-
Posts
3242 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by colomban
-
காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ? என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? (வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) ஆம், இது சாத்தியமே! வாங்க செல்றன். சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான் இங்கே பேச முனைவது உலகெங்கிலும் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு ஏவப்படுகின்ற மாணவர் சேட்டிலைட்டுகள் 🛰️ ஆகும். இவ்வகையான மாணவர் சேட்டிலைட்டுகள் satellite 🛰️ நிறைய விண்ணுக்கு ஏவப்பட்டு கொண்டிருக்கிறது. Please Google, YouTube பன்னி பாருங்க. இந்த சேட்டிலைடினை காத்தாங்குடி மாணவர்களினால் தயாரிக்கப்பட்டு விண்ணுக்கு அனுப்பி வைப்பதே எனது ஆசை. இந்த சாட்டிலைட்டுக்கு நான் வைத்திருக்கும் பெயர் "KATSAT" 🛰️ ஆகும் (Kattanakudy Satellite என்பதன் சுருக்கம்). இந்த Satellite 🛰️ உடன் தொடர்பு கொள்வதற்கும் தொடர்ச்சியாக விண்வெளி 🌌 ஆராய்ச்சிகளை செய்வதற்கும் காத்தான்குடி மத்திய கல்லூரியில் "Kattanakudy Space Research Institute 📡" (KSRI) என்ற நிறுவனம் நிறுவப்படும். பெயரும் நல்லா இருக்கு இல்ல 😃. இந்த KATSAT 🛰️ திட்டத்தில் இரண்டு பிரிவு காணப்படும். 1. சாட்டிலைட் satellite 🛰️ தயாரிப்பு 2. ராக்கெட் 🚀 தயாரிப்பு இந்த satellite 🛰️ இனை இரண்டு வழியில் விண்வெளிக்கு அனுப்ப முடியும். 1. சர்வதேச விண்வெளி நிலையத்தினால் (International Space Station) அனுப்பப்படுகின்ற Cargo Spaceship 🚀 மூலம் இவ்வாறு மாணவர்களினால் தயாரிக்கப்படுகின்ற சேட்டிலைட் இணை அனுப்பி அங்கே இருக்கின்ற Astronaut உதவியுடன் விண்ணில் Manual ஆக launch செய்வது. இது சம்பந்தமான ஆராய்ச்சிகளை நாம் இன்றிலிருந்து தொடங்க வேண்டும். நான் தொடங்கிட்டன்.. 2. அல்லது நாமே ராக்கெட்டினை 🚀 தயாரித்து அதனுள் நமது Satellite யினை 🛰️ வைத்து விண்ணுக்கு அனுப்புவது. இதற்கான தேடல்கள், நல்ல முன் உதாரணங்கள் தமிழ் நாட்டில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். Google பன்னி பாருங்க. நாம் அனுப்ப இருக்கின்ற இந்த KATSAT 🛰️ ஆனது காலநிலை சம்பந்தமான தரவுகளை சேகரித்து அனுப்புகின்ற வேலையினை பிரதானமாக செய்யும். அவ்வப்போது காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப: - இலங்கை சார்ந்த சேட்டிலைட் படங்களை எடுத்து அனுப்புதல், - அவசரகால warning ⚠️ யினை முன்கூட்டியே கூட்டியே தெரியப்படுத்துதல், - மாணவர்கள் எப்படி ஒரு செய்மதியுடன் தொடர்பாடல் (satellite communication) செய்தல் போன்ற பயிற்சிகளை (training) வழங்குவதற்காக இந்த சாட்டிலைட் பயன்படுத்தப்படும். இதனுடைய fun factor ஆக: - தானாகவே விண்வெளி புகைப்படங்கள் எடுத்து அனுப்புவது. - ஒவ்வொரு ஆண்டினை பூர்த்தி செய்கின்ற பொழுதும் Kattanakudy Satellite 🛰️ என்ற LED யினை விண்ணில் ஒளிரச் செய்து வீடியோ எடுத்து அனுப்புவது. - விண்வெளியில் கிடைக்கின்ற ஒலிகளினை record (30 second) செய்து அவ்வப்போது அனுப்புதல். - தனக்கான ட்விட்டரை (X தளம்) அக்கவுண்ட் தொடர்ச்சியாக தானாகவே அப்டேட் செய்தல். - KATSAT இருக்கும் AI தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளி சம்பந்தமான கேள்விகளுக்கு email மூலம் பதில் அளித்தல் போன்ற பல செயற்பாடுகளை நமது KATSAT 🛰️ செய்மதி கொண்டிருக்கும். இந்த சாட்டிலைட் launch 🚀 ஆனது NASA or ISRO இல் இருந்து காத்தான்குடியின் முதல் செய்மதி KATSAT 🛰️ விண்ணுக்கு ஏவப்படுகின்ற அதே தருணம் காத்தான்குடி மத்திய கல்லூரியில் இருந்தும் மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டும் அதே நேரத்தில் விண்ணை நோக்கி ஏவப்படும். இந்த வரலாற்று நிகழ்வினை கண்டுகளிக்க காத்தான்குடியில் அனைத்து மாணவர்களும் மத்திய கல்லூரி கிரவுண்டில் ஒன்று கூடி இருப்பர். இந்த ராக்கெட் லான்ச் ஆனது காத்தான்குடியில் எந்த மூலையில் இருந்தும் மக்கள் பார்வையிடக் கூடியதாகவே அமைந்திருக்கும். இதனது நேரடி ஒளிபரப்பும் குட்வின் ஜங்ஷனில் அமைந்திருக்கும் திரையிலும் மக்கள் பார்வைக்கு காட்டப்படும். 2019 ம் ஆண்டு எனது மனதில் தோன்றிய அந்த எண்ணம் இன்று அது முழு திட்டமாக உருவாகி வருகிறது. இறைவனின் உதவியினால் இந்த திட்டம் நான் மரணிப்பதெற்கு முன்னர் Project Lead ஆக இருந்து இந்த சாதனையை நம் மண்ணில் நிகழ்த்த வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நீங்களும் உங்கள் பிராத்தனைகளில் சேர்த்துக் கொள்ளுங்கள். "வரலாறுகளுக்காக காத்திருக்கக் கூடாது அதனை நாமே தொடங்கி வைக்க வேண்டும்" கனவு காணுங்கள் என்ற அப்துல் கலாம் ஐயாவின் வரிகளினை உதாரணமாக கொண்டு நீங்களும் உங்களது பிள்ளைகளுக்கு ஆர்வம் ஊட்டுங்கள். கொச்சிக்கா பிரச்சினை தானாகே தீரும். "அறிவியல் வளர்ச்சியே எமது எழுச்சி" இர்ஷாத் இஸ்மாயில் https://www.madawalaenews.com/2024/01/satellite.html
-
இன்றுதான் இந்த ஹீரோவை பற்றி கேள்விப்படுகின்றேன். நாமெல்லம் 70 கிட்ஸ் எனக்கு தெரிந்ததெல்லம் ரூபவாகினியில் பார்த்த Black-7, Doctor Who?, star track, bionic woman, incredible hulk போன்றவை
-
ஆம். வருமான வரியை Income Tax (நேர் வரி) நுகர்வோர் தலையில் கட்ட முடியாது, ஆன VAT ஐ நுகர்வோர் தலையில் (நேரில் வரி) கட்டலாம். எந்த ஒரு வருமானமும் பின்வரும் நான்கு வழிகளில் பெறப்படுகின்றது 1. தொழில் மூல வருமானம் (Employment Incme) 2. வியாபர வருமானம் (Business Income) 3. முதலீட்டு வருமானம் (Capital Gain) 4. ஏனைய வருமானம் (Others) தனியொரு நபர், வேலையும் செய்து கொண்டு, வியாபாரம் , முதலீடு போன்றவற்றையும் மேற்கொண்டு வருமானம் உழைக்கலாம். அதற்கேற்ப வருமான மூலதாரத்தை அடிப்படையாக கொண்டு வரி அறவிடப்படும். இதன்போது, Tax Free Allowances, Relief, என்பனவும் கழிக்கபட வேண்டும். (to arrive at taxable income) VAT உள்ளும் , Standard Rated, Zero Rated, exempted என வகையுண்டு அவயும் கருத்தில் கொள்ளப்படவேண்டும். இந்த குடிகாரருக்கு alcohol and tobacco tax rate என்ன வென்று தெரியுமா? (40%) Advance Personal Income Tax பிடிக்கப்படுகின்றது. பின்பு இவை tax credit காட்டப்படும் WHT உம் சில வற்றிற்க்கு இவ்வ்வாறே.
-
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
colomban replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
அருமையான கருத்து வைரவன் எப்போதவது இருந்து வந்து நச் என்று கொடுபீர்கள் ஆம் மிகவும் ஒரு யாழ் மையவாத துவேசம் பிடித்த கருத்து 1000 ரூபா சம்பளத்துக்காக அல்லல் பட்டு இன்னும் போராடும் சக தமிழ் இனத்தின் மீது இவருக்கு பரிதாபம் ஏற்படுகின்றதா? இன்று காலை சிங்களவனின் கடையில் சுட சுட சிறிய ரோஸ் பாணும், ஒரு பருப்பும், பொல் சம்பளுடன் சாப்பிட்டு விட்டு பார்த்தல் 350 ரூபா, ஒரு சில நல்ல ஓட்டல்களில் 400 ரூபா ஒரு பகலுணவு பொதி. யாரோ ஒரு மலையக பெண் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை இவரால் பொருத்து கொள்ள முடியவில்லை. ஒரு சிறிய நிலப்பரப்பிற்குள் 20 க்கும் மேற்பட்ட இயக்கங்களை உருவாக்கி தாங்களுக்குள் முட்டி மோதி அழிந்திபோய் இன்னும் இந்த மைய வாததுடன் இருக்கும் இவர்களுக்கு என்று விடிவு? கிழே ஐலண்டின் கருத்து சால பொருந்தும் "ஈழத்தமிழனுக்கு மூளை இருந்திருந்தால் கிடைத்த சந்தர்பங்களை சமயோசிதத்துடன் உபயோகித்து மெல்ல மெல்ல உயர்ந்து இருப்பான். இனியாவது மூளையை உபயோகித்து முன்னேற வேண்டும். இல்லை என்றால் இப்படியே தனது தவறுகளுக்கு உலகின் மீது பழியைப போட்டு இப்படியே பைத்தியங்கள் மாதிரி கத்திக் கொண்டு திரிய வேண்டியது தான் -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
colomban replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
இப்பா யாரு மலையக தமிழர்கள் இலங்கையில் பாதி கேட்கப் போராப்ல? மனோ கணேசனன் கனடா வர கூடாதா? -
எம்.எல்.எம். மன்சூர் ”புத்தரின் போதனைகளில் புனிதப் போர் என்ற கருத்தாக்கம் இல்லை; புத்த தர்மத்தையும், அதைப் பின்பற்றுபவர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்குக் கூட போர் புரிவதற்கு அதில் அனுமதியில்லை. இந்தப் பின்னணியில், புத்த தர்மத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கென ஆட்களை கொலை செய்வதனை நியாயப்படுத்த வேண்டுமானால், புத்தரின் போதனைகளுக்கு வெளியில் ஒரு வலுவான புதிய அத்தியாயத்தைச் சேர்க்க வேண்டும்.” ”(பௌத்த) துட்டகைமுனுவுக்கும், (இந்து) எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற போரை, சிங்கள அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கென முன்னெடுக்கப்பட்ட ஒரு புனிதப் போராக சித்தரித்துக் காட்டுவதன் மூலம் மகாவம்ச ஆசிரியர் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்.” ”இவ்விதம், கௌதம சித்தார்த்தரின் பௌத்த மதத்தை (ஐந்தாம் நூற்றாண்டில் பாளி மொழியில் எழுதப்பட்ட) ‘புதிய சமயக் கிரந்தமான‘ மகாவம்சம் ‘சிங்கள பௌத்தமாக‘ மாற்றியமைத்தது” என்கிறார் திசரணி குணசேகர. இந்தப் பின்னணியில், புராதன கால வீரர்கள் மற்றும் மன்னர்கள் குறித்து மகாவம்சம் முன்வைக்கும் புராணக் கதைகள் சிங்கள பௌத்த மக்களுக்கு மத்தியில் பின்வரும் விதத்திலான ஓர் உணர்வைத் தூண்டியிருந்தன: ”ஓர் உண்மையான இலங்கையராக இருக்க வேண்டுமானால், ஒரு சிங்களவராக இருக்க வேண்டும்; உண்மையான ஒரு சிங்களவராக இருக்க வேண்டுமானால், ஒரு பௌத்தராக இருக்க வேண்டும்.” விருந்தோம்புபவர்கள் (சிங்கள பௌத்தர்கள்) மற்றும் விருந்தாளிகள் (ஏனைய சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள்) என்ற கருத்தாக்கம் இந்தத் தொன்மத்திலிருந்தே தோன்றியது. அதன் பிரகாரம், ‘இந்தத் தீவு சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமானது; அவர்களே அதன் அசல் உரிமையாளர்கள்‘ என்ற கருத்து சிங்கள மக்களின் பிரக்ஞையில் ஆழமாக வேரூன்றியது. இதுவே மகாவம்ச மனோபாவம் (Mahawamsa Mindset) என அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக தமிழர்களும், முஸ்லிம்களும், சிங்கள கிறிஸ்தவர்களும் மற்றும் ஏனைய சிறுபான்மையினரும் ஒருபோதும் இலங்கையர்களாக இருந்து வர முடியாது என்ற நம்பிக்கை உருவாகியது. இந்த நம்பிக்கையே இன்றைய சிங்கள தேசியவாதத்தின் சாராம்சமாக இருந்து வருகின்றது. ”1939 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாவலப்பிட்டி நகரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சிங்கள இனத்தையும், பௌத்த மதத்தையும் மிக மோசமான விதத்தில் இழிவுபடுத்தி ஜீ ஜீ பொன்னம்பலம் நிகழ்த்திய உரை, பல நூற்றாண்டு காலம் இலங்கையில் இனங்களுக்கிடையில் நிலவி வந்த நல்லுறவை முற்றிலும் சீர்குலைத்தது” என எழுதுகிறார் சிங்கள தேசியவாதத்தின் தீவிர ஆதரவாளர் ஒருவர். ”அதன் விளைவாக, சுதந்திரத்துக்குப் பின்பட்ட இலங்கையின் 75 வருட கால வரலாறு கண்ணீராலும், இரத்தத்தினாலும் எழுதப்பட வேண்டிய நிலை தோன்றியது” என அவர் முத்தாய்ப்பாகச் சொல்கிறார். ஆனால், 1920 களிலேயே சிங்கள பௌத்த சமூகத்துக்கு மத்தியில் இனவாத உணர்வுகளைத் தூண்டுவதற்கும், அவற்றை நிலைத்திருக்கச் செய்வதற்கும் அநகாரிக தர்மபால (1864 -–1933) முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார். அவருடைய எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் அவர் தொடர்ந்தும் தமிழர்களையும், முஸ்லிம்களையும் சிங்கள இனத்தின் எதிரிகளாகவே கட்டமைத்து வந்தார். ”Sri Lanka: War -Torn Island” (1998) என்ற நூலில் Lawrence J Zwier இப்படி எழுதுகிறார்: ”தமிழர்களும், சிங்களவர்களும் சுமார் 2000 ஆண்டு காலமாக இலங்கையில் பரம வைரிகளாக இருந்து வந்துள்ளார்கள் என்ற தப்பெண்ணத்தை ஜனரஞ்சகப்படுத்திய மிக முக்கியமான தலைவர் அநகாரிக தர்மபால. அவர் பல சந்தரப்பங்களில் மகாவம்சத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்; அதில் எழுதப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களும் முற்றிலும் உண்மையானவை என்ற நிலைப்பாட்டிலிருந்தே அவர் அவ்வாறு கூறியிருக்கிறார்…. அவருடைய பெரும்பாலான பேச்சுக்களும், எழுத்துக்களும் இனவாத இயல்பிலானவை. சிங்களவர்கள் இன ரீதியில் தூய ஆரியர்கள் என்ற விடயத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சிங்களவர்களின் பூர்வீகம் வேறு, தமிழர்களின் பூர்வீகம் வேறு என்பது அவருடைய நிலைப்பாடு. அதனால், தமிழர்கள் சிங்களவர்களிலும் பார்க்க தாழ்வானவர்கள் என்று அவர் கூறினார்.” தர்மபாலவின் பரப்புரைகள் காரணமாக சுதந்திரத்துக்கு முன்னரேயே இந்த மகாவம்ச மனோபாவம் சிங்கள சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. இதற்கான சுவாரசியமான ஓர் உதாரணம் அசோகமாலா (1947) என்ற சிங்கள திரைப்படம். இரண்டாவது சிங்களப் படமான அசோகமாலா கோயம்புத்தூர் சென்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. T.R. கோபு என்ற தமிழர் அதன் இயக்குநர். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் அப்படம் திரையிடப்பட்டது. அக்கால சிங்கள பத்திரிகைகள் ‘அசோகமாலா‘ திரைப்படம் தொடர்பான விமர்சனங்களை கடும் இனவாதக் கண்ணோட்டத்தில் முன்வைத்திருந்தன. இது தொடர்பாக ‘சரசவி சந்தரஸ‘ என்ற பத்திரிகை எழுதிய ஆசிரியர் தலையங்கம் இது: ”இப்பொழுது கொழும்பு திரையரங்குகளில் காண்பிக்கப்பட்டு வரும் ‘அசோகமாலா‘ என்ற திரைப்படம் ஒட்டுமொத்த சிங்கள இனத்தின் மீதும் அவதூறு பொழிந்துள்ளது. மாவீரனும், சிங்கள பேரரசனுமான துட்டகைமுனு ஒரு கோழையாக, பலவீனமான மனிதனாக சித்தரிக்கப்படுவதைப் பார்த்து எந்தவொரு சிங்கள மகனும் மௌனமாக இருக்க முடியாது….” ”….புத்த சாசனத்தையும், சிங்கள இனத்தையும், சிங்களத் தீவையும் தமிழர்களின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காகப் பிறந்தவன் தான் மாவீரன் துட்டகைமுனு…. அந்தக் கால கட்டத்தில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஒரு பாரிய பிளவு நிலவி வந்தது. அதற்குப் பதிலாக அக்காலத்தில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் ஒரு சகோதரத்துவம் நிலவி வந்ததாகக் காட்டுவதற்கு இப்படத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி வெட்கக்கேடான ஒரு அவதூறு; பொய்; வரலாற்றை திசைதிருப்புவதற்கான ஒரு முயற்சி”. ஆனால், மார்ட்டின் விக்ரமசிங்க (மயூரபாத என்ற புனைபெயரில்) எழுதிய விமர்சனம் இந்தப் பார்வைக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்கும் விதத்தில் வரலாறு குறித்த துல்லியமான ஒரு பார்வையை முன்வைத்தது: ”…..சோழர் படையை முறியடித்த பின்னர் பௌத்த மதத்தின் கொடியின் கீழ் நாட்டை ஒற்றுமைப்படுத்திய மாவீரனாக இளவரசன் துட்டகைமுனுவை வரலாறு சித்தரிக்கின்றது. அவன் தமிழர்களுடன் நட்புறவைப் பேணுவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஒரு கீழ்மட்ட படையதிகாரி துட்டகைமுனுவுக்கு எதிராக கலகம் செய்தான் எனக் கூறுவது வரலாற்று ரீதியில் பொருத்தமற்றது…. நாட்டையும், மக்களையும் அடிமைப்படுத்தியிருந்த சோழர்களின் அந்நியப் படைகளுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மகாவம்சத்தில் ஒரு சிங்கள – தமிழ் போராக குறிப்பிடப்படுகிறது.” ”அந்த ஆக்கிரமிப்புக்குத் தலைமை தாங்கிய சோழ மன்னன் கொல்லப்பட்டு, அவனுடைய படை முறியடிக்கப்பட்ட பின்னர், இந்நாட்டில் வாழ்ந்து வந்த சிங்களவர்களுக்கும், திராவிடர்களுக்குமிடையில் எத்தகைய பிரிவினைகளும் நிலவி வரவில்லை. இளவரசன் துட்டகைமுனுவின் காலத்தில் இடம்பெற்ற சோழ மன்னனின் ஆக்கிரமிப்பின் போது சிங்கள பௌத்தர்களும், தமிழ் பௌத்தர்களும் நசுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே அந்தப் பிளவு தோன்றியது. அந்நிய இராணுவம் முறியடிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் ‘தீர்த்து வைக்கப்பட வேண்டிய சிங்கள – தமிழ் பிரிவினையொன்று‘ இருந்து வரவில்லை.” 1950 களில் செல்வநாயகம் போன்றவர்கள் முன்வைத்த சமஷ்டிக் கோரிக்கையையும், 1980 களில் எழுச்சியடைந்த தமிழீழ கோரிக்கையையும், அதனுடன் இணைந்த விதத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தையும் இந்த மகாவம்ச மனோபாவ கருத்தியலை பரப்புரை செய்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் சிங்களத் தேசியவாதிகள். எனவே, ‘சுதந்திர இலங்கையின் எழுபத்தைந்து வருட கால வரலாறு ‘கண்ணீராலும், இரத்தத்தினாலும் எழுதப்பட்டமைக்கு‘ பொன்னம்பலத்தைப் பார்க்கிலும், தர்மபாலவும், அவர் போஷித்து வளர்த்த (இனவெறுப்பு) தேசியவாதத்தை அதே விதத்தில் முன்னெடுத்து வரும் (‘1956 இன் குழந்தைகள்‘ என தம்மை அழைத்துக் கொள்ளும்) சிங்கள தேசியவாதிகளுமே பொறுப்புக் கூற வேண்டும். சமகால இலங்கை அரசியல் சமூகத்தில் இந்த மனோபாவம் எந்தெந்த வழிகளில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அதில் மிக முக்கியமானது அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிவிசேட முக்கியத்துவம். அடுத்தது, அரச கரும மொழிகள் தொடர்பான அரசியல் யாப்பின் பிரிவு 18 (1) மற்றும் 18 (2) என்பவற்றில் தரப்பட்டிருக்கும் பின்வரும் விநோதமான வாக்கியங்கள்: 18. (1) இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும். (2) தமிழும் அரசகரும மொழியாதல் வேண்டும். ஒரே வாக்கியத்தில் இதனை சொல்ல முடியாமல் போனது ஏன்? இதன் பின்னணியில் செயற்படும் நுட்பமான உளவியல் என்ன? ஓர் ஒப்பீட்டுக்காக அரச கரும மொழிகள் தொடர்பாக தென்னாபிரிக்க அரசியல் யாப்பு என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம். தென்னாபிரிக்க அரசியல் யாப்பின் பிரிவு 6(1) ”குடியரசின் அரச கரும மொழிகள் Sepedi, Sesotho, Setswana….” எனத் தொடங்கி பதினொரு மொழிகளை வரிசைப்படுத்துகிறது. ஆனால், பெருந்தொகையான பழங்குடி மொழிகளைக் கொண்ட அந்நாட்டின் குடித்தொகையில் ஆகக் கூடிய சதவீதத்தினர் (23%) பேசும் Isi Zulu என்ற மொழி அந்தப் பட்டியலில் கடைசியில் அதாவது, பதினோராவது ஸ்தானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களில் 16 சதவீதத்தினர் பேசும் இரண்டாவது பெரும்பான்மை மொழியான Isi Xhosa பத்தாவது இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒரு நிலைமையை இலங்கையில் கற்பனை செய்து கூட பார்க்க முடியுமா? தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படும் பொழுது தோன்றும் எதிர்ப்புக்களும், ‘தமிழ் பௌத்தர்கள் இருந்து வந்துள்ளார்கள்‘ என வரலாற்று ஆதாரங்களுடன் கூறும் பொழுது தோன்றும் அதீத பதற்ற உணர்வுகளும் இந்த வகையைச் சேர்ந்தவை. ‘சிங்கள பௌத்தம் என்ற கருத்தாக்கம் கட்டமைத்திருக்கும் தமிழ் விரோத உணர்வு காரணமாக ‘தமிழ் பௌத்தம்‘ என்ற சொல்லே கடும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றது. 2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான போது விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து: ”பெரும்பான்மை மக்களில் சிறு தொகையினரும், சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையிலும் வாக்களித்து ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்திருக்கிறார்கள்”. இலங்கைப் பிரஜைகளான தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வாக்குகளுக்கு (சிங்கள மக்களின் வாக்குகளுக்கு இருக்கும் அதேயளவிலான) மதிப்பு இருந்து வர முடியாது என்பதே அவர் இங்கு சொல்ல வரும் விடயம். ”கோல்பேஸ் அறகலய பூமியில் தாராளமாக பிரியாணியும், வட்டலப்பமும் பரிமாறப்படுவதை நாங்கள் பார்த்தோம்” என்கிறார் நளின் டி சில்வா. ”விதிவிலக்கான விதத்தில் கணிசமான எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்களும், மௌலவிமாரும் அங்கு திரண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது” என்று எழுதுகிறார் மற்றொரு சிங்கள தேசியவாதியான சேன தோரதெனிய. ”(சிங்கள) அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை முஸ்லிம்களுக்கு – குறிப்பாக, சிறுபான்மை சமூகத்தினருக்கு – இல்லை; அதனை ஏற்றுக் கொள்ளவும் முடியாது” என்பதே இத்தகைய கருத்துக்களுக்கு ஊடாக இவர்கள் பூடகமாக முன்வைக்க முயலும் நிலைப்பாடு. ”சிங்கத்தின் மக்கள்: சிங்கள அடையாளம் மற்றும் வரலாற்றினதும், வரலாற்றியலினதும் கருத்தியல்” (1979) மற்றும் ”இனப் போராட்டம் நிகழ்ந்து வரும் ஒரு கால கட்டத்தில் வரலாற்றியல்: சம கால இலங்கையில் கடந்த காலம் கட்டமைக்கப்படும் விதம்” (1995) போன்ற விரிவான ஆய்வுக் கட்டுரைகளில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியர் லெஸ்லி குணவர்தன இந்த ‘மகாவம்ச மனோபாவம்‘ தொடர்பான சில கேள்விகளை எழுப்பியுள்ளார். ” பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘தம்ம பிரதீப்பிகாவ‘ என்ற காவியத்திலேயே முதன் முதலில் ”சிங்கள இனம் என்ற சொல் காணப்படுகிறது” என அவர் முன்வைத்த கருத்து கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ”சிங்கத்தின் மக்கள்: சமகால இலங்கையில் சிங்கள இனத்துவ அடையாளம், கருத்தியல் மற்றும் வரலாற்றுத் திரிபுவாதம்” (1989) என்ற நீண்ட கட்டுரையில் அதற்கு எதிர்வினையாற்றினார் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிங்களத்துறை பேராசிரியரான கே என் ஓ தர்மதாச (ஆர்வமுள்ளவர்கள் இணையத்தில் தேடி, அந்த ஆங்கிலக் கட்டுரைகளை படிக்க முடியும்). பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட ‘கிரள சங்தேசய‘ மற்றும் ‘வடிக சட்டன‘ போன்ற சிங்கள காவியங்களில் சித்தரிக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் மீதான வன்மம், கண்டி இராச்சியத்தில் அக்கால கட்டத்தில் நிலவி வந்த (சிங்கள – தமிழ் உறவுகள் தொடர்பான) முதன்மைக் கருத்தாக்கத்துக்கு நேர்மாறானது என்கிறார் லெஸ்லி குணவர்தன. ஆனால், அநகாரிக தர்மபாலவின் வாரிசுகளான குணதாச அமரசேகர, நளின் டி சில்வா, சேன தோரதெனிய மற்றும் வசந்த பண்டார போன்ற சமகால தேசியவாதிகள் தொடர்ந்தும் தமிழர்களையும், (ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர்) முஸ்லிம்களையும் சிங்களவர்களின் எதிரிகளாக கட்டமைக்க முயற்சித்து வருகின்றார்கள். சிங்கள சமூகத்தின் முதன்மைக் கருத்தியலாக அந்தச் சிந்தனைப் போக்கு நீடிக்கும் வரையில், உத்தேச புதிய அரசியல் யாப்பில் இலங்கையை ஒரு மதச்சார்பற்ற நாடாக (Secular Nation) பிரகடனம் செய்வது எப்படிப் போனாலும், சாய்ந்தமருது பிரதேசத்துக்கு நகர சபை அந்தஸ்தை பெற்றுக் கொள்வது கூட சாத்தியப்பட முடியாது. ஏனென்றால், அத்தகைய ஒரு சிறு நிர்வாக ஏற்பாட்டையும் கூட, ‘சிங்கள இனம் எதிர்கொள்ளும் ஒரு பாரிய அச்சுறுத்தலாக‘ சித்தரித்துக் காட்டி, அதற்கெதிராக சிங்கள மக்களை அணிதிரட்டும் காரியத்தை இன்றைய சூழலில் மிக எளிதில் மேற்கொள்ள முடியும். அந்தப் பின்புலத்தில், கரையோர அம்பாறை மாவட்டம் மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற அபிலாஷை மிக்க கோரிக்கைகள் தொடர்ந்தும் வெறும் கனவுகளாக மட்டுமே நீடிக்க முடியும்.– Vidivelli https://www.vidivelli.lk/article/16105
-
வருட இறுதி சில மணித்தியாலங்கள் ஒரு சந்தோசமான, எல்லவற்றையும் மறந்து ஒரு பெக் அடித்து, அடுத்த வீட்டு கொல்லைக்குள் வெடி போட்டு, இசைகச்சேரியில் ஆடி பாடி, கொஞ்சம் அடிபாடு, கொழுவுப்பட்டு புது வருடத்தை வரவேற்பது இலங்கயில் காலங் காலமாக நடப்பது. கனடா, ஆஸ்ரேலியவில் வெள்ளைகள், வாண வேடிக்கைகளுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்பார். போதைவஸ்து பாவித்திருந்தால் அவர்களை கவனித்து பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது என்ன தலிபான் கணக்கில் ஆடல் பாடல்களுக்கு தடை செய்வது?
- 1 reply
-
- 1
-
எல்லா இனத்திலும் இப்படி ஊத்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? பின்வரும் தலையங்ககளை பாருங்கள் இவையெல்லம் தமிழர் பிரதேசங்களில் நடந்தவைகள் அல்லவா? அப்ப தமிழர்கள் இன்னும் நாகரீகம் அடையாதா முட்டாள்களா? கள்ள விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ், கிளிநொச்சி யுவதிகள் கைது! சுவிஸ் சித்தியும் தாயும் ஏசியதால் யாழில் மாணவி தற்கொலை முயற்சி!! ஓ.எல் பெறுபேற்றில் விஞ்ஞான பாடத்தில் சாதாரண சித்தியாம்!! யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!! லண்டன் தமிழன் வாகீசனை புலி என பொலிசாரிடம் மாட்டிவிட்ட மனைவி தர்சிகா!! பரபரப்பு தகவல்!! யாழில் மாணவிகள் ஆண்களுடன் சாப்பிட்டு படுத்து எழும்ப மணித்தியாலத்திற்கு வாடகை!! விதானை,அரச ஊழியர்களின் பாலியல் வீடியோக்கள்!! ஆண் உறுப்பை பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன? யாழில் பட்டப்பகலில் ஆவா குழுக் காவாலிகள் சினிமாப் பாணியில் மோதல்!! மக்கள் சிதறி ஓட்டம்!! இப்படி நான் கேட்பதனால் சிங்கள? ஆதரவாளன் அல்ல?
-
நன்றி நன்னி அவர்களே. உங்களுக்கும் சேர்த்துதான் இந்த கேள்வி அனால் எழுதும்போது விடுபட்டுவிட்டது. குறிப்பு நான் இவ்வளவு காலமும் நினைத்தேன். நீங்கள் ஆண் என்று, இன்று தான் பர்த்தேன் நீங்கள் உங்கள் ப்ரொபைலில் பெண் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
-
இந்த திரியில் கருத்தெழுத நான் தகுதியற்றவன் ஆனால் மனதில் பட்டதை எழுதுகின்றேன். இறந்து போன துவாராகவை மீண்டும் அவர் உயிரோடு எழுந்து வந்து மக்கள் மத்தியில் வாழுகின்றார் என்று கூறி அதன் மூலம் தாங்கள் வியாபாரத்தை நடத்த முயல்வது கடைந்தெடுத்த அயோக்கியதனம். இது இறந்த ஆன்மாக்களை நினவு கூறும் இந்த நவம்பர் மாதத்தில் இப்படிபட்ட ஈனசெயல் மிகவும் அருவருக்கத்தக்கது. நிழலி அவர்களின் இந்த கருத்துடன் நான் ஒத்துபபோகின்றேன். இது எனக்கும் பொருந்தும் இங்கு என் மனம் இன்னும் நம்ம மறுப்பது, பொட்டு அம்மான் இறந்து போனதைதான், ஒரு வசீகரமான முகவெட்டுடைய திரைப்பட கதாநாயன் போன்ற இவர் எங்கோ இன்னும் இருக்கின்றார் என்றே என் மனம் சொல்கின்றது. இவருடய சடலம் இன்னும் கிடைக்கவில்லை. டீ என் ஏ அறிக்கையும் இல்லை. ஒரு சாதாரண வியாபாரியே பிளான் ஏ இல்லா விட்டால் பிளான் பீ வைத்திருப்பார். இவ்வளவு திறமை வாய்ந்த இவர் கடைசி நேரத்தில் ஒரு எக்ஸிட் ப்ளான் வைத்திருந்திருப்பர் என்பது, இவர் திறமை மீது நான் வைத்திருக்கும் அசைக்க முடியா நம்பிக்கைதான். மாவீரர் என்பவர் யார்? வரைவிலக்கனம் என்ன? இவர்கள் புலிகளின் அமைப்பில் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்கள் மட்டுமா? அல்லது வேறு சகோதர இயக்கங்களிலும் இருந்து நாட்டுக்காக போராடி உயிர் நீத்தவர்களும் உள்ளடங்குவார்களா?
-
மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ஜனாதிபதி ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு கொழும்பு. மேதகு ஜனாதிபதி அவர்களே! கிழக்கு ஆளுனர் நியமனம். கிழக்கு மாகாணம் சிக்கலான இனத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாகாணம் என்பதை தாங்கள் முழுமையாக அறிவீர்கள்.கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்படவிருக்கும் ஆளுனர் தமிழராக இருந்தால் முஸ்லிம்கள் எதிர்ப்பதும்,முஸ்லிமாக இருந்தால் தமிழர்கள் எதிர்ப்பதும் ,சிங்களவராக இருந்தால் தமிழ்,முஸ்லிம் மக்கள் இணைந்து எதிர்ப்பதும் கிழக்கின் நிர்வாகத்தை சிறப்பாக கொண்டு நடாத்துவதில் பாரிய பின்னடைவுகளை இதுவரையிலும் ஏற்படுத்தியுள்ளது இதுவரையிலும் கிழக்கில் நியமிக்கப்பட்ட ஆளுனர்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளே மிகச் சிறப்பாக தமது கடமைகளை செய்துள்ளது மக்களிடையே பதிவாகியுள்ளது,இராணுவ அதிகாரிகள் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த காலத்தில் எந்த இனமும் நிர்வாக ரீதியாக பாதிக்கப் பட்டதாக எந்த பதிவுகளையும் காண முடியவில்லை ஆகவே மேதகு ஜனாதிபதி அவர்களே! எதிர்காலத்தில் கிழக்குக்கு நியமிக்கப்படவிருக்கும் ஆளுனரை மூன்று இனங்களும் விரும்பும்,மூன்று இனங்களையும் பாதிக்காத வகையில் நிர்வாகம் செய்யும் இராணுவ அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே அவர்களை நியமித்து கிழக்கின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் வேண்டுகிறோம். ஜெ.எல்.எம். ஷாஜஹான் பணிப்பாளர் https://www.madawalaenews.com/2023/11/s.html
-
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
colomban replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
நிச்சயமாக அல்ல. இப்படி நீங்களே நினைத்து மற்றவர்களையும் தவறாக வழிநடத்தாதீர்கள். -
உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்! நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னது போல, ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலை பெற்ற இனமாக கருத முடியும். அத்தகைய இலட்சிய இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழிநின்று தன்னிகரற்றபோர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள் உலகம் இதுவரை கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள். தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்பு பொருளாதார வாழ்வோடு கூடிய பாதுகாப்பான வாழ்வு என தலைவர் காட்டிய வழியில் தழைத்த சுதந்திரப் பயிர். அதைக் கருக விடாமல், தன்னைக் கருக்கி காத்தவர்கள் நம் மாவீரர்கள். அத்தகைய மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது. ‘மாவீரர் நாள்’ என்பது அழுது புலம்பும் நாள் அல்ல; அது தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள். பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காக குருதி சிந்தி, உயிரை விலையாக கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். ஏகாதிபத்திய காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்த கார்த்திகை மாதத்தில் நம் ஆன்மாவில் பொருத்தி எதிர்கால இலட்சிய பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை நினைத்துப் போற்றி வணங்குகிற பொன்னாள். அத்தகைய புனிதத் திருநாளை தமிழர்கள் பெருமளவில் வாழும் தாய் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு மாவீரர் நாளானது மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் (ஜி கார்னர் திடல், டி. வி. எஸ். சுங்கச்சாவடி அருகில்) நாம் தமிழர் கட்சியால் பேரெழுச்சியாக முன்னெடுக்கப்படவிருக்கும் நிலையில், அப்பெருநிகழ்விற்கான ஏற்பாட்டிற்குப் பொருளாதார நெருக்கடி என்பது மிகப்பெரிய பெருந்தடையாக உள்ளது. எனவே நிகழ்வு ஏற்பாட்டிற்கான நிதி பற்றாக்குறையைப் போக்க மக்களிடம் திரள்நிதி (Crowd Funding) திரட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகள் தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளித்து மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.toptamilnews.com/thamizhagam/maaveerar-day-naam-tamilar-katchi-seeman-statement/cid12778733.htm
-
எண்பதுகளின் நடுப்பகுதியை, எங்களின் வாழ்க்கையின் கனாக் காலம் என்றே குறிப்பிடலாம். யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றிவளைத்து இருந்த இலங்கை இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி, யாழ்ப்பாணத்தை போராளிகள் தங்கள் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கோலோச்திய கனாக் காலம் அது. தொள தொள trousersகளில் shirtஐ வெளியே விட்டுக் கொண்டு, இடுப்பில் மறைவான பிஸ்டலோடு, யாழ்ப்பாண வீதிகளில் மிடுக்காக வலம் வந்த அண்ணாமாரை ஆவென்று பார்த்து பிரமித்த கனாக் காலங்களை எப்பவும் மறக்க முடியாது. 1987 ஒக்டோபரில் இந்திய இராணுவத்துடனான சண்டையுடன் இயக்கம் வன்னிக் காடுகளிற்குள் தனது தளத்தை மாற்றிக் கொண்டது. “காட்டுக்குள் போன இயக்கம் வேற, காட்டுக்கால திரும்பி வந்த இயக்கம் வேற” என்பார்கள் இயக்கத்தின் வரலாற்றை நோக்கும் அவதானிகள். 1985 ஏப்ரலில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தாக்குதலிற்கும், 1987 ஓகஸ்டில் இந்திய இராணுவ வருகைக்கும் இடைப்பட்ட அந்தக் கனாக் காலத்தின் கதாநாயகன் கிட்டர், கிட்டண்ணா அல்லது கிட்டு மாமா தான். கேணல் கிட்டு ஒரு ஆளுமை என்றால் அவரைச் சூழு இருந்த அவரது அணியிலும் ஆளுமைகள் மிகுதியாகவே இருந்தார்கள். ரஹீம், ஜொனி, திலீபன், ஊத்தை ரவி, வாசு, கேடில்ஸ், சூசை என்ற பெயர்கள் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெங்கும் அறியப்பட்ட நிஜ வாழ்க்கை நாயகர்களின் நாமமாகவே இருந்தது. மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் குரங்கோடு, கிட்டர் யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவார். கிட்டரின் குரங்கிற்கு பெயர் Bell. அந்தக் காலத்தில் இலங்கை விமானப்படை பாவித்த Bell ரக உலங்குவார்த்திகளின் பெயரையே கிட்டு தனது குரங்கிற்கும் வைத்திருந்தாராம். கட்டையான ஆள், தலையில் மொட்டை வேறு, ஆனால் அவர் தான் புலிகளின் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி என்று சொன்னால் நம்பியே ஆகவேண்டும். ஆனையிறவு, பலாலி, கோட்டை, நாவற்குழி, பலாலி, காரைநகர், பருத்தித்துறை, என்று யாழ்ப்பாண தீபகற்பகத்தை சுற்றியிருந்த இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை இரண்டு வருடங்களிற்கு மேலாக முடக்கி வைத்து, யாழ்ப்பாணத்தை இயக்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, கிட்டுவின் காலத்தில் தான். கிட்டுவின் காலத்தில் தான், முதன்முறையாக சண்டையில் உயிரிழந்த இராணுவத்தின் உடலங்களை புலிகள் இராணுவத்திடம் நேரடியாக கையளித்தார்கள். தனியொருவராக ரஹீம் அந்த உடலங்களை லெப் கேணல் ஆனந்த வீரசேகரவிடமும் கப்டன் ஜெயந்த கொத்தலாவிடமும் சென்று கையளித்த கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கும். லெப் கேணல் ஆனந்த வீரசேகர, இராணுவத்தில் இருந்து விலகி பெளத்த பிக்குவாக துறவறம் பூண்டு விட்டார். அவரின் தம்பி தான் ஜெனிவாக்கு போய் இனவாதம் கக்கும் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர. தற்போதைய ஆட்சியில் சரத் வீரசேகர மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், பாராளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அடிக்கடி மோதுபவர். விக்டர் விழுதான மன்னார் சண்டையில் சிறை பிடித்த சிப்பாய்களை வைத்து, முதன் முதலில் கைதிகள் பரிமாற்றம் நடந்ததும் கிட்டரின் காலத்தில் தான். அதுவும் மட்டக்களப்பு தளபதியாக இருந்து, இந்தியாவில் இருந்து வரும் போது கடலில் பிடிபட்டு, வேறு பெயரில் இலங்கைச் சிறையில் இருந்த அருணாவை, இலங்கை அரசை சாதுரியமாக ஏமாற்றி, கைதிகள் பரிமாற்றத்தில் மீட்டெடுத்த கதைகள் எல்லாம் கனாக் காலக் கதைகள் தான். அது ஒரு காலமடாப்பா... என்று அன்று யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் இன்றும் அங்கலாய்த்து ஏங்கும் காலங்கள் அவை.. அது ஒரு கனாக்காலம்! Posted 24th November 2020 by Jude Prakash Labels: நினைவுகள் வரலாறு https://kanavuninaivu.blogspot.com/
-
ஆண்டாண்டு காலமாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டு, ஆக்கிரமிப்பாளர்களால் ஆண்டுக்காண்டு அடித்துத் துரத்தும் போது ஓடி ஒளிந்து கொண்டிருந்த மென்மையான சுபாவம் கொண்ட இனத்திற்குள், வீரத்தையும் ஓர்மத்தையும் விதைத்து, அடித்த எதிரியை திரும்ப அடித்து ஓட ஓட விரட்டிய வரலாற்றைப் படைத்த வரலாற்று நாயகன் தான் எங்கள் தலைவர். ஓரு குட்டித் தீவில், அதியுச்ச சுயநலமிக்க, ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிறுபான்மை இனத்திற்காக, அந்த இனத்தின் ஆட்பலத்தையும் வளங்களையும் வைத்தே, எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமின்றி, முப்படைகளையும் உருவாக்கி, சர்வதேச ஆதரவுடன் போரிட்ட ஒரு அரசாங்கத்தை தோல்வியின் விளிம்புவரை கொண்டு செல்லும் ஆற்றல் படைத்த இராணுவ வித்தகன் தான் எங்கள் தலைவர். தன்னலம் துறந்து, இனத்திற்காகச் சகல விதமான அர்ப்பணிப்புகளையும் புரிந்து, தளராத கொள்கையுடன் இறுதிவரை போராடிய ஒரு யுக புருஷன் தான் எங்கள் தலைவர். அந்த யுக புருஷன் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வதா, இல்லை அந்த யுக புருஷன் காலத்திலும் எங்களுக்கு ஒரு விடிவு கிடைக்காமல் போய் விட்டதே என்று ஏங்கித் தவிப்பதா? “விடுதலைப் புலிகளின் பலமானான் தமிழ் வீடுகள் யாவிலும் மலரனான் படுகளம் மீதிலொரு புலியானான் பிரபாகரன் எங்கள் உயிரானான் பொங்கிடும் கடற்கரையோரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே தங்கத் தமிழீழ மண்ணில் எங்கள் தலைவன் பிறந்தான்” Posted 26th November 2020 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/
-
யாழில் வீடுகளின் குளியறைகளுக்குள் கமரா பொருத்திய இளைஞர் கைது
colomban replied to பெருமாள்'s topic in ஊர்ப் புதினம்
யாழ்ப்பாணத்தில் யுவதிகள் குளிக்கும் போது இரகசியமாக படம் பிடித்த மன்மதராசாவை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நூதனமக வலைவிரித்து பிடித்துள்ளனர். கைதான மன்மதராசா, மொடல் அழகனாக பணிபுரிபவர். கடந்த வாரமளவில், யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றிற்குள் இரகசியமாக நுழைந்த இளைஞன், குளியலறைக்குள் யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்த போது, கையடக்க தொலைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளார். குளியலறை துவாரமொன்றின் ஊடாக கையடக்க தொலைபேசி ஒன்று தென்பட்டதையடுத்து யுவதி கத்தி கூச்சலிட்டுள்ளார். அந்த இளைஞன் தப்பியோடி விட்டார். இது தொடர்பில் பொலிசாரிடம் முறையிடப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும் ஒருமுறை அந்த வீட்டுக்குள் இளைஞன் இரகசியமாக நுழைந்துள்ளார். யுவதி மீளவும் அந்த இளைஞனை கண்டு சத்தமிட, தப்பியோடி விட்டார். யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டனர். இதன் போது, கொக்குவில், பூநாரிமடத்தடியை சேர்ந்த இளைஞன் ஒருவரே, தொடர்புடைய மன்மதராசா என்பதை கண்டறிந்தனர். குறிப்பிட்ட இளைஞன், யாழ்ப்பாணத்திலுள்ள சில ஆடை விற்பனை நிலையங்களின் விளம்பரங்களில் ஆண் மொடலாக நடித்துள்ளார். ஆயினும், அவர் தற்போது தங்கியுள்ள இடத்தை யாரும் அறிந்திருக்கவில்லை. இதையடுத்து, பொலிசார் நூதனமாக வலைவிரித்துள்ளனர். பிறிதெரு தொலைபேசி இலக்கத்தின் வழியாக இளைஞனை தொடர்பு கொண்டு, யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க வேண்டுமென கேட்டுள்ளனர். முன்னணி நடிகையொருவரும் அதில் நடிப்பார் எனவும், அவருடன் இணைந்து நடிக்க வேண்டுமென குறிப்பிட்டனர். இளைஞனும் அதற்கு சம்மதித்தார். இந்த உரையாடலின் போது, மருதனார்மடத்திலுள்ள உணவகம் ஒன்றில் தற்போது பணியாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இளைஞனின் ஆடை அளவை பெறுவதற்காக சந்திக்க வேண்டுமென பொலிசார் தெரிவிக்க, தானே நேரில் வருவதாக இளைஞன் தெரிவித்துள்ளார். இதன்படி, சுன்னாகத்திலுள்ள குறிப்பிட்ட இடமொன்றுக்கு வருமாறு பொலிசார் தெரிவித்தனர். இளைஞன் ஆர்வம் மிகுதியில் சுன்னாகத்துக்கு சென்ற போது, அங்கு சிவில் உடையில் மறைந்திருந்த பொலிசார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் சோதனையிட்ட போது, சமூக வலைத்தளங்கள் வழியாக பல யுவதிகளுடன் அவர் தொடர்பிலிருந்தது தெரிய வந்தது. குறிப்பிட்ட இளைஞனுக்கு எதிராக யுவதி முறைப்பாடும் பதிவு செய்துள்ளார். இளைஞனை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன், அவரது கையடக்க தொலைபேசியை பரிசோதனைக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டது. இதேவேளை, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது, குறிப்பிட்ட யுவதியை தான் காதலிப்பதாக இளைஞன் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பொலிசாரின் விசாரணையில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டுள்ளது. குற்றத்தின் பாரதூரதன்மையிலிருந்து தப்பிக்க இளைஞன் அப்படியொரு கதையை சோடிக்க முற்படுகிறாரா என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர். கைதான மன்மதராசாவை அதற்கு முன்னர் கண்டிருக்கவேயில்லையென பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்துள்ளார். அத்துடன், தேவைப்படின் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உண்மையை வெளிப்படுத்தவும் தயாராக இருப்பதாக பொலிசாரிடம் தெரிவித்தார். பல்வேறு விதமாக இளம் பெண்கள் பாதிக்கப்பட்ட போதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீதிக்காக போராட தயாராக இருப்பதில்லை. எனினும், அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதியின் முன்மாதிரியான துணிச்சலை பொலிசாரும் பாராட்டினர் https://vampan.net/50650/ -
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் நடந்த சில சரித்திர சம்பவங்களின் பின்னணி மிகவும் சுவாரசியமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும். வரலாற்றில் நின்று நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் போராட்டத்தில் பங்கெடுத்த ஆளுமை மிக்க இளைஞர்கள் அந்த முக்கியமான கணங்களில், அந்தந்த இடத்தில் எடுத்த உடனடி முடிவுகள் தான் என்று பின்னர் அறிய வரும்போது மெய்சிலிர்க்கும். 12 ஒக்டோபர் 1986ல் அடம்பனில் இலங்கை ராணுவத்துடன் நடந்த நேரடி மோதலில் விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்டத் தளபதி லெப்டினன்ட் கேணல் விக்டர் வீரமரணம் அடைகிறார். அந்தச் சமரில் விடுதலைப் போராட்டத்தில் முதல் முறையாக விடுதலைப் புலிகள் இரண்டு சிங்கள ராணுவத்தினரை சிறைபிடிக்கிறார்கள். அத்தோடு சமரில் இறந்த ஒன்பது சிங்கள இராணுவத்தினரின் சடலங்களையும் கைபற்றுகிறார்கள். சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இராணுவத்தினரும் ஒன்பது ராணுவத்தினரின் உடலங்களும் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்டு நல்லூரில் பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படுகிறது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரும் புலிகள் தங்களை கொல்லப் போகிறார்கள் என்ற பயத்தில் அழுது புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். அந்தக் காலப்பகுதியில் யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் தளபதியான கப்டன் கொத்தலாவலவுக்கும், மும்மொழிகளிலும் பரிச்சயமான புலிகளின் இராணுவப் பேச்சாளர் ரஹீமிற்கும் இடையில் தொலைபேசி தொடர்பாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. யாழ் வைமன் வீதியில் இருந்த டொக்டர் ஒருவரின் வீடு அப்போது புலிகளின் பாசறையாக இருந்தது. அந்த வீட்டில் இருந்த தொலைபேசியே இந்த சம்பாஷணைகளிற்கு பயன்பட்டது. விடாமல் அழுது புலம்பிக் கொண்டிருந்த இரு சிங்கள இராணுவத்தினரின் ஆக்கினை தாங்க முடியாமல், அவர்களின் அழுகையை நிறுத்த, புலிகளின் ரஹீம் கப்டன் கொத்தலாவலவிற்கு நல்லூரடியில் இருந்த மூத்த அரசியல்வாதியொருவரின் சகோதரியின் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைப்பெடுக்கிறார். கப்டன் கொத்தலாவல சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, ரஹீமிடம் கைப்பற்றப்பட்ட இராணுவத்தின் சடலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்கின்றார். "உங்களுக்கு வேணும் எண்டா கொண்டு வந்து தாறன்” என்று ரஹீமும் சும்மா பகிடியாகவே சொல்ல, கப்டன் கொத்தலாவல சுதாரித்துக் கொண்டு, தன்னுடைய மேலதிகாரியை கேட்டு விட்டு வருகிறேன் என்கிறார். கப்டன் கொத்தலாவலவின் மேலதிகாரி கேணல் ஆனந்த வீரசேகர. இந்த கேணல் ஆனந்த வீரசேகர தற்பொழுது கோத்தாவின் அமைச்சராக இருந்து கொண்டு இனவாதம் கக்கும் சரத் வீரசேகரவின் அண்ணன். கேணல் ஆனந்த வீரசேகர இராணுவத்தில் இருந்து விலகிய பின்னர் புத்த பிக்குவாக துறவறம் பூண்டு அம்பாறையில் வாழ்கிறார் என்பது தனிக்கதை. அன்று பின்னேரம் ஆறுமணியளவில் சடலங்களை கோட்டை இராணுவ முகாம் வாசலில் கொண்டு வந்து தந்தால் தாங்கள் அவற்றை பொறுப்பேற்பதாக கேப்டன் கொத்தலாவல ரஹீமுக்கு மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவிக்கிறார். கோட்டைக்கு சென்று சடலங்களை ஒப்படைப்பது தேவையில்லாத வேலை என்றும், இதில் நிறைய ஆபத்துக்கள் இருப்பதாக புலிகள் முதலில் கருதுகிறார்கள். புலிகளை கிட்ட அழைத்து கொலை செய்து பழி தீர்க்க இராணுவம் தீட்டியிருக்கும் சதித் திட்டமாகவே புலிகள் நோக்குகிறார்கள். அப்படியானால் தான் தனி ஒருவனாகவே சென்று அந்த ஒன்பது சடலங்களை இராணுவத்திடம் ஒப்படைக்க முன்வருவதாக, யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவி்ற்கு ரஹீம் அறிவிக்கின்றார். அந்தக் காலப்பகுதியில் புலிகளின் பிரச்சார முகமாக செயற்பட்ட ரஹீமை சிறைபிடிக்க இராணுவத்தின் சதித் திட்டமாக இந்த சடலங்கள் ஒப்படைப்பு அமைந்துவிடும் என்று புலிகளின் இளநிலைத் தலைவர்கள் தளபதி கிட்டுவை எச்சரிக்கிறார்கள். தளபதி கிட்டு ரஹீமிடம் மீண்டும் பேசுகிறார், இந்த முயற்சியில் இருக்கும் ஆபத்து கிட்டுவிற்கு நன்றாக புரிந்திருந்தது. ரஹீமோ மனிதாபிமான நோக்கத்துடன் எப்படியாவது சடலங்களை ஒப்படைக்க வேண்டும் என்று விரும்புகிறார். கிட்டுவும் அரை மனதுடன் ரஹீமின் திட்டத்திற்கு சம்மதிக்கிறார். ரஹீம் மீண்டும் கப்டன் கொத்தலாவலவை தொடர்பு கொண்டு சடலங்களை கையளிக்கத் தானே வருவதாக தெரிவித்து விட, இருவரும் சடலங்களை ஒப்படைப்பதற்கான ஒழுங்கு முறைகளை இறுதி செய்து கொள்கிறார்கள். ஒன்பது இராணுவத்தின் சடலங்களும் சவப்பெட்டிகளில் போடப்பட்டு, ஒரு சிறிய ட்ரக்கில் ஏற்றப்படுகிறது. இராணுவத்தின் சடலங்களை சுமந்த ட்ரக் பிரதான வீதி வழியாக கொண்டு வரப்பட்டு யாழ் மத்திய கல்லூரி அருகாமையில் இருந்த புலிகளின் முன்னனி காவலரணிற்கு அருகாமையில் நிறுத்தப்படுகிறது. நேரம் பின்னேரம் ஆறு மணி இருக்கும்… பண்ணைக் கடலில் சூரியன் அஸ்தமிக்கத் தொடங்க, யாழ் நகரை இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. யாழ் நகரில் அரங்கேறப் போகும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வை காண வரலாற்றின் கண்கள் மட்டும் அந்த இருட்டும் வேளையிலும் விழித்திருந்தன. இராணுவத்தின் சடலங்கள் ஒப்படைப்பை ஆரம்பிக்க தாங்கள் தயாராகி விட்டதை கோட்டை இராணுவத்தினருக்கு அறிவிக்க, முன்னர் இணங்கியபடி, மத்திய கல்லூரி மைதானத்தில் இருந்து புலிகள் பரா வெளிச்சம் ஒன்றை வானில் பாய்ச்சுகிறார்கள். கோட்டைக்குள் இருந்து இராணுவமும், பதிலுக்கு ஒரு பரா வெளிச்சத்தை ஏவ விட்டு சடலங்களை ஏற்கத் தாங்களும் தயார் என்பதை புலிகளிற்கு அறிவிக்கிறார்கள். சடலங்களை சுமந்த ட்ரக்கை மத்திய கல்லூரியடியில் விட்டு விட்டு, தன்னிடம் இருந்த சயனைட் வில்லைக்கு மேலதிகமாக பக்கத்தில் நின்ற போராளியொருவரின் சயனைட் வில்லையையும் வாங்கி அணிந்து கொண்டு, சடலங்களை ஒப்படைப்பதற்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க, ரஹீம் தனியனாக கோட்டை வாசலை நோக்கி நடக்கத் தொடங்குகிறார். இரண்டு சயனைட் வில்லைகள் கழுத்தை சுற்றியிருக்க, இடிந்தழிந்த யாழ் மாநகர சபைக் கட்டிடத்தையும், ஷெல்லடியிலும் சரியாமல் நின்ற தந்தை செல்வாவின் தூபியையும் தாண்டி, ரஹீம் கோட்டை வாசலை நோக்கி மெதுவாக நடந்து கொண்டிருக்க, கோட்டை இராணுவ முகாமருகில் ஒரு வெடிப்பு சத்தம் கேட்கிறது, ஆனால் புலிகளின் அணிகளோ அமைதி காக்கிறார்கள். புலிகள் சடல ஓப்படைப்பை தாக்குதல் திட்டமாக பயன்படுத்த போகிறார்களா என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நோக்கத்துடனே இராணுவம் அந்த வெடிப்பை செய்திருக்கலாம் என்று ரஹீம் ஊகிக்கிறார். கோட்டை முகாம் வாசலின் இராணுவ காவலரணை நெருங்கி விட்ட ரஹீம், தான் தனியவே வந்திருப்பதாக சத்தமிட்டு கத்துகிறார். இராணுவ முகாம் பக்கமிருந்து பதிலுக்கு கேணல் வீரசேகரவின் குரல் ஒலிக்கிறது. கோட்டை வாசலடியில் ஒளிர்ந்து கொண்டிருந்த தெரு விளக்கின் கீழ் தன்னை நிலைபடுத்தி, தான் நிராயுதபாணியாகவே வந்திருப்பதை கேணல் வீரசேகரவிற்கும் கப்டன் கொத்தலாவலவிற்கும் ரஹீம் தெரியப்படுத்துகிறார். ஒன்பது சடலங்களையும் தாங்கிய சவப்பெட்டிகள் ஒரு ட்ரக்கில் ஏற்றி கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் அவற்றை ஒவ்வொன்றாக கொண்டு வந்து தரவா என்று முகாம் வாசலில் நின்றிருந்த இராணுவத் தளபதிகளிடம் ரஹீம் சத்தமாகவே கேட்கிறார். சடலங்கை ஒவ்வொன்றாக கொண்டுவரத் தேவையில்லை, சடலங்களைத் தாங்கியிருக்கும் ட்ரக்கை இராணுவ முகாமுக்கு அருகில் கொண்டு வருமாறு சற்றுத் தொலைவில் இருந்தே இராணுவத் தளபதிகளும் ரஹீமிற்கு சொல்கிறார்கள். மீண்டும் நடந்து புலிகளின் பகுதிக்கு வரும் ரஹீம், இராணுவத்தினரின் சடலங்களைத் தாங்கிய ட்ரக்கை முகாம் அருகில் கொண்டு வருமாறு கேணல் வீரசேகர கூறியதை தளபதி கிட்டுவுக்கு கூறுகிறார். கிட்டுவிற்கு இராணுவத்தில் மீதிருந்த சந்தேகம் இன்னும் முற்றாக விலகவில்லை. ட்ரக்கை reverseல் மெல்ல மெல்ல ஓட்டிச் செல்லுமாறும், தானும் புலிகளின் அணியொன்றும் சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்து இருப்பர் என்றும் ரஹீமிற்கு கூறப்படுகிறது. இராணுவத்தினர் ரஹீமின் ட்ரக்கை தாக்கினால், புலிகளின் அணி திருப்பித் தாக்கத் தொடங்க, ரஹீம் டர்க்கை புலிகளின் பகுதிக்கு வேகமாக ஓட்டி வந்து விடலாம் என்பதே கிட்டரின் திட்டம். ஒன்பது இராணுவத்தினரின் சடங்களை தாங்கிய வாகனம் பிரதான வீதி வழியாக மெது மெதுவாக பின்னோக்கி நகரத் தொடங்குகிறது. கோட்டை முகாம் வாசலில் டரக்கின் நகர்வை இராணுவத்தினர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள், இராணுவத்தின் அசைவுகளை சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த புலிகள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். மெது மெதுவாக பின்னோக்கி ஊர்ந்து போய்க் கொண்டிருந்த ட்ரக், கோட்டை இராணுவ முகாமின் முன்னரங்கில் இருந்த இரும்புக் கம்பித் தடுப்பில் மோதி நிறுத்தத்திற்கு வரவும், ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் பாய்ந்தடித்து ஏறி, வாகனத்திற்குள் புலிகள் பதுங்கியிருக்கவில்லை என்பதை உறுதி செய்யவும் சரியாக இருக்கிறது. ட்ரக்கில் இருந்து இறங்கி வந்த ரஹீமை நோக்கி கேணல் வீரசேகரவும் கப்டன் கொத்தலாலவலவும் சிப்பாய்கள் சகிதம் இராணுவ முன்னரங்குகளைத் தாண்டி வருகிறார்கள். ரஹீம் தனது கழுத்தை சுற்றியிருந்த இரண்டு சயனைட் வில்லைகளை தடவிப் பார்த்துக் கொள்கிறார். ரஹீமிற்கு அருகில் வந்ததும் கேணல் வீரசேகர ரஹீமிற்கு கைலாகு கொடுத்து விட்டு, கட்டியணைத்துக் கொள்கிறார். கோட்டை முகாமை சுற்றி யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தரப்புக்களை போரில் இறந்த இராணுவத்தினரின் சடலங்களை கையளிக்க, பகைமையை சில கணங்கள் மறந்து விட, அந்தக் கணங்களில் மனிதாபிமானம் மேலோங்குகிறது. கைப்பற்றிய இராணுவத்தின் சடலங்களை கையளிக்க புலிகள் ஏன் முனவந்தார்கள் என்று தனக்கிருந்த சந்தேகத்தை கேணல் வீரசேகர ரஹீமிடமே நேரடியாக கேட்கிறார். வீரமரணமடைந்த போராளிகளின் வித்துடல்களை களத்தில் விட்டு வராத தங்களின் மாண்பை சுட்டிக் காட்டி விட்டு, தான் இறந்தாலும் தனது வித்துடலை கடைசியாக பார்க்க எவ்வாறு தனது அம்மா ஆசைப்படுவாவோ, அதே போல தானே இறந்த இந்த இராணுவத்தினரின் தாய்மாரும் விருப்பப்படுவார்கள், அதனால் தான் இந்த சடலங்களை கையளிக்கத் தாங்கள் முன்வந்ததாக ரஹீம் பதிலளிக்கிறார். வீரசேகரவும் கொத்தலாவலவும் ரஹீமுடன் அளவளவாவிக் கொண்டிருக்க, வாகனத்தில் இருந்த ஒன்பது சவப்பெட்டிகளையும் இராணுவ சிப்பாய்கள் ஒவ்வொன்றாக இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். இரவின் இருள் அந்தப் பிரதேசத்தை கவ்வத் தொடங்கி விட்டது. சுப்ரமணிய பூங்காவிற்குள் நிலையெடுத்திருந்த தளபதி கிட்டு தலைமையிலான புலிகளின் அணி சடலங்களை ஒப்படைக்க சென்ற ரஹீம் இன்னும் திரும்பாததை எண்ணி கவலை கொள்கிறது. வோக்கி டோக்கியை கொண்டு வராமல் வந்திருந்த ரஹீமை, சுப்ரமணிய பூங்காவிற்குள் நின்றிருந்த புலிகள் சத்தமாக கத்தி கூப்பிடுவதை முன்னரங்கில் இருந்த இராணுவ வீரனொருவன் ஓடோடி வந்து தெரியப்படுத்துகிறான். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ரஹீம், புலிகளின் அணி நின்றிருந்த சுப்ரமணிய பூங்கா அருகில் சென்று, ஒரு பிரச்சினையும் இல்லை, தான் கெதியில் திரும்பி விடுவேன் என்று தனது தளபதிக்கு அறிவிக்கிறார். பின்னர் இராணுவத் தளபதிகளுடனான தனது உரையாடல்களை முடித்து விட்டு, அவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு, சடலங்களை கொண்டு போன டரக்கில் ஏறி மீண்டும் புலிகளின் பகுதிக்கு வர, ரஹீமை தளபதி கிட்டு ஆரத் தழுவி வரவேற்கிறார். அடுத்த நாள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான உதயன் பத்திரிகையில், முதல் நாளிரவு அமைதியாக நடந்தேறிய வரலாற்று சம்பவத்தை பற்றிய செய்தி பின்வரும் தலையங்கத்தில் பதிவாகியது. “யாழ்ப்பாண நகரில் புதிதாக புறநானூறு படைத்த விடுதலைப் புலிகள்” Posted 5th December 2021 by Jude Prakash https://kanavuninaivu.blogspot.com/2022/01/blog-post_10.html
- 1 reply
-
- 4
-
முள்ளியவளையில் தனது முச்சக்கரவண்டியில் ‘மாவீரன்’ என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். ‘மாவீரன்’ என்பது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் பெயர். ஆகவே குறித்த முச்சக்கரவண்டியின் உரிமையாளர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணைபோகிறார். அவரைப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணை செய்யவேண்டும், எனக் கூறியே பொலிஸார் தடுத்துவைத்திருந்தனர். பின்னர் சட்டத்தரணிகளின் விரைவு நடவடிக்கையினால் குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டார். உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள் குறித்த இந்த சம்பவமானது, மாவீரரை தமிழர்கள் மறந்தாலும், தமிழர்கள் மீது வன்முறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துக்கொண்டிருக்கும் பேரினவாத சிறீலங்கா அரசும், அதன் படைக்கட்டமைப்பும் மறக்காது என்பதையே சொல்லி நிற்கிறது என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வளவு தடைகள், அச்சுறுத்தல்கள், கைதுகள், விசாரணைகளுக்குப் பின்பும் ஒவ்வொரு நவம்பர் மாதத்திலும் தமிழ் மக்கள் சுயமாகத் திரள்வதற்கு இதுவேதான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://meiveli.com/2023/11/22/மாவீரன்-என-எழுதப்பட்ட-பெ/
-
U K க்கு போய் ஆங்கிலத்தில் படித்து தானெ பெரிய சோலிசிட்டர் எல்லாம் உருவாகியுள்ளார்கள். ஏன் தமிழில் ப்டிக்க வேண்டும்?
-
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு விளையாட்டுப் போட்டி ஒன்றில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம். அந்த வகையில் கிரிக்கெட் உலகக் கின்ன போட்டியில் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் சில பகுதிகளில் பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா வென்றுவிட்டது என்பதை விடவும் இந்திய அணி தோல்வி அடைந்து விட்டது என்பதையே அவர்கள் கொண்டாடியுள்ளனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா உதவியிருக்காவிட்டால் இலங்கை என்று சோமாலியா என்ற நிலையில் தான் இருந்திருக்கும். பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையும் இருந்திருக்காது. ஆகவே நன்றி கெட்டத்தனமாக இந்தியாவின் தோல்வியை கொண்டாடுவது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. என்றார் கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார். https://www.madawalaenews.com/2023/11/i_183.html
-
யாழ் கள உறவு சுவி அண்ணாவுக்குத் திருமண நாள் நல்வாழ்த்துகள்
colomban replied to இணையவன்'s topic in வாழிய வாழியவே
என் வாழ்த்துக்களை இந்த பாடல் மூலம் சு வி ஐயாவுக்கு சம்ர்பிகின்றேன்