், கலர் கலரா நிறைய முட்டாசிக் கடையக்கா. எங்களைக் கூட்டிக்கொண்டு போகமாட்டீங்களாக்கா?” என்று கேட்டதால் இருவரையும் கூட்டிப் போனோம். வாய் நிறைய, காற்சட்டைப் பை நிறைய இனிப்புக்களுடன் திரும்பினார்கள். சண்டைக்குப் போக முதல் எல்லோரும் முடிவெட்டி, முழுகி, அவரவரின் ஆயுதங்களுடன் படம் பிடிப்பது வழக்கம். வஞ்சியும், மயூரியும் முடிவெட்டிவிட்டு எங்களிடம் வந்து, “வடிவா இருக்கிறோமாக்கா?” என்று கேட்டு விட்டு, தங்களுடைய குண்டுகளையெல்லாம் கட்டிக்கொண்டு, ஒரு மணல் குவியலுக்கு மேல் ஏறி நின்று கம்பீரமாய் போஸ் குடுத்துவிட்டு, “நீங்களும் எங்களோட நிண்டு எடுங்கக்கா” என்று தங்கள் பொறுப்பாளர்களிடம் கேட்டு படம் எடுத்தார்கள். பொறுப்பாளர் அவர்களுடன் நின்று படம் எடுத்ததில் ஒரே சந்தோசம்தான். சண்டைக்குரிய சகல வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இனி அடிக்க வேண்டியதுதான். ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு இலக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மயூரி, வஞ்சிக்குரிய பாதையில் வழிகாட்டியுடன் இவர்கள் முன்னே போய் முட்கம்பி வேலியைத் தகர்த்தவுடன் இந்த இடைவெளியூடாக அணிகள் உட்சென்று தாக்குவதுதான் ஏற்பாடு. எதிரியின் அரணுக்கு முன்னால், முள்வேலியையும் மேவி வெள்ளம் நின்றது. தண்ணீர் சலசலக்காமல் அமைதியாக முன்னேறிய வஞ்சியும் மயூரியும் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்கள். ஏதேதோ கனவுகளெல்லாம் அவர்களுக்கு.சண்டை முடிந்து வந்து அது செய்ய வேண்டும், இது செய்யவேண்டும் என்றெல்லாம்…… எதிரியின் காவலரணுக்கு முன்புள்ள முள்வேலிகளை நெருங்கிய சமயத்தில், தற்செயலாக எதிரி ஏவிய டொங்கான் எறிகணை ஒன்று இவர்கள் அருகில் வந்து விழ…… இரண்டு குஞ்சுகளும் காணாமற் போனார்கள். இரண்டும் கடைசி நேரத்தில் புகைப்படக் கருவிக்குப் ‘போஸ்’ கொடுத்த அழகில் மயங்கியதும்…… எதையும் சுறுசுறுப்பாகவும் ஆளுமையுடனும் செய்வதைப் பார்த்து, இந்தச் சண்டை முடிய இருவருக்கும் நல்ல பொறுப்புக்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்ததும்…… இன்னும் எங்களுக்கு மறக்கவில்லை. அந்தப் பிஞ்சுகளைச் சுற்றி நாங்கள் கட்டியெளுப்பியிருந்த கனவுக்கோட்டையெல்லாம் பூநகரியில் ஓடிய இரத்த ஆறுடன் கரைந்துபோனது. சுவரில் இருந்து சிரித்துக்கொண்டேயிருக்கின்ற இரண்டு சின்னன்களையும் பார்க்கும் போதெல்லாம் “எந்தத் துன்பத்தையும் நாங்கள் அடுத்த தலைமுறை வரை தொடர விடக்கூடாது. எல்லாமே எங்களோடு முடியட்டும்” என்ற எங்களின் எண்ணம் இன்னும் வலுப்பெறுகின்றது. நீண்டகாலமாக, வளர்ச்சிகண்ட நாடுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த உரிமைப் போராட்டங்களின் பலாபலனாக பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் ஈட்டிக்கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் பெண்கள் வென்றெடுக்க முடிந்தது. கல்வி வாய்ப்பும் தொழில் வாய்ப்பும் பெற்றுக்கொள்ள முடிந்தது. எனினும் இந்த நாடுகளில் பெண்ணின் பிரச்சினைகள் தீர்ந்த பாடில்லை. – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். நினைவுப்பகிர்வு: போராளி மலைமகள். நன்றி – எரிமலை இதழ் (ஆடி 1995). https://thesakkatru.com/2nd-lieutenant-majoori-veeravengai-vagnchi/
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  10. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க🙏 சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றவரே
  11. ஓலம் கேட்டதா - நந்த்திக்கடலே சொல்லம்மா எங்கே அதிசயம்?
  12. தளராத துணிவோடு களமாடினாய் இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய் அழகான
  13. கார்த்திகைப் பூவே - தமிழீழத் தேசிய எழுச்சிப் பாடல் | மாவீரர் மாதம் | ஈழம் | தமிழீழம்
  14. செல்வ முத்து குமரன் பார் புகழும்
  15. லிங்கோத்பவ நிலையே || சுதா ரகுநாதன் || லிங்கபைரவி
  16. உனது மடியில் - சிவமோடு சிவமாக | சிவ.திரு.திவாகர் ஐயா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.