Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by colomban

  1. மேலே கோசன் தெளிவாக குறிப்பிட்டுள்ளர். இவர்களது நோக்கம் பிழையானது
  2. ஐசே நான் டொஹா கட்டர விட்டுபோய் இரண்டு வருடம் வா. நிம்ம‌தியா இலங்கைல மாஸ் ஹொல்டிங், ஹெல க்லோதிங் என பெரிய கம்பனில வெல செஞ்ச என்னை புடிச்சி ஓனர் தன்ற நோர்த் ஆப்ப்ரிகா, எகிப்து கைரோ வில உள்ள் பெக்டரில‌ போய் கொஞ்ச நாள் வெல செய் என்ரு என்னை அனிப்பினாருவா. ஐசே பசுந்தான ஈஜிப்சியன் கிளியோபட்ராக்கள் குட்டிகளோடவா இருகேன். மார சூன் வா. இன்னைக்கு எகிப்திய நைல் நதி கிட்ட ஒக்காந்து கோப்பிய உறிஞிசிட்டு ஒங்கட, ஜஸ்டின்ட கருத்த பர்ர்த்டேன் வா ஐசே சிரிப்பு தாங்க ஏலலவா. அப்ப்புடி சிரிப்பு வா தாங்க முடியலவா. ஈஜிப்சியன் குட்டிகள் என்னையா பயிதியம் என நினக்குறாங்கவா? பாவம் என்று ஒயில் தொடைக்க போனேவா. நீங்கள் வேணா வேணா சொல்ல சொல்ல போய் தொடச்சேன் வா. ஐயோ என்ட மேல் என்லாம் ஒயில் வா. ஐசே பிசின் மாதிரி ஒட்டதுவா ஒயில். சோப் போட்டும் போவுதில்லவா. லாம்பெண்ணை ஏதாவது போட ஏலுமாவா? காப்பாத்துங்க வா...
  3. அட நடிகைகளா கெல்பத்திர கிட்ட இருகிறது தானெடி என்கிட்டையும் இருக்கு. (கைப்பேசி) ஏண்டிகளா எனகொரு வீடியோ அனுப்புங்கடி இந்த காணொலிகளை நான் பார்த்தொழொலிய இந்த செய்தியையை நம்பமாட்டேன்
  4. சுவரசியமாக உள்ளது கடஞ்சா நிறைய jargons கொண்டு வந்து கொட்டியுள்ளீர்கள். பலருக்கு இது விளங்க கஸ்டமாக இருக்கும் என நினைக்கின்றேன். உங்களுக்கும் இதன் அர்த்தம் புரியாமல் பாவித்துள்ளீர்கள் Letter of credit Credit rating risk profile, risk apatite Hedging / forwarding risk analysis, modelling, technical and fundamental analysis window dressing balance sheet position dividend payable differed tax - time difference tax depreciation பிரயோகிகக்கபடும் உள்ளது மேலே உள்ள ஒவ்வொன்றுக்கும் ரிப்போர்டிங் ஸ்டன்டர்ட் உள்ளது PLC என்கிறீர்கள் related party எவரும் உள்ளார்களா ? subsidiary, associate, ஏதும் உள்ளதா? intangible asset, factious assets ஏதும் உள்ளதா? அல்லது mere window dressing ! யூகே இல் வேலை ஒரு ஒடிடராகவும், அதேவேளை பெட்ரோல் செட்டில் ஒரு விற்பனையாளராகவும் வேலை செய்த அனுபவத்தில் சொல்கின்றேன். தமிழர்கள் பலர் சுத்து மாத்து செய்யக்குடியர்வகளே அதில் சந்தேகமில்ல்லை. அமெரிக்கவிலும் என்ரோன் எனும் ஒரு எண்ணை கம்பனி இப்படி வீழ்ந்து போனது. ஒரு case study க்காக‌ கள உறவு நாதமுனி வந்து விபரமாக எழுத நயமாக வேண்டிக் கொள்கின்றேன்.
  5. பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்ற ஒரு ஆய்வும் தற்போது வெளியாகியுள்ளதாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு ஆய்வாளர் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார். கறுப்பு ஒக்டோபர் எனும் தொனிப்பொருளில் எக்ஸத் ஊடக வலையமைப்பு பணிப்பாளர் ஜே.எல்.எம் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் நிகழ்வு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பை ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது 1990 ஆண்டு எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.இந்த காலகட்டத்தில் தான் விடுதலைப் புலிகள் தங்களது செயற்பாடுகளை உற்சாகமாக மேற்கொண்டு சென்ற காலம்.அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்த காலம்.1987 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை இந்திய இராணுவம் இலங்கையில் நிலை கொண்டிருந்த காலம்.அதே நேரம் தங்களை மேலும் எவ்வாறு வளப்படுத்தலாம் என்று யோசனை செய்கின்றார்கள்.அவ்வாறு யோசிக்கின்ற போது தற்போது உள்ளது போன்று 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் உள்ள காலப்பகுதியில் தங்கத்திற்காக விலை அதிகமாக இருந்தது. எனவே தங்கத்தின் ஊடாக தங்களது அமைப்பினை பலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எவ்வாறு தங்கத்தை மீட்டெடுத்தல் என்ற எண்ணத்தில் ஈடுபட்டார்கள்.வட மாகாண முஸ்லீம்கள் விடுதலைப் புலிகளால் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்று பல ஆய்வுகள் நடைபெறுகின்றன.அதில் ஒன்று அன்று இருந்த தங்கத்தின் விலை காரணமாக தங்கத்தை சர்வதேசத்தின் ஊடாக கொண்டு சென்று அதனூடாக பணத்தை திரட்டி அதனூடாக ஆயுத கொள்வனவில் ஈடுபடலாம் என்ற ஒரு ஆய்வும் அவர்கள் மத்தியில் இருந்துள்ளது. அந்த ஆய்வின் ஊடாக தான் வட மாகாண முஸ்லீம்களுக்கு தெரியும் என்று நினைக்கின்றேன்.வடக்கில் யாழ்ப்பாணம் மன்னார் பகுதியில் காத்தான்குடி பிரதேசம் போன்று அதிகளவானவர்கள் வியாபாரிகள்.அதாவது இவ்வாறான வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அந்த தங்கங்களை எடுத்தால் ஆயுத கொள்வனவிற்காக பணம் திரட்டி கொள்ளலாம் என்று தான் அந்த வெளியேற்றம் நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என பலரும் இன்றும் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இருக்கின்ற போது வருகின்ற ஒவ்வொரு அரசாங்கத்திடமும் வடக்கு மாகாண முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட விடயம் தொடர்பில் ஓர் ஆணைக்குழுவினை நியமித்து முக்கியமாக இவர்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பது தொடர்பான அறிக்கையினை செய்து தருமாறு கோரியிருந்தோம்.ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது நியமிக்கப்படவில்லை.அவ்வாறான ஆய்வும் மேற்கொள்ளப்படவும் இல்லை.உண்மையில் அது வேதனைக்குரிய விடயம்.நான் இன்றும் கூட மகஜர் ஒன்றினை எழுதி கொண்டு வந்திருக்கின்றேன்.இந்த மகஜர் ஜனாதிபதிக்கு சமர்ப்பிப்பதற்காக ஆளுநர் ஊடாக அனுப்புவதற்கு எழுதப்பட்டுள்ளது.இந்த மகஜரில் அதே விடயத்தை மீண்டும் போட்டிருக்கின்றேன்.சுமார் 35 வருடங்களுக்கு பிறகும் ஒரு விடயத்தை நாங்கள் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டு வருகின்றோம். எனவே அந்த அடிப்படையில் வட மாகாண முஸ்லீம்கள் தங்கத்திற்காக அல்லது தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக வேண்டி வெளியேற்றப்பட்டார்கள்.என்ற மிகவும் வேதனையான நிகழ்வு ஒன்று இருக்கின்றது.அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் 1990 ஆண்டு ஒக்டோபர் மாதம் என்பது அந்த பிரதேசத்தில் வியாபாரிகள் மீனவர்கள் விவசாயிகள் என சுமார் 75 ஆயிரம் முதல் 1 இலட்சம் பேர் வரை வெளியெற்றப்பட்டார்கள் என தெரிவித்தார். Madawala Newsதங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனையMadawala Newsதங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை வ...பாறுக் ஷிஹான் தங்கத்தின் பெறுமதியை அறிந்து ஆயுதங்களை வாங்குவதற்காக வடக்கு முஸ்லீம் மக்கள் ஆயுத முனைய
  6. தேசிக்காய்கள் எல்லாம் புலம்பெயர்ந்து விட்டதிலானா இந்த விலை
  7. மட்டக்களப்பு முஸ்லீம் பகுதியில் உள்ள பிரதே செயலகம் ஒன்றில் உள்ள தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வாணி விழா நிகழ்வு செய்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் புரையோடிப் போயுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் தீவிரம் இன்னும் களையப்படவில்லை. இலங்கையில் எத்தனை அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் அரச திணைக்களங்களை ஆக்கிரமித்து நிற்கும் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் நீங்கியதாக தெரியவில்லை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்களங்களில் இன்னும் இஸ்லாமிய மத அடைப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் மேலோங்கியே உள்ளது. அங்குள்ள அரச திணைக்களங்களில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர்களால் நாடு முழுவதும் நடைபெறும் வாணி விழா நிகழ்வைக் கூட செய்யமுடியாத நிலை காணப்படுகிறது.ஏறாவூர் நகர பிரதேச செயலகம், காத்தான்குடி நகர பிரதேச செயலகம் உள்ளிட்ட பல அரச திணைக்களங்களின் தலைவர்கள் இன்றுவரை இஸ்லாமிய மத அடைப்படைவாதிகளுக்கு பயந்தே நிர்வாகம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்ததற்காக அது இஸ்லாமிய சரியா சட்டத்திற்கு எதிரானது என கூறி இஸ்லாமிய அடிப்படைவாத குழு ஒன்று அப்போதிருந்த பிரதேச செயலாளரை கடுமையாக அச்சுறுத்தியதோடு பிரதேச செயலக பகுதியில் குண்டுத் தாக்குதலையும் நடாத்தியிருந்தனர்.அன்றில் இருந்து இன்று வரை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஆட்சியிலாவது ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் வாணி விழா நிகழ்வு செய்யலாம் என்ற எதிர்பார்ப்போடுபிரதேச செயலாளரிடம் அனுமதி கோரிய தமிழ் உத்தியோகத்தர்களுக்கு வழமை போல் இம்முறையும் அனுமதி கிடைக்கவில்லை. அரச திணைக்களங்கள் என்பது அரசின் சுற்று நிருபங்களுக்கு ஏற்ப செயற்படும் திணைக்களங்களாகும். இவ்வாறு இருக்கையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகம் போன்று இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு பயந்து இன்றும் முஸ்லீம் பகுதிகளில் உள்ள பல திணைகள தலைவர்கள் செயற்பட்டு வருகின்றனர். அதற்கான ஒரு சிறந்த உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம். அனுர அரசு என்னதான் இலங்கையில் உள்ள அரச திணைக்களங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளதாக கூறினாலும் கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் உள்ள பல அரச திணைக்கள தலைவர்களுக்கு இன்றுவரை சில மதவாத அடைப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை மீறி செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது என்பதே உண்மை கிழக்கில் தொடரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீதான அச்சம் ; வாணி விழா நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு! - ஜே.வி.பி நியூஸ்
  8. (மதினாவில் மார்க்கக்கல்வியை திறன்படக்கற்று, மௌலவியாக வெளியேறி அரசியலுக்குள் தள்ளப்பட்ட ஓர் ஊடகவியலாளனின் அரசியல் வரலாறு) ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸின் ம‌தீனாவுக்கான‌ இணைப்பாள‌ராக‌ 1989ம் ஆண்டு ம‌றைந்த‌ த‌லைவ‌ர் அஷ்ர‌பினால் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் நிய‌மிக்க‌ப்ப‌ட்டார். அது முத‌ல் அக்க‌ட்சியை அர‌பு நாடுக‌ளில் உள்ள‌ இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் அறிமுக‌ப்ப‌டுத்தும் முய‌ற்சியில் அர்ப்ப‌ணிப்புட‌ன் செய‌ற்ப‌ட்டார். அத்துட‌ன் "முஸ்லிம் காங்கிர‌ஸ்" என்ற‌ ப‌த்திரிகையை அம்ம‌க்க‌ள் ம‌த்தியில் அறிமுக‌ப்ப‌டுத்தி அத‌ற்கு க‌ணிச‌மான‌ ச‌ந்தாக்க‌ளை சேர்த்துக்கொடுத்தார். அந்த‌ கால‌த்தில் முஸ்லிம் காங்கிர‌ஸின் கொழும்பு த‌லைமை காரியால‌ய‌ம் வாட‌கை க‌ட்டிட‌த்தில் இய‌ங்கிய‌தாலும் அங்கு ப‌ணி புரிவோருக்கு ச‌ம்ப‌ள‌ம் கொடுக்க‌வும் க‌ஷ்ட‌மாக‌ உள்ள‌து என்ற‌ த‌லைவ‌ரின் கூற்று கார‌ண‌மாக‌ ச‌வூதியில் உள்ள‌ முஸ்லிம்க‌ளிடையே பாரிய‌ நிதித்தேட‌லை முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி முய‌ற்சித்தார். அத‌ன் ப‌ல‌னாக‌ ப‌ல‌ ல‌ட்ச‌ம் நிதி சேக‌ரித்து க‌ட்சிக்கு அனுப்பினார். இவ்வாறு இருக்கும் நிலையில் 1990ம் ஆண்டு அஷ்ர‌ப் ஆத‌ரித்து ஜ‌னாதிப‌தியான‌, ஆர். பிரேம‌தாசாவுக்கும் விடுத‌லைப்புலிக‌ளுக்கும் இடையே புரிந்துண‌ர்வு ஏற்ப‌ட்டு முழு கிழ‌க்கு மாகாண‌ நிர்வாக‌த்தையும் புலிக‌ளிட‌ம் ஒப்ப‌டைத்தார். பிரேம‌தாச‌. புலிக‌ள் தாம் விரும்பிய‌வாறு செய‌ற்ப‌ட‌வும் விரும்பிய‌வ‌ர்க‌ளை கைது செய்ய‌வும் அனும‌தி அளிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. புலிக‌ளின் விட‌ய‌த்தில் பொலிசாரோ, இராணுவ‌மோ த‌லையிட‌க்கூடாது என்று க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்டிருந்த‌து. இத்த‌னைக்கும் பிரேம‌தாச‌வை ஜ‌னாதிப‌தியாக‌ தெரிவு செய்ய‌ தீர்க்க‌மான‌ வாக்குக‌ளை கிழ‌க்கு முஸ்லிம்க‌ளிட‌ம் பெற்றுக்கொடுத்த‌து முஸ்லிம் காங்கிர‌சே. அக்க‌ட்சி ஜ‌ன‌திப‌தியின் ப‌ங்காளி க‌ட்சியாக‌, அஷ்ர‌பின் ஆலோச‌னைப‌டி ந‌ட‌க்கும் பிரேம‌தாச‌வின் துணையாக‌ இருந்த‌து. இந்த‌ நிலையில் க‌ல்முனையில் பாரிய‌ முகாம் அமைத்திருந்த‌ புலிக‌ள் முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளை கைது செய்ய‌த்தொட‌ங்கின‌ர். இத‌னை அஷ்ர‌ப் வெளிப்ப‌டையாக‌ க‌ண்டித்து அர‌சிய‌ல் செய்தாரே த‌விர‌ தன‌து அபிமான‌த்துக்குரிய‌ பிரேம‌தாச‌வை அணுகி இத‌னைக்க‌ட்டுப்ப‌டுத்த‌ முணைய‌வில்லை. இந்த‌ நேர‌த்தில் அன்றைய‌ ஜ‌னாதிப‌தி பிரேம‌தாச‌வின் பாதுகாப்பு அமைச்ச‌ரான‌ ர‌ஞ்ச‌னிட‌ம் முஸ்லிம்க‌ளின் கைது ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ள் முறையிட்ட‌ போது "காட்டுக்குள்ளிருந்து வ‌ந்த‌ புலிக‌ள் புல்லையா திண்ப‌து" என‌ கூறி முஸ்லிம்க‌ளின் கைதையும் சித்திர‌வ‌தை செய்ய‌ப்ப‌டுவ‌தையும், ப‌ண‌ம் ப‌றித்த‌ பின் விடுவ‌தையும் நியாய‌ப்ப‌டுத்தினார். இவ‌ருக்கெதிராக‌ பிரேம‌தாச‌ மூல‌ம் அஷ்ர‌ப் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லை. முஸ்லிம் காங்கிர‌ஸின் தேவையை கிழ‌க்கு முஸ்லிம்க‌ளுக்கு உண‌ர்த்துவ‌த‌ற்காக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் இத‌னை திட்ட‌மிட்டு மறை முக‌மாக‌ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்குகின்ற‌தோ என்ற‌ ச‌ந்தேக‌ம் முபாற‌க் மௌல‌விக்கு ஏற்ப‌ட்ட‌து. இந்த‌ அசாதார‌ண‌ சூழ‌லில் முபாற‌க் மௌல‌வியின் ச‌கோத‌ர‌ர் அக்ர‌ம் ரிழா புலிக‌ளால் கைது செய்ய‌ப்ப‌ட்டு க‌ல்முனை முகாமில் அடைக்க‌ப்ப‌ட்டார். சுமார் 40 நாட்க‌ள் அவ‌ர் அடைக்க‌ப்ப‌ட்டிருந்தார். அவ‌ரை விடுவித்து த‌ரும்ப‌டி சுமார் மூன்று த‌ட‌வைக‌ள் அவ‌ரின் த‌ந்தை வை. அப்துல் ம‌ஜீத் மௌல‌வி த‌லைவ‌ர் அஷ்ர‌பை ச‌ந்திக்க‌ கொழும்பு சென்று வ‌ந்தார். ஆனாலும் அஷ்ர‌ப் அவ‌ரை க‌ண‌க்கில் எடுக்க‌வில்லை என்றும் இதையெல்லாம் பார்க்க‌வா நான் இருக்கிறேன் என‌ சொன்ன‌தாக‌வும் மௌல‌வி த‌ன் பிள்ளைக‌ளிட‌ம் சொல்லியிருந்தார். 40 நாட்க‌ளில் புலிக‌ள் க‌ல்முனை பொலிசாரை தாக்கிய‌தை தொட‌ர்ந்து ராணுவ‌த்துக்கும் புலிக‌ளுக்குமிடையில் மீண்டும் மோத‌ல் ஏற்ப‌ட்ட‌து. இத‌னால் புலிக‌ள் க‌ல்முனை முகாமை கைவிட்டு தாம் பிடித்து வைத்திருந்த‌ முஸ்லிம்க‌ளையும் எடுத்துக்கொண்டு ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு ப‌க்க‌ம் த‌ப்பி ஓடின‌ர். அவ்வாறு ஓடும் போது ஓரிரு முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளை அவ‌ர்க‌ளின் உற‌வின‌ர் மூல‌ம் ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் ப‌ண‌ம் வாங்கிக்கொண்டு புலிக‌ல் விடுவித்த‌ன‌ர். குறிப்பாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸின் க‌ல்முனை செய‌ற்பாட்டாள‌ர்க‌ள் மூல‌ம். இந்த‌ உத‌வி அப்துல் ம‌ஜீத் மௌல‌விக்கு கிடைக்க‌வில்லை. இந்த‌ நிலையில் க‌ல்முனையில் இருந்து கொண்டு செல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் மட்ட‌க்க‌ள‌ப்பு முகாமில் வைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌ வெளிவ‌ந்த‌ வாய்த்த‌க‌வ‌லை ந‌ம்பிய‌ மௌல‌வி, காத்தான்குடியில் உள்ள த‌ன‌து ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் மூல‌ம் த‌ன‌து ம‌க‌னை விடுவிக்க‌லாம் என‌ எண்ணி கொழும்பிலிருந்து வ‌ந்து க‌ல்முனை ஊடாக‌ காத்தான்குடி போன‌ வாக‌ன‌த்தில் ஏறி ப‌ய‌ண‌மானார். இடையில் குருக்க‌ள் ம‌ட‌ம் என்ற‌ இட‌த்தில் அந்த‌ வாக‌ன‌த்தொட‌ர் ம‌றிக்க‌ப்ப‌ட்டு அப்துல் ம‌ஜீத் மௌல‌வி உட்ப‌ட‌ சுமார் 125 முஸ்லிம்க‌ள் த‌மிழ் ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். அவ‌ர்க‌ள் எவ‌ரின் உட‌ல்க‌ளும் இன்று வ‌ரை கிடைக்க‌வில்லை. அதே போல் புலிக‌ளால் பிடித்து செல்ல‌ப்ப‌ட்ட‌ இன்றைய‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் ச‌கோத‌ர‌ருக்கும் என்ன‌ ந‌ட‌ந்த‌து என்று இன்று வ‌ரை தெரிய‌வில்லை. இதுவெல்லாம் தான் ந‌ம்பிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் இந்த‌விட‌ய‌த்தில் உத‌வாத‌தே கார‌ண‌ம் என்ப‌தை முபாற‌க் மௌல‌வி புரிந்து கொண்டார். அஷ்ர‌ப் முய‌ற்சி செய்திருந்தால் அந்த‌ 40 நாட்க‌ளுள் புலிக‌ளுட‌ன் தேனில‌வு கொண்டாடிய‌ பிரேம‌தாச‌ மூல‌ம் அவ‌ர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நிச்ச‌ய‌ம் விடுவிக்க‌ப்ப‌ட்டிருப்பார் என்று தெரிந்த‌து. முஸ்லிம் ச‌மூக‌த்துக்கான‌ விடுத‌லைக்குர‌ல் என‌ நினைத்து தான் உத‌வி செய்த‌ முஸ்லிம் காங்கிர‌ஸ், முஸ்லிம் இளைஞ‌ர்க‌ள் கைதுக்கு ம‌றைமுக‌மாக‌ துணை போன‌த‌ன் மூல‌ம் முஸ்லிம்க‌ளை உண‌ர்ச்சியூட்டி அக்க‌ட்சி, த‌ன‌க்குரிய‌ வாக்குக‌ளை அதிக‌ரிக்க‌ முய‌ற்சி செய்துள்ள‌து என்ப‌தை முபாற‌க் மௌல‌வி புரிந்து கொண்டார். புலிக‌ள் முஸ்லிம்க‌ள் மீது பாய்ந்த‌தை பிரேம‌தாச‌ மூல‌ம் த‌டுக்க‌ வாய்ப்பு இருந்தும் த‌ன‌து அர‌சிய‌ல் ந‌ல‌னுக்காக‌ முஸ்லிம் இளைஞ‌ர்க‌ளை ப‌லிகொடுத்த‌மை மூல‌ம் முஸ்லிம் காங்கிர‌ஸ் பிழையான‌ பாதையில் போகிற‌து என்ப‌து தெளிவாக‌ புரிந்த‌து. ஆனாலும் முஸ்லிம்க‌ளுக்கான‌ அர‌சிய‌ல் க‌ட்சி தேவை என்ப‌தை முபாற‌க் மௌல‌வி புரிந்திருந்தார். அதனால் அக்க‌ட்சியிடன் இணைந்து செய‌ற்ப‌டுவ‌தை த‌விர்த்து அக்க‌ட்சிக்கு ஆத‌ர‌வாக‌ தொட‌ர்ந்தும் ப‌ல‌ ப‌த்திரிகைக‌ளில் எழுதி வ‌ந்தார். அஷ்ர‌பின் ந‌ல்ல‌ விட‌ய‌ங்க‌ளை பாராட்டுவ‌துட‌ன் த‌வ‌றுக‌ளையும், ச‌மூக‌ தேவைக‌ளையும் சுட்டிக்காட்டி அவ‌ருக்கு க‌டித‌ங்க‌ள் எழுதினார். 1993ம் ஆண்டு சேகு இஸ்ஸ‌தீன் போன்றோர் க‌ட்சியில் இருந்து வில‌க்க‌ப்ப‌ட்டு "ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் க‌ட்சி" என்ற‌ க‌ட்சியை ஆர‌ம்பித்த‌ போது, இது முபாற‌க் மௌல‌விக்கு பிடிக்க‌வில்லை. கார‌ண‌ம் முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ த‌னிக்க‌ட்சி முஸ்லிம்க‌ளுக்கு போதும் என‌ க‌ருதினார். அத‌னால் முஸ்லிம் க‌ட்சிக்கு எதிராக‌ இன்னொரு க‌ட்சியை ஆர‌ம்பித்து அத‌ன் மூல‌ம் ஊட‌க‌ அறிக்கை விடுவ‌த‌ன் மூல‌மே அத‌னை ஊடக‌ங்க‌ள் ஏற்றுக்கொள்ளும் என்ற‌ ய‌தார்த்தத்தை புரிந்தார். அத்துட‌ன் முஸ்லிம் காங்கிர‌ஸின் உய‌ர்ச‌பை, பிர‌திநிதிக‌ள் ஊழ‌ல் நிறைந்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்த‌தால் இந்த‌ ச‌மூக‌த்துக்கு உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ அர‌சிய‌ல் க‌ட்சி அவ‌சிய‌ம் என்ப‌தை முபாற‌க் அப்துல் ம‌ஜீத் புரிந்தார். அத‌னால் 1993 ம் ஆண்டு உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ "முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சி" என்ற‌ பெய‌ரில் க‌ட்சியை ஆர‌ம்பித்தார். இக்க‌ட்சியின் பிர‌தான‌ நோக்க‌ம் மு.காவுக்கு ப‌க்க‌ ப‌ல‌மாக‌ இருப்ப‌தும் அக்க‌ட்சியை நெறிப்ப‌டுத்துவ‌தும், உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ அர‌சிய‌லை ஊக்குவிப்ப‌துமாக‌வே இருந்த‌து. அத‌ன் பின் 1994ம் ஆண்டு முஸ்லிம் காங்கிர‌ஸ் ச‌ந்திரிக்கா அர‌சாங்க‌த்தை கொண்டு வ‌ந்து த‌லைவ‌ர் அஷ்ர‌ப், க‌ப்ப‌ல், க‌ப்ப‌ற்துறை புன‌ர்வாழ்வு அமைச்ச‌ரானார். அவ‌ர் அமைச்ச‌ராகி ஒரு வ‌ருட‌ம் ஆகு முன் அவ‌ரின் க‌ப்ப‌ல் அமைச்சை பிர‌த‌ம‌ர் ச‌ந்திரிக்கா ப‌றித்தெடுத்தார். இத‌ற்கு கார‌ண‌ம் க‌ப்ப‌ல் அமைச்சில் ஊழ‌ல் என்று சொல்ல‌ப்ப‌ட்ட‌து. அப்ப‌டிய‌ல்ல‌ ஒரு முஸ்லிமிட‌ம் நாட்டின் முக்கிய‌மான‌ க‌ப்ப‌ல் அமைச்சு இருக்க‌ கூடாது என்ற‌ இன‌வாதிக‌ளின் க‌ருத்தை ச‌ந்திரிக்கா ஏற்றார் என்ற‌ க‌ருத்தும் நில‌விய‌து. எது எப்ப‌டியிருந்த‌ போதும் ச‌ந்திரிக்காவை பிர‌த‌மராக்கிய‌ அஷ்ர‌பை இவ்வாறு அவ‌ம‌தித்த‌தை முபாற‌க் மௌல‌வியால் ஜீர‌ணிக்க‌ முடிய‌வில்லை. க‌ப்ப‌ல் அமைச்சை ப‌றித்த‌ போது அனைத்து அமைச்சுக்க‌ளையும் தூக்கி வீசிவிட்டு வ‌ரும் வீர‌த்த‌ள‌ப‌தியாக‌வே அவ‌ர் த‌லைவ‌ரை பார்த்தார். ஆனால் அவ‌ர் இது ப‌ற்றி எந்த‌ எதிர்ப்பும் இல்லாம‌ல் அமைதியான‌து முபாற‌க் மௌல‌விக்கு பிடிக்க‌வில்லை. ப‌த‌விக‌ளுக்கு மு.கா அடிமையாகிவிட்ட‌தாக‌வே நினைத்தார். இந்த‌ நிலையில் 1995ம் ஆண்டு ஜ‌ன‌திப‌தி தேர்த‌ல் வ‌ந்த‌து. 1995ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் அன்றைய‌ பிர‌த‌ம‌ர் ச‌ந்திரிக்கா ப‌ண்டார‌நாய‌க்க‌ ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ராக‌ போட்டியிட்டார். மு.கா த‌லைவ‌ர் அஷ்ர‌ப் அவ‌ரது அமைச்ச‌ர‌வை அமைச்ச‌ராக‌ இருந்த‌தால் ச‌ந்திரிக்காவுக்கே த‌ம‌து ஆத‌ர‌வு என‌ அறிவித்தார். இந்த‌ திடீர் அறிவிப்பு த‌லைவ‌ர் அஷ்ர‌பின் இமேஜுக்கு மாற்ற‌மான‌தாக‌வே முபாற‌க் அப்துல் ம‌ஜீத் க‌ண்டார். அவ‌ர் ச‌ந்திரிக்காவை பிர‌த‌ம‌ர் ஆக்கியிருந்தும் க‌ப்ப‌ல் அமைச்சை ப‌றித்த‌ ச‌ந்திரிக்கா விட‌ய‌த்தில் மீண்டும் த‌வ‌று செய்வ‌தாக‌வே உண‌ர்ந்தார். மீண்டும் க‌ப்ப‌ல் அமைச்சை எடுத்துக்கொண்டு ஆதர‌வ‌ளித்திருக்க‌லாம் என்ப‌தே முபாற‌க் மௌல‌வியின் நிலைப்பாடு. அஷ்ர‌ப் அமைச்ச‌ரான‌து முத‌ல் அவ‌ருக்கும் முபாற‌க் மௌல‌விக்கும் எந்த‌ நேர‌டி தொட‌ர்பும் இருக்க‌வில்லை. அமைச்ச‌ரான‌ பின் அவரை எதிர்த்த‌ ப‌ல‌ர் அவ‌ரோடு ஒட்டிக்கொண்ட‌தால் அமைச்ச‌ர் அழைக்காம‌ல் அவ‌ரை ச‌ந்திக்க‌ செல்வ‌தில்லை என்ற‌ வைராக்கிய‌ம் கார‌ண‌மாக‌ அவ‌ரை நேர‌டியாக‌ க‌ண்டு த‌ன‌து க‌ருத்தை சொல்ல‌ முடியாத‌ நிலை. அப்போதெல்லாம் கைபேசி இல்லாத‌ கால‌ம். அத‌னால், இந்த‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் ச‌ந்திரிக்காவுக்கு முஸ்லிம்க‌ள் ஆத‌ர‌வ‌ளிக்க‌ முடியாது என்றும் ச‌ந்திரிக்காவை முஸ்லிம்க‌ள் ந‌ம்ப‌ முடியாது என‌வும் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஊட‌க‌ அறிக்கை வெளியிட்டார். பிர‌ப‌ல‌ த‌மிழ் ப‌த்திரிகைக்கு இவ்வ‌றிக்கை அனுப்ப‌ப்ப‌ட்ட‌ போது அத‌ன் ஆசிரிய‌ர் அல்ல‌து பிர‌தானி அந்த‌ அறிக்கையை த‌லைவ‌ர் அஷ்ர‌பின் பார்வைக்கு அனுப்பியுள்ளார். சில‌ நாட்க‌ளில் அஷ்ர‌பின் க‌ல்முனை இணைப்பாள‌ர் ம‌சூத் ஆசிரிய‌ர் முபாற‌க் மௌல‌வியின் க‌ல்முனை வ‌ர்த்த‌க‌ நிலைய‌ தொலை பேசிக்கு தொட‌ர்பு கொண்டு, இப்ப‌டி ஒரு அறிக்கையை நீங்க‌ள் விட்டுள்ளீர்க‌ளாம், என்ன‌ கார‌ண‌ம் என‌ த‌லைவ‌ர் உங்க‌ளிட‌ம் கேட்க‌ சொன்னார் என்றார். "த‌லைவ‌ருக்கு என்னை தெரியும், அவ‌ர‌து காரியால‌ய‌த்தில் இருந்து கூப்பிடு தொலைவில் உள்ள‌ என‌து வீடும் தெரியும். அத‌னால் என்னை நேர‌டியாக‌ ச‌ந்திக்க‌ சொல்லுங்க‌ள் நான் அவ‌ரிட‌ம் கார‌ண‌த்தை கூறுகிறேன்" என்றார் முபாற‌க் அப்துல் ம‌ஜீத். இது விட‌ய‌ம் த‌லைவ‌ரிட‌ம் சொல்ல‌ப்ப‌ட்டிருக்க‌லாம். ஆனாலும் அவ‌ர் தொட‌ர்பு கொள்ள‌வில்லை. அத்துட‌ன் முபாற‌க் மௌல‌வியின் அறிக்கை ப‌த்திரிகையில் வெளிவ‌ராம‌ல் த‌டுக்க‌ப்ப‌ட்ட‌து. த‌ன் க‌ட‌மை சொல்வ‌து ம‌ட்டுமே என‌ முபாற‌க் மௌல‌வி அத்தோடு விட்டு விட்டார். ஆனாலும் அறிக்கையில் இருந்த‌ விட‌ய‌ம் க‌ல்முனை முஸ்லிம் காங்கிர‌ஸ் முக்கிய‌ஸ்த‌ர்க‌ளுக்கு தெரிந்திருந்த‌து. அந்த‌ தேர்த‌லில் யாருக்கும் வாக்க‌ளிப்ப‌தில்லை என‌ முடிவு செய்தார் முபாற‌க் மௌல‌வி. அத‌ன் பின் முஸ்லிம் காங்கிர‌சுக்கு ஆத‌ர‌வாக‌ செய‌ற்ப‌டுவ‌தை முபாற‌க் மௌல‌வி குறைத்துக்கொண்டாலும் அக்க‌ட்சியை விட்டும் வில‌க‌வில்லை. ஆனாலும் முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சி என்ற‌ பெய‌ரில் அஷ்ர‌ப் ப‌ற்றியும் முஸ்லிம் காங்கிர‌ஸின் த‌வ‌றான‌ பாதைக‌ள் ப‌ற்றியும் விம‌ர்சிக்க‌த்தொட‌ங்கினார். இது மு.காவின‌ருக்கு அதிருப்தியை த‌ந்தாலும் அறிக்கையில் உள்ள‌ நியாய‌த்தை புரிந்திருந்த‌ன‌ர். இத‌னை மௌல‌வியை கொழும்பில் ச‌ந்தித்த‌ ம‌ருதூர் க‌ணி பின்வ‌ருமாறு அவ‌ரிட‌ம் கூறினார், உங்க‌ளின் அறிக்கைக‌ளுக்கு நான் ப‌தில் அளிக்க‌ நினைப்ப‌துண்டு. ஆனால் அதில் ப‌ல‌ நியாய‌ங்க‌ள் இருப்ப‌தால் ப‌தில் அறிக்கை விட‌வில்லை என்றார். இத‌ன் மூல‌ம் முஸ்லிம் ம‌க்கள் க‌ட்சியின் தேவை உறுதிப்ப‌ட்டுள்ள‌துட‌ன் அக்க‌ட்சி பெய‌ரில் வெளிவ‌ரும் அறிக்கைக‌ள் முஸ்லிம் காங்கிர‌சை புட‌ம் போடுகிற‌து என்ப‌து தெரிந்த‌து. ச‌ந்திரிக்காவை ந‌ம்ப‌ முடியாது என்று முபாற‌க் அப்துல் ம‌ஜீத் 1995ம் ஆண்டு சொன்ன‌து 2000ம் ஆண்ட‌ள‌வில்தான் த‌லைவ‌ர் அஷ்ர‌புக்கு ச‌ந்திரிக்கா ப‌ற்றி தெரிந்து கொண்டார். க‌டைசியில் ம‌க்காவுக்கு சென்று "அந்த‌ 52 நாட்க‌ள்" என்ற‌ புத்த‌க‌த்தை எழுதினார். 2000ம் ஆண்டு த‌லைவ‌ர் அஷ்ர‌புக்கு ஜ‌னாதிப‌தி ச‌ந்திரிக்கா ம‌ன‌ உளைச்ச‌லை கொடுத்த‌மை வேத‌னையான‌ விட‌ய‌ம். அது ம‌ட்டுமின்றி 1994ம் ஆண்டு ச‌ந்திரிக்காவுட‌ன் இணையும் போது முஸ்லிம்க‌ளின் எந்த‌ தேவையையும் முன் வைத்து அஷ்ர‌ப் ஒப்ப‌ந்த‌ம் ப‌ண்ண‌வில்லை என்ப‌தை அந்த‌ நூலில் அவ‌ர் தெரிவித்திருந்த‌த‌ன் மூல‌ம் மு.கா பிழையான‌ வ‌ழியில் செல்கின்ற‌து என்ற‌ த‌ன‌து குற்ற‌ச்சாட்டு ச‌ரியான‌து என்ப‌தை முபாற‌க் மௌல‌வி புரிந்து கொண்டார். தான் ச‌மூக‌த்த‌ள‌ப‌தியாக‌ மிக‌வும் க‌ன‌வு க‌ண்ட‌ துரோண‌ர் த‌ன் க‌ண் முன்பே துவ‌ண்டு போன‌தாக‌ க‌ண்டார். ஆனாலும் அஷ்ர‌ப் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌சுக்கு எதிராக‌ இன்னொரு முஸ்லிம் க‌ட்சி தேவையில்லை என்ற‌ நிலைப்பாட்டிலேயே இருந்தார். இத‌ன் கார‌ண‌மாக‌வே த‌ன‌து முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சியை ப‌திவு செய்ய‌ அவ‌ர் ஒரு முய‌ற்சியும் எடுக்க‌வில்லை. அத‌னால் 1999ம் ஆண்டு அஷ்ர‌பால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ தேசிய‌ ஐக்கிய‌ முன்ன‌ணி க‌ட்சியின் முத‌ன்மை அங்க‌த்த‌வ‌ராக‌வும் இணைந்து கொண்டார். அதே போல் 2000ம் ஆண்டு அஷ்ர‌பின் ம‌றைவின் பின் ந‌டை பெற்ற‌ பொதுத்தேர்த‌லில் மு.காவுக்கே முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சி ப‌கிர‌ங்க‌மாக‌ ஆத‌ர‌வ‌ளித்த‌து. த‌லைவ‌ரின் ம‌ரண‌த்தை தொட‌ர்ந்து ர‌வூப் ஹ‌க்கீம் த‌லைவ‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ போது முஸ்லிம் காங்கிர‌சின் இணைப்பாள‌ர் என்ற‌ வ‌கையில் ஹ‌க்கீம் த‌லைமைத்துவ‌த்தை முபாற‌க் மௌல‌வி ஏற்றுக்கொண்டு ஹ‌க்கீமுக்கு வாழ்த்து தெரிவித்து க‌விதையும் எழுதினார். இது ந‌வ‌ம‌ணி ப‌த்திரிகையிலும் வெளி வ‌ந்த‌து. ஹ‌க்கீம், பேரிய‌ல் கூட்டுத்த‌லைமை பிர‌ச்சினை வ‌ந்த‌ போது மு.கா க‌ட்சிக்கு ஒரே த‌லைமைதான் ந‌ல்ல‌து என்ப‌தையும் ஹ‌க்கீமை த‌லைவ‌ர் ஆக்கும்ப‌டியும் முத‌லில் ப‌கிர‌ங்க‌மாக‌ அறிக்கை விட்ட‌து முபாற‌க் மௌல‌வி ம‌ட்டுமே. ஹ‌க்கீம் மு.காவின் த‌னித்த‌லைமையாக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்ட‌ பின் அவ‌ருடைய‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌த்தொட‌ங்கிய‌து. ச‌ந்திரிக்காவின் அமைச்ச‌ர‌வையில் இருந்து கொண்டே கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சிக்கு ஆத‌ர‌வான‌ க‌ருத்துக்க‌ளை வெளியிட‌ தொட‌ங்கினார். இந்த‌ சூழ் நிலையில் மாவ‌ன‌ல்லை க‌ல‌வ‌ர‌ம் ஏற்ப‌ட்ட‌து. மிக‌ இல‌குவாக‌ அக்க‌ல‌வ‌ர‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியுமாக‌ இருந்தும் ஒரு வார‌த்துக்கு அக்க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌க்க‌ ச‌ந்திரிக்கா உத‌வினார். அப்போதும் ஹ‌க்கீம் அமைச்ச‌ர‌வையில் இருந்து ராஜினாமா செய்ய‌வில்லை. பின்ன‌ர் சில‌ மாத‌ங்க‌ளில் ஹ‌க்கீம் அமைச்ச‌ர‌வை உரையாட‌ல்க‌ளை ஐ தே க‌விட‌ம் கூறுகின்றார் என‌ குற்ற‌ம் சாட்டி ஹ‌க்கீமின் அமைச்ச‌ர் ப‌த‌வியை ச‌ந்திரிக்கா ப‌றித்தார். என்ன‌தான் இருந்தாலும் இதை முஸ்லிம் ச‌மூக‌ம் ஏற்க‌வில்லை. முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஹ‌க்கீம் சார்பாக‌ நின்றார். அஷ்ர‌புக்கே துரோக‌ம் செய்த‌ ச‌ந்திரிக்கா ஹ‌க்கீமுக்கு செய்த‌து பெரிய‌ விச‌ய‌மில்லை. ஆனாலும் ஹ‌க்கீம் த‌னித்துவ‌மாக‌ செய‌ற்ப‌டாம‌ல் ஐ தே க‌ சார்பாக‌ இருப்ப‌து ஏன் என்றும் அப்போது புரிய‌வில்லை. ஹ‌க்கீமை அமைச்ச‌ர‌வையிலிருந்து நீக்கிய‌த‌ன் கார‌ண‌மாக‌ பாராளும‌ன்ற‌த்தில் அர‌ச‌ த‌ர‌ப்பு எண்ணிக்கை குறைந்த‌தால் ச‌ந்திரிக்கா பாராளும‌ன்ற‌த்தை க‌லைத்து தேர்த‌லை அறிவித்தார். அத்தேர்த‌லில் முஸ்லிம் காங்கிர‌ஸ் 10 க்கு மேற்ப‌ட்ட‌ உறுப்பின‌ரை பெற்று ஐ தே க‌ அர‌சு வ‌ர‌ உத‌விய‌து. ஐ தே க‌ அர‌சாங்க‌ம் உட‌ன‌டியாக‌ விடுத‌லைப்புலிக‌ளுட‌ன் ச‌மாதான‌ பேச்சுவார்த்தைக‌ளை ஆர‌ம்பித்த‌து. 2002ம் ஆண்டு ஐ தே க‌ த‌லைமையிலான‌ இல‌ங்கை அர‌சுக்கும் விடுத‌லைப்புலிக‌ளுக்குமிடையில் ச‌மாதான‌ பேச்சுவார்த்தைக‌ள் நேருக்கு நேர் ஆர‌ம்ப‌மாகின. எந்த‌ ஆட்சியிலும் முன்னெடுக்க‌ப்ப‌டாத‌ அள‌வு பேச்சுவார்த்தைக‌ள் வேக‌மாக‌ ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌க்கீம், அதாவுள்ளா உட்ப‌ட‌ அக்க‌ட்சியின் உய‌ர் ம‌ட்ட‌ த‌லைவ‌ர்க‌ள் வ‌ட‌க்குக்கு சென்று பிர‌பாக‌ர‌னை ச‌ந்தித்து புரியாணி சாப்பிட்ட‌ன‌ர். அத்துட‌ன் திரும்பியிருந்தால் ப‌ர‌வாயில்லை, முஸ்லிம்க‌ள் இந்த‌ நாட்டின் ஒரு குழு என‌ ஹ‌க்கீம் பிர‌பாக‌ர‌னுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்தார். நாட்டில் சுமார் 25 ல‌ட்ச‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் வாழ்ந்த‌ நிலையில் சுமார் 15 ல‌ட்ச‌ம் முஸ்லிம்க‌ளை ஒரு குழு என‌ ஹ‌க்கீம் ஏற்றுக்கொண்ட‌து ஏன் என்ற‌ ப‌ல‌மான‌ கேள்வி எழுந்த‌து. இத‌னை முபாற‌க் மௌல‌வி க‌டுமையாக‌ விம‌ர்சித்தார். ஆனாலும் நாட்டில் ச‌மாதான‌ம் ஏற்ப‌ட‌ வேண்டும் என்ப‌தால் அத‌ன் போக்கை க‌வ‌னித்தார். அதைத்தொட‌ர்ந்து ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைக‌ள் ஆர‌ம்பிக்க‌ப்போவ‌தான‌ செய்திக‌ள் வெளி வ‌ந்த‌ன‌. இங்குதான் பிர‌ச்சினையே ஆர‌ம்பித்த‌து. இன‌ப்பிர‌ச்சினை என்ப‌து இந்த‌ நாட்டில் முப்ப‌ரிமாண‌ம் கொண்ட‌து. ஒரு கால‌த்தில் த‌மிழ், சிங்க‌ள‌ம் என்றிருந்த‌ போதும் பின்ன‌ர் போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ளால் முஸ்லிம்க‌ள் குறிவைக்க‌ப்ப‌ட்ட‌தால் இந்த‌ நாட்டின் மூன்றாவ‌து தேசிய‌ இன‌ம் முஸ்லிம்க‌ள் என்ப‌தை த‌மிழ் போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ள் உறுதிப்ப‌டுத்தியிருந்த‌ன‌. இத‌னை வ‌லியுறுத்தும் வ‌கையில் விடுத‌லைப்புலிக‌ள் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளின் அனைத்து உட‌மைகளையும் ப‌றித்துக்கொண்டு வெளியேற்றிய‌தால் முஸ்லிம்க‌ள் த‌னியான‌ தேசிய‌ இன‌ம் என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. இத‌னால் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்க‌ள் மூன்றாவ‌து த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டும் என்ற‌ குர‌ல்க‌ள் முஸ்லிம் ச‌மூக‌த்துள் ஒலித்த‌ன‌. அந்த‌ நேர‌ம் முஸ்லிம் காங்கிர‌ஸ் 11 பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை கொண்டிருந்த‌தால் அக்க‌ட்சி சார்பில் ர‌வூப் ஹ‌க்கீம் ம‌ட்டுமே கெபின‌ட் அமைச்ச‌ராக‌ இருந்தார். அத‌னால் அவ‌ர் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்புக்கு த‌லைமை தாங்க‌ வேண்டும் என்ப‌து முழு ச‌மூக‌த்தின் க‌ருத்தாக‌ இருந்த‌து. த‌னித்த‌ர‌ப்பின் அவ‌சிய‌ம் ப‌ற்றியும் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டால்த்தான் இன‌ப்பிர‌ச்சினை தீர்வில் முஸ்லிம்க‌ளுக்குரிய‌ தீர்வை பெற‌ முடியும் என‌ முபாற‌க் மௌல‌வி, ஹ‌க்கீமுக்கு க‌டித‌ம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு செல்லும் திக‌தியும் வ‌ந்த‌து. ஆனால் ஹ‌க்கீம் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பாக‌ இன்றி, தான் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ செல்வ‌தாக‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு அறிவித்தார். இது பாரிய‌ ச‌மூக‌த்துக்கு அதிர்ச்சியை கொடுத்த‌து ஹக்கீம் ஐ தே க‌வின் உறுப்பின‌ராக‌ இருந்தால் அவ‌ர் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்வ‌தில் நியாய‌ம் உண்டு. ஆனால் முஸ்லிம்க‌ளின் ஒரே க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ இருக்கும் நிலையில் அச்ச‌மூக‌த்தின் த‌லைவ‌ராக‌ க‌ல‌ந்து கொள்ளாம‌ல் அர‌ச‌ த‌ர‌ப்பு வாலாக‌ அவ‌ர் க‌ல‌ந்து கொள்வ‌த‌ன் பின்னால் நிச்ச‌ய‌ம் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ ச‌தி இருப்ப‌து புரிந்த‌து. இத‌னை பிழை என‌ சுட்டிக்காட்ட‌க்கூடிய‌ வ‌கையில் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளை கொண்ட‌ இன்னொரு முஸ்லிம் க‌ட்சி இல்லாமையின் கைசேத‌ம் அப்போதுதான் புரிந்த‌து. ஹ‌க்கீம் மிக‌ப்பெரிய‌ த‌வ‌றை தெரிந்து கொண்டே செய்கிறார் என்ப‌தை முபாற‌க் மௌல‌வி புரிந்து கொண்டார். இத‌ன் பின்னால் ஐ தே க‌, புலிக‌ள், ச‌ர்வ‌தேச‌ம் என‌ ஒருங்கிணைந்த‌ ச‌தி இருப்ப‌து தெரிந்த‌து. ஹ‌க்கீம் அவ‌ற்றோடு இணைந்து திட்ட‌மிட்டே த‌னித்த‌ர‌ப்பை ம‌றுத்து, அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டு முஸ்லிம்க‌ளின் இன‌த்துவ‌ அடையாள‌த்தை அழிக்க‌ துணை போகிறார் என்ப‌து தெரிந்த‌து. இந்த‌ சூழ் நிலையில் கிழ‌க்கு மாகாண‌ உல‌மாக்க‌ளின் மாநாடு காத்தான்குடியில் ந‌டைபெற்ற‌து. அதில் க‌ல‌ந்து கொண்ட‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி உரையாற்றும் போது ஹ‌க்கீம் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ளாம‌ல் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்ட‌த‌ன் மூல‌ம் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு துரோக‌ம் செய்து விட்டார் என‌ தெரிவித்தார். இக்க‌ருத்தை பெரும்பாலான‌ உல‌மாக்க‌ள் அப்போது ஏற்க‌வில்லை. அப்போது முபாற‌க் மௌல‌வியின் க‌ருத்தை எதிர்த்த‌ உல‌மாக்க‌ள் ப‌ல‌ர் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளின் பின் அவ‌ர் சொன்ன‌து உண்மை என‌ ஏற்றுக்கொண்ட‌ன‌ர். உல‌மா க‌ட்சியின் வ‌ர‌லாறு என்ப‌து முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சி என்றே ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. முஸ்லிம் காங்கிர‌சுக்கு எதிராக‌ இல்லாம‌ல் அக்க‌ட்சியை நெறிப்ப‌டுத்தும் க‌ட்சியாக‌வே முத‌லில் இய‌ங்கிய‌து. மு.காவின் த‌லைமையின‌தும் உறுப்பின‌ர்க‌ளின் த‌வ‌றுக‌ளையும் சுட்டிக்காட்ட‌ அத‌ன் உறுப்பின‌ர்க‌ள் பெரிதும் அச்ச‌ப்ப‌ட்ட‌ன‌ர். எங்கே த‌ம‌க்கு த‌லைவ‌ரின் க‌டாட்ச‌ம் கிடைக்காம‌ல் போய் விடுமோ என்று அஞ்சின‌ர். முபாற‌க் மௌல‌வி முஸ்லிம் காங்கிர‌சின் இணைப்பாள‌ராக‌ இருந்த‌ போதும் அத‌ன் உய‌ர் பீட‌ உறுப்பின‌ர் இல்லை என்ப‌தால் அவ‌ரால் த‌லைமைக்கு அனுப்ப‌ப்ப‌டும் ஆலோச‌னைக‌ள் க‌ருத்தில் கொள்ள‌ப்ப‌டுவ‌தில்லை. இதுவும் முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சியை ஆர‌ம்பிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌மாகும். இன்னொரு முஸ்லிம் க‌ட்சியின் அறிக்கை வ‌ருவ‌த‌ன் மூல‌ம் எங்கே கீரைக்க‌டைக்கும் எதிர்க்க‌டை வ‌ந்து விடுமோ என்ற‌ அச்ச‌த்தில் மு.கா, ம‌க்க‌ளுக்கு சேவை செய்யும் என்ப‌த‌ற்காக‌ முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சியை முபாற‌க் மௌல‌வி ஆர‌ம்பித்து, அத‌னை வெறும் அறிக்கை அர‌சிய‌லுக்கு ம‌ட்டும் பாவிக்கும் க‌ட்சியாக‌வே செய‌ற்ப‌டுத்தி வ‌ந்தார். அத்துட‌ன் முஸ்லிம் காங்கிர‌ஸ் பேச‌ப்ப‌ய‌ந்த‌ ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளை முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சி கொண்டு வ‌ந்த‌து. ப‌த்திரிகைக‌ளில் வெளிவ‌ந்த‌ மு. ம‌. க‌ட்சியின் அறிக்கைக‌ள் சில‌ கீழே த‌ர‌ப்ப‌டுகிற‌து. 2001ம் ஆண்டு முபாற‌க் அப்துல் ம‌ஜீத் த‌லைமையிலான‌ முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சியின் ஆலோச‌னை. அர‌சிய‌லில் வெறும் பார்வையாள‌ராக‌ அல்ல‌து எடுபிடியாக‌ இருக்காம‌ல் த‌ன் க‌ருத்தை நேர‌டியாக‌ சொல்லியிருந்தார். அக்க‌ருத்துக்க‌ளை முஸ்லிம் காங்கிர‌ஸ் கேட்டிருந்தால் முஸ்லிம் ச‌மூக‌ம் மிக‌ப்பெரும் ந‌ன்மைக‌ள் பெற்றிருக்கும். பேரின கட்சிகளுடன் மு.கா. செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் எழுத்து மூலம் இருக்கவேண்டும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கடந்த காலங்களில் தேர்தல் கூட்டுகளின் போது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸ் பேரின கட்சிகளுடன் கூட்டு வைத்தது போன்ற தவறுகளை இனியும் செய்யக்கூடாதென முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது . மறைந்த மு.கா. தலைவர் அஷ்ரப் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியலின் தந்தை என்பதிலும், மிக நுட்பமான அறிவு படைத்த மாமனிதர் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்க முடியாதெனினும் அத்தகைய சிறப்பு மிக்க தலைவர் விட்ட சில அரசியல் தவறுகள் போன்று இன்றைய தலைமைத்துவமும் தவறிழைத்து விடக்கூடாது . 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அஷ்ரப் எனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மு.கா. வுக்கும் பொதுசன முன்னணிக்கும் இடையில் கூட்டு ஏற்பட்டது . இதற்கான ஒப்பந்தம் எழுத்து மூலம் உருவாக்கப்பட்டு ஒப்பமிடப்பட்டதா ? அவற்றில் என்னென்ன அம்சங்கள் இருந்தன என்பன பற்றி குறைந்தது மு.கா அங்கத்தவர்களிடையேயாவது பகிரங்கப்படுத்தப்படவில்லை. இது தலைவர் அஷ்ரப்பினால் விடப்பட்ட முதல் தவறாகும். அதன் பின்னர் ஆட்சி அமைக்கப்பட்ட ஒரு சில மாதங்களிலேயே தலைவருக்கு வழங்கப் பட்டிருந்த அமைச்சுப் பதவிகளில், கப்பல் பறி முதல் செய்யப்பட்ட போது இதற்கு எதிராக தலைவர் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை . குறைந்தது தான் மட்டுமாவது எதிரணியில் உட்காரப் போவதாக அரசை பயமுறுத்தி இருக்கலாம் . தனக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப்பதவியில் சில பறி போன பின்பும் அவர் அரசுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரி காவின் வெற்றிக்கும் உழைத்ததானது பேரினவாதிகளைப் பொறுத்தவரை மு.கா வையும் அதன் தலைமைத்துவத்தையும் சிறுமைப்படுத்திக்காட்டியது . அதன் பின் 2000 ஆம் ஆண்டு அமைச்சர் பௌசியுடனான மோதலில், அவர் பேசியது தவறாக இருந்தும் பொதுசன முன்னணி முக்கியஸ்தர்கள் நீதியாக சிந்திக்காமல் நடந்து கொண்டபோதும் தலைவர் அஷ்ரப் தனது சவாலை விட்டுக்கொடுத்ததன் மூலம் மிக மோசமாக தலை குனிந்தார் . இது அவரது ஆளுமைக்கு பெரிதும் களங்கம் ஏற்படுத்தியது . அவ்வேளையில் கடினமான பிடிவாதத்தைக் கொள்ளாதது பெருந்தவறாகும் . நியாயம் தம்பக்கம் இருக்கும்போது அதற்கான போராட்டம் அவசியமாகும் . .............. பொது ஜன முன்னணியுடன் அரசியற் கூட்டை ஏற்படுத்திக்கொண்டது மிகப்பெரிய தவறாகும் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் றிஸ்வியின் இடத்துக்கு மு.கா.வால் ஒருவரை நியமிக்க முடியாமைக்கு இதுவே காரணமாகும் . ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போ தைய தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை இந்த அரசில் சேருவ தில்லை என மிகவும் இறுக்கமான பிடிவாதத்தில் இருந்தபோது அதனை வரவேற்ற ஐ.தே.க. வினர் , தேர்தல் கூட்டு சம்பந்தமாக அவரின் பிடிவாதம் கண்டு அதனை ஜனநாயக விரோதம் என சொல்வது அவர்களின் சுய நலத்தைக் காட்டுகிறது . இப்போதே ஐ.தே.க.வின் முஸ்லிம் அங்கத்த வர்கள் மு.கா. தலைவருக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தால் அக்கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மேலும் பல நெருக்குதல்களுக்கு மு.கா. தலைவர் முகம் கொடுக்க நேரிடலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி அச்சம் கொள்கிறது . ஆகவே, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பேரின கட்சிகளுடன் கூட்டுச்சேர்வதாயின் எழுத்து மூலமான மிக இறுக்கமான முறையில் ஒப்பந்தம் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது . வீர‌கேச‌ரி. 22. 10. 2001 2002ம் ஆண்டில் ஹ‌க்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தைக்கு அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ போன‌ கார‌ண‌த்தால் முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சிக்குள் உட்பூச‌ல் அதிக‌ரித்த‌து. ஹ‌க்கீமுக்கு எதிரான‌ அதாவுள்ளா அணி, ஆத‌ர‌வான‌ அணி என‌ இர‌ண்டு அணிக‌ள் உருவாகி மு. காவின் புதிய‌ உய‌ர் பீட‌ம் கூடுவ‌தாக‌ அத‌ன் செய‌லாள‌ர் டொக்ட‌ர் ஹ‌ப்ர‌த் அறிவித்தார். இதை கேள்வியுற்ற‌ ஹ‌க்கீம் ஒஸ்லோ பேச்சுவார்த்தையை கைவிட்டு இடையில் நாடு வ‌ந்தார். அத‌ற்கிடையில் தாருஸ்ஸ‌லாமில் உய‌ர் பீட‌ கூட்ட‌ம் ந‌டைபெறாம‌ல் புத்த‌ள‌ம் பாயிஸ், பாதாள‌ உல‌க‌ம் போன்ற‌வ‌ற்றை ப‌ய‌ன்ப‌டுத்தி கூட்ட‌த்துக்கு வ‌ந்தோர் அடித்து விர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஹ‌க்கீம் த‌ன‌து ஆத‌ர‌வு ஹ‌ச‌ன‌லி அணியுட‌ன் மீண்டும் உய‌ர் பீட‌ம் கூடி த‌லைமையை த‌க்க‌ வைத்தார். ஆனாலும் அன்று ஒஸ்லோவில் அவ‌ர் விட்ட‌ முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பு என்ப‌தை இன்று வ‌ரை மு. காவால் எந்த‌வொரு பேச்சு வார்த்தையிலும் பெற‌ முடிய‌வில்லை. 2002ம் ஆண்டு ஐ தே க‌ த‌லைமையிலான‌ இல‌ங்கை அர‌சுக்கும் விடுத‌லைப்புலிக‌ளுக்குமிடையில் ச‌மாதான‌ பேச்சுவார்த்தைக‌ள் நேருக்கு நேர் ஆர‌ம்ப‌மாகின. எந்த‌ ஆட்சியிலும் முன்னெடுக்க‌ப்ப‌டாத‌ அள‌வு பேச்சுவார்த்தைக‌ள் வேக‌மாக‌ ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஹ‌க்கீம், அதாவுள்ளா உட்ப‌ட‌ அக்க‌ட்சியின் உய‌ர் ம‌ட்ட‌ த‌லைவ‌ர்க‌ள் வ‌ட‌க்குக்கு சென்று பிர‌பாக‌ர‌னை ச‌ந்தித்து புரியாணி சாப்பிட்ட‌ன‌ர். அத்துட‌ன் திரும்பியிருந்தால் ப‌ர‌வாயில்லை, முஸ்லிம்க‌ள் இந்த‌ நாட்டின் ஒரு குழு என‌ ஹ‌க்கீம் பிர‌பாக‌ர‌னுட‌ன் ஒப்ப‌ந்த‌ம் செய்த‌தாக‌ ஊட‌க‌ங்க‌ள் கூறின‌. நாட்டில் சுமார் 25 ல‌ட்ச‌ம் த‌மிழ் ம‌க்க‌ள் வாழ்ந்த‌ நிலையில் சுமார் 15 ல‌ட்ச‌ம் முஸ்லிம்க‌ளை ஒரு குழு என‌ ஹ‌க்கீம் ஏற்றுக்கொண்ட‌து ஏன் என்ற‌ ப‌ல‌மான‌ கேள்வி எழுந்த‌து. இத‌னை முபாற‌க் மௌல‌வி விம‌ர்சித்தார். ஆனாலும் நாட்டில் ச‌மாதான‌ம் ஏற்ப‌ட‌ வேண்டும் என்ப‌தால் அத‌ன் போக்கை க‌வ‌னித்தார். அதைத்தொட‌ர்ந்து ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைக‌ள் ஆர‌ம்பிக்க‌ப்போவ‌தான‌ செய்திக‌ள் வெளி வ‌ந்த‌ன‌. இங்குதான் பிர‌ச்சினையே ஆர‌ம்பித்த‌து. இன‌ப்பிர‌ச்சினை என்ப‌து இந்த‌ நாட்டில் முப்ப‌ரிமாண‌ம் கொண்ட‌து. ஒரு கால‌த்தில் த‌மிழ், சிங்க‌ள‌ம் என்றிருந்த‌ போதும் பின்ன‌ர் போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ளால் முஸ்லிம்க‌ள் குறிவைக்க‌ப்ப‌ட்ட‌தால் இந்த‌ நாட்டின் மூன்றாவ‌து தேசிய‌ இன‌ம் முஸ்லிம்க‌ள் என்ப‌தை த‌மிழ் போராட்ட‌ இய‌க்க‌ங்க‌ள் உறுதிப்ப‌டுத்தியிருந்த‌ன‌. இத‌னை வ‌லியுறுத்தும் வ‌கையில் விடுத‌லைப்புலிக‌ள் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளின் அனைத்து உட‌மைகளையும் ப‌றித்துக்கொண்டு வெளியேற்றிய‌தால் முஸ்லிம்க‌ள் த‌னியான‌ தேசிய‌ இன‌ம் என்ப‌து நிரூபிக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. இத‌னால் ஒஸ்லோ பேச்சுவார்த்தையில் முஸ்லிம்க‌ள் மூன்றாவ‌து த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ள‌ வேண்டும் என்ற‌ குர‌ல்க‌ள் முஸ்லிம் ச‌மூக‌த்துள் ஒலித்த‌ன‌. அந்த‌ நேர‌ம் முஸ்லிம் காங்கிர‌ஸ் 11 பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை கொண்டிருந்த‌தால் அக்க‌ட்சி சார்பில் ர‌வூப் ஹ‌க்கீம் ம‌ட்டுமே கெபின‌ட் அமைச்ச‌ராக‌ இருந்தார். அத‌னால் அவ‌ர் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்புக்கு த‌லைமை தாங்க‌ வேண்டும் என்ப‌து முழு ச‌மூக‌த்தின் க‌ருத்தாக‌ இருந்த‌து. த‌னித்த‌ர‌ப்பின் அவ‌சிய‌ம் ப‌ற்றியும் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டால்த்தான் இன‌ப்பிர‌ச்சினை தீர்வில் முஸ்லிம்க‌ளுக்குரிய‌ தீர்வை பெற‌ முடியும் என‌ முபாற‌க் மௌல‌வி, ஹ‌க்கீமுக்கு க‌டித‌ம் எழுதினார். பேச்சுவார்த்தைக்கு செல்லும் திக‌தியும் வ‌ந்த‌து. ஆனால் ஹ‌க்கீம் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பாக‌ இன்றி, தான் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ செல்வ‌தாக‌ ஊட‌க‌ங்க‌ளுக்கு அறிவித்தார். இது பாரிய‌ அதிர்ச்சியை கொடுத்த‌து ஹக்கீம் ஐ தே க‌வின் உறுப்பின‌ராக‌ இருந்தால் அவ‌ர் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்வ‌தில் நியாய‌ம் உண்டு. ஆனால் முஸ்லிம்க‌ளின் ஒரே க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ இருக்கும் நிலையில் அச்ச‌மூக‌த்தின் த‌லைவ‌ராக‌ க‌ல‌ந்து கொள்ளாம‌ல் அர‌ச‌ த‌ர‌ப்பு வாலாக‌ அவ‌ர் க‌ல‌ந்து கொள்வ‌த‌ன் பின்னால் நிச்ச‌ய‌ம் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ ச‌தி இருப்ப‌து புரிந்த‌து. இத‌னை பிழை என‌ சுட்டிக்காட்ட‌க்கூடிய‌ வ‌கையில் முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளை கொண்ட‌ இன்னொரு முஸ்லிம் க‌ட்சி இல்லாமையின் கைசேத‌ம் அப்போதுதான் புரிந்த‌து. ஹ‌க்கீம் மிக‌ப்பெரிய‌ த‌வ‌றை தெரிந்து கொண்டே செய்கிறார் என்ப‌தை முபாற‌க் மௌல‌வி புரிந்து கொண்டார். இத‌ன் பின்னால் ஐ தே க‌, புலிக‌ள், ச‌ர்வ‌தேச‌ம் என‌ ஒருங்கிணைந்த‌ ச‌தி இருப்ப‌து தெரிந்த‌து. ஹ‌க்கீம் அவ‌ற்றோடு இணைந்து திட்ட‌மிட்டே த‌னித்த‌ர‌ப்பை ம‌றுத்து, அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டு முஸ்லிம்க‌ளின் இன‌த்துவ‌ அடையாள‌த்தை அழிக்க‌ துணை போகிறார் என்ப‌து தெரிந்த‌து. இந்த‌ சூழ் நிலையில் கிழ‌க்கு மாகாண‌ உல‌மாக்க‌ளின் மாநாடு காத்தான்குடியில் ந‌டைபெற்ற‌து. அதில் க‌ல‌ந்து கொண்ட‌ முபாற‌க் மௌல‌வி உரையாற்றும் போது ஹ‌க்கீம் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ளாம‌ல் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்ட‌த‌ன் மூல‌ம் முஸ்லிம் ச‌மூக‌த்துக்கு துரோக‌ம் செய்து விட்டார் என‌ தெரிவித்தார். இக்க‌ருத்தை பெரும்பாலான‌ உல‌மாக்க‌ள் அப்போது ஏற்க‌வில்லை. அப்போது முபாற‌க் மௌல‌வியின் க‌ருத்தை எதிர்த்த‌ உல‌மாக்க‌ள் சில‌ர் ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளின் பின் அவ‌ர் சொன்ன‌து உண்மை என‌ ஏற்றுக்கொண்ட‌ன‌ர். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் மு. காவில் இருந்து வில‌கிய‌ அதாவுள்ளா அணி தேசிய‌ காங்கிர‌ஸ் என்ற‌ க‌ட்சியாக‌ 2005ல் உருவெடுத்த‌து. அதே போல் அதே கால‌ப்ப‌குதியில் ஏற்க‌ன‌வே சேகு இஸ்ஸ‌தீன், ர‌சூல் ஆகியோரால் அஷ்ர‌ப் கால‌த்தில் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்ரீ ல‌ங்கா முஸ்லிம் க‌ட்சியை ஹாபிஸ் ந‌சீர் அஹ‌ம‌த் விலை கொடுத்து வாங்கியிருந்தார். அதே போல் அக்க‌ரைப்ப‌ற்று பௌச‌ர், காத்தான்குடி ஹாரிஸ், கொழும்பு நிசார் மௌலானா போன்ற‌வ‌ர்க‌ளால் ஐக்கிய‌ முஸ்லிம் ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பு என்ற‌ பெய‌ரில் க‌ட்சி ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டது. அதே போல் எம் ஐ எம் முஹிதீன் த‌லைமையில் முஸ்லிம் ஐக்கிய‌ விடுத‌லை முன்ன‌ணி என்ற க‌ட்சியும் இய‌ங்கிய‌து. ஆனாலும் முபாற‌க் மௌல‌வி த‌ன‌து முஸ்லிம் ம‌க்க‌ள் க‌ட்சியை ப‌திவு செய்யாம‌ல் முஸ்லிம் காங்கிர‌சையே ஆத‌ரித்தார். ஆனாலும் ர‌வூப் ஹ‌க்கீமின் தொட‌ர்ச்சியான‌ த‌வ‌றுக‌ளாலும் க‌ண்ணை மூடிக்கொண்டு ம‌டைய‌ர்க‌ள் ஆகி விட்டோம் என‌ சொல்லும் ஹ‌க்கீமின் ம‌ட‌த்த‌ன‌ங்க‌ளாலும் அவ‌சிய‌ம் முஸ்லிம் காங்கிர‌சுக்கு மாற்றீடாக‌ நேர்மையான‌, உண்மை பேசும் முஸ்லிம் க‌ட்சி தேவை என்ப‌தை உண‌ர்ந்தார். இந்த‌ சூழ்நிலையில் ஹ‌க்கீம் குமாரி பிர‌ச்சினை ஏற்ப‌ட்டு முஸ்லிம் காங்கிர‌சுக்குள் ரிசாத் ப‌தியுதீன் த‌லைமையில் ம‌ற்றுமொரு பிள‌வு ஏற்ப‌ட்ட‌து. தானும் த‌ண்ணீர் ஊற்றி வ‌ள‌ர்த்த‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் ஹ‌க்கீமின் த‌வ‌றுக‌ளால் த‌ன் க‌ண்முன்னே சித‌றுவ‌தை க‌ண்ட‌ போது ச‌மூக‌த்துக்கான‌ த‌ன‌து விம‌ர்ச‌ன‌ அர‌சிய‌லுட‌ன் பிர‌திநிதித்துவ‌ அர‌சிய‌லை தீர்மாணிக்கும் ச‌க்தியாக‌ த‌னியான‌ இன்னொரு க‌ட்சி அதுவும் உல‌மாக்க‌ள் த‌லைமையில் தேவை என்ப‌தை முபாற‌க் மௌல‌வி உறுதியாக‌ உண‌ர்ந்தார். இத‌ன் ப‌டி 2004 பொதுத்தேர்த‌ல் வ‌ந்த‌ போது ஐக்கிய‌ முஸ்லிம் ம‌க்க‌ள் கூட்ட‌மைப்புட‌ன் இணைந்து அத்தேர்த‌லில் முத‌லாவ‌தாக‌ க‌ள‌மிற‌ங்கினார். அத்தேர்த‌லில் ஹ‌க்கீம் முஸ்லிம் காங்கிர‌சில் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் போட்டியிட்டார். ம‌று ப‌க்க‌ம் அதாவுள்ளா, க‌ல்முனை ஹ‌ரீஸ், பேரிய‌ல் அஷ்ர‌ப் ஆகியோரும் அம்பாரை மாவ‌ட்ட‌த்தில் போட்டியிட்ட‌ன‌ர். இர‌ண்டு ப‌க்க‌மும் பெரும் க‌ட்சிக‌ள். இவ்விர‌ண்டையும் எதிர்த்து முபாற‌க் மௌல‌வியை முத‌ன்மை வேட்பாள‌ராக‌ கொண்ட‌ சிறிய‌ க‌ட்சி. ம‌று முணையில் மு. காவில் இருந்த‌ ஹ‌ரீஸ் அதாவுள்ளாவின் ப‌க்க‌ம் மாறிய‌தால் அவ‌ரை தோற்க‌டிப்ப‌த‌ற்காக‌ ஹ‌க்கீம் க‌ல்முனை சார்பாக‌ க‌ள‌த்தில் இற‌ங்கினார். முஸ்லிம் க‌ட்சி ஒன்றின் மாற்றீடு தேவை என்ப‌து உண‌ர‌ப்ப‌ட்டு ம‌க்க‌ளின் சிறிய‌ செல்வாக்கு ஐக்கிய‌ முஸ்லிம் ம‌க்க‌ள் கூட்ட‌மைப்பின் இர‌ட்டை இலை சின்ன‌த்தின் பால் திரும்பிக்கொண்டிருக்கும் நேர‌த்தில் தேர்த‌லுக்கு சில‌ வார‌ங்க‌ளுக்கு முன் அக்க‌ட்சி முக்கிய‌ஸ்த‌ர்க‌ள் மயோன் முஸ்த‌பாவின் முய‌ற்சி மூல‌ம் ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சிக்கு விலை போய் அக்க‌ட்சிக்கு ஆதர‌வ‌ளிப்ப‌தாக‌ ஊட‌க‌த்தில் தெரிவித்த‌ன‌ர். இத‌னால் முபாற‌க் மௌல‌வியின் ஐ தே க‌வுக்கெதிரான‌ பிர‌ச்சார‌ம் பிசு பிசுத்து வாக்குக‌ள் குறைந்து விட்ட‌ன‌. ஆனாலும் இந்த‌ துரோக‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் அந்த‌ தேர்த‌லில் க‌ட்சிக‌ள், சுயேற்சைக‌ள் என‌ 35 அர‌சிய‌ல் க‌ட்சிக‌ள் க‌ள‌ம் க‌ண்ட‌ திகாம‌டுல்ல‌ மாவ‌ட்ட‌த்தில் முபாற‌க் மௌல‌வி போட்டியிட்ட‌ க‌ட்சி 7வ‌து இட‌த்துக்கு வ‌ந்த‌து. இத்தேர்த‌லில் ஹ‌க்கீம், அதா, பேரிய‌ல் ஆகியோர் வெற்றி பெற்ற‌ன‌ர். ஐ .மு. ம‌. கூட்ட‌மைப்பு க‌ட்சி விலை போன‌தால் அதிருப்தியுற்ற‌ அக்க‌ட்சியில் போட்டியிட்ட‌ முபாற‌க் மௌல‌வி, அட்டாளைச்சேனை அமீர் இப்ராகீம் மௌல‌வி ஆகியோர் கொழும்பில் ச‌ந்தித்து தேர்த‌லில் போட்டியிட‌க்கூடிய‌வாறு உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ க‌ட்சியின் தேவை ப‌ற்றி ஆலோசித்த‌ன‌ர். அவ‌ர்க‌ளுட‌ன் எல‌ப‌ட‌க‌ம‌ மௌல‌வி ப‌துர்தீன் க‌பூரி, அநுராத‌புர‌ம் பௌசான் மௌல‌வி, ஏறாவூர் முஸ‌ம்மில் மௌல‌வி ஆகியோரும் இணைந்த‌ன‌ர். ஈற்றில் "உல‌மாக்க‌ள் த‌லைமையிலான‌ ஐக்கிய‌ முஸ்லிம் க‌ட்சி" சுருக்க‌மாக‌ உல‌மா க‌ட்சி என்ற‌ க‌ட்சி 2005ம் ஆண்டு ஜூன் மாத‌ம் பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ப்பட்ட‌து. இத‌ன் த‌லைவ‌ராக‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத், செய‌லாள‌ராக‌ மௌல‌வி அமீர் இப்ராகீம், கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ராக‌ மௌல‌வி முஸ‌ம்மில் ஆகியோரும் உப‌த‌லைவ‌ர்க‌ளாக‌ ப‌துருத்தீன் க‌பூரி, மௌல‌வி பௌசான், பிபிலை மௌல‌வி அப்துர்ர‌வூப் ஆகியோரும் மௌல‌வி அல்லாத‌ சில‌ரும் நிர்வாக‌த்தில் இணைக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர். உல‌மா க‌ட்சி முக‌ம் கொடுத்த‌ முதலாவ‌து தேர்த‌ல். உல‌மா க‌ட்சியின் உருவாக்க‌ம் நாட்டில் பாரிய‌ அதிர்ச்சியை அர‌சிய‌லில் ஏற்ப‌டுத்திய‌து. அக்க‌ட்சியை வ‌ள‌ர‌விடாம‌ல் த‌டுப்ப‌தில் முஸ்லிம் காங்கிர‌ஸ் பாரிய‌ த‌டை போட்ட‌து. இல்லாத‌, பொல்லாத‌ க‌தைக‌ளை ப‌ர‌ப்பின‌ர். இந்நிலையில் 2005ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்த‌ல் வ‌ந்த‌து. அப்போது ஹாபிஸ் ந‌சீர் அஹ‌ம‌திட‌ம் இருந்து உல‌மா க‌ட்சி த‌லைவ‌ருக்கு அழைப்பு வ‌ந்த‌து. உல‌மா க‌ட்சியும் இணைந்து கூட்டாக‌ செய‌ற்ப‌டுவோம் என்றார். இத‌ன் படி உல‌மா க‌ட்சி அவ‌ரை ச‌ந்தித்து உரையாடி முஸ்லிம் தேசிய‌ கூட்ட‌மைப்பு என்ற‌ கூட்ட‌மைப்பை உருவாக்கின‌ர். இதில் உல‌மாக்க‌ளின் ஐக்கிய‌ முஸ்லிம் க‌ட்சியும் இட‌ம் பெற்ற‌து. தேர்த‌லில் ஒரு ப‌க்க‌ம் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச‌ ம‌றுப‌க்க‌ம் ர‌ணில் விக்ர‌ம‌சிங்ஹ‌. மு. தே. கூட்ட‌மைப்பும் உல‌மா க‌ட்சியும் சேர்ந்து இரு வேட்பாள‌ர்களையும் க‌ண்டு பேசிய‌து. ஆனாலும் ர‌ணில் மூல‌ம் ஏற்க‌ன‌வே ச‌மூக‌ம் ப‌ல‌ வ‌ஞ்ச‌க‌ங்க‌ளை க‌ண்டிருந்த‌தால் ர‌ணிலை ஆத‌ரிப்ப‌தில் முபாற‌க் மௌல‌விக்கு விருப்ப‌ம் இருக்க‌வில்லை. ஆனாலும் கூட்டுக்க‌ட்சி பொறுப்பு கார‌ண‌மாக‌ அமைதியாக‌ இருந்தார். ர‌ணிலை ஆத‌ரிப்ப‌தாக‌ மு. தே. கூட்ட‌மைப்பு ஊட‌க‌ங்க‌ள் முன்பு கூறிய‌து. அத‌ன் பின் கிண்ணியாவில் ந‌டைபெற்ற‌ ஐ தே க‌ பிர‌ச்சார‌ கூட்ட‌த்தில் க‌ல‌ந்து கொண்ட‌ ஹாபிஸ் ஓர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டு அவ‌மான‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டார். அவ‌ர் முபாற‌க் மௌல‌வியை தொலை பேசியில் தொட‌ர்பு கொண்டு ஐ தே க‌ ச‌ரி வ‌ராது என்றார். அப்ப‌டியாயின் ம‌ஹிந்த‌வை ஆத‌ரிப்போம், அவ‌ர் புலிக‌ளுக்கு எதிரான‌வ‌ர் என்றார் முபாற‌க் ஏ ம‌ஜீத். ம‌ஹிந்த‌ வெல்ல‌மாட்டார் என்றார் ஹாபிஸ். வெல்வாரா இல்லையா என்ப‌தை விட‌ புலிக‌ளை ஒழிப்பாரா இல்லையா என்ப‌தையே நான் சிந்திக்கிறேன் என்றார் முபாற‌க் மௌல‌வி. ஆனாலும் ஹாபிஸ் முடிவுக்கு வ‌ர‌வில்லை. அத‌னால் உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌வைக்க‌ண்டு அவ‌ரோடு புரிந்துண‌ர்வு ஒப்ப‌ந்த‌ம் செய்து அவ‌ரை ஆத‌ரிப்ப‌தாக‌ அறிவித்த‌து. ர‌ணிலை ஆத‌ரிப்ப‌தாக‌ முஸ்லிம் காங்கிர‌ஸ் அறிவித்திருந்த‌து. தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் மும்முர‌மாக‌ இருந்த‌ போது முபாற‌க் மௌல‌வியை தொட‌ர்பு கொண்ட‌ ஹாபிஸ் ம‌ஹிந்த‌ வெல்வாரா என‌ அடிக்க‌டி கேட்டார். வெல்வாரா என்று தெரியாது. ஆனால் எம‌க்கு இறைவ‌ன் உத‌வி செய்வான் என்ற‌ ந‌ம்பிக்கை உள்ள‌து என்றார். பின்னர் சில‌ வார‌ங்க‌ளில் தானும் ம‌ஹிந்த‌வை ஆத‌ரிப்ப‌தாக‌ ஹாபிஸ் அறிவித்தார். அத்தேர்த‌லில் ம‌ஹிந்த‌ ராஜ்ப‌க்ஷ‌ வென்ற‌த‌ன் மூல‌ம் உல‌மா க‌ட்சி முத‌லில் க‌ள‌மிற‌ங்கிய‌ ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் உல‌மா க‌ட்சி ஆத‌ரித்த‌ ஜ‌னாதிப‌தி வெற்றி பெற்ற‌மை சிற‌ந்த‌ சிந்த‌னைக்கும் ந‌ம்பிக்கைக்கும் வெற்றியாக‌ அமைந்த‌து. க‌ட்சி ஆர‌ம்பித்து அத‌ன் முல‌ம் த‌ன‌க்கென‌ எந்த‌ ப‌த‌வியும் பெறாம‌ல் ச‌மூக‌த்தின் குர‌லாக‌ ம‌ட்டும் செய‌ற்ப‌டுத்துவ‌தில் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மிக‌ப்பெரிய‌ வெற்றி பெற்றார் என்றுதான் சொல்ல‌ வேண்டும். ImportMirror - No 1 leading Tami...முபாற‌க் அப்துல் ம‌ஜீதின் அர‌சிய‌ல் வ‌ர‌லாறு!ImportMirror - No 1 leading Tamil News website delivers Tamil News, Sri Lanka News, Latest Tamil News, Tamil News Paper Online,Tamil News.
  9. 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் திகதி, காத்தான்குடியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 103 முஸ்லிம்கள் மரணமடைந்தனர். இந்தக் கொடூரச் சம்பவத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் “தேசிய ஷுஹதாக்கள் தினம்” அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கமைய, இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) 35வது ஷுஹதாக்கள் தின நிகழ்வுகள், ஹுஸைனியா மற்றும் மீரா ஜும்ஆ மஸ்ஜித்களில் நடைபெற்றன. இதன்போது, கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆ பிரார்த்தனைகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், பிரதித் தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் அப்துல் வாசித், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், ஷுஹதாக்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். அத்தோடு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை காத்தான்குடி கிளை, வர்த்தக சங்கம், தேசிய ஷுஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனம் மற்றும் இரு பள்ளிவாயல்களின் நிர்வாகம் ஆகியன இணைந்து ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர். அப்பிரகடனத்தில் 1985ம் ஆண்டு தொடக்கம் 2010ம் ஆண்டு வரையான யுத்த காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் காணி இழப்புகள் தொடர்பில் ஒரு நீதியானதும் நியாயமானதும் சுதந்திரமானதுமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் மஹஜர் கையளிக்கப்பட்டது. அவ்வாறே, இன்று காத்தான்குடியில், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. – ஊடகப்பிரிவு https://madawalaenews.com/25792.html முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேச மயமாக்கப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி. முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் இன்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களிடம் தெரிவித்தார். 1990ம் ஆண்டு ஆகஸ்ட் 03ம் திகதி ஹுஸைனியா பள்ளிவாயலிலும், மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் நடந்த படுகொலைச்சம்பவங்களில் ஷஹீதாக்கப்பட்ட 103 ஷுஹதாக்கள் நினைவாக இன்று துஆப்பிரார்த்தனை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலாமா சபை மற்றும் ஊர் ஜமாஅதார்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்விலேயே மேற்படி கருத்தைத் தெரிவித்தார். அத்துயர நினைவுகளை மீட்டிக்கொள்வதற்கும் ஷுஹதாக்களுக்காக பிரார்த்தனை செய்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாக இது வாய்த்ததையிட்டு பெருமகிழ்வுறுகிறோம். இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான சம்பவங்களின் படிப்பினைகளை சரிவர உணர்ந்து இனங்களுக்கிடையிலான உறவை மீளக்கட்டியெழுப்புவதில் எமது கட்சியும், கட்சித்தொண்டர்களும் முழு மூச்சுடன் ஈடுபட வேண்டும். அத்திடசங்கர்ப்பத்தை நாம் இந்த ஷுஹதாக்கள் நினைவு நாளில் உறுதி பூணுவது மாத்திரமல்லாமல், இத்துன்பியல் சம்பவங்கள் குறித்த வரலாற்றையும் சரிவர தொடர்ந்தும் மனதிலிருத்தி முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டியது முக்கியமானதாகும் எனத்தெரிவித்தார். https://madawalaenews.com/25780.html
  10. காத்­தான்­கு­டியின் இரண்டு பள்­ளி­வா­சல்­களில் இஷாத் தொழு­கையில் ஈடு­பட்­டி­ருந்த 103 பேர் விடு­தலைப் புலி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்டு ­எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதியுடன் சரி­யாக 35 வரு­டங்­க­ளா­கின்­றன. அன்­றைய தினத்தை கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் ஷுஹ­தாக்கள் தின­மாக அனுஷ்­டிக்­கின்­றனர். இதனை நினைவு கூரும் முக­மாக காத்­தான்­கு­டியில் பல்வேறு நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. இலங்கை அர­சாங்­கத்­திற்கும் விடு­த­லைப்­பு­லிகள் உள்­ளிட்ட இயக்­கங்­க­ளுக்­கு­மி­டை­யி­லான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்­லிம்கள் சந்­தித்த இழப்­பு­களின் உச்­ச­பட்­சமே இந்த பள்­ளி­வாசல் படு­கொ­லை­யாகும். கிழக்­கி­லி­ருந்து முஸ்­லிம்­களை வெளி­யேற்ற வேண்டும் என்­பதே அன்று புலி­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. இதன் கார­ண­மாக காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை, ஏறாவூர் படு­கொலை, அளிஞ்­சிப்­பொத்­தானை படு­கொலை, குருக்­கள்­மடம் கடத்­தலும் படு­கொ­லையும், பல்­வேறு குண்டுத் தாக்­குதல் சம்­ப­வங்கள், அவ்­வப்­போ­தான ஆட்­க­டத்­தல்கள், கல்­வி­மான்­களை இலக்கு வைத்த படு­கொ­லைகள் என அக் காலப்­ப­கு­தியில் ஆயுதம் தாங்­கிய குழுக்­களால் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டனர். இவ்­வா­றான வன்­மு­றை­களால் சுமார் 7000 முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கலாம் எனக் கணக்­கி­டப்­பட்­டுள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி பல்­லா­யிரக் கணக்­கான ஏக்கர் நிலங்­களை முஸ்­லிம்கள் இழந்­துள்­ளனர். இதன் கார­ண­மாக இன்று கிழக்கு மாகா­ணத்தில் மிகவும் குறு­கிய நிலப்­ப­ரப்­புக்குள் இலட்­சக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் மிக நெருக்­க­மாக வாழ்­வ­தற்கு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டுள்­ளனர். இது பல்­வேறு சுகா­தார மற்றும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்கும் வழி­வ­குத்­துள்­ளது. இந்த நாட்டை பிரி­வி­னை­யி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்­காக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் பாரிய விலையைக் கொடுத்­துள்­ளனர். வடக்கு முஸ்­லிம்கள் தமது தாய­கத்­தி­லி­ருந்து எவ்­வாறு விரட்­டப்­பட்­டதன் மூலம் தமது வாழ்­வையே தொலைத்­தார்­களோ அதே­போன்று கிழக்கு முஸ்­லிம்­களும் மேற்­கு­றிப்­பிட்ட வன்­மு­றை­களால் மிக மோச­மான பாதிப்­பு­களைச் சந்­தித்­துள்­ளனர். இருப்­பினும் இவற்­றுக்கு இது­வரை குறிப்­பிட்டுச் சொல்­லும்­ப­டி­யான எந்­த­வித நஷ்­ட­யீ­டு­க­ளையோ நீதி­யையோ அவர்கள் பெற­வில்லை என்­பது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். கடந்த காலங்­களில் சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது முஸ்­லிம்­களைத் தனித்­த­ரப்­பாக அங்­கீ­க­ரிக்­கு­மாறும் இழப்­பு­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­மாறும் கோரிக்­கை­வி­டுத்தும் அவை கவ­னத்திற் கொள்­ளப்­ப­ட­வில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்­லிம்கள் சார்பில் பல்­வேறு கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் அவற்­றுக்கு எவரும் உரிய பதி­ல­ளிப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் கூட கடந்த காலங்­களில் கிழக்கு முஸ்­லிம்­களின் அவ­லங்­களை வைத்தே அர­சியல் செய்து அதி­கா­ரங்­க­ளுக்கு வந்­தனர். முஸ்லிம் தனித்­துவக் கட்­சிகள் அனைத்தும் முஸ்­லிம்­களின் இந்த இழப்­பு­களை சந்­தைப்­ப­டுத்­தியும் அவற்­றுக்கு தீர்வு தரு­வ­தா­கவும் கூறியே அர­சியல் செய்­தன. இன்றும் செய்து வரு­கின்­றன. எனினும் மக்­க­ளுக்கு எந்­த­வித நீதியும் கிடைத்­த­தாக இல்லை. யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் செம்மணியில் சுமார் 100 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அதேபோன்றுதான் கிழக்கில் குருக்கள்மடம் பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடங்களும் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. யுத்த காலத்தில் இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற அநீதிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இதுவரை போதுமான கவனம் உள்நாட்டிலோ அல்லது சர்வதேச நீதிப் பொறிமுறைகளிலோ செலுத்தப்படவில்லை. எதிர்வரும் காலங்களிலாவது இதற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறைகள் நிறுவப்பட வேண்டும். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அப்பாவி மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli https://www.vidivelli.lk/article/19832
  11. ஆம் நான் இந்த இயந்திரத்தினுள் போயிள்ளேன். கட்டயம் உலோகங்கள் ஏதும் உடலில் இருந்தால் கல‌ட்டி விடுமாறு அறிவுறுத்துவார்கள். 90களில் இருந்து வரும் இந்த படத்தில் உள்ள எல்ல பாகமும் பார்த்துள்ளேன். இது கடசியாக கடந்த மாதம் வந்தது. இங்கு கொழும்பில் பார்த்தேன்
  12. அரசு இந்த முடிவு எடுக்க காரணம். யாரோ ஒரு பெண் குழந்தையை பெற்று வயல் வெளியில் வீசி விட்டு சென்றதினால் தான். மிருகங்கள் கூட இப்படி செய்யாதே. ஆண்சிங்கம், பெண்சிங்கம் என்ன்றில்லை. கிறிமினல் வேலை செய்ய ஆண் பெண் இருபாலரிலும் இருக்கின்றார்கள்.
  13. இலங்­கையில் கால் நூற்­றாண்­டுக்கும் மேலாக நீடித்த உள்­நாட்டு யுத்தம், நாட்டின் அனைத்து சமூ­கங்­க­ளையும் பாதித்­தது. இந்த யுத்­தத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் சந்­தித்த இழப்­புக்­களும், அவர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களும் பெரும்­பாலும் போதி­ய­ளவு ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது கவலை தரும் உண்­மை­யாகும். உயிர் மற்றும் உடைமை இழப்­புக்கள், பள்­ளி­வாசல் படு­கொ­லைகள், வடக்கு முஸ்­லிம்­களின் வெளி­யேற்றம், குருக்­கள்­மடம் படு­கொலை என பல சம்­ப­வங்கள் முஸ்­லிம்­களின் வர­லாற்றில் ஆழ­மான தழும்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. யுத்தம் முடி­வ­டைந்து பல வரு­டங்கள் கடந்த பின்­னரும், இந்த இழப்­புக்கள் பற்­றிய முழு­மை­யான பதி­வுகள், ஆவ­ணங்கள் எல்­லோரும் அணுகக் கூடிய வகையில் இல்லை என்பதே யதார்த்தமாகும். ஆய்வாளர் மர்ஹூம் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்கள் முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சி­னைகள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களை ஆவ­ணப்­ப­டுத்­துவதில் பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். எனினும், அவ­ரது மறை­விற்குப் பின்னர், இந்த முக்­கி­ய­மான பணி தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இது ஒரு பாரிய இடை­வெ­ளியை உரு­வாக்­கி­யுள்­ளது. முஸ்லிம் தகவல் நிலை­யமும் இது­போன்ற பணி­களை முன்­னெ­டுத்­த போதிலும் சமூ­கத்­தி­ட­மி­ருந்து போதியளவு ஆத­ர­வுகள் கிடைக்கப் பெறா­ததால் அந்த முயற்­சியும் கைவி­டப்­பட்­டது. இந்த சூழ்­நி­லையில், இளம் ஆய்­வாளர் சட்­டத்­த­ரணி சர்ஜூன் ஜமால்தீன் போர் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு ஏற்­பட்ட இழப்­புகள், அஷ்­ரபின் மரணம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் ஆகிய விடயப் பரப்­பு­களில் அண்­மையில் மூன்று நூல்­களை வெளி­யிட்­டுள்ளார். இது மிகவும் பாராட்­டப்­பட வேண்­டிய ஒரு முயற்­சி­யாகும். இத்­த­கைய ஆய்­வுகள் முஸ்லிம் சமூ­கத்தின் வர­லாற்றைப் பாது­காப்­ப­தற்கும், எதிர்­கால சந்­த­தி­யினர் தமது கடந்த காலத்தை புரிந்­து­கொள்­வ­தற்கும் அத்­தி­யா­வ­சி­ய­மா­னவை. ஆனால், ஒரு சில தனி­ந­பர்களின் முயற்­சியால் மட்டும் இந்தப் பாரிய பணியை முழு­மை­யாக நிறை­வேற்ற முடி­யாது. இலங்கை முஸ்­லிம்கள் யுத்­தத்தில் இழந்­தவை குறித்து முழு­மை­யான, விரி­வான ஆய்வு மற்றும் ஆவ­ணப்­ப­டுத்­தலை மேற்­கொள்­வ­தற்கு ஒரு நிரந்­த­ர­மான ஆய்வு மற்றும் ஆவ­ணப்­ப­டுத்தல் மையம் உட­ன­டி­யாக ஸ்தாபிக்­கப்­பட வேண்டும். இந்த மையம், சாட்­சி­யங்­களைப் பதிவு செய்தல், ஆதா­ரங்­களைச் சேக­ரித்தல், ஆய்­வு­களை மேற்­கொள்­ளுதல் மற்றும் வர­லாற்றுப் பதி­வு­களைப் பாது­காத்தல் போன்ற பணி­களை மேற்­கொள்ள வேண்டும். இந்த விட­யத்தில் தமிழ் சமூகத்தை ஒரு முன்னுதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ள முடியும். யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் அனு­ப­வங்கள், இழப்­புக்கள் மற்றும் அவர்­களின் கலை, கலா­சாரப் பாரம்­ப­ரி­யங்கள் குறித்து பல ஆய்­வுகள், ஆவ­ணப்­ப­டங்கள், நூல்கள் மற்றும் நினைவுச் சின்­னங்கள் மூலம் ஆவ­ணப்­ப­டுத்தும் முயற்­சி­களை அவர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர். இது ஒரு சமூ­கத்தின் நினை­வு­களைப் பாது­காப்­ப­தற்கும், நீதி கோரு­வ­தற்கும் எதிர்­கா­லத்­திற்குப் பாட­மாக அமை­வ­தற்கும் மிகவும் அவ­சி­ய­மாகும். தமிழ் சமூகம் மேற்­கொண்ட இத்­த­கைய முயற்­சி­களை முன்­மா­தி­ரி­யாகக் கொண்டு, முஸ்லிம் சமூ­கமும் தமக்­கான ஒரு ஆவ­ணப்­ப­டுத்தல் பொறி­மு­றையை உரு­வாக்க வேண்டும். இலங்கை முஸ்லிம் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் இன ரீதி­யான அர­சியல் கட்­சிகள், இந்த முக்­கி­ய­மான ஆவ­ணப்­ப­டுத்தல் பணியில் கவனம் செலுத்தத் தவ­றி­விட்­டன என்­பது கசப்­பான உண்­மை­யாகும். அர­சியல் அதி­கா­ரத்­திற்­கா­கவும் பத­வி­க­ளுக்­காவும் போரா­டிய இந்தக் கட்­சிகள், சமூ­கத்தின் நீண்­ட­கால வர­லாற்றுப் பதி­வு­களைப் பாது­காப்­ப­தற்­கான ஒரு ஸ்திர­மான திட்­டத்தை வகுக்­கவோ, நடை­மு­றைப்­ப­டுத்­தவோ தவ­றி­விட்­டன. மர்ஹூம் அஷ்ரப் அவர்­களால் உரு­வாக்­கப்­பட்ட தென் கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கம் கூட இது விட­யத்தில் காத்­தி­ர­மான பங்­க­ளிப்­பு­களை வழங்­க­வில்லை என்­பதும் கசப்பான உண்மையாகும். இது ஒரு சமூ­க­மாக நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய ஒரு தோல்­வி­யாகும். அர­சியல் தலை­வர்கள் குறு­கிய கால நலன்­களைத் தாண்டி, நீண்ட கால நோக்கில் சமூ­கத்தின் எதிர்­கா­லத்­திற்­கான அடித்­த­ளத்தை அமைப்­பதில் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும், சிவில் சமூக அமைப்­புக்­களும் இந்த விட­யத்தை ஒரு தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த பணி­யாகக் கருதி செயற்­பட வேண்டும். இத்­த­கை­ய­தொரு மையத்தை ஸ்தாபிப்­ப­தற்கும், அதற்குத் தேவை­யான நிதி­யையும், மனித வளத்­தையும் வழங்­கு­வ­தற்கும் அவர்கள் முன்­வர வேண்டும். கடந்த காலத்தை ஆவ­ணப்­ப­டுத்­து­வது என்­பது வெறும் கடந்த காலத்தைப் பதிவு செய்­வது மட்­டு­மல்ல; அது எதிர்­கா­லத்தில் இத்­த­கைய துய­ரங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஒரு முக்கியமான பாடமாகும். முஸ்லிம் சமூகம் யுத்தத்தில் இழந்தவற்றின் முழுமையான ஆவணப்படுத்தல் என்பது ஒரு நீதிசார்ந்த கோரிக்கையுமாகும். இது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அங்கீகரிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ஆறுதலை அளிப்பதற்கும் உதவும். எனவே, உரிய தரப்பினர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி, ஆக்கபூர்வமான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.- Vidivelli https://www.vidivelli.lk/article/19611
  14. குருக்கள்மடம் படுகொலை புதைகுழியை தோண்டவும் எம்.எஸ்.எம்.நூர்தீன்) மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் குருக்கள் மடம் பகு­தியில் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளினால் கடத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள நூற்­றுக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் முன் வர­வேண்டும் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் பொறி­யி­ய­லாளர் சிப்லி பாறூக் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். இது தொடர்­பாக அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் 12.07.1990 ம் ஆண்டு ஹஜ் கட­மையை முடித்துக் கொண்டு வந்த முஸ்லிம் சகோ­த­ரர்கள் மற்றும் இன்னும் சில முஸ்லிம் சகோ­த­ரர்கள் குருக்கள் மடம் பகு­தியில் வைத்து தமி­ழீழ விடு­தலைப் புலி பயங்­க­ர­வா­தி­களால் கடத்தப்பட்டு படு கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டார்கள். இதில் அதி­க­மான முஸ்­லிம்கள் காத்­தான்­கு­டியைச் சேர்ந்­த­வர்­க­ள். இதில் 167 பேர் கொல்­லப்­பட்­டனர். ஆனால் இன்னும் அவர்­களின் ஜனா­ஸாக்கள் தோண்­டப்­பட வில்லை. தற்­போது செம்­மணி புதை­குழி தோண்­டப்­ப­டு­கி­றது. இதே போன்று குருக்கள் மடத்தில் புதைக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் சட­லங்­களும் ஜனா­ஸாக்­களும் தோண்டி எடுக்­கப்­பட்டு இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்­யப்­படல் வேண்டும். இது தொடர்­பாக நீதி­மன்றம் சென்று தோண்டி எடுப்­ப­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ரவை 2014 ஒக்­டோபரில் பெற்ற போதிலும் இது வரை தோண்­டப்­பட வில்லை. இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்­தினால் முஸ்லிம் மக்­களும் பாதிக்­கப்­பட்­டார்கள் என்­பது வர­லாற்று உண்­மை­யாகும். எனவே குருக்கள் மடத்தில் கடத்­தப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்ள முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­க­ளையும் தோண்டி எடுத்து இஸ்­லா­மிய முறைப்­படி அடக்கம் செய்ய நட­வ­டிக்கை எடுக்குமாறு வேண்டு கோள் விடுகிறேன் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக் மேலும் தெரிவித்துள்ளார்.- Vidivelli https://www.vidivelli.lk/article/19594
  15. இந்திய நடிகை சன்னி லியோன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் இலங்கை வந்துள்ளார். சன்னி லியோனை தவிர பொலிவுட் திரையுலகில் வலம் வரும் ஏனைய சில நடிகர்களும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. (a) https://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9/175-361006 பாலிவுட் நடிகை மற்றும் பிரபல தனிப்பட்ட பிரம்மாண்ட நிகழ்வுகளில் பங்கேற்கும் மாடலான சன்னி லியோன், தற்போது இலங்கைக்கு வருகைதந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். சன்னியின் வருகையால் ரசிகர்கள் பெரும் பரவசத்தில் இருந்ததுடன், அவரை நேரில் காண பலர் ஹோட்டல் அருகே திரண்டிருந்தனர். எனினும் அவரது வருகை சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://jvpnews.com/article/bollywood-actress-sunny-leone-arrives-in-sri-lanka-1752432057
  16. பாஸீர் கலீலுர் ரஹ்மான் இயக்கத்தில் உருவான குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்) என்ற ஆவணப்படம் வெளியாகிறது. இது குருக்கள் மடம் படுகொலைகள் (‘பயணிகளைக் கொல்லுதல்’ என்ற ஆங்கிலத் தலைப்பில்) ஆவணப்படத்தின் முன்னோட்டக் காணொளி. இலங்கையின் போரின் போது காத்தான்குடிக்கு செல்லும் பாதைகளில் பயணிகள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளை இது வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. 1990 ஜூலை 12 ஆம் தேதி குறுக்கள் மடம் பிரதேசத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட ஒருவரினதும் அதுபோன்ற ஒரு படுகொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பிய ஒருவரினதும் கதைகளை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அத்தினத்தில், ஹஜ் பயணத்திலிருந்து திரும்பியவர்கள் உட்பட 72 அப்பாவிப் பொதுமக்கள் ஆயுதக் குழுக்களால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர். இந்த ஆவணப்படம் பாஸீர் கலீலுர் ரஹ்மான் அவர்களால் இயக்கப்பட்டு எமது அமைப்பினால் விரைவில் வெளியியடப்படவுள்ளது. This is the trailer for the documentary Killing the Travellers | Kurukkalmadam Massacre, which exposes the abductions of travellers on roads to and from Kattankudy during the Sri Lankan civil war. It highlights the massacre that took place in Kurukkalmadam on 12th July 1990, where 72 innocent people – including returning Hajj pilgrims – were killed and buried by armed groups. The documentary is produced by Activists Without Borders and directed by Baazir Kaleelur Rahman. https://madawalaenews.com/24518.html
  17. குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது. குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர். Jaffna Muslimகுருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்...
  18. அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது முஸ்லிம் சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது. கொழும்பில் இஸ்ரேலிய சபாத் இல்லம் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் தனது கையடக்கத் தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை வைத்திருந்ததாகக் கூறியும் மாவனெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளமை முஸ்லிம் சமூகத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு முன்னராக, இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை ஒட்டிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞரான ருஷ்தி, பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னரே நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த கைதுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது. முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்தக் கைது தொடர்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை வழங்கியிருந்தனர். உள்ளூராட்சித் தேர்தல் அண்மித்த நிலையில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்பதற்காக ருஷ்தி அவசர அவசரமாக விடுவிக்கப்பட்டார். எனினும் அதற்கு பல மாதங்களுக்கு முன்னராகவே இதே போன்றதொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மாவனெல்லை இளைஞர் சுஹைல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த வாரம் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகநூலில் பகிர்ந்த தகவல் மூலமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இவ்வாறான கைதுகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய மத தலங்களைப் பாதுகாப்பதற்கு வழங்கும் முக்கியத்துவத்தை, தனது சொந்தப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் காண்பிக்கவில்லை என்ற விமர்சனத்தை இந்த சம்பவங்கள் உண்மைப்படுத்துவதாக உள்ளன. ஈஸ்டர் தாக்குதலின் போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது பல வழக்கறிஞர்கள் முன்வந்து அவர்களுக்கு உதவினர். குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்படாதவர்களை முடியுமான அளவு விரைவாக விடுவிப்பதற்கு கூட்டாக இணைந்து செயற்பட்டனர். ஆனால் தற்போது இவ்வாறான கைதுகளின்போது பாதிக்கப்படும் அப்பாவி இளைஞர்களுக்கு உதவ யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுஹைல் விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் யாரைச் சந்திப்பது? சட்ட உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தெரியாமலேயே கடந்த 8 மாதங்களைக் கடத்தியுள்ளனர். இந்நிலையில்தான் இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தி, அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட பொறிமுறை ஒன்று அவசியமாகிறது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூறா சபை உள்ளிட்ட சிவில் அமைப்புகள் கூட்டாக இணைந்து செயற்படுவது பொருத்தமானதாகும். முஸ்லிம் சட்டத்தரணிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடி தேசிய முஸ்லிம் மனித உரிமை நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பது காலத்தின் தேவையாகும். முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் விரைந்து செயற்பட்டு சமூகத்தைப் பாதுகாக்கவும் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli https://www.vidivelli.lk/article/19519
  19. அல்தாப் அஹமட் யாழ்ப்­பாணம், செம்­மணி மனிதப் புதை­கு­ழியைத் தோண்டத் தோண்ட அதிர்ச்­சி­யூட்டும் அத்­தாட்­சி­களே வந்­த­வண்­ண­முள்­ளன. கடந்த சில நாட்­க­ளாக சிறு­வர்­களின் எலும்புக் கூடு­களும் அவர்கள் பயன்­ப­டுத்­திய பொருட்­களின் எச்­சங்­களும் மீட்­கப்­பட்­டமை இந்த மனிதப் புதை­கு­ழி­களின் பின்னால் மறைந்­தி­ருக்கும் ஈவி­ரக்­க­மற்ற அரக்­கர்­களைக் கண்­ட­றிந்து தண்­டிக்க வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்­து­வ­தா­க­வுள்­ளன. கடந்த வாரம் இங்கு மேற்­கொள்­ளப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியின் போது, ஒரு குழந்­தையின் மனித எச்­சங்­களும், அத்­துடன் ஆங்­கில எழுத்­துக்­க­ளுடன் கூடிய நீல நிறப் பை, ஒரு சிறிய பொம்மை, விளை­யாட்டுப் பொருட்கள் மற்றும் ஒரு சப்­பாத்து போன்ற பொருட்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பாணம், செம்­மணி, சித்­துப்­பாத்தி மனிதப் புதை­கு­ழியில் இருந்து நேற்று வரை தொல்­லியல் ஆய்­வா­ளர்கள் 38 மண்டை ஓடு­களை அடை­யாளம் கண்­டுள்­ளனர். இவற்றுள் குறைந்­தது 10 மண்டை ஓடுகள் குழந்­தைகள் அல்­லது சிறு­வர்­க­ளுக்கு உரி­யவை என சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் இந்த இடம் குற்­றச்­சம்­பவம் நடந்த பகு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பங்கள் சார்பில் அகழ்­வா­ராய்ச்சி பணி­களை மேற்­பார்­வை­யிடும் சட்­டத்­த­ரணி ரணிதா ஞான­ராஜா, “செம்­மணி மனிதப் புதை­குழி அகழ்வில் நேற்று முன்­தி­னத்­துடன் ஐந்­தரை நாட்கள் முடி­வ­டைந்­துள்­ளன. ஏற்­க­னவே அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட பாட­சாலை புத்­த­கப்­பை­யோடு இருந்த மனித எலும்புக் கூடு முழு­மை­யாக மீட்­கப்­பட்­டுள்­ளது. அகழ்ந்­தெ­டுக்கும் பொழுது சிறு குழந்­தையின் எலும்புக் கூட்­டுடன் சப்­பாத்து, குழந்தை விளை­யாடும் சிறிய பொம்மை ஒன்று அகழ்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. இதுவரையான அகழ்வுப் பணியில் ஐந்து வரை­யான மனித எலும்­புக்­கூ­டுகள் ஒன்­றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காணப்­ப­டு­கி­றது. இதனால் அதில் உள்ள எலும்­புக்­கூ­டு­களின் எண்­ணிக்­கையை சொல்ல முடி­யாத குழப்­ப­மான நிலை ஏற்­பட்­டுள்­ளது” என்றார். தட­ய­வியல் தொல்­லியல் ஆய்­வாளர் பேரா­சி­ரியர் ராஜ் சோம­தேவ அடை­யாளம் காட்­டிய சாத்­தி­ய­மான புதை­கு­ழிகள் உள்ள இடங்­களில் கடந்த திங்­கட்­கி­ழமை சுத்தம் செய்யும் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக தொல்­லியல் மாண­வர்­களின் உத­வி­யு­டனும், நல்லூர் பிர­தேச சபை ஊழி­யர்­களின் உத­வி­யு­டனும் சுத்தம் செய்யும் பணிகள் நடை­பெற்­றன. பேரா­சி­ரியர் சோம­தே­வவும் யாழ்ப்­பாண சட்ட மருத்­துவ அதி­காரி டாக்டர் செல்­லையா பிர­ண­வனும் மே 15 அன்று செம்­மணி சித்­துப்­பாத்தி மயா­னத்தில் அகழ்­வா­ராய்ச்­சியைத் தொடங்­கினர். நல்லூர் பிர­தேச சபை ஊழி­யர்கள் செம்­மணி பகு­தியில் கட்­டிடம் ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­காக நிலத்தை சுத்தம் செய்யும் போது கடந்த பெப்­ர­வரி 20 அன்று மனித எலும்புக் கூடு­களை கண்­டு­பி­டித்­ததை அடுத்து, இந்த மனிதப் புதை­கு­ழிகள் மீண்டும் வெளிச்­சத்­துக்கு வந்­தன. செம்­ம­ணியின் பின்­னணி 1998 ஆம் ஆண்டு இலங்­கையில் 18 வய­தான தமிழ் பாட­சாலை மாணவி கிருஷாந்தி குமா­ர­சா­மியின் பாலியல் வன்­பு­ணர்வு மற்றும் கொலை நாட்­டையே உலுக்­கி­யது. பரீட்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த அவர், கொண்­டா­விலில் உள்ள இரா­ணுவ சோதனைச் சாவ­டியில் தடுத்து நிறுத்­தப்­பட்டார். அதன்­பின்னர் அவர் வீடு திரும்­ப­வில்லை. பின்னர், அவ­ரது சிதைந்த சடலம், அவரைத் தேடிச் சென்ற அவ­ரது தாயார், சகோ­தரன் மற்றும் அய­லவர் ஆகி­யோரின் சட­லங்­க­ளுடன் சேர்த்து கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இந்த வழக்கின் விசா­ர­ணையில் பல இரா­ணுவ வீரர்கள் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டனர். அவர்­களில் ஒரு­வ­ரான சோம­ரத்ன ராஜ­பக்ச, 1995-1996 இல் இரா­ணுவம் யாழ்ப்­பா­ணத்தை மீண்டும் கைப்­பற்­றி­யதைத் தொடர்ந்து காணாமல் போன நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் பொது­மக்கள் செம்­மணி கிரா­மத்­திற்கு அருகில் கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­ட­தாக ஒரு அதிர்ச்­சி­யூட்டும் தக­வலை தெரி­வித்தார். இப் பகு­தியில் 300 முதல் 400 சட­லங்கள் புதைக்­கப்­பட்ட இடத்தை தனக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார். இத­னை­ய­டுத்து 1999 ஆம் ஆண்டில், சர்­வ­தேச அழுத்­தத்தின் கீழ், அர­சாங்கம் செம்­ம­ணியில் நீதி­மன்றக் கண்­கா­ணிப்பில் அகழ்­வா­ராய்ச்­சி­களை தொடர அனு­ம­தித்­தது. உலகம் உற்று நோக்கிக் கொண்­டி­ருக்க, மனித உரிமைக் குழுக்கள் கண்­கா­ணித்துக் கொண்­டி­ருக்க, செம்­மணி நிலம் தனது உண்­மையை வெளிப்­ப­டுத்தத் தொடங்­கி­யது. பதி­னைந்து சட­லங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவற்றில் இரண்டு சட­லங்கள் 1996 இல் காணாமல் போன­வர்­க­ளு­டை­யவை என அடை­யாளம் காணப்­பட்­டன. ஆதா­ரங்கள் உறு­தி­யாக இருந்­தன. ஏழு இரா­ணுவ வீரர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. ஆனால் இந்த விசா­ர­ணைகள் ஒரு கட்­டத்தில் நிறுத்­தப்­பட்­டன. கோப்­புகள் தூசி படிந்­தன. மேல­திக அகழ்­வா­ராய்ச்­சிகள் நடத்­தப்­ப­ட­வில்லை. 2006 ஆம் ஆண்­ட­ளவில், உத்­தி­யோ­க­பூர்வ அறிக்கை ஒன்றில் செம்­மணி விவ­காரம் கிட்­டத்­தட்ட முழு­மை­யா­கவே மறக்­கப்­பட்­டது. ஆனால் முத­லா­வது அகழ்­வா­ராய்ச்சி நடந்து இரண்டு தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் ஜூன் 2025 இல் மீண்டும் இந்த விவ­காரம் பேசு­பொ­ரு­ளா­னது. செம்­மணி புதை­கு­ழியில், நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் அகழ்­வா­ராய்ச்­சிகள் மீண்டும் தொடங்­கப்­பட்­டன. அங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டவை தேசத்தின் மன­சாட்­சியை மீண்டும் உலுக்­கின. மூன்று குழந்­தைகள் உட்­பட, 19 மனித எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. அவர்­களில் ஒருவர் ஒரு வய­துக்கும் குறை­வா­னவர் என்று நம்­பப்­ப­டு­கி­றது. செம்­மணி ஒரு தனித்து நிற்கும் துய­ர­மல்ல. இது வடக்கு மற்றும் கிழக்கு மாகா­ணங்­களில் நடந்த மனிதப் படு­கொ­லை­களின் சாட்­சி­யாக நம்முன் காட்­சி­ய­ளிக்­கி­றது. 2013 ஆம் ஆண்டில், மன்னார் நகரில் கட்­டு­மான நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிலத்தை தோண்­டிய போது 11 எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. பின்னர் 2018 ஆம் ஆண்டில் மிகப்­பெ­ரிய மனிதப் புதை­குழி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இங்கு நடத்­தப்­பட்ட அகழ்­வா­ராய்ச்­சியில் 29 குழந்­தைகள் உட்­பட 346 எலும்­புக்­கூ­டுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன. தட­ய­வியல் தொல்­லியல் நிபு­ணர்கள் இந்த எச்­சங்கள் 30 வரு­டங்­க­ளுக்கு உட்­பட்­டவை என்­பதை உறு­திப்­ப­டுத்­தினர். ஆனால் தாம­தங்கள், அர­சியல் தலை­யீ­டுகள் மற்றும் நிதிப் பற்­றாக்­குறை என்­பன கார­ண­மாக மேல­திக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. தடயப் பொருட்­களும் காணாமல் போயின. விஞ்­ஞான பரி­சோ­த­னைகள் தடைப்­பட்­டன, காலப்­போக்கில் பொது மக்­களும் இவற்றை மறந்­தனர். எவ­ருக்கும் பொறுப்புக் கூறப்­ப­ட­வில்லை. ஆனால்குடும்­பங்கள் தொடர்ந்து நீதிக்­காக காத்­தி­ருக்­கின்­றன. 2000 ஆம் ஆண்டில் மிரு­சு­விலில் எட்டு தமிழ் பொது­மக்கள் இரா­ணு­வத்தால் கடத்­தப்­பட்­டனர். ஒருவர் அங்­கி­ருந்து தப்­பினார். அவர் மூல­மாக, ஏனைய ஏழு சட­லங்கள் கண்கள் கட்­டப்­பட்டும், சுடப்­பட்டும் ஆழ­மற்ற புதை­கு­ழியில் புதைக்­கப்­பட்­டி­ருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இதற்குக் கார­ண­மான, ஒரு தலைமை பொலிஸ் சார்ஜென்ட், 15 ஆண்­டு­க­ளுக்குப் பிறகு 2015 இல் மரண தண்­டனை விதிக்­கப்­பட்டார். எனினும் எந்­த­வொரு உயர் அதி­கா­ரியும் விசா­ரிக்­கப்­ப­ட­வில்லை. மட்­டக்­க­ளப்பில் உள்ள முரக்­கொட்­டாஞ்­சேனை மற்றும் முல்­லைத்­தீவில் உள்ள கொக்­குத்­தொ­டுவாய் ஆகிய இடங்­களில், கட்­டிட நிர்­மாணப் பணி­களின் போது எலும்­புக்­கூ­டுகள் வெளிப்­பட்­டன. எனினும் அவை மூடி மறைக்­கப்­பட்­டன. குருக்­கள்­மடம் புதை­குழி தமிழ் மக்கள் மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் மக்­களும் இவ்­வாறு கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு புதைக்­கப்­பட்­டுள்­ளனர். மட்­டக்­க­ளப்பு, குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதை­குழி இதற்­கான சாட்­சி­யாகும். விடு­த­லைப்­பு­லி­களால் 1990 ஆம் ஆண்டில், கடத்திக் கொலை செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் முஸ்­லிம்­களின் புதை­கு­ழிகள் இப் பகு­தியில் உள்­ள­தாக நம்­பப்­ப­டு­கி­றது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்­டக்­க­ளப்பு – கல்­முனை ெநடுஞ்­சாலை வழி­யாக வாக­னங்­களில் பயணம் செய்த குறிப்­பாக காத்­தான்­குடி பிர­தேச முஸ்­லிம்கள் 165 பேர் குருக்­கள்­மடம் என்­னு­மி­டத்தில் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் வழி­ம­றிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்டு கட­லோ­ரப்­ப­கு­தியில் புதைக்­கப்­பட்­ட­தாக முஸ்­லிம்கள் தொடர்ந்து குற்­றம்­சாட்டி வரு­கின்­றனர். படு­கொலை செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­ப­வர்­களின் உற­வி­னர்கள் சிலர் கடந்த 2014 ஆம் ஆண்டு இப் புதை­கு­ழி­களில் புதைக்­கப்­பட்­டுள்ள சட­லங்­களை தோண்டி எடுத்து இஸ்­லா­மிய மார்க்க முறைப்­படி அடக்கம் செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு களு­வாஞ்­சிக்­குடி பொலிசில் முறைப்­பா­டு­களை செய்­தனர். இத­னை­ய­டுத்து களு­வாஞ்­சிக்­குடி மஜிஸ்­திரேட் நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இப் பகு­தியில் அகழ்வுப் பணி­களை முன்­னெ­டுக்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இதற்­காக சட்ட மருத்துவ நிபுணர், புதை பொருள் மற்றும் மண்ணியல் ஆய்வுத் துறை உட்பட 15 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து சென்று அந்த இடத்தை பார்வையிட்டிருந்தனர். எனினும் புதைகுழிகள் உள்ள இடங்களை அடையாளம் காட்டுவதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இங்கு இதுவரை அகழ்வாராய்ச்சிப் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் இவ்­வாறு இரா­ணு­வத்­தி­ன­ராலும் விடு­தலைப் புலி­க­ளாலும் ஏனைய ஆயுதக் குழுக்­க­ளாலும் கொன்று புதைக்­கப்­பட்ட ஆயிரக் கணக்­கான மக்­களின் எலும்புக் கூடுகள் அவர்­க­ளது இறப்­பு­க­ளுக்­கான காரணம் கண்­ட­றி­யப்­ப­டாத நிலையில் இன்­னமும் புதையுண்டு கிடக்­கின்­றன. தற்­போ­தைய தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் இவ்­வா­றான படு­கொ­லை­களின் பின்­ன­ணி­களைக் கண்­ட­றிந்து குற்­ற­வா­ளி­களைத் தண்­டிப்­ப­தற்­கான விசேட பொறி­முறை ஒன்றை வகுக்க வேண்டும். எதிர்­கா­லத்தில் இந்த தேசத்தில் இவ்­வா­றான மோச­மான அநீ­திகள் நிகழாதிருப்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.- Vidivelli https://www.vidivelli.lk/article/19561
  20. ஆம் ஐயா இதுதான் உண்மை. எப்ப மரணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலை ஏற்பட்டு விட்டது.
  21. இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதிக்கக் கூடாது - உதுமாலெப்பை Mp இலங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது - சுற்றுலாத்துறை அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை லங்கையில் சுற்றுலாத்துறை பிரதேசங்களில் இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்கள் அமைக்கப்படுவதால் சுற்றுலாத்துறை வருமானங்களில் வீழ்ச்சி ஏற்படுவதுடன் அமைதியான சுற்றுலாத்துறை பிரதேசங்களில் பொதுமக்கள் அச்சம் அடையும் நிலைமையும் ஏற்பட்டு வருகின்றன. எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு இனிமேல் சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கக் கூடாது. அம்பாறை மாவட்டத்தில் அருகம்பே பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனத்தை அகற்றி சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யக்கூடிய நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறை அமைச்சு ஈடுபட வேண்டும் எனவும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தான் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். Jaffna Muslimஇஸ்ரேலின் சட்டவிரோத நிறுவனங்களை அமைப்பதற்கு இலங்கை அனுமதி...
  22. ஆப்பிள் பெண்ணே நீ யாரோ ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ பூமிகாவின் பிளந்த அந்த உதடுகளுக்காவே இந்த படத்தை பலமுறை பார்த்தேன்
  23. சங்கிலிய மன்னனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மனிதர்கள் கொலை செய்யப்பட்டர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். அவர்களது வயதை, கொல்லப்பட்ட விதத்தை இந்த முறையில் கணிக்க முடியுமா?
  24. சிங்களவன் விற்றால் ஏன் வாங்கி பாவிக்கின்றார்கள்? கனடா / இங்கிலந்து போன்ற நாடுகளிலும் இப்படி பாவித்து சீரழிகின்றார்கள்தாதனே. அவரவர் தெரிவு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.